பரமாத்மன் இருந்தபடி எங்கும் செல்கிறார்; சயனித்தபடி எங்கும் போகிறார்; ஒளிவீசும் அந்த ஜோதியை , இன்பமும் துன்பமும் உள்ளானை , அது ஒன்றும் இல்லானை என் போன்றவர் அன்றி வேறு யார் அறிவார்?
இறைவனுடைய வடிவம் காட்சிக்கு வருவதில்லை; அவனை யாரும் கண்கொண்டு பார்த்ததில்லை; உள்ளத்தில் இறைவனை அனுபூதியில் காண்பவர் மரணமில்லலாப் பெருநிலை எய்துகின்றனர்.
In the Svetasvatara Upanishad Chapter 4 Verse 20,
na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ:
न संदृशे तिष्ठति रुपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम् । हृदा हृदिस्थं मनस य एनमेवं विदुरमृतास्ते भवन्ति ॥२०॥
****
11
ப்ருஹத் தத் திவ்யம் அசிந்த்யரூபம்
ஸூக்ஷ்மாத் ச தத் ஸூக்ஷ்மதரம் விபாதி
தூராத் ஸூதூரே தத் இஹாந்திகே ச
பச்யத்ஸூ இஹ ஏவ நிஹிதம் குஹாயாம்
—முண்டகோபநிஷத் 3-7
பெரிய பொருளாக , தானே பிரகாசிப்பதாக, மனத்துக்கு எ ட்டாமல் ஒளிர்வது பிரம்மம்; அது நுணுக்கத்திலும் நுணுக்கமானது; தூரத்திலும் அதிக தூரமானது ; இங்கே உடலுக்குள்ளும் அது இருக்கிறது. இம்மை வாழ்விலேயே அதை சான்றோர்கள் உள்ளத்தில் காண்கின்றனர் .
बृहच्च तद्दिव्यमचिन्त्यरूपं सूक्ष्माच्च तत्सूक्ष्मतरं विभाति । दूरात्सुदूरे तदिहान्तिके च पश्यन्त्विहैव निहितं गुहायाम् ॥ ७ ॥
பிரபஞ்சத்தைப் படைத்து எங்கும் நிறைந்திருக்கும் தெய்வம் எல்லோருடைய உள்ளத்திலும் உறைகிறான் ; அவனை அன்பினாலும், அறிவினாலும் எண்ணத்தினாலும் அறிபவர்கள் அமிர்த சொரூபமாகிறார்கள் (மரணமில்லாப் பெரு வாழ் வினைப் பெறுகிறார்கள் )
एष देवो विश्वकर्मा महात्मा सदा जनानां हृदये संनिविष्टः । हृदा मनीषा मनसाभिक्लृप्तो य एतद् विदुरमृतास्ते भवन्ति ॥4-17॥
****
13
ததே ஜதி தன்னை ஜதி தத் தூரே தத் வந்திகே
ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தத் உ ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத :
இந்த பிரம்மம் அசைகிறது; அசையாதிருக்கிறது. இது அண்மையில் இருக்கிறது; இது தொலைவில் இருக்கிறது. அனைத்திற்குள்ளும் இது இருக்கிறது. எல்லாவற்றுக்கும் வெளியிலும் இது இருக்கிறது.
ஆனந்தம் பிரம்மம் என்று (சாதகன்) தெளிவடைந்தான் ஆனந்தத்திலிருந்தே நிச்சயமாக உயிர்கள் தோன்றியுள்ளன பிறந்தவைகள் எல்லாம் ஆனந்தத்திலேயே வாழ்ந்திருக்கின்றன ; இறுதியில்ஆனந்தத்திலேயே லயம் அடைகின்றன .
மெய்ப்பொருளே! உன்னுடைய உண்மையான வடிவத்தை /சொரூபத்தை வட்டவடிவமான பொன்போன்ற பிரகாசம் மறைத்துக்கொண்டிருக்கிறது. இறைவா! உன்னுடைய உண்மையான காட்சியைக் காண நாடும் என் பொருட்டு அந்தப் பொன் ஒளியை அகற்றியருள்வீராக.
அதே இடத்தில் (அந்த யக்ஷனுக்குப் பதிலாக ) அழகு நிறைந்த பெண் தெய்வம் ஹைமவதியாகிய உமாதேவியை அவன் (இந்திரன்) கண்டான்; இந்த யக்ஷன் யார்? என்று அவன் அமபிகையிடம் வினவினான்.
स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहुशोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥
இறைவனைப் பற்றிக் கேள்வி ப்படுவதற்கே பலருக்கு வாய்ப்பதில்லை; கேள்விப்படுபவர்க்குள்ளும் பலர் அவரை அறிந்துகொள்ள இயலாதவர்களாய் இருக்கின்றனர்; அவரை உள்ளபடி சொல்பவன் வியக்கத்தக்கவன் ; அவரை அடையப்பெறுபவன் திறமை சாலி; அப்பேற்பட்டவன் சொல்ல, அதை அறிந்துகொள்ளும் சிஷ்யன் வியப்புக்குரியவனே !
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 60
ராமபிரான் அவதரித்த இடம் அயோத்தி.
விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.
பிரம்மா உலகைப் படைத்தபோது, விஷ்ணு வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். பிரம்மா அந்தப் பகுதியை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கித் தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்கு கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் பெயரில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில் தசரதரின் மகனாகப் பிறந்தவர் ராமர்.
முக்தி அளிக்கும் ஏழு தலங்களான அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) இவற்றில் அயோத்தியே முதன்மையானது.
லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டரில், சரயு நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் அற்புதத் தலம் அயோத்தி. அயோத்தியில் பல ராமர் கோயில்கள் இருக்கின்றன.
****
கோவில் மசூதியாகி மீண்டும் கோயிலான கதை !
ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மீர்பாக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் 1528ல் பாபர் மசூதி ஒன்று கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் , லால் கிருஷ்ண அத்வானி தலைமையில் இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தனர்.
அயோத்தி பற்றியும் ராம ஜென்ம பூமி பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு அத்வானி போன்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய ‘ரத யாத்திரை’தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
****
அனுமன்/ குரங்கு அதிசயம்
பாபர் மசூதிக்குள் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பூட்டியிருந்த கோயிலின் கதவைப் பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.”
