உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகில் வாக்கினிலே ஒளி உண்டாம் (Post No.4311)

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகில் வாக்கினிலே ஒளி உண்டாம் (Post No.4311)

 

 

Written by S.NAGARAJAN

 

 

Date:18 October 2017

 

Time uploaded in London- 5–21 am

 

 

Post No. 4311

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வாசகர்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்

 

தீபாவளி சிறப்புக் கட்டுரை

 

உபநிடத சத்தியம்

 

மனமே பற! உயரப் பற!

 

ச.நாகராஜன்

 

1

மனமே, பற! உயரப் பற!!

 

பற, பற என்றால் எப்படிப் பறப்பதாம். முடியாது.

 

முயன்று பார். அண்டார்டிகா போக முடியுமா?

 

ஓ! அது முடியும். இதோ அண்டார்டிகா போய் விட்டேன். ஆஹா! க்ளேசியர் என்று சொல்கிறார்களே, பனிப்பாறைகள், ஓ, அற்புதம்!

 

அட, அண்டார்டிகா சென்று அதன் வர்ணனை வேறா! திரும்பி வீட்டிற்கு வர முடியுமா?

 

வர முடியுமாவாவது. வந்தே விட்டேன். ஒரு நொடியில். பழைய டேபிள். அதே லாப் டாப்.! அதே அறை!!

 

அட! இது போலப் பறக்க முடியாதா?

 

ஓ! இது போலப் பறக்க முடியுமே. இதோ சந்திரன்! ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால்டித் தடங்களைப் பார்க்கிறேன். அட, அப்படியே செவ்வாய் கிரகம் செல்கிறேன். அங்கு தண்ணிரைப் பார்க்கிறேன்.

 

சபாஷ்

 

என்ன சபாஷ், இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம். அலுப்புத் தான் மிஞ்சுகிறது. ஒரு பிரயோஜனமும் இல்லை.

 

வந்தாயா, வழிக்கு. அதனால் தான், மனமே பற, உயரப் பற என்றேன். பறப்பது என்றால் மேலே சும்மாவாவது பறப்பது என்று அர்த்தமில்லை. மனமே உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு பற என்று சொன்னேன். அதனால் நீ மட்டுமல்ல; சமுதாயமே  மேலே எழும்பும்.

 

“அப்படி பறக்க எனக்குத் தெரியாது! உயரிய சிந்தனையோடு பற என்றால் என்ன அர்த்தம்?”

 

அப்படிக் கேள், சொல்கிறேன். ஒரு வாஹனம் தருகிறேன். அதில் ஏறிப் பறந்தால் உயர்ந்த சிந்தனையோடு பறக்கலாம்.

 

அட, ஜோராக இருக்கிறதே. என்ன வாஹனம், எப்படிப் பறப்பது.

 

உபநிடதம் என்னும் வாஹனம். அதில் ஏறினால் சிகரமான சிந்தனைகள் வரும். மனமே, உனக்கு மட்டுமல்ல,பிரயோஜனம், நீ அதைப் படித்தால் அனைவருக்குமே நல்லது நடக்கும் அளவிற்குச் சிந்தனை உயரும்.

 

உபநிடதமா, பார்க்கலாமா?

 

உபநிடதங்கள் ஏராளம் உள்ளன. முக்கியமான 108 உபநிடதங்கள் இதோ உள்ளன. ஏதாவது ஒன்றை எடுத்துப் பாரேன்.

 

சரி,கைக்கு வந்த இந்த் உபநிடதத்தைப் பார்க்கிறேன். இதன் பெயர் அம்ருத பிந்து உபநிடதம்.

 

“அழகான உபநிடதம்!”

 

அதில் முதல் வரிகளைப் பார், அதனால் உயரப் பறக்க முடியுமா என்று பார்!

 

ஓம். மனோ ஹி த்விதம் ப்ரோக்த்ம் சுத்தம் சாசுத்த மேவ ச I

அசுத்தம் காம ஸங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம் II

 

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:…I

 

“ஓ! அர்த்தம் என்ன?

 

“மனது சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரு வகையாகக் கூறப்பட்டுள்ளது. ஆசையில் நாட்டமுடையது அசுத்தம். ஆசை இல்லாதது சுத்தம்.

 

மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்.”

இது தான் அர்த்தம்.

 

மனமே!இதை மட்டும் சிந்தித்துப் பாரேன். உயரப் பறக்க முடிகிறதா!

 

அட, மனமாகிய என்னைப் பற்றி அல்லவா இந்த உபநிடதம் கூறுகிறது. மன ஏவ மனுஷ்யாணாம். உண்மை தான். உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன!

 

2

மனதிற்கும் அதன் ரகசியம் உணர்ந்த ரிஷிக்கும் நடந்த (கறபனை) சம்பாஷணையைத் தான் மேலே படித்தீர்கள்.

மனதைப் பற்றிய ரகசியங்களை நன்கு விளக்கும் உபநிடதம் அமிருதபிந்து உபநிஷத்.

 

மனதை விஷயப்பற்றில்லாததாகச் செய்.

 

உலகப் பொருள்களைப் போல் பரம்பொருள் சிந்தனைகுரியதன்று.

 

ஆனால் சிந்திக்கத் தகாதது அன்று. சிந்தனைக்கெட்டாததாயினும் சிந்தித்தற்குரியது அது ஒன்றே. அப்படி காணும் போது பக்ஷபாதம் முற்றும் நீங்கிய பிரம்மம் அடையப்பட்டதாகிறது.

