அகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7653

Date uploaded in London – 5 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு —  என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;

அது எப்படி?  எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.

எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல  முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .

Jesus Christ said in the Bible,

‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13

ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.

வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான்  பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா  , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .

சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.

வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்

உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.

“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY)  (BG.7-6)

xxx

என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி

எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994)  சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத்  தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.

உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல்  மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!!  .

உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்

சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.

அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .

வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது  ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’  என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்

சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!

வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு  பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்;  ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’  என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.

ஆராய்ச்சி முடிவு-

திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity)  மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.

காரணம் ?

மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure)  உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!

எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!

இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ  உச்சரிக்கலாம் .

இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்

மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .

‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !

திருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157

பகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97

திருக்குறளில் ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23

பகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17

திருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114

பகவத் கீதையில் ‘இ’  எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21

திருக்குறளில்  ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8

பகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1

திருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81

பகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9

திருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21

பகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2

திருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;

பகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.

இந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .

கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!

ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .

குறில் என்றால் அதிகம்;

நெடில் என்றால் குறைவு .

உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .

அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப்  பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!

Tags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்

வாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்

–subham–

எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு (Post 7645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7645

Date uploaded in London – 3 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

 மநு நீதி நூல் – பகுதி 48

மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் வெற்றிகரமாக  பத்து அத்தியாயங்களை முடித்து 11ஆவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதல் நூறு ஸ்லோகங்களைக் காண்போம். இந்த அத்தியாயம் பிராயச்சித்தம்  என்னும் கழுவாய் பற்றிப் பேசுகிறது. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது .

முதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points)  பாயிண்டுகளில் :–

ஸ்லோகம் 11-76 TO 78

சரஸ்வதி நதியில் நீரோட்டத்துக்கு எதிராக நதி உற்பத்தியாகும் இடம் வரை நடக்கவேண்டும் என்பது ஒரு தண்டனை/ பிராயச் சித்தம். இதிலிருந்து இவர் சிந்து- சரஸ்வதி நாகரீக காலத்தவர் அல்லது அதற்கு முந்தியவர் என்பது தெளிவாகிறது. ஆகவே இவர் பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர். உலகத்தில் முதல் முழு நீள சட்டப் புஸ்தகத்தை எழுதிய நிபுணர். ஆனால் எல்லா புராணங்களையும் அப்டேட் UDATE  செய்தது போலவே மனு நீதியையும் புதுப்பித்திருக்கின்றனர். வேதம் சொல்லிக்கொண்டே நுறு யோஜனை / 1000 மைல் நடக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு பிராயச் சித்தம். இவை அனைத்தும் பிரமணர்களுக்கான கடும் தண்டனைகள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தீவிர பிராமண ஆதரவு சுங்க வம்சம் (Sunga Dynasty) வரை அப்டேட் UPDATE ஆனதால் பிராமண ஆதரவு ஸ்லோகங்களையும் காண முடிகிறது. 

ஸ்லோகம் 11-91/99

குடிகார பிராமணர்களுக்கு கடும் தண் டனை விதிக்கிறார் மநு .

ஸ்லோகம் 11-33

பிராமணர்களின் ஆயுதம் வாக்கு தான் ; அவர்கள் அதர்வ வேதத்தைக் கொண்டு எதிரிகளை விழுத்தட்டலாம் என்கிறார் . எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தைப் பயன்படுத்து என்று அறிவுறுத்துகிறார்.

ஸ்லோகம் 11-65 & 11-69

மரங்களை வெட்டுவது தவறு; ஒட்டகம் கழுதை போன்ற பிராணிகளைக் கொல்வது தவறு என்கிறார். இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு  முன்னரே புறச் சூழல் பற்றி கவலைப்பட்டதும், அஹிம்சையைப் பின்பற்றுவதே நல்லது என்ற உணர்வும் இருந்ததை அறியலாம்.

ஸ்லோகம் 11-15

திருவள்ளுவர் சொல்லுவது (குறள்  1077, 1078) போல மனுவும் கருமிகளின் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் குத்து விட்டுப் பொருட்களை பறித்து நல்ல பணிகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார் . அதாவது பணக்கரர்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் (Robin Hood) ஆக மாறலாம் என்பார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

 .

பாவ மன்னிப்பு (Confession) ஓ.கே. என்று ஆதரவு தருகிறார். பலர் முன்னிலையிலும் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்பது மனுவின் மனிதாபிமாதைக் காட்டுகிறது.

ஸ்லோகம் 11-1/2 ஒன்பது விதமான பிராமணர் களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆதரவு தருகிறார்.

ஸ்லோகம் 11-55 பஞ்ச மஹா பாதகங்கள் என்ன என்பதை விளக்குகிறார்.

ஸ்லோகம் 11-49 to 11-54 என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என்று பட்டியல் தருகிறார். தற்கால டாக்டர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது சரஸ்வதி நதி தீர நாகரீக நம்பிக்கை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

பசுவைக் (11-60) கொன்றால் , பிரமணனைக் (11-55) கொன்றால், தங்கத்தைத் திருடினால் (11-49)  , தகாத முறையில் பாலியல் உறவு கொண்டால் என்ன தண்டனை என்றும் விளம்புகிறார் . ஒரு தண்டனை 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் மண்டை ஓட்டுக்(11-73)  கொடியுடன்!

11-36 யாருக்குப் புரோகிதம் செய்யும் தகுதி உண்டு என்றும் வரையறுக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-25 பிராமணன் யாகத்துக்கான பொருளுதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் பிணம் தின்னும் கழுகாகவோ காகமாகவோ பிறப்பான் என்று எச்சரிக்கிறார்

subham

நேமி – ரிக் வேதம் முதல் சங்க இலக்கியம் வரை! (Post No.7450)

Indra. chakra, nemi in Indus script

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7450

Date uploaded in London – 13 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tags – நேமி , ரிக் வேதம், சங்க இலக்கியம், இந்திரன், சிந்து சமவெளி

MY OLD ARTICLES:–

“Indus” Valley Civilization to “Ganges” – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/03/28 › change-indus-valley-civilization…

  1.  
  2.  

28 Mar 2014 – Following this morning’s news report of the discovery of an “Indus” valley site on the Ganges plains larger than Harappa, I wrote this article.

Indus Valley – Brahmin Connection! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/10 › indus-valley-brahmin-connection

  1.  
  2.  

10 May 2014 – The world was misled by some scholars in the case of Indus Valley … Ram’s sons invaded Indus cities: Please see my earlier article Indus …

Indus Valley Civilization | Tamil and Vedas

https://tamilandvedas.com › category › indus-valley-civilization

  1.  

