GMT Time uploaded in London –20-14 Post No. 5919 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I am
publishing 45 pictures from a 119 year
old book in Parts . The book is Siva Maha Purana, available at the British
library in London. I will give brief description in English along with the
pictures of Lord Siva.
சைவ புராணம் என்னும் சிவ மஹா புராணம் 1900-ம் ஆண்டு வெளியானது. இதில் சுமார் 45 படங்கள் உள்ளன. அவற்றை பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் இந்த புஸ்தகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது.
picture 2
Saints in the Naimisaranya Forest listening to Saint Suthar. He is reciting them the Siva Purana (Mythology about Siva). Look at the posture and beautiful appearance of the saints. They are bare bodied and with bun hairdo. Also notice the different types of tilaks on their foreheads.Saints always use the deer skin or the tiger skin for their seats. Here we seethe tiger skin.
Lord Vishnu is in the Milky ocean on the snake bed. Brahma comes out from him seated on the lotus. Consciousnessis wide awake but eyes look like sleeping (Yoga Nidra)
Siva Linga means the formless form,i.e. there is beginning and there is no end. In a circle there is no beginning or end. God is like that. Foreigners gave wrong explanation to belittle Hinduism. Here Brahma and Vishnu tried to find his beginning and end by going up and down. Both of them admitted that they failed in their attempt. You can easily identify Brahma with Four Heads and Vishnu with Chank (conch) and Chakra (the wheel).
TheVishnu Chakra works like the Australian Boomerang. It hits the target and returns to Lord Vishnu.
Brahm aand Vishnu worshiped Lord Siva and had his darshan (vision) in the form of 51 Letters. Hinduism is the only religion which has linguistics, grammar and etymology as part of Vedic (religious) studies. The original alphabets has 51 letters. Sivais always associated with Sanskrit Grammar and alphabet.
Date: 11 JANUARY 2019 GMT Time uploaded in London –17-11 Post No. 5918 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date:11JANUARY 2019 GMT Time uploaded in London –12-37 Post No. 5917 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 16 சொற்களைக்
கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1.and 3.இந்தியாவின் தேசியப் பூ
5.21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான்
மனித இனம் தோன்றியது குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு என்ற மனைவியர்
மூலம்
6.கானகம், அரண்யம்
7.(Right to
left) கபிலரால் போற்றப்பட்ட வள்ளல்; முல்லைக்குத் தேர் ஈந்தவர்
8.சைவர்களுக்கு இதுவே கோவில்
10.எல்லோரும் விரும்புவது; இப்படி…….யாக
வாழ ஆசை
12.ரசத்தில்போட்டால் வாசனை; விதையாகவும்
சமையலில் வரும்; பூவுக்கும் பெயர்
13.திருவள்ளூவர் செய்த மூன்றாவது பால், திருக்குறளில்;
வாத்ஸ்யாயனர் சப்ஜெக்ட்
posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com
கீழே
1.பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் ஒரு பெயர்
2.இந்த ரிஷி பரத்வாஜர் மகனைக் கொல்ல, அவரிட்ட
சாபத்தால், ரிஷியின் மகனே தந்தையைக் கொல்ல, இறுதியில்
எல்லோரும் உயிர்பெற்று எழ, கதை சுபமாக முடிந்தது
4. ராவணன் ஆண்ட பூமி
9. எல்லா கோட்டைகளிலும் இ து
உண்டு; இது பற்றி பூனையுடன் சேர்த்து ஒரு
பழமொழியும் உண்டு
10.மீனவர்களின் முக்கிய சாதனம்
7.(கீழிருந்து மேலே செல்க)- எல்லோரும் பாடுவது; கேட்பது
11.பிறப்பில் எல்லோரும்……………………………..
14. (கீழிருந்து மேலே செல்க)- வயலில் தேவை; ஆனால் …………… பயிரை மேயக் கூடாது
Answers are given below
குறுக்கே
1.தாமரை 3.மலர் -இந்தியாவின் தேசியப் பூ
5.கஸ்யப– 21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான் மனித இனம் தோன்றியது குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு
என்ற மனைவியர் மூலம்
Date: 11 JANUARY 2019 GMT Time uploaded in London – 8-08 am Post No. 5916 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .
Date: 11 JANUARY 2019 GMT Time uploaded in London – 6-39 am Post No. 5915 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .
Date: 10 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-49
Post No. 5913
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial
1930ஆம்
ஆண்டில் சிறைச் சாலையில் தம்முடன் இருந்தவர்களுடன் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
பேசிய விஷயங்களை அவரே ஒரு கட்டுரைத் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அந்தப்
புஸ்தகத்தை 1944ம் ஆண்டில் காரைக்குடி புதுமைப்
பதிப்பகம் அச்சிட்டுள்ளது. இதோ அந்த
இணைப்பு:
Date: 10 JANUARY 2019 GMT Time uploaded in London – 10-42 am Post No. 5912 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .
Date: 10 JANUARY 2019 GMT Time uploaded in London – 7-44 am Post No. 5911 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial
மரணமடைந்த பின்னர் மீண்டும் ஒரு ஆத்மா மறு
பிறவி எடுக்கிறதா? அறிவியல் விஞ்ஞானிகளில் ஏராளமானோர் இது பற்றிய ஆய்வில் கடந்த நூறு
ஆண்டுகளாகத் தீவிரமாக இறங்கி ஆராய்ந்துள்ளனர்.
இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அமெரிக்க
உளவியலாளரான இயன் ஸ்டீவன்ஸன்.(Ian Pretyman Stevenson பிறப்பு
: 31-10-1918 மறைவு 8-2-2007) தன் நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய
இவர் புனர் ஜென்மம் பற்றிய மலைக்க வைக்கும் எண்ணிக்கையான 3000 கேஸ்களை ஆராய்ந்தார்.
புனர் ஜென்மம் உண்டு என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்தார். இவரது புத்தகங்கள் பிரபலமானவை.
இந்தியா, ஸ்ரீ லங்கா, பர்மா, தாய்லாந்து,துருக்கி, லெபனான், சிரியா, வடமேற்கு பசிபிக்கில்
உள்ள அமெரிக்க பூர்வகுடிகளின் வசிப்பிடம் உள்ளிட்டவை இவர் ஆய்வு நடத்திய நாடுகளாகும்.
இது தவிர பார்கர்ரும் பஸ்ரிசாவும் (Barker and
Pasricha 1979) இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் 91 பேரின் புனர்ஜென்மம் பற்றி ஆய்வு
நடத்தியதும் குறிப்பிடத் தகுந்த ஒரு ஆய்வாகும்.
இந்த ஆய்வில் பெரும்பாலானோர் குழந்தைகளே! அவர்கள் ஒன்றுமறியா இளம்
வயதில் தங்கள் பூர்வ ஜென்ம விவரங்களைக் குறிப்பிட்டது மாபெரும் அதிசயமே.
ஆனால் மேலை நாடுகளில் பல இடங்களில் இப்படிக் குழந்தைகள் தங்கள் முன்
ஜென்ம விவரங்களைச் சொன்னபோது அவர்களின் பெற்றோர்கள் பயந்து போனார்கள். அவர்களைப் பேச
விடாமல் தடுத்து விட்டனர்.
1956இல் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானி க்ளைன் (Kline 1956) இள வயதுக் குழந்தை அந்தப் பகுதியிலேயே யாருக்கும் புரியாத மொழியைப் பேசியதைக் குறிப்பிடுகிறார்.இது க்ரிப்டோம்னீஷியா (Cryptmnesia) என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.மேற்கு இத்தாலியில் லத்தீன் மொழி புழக்கத்திலிருந்து அகன்ற பின்னர் புழக்கத்திற்கு வந்த ஆஸ்கன் என்ற மொழியை ஒரு குழந்தை பேசிய போது அனைவரும் அயர்ந்து போனார்கள்.
இதே போல கம்ப்மேன் மற்றும் ஹிர்வெனோஜா (Kampman and
Hirvenoja 1978) நடத்திய ஆய்வு ஒன்றில் 12 வயதான பின்லாந்தைச்
சேர்ந்த ஒரு சிறுமி ஹிப்நாடிஸம் செய்யப்பட்ட போது தனது முந்தைய எட்டுப் பிறவிகள் பற்றிக்
கடகடவென்று கூறிக் கொண்டே போனாள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் டோராதி
என்ற பெயருடன் பிறந்திருந்ததாகக் கூறிய அவள் மிடில் ஏஜஸ் எனக் கூறப்படும் இடைக்காலத்தில்
இருந்து வந்த ஒரு பாட்டையும் பாடி அனைவரையும் அயர வைத்தாள்.
