சரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு

beautiful saraswati

Written by S Nagarajan
Post No.1160 ; Dated:- 9th July 2014.

This is the sixth part of S Nagarajan’ article on the Puranas. First five parts were published in the past few days.

சரஸ்வதியைத் துதிக்கும் ஸ்தோத்ரங்கள் / ஸ்துதிகள் ஏராளமாகப் புராணங்களிலும் இதர நூல்களிலும் உள்ளன. அவை எங்கே உள்ளன என்பதைக் கீழே காணலாம்

அஷ்வதரக்ருத ஸ்துதி – மார்கண்டேய புராணம் (க்ருத என்றால் இயற்றிய என்று பொருள்)

மார்கண்டேயக்ருத ஸ்துதி – வாமன புராணம் (மார்கண்டேய க்ருத என்றால் மார்கண்டேயரால் இயற்றப்பட்ட- அல்லது துதிக்கப்பட்ட -ஸ்துதி என்று பொருள்)

நவரதக்ருத ஸ்துதி – கூர்ம புராணம்
வசிஷ்டக்ருத ஸ்துதி – வாமன புராணம்
யாக்ஞவல்க்யக்ருத ஸ்துதி – ப்ரம்ம வைவர்த புராணம்
விஷ்வவிஜய கவசம் – ப்ரம்ம வைவர்த புராணம்
சரஸ்வதி அஷ்டகம் – பத்ம புராணம்
இது தவிர கீழே தரப்பட்டுள்ளவையும் சரஸ்வதி ஸ்துதிகளாக அமைந்துள்ளன.
ப்ருஹஸ்பதிக்ருத சரஸ்வதி ஸ்தோத்ரம்
சரஸ்வதி ரஹஸ்யோபனிஷத்
சரஸ்வதி ஸ்தோத்ரம் – சாரதா திலகம்
வாகாம்ருணீ சூக்தம் – ரிக் வேதம்
மங்கணத்ரருஷிக்ருத ஸ்துதி – மஹாபாரதம்
வசிஷ்டக்ருத ஸ்துதி – மஹாபாரதம்

வாஹனம்!
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாஹனம் உண்டு.யார் யாருக்கு எது வாஹனம் என்பதைப் பல புராணங்கள் தெரிவிக்கின்றன,
விஷ்ணு பகவானின் வாஹனம் கருடன் – மத்ஸ்ய புராணம்
சிவனின் வாஹனம் நந்தி – சிவ புராணம்
இந்திரனின் வாஹனம் ஐராவதம் யானை – நாரதீய புராணம், வாயு
புராணம்
சூரியனின் வாஹனம் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் – மத்ஸ்ய புராணம்
துர்க்கையின் வாஹனம் சிம்மம் – சிவ புராணம் யமராஜனின் வாஹனம் எருமை – நாரதீய புராணம், பால ராமாயணம்
சரஸ்வதியின் வாஹனம் ஹம்ஸம் – மார்க்கண்டேய புராணம்

லக்ஷ்மியின் வாஹனம் அன்ன பட்சி – உலூக தந்த்ரம்
முருகனின் வாஹனம் மயில்
கணேசனின் வாஹனம் மூஞ்சூரு
கங்கையின் வாஹனம் மகரமீன்
kuthirai vahan,tkoshtiyur

தேவியின் கண்கள்

தராந்தோளித தீர்காக்ஷீ
லலிதா சஹஸ்ரநாமத்தில் 601வது நாமமாக வருவது இது.
இதன் பொருள் : கொஞ்சம் சஞ்சலமானதும் (காது வரையில்) நீண்டதுமான கண்களை உடையவள்

ப்ரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் –
601வது நாமம்
இதன் பொருளை விவரிக்கையில் விரிவுரை கூறுவது:

தரமென்றால் பயம் என்று பொருள். பயத்தைச் சஞ்சலம் அடையச் செய்யும் அதாவது பயத்தைப் போக்கும் நீண்ட கண்கள் என்று இதற்கு அர்த்தம் சொல்லலாம். அதாவது தேவியின் திரு கடாட்சம் பட்டாலேயே போதும் பயமானது நாசமடையும் என்பது தாத்பரியம்.
அம்பாளுடைய நேத்ரங்களின் அழகைப் பற்றி ’சௌந்தர்ய லஹரி’யில் பதினோரு ஸ்லோகங்களில் ஆதி சங்கரர், அழகாக வர்ணித்திருக்கிறார்.

பாரத தேசத்தின் பெருமை

பாரத தேசத்தின் பெருமையை நாராயணர் கூறுவதாக தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் 11வது அத்தியாயத்தில் வருவது இப்பகுதி.

“இந்த பாரதவர்ஷத்திலிருக்கும் மனிதர்கள் என்ன புண்ணியம் செய்ததனாலோ விஷ்ணு பகவான் தானே அவர்களுக்குப் பிரசன்னராய் தரிசனம் கொடுக்கின்றார். இப்புண்ணிய சீலர்களைப் போல் விஷ்ணு பகவானுடைய சேவைக்கு உபயோகமான மானிட சரீரத்தையாவது அந்த பாரத வர்ஷத்தில் எடுப்பதற்கு ஆசைப்படுகிறேன். எது யாகம் முதலியவற்றால் சாதிப்பதற்கு அருமையாக இருக்கின்றதோ அது அந்த பகவானை உச்சரிப்பதனாலேயே உண்டாகின்றது. அவரது பாதங்களை உச்சரித்தால் யாருக்குத் தான் பாவ நாசம் உண்டாவதில்லை!

akand bharat 1

ஏனைய தேசங்களில் கற்பகால பரியந்தம் ஆயுள் அடைந்திருப்பதைக் காட்டிலும் இந்த பாரத வருஷத்தில் க்ஷண காலம் ஜீவதசையோடு இருப்பது மிக உயர்ந்தது.”

– நாராயணர் நாரத முனிவருக்கு உரைத்தது – தேவி பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் 11வது அத்தியாயம்.

To be continued

Swami_48@yahoo.com

Picture are taken from face book;thanks.

Miracles of Asvins in the Vedas

ashwini_kumars_tales_f

Written by London Swaminathan
Post No. 1159;Dated 8th July 2014.

Miracles are part of mythology. But in Hinduism we come across miracles even in the Vedas. Western scholars take the Vedic statements as true historical records and use them to support their fanciful Aryan-Dravidian Race Theory. The Vedic twins Asvini Devas are attributed with lot of miracles. The “scholars” expounded (in fact bluffed) lot of theories. If one puts them together and read them, they will be utterly confused. But orthodox Hindus believed them with all the traditional faith in the Vedas.

Asvins are called Dasras (enlightened giving) and Nasatyas (kind & helpful); also known as horsemen, Asvinau, Aswinikumaras.

They are the sons of Vivaswan and Saranyu. They are the doctors of the gods (Svar Vaidhyau).
They healed the blind and the lame. They are invoked in various Hindu ceremonies. They ride in three wheeled chariots drawn by horses or birds.

