கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்! (4526)

Written by London Swaminathan 

 

Date: 21 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4526

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மநு நீதி நூல்-9 (Post No.4526)

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்– 

  1. லாப நோக்கும் காம நோக்கும் இல்லாதவர்களுக்கே தர்மத்தின் உபதேசம். (மற்றவர்களுக்கு அல்ல). தர்மத்தை அறியவிரும்புவோருக்கு வேதமே பிரமாணம் (2-13)

 

133.வேதம், ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களைச் சொல்லுமானால் இரண்டும் சரி என்று அறிக; ஏனெனில் அறிஞர்கள் அவ்விரண்டும் சரி என்று சொல்லுவர்.

134.ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வேள்வியை சூரிய உதயத்துக்கு முன்னாலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னாலும், சூர்யனோ நட்சத்திரங்களோ இல்லாத காலத்திலும் செய்யலாம் என்று வேதங்கள் விளம்பும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவை அனைத்தும் தர்மமே.

  1. எந்த மனிதனுக்கு பிறப்பு (கர்ப்பாதானம் முதல்)

முதல் இறப்பு வரை வேதமுறைப்படியான சடங்குகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனுக்கே- அந்த இரு பிறப்பாளனுக்கே – இந்த சாஸ்திரத்தை ஓதும் அதிகாரமுண்டு. மற்றவர்க்கில்லை.

 

136.சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.

137.அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.

 

Geography in Manu Smrti

 

138.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.

139.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 

140.இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் விநாசன த்துக்கு கிழக்கேயும், பிரயாகைகு மேற்கேயும் உள்ள இடம் மத்திய தேசம் எனப்படும் (2-21)

 

 

141.கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம் வரையுள்ள பிரதேசத்துக்கு சாதுக்கள் வசிக்கும் ஆர்யாவர்த்தம் என்று பெயர்.(2-22)

 

Antelope Black buck picture from Wikipedia.

Zoology in Manusmrti

142.கிருஷ்ணசாரம் (BLACKBUCK) என்னும் மான் இயற்கையில் எங்கு வசிக்கிறதோ அந்த பூமியே யாகம் செய்வதற்குரிய பூமியாகும். மற்றவிடம் அசுத்தமான மிலேச்ச தேசம் என்பப்படும் (2-23)

 

143.இருபிறப்பாளர்கள் (BRAHMIN, KSHTRIA, VAISYA) இந்தப் பிரதேசத்தில் வாழ எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும். சூத்திரர்கள் ஊழியத்துக்காக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.

144.இதுவரையில்  உலகத்தின் உற்பத்தியையும் தர்மத்திற்குக்  காரணமான புண்ய தலங்களையும் எடுத்துச் சொன்னேன். இனி வர்ணாஸ்ரம தர்மங்களைக் கேளுங்கள் (2-25)

145.இருபிறப்பாளர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கிற கர்ப்பாதானம் முதலிய சடங்குகளை, இம்மை நலனுக்காகவும், மறுமையில் புண்ணியப் பிறப்பெடுக்கவும் உரிய சரீர சுத்திகளைச்செய்ய வேண்டும்.

 

146.கர்ப்பாதான  மந்திர ததாலும், சீமந்த ஹோமத்தாலும் (வளைகாப்பு),

ஜாதகர்மம் (பிறப்பு தொடர்பான சடங்கு)  நாமகரணம் (பெயர் சூட்டல்), அன்னப் ப்ராசனம் (உணவூட்டுதல்)  சௌளம் (முடி இறக்கல்), உபநயனம் (பூணூல் போடுதல்) முதலிய சடங்குகளால் இருபிறப்பாளர்கள் செய்த பாவங்கள் நீங்கும்; புணர்ச்சி செய்யக்கூடாத நாட்களில் புணர்ந்த தோஷமும், அன்னையின் கருப்பையில் வசித்த தோஷமும் நீக்கப்படும் (2-27)

 

 

147.வேதம் ஓதுவதாலும், மது மாமிசம் சாப்பிடாத   விரதத்தாலும், ஔபாசனம் மு தலிய ஹோமங்களாலும், தேவரிஷி பிதுர தர்ப்பணத்தினாலும் (நீத்தார் நினைவுச் சடங்குகள்), ஐம்பெரும் வேள்விகளாலும் (பஞ்ச மஹா யக்ஞம்) அக்னிஷ்டோம ஹோமங்களாலும் , புதல்வர்களைப்  ச பெறுவதாலும், சரீரமானது மோட்சத்திற்குரிய தாக்கப்படுகிறது.(2-28)

Ayurveda in Manu smrti

 

148.தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்,ஆண் குழந்தைக்கு ஜாத கர்மம் என்னும் பிறப்பு தொடர்பான சடங்கு செய்யப்படும். அப்போது வேத மந்திர முழக்கத்தோடு குழந்தைக்கு தங்கத்தை இழைத்து தேனும் வெண்ணையும் கொடுக்க வேண்டும்.

எனது கருத்து: Geography in Manu

மேற்கூறிய ஸ்லோகங்களில் உள்ள சுவையான விஷயங்களை ஆராய்வோம் அல்லது சிந்திப்போம். ஸரஸ்வதி நதி குறித்து மனு சொல்லும் விஷயம் ஆராய்ச்சிக்குரியது. மநு இன்னும் ஒரு இடத்திலும் இந்த நதி பற்றிப் பேசுகிறார். 11-78-லும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். பிரம்மஹத்தி- அதாவது பிராமணனைக் கொன்ற பாவம்- போவதற்காகச் சொல்லப்படும் ஒரு பரிஹாரம் சரஸ்வதி நதியின் முழு நீளத்தையும் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து கடக்க வேண்டும் என்பதாகும்.

 

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனுவின் காலத்தில் ஸரஸ்வதி நதி ஓடியதை அறிகிறோம். அதே நேரத்தில் விநாஸன் என்ற சொல்லுக்கு ஸரஸ்வதி நதி பூமியில் மறையும் இடம் என்று வியாக்யானம் எழுதுவோர் உரை எழுதுகின்றனர். ஸரஸ்வதி,  த்ருஷத்வதி என்று இந்த அத்தியாயத்தில் மநு குறிப்பிடுவன வேத கால நதிகள். ஆகவே மநு, சரஸ்வதி ஓடிய கி.மு.2000ஐ ஒட்டி இதை எழுதியிருக்கவேண்டும். ரிக்  வேதமோ மலையில் தோன்றி கடலில் மறையும் பிரம்மாண்ட நதி பற்றிப் பேசுகிறது. மஹாபாரதமோ மறையும் (விநாசன்) நதி பற்றிக் குறிப்பிடுகிறது. 11-ஆம் அத்தியாயத்தின் ஸ்லோகத்தில் ஸரஸ்வதி நதியை எதிர் நீச்சல் போட்டுக் கடக்க வேண்டும் என்று மநு சொல்லுவதால் அவர் ஸரஸ்வதி நதி காலத்தவர் என்பது தெளிவாகிறது. ஆகவே மநுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்ல. கி.மு2000-க்கும் முன்னர் என்று அறியலாம். சதி (உடன்கட்டை ஏறும்  வழக்கம்) பற்றி எங்குமே குறிப்பிடாததும். விந்தியத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் பே சாததாலும் தெற்கில் நாகரீகம் பரவியதற்கும் முன்னதாக வாழ்ந்தவர் என்று துணியலாம்.

