எனக்கு கூட்டம் சேருவது எப்படி? (Post No.5678)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 November 2018

GMT Time uploaded in London –11-17 am
Post No. 5678

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஜெர்மானிய தத்துவ அறிஞர் Frederich Schleilermarcher  பிரெடெரிக் ஸ்லைச்மார்ஷெர். அவரிடம் ஒருவர் உங்கள் கூட்டங்களுக்கு நிறைய கூட்டம் வருகிறதே. அது எப்படி? (சாதாரணமாக தத்துவம் போன்ற விஷயங்களை விவாதிக்கும் கூட்டங்களில் அதிக ஆட்கள் வர மாட்டார்கள்.)

அவர் சொன்னார்,

நான் தேர்வுகள் போர்டில் (BOARD OF EXAMINERS) அங்கத்தினர். இதை மனதிற் கொண்டு மாணவர்கள் என்னை மொய்க்கின்றனர். ஆங்கே வரும் மாணவ , மாணவிகளை ஒருவர் ஒருவர் கண்டு மோஹிக்க ( ‘சைட்’ அடிக்க) இரு பாலரும் வருவர். அங்கே வரும்

இளம் பெண்களைக் காண துருப்புகள் (படை வீரர்) வருகின்றனர்!

(எல்லோரும் ஒரு விஷயத்தை எதிர் பார்த்து வருகின்றனரே அன்றி தத்துவத்துக்காக வரவில்லை என்பதை அழகுபட விளக்கினார்).

xxxxx

அமெரிக்க நகைச்சுவை

ஆர்டிமஸ் வார்ட் என்ற பிரபல பேச்சாளரை ஒரு சங்கத்தில் பேச அழைத்தனர் அவருக்கு ‘அமெரிக்க மக்களின் நகைச்சுவை ரசனை’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தனர். அந்த சங்கத்தின் தலைவர் ‘மைக்’-கைப் பிடித்தார். பேச்சாளரை அறிமுகம் செய்து வரவேற்பதற்குப் பதிலாக, அமெரிக்க   மக்களின் நகைச் சுவை பற்றி தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எடுத்துரைத்து தனது மேதாவிலாஸத்தை காட்டினார்.

முக்கியப் பேச்சாளரின் நேரம் வந்தது. அப்போது ஆர்டிமஸ் சொன்னார்

அன்பர்களே! நண்பர்களே!

எனக்குக் கொடுத்த தலைப்பில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சங்கத் தலைவரே செப்பி விட்டார். நான் சொல்வதற்கு எதுவும் மிச்சம் வைக்கவில்லை. ஆகையால் நான் ‘’இந்திய உணவு வகைகள்’’ பற்றி உரையாற்றுவேன் என்று உணவு வகைகள் பற்றிப் பேசி முடித்தார்.

xxxx

மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு

மார்க் ட்வைன் என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர், கதாசிரியர், நகைச் சுவை மன்னனை, சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள அவருடைய நண்பர்கள் ஒரு முறை பேச அழைத்தனர்.

‘ஐயா, என்னை விட்டு விடுங்கள்; நான் எழுத்தாளனேயன்றி பேச்சாளன் அல்ல’ என்று மன்றாடினார். அதுவும்  இது அவரது படைப்புகளின் ஆரம்ப காலத்தில் நடந்தது.

‘இல்லை, கவலையே படாதீர்கள்; ஹவாய் தீவில் நான் கண்ட அதிசயங்கள் என்று தலைப்பு கொடுக்கிறோம்; சுவையான

விஷயங்களைச் சொல்லுங்களேன் என்றனர்.

அது மட்டுமல்ல; நாங்கள் ஆங்காங்கே நமது ரஸிகர்  பட்டாள ஆட்களை உட்கார வைத்துள்ளோம் அவர்கள் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ‘ஜோக்’குக்கும் பயங்கர கைதட்டல் கொடுத்து உங்களை ஊக்குவிப்பர் என்றனர்

‘சரியப்பா! நான் சொல்லும் ஜோக் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பலமாகச் சிரிக்கச் சொல்லுங்கள். அது போதும்’ என்றார் மார்க் ட்வைன் (அவரது உண்மைப் பெயர் ஸாமுவேல் க்ளெமென்ஸ்).

ஒருவாறாக கூட்டத்தில் கூலிப் பட்டாளம் கைதட்டவும் சிரிக்கவும் தயாராக வைக்கப்பட்ட நிலையில் மார்க் ட்வைன் மேடைக்கு வநதார். இது அவரது கன்னிப்[ பேச்சு என்பதால் கை, கால் உதறத் தொடங்கியது. ஆள் மயக்கம் போட்டு விழுந்து விடுவாரோ என்று கூட்ட ஒருங்கிணப்பாளர்கள் தீயணைக்கும்படை போல தயார் நிலையில் நின்றனர். அவர் ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு தன்னை சுதாரித்துக் கொண்டார்.

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா– என்று பாரதியார் பாடிய ஸ்டைலில் மார்க்கும் சொன்னார்

எனக்கு முன்னே ஜூலியஸ் ஸீஸர் இருந்தான்; செத்தான்

ஷேக்ஸ்பியர்  இருந்தான்; செத்தான்

நெப்போலியன் இருந்தான்; செத்தான்

ஆப்ரஹாம் லிங்கன்  இருந்தான்; செத்தான்

நானும் அவர்கள் நிலைக்கு நெருக்கமாகத்தான் உள்ளேன்-

இப்படித் துவங்கியவுடன் கூட்டத்தில் உண்மையாகவே கரகோஷம் எழுந்து விண்ணைப் பிளந்தது.

அந்த ஊக்குவிப்பில் மார்க், விட்டு விளாசினார். கூட்டம் முடிந்தபோது எல்லோரும் வயிறு வெடிக்கச் சிரித்து ‘ஐயோ, அம்மா, அப்பாடா– சிரித்துச் சிரித்து வயிறு எல்லாம் புண் ஆகிவிட்டதே’ என்று கஷ்டப்பட்டுக்கொண்டே எழுந்தனர். அது மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு எனப் பெயர் எடுத்தது.