They are the harbingers of dawn – Ushas. Their other appellations are ‘ocean born’(Abdhijau), ‘wreathed with lotuses’(Pushkara srajau), sons of the submarine fire (Badaveyau) and Gadagadau.
Western scholars compared Asvins with the Dioscuri of Greece. But not many similarities exist between them.
In the Nirukta, they are interpreted as heaven and earth, day and night, two kings, performers of holy acts. They represent light or luminous objects.

asvins book

The number of hymns (57 specific hymns and mentioned 376 times in the Rig Veda) addressed to them testifies to the enthusiastic worship they received.
In the Mahabharata they are the parents of Nakula and Sahadeva. Like Asvins, they are also twins.
The Vedic poets use beautiful similes in their hymns. They praise Asvin twins
Like two hymn singing Brahmanas
Like two charioted heroes
Like two beautiful damsels beautifying themselves
Like a wise married couple
Like two Chakravaka birds/ swans
Like two lips that speak sweetly with the mouth
Like two breasts that give nurture to life

sukanya

Miracle 1
The twins Asvins restored youth to old Chyavana. He had a beautiful young wife named Sukanya. When Asvins wanted to marry her, she hesitated. Asvins told her that they would make her husband young and then she can choose one among them i.e. two Asvins and Chyavana. When all the three came before her, she rightly chose her husband Chyavana.

Miracle 2
Bhujyu episode is mentioned at least in eight hymns in the Rig Veda. Bhujyu was the son of king Tugra. When enemies from an island gave him trouble, Tugra sent Bhujyu by boats to attack them. His boat was broke in the mid sea. Then Asvins saved him, according to Sayana (RV1.117-14). Bhujyu’s ship had 100 oars. This serves as an evidence for naval forces during the Vedic period.

Miracle 3
In Khela’s battle a leg was severed like a wild bird’s pinion. Immediately Asvins gave Vispala an artificial iron leg. This shows that artificial limbs were fixed in those days (1-116-15).
Poetess Gosha has a hymn on Asvins. (RV 10-40).This serves as an evidence for literate women in Vedic society. Gritsamada’s hymn (RV 2-39) to Asvins is a beautiful poem:–

dioscouri
Dioscouri of Greece and Rome

Come near like two press stones, with a common aim
Like two zealous men moving to a tree of treasure
Like two hymn singing Brahmanas to the assembly
Like two people’s envoys called at many places.

Like two charioted heroes going in the morning
Like two leaders, come together to your choice,
Like two beautiful damsels beautifying themselves
Like a wise married couple among the people.

Like two horns come earliest to us hither
Like two hoofs, travelling with rapid motion
Like two Chakravaka birds/ swans at the day’s dawning
Come towards us, mighty, like charioted heroes.

Like two boats take us across; like two poles
Like axles, like spokes, like fellies carry us.
Like two dogs ward off all harm to our bodies
Like two crutches protect us against falling.

Like two raging winds, two confluent rivers.
Like two quick seeing eyes, come towards us
The two hands most useful to the body
Like two feet take us towards our welfare – RV 2-39

This shows Rig Vedic people are highly literate and cultured. We also hear about the ship attacks, maritime warfare etc. Medical science has advanced to transplanting an iron leg. Women poets (poetess) sang hymns and were part of the Vedic society.

Contact swami_48@yahoo.com

புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்?

buddhacelestial

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1158; தேதி:- 8 ஜூலை 2014.

இந்துமதம் ஒரு சமுத்திரம். அதில் கலக்கும் நதிகள் நாம, ரூப, தேயங்ளை இழந்து ஒன்றாகி அதில் கலந்து விடும். புத்த மதம், சமண, சீக்கிய மதங்கள் ஆகியன இந்து மதத்தின் கிளைகள். அதாவது மறு பிறப்பு, பாவம், புண்ணியம், கர்மவினை முதலிய பல கொள்கைகளில் ஒன்றுபட்டு நிற்பவை. ஆகையால் முதலில் இருந்த நிலை மாறி மீண்டும் இந்துக்களின் எல்லா சடங்குகளையும் செய்துவருவதை இன்றும் காணலாம். இந்துமதத்தில் பெரிதும் போற்றப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவர். அதாவது இந்துவாகப் பிறந்து, புத்த மதத்தை ஸ்தாபித்துவிட்டு மீண்டும் இந்துமதத்தில் ஒடுங்கிவிட்டவர். இது எப்படி, எப்போது, ஏன் நிகழ்ந்தது? என்பதே என் ஆவுக் கட்டுரையின் நோக்கம்.

புத்தர், இந்துமதத்தில் உள்ள எல்லாக் கொள்கைகளயும் ஏற்றுக் கொண்டவர். ஆனால் யாக யக்ஞங்களில் உயிர்ப்பலி கொடுப்பதை எதிர்த்தவர். அர்த்தமே இல்லாமல் வெறும் சடங்கு போல உயிர்வதை நிகழ்ந்தபோது எதிர்த்துக் குரல் கொடுத்தவர். ஆனால் அந்த மதம் பிறந்த இந்தியத் திருநாட்டிலும், பரவிய நாடுகளிலும் அவர் கொள்கை தோற்றுப்போனது. எல்லோரும் பாம்பு, மான் மாமிசம், தேள் எல்லாவற்றையும் விரும்பிச் சாப்பிடுவதை டெலிவிஷனில் பார்க்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். புத்த பிட்சுக்கள், அரசியலில் கொடி பிடித்து ஆட்டம் போடுவதையும் படிக்கிறோம்.

bommai krishnan, fb

விஷ்ணுவின் 24 அவதாரங்கள்
எவ்வெப்பொழுது எல்லாம் விஷ்ணு தனது பக்தரின் குறை தீர்க்க பூமிக்கு இறங்கி வந்தாரோ அவ்வப்பொழுது எல்லாம் அவதாரம் என்று கணக்கு– அவதாரம் என்றால் — “இறங்கி வருதல்”— என்று பொருள்.

பாகவதத்தில் 22 அவதாரங்களைச் சொல்லிவிட்டு ஆங்காங்கே வேறு பல அவதாரங்களும் காட்டப் படுகின்றன. சீக்கிய மதத்தின் குரு கோவிந்த சிங் எழுதிய தசம கிரந்தத்தில் 24 அவதாரங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்தப் பட்டியலுக்கும் பாகவதப் புராணப் பட்டியலுக்கும் சில வேறு பாடுகள் உண்டு. பாகவதப் பட்டியலில் புத்தரும் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகச் சேர்க்கப்பட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்வது போல “ இந்துமதத்தில் உள்ள சில கருத்துக்களை சரியான கண்ணோட்டத்தில் காட்ட வந்தவர் புத்தர். அவர் எதையும் அழிக்க வரவில்லை. பூரண நிலையை தோற்றுவிக்க வந்தவர்” என்பது மிகவும் சரி. புத்தருக்கு முன்னால், மஹாவீரர், அவருக்கு முந்திய தீர்த்தங்கரர்கள் ஆகியோரும் புரட்சிகர கருத்துக்களைத் தெரிவித்தனர்.

