பெண்டாட்டி தாசன், ராமானுஜ தாசனாக மாறிய சுவைமிகு கதை (Post No.4440)

 

COMPILED by London Swaminathan 

Date: 28 NOVEMBER 2017 

Time uploaded in London- 6-43 am

Post No. 4440

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

பிள்ளை உறங்காவில்லியார் சரிதத்தை கண்ணபிரான் பிள்ளை அவர்கள் 1938 ஆம் ஆண்டில் அழகான தமிழ் நடையில் எழுதியுள்ளார். ஆகையால் அதை அப்படியே இணைப்பாகக் கொடுக்கிறேன். பெண்டாட்டிதாசனாக இருந்த உறங்காவில்லி, ராமானுஜ தாசனாக மாறிய கதை மிக உருக்கமான கதை. சைவ நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் போல வைணவ மரபில் இவர் ஒரு வேடர் குல அடியார் ஆவார்.

இரண்டாவது பகுதியில் ஜாதியில் உயர்ந்ததாக நினைத்த அடியார்களுக்கு ராமானுஜர் தன் வழியில் பாடம் கற்பித்த ஒரு சம்பவமும் வருகிறது.

.இரண்டு சம்பவங்களும் மிக உருக்கமான சம்பவங்கள். அனைவரும் படித்து ஆனந்தமடைய வேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

—Subham–

 

 

யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-36 am

 

 

 

Post No. 4439

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கிய இன்பம்

யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

யமகவந்தாதியின் பட்டியல்!

ச.நாகராஜன்

1

தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.

நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல.

ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.

சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.

 

 

2

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.

சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.

முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.

அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.

நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.

“முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”

ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”

“எப்ப வருவார்?”

“என்ன விஷயங்க?”

“அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”

“ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”

ஒரு சின்ன மௌனம்.

அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.

என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

போன் உரையாடல் முடிந்தது.

சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.

முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!

 

 

3

தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.

அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.

4

இதோ பட்டியல்:

மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் – அகர வரிசை

1) அழகர் யமகவந்தாதி –

2) இரத்தினகிரியமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

3) கடம்பர் யமகவந்தாதி – பேரம்பலப் புலவர் – (19)

4) கணபதி யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

5) கந்தர் யமகவந்தாதி – அருணகிரிநாதர் – (15)

6) கல்வளை யமகவந்தாதி – சின்னத்தம்பிப் புலவர் – (19)

7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)

8) சித்திர யமகவந்தாதி – தொழுவூர் வேலாயுத முதலியார் – (19)

9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)

10) தன்னை யமகவந்தாதி – கார்த்திகேயப் புலவர்- (19)

11) தன்னை யமகவந்தாதி – திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)

12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)

13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)

14) திருக்கடவூர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

 

15) திருக்குருகூர் யமகவந்தாதி – வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)

16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)

17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி – செய்குத்தம்பி பாவலர் – (20)

18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)

19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி – நல்லூர்த்தியாகன்

20) திருச்செந்தில் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)

22) திருச்செந்தில் யமகவந்தாதி – இராமசாமி ஐயர்-(19)

23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி – அருணாசலப் பிள்ளை-(19)

 

24) திருத்தணிகை யமகவந்தாதி – சொக்கலிங்க தேசிகர்-(19)

25) திருத்தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

27) திருநெல்வேலி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

28) திருப்போரூர் யமகவந்தாதி – புரசை சபாபதி முதலியார்-(19)

29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி – மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் – (17)

30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி – அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)

31) திருமதீனத்து யமகவந்தாதி – (19)

32) திருமயிலை யமகவந்தாதி – தாண்டவராயக் கவிராயர்

33) திருமயிலை யமகவந்தாதி – நெல்லையப்பக் கவிராச பண்டிதர்

34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

 

35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி –

36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)

37) திருவாமாத்தூர் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

38) திருவாலவாய் யமகவந்தாதி – சொக்கலிங்கச் செட்டியார்-(20)

39) திருவானைக்கா யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

40) திருவானைக்கா யமகவந்தாதி – சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்

41) திருவேகம்பர் யமகவந்தாதி – சிவஞான முனிவர்

42) திருவேரகம் யமகவந்தாதி – வேலையர் (20)

43) திருவேரக யமகவந்தாதி – சிவச்சம்புப் புலவர்-(19)

44) திருவேரக யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி – சிதம்பரம் செட்டியார்-(19)

46) தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

 

47) துறைசை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)

49) நெல்லை யமகவந்தாதி –

50) பட்டீச்சுர யமகவந்தாதி – அப்பாப்பிள்ளை-(19)

51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)

52) பழநி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

53) பழநி யமகவந்தாதி – பாலசுப்பிரமணியன்

54) புலியூர் யமகவந்தாதி – மயில்வாகனப் புலவர்-(18)

55) புலியூர் யமகவந்தாதி – கணபதி ஐயர், இலங்கை

56) புல்லை யமகவந்தாதி – ரா.இராகவையங்கார்-(20)

57) மதுரை யமகவந்தாதி – இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் – (19-20)

58) மதுரை யமகவந்தாதி – சொக்கநாதக் கவிராயர்-(17)

59) மதுரை யமகவந்தாதி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

60) மதுரை  யமகவந்தாதி – ஆறுமுகம் பிள்ளை-(19)

 

61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள்-(19)

62) மருதூர் யமகவந்தாதி – தலைமலைக் கண்ட தேவர்-(19)

63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)

64) யமகவந்தாதி – மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)

65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி – சிவப்பிரகாச சுவாமிகள்

66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

 

5

எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.

இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.

யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.

***

31 Quotations from Tirukkural of Tiruvalluvar (Post No.4438)

Written by London Swaminathan 

 

Date: 27 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 16-28

 

 

Post No. 4438

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

December 2017 ‘Good Thoughts’ Calendar

31 Quotations from Tamil Veda Tirukkural of Tiruvalluvar, Great Tamil Poet.

 

Important Days- 2-Kartikai Deepam; 11-Bharati’s Birth Day; 25-Christmas; 29- Vaikunda Ekadasi

Auspicious Days- 7, 13

Ekadasi Fasting Days- 13, 29.

New Moon/amavasyai-17/18

Full Moon/ Purnima- 3

December 1 Friday

Just Rule: The world clings to the feet of the great leader who wields his sceptre with love for his subjects (Kural 541)

December 2 Saturday

Miracle: Rains and harvests are rich in the land ruled by the righteous sceptre of an able leader (Kural 545)

December 3 Sunday

Vigilance: He who is not forearmed against coming danger, shall repent his fault at the end (535)

December 4 Monday

Success: Concentrate the mind upon what you want to achieve; it becomes easy then to attain (540)

December 5 Tuesday

Sharing with Kith and Kin: The crow invites its kind to share its prey without concealing it; fortune abides only with men of a similar nature (527)

 

December 6 Wednesday

Employing: Entrust affairs to men of four virtues: loyalty, intelligence, clear vision and non-craving (513)

December 7 Thursday

Suspicion: Fortune forsakes the leader who suspects the loyalty of him that endeavours to carry out a design (kural 519).