Posts about Indus Valley Civilization written by Tamil and Vedas. … Read more: https://www.newscientist.com/article/2227146-ancient-monkey-painting- …

Indra – Taranis – Thor in Indus Valley Civilization | Tamil and …

https://tamilandvedas.com › 2014/09/05 › indra-taranis-thor-in-indus-valle…

  1.  

5 Sep 2014 – On 29 May 2011, I posted an article with the title “Indus Valley Civilization- New Approach required” in this blog. I have posted the picture of a …

Tiger Goddess of Indus Valley | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/08/22 › tiger-goddess-of-indus-valley

  1.  
  2.  

22 Aug 2012 – Scholars who study Indus valley civilization are struggling to identify … Please read my previous articles on Indus/Saraswati Valley civilisation:.

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/06/17 › serpent-queenindus-valley-to-sa…

  1.  
  2.  

17 Jun 2012 – We have a faience figure in Indus Valley with two snakes. Minoan Goddess … (Please read my other articles on Indus Valley 1. Bull Fighting: …

Human Sacrifice in Indus Valley and Egypt | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/10/31 › human-sacrifice-in-indus-valley…

  1.  
  2.  

31 Oct 2012 – Indus valley has two or three human sacrifice scenes. On a … Tamil articles: சிந்து சமவெளியில் பேய் முத்திரை. 10.

Indus Valley to Egypt: Lapis lazuli Export! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/09/06 › indus-valley-to-egypt-lapis-lazul…

  1.  
  2.  

6 Sep 2014 – Earlier articles on INDUS VALLEY CIVILIZATION. Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14) Bull Fighting: Indus Valley to …

You’ve visited this page 2 times. Last visit: 21/02/17

Number 7: Rig Vedic link to Indus Valley Culture ! | Tamil and …

https://tamilandvedas.com › 2014/11/21 › number-7-rig-vedic-link-to-ind…

  1.  

21 Nov 2014 – Sapta Mata (Seven Mothers ) seal from Indus Valley Research paper written by London Swaminathan Research article No.1427; Dated 21st …

Indus Valley Cities in Ramayana | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/12/18 › indus-valley-cities-in-ramayana

  1.  
  2.  

18 Dec 2012 – Ramayana Wonders Part 5 Indus Valley Cities in Ramayana The “destruction of Indus Valley cities” was debated by scholars at one time.

Missing: articles ‎| Must include: articles

Vishnu Seal in Indus Valley Civilization | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/10/19 › vishnu-seal-in-indus-valley-civil…

  1.  
  2.  

19 Oct 2011 – Please read my article about a newapproach to solve the Indus … Ficus Indica in Latin) is drawn on many seals and objects in the Indus valley.

Manu on Indus Valley | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › manu-on-indus-valley

  1.  

28 Apr 2014 – Posts about Manu on Indus Valley written by Tamil and Vedas. … (First part of the article “30 Important Quotations from Manu” posted on 27th …

Which were the gods of the Indus Valley civilization and did they …

http://www.interfaith.org › … › Eastern Religions and Philosophies

  1.  
  2.  

25 Sep 2016 – https://tamilandvedas.com/2012/08/22/tiger-goddess-of-indusvalley/. Click to … The Indian Express has an article called The riddle of Mhatoba, …

–subham–

2000 ஆண்டுகளுக்கு மன்னரே இல்லாத அதிசய நாடு இந்தியா! (Post No.7444)

Rajarajan and his son Rajendra Choza
Chera King Chenguttuvan

Research article written by London Swaminathan

Post No.7444

Date uploaded in London – 11 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Tamil King Chenguttuvan

எட்டாம் நம்பர் மஹிமை (Post No.7036)

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-59 AM

Post No. 7036

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

எட்டு வகைத் திருமணங்கள் | Tamil and …



https://tamilandvedas.com › tag › எட்டு-வகை…

1.      

8 Jun 2018 – தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் … ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், …

திருமண வகைகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › திருமண-வக…

1.      

9 Apr 2015 – Tagged with திருமண வகைகள் … இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by … வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது.

எட்டு வகை திருமணங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › எட்டு-வகை-…

8 Apr 2015 – Tagged with எட்டு வகை திருமணங்கள் … எட்டு வகைத் திருமணங்கள் … பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான …

அஷ்டமா சித்திகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › அஷ்டமா-சி…

1.      

Translate this page

29 May 2018 – Tagged with அஷ்டமா சித்திகள். வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! … தன்னிகரில் சித்தி பெறலாம்.

வித்தை | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › வித்தை

1.      

Translate this page

12 Aug 2017 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …

ரிக்வேதக் கவிதை | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › ரிக்வேதக்-…

1.      

Translate this page

21 May 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …

to be continued……………………

Indus Valley Weights

சிந்துவெளி எழுத்தைப் படிக்க காஸைட்ஸ் நாகரீகம் உதவலாம் (Post No.6073)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 14 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 9-25 am


Post No. 6073

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சங்க இலக்கியத்தில் வறட்சி! (Post No.3955)

Research Article Written by London Swaminathan

 

Date: 30 May 2017

 

Time uploaded in London- 9-58 am

 

Post No. 3955

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வறட்சி பற்றி பாரத நாட்டு இலக்கியங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கின்றன. மிகவும் அதிசயமான விஷயங்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

சிந்துசமவெளி நாகரீகம் எப்படி அழிந்தது என்ற செய்தியும் வறட்சி பற்றிய மஹாபாரதக் குறிப்பால் தெரியவருகிறது.

மஹாபாரத காலத்திலேயே சரஸ்வதி நதி வற்றிய செய்தி மஹாபாரதத்திலேயே பல இடங்களில் வருவதால் வேதங்கள் கி.மு 3102-க்கு முந்தையவை என்பது உறுதியாகிறது. வேதங்கள் ஜீவ நதியாக இருந்த சரஸ்வதி நதியை விதந்து ஓதுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருட் துறை அடிப்படையில், மஹாபாரத காலம் கி.மு .1500 என்று எழு தி  இருப்பதை ஏற்றுக் கொண்டாலும்  வேதங்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் என்பது உறுதி ஆகிறது. வேதங்களைத் தொகுத்து அளித்ததாலும் , மஹாபாரதத்தை தொகுத்து வழங்கியதாலும் தான் நாம் ‘கறுப்புத் தீவுக்காரனை’ (க்ருஷ்ண த்வைபாயன) ‘வியாசன்’ (கட்டுரையாளன், எழுத்தாளன்) என்று போற்றுகிறோம்.

