WHY SHOULDN’T YOU TELL A WOMAN A SECRET? A NAGA STORY (Post No.4877)

WRITTEN by London Swaminathan 

 

Date: 3 April 2018

 

Time uploaded in London –  7-43 am (British Summer Time)

 

Post No. 4877

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

There are lot of stories in India about the Naga race. They were the people who wore snake charms or totem symbols or perhaps their leaders wore Naga/snake crowns. But in course of time people started believing they were real snakes or serpents. All stories develop like this in all parts of the world. Facts are hidden in myths. Let us look at some stories: –

 

The conflict between the snake and garuda/eagle have given birth to several stories around the world. Lot of countries have flags or emblems or coins or currencies showing the enmity between the Garuda/eagle and the snake. India has such stories from the Mahabharata to Puranas

 

The Naga who revealed the secret to a woman!

Once a Naga fleeing in fear of a Garuda/ eagle assumed human shape and took refuge in a house. The lady of the house agreed to hide the person for a fee of 500 elephants.  After sometime the lady asked the Naga how and where from he was going to get 500 elephants. The Naga fell in love with her and revealed his real identity. The lady revealed this secret to another woman. That woman disclosed this to Garuda who was in the human form. Garuda took the human form to search for the fleeing Naga. The result was the poor serpent / naga was killed by the eagle. The moral of the story is NO WISE MAN SHOULD DISCLOSE A SECRET TO A WOMAN. This is a folk tale told along with the Naga stories

 

KING UDAYANA OF VATSA AND THE LUTE

Once Udayana , the king of Vatsa kingdom, was roaming in a forest  in pursuit of a deer. At that time he saw a serpent caught by a hunter. Moved with pity the king asked the hunter to release the serpent and promised him to give something else. The hunter replied, “My Lord, this is my livelihood. I maintain myself by exhibiting snakes. I ma a snake charmer. They dance to my tunes. On hearing this Udayana gave him his costly golden bracelet and then the hunter released the snake. The serpent was very much pleased with the king and it gave him a wonderful lute.

 

The hunter saw the name of King Sahsranika on the bracelet and so he took it to the king. This lead to the reunion of the consorts Sahsranika- Mrgavati who were separated for 14 years. Mrgavati was Udayana’s mother.

 

It is said that Vatsa raja used the lute to capture wild elephants.

 

STORY OF JIMUTA VAHANA

The feud between the Garuda and Naga has found a place in most of the Sanskrit literature. The fairy tale of Jimutavahana is very popular and Katha Sarit Sagra narrates this story twice.   Brhat Katha Manjari and 25 tales of Vetala also narrate this story. King Harsa has dramatized this story in his play Nagananda. Nagas freed from the danger of Garuda due to the sacrifice of Jimutavahana is the theme in the story.

PANCHATANTRA HAS TWO STORIES ON NAGAS

 

Pancha tantra, the oldest fable book in the world has two stories on Nagas

In the Story of Poor Brahmana and the Gold Granting serpent, we find the following story:-

 

Haridatta was a poor agriculturist and he had very little production in his field. One day he saw a snake in his field. He worshipped it and offered it milk. Next day when he came to the field he found a gold coin where he saw the snake the previous day. He started offering milk to the snake every day. And he obtained a gold coin every time he went to the field. Haridatta’s son, knowing this miracle, became very greedy. He thought the ant hill where the snake lives must be full of gold coins. So he planned to kill the snake and dug out the ant hill. The snake bit him and he died. His father felt very sorry. The snake gave Haridatta a costly jewel and asked him not to come again.

 

Different versions of the story are found in western literature as well. They have copied it from India. Greek story teller Aesop also copied lot from Pancha Tantra fables.

There is another story in Panchatantra where the snake appears as the son of human parents. On the day he was married to a woman, he assumed human form in the wedding night. His father burnt the snake’s skin and prevented him from returning to animal form again.

 

Such stories present Nagas as humans and animals.

 

–subham–

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 68 & 69 (Post No.4876)

Date- 3 April 2018

British Summer Time- 6-25

Compiled by S Ngarajana

Post No.4876

 

பாரதி போற்றி ஆயிரம் – 68

  பாடல்கள் 526 முதல் 549

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஐந்தாம் அத்தியாயமான கண்ணன் பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

ஐந்தாம் அத்தியாயம்: கண்ணன் பார்வையில் பாரதி

1 முதல் 24 வரை உள்ள பாடல்கள்

திருமாலின் அவதாரம் பத்தினுள் யான்மட்டும்

     திகழ்தனிப் பெருமை பெற்றேன்

ஒருமைப்பா டிதுவென்ன பாரதம் எங்கணும்

     உயர்திருக் கோயி லுற்றேன்

கருதரிய எண்ணற்ற காவியங் கள்இந்தக்

     காசினியில் பெற்று வந்தேன்

உருவினில் மனிதனாய் இருப்பினும் தெய்வமென

     உணர்ந்திடும் செயல்பு ரிந்தேன்

 

சிறையினில் பிறந்தவன் என்றபோ தும்பிறவிச்

     சிறைதனை நீக்க வந்தேன்

மறைந்துநான் வாழ்ந்திட நேர்ந்தபோ தும்மாயை

     மறைந்திடச் செய்து வாழ்ந்தேன்

கறையென்று சொல்லிடும் லீலைகள் புரிந்தாலும்

     களங்கமற் றுத்தி கழ்ந்தேன்

உறைந்திடும் களத்தினுள் உலகுய்ய கீதையை

     உரைத்துவழி காட்டி நின்றேன்

 

என்றுமென் தாசனாய் திகழ்அக் ரூவர்போல

     எண்ணற்ற பேர்க ளுண்டு

தன்னரும் தோழனாய் கருதியே இணைந்திட்ட

     தனஞ்செயன் நட்பு முண்டு

அன்பினால் வளர்த்தெந்தன் அன்னையாய் விளங்கிய

    யசோதை பாச முண்டு

நன்னிய ராதைபோல் நாயகி பாவத்தில்

     நாடிய பக்த ருண்டு

 

ஒவ்வொரு வருமெனை  ஒவ்வொரு நிலையினில்

    உணர்ந்திடக் கூடு மென்றால்

செவ்விய பல்வேறு நிலைகளில் ஒருவரே

     சேவிக்க இயல்வதுண்டோ

எவ்விதம் பாரதி நீமட்டும் எனக்குளே

      இத்தனை வடிவு கண்டாய்

இவ்விதம் இதற்குமுன் கண்டவர் யாருமிலை

     இனிவரப் போவ தில்லை

 

எந்தனைத் தாயாகக் கண்டபின் சேயாக

     எவ்விதம் காணயியலும்? – நெஞ்சில்

வந்திக்கும் குருவாக ஏற்றபின் சீடனாய்

     மதித்திடல்தா னெவ்விதம்? – மேலும்

விந்தையாய் அரசனொடு சேவகன் எனயிரு

     வியன் நிலை அமைவதுண்டோ? – இன்னும்

அந்தமார் நாயகன் தானேநா யகியாக

     ஆகிடும் நிலையுமுண்டோ?

 

என்றாலும் இத்தனை வடிவங் களில்காண

     என்னாலே இயலுமென்று என்றும்

என்மீது கொண்டதோர் பக்தியா லல்லவா

     எண்ணற்ற பாவடித்தாய் இங்கு

இன்றுமதை ஆய்வோர்கள் ஒவ்வொரு நிலைக்குமோர்

     இலக்கணம் கண்டவுந்தன் அரிய

பன்முகச் சிந்தனையின் படிமங்க ளைக்கண்டு

    பாங்குடன் போற்றுகின்றார்

 

போர்க்களம் தன்னில் பகவத்கீ தைதனை

     புகன்றிடும் போதினிலேநான்

யார்யாரின் வடிவில் இருக்கின் றேனென

     யாவையும் உரைக்கையிலே அதில்

பார்த்தனாய் உள்ளேன் பாண்டவ ருள்ளென

     பகர்ந்ததை நினைத்தாயோ? – கவிதைத்

தேர்தனில் என்னை இருத்தியே பாக்களாம்

     தெறிகணைத் தொடுத்தாயோ?

 

தெய்வத்தை உணர தோழமை முதலென

     தேர்ந்துனை அருச்சுனனாய் யாவும்

செய்தன்று என்னுடன் இருந்தவன் நீயென

     செப்பிடும் வகையினிலே எந்தன்

துய்யநற் குணங்களைத் தொகுத்தளித் தாயென்னை

     சிலிர்த்திடச் செய்துவிட்டாய் வாழ்வில்

உய்வுற வேண்டுவோர் உனைப்போல் தோழமை

     உணர்ந்தால் உயர்ந்திடுவார்

 

அன்னையின் வடிவினிலே எந்தன்

     அற்புத தரிசனம் நீயுணர்ந்தாய்

விண்ணையும் கடந்துசென்ற அந்த

     விராட்சொ ரூபத்தை உணர்த்திவிட்டாய்

தண்ணொளி தருநிலவும் பிறவும்

     தாய்தரு பொம்மைகள் எனக்கண்டாய்

நண்ணும்பொய் வேதங்கள் நீ

     நகைத்திடத் தந்ததும் சொல்லி வைத்தாய்

 

தந்தையின் நோக்கினிலே எந்தன்

     தன்மையை உரைத்திட முயலுகையில்

விந்தைப் பயித்தியமாய் கண்ட

     விசித்திரச் செயல்களைப் பாடலுற்றாய்

எந்தயி டத்திருப்பேன் நான்

     எங்கெதைச் செய்வேன் எவரறிவார்?

