சுவத்துக் கீரையை வழித்துப் போடடி……… பழமொழிக் கதை (Post No.4623)

Written by London Swaminathan 

 

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4623

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி – தமிழ்ப் பழமொழிக் கதை

 

((இதை ஷேர் SHARE செய்யலாம்; ஆனால் எழுதியவர் பெயரையோ, பிளாக் BLOG பெயரையோ நீக்கக் கூடாது; அப்படி நீக்கினால் நீங்கள் தமிழை அழித்த பாவத்துக்கு உள்ளாவீர்கள்))

 

1886 ஆம் ஆண்டு நடேச சாஸ்திரி என்னும் பெரியார் திராவிட பூர்வ காலக் கதைகள் என்ற புத்தகத்தில் 49 கதைகளை அக்காலத் தமிழில், அக்கால வழக்கப்படி ஜாதி, மதப் பெயர்களுடன், தான் கேட்டவாறு வெளியிட்டுள்ளார். அதிலிருந்து ஒரு பழமொழிக்கதையை புதுத் தமிழில் புதுக்கி வரைவேன்.

 

இதை ‘மூன்று செவிடன் கதை’ என்றும் வழங்குவர்.

 

ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு … என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!

 

ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் ‘மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து

வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.

முதல் காட்சி முடிந்தது;

இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:

சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்

 

அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.

 

இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.

 

இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.

 

அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.

 

இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.

காட்சி மூன்று:

 

அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு’வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் –எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;

 

அவன் சொன்னான்,

அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.

 

இடதுதான் இப்பழமொழி உருவான மூன்று செவிடன் கதை!

 

தமிழில் 20, 000 பழமொழிகள் உள. இவற்றின் பின்னால் உள்ள பல கதைகளைப் பல்வேறு பழைய– நூறாண்டுக்கும் முந்தைய—- நூல்களில் இருந்து நுவன்றேன்; மேலும் பல விளம்புவேன்

-சுபம், சுபம்—

 

TAGS:  சுவற்றுக், சுவத்து, கீரை, வெள்ளாட்டி, பழமொழிக் கதை, மூன்று செவிடன்

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்! (Post No.4622)

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London- 5–59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4622

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

இணையிலா இந்து மதம்!

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்!

 

ச.நாகராஜன்

 

1

சென்ற நூற்றாண்டின் பெருமை தரும் கவிஞர்களுள் ஒருவர் கண்ணதாசன்.

 

அவருடைய நல்லெண்ணதாசன் நான்.

நல் – எண்ணதாசன் நான்!

 

அவர் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டவர்.

கடவுள் இல்லை என்ற கயவர் கழகத்திலும் இருந்தார்.

கடவுள் அனுபவத்தைத் தானே நேரிலும் உணர்ந்தார்.

இதை நான் சொல்லவில்லை.

 

அவரே சொல்கிறார் இப்படி ‘சுய சரிதம்’ என்னும் கவிதையில்!

இந்தக் குட்டிச் சுய சரிதம் ஏழு கண்ணிகள் கொண்டது.

கண்ணதாசனின் நல்லெண்ணதாசர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று:

 

இதோ கவிதை:

ஆசை வெட்கம் அச்சம் துன்பம்

பாசம் பற்று பதவி உதவிக்

காதல் கடமை கவனம் மறதி

ஈதல் பெறுதல் ஏற்றம் இறக்கம்

எத்தனை எத்தனை படிகளில் ஏறி

இத்தனை வயதை எய்தி விட்டேன் நான்.

 

இது முதல் கண்ணி. இதை அவர் 1978இல் கல்கியில் ‘கண்ணதாசன் பக்கத்’தில் ஒரு வாரம் எழுதினார். அப்போது அவருக்கு வயது 48 தான்!

 

 

மேலே பார்ப்போம்:

கடவுளை ஒருநால் கல்லென் றவனும்

கல்லை ஒரு நாள் கடவுளென் றவனும்

உண்டென் றதனை இல்லையென் றவனும்

இல்லையென் றதனை உண்டென் றவனும்

உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே

நானே என்பதை நன்றாய் அறிவேன்.

 

 

எப்படிப்பட்ட ஒரு சுய விமரிசனம் பாருங்கள்.

சத்திய விமரிசனம்! சத்திய சோதனையில் விளைந்ததோ!

 

அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்கிறார் மூன்றாவது கண்ணியில், இப்படி:

 

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!

 

இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.

அதனால் தான் அந்த நல்லெண்ணதாசன் ஆகி விட்டேன் நான்!

 

கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்

எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?

 

 

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவரது நல்லெண்ணதாசன் நான்.

அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்!]

2

அவரது அற்புதமான எழுத்துக்களில் அவர் ‘ நான் ஏன் ஒரு ஹிந்து’ என்பதை விளக்குகிறார்.

அது அனைத்து ஹிந்து மக்களும் படிக்க வேண்டிய ஒன்று.

அதை அப்படியே தருகிறேன்.

அதைப் படிக்கும் போது நீங்களும் கண்ணதாசனின் நல்லெண்ணதாசன் ஆகி விடுவீர்கள் – இதுவரை ஆகாமல் இருந்தால்.

கீழே இருப்பது அவரது சொற்கள்!

 

 

3

நான் ஒரு ஹிந்து

கவிஞர் கண்ணதாசன்

நான் ஒரு ஹிந்து.

 

ஹிந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

 

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன். ஆனால் ஹிந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

 

 

நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன். அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

 

ஆன்மா இறைவனோடு ஒன்றி விடும் போது அமைதி ஹிருதயத்தை ஆட்சி செய்கிறது.

 

நாணயம் சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

 

நேரான வாழ்க்கையை ஹிருதயம் அவாவுகிறது.

 

பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது.

 

குறிப்பாக, ஒரு ஹிந்துவுக்குத் தன் அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

 

கடைசி நாத்திகனையும் அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

 

 

‘என்னைத் திட்டுகிறவன் தான் அடிக்கடி என்னை நினைத்துக் கொள்கிறான். எனவே அவன் தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

 

ஹிந்து மதத்தைப் போல் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எங்கும் இல்லை.

நீ பிள்ளையாரை உடைக்கலாம். பெருமாள் நாமத்தை அழிக்கலாம்.மதச் சின்னங்களைக் கேலி செய்யலாம். எதை செய்தாலும் ஹிந்து சகித்துக் கொள்ளுகிறான்.

 

 

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறப்பது போல் எண்ணி கொண்டு பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாத்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்தவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்?

 

கடந்த நாற்பது வருடங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!

 

பாவப்பட்ட ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி அதை நம்புகிற அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கிச் சொத்து சேர்க்கும் ‘பெரிய’ மனிதர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் பேசும் நாத்திக வாதம் அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

 

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல, ஆரம்ப காலத்தில் இந்த நாத்திக வாதம் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தது.

 

 

நடிகையின் ‘மேக்-அப்பை’க் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப் போல், அன்று இந்த வார்த்தை கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

 

அந்தக் கவர்ச்சி எனக்குக் குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே.

 

என்னை அடிமை கொண்ட கண்ணனும் ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக வெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

 

 

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறி விட்டது!

 

வேண்டுமானால் ‘பணத்தறிவில்’ முன்னேறி விட்டது என்று சொல்லலாம்.

 

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர வென்றதாக இல்லை.

 

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.

 

இந்த நாலரைக் கோடி மக்களில் நீங்கள் சலித்து எடுத்தாலும் நாலாயிரம் நாத்திகர்களைக் கூடக் காண முடியாது.

 

 

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும் திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சித்தம் பொய் சொன்னாலும் வேதம் பொய் சொல்வதில்லை. சித்தாந்தம் தவறக்கூடும்; வேதாந்தம் தவறாது.

