ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450)

Written by London Swaminathan 

 

Date: 1 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-59

 

 

Post No. 4450

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்   இந்துக்கள் போற்றும்  துருவ நட்சத்திரம்! (Post No.4450)

துருவ நட்சத்திரம் என்பதை அறியாத இந்துக்கள் இருக்க முடியாது. திட உறுதிக்குப் பெயர் எடுத்தவன் துருவன். இந்துக்களின் நூல்களில் சிறுவர்களும் புகழ்பெறுவார்கள்— நசிகேதன், மார்கண்டேயன், துருவன் போன்ற சிறுவர்கள் அ ழியாத இடம் பெற்றவர்களில் சிலர். இந்த துருவ நட்சத்திரத்தை நாம் எப்படி உறுதியின் சின்னமாக, நிலைத்த தன்மையின் சின்னமாகக் கருதுகிறோமோ அது போல ஷேக்ஸ்பியரும் கருதுகிறார். அவர் பல நாடகங்களில் இந்து மதக் கருத்துக்களை எதிரொலிப்பதால் இந்துக் கதைகளை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒரு இடத்தில் நாகரத்னம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் தேரையின் த லையில் உள்ள ரத்தினம் என்பார். ஏதோ பராபரியாக நமது நம்பிக்கைகளை அறிந்திருப்பார் போலும். ஓரிடத்தில் காளிதாசனின் சகுந்தலையைப் போலவே மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு இடத்தில்  ஜூலியஸ்சீசர் வாய்மொழி மூலமாக துருவ நட்சத்திரத்தைப் புகழ்கிறார்.

 

துருவனின் கதை எல்லோரும் அறிந்த கதைதான்:- ஸ்வாயம்புவ மனுவுக்கு இரண்டு புத்திரர்கள் என்று விஷ்ணு புராணம் கதை சொல்கிறது. பிரியவிரதன், உத்தான பாதன் என்ற இரண்டு மகன்களில் உத்தான பாதனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தியின் பெயர்  சுருசி; அகந்தையின் சின்னம்; மற்றொருத்தியின் பெயர் சுநீதி; அடக்கத்தின் உறைவிடம்!

 

சுருசியின் மகன் பெயர் உத்தமன்; சுநீதியின் மகன் பெயர் துருவன். எங்கேயாவது அடுத்த பட்டத்துக்கு துருவன் போட்டிக்கு வந்துவிடுவானோ, தன் மகன் உத்தமனை பதவிக்கட்டிலில் அமர விடாமல் தடுத்துவிடுவானோ என்று எண்ணி சின்ன வயதிலிருந்தே துருவனைப் படாதபாடு படுத்தினாள் சு-ருசி. பெயரிலுள்ள ருசி குணத்தில் இல்லை! சு-நீதி மிகவுமடக்கமானவள்  என்பதால் துருவனை ரிஷி முனிவர் கோஷ்டியில் சேர்த்துவிட்டாள். அவர்கள் பேரின்பத்துக்கு வழிகாட்டுவர் என்றும் சொன்னாள்.

 

துருவனும் தாய் சொல்லைத் தட்டாதே என்று ரிஷி முனிவர்களுடன் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். இந்திரனுக்கு அச்சம்! அட, நம்ம பதவிக்கு உயரத்தான் தவம் செய்கிறான் போலும் என்று தடுத்துப் பார்த்தான்; முடியவில்லை. துருவனோ நாராயணனே நமக்கே பறை தருவான் என்று தவம் செய்தது வீண்போகவில்லை.

நாராயணனே நேரில் தோன்றி அவனை அரசு பதவிக்கும் மேலான இடத்தில், துருவ நட்சத்திரமாக உயர்த்தினார் என்று விஷ்ணு புராணம் புகழும்.

துருவ நட்சத்திரம் பற்றி க்ருஹ்ய சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் நூல்களில் பல  இடங்களில் அருந்ததி நட்சத்திரம் பற்றி விதந்தோதுகின்றனர். சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்ட நட்சத்திரத்தை ஒட்டியுள்ள அருந்ததியை திருமணமான தம்பதிகளுக்குக் காட்டுவதற்கு முதலில் துருவ நட்சத்திரத்தைக் காட்டி அதிலிருந்து அருந்ததி இருக்கும் இடத்தை உணர்த்துவர். ஆகவே 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அருந்ததி, சப்தரிஷி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றை தமிழர்களும் வட இந்தியர்களும் அறிவர்.

 

ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஸீஸர் கூறுகிறார்.
“But I am constant as the Northern Star, of whose true fixed and resting quality, there is no fellow in the firmament”– (Caesar)

 

நான் வட மீன் போல நிலையானவன்; அதனுடைய உறுதியும் நிலைத்த குணமும் உடையவன்; வானத்தில் வேறு எங்கும் காணமுடியாத அருங்குணம் அது- ஸீஸர்

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்  உள்ள இந்த வாசகம் நமது புராணத்திலும் இதிஹாசத்திலும் துருவன் பற்றி புகழப்படும் வாசகம்.

கிரேக்க புராணங்களில் சப்தரிஷி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பெருங்கரடிக் கூட்டம் (Great Bear, Ursa Major) என்று சொல்வரேயன்றி நம்மைப் போல புனிதமோ திட உறுதி பற்றிய குணங்களோ கற்பிக்கப்படுவதில்லை. ஆகவே ஷேக்ஸ்பியர் இந்து நம்பிக்கைகளை அறிந்திருந்தார் என்று சொல்வது மிகையல்ல.

நிறைய திருக்குறள் கருத்துக்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருப்பதால் அவற்றையும் பின்னணியில் வைத்து எனது கருத்துக்களை நோக்க வேண்டும். ஆங்கிலத்தில் நாலைந்து கட்டுரைகளில் திருக்குறள்- ஷேக்ஸ்பியர் ஒப்பீடுகளை அளித்துவிட்டேன். விரைவில் தமிழிலும் தருவேன்.

