Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பற்றி முன்னரே பல கட்டுரைகள் இதே ‘பிளாக்’கில் எழுதி வெளியிட்டு விட்டேன். அவர் பற்றிய மேலும் சில குறிப்புகள் இதோ :
பிறந்த தேதி – செப்டம்பர் 18, 1709
இறந்த தேதி – டிசம்பர் 13, 1784
வாழ்ந்த ஆண்டுகள் – 75
பதினெட்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கிய அறிஞர் சாமுவேல் ஜான்சன் DOCTOR SAMUEL JOHNSON. அவர் ஆங்கில அகராதியை முதல் முதலில் உருவாக்கினார். அவர் இலக்கிய விமர்சகர்,புலவர், மொழி பெயர்ப்பாளர்.
இங்கிலாந்தில் லிச்பீல்ட் (LICHFIELD) என்னும் இடத்தில் பிறந்த அவர், தந்தையின் புஸ்தகக் கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாகப் படித்தபோதிலும் வறுமை காரணமாக பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.
ஜான்சன் பயந்த சுபாவம் உள்ளவர். மேலும் பழகும் விதமும் இங்கிதமும் அறியாதவர். சிறுவயதில் ஏற்பட்ட நோயால் பார்வைக்குறைவும் , செவிட்டுத் தன்மையும் இருந்தது. வேலை கிடைக்காமையால் அடிக்கடி மனச் சோர்வும் ஏற்பட்டது.
28 வயதில் லண்டனில் குடியேறி 20 ஆண்டுகளுக்குப் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தார். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். 53 வயதில் அரசாங்கம் ஒரு பென்சன் கொடுக்கும் வரையில் அவரை வறுமை வாட்டியது.
இலக்கிய சேவைக்காக அரசு அவருக்கு பென்சன் கொடுத்தது. அவருடைய நண்பர் ஜேம்ஸ் பாஸ்வெல் JAMES BOSWELL அவருடைய மேதாவிலாசத்தத்தை உலகிற்கு எடுத்துக்காட்டினார். பி காலத்தில் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதினார்.
29 வயதில் ஜான்சன் எழுதிய லண்டன் LONDON என்ற கவிதை வெளியானது . இது லத்தீன் மொழிக்கு கவிஞர் யுவனல் (JUVENAL’S THIRD SATIRE) கவிதையைத் தழுவியது. அதற்கு வரவேற்பு கிட்டவில்லை.அவருடைய மற் றொரு கவிதையைத் தழுவி எழுதிய கவிதை (THE VANITY OF HUMAN WISHES), ஆசை வயப்பட்ட மனிதன் படும் அல்லல்களை எடுத்துக்காட்டுகிறது.
‘ஆங்கிலப் புலவர்களின் வாழ்க்கை வரலாறு’ LIVES OF THE ENGLISH POETS என்று அவர் எழுதிய நூலில்தான் அவருடைய திறமை வெளிப்பட்டது. ஒவ்வொரு புலவரின் கவிதைகளை அவர் விமர்சித்தது அவருடைய புலமையைக் காட்டியது . அவருடைய நடையும் மிக நன்றாக இருந்தது .
ஏழு ஆண்டுகள் உழைத்து 40,00 சொற்களைக் கொண்ட முதல் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இதனால் ஆங்கில இலக்கிய உலகில் அழியாத இடம் பெற்றார்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.
பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் நமஸ்காரம். வணக்கம். இன்றைய தினம் ஆடி மாதம் சுவாதி நன்னாளையொட்டி சுந்தரர் சப்தாஹம் – ஏழு நாள் விழாவின் இரண்டாவது நாளாக இன்றைய நன்னாள் அமைகிறது. இந்த நாளில் உலகெங்கும் வாழும் சைவர்களை ஒருங்கிணைத்து சிவனருளைப் பெற்றுத் தரும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானாசிரியர்களுக்கும் எனது நமஸ்காரங்கள். சிவனடியார்களுக்கும் மெய்யன்பர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் என் நமஸ்காரம் வணக்கம். நாயன்மார்களில் பன்முகப் பரிமாணமும் சிறப்புக்களையும் கொண்ட காப்பியத் தலைவராகவும் ஒரு அபூர்வமான நாயனாராகவும் சுந்தர மூர்த்தி நாயனார் திகழ்கிறார்.
அது என்ன பன்முகப்பரிமாணம் என்றால் அதற்கு பதிலை விரித்துக் கொண்டே போகலாம்.
முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார்.
திருஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் போலல்லாது சிவபிரானை சகா த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ என்று சகாவாக, ஏன் அனைத்துமாக அவர் சிவபிரானை வழிபட்டதும் அவரது வாழ்க்கையில் ஒரு தனிச் சிறப்பாகும்.
நடுநாட்டில் அமைந்துள்ள திருநாவலூரில் அவதரித்தவர் சுந்தரர். அவரது இயற்பெயர் ஆரூரன். ஆலாலசுந்தரர் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவலோகத்தில் பார்வதி தேவியாருக்கு சேடியராக இருந்த கமலினி, அனிந்திதை ஆகிய இருவரைப் பார்த்து ஆசை கொண்டார். அதனால் அவரை பூலோகம் சென்று அதன் பயனை அனுபவிக்குமாறு சிவபிரான் அருள்பாலிக்க அவர் பூவுலகில் பிறந்தார். தேவியாரின் சேடியர் இருவரும் பரவையாராகவும் சங்கிலியாராகவும் பிறந்தனர். 18 தேவ நாட்கள் அதாவது 18 மனித ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து செயற்கரிய பணியை எல்லாம் செய்து முடித்து தன் இருப்பிடம் மீண்டார் அவர்.
பூவுலகில் சுந்தரத் தோற்றத்துடன் அவதரித்த அவருக்கு சிவபிரானே சுந்தரர் என்ற அழகிய நாமத்தை அளித்தார்.