may sri ram bless you

வேதத்தில் அவதாரங்கள்
அவதாரக் கொள்கை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே உள்ளது. ‘’ஓங்கி உலகளந்த உத்தமன்’’ வாமனன் பற்றிய குறிப்பு ரிக் வேதத்தில் இருக்கிறது. மூவடிகளால் தாவிய துதியை சாயனர் என்னும் உரைச் சக்ரவர்த்தி ‘வாமன அவதாரம்’ என்றே சொல்கிறார். வராக, மச்ச, கூர்மம் போன்ற வேறு அவதாரங்கள் சதபத பிராமணத்திலும் தைத்திரீய சம்ஹிதையிலும் வந்துவிடுகின்றன.
உலகில் எல்லாப் பழைய கலாசாரங்களிலும் காணப்படும் பிரளயம் பற்றிய கதை இந்தியாவில் இருந்தே உலகம் முழுதும் சென்றது. ஏனெனில் இந்தியக் கதைகளில் மட்டுமே முழு விவரங்களும் உள்ளன. மேலும் இந்திய புராணங்கள் அந்தக் கதை இந்திய மண்ணிலேயே நிகழ்ந்ததாகத் தெளிவாகக் குறிப்பிடும். ஏனையவை ஈரெட்டாகப் பேசுகின்றன. ரிக் வேதத்தில் குறிப்பிடப் படும் மனு, மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக மத்ஸ்யாவதார கதையைச் சொல்வதாக நான் கருதுகிறேன்.

1200 ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி எல்லா சம்ப்ரதாய பஜனைகளிலும் பாடப்படும் பாடல்கள் ஆகும் — (நாங்கள் லண்டனில் மாதம்தோறும் நடத்தும் சம்பிரதாய பஜனையில் அஷ்டபதி பாடுகிறோம்) — அதில் பத்து அவதாரங்களையும் பட்டியலிடும் பாடலும் புத்தரைக் குறிப்பிடும் பாடலும் உண்டு. அவர் பாடல் எழுதிய காலத்தில் புத்தமதம் உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தது. அவருடைய அஷ்டபதி பாடல், புத்தமதத்துக்கு இந்தியாவில் இறுதி மணி அடித்தது. அத்தோடு புத்தர் இந்துமதத்தில் கலந்து ஜீரணிக்கப்பட்டார்.

avatars6only

புத்தமதம் ‘திருடிய’ கொள்கை
அவதாரக் கொள்கை வேத, இதிஹாச, புராணத்தில் இருந்தது. அதை புத்த மதத்தினர் பயன்படுத்தினர். இந்துமத, பஞ்சதந்திரக் கதைகளை எல்லாம் எடுத்து அவை அனைத்தும் போதிசத்வரின் (புத்தரின்) பூர்வஜன்மம் என்று சொல்லி கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கதைகள் எட்டுக் கட்டினர். சுமார் 600 கதைகள் ‘’ஜாதகக் கதைகள்’’ என்ற தொகுப்பாக வெளிவந்தது. அவர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்துக்கள் பாகவத புராணத்தில் திருப்பிச் செய்தனர்!!! புத்தரே எங்கள் அவதாரம்தான் என்று ஒரு போடு போட்டனர். பௌத்த மதத்தின் கதை முடிந்து போனது!!

24 அவதாரங்கள்
பாகவத புராணம் என்பது குப்தர் காலத்தில் –(3,4 ஆம் நூற்றாண்டு) –இப்போதைய வடிவை எட்டியது. அதில் உள்ள அவதாரப் பட்டியல்:

1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப (இவர் 24 சமண தீர்த்தங்கரர்களில் ஒருவராக இருக்கக்கூடும்) 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ராம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).
இதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும்.
தசம கிரந்த (குருகோவிந்தர்) பட்டியலில், பிரம்மா, ருத்ரர், சூரியர், சந்திரர், மனு, சேஷசாயி, ஜலந்தர முதலிய புதுமுகங்கள் காணப்படுவர். வேறு சில பழைய அவதாரங்கள் விடுபட்டு இருக்கும்.

avatars10

புத்தர் மதித்த ஹிந்துமதம்
தனது மதம் ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று புத்தர் முதலில் நினைத்தார். ஆனால் அவரது பிரதம சீடன் ஆனந்தன், புத்த பிட்சுணிகளாக பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று அடம்பிடித்தவுடன், “ஐயய்யோ என் மதம் 500 ஆண்டு மட்டுமே இருக்கும்” என்று வருத்தப்பட்டார் (காண்க தத்துவப் பேராசிரியர், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய தம்மபத முன்னுரை ). ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகர் யுவாங் சுவாங் எழுதிய யாத்திரைக் குறிப்புகள், தமிழ்நாட்டை ஆண்ட மாபெரும் பல்லவ மன்னன் மஹேந்திர பல்லவன் எழுதிய மத்தவிலாசப் பிரஹசன நாடகம் ஆகியவற்றில் புத்தமதம் சீரழிந்த காட்சிகளைக் காணலாம். நிற்க.

புத்தரும் அவர் வழி வந்த அசோகனும் பிராமணர்களைக்கு அடுத்தபடியகவே எப்போதும் சிரமணர்களைக் குறிப்பிட்டனர். புத்தர் இந்திரனையும் பிராமணர்களையும் புகழ்கிறார் (காண்க எனது முந்தைய கட்டுரை: பரிமேலழகர் உரையில் தவறு). தம்மபதத்தில் ஒரு அத்தியாயமே பிராமணர்களுக்கு ஒதுக்கி இருக்கிறார். ஆக, புத்தர் இந்துமதத்தை ‘’மிதிக்க’’ வந்தவர் என்று வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் தவறு. அவர் இந்துமதத்தை ‘’மதிக்க’’ எழுந்தவர். அவரது போதனைகள் அனைத்தும் அற்புதமானவை. பின்னால் வந்த ஒழுக்கமற்ற சீடர்கள் அம்மதம் வீழ்ச்சியுறக் காரணம் ஆயினர். அவர் சம்ஸ்கிருதத்தைக் கைவிட்டு பாலி மொழியில் பேசியது பெரிய தவறு என்று சுவாமி விவேகாநந்தர் கூறியிருப்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துவிட்டேன். (சுருக்கமாகச் சொன்னால் வருடம்தோறும் ஆயிரக் கணக்கான ‘’திருடர்கள்’’ கருப்பு வேட்டி கட்டி ஐயப்பன் வேஷம் போடும் நிலையை, பழங்கால புத்தமத சீடர்களுக்கு ஒப்பிடலாம். இது எல்லா ஐயப்ப பக்தர்களையும் குறிப்பது ஆகாது!!!)

–சுபம்–

காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

gayatri matha

Written by S Nagarajan
Post No.1157; Dated:- 8h July 2014.

This is the fifth part of S Nagarajan’ article on the Puranas. First four parts were published in the past few days:swami.

தேவி பாகவதம் 12ஆம் ஸ்கந்தத்தில் காயத்திரி ஸ்தோத்ரம் வருகிறது. அதைச் சொல்வதால் ஏற்படும் பயனை நாராயணர் நாரதருக்கு ஸ்தோத்திரத்தின் முடிவில் இப்படிக்
கூறுகிறார்.

