பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (2) (Post No.6391)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 15 May 2019
British Summer Time uploaded in London –  15-
42

Post No. 6391

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (2)

சிவ. மாதவன் : பாரதியார் கவிதைகளிள் அணிநலம்

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் கவிதைகளில் 803 உவமைகள் இடம் பெற்றுள்ளதாக நூலாசிரியர் சிவ.மாதவன் தெரிவிக்கிறார்.

இதில் 533 உவமைகள் உவம உருபு பெற்றுள்ளன. 270 உவமைகளில் உவம உருபு தொக்கி வந்துள்ளது.

உருபு தொக்கி நிற்கும் உவமை :-

இதற்கு எடுத்துக்காட்டாக,

‘மதுரத் தேமொழி மங்கையர்’

‘நண்ணுமுக வடிவு காணில் – அந்த

நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்’

‘கோலக் குயிலோசை – உனது

குரலினிமையடீ’

என்பனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.

எடுத்துக்காட்டு உவமையுடன் வினாவை இணைத்து பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதி இது:

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்

மின்மினி கொள்வாரோ?

கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின்

கைகட்டிப் பிழைப்பாரோ?

இல்பொருளுவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இதோ:

குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்

கொட்டிக் குதித்தாடுவான்.

இல்லாத ஒன்றை உவமையாக்கை உரைப்பது இல் பொருள் உவமை. மலை குதிப்பது போல துரியோதனன் குதித்து ஆடுவான் என்பது அருமையான இல்பொருளுவமை.

பாரதியாரின் பாடல்களில் உருவக அணியும் ஏராளமாக உள்ளது.

21 வகை உருவகங்களில் பாரதியாரின் பாடல்களில் ஐந்து வகை உருவகங்களைக் காண முடிகிறது.

ஆகிய என்ற சொல் இல்லாமல் வரும் தொகை உருவகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:

‘தொல்லைதரும் அகப்பேய்’

‘காமப்பிசாசைக் – குதிக்

கால்கொண்டடித்து விழுத்திடலாகும்’

‘நல்ல னெந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்’

இம்மூன்றிலும் அகப்பேய், காமப்பிசாசு, துயர்க்கடல் என்பன தொகை உருவகங்களாகும்.

இன்னும் வஞ்சப்புகழ்ச்சி அணி, பெருமை அணி, ஐயவணி, உடனிகழ்ச்சியணி, முரணனி, பொருள்முரண், தன்மேம்பாட்டுரையணி, சுவையணி ஆகிய அணிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டப்படும் பாரதியாரின் கவிதைகளைப் பார்த்தால் பாரதியாரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்த்து ஆஹா என்று வியக்க முடிகிறது.

பாரதியாரின் சொல்லாட்சி தனித்துவம் வாய்ந்த ஒன்று. உள்ளம், விழி, நிலவு, அமுதூற்று, வீசி, அடா, அடீ போன்ற சொற்களைப் பாரதியார் நயம்படக் கையாண்டிருப்பது வியப்பூட்டும் ஒன்று.

ஒரு பாடல் முழுதும் குறியீடாக அமையின் அது முழுநிலைக் குறியீடு எனப்படும். இந்த வகையில் பாரதியாரின் அக்கினிக்குஞ்சு மற்றும் விடுதலை ஆகிய இருபாடல்கள் முழுநிலைக் குறியீடு அமைந்த பாடல்களாக உள்ளன.

பாரதியாரின் அற்புதமான கவிதைகளில் உவமைகள் உணர்த்தும் செய்திகள் பல.

ஒவ்வொரு சொல்லையும் அவர் கையாண்ட விதத்தின் அழகே அழகு.

தீ – படரும் செந்தீப் பாய்ந்திடுமோர் விழியுடையாள் (பராசக்தியின் கண்களைப் பற்றிப் பாடுகையில் இப்படிக் கூறுகிறார்)

விண் : வானக் கடல், வானமாங் கடல், வானக் குளம், நீலப் பொய்கை ஆகியவற்றை நோக்கலாம்.