 

December 8 Friday

Selecting and Entrusting: Apply four tests in choosing genuine officers:Virtue, wealth, pleasure and fear of death (501)

 

December 9 Saturday

Greatness: A man’s deeds are the touch stone of his greatness and littleness (505)

December 10 Sunday

TRUST: Never trust a man without testing him; when the test is over, decide what you can entrust him with (Kural 509)

 

December 11 Monday

Crocodile Tactics: In deep waters the crocodile overpowers all; out of waters, others overpower it. (495)

December 12 Tuesday

Elephant and Fox (BE TACTFUL) : A fierce elephant that has faced lancers, can be foiled by a fox, if it is stuck in a marshy grounds (Kural 500)

December 13 Wednesday

TACTIS: The sea sailing ship cannot move on land. The strong wheeled high chariot cannot run on water (Kural 496)

December 14 Thursday

Time of Action: The crow defeats the owl during daytime. The leader seeks right time to quell the enemy (481)

December 15 Friday

Right Time: One can even win the world if he chooses the proper place and acts in the right hour (484)

 

December 16 Saturday

Time and Ram: The quiescence of a strong man is like the step back of a fighting ram before charging (Kural 486)

December 17 Sunday

Heron and Time: In adverse time feign peace and wait like a heron; strike like its peck when the time is opportune (490)

December 18 Monday

Overloading (FORETHOUGHT): The axle of an over loaded cart breaks by adding even a gentle peacock’s feather (475)

December 19 Tuesday

Thrift (SAVE THE MONEY): His amassed wealth will quickly vanish who lavishes it without thrift, upon needless things (480)

December 20 Wednesday

To be or Not to be (TAKE DECISIVE ACTION, DON’T DELAY): It is ruinous to do what should not be done; and ruinous also to omit what should be done (466)

 

December 21 Thursday

Have Good Company:-Purity of heart and purity of action both come from good company (455)

 

December 22 Friday

Greatmen:-The leader who has worthy friends and acts ably, has nothing to fear from terrible enemies (Kural 446)

December 23 Saturday

Supporters:-There is no profit without capital; there is no stability for a leader without strong supporters (449)

December 24 Sunday

Self-Introspection: Let a man cure his faults and then scan others’. Who then can find fault with him? (Kural 436)

December 25 Monday

Boasting: Never extol yourself in any mood nor do any act that is good for nothing (439)

 

December 26 Tuesday

Wisdom: Wisdom is a weapon which defends against decline; it is the inner fortress that baffles the enemy’s entry (421)

December 27 Wednesday

Do in Rome as Romans do:- To live in conformity with the world is wisdom (426)

December 28 Thursday

Listen:- Listen to whatever is good, however little; little as it may be, it will bring you much greatness.

 

December 29 Friday

Depression:- Though a man has no learning, let him listen; like a staff , it will support him in his depression

December 30 Saturday

Wise discourses: Polite speech is difficult for those who do not listen to wise discourses (419)

 

December 31 Sunday

Lady without breasts: The unlettered man aspiring to speak (in public platforms) is like a lady without her two breasts courting love. (Tirukkural couplet 402)

January First 2018 Monday- HAPPY NEW YEAR

–Subham–

 

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)


Written by London Swaminathan 

 

Date: 27 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 11-55 AM

 

 

Post No. 4437

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

டிசம்பர் மாத (ஹேவிளம்பி- கார்த்திகை/மார்கழி) காலண்டர், 2017

இந்த மாதக் காலண்டரில், 31 அபூர்வ ராமன் இருக்கும் இடத்தில் இடம்  பெறுகின்றன.

 

முக்கிய நாட்கள்:  – டிசம்பர் 2 -கார்த்திகை தீபம்; 3- ஸர்வாலய தீபம், வைகானஸ தீபம், பாஞ்சராத்ர தீபம்; 11-பாரதியார் பிறந்த நாள்; 16- மார்கழி/ தனுர் மாத துவக்கம்; 25-கிறிஸ்துமஸ்; 29-வைகுண்டஏகாதசி;

அமாவாசை – 17; ஏகாதசி – 13, 29; பௌர்ணமி—  3

முகூர்த்த நாட்கள்: 7, 13

 

XXXXXXXXXXXX

டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை

யத்ர ராமோபயம் நாத்ர நாஸ்தி தத்ர பராபவஹ — வால்மீகீ ராமாயணம் 4-49-15

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை; தோல்வியும் இல்லை

XXXXXX

 

டிசம்பர் 2 சனிக்கிழமை

அமோகோ தேவதானாஞ்ச ப்ரஸாதஹ கிம் ந சாதயேத்?

கடவுளின் கருணை இருந்தால் எது சாத்யமில்லை? –கதாசரித் சாஹரம்

 

XXXXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை

அசிந்தனீயோ மஹிமா பரேசிதுஹு –கஹாவத்ரத்னாகர்

கடவுளின் மஹிமை அளபற்கரியது

XXXXXX

 

டிசம்பர் 4 திங்கட்கிழமை

லோகோ ஹி சர் வோ விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை

 

ஈஸ்வராணாம் ஹி விநோதரஸிகம் மனஹ  — கிராதர்ஜுனீய

கடவுளரின் மனது விநோதரசனையில் திளைக்கிறது.

XXXXXX

டிசம்பர் 6 புதன்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 7 வியாழக்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை

ந ஹி ஈஸ்வரவ்யாஹ்ருதயஹ கதசித்புஷ்னந்தி லோகே விபரீதமர்தம் – — குமார சம்பவம் 3-63

இந்த உலகில் இறைவனின் சொற்கள் பொய்த்ததில்லை

XXXXXX

 

டிசம்பர் 9 சனிக்கிழமை

தாதுஹு கிம் நாம துர்கதம் –ப்ருஹத்கதாமஞ்சரி

படைத்தவனுக்கு இயலாதது என்ன?