இது மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ பராசரன் ராமருக்காக காலில் செருப்பு இல்லாமல் 92 வயதிலும் நின்று கொண்டு வாதாடினார். வெற்றி கண்டார்
புதிய ராமர் கோயில்
5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 -8- 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்து கோவில் திறக்கப்பட்டது
புதிய கோயிலின் அமைப்பு
இது வட இந்தியக் கோவில் கட்டிடக்கலையின் நகரா பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவார். கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கும் கருவறை மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள்.
கோவிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டது இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் உள்ளன. . கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் . கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கிறார் .
கருவறை கோயில் மற்றும் அதைச் சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் உள; சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் ஆகிய சிலைகள் இருக்க்கின்றன . கோவில் 10 ஏக்கரில் கட்டப்பட்டு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம், கல்வி மற்றும் அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக் கப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் இராம நவமி அன்று இராமர் நெற்றி மீது
மூன்று நிமிடங்கள் சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிரும் வகையில் கோயில் கட்டப்பாட்டிருக்கிறது . திருப்பதி பாலாஜி கோவிலுக்கு குவிவது போல அயோத்தி கோவிலுக்கும் தங்க வெள்ளி நகைகள் குவிந்தவண்ணமுள்ளன.
****
QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ (Post No.12,918)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,918
Date uploaded in London – – 15 JANURARY 2024
xxxx
Quiz Serial No.92
1.ராமர் பிறந்த ஊர் அயோத்தி; அது எந்த மாநிலத்தில் எந்த நதியின் கரையின் மேல் இருக்கிறது?
XXXX
2.ராமர் கோவில் மீது முஸ்லீம் மன்னன் பாபர் கட்டிய மசூதி அகற்றப்பட்ட பின்னர், 500 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் என்ன ?
XXXX
4.அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சிலையைச் செய்தவர் யார்?
XXXX
5.ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமை என்ன?
XXXX
6.ராம பிரான் பிறந்தது நவமி திதியில்; புதிய கோவிலில் நவமி நாட்களில் நடைபெறும் பொறியியல் அதிசயம் என்ன?
XXXX
7. ராமர் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?
xxxxx
8.ராமர் கோவிலில் எத்தனை கதவுகள் ?
XXXX
9.ராமர் கோவில் மணி எவ்வளவு பெரியது?
xxxx
10.ராமர் கோவில் த்வஜ ஸ்தம்பம் எத்தனை அடி உயரம் உடையது ?
xxxx
BONUS QUESTIONS
11. ராம பிரானின் வைர நெக்லஸ் (கழுத்துக்கு மாலை) எவ்வளவு பெரியது?
xxxx
12.சீதா தேவி பிறந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அங்குள்ள கோவிலும் மக்களும் அனுப்பும் பரிசுகள் என்ன?
xxxx
13.உலகிலேயே பெரிய ஊது பத்தியை / வர்த்தியை யார் அயோத்திக்கு அனுப்புகின்றனர் ?
xxxx
14.ராமர் கோவில் விளக்குகளில் மிகப்பெரியது எது?
xxxx
விடைகள்
1.உத்தர பிரதேசத்தில் சரயூ நதிக்கரையில் அயோத்தி நகரம் இருக்கிறது .
XXXX
2.அயோத்தி நகர ராமர் கோவில் கும்பாபிஷேகம் -ஜனவரி 22, 2024.
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் சாகேதம்; முஸ்லீம்கள் சூட்டிய பெயர் பைசாபாத்.
XXXX
4.மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது .இந்த சிலையின் உயரம் 51 அங்குலம்;இதன் எடை என்பது 1.5 டன் ;. ராமரின் தலையில் கிரீடம் இருக்கும்.
xxxx
5. ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோர் கருப்பு நிறத் தோல் உடைய கருப்பர்கள் ; வியாசர் தவிர மற்ற மூவரும் பேரழகு வாய்ந்தவர்கள்; ஆரிய- திராவிட வாதம் பேசிய அரை வேக்காடுகளுக்கு இவர்களுடைய நிறம் செமை அடி கொடுக்கிறது.
xxxx
6.நவமி நாட்களில் ராம பிரானின் முகத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம் லென்ஸ்கள் மூலம் வடிவமைத்துள்ளனர் .ராமர் ஸூரிய குல / ரவி குல திலகம் என்பதை இது காட்டும்..
.XXXX
7.கோபுர உயரம் 161 அடி. கோவிலின் நீள அகலம் 380 அடிக்கு 250 அடிகள் ஆகும் (250 feet wide, 380 feet long and 161 feet (49 m) high கோவிலின் பரப்பளவு 2.77 ஏக்கர் ; கோவில் வளாகத்தின் பரப்பளவு 71 ஏக்கர் .
XXXX
8.ராமர் கோவிலில் 46 கதவுகள் இருக்கின்றன. அவைகளை 100 கிலோ தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுகின்றனர் .ராமர் கருவறையில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்
XXXXX
9.உத்தர பிரதேச மாநிலம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி ஒன்றை எட்டு வகையிலான உலோகத்தால் செய்துள்ளனர்.அந்த மணியின் எடை 2100 கிலோ ! இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது.
XXXX
10. இந்தக் கொடி மரத்தின் (த்வஜ ஸ்தம்பம்) உயரம் 44 அடி. அதன் எ டை 5500 கிலோ. பித்தளையால் ஆனது . குஜராத்திலுள்ள ஆமதாபாத் நிறுவனம் இதை உருவாக்கியது.
xxxxx
BONUS QUESTIONS
11.சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் சிலைக்கு நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் இதைச் செய்து முடித்தார்கள்.
xxxx
12.ஜனகபுரி மக்களும் சீதை கோவிலும் 2 லாரிகள் நிறைய 3000 பரிசுகளை அயோத்திக்கு அனுப்பினர் . அவை வெள்ளிப் பாத்திரங்கள் , உலர்ந்த பழங்கள் , துணி மணிகள் ஆகும். இலங்கையில் சீதையை ராவணன், அசோக வனத்தில் சிறை வைத்தான். அங்கிருந்து புனித பாறை ஒன்றை இலங்கை நாடு அனுப்பிவைத்துள்ளது .
xxxx xxxx
13.குஜராத் வடோதரா நகரிலுள்ள நிறுவனம் 108 அடி நீளமுள்ள ஊது பத்தியை / வர்த்தியை அயோத்திக்கு அனுப்பியிருக்கிறது. இதன் குறுக்களவு மூன்றரை அடி; எடை 3610 கிலோ. இது 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாசனையைப் பரப்பும் .
xxxx
14.வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது . இதை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளார்.