மேகம் : விநாயகரைப் போற்றிப் பாடியது – வரங்கள் பொழியு முகிலே ; கண்ணனைப் போற்றிப் பாடியது – துங்க முற்ற துணை முகிலே”

மின்னல் : திரௌபதியின் கண் வீசும் ஒளி – மின்செய்கதிர்

நிலவு : பொங்கிவரும் புது நிலவு, நிலவூறித் ததும்பும் விழி

சிங்கம் – நரி தந்திடு ஊனுணாச் சிங்கமே என வாழ்தல் சிறப்பு

உலோகம் (பொன்) – பொன் போல் குரலும்

  பொன்னை நிகர்த்த குரலும்

பொன்னங்குழலின் புதிய ஒலி தனிலே

மேலே தரும் செய்திகளோடு, இப்படியே மரம், பயிர், புல், கரும்பு, விழல்,மலர்,குன்றம், உணவுப் பொருள்கள் ஆகியவற்றிற்கான கவிதைகளை சிவ.மாதவன் அழகுற எடுத்துக் காட்டுகிறார்.

இன்னும் தேச விடுதலை, பெண் விடுதலை, ஆன்ம விடுதலை பற்றிய பாடல்களில் பாரதியாரின் பலவிதமான உவமைகளைக் கண்டு களிப்படையலாம்.

தன் நூலில் எடுத்தாண்ட பிற நூல்களின் குறிப்பாக சுமார் 610 குறிப்புகளை இந்த நூலாசிரியர் தருவதன் மூலமே அவரது ஆராய்ச்சியின் ஆழம் தெரிய வருகிறது.

துணை நூற்பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களையும், முப்பதுக்கும் மேற்பட ஆங்கில நூல்கள் மற்றும் கட்டுரைகளின் பட்டியலையும் காண்கிறோம்.

இத்துடன் அருமையான ஆறு இணைப்புகள் நூலின் இறுதியில் உள்ளன:

  1. வடமொழி அணியிலக்கண நூல்கள்
  2. தமிழ் அணியிலக்கண நூல்கள்
  3. பாரதியார் கவிதைகளில் உவமை அகராதி
  4. பாரதியார் கவிதைகளில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்
  5. பாரதியார் கவிதைகளில் உருவக அகராதி
  6. பாரதியின் சில புதுமைச் சொற் சேர்க்கைகள்

மேலே கண்டவற்றுள் 3,4,5,6 ஆகிய பகுதிகளை நன்கு ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் நம் கண் முன்னே புதிய பாரதியார் தோன்றுவார்.

இந்த புதிய பாரதியாரை நம் கண் முன்னே காண வைக்கும் சிறப்பான ஆராய்ச்சி நூலாக இந்த நூல் திகழ்கிறது.

மீண்டும் நமது பாராட்டுதல்களை சிவ.மாதவனுக்கு அளிக்கிறோம்.

இந்த நூல் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு இன்றியமையாத நூல் என்பதை மீண்டும் கூறி இதை வாங்குமாறு பரிந்துரை செய்கிறோம்.

****

நீராவி பிடிப்பதால் என்ன பயன்?- மருத்துவத்தில் எண்-4 பகுதி 3 (Post No.6390)

Written by LONDON SWAMINATHAN



swami_48@yahoo.com


Date: 15 May 2019


British Summer Time uploaded in London –  9-14 am

Post No. 6390

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ALSO SEE OLD ARTICLES IN THE BLOG

சரக சம்ஹிதை | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சரக-சம்ஹிதை/

  1.  

Translate this page

4. வைத்யருக்கான குணங்கள். வைத்ய குணா: 1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு … ஆயுர்வேதம் என்றால் என்ன, ஒரு மருத்துவரின்குணாதிசயங்கள் …

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள் | Tamil …



https://tamilandvedas.com/…/சரக-சம்ஹிதை-சொல்…

  1.  
  2.  

Translate this page

11 Nov 2013 – ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1 By ச.நாகராஜன் ஆத்ரேயரின் சிஷ்யர் ஆசார்ய சரகர் பாரத வரலாற்றில் பொன் எழுத்துக்களால் …

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள் …



https://swamiindology.blogspot.com/2013/11/blog-post_11.html

11 Nov 2013 – இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 அத்தியாயங்கள் என்ற எண்ணிக்கை? ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 …

மருத்துவர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/மருத்துவர்/

  1.  

Translate this page

13 Jan 2017 – ஆனால் மருத்துவம் பற்றிய பழமொழிகளும் பிற்காலத்தில் எழுந்த … மருந்து என்ற தலைப்பில் வள்ளுவர் பாடிய பத்துக் குறள்களும் …

மருத்துவத்தில் எண் மூன்று (Post No.6303 …



https://tamilandvedas.com/…/மருத்துவத்தில்-எண…

  1.  