தெருவீதியில் விளையாடிக் கொண்டிருந்த அழகிய சிறுவனைக் கண்ட திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையில் வளர்க்கலானார். மணமுடிக்கும் வயதில் அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் வேளையில் சிவபிரான் அங்கு வந்து அவரை தடுத்தாட் கொண்டார். சிவபிரானுக்கே அவர் மீளா அடிமையானார். அவர் பாடிய பாடல்கள் மொத்தம் 38000 என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஏழாம் திருமுறையில் அவர் இயற்றியுள்ள பதிகங்களாக நமக்குக் கிடைத்துள்ளவை 101 பதிகங்கள். 84 தலங்களுக்குச் சென்று அவர் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை 1037. சுந்தர நாயனாரின் பாடல்கள் அனைத்தும் அவற்றின் சிறப்பைக் கருதி, திருப்பாட்டு என்று விசேஷமாக அழைக்கப்படுகிறது.
அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அவர் பாடிய பாடல்கள் அனைத்திற்கும் பண்கள் உண்டு. ஆகவே அவை பண் சுமந்த பாடல்கள் என்று சிறப்பாகக் கூறப்படுகின்றன.அத்தோடு தேவாரப் பாடல்களில் செந்துருத்திப் பண்ணில் பாடலை இயற்றியவர் அவர் ஒருவரே தான். வேறு யாரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
அவர் ஆற்றியுள்ள அற்புதங்கள் பல.
Time and Space என்று கூறுகின்றோமே காலம், வெளி என்று! – இவை இரண்டையும் கடந்த அருளாளர் அவர். ஏனெனில் காலமும் கணக்கும் நீத்த காரணனின் தோழர் அல்லவா அவர்!
சிவபிரான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் அவர் எடுத்த போது உலகமே வியந்தது. Space – இடம் என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர் நிரூபித்தார்.
அடுத்து அவிநாசி என்று இன்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூரில், அவர் சிவனடியார் வீட்டில் நடந்த ஒரு உபநயன விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது எதிர் வீட்டிலிருந்து வந்த அழுகைக் குரலைக் கேட்டு அது என்ன அழுகைக் குரல் என்று விசாரிக்க, சிவனடியாரின் பிள்ளையின் வயதை ஒத்த தன் மகனை இழந்த தாயின் புலம்பல் அது என்று கேட்டு பச்சாதாபம் கொண்டார். இரு வருடங்களுக்கு முன்னர் ஐந்து வயதாகியிருந்த போது அவனை குளத்திலிருந்த முதலை ஒன்று விழுங்கிற்று என்று அறிந்து கொண்ட அவர் நேராக குளத்தருகே சென்றார். தனது நெருங்கிய தோழரான சிவபிரானை நோக்கிப் பாடலானார். இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்! நான்காவது பாடலில், உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என்று இப்படி கட்டளை இடும் தொனியில் பாடினார்.
உடனே நீரில்லாமல் வற்றி இருந்த குளத்தில் நீர் நிரம்பியது. அதனுள்ளிருந்து இரண்டு வருடங்கள் முன் ஐந்து வயதாக இருந்த பாலகனை விழுங்கிய முதலை இப்போது ஏழு வயதாக் வளர்ந்த நிலையில் அவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றது. இது அவர் காலம் கடந்த அருளாளர் என்பதைக் காட்டுகிறது. விஞ்ஞானிகள் வியந்து ஆராயும் TIME TRAVELஐ இது மெய்ப்பிக்கிறது. காலம் என்பது ஒரு அற்புதமான விஷயம். அதில் அவதாரங்களும் அருளாளர்களும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபனி ம்ஹரிஷியின் குருகுலத்தில் குருகுலவாசம் முடிந்த நிலையில் குருதக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது ஆசாரியர் நீ எனக்கு மாணவனாக வந்ததே என் பாக்கியம் என்கிறார். ஆனால் ஆசிரமத்தின் உள்ளிலிருந்து குரு பத்னியின் அழுகைக் குரல் கேட்கவே கிருஷ்ணர் பதறிப் போய் என்ன விஷயம் என்று கேட்கிறார். குரு பத்னி தன் மகன் காலன் வசம் அகப்பட்டுக் கொண்டதைக் கூறி வருந்த, கிருஷ்ண பிரான், இதோ கொண்டு வருகிறேன் உங்கள் மகனை என்று கூறி விட்டு ஒரே பாய்ச்சலில் அவன் மகன் இருந்த பிரபஞ்சம் சென்று அவனை மீட்டு வரும் வரலாறு அதிசயமான ஒன்று. அதே போல திருஞானசம்பந்தர் இறந்து அஸ்தியாக இருந்த பூம்பாவையை மயிலையில் உயிருடன் மீட்ட சம்பவமும் அற்புதமானதே. Miracles are visiting cards of Saints! -அற்புதங்கள் என்பது அருளாளர்களின் அடையாள முகவரிகள்-என்பதே உண்மை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே
–திருமந்திரம்
திருமந்திரத்தில் பசுக்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறதோ அது ரிக்வேதத்தின் எதிரொலி ஆகும்.
ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திருந்து பத்தாவது மண்டலம் வரை உள்ள
10,000 மந்திரங்களில் பசுக்களைப் பற்றியும் குதிரைகள் பற்றியும் ஏராளமான
குறிப்புகள் உள்ளன. அதில் குதிரைகள் பற்றிய விஷயங்களில் அதிகப் புதுமை இல்லை.
வேகமாகப் போகும் குதிரைகள் வேண்டும் , போருக்கு ஏற்ற குதிரைகள் வேண்டும்
என்று கோருகின்றனர். ஆனால் பசுக்கள் பற்றி புதுமையான விஷயங்கள் சொல்லப்படுகின்றன . குகைகளில் மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை இந்திரன் மீட்டான் அல்லது வேறு ஒரு கடவுள் மீட்டார் என்று எல்லா மண்டல ரிஷிகளும் பாடுகின்றனர்.