 

3

மனதைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தையும் விளக்கும் அற்புத உபநிடதம் அமிருத பிந்து உபநிடதம்.

 

22 ஸ்லோகங்கள் உள்ளன.

 

ஸர்வபூதாதிவாஸஞ் ச யதுபூதேஷு வஸத்யதி I

ஸர்வானுக்ராஹகத்வேன ததஸ்ம்யஹம் வாஸுதேவ: II

ததஸ்ம்யஹம் வாஸுதேவ இதி II

 

எல்லா உயிர்களும் எவனிடம் வாழ்கின்றனவோ, எவன் எல்லா உயிரிகளிடத்தும் அருள்புரிந்து கொண்டு வாழ்கின்றானோ அந்த வாஸுதேவன் நானாயிருக்கிறேன்.. அந்த வாஸுதேவன் நானாயிருக்கிறேன் என்றவாறு.

 

என்று இப்படி முடிகிறது இந்த உபநிடதம்.

 

மூவுலகிலும் நிறைந்து வசிப்பதால் பகவானுக்கு வாஸுதேவன் என்ற பெயர் ஏற்பட்டது.

 

அவனை மனதில் ஏற்றினால் மனம் பறக்கும்; உயரப் பறக்கும்.

 

அதனால் நன்மை பறக்கும் மனதிற்கு மட்டுமல்ல; உலகிற்கே நன்மை!

 

4

 

ராமகிருஷ்ண தீபம் என்னும் உரையுடன் ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை-4,  108 உபநிடதங்களை உரையாசிரியர் அண்ணா அவர்களின் உரையுடன் வெளியிட்டிருக்கிறது. உபநிடதப் பொக்கிஷம் இது. தமிழில்  மட்டுமல்ல, உபநிடத விளக்கவுரைகள் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

பல ரகசியங்களை அறிந்து கொள்ளவும் நமது மனம் உயரப் பறக்கவும் ஒரே வழி -உபநிடதங்களைப் படிப்பது தான்!

***

ரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-Part 1 (Post No.4310)

Written by London Swaminathan

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 21-28

 

 

Post No. 4310

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

5000 ஆண்டுகளுக்கு முன்னர், வியாச மஹரிஷி, வேதங்களைக் காப்பாற்ற, அவைகளை நான்காகப் பிரித்து நாலு சீடர்களை அழைத்து இதைப் பரப்புங்கள் என்றார். எழுதாக் கிளவியாக (கிளவி= சொல்) 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அது ஒலிப்பது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. வியாசர் உலக மஹா ஜீனியஸ் GENIUS; பேரறிவாளன்! தனது காலத்தில் இருந்த அத்தனை கதைகளையும் நீதி வாக்கியங்களையும் உலகிலேயே மிகப் பெரிய இதிஹாசமான மஹாபரதத்தில் இணைத்தார். 20,000 மந்திரங்களை உடைய 4 வேதங்களையும் தொகுத்தார். இனி உலகில் இப்படிப்பட்ட பணியைச் செய்ய எவரால்  முடியும்?

 

ரிக் வேத மந்திரங்களைத் தொகுத்த வியாசர், அதை மனம் போன போக்கில் அவியல் போலச் செய்யாமல், அழகாகச் செய்து கொடுத்தார். இதோ சில சுவையான தகவல்கள்:-

 

ரிக்வேதம் என்பது ஒரு புத்தகம் இல்லை; ஒரு கவிதைத் தொகுப்பு.

 

இது பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் ‘கண்டுபிடித்த’ மந்திரங்கள்; அதாவது அவை எப்போதும் இருக்கும்; ஞான த்ருஷ்டி உடைய முனிவர்கள் அதைக் கண்டு பாடுவர். அதனால் அவர்களுக்கு மந்திரங்களைப் பார்த்தவர்கள் — மந்த்ர த்ருஷ்டா — என்று பெயர்.

 

இது கவிதைத் தொகுப்பு; பல வகை யாப்பு அணிகளில் அமைந்துள்ளது. இலக்கணமும், மொழியும் கூட மாறுபடும்.

ரிக் வேதத்தில் மொத்தம் பத்து மண்டலங்கள்; பின்னர் இதை எட்டு அஷ்டகங்களாகவும் பிரித்தனர்.

 

இரண்டாவது மண்டலம் முதல் ஏழாவது மண்டலம் வரையுள்ள மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் என்று அழைக்கப்படும் அதாவது 2, 3, 4, 5, 6,7 ஆகிய ஆறு மண்டலங்களும் ஆறு மஹரிஷிகளின் குடும்பத்தினர் பாடியவை/ கண்டுபிடித்தவை.

 

வியாசர் பிரித்த மண்டலங்களின் உட்பிரிவுகள் அனுவாகம், சூக்தம்.

 

அஷ்டக முறையில் உட்பிரிவுகள்:- அத்யாயம், வர்கம்

 

ஒவ்வொரு வர்கமும், ஒரு (Lesson) பாடத்துக்கு வசதியாக இருப்பதால் இந்த அஷ்டக முறை வைதீகர்களிடையே பிரசித்தம்.

