Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் . ரிக் வேதத்திலும் நலுங்குப் பாடல்கள் இருக்கின்றன. அது பற்றி தனியாக எழுதுகிறேன். இதோ லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்த பழைய நலுங்குப் பாடல் புஸ்தகம். வாசகர்களும் காமெண்ட் பத்தியில் நலுங்குப் பாடல்களையும் அது பற்றிய தகவல்களையும் கொடுத்தால் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்தரும்
நூலின் தலைப்பு – நூதன நலுங்குப் பாட்டு
ஆண்டு- 1937
வெளியிட்டவர்- சென்னை திருவொற்றியூர் நாக்கை சரவண முதலியார்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
இறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு — என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் ? ஏசு கிறிஸ்துவும் சொன்னார்;
அது எப்படி? எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.
எழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல முதல்வன் இறைவனே! என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .
Jesus Christ said in the Bible,
‘I am Alpha and Omega, the beginning and the end, the first and the last’- Revelation 22-13
ஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.
வள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .
சுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.
வள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்
உலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.
“அஹம் கருத்னஸ்ய ஜகத: ப்ரபவ: பிரளயஸ் ததா” (BIG BANG THEORY AND BIG CRUNCH THEORY) (BG.7-6)
xxx
என்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி
எனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994) சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத் தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.
உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல் மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே!! .
உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்
சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.
அதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
வேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’ என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்
சம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்!!
வேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள்! என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.
ஆராய்ச்சி முடிவு-
திராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity) மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.
காரணம் ?
மொழியின் உள் அமைப்புக்குள் (internal structure) உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை !!
எனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு!
இதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ உச்சரிக்கலாம் .
இனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்
மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .
‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை !
கம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்!!
ஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .
குறில் என்றால் அதிகம்;
நெடில் என்றால் குறைவு .
உலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .
அது மட்டுமா ? பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப் பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்!!
தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக் காணலாம்! (Post 7637)
Written by S Nagarajan
Post No.7637
Date uploaded in London – 1 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
காலிங் பெல் அடித்தது.கதவைத் திறந்தேன். திரு கணேஷ் கோபாலன் வந்திருந்தார். வரவேற்றேன்.
முன்பே வரப்போவதாகச் சொல்லி இருந்ததால் கணினியை (மாக் லேப்டாப் Mac LapTop) தயாராக வைத்திருந்தேன்.
அவரது மென்பொருளைக் காட்டினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று இருந்த பட்டியலிலிருந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுங்கள் என்றார். தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.
பேசுங்கள் என்றார் அவர்.
திரு கணேஷ் அவர்களை வரவேற்கிறேன். நல்வரவு என்றேன்.
என்ன ஆச்சரியம். நான் பேசப் பேச அப்படியே எழுத்துக்கள் கணினியில் தோன்ற ஆரம்பித்தன.
நல்ல ஒரு கண்டுபிடிப்பு.
இது எப்படி சாத்தியமானது என்று அவரைக் கேட்டேன்.
விவரித்தார்.
“ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இது சாத்தியமானது. பல ஆண்டுகள் டெக்ஸாஸ் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் மற்றும் ஐ.பி.எம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய் அனுபவமும் எனது சகா அனந்த் நாகராஜ் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதும் தான்
இந்த மென்பொருள் உருவாகக் காரணம். தமிழில் பல்வேறு குரல்களை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் சேகரித்தோம். எந்தப் பிழையும் வந்து விடக் கூடாது என்பதால் பொறுமையுடனும் கவனத்துடனும் இதை உருவாக்கினோம். வெற்றி கிடைத்தது.”
“இதில் என்ன விசேஷ அம்சங்கள்?”
“முதலாவதாக துல்லியம். அப்படியே பேச்சு எழுத்தாக மாறுகிறது. இரண்டாவது விரைவு. பேசப் பேச எழுத்துக்கள் உருவாகும்.”
“இப்போது இது எங்கு பயன்பாட்டில் இருக்கிறது? யார் யாருக்கெல்லாம் இது உதவும்?”
“இப்போது போலீஸ் துறையில் இதைக் கொடுத்திருக்கிறோம்.
இதர பயன்பாடு பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்….”