இதைப் படிப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு முறை குகையில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டதையா அவர்கள் இப்படி அடுத்தடுத்து பாடுகின்றனர்? அல்லது ஒவ்வொரு முறையும் இப்படி எதிரிகள் மறைத்து வைத்தார்களா?
எந்த மந்திரத்துக்கும் மூன்று வகை விளக்கம் சொல்ல முடியும்.
1.மந்திரத்துக்கு இலக்கிய ரீதியில் அர்த்தம் சொல்லாதே (Don’t take it literally) . அதன் மூலம் வரும் ஒலி அலைகளால் நல்ல விளைவுகள் ஏற்படும் அதைப் பாடிக்கொண்டே இரு. இதுதான்
பழமைவாதிகள் அணுகுமுறை . மடாதிபதிகளும் இப்படியே நம்புகின்றனர்.
2.மேலை நாட்டினரும் இந்து மத விரோதிகளும் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் பார்த்து புதிய வியாக்கியானம் செய்வார்கள். பெரும்பாலும் விஷமத்தனமான விளக்கமாகவே இருக்கும் .
‘சிஸ்ன தேவாஹா’ என்பதை காமத்தை வழிபடுவோர், செக்ஸ் (Lewd) விரும்பிகள் என்றே பல வெள்ளைக்காரர்களும் மொழிபெயர்த்தனர் . அவர்களில் விஷம் கொண்ட விஷமிகள் இது ஆண்குறியைக் குறிக்கும். ஆண் குறி என்பது சிவ லிங்கத்தைக் குறிக்கும். இது சைவர்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது; சிந்து வெளி மக்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது என்றெல்லாம் எழுதி அசிங்கப்படுத்தினர் .
3.மூன்றாவது அணுகுமுறை – அவர்கள் மறை பொருளில் , சிலேடைப் பொருளில் வேறு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்பர்.
இதில் எதுவும் சாத்தியமே. திரைப்படப் பாடல்களில் கூட இப்படி இரு பொருள்படும்படி பாடி செக்ஸ் விஷயங்களைக் கொண்டு வருவதைக் காண்கிறோம்.
சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார், திருமூலர் போன்றோர் வெறும் எண்களை மட்டும் சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். வேதங்களிலும் ஒரே ம ந்திரத்தில் ஆறுமுறை எண் மூன்று வருவதைக் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த கம்ப ராமாயணப் பாடலான “அஞ்சிலே ஒன்று பெற்றான்”…………. என்பதில் எண் 5 என்பது பல பொருள்களில் வருவதை அறிவோம்.
மறை பொருளுக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரை ஜவுளிக்கடைகளில் பெண்கள் பயங்கரமாகப் பே ரம் பேசுகையில் கடை ஊழியர் கடை முதலாளியை ஒரு பார்வை பார்ப்பார். அவர்கள் தங்களுக்கே உரிய பரி பாஷையில் வாடிக்கையாளருக்கு இந்த விலையில் கொடு அல்லது கொடுக்காதே என்று சொல்லுவர் . அது தமிழ்ச் சொல்லாகவே இருக்கும் ஆனால் அதன் பொருள் வாடிக்கையாளருக்கு விளங்காது . இன்னொரு உதா ரணமும் சொல்லலாம் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாதென்பதற்காக பெற்றோர்கள் ‘க’ என்ற எழுத்தை எல்லா எழுத்துக்களுடனும் சேர்ப்பர். சாக்லேட் என்பது குழந்தைகளுக்குத் தெரியக கூடாது என்பதற்காக கசா, கக் , கலே , கட் எங்கே இருக்கிறது ? என்பர் .
ஆகையால் வேத மந்திரத்தை இந்து மத அறிஞர்களே அணுகமுடியும். நாம் பார்ப்பதோ, வேத மந்திரங்களை நம்பாத, வேத மதத்துக்கு எதிரான, வேதங்களை செயல் முறையில் உபயோகிக்காத ‘அஹிந்து’க்களின் பொருள் ஆகும்.
திருவள்ளுவர் ஐம்புலன்களுக்கு ஐந்து மத யானைகளை ஒப்பிடுகிறார். அவர்கள் பயன்படுத்தும் இடத்தைக்கொண்டு யானை என்பதற்கு புலன்/ இந்திரியம் என்று நாம் பொருள் கற்பிக்கிறோம். இதே போல திருமூலரும் பசுக்களை ஐம்புலன்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல்-
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே
–திருமந்திரம்
இங்கு பார்ப்பான் என்பது உள்முகமாகப் பார்க்கும் அகக்கண் உடையவன் இரு பொருள் கொள்ள வேண்டும். அவனிடமுள்ள பசுக்கள் ஐம்புலன்கள்.; அதைக் கட்டுப்படுத்தாமல் மேயவிட்டால் அது ஆசை வயப்பட்டு வெறி கொண்டு திரியும் . அதையடக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் அவை உள்ளத்திலே அமிர்த தாரையைப் பொழியும். அதாவது யோகத்தில் நிலைத்து நிற்பவர்கள் புலன் இன்பங்களைக் கைவிட்டால், அவர்கள் உள்ளத்தில் பால் போன்ற தூய்மை ஏற்படும். பால் சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் பலன்கள் போல இந்தப்பாலால் உள்ளத்துக்குக் உரம் கிடைக்கும் .
இப்போது ரிக் வேத மந்திரங்களை ஒப்பிடுங்கள் :-
ரிக் வேதம் 1-6-5
இந்திரனே, நீ காற்று தேவனான ‘மருத்’ கூடச் சேர்ந்து குகையினுள் மறக்கப்பட்டிருந்த பசுக்களைக் கண்டு பிடித்தாய் .
