

Written by London Swaminathan
Post No. 15,759
Date uploaded in London –19 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

மைத்ரேயி
Maitreyī (मैत्रेयी).—வேதகாலப் பெண் அறிஞரான மைத்ரேயி, பிரம்மவாதினியாகத் திகழ்ந்து சிறந்த தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவர் . கார்க்கி, சுலபா, ஆகியோருடன் இணைந்து, வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை மைத்ரேயி உறுதிப்படுத்துகிறார். மைத்ரேயி–யாக்ஞவல்கியர் தத்துவ உரையாடல் பற்றிய தகவல் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளது.
பிரம்மரிஷியான யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என இரு மனைவியர் இருந்தனர். தத்துவ ஞானத்தை நாடிய மைத்ரேயி மற்றும் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்ட காத்யாயனி, யாக்ஞவல்கியரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினர். எதனால் பிரம்மத்தை அறிந்த்து பேரின்பம் அடையலாம் என்ற விவாதத்தில் மைத்ரேயி தனக்கு சொத்து சுக்கங்கள் வேண்டாம் என்கிறார் ; காத்யாயபி இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்கிறார் ; இது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்களின் வேதாந்த வேட்கையை அறிய உதவும் சம்பாஷணை ஆகும் .

***
மலையத்வஜ பாண்டியன் / மீனாக்ஷி
மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் மலையைக் கொடியாகக்கொண்ட பாண்டிய மன்னன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ; சூர சேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்ட அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்வ மேத யாகம் செய்தார் ; யாகத்தீயில் மூன்று மார்பகங்களுடன் பெண் குழந்தை தோன்றியது ; தடாதகை என்று பெயர் சூட்டினார்கள்; அவளுக்குரிய ஆண்மகனைச் சந்திக்கும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்ற அசரீரி கேட்டது ; அதுபோலவே எட்டுத் திக்குகளில் திக் விஜயம் மேற்கொண்ட அவர் சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானைக்கண்டவுடன் அந்த மார்பகம் மறைந்தது. நாணித் தலை குனிந்து அவருக்கு மாலையிட்டாள். இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியின் திக் விஜயம், கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன; மீனாட்சி பற்றி பண்டேயா அரசி என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் அங்கயற் கண்ணி என்று மீனாட்சியின் பெயரைத் தமிழ் மொழியில் பாடிப் பரவியுள்ளார்
மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, போரிட்ட மலையத்வஜனை அஸ்வத்தாமன் கொன்றான்
****
மாளவிகாக்னிமித்ரம்
காளிதாசனின் மூன்று நாடகப் படைப்புகளில் மாளவிகாக்னிமித்ரம் முதலாவது நாடகம் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகிறார்கள்.
சம்ஸ்கிருத மொழியில் அந்தக் காலத்திலேயே 640 நாடகங்கள் இருப்பதை ஜவஹர்லால் நேரு பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார் அக்கினி மித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்ற பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை இது . இதில் அக்கால ஓவியக் கலை, நாடகக் கலை பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன முதல் மனைவியான தாரிணியின் பணிப்பெண்களின் ஓவியத்தைக் கண்டவுடன் காதல் மலர்கிறது ; இருவர் உதவியுடன் காதல் கைகூடும் தருணத்தில் மாளவிகாவும் ராஜ குமாரி என்ற சர்ப்ரைஸ் செய்தி கிடைக்கிறது; தாரிணியும் மனமுவந்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள்; இந்து ராஜாக்கள் ஒருவருக்கு மேல் இன்னும் பலரைக் கல்யாணம் கட்ட சாஸ்திரம் அனுமதிக்கிறது. ராம பிரான் ஒருவன் மட்டுமே ஏகபத்தினி விரதன் என்பதால் உலகமே அவனைப் பாராட்டுகிறது.
***