அந்தநி லைதன்னை மிக

    அற்புதம் என்றிடப் பாடிவைத்தாய்

 

சேவகன் எனநீயும் எனை

    செப்பிட முயல்கையில் யான்வியந்தேன்

ஏவலைச் செய்பவனாய் சொல்ல

    எவ்விதம் துணிந்தாய் எனநினைந்தேன்

காவல் புரிபவனாய் எனைக்

     காட்டிய பொழுதினும் மிகநயமாய்

மேவரும் தெய்வமென எந்தன்

    மேன்மையும் எளிமையும் கலந்துரைத்தாய்

 

அரசன் என்பவனை இந்த

     அகிலம் எவ்விதம் தூற்றுமென

தரமுடன் விரித்துரைத்தாய் எந்தன்

     சக்கரம் சுழன்ற மறுகணமே

தருமம் தழைத்ததென்றே எந்தன்

     தகுதியை யாவரும் உணரவைத்தாய்

கருத்தில் பதிந்திடவே இந்தக்

     கண்ணனின் தன்மையை எடுத்துரைத்தாய்

 

எங்கணும் வெற்றியே எதிலும் வெற்றி

    எனைப்போல் பெற்றவர் எவரும் இல்லை

இங்கெவர் இவ்விதம் உரைத்திட் டாலும்

    யாவும் தோல்வியாய் முடிதற் கூடும்

அங்கதை மாற்றியே தோல்வி நேர்ந்தால்

    அவன்செயல் என்றதை ஏற்பின் உள்ளப்

பங்கயம் தனில்நான் உதிப்பே னென்று

    பகர்ந்திட்ட சீடனென என்னைக் கண்டாய்

 

கண்ணனைக் குருவாகக் கொள்க யென்றே

     கருத்தற்ற கிழவனவன் சொன்னதாலே

நண்ணிய போதிலென் செயல்கள் கண்டு

     நாடியதே தவறென்று நினைத்து விட்டாய்

உண்மையுள மெய்ப்பொருளை ஓர்நா ளில்நான்

    உபதேசம் செய்தபோதில் எனையுணர்ந்தாய்

கண்ணிலுறும் தோற்றமல்ல ஆன்ம ஞானம்

    கருத்திலும் இறையுணர்வு என்று கண்டாய்

 

தீராத விளையாட்டுப் பிள்ளை யாக

     தெருவிலே செய்திட்ட குறும்பை யெல்லாம்

நேராகக் கண்டவன்போல் பாடி நின்றாய்

    நீயுமந்த கோபியருள் ஒருவன் தானோ?

சீரான அப்பாடல் கேட்கும் போதில்

     சிறுவயதின் நினைவெல்லாம் தோன்றச் செய்தாய்

ஆராத ஆவலுடன் எந்தன் உள்ளம்

    ஆயர்பா டிச்செல்ல ஏங்கு தப்பா

 

தனக்கொரு பெண்குழந்தை வேண்டு மென்று

     தவித்திட்ட யசோதையாம் எந்தன் தாயார்

எனக்கேயோர் பெண்ணைப்போல் அலங்க ரித்து

    ஏக்கமது தீர்ந்திட்டாள் அந்த நாளில்

உனக்குமது போலாசை வந்த தாலோ

     ஒருநொடியில் பெண்குழந்தை யாக்கி வைத்தாய்

அனந்தம்பா எனக்கெனநீ இசைத்திட் டாலும்

    அச்சின்னஞ் சிறுகிளிக்கோ ஈடே யில்லை

 

நாயகி பாவத்திலே என்னை

நாடிய பொழுதினிலே

தூயநின சிந்தையதும் திரிந்து

துயரப் பட்டதெலாம்

ஆயபல் கருத்துக்கள் அதிலே

ஆழ்கடல் முத்தெனவே

ஏயநற் கவிதைகள் நீயும்

ஏக்கமுற் றுப்பாடினாய்

 

பாங்கிகள் அருகிருந்தால் என்னைப்

பார்த்திடச் சென்றிடவே

ஆங்கவர் தடையெனவே அவரை

அனுப்பியே வைத்ததுவும்

ஓங்கிய மரங்களுள் காட்டில்

ஓய்வின்றித் தேடியதும்

தேங்கிய காதலினால் நீயும்

தெவிட்டாமல் பாடிவைத்தாய்

 

கன்னியர் பலரென்னைக் காதலித்தார் அக்

    காதலைக் கவியாகச் சொல்லிவைத்தார்

என்னையே பெண்ணாகப் பார்த்தவர்கள் புவியில்

    எங்குமெந் நாளிலும் இருந்ததில்லை

துன்னிய வடிவெலாம் நானாகினேன் என்று

     தூயநற் கவியாகப் பாடிவைத்தாய்

என்னதான் நினைத்துக் கண்ணம்மாவாய் கண்டு

    எந்தனை நீயங்கு உருவகித்தாய்

 

பெண்ணாக நீயென்னைக் கண்டிட்டாலும் அதில்

    பழம்பிற விக்கதையில் ஆணாக்கினாய்

திண்மையுள ராமன்நான் என்றபோது  உன்னை

    சீதையெனும் பெண்ணாகச் சொல்லிக்கொண்டாய்

வண்மையுள நரசிங்கம் நானாகிட நீ

     மகிமையுள மைந்தனெனும் உறவுசொன்னாய்

உண்மைநிலை இவற்றுக்குள் ஆய்ந்தாலன்றோ உன்

     உள்ளத்தின் பக்திதனை உணரக்கூடும்

 

பன்னிரு ஆழ்வார்கள் தாமளித்த அரிய

    பாசுரங் களென்னும் கடலினிலே

அன்புரு கவிஞநீ மேகமாகி பல

     அருங்க ருத்துக்களாம் நீரைமொண்டு

இன்னிசைக் கலந்து என்மேலே தேன்போல்

     இனியகவி மழையாகப் பொழிந்துவிட்டாய்

என்றுமென் நெஞ்சினுள் நினைவென்னும் நல்ல

    ஏற்றமிகு பயிரினை விளையவைத்தாய்

 

நண்பனாய்க் காண பார்த்தனுண்டு எனை

    நாயகனாய்க் காண ராதையுண்டு

திண்ணிய குருவாய் சாந்தீபினி பண்பு

    திகழ்கின்ற சீடனுக்கு சாத்யகியே

நண்ணிய தாயென யசோதையே நாளும்

    நாடும்பிள்ளைமைக்கு கோபியரே

எண்ணிட இதுபோல் நாயகிக்கு உவமை

    எவருண்டு எவ்விதம் பாடினாயோ?

 

பற்பல மருத்துவம் இருந்தாலும் அதன்

     பாதைகள் வெவ்வே றானாலும்

முற்றிய பிணியைத் தீர்ப்பதற்கே அவை

    முயன்றிடும் என்பது இயல்பன்றோ?

அற்புத பாவனை எதிலேனும் மக்கள்

    அறிந்தெனை நாடி அடைந்திங்கு தம்மை

ஏற்றிடும் பிறவிப் பிணிதீர நீ

    ஏந்திய மருத்துவ நெறிகளன்றோ?

 

முனிவருள் பிருகு தேவரிஷி தம்முள்

    முகடெனும் நாரதன் ருத்திரருள்

முனிந்திடும் சங்கரன் வசுக்களிலே நான்

     மூண்டெழும் அக்கினி தளபதியுள்

இனியதமிழ் முருகன் யட்சருளே எவரும்

     ஈடில்லா குபேரன் எனகீதை

தனில்சொன்ன நானினி கவிஞருள்நான் என்றும்

     தமிழ்க்கவி பாரதி என்பேன்வாழி!

 

 

கண்ணன் பார்வையில் பாரதி முற்றும்

 

xxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 69

  பாடல்கள் 550 முதல் 569

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி துவங்குகிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

1 முதல் 20 வரை உள்ள பாடல்கள்

வானப் பறவையென வாழினும் பூமியில்

கான மிசைக்கும் கருங்குயில்நான் எங்கும்

பயிலும்நல் பாட்டோச கேட்டாலே மக்கள்

குயிலின் குரலென்றே கூறி மகிழ்ந்திடுவார்

ஆடலும் பாடலும் ஆங்கொன்றி னுக்கொன்று

நாடும் துணையாகி நானிலத்தில் தாமிணையும்

ஆட மயிலென்றும் அவ்வாறே இன்சுவையாய்ப்

பாடக் குயிலென்றும் பாங்காய் உரைத்திடுவார்

ஆனாலும் என்ன பயன் ஆடும் மயிலுக்குத்

தானாக முன்வந்து தேசியச் சின்னமெனும்

உன்னதத் தன்மை உவந்தளித்தா ரென்னை

என்னகார ணத்தாலோ எல்லாரும் மறந்திட்டார்

இவ்விதம் நேர்ந்ததை எண்ணிக் கலக்கமுற

செவ்வையாய் ஓங்கும் சிறப்பளித்தாய் பாரதியே

முப்பெரும் பாட்டெழுதி மூன்றினுள் ஒன்றாக

இப்பறவை தன்னை இலக்கிய மாக்கிவிட்டாய்

கண்ணன் திரௌபதிக்குக் காணும் வரிசையில்

கன்னங் கரியயெனைக் காவிய மாக்கிவிட்டாய்

கண்ணன் கடவுள் கருதுமுயர் பாஞ்சாலி

பெண்டிரில் தெய்வமென பேசும் பெருமையுற்றாள்

என்ன தகுதி இவரோ டிணைத்திந்த

சின்னஞ் சிறுகுயிலை சீர்பெறச் செய்தாய்

குயிலெங்கும் கூவும் குரலோசை தன்னை

இயல்பாய் செவிமடுப்பார் எங்கணும் உண்டு

அதிலுறும் இசையை அனுபவித் தாங்கே

மதிப்போர் சிலரேனும் மாநிலத்தில் தாமுண்டு

கேட்ட இசைதன்னில் காவியம் கண்டிட

பாட்டுத் தலைவாநின் போல்வேறு யாருண்டு?

புதுவை நகரின் புனிதமுள்ள தோப்பு

எனைத்தந்து உந்தன் எழில்கவிதை பெற்றதுவோ?

அன்றாடம் செல்லும் அருமையான தோப்பதனில்

அன்று நிகழ்ந்திட்ட அற்புதம் தானெதுவோ?

எந்நாளும் கேட்கும் எமதுகுர லோசைதான்

அந்நாளில் உன்மனதை அவ்விதமேன் ஈர்த்ததுவோ?

உன்பாட்டில் எல்லோரும் உள்ளம் உருகிடுவார்

என்பாட்டில் நீமகிழ என்னதான் உள்ளதுவோ?

என்னதான் காரணம் யாருமறி யாரெனினும்

என்பெயரால் காவியம் இன்தமிழ்தான் பெற்றதுவே!

பாரதிநின் பாடல்களில் காதல் தன்னைப்

     பாடாத இடமென்று எதுவும் இல்லை

பாரதனில் நாம்காணும் காட்சி யெல்லாம்

     பாங்குடைய காதலன்றி ஏது மில்லை

சாரமுள அதன்சிறப்பைச் சொல்வ தற்கும்

     சாகாத காவியமாய்ப் படைப்ப தற்கும்

சீராகஎன் கதையைத் தேர்ந்திட் டாயோ?