 

(( நான் பள்ளியில் படித்த போது யானை பற்றி ஒரு வியாசம் எழுது என்றுதான் கேள்வித்தாளில் இருக்கும்! இப்பொழுது யானை பற்றி ஒரு கட்டுரை எழுது  என்று வருகிறது.))

 

பத்து பிரிவுகளைக் கொண்ட பிராமணர்கள் எப்படி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர் என்றும் தெரிகிறது

முதலில் தமிழில் உள்ள விஷயத்தைப் பார்ப்போம்.

நற்றிணையில் (230) ஆலங்குடி வங்கனார் பாடுகிறார்:

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்

…………

முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய்

நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்

புதுவறங்கூர்ந்த செறுவில் தண்ணென

மலிபுனல் பரத்தந் தாஅங்கு

இனிதே தெய்ய நின் காணுங் காலே –230

 

பொருள்

பரத்தையிடம் (ப்ர ஸ்த்ரீ) சென்ற தலைவா! அவளிடமே இரு; இங்கு வாராதே; உன்னைப் பார்த்த போதே வறண்ட நிலத்தில் பாய்ந்த புது மழை வெள்ளம் போல என் உள்ளம் குளிர்ந்து இருக்கிறது (அது போதும்)

 

இவ்வாறு வறண்ட நிலத்தில் பெய்த மழை (நீர், வெள்ளம்) என்ற உவமை சம்ஸ்கிருதத்தில் பல இடங்களில் வருகிறது. புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் ரகுவம்ச காவியத்தில் இந்த உவமையைக் கையாளுகிறான்:

ராவணன் என்னும் வறட்சியை திருமால் என்னும் மழை போக்கியது- இதுதான் காளிதாசன் சொல்ல வந்த செய்தி (ரகுவம்ச காவியம் 10-48)

 

தேவர்கள் பயிர்கள்; ராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால்-மேகம்; அவர் உதிர்த்த வாக்கு அமிர்தம். பயிர்கள் வறட்சியால் வாடின; மழை பொழிந்தது; நீரால் அவ்வாட்டம் மறைந்தது.

 

மஹாபாரதத்தில் இரண்டு கதைகள்

அங்க தேச மன்னனான லோமபாதன், சில பிராமணர்களுக்கு தீங்கு செய்யவே அவர்கள், அந்த நாட்டில் நீண்ட காலம் வறட்சி ஏற்படட்டும் என்று சபித்தனர். “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை”– என்ற சான்றோர் வாக்கை அறிந்த லோமபாதன், மிகச் சிறந்த ரிஷ்ய ஸ்ருங்கர் என்ற முனிவரை தம் நாட்டுக்கு அழைக்க எண்ணினான். அவரை அழகான பெண்களை அனுப்பி தந்திரமாக அழைத்து வந்தான். நாட்டில் வறட்சி நீங்கியது. தன்னுடைய வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு திருமணமும் முடித்தான் (மஹா. 3-110)

இதில் அங்க தேச வறட்சி பற்றி நாம் அறிகிறோம்.

 

சாரஸ்வத பிராமணர்கள் என்போர் இப்போது கொங்கண தேசத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒருகாலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில் வசித்தவர்களாவர். அங்கு தொடர்ந்து 12 ஆண்டுக் காலம் வறட்சி நிலவவே இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து பல திசைகளுக்கு ஏகினர்.

 

பிரமணர்களை பத்து பிரிவாகப் பிரிப்பர்: பஞ்ச கவுடா (வடக்கத்திய 5 பிரிவு); பஞ்ச திராவிடா =தெற்கத்திய 5 பிரிவு பிராமணர்கள். சாரஸ்வத பிராமணர்கள், கௌடா பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.

 

இரண்டாவது கதை

ததீசி மகரிஷியின் மகன் பெயர் சரச்வத. அவருடைய அம்மா பெயர் சரஸ்வதி. 12 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவியதால் எல்லா ரிஷிகளும் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து வெளியேறினர். இதனால் அவர்களுக்கு வேதங்கள் மறந்துவிட்டன. “பசி வந்திடப் பத்தும் போம்” என்பது சரிதானே! அவர்கள் எல்லோரும் உணவைத் தேடி அலைந்தனர். சரஸ்வத மட்டும் வேதங்களைப் போற்றிப் பாதுகாத்து அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் (மஹா.9-51)

இதில் பல உண்மைகள் பொதிந்துள்ளன:

  1. நீண்ட 12 ஆண்டுக்கால வறட்சி

2.இதனால் சிந்து சமவெளி காலியனது. சரஸ்வதி நதி வற்றியது. சாரஸ்வத முனிவரின்   தாய் போன்றது அந்த நதி என்ற பொருளிலேயே அவரது தாயார் சரஸ்வதி என்று கூறியதாக நான் நினைக்கிறேன்.

3.சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

4.சாரஸ்வத பிராமணர்கள், தாங்கள், சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்ததாகச் சொல்வதற்கும் இந்த மஹாபாரத கதை உதவுகிறது.

 

சம்ஸ்கிருதத்தில் வற்கடம் என்றால் வறட்சி; தமிழ்ச் சொல்லுக்கும் அந்த சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.

 

வியாழன் கிரகமும், வெள்ளி கிரகமும்

 

குரு என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் பிடிக்கும். ஆகையால் 12 ஆண்டுக்கு ஒரு முறை வறட்சி  ஏற்படும் என்று சம்ஸ்கிருத நூல்கள் செப்பும் ஆனால் தமிழர்களைப் பொறுத்த மட்டில் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும்தான் தொடர்பு அதிகம் மூன்று சங்கப் பாடல்களில் இக்குறிப்பு வருகிறது:-

 

வெள்ளி கிரகம் தென் திசை ஏகியதால் வறட்சி வந்ததாக புற நானூறு 388, பதிற்றுப் பத்து 24; 69 பாடல்களில் வருகின்றது.