“ ஓ, மஹாதேவீ! ஓ ஈஸ்வரியே! ஓ, சந்தி ஸ்வரூபிணீ! உன்னை நமஸ்கரிக்கிறேன்” என்று எவன் சந்தியாகாலத்தில் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்கின்றானோ அவனுக்கு
அளவில்லாத புண்ணியம் கிடைக்கும்.

மஹா பாபத்தைப் போக்கும்.

மஹா சித்தியைக் கொடுக்கும்.

புத்திரன் இல்லாதவனுக்கு புத்திரனையும், செல்வம் இல்லாதவனுக்கு செல்வத்தையும், சகல தீர்த்த ஸ்நான பலத்தையும், தவம், யக்ஞம், யாகம் ஆகியவற்றின் பலனையும் வேண்டியவர்க்கு வேண்டிய பலனையும் கொடுக்கும்.

போக மோக்ஷங்களை வேண்டியவர்க்கு இம்மையில் போகத்தையும், அந்திய காலத்தில் மோக்ஷத்தையும் அடையும்படி செய்யும்.

இத்துதியை எந்தெந்த ஸ்நான காலங்களில் எவன் படித்து எந்த ஜலத்தில் ஸ்நானம் செய்த போதிலும் சந்தியா காலத்தில் ஸ்நானம் செய்த பலனை அடைவான்.

இதில் சந்தேகம் கிடையாது. ஓ! நாரதரே! இது அமிர்த வாக்கியமாகும்.
இது சத்தியம்! சத்தியம்!!

– 12ஆம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்

periyava-rudraksha
Kanchi Shankaracharya with Rudrakshas.

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

நாயாய் இருந்தாலும் கழுத்தில் ருத்ராக்ஷம் தரிக்கப் பெறுமானால் அதுவும் முக்தி அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறபோது, மானிடனுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஒருவன் ஜபம் மற்றும் தியானம் இல்லாதவனாய் ருத்ராக்ஷம் மட்டுமே தரிப்பவனாகி இருப்பின் அவன் கூட சர்வ பாவங்களிலிலிருந்தும் விடுபட்டவனாகி மேலான கதியை அடைகிறான். ஆதலால் ஒருவன் முயற்சி மேற்கொண்டு ஒரு ருத்ராக்ஷத்தையாவது தரிக்க வேண்டும். அப்படித் தரிக்கிறவன் 21 தலைமுறைகளை உய்வித்து சிவலோகத்தில் பூஜிக்கப்பட்டவனாக இருப்பான்.

ஈஸ்வரர் ஷண்முகனுக்கு உரைப்பது – தேவி பாகவதம் 11ஆம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்

goddess-madurai-meenakshi-picture

மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

தன் முகத்தினுடைய சௌந்தர்ய ப்ரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள்

வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா

இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தில் 18வது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள்.

மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும். அவைகளைத் தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்று சொல்வதுண்டு.அதே போல தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி என்று சொல்வது வழக்கம். அதே அர்த்தத்தைத் தரும் மீனாபலோசனா என்ற பெயர் இங்கு குறிப்பிடப்படுகிறது,

ப்ரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 18வது நாமம்

To be continued………………………

When did Buddha become an Avatar of Vishnu? How& Why?

avatars10

Research paper written by London Swaminathan
Post No.1156; Dated 7th July 2014.

How many Avatars of Vishnu are narrated so far?
There are twenty two + Avatars (incarnations) of Vishnu in the Bhagavatha Purana. Sikh’s Dasam Granth written by Guru Gobind Singh has listed 24 Avatars of Lord Vishnu.

But Bhagavatha Purana says his incarnations are innumerable. Whenever Vishnu comes down in some form to help a devotee, it is considered an Avatar. But later Puranas made Ten Avatars more popular and grouped them under Dasavatar. The strange thing about this list is suddenly Buddha’s name was inserted as an avatar of Vishnu!! In short Buddha was Hinduized or reconverted to Hinduism!!

Who did this? Why?
First of all Buddha was born as a Hindu and never said anything against Hinduism. He never contradicted anything, but complemented to Hindu philosophy. He devoted one full chapter for Brahmins in his Dhammapada. Wherever possible he praised them (E.g.Indra). From Buddha to Asoka all the scriptures ranked Brahmana first and Sramana second. But Buddha was against sacrificing animals in the Yagas. That was where he differed from orthodox Hinduism. But he was not the only one. Even before the Buddha, Mahavira and his predecessors were preaching different ideologies.

buddhacelestial

After Buddha’s death some fanatics started “Buddhasizing” everything. The entire ancient Hindu stories from proto Panchatantra folklore, Ramayana and Mahabharata to Puranas were converted as stories of Buddha’s previous Avatar. Six hundred such stories were collected as Jataka Tales. In short they “stole the Avatar concept” from the Hindus and converted all the characters as Bodhisatvas. Bhagavatha Purana of the Gupta period included the Buddha in the Avatar list. Then came a clever man among the Hindus by name Jayadeva (1200 CE), the author of Gita Govindam, who gave a final blow to the already dying Buddhism, by including Buddha as an avatar of Lord Vishnu in his Gita Govindam. Nobody bothered or objected to it. Hindus can digest anything that comes their way. They digested all the invading western tribes. In the same way Buddhism was also absorbed by including the Buddha in the list of Ten Greta Avatars.

Jayadeva’s hymns known as astapathis included Buddha in the following sloka:
“O you merciful heart denounced the Veda where the slaughter of cattle was taught. O Kesava, you in the form of the Buddha, victory to you, Hari, the lord of the world”.
The commentator also said the Buddha did not condemn the whole Veda but only the part of it which supported sacrifices.
bommai krishnan, fb

In the next verse Jayadeva listed all the ten incarnations of Vishnu :-
“Who upheld the Vedas , supported the universe,
Bore up the world, destroyed the demons, deceived Bali,
Broke the force of the Kshatriyas, conquered Ravana , made the plough, spread mercy, who took the ten forms. Prevailed over aliens, Homage. O Krishna”.

Philosopher Dr S Radhakrishnan said, “ Buddha utilized the Hindu inheritance to correct some of its expressions. He came to fulfil, not to destroy.”
Buddhism took different forms in different countries. Some of them went against the main teachings of Buddhism such as non violence, vegetarianism, ascetic life etc. but in India it has entered in to and become an integral part of our culture.

22. Shankaracharya VEDVYASA
Veda Vyasa: Vyasaya Vishnu Rupaya, Vyasa Rupaya Vishnave.

Vedic Origin of Avatars

Story of deluge is found in all ancient cultures. It must have originated in India, because Rig Veda, the oldest scripture in the world, has it’s seed (Manu and Matsya Sammata were mentioned in the Veda). More over all the epics, Puranas and other scriptures described the deluge in detail. Hindu scriptures clearly located it in the Indian sub continent, whereas other cultural references are a bit vague and less detailed.
Avatara means a descent. God is coming down to earth from the heaven. The three steps of Lord Vishnu (Vamana Avatara) is mentioned in the Rig Veda. Sayana, the most famous Vedic commentator, interpreted it as three steps of Vishnu as Vamana. It is one of the Ten Avatars.