     சிறுகுயிலின் காதலென இசைத்திட் டாயோ?

குயில் பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

xxxx

 

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 2 April 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 4875

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் 

 

பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் 

 

ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது!!!)

 

ஸர்ப்ப , நாக என்ற இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்கள் ஸ்நேக் (ஸ் நாக(S+nake)) ஸெர்பெண்ட் (serpent), ஆகியன வந்தன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள ஊர்ப் பெயர்களில் ஆயிரக் கணக்கான பெயர்களில் நாக அல்லது ஸர்ப்ப வருகின்றன. இன்றும் பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமியையும் வருண பஞ்சமியையும் கொண்டாடும் நாடு நமது இந்தியாதான். நாக பாஸம் என்ற அஸ்த்ரத்தின் நினைவாக நமது ஏவுகணைகளுக்கும் நாம் ‘நாக’ பெயர் சூடியுள்ளோம்.

 

 

நாகர்- பாண்டவர் மோதல் காரணமாகப் புறப்பட்ட மாய தானவன் என்ற நாகன் தென் அமெரிக்க மாயன் (Mayan Civilization) நாகரீகத்தை ஸ்தாபித்ததையும், குப்தர் கல்வெட்டுகளில் பலர் நாகர் பெயர்கள் இருப்பதையும், சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் மேற்பட்ட நாகர்கள் பெயர்கள் இருப்பதையும், சிந்து சமவெளி- ரிக் வேதம் ஆகியவற்றில் நாக ராணி (Snake Queen) பற்றி காணப்படுவதையும், நல்லோர் அவையில் புகுந்த நாகத்தைக்கூட இந்துக்கள் கொல்ல மாட்டார்கள் என்ற இலக்கியக் குறிப்புகளையும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வடித்தேன். இப்போது மேலும் ஒரு புத்தகததைப் படித்தேன். சுவையான குறிப்புகளைச் சுவைத்தேன்; அவைகளை உங்களுடன் பகிர்வேன்.

காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் ராஜ தரங்கிணி என்ற நூலை கல்ஹணர் என்ற பிராஹ்மணன் 1000 ஆண்டுகளுக்கு முன் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதினான். அவனுக்கு முன்பாக நீல மத புராணம் என்ற புஸ்தகத்தில் கூறிய பல விஷயங்களை அவனும் குறிப்பிட்டுள்ளான்.

 

காஷ்மீருக்கும் நாகர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. எததனையோ நாகர் பெயர்களை மஹாபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிட்டாலும் அதிகமான நாகர் பெயர்களின் பட்டியல் நீலமத புராணத்தில்தான் இருக்கிறது. 527 நாகர்களின் பெயர்கள் இதில் உள்ளன!

 

அபுல் பாஸல் என்பவர் மொகலாய மன்னன் அக்பரின் சபையில் பிரதம மந்திரி. அவர் எழுதிய நூலிலும் காஷ்மீரில் நாகர்கள் பற்றிய நம்பிக்கைககள், கதைகளைத் தொகுத்து நமக்கு அளித்துள்ளார்.

 

தென்னாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில்களே இல்லை என்றே சொல்லலாம்

 

கிரேக்க நாட்டில் பாம்பு வழிபாடு

நம்முடைய புராண விஷயங்களைக் காப்பியடித்து உருத்தெரியாமல் திரித்தவர்கள் கிரேக்கர்கள்- கிருஷ்ணர் செய்த பல லீலைகளை ஹெர்குலீஸ் செய்ததாக கிரேக்கர் சொல்லுவர். கிருஷ்ணன் கொடிய காளீயன் என்ற பாம்பை அடக்கி ஒடுக்கியது போல ஹெர்குலீஸும் ஒரு பாம்பை த்வம்சம் செய்ததாகக் கதை. அபல்லோ (Apollo Vs Python) என்னும் தெய்வம் பைதானுடன் (மலைப்   பாம்பு) சண்டை இட்டதாக இன்னும் ஒரு கதை.

 

கிரேக்க நாட்டில் மலைக் குகைகள், பாதாள அறைகள் ஆகியவற்றில் இருந்து ஆரூடம் சொல்லுவோர் மீது கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

 

கடமஸ் (Cadmus) என்பவன், அவனது ஆட்களைக் கொன்ற பாம்பை சண்டை போட்டுக் கொன்றதாகவும் புராணக் கதைகள் பேசுகின்றன.

 

எகிட்னா (Echidna) என்ற ஸர்ப்ப தேவதையைப் புணர்ந்து நாக வம்ஸத்தை ஹெர்குலீஸ் தோற்றுவித்தாராம்.அவர்கள் (Scythians) சிதியர், சகரர் எனப்படுவர்.

 

கிரேக்க நாட்டில் டெல்பி, த்ரோபோனியஸ் ஆகிய இடங்களில் குறி சொல்லும் அறைகளில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தன எபிடேரஸ் என்ற இடத்தில் இருந்த பாம்புகளுக்கு இரண்டாம் நூற்றாண்டு வரை பால் வார்க்கப்பட்டது. புனித இடங்களைப் பாது காக்கவும், குறிகள் சொல்லவும், கடவுளைக் குறிக்கவும், நோய்களைத் தீர்க்கவும் பாம்புகள் உதவுவதாக கிரேக்கர் கதைகள் உள்ளன.

 

அலெக்ஸாண்டரின் தாய் ஒலிம்பியாஸ் அவரது வீட்டில் ஒரு பாம்பு வளர்த்ததாக ப்ளூடார்ச் (Plutarch) எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் ஒரு நாக கன்னிகைக்குப் பிறந்ததாக லூஸியன்(Lucian)  எழுதி வைத்தார். ஒரு வேளை நாகர் வம்ஸத்தில் பிறந்த பெண், அவருடைய தாயார் போலும்!

 

 

இதாலியில் இந்தியப் பாம்புகள் இறக்குமதி

ரோமாபுரியை ஆண்ட டைபீரியஸ் Tiberius (கி.பி.14-37) ஒரு செல்லப் பிராணியாக ஒரு நாகத்தை வளர்த்து வந்தார். ஒரு நாள் எறும்புகள் அதைக் கடித்துக் குதறி இருந்ததைக் கண்டார். பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு நாகப் பாம்பை இறக்குமதி செய்து ஏதென்ஸ் நகரத்தில் ஜூபிடர் ஒலிம்பியஸ் கோவிலில் வைத்தார். பாம்பைக் கொன்ற பாபத்துக்குப் பரிகாரம் செய்ய இப்படி காணிக்கை கொடுத்தார் போலும்!

 

மினர்வா (Minerva) என்னும் தேவதை லவாகூன் என்பவரைக் கொல்ல இரண்டு பாம்புகளை அனுப்பியதாக ரோமாபுரி வரலாறு சொல்லும்.

 

அந்த இடம் புனிதமானது என்பதற்காக சுவரில் இரண்டு பாம்பு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்.

 

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிபியோ ஆப்ரிகானஸ் (Scipio Africanus) என்ற ரோமாபுரி தளபதி ஒர் நாகத்தால் (நாக கன்னிகை) வளர்க்கப்பட்டாராம்.

 

அகஸ்டஸ் சீசரின் தாயார் அடியா ( Atia), அகஸ்டஸை ஒரு நாகத்திடம் பெற்றுக் கொண்டதாக நம்பினார். இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்டவர் எல்லாம் நாக வம்ச மனிதர்களாக இருக்க வேண்டும்.

 

கிரேக்க ரோமானிய நாணயங்களில் பாம்பு உருவங்கள் இருப்பது 2000 ஆண்டுக்கு முந்தைய நம்பிக்கைகளை உறுதி செய்கின்றன.

அழகிகளும் நாகங்களும்!

 

ஆர்கிவ் ஜோனோ (Argive Juno) கோவில் அருகில் ஒரு  இருண்ட பெரிய குகையில் ஒரு பாம்பு வசித்ததாக ஏலியன் (Aelian) எழுதுகிறார். லாடியத்தில் (Latium) வசித்த கன்னிப் பெண்கள் உண்மையில் கற்புக்கரசிகளா என்று கண்டறிய ஆண்டுதோறும் இந்தக் குகைக்குள் கன்னிப் பெண்கள் அனுப்பப்படுவராம். அவர்கள் கொடுக்கும் உணவுகளை அந்த நாகம் ஏற்றால் அவர்கள் கன்னித் தன்மை அழியாதவர் என்பது உறுதி ப்படுவதோடு அவ்வாண்டு அமோக விளைச்சல் கிடைக்குமாம். இதே போல் எபிரஸ் (Epirus) என்னும் இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தனவாம். அங்கு கன்னிப் பெண்கள் நிர்வாண நிலையில் உணவுகளைக் கொண்டு செல்வராம். பாம்புகள் சாப்பிட்டால் நல்ல அறுவடை நடக்குமாம்.

இப்படிப் பாம்புகள் பற்றிப் பல நம்பிக்கைகள் இருந்ததை மேற்குறித்த   கிரேக்க ரோமானிய எழுத்தர்கள் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் அறிகிறோம்.

 

My Old Research Articles

நாகர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்/

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்டநாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர்தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால்பாண்டவர்களுக்கு …

நாகர் கதை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்-கதை/

அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் –பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் …

 

Tamil | Tamil and Vedas | Page 64

https://tamilandvedas.com/category/tamil/…:/tamilandvedas…/64/ –

8 Dec 2012 – மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன? மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்பாண்டவர்கள்– நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள்படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் …

நாக ராணி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாக-ராணி/

Minoan Snake Goddess 1600 BC. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாகராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் …

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் …

swamiindology.blogspot.com/2016/04/post-no-2722.html

13 Apr 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). sesha, pullaboothangudi. Wave. பாம்புத் தலை வடிவில் பேரலைகள்!! நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ …

 

Picture from Meera Rai post

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

Serpent Queen:Indus Valley to Sabarimalai

17 Jun 2012 – British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with theIndus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes …

 

 

 

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

 

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

 

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

Are Mayas, Indian Nagas?