 

வெள்ளி தென் திசை சென்றாலும் சோழர் ஆட்சியில் வளம் கொழிக்கும்; வறட்சி வாலாட்டாது என்று மேலும் மூன்று புற நானூற்றுப் புலவர்கள் பாடுவர் ( புற.35, 386, 397)

 

ஆக வியாழன் , வெள்ளி கிரஹம் பற்றி அவ்வளவு கவலை! உலகில் வேறு எந்த நாட்டு விஞ்ஞானியும் கூறாத இக்கருத்துகளை பாரதீயர்கள் மட்டுமே புகன்றனர். வருங்காலத்தில் அவர்களும் கண்டு பிடிக்கும்போது நாம் முன்னரே

சொல்லிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

தேவாரத்தில் வறட்சி

 

தேவாரத்தில் இரண்டு அற்புதங்கள் வறட்சியுடன் தொடர்புடையவை. வறட்சியால் சோழ நாட்டு மக்கள் கஷ்டப் படவே அப்பரும் சம்பந்தரும் சிவபெருமனை வேண்ட அவர் வாசி தீர தங்கக் காசு நல்கினார். அதை வைத்து வயிற்றுக்குச் சோறிட்டனர் இரு பெரும் சைவப் பெரியார்கள். இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அவர்களுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சுந்தரருக்கு வறட்சி காலத்தில் சிவன் நெற்குவியலை மலை போலக் குவித்துக் கொடு  தார்.

 

சுந்தரருக்குப் படியளக்கும் கிழார், வறட்சி காரணமாக நெல அனுப்பவில்லை. சுந்தரருக்கும் வருத்தம்; நிலக்கிழாருக்கும் வருத்தம்.

இரவில் நிலக் கிழாரின் கனவில் வந்த சிவபெருமான் , நெற்குவியல் வரும் என்று சொல்லிப் போந்தர். மறு நாள் கிராமம் முழுத்ம் நெல். உடனே ஆரூரருக்கு செய்தி அனுப்பினார். ஆரூரர்– சுந்தரர் – – வந்து பார்த்து, இதை எப்படி திருவாரூருக்கு எடுத்துச் செல்வேன் என்று வழி தெரியாமல் வருந்தினார். சிவன், அவரது கனவில் தோன்றி சிவ கணங்கள் அப்பணியைச் செய்யும் என்று பகர்ந்தார். அவர் சொன்ன மாதிரியே மறு நாள் திரு ஆரூரில் வீடு தோறும் நெல் மலை!

ஆக அற்புதம் ஒரு புறம் இருக்க அதற்குக் காரணமான வறட்சி நமக்கு ஒரு செய்தியாகும்.

திருவிளையாடல் புராணத்தில் வறட்சி

 

மதுரையில் எழுந்தருளிய சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களைச் சொல்லுவது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணமாகும்

அதில் உக்கிரகுமார பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கால வறட்சி  ஏற்பட்டது. உடனே முடியுடைய மூவேந்தரும் அகஸ்தியர் வழிகாட்டுதலில் இந்திரனைப் பார்த்து தீர்வு கண்டனர்.

 

ஆக வறட்சி பற்றி மஹாபாரதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை 4000 ஆண்டுகளுக்கான குறிப்புகள் உள்ளன. பிருஹத் சம்ஹிதா முதலிய நூல்களில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் உலகிற்கே நாம் வறட்சி  பற்றி கற்பிக்கலாம்.

–subham–

சோழ மன்னன் செய்த ராஜசூய யக்ஞம் (Post No.3083)

IMG_5583

Research Article written by London Swaminathan

 

Date: 22  August 2016

 

Time uploaded in London:  21-18

 

Post No.3083

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் என்ற பெரிய வேள்வியைச் செய்ததை புறநானூறு மூலம் நாம் அறிகிறோம் அவனைக் குறித்து நான்கு பாடல்கள் 16, 125, 367, 377) உள்ளன. அவற்றை முறையே பாண்டரங் கண்ணனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஔவையார், உலோச்சனார் ஆகியோர் பாடினர்.

 

இராஜசூய வேள்விக்கு சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் ஒருங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த ஔவையாருக்கு பெரிய மகிழ்ச்சி. நீங்கள் வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களைவிட, மழைத் துளிகளைவிட அதிக நாட்கள் வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

IMG_5584

ராஜசூய யக்ஞம் என்றால் என்ன?

இது குறித்து லாத்யாயன ஸ்ரௌதசூத்ரம் சொல்கிறது. அரசர்கள் ஜாதியான க்ஷத்ரியர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ராஜ சூய என்றால் அரசனை ‘உற்பத்தி செய்தல்’, ‘கடைந்தெடுத்தல்’ என்று பொருள். அதாவது ஒரு மாமன்னனை உருவாக்குதல்.

 

இந்த வேள்வியைச் செய்த, பெருநற்கிள்ளி தன்னுடைய பெயருக்கு முன்பாக ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பட்டம் வைத்துக் கொண்டதிலிருந்தே இதன் பெருமையும் மகிமையும் விளங்கும்.

 

இதைச் செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை!

பங்குனி மாத சுக்லபட்ச முதல்நாளில்  தீட்சை எடுத்துக்கொள்வர்.

முதலில் சோமரசம் தொடர்பான சடங்குகள் ஐந்து நாட்களுக்கு நடக்கும். பின்னர் ஓராண்டுக்கு சிறிய யாகங்கள் நடக்கும்.

 

அதன் பிறகு 12 நாட்களுக்கு நீடிக்கும் சடங்குகள் நடைபெறும்.

 

அரசனுக்கு அபிஷேகம் செய்து முடிசூட்டுதலே முக்கியமான — முத்தாய்ப்பான — நிகழ்ச்சி. பல புண்ய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை மந்திரம் சொல்லி அரசனின் தலையில் ஊற்றுவர் பிராமணர்கள். அபோழுது பிராமணர்களுக்கு நிறைய தானங்கள் வழங்கப்படும்

 

இதை ஔவையார் பாராட்டுகிறார்:-

வாழச் செய்த நல்வினை அல்லது

ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை — என்பார்.

 

ஒருவர் செய்த நல்வினைதான் அவர் இறந்த பின்னர் அவருக்கு துணையாக வரும் – என்பதே இதன் பொருள்.

 

ஆகையால் பிராமணர்களுக்கு கைநிறைய தங்கக் காசுகள கொடு என்கிறரர்.

 

ஏற்ற பார்ப்பர்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

 

வாழ வேண்டும் என்று அறிவுரை பகர்கிறார். (Puram.367)

 

இதற்குப் பிறகு தேரோட்டும் பந்தயம் (ரேஸ்) நடக்கும்

அதைத் தொடர்ந்து ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் நடக்கும்.

இதில் சுமார் 100 பசுக்கள் இருக்கும்

 

(தமிழ் நாகரீகம், பண்பாடு என்று எதுவும் தனியாக கிடையாது. ஆநிரை மீட்டல், கவர்தல் ஆகியன மஹா பாரதத்திலும் உண்டு. சங்க இலக்கியத்திலும் உண்டு. பிராந்தியத்துக்கு பிராந்தியம் உலகம் முழுதும் சில விநோத வழக்குகள், இசை நடனம் முதலியன இருக்கும் அது போல இந்தியாவிலும் 25 மாநிலங்களில் 25 விதமான பழக்க வழக்கங்கள் , நடை உடை பாவனைகள் இருக்கும்.)