XXXXXX

 

டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை

ந சந்தி யாதார்த்யவிதஹ பிநாகினஹ –குமார சம்பவம் 5-77

சிவனின் உண்மை நிலையை அறிந்தவர் எவருமிலர்

XXXXXX

டிசம்பர் 11 திங்கட்கிழமை

மதுரவிதுரமிஸ்ராஹா ஸ்ருஷ்டயஹ சம்விதாதுஹு –பிரஸன்ன ராகவ `

இனிப்பையும் கசப்பையும் கலந்தளிப்பவன் இறைவன்

XXXXXX

 

டிசம்பர் 12 செவ்வாய்க்கிழமை

லோகோ ஹி சர்வே விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

 

 

டிசம்பர் 13 புதன்கிழமை

த்வந்த்வாத்மகோஅயம் சம்சாரஹ விதினா நிர்மிதோ அத்புதஹ

பிரம்மாவின் படைப்பில்தான் எத்தனை முரண்பாடுகள்? –கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 14 வியாழக்கிழமை

ந சக்யம் லோகஸ்யாதிஷ்டானபூதம் க்ருதாந்தம் வஞ்சயிதும்— பாலசரித

மரணதேவனை ஏமாற்ற எவராலும் முடியாது. உலகின் ஆதாரமே அவன்தான்

XXXXXX

 

டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை

நாராயணபராஹா  சர்வே ந குதஞ்சன பிப்யதி — பாகவதபுராண 6-17-28

நாராயண பக்தர்கள் அஞ்சுவது யாதொன்றுமில

XXXXXX

டிசம்பர் 16 சனிக்கிழமை

ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் ஸுகினோ பவந்து- விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

நாராயணன் என்ற நாமம் கேட்ட உடனே துக்கங்கள் பறந்தோடும்

XXXXXX

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிசர்கோ அதிகாதிகஹ——– கதாசரித் சாஹரம்

பிரம்மாவின் படைப்புகள் அற்புதம், அதி அற்புதம்!

XXXXXX

 

டிசம்பர் 18 திங்கட்கிழமை

நித்யம்ப்ரயதமனானாம் சஹாயஹ பரமேஸ்வரஹ

கடமையைச் செய்பவனின் வலதுகை ஆண்டவன்

XXXXXX

டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை

பதஹ ச்ருதேர்தர்ஸயிதார ஈஸ்வரா மலீமசாமாத்ததேந பத்ததீம்

 

குறுக்கு புத்தி கொண்டவர்களின் சதிகளை இறைவன் மூடிமறைப்பதில்லை அவர்களே,  வேதம் சொல்லும் அறவழிப்பாதையில் செல்லக் கட்டளையிடுபவர்கள் –காளிதாஸரின்  ரகுவம்சம் 3-46

 

XXXXXX

டிசம்பர் 20 புதன்கிழமை

 

ப்ராஜானாம் தைவதம் ராஜா பிதரௌ தைவதம் சதாம்-

ராமாயண மஞ்சரி

மக்களுக்கு தெய்வம் போன்றவர் ராஜா;  நல்லோருக்கு தெய்வம் போன்றவர் அவரவர் பெற்றோர்.

XXXXXX

டிசம்பர் 21 வியாழக்கிழமை

 

ப்ரசன்னே ஹி கிம் ப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஆண்டவன் மகிழ்ந்தால், நாம் அடைய முடியாததுதான் என்ன? —–கதாசரித் சாஹரம்

XXXXXX

 

டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை

விஷமப்யம்ருதம்கஸ்சித்பவேதம்ருதம் வாவிஷ்மீஸ்வரேச்சயா– காளிதாஸரின்  ரகுவம்சம் 8-46

ஆண்டவன் நினைத்தால் விஷம் அமுதமாக மாறும்; அமுதம், விஷமாக மாறும்

XXXXXX

டிசம்பர் 23 சனிக்கிழமை

அஹம் த்யாகி ஹரிம் லபேத்

அஹம்காரத்தை விட்டவன் கடவுளை அடைவான் -கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஷ்ணேன தேஹோத்தரணாய சேஷஹ —-குமார சம்பவம்  3-13

ஆதி சேஷன் எனும் பாம்பு பூமியையே தாங்குவதைப் பார்த்த கிருஷ்ணன், அதைத் தனக்கு மெத்தையாகப் போட்டுக்கொண்டான்

XXXXXX

 

டிசம்பர் 25 திங்கட்கிழமை

சுதுஷ்கரமபி கார்யம் ஸித்யத்யனுக்ரஹவதீஷ்விஹ தேவதாசு -கதாசரித் சாஹரம்

ஆண்டவன் அருள் இருந்தால் நடக்கமுடியாத செயல்களும் நடந்துவிடும்

XXXXXX

 

டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை

சுசிகாமா ஹி தேவதாஹா—– பாரதமஞ்சரி 3-32

சுத்தம் விஷயத்தில் தெய்வங்கள் மிகவும் அலட்டிக்கொள்ளும்

XXXXXX

 

 

டிசம்பர் 27 புதன்கிழமை

ஸ்வல்பகாரணமாஸ்ரித்ய விராட் கர்ம க்ருதம் மஹத் – கஹாவத்ரத்னாகர்

சொல்பத்தைக் கொண்டு மஹத்தானவைகளைப் படைத்துவிட்டார் பிரம்மா

XXXXXX

 

டிசம்பர் 28 வியாழக்கிழமை

தேவோ துர்பலதாதகஹ —– சுபாஷித ரத்ன பாண்டாகார 3-136

பலவீனமானவருக்கு இறைவன் உதவமாட்டான்

XXXXXX

 

டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கோ தேவதா ரஹஸ்யானி தர்கயிஷ்யதி

இறைவனின் லீலைகளை அறிபவர் யார் ?—— விக்ரமோர்வஸீயம்

XXXXXX

 

டிசம்பர் 30 சனிக்கிழமை

சர்வதா சத்ருசயோகேஷு நிபுணஹ கலு ப்ரஜாபதிஹி – பாததாதிதக 115-2

ஒருமித்த கருத்துடையோரை ஒன்று சேர்ப்பதில் இறைவன் திறமைசாலி

XXXXXX

டிசம்பர் 31  ஞாயிற்றுக்கிழமை

ஸர்வதேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

நாம் செய்யும் எல்லா நமஸ்காரங்களும் கேசவனை அடைகிறது

 

First January MONDAY 2018,  Happy New Year

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

sex கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி (Post No.4436)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-28 am

 

 

 

Post No. 4436

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கியம் : பெண்களின் நுட்பமான அறிவு

 

மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!

 

ச.நாகராஜன்

 

1

நள தமயந்தியின் சரித்திரம் பாரதம் முழுவதும் தெரிந்த அற்புதமான ஒரு சரித்திரம். இதை வெண்பா பாக்களினால் தமிழில் புகழேந்திப் புலவர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

வடமொழியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் நைஷதம் என்ற மஹாகாவியத்தை இயற்றியுள்ளார். இது ஐந்து பெருங்காவியங்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது.

இந்தக் காவியத்தின் அழகில் ஈடுபட்டான் தமிழ் மன்னன் ஒருவன்.