****
அயோத்தி அதிசயங்கள்
1.ராம நவமி அன்று அயோத்தி ராமர் விக்ரகம் மீது சூரிய பகவான் (சூரிய கிரணங்கள்) பொட்டு / திலகம் வைத்ததாகும் . ஆ னால் இது நவீன கால, விஞ்ஞானிகள் உருவாக்கிய அதிசயம். தமிழ் நாட்டிலோ 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் கட்டிய கோவிலில் சூரிய ஒளி, சந்நிதிக்குள் புகுந்து விக்கிரகத்தை அலங்கரிப்பதை, ஆராதிப்பதைக் காண்கிறோம் அப்போது நவீன கால கருவிகளே இல்லாமல் இந்து சமய சிற்பிகள் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார்கள்.. இந்து கட்டிடக் கலையின் உன்னத நிலைக்கு அது ஒரு சான்று.
2.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண ஓவியங்களை வரைந்து புஸ்தகம் வெளியிட்டனர். அந்த 70 படங்களை நான் இரு முறை இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இதைவிட அதிசயமான தங்கம்- நீலக்கல் (GOLD- LAPIZ LAZULI) பதித்த அதிசய ராமாயணத்தைக் காசி மன்னர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார். அதன் மதிப்பு தெரியாத திருடர்கள், அந்த தங்க ராமாயணத்தை பக்கம் பக்கமாகப் பிரித்து ஏலம் விட்டுவந்தனர். தகவலறிந்த நல்லஎண்ணம் படைத்தோர் கிடைத்த பக்கங்களை மீட்டு பெங்களூர் மியூசியத்தில் வைத்துள்ளனர் .
3.இதனிடையே ராம பக்தர்கள் இருவர் , வட இந்தியா முழுதும் வீடுதோறும் முழங்கும் துளஸிதாஸ் ராமாயணத்தை தங்கத் தகடுகளில் எழுதி ராமர் பாதங்களில் அர்ப்பணித்துவிட்டனர் .
முன்னாள் ஐ. ஏ .எஸ் . அதிகாரி சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன் சிறந்த ராம பக்தர். அவரும் அவருடைய மனைவி ஸரஸ்வதியும் (an ex-IAS officer, Subramanian Lakshminarayanan and his wife Saraswathy) இந்த பொக்கிஷத்தை ராமர் காலில் சமர்ப்பித்தனர் .
இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் ; இந்தப் புஸ்தகத்தில் எடை 151 கிலோ.மொத்தமுள்ள 10,902 பாடல்களையும் தங்க எழுத்துக்களில் பொறித்துள்ளனர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன், தனது வாழ்நாளில் சேகரித்த பணம் அனைத்தையும் இதில் செலவிட்டுவிட்டார் ; வரலாற்றில் அலையாத இடமும் பெற்றுவிட்டார் ; அவரது மனைவி ஸரஸ்வதி இதற்கு உறுதுணையாக நின்றார்.
ராமசரித மனஸ் புஸ்தகத்தில் 480 முதல் 500 தங்கப் பக்கங்கள் இருக்கின்றன. இதைத் தயாரிப்பதில் 24 காரட் தங்கமும், தாமிரமும் பயன்படுத்தப் பட்டது. புஸ்தகம் செய்யும் பணியை அந்தத் தம்பதியினர் சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு நகைக்கடைஇடம் ஒப்படைத்திருந்தனர் .
தமிழ் நாட்டில் கம்ப ராமாயணம் புகழ்பெற்ற மாதிரி, வட இந்தியா முழுதும் ராமா சரிதா மனாஸ் என்ற பெயரில் துளசிதாஸ் கோசுவாமி எழுதிய ராமாயணம் புகழ்பெற்றதாகும். இதை அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவந்தி (பேச்சு வழக்கு வட்டார இந்தி) மொழியில் எழுதினார்
இதிலும் ஆறு காண்டங்கள் — பால அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, உத்தர காண்டங்கள் இருக்கின்றன. புஸ்தகத்தின் மொத்த எடையில் 140 கிலோ தாமிரமும் சுமார் ஏழு கிலோ தங்கமும் அடக்கம்.எழுத்துக்கள் 24 காரட் தங்கத்தல் இருக்கும்.
XXXX
சூரிய திலகம்
ராம நவமி விழாவின் முக்கிய நிகழ்வாக, அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.
அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் விழும் நிகழ்வை தனது ‘டேப்’ TAB மூலம் கண்டு களித்தார். பால ராமரின் சிலையின் நெற்றியில் விழும் சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று (17-4-2024) நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர
ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச்செய்யும் வகையில் ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
****
பழைய அயோத்தி
யோகி பார்த்தசாரதி யோகி சிங்காரம்மா தம்பதியால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அம்மாஜி மந்திர் என்ற கோவில்தான் திவ்ய தேசக் கோவிலாகக் கருதப்படுகிறது. அம்மாஜி என்பது சிங்காரம்மாவைக் குறிப்பிடுகிறது.
அம்மாஜி மந்திர்
ராமஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமர் எழுந்தருளி இருக்கிறார்.
கர்ப்பகிருஹத்துக்கு இடப்புறமாக இன்னொரு சந்நிதியில் ரங்கநாதர், ஆழ்வார்கள் இருக்கிறார்கள்.
மூலவர்: ஸ்ரீ ராமர், சக்ரவர்த்தித்த திருமகன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
ஒருவன் தனது கோபத்தை வீணாகக் காட்டக் கூடாது அல்லது குற்றம் புரிவோரிடம் பணியவும் கூடாது. ரவுடிகளிடம் தனது வளத்திற்கான வசதிகளைத் தெரியப்படுத்தக் கூடாது. தனது நற்குணங்களைப் பற்றி பேசவும் கூடாது.
மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது.
சகுனம் பலஹீனமாவது எப்போது?