 

பத்து மண்டல அமைப்பு

முதல் மண்டலம்- 24 அனுவாகங்கள்

இரண்டாவது மண்டலம் – 4 அனுவாகங்கள்

மூன்றாவது, நாலாவது மண்டலம் – 5 அனுவாகங்கள்

5,6, 7 ஆவது மண்டலம் – 6 அனுவாகங்கள்

எட்டாவது மண்டலம் – 10 அனுவாகங்கள்

ஒன்பதாவது மண்டலம் -7 அனுவாகங்கள்

பத்தாவது மண்டலம் – 12 அனுவாகங்கள்

 

அனுவாகங்களின் உட்பிரிவு சூக்தம்; ஒவ்வொரு சூக்தத்துக்கும் ஒரு ரிஷி, தேவதை, சந்தஸ் உண்டு. இது தெரிந்தால்தான் முழுப் பொருளும் விளங்கும்.

 

6 குடும்ப மண்டல ரிஷிகள்

இரண்டாவது- க்ருத்சமட

மூன்றாவது- விஸ்வாமித்ர

நாலாவது- வாமதேவ

ஐந்தாவது- அத்ரி

ஆறாவது- பரத்வாஜ

ஏழ்ழாவது- வசிஷ்ட

 

இந்தக் குடும்ப மண்டலங்களில் இன்னொரு அற்புதமும் உண்டு. முதல் மந்திரம் அக்னி தேவனைப் பற்றியது.

 

உலக எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ‘அ’

ரிக் வேதத்தின் முதல் துதியும் அ- வில்தான் துவங்கும் இதனால்தான் வள்ளுவர் ‘அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார். பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் ‘அ’ என்று கிருஷ்ணன் சொன்னார்.

 

அக்னிக்கு அடுத்தபடியாக இந்திரன்  துதிகள் வரும்.

பின்னர், மற்ற தெய்வங்களின் துதிகள் வரும்

 

இது மட்டுமல்ல; முந்தைய துதிகளை உடைய அடுத்த துதியில் மந்திரங்கள் குறைந்து கொண்டே வரும் (ஆனால் சில விதி விலக்குகள் உண்டு)

 

எட்டாவது மண்டலத்தில் இப்படி ஒரு வரிசை

முறையைக் காண முடியாவிட்டாலும் கண்வர் குடும்பத்தினரின் மந்திரங்களை அதிகம் காணலாம்.

 

ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானத்தைப் பற்றியவை.

 

இரண்டு முதல் ஏழு மண்டலம் வரை உள்ள ரிஷிகளே இவைகளைப் பாடியுள்ளனர். ஆனால் வியாசர் இதிலும் ஒரு அழகைப் புகுத்தியுள்ளார்.

1-67 வரையுள்ள மந்திரங்கள்/சூக்தங்கள் காயத்ரி அணியிலும்

68-86 வரையுள்ளவை ஜகதி அணியிலும்

87-97 வரையுள்ளவை த்ருஷ்டுப் அணியிலும்

98-144 வரையுள்ளவை மற்ற அணிகளிலும் உள்ளன.

 

முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் இளைய ரிஷிகளின் தொகுப்பாகும். பத்தாவது மண்டலத்திலும் வியாசர் ஒரு ஒழுங்கு முறையை வைத்துள்ளார். இறங்கு வரிசையில்— மந்திரங்கள் குறைந்து–கொண்டே வரும்.

2-7 வரையுள்ள 6 மண்டலங்களும் பழமையானவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் அதற்குள் முதல் எது? கடைசி எது? என்பதில் கருத்து வேறுபாடு உளது.

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் ஒட்டுப்போட்டுள்ள 11 சூக்தங்கள் ‘வாலகில்ய’ சூக்தம் எனப்படும். இவை பிற் சேர்க்கை என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்வர். சாயனர், இதற்கு உரை எழுதாவிடினும் காத்யாயனரின் அனுக்ரமணியில் (இண்டெக்ஸ் INDEX) இவை கணக்கிடப்பட்டுள்ளன.

 

–தொடரும்

Asuras and Rakshasas: Foreigners’ Interpretation!! (Post no.4309)

Written by London Swaminathan

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 10-36 am

 

 

Post No. 4309

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Foreigners who came to rule India and destroy Hinduism spread a big lie that Asuras and Rakshasas were aborigines and they opposed the invaders because they tried to encroach their lands. But any Hindu can see this is nonsense from the following facts:

 

1.The Brahmana literature and the epic literature clearly say that the ASURAS and DEVAS were all born to the same parents.

2.The ‘Da Da Da’ Upanishad story clearly show that they went to the same gods to get advice.

Da……………Da……………Da Story – Tamil and Vedas

Da……………Da……………Da Story

19 Feb 2014 – Da….Da: The Thunder Said”- is the most popular story in the Upanishads. Most of you know it already. In our own times, Kanchi Paramacharya …

 

3.Ravana and other Rakshas were great Siva devotees/Bhaktas. They got boons from Brahma or Siva.

  1. Krishna’s son Pradyumna married a Rakshasa girl; Arjuna married a Rakshasa girl; Bhima married Hidimba, a Rakshasa woman.

 

  1. From Pasmasura to xyz everyone prayed, and did the penance in the same way.
  2. Even in the churning of the ocean anecdote they were also called to churn the ocean
  3. In the Rig Veda gods Agni, Varuna and Indra were called Asuras. Then it meant Supreme spirit and person of great strength. Later they denoted exactly opposite meaning.

But why did the Devas fight against the Asuras? Because they were immoral, lawless criminals. Like we have filled all our jails with criminals, Devas punished all the criminals. Dasyus were described as Dravidians by cunning, divisive foreigners, but second century BCE poet Kalidasa used it for thieves.