 

 

அவர் பெயர் அதிவீர ராம பாண்டியர்; பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர். கொற்கையிலிருந்து அரசாண்டதாகத் தெரிகிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பெரும் கவிஞர். வடமொழியில் விற்பன்னர். சிற்றின்பப் பிரியர். தமிழில் கொக்கோகத்தை எழுதியவரும் இவரே.

 

இவரது மனைவியாரும் சிறந்த தமிழ் அறிஞர்.

 

வடமொழிப் புலமையால் அதில் இருந்த நூல்களில் புலமை கொண்ட அதிவீர ராம பாண்டியன் நைஷத காவியத்தில் மனதைப் பறி  கொடுத்து அதைத் தமிழில் இயற்றினார். இதில் 1172 செய்யுள்கள் உள்ளன.

 

இதை அரங்கேற்றம் செய்த போது நடந்த ஒரு சம்பவத்தை இங்குக் காணலாம்

2

நைடத காவியம் அரங்கேற்றம் ஆரம்பமானது. புலவர்கள், ரஸிகர்கள் அவையில் கூடினர். அதிவீர ராம பாண்டியன் தன் காவியத்தை அரங்கேற்றும் செய்யும் விதமாகச் செய்யுள்களைப் படித்து அதை அறிஞர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

 

முதல் படலமான நாட்டுப் படலம் முடிந்தது. அடுத்து நகரப் படலம் ஆரம்பமானது.

அதில் தான் இயற்றிய செய்யுளைப் படிக்கலானார் அதி வீர ராம பாண்டியன்.

 

வாய்ந்த மின்னைம டந்தைய ராக்கிவிண்

பேர்ந்தி டாமலன்  றோமலர்ப் புங்கவன்

சாந்த ணிந்தத மனியக் குன்றென

ஏந்து வெம்முலைப் பாரமி யற்றினான்

 

 

நகரத்தை வர்ணிக்க வந்த போது அமைந்த பாடல் இது.

இதன் பொருள் :-  தாமரைப் பூவில் இருக்கின்ற  நான்முகக் கடவுள் (புங்கவன்) மேகத்தின் கண் பொருந்திய மின்னற் கொடிகளை மங்கையராக்கி மீண்டும் அம்மேகத்தினிடத்தே போகாமல் இருத்தற்கன்றோ  சந்தனத்தைப் பூசி அமைக்கப்படுகின்ற, விருப்பம் செய்கின்ற, பாரமாகிய பொன்மலையைப் போல (தமனியக் குன்று)  அந்த நன்முலைகளை (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்) அந்த மங்கையருக்கு  உண்டாக்கினான்.

 

பிரம்மா மங்கையருக்கு ஏன் முலைகளை அமைத்தான் என்பதைக் கற்பனை நயம் படப் பாண்டியன் கூறி முடித்தார்.

இதைப் பாண்டியன் கூறி முடித்தவுடன் அவையிலிருந்த புலவர் ஒருவர் எழுந்தார்.

 

“அரசே! மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம்? இது பொருத்தமற்றதாக அல்லவா உள்ளது. இதை விளக்க வேண்டும்” என்றார்.

 

மங்கையரின் கொங்கைகளை ஏன் பிரமன் அமைத்தான் என்பதைச் சொல்லப் போய் வம்பில் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்த பாண்டியன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அந்தச் செய்யுளுடன் அன்றைய அரங்கேற்றத்தை முடித்து, “நாளை இதைத் தொடருவோம்” என்றான்.

 

 

அரண்மனைக்கு மீண்ட மன்னன் ஓயாத சிந்தனையில் ஆழ்ந்தான். இந்தப் பாடலுக்கு எப்படிப் பொருள் சொல்வது. மேகத்தில் தோன்றி மறையும் மின்னலுக்கும் மலைக்கும் எப்படி ஒரு சம்பந்தத்தை உருவாக்குவது என்ற கவலையில் ஆழ்ந்தான்.

அந்தப்புரம் வந்த மன்னன் படுக்கையில் உறக்கமின்றி முகம் வாடிப் படுத்தான்.

 

மஹாராணியார் பெரும் புலமை வாய்ந்தவர். நல்ல கவிஞர். அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்து காலையில் நடந்த அரங்கேற்ற சம்பவத்தையும் நினைத்து அவனது முகம் வாடி இருக்கும் காரணத்தை அறிந்தாள்.

 

மெல்ல மன்னரிடம் பேச்சை ஆரம்பித்தாள். “நீங்கள் பாடிய பாடல் மிக அருமை” என்றாள்.

 

மன்னனோ, “அது எப்படி? மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் கூறுவது?” என்றான்.

 

“அது சுலபம். அது இயல்பாய் அமைந்த ஒன்று தானே” என்றாள் சர்வ சாதாரணமாக ராணி.

 

ஆர்வம் மேலோங்க, “எங்கே, அர்த்தம் சொல்லேன்” என்றான் பாண்டியன்.

 

ராணி விளக்கலானாள் : “ மின்னலுக்கும் மலைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டால் கூட இயைபு உண்டாக்கவன்றோ சூசுகமாகிய இருப்பு ஆணியை விதியோன் அடித்தான்” என்றாள் ராணி.

மன்னன் முகம் மலர்ந்தது. ராணி என்ன சொன்னாள் என்பதை கண நேரத்தில் அவன் புரிந்து கொண்டான்.

 

அதாவது மின்னல் போன்ற ஒடிந்த இடையை உடைய மங்கையருக்குக் கணத்தில் மறைகின்ற தன்மையை உடைய மின்னல் மறையாது இருக்க, அம்மலை முலைகள் மீது, ‘முலைக் கண்களாகிய’ இருப்பு ஆணிகளை பிரமன் அடித்தான் என்றாள் ராணி.

 

மறு நாள் அவை கூடியது. பாண்டியன் பெருமிதம் பொங்க (ராணியாரின்) விளக்கத்தைக் கூற அனைவரும் அதைச் சிறப்பான விளக்கம் என்று பாராட்டி ஏற்றுக் கொண்டனர்.

காவியம் தொடர்ந்தது.

 

பாண்டியன் தன் மஹராணியை எப்படிப் போற்றி இருப்பான் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை, அல்லவா!

3

பாரதம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இது போல ஆணுக்குச் சமமாக அறிவில் பெண்கள் ஓங்கி இருந்த வரலாறுகள் ஏராளம் உண்டு. தொகுப்பின் பெருகும். அத்தோடு மட்டுமின்றி செக்ஸ் எனப்படும் பாலியலில் – தாம்பத்ய உறவில் – அவர்களின் அறிவு மிகவும் நுட்பமாக இருந்தது என்பதையும் அறிய முடியும்.