இன்னும் இரண்டு சுவையான விஷயங்கள் (Medicine and Sociology in Manu):–

ஆயுர்வேதம்: சிறு வயதிலேயே குழந்தைக்குத் தங்கத்தில் இழைத்து — தங்கச் சத்துடன் வெண்ணை, தேன் கொடுக்கச் சொல்லுவது அக்கால மருத்துவ வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

மிலேச்ச என்ற சொல், ‘பண்பாடற்ற மக்கள்’ பிற இடங்களில் வசித்ததையும் காட்டுகின்றது. பிற்கால இலக்கியத்தில், இவை கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறித்தன. அதற்குப் பின்னர் இது அராபியர்களையும், துலுக்கர்களையும், கிறிஸ்தவர்களையும் குறித்தது. ஆகவே மநு காலத்தில் கிரேக்கர்கள்  அல்லது வேதத்தைப் பின்பற்றாத பிற ஜாதியினர்   பற்றிய அறிவு இருந்திருக்கலாம்.

 

பிராணி இயல் தகவல் (zoology in Manu)

 

எல்லாவற்றையும் விட சுவையான தகவல் கிருஷ்ண சாரம் (Blackbuck antelope) என்னும் மான் வகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும்.

 

கிருஷ்ணசாரம் எனப்படும் மான் உலவும் இடம் எல்லாம் வேள்விக்குரிய பூமி என்று சொல்லப்படுகிறது. இது இந்தியாவின் தென் கோடி முனையில் இருந்து இப்போதுள்ள வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தேசங்களிலும் 1850 வரை இருந்தது வெள்ளைக்கார்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து தெரிகிறது. ஆக இந்திய பூமி முழுதும் புனித பூமி, வேள்விக்குரிய பூமி என்ற அரிய பெரிய உண்மையை மநு பறை சாற்றுகிறார். இதை சங்கத் தமிழ் இலக்கிய நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

 

கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் செய்து வேள்வி இயற்றிய தையும், சோழ மன்னன் ராஜ சூய யாகம் செய்ததையும், முது குடுமிப் பெருவழுதியின் பாண்டிய நாடு முழுதும் வேள்வித் தூண்கள் பெருகி இருந்ததையும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் நூல்கள் பாடிப் பரவுகின்றன. ஆக கருப்பு மான் உலவிய புண்ய பூமி பாரதம்; அதிலும் குறிப்பாக புண்ணியப் பிரதேசம் சரஸ்வதி நதி தீரம், குருக்ஷேத்ரம், பாஞ்சாலம் எனலாம். காரணம் என்னவெனில் இங்கு தலைநகரை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆண்டனர். மேலும் வற்றாத ஜீவ நதிகள் அவை என்பதால் அபரிமித தான்ய விளைச்சலும் இருந்தது. நீர் இன்று அமையாது உலகு என்பது வள்ளுவன் வாசகம் அன்றோ!

TAGS:– மநுநீதி நூல், கறுப்பு மான், சரஸ்வதி, மர்மம்

 

to be continued………………………………

–SUBHAM–

 

யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? புலவரின் சவால்! (Post No.4525)

Date: 21  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-54 am

 

Wriien by S NAGARAJAN

 

Post No. 4525

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

தமிழ் இன்பம்

அரிகண்டம் ஏறிப் பாடத் தயாரா? யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? அதிசயத் தமிழ்ப் புலவரின் சவால்!

 

ச.நாகராஜன்

 

1

தமிழ் மொழியின் ஆற்றல் எல்லையற்றது என்றால் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து அந்த ஆற்றலின் மூழு வீச்சையும் தம் கவிதைகளிலே காட்டிய புலவர்களின் பெருமையும் எல்லையற்றது தான்.

 

அவ்வப்பொழுது காலத்திற்கேற்றவாறு தமிழன்னை கண்ட புதல்வர்கள் ஏராளம். அவர்கள் கவிதைகளின் அருமை ஒரு புறம் இருக்க, அதை அவர்கள் எப்படிப்பட்ட அபாயத்தையும் எதிர்கொண்டு பாட அஞ்சவில்லை என்பது உளத்தை உருக்க வைக்கும்; பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

 

 

இப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில் உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும் ஒரு கவிஞர் தன் திறமையைக் காட்டியிருக்காரா என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்.

 

 

கவி காளமேகம் என்று மிகவும் பிரபலம் அடைந்திருந்த புலவரைப் பற்றிய செய்திகளும், அவரது கவிதைகளும் நம்மை பிரமிக்க வைப்பவை.

 

 

கவி காளமேகப் புலவரின் 160 பாடல்கள் என் தொகுப்பில் உள்ளன. சுவை மிகுந்த பாடல்கள். புத்தி கூர்மையையும், தனக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் அந்த புத்தி சாதுரியத்தை இலக்கண வழு இல்லாமல், அனைவரும் வியக்கும் படி காட்டியும் அமைக்கப்பட்ட பாடல்கள்.

 

 

தமிழின் மேன்மைக்கும் தமிழ்ப் புலவர்களின் புத்தி கூர்மைக்கும் இன்னும் ஒரு சான்று அரிகண்டப் பாடல் பாடுவீரா என்று கேட்கப் போய் யமகண்டப் பாடல்களையே பாடுவேனே என்று கூறிப் பாடிய கவி காளமேகம் என்னும் அற்புதக் கவிஞர்!

 

2

அதிமதுரக் கவிராயர் என்பவர் 64 தண்டிகைகாரர்கள் புடைசூழ திருமலைராயன் பட்டிணத்தில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புடன் கவி அரசோச்சி வந்தார்.

 

காளமேகம் என்னும் ஒரு மாபெரும் கவி அவரையும் விஞ்சும் ஆற்றல் படைத்தவர் என்பதை அறிந்து அவருக்கு அதிர்ச்சி உண்டானது.