TAGS–மார்க் ட்வைன், அமெரிக்க நகைச்சுவை, கூட்டம் சேருவது 

–சுபம்–

பிள்ளையார் பாட்டைக் கண்டுபிடியுங்கள்! (Post No.5677)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 November 2018

GMT Time uploaded in London –8-21 am
Post No. 5677

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு இந்தக் கட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்டு பிடித்து தினமும் படித்தால் நிறைய பணம் கிடைக்குமாம். லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டு என்று அவ்வையாரே பாடலில் சொல்கிறார்.

ம் டா ண் மா ன் நு
சா ர் வா ர் யா
னி நோ க் கு கை ங்
மே கு க் ரா க் கா
ரு ல் னம் ள் பி து
தி பா ம் ம் ப்
பூ க் கொ ண் டு து பு
ப் பா ல் ர்

 

 

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:–

வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்

நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது; — பூக்கொண்டு

துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

TAGS–அவ்வையார், பிள்ளையார் பாட்டு,  

வாக்கு உண்டாம்

  —   சுபம் —

 

ஷேக்ஸ்பியர் ஃபெயிலான கதை! (Post No.5676)

Written by S Nagarajan

Date: 19 November 2018

GMT Time uploaded in London –7-32 am
Post No. 5676

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரில் ஃபெயிலான கதை!

ச.நாகராஜன்

1

ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியர் பற்றிய பரிட்சையில் ஃபெயிலான கதை உங்களுக்குத் தெரியுமா?

இதை கை போஸ் (Guy Boas) என்பவர் 1926ஆம் ஆண்டு ‘Lays of Learning’ என்று ஒரு  கவிதையாகவே எழுதி விட்டார்!

I dreamt last night that Shakespeare’s Ghost

Sat for a civil service post.

The English paper for that year

Had several questions on King Lear

Which Shakespeare answered very badly

Because he hadn’t read his Bradley

ஆமாம், ஷேக்ஸ்பியர் பற்றி பரிட்சை எழுதப் போன ஷேக்ஸ்பியர் ப்ராட்லியின் நோட்ஸைப் படிக்க மறந்து போனார். ஆகவே பரிட்சையில் ஃபெயிலாகி விட்டாராம்!

யார் இந்த ப்ராட்லி? சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதென்றால் இவர் நம்ம ஊர் கோனார் நோட்ஸ் (KONAR TAMIL NOTES) எழுதி மாணவர்களைக் கவர்ந்தாரே, அந்தக் கோனார் போல! கம்பன், வள்ளுவன், இளங்கோ என்ன சொல்லி இருக்கிறார் என்பதை கம்பன் சொல்லி இருப்பதை விடக் கோனார் சொன்னால் தான் நம்புவோமே, அந்தக் காலத்தில்! அது போல, ப்ராட்லி ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். அவர் ஷேக்ஸ்பியர் அதாரிடி!

ஏ.சி. ப்ராட்லி (Andrew Cecil Bradley  பிறப்பு 26-3-1851 மறைவு 2-9-1935) இலக்கிய ஆர்வலர்; அறிஞர்! சார்லஸ் ப்ராட்லி என்பவருக்குப் பிறந்த 21 குழந்தைகளில் கடைக்குட்டி. லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் பணியாற்றியவர். அவர் ஷேக்ஸ்பியர் பற்றி ஏராளமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். Shaekespearen Tragedy (1904), Oxford Lectures on Poetry  என்ற அவரது இரு நூல்கள் இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் நூல்கள்!

2

ஷேக்ஸ்பியர் தனது வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அதை இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து அதில் எத்தனை சொற்கள் உள்ளன என்பது வரை சொல்லி விட்டார்கள்.

அந்த ஆய்வின் படி ஷேக்ஸ்பியர் குறைந்த சொற்களாக 14,701 சொற்களை எழுதிப் படைத்த படைப்பு Comedy of Errors. அதிகப்படியாக 30,557 சொற்களைப் பயன்படுத்தி எழுதிய பெரிய படைப்பு -Hamlet. அவர் பயன்படுத்திய மொத்தச் சொற்கள் 8,35,997!

Shakespeare’s plays,

listed by number of words

Total words in all plays: 835,997

Total plays: 37

Average per play: 22,595

Note: A “speech” consists of either words spoken by a character, or a stage direction —

anything from a one-word shout to a long soliloquy.

Words        Play      Genre

30,557      Hamlet

Tragedy

29,278      Richard III

History

27,589      Coriolanus

Tragedy

27,565      Cymbeline

Tragedy

26,450      Othello

Tragedy

26,145      King Lear

Tragedy

26,119      Henry V

History

26,089      Troilus and Cressida

Tragedy

25,689      Henry IV, Part II

History

25,439      Henry VI, Part II

History

24,914      Winter’s Tale

Comedy

24,905      Antony and Cleopatra

Tragedy

24,629      Henry VIII

History

24,579      Henry IV, Part I

History

24,545          Romeo and Juliet

Tragedy

24,294      Henry VI, Part III

History

23,009      All’s Well That Ends Well

Comedy

22,423      Richard II

History

21,845      Merry Wives of Windsor

Comedy

21,780      Measure for Measure

Comedy

21,690      As You Like It

Comedy

21,607      Henry VI, Part I

History

21,459      Love’s Labour’s Lost

Comedy

21,291      Merchant of Venice

Comedy

21,157      Much Ado about Nothing

Comedy

21,055      Taming of the Shrew

Comedy

20,772      King John

History

20,743      Titus Andronicus

Tragedy

19,837      Twelfth Night

Comedy

19,703      Julius Caesar

Tragedy

18,529      Pericles

History

18,216      Timon of Athens

Tragedy

17,129      Two Gentlemen of Verona

Comedy

17,121      Macbeth

Tragedy

16,633      Tempest

Comedy

16,511       Midsummer Night’s Dream

Comedy

 

14,701        Comedy of Errors                       Comedy

இந்த 8,35,997 சொற்களில் புரியாத சொற்கள் பத்தே பத்து தான்!