IMG_5585

மன்னன் , தேரிலிருந்து இறங்கிய பின்னர் முடி சூட்டு வைபவம் நடக்கும்.

 

இறுதியாக சொக்கட்டான் ஆட்டம் நடைபெறும். இதில் மன்னர்தான் வெற்றி  பெ றுவார்.  சொக்கட்டான் ஆட்டம் புற நானூற்றிலும், திருக்குறளிலும் உள்ளதே.

 

இதற்குப் பிறகு சுனஸ்சேபன் கதை உபந்யாசம் நடக்கும்.

அடுத்த பத்து நாட்களுக்கு சிறிய யாகங்கள் நடத்தப்படும். இதற்குப் பின் மன்னன், ஓராண்டு காலத்துக்கு சில விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

இவ்வளவையும் சோழ மன்னன் பெருநற்கிள்ளி செய்தது ம் அதை மற்ற புலவர்களும், புரவலர்களும் போற்றியது ம் எதைக் காட்டுகிறது?

 

தமிழ் மன்னர்களுக்கு யாக யக்ஞங்கள் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பார்ப்பனர் பற்றியும், வேள்வி பற்றியும், நான்மறைகள் குறித்தும், யூப நெடுந்தூண்கள் (வேள்வித் தூண்) பற்றியும் சங்க இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.

 

32,000 பசு, 16000 பசு 8000 பசு தானம்!

 

ராஜ சூய வேள்வியை செய்வதற்கு 4 புரோகிதர்கள் தேவை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் 32,000 பசுக்கள் தட்சிணை!

இரண்டாம் நிலையிலுள்ள 4 ஐயர்களுக்கு தலா 16,000 பசுக்கள் தட்சிணை.

 

மூன்றாம் நிலையிலுள்ளோருக்கு தலா 8000, அதற்கடுத்த நிலையிலுள்ளோருக்கு தலா 4000 பசுக்கள் தட்சிணை என்று சாத்திரங்கள் செப்புகின்றன.

ஆச்வலாயன, பாரத்வாஜ, ஆபஸ்தம்ப, காத்யாயன ச்ரௌத சூத்ரங்களில் இதன் விவரங்களைக் காணலாம்.

 

சிந்து சமவெளி நாகரீகம்

 

சிந்து சமவெளி நாகரீகத்திலும் எடைக்கற்கள் இதே வீதத்தி ல்தான் இருக்கின்றன.4, 8, 16, 32, 64 ….

 

வேத கால தட்சிணையும் இதே வீதாசாரத்தில்தான் இருக்கும். ஆக வேத கால நாகரீகமும் சிந்து சம்வெளி நாகரீகமும் ஒன்றே.

 

இப்போதுள்ள ரூபாய்க்கு முன் இந்தியாவில் தம்பிடி, அணா, ரூபாய் என்ற முரை இருந்தது மூன்று தம்பிடி= காலணா, நான்கு காலணா = ஒரு அணா, 16 அணா = ஒரு ரூபாய் (அதாவது 64 காலணா அல்லது 192 தம்பிடி). இதுவும் சிந்து சம்வெளி விகிதாசாரமே!

 

–subham–

சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!!

பிராணியின் கழுத்துக்குக் கீழே உள்ளது சோமரச வடிகட்டி

Research Paper No.1807; Date: 17th April 2015

Written by London swaminathan

Uploaded from London at 19-47

I have already published the English Version of this article.

கட்டுரைச் சுருக்கம்:

1.சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் தொடர்பு உண்டு

.2.அங்கே அவர்கள் மற்ற இனத்துடன் வாழ்ந்தாலும் முக்கியப் பங்கு வகித்தனர்.

3.அவர்கள் சோமக் கொடி பயிர் செய்வதில் வல்லவர்கள். மலைகளில் வசித்ததால் அதை இந்து யாக யக்ஞாதிகளுக்கு சப்ளை செய்தனர். சிந்து வெளியில் சோமரச வடிகட்டி காட்டும் முத்திரைகள் கந்தர்வர்களுடையவை.

4.லவன், குசன், துர்யோதனன் நாகர்கள், இந்திரன் ஆகியோருடன் அவர்கள் சண்டை போட்டது பற்றி இதிஹாச புராணங்கள் கூறுவதால் சிந்து வெளியில் பலதரப்பட்ட மக்கள்– இன்றைய இந்து மதம் போலவே– கூடி வாழ்ந்தனர்.

5.அவர்கள் காதல் திருமணம் ஆடம்பர/செண்ட் போட்ட உடை, நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் விருப்பம் உடையவர்கள். சங்கீதத்துக்கு மறு பெயர் கந்தர்வ சாஸ்திரம்

6.இவர்களுக்கு தாவரம் பற்றிய அறிவு, கட்டிடக் கலை அறிவு மிகுதி. இந்த விஷயங்கள் எல்லாம் இந்துமத நூல்களில் உள்ளவை. வேதத்தில் எந்த இடங்களில் இவர்கள் பற்றி வருகின்றன என்பதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காணவும்.

கந்தர்வர்கள் பற்றி ராமாயணம் மஹாபாரதம், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் சொல்லிய விஷயங்களை இன்னும் யாரும் முழுக்க ஆராயவில்லை. சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்.

soma filter

சிந்து சமவெளி சோமரச வடிகட்டி

1.கந்தர்வ மணம் என்பது காதல் கல்யாணம். இது மனு ஸ்ம்ருதி எனும் சட்டப் புத்தகம் கூறும், இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்களில் ஒன்று. மனு ஸ்ம்ருதி கூறியதை தொல்காப்பியரும் அப்படியே கூறுகிறார். இதன் விவரங்களை “இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்கள்” என்ற எனது கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

2.வேதங்களில் சோம ரசத்துக்குப் பாதுகாவலர்கள் கந்தர்வர்கள் என்றும் அவர்கள் வானத்தில் (உயரமான மலைகளில்) வசிப்பவர்கள் என்றும் அவர்கள் சோம ரச உற்பத்திக்குப் பெயர் எடுத்தவர்கள் என்றும் பல துதிகள் வருகின்றன.