 

சுபம்–

HINDU DHRUVA IN SHAKESPEARE! (Post No.4449)

Written by London Swaminathan 

 

Date: 1 DECEMBER 2017 

 

Time uploaded in London-  14-46

 

 

Post No. 4449

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SHAKESPEARE, the greatest English playwright and dramatist was influenced by Hindu literature. We know from his plays that he has read lot of materials. We see Kalidasa’s Shakuntala in Miranda in his play the Tempest. We hear about Nagaratna (cobra jewel) in one of the plays. I have already listed the parallelisms in Tirukkural, the Tamil Veda and Shakespeare in several articles. Here is one more Hindu story in Shakespeare.

 

The story of the young boy DHRUVA is known to every Hindu. Dhruva has been elevated to the status of Pole Star in Hindu literature. Not only Pole star but also the seven stars circling the pole star worshiped by millions of Hindus every day three times  when they do Sandhyavandan, the water ceremony.

 

According to the Vishnu Purana, the sons of Swayambhuva Manu were Priyavrata and Uttanapada. Uttandapada had two wives, one was Suruchi who was very proud and haughty and the other was Suniti who was humble and gentle. Suniti gave birth to Dhruva. Suruchi treated him very badly while he was young. Suruchi made sure that her son Uttama succeeds to the throne. Dhruva and his mother Suniti were helpless. Dhruva wanted to pray to God to keep himself happy. He joined a group of seers (Rishis) and he went through rigid course of austerities. Indra wanted to distract him so that there wont be any competition from him for his post. At the end, he got a boon from Vishnu and became a star. A star among boys and a star in the sky. Hindus are shown Dhruva Nakshatra—known as Pole Star during wedding along with the Seven Stars, the Ursa major. He is the pivot of the planets. He became the symbol of steadfastness, determination, tenacity and resolution to the Hindus. Hindus are advised to be as constant as Dhruva.

Shakespeare says in Julius Caesar,

“But I am constant as the Northern Star, of whose true fixed and resting quality, there is no fellow in the firmament”– (Caesar)

 

Several of Hindu beliefs are in Shakespeare for which there is no other source such as Greek, Egyptian and Roman.

 

–Subham–

 

 

 

 

டார்வினை எதிர்த்த பெண்மணி! (Post No.4448)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

 

 

Post No. 4448

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 1-12-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 41வது) கட்டுரை

டார்வினை எதிர்த்த பெண்மணி!

ச.நாகராஜன்

“ஒருவன் உண்மையை அறிய முடியுமென்றால் அது கடவுளின் புத்தகத்திலிருந்து வருகிறதா அல்லது மனிதனிடமிருந்து வருகிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை – ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல்

பரிணாமக் கொள்கையை உலகிற்கு அளித்துப் பெரும் புகழ் பெற்ற டார்வினுக்கு 1869ஆம் ஆண்டு ஒரு புத்தகம் வந்தது. புததகத்தை எழுதியவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல் ((Antoinette Brown Blackwell).

அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து பதில் எழுதிய டார்வின் தனது பதிலில், ‘புத்தகத்தைப் படிக்கும் போது அதில் எனது பல குறிப்புகள் காணப்படுகின்றன. இவை பொது மக்கள் அதிகம் அறியாதவை’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் செய்த ஒரே தவறு அதன் ஆரம்ப வார்த்தைகள் தான்! டியர் சார் என்று அந்தப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்!

அடுத்து ஆறு வருடம் கழித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் அவர் டார்வினை ஒரு பிடி பிடித்திருந்தார். டார்வின் எந்தக் கொள்கைகளை முன் வைத்தாரோ அவை தவறு என்று போர்க்கொடி உயர்த்தினார். அத்துடன மட்டுமின்றி புகழ்பெற்ற விஞ்ஞானியான ஹெர்பர்ட் ஸபென்ஸரையும் துணிச்சலாக எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டார்.

தி செக்ஸஸ் த்ரூ அவுட் நேச்சர் (The Sexes throughout Nature) என்ற அவரது புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பு.

டார்வின் தனது புத்தகமான ‘தி டெஸண்ட் ஆஃப் மேன் (The Descent of Man) என்ற நூலில் பரிணாமம் பெண்ணை விட ஆணை சுபீரியராக – மிக மேலாக- ஆக்கியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸரோ தனது நூலில் ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் – வலியது வாழும் – என்ற கொள்கையை முன் வைத்திருந்தார்.

இந்த இரண்டையும் எதிர்த்தார் ப்ளாக்வெல்.

“கலை, கவிதை, ஓவியம், சிற்பம், இசை ஆகியவற்றில் திறம்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய ஒரு பட்டியலை எடுத்தால் அது ஒப்பிடவே தக்கதல்ல என்று ஆகி விடும்” என்றார் டார்வின் தனது நூலில்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் ஒரு படி மேலே போய், ‘மனித இனம் மேம்பட வேண்டுமெனில் பெண்கள் கருத்தரித்து இனவிருத்தி செய்வதை மட்டும் கொண்டிருந்தால் போதும்’ என்று கூறி இருந்தார்.

பெண்களுக்கு சம உரிமை கேட்டுப் போராடி வந்த 44 வயதே ஆன ப்ளாக்வெல்லுக்கு வந்தது கோபம்

டார்வினை நன்கு விமரிசித்து அவர் கொள்கைகள் தவறு என்று வாதித்து டார்வினை எதிர்த்த முதல் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். டார்வின் கூறிய அனைத்தும் அறிவியலுக்குப் புறம்பானவை என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

அமெரிக்காவில் ஓஹையோவில் அவரது சகோதரர் இறையியல் படிப்பு படித்துத் தேறியிருந்தார். அதே இறையியல் படிப்பைத் தானும் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர். தொழில்துறை ரீதியில் மத பிரசாரகராக – வுமன் மினிஸ்டராக ஆக வேண்டும் என்பது அவரது ஆசை.

ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு பெண்மணியை பாதிரியாக – இறையியல் பரப்புநராக அதுவரை நியமித்ததே இல்லை. இறையியல் பிரிவில் பெண்கள் படிக்க அனுமதியே கிடையாது.

சண்டை போட ஆரம்பித்தார் ப்ளாக்வெல். அவரது தீவிரத்தைக் கண்ட நிர்வாகம் அவர் படிக்க அனுமதி அளிப்பதாக ஒப்புக் கொண்டது – ஒரு நிபந்தனையுடன். அதாவது அவரது படிப்பு முடித்த பின்னர் அவருக்கு டிகிரி – பட்டம் – வழங்கப்பட மாட்டாது என்பதே நிபந்தனை!

பெண்கள் மத போதனை செய்யும் வேலையில் ஈடுபடக் கூடாது என்பதை எதிர்த்த அவர் ரகசிய சங்கம் ஆரம்பித்து பெண்களை நன்கு பேசப் பயிற்றுவித்தார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் மறையியல் பரப்புநர் வேலை எங்கு கிடைக்கும் என்று அமெரிக்கா முழுவதும் சுற்ற ஆரம்பித்தார்.

இதில் அவர் பட்ட இன்னல்கள் ஏராளம். ஒரு சமயம் பனிப்புயலில் சிக்கி சுமார் ஏழரை மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

1850ஆம் ஆண்டு முதல் பெண்ணுரிமை மாநாடு மசாசூசெட்ஸில் நடந்தது. அதில் பேசிய அவர் பைபிளில் பெண்கள் செய்யக்கூடாது என்று சொல்லிய அனைத்தையும தாக்கிப் பேசினார்.

1853இல் நியூயார்க்கில் முதல் அமெரிக்க பெண் பாதிரியாக -வுமன் மினிஸ்டராக அவர் ஆனார். அதே சமயம் டைனோசர் பற்றிய படிமப் பாறைகள் கிடைத்தன. அவை மனிதன் தோன்றியதாக பைபிள் கூறும் கருத்துக்களுக்கு எதிரான அறிவியல் நோக்கை முன் வைத்தது.

டார்வினும் ஹெர்பர்ட் ஸ்பென்ஸரும் ப்ளாக்வெல் அறிவியல் சம்பந்தமான கொள்கைகளை எதிர்ப்பதில் பயனில்லை என்று வலியுறுத்தினர்.

தான் ஒரு முறையான விஞ்ஞானி இல்லை என்றாலும் பெண்களுக்கு இழைக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க ஒரு பெரிய தகுதி தன்னிடம் இருக்கிறது என்று முழங்கிய ப்ளாக்வெல், அந்த தகுதி, ‘நான் ஒரு பெண் என்பது தான்’, என்றார்.

ஆண்கள் ஆண்களாக இருப்பதால்யே அவர்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், “அதனால் தான் அவர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் கூட ஒரு தலைப்பட்சமாக (ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதாக) இருக்கிறது” என்று கூறினார்.

டார்வின் தந்த புள்ளிவிவரங்களில் ஆண் எவ்வளவு பெண் எவ்வளவு என்பது இல்லை என்று கூறிய ப்ளாக்வெல் தானே களத்தில் இறங்கினார். உயிரின வகைகளில் உள்ள இனங்களில் ஆண் தாவரம், பெண் தாவரம். ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகள், மீன் வகைகளில் ஆண், பெண், கடல் வாழ் உயிரினங்களில் ஆண், பெண் இனம், பறவை, மனிதர் என்று இப்படி அனைத்திலும் புள்ளிவிவரங்களைச் சேகரித்தார்.

உதாரணமாக சிங்கங்களில் ஆண் சிங்கம் உருவத்தில் பெரிதாகவும் வலிமையானதாகவும் இருந்தாலும் கூட பெண் சிங்கங்கள் தனித்துவம் மிக்க உடல் அமைப்பைக் கொண்டு இன விருத்தி செய்து தன் குட்டிகளுக்கு உணவு தருவது உட்பட்ட சிக்கலான இயக்கங்களையும் வேலைகளையும் செய்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தனது ஆராய்ச்சியின் இறுதி முத்தாய்ப்பாக அவர் பரிணாமம் சுட்டிக் காட்டுவது ஆணும் பெண்ணும் சமம் என்பதையே என்று ஓங்கிய குரலில் கூறி முடித்தார்.

ப்ளாக்வெல்லை இன்றும் கூட ஒரு விஞ்ஞானியாக அறிவியல் சமூகம் அங்கீகரிக்கவில்லை. என்றாலும் கூட பெண்களின் உரிமையை ஓங்கிய குரலில் சுட்டிக் காட்டி அதற்கெனப் பாடுபட்டவராகவும், இறையியலில் பெண்களும் போதகராக வரலாம் என்பதற்கு வழி வகுத்தவராகவும், டார்வினைத் தட்டிக் கேட்ட முதல் பெண்மணியாகவும், பெண் விஞ்ஞானிகள் வளர வழி வகுத்த முதல் பெண்மணியாகவும் உலகம் இன்று போற்றுகிறது.

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

கிரேக்க புராணங்களில் மாஜிக் எனப்படும் மாயாஜாலத்தின் அதி தேவதையாக சித்தரிக்கப்படும் தேவதை கிர்க் (CIRCE).இந்த தேவதையைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு.

