இது தான் இந்தியா – யுவான் சுவாங்! (Post No.9515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9515

Date uploaded in London – –  –21 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS

இது தான் இந்தியா – யுவான் சுவாங்!

ச.நாகராஜன்

இந்தியாவைப் பற்றிப் புகழாத பண்டைய யாத்ரீகர்களே இல்லை. வியப்பின் உச்சிக்கே அவர்கள் சென்றனர்.

சீன யாத்ரீகரான  யுவாங் (ன்) சுவாங்  கூறியவை இவை:-

கனௌஜ் நகருக்கு வந்த அவர் கூறியது இது:-

It (Kanuj) has lofty walls and solid trenches; on all sides are seen towers and pavilions. In several places there are also flowery groves and limpid ponds, crystal, clear, in this country there are found in plenty the rarest wares of other lands.”

மஹராஷ்டிராவிற்கு வந்த அவர் கூறியது இது:-

The soil (of Maharashtra) is rich and fertile, it is regularly cultivated and very productive. The climate is hot, and the disposition of the people is honest and simple; they are tall of stature and of stern and vindicative character. To their benefactors they are grateful; to their enemies relentless. If they are insulted, they will risk their lives to avenge themselves. If they are asked to help one in distress they will forget themselves in their haste to render assistance.”

இந்தியர்களைப் பற்றி அவர் கூறியது:-

The Indians are distinguished by the straight forwardness and honesty of their character. With regard

to riches, they never take anything unjustly! With regard to justice, they make even excessive conscessions. Straight forwardness is the leading feature of their administration.

*

கனௌஜ் நகரத்தின் சுவர்கள், வடிகால் குழாய்கள், அரண்மனைகள், கோபுரங்கள் பற்றியும் அங்குள்ள அழகிய பூ மலர்ந்த குளங்களையும் அவர் புகழ்கிறார்.

மஹராஷ்டிர மக்கள் தங்கள் செழிப்பான நிலத்தைப் பண்படுத்தி உழுது அதை எப்போதும் செழுமையாக வைத்திருப்பதையும் சீதோஷ்ண நிலை மிக உஷ்ணமாக இருப்பதையும், மஹராஷ்டிர மக்கள் நேர்மையையும் எளிமையையும் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு நன்றி உடையவர்களாகவும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்தியர்களின் பொதுவான குணங்களின் அடிநாதமாக ஒளிவு மறைவற்ற நேர்மை இருப்பதை அவர் குறிப்பிடுகிறார். நேர்மை, வெளிப்படையான நடத்தை இவையே இந்தியர்களின் குணாதிசயங்கள். பணக்காரர்களோ எனில் எதையும் அதர்ம வழியில் பெறுவதில்லை. நீதியை எடுத்துக் கொண்டால் அதில் அவர்கள் நல்ல தாராளத்தைக் காண்பிக்கின்றனர். (அதன் பின்னரே உரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என்று அர்த்தம்) அவர்களது நிர்வாகத்தில் ஒளிவு மறைவற்ற நேர்மையே அடிநாதமாக விளங்குகிறது என்கிறார் ஹுவான் சு வாங்.

அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு கணம் மனம் வருத்தமுறுகிறது.

எங்கும் லஞ்சம்; எதிலும் லஞ்சம்; நேர்மையற்ற அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள் அன்றாட வாழ்வில் அதிகமாக இருப்பதால் நல்லவர்கள் அஞ்சி ஒதுங்க, ரௌடிகள் எங்கும் தடிகளுடன் அலைகிறார்கள்.

இதை மாற்ற மக்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். நேர்மையானவர்கள் நிர்வாகத்தில் இருந்து பழைய பண்புகளைக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டியாக இருந்தால், பழைய புகழோங்கிய நாட்கள் மீண்டும் வரும்!

***

tags – யுவான் சுவாங்

Stories about Shalivahana (Post No.9514)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9514

Date uploaded in London – –20 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Bharatiya calendar system is the most scientific and most accurate in the world. Bharatiya astrologers had divided the whole year into 360 days as early as 1181 BCE. The first day of the year according to the National calendar of Bharat is significant both for its historical impact and for the advent of bountiful nature.

In some parts of India Shalivahana Saka beginning in 78 CE and in other part s VIKRAMA Saka beginning in 57 BCE is followed.

The day recalls the inspiring occasion when the invading Shakas, the barbaric tribal hordes from Central Asia, descending on Bharat like locusts during the first century CE were vanquished by the great emperors Shalivahana and Vikramaditya.

Shalivahana was the king of Shatavahanas with the capital at Prathisthana on the banks of Godavari, in the present day Maharashtra. A beautiful allegory is woven around the singular achievement of Shalivahana depicts how he made clay images of soldiers, breathed life into them and forged a formidable army of warriors.

Another story goes, Shalivahana popularised the figure of the dark Kali in her terrible form trampling upon a demon in colour, and piercing him with her deadly trident . The idol carried its own message, the dark Kali representing the Hindu people rising to their full heroic stature and crushing the foreign aggression of the white Shakas. It also symbolised the triumph of the forces of divinity over those of wickedness.

Vikramaditya, literally the Sun of Valour, was famous not only for the peerless prowess he displayed in liquidating the foreign aggression, he was the patron of Nine Gems of poetic genius, Kalidasa crowning them all.

The king was also celebrated for his supreme sense of justice so much so that ‘Vikramaditya Simhasana’, The Throne of Vikramaditya, has come to mean the seat of undiluted justice. His very name has become so much a part of all that is great and glorious in in Bharat s tradition that many a king in later days even in distant parts of the country prided himself in affixing the title Vikramaditya to his name.