காளமேகம் அதிமதுரக் கவிராயருக்கு பராக்கு கூறுகின்றவனை நோக்கி, “ நீ கட்டியம் கூறுகிறாயே, அது முறையா? இவனை அதிமதுரம் என்று கூறுகின்றாயே, அப்படி என்ன புதுமை இவனிடம் இருக்கிறது? காட்டில் உண்டாகும் சரக்கு, காரமில்லாத சரக்கு. தனியே பிரயோகிக்க முடியாமல் வேறு சரக்குடனே கூட்டிப் பிரயோகிக்கும் சரக்காகிய மலைக்குன்றிமணி வேரை உலகத்தார் ஆதிகாலம் தொட்டு அதிமதுரம் என்று வழங்கி வருவது சகஜம். ஆகவே நீ கட்டியம் கூறுவது முறையல்ல” என்று கூறியவர் அதை ஒரு பாடலாகவும் அமைத்தார்.

 

 

‘அதி மதுரமென்றே யகிலமறியத்

துதி மதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன

காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு”

என்ற பாடலை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

 

அதைக் கண்ட அதிமதுரக் கவி இந்த பகிரங்க சவாலைக் கண்டு அயர்ந்து போனார்.

 

காளமேகம் யார் என்பதை விசாரிக்க ஒருவனை அனுப்பினார்.

அவனைக் கண்ட காளமேகம் தான் யார் என்பதை ஒரு பாடலாகவே தந்து அனுப்பி விட்டார்.

 

தூதைந்து நாழிகையி லாறுநாழிகைதனிற் சொற்சந்தமாலை சொல்லத் துகளிலா வந்தாதி யேழு நாழிகைதனிற் றொகைபட

விரித்துரைக்கப்,

 

பாதஞ்செய் மடல்கோவை பத்துநாழிகைதனிற் பரணியொரு நாண்முழுதுமே  பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடி கட்டினேன்,

 

சீதஞ்செயுந் திங்கண்மரபினோ னீடுபுகழ்  செய்ய திருமலைராயன் முன் சீறுமாறாகவே தாறுமாறுகளசொல் திருட்டுக் கவிப்புலவரைக்,

காதறுத்துச் செருப்பிட்டடித்து கதுயபிற்புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமிட்டேறு கவிகாளமேக நானே!”

 

இந்தப் பாடலைக் கண்ட அதிமதுர கவிராயர் திகைத்துப் போனார்.

“ஐந்து நாழிகையில் தூது பாட வல்லவன். (இரண்டரை நாழிகை ஒரு முகூர்த்தம் அதாவது ஒரு மணி நேரம். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஐந்து நாழிகை என்றால் இரண்டு மணி நேரத்தில் ஒரு தூது நூல் முழுவதும் இயற்ற வல்லவன்!)

ஆறு நாழிகையில் சொற் சந்த மாலை ( அதாவது ஆறு x 24 நிமிடங்களில் சொற் சந்த மாலை ரெடி!)

 

அந்தாதி வேண்டுமா? ஏழு நாழிகையில் ரெடி!

மடல், கோவை பத்து நாழிகையில் ரெடி ஆகும்!

பரணி பாட தேவை ஒரு நாள் தான்!

பார காவியம் இயற்ற ஓரிரு நாள் போதும்.

 

திருமலைராயனை ஏமாற்றித் திருட்டுக் கவி புனைவோர் கவனிக்கவும்,

இதை எழுதுவது கவி காளமேகமாகிய நான் தான்!”

அதிமதுரகவி தனது 64 தண்டிகைகாரரையும் நோக்கி அந்தக் காளமேகம் இங்கு வந்தாலும் வரலாம். அவரை அரசனை நெருங்க வழி விடாதபடி சுற்றி அரண் அமைத்து அமருங்கள் என்று கட்டளையிட்டார்.

 

திருமலைராயன் அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் புயலென காளமேகம் அங்கு வந்தார்.

தன்னை அரசனிடம் போக விடாதபடி செய்யப்பட்ட சூழ்ச்சியைக் கண்டார்.

 

ஒரு எலுமிச்சம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை மன்னனுக்கு நேரே நீட்டி  ஸ்வஸ்தி சுலோகம் ஒன்றைக் கூறலானார்.

 

பிராமணர் ஒருவர் வாழ்த்திக் கூறும் ஸ்லோகத்தையும் அவர் தரும் எலுமிச்சையும் ஒரு மன்னன் நிச்சயம் வாங்க வேண்டும் என்ற விதிமுறையால் மன்னன் தானே வந்து அதை வாங்கிக் கொண்டான்.

 

ஆனால் கவிஞரை அமரச் சொல்லவில்லை.

நேராக மனதிற்குள்ளாகவே அகிலாண்டேஸ்வரி விமானத்தை தரிசித்து அன்னை சாரதை தேவியை மனக் கண்ணில் ஏற்றி, அவர் பாடினார்:

 

“வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றி ருப்பாள் – வெள்ளை

அரியாசனத்தி னரசரோடென்னைச்,

சரியாசனத்து வைத்த தாய்”

 

இந்தப் பாடலைக் கூறியவுடன் அன்னை மனம் கனிந்தாள். அரசனது அரியாசனம் ஒரு பக்கமாக வளைந்து இடம் கொடுத்தது.

 

அதில் அமர்ந்தார் கவி காளமேகம்.

 

3

அங்கிருந்த அதிமதுரக் கவிராயர் திகைக்க காளமேகம் அவரை நோக்கி, “நீங்கள் யார்?” என்றார்.

‘நானா! என்னையா கேட்கிறாய்? நான் கவிராஜன்” என்று கர்வத்துடன் பதில் கூறினார் அதிமதுரக்கவிராயர்.

காளமேகம் கவி என்பதற்கு குரங்கு என்று பொருள் கொண்டு அவரைக் கிண்டலடித்தார்.

 

“கவி ராஜன் என்கிறாயே! உனது வால் எங்கே? நாலு கால் எங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே” என்ற பொருள்பட பாடல் ஒன்றைப் பாடினார்:

 

“வாலெங்கே, நீண்டெழுந்த வல்லுயிரெங்கே நாலு

காலெங்கே யூன் வடிந்த கண்ணெங்கே – சால

புவிராயர் போற்றும் புலவீர்கா னீங்கள்

கவிராய ரென்றிருந்தக் கால்”

 

 

கோபம் கொண்ட அதிமதுரக் கவிராயர், “ நீர் கவி காளமேகம் என்றால், அரிகண்டம் பாடுவீரா?” என்று கேட்டார்.

“அரிகண்டம் என்றால் என்ன?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் காளமேகம்.

 

“கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும். எதிரி கொடுக்கும் சமிசைக்கு இணங்க உடனடியாகப் பாடவேண்டும். அப்படிப் பாடுவது தான அரிகண்டம். உன்னால் முடியுமா? பாடத் தயாரா?” என்றார் அதிமதுரக் கவி.

 

பயந்து ஓடி ஒளிவார் காளமேகம் என்று எதிர்பார்த்த அதிமதுரக் கவிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

 

“பூ! இவ்வளவு தானா! நான் யமகண்டமே பாடுவேன். நீங்கள் பாடத் தயாரா?”