இதற்கு உரை எழுதியோர் இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் (இடி, மின்னல்) மலையிலுள்ள மேகங்களை வெளிக்கொணர்ந்தார். (மேகங்கள் = பசுக்கள்)
1-11-5
வஜ்ராயுதத்தை ஏந்தி நிற்கும் நீ (இந்திரன்), பசுக்களை மறைத்து வைத்திருந்த வலனின் குகையைத் திறந்தாய்; அவனால் துன்பமுற்ற தேவர்கள் உன்னுடைய நட்பை பெற்றவுடன் அச்சத்தை விட்டார்கள்
இங்கேயும் பசுக்கள் என்பதற்கு மேகங்கள் என்றே உரைகாரர்கள் எழுதியு ள்ளனர்
7-87-4
பசுவுக்கு மூவேழு நாமங்கள் உண்டு
இதற்கு உரை எழுதியோர் இங்கு பசு என்பது ‘சொல்’ WORD என்றும் 21 வகையான வேள்விகள் அல்லது 21 சந்தங்கள் என்றும் ஊகிக்கின்றனர் . தமிழ் இலக்கிய புறநானூற்றிலும் (பாடல் 166) மூவேழ் துறை, யாகம் தொடர்பான பொருளில் வருகிறது.
1-191-14
இங்கு மூவேழு பெட்டை மயில்கள் என்று விஷக்கடி மந்திரத்தில் வருகிறது. பாம்பும் மயிலும் எதிரி என்பது தெரிந்ததே.1-191-12ல் மூவேழு அக்கினிப் பொறி கள் என்றும் ரிஷி அகஸ்தியர் பாடுகிறார். இங்கெல்லாம் 3x 7=21 என்பதன் பொருள் விளங்கவில்லை சாயனர் 21 பொறிகளை 21 பறவைகள் என்கிறார். ஏன் 21 என்று எவருக்கும் சொல்ல முடியவில்லை .4-1-16 மந்திரத்திலும் பசுவுக்கு 21 பெயர்கள் என்ற வரி வருகிறது .
2-34-1
காற்று தேவதைகளான மருத் தேவர்கள் பசுக்களை புலப்படுத்தினார்கள் ; பசு= மேகம்
XXX
இவ்வாறு ரிக் வேதம் முழுதும் பசு, குகை, 21 மர்மம் வருகிறது. ஒரு சின்ன விஷயத்தை எதற்காக ரிஷிகள் மீண்டும் மீண்டும் பாடவேண்டும்? அதை எதற்காக சொல் மாறாமல் எழுத்தாக கூடாது என்று சொல்லி வாயமொழி மூலம் மட்டுமே பரப்ப வேண்டும்?
திருமூலர் எதற்கு ஐம்புலன்களையும் பசுவாக உருவகிக்கவேண்டும் ? இதனால்தான் இதை மறை= ரஹஸ்யம் என்கிறோம். மறைவான பொருள் உடைய வேதத்தை அதைப் பயிலாத, அதை இந்துக்களைப் போல மதிக்காத , இது விரோத சக்திகள் மொழிபெயர்க்கப் போய் தோல்வியே கண்டார்கள் மாக்ஸ்முல்லர் கும்பலை சேர்ந்த 20 க்கும் மேலான வெள்ளையாட்கள், மனம்போனபடி அர்த்தம் எழுதிவைத்து இருக்கிறார்கள்!
நாம் உண்மைப் பொருளை உணர வேதத்தைப் போற்றும், வேதத்தைப் பின்பற்றும் பெரியோர்களின் வாயிலாகவே கேட்கவேண்டும்/ தேவார, திருவாசக, திவ்யப்பிரபந்த வரிகள் அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது.
ஒரு ஆழ்வார் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என்று ஆடிப்பாடி கூத்தாடுகிறார் . அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரிஷி கண்டேன் கண்டேன், கண் முன்பாக அவன் தேரைக் கண்டேன் என்கின்றனர்.!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS ஆவார்.
புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தி ல் மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டனர். ஆங்கிலப்புலவர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் வரிசையில் முதல் வரிசையில் நிற்பவர் யேட்ஸ் . அயர்லாந்தில் பிறந்து அயர்லாந்தில் வாழ்ந்து அயர்லாந்தின் பழமைக் காவியங்களைத் தொகுத்து அவற்றைப் போற்றியதால் ஐரிஷ் மக்களின் பெருமதிப்பையும் பெற்றார்.
டபிள்யூ .பி. யேட்ஸ் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் DUBLIN, IRELAND பிறந்தார். அவர் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில மொழி எழுத்தாளர் . தன்னுடைய காலத்தில் வாழும் மிகப்பெரிய கவிஞர் GREATEST POET என்று T.S.. எலியட்டால் பாராட்டப்பட்டவர் . 1923-ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது லண்டனிலும் அயர்லாந்திலும் மாறி, மாறி வாழ்ந்தாலும் அயர்லாந்தையே தாய்வீடாகக் கொண்டவர்.லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்து மதம் , புத்த மதம் முதலிய ஆசிய சமயங்களில் ASIAN RELIGIONS வேட்கை பிறந்தது. மனிதனுக்கு அப்பாற்பட்ட அதீத ஆற்றலில் SUPER NATURAL POWERS நம்பிக்கை ஏற்பட்டது . அயர்லாந்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்ததால் அயர்லாந்தின் நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.
24 வயதிலேயே இந்த நூல்கள் அச்சாகின. அவருடைய கவிதைகளில் பழங்காலம் பற்றிய ஏக்கம் இருக்கும். நாம் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துவிட்டு சோழர் காலத்தில் வாழ மாட்டோமா என்று ஏங்குவது போல.
1936ம் ஆண்டில் புரோஹித் சுவாமி என்ற இந்தியருடன் மத்திய தரைக்கடல் பிரதேசம் மற்றும் மயோர்கா MAJORCA தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போதுதான் இந்து மத உபநிஷத்துகளில் மிகவும் முக்கியமான பத்து உபநிடதங்களை TEN PRINCIPLE UPANISHADS இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் .