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

 

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

 

–சுபம்–

 

SERPENT WORSHIP IN GREECE AND ITALY (Post No.4874)

WRITTEN by London Swaminathan 

 

Date: 2 April 2018

 

Time uploaded in London –  13-34  (British Summer Time)

 

Post No. 4874

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Worshipping snakes is a very common sight in India. From Kashmir to Kanyakumari we have thousands of towns and villages named after the snakes. Sanskrit words Naga and Sarpa gave birth to English words such as S +naga (snake) and Serpent (serpent). Thousands of snake (Naga) statues are worshipped in almost all famous temples in South India. Kashmir’s History book Nilamata purana and Kalahana’s Raja Tarangini give lot of stories about Naga Kings. Naga Panchami and Varuna Panchami, celebrating the snakes, are followed by devoted Hindus even today. Nilamata Purana CONTAINS AN EXTENSIVE LIST OF THE NAGAS. IT GIVES THE NAMES OF 527 NAGAS. It surpasses in length of all lists from Sanskrit literature.

 

Abul- Fazl, Prime Minister of Moghul Emperor Akbar, had collected interesting notes from Kashmir snake worship. He also mentioned the miraculous powers of Nagas.

 

Naga rani (snake queen) Naga worship were found in the Vedas and Indus valley (Please read my previous article)

Snake worship in Greece

In Greece serpent became the guardian of the city and healing god. Similar to Hindu myths of Krishna subduing Serpent Kaliya, Greeks have Apollo destroying dragon Python. Cadmus fought and killed the dragon that devoured his men.

Though Hercules is said to be the destroyer of serpents, he was the progenitor of snake race through Echidna.

 

Like Hindus feeding snakes living in ant hills, Greeks fed the snakes in the caves of Delphi and Trophonius. The serpents figure in Greek mythology as the representative of gods, or as delivering oracles, or guarding sacred places.

 

The great centre of Serpent worship was Epidaurus where the serpents were kept and fed until the time of Pausanias (second century CE).

Plutarch tells us that Olympias, mother of Alexander, kept tame snakes in her house. Philip and Lucian believed that Alexander was born of a serpent.

 

Tiberius imported Snakes from India!

Lanuvium, 16 miles from Rome, had a large and dark grove, where there was a temple of Argive Juno. Aelian tells us that virgins of Latium were taken in to the cave annually to ascertain their chastity, which was indicated by the dragon. If the serpent accepted their offering, not only was their purity  confirmed but also a fertile harvest was assured.

 

Two snakes sent by Minerva to destroy Laocoon for his attempt to undeceive the fated Trojans. Two serpents were painted on the walls to indicate the palace was sacred.

Roman Scipio Africanus believed that he was nursed by a snake.

Emperor Tiberius kept a tame serpent for his amusement but one morning when he found it was eaten by ants, he procured a large serpent from India and placed it in the temple of Jupiter Olympias at Athens.

My old articles on Nagas:–

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

Serpent Queen:Indus Valley to Sabarimalai

17 Jun 2012 – British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with theIndus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes …

 

Nagas from Meera Rai Post

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

 

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

 

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

Are Mayas, Indian Nagas?

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

 

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

 

–subham–

 

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? (Post No.4873)

Date: 2 April, 2018

 

 

Time uploaded in London- 5- 59 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4873

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்?

 

ச.நாகராஜன்

 

உலகின் முதல் காதல் சரித்திரம் நள- தமயந்தி கதை. இதை மஹாபாரதம் விரிவாகக் கூறுகிறது. ஆனால் உலகின் ஆதி நூலான வேதத்தில் நளனைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.

சுக்ல யஜுர் வேதத்தில் சதபத பிராமணத்தில் நளனைப் பற்றிக் கூறப்படுகிறது.

மஹாபாரதத்தில் கூறப்பட்ட நள – தமயந்தியின் அழகிய கதையை வைத்து ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டன.

இவற்றில் பல இன்னும் அச்சேறாமல் சுவடிகளாகவே இருப்பது வருந்தத் தக்கது.

 

ராஷ்ட்ர கூட மன்னனான மூன்றாம் இந்திரனின் அரசவையில் ஆஸ்தான புலவராக இருந்தவர் த்ரிவிக்ரம பட்டர். போஜ மஹாராஜன் அவரைப் பற்றித் தன் நூலான சரஸ்வதிகண்டாபரணம் என்ற நூலில் குறிப்பிடுகிறான்.

அவர் நள சம்புவை இயற்றிய காலம் உத்தேசமாக கி.பி.915 என்று நிர்ணயிக்கப்படுகிறது.

நள சம்பு அல்லது தமயந்தி கதா என்ற நூல் ஏழாம் அத்தியாயத்துடன் நிற்கிறது. நூல் முற்றுப் பெறவில்லை.

சம்பு காவியம் என்றாலே அது கவிதையும் உரைநடையும் கலந்த ஒரு நூல் என்று பொருள்.

 

இது ஏன் முற்றுப் பெறவில்லை என்பதற்குச் சுவையான கதை ஒன்று பாரம்பரியமாக வழங்கி வருகிறது.

 

கதை இது தான்:

தேவாதித்யா என்ற ஒரு பிராம்மணன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னராகத் திகழ்ந்தான். ஒரு முறை அவன் வெளியூர் செல்ல நேர்ந்தது.

 

அந்தச் சமயம் இன்னொரு நகரிலிருந்து வந்த புலவன் ஒருவன் தன்னை எதிர்கொள்ளும் ஒருவரை உடனடியாக அரசவைக்கு வருமாறு சவால் விடுத்தான். இல்லையேல் தானே சிறந்த அறிஞன் என்பதற்கான ஜயபத்ரம் தருமாறு மன்னனை வேண்டினான்.

மன்னனோ உடனடியாக தேவாதித்யாவை அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பினான். ஆனால் தேவாதித்யாவோ ஊரில் இல்லை.

 

அவரது மகனான த்ரிவிக்ரம பட்டர் தனது அறியாமையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார்.

 

சரஸ்வதி தேவியிடம் மனதார வேண்டினார். சரஸ்வதி அவரிடம் ‘உனது தந்தை திரும்பி வரும் வரை உன் நாவில் நான் அமர்வேன், கவலைப்படாதே’ என்று அருளினாள்.

சரஸ்வதியின் அருளினால் சவாலுக்கு அழைத்த புலவரை எதிர்கொண்டு த்ரிவிக்ரம பட்டர் வென்றார்.

அவரைப் பாராட்டிய மன்னன் சகல வெகுமதிகளையும் கொடுத்து அவரை கௌரவித்தான்.

 

சரஸ்வதி தன் நாவில் இருக்க்ம் போதே ஒரு காவியத்தை இயற்ற த்ரிவிக்ரம பட்டர் எண்ணினார்.

 

“புண்ய ஸ்லோகோ நளோ ராஜா” என்று நள சரித்திரத்தைத் தொடங்கினார்.

 

ஏழாவது அத்தியாயத்தை முடித்த அன்று அவரது தந்தை தேவாதித்யா ஊர் திரும்பினார்.

 

உடனடியாக சரஸ்வதி அவரது நாவை விட்டு அகல நூல் முற்றுப் பெறாமல் அப்படியே நின்று விட்டது!

 

மிக அருமையான சிலேடையும் அரிதான செய்யுள்களின் அமைப்பையும் கொண்டுள்ளது நள சம்பு.

ஆகவே அதன் பல ஸ்லோகங்கள் பின்னால் வந்த கவிஞர்களால் எடுத்துக்காட்டப்படுவது வழக்கமானது.

நள சம்புவிற்கு சில உரைகள் உண்டு.

அனைவராலும் பாராட்டப்படும் நூலாக நள சம்பு இன்றளவும் திகழ்கிறது!

***

IF YOU SALUTE ELDERS YOU GET FOUR BENEFITS- MANU’S ASSURANCE (Post No.4872)

WRITTEN by London Swaminathan 

 

Date: 1 April 2018

 

Time uploaded in London –  18-18 (British Summer Time)

 

Post No. 4872

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

FOLLOWING VERSES ARE FROM THE SECOND CHAPTER OF MANU SMRTI ALIAS MANAVA DHARMA SHASTRA

 

MY COMMENTS:

The interesting points in this section of the Second Chapter of Manu Smrti are:

1.Why should one stand up before elders?

When a person who commands, respect comes suddenly into your room, you get a shock. If you stand up and show respect, you slowly come out of the shock. The reason being the person who is shown respect says something nice to you.

2.How to greet?

Hindu way of greeting a person is very unique. You say Hello by introducing you fully with the details of your Kula, Gotra (clan) who are your forefather seers, what Veda you learn and then say I salute you by touching his feet. This is unique to Hindus. But they never say all these things before of a sanyasi (an ascetic)because he considers everyone equal irrespective of his Kula or Gotra.

  1. Elders always greet the youngsters Long Live (with health and wealth).
  2. Priests, Vedic scholars and educated get respect even if they are young.

5.Friendship rules are interesting. Artists get more value. Verse 2-134

6.Five Criteria for Respect is very interesting: Educated are more respected than aged or relationship, wealth etc. Verse 2-136

  1. Right of way rules, road transport rules are very interesting- verse 2-138

8.Definition of Acharya, Upadhyaya, Guru etc is also interesting

9.Mother is 1000 times more respectful than father (verse 2-145) –shows the highest respect for women.

 

Manu Smrti- Second Chapter

 

WHY SHOULD YOU STAND UP BEFORE ELDERS?

2-119. One must not sit down on a couch or seat which a superior occupies; and he who occupies a couch or seat shall rise to meet a superior, and afterwards)salute him.

2-120. For the vital airs of a young man mount upwards to leave his body when an elder approaches; but by rising to meet him and saluting he recovers them.

  1. He who habitually salutes and constantly pays reverence to the aged obtains an increase of four things, (viz.) length of life, knowledge, fame, and strength.
  2. After the word of salutation, a Brahmana who greets an elder must pronounce his name, saying, ‘I am N. N.’ Also announce that I belong to this clan, learning this Veda, Shaka, his forefather seers etc.
  3. To those persons who, when a name is pronounced, do not understand the meaning of the salutation, a wise man should say, ‘It is I;’ and he should address in the same manner all women.
  4. In saluting he should pronounce after his name the word bhoh; for the sages have declared that the nature of bhoh is the same as that of all proper names.

 

Long Live Greeting!