 

MEN OF FEW WORDS ARE THE BEST MEN; SHAKESPEARE AND TIRUKKURAL- 4 (Post.4435)

MEN OF FEW WORDS ARE THE BEST MEN; SHAKESPEARE AND TIRUKKURAL- 4 (Post.4435)


Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

Time uploaded in London- 15–08

 

 

Post No. 4435

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Please read the three parts posted in the last few days and continue here with the fourth part.

Speech

Shakespeare says,

Men of few words are the best men.

–Henry V (3.2.41)”

Tiruvalluvar in Tirukkural says,

one who speaks useless words is despised by all (Kural 191)|

If you speak at all speak profitably. Speak not empty words which produce no good (Kural 200)

The wise would refrain from empty words though they might speak unpleasantly (kural 197)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

World is a Theatre

 

Shakespeare says,

“ All the world’s a stage,
And all the men and women merely players,
They have their exits and entrances,
And one man in his time plays many parts,

………………..

Tiruvalluvar in Tirukkural says,

 

Fortune coming to one and its departure are likened to assembling of a crowd to witness a drama and its dispersal respectively—Kural 332

The same simile is in Dhammapada 147 and Bhagavd Gita (18-61)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Compassion

Shakespeare says,

 

“TIMON
Commend me to them,
And tell them that, to ease them of their griefs,
Their fears of hostile strokes, their aches, losses,
Their pangs of love, with other incident throes
That nature’s fragile vessel doth sustain
In life’s uncertain voyage, I will some kindness do them:
I’ll teach them to prevent wild Alcibiades’ wrath.

–Timon of Athens

Tiruvalluvar in Tirukkural says,

The world exists and functions, because of the gracious compassion of the king,

Where this quality is absent, he becomes a burden to good earth (Kural 572)

 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Forgive and Forget

Shakespeare says,

 

Pray you now, forget and forgive:

(King Lear. Act 4. Scene 7. Lear speaking.)

 
I have forgiven and forgotten all;

(All’s Well That Ends Well. Act 5. Scene 3. King speaking.)

 

 

Mercy but murders, pardoning those that kill.

(Romeo and Juliet. Act 3. Scene 1. Escalus speaking.)

 

Is there any cause in nature that makes these hard hearts?

(King Lear. Act 3. Scene 6. Lear speaking.)

Tiruvalluvar in Tirukkural says,

The best way to punish those who harm you is to make them feel abashed by doing them good and thinking no more of it. (Kural 314)

 

Of what avail is perfection if it does not do good even to them that have done evil? (Kural 987)

Forget not a good turn done to you; but it is proper that you should forget forthwith the wrong done to you (Kural 108)

 

xxxxx SUBHAM xxxxxxxxxxxxx

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)

Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

 

Post No. 4434

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.

 

ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.

இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

 

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.

 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-

 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்

பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.

 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.

 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.

 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.

 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

TAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,

நகைச்சுவை, நாடகம், மன்னன்

 

–Subham–

ப்ரக்ருதியின் ஆசையும் புத்தரின் கேள்விகளும்! (Post No.4433)

Written by S.NAGARAJAN

 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-27 am

 

 

 

Post No. 4433

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்தபிரான் போதனை

ப்ரக்ருதியின் ஆசையும் புத்தரின் கேள்விகளும்!

 

.நாகராஜன்

 

1

புத்த பிரானின் சீடரான ஆனந்தரின் வாழ்க்கை சுவாரஸ்யமான ஒன்று. ஏராளமான சம்பவங்களைக் கொண்டுள்ள அவரது வாழ்க்கையில், ஒவ்வொரு சம்பவமும் ஒரு பெரிய உண்மையை விளக்கும். அத்துடன்  புத்தரின் அவதார மஹிமையையும் அருளையும் கூடவே விளக்கும்.

 

2

ஒரு நாள் ஆனந்தர் தன் உணவை முடித்துக் கொண்ட பின்னர் நீர் அருந்துவதற்காக அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றார். அங்கு ஒரு இளம் பெண் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்ற ஆனந்தர், “சகோதரியே! கொஞ்சம் நீர் தா” என்றார்.

அவள் ஜாதியில் தாழ்ந்த ஜாதிப் பெண். தயங்கினாள்.அவள் பெயர் ப்ரக்ருதி.

“பூஜ்ய ஆனந்தரே! நான் ஒரு மாதங்கப் பெண்” என்று தன் ஜாதியைச் சுட்டிக் காட்டினாள்.

“ நான் உன் ஜாதி என்ன என்று கேட்கவில்லை. அருந்துவதற்கு நீர் தான் கேட்டேன்” என்றார் ஆனந்தர்.

 

பிறகு அவள் நீரைத் தந்தாள். அதை அருந்தி விட்டு ஆனந்தர் சந்தோஷமாகத் தன் வழியே சென்றார்.

ப்ரக்ருதிக்கு ஒரே மகிழ்ச்சி. பலவித கற்பனையில் அவள் ஈடுபடலானாள்.ஆனந்தர் ஏன் தன்னிடம் வந்து நீர் கேட்க வேண்டும்.

அவள் ஆனந்தரையே தனது கணவனாக நினைத்துக் கொண்டாள்.

அவளது போக்கைக் கண்ட அவளது தாய் அவளது நிலையை நன்கு புரிந்து கொண்டாள்.

அவள் மாயாஜாலக் கலையில் வல்லவள்.

தன் மகளுக்கு ஆனந்தரை மணமுடித்து வைப்பது என்ற தீர்மானத்திற்கு வந்த அவள் வசிய ஜாலத்தை ஆனந்தர் மீது ஏவி விட்டாள்.

ஆனந்தர் எப்படியும் தன் குகைக்கு வந்தே ஆக வேண்டும் என்பது அவளது தீர்மானம்.

ஆனந்தர் அப்போது உயர்நிலையான அர்ஹத்தாக ஆகியிருக்கவில்லை.

அவர் வசிய ஜாலத்தால் நிலை கொள்ளாமல் தவித்தார். ப்ரக்ருதியைப் பார்க்க வேண்டும் என்ற நினைவு இடைவிடாமல் வரவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

 

கடைசியில் புத்த பிரானை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செய்தார்.

புத்தர் நடந்தது அனைத்தையும் உணர்ந்து கொண்டார்.

ப்ரக்ருதியின் தாயார் செய்த வசிய ஜாலத்தை முறியடிக்கும் விதமாகத் தன் அருளை ஆனந்தர் மீது பொழிந்தார்.

ப்ரக்ருதியின் தாயார் தான் தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தாள்.

தன் மகளிடம் நடந்ததை அப்படியே கூறினாள்.

ஆனால் ப்ரக்ருதியோ ஆனந்தரின் நினைவை விடவில்லை.

ஆனந்தர் பிக்ஷை எடுக்கப் போகும் போதெல்லாம் முன்னே வந்து நிற்பாள்.