The founding of new eras in the names of Vikrama and Shalivahana signifies the supreme importance accorded in the Hindu history and tradition of safeguarding the nation’s freedom and sovereignty.

Another coincidence is that the great founder of the RSS, Dr Kesav Baliram Hedgewar, was also born on Yugadi, of 1889. It is the New Year Day for many communities who follow Hindu religion.

–FROM A PAPER CUTTING OF YEAR 2005.

–SUBHAM–

 tags — Vikramaditya, Shalivahana, Saka, Vikrama Saka

பெண்கள் வாழ்க Part 15, பெண் கொலை பெரிய பாவம் (Post No.9513)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9513

Date uploaded in London – –20 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் வாழ்க Part 15, பெண் கொலை பெரிய பாவம்

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. பெண்களை கொலை செய்தல் மிகப்பெரிய பாவம் என்று இந்துமத நூல்கள் கூறுகின்றன. தாடகை ஒரு பெண் என்று கூறி கொல்ல மறுக்கிறான் ராமன். ஆனால் அவளிடம் பெண்மையோ தாய்க்கே உரித்தான கருணையோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி ராட்சஸியை வீழ்த்தச் சொல்கிறார் விசுவாமித்திர முனி.      திரௌபதியை அவமான படுத்திய கௌரவர்களை கொடும்

tags —  பெண்கள் வாழ்க15, பெண் கொலை,  பாவம்,

தற்செயல் ஒற்றுமை-1 அதிசய சம்பவங்கள் (Post No.9512)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9512

Date uploaded in London – –  –20 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 19-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM IF U WANT TO LISTEN TO THIS TALK.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்து வருகிறோம். அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை. உன்னைத் தான் நினைத்தேன்; நீ எதிரில் வந்து நிற்கிறாய், உனக்கு நூறு ஆயுசு என்று அனைவருமே ஒரு தடவையாவது சொல்லி இருப்போம். நினைத்தது நடப்பதில்லை; நடப்பது மிகவும் கஷ்டம் என்று நாம் நினைக்கும், நாம் விரும்பும் ஒரு காரியமோ மிக எளிதாக நடக்கிறது. நாம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொருளை அதைப் பற்றி பேசி வாங்க முடிவு செய்த போது அதே பொருளை ஒருவர் பரிசாகத் தருகிறார்.இதை தற்செயல் ஒற்றுமை என்கிறோம். நம்ப முடியாத பல தற்செயல் ஒற்றுமைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஒரு பிரமிக்க வைக்கும் சம்பவத்தைப் பார்ப்போம்.

பிரபல ஆங்கில மாத இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் சிறந்த கட்டுரைகளை மட்டுமே அது ஒவ்வொரு இதழிலும் வெளியிடும் – அதுவும் ஒவ்வொரு சம்பவமும் தகவலும் ஏன், ஒவ்வொரு எழுத்தும் கூடச் சரி பார்க்கப்பட்டு!

ரீடர்ஸ் டைஜஸ்ட் க்ளாஸிக் என்ற ஒரு சிறப்புப் புத்தகத்தில் பல வருடங்களாக இது வரை வெளியான கட்டுரைகளிலிலிருந்து மிகவும் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு அற்புதமான கட்டுரை கர்மபலன் சம்பந்தப்பட்டது. (இதன் மறுபதிப்பை ஜனவரி 2010 ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் படிக்கலாம்) அதில் வரும் சம்பவம் தான் இது!

  மார்செல் ஸ்டெர்ன்பெர்கர் என்பவர் ஹங்கேரியில் பிறந்தவர். பிழைப்புக்காக நியூயார்க் வந்து போட்டோகிராபராக தன் வாழ்க்கையைக் கழிக்கலானார். அவரது தினசரி வாழ்க்கை வழக்கமான ஒன்று – வீட்டிலிருந்து ஐந்தாம் அவென்யூவில் உள்ள தன் அலுவலகத்திற்குச் செல்வது, அங்கு வேலையை முடித்து விட்டு திரும்பவும் வீடு வந்து சேர்வது என்பது தான் அவரது வழக்கம்.

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி. 50 வயதான மார்செல் வழக்கம் போல சரியாக 9.09க்குக் கிளம்பும் லாங் ஐலேண்ட் ரெயில்ரோட் புகை வண்டியில் ஏறி உட்சைடு என்ற அவரது இடத்துக்குப் போயிருக்க வேண்டும். அன்று அவருக்கு வழியில் ப்ரூக்ளினில் இருக்கும் தன் நண்பரைப் பார்க்க வேண்டும் போலத் திடீரென்று தோன்றியது.ஆகவே ஒஸோன்பார்க் என்ற ஸ்டேஷனில் இறங்கி ப்ரூக்ளின் செல்லும் ரயிலில் ஏறினார்.தனது நண்பரின் இல்லத்திற்குச் சென்று அவருடன் சற்று நேரம் அளவளாவி மகிழ்ந்து பின்னர் ரயில் நிலையம் வந்து மன்ஹாட்டனுக்குச் செல்லும் ரயிலில் தன் அலுவலகம் செல்வதற்காக ஏறினார்.ரயிலில் ஒரே கூட்டம்.உட்கார இடமே இல்லை.ஆனால் என்ன ஆச்சரியம். அவர் உள்ளே நுழைந்த போது அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டிய ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்க சடக்கென்று அந்த இடத்தைப் பிடித்தார் மார்செல்.