அந்தச் சொற்கள் :

  1. ARMGAUNT (Antony & Cleopatra, I.V)
  2. BALK’D (Henry IV : Part 1, I.I)
  3. BRAID (All’s Well That Ends Well, IV.II)
  4. COCI-A-HOOP (Romeo & Juliet, I.V)
  5. DEMURING (Antony & Cleopatra IV.XV)
  6. EFTEST (Much Ado About Nothing, IV.II)
  7. GLASSY (Measure For Measure, II.II)
  8. IMPETICOS (Twelfth Night, II.III)
  9. PORTAGE (Pericles, III.I)
  10. WATCH-CASE (Henry IV:Part 2, III.I)

ஷேக்ஸ்பியர் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்து இன்னொரு கட்டுரையில் காண்போம்!

tags–

ஷேக்ஸ்பியர்,

ஏ.சி. ப்ராட்லி, புரியாத சொற்கள்

****

SRI DEVI AND JESHYTA DEVI IN TAMIL VEDA TIRUKKURAL (Post No.5675)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 November 2018

GMT Time uploaded in London –14-34
Post No. 5675

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Jyeshta Devi, picture posted by Lalgudi Veda

Tamil poet Tiruvalluvar was a great Hindu who authored the most famous didactic work Tirukkural, also called Tamil Veda by his contemporary poets. He praised Vishnu, Shiva but condemned Brahma for creating poverty in the world. he said if one has to beg in this world for living, let Brahma go to hell. He praised Shiva for maintaining equanimity and ecorumeven when his friends asked him to drink the poison to save them. he praised Vamanavatar and Gopi Krishna in other couplets (Kural in Tamil). He mentioned the greatness of Go Mata, Vedic Studies, Brahmins, Deva loka, Arita in innumerable couplets. He begins his book with praise of God using Sanskrit words and ending the book again with Sanskrit words. In fact there is no chapter without Sanskrit word. This shows that he treated both the languages as his two eyes.

Scholars in the past 100 years from V R Ramachadra Dikshitar, V V S Iyer, K V Jagannathan, very recently famous historian Dr R Nagaswamy to many more have shown that he borrowed lot from other great books. Having said that all these scholars praised Thiruvalluvar for hs great skill in assembling so much moral sayings in one single book and that too in the briefest couplet format. We have 1330 couplets under 133 headings. No work in any other language can be compared with this marvellous work of the greatest Tamil poet of ancient times. He stands unique in the world of moral literature.

Here in this article I want to show his praise for Sri Devi, i.e Maha Lakshmi, Goddess of Wealth and hiscriticism of her elder sister Mu Devi or Jyeshta in Sanskrit, who is the Goddess of Mis Fortune.

Jyeshta, Goddess of Mis Fortune, bad luck has got her own shrines in several temples in Tamil Nadu. It is strange that Hindus see her as the elder sister of Maha Lakshmi who brings wealth.

Thiru valluvar says,

Goddess of Mis Fortune lives with the indolent and good luck of the Lotus Deity Lakshmi with strenuous strivers- Kural 617

Gambling is the ogress mis fortune. Those who are deluded and swallowed by her, suffer grief, misery and poverty- Kural 936

in both these couplets he used the same word Mukati (Mu Devi, Tamil word for Jyeshta Devi)

In the couplets where he praised Lakshmi, one can interpret it as Lakshmi or Fortune or wealth. But all the ancient commentators take it for Lakshmi.

Another interesting thing is the cognate words in English ,Tamil and Sanskrit for Lakshmi or fortune or prosperity:-

Sri = SIR title in English

Sri=Tiru in Tamil or Seer in Tamil

Sri Dhanam+ Seer or Seedhanam in Tamil

Linguists know very well that

S=T (Eg Sion= Tion)

wherever the tion comes English pronounce it as sion.

More about Jyeshta

The iconography of Jyeshta Deva is itself interesting. Jyeshta  generally means ‘elder’ in Sanskrit. Kashmiris called Shiva Jyeshta Rudra; elder son is called Jyeshta Putra.

Donkey Vahana

Jyeshta, Goddess of Mis fortune, is found in Hindu Puranas. She personifies poverty and is depicted with a  large belly and long nose. She was particularly worshipped in South India. A star—Nakashtra -also named after her (Jyeshta= Kettai in Tamil). This name also has bad connotation in astrology. Jyeshta’s vahana (mount) is ass. She has a banner with crow. In her hands she has arrow, cup, and her other attributes are  blue lotus, staff and hair ornament.

Cicero and Benjamin Franklin

S M Diaz in his English commentary on Tirukkural, adds more information:

The dark elder sister representing misfortune with go with the man of indolence

While the lotus born Lakshmi with reside with the man of industry- Kural/ couplet 617

Cicero is believed to have said somewhere, that Diligence is one virtue that contains in itself all the rest.

Benjamin Franklin said much later, that Diligence is mother of all virtues and certainly of good fortune.

Goddess Lakshmi is praised in couplets 617, 179, 519, 920

As I have mentioned earlier one can interpret the word Thiru as wealth, fortune, prosperity and Lakshmi. We always go by what the ancient interpreters say about it. Ten people wrote commentaries on Tirukkural and only half of them are available now.