ஒருநாள் ஆனந்தர் அவளிடம், “ உன் மேல் எனக்கு இரக்கம் தான் வருகிறது. நீ நன்றாக இருக்க வேண்டும். என்னை விட்டு விடு” என்றார்.

ப்ரக்ருதி யோசித்தாள்.

புத்த பிரானிடமே சென்று விடலாம் என்று நினைத்து அவரிடம் சென்று முறையிட்டாள்.

புத்த பிரானுக்கு அவள் மீது கருணை பொங்கியது.

அவளை நோக்கி வினவலானார்:

“ப்ரக்ருதி! நீ எனது சீடனை மணந்து கொள்கிறாயா?”

“ஆமாம், பூஜ்யரே”

“எனது சீடனை மணந்து கொண்டால் அவன் செல்லுமிடமெல்லாம் நீயும் செல்ல வேண்டியிருக்குமே, அதற்குத் தயாரா?”

“தயார் தான், பூஜ்யரே”

“எனது சீடன் துவராடையை அணிந்து கொண்டிருப்பது போல அதே ஆடையைத் தான் நீ அணிய வேண்டியிருக்கும். அதற்குச் சித்தமா?”

“சித்தம் தான், பூஜ்யரே”

“என் சீடன் மரத்தடியே கூரையாக நினைத்து மரத்தடியில் உறங்குவது வழக்கம். அது போல உன்னால் உறங்க முடியுமா?”

“உறங்க முடியும், பூஜ்யரே”

 

கேள்விகள் வர வர, ப்ரக்ருதியின் மனம் உயர்நிலைக்குச் செல்ல ஆரம்பித்தது.

புத்தரின் கேள்விகள் அவளை ஒரு பெரிய உயரிய நிலைக்குக் கொண்டு செல்லவே அவள், அவர் தாள்களில் பணிந்து தனக்கு த்ரி ரத்னமே தேவை என்ற தனது முடிவைச் சொன்னாள்.

அவளைக் கருணையுடன் தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்ட புத்த பிரான் அவளுக்குப் புகலிடத்தை அளித்தார்.

3

ப்ரக்ருதி சிறந்த சிஷ்யையாக மாறினாள். ஜாதியில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது இல்லை, தனது உபதேசம் அனைவருக்குமானது என்பதை புத்த பிரான் நிரூபித்தார்.

-subham-

Extra Terrestrial Civilization in Manu Smrti? (Post No.4432)

Written by London Swaminathan 

 

Date: 25 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-12

 

 

Post No. 4432

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Whatever we have read as magic and mystery in the mythology seventy or hundred years ago, have become day to day ordinary things now; I will explain:

We thought only sages and seers (Rishis and Munis) could see what happens in another or a distant place; now we have CC TV and TV broadcasts which show us that happens in a distant place. With hand held objects, I pads and mobile phones we do now, what sages and seers did 100 years ago.

We thought only Rishis and Munis can hear Gandharva singing in the sky; now we have hand held small radios with  which we can hear Bhuloka Gandharavs (earthly musicians) but yet the music is coming from the heavens (air).

 

We heard that sages and seers received the truths from the heavens; they ‘heard’ it and so we called the Vedas Sruti (Sruti= which is heard); now with the help of internet and google, we can access truthful ( and of course porno and untruthful) information. Now we better understand how the sages and seers could have done it.

 

Now we know billions of pages can be saved on the internet and anyone could receive it from different parts of the world at any time. They are stored ‘somewhere”

If someone has talked or predicted about mobile, internet, television, Ipads etc. 150 years ago, one would have thought we are talking about something mysterious or strange or science fiction.

In short, now man has become Superman; Manusha has become a Deva!

 

When we read such magical things, we thought only Devas can do it. Now we know man is also becoming a superman. But yet no one could say what would happen in our grandchildren’s time. Incredible science inventions come every year. Now I can order radio or TV to switch on through my voice. I open the doors with my look (eyes) or finger prints.

But there is a big difference. Our sages did this without any equipment; they could talk about astronomy without telescopes, they could see distant objects without TV or Mobile phones. They knew that mind has more power than scientific equipment. They knew words have more power than science equipment. No one has mastered that art yet.

ET in Manu

 

Now I am coming to the point.

Manu Smrti and our Puranas speak about various time zones for Devas and Brahma. When we hear about Extra Terrestrial Civilizations in distant planetary system we will understand such descriptions better.

 

We read that Devas cant have sex in the Devaloka, cant stand on their feet,can’t blink, their garlands never wither away , they can travel from one place to another place and appear intact, sages like Narada can do inter galactic travel (Tri Loka Sanchari)etc.

 

Now I read in Manu Smrti that human year is different from Deva (angelic) year and Deva year is different from Brahma year and Brahma’s life is insignificant compared to the Supreme God. If at all we hear or find another ET civilisation, then we will know all these are true.

 

For a house fly that lives only 24 hours, human year is 365 times more; human life span is 365X100 days more than the fly’s life span. If we take the life of a bacterium then our life span is million times more. For a turtle ot tortoise that lives 300 years, our life span is shorter.