போட்டோகிராபருக்கே உரித்தான இயல்புடன் தனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவரின் முகத்தைப் பார்த்தார். அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு சுமார் முப்பது வயது இருக்கும். ஒரு விதமான சோகம் அவர் கண்களில் ததும்பி இருந்தது.அவர் ஹங்கேரிய மொழியில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். தனது தாய் மொழியில் இருக்கும் பேப்பரைக் கண்டு ஆனந்தம் அடைந்த மார்செல் உடனே அவரிடம் அதைச் சற்று தருமாறு ஹங்கேரிய மொழியில் வேண்டினார். அவருக்கு ஒரே ஆச்சரியம். நியூயார்க்கில் ஹங்கேரிய மொழியில் பேசும் ஒருவரா! அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் அவர் தன் சோகக் கதை முழுவதையும் கூறி விட்டார்.

      அவரது பெயர் பாஸ்கின். சட்டம் படிக்கும் மாணவராக இருந்த போது இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. அரசு அதிகாரிகள் அவரைப் பிடித்து இறந்த ஜெர்மானியர்களைப் புதைப்பதற்காக உக்ரேனில்  இருந்த முகாமுக்கு அனுப்பி விட்டார்கள்.யுத்தம் முடிந்தவுடன் பல நூறு மைல்கள் நடந்து ஹங்கேரியில் இருந்த டெப்ரெசென் என்ற தன் சொந்த ஊருக்கு வந்த பாஸ்கின் தனது வீட்டிற்குச் சென்ற போது அதிர்ந்து போனார். அங்கே அவரது தந்தை, தாயார், சகோதர சகோதரிகள்,மனைவி யாரையும் காணோம்.அங்கே இருந்தவர்களுக்கு பாஸ்கின் குடும்பம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மலைத்து நின்ற பாஸ்கினை நோக்கி ஓடி வந்த ஒரு சிறுவன், “பாஸ்கின் அங்கிள், உங்கள் வீட்டில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.நாஜிக்கள் உங்கள் மனைவியை அசுவிச் சித்திரவதை முகாமுக்கு கொண்டு சென்று விட்டனர்.” என்று கூறினான்.சோகத்தோடு பாரிஸ் திரும்பிய மார்செல் 1947இல் அக்டோபர் மாதம் நியூயார்க் வந்து சேர்ந்தார்.

இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மார்செலுக்கு திடீரென்று தான் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்மணியின் நினைவு வந்தது. அந்தப் பெண்மணியும் டெப்ரெசனைச் சேர்ந்தவர் தான். அவரது உறவினர்கள் நச்சு வாயு சேம்பர்களில் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். அசுவிச்சில் ஜெர்மானிய ஆயுத பேக்டரியில் வேலை பார்த்து வந்த அவரை யுத்த முடிவில் அமெரிக்கர்கள் விடுவித்தனர்.

பாஸ்கினிடம் மார்செல் அவரது மனைவியின் பெயர் மரியாவா என்று கேட்டார். பாஸ்கின் ஆச்சரியப்பட்டுப் போனார். எப்படி முகம் அறியாத ஒருவருக்குத் தன் மனைவியின் பெயர் தெரிந்தது?

அடுத்த ஸ்டேஷனில் பாஸ்கினை இறங்குமாறு கூறிய மார்செல் ஒரு போன் பூத்திற்குச் சென்று தனது டயரியை எடுத்து ஒரு போன் நம்பரை டயல் செய்தார். மரியாவிடம் அவர் கணவரின் அடையாளங்களைக் கேட்டார். பாஸ்கின் தான் அவரது கணவர் என்று உறுதிப்படுத்திக் கொண்ட மார்செல் போனை பாஸ்கினிடம் தந்து, “உங்கள் மனைவியிடம் பேசுங்கள்” என்றார். வாயடைத்துப் போன பாஸ்கின் சில நிமிடங்கள் அப்படியே நின்றார். பின்னால் போனில் தன் மனைவியுடன் பேசி ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின்னர் பாஸ்கினை ஒரு டாக்ஸியில் ஏற்றி மனைவியிடம் செல்லுமாறு கூறிய மார்செல் தம்பதிகள் இணையும் புனிதமான தருணத்தில் தான் இருப்பது அழகல்ல என்று விளக்கி பாஸ்கினை மட்டும் அனுப்பினார்.

“இப்போது கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறும் மார்செல் சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசுகிறார்.

தன் நண்பரைப் பார்க்க திடீரென்று அவருக்கு ஏன் தோன்ற வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட ரயிலைத் திரும்பும் போது ஏன் பிடிக்க வேண்டும், அதில் ஒரு இருக்கை தனக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும், அருகில் இருந்தவர் அந்தக் கணத்தில் ஏன் ஹங்கேரிய பேப்பரைப் படிக்க வேண்டும்.. இப்படி ஏராளமாக தொடர்ந்து நடந்த அதிசயங்களை நினைவு கூர்கிறார்.

இறைவனின் வழி தனி வழி என்று முடிகிறது கட்டுரை!.

கர்ம பலன்கள் தவறாது அந்தந்த கணத்தில் உரியவரை வந்து அடையும் என்பதைக் காட்டும் இந்தச் சம்பவம் உண்மையில் நடந்தது! ஆனால் நம்மில் ஆயிரக்கணக்கானோருக்கு இது போன்ற அதிசய சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் உள்ள அபூர்வமான நிகழ்வுகளை இனம் காணும் மனோபாவம் தான் நம்மில் பலருக்கு இல்லை. அப்படி அதிசய நிகழ்ச்சிகளை இனம் காணும் சிலருக்கும் அவற்றைதக் கர்ம பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்வில் நிகழும் சம்பவங்களை அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன்னர் அலசினால் கர்ம பலன்களின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்!

உபநிடதம் இதைப் பற்றி விளக்குகையில் எப்படி ஆயிரம் பசுக்கள் உள்ள ஒரு மந்தையில் எப்படி தனது தாய்ப்பசுவை ஒரு கன்றானது கண்டு பிடித்து அதை அடைகிறதோ அதே போல ஒருவனின் நல்ல கர்மமும் தீய கர்மமும் அவனை அணுகுகிறது என்கிறது.