மனஸ்/ மனம்
சங்க காலம் முதல் திருக்குறள் காலம் வரை- இன்று வரை –தமிழ் மொழியில் பயன்படுத்தும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லியிருந்தான் மைண்ட் MIND என்னும் ஆங்கிலச் சொல்லும் பிறந்தது; இதன் பொருள் – உள்ளம், எண்ணம், கிடக்கை , புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் உணர்வு, விருப்பம் என்பன ஆகும் ; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது தமிழ்ப் பழ மொழி . மனம் ஒரு குரங்கு என்று பல அடியார்களும் பாரதியாரும் பாடியுள்ளனர்.
***
மண்டிலம்/ மண்டலம்
Maṇḍala (मण्डल).— வட்டமான , அல்லது ஒரு எல்லைக்குட்பட்ட பகுதி ; கண்ணாடி. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள் ) உள்ளன . காலக்கணக்கீட்டில் 41 நாட்கள் ; சபரி மலை ஐயப்ப பக்தர்கள், ஆந்திரத்தில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில் தீட்சை விரதம் இருப்போர் 40, 41, 44 நாட்கள் என்ற பல கால எண்ணிக்கையை மண்டலம் என்பார்கள்.
Maṇṭilam (மண்டிலம்) noun < maṇḍala.
1. See மண்டலம்² [mandalam²], 1,
2. (பிங்கலகண்டு) செஞ்ஞாயிற்று . . . பரப்புச் சூழ்ந்த மண்டிலமும் [(pingalagandu) sejnayirru . . . parappus suzhntha mandilamum] (புறநானூறு [purananuru] 30).
2. Coursing in a circle; வட்டமாயோடுகை. செலவொடு மண்டிலஞ்சென்று [vattamayodugai. selavodu mandilanchenru] (புறப்பொருள்வெண்பாமாலை [purapporulvenpamalai] 12, வென்றிப். [venrip.] 14).
3. Horse, as running in a circle; குதிரை. கழிப்பு லாய் மண்டிலங் கொட்பு [kuthirai. kazhippu lay mandilang kodpu] (இன்னா. [inna.] 35). (பிங்கலகண்டு [pingalagandu])
4. See மண்டலம்² [mandalam²],
12. (நாமதீபநிகண்டு [namathipanigandu] 732.)
5. The earth; பூமி. கடல்சூழ் மண்டிலம் [pumi. kadalsuzh mandilam] (குறுந்தொகை [kurundogai] 300).
6. Sun; சூரியன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு [suriyan. pagalsey mandilam parithangu] (பத்துப்பாட்டு: பெரும்பாணாற்றுப்படை [pathuppattu: perumbanarruppadai] 442).
7. Moon; சந்திரன். செய்வுறு மண் டிலம் [santhiran. seyvuru man dilam] (கலித்தொகை [kalithogai] 7).
8. See மண்டலம்² [mandalam²],
14. (பிங்கலகண்டு [pingalagandu])
9. Air, atmosphere, heavens; ஆகாயம். (பிங்கலகண்டு) [agayam. (pingalagandu)]
10. Mirror; கண்ணாடி. மையறு மண்டிலம்போலக் காட்ட [kannadi. maiyaru mandilambolag katta] (மணிமேகலை [manimegalai] 25, 137).
11. See மண்டலம்² [mandalam²],
7. மண்டிலத் தருமையும் [mandilath tharumaiyum] (தொல். பொ. [thol. po.] 41).
12. See மண்டலம்² [mandalam²],