In the Taiittiriya Samhita and the Satapatha Brahmana, Varaha (Boar) avatara is mentioned. But Prajapathi’s name was there instead of Vishnu.

Kurma Avatara was mentioned in the Sathapatha Brahmana. Again Prajapathi’s name replaced Vishnu. Satapatha Brahmana mentioned the fish/ matsya avatara as well.
Narasimha’s avatara of man lion, Parasurama’s (Rama with axe) incarnation, Rama and Krishna , followed by the Buddha are featured as Dasavatar in later literature. Last Avatar Kalki is yet to come.
may sri ram bless you

Bhagavatham mentioned the following 22:

1)Purusha, the male progenitor or Four Sons of Brahma 2)Varaha, the boar 3)Narada, the great sage 4)Nara and Narayana 5)Kapila, a sage 6)Dattatreya, a sage 7)Yajna, sacrifice 8)Rishaba, a righteous king, father of Bharata (may be the first Tirthankara of Jains) 9)Prithu, a king 10)Matsya, the fish 11)Kurma, a tortoise 12) Dhanvantri, the physician of the Gods.13) Mohini 14)Nara-simha, the man lion 15)Vamana, the dwarf 16)Parasurama 17)Veda Vyasa 18)Rama 19)Balarama 20)Krishna 21)Buddha 22)Kalki
Hamsa (swan) and Hayagriva (horse faced) avatars also mentioned elsewhere.

avatars6only

Dasamagranth gave a slightly different list with 24 avatars by adding, Brahma, Rudra, Manu, sun, moon, Seshasayi, and Jalandhara by replacing a few. But all the main ten Avatars are there.
So the inclusion of the Buddha in the avatar list was a tactical move to neutralise the effect of Buddhism. They were paid back in their own coin!

Contact swami_48@yahoo.com

அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் !!

800px-Mute_swan_Vrhnika

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1155; தேதி:– ஜூலை 7, 2014.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?

பெரிய ஞானிகளை பரம ஹம்ச — (பெருமைமிகு அன்னம்)— என்று அழைப்பது ஏன்?

அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?

பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?

அதிசயச் செய்தி ஒன்று

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)

பொருள்:– கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

Translation:– Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.
Whooper_Swan

அதிசயச் செய்தி இரண்டு

பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–

ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்

–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.

ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.

‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.

swans

அதிசயச் செய்தி மூன்று

இன்னொரு விளக்கமும் சொல்லலாம்:–
அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.

அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம்!! விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.

வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.

ramakrishna
Sri Ramakrishna Paramahamsar

வேதத்தில் அன்னப் பறவைகள்

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன:–

ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc) கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.

இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).

சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)
மாங்குடிக் கிழாரும் சூரியனை நோக்கிப் பறக்கும் அன்னப்பறவை பற்றிச் சொல்கிறார் — (மதுரைக் காஞ்சி 385-386)

“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி”
ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69
இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!!!

அதிசயச் செய்தி நான்கு

மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.
அன்னச் சேவல் அன்னச் சேவல்

……………………
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)

நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த
இலங்குமென் தூவி செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)

காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.
எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)
படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.

yogananda
Sri Paramahamsa Yogananda.

அதிசயச் செய்தி ஐந்து
ராமாயணத்தில் ஒரு கதை

ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?

ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்:–

வர்ணோ மனோரம: சௌப்ய சந்த்ரமண்டல சந்நிப:
பவிஷ்யதி தவோதக்ர: சுத்தனேண சமப்ரப: — 7-18-29

ஹம்சானாம் ஹி புரா ராம ந வர்ண: சர்வ பாண்டுர:
பக்ஷா நீலாக்ர சம்வீதா: க்ரோடா: சஸ்பாக்ர நிர்மலா: – 7-18-31

இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.

ஆகவே அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!!

-சுபம்-

பாகவத மஹிமை

blue krish

Written by S Nagarajan
Post No.1154; Dated:- 7th July 2014.

This is the fourth part of S Nagarajan’ article on the Puranas. First three parts were published in the past few days.

எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை. இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். இந்தக் கதையை ஒரு தடவையாவது கேளாதவனுடைய ஜன்மம் பயனற்றதே. இந்தக் கதையைக் கேட்கும்படியான பாக்கியம் கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால் தான் கிடைக்கும்.

நாரத முனிவரிடம் ஸனகாதிகள் கூறும் இந்தப் பகுதி பத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் பாகவத மாஹாத்மியத்தில் இடம் பெறுகிறது..

GoddessAmbika_21479

அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?

“அனந்த த்ரிதியை விரதம், ரசகல்யாணி விரதம், ஆனந்தத்தை விளைவிக்கின்ற ஆருத்ரா விரதம், மங்கள வார விரதம், சுக்கிர வார விரதம், கிருஷ்ண பக்ஷ சதுர்தசி விரதம்,பிரதோஷ விரதம், புரட்டாசி மாதத்திலும் சித்திரை மாதத்திலும் வருகிற நவராத்ரி விரதம் ஆகியவற்றைப் புருஷர்களும் ஸ்தீரிகளும் பிரயத்தனத்தோடு அனுஷ்டிக்க வேண்டும். இவை போலவே சோமவார விரதமும் எனக்குப் ப்ரீதியானது.”

இனி ரசகல்யாணி விரதமானது அந்தந்த திரிதியையோடு கூடிய தினம்.

ஆருத்ரா விரதமாவது ஆருத்ரா நக்ஷத்திரத்தில் திரிதியையோடு கூடிய தினம். பிரதோஷ விரதமாவது – மஹாதேவன் தேவியை அந்திப் பொழுதில் உன்னதமான ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்து சகல தேவர்களும் தன்னைச் சூழ்ந்திருக்க அந்த அம்பிகை எதிரில் நடம் புரிவன். அந்த அந்திப் பொழுதே பிரதோஷ காலம் எனப்படும். அக்காலத்தில் ஆகாராதிகளை விட்டு மஹாதேவியைப் பூஜிக்க வேண்டும்..
பர்வத ராஜனிடம் தேவி கூறியது.

– தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 39ஆம் அத்தியாயமான தேவீ பூஜா விதி என்னும் அத்தியாயத்தில் வருவது

மூன்று ஈஷணைகள்!

ஈஷணைகள் மூன்று.
1) தாரேஷணை
2) தனேஷணை
3) புத்ரேஷணை

(தாரேஷணை என்றால் மனைவியின் மீது ஆசை. தனேஷணை என்றால் பணத்தின் மீது ஆசை. புத்ரேஷணை என்றால் மகன் மீது ஆசை)
இந்த மூன்று ஆசைகளையும் திருதராஷ்டிரன் விட்டு விடுவான் என்று அவன் முடிவு பற்றி நாரதர் தர்மபுத்திரருக்கு உரைத்தது.
(ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயம்)

blessings from parents

கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!