இந்த தற்செயல் ஒற்றுமையை அறிவு பூர்வமாக ஆராய்ந்தார் பிரபல விஞ்ஞானியான கார்ல் யங் (Carl Jung). (1875-1961)

இதற்கு அவர் கொடுத்த பெயர் சிங்க்ரானிசிடி!

     சிங்க்ரானிசிடி எனப்படும் “அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை” பற்றிய ஒரு முக்கிய சம்பவம் அவர் வாழ்விலும் நிகழ்ந்தது. ஒரு நாள் ஜங்கிடம் சிகிச்சை பெற வந்த ஒரு பெண்மணி தான் கண்ட கனவை உணர்ச்சி பொங்க விவரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கனவில் அவருக்கு மிகவும் விலை மதிப்புள்ள ஒரு நகை தரப்பட்டிருந்தது. அந்த நகை வண்டு போல செய்யப்பட்ட ஒரு அணிகின்ற கல்! இதை அந்தப் பெண்மணி விவரித்துக் கொண்டிருந்த சமயம் ஜங்கின் ஜன்னலை யாரோ தட்டிக் கொண்டே இருப்பது போன்ற ஒலி எழுந்தது. இந்த ஒலியால் ஈர்க்கப்பட்ட ஜங் ஜன்னலை நோக்கி விரைந்தார். ஜன்னலைத் திறந்தார். ஜன்னலின் வெளியிலிருந்து பறந்து வந்த ஒரு பொன் வண்டு அவர் கையில் வந்து உட்கார்ந்தது. அதைக் கையில் பிடித்துக் கொண்ட ஜங் தன் கனவை விவரித்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் அதைக் காட்டி,”இதோ இருக்கிறது உங்களின் பொன்வண்டு” என்று கூறி விட்டு வண்டை அவர் கையில் கொடுத்தார். இதனால் அசந்து போன அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மிகுந்த புத்திசாலி அவர். நன்கு படித்தவரும் கூட. தன் உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பிரபஞ்சத்தில் உள்ள ஏதோ ஒரு சக்தி அர்த்தமுள்ள ஒரு தற்செயல் சம்பவத்தின் மூலம் அவரைப் பூரண குணம் அடைய வைத்தது.

தன் கனவை அந்தப் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்த போது ஜன்னலில் ஏன் வண்டு வந்து மோதி ஒலியை எழுப்பி ஜங்கின் கவனத்தை ஈர்க்க வேண்டும்? அந்த வண்டும் சாதாரணமாகக் காணப்படக்கூடிய வண்டு அல்ல. வண்டு இனத்திலேயே அபூர்வமாகக் காணப்படும் வண்டு அது!

    அந்தப் பெண்மணியின் மனம் போராட்டத்தின் உச்சியில் எழுப்பிய கூக்குரல் பிரபஞ்ச மனத்தை உலுக்கி  அந்த வண்டை அந்த நொடியில் ஜங்கின் ஜன்னலுக்கு வரவழைத்ததா?  இந்த சிறிய அற்புதச் செயலின் மூலமாக அந்தப்பெண்மணி பூரண குணம் அடைய வேண்டும் என்று இருந்ததா?  அவரது கூக்குரலுக்கு பிரபஞ்சத்தின் விடையா அது? ஜங் ஆராய ஆரம்பித்தார்.

இந்த வண்டு விஷயம் இத்தோடு நிற்கவில்லை.

பிலிப் கஸினோ என்ற ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களைத் தொகுத்து தன்னிடம் நட்பு கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அனுப்பினார். அவர் யோகாவைக் கற்பிப்பவர். பிலிப்பின் ஆராய்ச்சியை ஒட்டி, ‘அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமையை’ இந்த பொன்வண்டு சம்பவம் விளக்குகிறதா என்று குழம்பியவாறே யோசித்தவண்ணம் இருந்தார் ஜங்! தனது வாழ்க்கையில் இப்படி  சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என அவர் நினைவுபடுத்திப் பார்த்தார். அன்று முற்பகலில் தனக்கு ஏதேனும் கடிதங்கள் வந்துள்ளனவா என்று  பார்க்க வாசலில் இருந்த தோட்டப்பகுதியை நோக்கி நடந்தார். என்ன ஆச்சரியம்! அங்குள்ள செடிகளின் மீதும் அதன் சுற்றுப்புறத்திலும் நூற்றுக்கணக்கான நீல நிற வண்டுகள் ஹூங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் நீல வண்ணம் சூரிய ஒளியில் பட்டு பிரகாசமாக புது  வண்ணமாக மின்னிக் கொண்டிருந்தது!

‘என்ன நான் கனவு காண்கிறேனா’ என்று வியந்த அவரால் தான் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை! 36 மணிநேரம் அங்கேயே பறந்து கொண்டிருந்த வண்டுகள் திடீரென இடத்தை விட்டுப் பறந்து மாயமாயின!

உடனே அவர் பிலிப் கஸினோவுக்கு இதைப் பற்றி எழுதி,”ஒருவேளை அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமை தொடர்ந்து நீரோட்டம் போன்ற ஒரு தொடர் ஓட்டத்தையும் விளைவித்துக் கொண்டு இருக்குமோ “ என்று வியந்தார்!

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் இப்படி அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை யாரும் கூர்ந்து கவனிப்பதுமில்லை. அது சொல்லும் செய்திகளை அறிந்து கொள்வதும் இல்லை என்பது தான் உண்மை!