Tags:- Jyeshta, Mudevi, Tirukkural, Goddess of mis- fortune

–subham–

கூஜா, குடை, தயிர்சாதம், ஊறுகாய் பயணம் (Post No.5674)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 November 2018

GMT Time uploaded in London –9-43 am
Post No. 5674

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நூறு வருஷங்களுக்கு முன்னால், யாத்திரை போகும் மக்கள், கூஜாவில் தண்ணீர், கையில் குடை, படுக்கை, பெட்டி, கட்டுச் சாதம் , ஊறுகாய், மாவடு, மோர் மிளகாய், கைவிளக்கு முதலியன கொண்டு செல்வர். பின்னர் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என்று காலம் மாறியது. இப்போதோ கிரெடிக் கார்டு அல்லது பணம் + மொபைல் போன் இருந்தால் போதும், மீதி எல்லாம் ஆங்காங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றாகி விட்டது. ஆயினும் அந்தக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் பலருக்கும் ஆவல் உண்டு. குறிப்பாக வரலாற்று நவீனங்களைப் படிப்போருக்கும் யாத்திரை வரலாற்றைப் பயில்வோருக்கும் சுவை தரும் விஷயங்கள் இவை.

அநதக் காலத்தில் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் அருமையாகப் பாடி வைத்த நூல் விவேக சிந்தாமணி. அதில் யாத்திரை பற்றி இரண்டு பாடல்கள் உள. அவற்றைப் படித்துச் சுவைப்போம்.

யாத்திரைக்கு அழகு!

தண்டுல ,மிளகின் றூள் புளியுப்பு

தாளிதம் பதார்த்த மிதேஷ்டம்

தாம்பு நீர் தோற்ற மூன்றுகோலாடை

சக்கிமுக்கி கைராந்தல்

கட்டகங் காண்பான் பூஜை முஸ்தீபு

கழல் குடை யேவல் சிற்றுண்டி

கம்பளி யூசி நூலடைக் காயிலையைக்

கரண்டகங் கண்ட கேற்றங்கி

துண்டமுறிய காகரண்டி நல்லெண்ணெய்

தட்டன் பூட்டுமே கத்தி

சொல்லிய தெல்லாங் குறைவறத்தி ருத்தித்

தொகுத்துப் பற்பலவினு மமைத்துப்

பெண்டுக டுணையோ டெய்து வங்கன்னாயம்ப

பெருநிலை நீர்நிழல் விறகு

பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு

புறப்படல் யாத்திரைக் கழகே.

–விவேக சிந்தாமணி

பொருள்

அரிசி (தண்டுலம்), மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளிதப் பதார்த்தக் கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள் (ஆடை), சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கைராந்தல், அரிவாள், பாதரட்சை (செருப்பு), குடை, வேலையாள், சிற்றுணவு அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டு, கரண்டி, நல்ல எண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகள் எல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பல வகைகளுஞ் சேகரித்து பெண்கள் துணையோடு, சரியான வாகனத்தோடு, பெருத்த நிலையான  நிலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள், தங்குமிடங்கண்டு பிரயாணஞ் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.

Tags– விவேக சிந்தாமணி, யாத்திரை, அழகு

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxxxxx

ஷாலின் ஆலயமும் போதிதர்மர் மர்மமும்! (Post No.5673)

 

picture from wikipedia

Written by S Nagarajan

Date: 18 November 2018

GMT Time uploaded in London –6-55 am
Post No. 5673

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஷாலின் ஆலயமும் போதிதர்மர் மர்மமும்!

ச.நாகராஜன்

இந்தியாவிலிருந்து கி.பி. 527 ஆம் ஆண்டு வாக்கில் சீனா சென்ற போதிதர்மரைப் பற்றிய ஏராளமான கதைகள் உண்டு.

குங் பூ உள்ளிட்ட விஷேச சண்டைப் பயிற்சிகள், சில விசேஷ தியான முறைகள், தர்மத்தைக் கற்பிக்கும் முறைகள், அவற்றை உள்ளடக்கிச் சொல்லும் குறைந்த சொற்களுடைய கோயன் எனப்படும் செய்யுள்கள் ஆகியவை போதிதர்மருடன் தொடர்பு படுத்திச் சொல்லப்படுகின்றன.

ஷாலின் மடாலயம்  சான் பிரிவின் தலைமையகம். ஐந்தாம் நூற்றாண்டில் இது மிகவும் பிரபலமான ஒரு தலமாகத் திகழ்ந்தது. இது ஹெனான் மாகாணத்தில் டெங்ஃபெங் என்ற பிரதேசத்தில் அமைந்த ஒரு ஆலயம்.

ஷாலின் போதித்த புத்த மதப் பிரிவின் தத்துவத்தைப் பின்பற்றுவாருக்கு இன்றும் இது தான் பிரதான மையமாக இலங்குகிறது.

2010ஆம் ஆண்டு இது யுனெஸ்கோ உலக கலாசார பாதுகாப்பு இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

ஷாலின் ஆலயம் சென்ற போதிதர்மர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒன்பது வருடங்கள் குகையின் சுவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏழு வருடங்கள் தூங்கி விட்டதாகவும், உடனடியாக தன் கண் இமைகளை அறுத்துக் கொண்டு தூங்காமல் இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

பின்னர் அங்குள்ள பிக்குகளுக்கு குங்பூவையும் விசேஷ தியானமுறையையும் கற்பித்தார்.

எதையும் சுருக்கமாகச் சொல்லும் கோயன் எனப்படும் செய்யுளும் சான் புத்தமதப் பிரிவும் அவராலேயே துவக்கப்பட்டது.

சீன மன்னருடனான அவரது சந்திப்பும் பல விதமாகக் கூறப்படுகிறது.

அதே போல மர்மமும் புனிதமும் கொண்ட ஷாலின் ஆலயம் பற்றியும் அதில் போதிதர்மரின் வருகை பற்றியும் கூட விதவிதமான கதைகள் உண்டு.

இவற்றில் எது சரி, எது மிகைப்படுத்தப்பட்டது என்பதை அறிய முடியாது.

இதில் அடங்கியுள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

எது எப்படி இருந்த போதிலும் மிகப் பெரிய மாற்றத்தை புத்த தர்மத்திற்குத் தந்தவர் போதிதர்மர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அவரைப் பற்றிய சில சம்பவங்களைப் பார்ப்போம்:

வு சக்கரவர்த்தியை போதிதர்மர் சந்தித்தார். அப்போது நடந்த உரையாடல் இது:

வு : புத்த பிக்குகளை உருவாக்கவும் புத்த மடாலயங்களைக் கட்டவும், சூத்ரங்களை பிரதி எடுக்கவும், புத்தரின் சிலைகளை நிர்மாணிக்கவும் நான் எந்த அளவு புண்ணிய கர்மத்தைக் கொண்டுள்ளேன்?