8. (பிங்கலகண்டு [pingalagandu])
13. (Nāṭya.) A posture. See மண்டிலநிலை [mandilanilai],
1. (சிலப்பதிகாரம் அரும்பதவுரை [silappathigaram arumbathavurai] 8, 25, உரை. [urai.]) (பிங்கலகண்டு [pingalagandu]
***
மாந்தாதா
தமிழ் நாட்டினை ஆண்ட சோழர்கள் தமிழர்கள் அல்ல ; புறநானூறும் சிலப்பதிகாரமும் வடமேற்கு இந்தியாவை அந்த சிபிச் சக்ரவர்த்தியைத் தங்களுடைய முன்னோர்கள் என்று பெருமையுடன் செப்புகின்றன ; அந்த வழியில் வந்த மாந்தாதா , முசுகுந்தன் ஆகியோரையும் கல்வெட்டுகளும் சாசனங்களும் கம்பராமாயணமும் சூரிய குல ராஜாக்களாகப் போற்றுகின்றன ; மாந்தாதா , ஒரு ஆணுக்குப் பிறந்தவன் என்ற சுவையான கதை மகாபாரதத்தில் உள்ளது ; ஆணுக்கு குழந்தை பிறந்த செய்தி அபூர்வமாக மேலை நாடுகளிலும் நடந்துள்ளது.
யுவனாஸ்வன் மகனான மாந்தாதா தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கர்ப்பப்பையில் இருந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். (மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் ;இதனால் அந்த மன்னன் கருவுற்றான்.
தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் உயிர் வாழும்?” என்று வினவினர். அப்போது இந்திரன், “குழந்தை என் விரல்களைச் சப்பட்டும் ” என்றான். இதனால் மாந்த்தாதா என்ற பெயர் ஏற்பட்டது இவன் ராம பிரான், சோழர்கள் ஆகியோர் தோன்றிய சூரியகுல மன்னன் ஆவான் ; முசுகுந்தன் கதை பாகவதத்தில் உள்ளது.
***
மங்கலதேவி/ கண்ணகி
வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி/ கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநில மங்களூரிலும் , கேரளத்திலும் மங்கலதேவி கோவில்கள் உள்ளன . இவற்றில் கேரளத்திலுள்ள கோவில் பத்தினித் தெய்வமான, சிலப்பதிகார கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோவில் என்று மக்கள் நம்புகின்றனர் ; கண்ணகியின் கணவனான கோவலனைப் பாண்டிய மன்னன் தவறுதலாகக் கொல்ல உத்தரவிட்டதால், வெகுண்ட கண்ணகி மதுரையின் ஒரு பகுதியை எரித்துவிட்டு, கேரளத்துக்கு வந்து புஷ்பக வியமானத்தில், கோவல னுடன் சொர்க்க லோகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் (சித்ரா பௌர்ணமி) திறக்கப்படும் .
***
மங்கள சூத்ரம்
இது ஹிந்துப் பெண்கள் திருமணத்தின் போது அணியும் மஞ்ச்சள் குங்கும தடவிய புனிதமான கயிறு ஆகும் ; தாலி என்ற சொல்லும் இதைக் குறிக்கும். சேயிழை , அணியிழை என்ற பெயர்களில் சங்கத் தமிழ் நூல்கள் இதைப் போற்றுகின்றன ; கணவன் உயிருடன் இருக்கும்வரை இதைப் பெண்கள் அணிவார்கள்
***
மாங்கல்யதாரணம்
தாலி என்னும் மங்கல சூத்ரத்தை அணியும் கல்யாண நிகழ்ச்சிக்கு மாங்கல்ய தாரணம் — மாங்கல்யத்தைத் தரித்தல்/ அணிதல் – என்று பெயர் .
***
மணிபல்லவம்