 

வேதாந்தம் பரசுராமர் காலத்திலும் ஒன்று தான், ஆதி சங்கரர் காலத்திலும் ஒன்று தான், நமது காலத்திலும் ஒன்று தான்.

 

நமது மூதாதையர்கள் மாபெரும் மேதைகள். தெய்வ நம்பிக்கையின் மீதே சகல நியாயங்களையும் நிர்மாணம் செய்தார்கள்.

 

 

மனிதர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் தோற்றுப் போன இடத்தில் தெய்வ நியாயமே தீபம் போல் எரிகிறது.

 

வெள்ளைக்காரனை நாம் விரட்டியது பாதி தூரம் தான். மீதி தூரம் அவனை விரட்டியது தெய்வமே.

 

அன்று பாரதப் போரை முன்னின்று நடத்திய கண்ணன், நமது பாரதப் போரையும் மறைந்து நின்று நடத்தினான்.

 

 

தேர்தல் வைப்பதும் வைக்காததும் ஒருவர் கையிலேயே இருந்த போது அவர் தேர்தலை நடத்துவானேன்? தோற்றும் போய் ஒதுங்குவானேன்?

 

மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது! தெய்வத்தை நம்புகிறவன் தோற்றாலும் ஜெயிக்கிறான். நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்.

 

 

இயக்கத்தின் கர்த்தா இறைவன். கருவி மனிதன்.

 

என் வீடு, என் வாசல், என் தோட்டம், எனக்கு வரும் கூட்டம், எனக்கு வரும் ஓட்டு, நான் அமரும் பதவி என்றெல்லாம் சிந்திப்பவனும் பேசுபவனும் மடையர்கள்!

 

நீ ஏறுகிறாய் என்றால் ‘இறைவன் ஏற்றி விட்டுப் பார்க்கிறான்’ என்று பொருள். இறங்குகிறாய் என்றால் ‘சிந்திக்க வைக்கிறான்’ என்று பொருள்.

 

உனது பெருமை கடவுளின் மகிமை. உனது சிறுமை கடவுள் உனக்குத் தரும் அடக்கம்.

 

 

நோக்கம் உன்னுடையது. ஆக்கம் அவனுடையது.

 

பகவான் சொன்னபடி, ‘மனிதன் மரத்திலிருந்து விழும் இலை. அது தண்ணீரில் விழுந்தால் கொஞ்ச நாட்கள் மிதக்கும். மாலையில் கட்டப்பட்டால் சாமியின் கழுத்துக்குப் போகும். அதிலும் சிக்காமல் இருந்தால் காற்றடிக்கும் திசையெல்லாம் அலையும். நெருப்பில் விழுந்தால் சாம்பலாகும்.’

 

‘எதிலே விழுவது’ என்பது இலையின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல.

 

 

ராதையின் கற்புக்குக் கண்ணனே சாட்சி. சீதையின் கற்புக்கு அக்கினியே சாட்சி. மானிட ஜாதி முழுமைக்கும் இறைவனே சாட்சி. சாட்சி இல்லாதவன் வழக்கு வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை

4

படித்து முடித்து விட்டீர்களா?

இந்த நல்- எண்ணங்களுக்கு கர்த்தா கண்ணதாசன். கண்ணதாசனின் நல்லெண்ண தாசன் நான்.

நீங்களும் தான் என்பது எனக்குப் புரிகிறது.

அடுத்த கட்டுரை: கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை!

விரைவில் மலரும்.

 

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 27 (Post No.4621)

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London- 5-45 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4621

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 157 முதல் 159

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 சமத்துவ உள்ளம்

 

யானும் கோசும் பேசியிருந்தோம்

என்றார் பாரதியார் என்னிடத்தில்

வெளியிற் சென்று வீடு வந்தவர்

மேலுடை கழற்றவும் இல்லை, மேலும்

ஐயர் கண்களில் அழகு குறைந்ததால்

 

அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை,

எல்லாரும் சமமா இல்லையா என்றார்

என்ன நடந்த தென்றேன். ஐயர்

ஒன்றுமில்லை உட்கார் என்றார்

உட்கார்ந்திட்டோம் ஐயரும் நானும்

யானும் கோசும் பேசியிருக்கையில்

எவனோ கோசின் காலில் விழுந்தான்,

 

“நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச்

சீரும் சிறப்பும் தேடலாமே

என்று சொன்னார் கோசு என்னிடத்தில்

மரியாதை எனல் உண்டு

பெரியார் சிறியார் இல்லை என்றாரே!

 

***

குறிப்பு : இங்கு கவிஞர் பாரதிதாசன் கோசு என்று குறிப்பிடுவது அரவிந்த கோஷ் என்ற பெயருடைய மஹரிஷி அரவிந்தரை!

 

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

 

 

பிறப்பொக்கும் எல்லா உயிரும்- வள்ளுவனும் வால்டேரும் (Post No.4620)

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London  11-09 am

 

 

 

Post No. 4620

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

எல்லா உயிர்களும் பிறவியில் சமமாகவே இருக்கின்றன; வேற்றுமை என்பதே இல்லை; குழந்தையும் தெய்வமும் ஒன்று. பின்னர் எப்படி ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லுகிறோம்? அவரவர் செய்கையினால் இந்த வேறுபாடு தோன்றுகிறது. இதை வான் புகழ் வள்ளுவனும், பிரெஞ்சு தத்துவ அறிஞர் வால்டேரும், பகவத் கீதையின் கண்ண பிரானும், கம்பனும் அமெரிக்க  அரசியல் சாசனத்தில் ஜெப்பெர்சனும் சொல்லுகின்றனர். பிற்காலத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் மேடைப் பேச்சு வசன ங்களில் இதையும் சேர்த்துக் கொண்டனர்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் குறள் 972

 

பொருள்

எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

கி.வா. ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் கம்பனும் இதையே சொல்லுவதை எடுத்துக் காட்டுகிறார்:

 

இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

–வாலி வதைப் படலம் 115)

 

பகவத் கீதையில் கண்ணபிரானும் (4-13) சொல்கிறார்,

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் –4-13

பொருள்

 

என்னால் குணங்களுக்குத் தக்கபடி கருமங்களை வகுத்து நான்கு வர்ண முறை உண்டாக்கப்பட்டது; அதை நான் உருவாக்கினாலும், என்னை மாறுபாடில்லாதவன் என்பதை அறிந்துகொள்.

 

இதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பெரிய தத்துவ அறிஞருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையிலும் இது ஜாதி அடிப்படையிலான பிரிவினை அல்ல, குணங்களின் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே என்று காட்டியுள்ளார்.

 

 

சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதைப் பேருரையில் இதை இன்னும் நன்கு விளக்குகிறார்:–

 

“குண பேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ குணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன்; சத்வ குணமும் சிறிது ரஜோ குணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோ குணம் பெரும்பகுதியும் சிறிது சத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைஸ்யன். தமோ குணம் பெரிதும், சிறிது ரஜோ குணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன்.

 

சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோ குணம் சிவப்பானது. தமோ குணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை; க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்து இருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகள் அல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆனால் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்ரியர் இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணர் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது”.

அருமையான விளக்கம்!

xxxx

பிரான்ஸ் நாட்டின் அறிஞர் வால்டேர், “மனிதர்கள் அனைவரும் சமம் ஆனவர்களே; குணங்களினால்தான் வேறுபடுகிறார்கள்” – என்றார்.

 

‘Men are equal; it is not the birth but virtues that make the difference’.

 

xxx

 

அமெரிக்க அரசியல் சட்டத்தில் தாமஸ் ஜெஃபர்ஸன் எழுதிய வாசகங்களில் எல்லோரும் படைப்பில் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர் – என்று எழுதினார். பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரூஸோவும் இதை மொழிந்தார். இவர்களுடைய கருத்துக்கள் பிற்காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. சுதந்திரம்- சமத்துவம் – சஹோதரத்துவம் – என்ற கோஷம்/ கொள்கை விண்ணைப் பிளந்தது.