Translate this page

24 Apr 2019 – மருத்துவத்தில் எண் மூன்று (Post No.6303). Written by London swaminathan swami_48@yahoo. … This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …

நாலு பேர் கொடுக்கும் உணவை …



https://tamilandvedas.com/…/நாலு-பேர்-கொடுக்…

  1.  

Translate this page

2 days ago – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)In “அறிவியல்”. தமிழ் …

மருத்துவத்தில் எண் 4 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/மருத்துவத்தில்-எண…

  1.  

Translate this page

கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில்எண் 4- Part 1(Post No.6377). Written by London swaminathan. swami_48@yahoo.com. Date: 12 May 2019. British Summer Time uploaded in London …

ADVANTAGES OF STEAM INHALATION -No.4 in Medicine -Part 3 (Post No.6389)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 15 May 2019


British Summer Time uploaded in London –  8-39 am

Post No. 6389

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 14519 (Post No.6388)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 May 2019


British Summer Time uploaded in London –  17-08

Post No. 6388

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – (4 எழுத்துக்கள்) 4 வகைப் புலவர்களில் விரைவாகப் பாடும் புலவன்

4. -(5) கங்கையுடன் கலக்கும் கருப்பு வண்ண நதி; கிருஷ்ணன் விளையாடிய நதி

6. – (3)உடல்

7. – (5)கணவனை இழந்தோர் பின்பற்றும் விரதம்

கீழே

1. – (6 எழுத்துக்கள்)- இந்துக்களின் புனித நதி 3 இடங்களில் பாய்வதாக ஐதீகம்- இது விண்ணில் பாய்கிறது

2. (4)- கிருஷ்ணன இப்படி அன்போடு அழைப்பர்

3. (3)- அகத்தியர் வாழும் தமிழ் மலை

5. (4)- சிவன், அருகன், நரி, தேவதாசி

–subham–

SWAMI’S CROSS WORD 14519 (Post No.6387)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 May 2019


British Summer Time uploaded in London –  15-44

Post No. 6387

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. (7 letters) Born as Devavrata made a terrific vow and got this name.

4. S (5) expanding, blowing

6. (6) one of the 6 countries of ancient Bharat

7. (5) Shakuntala’s foster father

8. (5) Rajasthan city with King Prithiviraj ‘s statue; Ajaya Meru/ invincible Hill was the original name in Sanskrit

DOWN

1. – (5 letters)strongest Pandava; he killed Duryodhana

2. I- (5)Great king who gave his flesh when Indra and Agni came to test him in the form of Eagle and Dove.

3. –(7) indestructible, inexhaustible (Draupadi had a vessel with this name)

4. (6)- Vehicle; every Tamil Nadu temple has this for Gods

5. -(6) work; used in all Indian languages; done by Kara/hand; root Kuru

‘THANKS FOR WARNING’! FIRST TIME ACTOR RECEIVED ONLY ONE REPLY! (Post No.6386)


Compiled by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 May 2019


British Summer Time uploaded in London –  14-49

Post No. 6386

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Actors Anecdotes

John Kemble was performing one of his favourite parts at some country theatre and was interrupted from time to time by the squalling of a child in the gallery , until at length, angered by this rival performance , Kemble waked with solemn steps to the front of the stage , and addressing the audience in most tragic tones, said

“Ladies and gentlemen, unless the play is stopped , the child cannot possibly go on”.

Xxx

Thanks for the warning

A pushing young actor who was under study in one of Mr. Barrie’s plays found his opportunity one night through the illness of his principal. He accordingly flooded his managerial and influential  acquittances with telegrams announcing,

“I play so and so ‘s part tonight. Except that the theatre was comparatively empty this breathless disclosure produced no result, other than a telegram in reply from Mr Barrie to this effect:

“Thanks for the warning”.

Xxx

Co-starring!

When John Barrymore was playing Hamlet on Broadway, Jane Cowl attended one of the matinees. She was not inaudible while watching it, and the audience soon knew she was there.

Barrymore became aware of her presence, also, but did not acknowledge it until the end of the performance. In making his curtain speech he bowed in the direction of the famed lady’s box.

“And in conclusion”, he said, “may I take this opportunity to thank Miss Cowl for the privilege of co-starring with her this afternoon.”

Xxx

Hold your tongue, you dog!

During a theatrical engagement at Manchester, Kemble and Lewis were walking one day along the street, when a chimney-sweeper and his boy came up. The boy stared at them with open mouth and exclaimed :

“They be play actors.”

“Hold your tongue, you dog”, said the old sweep, “you don’t know what you may come to yourself.”