  1. A Brahmana should thus be saluted in return, ‘May’st thou be long-lived, O gentle one!’ and the vowel ‘a’ must be added at the end of the name (of the person addressed), the syllable preceding it being drawn out to the length of three matras.

e.g swaminathaaa, kartikeyaaa

  1. A Brahmana who does not know the form of returning a salutation, must not be saluted by a learned man; as a Sudra, even so is he.
  2. Let him ask a Brahmana, on meeting him, after (his health, with the word) kusala, a Kshatriya (with the word) are you free from diseases?, a Vaisya (with the word) are you getting enough money?, and a Sudra (with the word) are you healthy?.

Even Young Vedic Scholars must be respected

2-128. He who has been initiated (to perform a Srauta sacrifice) must not be addressed by his name, even though he be a younger man; he who knows the sacred law must use in speaking to such (a man the particle) bhoh and (the pronoun) bhavat (your worship).

  1. But to a female who is the wife of another man, and not a blood-relation, he must say, ‘Lady’ (bhavati) or ‘Beloved sister!’
  2. To his maternal and paternal uncles, fathers-in-law, officiating priests, (and other) venerable persons, he must say, ‘I am N. N.,’ and rise (to meet them), even though they be younger (than himself).
  3. A maternal aunt, the wife of a maternal uncle, a mother-in-law, and a paternal aunt must be honoured like the wife of one’s teacher; they are equal to the wife of one’s teacher.
  4. (The feet of the) wife of one’s brother, if she be of the same caste (varna), must be worshipped every day; but (the feet of) wives of (other) paternal and maternal relatives need only be worshipped on one’s return from a journey.
  5. Towards a sister of one’s father and of one’s mother, and towards one’s own elder sister, one must behave as towards one’s mother; (but) the mother is more venerable than they.

Who can be Your Friends? Friendship Rules

2-134. Fellow-citizens are called friends and equals though one be ten years older than the other, men practising the same fine art though one be five years older than the other, Vedic scholars though three years but blood-relations only if the difference of age be very small.

  1. Know that a Brahmana of ten years and Kshatriya of a hundred years stand to each other in the relation of father and son; but between those two the Brahmana is the father.

 

Five Criteria for Respect

2-136. Wealth, kindred, age, the due performance of rites, and, fifthly, sacred learning are titles to respect; but each later-named cause is more weighty than the preceding ones. That is the educated are the most respectful

  1. Whatever man of the three (highest) castes possesses most of those five, both in number and degree, that man is worthy of honour among them; and (so is) also a Sudra who is ninety years old.

Right of Way, Road Rules

2-138. Way must be made for a man in a carriage, for one who is above ninety years old, for one diseased, for the carrier of a burden, for a woman, for a Brahmana, for the king, and for a bridegroom.

  1. Among all those, if they meet at one time, a Brahmana and the king must be most honoured; and if the king and a Brahmana meet, the latter receives respect from the king.

 

Teacher

  1. They call that Brahmana who initiates a pupil and teaches him the Veda together with the Kalpa and the Rahasyas, the teacher.

Upadhyaya

  1. But he who for his livelihood teaches a portion only of the Veda, or also the Angas of the Veda, is called the sub-teacher (upadhyaya).

Guru

  1. That Brahmana, who performs in accordance with the rules (of the Veda) the rites, the Garbhadhana (conception-rite), and so forth, and gives food (to the child), is called the Guru (the venerable one).

Officiating Priest

  1. He who, being (duly) chosen (for the purpose), performs the Agnyadheya, the Pakayagnas, (and) the (Srauta) sacrifices, such as the Agnishtoma (for another man), is called (his) officiating priest.

Equal to Parents

  1. That (man) who truthfully fills both his ears with the Veda, (the pupil) shall consider as his father and mother; he must never offend him.

MOTHER 1000 TIMES MORE VENERABLE THAN FATHER

2-145. The teacher  is ten times more venerable than a sub-teacher (upadhyaya), the father a hundred times more than the teacher, but the mother a thousand times more than the father.

  1. Of him who gives natural birth and him who gives the knowledge of the Veda, the giver of the Veda is the more venerable father; for the birth for the sake of the Veda ensures eternal rewards both in this life and after death.
  2. Let him consider that he received) a (mere animal) existence, when his parents begat him through mutual affection, and when he was born from the womb (of his mother).

TO BE CONTINUED…………………….

பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)

பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 1 April 2018

 

Time uploaded in London –  15-06 (British Summer Time)

 

Post No. 4871

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மநு நீதி நூல்- Part 14 (Post No 4871)

 

குருவின் ஆசனத்திலும் படுக்கவும் உட்காரவும்  கூடாது; ஒரு மாணவன் தனது படுக்கையில் படுத்திருக்கும் போது அல்லது  உட்கர்ந்திருக்கும்போது குரு வந்தால் எழுந்து நின்று வந்தனம் (வணக்கம்) செய்ய வேண்டும். 2-117 (235)

 

வயதிலும் கல்வியிலும் பெரியவர்களானவர்கள் வரும்போது ஒருவன் உடகார்ந்திருந்தால் அவனுடைய பிராண வாயு மேலெழுந்து வெளியே செல்ல முற்படும்; எழுந்து நின்றால் அது சம நிலையை அடையும். 2-118 (236)

 

 

நான்கு கிடைக்கும்!

 

பெரியார்களை நாள்தோறும் வந்தனம் செய்கிறவனுக்கும் தரிசிக்கிறவனுக்கும் நான்கு கிடைக்கும்:- அவையாவன- ஆயுள், கல்வி, புகழ்/கீர்த்தி, பலம் 2-119 (237)

 

பெரியோர்களுக்கு வணக்கம் சொல்லுகையில் தன்னுடைய பெயர், குலம், கோத்திரம், தான் படிக்கும் வேதம், ஷாகை ஆகியவற்றைச் சொல்லி அபிவாதனம் செய்ய வேண்டும்.

அபிவாதனம்– மிகவும் அடக்கத்துடன் குனிந்து எதிரேயுள்ள பெரியோரின் காலைத் தொட்டுச் சொல்லுதல்

 

யாருக்கு ஆசீர்வாதம் செய்யத் தெரியாதோ அவர்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் சொல்லுகையில் அபிவாதயே மந்திரம் சொல்லத் தேவை இல்லை. தன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும்

 

பெயரைச் சொன்ன பின்னர் ‘போ’ (தாங்கள் = தங்களை வணங்குகிறேன்) என்று சொல்லி முடிக்க வேண்டும்.அந்த சப்தமானது பெயர்களின் ஸ்வரூபம் (நிறைவு பெற்றது) என்று ரிஷிகளால் சொல்லப்படுகிறது.

 

 

சிறியோர்கள் வந்தனம் சொல்லும்போது பெரியோர்கள் “நீ நீண்டகாலம் வாழ்வாயாக” என்று வாழ்த்த வேண்டும்; சம்ஸ்க்ருதத்தில் ஆயுஷ்மான்  பவ,

என்று வந்தனம் சொன்னவர் பெயரை நெடில் எழுத்தில் சொல்ல வேண்டும் (உ.ம். ஆயுஷ்மான்  பவ ஸ்வாமிநாதா, கார்த்திகேயா)

 

இவ்வாறு எந்தப் பிராமணனுக்கு ஆஸீர்வாதம் செய்யத் தெரியவில்லையோ அவனுக்கு வந்தனம் செய்யக்கூடாது- அவன் சூத்திரனுக்குச் சமம்.

 

இவ்வாறு வணக்கம் செய்பவனை – பிராமணனாக இருந்தால் குசலம் (நலமாக இருக்கிறீர்களா?) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா? எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா? என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா? என்றும் கேட்கவேண்டும்.

யாகம் செய்வதற்காக தீக்ஷை அணிந்தவன் – வயதில் சிறியவனாக இருந்தாலும் அவரைப் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. ‘போ’, ‘பவான்’ (தாங்கள்) என்றே அழைக்க வேண்டும்

 

வயதான மாதர்கள் பிறருடைய மனைவியாகவோ, உறவினர் அல்லாதவர்களாகவோ இருந்தால் ‘பவதி’, ‘சுபகே’, ‘பகினி’ என்று அழைக்க வேண்டும் அதாவது அவர்களை அக்கா, அம்மா, அம்மணி என்ற மரியாதையுடன் நடத்துவதாகும்.

 

அம்மான், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், யாக புரோகிதர்கள், குரு  வந்தால் எழுந்து நின்று  அபிவாதனம் செய்து மரியாதை செய்தல் வேண்டும்.

அண்ணன் மனைவியை நாள் தோறும் வணங்க வேண்டும். ஞாதி- சம்பந்திகளின் மனைவிமார்களை ஊருக்குப் போய் வந்தபோது மட்டும் வணங்க வேண்டும்- 132

பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரிய தாய், சிறிய தாய்- ஆகியோரிடத்தில் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும்; ஆனால் தாயார், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் உயர்ந்தவள்

யாரை நண்பன் ஆக்கலாம்?

ஓர் பட்டணம், ஊரில் வசிப்பவன் தனக்கு பத்து வயது மூத்தவனோடும், சங்கீதம் முதலிய வித்தைகள் தெரிந்தவன் ஆனால் ஐந்து வயது மூத்தவனோடும், வேதம் தெரிந்திருந்தால் மூன்று வயது மூத்தவனோடும், ஞாதி ஆகியோருடன் கொஞ்சம் வயது வயது மூத்தவனோடும் சிநேகம் செய்யலாம் (நட்புறவு கொள்ள வேண்டும்).

 

பத்து வயதுள்ள பிராமணனையும் 100 வயதுள்ள க்ஷத்ரியனையும் தகப்பன்- பிள்ளயாக கவனிக்க வேண்டியது. அதாவது பிராமணனை தகப்பன் மரியாதையுடனும் க்ஷத்ரியனை புத்திரன் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.

 

பூஜிக்கத்தக்க 5 அம்சங்கள்

நியாயமாய்த் தேடிய பொருள், சிற்றப்பன் முதலிய உறவினர்கள்,  உயர்ந்த வயது, நல்ல ஒழுக்கம், கல்வி ஆகிய ஐந்தும் ஒருவனை பூஜிப்பதற்குரிய /மதிப்பதற்குரிய ஐந்து அம்சங்கள் –  வரிசைக் கிரமத்தில் பார்த்தால் இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது. இந்த ஐந்து அம்சங்/தகுதி/களில் ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள்/தகுதிகள் உடையோரை ஒன்று மட்டுமே உடையவர்கள் பூஜிக்க வேண்டும்; 90 வயதுக்கு மேற்பட்ட சூத்திரர்களுக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்.