மூலிகைகளின் இரகசியங்களைப் பற்றி அனைத்தும் அறிந்த தேவதை இது. யுலிஸிஸின் தோழர்களை மயங்க வைத்ததும் இது தான். தன் எதிரிகளை மிருகங்களாக மாற்றி விடுமாம் கிர்க். கையில் எப்போதும் ஒரு மந்திரக்கோலை இது வைத்திருக்கும். ஹோமரின் ஒடிஸி உள்ளிட்ட காவியங்களில் இடம் பெறும் பிரபலமான தேவதை இது.

இதைப் பற்றி விஞ்ஞானிகளில் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் வில்லியம் ஜெங்ஸ் (William Jencks தோற்றம் 15-8-1927 மறைவு 3-1-2007) என்னும் அமெரிக்க உயிரியல் மற்றும் என்ஜைம் பற்றிய நிபுணராவார்.

தனது ஆய்வுகளின் மூலமாக கிர்க் பற்றிய பல கதைகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று நம்பி அதில் அவர் தீவிரமாக முனைந்தார்.

என்ஜைம்களிள் எதிர்வினைகளைப் பற்றி ஆராய்ந்த அவர் தனது ஆய்வு ஒன்றுக்கு ‘கிர்க் எபெக்ட்’ என்றே பெயர் தந்து விட்டார்.

ஆக பிரபலமாக இன்றளவும் உலகினரால் சொல்லப்பட்டு வரும் இந்த தேவதை அறிவியலிலும் புகுந்து நிரந்தரமாகத் தன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

****

 

 

சங்கீத ஞான சூன்யம்! (Post No.4447)

Written by London Swaminathan 

 

Date: 30 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  20-17

 

 

Post No. 4447

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பிரபல வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) சிறு வயதிலேயே வயலின் வாசிப்பில் சக்கைப்போடு போடுவார். ஒருமுறை ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அவரது குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த வீட்டுக்காரர் சிறுவயது மேதை மிஸ்சாவை அழைத்து ‘வயலின் வாசித்துக் காட்டு. எல்லோரும் கேட்கட்டும்’ என்றார். அவரும் தனது முழுத் திறமையைக் காட்டுவதற்காக உலகப் புகழ்பெற்ற சங்கீத மேதை, பியானோ கலைஞர், சாஹித்ய கர்த்தாவான பீதோவனின் (Ludwik Beethoven’s Sonata) ஒரு வயலின் பாடலை வாசித்தார். அந்தப் பாட்டில் நிறைய இடைவெளிகள் (stops, Pauses) வரும். அதாவது சில வினாடிகள் அமைதி நிலவும்.அதை வாசித்தபோது எல்லோரும் மெய் மறந்து கேட்டனர். அந்தக் குழுவில் சங்கீத ஞான சூன்யப் பாட்டி ஒருத்தியும் இருந்தார். அவர் ஏன் இந்தச் சின்னப் பையன் இப்படி நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறான் என்று கவலைப்பட்டார். எல்லோருக்கும் முன்னால், மெதுவாக நடந்து சென்று எஸ்சாவின் முதுகில் தட்டிக்கொடுத்து “டேய் பையா, உனக்கு தெரிந்த பாட்டை வாசியேன்டா, ஏன் சிரமப்டுகிறாய்?” என்று சொன்னார்.

 

இதை எஸ்சா  எல்மானே எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இது அவருடைய இளம் வயதில் நடந்த நிகழ்ச்சி.

 

சங்கீத சாம்ராஜ்யம்

ஜஸ்சா ஹைபிட்ஸ் (Jascha Heifitz) முதல் முதலில் நியூயார்க்கில் வாசித்த வயலின் கச்சேரிக்குப் பெரும் கூட்டம் கூடி இருந்தது. அது நல்ல சுகமான வசந்த காலம். புகழ்பெற்ற பியானோ கலைஞர் ஜோசப் ஹாப்மான் அருகில் மற்றொரு புகழ் பெற்ற வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) உட்கார்ந்திருந்தார். கச்சேரி சூடுபிடித்தது. எல்லோரும் வாயில் கொசு, ஈ புகுந்தாலும் தெரியாத அளவுக்கு மெய்மறந்து கேட்டனர். ஆனால் எல்மானுக்கு வியர்த்து விறுவிறுத்தது. உட்கார முடியவில்லை; கச்சேரி நல்ல படியாக அமைய வேண்டும் என்ற கவலை. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. கைவிரல்களை சட்டைக்குள் விட்டுக் குடைந்து கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோசப் இதை கவனிப்பதையும் அவர் அறிவார்.

 

ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு துவங்குவதற்கு முன்னர் இருந்த இடைவெளியில் ஜோசப்பைப் பார்த்து, அவர் காதில் ரஹஸியமாக,

“ஒரே புழுக்கமாக இருக்கிறதல்லாவா? ஒரே வியர்த்துக் கொட்டுகிறதல்லவா? “ என்றார்.

 

அவர் சிரித்துக் கொண்டே காதில் முனகினார்:

‘பியானோக்காரர்களுக்கு வியர்க்காது’ என்றார்.

xxxxxx

என் வயலின் காலை வாரிவிடவே விடாது

சாம் வார்ட் (Sam Ward) என்பவர் புகழ்பெற்ற இதாலிய வயலின் மேதை நிக்கலோ பகனீனி (Niccolo Paganini) பற்றி ஒரு கதை சொல்லுவார்:

 

மற்றொரு இசை மேதை ஒரு நண்பரை அழைத்து வந்திருந்தார்.

உங்கள் நண்பருக்கு சங்கீதம் பிடிக்குமா? என்றார்.