   பகுப்பாய்வு உளவியலைக் கண்ட மேதையான கார்ல் ஜங் சிக்மண்ட் ப்ராய்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,உல்ப்கேங் பாலி,வில்லியம் ஜேம்ஸ் போன்ற பிரபல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார். அடுத்து இதைப் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களைப் பார்ப்போம்.

ஒரு சின்ன உண்மை!    2011ஆம் ஆண்டு வெளியான எ டேஞ்சரஸ் மெதேட் (A Dangerous Method) என்ற ஹாலிவுட் திரைப்படம்  ஜங்கிற்கும் சிக்மண்ட் ஃப்ராய்டுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சித்தரிக்கிறது. ஜங்கிடம் சிகிச்சை பெற வந்து அவரை ஈர்த்த கவர்ச்சிப் பெண்மணியான சபீனா ஸ்பீல்ரெய்னுடன் அவர் கொண்டிருந்த உறவையும் இப்படம் விவரிக்கிறது!                முடிந்தால் படத்தைப் பார்த்து மகிழலாம்! நன்றி, வணக்கம்!  

tags – தற்செயல் ஒற்றுமை, அதிசய சம்பவங்கள், சிங்க்ரானிசிடி

LONDON CALLING (Hindus) Monday 19-4-2021 (Post No.9511)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9511

Date uploaded in London – –19 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following programme was broadcast on Monday 19-4-2021

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

19-4- 2021 MONDAY

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER

SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5 mts

SHANMATHA TALK SERIES- “SHAAKTAM” – SHAKTI WORSHIP- BY TIRUCHY MR K GANESAN-10 MTS

Rama Navami song by Sri Balasubramanyam- 5 MINUTES

BENGALURU MR .S NAGARAJAN’S TALK ON ‘CO INCIDENCE AND CARL JUNG’ – 10 MINUTES

PERI  AAZVAAR PAASURAMS  BY MRS DAYA NARAYANAN from London- 5 MTS.

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7 MTS

ASHTAPATHI No.10 BY LONDON BALASUBRAHMANYAM- 10 MTS

MANGALAM SONG- Mrs L

TOTAL TIME- APPR. 60 MINUTES

xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

 Lalitha Malar Maniam , Studio Manager for our B’cast

XXXX SUBHAM XXXX

tags- broadcast1942021

LONDON CALLING (Tamils) 18-4-2021 (Post No.9510)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9510

Date uploaded in London – –19 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following programme was broadcast on 18-4-2021 (SUNDAY)

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER –

Prayer –  5 MTS

Miss Mahisa Srinivas, Master Mayuran Srinivas

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON THIRUMALIRUNCHOLAI/ AZAKAR KOVIL TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham –MRS JAYANTHI SUNDAR , KUMARI SNEHA and MRS SRIVIDHYA SRIRAM – -10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

LONDON SWAMINATHAN’S PETTI/INTERVIEW READ MY MRS VAISHNAVI ANAND இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி- 8 MTS

Baba Bhajan – Sathyam Jnanam Anantham Brahma – 2 miutes

APPR.60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 tags- broadcast1842021

பெண்கள் வாழ்க – 14; பெண்கள் பற்றி வராஹமிஹிரர் ! (Post No.9509)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9509

Date uploaded in London – –19 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் வாழ்க – 14; பெண்கள் பற்றி வராஹமிஹிரர் !

பெண்களைக் குறைகூறுவோருக்கு எதிர்க் கேள்வி போடுகிறார் வராஹமிஹிரர் . பல ஜோதிட, வான சாஸ்திர நூல்களை எழுதிய இந்த அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்.”உண்மையைச் சொல்லுங்கள் ! பெண்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் எங் ஆண்களிடத்தில் இல்லையா? பெண்களிடம் கூடுதல் குணங்கள் இருந்த போதும் ஆண் தங்கள் அகந்தையால் பெண்களைக் குறை கூறுகிறான் ; .திருமண

tags

– பெண்கள் வாழ்க 14,,வராஹமிஹிரர், விசாக தத்தன், முத்ரா ராக்ஷஸம்

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க (Post No.9508)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9508

Date uploaded in London – –  –19 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷித செல்வம்!

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க! நாளை என்ன நடக்குமோ, யார் அறிவார்!

ச.நாகராஜன்

ந கச்சிதபி ஜானாதி கிம் கஸ்ய ஷ்வோ பவிஷ்யதி |

அத: ஷ்வ: கரணீயானி குர்யாததைவை புத்திமான் ||

நாளைக்கு யாருக்கு என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆகவே ஒரு புத்திமானானவன் நாளை செய்ய திட்டமிடப்பட்ட வேலைகளை இன்றே செய்து முடிக்க வேண்டும்.

Nobody knows what is going to happen to whom tomorrow. Hence a wise person should finish today itself the tasks planned for tomorrow.

Translation by : Kalyana- Kalpataru March 2017 issue

*

க்ஷிபேத்வாக்யஷராந்கோரான்ன பாருஷ்யவிஷப்லுதான் |

வாக்பாருஷ்யருஷா சக்ரே பீம: குருகுலக்ஷயம் ||

கொடிய விஷ அம்புகள் போன்ற வார்த்தைகளை ஒருவர் ஒருபொழுதும் மற்றவர் மீது வீசக்கூடாது. கொடிய வார்த்தைகளே பீமனை கௌரவ குலத்தை அழிக்கத் தூண்டியது.

One should never throw harsh words like dreadful poisonous arrows on others. (In Mahabharata) it was the harshness of the words which propelled Bhima to destroy the clan of Kauravas.