1889-ல் மாட் கான் MAUD GONE என்ற ஐரிஷ் நடிகையைக் கண்டு, காதல் கொண்டு, அவரைக் கல்யாணம் செய்துகொண்டார். மாட் கான் அயர்லாந்தில் ஆங்கில ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போராடியர். இவரும் மனைவிக்கு ஆதரவாக அயர்லாந்து அரசியலில் குதித்தார். இதன் தாக்கத்தை இவருடைய கவிதைகளில் காணலாம் .
எழுத்தின் ஆற்றலை, பேனா முனையின் வலிமையை, உணர்ந்த அவர் தனது கவிதைகளையும், நாடகங்களையும் அயர்லாந்து ஓன்றுபட பயன்படுத்தினார். ஐரிஷ் புராணக் கதைகளையும் வாய் மொழி இலக்கியத்தையும் தொகுத்து இரண்டு நூல்களாக வெளியிட்டார். 1896-ல் அயர்லாந்துக்குத் திரும்பிய அவர் லேடி கிரிகரி LADY GREGORY என்ற பெண்மணியை , பணக்கார பிரபு வம்ச பெண்ணைச் சந்தித்தார். அவருக்கும் இவரைப் போலவே பழமையில் ஆர்வ இருந்ததால் 1904-ம் ஆண்டில் ABBEY THEATRE GROUP அப்பி தியேட்டர் குரூப்பை நிறுவினார். இது மிகவும் பிரபலம் அடைந்தது . மக்களைக் கவரும் நாடகங்களை இருவரும் மேடை ஏற்றினர்
எ விஷன் A VISION – ‘நான் காணும் காட்சி’ என்ற நூலில் இவர் தனது நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் வெளியிட்டார். வயது ஆக ஆக அவர் நம்பிக்கை ஆல் போல் தழைத்தது; அருகு போல வேரூன்றியது. இவருடைய நான்கு நாடகங்களையும் பல கவிதைகளையும் படிக்காத ஆங்கில இலக்கிய ரசிகர்கள் இல்லை.
Maud Gone
பிறந்த தேதி – ஜூன் 13, 1865
இறந்த தேதி – ஜனவரி 28, 1939
வாழ்ந்த ஆண்டுகள் – 73
எழுதிய நூல்கள் –
1889- THE WANDERINGS OF OISIN AND OTHER POEMS
1893- THE CELTIC TWILIGHT
1894 – THE LAND OF HEART’S DESIRE
1897 – THE SECRET ROSE
1902 – CATHLEEN NI HOULIBAN
1925 – A VISION
1928- THE TOWER
1933- THE WINDING STAIR
1936- 39 THE LAST POEMS AND PLAYS
–SUBHAM–
tags- உபநிஷத், மொழிபெயர்த்த, நோபல் பரிசு , கவிஞர் W B.யேட்ஸ் , W B YEATS
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 8-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருவிடைமருதூர் திருத்தலம்!
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே!
பிறை ஆர் சடை அண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையார் இன்பமே
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது காசிக்குச் சமமான பஞ்ச க்ரோச தலங்களுள் ஒன்றான மத்யார்ஜுனம் எனப்படும் திருவிடைமருதூர் தலமாகும். இந்தத் தலமானது தமிழகத்தில், கும்பகோணம் நகருக்கு வடகிழக்கில் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதில் அழகு என்பார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வீதி அமைப்பைக் கொண்ட இந்தத் தலத்தில் பிரம்மா பிரதிஷ்டை செய்த மூர்த்தி, இந்திரன் உண்டாக்கிய தீர்த்தம் உள்ளன. மேலும் வருணன், வாயு உள்ளிட்ட தேவர்கள் பூஜித்த தலம் இது. ஆதி சக்தியின் மத்திய ஸ்தானத்தை உணர்த்திய பின்பு அந்த இருதயகமல மத்தியில் தியானிக்கப்பட்டு விளங்கிய ஜோதிர்மய மஹாலிங்க பெருமான், முனிவர்கள், தேவர்கள், ரிஷிகள் ஆகியோருக்குத் தரிசனம் தருவதற்காக இங்கு எழுந்தருளியதால் இந்தத் தலம் மத்யார்ஜுனம் என்ற பெயரைப் பெற்றது. இன்னொரு காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் ரோமச முனிவர் அர்ஜுன வனத்தின் மையப்பகுதியில் சிவலிங்கம் எழுந்தருளி இருப்பதைக் கண்டு இந்த க்ஷேத்திரம் ‘மத்யார்ஜுனம்’ என்று அழைக்கப்படலாயிற்று. இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.
வடக்கே உள்ளது ஸ்ரீ சைலம் எனப்படும் மல்லிகார்ஜுனம். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் எனப்படுவது புடார்ஜுனம் ஆகும். இவை இரண்டிற்கும் இடையே இருப்பதால் இது மத்யார்ஜுனம் என்று அழைக்கப்படுகிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். இங்கு மருத மரங்கள் ஏராளமாக நிரம்பி இருப்பதால் இது திருவிடைமருதூர் என்று அழைக்கப்படலாயிற்று.
சண்பக வனம், சக்திபுரம், சர்வதீர்த்தபுரம், வில்வ வன க்ஷேத்ரம், பூலோக கைலாஸம் உள்ளிட்ட பல பெயர்களையும் கொண்டுள்ளது இந்தத் திருத்தலம்!