Xxx

Sold pig farm for Shakespeare Play

Lilah Mc Carthy tells of Lord Lucas that, “He wanted me to play a season of Shakespeare and knew how much I wished it; and one day he came to the theatre with a cheque. Here is the money for Shakespeare. I have sold my pig-farm. I like his pearls better than my pigs.”

Xxx Subham xxx

புத்தரை சிந்திக்க வைத்த 4 நிகழ்ச்சிகள் (Post No.6385)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 May 2019

British Summer Time uploaded in London – 10-06 am

Post No. 6385

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (1) (Post No.6384)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 May 2019


British Summer Time uploaded in London – 9-46 am

Post No. 6384

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (1)

சிவ. மாதவன் : பாரதியார் கவிதைகளிள் அணிநலம்

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் பற்றிய அருமையான ஒரு நூலை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

அனைத்து பாரதி ஆர்வலர்களும் இதைக் கண்டிப்பாகப் படிப்பதோடு ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

448 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 2002, அக்டோபரில் Elavalagan Pathippagam, New no 16, Old no 32 First Floor, Second Street, Balaji Nagar, Royapettah Chennai – 600014 – இளவளகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ 200/.

இது ஒரு ஆய்வு நூல். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இந்த நூலை ‘முன்னேற்றமடையாத சிற்றூர்ப்புறத்திலிருந்து வந்து’, முனைவர் சிவ. மாதவன் இதைத் திறம்படச் செய்துள்ளார்; பாராட்டுக்குரியவர்!

       முன்னுரை, 1. அணிகளின் பயன்பாடும் வளர்ச்சியும், 2. பாரதியார் கவிதைகளில் மரபு உவமைகள் 3. பாரதியார் கவிதைகளில் புதிய உவமைகள் 4. பாரதியார் உவமைகள் உணர்த்தும் செய்தி, முடிவுரை, குறிப்புகள், துணை நூற்பட்டியல், இணைப்புகள் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நூல்.

     முன்னுரையில் நூலாசிரியர், “பாரதியார் கவிதைகளில் அமைந்துள்ள அணிநலக் கூறுகளை விளக்கி அவற்றை மதிப்பிடும் முயற்சி இவ் ஆய்வில் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, இவ் ஆய்வில் விளக்கவியல் மற்றும் மதிப்பீடு ஆய்வுமுறை (Descriptive and Evaluatory method) அணுகுமுறையாக அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.

    அணிகளின் இன்றியமையாமையையும் வளர்ச்சியையும் பற்றி சிவ. மாதவன் அழகுற விளக்குகிறார்.

அணி குறித்த விளக்கமாய் நான்கு கருத்துக்களை அவர் நம் முன் வைக்கிறார் : 1)கவிதையை அழகுபடுத்துவது 2) பொருளைப் புலப்படச் செய்வது 3) இலக்கியப் புலமைக்கு வளம் சேர்ப்பது 4) அணிமைப் படுத்துவது.

உவமையின் பயன் என்ன? மதுரைக் காஞ்சியை மேற்கோளாகக் காட்டி ஆசிரியர், ‘அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளைப் பிறர்க்கு அறிவுறுத்தல்’ என உவமையின் பயனை இவ்வாறாகக் குறிப்பிடுகிறார்.

தமிழின் அணியிலக்கணம் 1) தமிழுக்குரிய தனிமரபு 2) வடமொழியைத் தழுவியமைந்த மரபு 3) வடமொழி மரபு 4) புது மரபு என இப்படி நான்கு வகைகளாக அமைவதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

அடுத்து தமிழில் உள்ள அணிநூல்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் ஆசிரியர்.

வீர சோழியம் : பொருளணிகள் முப்பத்தைந்தும் சொல்லணிகள் ஏழும் இந்நூலுள் குறிப்பிடப்படுகின்றன.

தண்டியலங்காரம் : பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது இந்த நூல்.

மாறனலங்காரம் : பொருளணியியலில் 64 அணிகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.

இலக்கணவிளக்கம்: 35 பொருளணிகள், 2 சொல்லணிகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.

தொன்னூல் விளக்கம் : 30 சொல்லணி, 30 பொருளணிகளை இது விளக்குகிறது.

முத்துவீரியம் : இதில் 58 பொருளணிகள், 14 வகை சொல்லணிகள் விளக்கப்படுகின்றன.