 

“All men are created equal”

 

 

xxx

 

முகமே மனத்தின் கண்ணாடி! வள்ளுவனும் சிஸரோவும்

 

ஒருவனுடைய முக பாவங்களை வைத்து அவன் மனக் கருத்தை அறிய முடியும். இதை வள்ளுவன் சொற்களில் வடித்தான். பரதமுனி என்ற முனிவர் நாட்டியக் கலையில் இதைப் புகுத்தி முக பாவங்களிலேயே நவரஸங்களையும் காட்டும் அரிய பரத நாட்டியக் கலையை உலகிற்கு அளித்தார்; வள்ளுவன் சொன்ன கருத்துக்களை ஷேக்ஸ்பியர், ரோமானிய அறிஞரான சிஸரோ போன்ற பலரிடத்தில் காண்கையில் பெரியோர்களின் சிந்தனைப் போக்கு ஒரே மாதிரிதான் என்ற கருத்து உறுதிப் படுகிறது.

 

வள்ளுவன் சொன்னான்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் – 706

 

பொருள்

ஒருவனுடை உருவம் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல உள்ளக் கருத்துக்களை முகமானது பிரதிபலிக்கும்.

இந்த உரை பெரும்பாலான நூல்களில் காணப்படும்; அது சரியன்று.

 

பளிங்கு என்பது ஸ்படிகம்; ஆங்கிலத்தில் கிறிஸ்டல் CRYSTAL   என்று சொல்லுவர். அதன் தன்மை என்னவென்றால் பக்கத்திலுள்ள பொருட்களின் நிறத்தை அப்படியே அது எடுத்துக் கொள்ளும்– சிவப்பு நிற பொருளின் அருகே வைத்தால் அதுவும் அப்படியே சிவப்பாகிவிடும். இப்படி ஒருவன் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஏற்ப முகத்தின் பாவமோ நிறமோ மாறும். இதுவே சரியான உரை.

 

கி. வா ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சிப் பதிப்பில் இந்தக் கருத்தை எடுத்து காட்டி அதற்குச் சமமான பாடல்களையும் பிற பாடல்களையும் காட்டி இருக்கிறார். அது பளிங்கு என்பது CRYSTAL ஸ்படிகம் என்பதை உறுதிப் படுத்தும்

 

ஈர்ந்த நுண்பளிங்கெனத் தெளிந்த வீர்ம்புனல்

பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலான்

ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது

 

பம்பைப் படலம், கம்ப ராமாயணம்

 

முகம் காட்டும் உணர்வு பற்றி அகம், புறத்தில் உள்ளது.

முன்னம் காட்டி முகத்தின் உரையா- அகம்; 5-19

 

முன்னம் முகத்தின் உணர்ந்தவர் —  புறம் 3; 250

 

இது தவிர நான்மணிக்கடிகை, பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் வரும் மேற்கோள்களையும் கி. வா.ஜ. வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும்.

 

ஷேக்ஸ்பியரும் இக்கருத்தை ஹாம்லெட் நாடகத்தில் சொல்லுவார்.

“there is a kind of confession in your looks which your modesties have not craft enough to colour” – Hamlet , Act 2, Scene 2

xxx

 

 

ஆத்மாவின் சித்திரமே முகத்தின் தோற்றம் – என்று ரோமானிய அறிஞர் சிஸரோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்.

 

மனத்தின் கண்ணாடி முகம்; கண்கள் குறிப்பை உணர்த்தும் அவயம்  என்றும் சிஸரோ சொன்னார்.

 

 

“The countenance is the portrait of the soul”- Cicero

 

“All action is of the mind and the mirror of the mind is face, its index the eyes”- Cicero

 

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற தமிழ்ப் பழமொழியும் பல மொழிகளில் உள்ளது.

 

‘Face is the index of the Mind’-  English proverb

 

 

 

 

ஒன்றே போல் சிந்திப்பர் சான்றோர் (Great Men Think Alike)- என்பது உலக வழக்கு!!

 

TAGS: — சிஸரோ, வால்டேர், பளிங்கு முகம், மனம் பிறப்பொக்கும், எல்லா உயிரும், வள்ளுவன்

 

–subham–

TAMIL POET VALLUVAR AND VOLTAIRE (Post No.4619)

Written by London Swaminathan 

 

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London  7-31 am

 

 

 

Post No. 4619

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Tiru Valluvar is the most famous didactic poet of India. Though he wrote in Tamil, his work Tirukkural consisting of 1330 couplets on moral values was translated into many of the old (Sanskrit and Latin) and modern languages.

Voltaire was a French philosopher and historian who lived 300 years ago.

 

There are some interesting and striking similarities between some western authors and Tiru Valluvar.

 

Valluvar says,

‘All men are born equal, but distinctions arise only on the basis of performance,

In the respective occupations they take on’- Kural 972

 

Another translation of the same couplet (972) runs as follows

‘Alike is birth to all; but in their greatness they are not alike owing to the divergence of their actions’.

 

French philosopher Voltaire said,

‘Men are equal; it is not the birth but virtues that make the difference’.

 

In the Bhagavad Gita (4-13) Lord Krishna says,

‘The four fold order was created by Me according to the divisions of the quality and work. Though I am its creator, know Me to be incapable of action or change’.

 

Dr S Radhakrishnan comments on this Gita sloka/ couplet (4-13) as follows,

‘The emphasis is on Guna (aptitude) and karma (action) and not Jati (birth). The varna or the order to which we belong is independent of sex, birth or breeding. A class determined by temperament and vocation is not a caste determined by birth or heredity.

 

It is very interesting that Thomas Jefferson also used the phrase in the U S Declaration of Independence:

“All men are created equal”

Later Vietnamese also used the phrase.

J J Rousseau, French philosopher of the 18th century also believed in this principle.

 

Later day politicians and leaders freely used this phrase in their political speeches.

 

Tamil poet Kamban also says that one’s greatness or meanness comes from one’s action; otherwise everyone is equal.

xxx

 

VALLUVAR AND CICERO: Face is the Index of the Mind

Cicero was a Roman politician and lawyer who lived 2000 years ago. He was one of the great orators. He said,

“The countenance is the portrait of the soul”

He also said,

“All action is of the mind and the mirror of the mind is face, its index the eyes”.

 

Tiru Valluvar said,

The mirror reflects nearby objects. even so the face indicates the emotions throbbing in the mind—Kural 706

Another translation runs like this:

‘Even as a crystal reflects what comes near, within its line of sight

The face reflects the offending thoughts of the heart’.

 

‘Face is the index of the Mind’- is an English proverb known to everyone.

 

Great English playwright Shakespeare also uses facial expressions in several of his plays:

“there is a kind of confession in your looks which your modesties have not craft enough to colour” – Hamlet , Act 2, Scene 2

 

In the Srimad Bhagavatam commentary, Srila Prabhupada, use this facial features to illustrate another point:

 

SB 4.21.15, Translation and Purport: King Pṛthu’s body was tall and sturdy, and his complexion was fair. His arms were full and broad and his eyes as bright as the rising sun. His nose was straight, his face very beautiful and his personality grave. His teeth were set beautifully in his smiling face.

 

Amongst the four social orders (brāhmaṇas, kṣatriyas, vaiśyas and śūdras), the kṣatriyas, both men and women, are generally very beautiful. As will be apparent from the following verses, it is to be concluded that not only were Mahārāja Pṛthu’s bodily features attractive, as described here, but he had specific all-auspicious signs in his bodily construction.

