முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 7 (Post No.15,960)

Written by London Swaminathan

Post No. 15,960

Date uploaded in London – 8 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 7

41

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை

வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி  தஸ்மை 

தம் ஹ தேவம்  ஆத்மபுத்திப்ரகாசம்  முமுக்ஷுர்வை

சரணமஹம் ப்ரபத்யே

–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19

யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை,  அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர்  ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.

यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै।तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये॥ Shvetashvatara Upanishad (6.18)

Yo brahmāṇaṁ vidadhāti pūrvaṁ yo vai vedāṁśca prahiṇoti tasmai.Taṁ ha devamātmabuddhiprakāśaṁ mumukṣurvai śaraṇamahaṁ prapadye- Shvetashvatara Upanishad (6.18)

****

42

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய  பூர்ணமேவாவசிஷ்யதே 

—–ஈசாவாஸ்ய , பிருஹதாரண்யக உபநிஷத்துக்களில் வரும் சாந்தி மந்திரம்

அதுவும் பூரணம்; இதுவும் பூரணம்.

பூரணத்திலிருந்து பூரணம் உதித்திருக்கிறது .

பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்னரும்

பூரணமே எங்கும் எஞ்சியிருக்கிறது .

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Puurnnam-Adah Puurnnam-Idam
Puurnnaat-Puurnnam-Udacyate |
Puurnnashya Puurnnam-Aadaaya
Puurnnam-Eva-Avashissyate ||
Om Shaantih Shaantih Shaantih || [

****

43

யோ யோனிம் யோனிமதி  திஷ்டத்யேகோ 

யஸ்மின்னிதம்  ஸம் ச  வி சைதி ஸர்வம்

தமீசானம் வரதம் தேவமீட்யம்    

நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11

எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின்  பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை,  போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை  அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.

Shvetashvatara Upanishad Mantra 4.11.

यो योनिं योनिमधितिष्ठत्येको यस्मिन्निदं सं च वि चैति सर्वम् ।तमीशानं वरदं देवमीढ्यं निचाय्येमां शान्तिमत्यन्तमेति ॥

yo yoniṃ yonim adhitiṣṭhaty eko yasmin idaṃ saṃ ca vi caiti sarvamtam īśānaṃ varadaṃ devam īḍyaṃ nicāyyemāṃ śāntim atyantam eti

****

44

தத்ராபரா: ரிக்வேதோ  யஜுர்வேத:  ஸாமவேதோ அதர்வ

வேத: சிக்ஷா கல்போ  வ்யாகரணம்  நிருக்தம் சந்தோ

ஜ்யோதிஷமிதி  அத பரா யயா ததக்ஷர மதிகம்யதே

முண்டகோபநிஷத் 1-5

அவைகளுள் பிரபஞ்ச ஞானமாயிருப்பவைகள் ரிக்வேதம், யஜுர் வேதம்,  ஸாமவேதம், அதர்வவேதம்,  உச்சரிப்பு, கிரியாமுறைகள் இலக்கணம், சொற்பிறப்பியல், வேத செய்யுள் இலக்கணம், ஜோதிடம் முதலியனவாம் . இனி எதனால் பரம்பொருள் அடையப்படுகிறதோ  அது பர வித்யை ஆம்.

तत्रापरा ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति ।
अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५ ॥

tatrāparā ṛgvedo yajurvedaḥ sāmavedo’tharvavedaḥ śikṣā kalpo vyākaraṇaṃ niruktaṃ chando jyotiṣamiti .
atha parā yayā tadaksharamadhigamyate ..Mundakopanishad 1-5

****

45

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்யவரான் நிபோதத

ஷூரஷ்யதாரா  நிசிதா தூரத்யயா துர்கம் பதஸ்தத்

கவயோ வதந்தி

கடோபநிஷத் 3-14  

எழுந்திரு ! விழித்திரு ! சான்றோரை அணுகி அந்த இறைவனை அறிந்துகொள்! அந்த ஞான  மர்க்கமானது  கூர்மையான சவரக் கத்தியின் வாய் போன்று கடப்பதற்கு அரியது . கடப்பதற்கு இயலாதது என்று ஞானிகள் இயம்புகின்றனர்.

उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥ Katha Upanisad (1.3.14)

uttiṣṭhata jāgrata prāpya varānnibodhata |
kśurasya dhārā niśitā duratyayā durgaṃ pathastatkavayo vadanti || 14 ||- Katha Upanisad (1.3.14)

To be continued…………………..

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், part 7

Leave a comment

Leave a comment