காருண்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம், பாண்டவ தீர்த்தங்கள், அக்னி தீர்த்தம், வாயு தீர்த்தம், துரோண தீர்த்தம், கௌதம தீர்த்தம் உள்ளிட்ட 35 புண்ய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. இந்த ஆலயத்தில் மூன்று பெரிய பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரமான அஸ்வமேத பிரகாரத்தில் பிரதக்ஷிணம் செய்வோர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர். இந்த பிரகாரத்தின் உள்ளே உள்ள இரண்டாம் பிரகாரமான கொடுமுடி பிரகார பிரதக்ஷிணம் கைலாய மலையைச் சுற்றி வந்த பலனைத் தருகிறது. கொடுமுடி பிரகாரத்தின் உள்ளே உள்ள மூன்றாவது பிரகாரம் ஓங்கார பிரகாரம்.இந்த பிரகாரச் சுற்றில் பிரணவ ஒலி எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தேவியானவள் இங்கு தவம் செய்ய, சிவபிரான் தேவியின் ஹிருதய கமலத்தில் ஜோதிர்மயமாய் மஹாலிங்க மூர்த்தியாய் காட்சி அளித்தார். அடுத்து இன்னொரு வரலாறு உண்டு. ரோமச முனிவர் இங்கு வந்த போது காகம் ஒன்று கனக தீர்த்தத்தில் மூழ்கி நீராடி அருகிலுள்ள மருத மரத்தில் அமர்வதையும் அது உடனே பொன்னிறமாக மாறியதையும் பார்த்து அதிசயித்தார். அந்த காகத்திடம் அது பற்றி ரோமசர் கேட்க, அது தனது வரலாற்றைக் கூறியது. அது முன் ஜன்மத்தில் ஒரு அந்தணராக இருந்தது. அரசன் ஒருவனிடம் கிரகண காலத்தில் யாகம் வாங்க அந்த அந்தணர் சென்ற போது அவரது மார்பில் இருந்த சந்தனத்தைக் கண்ட அரசன் இதற்கு முன்பு தானத்தை எங்கேனும் வாங்கினீர்களா என்று கேட்க ஆம் என்று உண்மையை ஒப்புக் கொண்டார் அவர். உடனே, ‘காகம் போல தானம் வாங்க அலையும் நீர் காகமாகக் கடவது’ என்று அரசன் சாபமிட்டான். அதனால் காகமாக மாறிய அந்தணர் இங்குள்ள புண்ய தீர்த்தத்தில் நீராடி மஹாலிங்கத்தின் அருளால் பொன்னுடல் பெற்றது. தலத்தின் பெருமையை அறிந்து, ரோமச முனிவர் அங்கிருந்த சமயம் ஸ்தல யாத்திரையாக வந்த மன்னன் வீ ர சோழன் ரோமசரைக் கண்டு வணங்க அவரது ஆணையால் இந்த இடத்தில் பெரும் கோவிலை அவன் கட்டினான்.
இன்னொரு வரலாறும் உண்டு. அது பாண்டிய மன்னனான வரகுணபாண்டியன் பற்றியது. ஒரு முறை வரகுணபாண்டியன் வேட்டையாடி விட்டு இரவு நேரத்தில் திரும்பிய சமயம் அவனது குதிரையின் கால் மிதிபட்டு அந்தணன் ஒருவன் இறக்கவே, அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் வருந்திய அவன் சோமசுந்தரேஸ்வரரை வேண்ட, அவன் கனவில் தோன்றிய இறைவன், திருவிடைமருதூர் சென்று வழிபடுமாறு கூறி அருளினார். ஆனால் பகை நாடாக இருந்த சோழநாட்டில் உள்ள தலத்திற்கு எப்படிச் செல்வது என்று அவன் எண்ணியிருந்த சமயத்தில் சோழ நாட்டுப் படை அவனை எதிர்க்க வருவதை அறிந்து போரிட்டான். சோழப் படை தோற்க வரகுணன் திருவிடைமருதூர் கோவிலில் கிழக்கு வாயில் வழியே நுழைந்தான். ஆலயத்தினுள்ளே நுழைய சக்தி இல்லாமல் அந்தணன் ஆவியும் பிரம்மஹத்தியும் கிழக்கு வாயிலின் வெளிப்புறத்திலேயே நின்று அவன் திரும்பி வரும்போது அவனைப் பிடிக்கக் காத்திருந்தன. பாண்டியன் மஹாலிங்கேஸ்வரரை வழிபட்டான். ஆனால் ஒரு அசரீரி அவனை மேற்கு வாயில் வழியே வெளியில் செல்லுமாறு கூற அவனும் மேற்கு வாயில் வழியே வெளியேறினான். பிரம்மஹத்தி மற்றும் அந்தணனின் ஆவியிடமிருந்து அவன் தப்பித்தான். ஆக இன்றும் பக்தர்கள் கிழக்கு வாயில் வழியே நுழைந்து மேற்கு வாயில் வழியே வெளியே செல்வது மரபாக உள்ளது.
இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூன்று சமயக் குரவர்களும் மொத்தம் 12 பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.அருணகிரிநாதர் இங்கு 4 திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார். இன்னும் இந்தத் தலம் ஆதிசங்கரர், பட்டினத்தார், பத்திரகிரியார், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் போன்ற பெரும் மகான்களின் வாழ்க்கையில் பல அற்புத சம்பவங்கள் நிகழ்ந்த தலமாக அமைந்துள்ளது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மஹாலிங்க ஸ்வாமியும் பிரகத் சுந்தரகுஜாம்பிகையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். திருநாவுக்கரசர் அருள் வாக்கு இது:
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும், அம்மையே பிறவித் துயர் நீத்திடும் எம்மை ஆளும் இடைமருதன் கழல், செம்மையே தொழுவார் வினை சிந்துமே!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழான ஹெல்த்கேர்-இல், ஆகஸ்ட் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்!
ச.நாகராஜன்
இனிப்புச் சுவையே வாழ்க்கையில் கூடாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் டயபடீஸ் என்னும் நீரிழிவு நோய் வியாதி உள்ளவர்கள். இவர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவியல் ஆய்வுகளின் முடிவில் வெளி வந்துள்ளது. ஆம, இனிக்கும் பலாச்சுளையை தைரியமாக டயபடீஸ் உள்ளவர்கள் சாப்பிடலாம். என்ன ஒரு ‘இனிப்பான’ செய்தி!