 

90 வயதுக்கு மேற்பட்டவன், நோயாளி, சுமையாளி, மாதர்கள், அநுஷ்டானமுள்ள பிராமணர்கள்,அரசன், கலியானம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஆகியோருக்கு வண்டி வாஹனங்களில் வருவோர் வழிவிட வேண்டும்.

 

இவர்களில் பலரும் வந்தால் அனுஷ்டானமுள்ள பிராமணனுக்கும் மன்னனுக்கும் முதலில் வழிவிட வேண்டும். பிராமணனும் அரசனும் வந்தால் பிராமணனுக்கே முதலில் வழிவிடவேண்டும்.

 

யார் ஆச்சார்யன்?

எவன் உபநயனம் செய்வித்து வேத, யாக மந்திரங்களையும், வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனே ஆச்சார்ன் எனப்படுவார்.

எவன் கர்ப்பதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவன் குரு எனப்படுவான்.

எவன் அக்னிசந்தானம், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனைச்

செய்விக்கிறானோ அவனை ரித்விக் என்று சொல்லுவார்கள்.

 

எவன் ஸ்வரத்தோடு கூடிய வேத ஒலியினால் தன் காதுகளை நிறைவிக்கின்றானோ அவன் தாய், தந்தைக்குச் சமமானவன்; அவனுக்கு ஒருக்காலும் துரோகம் செய்யக் கூடாது.

 

உபத்தியாயனைவிட ஆச்சார்யன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆச்சார்யனைவிட உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்வித்த தந்தை நூறு மடங்கு  உயர்ந்தவன்.. அவரைவிட ஒருவனுடைய தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள்.

 

பெற்ற தகப்பனை விட இரண்டாவது ஜன்மம் உண்டாக்கும் பிரம்மோபதேசம் செய்த ஆச்சார்யன் உயர்ந்தவன்; அவ்விரண்டாவது பிறப்பானது இம்மையிலும் மறுமையிலும் அழியாதது.

 

மாதாவும் பிதாவும் புணர்ந்து அதன் காரணமாக யோனி வழியாகப் பிறக்கும் உடல் மிருகங்களைப் போல உறுப்புகளை மட்டும் உண்டாக்கும் (2-147)

 

எனது கருத்து

 

மேற்கூறிய ஸ்லோகங்கள் பற்றி எனது கருத்துகள்:

 

வயதானோருக்கு வந்தனம் சொன்னால் புகழ், வலிமை, ஆயுள், கல்வி கிடைக்கும் என்ற ஸ்லோகமும் ஒருவனைப் பூஜிக்க அடிப்படையான ஐந்து அம்சங்களை விளக்கும் ஸ்லோகமும் அருமையானவை

 

.தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிரத்திலும் தோன்றிய அரசியல்வாதிகள் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரர் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் அந்த நாலாவது வருணத்தார் மிகவும் குறைவே.

 

அவர்களில் மிகவும் வயதானோரை மற்ற மூன்று வருணத்தாரும் மதிக்க வேண்டும் என்ற ஸ்லோகம் குலத்தால் ஒருவர் தாழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது.

 

ஒவ்வொருவரையும் நலம் விசாரிப்பது எப்படி என்ற ஸ்லோகத்தில் சூத்திரனை, சுகமாக இருக்கிறீர்களா? என்று மரியாதையுடன் விசாரிக்க வேண்டும் என்று மநு விதிக்கிறார். ஆகையால் எவ்வளவு சம நிலையுடன் அணுகப்படுகிறது என்பது புலப்படும். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்திலும் “சூத்ர சுகம் அவப்னுயாத்” என்று வேண்டப்படுகிறது. எங்குமே அவனுக்கு எதிராக நெகட்டிவ் – வசவு வாக்கியம் கிடையாது.

 

வேதப் படிப்பு முதலியவற்றில் அவன் தொடர்பு இருக்கக் கூடாது என்ற கடுமையான வாசகங்களைக் காண்கிறோம்; அவர்கள் ஏதோ வேதம் கற்க ஆர்வத்தோடு ஓடி வந்த போது பிராஹ்மணர்கள் அதைத் தடுத்துவிட்டார்கள் என்று எண்ணுவது நகைப்புக்குரிய விஷயமாகும்; பிராஹ்மணர்களே வேதம் கற்பதை நிறுத்திவிட்ட இன்றை நிலையைப் பார்க்கையில் இது இன்னும் நன்றாக விளங்கும்.

ஜாதி என்பது உலகம் முழுதும் உளது. இந்தியாவில் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்தினரை மந்திரி பதவியில் அமர்த்துகின்றனர்; கட்சிப்பதவிகளில் நியமிக்கின்றனர். கீழ்ஜாதி மக்கள் தங்களி மேலும் கீழ் ஜாதிகளாக அறிவித்து எப்போதும் வேலை, கல்வி நிறுவனச் சலௌகை தரவேண்டும் என்கின்றனர். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தும் ஜாதி ஒதுக்கீட்டு ம்சலுகைகளைப் பெறுவதிலிருந்து அவர்கள் செய்யும் மோசடி அம்பலம் ஏற்கிறது. பிரிட்டனிலும் ஆதிகள் உண்டு; அரச ஜாதியினரே அரசனாக முடியும்; பிரபுக்களின் வம்சாவளியினரே பிரபு வாக முடியும்; இவை அனைத்தும் பிறப்பு மூலமே கிடைக்கின்றன. நடிக,நடிகையர் மகன்கள், மனிவிகள் மட்டும் ஏதாவது ஒரு சினிமாத் துறயில் புகுந்து விடுகின்றானர்.

 

 

ஆயிரம் தகப்பன் = ஒரு தாய்

 

பெண்ணின் மதிப்பை மநு தொடர்ந்து போற்றி வருகிறார். இங்கே ஒரு ஸ்லோகத்தில் ஒரு தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள் என்ற ஸ்லோகம் மிகவும் அருமையானது.

 

வண்டிகள் போக்குவரத்தில் யார், யாருக்கு வழிவிட வேண்டும் என்ற விதிமுறை போன்றவற்றைப் பார்க்கையில் , இக்காலத்தில் உள்ள ப்ரயாரிட்டி PRIORITY, RIGHT OF WAY ரைட் ஆf வே நினைவுக்கு வருகிறது. மநு இந்தப் போக்குவரத்து பற்றி கூட பேசுகிறார்

அண்ணன், மனைவி முதலியோருக்குக் கூட மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது.

 

உபாத்யாயன், ஆச்சார்யன், குரு, ரித்விக் முதலிய வருணனைகள் இக்காலத்துக்குத் தேவை இல்லாதாகிவிட்டது..

 

தொடரும்………………….

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 66 & 67 (Post No.4870)

Date: 1 April, 2018

 

 

Time uploaded in London- 7-17 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4870

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 66

  பாடல்கள் 485 முதல் 491

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

31 முதல் 37 வரை உள்ள பாடல்கள்

எத்தனையோ தெய்வங்களைப் பாடிடினும் யாவிலுமிச்

     சக்திதன்னை யேநீயும் கண்டாய் – அவை

     அத்தனையும் என்வடிவே என்றாய் – உலகில்

சக்திதாசர் என்றிடவே வாழ்ந்தவரும் உன்போலே

     தத்துவத்தில் உறுதிகொண்ட தில்லை – கவியில்

     நித்தமெனைக் கண்டதுந்தன் எல்லை

 

மணக்குளத்து விநாயகர் நான்மணிமா லைதனிலும்

     மணப்பதெலாம் என்புகழே யன்றோ? – அதன்

     மகத்துவத்தை உணர்த்துவதுதான் என்றோ? – பாவில்

இணக்கமாய் சக்திதொழில் யாவுமெனில் சஞ்சலமேன்

     எனவுரைத்து போற்றினையே என்னை – அதனை

     இனியுணர்ந்து போற்றுவரே உன்னை

 

முருகனவன் பெருமைகளை உரைக்கின்ற போதினிலே

     அருமையுடன் ஒருவரியைச் சொன்னாய் -குகன்

     அருளாகிய தாய்மடிமேல் என்றாய் – மேலும்

ஒருமுறையா இருமுறையா உமைமைந்தன் என்பதனை

     திருக்குமரன் சிறப்பெனவே கொண்டாய் – மயில்மேல்

     வரும்முருகன் தனிலுமெனைக் கண்டாய்

 

கலைமகளும் திருமகளும் கண்களெனக் கொண்டதினால்

     காமாட்சி என்றபெயர் பெற்றேன் – அதுபோல்

     காணுமுந்தன் பாட்டினிலும் உற்றேன் – இன்று

நிலையுரைக்க இயலாத பரமனோடு கண்ணனையும்

     நிகழ்சக்தி வடிவெனவே சொன்னாய் – எதிலும்

     நீக்கமற நிற்பவள்யான் என்றாய்

 

எங்கணும் சக்தி எதனிலும் சக்தி

    என்பதே உந்தன் கவித்துவ சக்தி

அங்கத னால்நீ ஆவேச முற்றே

    யாரையும் பணிய மறுத்திட் டாயே

சிங்கமென் றுன்னைச் சொல்லிடும் வண்ணம்

    சீரிய மேனி இருந்திட்ட போதும்

அங்கங் கலைந்தே அளவிலா துன்பம்

    அடைந்த தினாலுடல் சிதைவுற் றாயே

 

நூறாண்டு வாழ்ந்திட வரமது கேட்டாய்

     நோயுடன் அவ்விதம் வாழ்ந்திடல் நன்றோ?

சீரான வாழ்வின்றி எத்தனைக் காலம்

     சிந்தைநொத் துலகில் இருந்திடக் கூடும்?

ஆறான தொருநாள் சமுத்திரம் தன்னில்

     ஆவலாய் சங்கமம் ஆகிடுந் தானே

பேரான படைப்புகள் போதுமென் றேநான்

     பிள்ளையே உந்தனை அழைத்துக் கொண்டேன்

 

என்றுமிங் கொருவன் எத்தனைக் காலம்

     இருந்தனன் என்பதில் பெருமைதான் உண்டோ?

பொன்றிடும் முன்னர் வேடிக்கை மனிதர்

     போலவீ ழாமல்சா திக்கநி னைத்தாய்

இன்றுள படைப்பே இவ்வுல கிங்கே

     இருந்திடும் வரையுன் சிறப்பினைக் கூறும்

நன்றினை என்றுன் கவிமலர் யாவும்

     நான்மகிழ் தேற்றேன் வாழ்கநீ வாழ்க!