அவர் ஆமாம் என்று சொன்னவுடன், பகனீனி ஒரு கிதாரை எடுத்தார். நாளைய கச்சேரிக்கு நான் பயிற்சி செய்வதை அவரும் கேட்கட்டும் என்று சொல்லி வாசிக்க ஆரம்பித்தார். அரை மணி நேர வாசிப்பில் பூலோக சுவர்க்கத்தை உருவாக்கினார். அவருடைய கிதார் பேசியது, பாடியது, உறுமியது, கெஞ்சியது கொஞ்சியது, மிஞ்சியது, விஞ்சியது ஆனந்தக் கூத்தாடியது. கேட்டவர்கள் எல்லோரும் அசந்தே போயினர்.

  

உடனே வந்திருந்த பிரபல மேதை, அடடா, அடடா, அப்படியானால் நாளைய வயலின் கச்சேரிக்கு எப்போது பிராக்டீஸ் செய்யப்போகிறீர்கள்; அதையும் கேட்க ஆசை என்றார்.

பகனீனி சொன்னார்:

“ஆங்! தேவையே இல்லை! என் வயலின் என்னை என்றைக்கும் காலை வாரிவிடாது.”

 

அந்த அளவுக்கு வயலின் வாசிப்பு அவருடைய உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் கலந்திருந்தது. அவ்வளவு நம்பிக்கை!

 

–Subham —

 

Audience who don’t know Music! (Post No.4446)

COMPILED by London Swaminathan 

 

Date: 30 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-24 am

 

 

Post No. 4446

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Instrumentalists  Anecdotes -3 (In the past two days I have posted  many instrumentalists’ anecdotes)

 

PIANISTS DON’T FEEL HOT!

There is a legend which would have it that, when Jascha Heifetz made his triumphant New York debut among the audience were other violinist Mischa Elman and the distinguished pianist Josef Hofmann. The hall was crowded and it was an evening in spring. The concert progressed and the audience was spellbound by the genius of Heifetz. As the music went on, Elman became increasingly nervous and fidgety, running his finger frequently around the inside of his collar and mopping at his forehead with a hand kerchief. In the pause between two selections, he leaned over and whispered to Hofmann

“Awfully hot in here, isn’t it?”

Hofmann smiled and whispered back, “Not for pianists”.

 

Xxx

Audience who don’t know music!

Mischa Elman, the violinist, takes delight in telling the following story,

While visiting the friend of a family I was asked to play something to the assembled group of people. For an urchin of seven, as I was at that time, I flatter myself I rattled off Kreutzer Sonata of Beethoven’s finely. The sonata has in it several long and impressive rests. In one of these rests a motherly old lady leaned forward, patted my shoulder and said,

“Please try something you know, dear “

 

Xxx

I Don’t Care!

Jascha Heifetz arrived in great haste at Radio city, perilously near being late for a radio concert with the NBC Symphony Orchestra. He hastened into the elevator carrying his violin in its case.

“You will have to go in the freight elevator with that”, said the operator.

“I have no time, said Heifetz, I am in a hurry”.

“I don’t care”,said the operator.

“All musicians with instrument s have got to ride in freight elevator”.

“Look ,said the exasperated musician, I am Jascha Heifetz”.

“I don’t care if you are Rubinoff, said the operator, you have got to ride in the freight elevator”.

 

Xxx

MUSICAL CATARACTS IN NORWAY

Ole Bull, celebrated 18th century Norwegian violinist, was a man of singular and beautiful simplicity of character. He spoke English with much expression and had quaint turn s of dialect as original as they were unstudied. He was describing the grandeur of the hills and fiords of his native land and its deep forests resounding with musical cataracts when someone exclaimed,

“Did you play to them, Ole?”

“No, he replied, I listened “.

Xxxx SUBHAM xxx

ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை? (Post No.4445)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-02 am

 

 

 

Post No. 4445

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 3

முதல் இரு கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

 

ராக த்வேஷாதிகள் பதினாறு எவை, எவை?

 

ச.நாகராஜன்

அத்வைத விளக்கத்தில் ராக, த்வேஷாதிகளைப் பற்றிப் பார்ப்போம்

*

 

ஐயா, அத்வைத விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம்.மூன்று கரணங்கள் என்று சொன்னீ ர்கள் அல்லவா, அவற்றிற்கு ஸ்வயமாகவே கர்த்ருத்வம் உண்டா?

ஸ்வயமாக இல்லை. ராக, த்வேஷாதிகளால் பிரேரேபிக்கப்படுவதனால் உண்டாகிறது.

 

அப்படியா? ராக, த்வேஷாதிகள் எவை?

ராக,த்வேஷாதிகள் மொத்தம் பதினாறு.

ராகம், த்வேஷம், காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம், ஈருஷை, அசூயை, டம்பம், தருப்பம், அஹங்காரம்,

இச்சை, பக்தி, சிரத்தை என இவை பதினாறாகும்.

 

இவற்றைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!

ராகம் – பெண்களிடத்தில் சித்த விருத்தி

த்வேஷம் – அபகாரம் செய்தவனுக்கு பிரதியாக திருப்பிச் செய்ய ஆசைப்படுதல்

காமம் – பூமி, வீடு உள்ளிட்டவற்றை வாங்க, சம்பாதிக்க விரும்பல்

குரோதம் – மேற்படி இச்சையை அடைய எதிர்ப்பவரிடம் கோபித்தல்

லோபம் – பொருளை நல்ல காரியத்திற்காகச் செலவழிக்க விரும்பாமல் இருத்தல்

மோஹம் – பணச்செருக்கால் இன்னதைச் செய்யலாம், இன்னதைச் செய்யக்கூடாது என்பதை யோசிக்காமல் மந்த புத்தியுடையவனாக இருத்தல்