போதிதர்மர் : ஒன்றுமில்லை! உலகியல் நோக்கில் செய்யப்படும் கர்மாக்கள் நல்ல கர்மாக்களைக் கொண்டு வந்து  தரும். ஆனால் புண்ணியத்தைத் தராது.

வு: ஆக, எது பெரிய உண்மையின் அர்த்தம்?

போதி தர்மர்: பெரிய உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை. சூனியம் தான் இருக்கிறது.

வு: அப்படியானால், என் முன் நிற்பது யார்?

போதிதர்மர் : அது எனக்குத் தெரியாது, மன்னரே!

கோயன்களைக் கொண்டுள்ள, “Blue Cliff Record’இன் முதல் கோயன் இது தான்!

போதிதர்மரின் பதிலால் வு மன்னர் திருப்தியுறவில்லை. போதிதர்மர் இதன் மூலம்  என்ன போதித்தார் என்பது அவருக்குப் புரியவும் இல்லை.

போதிதர்மரோ யாங்ட்ஸே நதியைத் தாண்டி வடக்கே சென்று விட்டார்.

picture from wikipedia

பின்னால் போதிதர்மர் மறைந்து விட்ட செய்தியைக் கேட்டதும் அவரை விட்டு விட்டோமே என்று பெரிதும் வருந்திய வு கீழ்க்கண்ட கவிதையை இயற்றிப் புலம்பினார்:

அந்தோ! அவரைப் ‘பார்க்காமல்’ பார்த்தேன்!

அவரைச் ‘சந்திக்காமல்’ சந்தித்தேன்!!

அவரிடம் போதனை பெறாமல் போதனை பெற்றேன்!!!

இப்போது இதோ வருந்துகிறேன்!!!!

போதி தர்மரைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அதில் ஒன்று கிளி பற்றிய சம்பவம்.

அந்தக் கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது.

அது தெருவில் சென்று கொண்டிருந்த போதி தர்மரைப் பார்த்தது.

அவரைப் பார்த்து கிளி கேட்டது:

மேற்கிலிருந்து மனம் வருகிறது,

மேற்கிலிருந்து மனம் வருகிறது,

தயவுசெய்து எனக்கு ஒரு வழியை போதித்தருளுங்கள்,

இந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க!

எந்த மக்களுக்காக போதி தர்மர் வந்தாரோ அவர்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இந்தக் கிளியையாவது உய்வு பெறச் செய்வோம் என்று எண்ணிய போதி தர்மர் இப்படி பதில் கூறினார்:

கூண்டிலிருந்து விடுதலை பெற,

கூண்டிலிருந்து விடுதலை பெற,

உன் இரு கால்களையும் நேராக வை,

இரு கண்களையும் இறுக்கி மூடு!

கூண்டிலிருந்து நீ தப்பிக்க இதுவே வழி!!

புத்திசாலி கிளி இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டது.

அது இறந்தது போல கூண்டில் படுத்தது! இரு கால்களையும் முடக்கி நேராக வைத்தாது. கண்களை இறுக்க மூடியது.

கூண்டில் அடைத்து வைத்திருந்த கிளியின் சொந்தக்காரர் கிளியைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

கிளி இறந்து விட்டதோ?

கூண்டைத் திறந்தார்.கிளியைக் கையில் தூக்கி வைத்தார். அதன் மூச்சு கூட வரவில்லை. ஆனால் உடல் வெப்பம் குறையவில்லை. அவர் கையை உயரத் தூக்கினார் ஒரு கணம். அதே கணத்தில் கிளி கால்களைப் பரப்பி, கண்களைத் திறந்து மேலே பறந்தது!

விடுதலை பெற்றது!!

இந்தக் கோயன் இன்றும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதன் உண்மைப் பொருள் என்ன?

கிளி என்பது பிரக்ஞை.

கூண்டு என்பது உடல்.

இறுக்க மூடு. கால்களை ஒடுக்கு என்பது புலன்களின் எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவித்துக் கொள். உடலுக்கு அப்பாற்பட்டு உன்னை விடுவித்துக் கொண்டு உயரே பற! என்ற அர்த்தத்தைத் தருகிறது.

இது போன்ற உபதேசங்களை ஆங்காங்கே அருளிச் சொல்லியவாறே போதிதர்மர் சென்றார்.

இப்படி ஏராளமான அதிசய சம்பவங்களை உள்ளடக்கிய போதி தர்மரின் வாழ்க்கை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

Tags– போதிதர்மர்,ஷாலின் ஆலயம்

***

WHY DO PEOPLE COME TO MY MEETING? GERMAN PHILOSOPHER EXPLAINS (Post No.5672)

WHY DO PEOPLE COME TO MY MEETING? GERMAN PHILOSOPHER EXPLAINS (Post No.5672)

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17-51
Post No. 5672

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
While he was dramatic critic on the old Denver Post, Eugene Field was given an assignment to report on a performance of King Lear, his review was brief but pointed

Last night at the Tabor Opera House, So and So played King Lear. He played it as though under the premonition that someone was about to play the Ace.

Xxxx

Lecture Anecdotes

Professor Agassiz, the naturalist, had declined to lecture before some lyceum or public society, on account of the inroads which previous lectures given by him had made upon his studies and thought. The gentleman who had been deputed to invite him continued to press the invitation, assuring him that the society was ready to pay him liberally for his services.

That is no inducement to me, replied Agassiz, I cannot afford to waste my time in making money.

Xxxx

 

I HAVE NOTHING TO SAY ON WIT AND HUMOUR

Artemus Ward was once about to lecture on American Wit and Humour, but the chairman spoke at such length on the subject when Artemus rose he said,
The chairman has said all that needs to be said on the American Wit and Humour, so instead of taking that subject, I shall lecture on Indian Meals, and he did.