க்ரோஷாதந்தர்பலீ தஸ்மாத் ஊர்த்வம் மந்தபலஸ்தத: |
ந ஜாத: சர்வதா யஸ்ய சகுன: ஸ்யாத் ச முத்யதே ||
ஒரு க்ரோச தூரத்தில் (இரண்டு மைல்களுக்குள்) சகுனமானது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதற்குப் பின்னர் அதன் பலன் பலஹீனமாகி விடும்.
அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லையெனில் அந்த தீய சகுனமானது வழிப்போக்கனின் மரணத்தையே குறிக்கும்.
இது சாரங்கதாரா பத்ததியில் இடம் பெறும் ஒரு ஸ்லோகமாகும்.
நரியைப் பார்ப்பது எப்போதும் நல்ல சகுனம் தான்!
கதிர்வாமா ப்ரயாணே து ப்ரவேஷே தக்ஷிணா சுபா: |
தத்ரஸ்தோ ந விலம்பேத ஷஸ்த: சர்வத்ர ஜம்புக: ||
ஒரு பிரயாணத்தில் இடமாகப் போவது மங்கலமானது (வெற்றியைத் தரும்).
வீட்டிற்குள் நுழையும் போது வலமாகச் செல்வது நல்லது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருவன் நிற்கக் கூடாது. நரியானது எல்லா இடத்திலும் பார்ப்பதற்கு நல்ல சகுனம் தான்!
இது சாரங்கதாரா பத்ததியில் இடம் பெறும் ஒரு ஸ்லோகமாகும்.
பக்த ஜனப்ரியன் யார்?
க்லேசக்ஷமஸ்ததா யஸ்ச விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: |
கூடமந்த் ரஸ்ச தக்ஷஸ்ச ப்ராக்ஞோ பக்தஜனப்ரிய: ||
தனக்கு வரும் துன்பங்களை எவன் ஒருவன் சகித்துக் கொள்கிறானோ, சுயக்கட்டுப்பாடுடன் தனது இந்திரியங்களை ஜெயிக்கிறானோ, ரகசியங்களை மிக கவனமாகப் பாதுகாத்து செயல்களில் திறமை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே புத்திசாலி. பக்த ஜனங்களுக்கு அவனே பிரியமானவன்.
விஷ்ணுதர்மோத்தரத்தில் வரும் ஸ்லோகம் இது.
விதியை புறம் தள்ளுவர் தைரியசாலிகள்!
க்லீபா ஹி தைவமேவைகம் ப்ரஷஸ்சந்தி ந பௌருஷன் |
தைவம் புருஷகாரேண க்னந்தி ஷூரா: சதோத்யமா: ||
கோழைகள் விதியையே புகழ்வார்கள். எடுத்த காரியத்தில் முயற்சி செய்யமாட்டார்கள். தைரியசாலிகளோ எப்போதுமே செயலில் ஈடுபடுபவர்களாக இருப்பதால் விதியை தங்களது ஆண்மைத் திறத்தால் புறம் தள்ளுவார்கள்.
சில சமயம் தர்மம் செய்ய உதவுகிறது; சில சமயம் நல்ல பெயரை எடுக்க உதவுகிறது; சில சமயம் பணம் சம்பாதிக்க உதவுகிறது; சில சமயம் புகழை அடைய உதவுகிறது; சில சமயம் நல்ல அனுபவம் பெற உதவுகிறது. இப்படியாக மருத்துவ சிகிச்சையானது பலனில்லாமல் இருக்கவே இருக்காது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 23
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
12. நடுவுநிலைமை –Equity or Impartiality
111.The crown of man’s virtue is the uprightness of his unbiased soul- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
111.Provided in its exercise each section gets its fair due,
Justice will be deemed the only great virtue- S M Diaz, I G of Police- SMD Year 2000
***
111. If justice, failing not, its quality maintain, Giving to each his due, -’tis man’s one highest gain. That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue– Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***
111-Equity is supreme virtue It is to give each man his due. – Suddhananda Bharathiyar- SB
***
111.Impartiality is the best rule of the conduct provided that friends, foes and neighbours are regarded alike – EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
111.Fairness to all is good supreme;
To friends foes, fellows, acting in fair- H A Popley – HAP (not full book) Year 1931
***
111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
112.It is only the wealth of the just that undiminishingly flows down to generations yet unborn- – ANM+2
***
112.A just man’s acquisitions will go down to his heirs,
Without waste and so protect them—SMD
*** 112. The just man’s wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure. The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity. – GUP
***
112.Wealth of the man of equity Grows and lasts to posterity. – SB
***
112.The wealth of an impartial man is imperishable, and will give stability and strength to his progeny—– EVS
113.spurn ill-gotten gains, though nothing but profit may accrue from them-– ANM+2
***
113.Even if it can be put to good use, wealth acquired by unfair means,
Is best renounced all at once—SMD
*** 113. Though only good it seem to give, yet gain By wrong acquired, not e’en one day retain! Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity. – GUP
*** 113.Though profitable, turn away From unjust gains without delay. – SB
***
113. The wealth acquired in unjust ways, though beneficial, should be abandoned without hesitation—EVS
***
113.Give up the wealth that is gained by unfair means,
114.The noble and the wicked are known by their progeny-– ANM+2
***
114.The just and unjust come to be known,
By the reputation they leave behind—SMD
*** 114. Who just or unjust lived shall soon appear: By each one’s offspring shall the truth be clear. The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings. – GUP
***
114.The worthy and the unworthy Are seen in their posterity. – SB
***
114.Whether a man is partial or impartial is known by his progeny—– EVS
***
114.No HAP translation
***
114. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்
XXXXXXXXXXXXXXXXXXXXXX
115.Loss and gain are common unto the race, but a constant heart is the glory of the wise-– ANM+2
***
115.Loss and gain come about as a result of one’s own previous actions
But an unswerving rectitude of mind is the ornament of the great—SMD
*** 115. The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages’ ornament. Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both). – GUP
*** 115.Loss and gain by cause arise; Equal mind adorns the wise. – SB
*** 115.The noble natured will not swerve from equity whether aadversity or prosperity–– EVS
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(Tamil version posted separately)
ईशा वास्यमिथम् सर्वम् यथकिन्च्च जकथ्याम् जगथ् !
तेन त्यक्तेन भुन्चिच्था मा ग्रुध कस्य स्विद् ध्नम् !!