3.சிந்து சமவெளி முத்திரைகளில் பிராணிகளுக்குக் கீழே ஒரு மர்ம சின்னம் இருக்கிறது. இதுவரை அது என்ன என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. அது போலவே ஒற்றைக் கொம்பு மிருகத்துக்கும் விளக்கம் கிடைக்கவில்லை. சிலர் இது குதிரை என்பர். அது போலவே அந்த மர்ம வடிவம் சோம ரசத்தை வடிகட்டும் பாத்திரம் என்பர். இந்த குறிப்பிட்ட வகை முத்திரைகள் எல்லாம் கந்தர்வர்களுடையவை என்று நாம் கொண்டால் அந்த மர்ம பாத்திரம் சோம ரச வடிகட்டியாக இருக்கலாம். ஏனைய முத்திரைகளில் இவை இல்லாததற்குக் காரணம் அவை கந்தர்வர் இல்லாத வேறு குழுவினருடையவை என்று கொள்ளலாம். சிந்து நாகரீகத்தில் ஆரிய திராவிட இனவெறியைப் புகுத்தி அந்த ஆராய்ச்சியைக் குட்டிச் சுவராக்கிய மார்ட்டிமர் வீலர் போன்றவர்களை மறந்து விட்டு, அது பல இன குழுக்கள் நாகரீகம் என்று கொண்டால் எளிதில் அந்த எழுத்துக்களைப் படிக்கலாம்.

4.கந்தர்வர்கள் என்போர் — மனிதர், நாகர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோருடனும் வசித்ததை வேத துதிகள் உறுதி செய்கின்றன. அவர்கள் நாகர்களுடனும் சண்டை போட்டனர். இறுதியில் புருகுத்சர் என்பவர் விஷ்ணு அமசத்துடன் தோன்றியதாகவும் நாக குல பெண் நர்மதா புருகுத்சனுக்கு கந்தர்வர் ஒளிந்து கொண்டிருக்கும் பகுதியைக் காட்டி அவர்களை அழித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

5.கந்தர்வர்கள் 27 பேர் என்று யஜுர் வேதமும் 6333 பேர் என்று அதர்வ வேதமும் கூறும். அந்தந்த இடத்தில் இந்த எண்களை வைக்கையில் சரியான பொருள் கொள்ள முடியும். ரோகிணி நட்சத்துடன் கந்த்ர்வர்களை தொடர்புபடுத்துவர். தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் பழங்காலத்தில் ரோகிணியில் கல்யாணம் செய்துகொண்டதை அகநானூற்றில் காணலாம்.

6.வானவில், கானல் நீர் ஆகியவற்றுடன் கந்தர்வர்களைத் தொடர்புபடுத்தும் துதிகளும் உள.

தாய்லாந்து மியூசிய கின்னரர் சிலை

7.கந்தர்வர்களுக்கு தாவரங்கள் பற்றி நன்கு தெரியும் என்றும் விஸ்வவசு ஒரு முறை சோமக் கொடியைத் திருடியதாகவும் பின்னர் அது மீட்கப்பட்டது என்றும் அதர்வ வேதம் கூறும்

8.ஒரு இந்துப் பெண் கல்யாணம் முடிப்பதற்கு முன், அவள் அக்னி, சோம, கந்தர்வருக்கு சொந்தமாக இருந்தாள் என்றும் கூறப்படுகிறது

.9.கந்தர்வருடைய தோற்றம் பற்றியும் வேத மந்திரங்கள் வருணிக்கின்றன.

10.வராஹமிகிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதையில் கந்தர்வர்கள், ஆப்கனிஸ்தான-பாகிஸ்தானம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். இது சிந்து சமவெளிப்பகுதிக்குள் வந்து விடுகிறது. அவர் சிந்து நதியின் இரு கரைகளில் உள்ள புஸ்கலவதியையும், தக்ஷசீலத்தையும் குறிப்பிடுகிறார்.

11.கந்தர்வரின் நகரங்களை மிகவும் அழகான நகரங்கள் என்று புராணங்கள் வருணிக்கின்றன இந்து சிந்துவெளி நகரங்களைப் பற்றியதாக இருக்கலாம்.

12.கந்தர்வர் பெயர்களில் “சித்ர” என்ற பெயர் மிகவும் அடிபடுகிறது. இந்த மூன்று எழுத்துக்களை சிந்துவெளி முத்திரைகளில் கண்டுபிடித்துவிட்டால அதைப் படிப்பது எளிதாக இருக்கும்.

13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் கங்கை, இமயம் பற்றி பல குறிப்புகள் உண்டு. ஆனால் சிந்து நதி அல்லது அந்தப் பிரதேசம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகவே “தமிழர்-சிந்துவெளி தொடர்பை” ஒதுக்கி வைத்துவிட்டு ஆராய்வது நலம் பயக்கும்.

14.கந்தர்வர்களை சுகந்த மணம் வீசும் ஆடைகளை அணிபவர்களாகவும் வேதங்கள் பாடுகின்றன.

15.சரஸ்வதி நதிதீரத்தில் 12 ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது பிராமணர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் 12 ஆண்டுகளில் அவர்கள் வேதங்களைக்க்கூட மறந்து விட்டனர் என்றும் மஹாபாரதம் கூறும். அதில் ததீசி முனிவரின் மகன் மட்டும்  அங்கேயே தங்கியதால் அவர் பெயர் சரஸ்வத என்றும் அவர் திரும்பிவந்த பிராமணர்களுக்கு வேதம் கற்பித்ததாகவும் கூறும். வெளியேறிய சாரஸ்வத பிராமணர்கள் இப்போது இந்தியாவில மேற்குக் கடற்கரையோர மாநிலங்களில் வசிக்கின்றனர். சிந்துவெளி-சரஸ்வதி தீர நாகரீகம் வறட்சி முதலிய இயற்கைக் காரணங்களால் அழிந்ததற்கு மஹாபாரதத்தில் தடயம் உள்ளது.

நான் முன்னரே ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். சிந்துவெளியில் இன்றைய இந்தியாவைப் போலவே பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் இருந்திருக்கலாம். ராமனின் மகன்கள் லவனும் குசனும் கந்தர்வர்களிடம் இருந்து சிந்துவெளி நகரங்களைக் கைப்பற்றியதை நான் ராமாயண ஆதாரங்களோடு எழுதினேன். இதை மகாபாரதமும் உறுதி செய்கிறது.

சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் சித்ராங்கதன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் அவன் அகந்தையால் அழிந்தான் என்றும் சரஸ்வதி நதிதீரத்தில் கந்தர்வர்களுக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் அவனுடைய பெயர் உடைய ஒருவனே அவனைக் கொன்றான் என்றும் மகாபாரத ஆதி பர்வம் கூறும் (1-101). ஆக சிந்துவெளியை கந்தர்வர்கள் ஆட்சிபுரிந்ததை இரு இதிஹாசங்களும் உறுதி செய்கின்றன. மகா பாரதம் ஜெயத்ரதன் என்ற மன்னனையும் சிந்து தேச அரசன் என்றே குறிப்பிடுகிறது.

celestials.jpg (400×300)

மாமல்லபுரத்தில் கந்தர்வர்கள்

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று. சிந்து சமவெளியில் கிடைத்த நாட்டியப் பெண்ணின் சிலை, கந்தர்வர் தொடர்பை உறுதி செய்கிறது.

இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும். தமிழ் மன்னர்கள் கூட சூரியகுலம், சந்திர குலம் என்று சொல்லி தங்களை தேவலோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.

சிந்து சமவெளி பற்றிய என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!  28-10-2014

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு, 10 மே 2014

சிந்து சமவெளியில் பேய் முத்திரை

சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்  Aug.23, 2012

கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை

‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13

தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012

சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை(15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்

சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature

Flags: Indus Valley- Egypt Similarity

Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

Indra on Elephant Vahana in Indus Valley

Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012

Indus Valley Cities in Ramayana Dec.18, 2012

Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013

Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014

Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013

‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012

Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14

மெகஸ்தனீஸ், அர்ரியன், ப்ளினி பொய் சொல்வார்களா?

indaca

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1431; தேதி 23 நவம்பர், 2014.

இந்திய வரலாற்றை விரைவில் மாற்றி எழுத வேண்டும். இதற்காக பல் துறை வித்தகர் அடங்கிய இந்திய வரலாற்று சங்கம் அமைக்கவேண்டூம். வேத ஆராய்ச்சிக்கு என ஒரு சங்கம் அமைக்கவேண்டும். ஏனெனில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்வோர் பக்கத்துக்கு பக்கம் வேதங்களை மேற்கோள் காட்டித்தான் எழுத முடிகிறது. அஸ்கோ பர்போலாவின் டிசைபரிங் தெ இண்டஸ் ஸ்க்ரிப்ட் Deciphering the Indus Script புத்தகத்தைப் பார்த்தால்—படித்தால் இது விளங்கும். வேதங்களோ வெகு வேகமாக அழிந்து வருகிறது. எல்லோரும் வேதத்தைப் புத்தகத்தை வைத்துப் படிக்கத் துவங்கி விட்டனர். மனப்படாமாக வைத்துக் கொள்ளும் சக்தி மிகவும் குறைந்து விட்டது. போன் நம்பரைக் கேட்டால்கூட அந்த போனை on ‘ஆன்’ செய்து அதைப் பார்த்துப்படித்தாதால்தான் தன்னுடைய போன் நம்பர் தெரியும்!!

உலகின் மிகப் பழைய (Rig Veda) ரிக் வேதப் புத்தகத்தில் 150 அரசர்களின் பெயர்கள் மற்றும் மிகவும் பழமையான – அருமையான ரஹசியங்கள் உள. நிற்க

கட்டுரைத் தலைப்பு அர்ரியன், மெகஸ்தனீஸ், பிளினி என்று சில புரியாத கிரேக்க, ரோமானிய பெயர்களைச் சொல்கிறதே ! இவர்கள் யார்?

யார் இந்த அர்ரியன்?
அர்ரியன் (கி.பி.92-175):- கிரேக்க நாட்டு வரலாற்று அறிஞர்—தத்துவ வித்தகர். துருக்கியில் பிறந்தார். ஏதென்ஸில் இறந்தார்.

யார் இந்த பிளினி?
பிளினி மூத்தவர், பிளினி இளையவர் என்று இருவர் உண்டு. இருவரும் சொந்தக்காரர்களே. ரோமானிய எழுத்தாளரும் தத்துவ ஞானியுமான மூத்த பிளினி கி.பி. 23- கி.பி.79 க்கு இடையே வாழ்ந்தார். இளைய பிளினி ரோம் நகரில் மாஜிஸ்டிரேட் பதவி வகித்தார் புத்தகங்கள் எழூதினார். வாழ்ந்த காலம் கி.பி. 61- கி.பி.112.

யார் இந்த மெகஸ்தனீஸ்?
இவர் மகத சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் சந்திர குப்த மௌர்யனியிடம் செல்யூகஸ் நிகோடரின் தூதராக இருந்தவர். அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூலை எழுதிய சாணக்கியன் காலத்தவர். இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இண்டிகா என்ற நூலை எழுதியவர். ஆனால் நமக்கு அந்த நூல் கிடைக்க வில்லை. மற்றவர்கள் இங்குமங்கும் காட்டிய மேற்கோள்கள் மூலம் சிற்சில பகுதிகள் கிடைத்தன. வாழ்ந்த காலம் கி.மு..350- கி.பி.290.
arrian
Picture of Arrian

இந்த மூவரும் அவரவர்தம் துறைகளில் கரை கண்டவர்கள். மேலும் இந்து ஆதரவு பாரதீய ஜனதா கட்சியையோ, இந்து விரோத திராவிடக் கட்சி களையோ, கடவுள் விரோத மார்கஸீய கட்சிகளையோ சாராதவர்கள். ஆகையால் இவர்களை யாரும் சந்தேகிக்க முடியாது. இவர்கள் மூவரும் தங்கள் நாடுகளுக்கும் மேலாக அல்லது சமமாக வைத்து இந்தியாவைப் பாராட்டுபவர்கள். கிருஷ்ணரையும் ஹெர்குலீஸையும் ஒன்று என்று கருதியவர்கள். மெகஸ்தனீஸ் என்பவரோ மதுரை மீனாட்சியின் புகழையும் பாடியவர்!

அதிசயத்திலும் அதிசயம்—உலக மஹா அதிசயம்— இந்தியாவுக்கு வந்த எந்த வெளி நாட்டு யாத்ரீகர்களும் வெள்ளைக்கரர்கள் எட்டுக் கட்டிய ஆரிய—திராவிட பொய்மைக் கதைகளை குறிப்பிடவில்லை. ஆரிய—திராவிட வாதம் பொய்மை வாதம் என்பது இதன் மூலம் வெள்ளிடை மலையென விளங்கும்.