Xxx

MY AUDIENCE
The German philosopher and theologian , Frederich Schleilermarcher , once attempted to explain to a questioner the type of people who composed his audiences.

My audience is composed mainly of students, young women and soldiers. Student s come because I am a member of the Board of Examiners. The young women come because of the student s. And the soldiers come because of the young women.

XXX SUBHAM XXX

திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17.24
Post No. 5671

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Jyeshta picture, posted by Lalgudi Veda

திருவள்ளுவர் தீவிர இந்து. ஆரம்பத்திலேயே பகவான் பெயருடன் குறளை ஆரம்பிக்கிறார். அது மட்டுமல்ல; அவர் காலத்திலேயே வாழ்ந்த ஒரு புலவர் அவரைத் திருவள்ளுவ மாலையில் பாராட்டுகையில், நல்லவேளையாக இதைப் பாடினீர்களே; இவ்வளவு காலமாக வேதம் போன்ற ஒரு ஸம்ஸ்க்ருத நூல் தமிழில் இல்லையே என்று கவலைப் பட்டேன். நீர் தமிழ் வேதத்தைப்பாடி அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்’ என்று பாராட்டுகிறார். அவர் கொடுத்த பெயர்தான் தமிழ் வேதம்= தமிழ் மறை.

திருக்குறளில் இந்திரன் என்னும் வேத கால தமிழ்க் கடவுளின் பெயர் வருவதை எல்லோரும் அறிவர். இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று தொல்காப்பியம் செப்பும். இன்னும் ஒரு குறளில் வேந்தன் என்றும் இந்திரனைக் குறிப்பிடுகிறார். அடி அளந்தான் என்று வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தை ஒரு குறளில் பாடுகிறார். பல் மாயக் கள்வன் என்று கண்ண பிரானை மறைமுகமாக ஒரு குறளில் பாடிப் பரவுகிறார்.

JYESHTA DEVI POSTED BY  LALGUDI VEDA

தேவ லோகம் (புத்தேள் உலகு), தேவர்கள் (அமரர்), அமிழ்தம் (அம்ருத), ஏழுபிறப்பு (எழுமை), அணங்கு (அப்ஸரஸ் அழகிகள்), வேள்வி (யாகம்), பிராமணாள் (அறு தொழிலோர், பார்ப்பான்,அந்தணர்), யமன் (கூற்றுவன்) ,பிரம்மா (உலகு இயற்றினான்),மஹா லக்ஷ்மி (திரு)— பற்றி அதிகாரத்துக்கு அதிகாரம் பாடிப் போற்றுகிறரர்; பிரம்மா, கூற்றுவன் (யம தர்மன்), தேவர் போன்றோரை சில இடங்களில் கோபத்தில் ஏசுகிறார்.

திருக்குறளைப் படிக்கையில் இவர் ‘பக்கா ஹிந்துத்வா’ பேர்வழி என்பது தெரிகிறது. ஏனெனில் அதர்மம் செய்வோருக்கு மரணதண் டனை கொடுப்பது பற்றி இரண்டு குறள்களில் ஆதரவு தெரிவிக்கிறார். கருமிகள் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் ஒரு குத்து விட்டு பணம் பறி என்கிறார். இது எல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயமே. முதல் குறளை ஸம்ஸ்க்ருதத்தில் துவக்கி கடைசி குறளை  ஸம்ஸ்க்ருதத்தில் முடித்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்றும் காட்டினார். ஒரு அதிகாரம் கூட   ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாமல் பாடக்கூடாது என்ற பாலிஸியையும் கடைப் பிடித்தார்.

மநு தர்ம நூல், காம சாஸ்திரம், பகவத் கீதை ஆகியவற்றை அழகியகு றள்களில் வடித்துக் கொடுக்கிறார். கடந்த நூற்றாண்டில் இவ்வளவற்றையும் பலரும் பதின்மர் உறை கொண்டு பறை சாற்றிவிட்டனர்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஸ்ரீதேவியைப் பாடிய– திருமகளைப் பாடிய — திருவள்ளுவர் மூதேவியையும் பாடி இருக்கிறார் என்பதாகும்.

இதோ  திருமகள் பற்றிப் பாடிய குறள்கள்

179, 519, 617, 920

அறனறிந்துவெஃகா அறுவுடையார்ச் சேரும்

திறன் அறிந்தாங்கே திரு-179

பிறர் பொருளை மனதிலும் நாடாதவன் வீட்டுக்கு லக்ஷ்மீ தானாகவே போவாள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு – 519

உண்மையாக உழைப்பவனை , ஒருவன் தப்பாக எடை போட்டால்,லக்ஷ்மீ (செல்வம்) அவனை விட்டுப் போய்விடுவாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப்பட்டார் தொடர்பு – 920

விலைமாதர், கள், சூதாட்டம்-இவை மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் அடையாளங்கள்..

இங்கு ஒரு இயல்பான சந்தேகம் எழும்; ‘திரு’ என்பதை எல்லாம் செல்வம் என்று பொருள் கொண்டால் லக்ஷ்மி என்ற இந்துக் கடவுள் மறைந்து போவாளே! என்று.

இந்துக்கள் மட்டுமே நம்பும் ‘முகடி’ என்னும் மூதேவியை (ஜேஷ்டா தேவி) அவர் மேலும் இரண்டு குறள்களில் வைத்துப் பாடியதும் பதின்மரின் உறையும் திரு என்பது லக்ஷ்மியையும், முகடி என்பது மூதேவியையுமே குறிக்கும் என்பதைத் தெளிவாக்கும்.

இதோ முகடிக் குறள்கள்

617, 936

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்- 617

சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவியும், சுறுச்சுறுப்பானவர் இடத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் வாழ்வதாக சான்றோர்கள் பகர்வர்.

அகடரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால் மூடப்பட்டார் -936

சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், சோற்றுக்கே வழியின்றித் தவிப்பர்

இப்படி மூதேவியையும் திருமகளையும் ஒப்பிட்டுப் பாடுவதால் திருவள்ளுவன் தெய்வீக ஹிந்து என்பதும் தெளிவுபடும்.

Tags– ஸ்ரீ தேவி, மூதேவி, திருவள்ளுவர்

–சுபம்–

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)

Written by S Nagarajan

Date: 17 November 2018

GMT Time uploaded in London –7-09 am
Post No. 5670

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்!

ச.நாகராஜன்

1

அப்பர் தனது பாடல்களில் நூற்றுக்கணக்கான இரகசியங்களைப் போகிற போக்கில் தெரிவித்துக் கொண்டே இருப்பார்.

அதை ஊன்றிக் கவனித்து அறிய வேண்டியது நமது கடமை.

ஐந்தாம் திருமுறையில் பொதுப் பாடலாக அமையும் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                               ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. 

ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.

இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் பிறந்து இறந்து விட்டனர்.

அதே போல ஆறு கோடி நாராயணர்கள் அவதரித்து மறைந்து விட்டனர்.

இந்திரனைப் பற்றிச் சொல்லப் போனாலோ, கங்கை ஆற்றின் மணலை எண்ண முடியுமா? அதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு எண்ணிக்கை வருகிறதோ, அந்த அளவு தோன்றி மறைந்து விட்டனர்.

ஆனால் ஈறு இல்லாதன் – முடிவே இல்லாதவன் – ஈசன் ஒருவனே என்பதை அறியுங்கள்.

Picture posted by Lalgudi Veda

2

பிரம்மாவின் ஆயுள் என்ன என்பதை வேதம் கூறுகிறது.

ஒரு மனித வருடம் – ஒரு தேவ அஹோராத்ரம் (அதாவது தேவரின் ஒரு பகலும் இரவும்)

360 தேவ அஹோராத்ரம் – 1 தேவ வருடம்

12000 தேவ வருடம் – ஒரு சதுர் யுகம்

ஒரு சதுர் யுகம் – ஒரு கிருதயுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலியுகம் கொண்டது.

    ஒரு கலியுகம் – 4,32,000 மனித வருடங்கள்

ஒரு த்வாபர யுகம் – 8,64,000 மனித வருடங்கள்

ஒரு த்ரேதா யுகம் – 1,296,000 மனித வருடங்கள்

ஒரு கிருத யுகம் – 1,728,000 மனித வருடங்கள்

ஆக ஒரு சதுர் யுகம் – 4,320,000 மனித வருடங்கள்

71 சதுர் யுகம் – ஒரு மன்வந்தரம்

14 மன்வந்தரம்  ஒரு கல்பம்

2 கல்பம் – பிரம்மாவின் ஒரு பகல் ஒரு அஹோராத்ரம்

360 நாட்கள் – ஒரு பிரம்ம வருடம்

100  பிரம்ம வருடம் பிரம்மாவின் ஆயுள்

*

சிவ புராணத்தில் (7.4 TIME CALCULATION) பிரம்மாவின் ஆயுள் பற்றி இப்படி கூறப்படுகிறது.

பிரம்மாவின் ஒரு வருடம் = 1000 கல்பங்கள்

ஒரு பிரம்ம யுகம் என்பது அப்படிப்பட்ட 8000 வருடங்கள் கொண்டது.

ஒரு பிரம்ம சவனம் என்பது அப்படிப்பட்ட 1000 யுகங்களைக் கொண்டது.

பிரம்மாவின் ஆயுள் அப்படிப்பட்ட 3000 சவனங்களைக் கொண்டது.

இப்படிப்பட்ட பிரம்மாவின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் வந்து போகின்றனர்!

பிரம்மாவின் முழு ஆயுள் விஷ்ணுவிற்கு ஒரு நாள்.

விஷ்ணுவின் முழு ஆயுளும் ருத்ரனுக்கு ஒரு நாள்.

ருத்ரனின் முழு ஆயுளும் சிவனுக்கு ஒரு நாள்.

சிவனின் ஆயுள் காலத்தில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ருத்ரர்கள் வந்து போகின்றனர்.

முழு விவரங்களுக்கு சிவ புராணத்தை கீழ்க்கண்ட தளத்தில் பார்க்கலாம்.

https://books.google.com/books?id=r6QZDQAAQBAJ&pg=PT221&lpg=PT221&dq=vishnu%27s+lifespan+equal+to+brahma%27s&source=bl&ots=77XFjyI4zQ&sig=PO8gS18WiJof4FvbVPRKyIyZmow&hl=ta&sa=X&ved=2ahUKEwiukIbt-9TeAhWnrFQKHWzLA14Q6AEwCXoECAcQAQ#v=onepage&q=vishnu’s%20lifespan%20equal%20to%20brahma’s&f=false

ஆக, அம்மாடியோவ் என்று இருக்கிறது கணக்கு!

 

3

பிரம்ம வைவர்த்த புராணத்தில்  கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

இந்திரனுக்கு எங்கும் இல்லாத ஒரு அரண்மனை அமைக்க ஆசை. விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அப்படி ஒரு அழகிய அரண்மனையை அமைக்கப் பணித்தான். விஸ்வகர்மாவும் தன் திறமையை எல்லாம் காட்டி ஒரு நகரையே அமைத்தான். ஆனால் இந்திரன் திருப்தியுறவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகக் கூறிக் கொண்டே இருந்தான்.

சோர்ந்து போன விஸ்வகர்மா பிரம்மாவிடம் முறையிட நாளை உன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்று அருளினார்.

அடுத்த நாள் காலை இந்திரனின் வாசலில் ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் வந்து சேர்ந்தான். அவனை வரவழைத்த இந்திரன் அவன் வந்த் நோக்கத்தைக் கேட்கவே, “நீங்கள் ஒரு அழகிய நகரை நிர்மாணிப்பதாகக் கேள்விப்பட்டேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் அது முடிய? இதுவரை எந்த இந்திரனும் செய்யாத ஒரு அரிய காரியத்தை ஆரம்பித்திருக்கிறாயே!”  என்றான்.