 

யமகண்டம் என்றால் என்ன என்று தெரியாத அதிமதுரகவி யமகண்டம் என்றால் என்ன என்று கேட்டார்.

 

காளமேகம் யமகண்டத்தை விளக்கினார் இப்படி:

 

பூமியில் பதினாறு அடி நீளம், பதினாறு அடி அகலம், பதினாறு அடி ஆழம் கொண்ட ஒரு குழியை வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறு அடி இரும்புக் கம்பங்களை நாட்ட வேண்டும். கம்பத்தின் மேல் நான்கு பக்கத்திலும் இரும்பினால் செய்த நான்கு சட்டங்களை அமைக்க வேண்டும். அதன் நடுவிலே ஒரு சட்டம் பொருத்த வேண்டும். நடுச் சட்டத்தில் உறி கட்ட வேண்டும். குழிக்குள்ளே பருத்த புளியங்கொட்டைகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பு மூட்ட வேண்டும். அது கனன்று எழுந்து ஜுவாலையுடன் எரியும் போது, அந்த நெருப்பில் ஒரு ஆள் உயரமுள்ள இரும்புக் கொப்பரை ஒன்றை வைக்க வேண்டும். கொப்பரையை எண்ணெயால் நிரப்ப வேண்டும். அதில் அரக்கு, மெழுகு, குங்கிலியம், கந்தகம், சாம்பிராணி ஆகியவற்றை இட்டு நிரப்பி அவை நன்றாகக் காயும்படி செய்ய வேண்டும், அவை காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க, அப்போது,

 

நான்கு யானைகளை பாகர்கள் மதம் ஏற்ற வேண்டும். அவற்றை கம்பத்திற்கு ஒன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைத்திருக்க, பின்புறத்தில் வளையம் வைத்து , வளையத்தில் சங்கிலி கோர்த்து,  எஃகினால் கூர்மையாக சமைக்கப்பட்ட பளபளவென்று மின்னும் படி சாணை பிடிக்கப்பட்ட எட்டுக் கத்திகளை, கழுத்தில் நான்கும், அரையில் நான்குமாகக் கட்டிக் கொண்டு , கத்திகளின் புறத்தில் உள்ள சங்கிலிகளை நான்கு யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைத்து, தான் கொப்பரைக்கு நேராகத் தொங்குகின்ற உறி நடுவில் ஏறி, எவரெவர் என்னென்ன சமிசை கொடுத்தாலும் அவற்றை அரை நொடிக்குள் தடையின்றி கேட்டவர் குறித்த கருத்து வரும்படி பாட வேண்டும், அப்படிப் பாடும்போது வழு ஏற்படுமானால், சமிசை கொடுத்தவர்கள் யானை மேலிருக்கும் பாகர்களுக்கு கண் சைகை காட்ட, அவர்கள் யானைகளின் மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்ட,  அவைகள் தமது தும்பிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை விசையுடன் வேகமாக இழுக்க, அப்படி இழுத்தவுடன் புலவன் கழுத்தும், அரையும் கத்திகளால் துண்டிக்கப்பட்டு தலை ஒரு துண்டமாகவும், அரை முதல் கால் வரை ஒரு துண்டமுமாகி கொதிக்கின்ற எண்ணெய் கொப்ப்ரையில் விழும். இப்படி விழுந்து மாண்டு போவது தான் யமகண்டம்.

 

 

கோரமான இந்த யமகண்டத்தைக் கேட்ட அதிமதுரக் கவிராயரும், 64 தண்டிகைகாரர்களும், திருமலைராயனும், கூடியிருந்த மக்களும் திகைத்துப் போயினர்.

 

திடுக்குற்ற அதிமதுரக் கவி, “இதைச் சொன்ன நீரே செய்து காண்பியும்” என்று சவால் விட சவாலை ஏற்ற கவி காளமேகம் மேகமென கேட்ட கேள்விக்கெல்லாம் கவி மழையாகப் பதில் அளித்தார். கடினமாகக் கொடுக்கப்பட்ட கவிதைப் புதிர்களை எதிர் கொண்டார்.

 

64 தண்டிகைகாரர்களும் அயர்ந்து போக, மன்னன் பிரமிக்க, அதிமதுரக் கவி திகைக்க காளமேகம் பாடிய பாடல்கள் ஒரு தனி வரலாறையே படைத்தன.

 

 

4

சற்று எண்ணிப் பார்ப்போம். கற்பனைக்காகக் கூட உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு புலவர் பாடியதாக கற்பனை கதை கூடக் கிடையாது.

 

ஆனால் நம்மிடமோ கவி காளமேகத்தின் அற்புதமான பாடல்கள அனைத்தும் உள்ளன.

 

கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்.

இன்றளவும் அவை நிலைத்து நிற்கின்றன!

காளமேகம் யமகண்டம் பாடி அரங்கேறிய கவிதைகள் காலத்தை வென்றவை; அவை கவிஞரின் புகழை மட்டும் நிலை நிறுத்தவில்லை;

தண்டமிழின் பெருமையையும் உயரத்தில் ஏற்றிக் காத்து வருகின்றன, இன்றளவும்.

 

 

5

என்னிடம் இருக்கும் பழைய பிரதி ஒன்றில் உள்ள யமகண்டம் பற்றிய விளக்கத்தையும் காளமேகம் பற்றிய செய்தியையும் இன்றைய நாளுக்கு  ஏற்றபடி எளிய தமிழில் தந்துள்ளேன்.

பாடல்களைத் தனியே பார்க்கலாம்.

 

இவை கால வெள்ளத்தில் அறியப்படாமலேயே போய்விடக் கூடாதென்று தான் இந்தக் கட்டுரையை அளிக்க முற்பட்டேன்.

இதே போல் தமிழகத்திற்கே தனிப்பட்டதான ‘விச்சுளி வித்தை’ பற்றி பாக்யா இதழில் எழுதி, அது www.tamilandvedas.com இல் வெளிவந்ததையும் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்.

 

இன்னும் இப்படி பல தமிழ் நாட்டிற்கென்றே உரித்தான பல விஷயங்கள் உள்ளன.

 

அவற்றை அறிந்து போற்றுவது இன்றைய தமிழரின்

பாரதி போற்றி ஆயிரம் – 11 (Post No.4524)

Date: 21  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-33 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4524

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 11

  பாடல்கள் 75 முதல் 82

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

        நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 75 முதல் 82

 

பாரதி ஓர் ஆசான்

 

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்

பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க
உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்

வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்’ என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட

தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே

அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்

விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி

நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த

வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.

சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு

சமுதாயம் சீரழியும் தன்மை போக்க
நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை

நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்

புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
சாதனையால் எப்போதும் எல்லா ருக்கும்

சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!

கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்

கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்

பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்

பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த

ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.

‘மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த

மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை’
எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி

இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
நினைவிலுறும் முத்தியின்பம் தானே வந்து

நிச்சய்மாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
புனிதமுள்ள தமிழறிவைப் புதுக்கிச் சொன்ன

புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.

உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்

ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்

பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்

தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்

செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
செய்கைசொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.

கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்

கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்

காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து

நித்தநித்தம் சன்மார்க்க நினைப்பைக் காட்டும்
தலையாய தமிழறிவை நமக்குத் தந்த

தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

True Story of Padmavati (Rani Padmini) Post No.4523

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-54

 

 

Post No. 4523

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

After the controversy about the film Padmavati on Chittoor Rani Padmini, lot of people are reading Indian history again. Here is what they taught us when we were in school; this is the true story; Story as depicted in film Padmavati is wrong.

 

I give below the excerpts from a text book (published in 1956):-

 

 

 

 

 

 

 

 

 

xxxxxxxxxxxxxx

ஒரு நொடி வாழ்ந்தாலும் போதும்- சாணக்கியன் அறிவுரை (Post No.4522)

Markandeya Painting by Raja Ravivarma from Wikipedia

 

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-21

 

 

Post No. 4522

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முஹூர்த்தமபி ஜீவேத்வை நரஹ சுக்லேன கர்மணா

ந கல்பமபி கஷ்டேன லோகத்வயவிரோதினா

சாணக்ய நீதி 13-1

பொருள்

தகாத செயல்களை செய்துகொண்டு யுகக் கணக்கில் வாழ்வதைவிட, குற்றமற்ற தூய செயல்களைச் செய்துகொண்டு ஒரு நொடி வாழ்ந்தாலும் சிறந்ததே. தீய செயல்கள் இக, பர லோக வாழ்வுக்குத் தீங்கு இழைக்கும்.

மார்க்கண்டேயன் 16 வயது வாழ்ந்தும் அழியாத இடம் பெற்றான்.

ஆதி சங்கரர் 32 வயதும், சம்பந்தர் 16 வயதும் தான் வாழ்ந்தனர். பாரதியார் 39 வயதுதான் வாழ்ந்தனர். சுவாமி விவேகாநந்தரும் அவ்வாறே.

 

இவர்கள் அனைவரும் வரலாற்றில், இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டனர். ஆகையால் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைவிட. இருக்கும் காலத்தில் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த லட்சியம்.

 

மார்கண்டேய புராணம் காட்டிய பாதை

புகழ் சேர்க்கும் 16 வயதுப் புதல்வன் (( மார்க்கண்டேயன் )) வேண்டுமா? பூமிக்குப் பாரமாக வாழும் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக 100 ஆண்டுகள் வாழும் புதல்வன் வேண்டுமா? என்று மிருகண்டு ரிஷியை இறைவன் கேட்ட போது புகழ் சேர்க்கும்- தோன்றிற் புகழொடு தோன்றும்  — 16 வயதுப் புதல்வன் போதும் என்றனர் ம்ருகண்டுவும் அவரது மனைவி மருத்வதியும். நல்ல அருமையான கதை. இந்துக்களின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கதை. வள்ளுவனை புகழ் என்னும் அதிகாரத்தின் கீழ் பத்து குறட்பாக்களைப்  பாடவைத்த கதை!

 

 

ஏதேனும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடித்த பாரதி பாடுகிறான் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்று. அவனுடைய ஆசை இந்த பூமிக்குப் பாரமாக இருக்கக்கூடது என்பதே.

உலகமெங்கும் தமிழ் மொழி ஓசையையக் கேட்கச் செய்ய வேண்டும்; வேத முரசு எங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழில் பழ மறையைப் பாட வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; இல்லையென்ற கொடுமை இல்லையாக வேண்டும்; கோடி கவிதைகள் இயற்றல் வேண்டும்; விட்டு விடுதலையாகி (முக்தி)  சிட்டுக்குருவி போல பறக்க வேண்டும்- என்று பாடுபட்டான்; அழியாப் புகழும் பெற்றான்.

 

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

பாரதி பாடல்

 

 

வள்ளுவனும் சொன்னான்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)

 

பொருள்

புகழ்பட வாழாத உடம்பைப் பெற்ற நிலத்தில் விளைச்சல்கூடக் குறைந்து விடும்.

 

வசையொ  ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர் (240)

 

பொருள்

உலகத்தில் தம் மீது பழியில்லாமல் வாழ்கின்றவரே வாழ்கின்றவர் ஆவார்கள். புகழ் தேடாமல் வாழ்வோர், இறந்தர்கள் போலத்தான்.

 

‘They alone live for who live others; the rest are more dead than alive’ -Swami Vivekananda

பிறருக்காக வாழ்பவனே — அதாவது சுயநலம் இல்லாமல் — வாழ்பவனே வாழ்பவன்; மற்ற எல்லோரும் செத்தாருள் வைக்கப்படும் – என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

 

வள்ளுவன், பாரதி, விவேகாநந்தர், 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாணக்கியன்– எல்லோரும் சொன்னது ஒன்றே:

லட்சியத்துடன் வாழ்; புகழுடன் வாழ்.

–SUBHAM-

 

 

QUIZ ON HINDU SEERS- RISHIS! (Post No.4521)

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-33 am

 

 

Post No. 4521

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

CAN YOU ANSWER THE FOLLOWING QUESTIONS ON HINDU RISHIS AND TEST YOUR KNOWLEDGE IN THE RISHI LORE?

1.WHO WAS THE RISHI WHO GOT THE TITLE BRAHMA RISHI FROM VASISTHA?

2.WHO WAS THE SHORTEST RISHI?

3.WHO WAS NOTORIOUS FOR HIS ANGER AMONG RISHSIS?

4.WHO DID INTER GALACTIC TRAVEL BETWEEN THREE WORLDS RECITING NARAYANA’S NAME?

  1. WHO ARE THE SAPTA RISHIS?

6.WHO HAD AN EYE IN HIS FOOT?

  1. WHICH RISHI HAD A HORN (LONG BULGE) ON HIS HEAD?

8.WHO OWNED THE WISH FULFILLING COW-KAMADHENU?

  1. WHO WAS THE RISHI WHO MARRIED LOPAMUDRA OF RIG VEDIC FAME?
  2. A RISHI LIVED THREE LIVES AND HE HEARD LEARNT SO FAR WAS ONLY A HAND FULL OF SAND COMPARED TO THE MOUNTAIN OF VEDAS. WHO WAS HE?

 

11.RIG VEDA HAS FAMILY MANDALAS/CHAPTERS IN 2,3,4,5,6,7 MANDALAS. WHO ARE THE RISHIS ?