சுவாமிநாதம் : இதில் 31 பொருளணிகள், சொல்லணி மரபில் மடக்கணி மற்றும் 23 சித்திரக் கவிகளும் விளக்கப்படுகின்றன.

இது தவிர வடமொழி மரபை அப்படியே தந்துள்ள குவலாயனந்தம், தொனி விளக்கு உள்ளிட்ட நூல்கள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

 அணிகள் பற்றி நன்கு இப்படி விளக்கிய பின்னர் இந்த வலுவான அடிப்படையில் நூலாசிரியர் நம்மிடம் பாரதியாரின் அணிநலம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

பாரதியாருக்கு, ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்’ (பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் வாணியை நோக்கி வேண்டுதல்) ஆகியவையே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு.

அத்தோடு மட்டுமன்றி, ‘நாசக்கதையை நடுவே நிறுத்தி விட்டுப்

பேசும் இடைப் பொருளின் பின்னே மதி போக்கிக்

கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதை வளர்க்கும்

விற்பனர் தம் செய்கை விதமும் தெரிகிலன் காண்” என்ற அவர் தம் பாடல் அடிகளால் வெற்றுக்கு கதை வளர்ப்பதில் அவரது ஆர்வமின்மையை நன்கு  தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த அடிப்படையில் பாரதியார் பாக்களில் நுழைந்தால் அடடா, எத்தனை அற்புதமான அனுபவங்கள் ‘அணி அணியாக’!

அத்தனையையும் விளக்குகிறார் சிவ. மாதவன்.

     பாரதி படைத்த பயன் உவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு:

“போனதற்கு வருந்திலன் – மெய்த்தவப்

     புலமை யோனது வானத் தொளிருமோர்

மீனை நாடி வனைத்திடத் தூண்டிலை

     வீசலொக்கு மெனலை மறக்கிலேன்”  

போனதற்கு வருந்துவது வானத்து நட்சத்திரத்தைத் தூண்டில் போட்டு வளைத்துப் பெற இயலாததைப் போல ஆகும்.

    பாரதியாரின் மெய்யுவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு :

துரியோதனனைப் பற்றிய பாரதியாரின் வர்ணனை:

“உடல் வற்றித் துரும்பொத்து இருக்கின்றான்”

வடிவம் சார்ந்த உவமம் இது.

அடுத்து, “ சுருளலை வெள்ளம் போலத்

தொகையிலாப் படைகள் கொண்டே” என அவர் கூறுவது எண்ணிக்கை சார்ந்த உவமையாகும்.

     இப்படி நூல் முழுவதும் பாரதியார் கையாண்ட அணிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இன்னும் சிலவற்றை அடுத்துக் காண்போம்.

  • தொடரும்

            ***

subham

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி13519 (Post No.6383)

Written by London  Swaminathan
swami_48@yahoo.com


Date: 13 May 2019
British Summer Time uploaded in London – 20-4
4

Post No. 6383

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.  (6 எழுத்துக்கள் ) -ஜனவரி 1-ம்தேதி கொண்டாடுவர்

4A. (2) பெண்ணின் மறு பகுதி/ இடம் செல்லவும்

5.(2)- பெருமாள் கோவிலில் இது சர்க்கரைப் பொங்கலால் நிரப்பப்படும்

7. (3)முருகனை மணந்த தமிழ்ப் பெண்

8. (4)சீற்றம் மிக்க வேங்கை

9. (4)- இடது கையின் மறு பக்கம்

10. (3)- பஞ்ச பாண்டவர்களில் பலம் மிக்கவன்

கீழே

1.நளவெண்பா பாடியவர் (5 எழுத்துக்கள் )

2.ஸ்ரீ (2)

3.பாவை  பாடியவர்(4)

4.குழந்தை உருவாகும் முதல் நிலை(2)

5.துறவற ஒழுக்கம் உடையவன்(5)

6.அந்தக் கால நாணயத்தின் கீழ்மட்ட அளவு; 192= ஒரு ரூபாய்(5)

8.(2) ரசத்துக்கும் சாம்பாருக்கும் தேவை/மேல் நோக்கிச் செல்லவும் ;

8.(2) அடுப்பிலிருந்தும் வரும்; எரிமலையில் இருந்தும் வரும்

–சுபம்–

நாலு பேர் கொடுக்கும் உணவை சாப்பிடாதே!-மருத்துவத்தில் எண்-4 -part 2 (Post No.6382)

Written by London  Swaminathan
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 13-
51

Post No. 6382

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

to be continued…………………………………..