மதம்- செல்வச் செருக்கால் தன்னால் செய்ய முடியாத காரியமே இல்லை என்று எண்ணுதல்

மாச்சரியம் – செல்வத்தினால் தனக்குச் சமமாக இருக்கும் ஒருவனைக் கண்டு பொறாமை கொள்ளல்

ஈருஷை – பிறருடைய துக்கம் அவரை விட்டு நமக்கு எப்படி வந்தது என்று எண்ணுகிற சித்த விருத்தி

அசூயை – சுகம் தனக்கே உள்ளது (உரித்தானது), மற்றவர்க்கு இல்லை என்று எண்ணும் சித்த விருத்தி

டம்பம் – ஒரு தர்மம் செய்யும்போது அதில் தனக்கு பிரசித்தி அதிகம் உண்டாக வேண்டுமென்ற சித்த விருத்தி

தருப்பம் – தனக்குச் சமமானவனே இல்லை என்று எண்ணுதல்

அஹங்காரம் – சகல விஷயத்திலும் தனக்குச் சக்தி உண்டு என்று எண்ணுதல்

இச்சை – உண்ணல், கழிதல், கருமம் செய்ய விரும்பல்

பக்தி – குரு, நல்லோர், தேவதைகள் ஆகியோரிடமும் வேத வாக்கியத்திலும் ப்ரீதி கொள்ளல்

சிரத்தை – யாகம் முதலிய கர்மங்களில் நம்பிக்கை கொள்ளல்

இந்தப் பதினாறில் இச்சையைத் தள்ளுவது அசாத்தியம்; (முடியாத காரியம்)

பக்தி, சிரத்தை ஆகிய இரண்டையும் அனுஷ்டித்து, மற்ற பதிமூன்றையும் தள்ள வேண்டும்.

சரி, ஐயா, இந்த ராக, த்வேஷாதிகள் எதனால் வருகின்றன?

அபிமானத்தினால்

 

இந்த அபிமானம் எப்படி வருகிறது?

அவிவேகத்தினால்.

 

இந்த அவிவேகம் எப்படி உண்டாகிறது?

தனது உண்மையான சிதாத்ம ஸ்வரூபத்தை அனாதிகாலமாக மறைத்தலும், ஆத்ம ஞானத்தினாலேயே  நிவிருத்தியாகத் தக்கதுமாகிய அனாதி அஞ்ஞானத்தினாலும்.

இந்த அஞ்ஞானம் எப்படி வந்தது?

இது அனாதி என்று வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருப்பதால் இதற்குக் காரணம் சொல்வது முடியாது.

 

இந்த அஞானம் ஆதி இல்லாதது என்றால், அந்தமும் அதற்குக் கிடையாஞ்தா?

அஞ்ஞானத்திற்கு ஆதி இல்லை, உண்மை தான். ஆனால் ஆதி இல்லாவிட்டாலும் கூட அந்தம் உண்டு. எப்படி என்று கேளுங்கள்,

பிராகபாவத்திற்கு ஆதியில்லை, அந்தமுண்டு.

பிராகத்வம்சபாவத்திற்கு ஆதியுண்டு, அந்தமில்லை.

 

ஒன்றுமே புரியவில்லை, சற்று விளக்கமாகக் கூறுங்கள்!

சொல்கிறேன்.

குடம் உண்டாவதற்கு முன்னர் குடம் இல்லை எனப்படும் அபாவம் வெகு காலமாக இருக்கிறது.

குடம் இல்லை என்னும் அபாவ வாக்கியம் எப்போது உண்டாயிற்று என்பது தெரியாத போதிலும் கூட, குடம் உண்டானவுடனேயே ஆதி இல்லை என்கிற அபாவ வாக்கியத்திற்கு அர்த்தம் உண்டாகி விடுகிறது.

 

இது தான் பிராகபாவம் எனப்படுகிறது.

அடுத்து, நசிக்கச் செய்வதால் இல்லாமை உண்டாகிறது.

எப்படி என்று பாருங்கள். குடத்தை உடையுங்கள்.குடம் உடைக்கப்பட்டவுடன் குடம் இல்லாமை உண்டாகிறது.

உண்டான இல்லாமைக்கு அந்தமில்லை.

ஆகையால் இதுவே பிராகத்வம்ஸாபாவம்.

ஆகவே, வாதம்,பித்தம், கபம் ஆகியவற்றால் உண்டாகும் வியாதிகளுக்குக் காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும், மருந்துகளினால் அவைகளை நீக்கிக் கொள்ள முயல்வது போல, அஞ்ஞானத்துக்குக் காரணம் தெரியாவிட்டாலும் கூட,ஞானத்தினால் அது நாசமாகிறது. இது உண்மையே!

 

இந்த அஞ்ஞானத்தின் ஸ்வரூப லக்ஷணம் எப்படிப்பட்டது?

அது சத்துமல்ல; அசத்துமல்ல. அவயவம் உள்ளதல்ல; அவயவம் இல்லாததுமல்ல. இவ்விரண்டும் சேர்ந்ததுமல்ல. சேராததுமல்ல.

அது அநிர்வாச்சியம். அதாவது வாக்கினால் சொல்லத் தகுந்ததல்லாதது. (சொல்ல முடியாத ஒன்று)

ஏனெனில்,  ஸ்தூல ஆகாயமே சூக்ஷ்மமானது.

அதிலும் சூக்ஷ்மம்  (தன் மாத்திரை என்னும்) அபஞ்சீக்ருத ஆகாயம்,

அதிலும் சூக்ஷ்மம் சத்துவம் முதலிய குணங்கள்,

அவைகளிலும் சூக்ஷ்மம் அஞ்ஞானம்.

ஆகவே இப்படிப்பட்ட சூக்ஷ்மத்திற்கெல்லாம் மூல காரணமாக இருக்கின்ற காரணத்தினால் அவயவம் உள்ளதல்ல.