Dasyus, Asuras and Rakshas were born to same parents, but they did not care for the law or rule of the land. Like we have murderers, rapists robbers, thieves, money launderers, cheats, frauds in our society, Vedic society had Asuras, Rakshasas and Dasyus. They raided the civilised community in the night time and killed the people, carried their women and cattle. They obstructed the Yagas and Yajnas. Throughout Hindu literature they were described as cannibals. They ate human beings like the non vegetarians eat chicken and mutton. This is a big difference between the Devas and Rakshasas. All these things are crystal clear in Mahabharata, Ramayana and Brahmana literature.

 

Foreigners knew that majority of the Hindus don’t read the Hindu scriptures and so they easily misled the laymen. Hindu scriptures are huge in volume, incomparable with any religious literature in the world. And the wonder of the wonders, all the Brahmanas and Vedic samhitas were written before the old testament of the Bible, Tamil literature, Greek literature and latin literature.

 

Since Muslims ruled India for 700 years and Christians ruled for 300 years, intellectuals kept quiet or their voice was not heard by many. Foreign “scholars” were paid coolies and they had to support the government or their pay masters. There is a proof for this. No where in the world so many people were studying another religion just to criticize it. If there are equal number of scholars studying and critically analysing another holy book then we may consider them ‘scholars’.

 

Now we shall look at the actual proof from our literature which no foreigner told us:-

Rakshas were called night walkers; no honest person  or a warrior will attack anyone in the night. Only cowards or criminals do it.

They were described as taking different forms or shapes during the attacks. That means they wore masks or came in different disguises. No honest person would do it.

Born from Prajapati!

 

According to Taittiriya Brahmana, the breath (asu) of Prajapati became alive and with that breath he created the Asuras. Satapata Brahmana also says that Asuras were created from the lower breath of Prajapati.

In another part of the same book, it is said that Prajapati became pregnant and he created the Asuras from his abdomen.

Taittiria Aranyaka says that Prajapati created Gods, Men, Fathers, Gandharvas and Apsarasses from water and that the Asuras, Rakshasas, Pisachas sprang from the drops which were split.

Manu says they were created by Prajapati.

Puranas says that Asuras were created from the groin of Brahmaa/Prajapati.

The word Asura has been used for long as a general name of the ‘enemies of the gods’, including the Daityas and Danavas and other descendants of Kasyapa, but not including the Rakshasas, who descended from Pulastya. Both of them were Brahmins and Vedic seers!

Asura has another explanation; ‘a’ is taken as the negative prefix, and a+sura signifies ‘not a god’; sura means god.

Another meaning for Asura is those who are not fond of Sura (liquor). There are over 40 theories about their origin and meaning.

RAKSHASAS

Goblins or evil spirits are called Rakshas. There are categories in it: Yakshas, not so bad, and Danavas/Rakshas and Pisachas, who occupy crematoriums and cemeteries. Chief of the Rakshas was Ravana, who descended from Pulastya Maharishi.

There are more explanations:

Vishnu Purana says that they were descendants of Kashyapa Maharishi and Khasa, daughter of Daksha, through their son Rakshas.

 

Ramayana says they were created by Brahma, who were appointed as the guardians of water .Raksha means ‘protect’ in Sanskrit. According to Ramayana they were in different forms and shapes, most of them very crude.

 

Rakshasas had many epithets

Hanushas= killers or hurters

Ishti pachas= stealers of offerings

Sandhya balas= strong in twilight

Naktan charas, nicicharas= night walkers

Kiilaalapas, rakta pas= blood drinkers

Dandasukas = biters

Malina- mukhas = black faced

Karburaas=  users of rude words

 

— SUBHAM—

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் எங்கே? (Post No.4308)

 

 
Written by S.NAGARAJAN

 

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 7–47 am

 

 

Post No. 4308

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

ஞானபூமி பாரதம்

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் – எங்கே?

 

ச.நாகராஜன்

 

1

நல்ல கவிதை சாகா வரம் பெற்றது.

காலத்தை வென்றது தான் கவிதை.

 

அனவஹித: கிமஷக்தோ

விபுதைரம்யர்தித: கிமதிரஸிக: I

சர்வகஷோபி காலம்

கிரயதி சூக்தானி ந கவீனாம் II

 

வல்லபதேவர் என்ற கவிஞரால் ஆர்யா சந்தத்தில் இயற்றப்பட்ட கவிதை இது.

பெரிய உண்மையைக் கூறும் இந்தக் கவிதையின் பொருள் இது தான்:

 

 

காலம் தன் கவனக்குறைவினால் வலிமை இழந்து விட்டதோ!
அல்லது நேர்த்தியானவற்றைப் மிகவும் போற்றுவதனால், அறிஞர்களால் அதற்கு வேண்டுகோள் விடப்பட்டதா?

அனைத்தையும் அழிப்பது தான் காலம் என்றாலும் கூட, அது கவிஞர்களின் நல்ல கவிதைகளைத் திரை போட்டு மறைப்பதில்லை (ஒளித்து விடுவதில்லை)

 

இதன் ஆங்கில் மொழியாக்கம்:

 

Is Time powerless by oversight? Is it, as a very good appreciator of excellencea, he has been requested by the wise? Time, though a destroyer of every thing, does not screen (conceal) the good sayings of poets.

Translation by A.A.Ramanathan

 

உண்மை தான்; நல்ல கவிதைகளை காலம் திரை போட்டு மறைப்பதில்லை.நல்ல கவிதைகளை காலம் சிரஞ்சீவித்வம் கொண்டதாக ஆக்கி விடுகிறது.

காலமே, உனக்கு நமஸ்காரம்!

 

2

இப்போது ஒரு கேள்வி எழுகிறது.