OM
Ishaa Vaasyam Idam Sarvam
Yat Kincha Jagatyaam Jagat Tena
Tyaktena Bhunjeethaa
Maa Grudhah Kasya-svit Dhanam.
The whole Universe is enclosed or enveloped in God. And also, He dwells or resides in the entire Universe. So, God is in everything and everything is clothed within God.
Whatever is moving (or not moving) in this Universe, is all penetrated and also enclosed by Him. All that is living or non-living, pleasing or otherwise, planets, stars or even our Self, the Atma, is pervaded by him.As everything is in Him and He is in everything, you may “let go”, “rejoice” or experience Bliss! Do not grab or hold on to anyone’s wealth.
Dahram: The subtle or small (space of the heart).Vipāpam: Sinless, pure, and untainted by any evil. Varaveśmabhūtam: A beautiful, exalted abode or mansion.Yat Puṇḍarīkam: The lotus of the heart.Puramadhya saṁstham: Situated directly in the center of the city of the body.Tatrāpi: Inside that.Dahre gaganam viśokam: An inner expanse (ether) that is entirely free from sorrow.Tasmin yadantaḥ tadupāsitavyam: That which resides inside it is what must be meditated upon.
यो वेद॒ निहि॑त॒-ङ्गुहा॑या-म्पर॒मे व्यो॑मन्न् । सो᳚-ऽश्नु॒ते सर्वा॒न्कामा᳚न्थ्स॒ह ।
Yō: He who / whoeverVēda: Knows / realizesNihi̍taṅ: Hidden / placed / establishedGuhā̍yām: In the cave / secret place (representing the intellect or the heart)Para̠mē: In the highest / supreme
eko devah sarvabhuteshu gudhah sarvavyapi sarvabhutantarathma I
karmadhyakshah sarvabhutadhivasah sakshi cheta kevalo nirgunascha II 6.11 II
–Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)
The non-dual and resplendent Lord is hidden in all beings. He is all-pervading and is the innermost Self of all creatures. He presides over all actions and He is the support of all beings. He is the Witness, the Animator and the Absolute, free from the three gunas.
OR
One God who alone is & He lurketh hidden in every creature for He pervadeth and is the inmost Self of all beings, He presideth over all work and is the home of all things living. He is the Mighty Witness who relateth thought with thought and again He is the Absolute in whom mood is not nor any attribute.
-Rig Veda (Mandala 7, Hymn 59). YAJUR VEDA RUDRAM, MAHA NARAYANA UPANISHAD 56-1
Meaning
“We worship the three-eyed Lord Shiva, who is fragrant and nourishes all beings. Just as a ripe cucumber is effortlessly detached from the vine, may He liberate us from death and mortality, and lead us to immortality.”
****
6
असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥
Asuryā nāma te lokā andhena tamasāvṛtāḥ,Tāṃste pretyābhigacchanti ye ke cātmahano janāḥ.
3. Those births partake of the nature of the Asuras and are enveloped in blind darkness. After leaving the body they who kill their Atman attain them.
****
7
नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।
23. This atman is not to be attained by a study of the Vedas, nor by intelligence, nor by much hearing, but the atman can be attained, only by him who seeks to know it. To him, this atman reveals its true nature.
****
8
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः । तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥
—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).
Na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ | Tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti ||
—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).
10. The sun shines not there, nor the moon and the stars. Nor do these lightnings shine. How could this fire? All shine after him who shines. All this is illumined by his radiance.
To be continued………………………
Tags- Part 1, Important Upanishad Mantras, in English and Devanagari
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(English version posted separately)
1
“இந்த பிரபஞ்சத்தில் அசையும் மற்றும் அசையாத ஒவ்வொரு பொருளிலும் இறைவன் (ஈசன்) நீக்கமற நிறைந்துள்ளார்”
ईशा वास्यमिथम् सर्वम् यथकिन्च्च जकथ्याम् जगथ् !
तेन त्यक्तेन भुन्चिच्था मा ग्रुध कस्य स्विद् ध्नम् !!
ஈஸா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்ய ஸ்வித்தனம்
—ஈசாவாஸ்யோபநிஷதம்
ஜகத்தில் மாறி மாறி அமைகின்ற யாவும் ஈசனால் வியாபிக்கப்பெற வேண்டும் . இத்தகைய தியாகத்தின் மூலம் உன்னை போஷித்துக்கொள் ; யாருடைய செல்வதடையும் அபகரிக்காதே .– சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு.
OM
Ishaa Vaasyam Idam Sarvam
Yat Kincha Jagatyaam Jagat Tena
Tyaktena Bhunjeethaa
Maa Grudhah Kasya-svit Dhanam.
****
2
தஹ்ரம் விபாபம் பரமேஸ்ப பூதம்
யத் புண்டரீகம் புர மத்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹ்ரே தகனம் விசோகம்
தஸ்மின் யதந்தஸ் ததுபா ஸி தவ்யம்
—மஹா நாராயணோபநிஷதம் 12-16
பரம்பொருளுக்கு உறைவிடமாக உடலின் மத்தியில் சிறிய தூய ஹிருதய கமலம் இருக்கிறது. இந்த தஹராலயத்தில் சோகமில்லாத – துயரற்ற — வெட்டவெளி உள்ளது ; அது உபாசிப்பதற்குரியது – வழிபட வேண்டியது .
यो वेद॒ निहि॑त॒-ङ्गुहा॑या-म्पर॒मे व्यो॑मन्न् । सो᳚-ऽश्नु॒ते सर्वा॒न्कामा᳚न्थ्स॒ह ।
****
4
ஏகோ தேவ : ஸர்வ பூதேஷு கூட : ஸர்வ வ்யாபி
ஸர்வ பூதந்தராத்மா
கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீ
சேதா கேவலோ நிர்குணஸ் ச
— ஸ்வேதாஸ்வதரோபநிஷதம் 6-11
கடவுள் ஒருவரே ; அவர் எல்லார் உள்ளத்திலும் மறைந்திருக்கிறார் . அவர் எங்கும் உள்ளார். எல்லோரிடத்திலும் ஊடுருவியிருப்பவர். எல்லாச் செயல்களையும் அவர் கண்காணிக்கிறார். உயிர்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடம். சாட்சியாகவும் சுத்த சைதன்யமாகவும் குணரகிதராகவும் அவர் இருக்கிறார்-.– சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு.