12.WHO WAS ANASUYA’S HUSBAND?

  1. WHO WAS THE ONE ( RISHI) WHO MARRIED AHALYA?
  2. WHO ‘DRANK’ (CROSSED SEA TO ESABLISH HINDU KINGDOMS IN SOUTH EAST ASIA) THE SEA”

15.WHOSE NAME WAS GIVEN TO THE CITY OF AJMEER IN RAJASTHAN?

16.THE SUBMARINE FIRE IN THE SEA KNOWN AS BADAVA OR VADA MUKA AGNI WAS CAUSED BY A RISHI. WHAT IS HIS NAME?

17.CAN YOU NAME THE FOUR RISHIS WHO VEDA VYASA ENTRUSTED WITH THE FOUR VEDEAS?

18.WHICH RISHI HAS THE THREE FORMS OF BRAHMA, VISHNU AND SHIVA?

19.WHO IS THE FATHER OF MEDICINE ACCORDING TO HINDU SCRIPTURES?

  1. CAN YOU NAME THE RISHI/SEER WHO CAME OUT OF AN ANTHILL AND GOT THE NAME ‘ANTHILL’?

 

ANSWERS:

1.Viswamitra, 2.Agastya, 3.Durvasa, 4.Narada, 5.Sapta Rishis- Atri, Bruhu, Kutsa, Vasistha, Gautama, Kashyapa, Angirasa, 6.Bruhu 7.Rishya Srnga, 8.Vasistha, 9.Agastya, 10.Bharadwaja, 11.Family Mandalas of Rig Veda- Grtsamada/Bruhu 2,Viswamitra 3, Vamadeva Gautama 4, Atri 5, Bharadwaja 6, Vasistha 7th mandala, 12.Atri, 13.Gautama, 14.Agastya, 15.Ajameeda, father of Kanva Maharishi, 16.Aurva, 17.Four Vedas were entrusted to Pailar-Rig Veda, Vaisampayana- Yajur Veda, Jaimini- Sama Veda and Sumantu- Atharvana Veda, 18.Dattatreya, 19. Danvantri, 20.Valmiki.

 

–subham–

 

பாரதி போற்றி ஆயிரம் – 10 (Post No.4520)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 8-19 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4520

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 10

  பாடல்கள் 62 முதல் 74

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 62 முதல் 74

பாரதி எனும் பெயர் !

பாரதி எனும்பெயரைச் சொல்லு–கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு.
நேரினி உனக்குநிகர் இல்லை–உடன்

நீங்கும் அடிமைமனத் தொல்லை.

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு–பாடிச்

சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.
ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும்–அதுவே

உன்பலத்தை நீஉணரக் காட்டும்.

துள்ளிக் குதித்துவரும் சந்தம்–செயல்

தூண்டித் துணைபுரியச் சொந்தம்.
அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன்–நம்

அருமைப் பாரதியை மறவோம்.

அன்பு நிறைந்ததமிழ் மொழியில்–செயல்

ஆண்மை குறைந்ததெனும் வழியின்
தென்பு மறைந்துழன்ற போதில்–நல்ல

தீரம் கொடுக்கவந்த தூதன்.

அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில்–பல

ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
நமது பாரதியின் பாட்டே–தமிழ்

நலத்தைக் காக்கும்ஒரு கோட்டை.

இனிமை யான தமிழ்ப் பா¨–அதில்

‘இல்லை வேகம்’ எனும் ஓசை.
முணகிப் பேசும்ஒரு வகையை–வென்று

முழங்கும் பாரதியின் இசையே.

முன்னோர் பெருமைமட்டும் பேசிப்–புது

முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
சின்னா பின்னமுற்று வாடும்–நாம்

சீர்திருந்தக்கவி பாடும்.

அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம்–வெறும்

அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
கொடுமை கண்டுமனம் கொதித்தான்–கவி

கொட்டி வீரியத்தை விதைத்தான்.

ஊனைப் பெரியதெனக் கொண்டோம்–ஆன்ம

உணர்வை விற்றுருசி கண்டோம்.
மானம் போகும்என்ற நிலமை–தனை

மாற்றும் பாரதியின் புலமை.

பண்டைச் சிறப்புகளைப் பாடிக்–கிழப்

பாட்டிகள் கூட்டமெனக் கூடி
அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில்–நவ

ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.

தீரன் அறிவுரையை இகழ்ந்து–வெறும்
திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
பேரைக் கெடுத்துவிட மாட்டோம்–எனும்
பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.

கவிஞன் வாக்குறுதி பலிக்கும்–நம்

கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம்–வெகு

புதுமை யாகஅர சாள்வோம்.

வாழ்க பாரதியின் அருமை–அதில்

வளர்க தாய்மொழியின் பெருமை.
வாழ்க வையகத்தில் யாரும்–பிணி

வறுமை அச்சமற்று வாழ்க.

***

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

 

3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து! (Post No.4519)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-54 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4519

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

15-12-17 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 43வது) கட்டுரை

மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போஸ்டன் நகரில் மிகவும் பிரபலமான நைட் கிளப்பாகத் திகழ்ந்தது கோகனட் க்ரோவ் என்னும் க்ளப்.

 

இதில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணம் அதிகாரபூர்வமாக இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் பல ஊகங்கள் இது பற்றி உண்டு. தப்பான வயரிங் தான் இதற்குக் காரணம் என்றும் ஒரு பல்பை மாற்றும் போது ஏற்பட்ட மின்கசிவினால் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது என்றும் சிலர் கூறுவர்.

 

தீ விபத்து ஏற்பட்ட நாளில் அதிலிருந்த ஹாலில் அதில் இருக்கக் கூடிய நபர்களுக்கு மேல் மிகவும் அதிகமாகக் கூட்டம் இருந்தது. ஹாலின் பக்கவாட்டில் கதவுகள் இருந்த போதும் அவை வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஆகவே உள்ளிருப்போர் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

இன்னொரு காரணம் தீ பற்றிய் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அவசர வழி வழியாக அனைவரும் தப்ப முயன்றனர்.

 

ஆனால் கிளப்பில் இருந்த ஒரு முட்டாள் அவசர வழி கதவுகளைத் திறக்க முடியாதபடி அடைத்து விட்டான். அதன் காரணம் தீ என்ற சாக்கில் கிளப்பிற்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் எல்லோரும் ஓடி விட்டால் என்ன செய்வது என்று அவன் முட்டாள்தனமாக எண்ணியதே காரணம்.

ஹாலில் இருந்தவர்களில் 492 பேர்கள் தீயினால் கருகி மாண்டனர். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து இது தான்.