காலம் அழிக்கவில்லை என்றால் நமது நாட்டில் தோன்றிய கவிதைகள் எங்கே?

முதலில் எவ்வளவு கவிதைகள் தோன்றியிருக்கலாம் என்பதை ஒரு உத்தேச மதிப்பீடு செய்து பார்க்கலாம்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முறபட்டது வேதகாலம்.

(ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று இது : ஞான தீபம் மூன்றாம் பாகம்)

 

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதத்தில் மன்னரின் கதைகள் பல உண்டு.

 

ஆக மன்னர் காலம் அப்போதிலிருந்தே தொடங்கி விட்டது.

ஒரு தலைமுறை என்பது சுமாராக முப்பது வருடம் என்று வைத்துக் கொண்டு, ஒரு மன்னரின் அரசாட்சி காலம் உத்தேசமாக முப்பது வருடங்கள் என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் எட்டாயிரம் ஆண்டுகளில் சுமார் 266 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.

 

பாரதத்தில் 56 தேசங்கள் உண்டு.

 

ஆக 56 தேசங்களில் 56 X 266  = 12896 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வெண்டும்.

 

ஒரு மன்னனின் அரசவையில் முப்பதாண்டு காலத்தில் பத்து கவிஞர்கள் இருந்தனர் என்று வைத்துக் கொண்டால் 1,28,960 கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் முப்பதாண்டு காலத்தில் வெறும் பத்து கவிதைகளே புனைந்திருந்தனர் என்று வைத்துக் கொண்டால் வரும் எண்ணிக்கை 12, 89,600.

 

பத்து தானா, சே, மோசமான மதிப்பீடு, ஆயிரக்கணக்கில் கவிதைகள் இயற்றியுள்ள புலவர்களை நமக்குத் தெரியாதா என்று கேட்டு இதை நூறு கவிதைகள் என்று வைத்துக் கொண்டால் வருவது 1,28,96,000.

 

பத்தாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணம், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட் மஹா பாரதம், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், காளிதாஸன், பவபூதி, தண்டி, ஹர்ஷன் போன்றோர் இயற்றிய காவியங்கள் என்ற நீண்ட பட்டியலை கணக்கில் எடுத்துப் பார்த்தால் சுலபமாக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி என்ற எண்ணிக்கையை நமது கவிதைகள் தாண்டி விடுகின்றன!

 

நூறு கோடி அற்புதமான கவிதைகள்!

 

ஒரு கவிதையிலேயே உயிரைக் கொடுத்து எழுத்துக்கு அக்ஷர லட்சம் பொன் கொடுத்த நாட்டில் ஒரு பில்லியன் – நூறு கோடிக் கவிதைகள் என்றால், அடடா உள்ளம் பூரிக்கிறது.

 

என்ன ஒரு அறிவு!

என்ன ஒரு அழகு!

என்ன ஒரு சொல்வளம்!

என்ன ஒரு கருத்து வளம்!

என்ன ஒரு கலை வளம்!

 

 

 

3

அந்த நூறு கோடிக் கவிதைகள் எங்கே?

காலம் அவற்றை ஒளிக்காது, மறைக்காது,அழிக்காது என்றால் இன்று அவை எங்கே?

முகமதியரின் முட்டாள்தனமான, கொடூரமான, அழிவுக் கலாசாரத்தினால் பல நூல்கள் அழிந்து பட்டன. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்த நூல்கள் பல நாடுகளுக்கும் பரவி இருந்தன. ஆகவே அவற்றில் அழிந்தது போக பலவும் மீதம் இருக்க வேண்டுமல்லவா?

 

அவை எங்கே?

 

இருக்கின்றன! அவை இருக்கின்றன!

இதில் அந்தக் கால மொழியாகப் பரவி இருந்த சம்ஸ்கிருத நூல்களை மட்டும் பட்டியலிடப் புகுந்து தன் வாழ்நாளிம் பெரும் பகுதியை அர்ப்பணித்த டாக்டர் வி.ராகவன் நூல்களின் பட்டியல் அடங்கிய ஒரு கலைக்களஞ்சிய தொகுதியையே வெளியிட்டுள்ளார்.

 

அவருக்கு நமது உளங்கனிந்த நமஸ்காரம்.

நான்கு லட்சம் சுவடிகள் பிரிக்கப்படாமல் ஆங்காங்கு உள்ளன.

அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக பல ஆயிர்ம் நூல்கள் உள்ளன.

 

சரஸ்வதி மஹால், புனே பண்டார்கர் நிலையம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நிலையங்கள் பணமின்றித் தவித்து இவற்றை அரும்பாடு பட்டுப் பாதுகாத்து வருகின்றன.

 

நூறு கோடிக் கவிதைகள் என்றால் உலகின் மொத்த அறிவுக் களஞ்சியம் என்று பொருள்.

 

வளமார்ந்த ஒரு உலக சமுதாயத்தின் உன்னதமான எண்ணங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்புகளின்

எண்ணிக்கை என்று பொருள்.

 

எண்ணவும் (TO COUNT) இனிக்கிறது.

எண்ணவும் (TO THINK) இருக்கிறது.

பாரத அறிவுச் செல்வத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு திருக்கூட்டமாக மாறி ஏதேனும் செய்ய வேண்டாமா?

செய்ய வேண்டும்.

 

 

4

ஒரு சில கவிதைகளைப் படித்து மகிழ்ந்து சில கட்டுரைகளைப் படைத்த எனக்கே இப்படி ஒரு ஆதங்கம் என்றால் அறிஞர்களுக்கும் என்னைப் போன்ற இதர ஆர்வலர்களுக்கும் என்ன ஒரு உத்வேகம் எழ வேண்டும்.