பலாப்பழம் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விடமின்களின் உறைவிடம். ஆனால் இனிப்பும் ஏராளமாக இருக்கிறது.
150 கிராம் பலாச்சுளையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ளவை இவை:-
கலோரிகள் 143,
கொழுப்புச் சத்து – 1 கிராம்,
புரோட்டீன் – 3 கிராம்,
கார்போஹைட்ரேட் (Carbs) – 35 கிராம்,
ஃபைபர் – 2 கிராம்,
விடமின் B6 – 29% தினசரி மதிப்பில் (Of the Daily Value – DV),
விடமின் C – 23% of the Daily Value DV.
விடமின் C சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்! இதய நோய்க்கும் டயபடீஸ் டைப் 2விற்கும் வழி வகுக்கும் நீண்ட நாள் வீக்கத்தை இது கட்டுப்படுத்தும். இதில் கார்போஹைட்ரேட்ஸ் இருந்து சர்க்கரை சத்தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனால் மற்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை சரியாக்கும் என்பதும் உண்மையே.
பலாப்பழத்தில் க்ள்செமிக் இண்டெக்ஸ் 50 முதல் 60 வரை உள்ளது. (100 என்ற அளவீட்டின் படி) (glycemic index (GI) of about 50–60 on a scale of 100) இந்த GI என்பது எவ்வளவு சீக்கிரமாக உங்கள் உணவு வகைகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு. எடுத்துக்காட்டாக, இதை விவரிப்பதென்றால், சுத்தமான சர்க்கரை – அதாவது குளுகோஸ் – 100 என்ற அளவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துகிறது. வெள்ளை ரொட்டி (White Bread) 75 என்ற அளவைக் கொண்டுள்ளது.
பலாப்பழத்தில் உள்ள புரோட்டினூம் ஃபைபரும் ஜீரண இயக்கத்தை மெதுவாக ஆக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கிறது.அதனால் குறைந்த GI கொண்டுள்ளது.
பலாப்பழம் மீடியம் க்ளெசெமிக் லோட் (GL) கொண்டுள்ளது. GL என்பது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வதைப் ப்ற்றியும் GI பற்றியும் குறிக்கும் ஒரு அளவீடாகும். ஆகவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் காட்டும் ஒரு சரியான அளவீடாகும்.
இரத்த அழுத்தம் : GL 0 முதல் 10 முடிய இருப்பின் இரத்த அழுத்தம் குறைவு.
பலாப்பழத்தில் GL 13 முதல் 18 வரை உள்ளது. GL 20 இருந்தால் அது அதிகம் என்பதன் அறிகுறி. அதுமட்டுமல்ல, பலாப்பழத்தில் ஃப்லாவொனாய்ட் ஆன்டி ஆக்ஸிடன்ட் (flavonoid antioxidant) அதிகம் உள்ளது. இது நீண்ட நாள் வியாதிகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒன்றாகும்.
சில ஆய்வுகள் பலாப்பழமானது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று காட்டுகின்றன. ஆனால் இந்த ஆய்வுகள் மிருகங்களின் மீது மேற்கொள்ளப்பட்டவை என்பதால் மனிதர்களுக்கு இந்த முடிவை உறுதியாகச் சொல்ல முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
பலாப்பழம் குறைந்த அமில அளவைக் (Low Acidity Level) கொண்டுள்ள ஒன்று. பலாப்பழம் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பாலுடன் பலாச்சுளையை வைத்து அரைத்து தோலில் பூசி சிறிது நேரம் வைத்திருப்பதால் இளமைப் பொலிவுடன் இருக்கும் மினுமினுப்பான தோல் உருவாகிறது.
இதில் உள்ள அதிக அளவு புரோட்டீன்கள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இரத்த சோகையையும் குறைக்கிறது, ஹீமோகுளோபின் கொண்ட இரும்புச் சத்து இதில் நிறைய இருப்பதால் தான் இந்த நன்மை ஏற்படுகிறது. அடர்த்தியான கேஸமும், நல்ல கண்பார்வையுக் கூட பலாப்பழக் கொட்டைகளால் ஏற்படுகிறது. இதில் உள்ள விடமின் ஏ சக்தியால் இந்த நன்மை எற்படுகிறது. பலாப்பழ கொட்டைகளைப் பொடி செய்து சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன. தசைக் கட்டமைப்பையும் இது அழகுற ஆக்குகிறது.
பலாப்பழத்தில் உள்ள புரோட்டீன்கள் கொலஸ்ட்ரால் இல்லாதவை என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
உடல் எடை கூடி விட்டதே என்று கவலைப்படுவோருக்கும் பலா ஒரு அரிய ம்ருந்து. அதில் உள்ள ஃபைபர் ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. பலா தேவையற்ற கொழுப்புச் சத்தை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.
இதில் உள்ள விடமின் சி உடலில் ஏற்படும் நோய்களை வர விடாமல் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. விடமின் சி இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது.
பலாப்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பொடாசியமும் உள்ளது. ஆகவே இது வாஸோடிலேடராக அதாவது இரத்த நாளங்களை இயல்பாக ஓய்வுடன் இயங்கச் செய்வதாக ஆக்குகிறது. ஆகவே உடலின் இரத்த அழுத்தம் – ப்ளட் ப்ரஷர் – சீராக ஆகிறது. இரத்த அழுத்தம் கூடி இருந்தால் அதைக் குறைக்கிறது.ஒன்றாகும்.
பலாப்பழத்தின் இன்னொரு அரிய பயன் அது எலும்புகளை வலுவுள்ளதாக ஆக்குகிறது. கால்சியம் இதில் உள்ளது என்பதால் தான் இந்த நன்மை. விடமின் சி இருப்பதால் கால்சியத்தை உறிஞ்ச இது ஏதுவாகிறது.