ராமர் வில்லை முறித்த சம்பவம் பிரசித்தமானது. கிருஷ்ணரும் வில்லை முறித்திருக்கிறார். அதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுவது இது:-

அச்சுதன் வில் வைத்திருக்கும் இடம் எது என்று பட்டணத்து ஜனங்களை வினவிக் கொண்டு வில் வைத்திருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு இந்திர தனுசு போல அற்புதமாக இருக்கின்ற வில்லைக் கண்டான். அதைப் பல மனிதர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். மற்றும் அது பூஜிக்கப்பட்டு ஸ்வர்ணா லங்காரத்துடன் பல மேன்மைகள் அமைந்ததாய் இருந்தது. அப்போது அதைப் பாதுகாப்போர் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று தடுத்த போதும் ஸ்ரீ கிருஷ்ணன் அதைப் பொருட்படுத்தாமல் பலாத்காரமாக அந்த வில்லை எடுத்துக் கொண்டான். திரிவிக்கிரமாவதாரம் செய்த மஹாபுருஷனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் அந்த வில்லை ஒரு நிமிடத்தில் இடக்கையால் அவலீலையாக எடுத்து நாணேற்றி ஜனங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் யானை கரும்புத்தடியை முறிப்பது போல இழுத்து இடையில் முறித்தான். அப்போது முறிகின்ற அந்த தனுஸின் ஒலி அந்தரிக்ஷ லோகத்தையும் பூமி ஆகியவைகளையும் நிறைத்து விட்டது. கம்ஸன் பயம் அடைந்தான்.

ஸ்ரீமத் பாகவதம் தசம ஸ்கந்தம் – பூர்வ பாகம் – 42ஆம் அத்தியாயம்

To be continued…………

Mystery about Swan: Can it separate Milk from Water?

swans
Why Saints are called Paramahamsa?

Research paper written by London Swaminathan
Post No.1153; Dated 6th July 2014.

From the days of the Rig Veda and Chandogya Upanishad, swan is always associated with the bright sun and saints.

All the water birds close to swan are grouped under the Anatidae family. Hindu mythology understood the unity pervading the family. Their approach was very scientific when they dealt with swans, geese and ducks.

Hamsa Gayatri
Om Hamsaaya Vidmahe
Paramahamsaaya Dhimahi
Tanno Hamsha Pracodayaat

“May we realise Hamsa that is our own Self as Swan. Let us meditate on that Paramahamsa, the Supreme Self. May Hamsa illumine us.”

This one of the several popular Gayatri mantras.

Great saints are called Parama hamsa. It means Supreme Swan. We have great saints like Ramakrishna Paramahamsa (1836-1856) and Paramahamsa Yogananda (1893-1952) within the last two hundred years. Sadasiva Brahmendra composed short and sweet kritis in Sanskrit and had the ‘mudra’/signature “paramahmasa” in all his compositions.

When it used in the context of great Yogis (ascetics) it does not mean the bird Swan (Hamsa in Sanskrit). It is the combination of two words Aham + Sa= Hamsa. I am He. It is the essence of Advaita philosophy. God and Man are one at the highest level. All the famous Upanishads have this philosophy: Aham Brahmasmi/ I am Brahman, Tat Tvam Asi/ You are That etc.

When saints who are well versed in the Yogic techniques breathe in and out it sounds ‘Ham…… Sa…… ‘Ham…… Sa….’ leading to Soham+ He is I.

Chandogya Upanishad (4-7) included an instruction (advice) from a swan. Dattatreya learnt something good from everything in nature including a bird. Hindus used everything in nature for the spiritual advancement of man.

Is it true that swans can separate milk from water and drink only milk?
Another meaning at a different level:-

Hamsa is the vehicle of God Brahma and his consort Sarasvati. All are white in colour symbolising purity and knowledge. Hamsa is associated with Holy Ganges and holy lake Manasa Sarovar. It is one of the purest birds. Hamsa Gayatri confers the power of discretion on the person who recites it. Like that Hamsa separates the good things from the bad things, Water birds separate good water from the bad water. It has got a sieve like structure (lamellae) in its mouth which separates water from mud. Probably this is what lead to the belief that Swans can separate milk from water and drink only milk. In Sanskrit Ksheera means milk and pure water.

Whooper_Swan

Hamsa in the Vedas

Hamsa in the RIg Veda (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;;AV 6-12-1 etc) and later literature denotes the bird gander. These birds are described as dark in colour on the back( RV 7-59-7), they fly in troops ((RV 3-8-9), swim in the water (RV 1-65-5), make loud noises (3-53-10), and are wakeful at night (AV 6-12-1) according to Vedic Index.

The Hamsa is credited with the power of separating Soma from water (as later milk from water) in the Yajur Veda (Kataka, Maitrayani, Vajasneyi Samhitas and Taitriya Brahmana).
The soma plant when crushed exudes the juice with a hissing sound. This is compared to the hissing of a swan when disturbed on the water (RV 1-65-5)

The Asvins are invited to the soma sacrifice like a pair of swans hastening to the water (RV 5-78-1).
It is also sacrificed in the Asvamedha Yajna along with two hundred other animals, birds, plants and other grains.

800px-Mute_swan_Vrhnika

Sun and Paramahmsa
The sun and the spiritually elevated man are compared with the wise swan in the Shivapurana (2-15-10).
The Mute Swans are known to go about in pairs and they are greatly devoted to each other. Even Buddhacharita of Asvagosha mentioned this in the context of appealing to Gautam Siddhartha to come back to his wife.
Ramayana described swan as god Varuna’s bird (7-18-28)

Nala Damayanti and Swan
The golden coloured swan (whooper) caught by Nala was mentioned in the Mahabharata (3-54-19). The bird promised to plead Nala’s cause with Damayanti and was thereupon released. He flew with his party to her place and allowed himself to be caught by her and then performed his mission.

rishi

Hamsavatara
One of the incarnations/Avatars of Lord Vishnu is Hamsavatar in the form of a swan. Apart from Dasavatar (ten incarnations) we have 11 more Avatars.

Kalidasa & Sangam Tamil Literature
I have already written about the Bird Migration in Kalidasa and Sangam Literature.
Kalidasa referred to the strange habit of swan ‘separating milk from water’ in Sakuntalam drama (Act 6-33). A Gatha Sapta Sati poet copied it. Naladiyar in Tamil also copied Kalidasa.
Paranar, a Brahmin poet of Sangam period used lot of similes from Kalidasa along with his colleague Kabilar. Paranar in his poem– Natrinai 356 — sang about a swan flying to the golden peaked Himalayas after feeding itself with fishes in the Southern Seas. Pisiranthaiyar said the same thing in Purananuru verse 67. All these are just echo Kalidasa’s poems.
ramakrishna

Kalidasa’s Raghuvamsa and Meghaduta have got too many references to water birds such as swan and cranes, geese and ducks.

Pillows were stuffed with the feathers of swan in ancient India.