இருக்கின்றவற்றைப் பாதுகாப்போம்.

 

இருப்பதைப் பரப்புவோம்.

 

இல்லாததைத் தேடுவோம்.

 

தேடிக் கண்டனவற்றைப் பதிப்பிப்போம்.

 

பதிக்க முன்வருவோருக்கு உதவி செய்வோம்.

 

எந்த மொழியில் இருந்தாலும் நமது கவிஞர்களின் கவிதைகளை – நூற்றொரு கோடியாக இருந்தாலும் அனைத்தையும் -மீட்டெடுப்போம்.

 

 

புவன ச்ரேஷ்டம் பாரதம்; நல்லறிவின் தலைமையகம் பாரதம்.

புனர் நிர்மாணம் செய்து பழைய தலைமையை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டுவோம்!

***

 

Gods are Truth, Men are Untruth: Satapata Brahmana! (Post No.4307)

Written by London Swaminathan

 

Date:16 October 2017

 

Time uploaded in London- 15-12

 

 

Post No. 4307

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

India is, probably, the only country in the world which has Truth as its motto. Our national emblem contains the Upanishad Mantra ‘Truth alone triumphs’, i.e. Satyameva Jayate. Tamil Nadu government translated it into Tamil and keeps it as its emblem. India stands for Truth. And the natural law is Truth wins; So India can never be defeated. And that is the first sentence taught to all the Vedic students:-

 

As soon as a little boy is enrolled in the Vedic school, the first lesson he learns is Satyam Vada, i.e. Speak the Truth.

 

LOVERS OF TRUTH: AGNI AND VARUNA

Vedic gods Varuna and Agni are frequently represented as lovers of truth:

“Verily there is one law which the god so keep, namely, the truth. It is through this that their conquest, their glory is unassailable; and so forsooth is his conquest, his glory unassailable whosoever, knowing this speaks the truth”- Satapata Brahmana 3-4-2-8

 

“He ties the piece of gold to the (nameless or ring) finger. Twofold indeed is this universe,– there is no third—the truth and the untruth; the gods are the truth and men are the untruth. And gold having sprung from Agni’s seed, he ties the gold to this finger in order that he may touch the twigs of the Soma with the truth, that he may handle this Soma by means of the truth –Sat. Brah. 3-3-2-2

 

Invocatory and oblative mantras to Truth (satya) are found in the Taittiriya Brahmana 3-12-3-5, when the rice and butter are offered. This word Satya is full of meaning. The following anecdote concerning Aruna Upavesi, is quoted in proof of the truthful character of the Vedic Hindus. It undoubtedly proves the high value they gave for truth:-

“Attendance on that consecrated fire means speaking the truth, as if he sprinkled that lighted fire with ghee; for even so does he kindle it; and ever the more increases his own vital energy, and day by day does he become better.

and whosoever speaks the untruth acts as if he sprinkled that lighted fire with water; for even so does he enfeeble it; and even the less becomes his own vital energy, and day by day does he become more wicked. Let him therefore speak nothing but the truth. Now the kinsmen spake unto Aruna Upavesi, “Thou art advanced in years; establish thou the two fires!”

He replied, “Speak ye not thus!

Be thou a restrainer of speech; for he who has established the fires must not speak an untruth; let him rather speak not at all, but let him not speak an untruth. Worship above all is Truthfulness”- Sat. Brah 2-2-2-19/20

 

Satyakama Jabala

Satyakama Jabala is another famous Upanishad story. A little boy went to the teacher to learn Vedas. When he was not able to provide his family/clan details, he told the teacher what his mother told him. Immediately the teacher takes him in saying that he spoke truth and he must belong to a higher caste.

Satya has two aspects: Integrity and Sat, the ultimate reality.

The following, according to the Yajur Veda, is the preparation for Satya (Truth in the ultimate sense):-

By self dedication (vrata) one obtains consecration (Diikshaa)

by consecration one obtains grace (dakshinaa)

By grace one obtains reverence (sraddhaa)

by reverence is Truth (satya) obtained – YV.  Vs19-30

 

All Vedic gods and goddesses are ‘furtherers of Rita and represent satya/truth.

In the very first hymn of the Rig Veda Agni is spoken of as Guradian of Rita (eternal order) and as satya(truth). Indra too is described as Satya and equated with Rita.

 

Even the sun and the moon and the earth are in the orbit due to truth and eternal order:-

 

How come earth does not fall?

By Truth is earth sustained

and by the sun are the heavens

By Rita the Adityas stand

and Soma is set in the sky  –RV 10-85

 

Atharva veda also has a mantra on truth and order:

Truth, Eternal Order that is great and stern

Consecration, Austerity, Prayer and Ritual,

these uphold the earth.

May she, Queen of what has been and will be

make a wide world for us—AV12-1

–subham–

தேவர்கள் ஏன் பூமியை விட்டு ஓடினர்? சங்கரர் விளக்கம் (Post No4306)

Written by London Swaminathan

 

Date:16 October 2017

 

Time uploaded in London- 11-10 am

 

 

Post No. 4306

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூமியிலுள்ள மக்கள் ஒழுக்கம் குன்றி ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கத் துவங்கியவுடன், தேவர்கள் பூமியை விட்டு நீங்கி விட்டதாக ஆதி சங்கரர் கூறுகிறார் (காண்க: பக்கம் 12, யஜூர் வேதக் கதைகள், எம்.ஆர். ஜம்புநாதன்). இதற்கான ஆதாரம் பிராமணங்களில் உள்ளது.