-Rig Veda (Mandala 7, Hymn 59). YAJUR VEDA RUDRAM, MAHA NARAYANA UPANISHAD 56-1
****
6
அஸூர்யா நாம தி லோகோ அந்தேன தமஸா வ்ருதாஹா
தாம்ஸ்தே ப்ரேத்யாபி கச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனாஹா
—ஈஸா வாஸ்ய உபநிஷத் –3
அசுரப்பிறவிகள் அஞ்ஞான இருளில் மூடப்பட்டுள்ளன . யாரெல்லாம் ஆத்மீகத்தைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இறந்த பின் அந்த அசுரலோகத்தை அடைகின்றனர் .
असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥
Asuryā nāma te lokā andhena tamasāvṛtāḥ,Tāṃste pretyābhigacchanti ye ke cātmahano janāḥ.
****
7
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹுனா ஸ்ருதேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ
ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்
கடோபநிஷத் 1-2-23
இந்த ஆத்மனை வேதம் கற்பதால் அடைய முடியாது; புத்தி கூர்மையாலோ , ஏராளமான சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அடைய முடியாது; யாரை இது ஆட்கொள்கிறதோ அவனால் இது அடையப்படுகிறது ; அவனிடத்தே இந்த ஆத்மன் தனது சொரூபத்தில் விளங்குகிறது.
नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।
சூரியன் அங்கு பிரகாசிப்பதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் மின்னலும் அங்கு ஒளிர்வதில்லை ; இனி இந்த நெருப்பு (நாம் காட்டும் சிறிய தீபம்) எப்படி பிரகாசிக்கும் ? பிரம்மத்தைச் சார்ந்து யாவும் பிரகாசிக்கின்றன . அதன் பிராகாசத்திலிருந்து எல்லாவற்றுக்கும் பிரகாசம் வருகிறது. Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः । तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥
—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).
Na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ | Tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti ||
—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வடநாட்டுத்திருப்பதி
Part 59
நைமிசாரண்யம்
தாயார் : ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
மூலவர் : ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
இடம் : உத்தரப் பிரதேசம்
கடவுளர்கள்: தேவ ராஜா ,புண்டரீகவல்லி தாயார்
“குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…” என்று சொன்னவர் காஞ்சி மஹாபெரியவர்.
இந்த திருத்தலம் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.
வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.
இந்தக்காட்டில் சூதர்என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதியபதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.
தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை. ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).
சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். கோமதி நதிக்கு ஆதிகங்கை என்று மற்றொரு பெயர் உண்டு. இந்த கோமதி தான் முதலில் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்ட நதி என்று சொல்வார்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்ரதீர்த்ததில் நீராடுவது விசேஷம்.
இங்குள்ள சக்ர தீர்த்தம் 14 லோகங்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படுவதால், சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ரதீர்த்த கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு.
இங்கிருந்து கோமதி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி (வ்யாஸகத்தி) என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்ற புராணங்களை உருவாக்கினார்கள். வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்த பெருமை இத்தலத்திற்கு உண்டாகிறது. இந்த கோவிலில் ஓலை வடிவில் இந்த புராணங்கள் இன்றும் பாதுகாக்கப் படுகின்றன. இங்கேயுள்ள ஆலமரத்தடியில் பல மஹரிஷிகள் இருந்து உபதேசம் செய்ததால், அதனை சுற்றி வருபவர்களுக்கு, இன்றும் இந்த ஆலமரமே, அதில் இருந்து வீசும் புண்ணிய கிரணங்கள் மூலம், அந்த ரிஷிகளின் அருளை அள்ளி வழங்குவதாக நம்பிக்கை.
இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான்கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.
ஹநுமான்கட்டி செல்வதற்கு சற்று முன்னால், புராண மந்திர் என்று சுகப்பிரம்ம ரிஷிக்கு ஒரு கோவில் உள்ளது, கிளி மூக்குடன் பெரிய வெண்கல சிலை உள்ள கோவில் ஆகும்.
இங்கு ராமானுஜ கூடமும், அஹோபில மடமும் தங்குவதற்கும் தென்னிந்திய உணவுக்கும் உள்ளன. அஹோபில மடத்தில், தேவனார் விளாக அழகியசிங்கர் என்ற ஆச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது.
मोर न्याउ मैं पूछा साईं। तुम्ह पूछहु कस नर की नाईं॥4॥
மீண்டும் துளசிதாசரிடம்…………………..
பிறகு ஹனுமன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பகவானைப் போற்றினார். தமது தலைவனை அடையாளம் கண்டு கொண்ட அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்ரீ இராமனைப் பார்த்து ஹனுமான் “சுவாமி! நான் தங்களைக் கேட்டவை அனைத்தும் நியாயமானதே. பல்லாண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தவசி கோலத்தில். நான் ஒரு குரங்கு. அதனால் குரங்கு புத்திக்கு ஏற்ப உங்களை ஏதேதோ கேட்டேன். நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் மனிதனைப் போல என் கதையைச் சொல்லும்படி கேட்பது விந்தையினும் விந்தை” என்றான்.
..
“निज नाथहि चीन्हीं”பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தபஸ்வி கோலத்தில் . இங்கு தான் மீண்டும் அந்த பத்ம இராமாயணத்தை நமக்கு நினைவு படுத்துகிறார், சிறு வயதில் இராமுனுடன் விளையாடியுள்ளார். பல ஆண்டுகள் ஓடி விட்டன. அதுவும் தவசி கோலத்தில் வேறு இருப்பதால் உடனே அடையாளம் தெரியவில்லை என்பதாகச் சொல்கிறார். அதனால் நான் கேட்டதில் நியாயம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக நீங்கள் கேட்டதில் என்ன நியாயம்? நீங்கள் பரப்பிரம்மம், எல்லாம் அறிந்தவர். அப்படி இருக்கும்போது தாங்கள் என்னிடம் எப்படிக் கேள்வி கேட்கிறீர்கள். தாங்கள் எல்லாம் தெரிந்தவர்தானே? என்று ஹனுமன் நினைக்கிறான்.
