WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,072
Date uploaded in London – 10 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா) – 2
ச. நாகராஜன்
ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி 2026 ஏப்ரல் 3ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பேராசிரியர் பி.என்.ஓக் அவர்கள் தாஜ்மஹாலைப் பற்றித் தெரிவித்துள்ள உண்மையைக் குறிப்பிட்டுள்ளது.
அவர் தனது புத்தகமான TAJ MAHAL: THE TRUE STORY என்ற நூலில் பல உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
புருஷோத்தம் நாகேஷ் ஓக் (1917-2007) இன்ஸ்டிடியூட் ஆஃப் ரீ ரைட்டிங் ஹிந்து ஹிஸ்டரி என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர். தனது ஆராய்ச்சி மூலம் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லறை புதிதாக கட்டப்பட்ட ஒன்று அல்ல என்று கூறுகிறார்.
தனது அன்பு மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் கட்டிய மஹாலே தாஜ் மஹால் என்று பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் இது தேஜோ மஹாலயம் என்ற ஹிந்துக் கோவிலை இடித்து, சற்று மாற்றி அமைத்து அமைக்கப்பட்ட கல்லறை தான்.
தாஜ் மஹால் என்ற பெயரே எந்த ஒரு முகலாய ஆவணத்திலும் இல்லை
ஆப்கானிஸ்தானத்திலிருந்து ஆஸ்திரியா வரை உள்ள முகலாய கட்டிடங்களில் மஹால் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. உண்மையில் மும்தாஜ்- உல்- ஜமானி என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.
ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இதை தாஜ்-இ- மஹால் என்றே குறிப்பிடுகின்றனர்.
ஜெய்பூர் ராஜா மான்சிங்கிடமிருந்து ஷாஜஹான் ஆக்ராவில் உள்ள பெரும் மாளிகையை மும்தாஜைப் புதைப்பதற்காகப் பெற்றார் என்பதை பாத்ஷாநாமா என்ற வரலாற்று ஆவணத்தில் ஷாஜஹானே தெரிவிக்கிறார்.
இரு ஆணைகள் இது பற்றி ஜெய்பூர் அரண்மனை சேமிப்பு ஆவணங்களில் உள்ளன.
தங்களால் கைப்பற்றப்பட்ட ஆலயங்களை கல்லறைகளாக மாற்றுவது பல முஸ்லீம் ஆட்சியாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு பழக்கமாகும்.
ஹுமாயூன், அக்பர், இமாத்-உத்-தௌலா ஆகியோரின் கல்லறைகள உதாரணமாகச் சொல்லலாம்.
ஹிந்து ஆலயங்களில் பொதுவாக அமைக்கப்படும் முற்றம், பல அடுக்கு கோபுரம் ஆகியவற்றைக் கொண்டு தாஜ்மஹால் திகழ்கிறது.
கட்டிடம் தெற்கு நோக்கி இருக்கிறது. கட்டிடத்தின் உச்சி திரிசூல பாணியில் திகழ்கிறது.
பீடர் முண்டி (PETER MUNDY) (ஐரோப்பிய யாத்ரீகர் 1632) என்பவரின் குறிப்பின் படி தாஜ்-இ-மஹால் முன்பே இந்தக் கட்டிடம் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இவர் மும்தாஜ் இறந்த ஒரு வருடத்தில் இங்கு வந்தவர்.
ஜோஹன் ஆல்பர்ட் மாண்டெல் இஸ்லோ (JOHAN ALBERT MANDELSO) என்பவர் 1638ல் ஆக்ரா பற்றி எழுதியுள்ளார். அதில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த யாத்ரீகர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர், (FRENCH JEWELLER JEAN-BAPTISTE TAVERNIER) தாஜ்மஹால் அமைக்கப்பட்ட 22 ஆண்டுகளில் பல பழைய அமைப்புகள் இடிக்கப்பட்டதையும் அகற்றப்பட்டதையும் குரான் வாசகங்கள் அங்கு சேர்க்கப்பட்டதையும் தெரிவிக்கிறார்.
1652ல் ஔரங்கசீப் தாஜ்மஹால் ஏழு அடுக்கு கொண்டிருப்பதையும், பழமையான கட்டிடம் என்பதையும், அது ஒழுகுகிறது என்பதையும் சிதிலடமைந்த கூம்பைக் கொண்டிருக்கிறாது என்பதையும் ஆதாப்-இ-ஆலம்கிரி என்ற ஆவணத்தில் குறிப்பிடுகிறார்.
ஒரு பழைய கதவின் கார்பன் மாதிரிக்கான சோதனை ஷாஜஹானின் காலத்தை விட 300 ஆண்டுகள் பழமையான கதவு இது என்று தெரிவிக்கிறது. இதைச் செய்தவர் மார்வின் மில்லர் என்பவராவார்.
தாஜ் மஹாலில் 22 அறைகள் உள்ளன. இவை சிவப்புக் கல் அடித்தளத்தில் சலவைக்கற்களுக்குக் கீழே உள்ளன. இவற்றை சுவரால் அடைத்து விட்டார் ஷாஜஹான். இதை ஓக் சுட்டிக் காட்டுகிறார்.
1934ல் மூடப்பட்ட ஒரு துவாரத்தின் வழியே பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட சிவபிரானின் சிலையையும் இதர சிதிலமடைந்த தெய்வ உருவங்களையும் கொண்டிருப்பது இது என்பது தெரியவந்தது.
ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா ஒருபோதும் முறையான ஒரு சர்வேயை இங்கு எடுக்கவே இல்லை.
22 வருட காலம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு 20000 பேர்களை வைத்து அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தாஜ்மஹாலைப் பற்றி அன்றைய அரசு ஆவணங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை.
மும்தாஜ் மஹால் பர்ஹன்பூரில் மரணமடைந்தார்.
ஆகவே தாஜ் மஹால் என்பது உண்மையில் தேஜோ மஹாலய என்னும் சிவனின் ஆலயமே ஆகும் என்று உறுதிபட ஓக் தெரிவிக்கிறார்.
தாஜ்மஹாலை முறைப்படி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.
**. முற்றும்