A woman’s gait is compared to the gait of a swan in Tamil (Aka.279) and Sanskrit literature.

The swans are remarkable for their stately flight very high in the sky and they seem to approach the sun, says Mankudi Kizar of Madurai Kanchi (385-38).

Different types of swans such as Raja Hamsa, Kala Hamsa, Maththa Hamsa, Maha Hamsa, Kshuta Hamsa and Kadamba Hamsa are found in Sanskrit literature.

yogananda

Ramayana and Mahabharata have interesting stories about swans. One of them is about the white colour of the swan (7-18-29/31). Varuna avoided Ravana by transforming himself to a swan and later gave a boon to the bird for his help and made him permanently white! Since Brahma has it as his Vahana the bird is also called Surapriya (Friend of the Devas). Swan is always associated with glory, purity, affection, love, majesty and divinity!!

Contact swami_48@yahoo.com

லலிதா ஸஹஸ்ர நாம மஹிமை

Sri-Lalitha-Sahasranama-Stotram-Leaflet-Tamil-

Written by S Nagarajan
Post No.1150; Dated 5th July 2014.

This is the third part of S Nagarajan’ article on the Puranas. First two parts were published in the past two days.

ரஹஸ்யங்களுக்கெல்லாம் ரஹஸ்யமானதும், லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொடுப்பதுமான இதற்குச் சமமான ஸ்தோத்திரம் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை.

இந்த ஸ்தோத்திரமானது சகல வியாதிகளையும் தீர்த்து விடும்.. சர்வ ஸம்பத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். சகல விதமான அகால மிருத்யுவையும் அடக்கி விடும். கால கிரமத்தில் ஏற்படக்கூடிய மரணத்தையும் நீக்கி விடும்.

சகல விதமான ஜ்வரங்களால் ஏற்படும் கஷ்டங்களை நீக்கி விடும். தீர்க்கமான ஆயுளைக் கொடுக்கும்.பிள்ளையில்லாத வர்களுக்கு புத்ர ஸம்பத்தைக் கொடுக்கும். புருஷார்த்தத்தையும் கொடுக்கும்.

மேலே கூறிய அர்த்தத்தைத் தரும் மூன்று ஸ்லோகங்கள் வருமாறு:-

ரஹஸ்யானாம் ரஹஸ்யம் ச
ல்லிதாப்ரீதி தாயகம் I
அனேன ஸத்ருஸம் ஸ்தோத்ரம்
ந பூதம் ந பவிஷ்யதி II

ஸர்வரோக ப்ரசமனம்
ஸர்வ ஸம்பத் ப்ரவர்தனம் I
ஸர்வபாப ம்ருத்யுசமனம்
காலம்ருத்யு நிவாரணம் II

ஸர்வ ஜ்வரார்த்திசமனம்
தீர்க்காயுஷ்ய ப்ரதாயகம் I
புத்ரப்ரதம் அபுத்ராணாம்
புருஷார்த்த ப்ரதாயகம் II

த்யானம், ஜபம் முதலான அநேக ரஹஸ்யங்களோடு கூடிய இந்த ஆயிரம் நாமங்கள் லலிதாம்பிகைக்கு ப்ரீதியைக் கொfடுப்பவை. நிகழ்காலம் இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களுக்கும் மிஞ்சிய இதற்கு சமமான ஸ்தோத்ரம் வேறொன்றுமில்லை

அறிய முடியாதென்று கை விடப்பட்ட அஸாத்யம்,அயாப்யம் என்ற பேதங்களை உடைய வியாதிகளையும் கூட இது போக்கடிக்கும். ரோகம் என்பதற்கு நிகரான வறுமையையும் போக்கும். திடீரென ஏற்படும் அபமிருத்யுவை இது விலக்கும். காலத்தினால் ஏற்படும் மரணத்தையும் இது போக்கும்.

ஒரு நாளைய ஜ்வரம் முதல் ஸன்னிபாத ஜ்வரம் வரை அனைத்தும் அகலும். சதாயுஸ் எனப்படும் நூறு வயதை இது அருளும். புத்திர செல்வம் இல்லாதவர்களுக்கு புத்ர செல்வம் தரும். புத்திமான்களால் விரும்பப்படும் முக்தியையும் இது அருளும்.
-ப்ரம்மாண்ட புராணத்தில்

லலிதோபாக்யானத்தில் ஹயக்ரீவர்- அகஸ்த்ய ஸம்வாதத்தில் வரும் ஸ்லோகங்கள்

Lalitha-sahasra-nama-stotram_img_0

அர்க்யம் விடுவது எதற்காக?

அர்க்கிய ஜலத்தை எடுத்து ஒருவர் எதற்காக விடுகின்றாரோ அதற்கான காரணமும் சொல்லுகிறேன். கேட்பீராக!

மஹாவீர்ர்களாயும் நன்றி மறந்தவர்களாகவும், பயங்கரர்களாயும் இருக்கின்ற முப்பது கோடி மந்தேஹா என்னும் ராட்ஸசர்கள் சூரியனை விழுங்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் இச்சையைக் கெடுப்பதற்குத் தேவ கூட்டங்களும் ரிஷிகளும் சந்தியை உபாசித்து உதக அஞ்சலியாக அர்க்கியத்தை விடுகிறார்கள். விட்டவுடன் அந்த அர்க்கிய ஜலம் வஜ்ர உருவம் கொண்டு அந்த ராட்ஸசர்களைக் கொளுத்துகின்றது. இது தான் அதற்குக் காரணம்.
-நாரதரிடம் நாராயணர் கூறுவது.

– தேவி பாகவதத்தில் பதினொன்றாம் ஸ்கந்தத்தில் பதினாறாவது அத்தியாயமான சந்தியோபாசனம் என்னும் அத்தியாயத்தில் வருவது

sri-lalita-sahasranama-arch_1

சுபாஸ்ரயம் எது?
சுபாஸ்ரயம் எது? இதற்கான விடையை பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் காணலாம்.

எந்த உருவத்தைச் சிந்திக்கும் போது மனமானது ராகம் முதலிய தோஷங்களால் வரும் கலக்கமின்றித் தெளிவு பெறுமோ, அத்தகையதும் தனக்கு மேற்பட்ட ஒன்று இல்லாததும் ஆகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் உருவமே சுபாஸ்ரயம் எனப்படும்.

To be continued………………

வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

sukadeva
சுகதேவர் படம்

Written by S Nagarajan

Post No 1147; Dated 4th July 2014.

This is second part from “Honey Drops from the Hindu Puranas”- e book published by nilacharal; First part was published yesterday.

ஸரஸ்வதி என்னும் பெயருடைய ப்ரஹ்ம நதியின் மேல் கரையில் சம்யாப்ராஸமென்று பிரசித்தமானது வியாஸருடைய ஆசிரமம். அங்கு ரிஷிகள் ஓயாமல் யாகங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இலந்தை மரங்களின் வரிசைகளால் அலங்காரமுற்ற அந்தத் தனது ஆசிரமத்தில் வியாஸர் ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்து மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் அடக்கித் தன்னிலையில் இருக்கச் செய்தார்.