Translation by : Kalyana- Kalpataru April 2017 issue

*

குர்யான்நீசஜனாப்யஸ்தாம் ச யாச்ஞாம் மானஹாரிணீம் |

பலிப்ரார்தனயா ப்ராப லகுதாம் புருஷோத்தம: ||

சுயமரியாதையை இழக்கச் செய்யும் பிச்சை எடுப்பதை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அது நீசர்களாலேயே செய்யப்படும் ஒன்று. புருஷோத்தமனான விஷ்ணுவே பலி மஹாராஜாவிடம் பிச்சை எடுக்க வாமனனாக – குள்ளனாக – ஆக வேண்டி இருந்தது.

One should never beg which surely destroys one’s self respect and is only practiced by lowly. Even Lord Vishnu is reduced in size to Vamana for begging before King Bali.

Translation by : Kalyana- Kalpataru May 2017 issue

*

அப்யுன்னதபதாரூட: பூஜ்யான்னைவாபமானயேத் |

நஹுஷ: ஷகதாம் ப்ராப்ய ச்யுதோகஸத்யாவமானநாத் ||

உன்னதமான நிலையில் ஒருவன் இருந்தாலும் கூட பூஜிக்க வேண்டிய ஒருவரை எப்போதும் அவமானப்படுத்தக் கூடாது. இந்திர பதவியை அடைந்திருந்த நஹுஷ மன்னன் அகஸ்தியரை அவமானப்படுத்தியதால் தன் நிலையிலிருந்து கீழே விழுந்தான்.

Even adorning a very high position, one should never insult a respected person. King Nahusha who had acquired the position of Indra, fell down by insulting Agastya.

Translation by : Kalyana- Kalpataru June 2017 issue

*

ப்ரிய வாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ: |

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||

ஒவ்வொருவரும் இனிமையான் சொற்களைக் கேட்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆகவே எப்போதும் ஒருவர் இனிமையான சொற்களையே பேச வேண்டும். வார்த்தையில் ஏன் தரித்திரம் வேண்டும்?

Everyone gets satisfaction and happiness with pleasing words. Hence one should always speak pleasantly. Why act miserly in speaking?

         Translation by : Kalyana- Kalpataru July 2017 issue

***

tags —  நாளை , இன்றே செய்க,

PLEASE JOIN US TODAY MONDAY 19-4-2021

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

19-4- 2021 MONDAY

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER

SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5 mts

SHANMATHA TALK SERIES- “SHAAKTAM” – SHAKTI WORSHIP- BY TIRUCHY MR K GANESAN-10 MTS

Rama Navami song by Sri Balasubramanyam- 5 MINUTES

BENGALURU MR .S NAGARAJAN’S TALK ON ‘CO INCIDENCE AND CARL JUNG’ – 10 MINUTES

PERI  AAZVAAR PAASURAMS  BY MRS DAYA NARAYANAN from London- 5 MTS.

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7 MTS

ASHTAPATHI No.10 BY LONDON BALASUBRAHMANYAM- 10 MTS

IF TIME PERMITS…………………………………

LONDON SWAMINATHAN’S ARTICLE- ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி-READ BY -LALTHA MALAR MANIAM –7 MTS

MANGALAM SONG-

TOTAL TIME- APPR. 60 MINUTES

xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS.

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY19421

உலக இந்து சமய செய்தி மடல் 18-4-2021 (Post No.9507)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9507

Date uploaded in London – –18 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று APRIL   18 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

மஹா கும்பமேளா  2 வாரங்களுக்கு முன்னரே முடியும்

உத்தர்கண்ட்டின் ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.



உத்தரகண்டின் ஹரித்வாரில் துவங்கி, பல மாவட்டங்களில், 1,650 ஏக்கர் பரப்பளவில், கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பாதயாத்திரையாக வந்து, புனித நீராடிய சாதுக்கள் மீது, மாநில அரசு தரப்பில், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. இது தவிர, கங்கையின் பிற இடங்களில் லட்சக்கணக்கானபக்தர்கள் புனித நீராடினர். மாநில அரசு தகவல்களின்படி, ஒரே நாளில்  17.31 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கங்கையில் புனித நீராடினர்


ம.பி.,யை சேர்ந்த மகா நிர்வானி அஹாராவின் தலைவர் கபில் தேவ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா அமைப்பு, கும்பமேளாவை முடித்து கொள்வதாக அறிவித்து உள்ளது. புனித நீராடலுக்கு வந்த 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்வீட் செய்தி ஒன்றில் இதுவரை இரண்டு புனித நீராடல்கள் நடந்து விட்டதால் இனி வரும் புண்ய ஸ்னானங்களை அடையாளபூர்வமாக வைத்துக்கொண்டு முடிப்பது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார். சாதுக்களின் நலன் அறிவதற்காக அவர்களை தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாகவும் ட்வீட் செய்துள்ளார்.

பெருமளவில் புனித நீராடல்களைக்  கைவிடவேண்டும் என்பதே இதன் கருத்து என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கும்ப மேளா போன்ற விழாக்கள் நடைபெறாத மாநிலங்களிலும்  கூடுதலாக வைரஸ் நோய் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

XXXX

சீனாவில் சம்ஸ்கிருத மொழி பிரபலம்’

சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக சம்ஸ்கிருத மொழி பிரபலமாக இருப்பதாக அந்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியா் வாங் பாங்வெய் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

பண்டைய இந்தியாவில் இருந்து பெளத்த மதத்துடன் சம்ஸ்கிருத மொழியும் சீனா வந்து சோந்தது. சீனாவில் சம்ஸ்கிருத மொழி குறித்த ஆய்வுகள், கற்பித்தல் பணிகளுக்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது.