இந்த மூவரும் இந்திய வரலாறு பற்றிக் கூறும் செய்தி மிகவும் வியப்பானது. இவர்கள் மூவரும் அவர்கள் காலத்துக்கு முந்திய சுமார் 150 அரசர்கள் வரை குறிப்பிடுவர். இது 2000 ஆண்டுகளுக்கு முன், இந்தியர்கள் என்ன நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று காட்டுகிறது. நாம் இப்பொழுது படிக்கும் வரலாற்றுப் புத்தகம் வின்ஸென் ட் ஸ்மித் என்பவர் எழுதியது. அக்காலத்தில் பைபிள் பிரசாரகர்கள் உலகம் என்பது கி.மு.4004 அக்டோபர் 23 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்குப் பிறந்தது என்று சொல்லியதை நம்பியவர். இந்தியாவுக்கு மன்னர்களும் இல்லை, வரலாறும் இல்லை எல்லாம் புத்தர் காலம் முதற்கொண்டே வந்தன — என்று கதை எழுதியவர்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

ஆனால் அர்ரியன் என்பவர் மஹா பாரத கால மன்னர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறுகிறார். 153 மன்னர்கள் 6042 ஆண்டுகள் ஆண்டதாக அர்ரியனும், 154 மன்னர்கள் 6451 ஆண்டுகள் ஆண்டதாக பிளினியும் கூறுகின்றனர். இந்தக் கணக்கெல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முந்தையது என்பதைக் கருத்திற்கொண்டால் இன்னும் 2000 ஆண்டுகளை நாம் சேர்க்கவேண்டும்.

கிருஷ்ணருக்கும் மௌர்ய சந்திர குப்தனுக்கும் இடையே 138 மன்னர்கள் ஆண்டதாக மெகஸ்தனீஸ் சொல்லுகிறார். ஒரு மன்னருக்கு 35 ஆண்டு ஆட்சிக்காலம் வைத்தாலும் 4830 ஆண்டுகள் ஆகும். மெகஸ்தனீஸோ நமக்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். கண்ணபிரான் ஆட்சி செய்தது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆகும்.

இவர்கள் கூறுவதில் கொஞ்சம் முரண்பாடுகள் இருந்தாலும் எவ்வளவு பழமையானது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் மக்கள் நம்பினர் என்பது புலனாகும்.

பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூல் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் 58 ஆண்டுகளும், சேரன் செங்குட்டுவன் 55 ஆண்டுகளும், ஆடுகோட்பாட்டு சேரலாதன் 35 ஆண்டுகளும் ஆண்டதாகச் செப்பும். மேலைநாட்டு ரத்தக்களரிகளையோ மொகலாய சாம்ராஜ்ய படுகொலைகளையோ பழைய இந்திய வரலாற்றில் காண முடியாது. ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் சொன்னது போல வயதான மன்னர்கள் தாங்களாகவே வலிய வந்து தன் மகனிடம் ஆட்சி ஒப்படைத்து வானப்ரஸ்தம் சென்றனர்.

pliny-the-elder-greek-philosopher
Pliny the Elder

கபிலரும் புறநானூற்றுப் பாடல் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிப் பேசுவார். கபிலரே 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவருக்கு 1500 முதல் 1800 ஆண்டுகளுக்கு முன் இருங்கோவேளின் முதல் தலைமுறை துவாரகையிலிருந்து யாதவர்களை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்தது.

பாணினி தனது இலக்கண சூத்திரங்களில் பாரத்வாஜரின் 21-ஆவது தலைமுறை, கௌதம மஹரிஷியின் 53-ஆவது தலைமுறை என்றெல்லாம் எடுத்துக்காட்டுவார். பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் நீண்ட குருமார்கள் பட்டியல் உள்ளது. எல்லாப் புராணங்களிலும் மன்னர் பரம்பரைகள் 130 முதல் 150 வரை உள்ளது.

ஆக பாணினி, கபிலர், அர்ரியன், பிளினி, மெகஸ்தனீஸ், உபநிஷத், புராணங்கள் ஆகிய அனைத்தையும் நம்பி நம் வரலாற்றைத் திருத்தி எழுதுவது நம் கடமை. முதலில் இப்போதுள்ள வரலாற்றுக்கு அருகிலேயே இவைகளின் மாற்றுக் கருத்துகள் என்று கொடுப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. நமது தலைமுறை மாணவர்கள் அவைகள மேலும் ஆராய்ந்து புது வரலாறு எழுதட்டும். இதன் மூலம் தமிழர்தம் பழமையும் பெருமையும் மேலும் ஓங்கும்.

Ancient-India-as-De

குதிரை போட்ட வெடிகுண்டு

குதிரை பற்றிய அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நேற்று எல்லா இந்தியப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. ஆரிய – திராவிட வாதம், உளுத்துப்போன கட்டை என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தச் செய்தி அந்த வாதத்தில் மீது வீசிய வெடி குண்டாகும்.

குதிரையும் காண்டாமிருகமும் 54 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கணத்தில் தோன்றிய பிராணீகள் என்பதை மஹாராஷ்டிர மாநில நிலக்கரிச் சுரங்கத்தில் கிடைத்த படிம அச்சு எலும்புகளைக் கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளனர். நாம்தான் உலகிற்கு பசுமாடுகளையும், குதிரைகளையும் அறிமுகப்படுத்தி மனித குலத்தை நாகரீகப் படுத்தினோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது நாள் வரை ஆரிய—திராவிடம் பற்றிப் பிதற்றி வந்தோர், சைபீரியாவில் இருந்து குதிரை வந்ததா? அரேபியாவில் இருந்து வந்ததா? ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து வந்ததா? என்று பி.எச்.டி பட்டத்துக்காக பொய்யுரைகளை எழுதி வந்தனர்.

சிந்து சமவெளி மக்களோவெனில், பசு மாடு, குதிரை ஆகியவற்றின் புனிதம் கருதி அவைகளை முத்திரையில் பொறிக்கவில்லை. காளை மாட்டை ஆயிரம் முத்திரைகளில் பொறித்த நம்மவர் ஒரு முத்திரையிலும் பசுவைப் பொறிக்கவில்லை. இது போலவே குதிரையும்.

india_as_known_to_kautilya_and_megasthenes_idj539

அயஸ் என்பது பற்றி நான் முன்னரே சொல்லிவிட்டேன். தமிழர்கள் பொன் என்பதை தங்கத்துக்கும், இரும்புக்கும், ஐம்பொன் சிலகளில் உள்ள ஐந்து உலோகங்களுக்கும் பயன்படுத்தியது போலவே ரிக்வேதத்தில் அயஸ் என்பதைப் பயன்படுத்தினர். இதைச் சரியாக மொழி பெயர்க்காமல் இரும்பு என்று எழுதி காலக் கணக்கீட்டைப் பின்னுக்கு இழுத்தனர். உண்மையில் இரும்பு கண்டு பிடித்ததும் நாமே —– சிவபெருமான் எரித்த முப்புரங்களில் இரும்பு, தங்கம், வெள்ளி என்ற 3 கோட்டைகள் உள்ளன!
–சுபம்–

contact swami_48@yahoo.com