சற்று யோசித்தேன். பிறகு சொல்ல ஆரம்பித்தேன். சாதாரண இல்லத்தரசி முதல் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வரை இது பயன்படுமே. செய்ய வேண்டிய வேலைகளை நினைத்த போதெல்லாம் கம்ப்யூட்டரில் சொல்லி விட்டால் அது எழுத்தாக மாற்றுகிறது. அதை பிரிண்ட் எடுத்தால் போதுமே. எழுத்தாளர்கள், ஸ்கிரிப்ட் ரைட்டர்களுக்கு இது பெரிய உதவி சாதனமாக இருக்கும். டப்பிங் கலைஞர்களுக்கு, தான் எதைப் பேசினோம், எந்த இடத்தில் தவறு வந்துள்ளது என்பதை பிரிண்ட் அவுட் சுட்டிக் காட்டி விடும்.
போலீஸ் விசாரணை, கோர்ட் விசாரணையின் போது வக்கீல்கள், சாட்சிகள் பேசுவது துல்லியமாகப் பதிவு செய்யப்படும். ஆகவே யாரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேச முடியாது. உண்மைகள் விரைவில் வெளிப்படும். பேசியதை பதிவு செய்து உடனுக்குடன் கையெழுத்து வாங்கி விடலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே.
சி.இ.ஓக்கள் மற்றும் ஏராளமானோருக்கு வேலையைப் பங்கிட்டுத் தர வேண்டிய நிறுவன உரிமையாளர்கள் முன்பே பேசி அதை உதவியாளரிடம் தந்து விடலாம்.
எனது பேச்சைக் கேட்டு கணேஷ் புன்னகை பூத்தார்.
“இன்னும் டிடிபி பப்ளிஷர்கள், டைரக்டர்கள் போன்றோரை விட்டு விட்டீர்களே. நினைத்த படி காட்சியை விவரித்து அதை அஸிஸ்டண்ட் டைரக்டர்கள், காஸ்ட்யூம் டிசைனர், செட்டை நிர்மாணிப்பவர்கள், பாடலாசிரியர், வசனகர்த்தா ஆகியோருக்குக் கொடுத்து விட்டால் திட்டமிட்டு காட்சிகளைப் படம் பிடிக்கலாம்; மீண்டும் மீண்டும் டேக் எடுக்காமல் செலவு குறையும், இல்லையா?”
“சரி, இதை உருவாக்க எப்படி நிதி கிடைத்தது?”
“சாம்சங் வெஞ்சர்ஸ் (Samsung Ventures) இதை உருவாக்க உதவும் வகையில் போதுமான நிதியை அளித்து உதவியுள்ளனர். எங்கள் நிறுவனத்தில் 30 பேருக்கு மேல் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது போன்ற ஆய்வுகளைச் செய்து புதிய மென்பொருளை உருவாக்க வழி வகுக்கிறோம்.”
“சரி,முக்கியமான விஷயத்திற்கு வருவோம். உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன? உங்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது, அதைச் சொல்லுங்கள்”
“ எங்கள் நிறுவனத்தின் பெயர் ஞானி இன்னோவேஷன் பிரைவேட் லிமிடட். (Gnani Innovations Private Limited (gnani.ai)).
இதைப் பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு வாரம் இலவசமாக இந்த மென்பொருளை அளிக்கிறோம். இதைப் பயன்படுத்தி திருப்தி அடைந்த பின்னர் அவரவர் தேவைக்குத் தக்கபடி ஒரு வருடத்திற்கு 999 ரூபாயிலிருந்து பல்வேறு திட்டங்களின் படி அதற்குரிய தொகையில் இதைப் பெறலாம்.
இதைப் பெற விரும்புவோர் அணுக வேண்டிய எங்களது தளம் மற்றும் தொலைபேசி எண்ணைச் சொல்கிறேன்.
தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் : கணேஷ் கோபாலன் மற்றும் அனந்த் நாகராஜ் (நிறுவனர்கள்)
நிறுவனம் : gnanidhwani.com (part of Gnani Innovations Private Limited), பெங்களூரு, இந்தியா
அதிசயமான ஒரு கண்டுபிடிப்பின் டெமோவைப் பார்த்தபின் சொன்னேன் இப்படி:
“இந்த நல்ல கண்டுபிடிப்பிற்கு நாடு முழுவதும் அந்தந்த மொழி பேசுவோரிடம் நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக இந்திய மொழிகளில் ஃபாண்ட் பற்றிப் பல்வேறு சங்கடங்கள் உள்ளன. இப்படி பேசுவதை எழுத்து வடிவத்தில் மாற்றுவது பல புதிய பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறது.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!”.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Prof P Sankara Narayana had done a marvellous job 100 years ago by bringing out an English – Tamil Etymological dictionary. He had already brought out English -Telugu dictionary as well. Probably he is the only one who had done two huge dictionaries in two languages.
Here etymology means the etymology of English words unlike the Dravidian Etymological Dictionary of Burrow and Emeneau which gives etymology of Tamil words.