 

As it is said, “The face is the index of the mind.” One’s mental constitution is exhibited by his facial features. The bodily features of a particular person are exhibited in accordance with his past deeds, for according to one’s past deeds, his next bodily features—whether in human society, animal society or demigod society—are determined. This is proof of the transmigration of the soul through different types of bodies.

 

–SUBHAM–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13 (Post No.4618)

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London- 6–34 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4618

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 10 கட்டுரை எண் 4538 -வெளியான தேதி 24-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 11 கட்டுரை எண் 4563 -வெளியான தேதி 30-12-17 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 12 கட்டுரை எண் 4580 -வெளியான தேதி 4-1-18

 

இதனுடைய தொடர்ச்சியாக இந்தக் கடைசிக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 13

 

ச.நாகராஜன்

22

மாக்ஸ்முல்லரைப் பற்றிய பல முக்கிய விவரங்களை இது வரை பார்த்தோம்.

இப்போது மாக்ஸ்முல்லர் மர்மத்தின் பிரதான கேள்விக்கு வந்து அந்தப் புதிரை அவிழ்க்க முயல்வோம்.

மாக்ஸ்முல்லர் இந்தியாவின் நண்பரா அல்லது பிரிட்டிஷாரின் கைக்கூலியா?

மாக்ஸ்முல்லரின் வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

ஆதரவின்றி, கையில் காசின்றி, ஏதேனும் செய்து சற்று சம்பாதிக்க வேண்டும் என்கின்ற முதல் நிலை.இது அவரது இளமைப் பருவம்.

2 பிராங்க் செலவழிக்கக்கூட ‘வக்கில்லாத ஏழ்மை நிலையில், ஒரு சாக்லட்டை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இனி ஒருபோதும் சாக்லட் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று தீர்மானித்தேன் என்று 10-4-1845 அன்று தன் டயரியில் எழுதியிருந்த அளவுக்கு ஏழ்மை நிலை.

இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவை முற்றிலுமாக, நிரந்தரமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காகே ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாகம் சீராக, நிரந்தரமாக இருக்க வேண்டுமெனில் ஹிந்துக்களின் சிலை கும்பிடும் உருவ வழிபாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அனைவரும் ஆங்கிலக் கல்வி வழி மூலம் கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்பதே மெக்காலேயின் திடமான நோக்கமாக இருந்தது.

அவன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இதை வலியுறுத்துகிறான் இப்படி:

In 1836, while serving as chairman of the Education Board in India, he enthusiastically wrote his father:

“Our English schools are flourishing wonderfully. The effect of this education on the Hindus is prodigious. ..It is my belief that if our plans of education are followed up, there will not be a single idolator among the respectable classes in Bengal thirty years hence. And this will be effected without any efforts to proselytize, without the smallest interference with religious liberty, by natural operation of knowledge and reflection. I heartily rejoice in the project.”

மாக்ஸ்முல்லர் மெக்காலேயை 1851ஆம் ஆண்டு ஒரு பார்ட்டியில் சந்தித்தார். ஆனால் அது சில நிமிடங்களே நீடித்தது. பின்னர் 1855இல் தான் அவர் மெக்காலேயை மீண்டும் சந்தித்தார். மாக்ஸ்முல்லரை மெக்காலேக்கு முதலில் பிடிக்கவில்லை.

மெக்காலேயின் மதமாற்ற எண்ணத்தைத் தன் எண்ணமாக மாற்றிக் கொண்டார் மாக்ஸ்முல்லர். பின்னர் தான் வழி பிறந்தது.

ஆங்கிலக் கல்வி மூலம் இந்தியரை நிரந்தர அடிமைகளாக் ஆக்க முயலும் மெக்காலே ஒரு புறம், எப்படியாவது மதமாற்றம் செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றத் துடிகும் பாதிரியார்கள் இன்னொரு புறம் – அவர்களின் மனப்போக்கை  நன்கு புரிந்து கொண்டார் மாக்ஸ்முல்லர். அதை அனுசரித்தார் அவர்.

 

ஒரு வழியாக வேலை கிடைத்தது. என்ன வேலை என்பதும் புரிந்தது.

அந்த வேலை கிடைத்த உற்சாகத்தினால் தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா கிறிஸ்தவ மயமாகப் போகிறது என்று எழுதினார்.

வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்றார்.

வேத காலத்தை தனக்குத் தோன்றிய விதத்தில் “ஆராய்ந்து ஒரு காலத்தை நிர்ணயித்தார்.

பாதிரிகள் குஷியில் குதித்தனர்.

ஆனால் அவரது வாழ்க்கையின் இந்த முதல் பகுதி முடிவுக்கு வந்தது. ஐம்பது வயதுக்குப்  பின்னர் அவர் பார்வை மாறியது.

கண்களில் பாதிரிகளுக்காக மாட்டிக் கொண்ட மஞ்சள் கண்ணாடியை அவ்ர் கழட்டிப் போட்டார். ஒவ்வொரு வண்ணமும் தன் இயல்பான நிறத்தை அவருக்குக் காண்பித்தது.

பற்பல இந்திய அறிஞர்கள் வேதத்தை மொழி பெயர்த்து அவருக்கு அனுப்ப அனுப்ப வேதத்தின் மறுக்க முடியாத மிக உயரிய சிந்தனைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது. அதனால் வேத சிந்தனைகள்  உயரியதாக இருப்பதை உலகிற்கு உரிய முறையில் வெளிப்படுத்தினார்.

இந்த தீடீர் மாற்றம் பாதிரிகளைத் திகிலுறச் செய்தது. நோக்கத்தில் பிறழ்ச்சி என்று கண்டவுடன் மாக்ஸ்முல்லரை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்தனர். எதிர்த்தனர். கோபத்துடன் கூவினர். ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தியாவிற்கு உயரிய புகழாரத்தைத் தனது சொற்பொழிவுகளில் சூட்டினார்.

அது அவரதுIndia What It Can Teach Us –உரைகளாக மலர்ந்தது.

இதனால் அவரது பதவிக்கே வேட்டு வைக்கப் பார்த்தனர்.

 

   ஆனால் அவர் பணத்திற்காக யாரையும் அண்டி இருக்க வேண்டிய நிலையில் இப்போது இல்லை. அதாவது மெக்காலே பயம் அவர் இறந்த 1859ஆம் ஆண்டுடன் போனது. (மாக்ஸ்முல்லருக்கு வயது 36)

1883இல் தனது 60வது வயதில் இந்தியாவின் உன்னத நிலையை உள்ளது உள்ளபடி அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலிருந்து அடுத்த நிலையை அவர் அடைந்த போது தான் ஸ்வாமி விவேகானந்தர் அவ்ரை 28-5-1896 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் அவர் நான்கு ஆண்டு காலமே உயிருடன் இருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியா பற்றிய மாக்ஸ்முல்லரின் எண்ணம் புகழும் நிலையிலிருந்து பரவசத்துடன் தொழுகின்ற நிலைக்கு மாறியிருந்தது.

அதைத் தான் ஸ்வாமிஜி கண்டு அப்படியே தனது கடிதங்களிலும், உரையாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆக மாக்ஸ்முல்லரை பிரிட்டிஷாரின் கைக்கூலி, ஏஜண்ட் என்று திட்டி அதற்கான ஆதாரங்களைக் காட்டுவோர் கூறுவது சரியே. அது அவரது வாழ்க்கையின் முதல் பகுதி. மோசமான் பகுதி. வேதங்களை இகழ்ந்த பகுதி.

அடுத்த நிலையில் அவர் தனது உரைகளில் மிக பிரமாதமாக இந்தியாவைப் புகழ்ந்ததைப் பரவலாக மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே. அது அவ்ரது வாழ்க்கையின் அடுத்த பகுதி. அதில் அவர் இந்தியாவைக் கண்டு வியக்கும் ஒருவராக – admirerஆக – மாறி இருந்தார்.