Now look at what Manu says about Time calculation:-

  1. When he whose power is incomprehensible, had thus produced the universe and men, he disappeared in himself, repeatedly suppressing one period by means of the other.
  2. When that divine one wakes, then this world stirs; when he slumbers tranquilly, then the universe sinks to sleep.
  3. But when he reposes in calm sleep, the corporeal beings whose nature is action, desist from their actions and mind becomes inert.
  4. When they are absorbed all at once in that great soul, then he who is the soul of all beings sweetly slumbers, free from all care and occupation.
  5. When this (soul) has entered darkness, it remains for a long time united with the organs (of sensation), but performs not its functions; it then leaves the corporeal frame.
  6. When, being clothed with minute particles (only), it enters into vegetable or animal seed, it then assumes, united (with the fine body), a (new) corporeal frame.
  7. Thus he, the imperishable one, by (alternately) waking and slumbering, incessantly revivifies and destroys this whole movable and immovable (creation).
  8. But he having composed these Institutes (of the sacred law), himself taught them, according to the rule, to me alone in the beginning; next I (taught them) to Mariki and the other sages.
  9. Bhrigu, here, will fully recite to you these Institutes; for that sage learned the whole in its entirety from me.
  10. Then that great sage Bhrigu, being thus addressed by Manu, spoke, pleased in his heart, to all the sages, ‘Listen!’
  11. Six other high-minded, very powerful Manus, who belong to the race of this Manu, the descendant of the Self-existent (Svayambhu), and who have severally produced created beings,
  12. (Are) Svarokisha, Auttami, Tamasa, Raivata, Kakshusha, possessing great lustre, and the son of Vivasvat.
  13. These seven very glorious Manus, the first among whom is Svayambhuva, produced and protected this whole movable and immovable (creation), each during the period (allotted to him).
  14. Eighteen nimeshas (twinklings of the eye, are one kashtha), thirty kashthas one kala, thirty kalas one muhurta, and as many (muhurtas) one day and night.
  15. The sun divides days and nights, both human and divine, the night (being intended) for the repose of created beings and the day for exertion.
  16. A month is a day and a night of the manes, but the division is according to fortnights. The dark (fortnight) is their day for active exertion, the bright (fortnight) their night for sleep.
  17. A year is a day and a night of the gods; their division is (as follows): the half year during which the sun progresses to the north will be the day, that during which it goes southwards the night.
  18. But hear now the brief (description of) the duration of a night and a day of Brahman and of the several ages (of the world, yuga) according to their order.
  19. They declare that the Krita age (consists of) four thousand years (of the gods); the twilight preceding it consists of as many hundreds, and the twilight following it of the same number.
  20. In the other three ages with their twilights preceding and following, the thousands and hundreds are diminished by one (in each).
  21. These twelve thousand (years) which thus have been just mentioned as the total of four (human) ages, are called one age of the gods.
  22. But know that the sum of one thousand ages of the gods (makes) one day of Brahman, and that his night has the same length.
  23. Those (only, who) know that the holy day of Brahman, indeed, ends after (the completion of) one thousand ages (of the gods) and that his night lasts as long, (are really) men acquainted with (the length of) days and nights.
  24. At the end of that day and night he who was asleep, awakes and, after awaking, creates mind, which is both real and unreal.
  25. Mind, impelled by (Brahman’s) desire to create, performs the work of creation by modifying itself, thence ether is produced; they declare that sound is the quality of the latter.
  26. But from ether, modifying itself, springs the pure, powerful wind, the vehicle of all perfumes; that is held to possess the quality of touch.
  27. Next from wind modifying itself, proceeds the brilliant light, which illuminates and dispels darkness; that is declared to possess the quality of colour;
  28. And from light, modifying itself, (is produced) water, possessing the quality of taste, from water earth which has the quality of smell; such is the creation in the beginning.
  29. The before-mentioned age of the gods, (or) twelve thousand (of their years), being multiplied by seventy-one, (constitutes what) is here named the period of a Manu (Manvantara).
  30. The Manvantaras, the creations and destructions (of the world, are) numberless; sporting, as it were, Brahman repeats this again and again.

Also read……..

Manu, not only a Law Maker but also a Great Botanist! (Post No.4375 …

https://tamilandvedas.com/…/manu-not-only-a-law-maker-but-also-a-great-botanist-p…

7 Nov 2017 – Manu Smrti, law book written by Manu, talks about lot of subjects which makes it a Hindu Encyclopaedia. Manu was not only a law maker but …

 

in Manu | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/in-manu/

Black Antelope in Manu: Strange Facts- Part 3 (Post No.3047) … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Manusays,.

similes of Manu | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/similes-of-manu/

Posts about similes of Manu written by Tamil and Vedas.

Manu | Tamil and Vedas | Page 2

https://tamilandvedas.com/tag/manu/page/2/

Posts about Manu written by Tamil and Vedas. … Manu deals with the menstrual women in several chapters: 3-239; 4-40/41, 57, 208; 5-66, 85, 108; 11- 88, 174.

Manu on marriage | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/manu-on-marriage/

Posts about Manu on marriage written by Tamil and Vedas.

Manu on Brahmins | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/manu-on-brahmins/

Posts about Manu on Brahmins written by Tamil and Vedas.

in Manu smrti | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/in-manu-smrti/

Posts about in Manu smrti written by Tamil and Vedas.

Manu and Women | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/manu-and-women/

Posts about Manu and Women written by Tamil and Vedas.

Mystery of Manu : Rig Veda Mystery No.8! | Tamil and Vedas

Mystery of Manu : Rig Veda Mystery No.8!

19 Jan 2015 – Research article Written by London swaminathan Research Paper No.1589; Dated 19th January 2015 (I have already written about the …

–Subham—

 

 

காலக் கணக்கு: 30 முகூர்த்தம்= ஒரு நாள், மநு நீதி நூல்-5 (Post No.4431)

Written by London Swaminathan 

 

Date: 25 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-53 am

 

 

Post No. 4431

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கடந்த சில தினங்களில் வெளியான மநு நீதி நூல் கட்டுரைகளைப் படித்துவிட்டு ஐந்தாவது பகுதியைப் படிப்பது நலம் பயக்கும்; அறிவு ஒளிரும்; நூல் வேட்கை அதிகரிக்கும்!

51.பிரம்மாவானவர் தோன்றியவாறே ஒரு பகல் பொழுது கழிந்தவுடன் சகல படைப்புகளுடன் ஒடுங்கி விடுகிறார். அதாவது அந்தப் பிரம்மாவின் ஆயுள் முடிந்தது.

52.மீண்டும் படைக்கவேண்டும் என்று எப்பொழுது அந்த சக்தி வெளிப்படுகிறதோ அப்பொழுது படைப்பு துவங்கும். எப்பொழுது அதை முடிக்க திருவுளம் கொள்கிறாரோ அப்பொழுது ஒடுங்கிவிடும்.

(ஸ்லோகம் 52ல் ஒரு சிலேடை உள்ளது; ஜகத் என்றால் நகரக்கூடியது; விழிப்பு என்பதற்கான வினைச் சொல் ஜாக்ருதி)

 

53.கர்ம வினையால் படைப்பெடுத்த உயிர்கள் பிரம்மா உறங்கும் பொழுது செயலற்றுப் போவார்கள். மனதும் அதன் செயல்பாட்டை நிறுத்திகொள்ளும்

 

54.இவ்வாறு பிரம்மாவின் ஒவ்வொரு பகலிலும் இரவிலும் படைப்பு தோன்றுவதும் ஒடுங்குவதுமாக நடந்து கொண்டே இருக்கும். அவரது  ஆயுட்காலம் முடிந்த பின்னர், முழுமுதற்கடவுள் அந்த பிரம்மாவையும் அவரது படைப்புகளையும் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு, யோக நித்திரை எனப்படும் அறிதுயிலில் ஆழ்வார்.

 

 

  1. பிறவி எடுத்த உயிரினம் நீண்டகாலம் வாழ்ந்து முடிந்த பின்னர், மூச்சுவிட முடியாத நிலையில் ஸ்தூல உடலை விட்டு, சூட்சும உடலை (கண்ணுக்குத் தெரியாத) உடலை அடைகிறது.