பார்கர் (1979) தனது ஆய்வில் ஸ்டீவன்ஸன் சேகரித்த
113 கேஸ்களை மறு ஆய்வு செய்ததில் மூன்று வயதே ஆன இந்தியக் குழந்தைகள் துல்லியமான விவரங்களைக்
கூறியதைக் கண்டார்.
நைஜீரியா துருக்கி ஆகிய நாடுகளில் இப்படி மறு
ஜென்மம் பற்றிக் கூறியவர்கள் பலர். துருக்கியில் முந்தைய ஜென்மத்தில் வன்முறையாக மரணத்தை
எய்தியோர் அந்த வன்முறைக்கான அடையாளத்தோடு மறு ஜென்மத்தில் உடலை அடைந்தது அனைவரையும்
திகைப்பில் ஆழ்த்தியது.முந்தைய ஜென்மத்தில் காயப்பட்டு இறந்து போன அதே இடத்தில் மறு
ஜென்மத்தில் ஒரு மச்சமோ வடுவோ இருந்ததைக் கண்ட ஸ்டீவன்ஸன் குழந்தையின் பெற்றோரைக் கேட்ட
போது அது இந்த ஜென்மத்தில் ஏற்பட்டதில்லை என உறுதி படக் கூறினர்!
ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த 3000 கேஸ்களையும் பார்க்க
இங்கு இட்டமில்லாவிட்டாலும் இரண்டு சுவையான அவரது அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
1972ஆம் ஆண்டு பர்மாவில் மா டின் அங் ம்யோ
என்ற 19 வயது இளம் பெண்ணை அவர் சந்தித்தார்.அவளைக் கர்ப்பத்தில் சுமந்த போது அவளது
அம்மா ஒரு ஜப்பானிய போர்வீரனை அடிக்கடித் தன் கனவில் கண்டு வந்தார். மா டின் வளர்ந்து
வந்த போது தான் ஒரு ஜப்பானிய போர் வீரன் என்றும் விமானத் தாக்குதலில் இன்னொரு விமானத்தால்
தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி வந்தார். ஜப்பானின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த
தனக்கு மணம் ஆகி குழந்தைகளும் இருந்ததாக அவள் கூறியதோடு விமானம் பறப்பதைக் கண்டாலே
அஞ்சி அழ ஆரம்பிப்பாள். மேகமூட்டத்தைக் கண்டாலும் அவள் பயப்படுவாள். பர்மிய சீதோஷ்ண
நிலை அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆண்கள் அணியும் உடையைத் தான் அவள் அணிவாள்.அவள் இந்த
ஜென்மத்தில் தன்னால் ஒரு ஆணை மணம் புரிய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.
ஸ்டீவன்ஸனுக்கு அவள் கூறிய ஆதாரங்களை ஜப்பானுக்குச் சென்று எங்கு சரி பார்ப்பது என்பது புலப்படவில்லை. தான் சந்தித்த கேஸ்களில் புரியாத புதிராக இருந்த கேஸ்களில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ லங்காவில் 1988இல் அவர் ஆராய்ந்த 3 கேஸ்கள்
அவருக்கு பிரமிப்பை ஊட்டின. அவற்றில் ஒன்று இரங்கா என்ற பெண்மணி பற்றியது. அவள் 15
கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு தான் முந்தைய ஜென்மத்தில்
வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டாள். அவள் கூறிய நுணுக்கமான 43 விஷயங்களை ஸ்டீவன்ஸன்
தானே அவள் வாழ்ந்த முந்தைய ஜென்ம இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அவற்றில்
38 விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன!