 

இறுதியாக ஸ்வாமிஜி அவரைச் சந்தித்த போது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் அவர் இருந்தார். ஸ்வாமிஜி அவரைப் பற்றிய தனது கணிப்பைக் கூறியதும் சரியே. அந்த நிலையில் அவர் இந்தியாவை பக்தி பரவசத்துடன் பார்க்கும் நிலையில் இருந்தார்.இந்த நிலையைச் சுட்டிக் காட்டி ஸ்வாமி விவேகானந்தர் அவரைப் புகழ்ந்து கூறியதை மேற்கோள் காட்டுவோர் கூறுவதும் சரியே!

ஆக இந்த மூன்று நிலைகளில் மாக்ஸ்முல்லரைப் பார்க்கும் போது அவர் மாறுப்பட்ட நிலைகளில் இருப்பதை உணரலாம்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவரைச் சந்தித்த ஸ்வாமிஜி அவர் மறுபிறப்பு உள்ளிட்ட அனைத்து ஹிந்து மதக் கருத்துக்களையும் ஏற்றுக் கோண்டிருப்பதாகக் கூறுகிறார்.

‘இந்தியா வந்தால் அங்கிருந்து திரும்ப மாட்டேன்; அங்கேயே என்னை எரிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் மாக்ஸ்முல்லர் இருந்தார் என்றும் ஸ்வாமிஜி தெரிவித்துள்ளார்.

 

ஒரு வியப்பான செய்தி.

இந்தச் செய்தியை நான் (இந்தக் கட்டுரை ஆசிரியர்) பிரபல எழுத்தாளர் மணியன் நடத்திய ஆன்மீக மாத இதழான ஞானபூமியில் படித்தேன்

குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள் அவர்களின் உரையாடல் 1985 பிப்ரவரி இதழில் 28ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் பகுதி இது.

அந்தப் பகுதியை மட்டும் அவருடைய சொற்களிலேயே இங்கு பார்ப்போம்:

“ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த மாக்ஸ்முல்லர் என்ற பேரறிஞர் தனக்கென்று ஓர் உயில் எழுதி வைத்திருக்கிறார். அதில் அவர் “நான் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க விரும்பவில்லை. அப்படிப் பிறந்தாக வேண்டும் என்று ஆண்டவன் விரும்பினால் என்னை இந்தியாவில் இந்துவாகப் பிறக்கச் செய்யட்டும். அதிலும் தென்னிந்தியாவில் வேதம் பயிலும் ஒரு குடும்பத்தில் பிறக்கச் செய்யட்டும்! என்று எழுதி வைத்திருக்கிறார்.

 

இந்த மாக்ஸ்முல்லர் உயில் பற்றி மேலும் அறிய விரும்பி இணையதளத்தில் ஆராய ஆரம்பித்தேன்; இது பற்றி ஏதேனும் புத்தகம் உள்ளதா என்று தேடியும் பார்த்தேன். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி உள்ளபடி உண்மையாக இருந்தால் மாக்ஸ்முல்லரின் இறுதி நிலையை ஊகித்து உணர்வது வெகு சுலபம்.

ஆக மாக்ஸ் முல்லர் பிரிட்டிஷாரின் கைக்கூலியாக இருந்து இந்தியாவின் நண்பராக மாறி கடைசியில் இந்தியாவின் பக்தராக ஆனார் என்ற முடிவுக்கு வரலாம்.

இது தான் மாக்ஸ்முல்லர் மர்மம்.

 

23

இனி அவர் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அது விளைவித்த சேதத்தையும் நினைக்கும் போது அதற்கென்ன பதில்?

மாக்ஸ்முல்லர் விளைவித்த சேதம் பெரிது.அதைக் கையில் ஏந்திக் கொண்ட கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதவாதிகள் வேதங்களை இழித்தும் பழித்தும் இன்று வரை கூறி வருகின்றனர்.

ஆனால் இதை மறுத்து ஏராளமான அறிஞர்கள் தங்கள மறுப்புக் குரலை உரிய ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்; வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டை இங்கு தரலாம்:

Historical Gleanings from Sankrit Literature  – S.C.Banerji – 1979 (published by Oriental Publishers & Distributors, Daryaganj, New Delhi, India)

மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் பக்கம் 5இல் வரும் ஆராய்ச்சி உரை இது:-

Max Muller propounded the theory that Sanskrit literature had a hibernation during the early centuries of the Christian era. According to him, there was a literary interregnum in this period due mainly to continuous foreign invasions. This theory has been proved to be wrong on literary and epigraphical evidences. Also disproved is the hypothesis of a period of Prakrta literature out of which Sanskrit literature grew up.

இது போல மாக்ஸ்முல்லரின் தவறான பல முடிவுகளை வெளிப்படுத்தும் ஏராளமான அறிஞர்களின் உரைகள் உள்ளன. அதை விரிப்பின் ஒரு தனிப் புத்தகமாக  மலரும்.

24

இறுதியாக ஸ்வாமிஜியின் ஒரு கருத்துடன் இந்த மாக்ஸ்முல்லர் மர்மத்தை முடித்துக் கொள்வோம்.

இந்தியாவைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினாலும் அவ்வப்பொழுது ஒரு குறையையும் மாக்ஸ்முல்லர்  சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று ஸ்வாமிஜி குறிப்பிடுகிறார். ஆக அவருக்கு மாக்ஸ்முல்லரின் இந்தக் குறை தெரிந்தே இருந்திருக்கிறது.

நாளடைவில் அவர் இன்னும் திருந்துவார் என்று அவரது கருணை உள்ளம் நினைத்தது.

ஆனால் வேத காலம் பற்றி அவர் கூறிய உரையே முத்தாய்ப்பான ஒன்று..

உலகிலேயே மிகப் பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம் தான். இது எப்போது தோன்றியது  என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம்  வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.. ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன. ஏன், முன்னை விட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்

 (ஞான தீபம் மூன்றாம் தொகுதி பக் 219)

இக்கால ஆராய்ச்சியாளர் என்பதில் மாக்ஸ்முல்லரும் அடங்குகிறார். அவரது வேத காலம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பதை அழுத்தம் திருத்தமாக இப்படி ஸ்வாமிஜியே கூறி விட்டார்.

ஆகவே நமது இறுதி முடிவு இதுவாக இருக்கிறது:

மாக்ஸ்முல்லரில் தள்ளுவனவற்றைத் தள்ளி, கொள்வனவற்றைக் கொள்வோம்.

அவரது கைக்கூலி கருத்துக்களைக் கை கழுவி விட்டு விட்டு அவரது பக்திப் பரவசமான ஹிந்து மதம் பற்றிய கருத்துக்களை ஏற்போம்.

இந்த விஷயத்தில் இன்னும் அதிகம் ஆவல் கொண்டு மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் மாக்ஸ்முல்லர் எழுதியவை, அவரைப் பற்றி எழுதியவைஸ்வாமி விவேகானந்தரின் அனைத்து நூல்கள் ஆகியவற்றைப் படிப்பதோடு மெக்காலே, ராஜா ராம் மோஹன் ராய் உள்ளிட்டவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும். அத்துடன் பாதிரிகளின் மதமாற்றப் பிரச்சாரம் பற்றிய ஏராளமான நூல்களையும் படிக்கலாம்.

இதுகாறும் இந்தத் தொடரைப் படித்து ஊக்குவித்த அன்பர்களுக்கு எனது நன்றி.

இதை வெளியிட்ட திரு . சுவாமிநாதன்www.tamilandvedads.com அவர்களுக்கு எனது நன்றி.

                  ச.நாகராஜன் பங்களூரு 10-1-2018

 

அன்பர்களின் கருத்தை வரவேற்கிறோம்.