 

(28-11-2017 அன்று நடந்த) இதன் 75வது நினைவு தினத்தை ஒட்டி  இந்த ஹாலில் தீ விபத்தில் அகப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாகத் தப்பி மீண்ட 91 வயதான மார்ஷல் கோல் என்பவர் இதைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுகையில், “கோரமான அந்த விபத்தில் பிழைத்து மீண்டதிலிருந்து எங்கு போனாலும் முதலில் வெளியேறும் வழிகள் எங்கு உள்ளன கதவுகள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்வதைத் தவறாமல் செய்வது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது” என்றார்.

இந்தத் தீ விபத்தின் கோரமான இழப்பு ஒரு புறம் இருக்க, இதனால் மூன்று பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.

600 பேர்கள் இருக்கக் கூடிய ஹாலில் ஆயிரம் பேருக்கு மேல் அன்று குழுமி இருந்தவர்களில் பெரும்பாலோர் தம்பதிகளாக ஜோடி ஜோடியாக வந்திருந்தனர்.

திடீரென்று தீப்பொறிகள் தென்பட்டன. அது என்னவென்று உணருவதற்கு முன்னர் ஹாலே தீ ஜுவாலைகளால் பற்றி எரிய ஆரம்பித்தது.

 

492 பேர் இறந்ததோடு 150 பேர் தீக்காயத்தினால் பீடிக்கப்பட்டனர். போஸ்டன் சிடி ஹாஸ்பிடலில் தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 300 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். மசாசுசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு இன்னொரு நூறு பேர் எடுத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கிருந்த பிளாஸ்டிக் சர்ஜன் ப்ராட்ஃபோர்ட் கானான் (Bradford Cannon) என்பவர் தீக்காயங்களுக்கு ஒரு நவீன சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக தீக்காயங்களுக்கு டைகள் மற்றும் டேனிக் ஆசிட் ஆகியவையே உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு பதில் அவர் காஸ்  (gauze)-  உடன்  பெட்ரோலியம் ஜெல்லியை போரிக் ஆசிட் மீது தடவி அதைப் பயன்படுத்தினார். அவர்கள் தீயினால் வெந்திருந்த சதைப் பகுதிகளை அகற்றி தோலை ஒட்டும் புது முறையைக் கையாண்டார். கானான் இந்த சிகிச்சை முறையை பிலடெல்பியாவிலும் பின்னர் வேலி ஃபோர்ஜ் ஜெனரல் ஹாஸ்பிடலில் கையாண்டார்.

 

அது மட்டுமின்றி அந்த 500 பேர்களும் தவித்த தவிப்பு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தது. அந்த வழிமுறைகள் உலகெங்கும் இன்று தீ விபத்துக் காயம் ஏற்பட்டவரிடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இந்த நவீன சிகிச்சை முறையால் பிற்காலத்தில் நலம் அடைந்தனர்.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கண்டுபிடிப்பு உளவியல் ரீதியில் அமைந்தது.

இந்தப் பெரிய தீ விபத்தில் உயிர் பிழைத்தோரையும் , போரில் தீக்காயம் பட்ட இராணுவத்தினரையும் உளவியலாளர் எரிச் லிண்டிமான் (Erich Lindemann) முறையாக பேட்டி எடுத்து விவரங்களைச் சேகரித்தார். இப்படி ஒரு துயரமான சம்பவத்தில் அகப்பட்டோரின் துக்கம் எப்படி இருக்கும், அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் மணமுடித்திருந்த ஒரு இளம் வயதுப் பெண் தன் கணவனை அந்தத் தீவிபத்தில் இழந்திருந்தார். அந்தக் கணவன் அவளுடன் ஒரு சண்டையைப் போட்டு விட்டு அந்த கிளப்புக்குச் சென்றிருந்தான். இன்னொருவரோ தன் இளம் வயது மனைவியை அந்த விபத்தில் இழந்திருந்தார். அவளைக் காப்பாற்றுமுன்னர் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இப்படிப் பல துயரகரமான நிகழ்வுகளையும் அதையொட்டிய மனித உணர்வுகளையும் தொகுத்த லிண்டிமான் உளவியல் துறையில் துக்கம் அடைந்தோருக்கான உளவியல் சிகிச்சை முறையைக் கண்டார். அதற்கு இந்த தீ விபத்து தான் வழி வகுத்தது.

 

மூன்றாவது கண்டுபிடிப்பாக ஒரு  விபத்தில் காயம்பட்டோர்  அது நடந்து முடிந்தவுடன் எப்படி தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை தீவிபத்தில் உயிர்பிழைத்தவர்களைச் சந்தித்து அலெக்ஸாண்ரா ஆட்லர் (Alexandra Adler) என்ற பெண்மணி ஒரு ஆய்வு நடத்தினார். இப்படிப்பட்ட ஒரு ஆய்வை முதலில் செய்த உளவியலாளர் இவர் தான். கோகனட் கிளப் தீ விபத்தை வைத்து இவர் செய்த இவரது உளவியல் ஆய்வு பெரிய மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆய்வுப் பேப்பர்களைக் கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டில் டாக்டர் ஆட்லர் மறைந்தார். அவர் மறைவை ஒட்டிய இரங்கல் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உல்ப்கேங் சாக்ஸன் என்ற நிபுணர், “490 பேருக்கு மேல் கொல்லப்பட்ட விபத்தில் அங்கிருந்து மீண்ட பலருக்கு மூளை நிரந்தரமாக சேதம் அடைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்த ஆட்லர் மன அழுத்தமும், கவலையும் எப்படி ஒரு விபத்தைத் தொடர்ந்து பலரையும் நிரந்தரமாக பாதிக்கிறது, அதை எப்படிப் போக்குவது என்பதையும் ஆராய்ந்தார். அதன் பலனாகவே இரண்டாம் உலகப் போரில் காயம்பட்டிருந்த பல வீரர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

 

 

இந்த மாபெரும் தீ விபத்து உலகினருக்குத் தரும் செய்தி என்ன?

ஜனசந்தடி அல்லது கூட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்குப் போகும் போது அங்கு எங்கெல்லாம் வெளியேறும் வழிகள் உள்ளன, எப்படி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில், இது பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து செல்வோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்பதைச் சொல்ல தேவையே இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உடை விஷயத்தில் எப்போதுமே அக்கறை இல்லை.

 

அவர் மனைவிக்கு இதில் பெரிதும் வருத்தம்.

நன்றாக உடை உடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வார்.

 

“எதற்காக? என்னை எல்லோருக்கும் அங்கே நன்றாகத் தெரியும்” என்று சொல்லி மனைவியின் வாயை மூடி விடுவார் ஐன்ஸ்டீன்.

 

ஒரு சமயம் பெரிய மாநாட்டிற்கு மனைவியுடன் அவர் செல்ல வேண்டியிருந்தது.

 

வழக்கம் போல அவர் மனைவி, “நன்றாக உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும்” என்று ஆரம்பித்தார்.