तव माया बस फिरउँ भुलाना। ता ते मैं नहिं प्रभु पहिचाना।।5।
एकु मैं मंद मोहबस कुटिल हृदय अग्यान।
पुनि प्रभु मोहि बिसारेउ दीनबंधु भगवान॥2
“நானோ தங்கள் மாயாவசத்தால் என்னை மறந்து திரிந்து கொண்டிருக்கிறேன். எனவே என் சுவாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
प्रष्टव्यं योग्यमस्माकं त्वं पृच्छसि कथं नृवत्।
मायावश्यो भ्रमाम्यत् प्रभु न ज्ञातवानतः॥
“நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று கேட்கிறான்)
“உன் மேல் ஆணை உம்மை பூஜிப்பதோ உம்மை அடைவதற்கு யோகசாதனகளைச செய்வதோ எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கேயாவது சேவகன் தனது எஜமானனை நம்பி வாழ்பவன் கவலைப் பாடுவானா? அது போல் தாயை நம்பி வாழும் குழந்தை கவலைப் படுமா? அதுபோல என்னை ரட்சிப்பவர் தாங்கள் தான். உமது திருவடிகளைச் சரணம் அடைந்து உம்மையே அண்டி நான் வாழ்வேன், துளசிதாசர் இங்கு कछु भजन उपाई॥ என்றப் பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உன்னை நினைத்து சிறிதளவே பூஜித்தாலும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் எனக்கு அந்தச் சிறிதளவு பூஜைகூட செய்யத் தெரியாது என்று ஹனுமன் பணிவுடன் சொல்ல முயல்கிறார். இந்த சுலோகம் ஹனுமானின் பதினாலாவது ஸ்துதி.. நட்சத்திரங்களில் பதினாலாவது சித்திரை . ஹனுமானின் நட்சத்திரம் சித்திரை. மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்பவர்களுக்கு நன்மையே நடக்கும்.
ஹனுமன் தனக்கு ஒன்றுமே தெரியாது ஞானமில்லாதவன். எனது தலைவனை மட்டும் நம்பி இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது எனக்கு இறைவனை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வேறு பாதையும் இல்லை என்று அந்த நாராயணனிடம் சரண் அடைகிறான். அதாவது சர்ரனாகதி தத்துவத்தில் இது முதல் அம்சம். . அப்படியானால் சரணாகதி தத்துவத்தின் அந்த ஆறு அங்கங்கள் என்ன?
अनुकूलस्य संकल्पः प्रतिकूलस्य वर्जनम् ।
रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वे वरणं तथा ।
आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति:
இந்த சுலோகம் ஹரி-பக்தி-விலாஸம் (என்ற வைஷ்ணவக் கிரந்தத்தில் இருந்து வருகிறது, இது ஸ்ரீ சனாதன கோஸ்வாமி அவர்கள் எழுதியது. இதில் ஷட்விதா சரணாகதி — பகவானிடம் சரணாகதியாக இருப்பதற்கான ஆறு முக்கிய அம்சங்கள் விளக்கப்படுகின்றன.
சரணாகதி – ஆறு அம்சங்கள்
1. அனுகூலஸ்ய ஸங்கல்பः –
நன்மைக்கே மனதளவில் ஒப்புதல்
பகவானுக்கு ஏற்ற, தர்மத்துக்கு ஏற்ற, பக்திக்கு ஏற்ற செயல்களை மனதாலும், செய்கையாலும் ஏற்கும் மனநிலை.
-உதாரணம்: ஜபம், பஜனம், தர்மம், பக்தி, சேவை.
“நான் பகவானுக்கே உகந்ததைச் செய்கிறேன்” என்ற மனநிலை.
2. ப்ரதிகூலஸ்ய வர்ஜனம் –
தர்மத்துக்கு எதிரானதைத் தவிர்த்தல்
-பக்திக்கு விரோதமான, தர்மத்துக்கு எதிரான, மாயை சார்ந்த செயல்களை முழுமையாக விலக்குதல்.
-உதாரணம்: அகங்காரம், ஆசை, பொய், வன்மம்.
“பகவானுக்கு விரோதமானதை நான் செய்ய மாட்டேன்” என்ற உறுதி.
3. ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸ: –
பகவான் என்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை
-எந்த சூழ்நிலையிலும், பகவான் என் பாதுகாவலர் என்ற உறுதியான நம்பிக்கை.
-இது பக்தியின் ஆதார நம்பிக்கை.
“என்னை யாரும் காப்பாற்ற முடியாது; பகவானே என் காப்பாளர்”.
4. கோப்த்ருத்த்வே வரணம் –
பகவானை என் பாதுகாவலராக ஏற்கும் மனநிலை
-பகவானை என் வாழ்வின் வழிகாட்டி, பாதுகாவலர் என உணர்ந்து ஏற்கும் நிலை.
-இது சரணாகதியின் செயற்கூறு.
“நான் உன்னையே என் வழிகாட்டியாக ஏற்கிறேன்”.
5. ஆத்மநிக்ஷேப: –
தன்னை முழுமையாக பகவானிடம் ஒப்படைத்தல்
-சுயம், அகங்காரம், சொந்த விருப்பம் ஆகியவற்றை முழுமையாக விட்டு,
பகவானிடம் தன்னை ஒப்படைக்கும் நிலை.
“என் வாழ்க்கை, என் சிந்தனை, என் செயல்—
6. கார்பண்யம் –
தாழ்மையும், தனிமையும் உணர்தல்
-தாழ்மை, தன்னம்பிக்கையின் இல்லாமை,
பகவானின் தயை இல்லாமல் நான் ஒன்றும் அல்ல என்ற உணர்வு.
“நான் ஒன்றும் இல்லை; நீயன்றி நான் எதுவும் இல்லை”.
🔱மொத்தமாக: சரணாகதி என்பது ஒரு மனநிலை, ஒரு தத்துவம், ஒரு பக்தி யோகத்தின் உச்சம்.
இந்த ஆறு அம்சங்கள் இல்லாமல், உண்மையான சரணாகதி இல்லை.
நன்மை எனில் நான் துணிவேன் –
நாயகனுக்கே நான் ஒப்பேன்!
தீமை எனில் நான் தவிர்வேன் –
தேவர் வழியில் நான் நிற்பேன்!
பாதுகாப்பு நீயே எனில் –
பயமென்ன? என் நெஞ்சம் உறும்!
வழிகாட்டி நீயே எனில் –
வஞ்சகங்கள் எல்லாம் மறும்!