But P Sankaranarayana’s work is huge with over 1300 pages priced only three rupees in 1911. That was the enlarged second edition. From his titles we know that he worked for the Presidency College in Madras. Like Mughal Emperor Akbar’s Din- Ilahi , P Sankaranaraya had his own religion called ‘Religion of Truth’. His book list includes his pet theme Religion of Truth. I could not find his profile in any website. Gregory James in his History of Dictionaries mentioned one P.Sankaranarayana Chettiar.
Probably he is a forgotten Chettiyar scholar and not much known lexicographer.
Let us salute him for his marvellous works.
I found the old dictionary in the British Library in London.
Please see the attached picture and some pages from the dictionary.
tags — lexicographer, English- Tamil, etymological, Dictionary, P Sankaranarayana, Chettiyar
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பரி பாடல் என்னும் நூல், சங்க இலக்கியத்தி ல் எட் டுத் தொகையில் ஒரு நூல் ஆகும் . அதில் நாலாவது பாடல் கடுவன் இளவெயினனார் பாடியது. அவர் திருமாலைப் புகழ்கையில் சொல்கிறார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
உன்னைத் தழுவியே உள்ளன என்று திருமாலை (விஷ்ணுவை)ப் போற்றுகிறார் . அதாவது எல்லாம் ‘இறைவன் படைப்பு, எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்’ என்ற மாபெரும் தத்துவம் , வேதத்தில் உள்ளதை போல இந்தப் பாடலிலும் காணப்படுகிறது
இவ்வாறு இயற்கைச் சக்திகளின் உருவத்தில் இறைவனைக் காண்பதை உலகின் மிகப்பழைய சமய நூலான ரிக் வேதத்தில் தான் முதன்முதலில் காண்கிறோம். ஏனைய சுமேரிய, எகிப்திய கிரேக்க நாகரீகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கை பற்றிய குறிப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆயினும் வேதத்தில் கோர்வையாக இதே வரிசையில் கடவுளைப் போற்றுவதை ரிக் வேதத்தின் 8-29 பாடலில் வருவதை நேற்று இங்கே கொடுத்தேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல்
சங்க இலக்கியத்தில் இல்லாத, திருக்குறளில் இல்லாத, ஒரு புதுமையை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பரிபாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, இளங்கோ அடிகளும் ரிக் வேதத்தைப் பின்பற்றுகிறார். ரிக் வேதம் 8-29 பாடலைப் போல சந்திரனை முதலில் வாழ்த்துகிறார்.. ரிக் வேதம் 8-29ல் இந்திரன்/மழை , மித்ரன்/சூரியன், வருணன்/கடல் நீர் ஆகியனவும் போற்றப்படுகின்றன. இளங்கோ அதை அப்படியே, கொஞ்சம் வரிசை மாற்றிப், பாடுகிறார். அவ்வளவுதான். வேதங்களையும், பிராமணர்களையும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இளங்கோ அடிகள், வானளாவப் புகழ்வதையும் பார்க்கிறோம். (சிலப்பதிகாரம் பிராமண காவியமா? என்ற எனது ஆராய்ச் சிக் கட்டுரையை இதே பிளாக்கில் படியுங்கள்; முழு விவரமும் தந்துள்ளேன் )
மங்கல வாழ்த்துப் பாடல் tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், இந்திரன் (மழை ), ஊர் (நிலம்/பூமாதேவி) என்ற வரிசையில் போற்றுதல் வருகிறது
ஆக மொத்தத்தில் இப்படி இயற்கைச் சக்திகளை போற்றும் வழக்கம் ரிக் வேதத்தில் துவங்கி, கிட்டத்தட்ட அதே வரிசையில், சிலம்பு வரை வருகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே வேத மரபு என்பது தெளிவாகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
கீழ்கண்ட பத்து கடவுளர் அல்லது ரிஷிக்கள் ரிக் வேதம் 8-29ல் வருகிறது.
மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களிலும் திங்கள்/சோமன் , ஞாயிறு/மித்திரன், மழை /இந்திரன் என்பன பொதுவாக உள்ளதைக் காணலாம்.. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சங்க இலக்கியத்திலும் மநு நீதி நூலிலும் அரசர்களின் ஆற்றலை விளக்கும்போதும் இதே வருணனையைக் காணலாம்..
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு மார்பகங்கள், ஏழு கண்கள் – ஒரு புதிர் பாடல்!
ச.நாகராஜன்
மதுரகவிராயரின் பல பாடல்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் பார்த்து விட்டோம்.
இன்னும் ஒரு பாடல் இது.
புதுமையான புதிர் பாடல் இது.