அன்றியும், அதுவே ஸ்தூல பதார்த்தமாகிய ஜகத்காரமாய் பரிணமிக்கின்ற காரணத்தினால்  அவயவம் இல்லாததுமல்ல.

இப்படி அநாதியாகவுள்ள அஞ்ஞானத்தினால் அவிவேகமும் – அவிவேகத்தினால் அபிமானமும் – அபிமானத்தினால் இராக த்வேஷாதிகளும் – இராக த்வேஷாதிகளால் கர்மமும் – கர்மத்தினால் சரீரமும் – சரீரத்தினால் சம்சார துக்கமும் – ஆத்மாவுக்குப் பரம்பரமாக வருகிறது.

ஆஹா!, ஐயா புரிகிறது, நன்றி!

***

புகழ்பெற்ற வயலின் ‘திருடன்!’ (Post No.4444)

Written by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  9-38 am

 

 

Post No. 4444

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler  (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.

அவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில்  அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.

 

இசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்

விலை என்ன? இதன் விலை என்ன? என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

அந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.

 

ஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.

பிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக? என்றார்.

 

நீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.

அடக் கடவுளே! நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.

“ஏ, மாப்ளே! அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம்   கடைக்குளதான் நடந்தது. கடையின்  மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.

 

ஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.

பெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம்? லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது!

 

xxxxx

 

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!

“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா!”

 

டாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா! நீ பெரிய மேதை டா! என்றார்.

பூ, ச்சீ, மேதையா? என்ன சொன்னாய்?

உனக்குத் தெரியுமா? புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.

உடனே சாரசதே சொன்னார்:

“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா? 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்!!!”

 

(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால் என்ன?)

இசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.

 

xxxxx

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!

“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்!”– பெடெரெவ்ஸ்கி

 

போலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:

நான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.

 

நான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து  பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்! என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்.

 

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்!

 

TAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்

–SUBHAM–

Most Famous Violin ‘Thief!’(Post No.4443)

COMPILED by London Swaminathan 

 

Date: 29 NOVEMBER 2017 

 

Time uploaded in London-  6-38 am

 

 

Post No. 4443

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Violin Practice-14 hours a day for 37 years!

Dr Axel Munthe, seated in the lounge of the Victoria Louise, was enthusiastically hailed by a brother physician.

What a genius you are! Thus the brother physician ended a long eulogy .

But Dr Munthe smiled and said, “A genius,eh? Well at his villa in Biarritz, Sarasate was once called a genius by a famous critic . But Sarasate (Spansih Violinist) frowned and shook his head.

“A genius!”,he said.

“For thirty seven years I have practiced fourteen hours a day, and now they call me a genius!”

Xxx

Audience knew it!!!

Paderewski once explained that he practiced faithfully every day. If I miss one day s practice,said he, I notice it. If I miss three days, the audience s notice it.

 

Xxx

 

‘Violin Thief!’

Fritz Kreisler, the violinist,found himself in Hamburg one evening with an hour to spare before taking his boat to London.

, where he was to play the following evening. So he wandered into a music shop.

The proprietor asked to see his violin which he carried under his arm. In a moment he disappeared, to reappear with two policemen. One laid his hand on Kreisler s shoulder and said,

“You are under arrest”.

“For what?” Asked Kreisler.

“You have Fritz Kreisler’s violin.”

“Well, I am Fritz Kreisler”.

“Come,come” said the policeman,

“You can’t pull that one on us . Come to the station”.

 

Kreisler s boat sailed in an hour.

He had to do some quick thinking.

“I looked around, he says, and in the corner, I saw a victrola. I asked the proprietor if he any of Kreisler s records, he produced The Old Refrain, put it on for me and played it through.”

“Now, I said, let me have my violin. Then with whatever skill I may command I played The Old Refrain. When I was through I said, Are you satisfied now?”

With profuse apologies, they bowed him out to freedom.

 

Xxx

World’s Greatest Violinist!

It is said that Jescha Heifetz and Mischa Elman were dining together in a restaurant much frequented by artists. The waiter approached the table with an envelope which bore simply the inscription

To the worlds greatest violinist

Heifetz, who has picked it from the tray bowed and handed it across the table and said

“For you,Mischa”

Elman read it and said “No,no” and handed it back

“Something for you,Jascha”.

Thus they shilly shallied back and forth until finally Heifetz was persuaded to open it. He drew out the letter and unfolded it.

It began,” Dear Fritz”.

(Fritz Kreisler was a famous Austrian born violist)

Xxxx SUBHAM xxxx

 

மலேசியாவின் கவலை! (Post No.4442)

 

Written by S.NAGARAJAN

 

 

Date: 29 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-34 am

 

 

 

Post No. 4442

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இஸ்லாமிய சர்ச்சை

மலேசியாவின் கவலை!

ச.நாகராஜன்

 

இன வாதம் மற்றும் மதச் சண்டைகளால் நாட்டின் ஒற்றுமையும் அமைதியும் பாதிக்கப்படுவதாக மலேசியாவின் ஆட்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

சமீப வாரங்களில் சில தனி நபர்களின் செயல்கள் பொறுத்துக் கொள்ளக் கூடிய நாகரிகத்தையும் தாண்டிச் சென்று விட்டதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த செயல்கள் இஸ்லாமின் பெயரால் செய்யப்படும் போது அது விளைவிக்கும் சேதம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

ஒரு மதமாக தனது மதத்தினருக்கு மரியாதையையும் நிதானத்தையும் கற்பிக்கும் இஸ்லாம் சில  குழுக்களாலும் தனி நபர்களாலும் நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

 

இந்த அறிக்கை ஜோஹாரின் சுல்தான், சுல்தான் இப்ராஹிம், சுல்தான் இஸ்கண்டர், ராஜா முடா ஆஃப் பெர்லிஸ், துங்கு சையத் ஃபைஸுதின் புத்ர ஜமாலுல்லைல் ஆகியோர் எடுத்த நிலையைப் பிரதிபலிக்கிறது.