இதில் உள்ள மக்னீஷியம் தூக்க வியாதி உள்ளவர்களுக்கு ஒரு அரும் வரபிரசாதமாகும்.இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை அளவுடன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஆகவே நல்ல தூக்கம் ஏற்படுகிறது. தூக்கமே வரவில்லை என்பவர்கள் பலாப்பழத்தைச் சாப்பிட ஆரம்பித்தால் நல்ல பயன் தெரியும்!
அட,இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள், பலாப்பழத்தைச் சாப்பிட கூலியா தர முடியும்! பலாப்பழத்தைச் சாப்பிட ஆரம்பியுங்கள், பலன் கண்டு மகிழுங்கள்!!
Subramanian Sitaram is the 5th of the seven children of Tamil poet Tiruloka Sitaram (1917-1973), who strode the literary scene in Tamilnadu as Mahakavi Subramanya Bharati’s principal message bearer in the period from 1945 to 1973. Subramanian was a career banker and worked at several places in India during a career spanning 31 years and later for 9 years at Dubai, UAE. He is a Treasury and Risk Management specialist. He consults for banks in Risk Management and also offers training on Financial Risk to Corporates and training institutions.
Subramanian was 17 years old when his poet father passed away. However, he spent a good amount of time with his father during his last few years, travelling with his father on his lecture tours and meeting authors. Subramanian also ran his father’s printing press for 4 years after his passing away before joining banks.
Subramanian produced a documentary on Tiruloka Sitaram, a dance video on Tirulokam’s long verse drama ‘Udaiyavar’, an Odissi dance performed by his daughter Suprita Trilok and also organised the Centenary celebrations of Tirulokam at Chennai. A committed follower of Tirulokam’s literary works, he was also instrumental in bringing out the complete poetical works of Tirulokam with English translation and notes by Sekkizhar Adippodi T.N.Ramachandran in 2014.
ABHANGAM SONG BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS
TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Sri Aurobindo (Aravinthar)– 13 MTS
DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7
MANGALAM – 3 MTS
TOTAL TIME- APPR. 60 MINUTES
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING
GNANAMAYAM HAS 3000 REGULAR FOLLOWERS
WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.
WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;
6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.
XXXX
MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
19-ம் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல் ஆசி ரியர்களில் ஒருவர் எமில் ஸோலா (EMILE ZOLA ) . இவர் உள்ளதை உள்ளபடியே வருணிக்கும் , தத்ரூபமாக வருணிக்கும் பாணியை பின்பற்றுபவர். இதை நேச்சுரலிசம் NATURALISM என்பர் . அவர் தொழிலாளர் வர்க்கம் பற்றிய உண்மைகளை நாவலில் கொடுத்தார். பாரீஸ் நகரில் பிறந்தாலும் தென்கிழக்கு பிரான்சில்தான் அவர் வசித்தார்.
அவருக்கு 7 வயதானபோது தந்தை காலமானதால் , குடும்பம் பணச் சிக்கலில் மாட்டிக்கொண்டது. 18 வயதில் அவர் தாயாருடன் பாரீஸ் நகரில் குடியேறினார். பள்ளி இறுதித் தேர்வை கோட்டைவிட்டார் (FAILED). இதனால் ஒரு பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்
நாவல்களை எழுதத் துவங்கினார். 27 வயதில் அவர் எழுதிய தெரசா ரகீன் THERESE RAQUIN நாவல் அச்சாகியது
சோலா ஒரு அரசியல் சார்பு பத்திரிக்கைக்காரர். அப்போதைய மூன்றாம் நெப்போலியன் தலைமயில் உருவான இரண்டாவது குடியரசு ஆட்சியை அவர் குறைகூறினார். 31 வயதில் இது பற்றிய 20 தொடர் நாவல்களை எழுத ஆரம்பித்தார். ஆனால் அதை 22 ஆண்டுகளுக்குப் பின்னரே முடித்தார். இரண்டாவது குடியரஸின் கீழ் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்தையும் வருணிக்கும் நாவல்கள் அவை.
வெவ்வேறு தொழில்புரிவோரின் குடும்பங்களைக் கதைகளின் கருப்பொருளாகப் பயன்படுத்தியதால் விபசாரி முதல் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் வரை இவர் நாவல்களில் இடம்பெற்றனர். ஏழை விவசாயிகளின் வாழ்க்கையையும் படம்பிடித்துக்காட்டினார்.
இதே பாணியில் வேறு இரண்டு தொடர் நாவல்களையும் எழுதினார். ‘மூன்று நகரங்கள்’ ‘நான்கு போதனைகள்’ என்று அவைகளுக்குத் தலைப்பு.வாழ்க்கையின் கசப்பான பகுதியை வருணித்தாலும் பண்புகளையும் குணநலன்களையும் ஆதரித்துப் போற்றினார். 1898ல் பிரென்சு ஜனாதிபதிக்கு ஒரு யூத மத போர்வீரன் ‘ஸே அக்யூசே’ – நான் குற்றம்சாட்டுகிறேன் என்று எழுதிய கடிதத்தை ஆதரித்தார். அதை எழுதிய வீரனின் பெயர் ஆல்ப்ரெட் ட்ரைபஸ் .அந்த வீரன் மீது தேசத்துரோக- ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு பல விரோதிகள் தோன்றினர் .
அவர் 62 வயதில் வீட்டில் புகைபோக்கியில் கசிந்த கார்பன் மோனாக்சைட் (CARBON MONOXIDE) விஷவாயுவை சுவாசித்ததால் இறந்தார். இது கூட விபத்து அல்ல; அவரைக் கொல்லத் திட்டமிட்டோர், புகைபோக்கியை அடைத்து, விஷ வாயு கசிய வழிசெய்தனர் என்று பலரும் கூறுவர்.