இந்திரன் சிரித்தான்.

“இது வரை எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த பிராம்மண பையன் ஒவ்வொருவரின் ஆயுளையும் விவரமாக எடுத்துரைக்க ஆரம்பித்தான்.

 “கணக்கிலடங்கா எத்தனை உலகங்கள். நீர்க்குமிழிகள் போல உடைந்து உடைந்து எத்தனை பிரபஞ்சங்கள். எத்தனை பிரம்மாக்கள். எத்தனை இந்திரர்கள்“ என்று விவரமாக ஒரு சொற்பொழிவையே ஆற்றிச் சிரித்தான்.

அப்போது அங்கு எறும்புகளின் அணிவகுப்பு ஒன்று சென்றது. அந்த எறும்புகளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

“எதற்குச் சிரிக்கிறாய்?” என்று இந்திரன் கேட்டான்.

“இதோ, போகின்றனவே, கணக்கிலடங்கா எறும்புகள். இவை அனைத்துமே ஒரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே. புண்ணியம் போன பின் அந்த இந்திரர்கள் இதோ, இந்த எறும்பாக ஊர்கின்றனர்” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் திடுக்கிட்டு பூரண ஞானத்தை அடைந்தான். கர்வ பங்கம் அடைந்தான்.

கர்மத்தினாலேயே ஒருவன் நல்ல பதவியை அடைகிறான் என்றும் அதே கர்மத்தினாலேயே அவன் கீழ் நிலையையும் அடைகிறான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

எறும்புகளின் அணிவகுப்பு (The Parade of Ants)!

இதைப் படித்தால் எல்லையற்ற பிரபஞ்சத்தின் முடிவற்ற காலம் என்பது பற்றி அறிய முடியும்.

*

அப்பர்  பிரான் இந்தக் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தார்.

அந்தமில்லா – ஈறு ஒன்று இல்லா – பிரானின் பெருமை அவரை விக்கித்தது. உடனே, தனக்குத் தெரிந்த கால இரகசியத்தை உள்ளடக்கி, ஈறு இல்லா ஈசனைப் போற்றிப் பாடினார் :

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                                ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
ஈசனின் வயது என்ன – ஈறு இல்லை – என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.அப்பர் பிரானின் பாடல்கள் ஆழ்ந்த ரகசியங்களை விளக்குபவை; பொருளாழம் கொண்டவை.
தேவாரம் படிப்போம்; இரகசியம் அறிவோம்!!

 

TAGS- எறும்புகளின்,அணிவகுப்பு

****

MARK TWAIN’S FAMOUS LECTURE! (Post No.5669)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 November 2018

GMT Time uploaded in London –20-56
Post No. 5669

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

After a great deal of urging, Mark Twain’s friends in San Francesco persuaded him to give a lecture on the interesting things he had seen in the Hawaiian Islands during his visit in the fall of 1866. In order to encourage the new lecturer, they promised to place hearty laughers at strategic points among the audience.

Tell them not to investigate my jokes, but to respond at once, Clemens (Mark Twain) said.
When he came out on the platform his knees were so violently that his backers thought that he would not last long enough for the hearty laughers to get into action. But Clemens needed no support, for he won the day by his inimitable opening,
Julius Caesar is dead,
Shakespeare is dead
Napoleon is dead
Abraham Lincoln is dead
And I am far from well myself

When the lecture was over, the audience had been laughing much they were too weak to leave their seats.

Xxxx


Mark Twain in his lecturing days , reached a small Eastern town one afternoon and went before dinner to a barbers to be shaved.
You are a stranger in town, sir? The barber asked.
Yes, I am a stranger here, was the reply.
We are having a good lecture here tonight, sir, said the barber, a Mark Twain lecture. Are you going to it?

Yes, I think I will, said Clemens.
Have you got your ticket yet? The barber asked.
No, not yet, said the other.
Then, sir, you will have to stand.
Dear me, Mr Clemens exclaimed, it seems as if I always do have to stand when I hear that man Twain lecture.

XXXXX

 

Mark Twain profile
American Children’s Writer
Born Nov.30, 1835
Died Apr. 21, 1910
Age at Death 74

Mark Twain is one of America’s great humorous writers. He created two famous characters— Tom Sawyer and Hhuckleberry Finn .
Twain was born Samuel Leghorne Clemens in Florida, Missouri, the fifth of six children. His father suffered ill health, and the family was poor . In 1839 they moved to Hannibal, a rapidly growing town on the Mississippi River, where Twain went to the local school. When he was 12, his father died and Twain had to leave school to find work.

At age 22 Twain became a river pilot at a time when there were 1000 boats a day on the Mississippi. He followed this trade for four years and loved it, but river traffic ended during the American civil war.
Becoming a full time reporter in 1862, he soon began to use the pen name Mark Twain. He published his first important story at age 32 and his first successful novel, the humorous travel book The Innocents Abroad, when he was 34.

In 1870 Twain married Olivia Langdon, with whom he had five children. He wrote his classic children s stories The Ad,,,, and the adv,,,in his 40s. Twain had become increasingly disillusioned by modern life and personal tragedies, and the book s provided an opportunity for him to relieve the golden days of his boyhood on the Mississippi. Both stories give a realistic picture of life around the Mississippi and are full of adventure and humour. The ad h f , ,, considered his master piece, is noted for its accurate and sympathetic depiction of adolescent life.

Publications

1867 The Celebrated Jumping Frog of Calaveras County and Other Sketches
1869 The Innocents Abroad
1872 Roughing It
1876 The Adventures of Tom Sawyer
1881 The Prince and The Pauper
1884 The Adventures of Huckleberry Finn
1894 Pudd’n head Wilson A Tale

TAGS- Mark Twain Profile, Mark Twain’s lecture
Xxxx