துரைரங்கன் என்னும் ஒரு பிரபுவின் மீது அவர் பாடிய இந்தப் பாடலில் அவரை, பாடலில் உள்ள புதுமையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார் கவிராயர் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
பாடல் இதோ:
துங்கவரை மார்பா துரைரங்க பூபதியே
இங்கோர் புதுமை யியம்பக் கேள் – பங்கயக்கை
ஆயிழைக்கு நான்குநு தலைந்துகுழை யாறுமுலை
மாயவிழி யேழா மதி
பாடலின் பொருள் :
துங்கம் – பரிசுத்தமாகிய
வரை – மலை போன்ற
மார்பா – மார்பினை உடையவனே
துரைரங்க பூபதியே – துரைரங்கன் என்னும் பூபதியே
இங்கு – இவ்விடத்தில்
ஓர் புதுமை இயம்பக் கேள் – ஒரு புதிய செய்தி உண்டு; அதைச் சொல்கிறேன்; கேட்பாயாக (அது என்னவெனில்)
பங்கயக் கை – தாமரை மலர் போன்ற கைகளை உடைய
ஆயிழைக்கு – அழகிய பெண்ணுக்கு
நான்கு நுதல் – நான்கு நெற்றிகள்
ஐந்து குழை – காதணி ஐந்து tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆறு முலை – மார்பங்கள் ஆறு
மாய விழி ஏழாம் – வஞ்சமுள்ள (மயக்கும்) கண்கள் ஏழு
மதி – தேர்ந்து நீயே ஆலோசித்து இதை அறிவாயாக!
பாடலின் பொருளை துரைரங்க பூபதி அறிந்து கொண்டு மதுரகவி ராயருக்குப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
லட்சம் புதிர்கள் – 8 கட்டுரை எண் 7387 வெளியான தேதி 27-12-2019
லட்சம் புதிர்கள், விடுகதைகள், மாயாஜால மாஜிக்குகள், புதிர்க் கணக்குகள்! – 9 (91 முதல் 100 முடிய)
ச.நாகராஜன்
At the Inn
Three travellers arrived tired and hungry at a lonely inn. The innkeeper apologized and said he could only offer them a meal of potatoes. When he brought in the dish all the men were asleep. After a while one of the three woke up, ate a third of the potatoes and went back to sleep. Soon afterwards another woke up, ate a third of the potatoes that remained, and promptly fell asleep again. Then the third man did likewise. When the innkeeper came back he found that eight potatoes were left. How many had he put on the dish?
The Gambler Who Lost
The gambler had lost all his money. He had a gold chain of seven links which his opponent agreed to value at $ 1 per link. The play proceeded at $ 1 per game and the debts were settled after each. The gambler lost each time, as his opponent expected. What was the least number of links that had to cut?
Well Played, SIR!
The vicar saved the game for his side and scored forty runs, thereby raising his batting average for the season from twenty seven to twenty eight. How many runs would he have required to bring his average up to thirty?
Grandsons Galore
Grandpa Govind whose age was somewhere between fifty and seventy five, was fond of telling his friends :” Each of my sons has as many sons as brothers and the combined number of my sons and grandsons is precisely the same as the number of my years.” How old was Govind and how many grandsons had he?
A Tale of Two Motor-cars
Murugan always reckoned to average 40 m.p.h. on long journeys; his friend Kesav could average 20 m.p.h in his old car. They set out together with their wives along the same road and Murugan said he would turn back after 45 miles and then they would picnic together when they met. How long did the run take?
6) I will put a Girdle round the Earth
Assume that the earth is a perfect sphere with a smooth surface and that a wire is stretched round it at the equator. If the wire were cut and six feet added to its length, so that it formed a ring equidistant from the equator at all parts, what would be the distance between the wire and the earth?
Choose Your Goblet
One of seven goblets, A to G, standing in a row is made of solid gold; the others are of base metal. The competitors are told that if they count 1000 starting at A (thus: A, B,C, D, E,F, G,F,E,D and so on) they will finish at the prize. The winner chose the right goblet without counting. What was his choice?
How is your Geometry?
Where on earth could you find a triangle of which each angle is 90 degree?
Answer will sooth your nerve!
Construct two lines at right angles, then a circle, two semi-circles on the same line, a triangle with two sides produced, three quarters of a circle repeated once, and a circle. Place these seven figures in a row. The answer will soothe your nerve!
At what time are the hands of the clock pointing in exactly opposite
Directions, each towards a minute division line?
Answers:
27 Potatoes
Only one : the third
66 runs
Govind was 64 and he had 56 grandsons
An hour and a half.
Very nearly a foot
He chose D
With its vertex at either the North Pole or the South Pole