வழக்கம் போல ஐன்ஸ்டீனும்,” எதற்காக? அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரியும்” என்றார்.

உடனே அவர் மனைவி, “ என்னை அங்கே யாருக்கும் தெரியாதே!” என்று பதில் சொன்னார்!

 

ஐன்ஸ்டீன் சிரித்தார். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டார்!

***

 

 

ரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில் (Post No.4518)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-49

 

 

Post No. 4518

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உங்களுக்கு ரிஷிகள் பற்றித் தெரியுமா? இதோ இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-

 

1.வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய ரிஷி யார்?

 

2.குள்ளமான ரிஷி யார்?

 

3.கோபத்துக்குப் பெயர்பெற்ற ரிஷி யார்?

 

4.நாராயணா என்ற கோஷத்துடன் த்ரிலோக சஞ்சாரம் செய்பவர் யார்?

 

5.சப்த ரிஷிகள் யார், யார்?

 

6.காலில் கண்ணுடைய ரிஷி யார்?

 

7.கொம்புள்ள ரிஷி யார்?

 

 

8.காமதேனுவின் சொந்தக்கார ரிஷி யார்?

 

 

9.லோபாமுத்ராவின் கணவர் (ரிஷி) யார்?

 

10.கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு- என்ற மொழி எந்த ரிஷியினால் ஏற்பட்டது?

 

11.ரிக் வேதத்தின் 2,3,4,5,6,7 மண்டலங்களுக்குரிய ரிஷிகள் யார்?

 

12.அனசூயையின் கணவர் (ரிஷி) யார்?

 

13.அஹல்யாவின் கணவர் (ரிஷி) யார்?

 

  1. கடலைக் குடித்த ரிஷி யார்?

15.ஆஜ்மீர் என்ற நகரம் எந்த ரிஷியின் பெயரில் உள்ளது?

 

16.கடலில் தோன்றும் வடவைத் தீக்கு காரணமான ரிஷி யார்?

 

17.வியாசர் 4 வேதங்களையும் எந்த 4 ரிஷிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்?

18.த்ரிமூர்த்திகளின் உருவம் உடைய ரிஷி யார்?

19.மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரிஷி யார்?

20.புற்றிலிருந்து தோன்றிய ரிஷி யார்?

 

xxxx

 

விடை:

1.விஸ்வாமித்ரர், 2.அகஸ்தியர், 3.துர்வாசர், 4.நாரதர் 5. சப்த ரிஷிகள்:அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸர் 6.ப்ருகு, 7.ரிஷ்ய ச்ருங்கர், 8.வசிஷ்டர், 9.அகஸ்தியர் 10.பரத்வாஜர் (மூன்று ஜன்மங்கள் வாழ்ந்து 3 வேதங்களைக் கற்றர். ஆயினும் அது கைமண் அளவே), 11. ரிக் வேத மண்டல ரிஷிகள்–இரண்டாம் மண்டலம்- க்ருத்சமடர்/ப்ருகு, மூன்றாம் மண்டலம்-  – விஸ்வாமித்ரர் , நான்காம் மண்டலம்- வாமதேவ கௌதம-  , ஐந்தாம் மண்டலம்-  -அத்ரி, ஆ றாம் மண்டலம்- – பரத்வாஜர் ஏழாம் மண்டலம்-  – வசிஷ்டர்: 12. அத்ரி மஹரிஷி. 13.அஹல்யாவின் கணவர் கௌதம ரிஷி 14.அகஸ்தியர் 15.அஜாமீடர் (கண்வ மஹரிஷியின் தந்தை), 16. ஔர்வ மஹரிஷி 17.நான்கு வேதங்களை வியாசரிடம் கற்ற ரிஷிகள்- வைஸம்பாயனர்(யஜூர்), ஜைமினி (சாமவேதம்), பைலர் (ரிக்), சுமந்து (அதர்வண), 18. தத்தாத்ரேய மகரிஷி 19.தன்வந்திரி மஹரிஷி, 20. வால்மீகி ரிஷி

 

–subham–

 

நிகழ்காலத்தில் வாழுங்கள்: சாணக்கியன் புத்திமதி (Post No.4517)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  20-05

 

 

Post No. 4517

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதியும் சாணக்கியனும் ஒரே கருத்துக்களை சொல்லுவதைப் படிக்கும் போது இனிக்கிறது. இந்திய சிந்தனை 2300 ஆண்டுகளுக்கு முன்ன்ரும் ஒன்றே; பாரதி காலத்திலும் ஒன்றே.

 

சென்றது மீளாது

 

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா — பாரதி பாடல்

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:-

கடந்தகாலத்தை எண்ணி வருந்தாதே;

எதிர்காலத்தை எண்ணி கவலைப் படாதே

புத்திசாலிகள் நிகழ்காலத்துக்கு ஏற்ப நடப்பார்கள்

 

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத்

வர்த்தமானேன காலேன ப்ரவர்தந்தே விசக்ஷணாஹா

–சாணக்ய நீதி 13-2

சீன தத்துவ ஞானியான லாவோட்ஸி கிட்டத்தட்ட புத்தர், மஹாவீரர் ஆகிய ஞானிகளின் சம காலத்திய ஞானி. அவர் மிகவும் அழகாகச் சொல்கிறார்:

நீ மனத்தொய்வுடன் காணப்பட்டால் நீ கடந்த காலத்தில் வாழ்கிறாய்;

 

நீ கவலையுடன் காணப்பட்டால் நீ எதிர்காலத்தில் வாழ்கிறாய் என்று அர்த்தம்;

 

நீ அமைதியுடன் காணப்பட்டால் நீ நிகழ் காலத்தில் வாழ்கிறாய் என்று தெரிகிறது.

ஆக அறிஞர்கள் சொல்லுவது இதுதான்:

 

கடந்த காலத்தில் நிகழ்ந்தனவற்றை எண்ணி எண்ணி வருந்தாதே; மனக் கலக்கம் அடையாதே.

எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று கவலை தோய்ந்தமுகத்துடன் இராதே.

கிடைத்த பொழுதை, கண் முன்னால் நிற்கும் நிகழ் காலத்தை, எப்படி நன்கு பயன்படுத்துவது, எப்படி இன்பமாகப் பயன்படுத்த முடியும் என்று சிந்திக்கவும்; அப்படி இருந்தால் மகிழ்ச்சி பொங்கும்; கவலை மறையும்; மனத் தொய்வு நீங்கும்.

 

பாரதி, சாணக்கியன், சீன தத்துவ ஞானி லாவோட்ஸீ ஆகிய மூவரும் சொன்ன பிறகும் நமக்கு என்ன தயக்கம்?

 

நிகழ் காலத்தில் வாழ்வோம்!

 

–சுபம்-