 

***

முஸ்லீம்களுக்கு மட்டும் என்ற நிலையை மலேசியா வாழும் லாண்டரிக்காரர்கள் சிலர் எடுத்த நிலைப்பாட்டால் மலேசிய ஒற்றுமையும் அமைதியும் குலையும் தருணத்தில் மேற்கண்ட அறிக்கை வெளியாகியுள்ளது என்பதை நிருபர் குறிப்பிடுகிறார்.

 

எங்கு நோக்கினாலும் பிடிவாதமும் தீவிரவாதமுமே வழி என்று இருக்கும் இஸ்லாமியருக்கு மலேசிய ஆட்சியாளர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.

 

அஸ்வின் குமாரின் முழு செய்தி அறிக்கையின் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்.

***

 

The Muslim Malaysian Medicine :

 

Report dated 10-10-2017

 

The Malay Rulers have expressed concern that unity and harmony in the country is eroding following a series of racial and religious controversies.

 

Keeper of the Rulers’ Seal Tan Sri Datuk Seri Syed Danial Syed Ahmad in a statement yesterday said the Rulers found that in recent weeks, the actions of certain individuals had gone beyond all acceptable standards of decency, risking the harmony that currently exists within the country’s multi-religious and multiethnic society.

 

“The Rulers are of the opinion that the damaging implications of such actions are more severe when they are erroneously associated with or committed in the name of Islam.”

 

As a religion that encourages its followers to be respectful, moderate and inclusive, the reputation of Islam must not be tainted by the divisive actions of certain groups or individuals which may lead to rifts among the rakyat,” the statement read.

 

The statement echoed the stance taken by the Sultan of Johor, Sultan Ibrahim Sultan Iskandar, and the Raja Muda of Perlis, Tuanku Syed Faizuddin Putra Jamalullail, in prohibiting Muslim-only launderettes in both states.

 

“After 60 years of independence, we must continue to act in accordance with the principles embodied within the Constitution and manifested in the spirit of the Rukun Negara,” the Rulers stressed. They added that the Rukun Negara, which outlined five guiding principles for the country, must continue to serve as a compass to all citizens including leaders and government officials.

Meanwhile, the Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism and Taoism (MCCBCHST) president Datuk R. S. Mohan Shan said the statement from the rulers was timely, reports Ashwin Kumar.

 

“This country is famous for its unity and harmony. Any incident which degrades the harmony among the people should not be tolerated and that is what the rulers want checked,” he said. Mohan also pointed out that Sultan Ibrahim made the right decision when he expressed dismay over the laundrette’s move. The laundrette owner then apologised and agreed to abide by Sultan Ibrahim’s decree.

 

(Rulers concerned over growing intolerance– newsdesk@ thesundaily.com, 10 October 2017,Ashwin Kumar).

***

 

தனித்தனியே ஆங்காங்கு வெவ்வேறு நாடுகளில் நிகழும் சம்பவங்கள் பலவற்றை உலகமே உற்று நோக்கி வருகிறது.

இந்தச் சம்பவங்களின் பின்னணியை ஆய்ந்து வருகிறது.

இவை தெரிவிக்க வரும் செய்தியை யார் வேண்டுமானாலும் சுலபமாக உணரலாம்.

***

My Violin Never Fails Me-Paganini (Post No.4441)

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 18-27

 

 

Post No. 4441

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Instrumentalists Anecdotes

Dull wit becomes a Genius!

Once when Paderewski played before queen Victoria, the sovereign exclaimed with enthusiasm,

“Mr Paderewski ,you are a genius !”

“Ah, Your Majesty, perhaps, but before I was a genius , I was a drudge.”

(DRUDGE= ONE WHO DOES A MENIAL, HARD WORK)

Xxxx

Violin and Guitar

Sam Ward told this story of Paganini,

The master held a guitar across his lap,

Your young friend is musical?,enquired he.

Fanatico!, replied Gear.

Then he shall hear me practice for tomorrow night’s concert

Taking the guitar he converted that little understood instrument into an orchestra of bewildering and harmonic sonority. Now it seemed a battle, with the clash of swords, shouts of combatants, the roll of the drum. Then wails of pain and grief appeared to emerge from the sounding board over which his fingers flew like what the westerners call greased lightning. The performance lasted perhaps half an hour, and the dampness of his dishevelled locks indicate d the intensity of the emotion and the exertions that expressed it.

When the mastero received, with a sad smile, our frantic applause, I inquired whether he was going to rehearse on the violin for the morrow. He shook his head, I never rehearse the violin. My practice is the gymnastics of the guitar, to be sure of my suppleness of finger and delicacy of touch. My violin never fails me.

 

Xxx

Who is a good pianist?

Paderewski was once traveling incognito through Germany. He stopped for the night at a small in the Black Forest. In the main room of the inn was an old battered piano. Paderewski asked the landlord if he might try it. Upon doing so he found that the instrument was not only badly out of tune but that a number of the keys were stuck and would strike no sound at all. He remarked upon this to the landlord. The latter, offended  at the criticism of his piano replied, if you were a good pianist you could skip over those keys so it wouldn’t matter.

 

Xxxx

Get Married!

A young lady called one day on Rubinstein,the great pianist, who had consented to listen to her playing.

What do you think that I should do now?, she asked when she had finished.

Get married, was Rubinstein’s answer.

Xxxx Subham xxx