பாரதி போற்றி ஆயிரம் – 26

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London- 6-23 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4617

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 26

  பாடல்கள் 153 முதல் 156

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாரதியார் முன் இரு பிரசங்கங்கள்

 

சமரச சன்மார்க்கக் கட்டிடத்தில்

தகு திரு வி கலியாணசுந்தரர் தாம்,

அமைவுடைய இளங்கோவின் கவி நயத்தி

அமுதம் போல் எடுத்துரைத்தார் பிரசங்கத்தில்!

தமை மீறிப் பொங்கி யெழும் சந்தோசத்தால்

தட தட எனக் கரகோசம் செய்தார் ஐயர்!

நமது தமிழ் இனிமைதனைக் கண்டு கொள்க

நானிலமே என்றன தல்விழியும் மார்பும்!

 

அடுத்தபடி வேறொருவர் பிரசங்கித்தார்

அவர் கோணிக் குரங்கு போல் ஆடி ஆடி

எடுத்தெடுத்துப் பாடினார் தாயுமானார்

எழிற்பாட்டை அழுகுரலில்! அவர் சனத்தைப்

படுத்தாத பாடில்லை! கோபத்தாலே

பாரதியார் “யாரடா இவன் என்றார், நான்

தடுத்து விட்டேன் எழுந்திரு என்றார் ததாஸ்து சொன்னேன்

சபைத் தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார்!

 

பாரதியாரும் நாடகமும்

 

நற்சரிதை நற்கவிதை நல்நடிப்பு

நாடகத்தில் பாரதியார், அமைக்க எண்ணி

முற்காலம் காளிதாசன் புகன்ற

“சாகுந்தலம் நடத்த முடிவு செய்தார்

உற்ற நண்பர் சீனிவா சாச்சாரிக்குச்

சகுந்தலையின் வேடந்தான் உரியதென்றார்

பற்றறு விசுவா மித்திரர் வா வே சுக்காம்

பகரறிய துஷ்யந்தன் நான் தான் என்றார்

 

தொண்டு செயப் பல நண்பர் காத்திருந்தோம்

துடை நடுங்கும் தமிழ்நாடு, தேச பக்தர்

அண்டுமந்தக் காரியத்தில் அண்டவில்லை

அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள்

வண்டி வண்டியாய்க் குப்பை கூளமெல்லாம்

வாரிப் போய் பாரதியார் போட்டிருப்பார்

கொண்டு வந்து சேர்த்திருப்பார் நாடகத்தில்

குளிர் நிலவை; ஒளி நிலவை; அற்புதத்தை!

 

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

IS SILAPPADIKARAM A BRAHMANA KAVYA? (Post No.4615)- Part 3

 

IS SILAPPADIKARAM A BRAHMANA KAVYA? (Post No.4612)- Part 3

 

 

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  7-04 AM

 

 

 

Post No. 4615

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

PART 1 AND PART 2 WERE PUBLISHED HERE IN THE PAST TWO DAYS.

 

 

14.Matavi and Manimekalai

Matavi having heard all the tragic news shaved her hair and entered the Buddha Vihara. These people died because they heard this news from me; therefore I come to bathe in the holy waters of Ganges ( in order to purify myself). Long live you, O king of kings!

When Matalan finished, Senkuttuvan asked what happened to the Pandya kingdom.

 

Thus Matalan was used to give all the news about all the important characters in the epic.

 

15.One Thousand Goldsmiths Executed!

Matalan continued, “O King, you destroyed  in a day the nine umbrellas of nine enemy kings who joined together in an alliance against your brother in law Killivalavan. Listen! The victorious Ver Celiyan residing at Korkai offered a human sacrifice of one thousand goldsmiths in a day to the divine Pattini who had twisted off one off her breasts.

When Matalan gave all this information the sun set and then the court astrologer said, “ Long live the ruler of the earth. It is now thirty two months since we left Vanci.

 

  1. Fifty Tula Gold to the Brahmana!

When Senkuttuvan asked about the succession in the Cola kingdom, Matalan praised the Colas whose forefathers destroyed the three fortresses suspended in the sky (mythological story), who gave flesh to a kite to save a dove (mythological Sibi Story) would never move away from the righteous path , Senkuttuvan became very happy and said to the Brahmana,

“O Brahmana Matalan, please accept the gift of fifty Tulams of pure gold” equal to Senkuttuvan’s own weight (Tula Bharam).

 

17.BRAHMIN’S ADVICE TO SENKUTTUVAN!

Matalan in Natukar Katai

“Then a Cakkayan, a dancing expert from Paraiyur, which was famous for Brahmans versed in the four Vedas, exhibited for king’s pleasure, the dance known as Koticetam danced with Uma as part of Himself by the mighty Siva, while the anklet worn on his  beautiful feet tinkled.

In the Natukar Katai Matalan speaks:

“O King wearing a long garland of victory and possessing a huge army! O Lion of kings, who knows all that can be known from great men, dismiss your wrath! Ruler of the earth, may the days you have yet to live become more numerous than the particles of sand in the cool river An Porunai.

Pray do not dismiss my words! Even after passing through fifty years of your protection on this earth you do not perform religious sacrifice but continue to perform the sacrifice at the battle. Among your ancestors in this city one king distinguished himself by destroying the Katampu of the seas, another exhibited great prowess by carving the bow emblem on the Himalayas, another enabled a Vedic Brahmana in return for composing some poems, to ascend bodily to the higher world, another commanded the messenger of death not to take away lives indiscriminately but only in particular order; another Cera penetrated the golden region of the high mountain in the fertile kingdom of the Barbarous Yavanas. After adding two more ancestor king’s adventures Matalan says, “It is not necessary to point out to men of wisdom that youth will not last for ever. The goddess of wealth abides in your chest, for you see your own body covered with grey hairs. Even good souls in divine bodies may, it is just possible, enter human frames on earth. Souls of those who are born as men now may by chance be reborn as animals. Men are but actors on a stage, and will have no  enduring embody in only one fixed form. That life after death will depend upon deeds done in a previous birth is a significant statement which is not untrue”.

 

“O King of the powerful sword! I have chosen not to solicit rare gifts from you. I cannot suffer to see a good soul wrapped within a good body travel the path trodden by the common people of this vast world. O king who has crossed the limits of learning! you should therefore do that great and fruitful yajna with the help of sacrificial priests learned in the four Vedas in order you may gain that superior path which Gods extoll.

 

“If you say that good deed can be done tomorrow it may chance that your good soul trained in Vedic lore will leave your body even today.”

 

When the learned to tongue of the Vedic Brahmana, thus ploughed and sowed the seeds of divine wisdom in the kings’ ears, those seeds sprouted forth in right time.

 

With a desire to enjoy the fruits of the harvest of virtue, the king with the resounding anklets, commanded the presence of those sacrificial priests who had completed their studies by listening to teachers belonging to a group of traditional interpreters of the four Vedas. They were asked to commence the festival of sacrificial rituals in the manner instructed by Matalan.

 

 

18.Matalan’s Last appearance in Varantaru Katai

 

Brahmana Miracle!

In the chapter Varanataru Katai there is a long anecdote where Devanti gives the history of Manimekalai, daughter of Kovalan and courtesan Matavi. Then Devanti was possessed by Pasanatan Cattan.

It is said that there are three girls in the crowd—twin daughters of Arattan Cetti and a little daughter of Cetak Kutumpi, a temple priest. If Matalan sprinkled the water of a divine pool on those girls, they would reveal their past births. Devantikai gave that water to Matalan which kept in his string-bag (Uri).

 

Seeing all this Senkuttuvan was lost in wonder and turned towards Matalan when he said with good cheer: ‘Hear this O King! Let all your ills disappear.

 

Then Matalan sprinkled the water on the three girls. They recited their previous births. Senkuttuvan looked at the face of Matalan, wearing the sacred thread on his chest, he blessed him: O King of Kings! Long may you live. These three were, in previous births, attached to the devoted wife of Kovalan, who seized the mad elephant’s tusk to release a Brahmana from the clutches of the mad elephant.