சூதர் சௌனகரிடம் வியாஸ ஆசிரமத்தைப் பற்றிக் கூறியது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

வியாஸ மா முனிவர் சம்சாரத்தில் விளையும் அனர்த்தமாகிய தாபத்ரயத்தைப் போக்கும் உபாயம் பகவானிடத்தில் செய்யப்படும் பக்தி யோகமே என்பதை அறியாமல் வருந்தும் உலகத்திற்கு நன்மையை விளைவிக்கும் பொருட்டு ஸாத்வத ஸம்ஹிதை எனப்படுகின்ற இந்த பாகவத மஹா புராணத்தைச் செய்தார்.

சூதர் சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக் கூறும் போது தெரிவித்தது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

vyasa & madhva வியாசரும் மத்வரும்

வேதாங்கம் ஆறு

1)சிக்ஷா 2)கல்பம் 3)நிருத்தம் 4)வ்யாகரணம் 5)ஜ்யோதிஷம் 6) சந்தம் என வேதாங்கம் ஆறு வகைப்படும்.
கிருஷ்ண பக்ஷத்தில் வேதாங்கத்தைப் படிக்க வேண்டும்.
-கூர்ம புராணம், மனு ஸ்மிருதி

சௌனகரிடம் பாகவதம் உருவான விதத்தைப் பற்றிக்
கூறும் போது தெரிவித்தது
பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம் 7

வேதங்களின் புரோகிதர்கள்

ரிக் வேதம் – ஹோதா
யஜுர் வேதம் – அத்வர்யு
சாம வேதம் – உத்காதா
அதர்வ வேதம் – ப்ரஹ்மா

ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரஹ்மா என இப்படி நான்கு முக்கிய ரூபங்களில் யக்ஞங்களை நிர்வகிப்பவர்கள் உள்ளனர்.

-பத்ம புராணம்

Shiksha
ஏழு சிரஞ்சீவிகள்

அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:

அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது என்பது நமது நம்பிக்கை)

-பத்ம புராணம்

ருணங்கள் மூன்று

ரிஷி ருணம் 2) தேவ ருணம் 3) பிதிர் ருணம் என ருணங்கள் மூன்று வகைப்படும் (ருணம் என்றால் கடன் என்று பொருள் படும்)
பிரம்மசர்யத்தை அநுஷ்டிப்பதால் ரிஷிகளும், யக்ஞகர்மங்களைச் செய்வதால் தேவர்களும், புத்திரர்களைப் பெறுவதால் பிதிருக்களும் திருப்தி அடைகின்றனர். இந்த மூன்று கடன்களையும் செலுத்திய பின்னரே ஒருவர் வானப்ரஸ்த ஆசிரமத்தை மேற்கொள்ள வேண்டும்.
– சிவ புராணம், மனு ஸ்மிருதி
rishi3

ப்ராண (நடைப்) பிணம் யார்?

உயிரோடிருந்தும் பிணம் யார்? இதற்கு விடையை பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் காணலாம்.

பரீட்சித்து மன்னன் சுகரிடம் என்ன வினவினான் என்று சௌனக முனிவர் ஸூதரிடம் வினவும் போது அவர் கூறியது கீழ்க்கண்ட வார்த்தைகள்:

“நாள்தோறும் பிராணிகளின் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கின்றது. அதில் பகவானுடைய குணங்களைச் சொல்லிக் கொண்டு கழித்த காலம் தவிர மற்றவை எல்லாம் வீணே!
க்ஷணமாயினும் பகவானுடைய குண கீர்த்தனத்துடன் கழியுமாயின் அதுவே சபலமாகும். அது வீணன்று!
‘ஜீவித்திருத்தலே ஆயுளுக்குப் பயன் ஆகட்டுமே’ என்றால் சொல்லுகிறேன், கேளும்.

மரங்கள் ஜீவிக்கவில்லையா?
அவற்றிற்கு மூச்சில்லையே என்கிறீரா?
கருமானுடைய தோல் துருத்திகளும் மூச்சு விடுகின்றன!
அவற்றிற்கு ஆகாராதிகள் இல்லையே என்கிறீரா?

கிராமத்திலுள்ள நான்கு கால் ஜந்துக்களும் மற்றவைகளும் ஆகாரத்தைத் தின்பதில்லையா? புணர்ச்சியில் ஈடுபடுவதில்லையா?

ஒரு காலும் பகவானுடைய நாமம் எவன் காதில் விழவில்லையோ அவன் கிராமத்தில் திரியும் நாய், பன்றி, கழுதை இவைகளுடன் ஒத்த ஒரு மிருகமே (நான்கு கால் மிருகமே) ஆவான்.
திரிவிக்கிரம அவதாரம் செய்து உலகங்களை எல்லாம் தனது பாதாரவிந்தங்களால் ஸ்பர்சித்த பகவானுடைய பராக்ரம சரித்திரங்களைக் கேளாத காதுகள் காதுகளே அல்ல! வீண் பாழிகளே!
பெரியோர்களால் ஓயாமல் பாடப்படும் குணங்களை உடைய பகவானுடைய பாடல்களைப் பாடாத நாக்கும் இருந்தும் இல்லாதது போலத் தான்! தவளையின் நாக்கைப் போலப் பயனற்றதே!

போக மோட்சங்களைக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பூஜிக்காத கைகள் பொன் வளைகளை அணிந்திருப்பினும் பிணத்தின் கைகளே!

விஷ்ணுவின் திவ்விய மங்கள விக்ரஹங்களைக் காணாத கண்கள் மயில் கண்களே!

ஸ்ரீரங்கம் முதலிய ஸ்ரீவிஷ்ணுவின் திவ்விய க்ஷேத்திரங்களுக்கு நடந்து செல்லாத மனிதர்களின் பாதங்கள் மர ஜென்மம் பெற்றவைகளே (மரத்தின் வேர்களோடு ஒத்தவைகளே)

பகவானிடம் பக்தியுடைய பெரியோர்களின் பாததூளியை ஒருக்காலும் விரும்பாத மனிதனும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதாரவிந்தங்களில் படிந்த துளஸியின் வாசனையை முகர்ந்து சந்தோஷம் அடையாத மனிதனும் பிராணனோடு இருக்கும் பிணங்களே!

பகவானுடைய நாமங்களைக் கேட்டும் மொழிந்தும் அவை நெஞ்சில் படப்பெற்று மனத்தில் கலக்கமும் முகத்தில் மலர்ச்சியும் கண்ணில் ஆனந்தக் கண்ணீரும் உடம்பில் மயிர்க்கூச்சலும் எவன் உண்டாகப் பெறாதிருப்பானோ அவனுடைய இதயம் இரும்பினால் செய்யப்பட்டதே!

பகவானுடைய நாமங்களைக் கேட்டு மனதில் அன்பு உண்டாகப் பெறுவான் ஆயின் அவனுக்கு முகமலர்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் மயிர்க்கூச்சலும் உண்டாகும்.”

To be continued…………………….