மணிபல்லவம் என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணத் தீவு ஆகும்.இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள நயினாத் தீவுதான் மணிபல்லவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மணிமேகலா தெய்வம், மணிமேகலையை பூம்புகாரிலிருந்து இந்தத் தீவிற்கு அழைத்துச் சென்றது. புத்தரின் பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த தர்மபீடிகை இங்கு உள்ளது. இதன் மீதுள்ள மலர்களைத் தொழுதால் முற்பிறவி நினைவுகள் தோன்றும் ; மக்களின் பசியைப் போக்கும் ‘அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் இந்தத் தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையிலிருந்து தோன்றியது என்று மணிமேகலை குறிப்பிடும்.
மேலும், இது பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலின் பெயரும் ஆகும்.மணிபல்லவம் நாவல் – காவிரிப்பூம்பட்டினம், இலங்கை மற்றும் சோழ நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்று நாவல் ஆகும்.
***
மனிஷா பஞ்சகம்


மனீஷா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற தத்துவ நூலாகும். “மனீஷா” என்றால் உறுதியான ஞானம் அல்லது தெளிந்த அறிவு என்று பொருள். அனைத்து உயிர்களிலும் இறைவன் சமமாக இருக்கிறான் என்ற அத்வைத தத்துவத்தை இது விளக்குகிறது.தோன்றிய வரலாறு:ஆதிசங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, எதிரே நாய்களுடன் ஒரு சண்டாளர் (புலையன்) வந்தார். சங்கரரின் சீடர்கள் அவரை விலகிச் செல்லுமாறு கூறினர். அதற்கு அந்தச் சண்டாளர், “இந்த உடலை விலகிப் போகச் சொல்கிறீர்களா அல்லது உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை விலகிப் போகச் சொல்கிறீர்களா? உடலால் அனைவரும் சமம் தானே?” என்று ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்.அவருடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், சாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்த ஞானி, அவன் எந்த சாதியாக இருந்தாலும், அவனே தனக்கு குரு என்று ஆதிசங்கரர் இந்த நூலில் கூறுகிறார்.பிரம்மமே உண்மை: இந்த உலகம் மாயையானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் சைதன்யம் (உயிர்) ஒன்றே என்பதை இந்த ஸ்லோகங்கள் வலியுறுத்துகின்றன.ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், “இதுவே எனது உறுதியான அறிவு” (மனீஷா மம) என்று ஆதிசங்கரர் பாடியுள்ளார்.இந்த நூலின் மூல ஸ்லோகங்கள் மற்றும் விளக்கங்களைப் படிக்க, Vaidika Vignanam வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
புலையனாக வந்தது வேத வியாசர் என்றும் அவருடன் வந்த நான்கு நாய்கள் நான்கு வேதங்கள் என்றும் உரைகாரர்கள் விளம்புவர்.
***
மன்மதன் / மதன/ மாரன்/காம தேவன்
காதல் தெய்வத்தின் பெயர் ; மனைவி ரதி தேவி; அவருடைய கொடி- மகரக் கொடி; அதாவது முதலை என்றும் சுறாமீன் என்றும் சொல்வர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மன்மதனைப் பற்றிய குறிப்புகள் உள. தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயன் என்னும் முருகன் பிறக்க வேண்டும் என்றும் அதற்கு சிவனும் பார்வதியும் முனைய வேண்டும் என்றும் தேவர்கள் திட்டமிட்டனர் . மன்மதனை அனுப்பி ஐந்து மலர்க்கணைகளை எய்தி காம உணர்வு எழுப்புவதற்கு சிவ பெருமானிடம் அனுப்பினார்கள் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே காம தேவன் சாம்பலானான் ; ரதி அழுது புலம்பவே அவன் அனங்கனாக (உடல் அற்ற / உருவம் இல்லாத) மனித உலகில் சஞ்சரிப்பான் என்று வரம் அளித்தார் ; இன்றும் எல்லோருக்கும் காம உணர்வினை ஏற்படுத்துபவன் அவன்தான்.
****
மந்திரம்


மனதில் தியானித்தால் அவர்களைக் காப்பாற்றும் கருவி என்பது சொல்லின் பொருள்
Manas: Meaning “mind” Trai or Tra: Meaning “tool,” “instrument,” or “protection
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள் 28
பொருள்: நிறைவான சொல் ஆற்றல்கொண்ட சான்றோர்களின் –அதாவது ரிஷி முனிவர்களின்— பெருமையை, இந்த உலகத்தில் அவர்கள் அருளிய மந்திரச் சொற்களே (மறைமொழி) எடுத்துக் காட்டிவிடும். இது தொல்காப்பியத்திலும் இருக்கிறது .
நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரமும் ஓம் என்னும் பிரணவமும் எல்லோருக்கும் பொதுவானது .
அகராதியில் மந்திரம் (Mantra) கடவுளை வழிபடவோ அல்லது தியானிக்கவோ திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் புனிதமான சொல், வாக்கியம் அல்லது ஓசை (எ.கா: ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய .
ஏனைய பொருள்- மந்திராலோசனை : இரகசிய விவாதம் (Counsel): அரசர்கள் அல்லது தலைவர்கள் கூடிப் பேசும் இரகசிய ஆலோசனை அல்லது அமைச்சரவை சபை.
(Slogan): ஒரு நபர் அல்லது குழு தங்களின் அடிப்படை நம்பிக்கையாக அல்லது குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் (எ.கா: “வாடிக்கையாளரே தெய்வம்”).
மறைபொருள் / சூனியம் (Magic/Spell): ஆன்மீக அல்லது மாந்திரீக சக்திகளைக் கொண்டதாக நம்பப்படும் மந்திரச் சொற்கள்
மந்திரம் என்பது சில குறிப்பிட்ட ஒலிகள், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் பெற உதவும் ஒரு ஆன்மீகச் சொல்லாகும். மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான சில மந்திரங்கள்:ஓம் (பிரணவ மந்திரம்): இதுவே பிரபஞ்சத்தின் ஆதி ஒலி. மன அமைதிக்கு இது மிகச் சிறந்ததாகும்.ஓம் நம சிவாய: இது அறியாமையை அகற்றி ஞானத்தையும், முக்தியையும் தரக்கூடிய பஞ்சாட்சர மந்திரமாகும்.ஓம் சரவணபவ: முருகப் பெருமானின் அருள் பெறவும், தடைகள் நீங்கவும் உச்சரிக்கப்படும் ஆற்றல் மிக்க மந்திரம்.
வைணவர்களின் முக்கிய மந்திரம்– ஓம் நமோ நாராயணாய .
****
மனு / மன்வந்தரம்