 

Matalan finished his speech with a good advice:

“It is not strange that people who do good things attain heaven and people who have worldly minds are reborn and that good and bad deeds have their own reward and those born should die, and those dead should be re born. Those are ancient truths ( Bhagavad Gita echo: Jaatasya hi dhruvo mrtyuh dhruvam janma mrtasya ca)

 

Matalan continues:

You (Senkuttuvan) were born through the grace of Him who rides on the sacred bull (Lord Shiva) and have won distinction as a king in this wide world, saw, clear as an object held in the palm of your hand, the fruits of righteous deeds and the forms of holy people. Long live from eon to eon protecting the earth! Live long gracious monarch!

 

Pleased with what the Brahmana Matalan said, the king endowed grants to the temple of the ever youthful Pattini who had twisted off her breast and there by raised flames which enveloped the noisy Kutal (another name for Madurai) of the great Pandyan Kingdom, much celebrated in poetical themes. He further ordered the conduct of daily festivals by instructing Devantikai to offer flowers, perfume and incense.

The monarch of the world circumambulated the shrine thrice and stood proffering his respects. Many kings including the Gajabahu of sea girt Sri Lanka participated in the festival.

 

Kannaki too when she burnt Madurai down asked the Agni Deva (Fire God) to spare Brahmins, old people, cows, chaste women, invalids and all good people.

19.Chief Duties of the Lady of the House

The chief duties of the lady of the house were giving of gifts to the deserving, the serving of the Brahmins and the entertaining of the ascetics and guests, as evidenced by Kannaki’s own words in canto XVI.II 71-3 Kolaikkala Katai

 

  1. Brahmin Ambassador and Brahmin Actors

There are more references to Brahmins throughout the epic

A Brahmin ambassador by name Kausikan delivered the message of Matavi to Kovalan and took back his message to his parents – Purancheri Irutta Katai

Brahmin actors (Kuutta Chakkaiyar) staged a show in front of Senkuttuvan- Natukar Katai

Keeranthai, a Brahmin, told his wife that Pandyan king would protect her when he went out of the city and that led to Porkai Pandya Story (Pandya with a Golden Hand)—Katturai Katai

Ilango says that Pandyan kings always hear the Vedic recital but never the justice bell (katturai Katai)

A Brahmin poet by name Palaik Kautamanar going to heaven with his body- Natukar Katai

 

Madurai is full of smoke from the Vedic Fire altars—Naatu Kaan Katai

Conclusion:

Hundreds of lines were attributed to Brahmin Matalan and he gave us lot of information to fill the gaps in the epic. Miraculous incidents happen in front of the Brahmana and the king Senkuttuvan. He commands the king to do Yagas and yajnas and the king readily obeys. Kannaki lamented that she could not feed the Brahmins and saints. She spared Brahmins when she burnt down Madurai. Parasaran- Dakshinamurthy anecdote showed the condition of Vedic education in Tamil Nadu. Kovalan could read s Sanskrit manuscript. Brahmins are praised as great scholars in Tamil (Vandamiz Maraiyor in Katturaik Katai; it speaks of the Brahmin who composed a poem on Chera king in Patitrup Pattu and went to heaven with his wife in his human body).

Why did Ilango do it?

Why did Ilango do it? did he write a Brahmana Kavya? My opinion is that he did not exaggerate anything. He described the real condition of second century CE Tamil Nadu where Brahmins commanded great respect. They could command great and mighty kings like Senkuttuvan. They could guide them what to do for the welfare of the community. Through Parasran-Dakshinamurthy anecdote, Ilango not only showed that even a child in a remote village of Tamil Nadu could recite Vedas perfectly, but also Brahmins were unselfish and could donate their wealth for the Vedic children. Ilango was the first poet in Tamil to show the weddings conducted by the Brahmins in front of fire.

 

Silappadikaram was the most popular epic. It was the only epic which based its story on a pure Tamil theme.

Paranar and other poets of Patitrup Pattu, one of the 18 books of Sangam Tamil literature, confirmed all that was said by Ilango. There is no doubt that the history second century Tamil Nadu was a golden period in the history of Tamil Nadu.

 

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

 

 

 

கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத (Post No.4614)

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London- 6-46 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4614

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாக்யா 12-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 47வது) கட்டுரை

 

கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத கபெகண்கமகணிகககள்!

.நாகராஜன்

 

“இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க பழங்குடியினரின் மொழி சங்கேத வார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதை அறிந்த ஜெர்மனியும் ஜப்பானும் தங்கள் மாணவர்களை அமெரிக்க பழங்குடியினரின் மொழிகளான செரூகி, சாக்டா, கொமென்சே போன்ற மொழிகளைக் கற்குமாறு செய்தனர்” – உலக மகா யுத்த வரலாற்றுத் தகவல்.

 

தலைப்பைப் பார்த்து மலைக்க வேண்டாம். தவறாக கம்போஸ் செய்து விட்டார்களோ என்று குழம்பவும் வேண்டாம். எல்லா ‘க’வையும் நீக்கி விடுங்கள். புதிர் விடுபட்டு விடும்.

புதிர் செய்திகளை விடுவித்த பெண்மணிகள் – இது தான் தலைப்பு.

யார் அவர்கள் என்று பார்ப்போம்.

 

இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பதை முதலில் தெரிந்து கொண்டவர் ஒரு பெண்மணி! அவர் பெயர் வர்ஜினியா டி. அடர்ஹால்ட் (Virginia D.Aderholt).

இரகசியமாக ஜெர்மனியிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் அனுப்பப்படும் குறியீட்டு, சங்கேத செய்திகளை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

 

நாஜி ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்து விட்டது. ஜப்பானும் சரணடையப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஜப்பான் ஸ்விட்ஸர்லாந்துக்கு அனுப்பும் செய்திகளைக் கேட்கப் பணிக்கப்பட்டவர் அடர்ஹோல்ட்.  அவரே ரகசிய செய்திகளின் “கோடை (Code) உடைத்து” உண்மைச் செய்தியைத் தர வேண்டும்.

 

ஜப்பானிலிருந்து நிபந்தனையற்ற சரணாகதி என்ற செய்தி ஸ்விட்சர்லாந்தில் பெறப்பட்டது. இதை இடைமறித்துக் கேட்ட அடர்ஹோல்ட் ஓடோடிச் சென்று அனைவருக்கும் செய்தியைச் சொன்னார்.

உடனடியாக செய்தி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹாரி எஸ். ட்ரூமனுக்குப் பறந்தது. 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி. கோடைக்காலத்தின் அழகிய மாலை நேரம்.

ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னார் :” இரண்டாவது உலக மகா யுத்தம் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”

இதைக் கேட்ட அமெரிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வந்து குதித்தனர்; ஆனந்த நடனமாடினர்; கூவினர்; ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

 

ஆனால் உலக மகா யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரச் செய்ய அரும் பணி ஆற்றிய ஒரு பிரிவே மறக்கப்பட்டு விட்டது.

அந்தப் பிரிவு தான் கோட் ப்ரேகிங் பிரிவு. அதாவது கோட் எனப்படும் சங்கேதச் செய்திகளை உடைத்து உண்மைச் செய்தியை அறியும் பிரிவு.

இதில் மட்டும் பத்தாயிரம் பெண்கள் வேலை பார்த்தனர். ஆரம்பத்தில் பெர்ல் ஹார்பரில் ஜப்பான் தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா இரண்டாம் உலக மகா யுத்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

அப்போது பிரிட்டனில் இந்த இரகசியச் செய்திகளை உடைக்கும் பிரிவில் பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றினர். ஆனால் அமெரிக்காவிலோ வெறும் 200 பேர்கள் மட்டுமே இதில் பணியாற்றினர்.