விஞ்ஞானிகள் தான் இப்படி பல சுவையான உண்மைச்
சம்பவங்களைக் கூறி இருக்கிறார்கள் என்பதில்லை; பிரபல ஹாலிவுட் நடிகையான ஷர்லி மக்லீன்
(பிறப்பு 24-4-1934 இப்போது வயது 84) தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி ஐ ஆம் ஓவர் ஆல்
தட் (I’m Over All That) என்ற நூலில் எழுதியுள்ளார். 2011ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் புத்தகத்தில் அவர் மறுஜென்மம்
உண்டு என்பதையும் தனது முந்தைய ஜென்மங்களைப்
பற்றியும் சுவைபட விவரிக்கிறார். பேரழகியும் பெரும் நடிகையுமான அவர், “இந்தியாவிற்கு
நான் சென்ற போது பல கோவில்களை நான் முன்னரே பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு
ஏற்படக் காரணம் என்ன, பிரேஜிலுக்கு நான் சென்ற போது போர்த்துக்கீசிய மொழியில் என்னால்
எப்படிப்பேச முடிந்தது? என்று அவர் கேட்ட போது உலகமே வியந்தது.
84 வயதான அவர் 15க்கும் மேற்பட்ட சுவையான நூல்களை
எழுதியுள்ளார். பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்ட நூல்கள் இவை!
எட்கர் கேஸ் ஆயிரக்கணக்கான கேஸ்களை ஆராய்ந்தவர்;
நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது முந்தைய ஜென்மம் பற்றிக் கூறியவர். அவை வெவ்வேறு நாடுகளில்
சரி பார்க்கப்பட்டவை. அவர் பற்றி ஏற்கனவே பாக்யாவில்
விந்தை மனிதர்கள் தொடரில் எழுதி இருப்பதால் அதை இங்கு திருப்பிக் கூறவில்லை.
இன்னும் சில விஷயங்களை அடுத்துப் பார்ப்போம்
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷாரின் இன பேதக்
கொள்கையால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி. கல்கத்தாவில் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக வேலை பார்த்த போது மற்ற ஆங்கிலேயருக்கு இணையான சம்பளம் அவருக்குத் தரப்படவில்லை.
ஏனெனில் இந்தியாவில் கல்வி சம்பந்தமான அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்ததோடு இனபேதக் கொள்கையால் அவரை மட்டம் தட்டவே முயற்சித்தது. அவரது ஆய்வுப்
பேப்பர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் செய்யப்பட்டது. 24 சதுர அடி கொண்ட ஒரு
மிகச் சிறிய அறையே அவரது லாபரட்டரி! அதில் அவரது சாதனங்களை வைக்கவே அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.
இதையும் மீறி ரேடியோ விஞ்ஞானத்தில் அவர் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடைந்தார்.
மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிக்கு முன்னரே அவர் அதைக் கண்டு பிடித்து விட்டாலும் தாவரம்
பற்றிய ஆய்வையே அவர் முக்கியமானதாக எடுத்துக் கொண்டார். பின்னாளில் அவர் மார்கோனியை
நேரில் சந்தித்தும் இருக்கிறார். வயர்லெஸ் தொடர்பில் ஆரம்ப காலக் கண்டுபிடிப்புகளையும்
அவரே கண்டுபிடித்தார்.
1997இல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்
எஞ்சினியர்ஸ் அவரை ரேடியோ ஸயின்ஸின் தந்தை என்று அறிவித்தது.
அவரைக் கௌரவிக்கும் விதமாக சந்திரனில் உள்ள பெரும் பள்ளம் ஒன்றிற்கு
அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பாபா பள்ளத்திற்கும் அட்லர் பள்ளத்திற்கும் அருகில்
உள்ள போஸ் பள்ளத்தின் குறுக்களவு 91 கிலோமீட்டர். வயர்லெஸ் டெலிகம்யூனிகேஷனில் அவர்
கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளே சாடலைட் தகவல் தொடர்புக்கு வழி வகுத்தது என்பதால் இந்த
கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர்
ஜகதீஷ் சந்திர போஸ்!
ஸ்டாக்ஹோம் சென்ற சர் சி.வி. ராமனுக்கு
ஒரு விருந்து அளிக்கப்பட்டது.அவர் மதுவைத் தொடவில்லை. அவர் காலையில் ஆல்கஹாலை வைத்து
ஒரு சோதனையைக் காண்பித்திருந்தார். அதை வைத்து ஒருவர் ஜோக் அடித்தார். அது என்ன?இந்தக் காணொளிக்
காட்சியில் காணலாம்.