என் உயிரை உனக்கே கொடுப்பேன் –
என் உள்ளம் உனக்கே உருப்பேன்!
தாழ்மையுடன் நான் நிற்பேன் –
தந்தை என உன்னை ஏற்பேன்!
ஆறு நெறிகள், ஆறு தீபங்கள் –
ஆனந்தத்தின் வாசல் திறக்கும்!
சரணாகதி எனும் சிகரம் –
சதாசிவத்தின் சுடர் பரக்கும்!To be continued……………………………………………………………………………..
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Research article- Part 5
Madurai Menakshi (Wife of Siva).
We get interesting information about jewels and ornaments from Sangam Tamil literature, Rajatarangini of Kalhana and Buddha Charita of Asvaghosa.
Tamil Sangam literature has many Sanskrit words like Valaya (bangles, bracelets) Nupura (anklet), Mani (gem stones) and Mukta (Muthu,Pearl). Mukta may be taken from Tamil. Pravala is used as Pavalam in Tamil.
Tamils wore ornaments from head to foot like their north Indian counterparts. Only later epic Silappadikaram has full details. Sangam Tamils wore bangles made up of seashells a lot. Both men and women had anklets (Kazal for men; Silambu for women). Children had foot ornaments as well; later literature mentioned Kolusu; but Sanskrit word Kinkini is in Sangam poems. As I mentioned earlier all the Five Tamil Epics are named with ornaments, but with Sanskrit words!
Most interesting thing is the mention of Makara rings (shark shaped) worn by the Sangam Tamils. We find such rings until today.
Kalhana who wrote the history of Kashmir in Sanskrit says in his work Rajataarangini,
“Now, gentle friend! Drink freely, your ears serving the mother of pearl glasses, of this River of Kings (raajatarangini) delightful with the flow of its sustained sentiment- 1-24”.
For this sloka R S Pandit (India’s first Prime Minister Jawaharlal Nehru’s brother-in-law) has given the following detail in the footnote:
Kalhana hoped his poem would be recited like the great epics in time to come. Mother of pearl glasses for drinking wine must have been in use among the people in his day. In Taranga V verse 169, there is a reference to jewelled glasses for liqueur which were used by the nobility.
Bernier speaks of Tibetan jade presented to Aurangazeb in Kashmir, which was “in great estimation in the court of the Mogol; its colour is greenish, with white veins, and it is hard to be wrought only with diamond powder. Cups and vases were made of this stone. I have some of the most exquisite workmanship, inlaid with strings of gold, and enriched with precious stones”– Bernier
***
Hindu woman in Ashmolean Museum, Oxford, UK.
Asvaghosha wrote four books Saundarananda, Buddha Carita, Vajrasuci and Sraddotpada Sastra.
Jewellery is mentioned as
Bhuushana,
Aabharana ,
Mandana
It included the following ornaments: various kinds of necklaces called Mala (maalaa), Hara(haara), which sometimes were long enough to dangle up to breasts, special necklaces called Yoktraka, Suvarna Suutra and Kantha suutra.
Dangling earrings-Kundala and Mani kundala (studded with precious jewels);
Anklets (Nuupura), bracelets or armlets called Keyuura, Bhujapaasha;
Valaya- bangles and Angad;
Girdle called Mekhalaa, Kaanchi and Jhaghana Vibhuushana. Some of them had jingling bells.
Mahaavastu also mentioned these ornaments.
While ladies of high pedigree used gold, silver studded jewellery, common people used white shell ornaments.
From Begran in Gandhara region a beautiful collection of fragments of ivory toilet boxes have been found from the ruins of Kanishka’s palace.
The kings and princes used a large number of ornaments. Royal tiara with strings of pearls hanging over their shoulders, armlets in the arms, diadem with blazing jewels and necklaces.
Q.Curtius Rufus (First century CE) writes:
“Indians hang precious stones as pendants from their ears, and persons of high social rank or of great wealth, deck their wrist and upper arm with bracelets of gold…. The luxury of their kings or they call it, their magnificence is carried to a vicious excess without a parallel in the world”.
***
Yakshi with head to foot ornaments
Some important Sanskrit Words in modern usage:
Angada- armlet like a coiled snake;
Anguliyaka- finger ring;
Arsi- thumb ring set with mirror;
Baahu- armlet;
Bali- ring type earring with pearl strung on it;
Bina- star shaped forehead ornament;
Bindi -forehead ornament;
Chaulari- four stringed necklace;
Chuudaamani- ornament for hair, lotus shaped, its petals ornamented with pearls and precious stones;
Ekavali- single strand pearl necklace;
Chungru- anklet with small bells (kinkini)
Hamsa mithuna- decorative motif consisting of a pair of swans;
Hiranya- gold;
Hirnyasraj- gold garlands;
Kaksha- red seeds for making ornaments;
Kanaka kamala – a full blown lotus design earring set in rubies, still used in South India;
Kancala- elaborate earrings with pendants;
Kaachis- hip girdle with bells;
Kangan- bracelet;
male and female jewellery; Ashmolean Museum, Oxford, UK.
Kanta- short necklace broad and flat;
Karnika- earring;
Karnphul-flower shaped earring;
Kinkini- anklet with small bells suspended;
Kirita- crown;
Kundela- simple earring or circular;
Maangaa maalaai- gold coin necklace of south Indians;
Manjira- hollw anklets;
Mekhalaa- hip belt or girdle;
Mukta – pearl; muktavali-pearl necklace;
Nishka- necklace of gold coins;
Pattabandha- ornamented gold strip for holding the turban in position;
Phalaka- slab like gems;
Phalaka haara- necklace with slab like gems at intervals;
Phalaka valaya – bracelet with slab like gems set into it;
Rasana-girdle;
Ratnajali- a net of braid and pearls worn around chignon by women ;
Ratnanguliya- finger ringsl studded with gems; one of them is NAVA RATNA RING;
Satlar- seven stringed necklace;
Tilari- three stringed necklace;
Tulakoti- heavy anklets with two ends enlarges at their meeting point;
Valaya- bracelet; bangles;
Yashti- necklace of gems and gold beads with large central head.
Tamils of later days also had a long list of ornaments but not found in ancient literature. The sculptures and paintings show this jewellery.
–subham—
Tags- Ornaments, Buddha Charita, Rajatarangin, :Ancient Hindu Jewellery, You can get Ph.D., Part 5, Research article