 

சதபத பிராமணம் என்னும் நூல் கூறுகிறது:

“மனிதர்களும் தேவர்களும் ஒரே இடத்தில் இருந்து உண்டு, அருந்தி வாழ்ந்தனர்; அவர்கள் எல்லோரும் இந்தப் புவியுலகின் குடிமக்களே; ஆனால் மனிதர்கள் என்னிடம் அது இல்லை, இது இல்லை என்று அவைகளைக்கேட்டு நச்சரிக்கத் துவங்கினர். உடனே தேவர்கள், மறைந்து விட்டனர்; நான் அவர்களை வெறுக்கவும் கூடாது; அவர்களுக்குத் தீங்கும் நினைக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டே தேவர்கள் மறைந்துவிட்டனர்.(சதபத–3-2-2-26)

 

 

“தேவர்கள் தவம் செய்து தெய்வீக நிலையை எய்தினர்” என்று தைத்ரீய பிராமணம் சொல்லும் (12-3-1)

 

“தேவர்களுக்கு மனிதனின் உள்ளக் கிடக்கை தெரியும். ஒருவன் யாக யக்ஞங்களைச் செய்யப்போகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்துவிடுவர்; அவர்களுகு மனிதனின் மன நிலை தெரியும்”.(சதபத—2-1-1-7)

 

‘ரிஷிகள் மறை மொழிகளை உதிர்ப்பார்கள்’; இதை அவர்களே பாடல்களில் சொல்லி இருக்கிறார்கள் கடவுளுக்குப் பிடித்தது மறை மொழி (ரஹசிய மொழி) என்று ரிக் வேதத்திலும், பிராமணங்களிலும், பல இடங்களில் திரும்பச் திரும்பச் சொல்கின்றனர்.

இது புரியாத காமாலைக் கண்ணர்களும், அரை வேக்காட்டு வெள்ளைத் தோல் அறிஞர்களும், அவர்களைப் பின்பற்றும் மார்கஸீய வாந்திகளும், வேதங்கள்- குறிப்பாக பிராமணங்கள் உளறல்கள் என்று எழுதிவைத்தனர். அதாவது அவர்களுடைய சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்களை சிறு பிள்ளைத்தன மான பேச்சு என்று எழுதிவைத்தனர்

 

ஒரு சிறிய எடுத்துக் காட்டு மட்டும் தருகிறேன்:

 

நெருப்பை, தீயை, அக்கினியை திருவள்ளுவர் திருக்குறளில் (306) “சேர்ந்தாரைக்கொல்லி” என்பார். அதாவது நெருப்பு யாரை நண்பராக்கிக் கொள்கிறதோ அந்த நண்பரையே கொன்று விடுவான்; இது சம்ஸ்கிருதச் சொல்லின் மொழி பெயர்ப்பு (வள்ளுவன் மாபெரும் சம்ஸ்கிருத அறிஞன் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க)

 

வேதத்தில் இதையே அக்னி பகவான் ‘பெற்றோரைக் கொல்பவன்’ என்று

‘போற்றுகின்றனர்”. வெள்ளைக்காரர்களில் திருடர்களானவர்கள் ‘பாருங்கள் பெற்றோரைக் கொல்பவரை இந்துக்கள் வழிபடுகின்றனர்’ என்பர். அவர்களில்   நல்லெண்ணம் படைத்த சிலர், ‘ஆஹா என்ன அற்புதமான கற்பனை; என்னே அருமையான உவமை’ என்றெல்லாம் புகழ்வர்.

 

அதாவது காடுகளில் இரண்டு மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தீ ஏற்பட்டால். அந்தத் தீ தோன்றிய இரண்டு மரங்களை (பெற்றோர்கள்) அது அழிப்பதுடன் அது காட்டையே அழித்துவிடும் இதைத்தான் கவிதை நயம்பட வேத கால ரிஷிகள் பாடினர். அரணிக் கட்டையை வைத்து தீ உண்டாக்கி யாக யக்ஞங்களைச் செய்வது அக்கால வழக்கம்; அதிலும் ஒரு கட்டையை ஆண் என்றும் மற்றொரு கட்டையை பெண் என்றும் சொல்லுவர். ஆக, ‘பெற்றோரைக் கொல்லி’ என்பதும் ‘’சேர்ந்தாரைக் கொல்லி’’ என்பதும் கவிதை நயம் சொட்டும் கற்பனை ஆகும். இது போல நிறைய விஷயங்கள் வேத கால இலக்கியங்களில் உள.

 

அது புரியாதோர் அல்லது வேண்டுமென்றே புரியாதமாதிரி நடித்தவர்கள் வேதங்களை சிறு பிள்ளைப் (Childish, Silly) பேச்சு என்று சொன்னார்கள்; முன்னரே “க” என்ற எழுத்து பற்றி வேத கால ரிஷிகள் பாடிய சிலேடைக் கவிதை புரியாமல் வெள்ளைக்காரர்கள் திரு திரு என்று திருட்டு முழி முழித்தது பற்றி எழுதினேன் ( சம்ஸ்கிருதத்தில் ‘க’ என்றால் பிரம்மா; ‘க’ என்றால் யார்?) இந்தச் சிலேடைப் பொருள் விளங்காதவர்கள், கடவுள் பெயரே தெரியாமல் யார் யார் என்று கேட்டு கவிதை பாடியுள்ளனர் என்று எழுதினர். எந்த ஒரு விஷயத்தையும் விரும்பாவிட்டால் திரித்துக் கூற முடியும் என்பதை திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நாம் கண்டு இருக்கிறோம். மேலும் இவர்களில் எவனும் யோக்கியன் இல்லை என்பது, அவர்கள் வேறு எந்த சமயப் புத்தகத்தையும் இப்படி ஆராயவுமில்லைக், குறை கூறவும் இல்லை என்பதில் இருந்தே தெரியும்.