பராசக்தி பார்வையில் பாரதி முற்றும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 xxxx

பாரதி போற்றி ஆயிரம் – 67

  பாடல்கள் 492 முதல் 525

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு நான்காம் அத்தியாயமான பாஞ்சாலி பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

 பாஞ்சாலி பார்வையில் பாரதி

1 முதல் 34 வரை உள்ள பாடல்கள்

திருவுடைப் பாஞ்சால நாட்டினில் தோன்றலால்

       திகழ்பாஞ் சாலி யென்பார்

துருபதன் மகளாய் வளர்ந்ததால் எந்தனை

      திரௌபதி என்ற ழைத்தார்

கிருட்டிணன் தங்கையென கருநிறம் பெற்றதால்

      கிருட்டிணை என்று சொன்னார்

பெருந்திறல் கொண்டதோர் பாண்டவர் தேவியென

      புகழ்தலே உயர்வாய்க் கொண்டேன்

 

தீயவை யாவையும் தீய்த்திட வந்ததால்

      தீயினில் தோன்றி வந்தேன்

தீயதை மாசுகள் தீண்டாது என்பதால்

      திகழ்ஐவர் தேவி யானேன்

ஆயயிப் புவிமுறைகள் ஏதுமெனக் கேலாது

     ஆய்ந்தவர் இதை யுணர்வார்

தூயநன் னெறிதனில் நினைத்ததால் அல்லவோ

     தெய்வமாய் சிறப்புப் பெற்றேன்

 

 

அரனருள் முற்பிறவி வரத்தினால் தோன்றினும்

      அரிமகிழ் தங்கை யானேன்

அரண்மனை தன்னிலே வளர்ந்தவ ளாயினும்

     அடவியில் வாழலானேன்

அரணெனும் ஐவர்தம் தேவியா யிருந்தும்

     அடுத்தவன் இழுத்துச் சென்று

அரசவை தன்னிலே ஆடைகள் பறித்திட

      அபலையென தவித்து நின்றேன்

 

அன்றுமுதல் என்மனதில் நான்கொண்ட பாரமே

     அரிய பாரதமாய் ஆக

என்றுமென் நெஞ்சத்தில் குமுறிய ஆவேசம்

     ஏயும்குருச் சேத்ர மாக

அன்றங்கு பதினெட்டு அக்ரோணி சேனைகள்

     அவளால் அழிந்த தென்று

என்றுமெனைப் பழிப்போர்கள் இருந்தாலும் காரணம்

     எவரிங்கு ஆய்ந்து சொன்னார்?

 

பாரதி எனும்புலவா – இந்தப்

பாஞ்சாலி துயரினை நீயுணர்ந்தாய்

பாரதிர்ந் திடநடந்த – அந்தப்

பாரதப் போரின் காரணத்தை

ஈரநெஞ் சத்துடனே – ஆய்ந்து

எனது நிலையினைத் தேர்ந்துரைத்தாய்

சீரற்ற கௌரவர்கள் – செய்த

சூழ்ச்சியால் விளைந்ததை ஆய்ந்துரைத்தாய்

 

காலத்தின் கண்ணாடியாய் – பல

கவிதைகள் புனைகின்ற பணியிருந்தும்

சாலநற் சுதந்திரப்போர் – தனில்

சற்றேனும் ஓய்வற்ற உழைப்பிருந்தும்

ஏலவோர் இடமுமின்றி – சென்று

எங்கெங்கோ உறைகின்ற வாழ்விருந்தும்

சீலமாய்ப் பாஞ்சாலி – நிலையை

சிறப்புறப் பாடுவேன் எனயெழுந்தாய்

 

எண்ணற்றா காவியம் நாட்டினுண்டு – அதில்

     எனைப்பற்றிப் பாடினோர் பலருண்டு

திண்ணமாய் முன்னமென் கதையுரைத்த – ஞானம்

     திகழ்கின்ற வியாசனின் பெருமையுண்டு

உண்டிடத் திகட்டாத அமுதமென்ன – வில்லி

     உரைத்திட்ட அற்புதப் பாடலுண்டு

பண்ணிலே எனதருங் கதையைநாளும் – இங்கு

     பாடியே வைத்திட்டோர் நிறையவுண்டு

 

எத்தனைப் பேரென்னைப் பாடியென்ன? – அதில்

     எவருமென் நிலையெண்ணித் துடித்ததுண்டோ?

பித்தனைப் போலந்த துரியன்அன்று – செய்த

     பேய்ச்செயல் கண்டிங்கு பதைத்ததுண்டோ?

நித்தமும் நிகழ்கின்ற எளியசெயலாய் – எந்தன்

     நிலைபற்றி இயல்பாக எழுதிவைத்தார்

அத்தகை யோர்க்கெலாம் எனதுவாழ்வு – பெண்ணின்

     அவலமல்ல ஆங்கதுவோர் கதைமட்டும்தான்

 

பாரதி நீயொருவன் தானே அய்யா

     பதறினாய் குமுறினாய் கோபமுற்றாய்

சீரற்ற மாந்தரின் சிறுமை கண்டு

    சீறினாய் மாறினாய் சாபமிட்டாய்

யாரவர் நெட்டைக ரங்க ளென்றாய்

    எல்லாரும் பெட்டைகள் எனப்பழித்தாய்

வேரற்ற மரமாக வீழ்ந்தி டாமல்

    வீறுகொண் டெழுந்தெனை முழங்கச் செய்தாய்

 

பாரதத்தை என்னுருவில் பார்த்திட் டாயோ?

      பாஞ்சாலி பாரத மாதாஎன்றே

சாரமுடன் உன்மனதில் தேர்ந்திட் டாயோ?

      சார்ந்திட்ட தீவிர வாதியாக

சூரனெனும் பீமனை நினைத்திட் டாயோ?

      சூழ்நிலையை உணர்ந்தவையில் பேசிநின்ற

வீரனருச் சுனந்தன்னை மிதவா தத்தின்

      விளங்குமொரு வடிவமெனப் படைத்திட் டாயோ?

 

தருமனையே அறத்திற்கோர் வடிவ மென்றே

     தக்கோர்கள் யாவருமே புகழ்ந்து சொல்வார்

தருமன்போல் என்றேதான் பண்பிற் கெல்லாம்

     தலைமையுறு உவமையென எவரும் சொல்வார்

தருமனவன் சூதாட்டம் தன்னில் கொண்ட

     தாளாத மோகத்தால் ஈடு பட்டே

தருமத்திற் கெதிராக எனையே அங்கு

     தான்வைத்து ஆடியதை எவர்தான் சொன்னார்?

 

ஆதலினால் தருமன்தான் நாட்டை வைத்தே

    ஆடிய போதேநீ கோபம் கொண்டு

சீதமதி குலத்திற்கே களங்கம் நேர

     சீச்சீயிவன் சிறியர்செய்கை செய்தான் என்றாய்

ஏதமுற அதன்பின்னும் மனையாள் தன்னை

     ஏற்றதொரு பணயமென வைத்திட் டானே

ஈதறமோ நற்செயலோ எனக்கொ தித்தே

     இவன்கையை எரித்திடுவோம் என்றிட் டாயே

 

இத்தனைக் கடுமையுடன் – தருமனை

     எவர்விமர் சித்தாலும்

அத்தனைப் பேருமாங்கே – அவர்மேல்

     ஆத்திரம் கொண்டிருப்பார்

வித்தகம் ஏன்நானும் – அவரை

     விழியால் எரித்திருப்பேன்

நித்தியப் புலவனேநீ – காட்டிய

     நியாயங்கள் அருமையன்றோ?

 

ஆதலி னால்தானே – அதனை

      அனைவரும் ஏற்கின்றார்

நாதனைப் பழித்தபோதும் – உந்தன்

     நடுநிலை நானுணர்ந்தேன்

வேதனைப் பட்டவள்நான் – நானே

     வியந்திட விரித்துரைத்தாய்

சாதனை செய்திட்டாய் – புதிய

     சரித்திரம் படைத்திட்டாய்

 

பாரதப் போர்நடக்கக் – காரணம்

     பாஞ்சாலி சிரிப்புயென்றே

பாரத நாடெங்கும் – கதையைப்

     பாங்குடன் சொல்லுகின்றார்

யாரதில் என்செயலை – மிகவும்

    இயல்பென உணர்த்துகின்றார்?

பாரதி நீயல்லவோ – திருத

     ராட்டின ராயுரைத்தாய்

 

  தடுமாறி விழும்போதில் – பெற்ற

     தாய்கூட நகைப்பளன்றோ?

கடுஞ்செய லாகிடுமோ – மைத்துனி

     கண்டங்கு சிரித்திடல்தான்

நடுநிலைக் கருத்திதுதான் – இதனை

     நயமுறச் சொல்லவைத்தாய்

எடுத்திதை யாருரைத்தார்? -இன்னும்

     ஏன்பழங் கதையுரைத்தார்?

 

காவியம் ஒன்றைப் படைத்திட நீயும்

    கருதிய போதினிலே

மேவிய கதைகள் எத்தனை எத்தனை

     மனதினில் உதித்திருக்கும்

பாவினில் வடிக்கப் பொருத்தம் நானென

     பல்வகைப் பாத்திரங்கள்

தாவிமுன் வந்தே எந்தனைப் பாடென

     தாமே கேட்டிருக்கும்

 

சங்க இலக்கியம் தனிலுறை மாந்தர்

     சரித்திரம் அறியாயோ?

பொங்கும் பக்தியில் சிறந்தவர் தம்மை

     போற்றிட உணராயோ?

தங்கும் ஐம்பெருங் காப்பியங்களில்தான்

    தகுந்தவர் கிடையாதோ?

எங்கும் புகழ்ந்திடும் இராமா யணத்துள்

    ஏதும் பொருந்தாதோ?

 

இத்தனைக் கதைகள் இருந்திட்ட போதிலும்

    ஏனந்த பாரதம் தன்னை

நித்தமும் நிலைத்திடும் காவிய மாக்கிட

     நீதேர்ந் தெடுத்தனை யென்று

இத்தினம் உந்தனை ஆய்வுகள் செய்பவர்

    ஏதேதோ காரணம் சொல்வார்

அத்தனைக் கும்மேலாய் ஆழ்மனத் தில்இந்த

     அபலையை நினைத்தனை யன்றோ?