இந்தியாவில் இருந்து பெளத்த மதம் சீனா வந்த பின்னா், சீன பெளத்த துறவிகள் இந்தியாவின் பண்டைய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயா்த்தனா். அப்போது முதல் சீனாவில் சம்ஸ்கிருத மொழியை படிப்பதும், சம்ஸ்கிருத ஆய்வுகளும் தொடங்கின. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹிந்து, பெளத்த மதங்கள், பண்டைய இந்திய மருத்துவம், வானவியல், கணிதம் உள்ளிட்டவற்றை சீனா்கள் கற்பதற்கு சம்ஸ்கிருதம் முக்கிய மொழியாக இருந்தது.

நான்காம் நூற்றாண்டைச் சோந்த காஷ்மீா் பிராம்மணரான குமாரஜீவா என்னும் அறிஞா் சீனாவில் தங்கியிருந்தபோது பெளத்த சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயா்த்தாா். அது அவருக்கு ‘சீனாவின் தேசிய ஆசிரியா்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

இந்திய, சீன பண்பாட்டு நாகரிகங்களுக்கு இடையே உறுதியாக அடித்தளமிட்ட எண்ணற்ற சம்ஸ்கிருத அறிஞா்களில் அவரே முதன்மையானவா். மரியாதைக்குரிய அறிஞராகவும் சிறையிலுமாக அவா் 23 ஆண்டுகள் சீனாவில் கழித்தாா்.

இந்தியாவை பற்றி அறிந்துகொள்ள ஆா்வம் காட்டுவோா் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. சம்ஸ்கிருதம் அதற்கு சிறந்த வழியாகும். பல அரிய பண்டைய சம்ஸ்கிருத நூல்கள் சீனாவில் உள்ளன.

இவை இந்தியாவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே. சீன அரசா்கள், அறிஞா்கள் மீது சம்ஸ்கிருதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . பீகிங் பல்கலைக் கழகத்தில் 100 ஆண்டுகளாக சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படுகிறது என்றார்

நூறாண்டுகளாக பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாஹியான், யுவாங் சுவாங் ஆகிய யாத்ரீகர்கள் சம்ஸ்க்ருதம் கற்றனர் என்றும் அவர் சொன்னார் ஸீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரகத்தில் அவர் சென்றவாரம் பேசினார் லிட்டில் குரு என்னும் கல்வி கற்க உதவும் அப்ளிகேஷன் – மென்பொருள் — அறிமுக நிகழ்சசியில் பேராசிரியர் வாங்கி உரையாற்றினார்

XXXXX

ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து வரும் 21-ம் தேதி ஆதாரம் வெளியிடப்படும் : திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்கள் ஏப்ரல் 13 யுகாதி வருடப் பிறப்பன்று  வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது  இப்போது  அதனை 21-ம் தேதி மாற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி வெங்கடாசலபதி  கோவில் உள்ள சேஷாசல மலைத் தொடரில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த அஞ்சனாத்திரி மலை ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பல புராணம் மற்றும் இதிகாசங்கள் ஆய்வு செய்யப்பட்டது.  மேலும் இது சம்மந்தமாக ஆய்வு செய்ய 6 பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்தது.

அவர்கள் பல புராணங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.  அதன்படி ஆஞ்சநேயர் அஞ்சனாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தெலுங்கு வருட பிறப்பன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

தற்போது அதை மாற்றி தேவஸ்தானம் சார்பில் வருகிற 21-ம் தேதி ராமநவமி அன்று ஆஞ்சநேயர் பிறப்பு குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று  அறிவித்தது .

இதனிடையே கர்நாடக மக்களுக்கு இந்தச் செய்தி கவலை தந்துள்ளது .கர்நாடகத்திலுள்ள ஹம்பி, பெல்லாரி பகுதியே கிஷ்கிந்தா என்று கண்டறியப்பட்டதால் அங்குதான் அவர் பிறந்தார் என்று கர்நாடகம் கூ றிவருகிறது

ஆந்திரம் கர்நாடகம் ஆகிய இரு மாநில ஆ ஞ்சனேய  பக்தர்களும் ராம நவமி அன்று வெளியாகப் போகும் செய்தியை ஆவலு டன் எதிர் பார்த்து நிற்கின்றனர்

xxxx

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், APRIL 11  இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.

தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்

.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார்.  இரவு சன்னிதானத்தில் தங்கிய கவர்னர், இன்று காலை மாளிகைப்புறம் கோவில் அருகே, சந்தன செடிகளை நட்ட பின், திருவனந்தபுரம் செ ன் றார்.


கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.ஜ.பி., தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார். கவர்னர் வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

XXX

சிவன் கோயிலில் முஸ்லிம் எம்.எல்.ஏ., – கைது செய்ய பா.ஜ., எம்.பி., கோரிக்கை

 காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் ஜார்கண்டிலுள்ள வைத்தியநாதர் கோயிலில் பூஜை செய்ததற்காக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க., எம்.பி., ஒருவர் கோரியுள்ளார்.



ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் ஏப்.,17  சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த வாரம் காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத ஜோதிர்லிங்க ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். ஹிந்து சடங்குகளை செய்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜார்கண்ட் பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே, ஹிந்துக்களின் உணர்வுகளை அன்சாரி புண்படுத்திவிட்டதாக கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்வேன். அன்சாரி சிவ பக்தர் என்றால் முதலில் ஹிந்து மதத்தை பின்பற்றவும், பின்னர் பூஜை செய்யவும். பாபா வைத்தியநாத கோயிலின் கருவறைக்குள் முஸ்லிம்கள் நுழையவோ, பூஜை செய்யவோ அனுமதி கிடையாது. மெக்காவில் ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அதே நிலை தான் வைத்தியநாதர் கோயிலிலும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்., எம்.எல்.ஏ., அன்சாரி, ‛இடைத்தேர்தலை ஒட்டி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க துபே முயற்சிக்கிறார். அவரது அனைத்து செயல்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். பாபா நகரி எனது பிறப்பிடம். நான் இந்த கோயிலுக்கு வழக்கமாக வருகை புரிபவன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் மெகா கூட்டணி இடைத்தேர்தலில் வென்ற பிறகும் பூஜை செய்வேன். என்னை யார் தடுக்கிறார்கள் பார்க்கிறேன். சிவன் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அனைவருக்குமானவர். அவர் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு,’ என்றார் இர்பான் அன்சாரி.