 

ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க ராணுவம் ஏராளமான பெண்களை இந்தப் பணியில் அமர்த்தியது.

ஒரு வித வசதியுமின்றி வெயிலில் சொட்டச் சொட்ட வியர்வை நனைய வேலை பார்த்த இவர்களுக்கு கெட்ட பெயரும் கூட! ராணுவ உடையில் வேலை பார்க்கும் வேசிகள் என்று இவர்களைப் பற்றிய வதந்தி பரவியது. ஆனால் இவர்களோ தேச நலனை மனதில் கொண்டு அமைதியாகப் பணியாற்றினர்.

இவர்கள் தந்த செய்திகளால் ஜெர்மனி மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கப்பல்கள் நேச நாட்டுப் படையினரால் மூழ்கடிக்கப்பட்டன.

 

பெர்ல் ஹார்பரைத் தாக்க திட்டமிட்ட இசோரோகு யமமோடோ என்ற ஜப்பானியரின் விமானத்தைச் சுட்டு வீழ்த்த உதவியதும் இந்த ‘கோட் கேர்ள்ஸ்” தான்!

எதிரியின் கப்பல்கள் எங்கு நிலை கொண்டுள்ளன, எதிரிகளின் விமானம் எந்தத் திசையில் எப்போது வரும், எதிரியின் ராணுவம் எந்தப் பகுதியில் எப்போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பன போன்ற தகவல்களை ஒரு உளவுப் படை போல இந்த ரகசிய செய்தி தரும் படை பணியாற்றியது.

ஆனால் இரகசியம் காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் இவர்களைப் பற்றி உலகம் இன்றளவும் அறிந்திருக்கவில்லை.

பிரபல எழுத்தாளரான லிஸா முண்டி (Liza Mundy) என்ற பெண்மணி இதை ஆராயக் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக அரிய பல செய்திகளையும், உண்மைச் சம்பங்களையும் அடக்கிய “கோட் கேர்ள்ஸ்” (Code Girls) என்ற புத்தகத்தை எழுதி இப்போது வெளியிட்டுள்ளார்.

20 கோட் ப்ரேக்கர்ஸ் எனப்படும் புதிர்களை அவிழ்த்த பெண்மணிகளை இவர் நேரில் சந்தித்து பல அரிய விஷயங்களைச் சேகரித்துத் தொகுத்தார்.

 

“Loose lips sink ships” (உளறும் வாய் கப்பல்களை மூழ்கடிக்கும்) என்பதை அந்தப் பெண்மணிகள் தினமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்களாம். அவ்வளவு இரகசியமாக ஒரு அனாவசிய வார்த்தையையும் பேசாது, உளறாமல் பணியாற்றினார்களாம் அந்தப் பெண்மணிகள்!

இவர்கள் அனைவரும் மிக இள வயதில் இப்பணிக்கு வந்தவர்கள். கணிதம், புள்ளி விவரம், பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நிபுணத்வம் பெற்றவர்களால் தான் சங்கேதச் செய்திகளை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை ரேடியோவில் இடைமறித்துக் கேட்டு அதன் உண்மையை அறிந்து தக்கபடி இராணுவம், கடல் படை,விமானப் படை ஆகியவற்றிற்கு உதவ முடியும்!

 

“Climb Mount Nitaka” என்ற வார்த்தைகள் ஜப்பானிய போர் விமானங்களுக்குத் தரப்பட்டது. பேர்ல் ஹார்பரைத் தாக்கலாம் என்பதற்கான சங்கேத வார்த்தைகள் இவை. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பி.பி.சி பல தனிநபர்களுக்கான செய்திகளை ஒலிபரப்பியது. ஆனால் இவை உண்மையில் ராணுவத்தினருக்கான சங்கேத செய்திகள்.

 

The Princess wears red shoes  என்றோ Mimi’s Cat is asleep under the table என்றோ ஒலிபரப்பப்பட்ட செய்திகள் உண்மையில் மிக ரகசியமாக ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்ட கட்டளைகளாகும்.

இரகசியமாக இப்படிச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது என்பது பண்டைய காலம் தொட்டே இருந்து வரும் ஒரு விஷயம்.

யுத்த காலத்தில் ஒற்றர்கள் செய்திகளை இப்படி சங்கேத மொழியில் தான் அனுப்புவார்கள்.

அதுமட்டுமல்ல, மற்றவர்கள் எதிரில் இருக்க காதலர்கள் எப்படி செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள்? சமிக்ஞைகள் மூலமாக! முன்னரே தீர்மானித்துக் கொண்டபடி கையைத் தலையில் தொட்டால் ஆற்றங்கரைக்கு வா, இரண்டு கைகளையும் கோர்த்தால் வராதே என்பன போன்ற சமிக்ஞைகள் பழங் காலத்திலேயே உண்டு.

என்றாலும் கோட் என்பது ஒரு பெரும் தொழில்நுட்பக் கலையாக மாறியது இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தான்!

 

நேச நாடுகளின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த இந்தப் பெண்மணிகளை உலகம் ‘கோட் கேர்ள்ஸ்’ புத்தகம் மூலமாக ஒரு சிறிது அறிகிறது, இன்று!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கரோல் இசை 2017இல் ஒரு புது வடிவம் பெற்றது.

பிரபல கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டூரிங் (Allan Turing) தனது கம்ப்யூட்டரில் இசை அமைத்த இரண்டு பாடல்களை இப்போது (2017இல்) நியூஜிலாந்தில் உள்ள காண்டர்பெர்ரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மீண்டும் உருவாக்கி இருக்கிறார்கள்.

1951ஆம் ஆண்டு. டூரிங் கம்ப்யூட்டரில் இசை நோட்ஸ்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு கம்ப்யூட்டரில் இசையை உருவாக்க அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. முதல் இசை நோட்ஸ்களை உருவாக்கி விட்டதோடு சரி, பேசாமல் இருந்து விட்டார். ஆனால் பள்ளி ஆசிரியையான கிறிஸ்டோபர் ஸ்ட்ராச்சி (Christopher Strachey) என்பவரைத் தன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த அனுமதித்தார். ஒரு நாள் ஸ்ட்ராச்சி அமைத்த இசையைக் கேட்டு  டூரிங் மகிழ்ந்து போனார். நல்ல ஷோ என்று பாராட்டினார். அந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட மக்கள் அதை வரவேற்றனர்.

 

ஆக 67 வருடங்களுக்கு முன்னதாகவே கம்ப்யூட்டர் இசை தொடங்கி விட்டது. பெருமையெல்லாம் டூரிங்கிற்கும் ஸ்ட்ராச்சிக்கும் உரியது!

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி …

https://tamilandvedas.com/…/காதல்-கடிதம்-எழுத-ர…

Translate this page

19 Mar 2013 – காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழிபோர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் …

காதல் கடிதம் எழுத ரகசிய சங்கேத மொழி …

swamiindology.blogspot.com/2013/03/blog-post_8896.html

19 Mar 2013 – போர்க் காலங்களிலும், படை மற்றும் ராணுவ தளவாட நகர்த்தல் பற்றித் தளபதிகளுக்கு தகவல் அனுப்பும் போதும் படைத் தலைவர்கள் ரகசிய சங்கேத மொழிகளைப் பயன்படுத்துவர். இது எகிப்தில் துவங்கியதாகக் கலைக்களஞ்சியங்கள் கூறியபோதும் இந்தியாவில் துவங்கியது …

Techniques of Secret Writing in India | Tamil and Vedas

Techniques of Secret Writing in India

19 Mar 2013 – Techniques of Secret Writing in India. During war times and military expeditions, army personnel use coded language so that the enemies wouldn’t understand the message. But in the ancient world thissecret language was used for different purposes. According to encyclopaedias it was used in Egypt 5000 …