மனித குலத்தைத் தோற்றுவித்தவர் மனு; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு வருவார் ; இப்போது நாம் வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உள்ளோம்; பிராமணர்களும் ,புரோகிதர்களும் பூஜைக்கு முன்னர் இதைச் சொல்லி பூஜை அல்லது சடங்குங்களைத் துவங்குவர் ; மன்வந்தரம் என்பது குறிப்பிட்ட மனுவின் ஆட்சிக்காலம்.
மன்வந்தரம்
இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, மனிதகுலத்தின் மூதாதையான ஒரு மனுவின் (Manu) ஆட்சிக்காலம் மன்வந்தரம் (Manvantara) எனப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரமும் ஒரு குறிப்பிட்ட மனு, சப்தரிஷிகள், மற்றும் இந்திரன் ஆகியோரின் கீழ் இயங்குகிறது.: ஒரு கல்பத்திற்கு 14 மன்வந்தரங்கள் உள்ளன.தற்போதைய காலம்: நாம் தற்போது 7-வது மன்வந்தரமான ‘வைவஸ்வத மன்வந்தரத்தில்’ வாழ்ந்து வருகிறோம்..
கால அளவு: ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர யுகங்களைக் கொண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு நாள் .
14 மனுக்கள் பெயர்கள்
சுவாயம்புவ மனு,
சுவாரோசிஷ மனு,
உத்தம மனு,
தாமச மனு,
ரைவத மனு,
சாக்ஷுஷ மனு,
வைவஸ்வத மனு (நாம் தற்போது இருக்கும் காலம்),
சாவர்ணி மனு,
தக்ஷ சாவர்ணி மனு,
பிரம்ம சாவர்ணி மனு,
தர்ம சாவர்ணி மனு,
ருத்ர சாவர்ணி மனு,
தேவ சாவர்ணி மனு (அ) ரௌச்ய மனு,
இந்திர சாவர்ணி மனு
***
மனு ஸ்ம்ருதி

முரண்பட்ட பல ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுத்த கல்கத்தா சுவடியின் பதிப்புதான் தமிழிலும் ஆங்கிலயத்திலும் இப்போதுள்ளது; இதில் சூத்திரர்களுக்கு எதிரான 40 ஸ்லோகங்கள் சுங்க வம்ச காலத்தில் சேர்க்கப்பட்டவை; அதை வெள்ளைக்கார்கள் அப்படியே வைத்துக்கொண்டனர் ; ஆகையால் இப்போதைய பதிப்பு ஒருதலைச் சார்பானது ; நமபத்தக்கதல்ல.
மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன்றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதைக் காணலாம்.. காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர்.
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647
மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு; என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்
மனுவின் சிறப்பு
வேதத்தின் சிறப்பு
பிரளயம்
பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு
நாராயண சப்,தத்தின் பொருள்
பிரம்மனின் தோற்றம்
மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி
தேவர் முதலானோரின் தோற்றம்
பிராணிகளின் தொழில்
விராட புருஷனின் தோற்றம்
மநுப் பிரஜாபதியின் தோற்றம்
மரீசி முதலானோரின் தோற்றம்
சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்
தினப் பிரளயம்
மஹாப் பிரளயம்
இந்த நூல் தோன்றிய வரலாறு
காலக் கணக்கு
யுகக் கணக்கு
மன்வந்தரக் கணக்கு
யுக தருமம்
வர்ண தர்மம்
பிராமணன் சிறப்பு
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
To be continued……………………………….
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64, மைத்ரேயி , மனு, மனு ஸ்ம்ரிதி, மங்கலதேவி, கண்ணகி, பெண்கள் பற்றி மனு, தாலி, மன்மதன்