 

56.பிறகு அணுப்போலாகி, அசையும்-அசையா பரம்பொருள் என்னும் விதையில் நுழையும். அதில் ஐக்கியமாகும் போது பூத உடல் மறைந்துவிடும். எப்போது அவன் எட்டுவகை குணங்களைப் பெறுகிறானோ, அப்போது அவன் ஸ்தூல உடல் எடுப்பான். எட்டு குணங்கள்- புரியஷ்டகம்=பஞ்ச மஹா பூதம்/பஞ்ச இந்திரியம்+மனது/புத்தி+ஜன்மாந்தர வாசனை/கர்மவினை+பிராணவாயு

  1. என்றும் அழியாத பரம்பொருள் விழிக்கும் போதும் உறங்கும்போதும் இவ்வாறு உலகைப் படைத்தும் துடைத்தும் செயல்படும். உலகை அழிப்பதில் இடைவிடாமல் ஈடுபடும்.

 

  1. அவர் முதலில் இதைக் கற்பித்தபோது, என்னை கிரஹித்துக் கொள்ளவைத்தார். நான் இதை மரீசிக்கும் மற்றவர்களுக்கும் கற்பித்தேன்.

 

  1. பிருகு உங்களுக்குச் சொல்வார். அவர் என்னிடமிருந்து முழுதும் கற்றுக்கொண்டார்.

60.இவ்வாறு மநு சொன்னது ப்ருகுவுக்கு மிகவும் மகிச்சி அளித்தது

 

61.சுயம்புவான பிரம்மாவிடம் தோன்றிய மேலும் ஆறு மனுக்கள் உண்டு. அவர்கள் மகான்கள்; மஹா வல்லமை படைத்தவர்கள்.

  1. அவர்கள் அனைவரும் சுயம் பிரகாசம் உடையவர்கள்.

 

 

அவர்களுடைய பெயர்கள்:– ஸ்வரோசிஷஸ், உத்தமர், தாமசர், ரைவதர், சக்ஷூஸ், தேஜோமயமான விஸ்வாவசு (சுவாரோசிஷன்,உத்தமன், தாமசன், ரைவதன்,சாக்ஷுசன்,வைவசுவதன்)

 

63.அவர்கள் ஆறுபேரும் சுவாயம்புவ மநுவும் அவரவர் ஆட்சிக் காலத்தில் மக்களைப் படைத்தும் பராமரித்தும் வருவர்.

காலக் கணக்கு

  1. 18 இமைகள் = ஒரு காஷ்டை எனப்படும்

30 காஷ்டை= ஒரு கலை

30 கலைகள் = ஒரு முகூர்த்தம்

30 முகூர்த்தம் = ஒரு நாள்

65.மானிடர்க்கும் தேவர்களுக்கும் பகல்-இரவை வகுப்பவன் சூரியன்; இரவு, தூங்குவதற்கும் பகல் நேரம், வேலை செய்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

66.முப்பது நாள் என்பது மனிதர்களுக்கு ஒரு மாதம்; அதில் 15 நாட்கள் தேய் பிறையாகவும், 15 நாட்கள் வளர்பிறையாகவும் இருக்கும்.  இவ்விரு பக்ஷங்களும் க்ருஷ்ண, சுக்ல பக்ஷங்கள் — பிதுர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேய் பிறை என்பது அவர்களுக்குப் பகல்.

67.12 மானிட மாதங்கள் தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையுள்ள உத்தராயணம் தேவர்களின் பகல்; ஆடி முதல் மார்கழி வரையான காலம் அவர்களுக்கு இரவு. ஆக, மானிட வருடங்கள் முப்பது என்பது தேவர்களுக்கு முப்பது நாட்கள். அது போல 12 மாதங்கள் தேவர்களின் ஒரு வருடம்.

68.இனிமேல் பிரம்மாவின் இரவு பகல்கள், யுகங்கள் பற்றிச் சொல்லுவேன்; கேளுங்கள்

69.கிருத யுகம் என்பது = 4000  தேவ வருடங்கள்; அதற்கு முன் அது உருவாகும் இடைவெளிப்பொழுது (யுக சந்தி), அதாவது வைகறைப் பொழுது 400 தேவ வருடங்கள். காலையிலும் மாலையிலும் இப்படி சந்தியா வேளை இருப்பதால் கிருத யுகம் என்பது 4000+400+400=4800 தேவ வருடங்கள்.

 

70.ஏனைய மூன்று யுகங்களும் குறைந்து கொண்டே வரும்; மேலும் காலை மாலை சந்திப் பொழுது என்பதும் குறையும்; இந்தக் கணக்குப்படி, திரேதா யுகம் 3600, துவாபர யுகம் = 2400, கலியுகம் 1200 தேவ வருடங்கள் என்று அறிக.

 

எனது கருத்து    —   மநு தர்ம நூலில் விண்வெளி விஞ்ஞானம்!

 

1.பிக் பேங் (Big Bang) என்பது போல பிக் க்ரஞ்ச் (Big Crunch) உண்டு என்று இந்துக்கள் கூறுகின்றனர். இதை விஞ்ஞானிகள் இன்னும் முழுதும் ஏற்கவில்லை. விரைவில் ஏற்றுக் கொள்ளுவர்.

 

  1. மநு நீதி நூல் போன்ற சட்ட நூலில் காலக் கணக்கீடு, வாய்ப்பாடு ஆகியன இருப்பது வியப்புக்குரியது. அவர் பிக் பேங், பிக் க்ரஞ்ச் பற்றிப் பேசுவது இன்னும் வியத்தற்குரியது

 

3.நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும்.  வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் வசிப்பர்.

 

4,ஐன்ஸ்டைனையும் மிஞ்சும் விஷயங்களை மநு கூறுகிறார். பிற்காலத்தில் புராணங்களும் இதை அப்படியே சொல்லும்.

 

  1. இவ்வளவு சொல்லும் மனு, உலகிலுள்ள எல்லாப் பண்பாடுகளும், நமது புரா ண ங்களும் சொல்லும் பிரளயக் கதையைச் (Story of Great floods) சொல்லாததால், மனு ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. அதாவது பைபிள் (Story of Noah) , மச்சாவதாரம் முதலியன சொல்லும் பிரளயக் கதை (deluge) ரிக் வேதத்திலோ மனுவிலோ இல்லாததால் இவை இரண்டும் காலத்தால் முந்தியவை என்பது தெரிகிறது.

6.யுக சந்தி என்று இடைவெளி கொடுப்பது குறிப்பிடத்தக்கது. உடனே அடுத்த யுகம் துவங்குவதில்லை. அதாவது முந்தைய, பிந்தைய யுகங்களின் குணங்கள் கலந்து காணப்படும் குழப்பமான காலகட்டம். தேர்தல் முடிவால், ஒரு  அரசியல் கட்சி பதவி இழந்து ,பின்னர் அடுத்த கட்சி பதவியில் அமர்வதற்குள் காணப்படும் இரண்டும்கெட்ட நிலை போன்றது இது. நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவியல் முறையில் யுக மாற்றத்தை அணுகினார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

to be continued………………………….