Xxxx

ராமர் கோவில் நன்கொடை: 15 ஆயிரம் காசோலைகள் திரும்பின

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட, 15 ஆயிரம் காசோலைகள், கணக்கில் பணம் இல்லாதது உட்பட, பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசோலைகளின் மதிப்பு, 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில், 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை என கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை, திரும்ப வங்கியில் செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

xxxx

மதுரை சித்திரை திருவிழா:

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத்  திருவிழா கொடி ஏற்றத்துடன்  தொடங்கியது . மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இணையதளத்தில் மட்டுமே பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவிழாவின் முக்கிய அம்சமாக ஏப்ரல்  22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதியன்று மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெறும் .

ஏப்ரல் 24 திருக்கல்யாணம் முடிந்த பிறகு சாமி அம்மனை மணக்கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. . 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஏப்ரல் 25 தேரோட்டம் நடைபெறும்.

அழகர் கோயில் திருவிழா :
இதே போல சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய பங்கு வகிப்பது அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை விஜயம் செய்யும் நிகழ்வு. இதில் தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்குதல்,மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், தசாவதார நிகழ்வு, வண்டியூர் கோயில் செல்லுதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அழகர் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Xxxx

புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார். விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த சகுந்தலைக்கும் துஷ்யந்த மன்னனுக்கும் காதல் மலர்கிறது. துருவாச முனிவர் சாபத்தினால் அந்த காதலை துஷ்யந்தன் மறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.

இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை டைரக்டு செய்தவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை தேர்வு செய்தனர்.

இந்த படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும் தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார்.

Xxxx

முஸ்லிமாக புதைக்கப்பட்ட ஹிந்து; சவுதி அரேபியாவில் நடந்த குளறுபடி

சவுதி அரேபியாவில், முஸ்லிம் என தவறாக கூறி, அந்த மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்ட ஹிந்துவின் உடல், இந்தியாவுக்கு விரைவில் எடுத்து வரப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த சஞ்சீவ் குமார், 51, என்பவர், சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். துாதரக அதிகாரி ஒருவர், சஞ்சீவ் குமார், ஒரு முஸ்லிம் என, இறப்பு சான்றிதழில் தவறாக குறிப்பிட்டதால், இந்த குளறுபடி நடந்ததாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இந்திய துாதரகம், அவரது மனைவி அஞ்சு சர்மாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.

அஞ்சு சர்மா, ‘ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்வதற்காக, கணவரின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர உத்தரவிட வேண்டும்’ என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்ப்போது, வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ”சவுதி அரேபிய அரசு, சஞ்சீவ் குமார் புதைக்கப்பட்ட இடத்தை கண்டு பிடித்துள்ளது. விரைவில் உடல் இந்தியா எடுத்து வரப்படும்,” என, தெரிவித்தார்.

Xxxx

திருப்பதி கோவில்களில் யுகாதி பண்டிகை விழா

ஆந்திரா, தெலுங்கானாவில் ஏப்ரல் 13ம் தேதி  செவ்வாய்க்கிழமை யுகாதி பண்டிகை விழா நடந்தது. திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி  கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழா நடந்தது .

தாட பள்ளியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் பஞ்சாங்க  படனம் நடந்தது. ஆந்திர மாநில அரசாங்க ஜோதிடர் கப்பகந்துலு சுப்பராஜ சோமயாஜுலு பஞ்சா ங்கத்தை வாசித்தார் . திருப்பதி- திருமலை அர்ச்சகர்கள் உளப்பட பலரும் மந்திரிகளும் பஞ்சாங்க படனத்தில் பங்கேற்றனர் . ஆந்திர முதல் அமைச்சருக்கும் , ஆந்திர மாநிலத்துக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரஹ நிலைகளை சுட்டிக்காட்டி சிரவணம் செய்தார் சோமையாஜுலு. ஆந்திர முதலமைச்சர் அரசாங்க ஜோதிடரையும் அர்ச்சகர்களையும் கவுரவித்தார்

xxxx

பாக்.,கில் கோவில் இடிப்பு; சீரமைக்க ரூ.3.48 கோடி


பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில் மற்றும் ஸ்ரீ பரமன்ஸ்ஜி மஹராஜ் சமாதி ஆகியவை உள்ளன . இவற்றை தீவிரவாத முஸ்லிம் அமைப்பினர், கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் இடித்து சேதப்படுத்தினர். இதற்கு இந்திய  மத்திய வெளியுறவு அமைச்சகம், கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


இதையடுத்து, ‘கோவில் மற்றும் சமாதி சீரமைப்பு பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. இதற்கிடையே, கைபர் பக்துன்க்வா மாகாண ஹிந்துக்கள் அமைப்பினர், கடந்த மாதம் நடத்திய கூட்டத்தின் முடிவில், கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பினரை மன்னிப்பது என, முடிவு செய்தனர்.

சீரமைப்பு பணிகளுக்காக, கைபர் பக்துன்க்வா மாகாண அரசு தற்போது, 3.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- Tamil Hindu, newsroundup18421,