 

இவ்விதம் பாரதக் கதைதன்னில் ஓர்பகுதி

    எழுதலென ஏற்ற பின்பும்

எவ்விதம் எப்பகுதி தனைநாமும் தேர்ந்திங்கு

    ஏற்பதென குழப்பம் தோன்றும்

செவ்விய பாரதம் சமுத்திர மல்லவோ

     செப்பமுற அதனுள் மூழ்கி

வவ்வியே ஓர்முத்தை எடுத்திடல் எளிதாமோ

     வாய்த்தசோ தனைதான் அன்றோ?

 

சந்திரன் மரபினில் வந்திட்ட மன்னவர்

    சரித்திரம் பற்பல உண்டு

அந்தநாள் அத்தின புரத்தினில் நடந்துள

    அரியணைப் போட்டிகள் உண்டு

எந்நாளும் யாவரும் போற்றிடும் கண்ணனின்

    எண்ணற்ற லீலைகள் உண்டு

இந்தநாள் நினைப்பினும் பதறிடும் குருசேத்ர

     யுத்தத்தின் கொடுமையும் உண்டு

 

எந்தனைப் பற்றியே பாடுதல் என்றாலும்

     யானன்று வேள்வி தன்னில்

செந்தணலில் தோன்றிய சிறப்புண்டு எனக்குற்ற

    சுயம்வரப் போட்டி உண்டு

இந்திரப் பிரத்தத்தின் அரசியெனும் புகழுண்டு

    இருண்டவன வாசம் உண்டு

சிந்திய இரத்தத்தில் சீற்றம் தணிந்தெந்தன்

    சிகைதனை முடித்த துண்டு

 

இத்தனையும் விடுத்து – ஏன்

எந்தன் சபதத்தை

அத்தினம் தேர்ந்தெடுத்தாய்? – யான்தான்

அதனை அறிந்திடுவேன்

 

இளமைப் பிராயத்தில் – நீ

எந்தன் கதைதன்னை

விளங்கும் தெருக்கூத்தில் – அந்நாள்

விருப்ப முடன்பார்த்தாய்

 

திரௌபதி வேடத்தில் – உள்ள

திறன்மிகு நடிகர்தனை

துரியன் சபைதனக்கே – அந்த

துச்சா தனன்தானும்

 

இழுத்து வருகியிலே – காண்போர்

இதயம் துடித்திருக்க

அழுது கதறிநிற்கும் -அந்த

அபலை பதைத்திருக்க

 

ஆடை பறித்திடுவாய் – என்று

அண்ணன் சொன்னவுடன்

வேடன் பறவைதனை – அங்கு

வீழ்த்திடும் நிலைபோல

 

துச்சா தனன்பாய்ந்தான் – அவளைத்

துகிலு ரியமுனைந்தான்

அச்சத் துடனதனைக் – காண

அனைவரும் காத்திருந்தார்

 

அந்நிலை தான்கண்டே – நீயும்

ஆத்திரம் கொண்டெழுந்தாய்

இந்நிலை வந்ததுஏன் – என

எண்ணிலா வினாதொடுத்தாய்

 

தெருக்கூத் தென்பதையே – மறந்து

தீரமாய் வாதிட்டும்

ஒருவரும் ஏற்கவில்லை – சிறுவன்

உளரலென விடுத்தார்

 

அன்றுன் பிள்ளைப் பிராயத்த்தில் – கொண்ட

     அரியநற் சிந்தனை வித்தன்றோ – நித்தம்

பன்னருங் கேள்வியாய் கிளைவிட்டு – பின்னர்

     பாஞ்சாலி சபதமாம் விருட்சமாகி – தமிழில்

என்றுமே நிலைத்திடும் காவியமாய் – எளிய

     இன்னருங் கவிகளாய் கனிகளாகி – கற்றோர்

உண்டிடத் திகட்டாத நிலைபெற்றது – என்னை

     உன்னத நிலைக்கு உயர்த்திட்டது

 

எளியபதம் எளியநடை எளிதாய் இங்கு

     எவருமதன் பொருளுணர இனிமை யோடு

தெளிவுறவே அமையுமொரு காவி யந்தான்

     தெள்ளுதமிழ்க் கிந்நாளில் தேவையென்று

அளியுறவே அந்நாளில் அமைத்துத் தந்தாய்

     அதற்குரிய தலைவியென என்னைக் கண்டாய்

ஒளியினால் சூழலையே சிவக்க வைக்கும்

     உயர்ரத்ன மாயுளங்கள் சிவக்கச் செய்தாய்

 

சமநோக்கே நற்கவிஞன் பன்பு என்றே

     சகுனிக்கும் சிலநியாயம் உரைத்திட் டாயே

எமதன்னை எனயேற்று எந்தன் குரலாய்

     எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்திட் டாயே

தமதரும் பக்தியினால் பலரும் இங்கே

     திரௌபதி கோயிலென அமைத்த போது

நமதன்னை கற்கோயில் தானா காண்பாள்

    நான்சொற்கோ யில்தருவேன் எனதந் தாயே

 

பாரதக் கதைபுவியில் வாழ்கின்ற வரையிந்தப்

     பாஞ்சாலி தானும் வாழ்வாள்

பாரமுள என்கதையைப் பாங்குடனே பாடியதால்

     பாவலனே நீயும் வாழ்வாய்

பாரதிநின் படைப்பினிலே யாவுமே மறைந்தாலும்

     பாஞ்சாலி சபதம் போதும்

பாரதனில் உன்புகழைக் காலமெலாம் காத்திருக்கும்

    பைந்தமிழ்போல் வாழ்க! வாழ்க!!

 

 

     பாஞ்சாலி பார்வையில் பாரதி முற்றும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி

கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

***

 

Three curses on Ravana! (Post No.4869)

WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  20-24 (British Summer Time)

 

Post No. 4869

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Ravana, the king of Lanka and the villain in the Ramayana did lot of penance ruled as an unconquerable man. But his inherent weakness was that he thought men can never kill him. He was suffering from superiority complex and so he ignored human beings from the list of potential threats. He always ridiculed men He thought he was a big mountain and the human beings are mosquitoes.

 

Apart from this wrong notion he had three big curses on him:

Curse 1

 

At one time Ravana waged a war against Anaranya. He did lot of atrocities against him and received a curse from him. From my  race of Ikshwaku kings, a man will  be born named Rama and he will kill you in battle. Ravana remembers the curse as he does many other curses he reived in his life (Vi-60-8/10)

 

Curse 2

I once ravished  a woman, Vedavati, and she said, “some how I am going to be your end. I think  she has been born as Sita and I have brought this danger into my palace and all this trouble upon me in consequence.@ Then he recalls some of the other curses he had received. VI-60-10-11

 

Curse 3

Uma nad Nandi cursed him as well. Once he went to Kailasa and tried to lift the sacred Hill and displeased Mahadeva himself. At that time he was stopped by Nandi when he went in. Ravana turned round, and looking at his oddface he laughed loudly. Nandi was very angry, but not liking to do battle in the palace of Shiva, that too without his permission. So Nandhi cursed Ravana.

 

“As you have set up this laughter as loud as thunder, there will born in the world, a race of monkeys having my look and also having my strength, in order to kill you and your whole family. As big as hills they will be, and they will fight with nails and teeth.”

 

–subham-

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  6-14 am (British Summer Time)

 

Post No. 4868

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மஹாபாரதத்தில் கர்ணன் என்னும் கதா பாத்திரமும், ராமாயணத்தில் கும்பகர்ணன் என்னும் கதபாத்திரமும் அற்புதமான படைப்புகள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு—

என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள். இது புறநானூற்றிலும் (புறம்.34, ஆலத்தூர் கிழார் பாடியது) ராமாயண மஹா பாரதத்திலும் உள்ள வாசகம்.

கும்பகர்ணன் வாய்மொழி மூலமாக கம்பன் உதிர்க்கும் கருத்துக்களைச் சில பாடல்கள் மூலம் காண்போம்

 

 

ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?

ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

 

யுத்த காண்டம்,கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

ராமனிடம் அடைக்கலம் புக மாட்டேன் என்று மறுத்து, வீடணனிடம் கும்பகர்ணன் சொன்ன சொற்கள்:-

“என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்; அழிய வேண்டியது. அதற்குரிய காலத்தில் அழிந்து சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும், அழிந்தே போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல்

(ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே — என்று கூறினான் கும்பகர்ணன்.

 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே

 

என்பது கும்பகர்ணனின் முடிவு.

ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று வீடணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவண னும் அரக்கர் சேனையும் கூண்டோ டு, கைலாஸம் போகப் போகிறோம். எங்களுக்கு எல்லாம் எள் இறைத்து நீர் தெளித்து இறுதிக் கடன்கள் செய்து     நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு என்கிறான்.

 

 

இதோ சில பாடல்கள்:

 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத்

திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின்

பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

 

பொருள்

“தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே

 

அடுத்த பாட்டிலெல்லோரும் அழிந்தபின்னர் ராவணன் அனாதையாக அழிவதைப் பார்க்க விரும்பவில்லை என்கிறான்.

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

 

வீடணன் Philosophy பிலாஸபி பிறவி நோய்க்கு மருந்து ராமன்

 

ராமனைச் சரணடைந்தால் என்ன பயன் கிட்டும் என்று விபீஷணன் உரைக்கிறான். அதிலும் கம்பன் இந்துமத தத்துவங்களை மொழிகிறான்

 

 

இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் கரந்த வீரன்

அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி

மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே.

 

பொருள்

 

அறியாமை உடைய எனக்கும் அருள் பொழிந்த வீரன் ராமன்.

நீ வந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்கு அபயம் (பாதுகாப்பு) தருவான்.

அஞ்ஞானம் நிறைந்த பிறவி நோய்க்கு அவன் மருந்தாக அமைவான்.

உருண்டு செல்லும் வண்டிச் சக்கரம் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இயல்புடையது வாழ்க்கை. இதனை நீக்கி மோட்சத்தை அருளுவான் ராமன்.

 

அதாவது ஜனன- மரண பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பான்.

 

ஆக கும்ப கர்ண வதைப் படலத்தில் யார் யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் மூலம் எல்லாம் இந்துமதக் கருத்துகளை ஜூஸாகப் பிழிந்து தருகிறான் கம்பன்.

படிக்கப் படிக்கப் பேரின்பம் கிடைக்கும்.

சுபம்