-சுபம்–

 

விதுரர் கூறும் விதுர நீதி – 5

Written by S.NAGARAJAN

 

 

Date:16 October 2017

 

Time uploaded in London- 7–29 am

 

 

Post No. 4305

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

 

மஹாபாரதச் செல்வம்

விதுரர் கூறும் விதுர நீதி – 5

 

ச.நாகராஜன்

 

7

பெண்களிடம் அதிக மோகம்

சூதாட்டம்

வேட்டையாடுதல்

குடி

கடுஞ்சொல்

கொடிய தண்டனை

வீண் செலவு

இந்த ஏழையும் அரசன் விலக்க வேண்டும்.

(மற்றவர்களும் இதை விலக்க வேண்டும் என்பது உள்ளடங்கிய பொருள்)

8
வலியச் சென்று பிராமணர்களைத் திட்டுதல்,வெறுத்தல்

பிராமணர்களால் விரோதிக்கப்படுதல்

பிராமணர்களின் பொருளைக் கவர்தல்

பிராமணர்களைக் கொல்ல விரும்புதல்

பிராமணர்களைத் திட்டுவதில் மகிழ்ச்சி அடைதல்

பிராமணர்களைப் புகழும் போது துக்கமடைதல்

செய்ய வேண்டிய காரியங்களில் அவர்களை நினைக்காமல் இருத்தல்

அவர்கள் யாசிக்கும் போது பொறாமை அடைதல்

ஆகிய் எட்டும் ஒரு மனிதன் அடையும் நரகத்திற்கு முன் அறிகுறிகள்.

அறிவுடைய மனிதன் இந்த எட்டு வித தோஷங்களையும் நீக்க வேண்டும்.

*

 

நண்பர்களுடைய சேர்க்கை

அதிகமான பண வரவு

தனது பிள்ளை தன்னைத் தழுவிக் கொள்ளுதல்

தம்பதிகள் ஒற்றுமையுடன் இன்பம் அனுபவித்தல்

சரியான சமயத்தில் பிரியமான சல்லாபம்

தன்னுடைய கூட்டத்தார்களுடைய மேன்மை

நினைத்த பொருளை அடைதல்

ஜன சமூகத்தில் மரியாதை

இந்த எட்டும் மகிழ்ச்சிக்கு வெண்ணெய் போன்றவனவாகக் காணப்படுகின்றன.

*

அறிவு

நற்குடிப் பிறப்பு

அடக்கம்

கல்வி

பாராக்கிரமம்

மிதமான வார்த்தை

சக்திக்குத் தக்கபடி தானம்

செய்ந்நன்றி அறிதல்

ஆகிய எட்டும் குணங்களும் மனிதனை பிரகாசிக்கச் செய்கின்றன.

 

9

 

ஒன்பது துவாரங்களை உடையதும்

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் தூணாக உடையதும்

சப்தம் முதலிய ஐந்து சாட்சிகளுடன் கூடியதும்

ஜீவன் வசிக்கின்றதுமான இந்த உடல் ஆகிய வீட்டின் தத்துவத்தை எவன் ஒருவன் அறிகிறானோ

அவனே சிறந்த அறிவாளி.

 

10

 

பத்துப் பேர்கள் தர்மத்தை அறிகிறதில்லை.

ஓ! திருதாக்ஷ்டிரனே! அவர்கள் யார் என்பதைத் தெர்நிது கொள்ளும்.

கள் குடித்தவன்

அஜாக்கிரதை உடையவன்

பைத்தியம் பிடித்தவன்

களைப்புற்றவன்

கோபக்காரன்

பசியுள்ளவன்

அவசரப்படுகின்றவன்

கஞ்சன்

பயங்கொண்டவன்

காமவெறி பிடித்தவன்

ஆகிய பத்து பேரும் தர்மத்தை அறியார். ஆகையால் பண்டிதனானவன் இந்த விஷயங்களில் விழக் கூடாது.

 

****

WHY GODS LEFT EARTH ? ADI SANKARA EXPLAINS! (Post No.4304)

Written by London Swaminathan

 

Date:15 October 2017

 

Time uploaded in London-16-26

 

 

Post No. 4304

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Adi Shankara, one of the great philosophers, says that gods (Devas) left the earth after becoming fed up with the demands of the human beings. They lost their character and made too many demands and so the Devas vacated the earth, says Shankara.

 

In the Taiitiriya Brahmana we read that “ the gods obtained their divine rank by austerity” (12-3-1)

In the Satapata Brahmana (3-2-6-26) we read that Gods left human beings on earth and went away:

“Both gods and men and fathers drink together. This is their symposium. Formerly they drank together visibly; now they do so unseen”.

Gods and men, together, were both originally components of this world. Whatever men had not, they asked from the gods, saying,

We have not This; let us have it. From the dislike of this solicitation, the gods disappeared saying, each of them,

‘Let me not hurt them, let me not be hateful’- Satapata Br.2-3-4-4

 

GODS KNOW THE MIND OF MAN

“ The gods know the intentions of a man. They are aware that he contemplates the performance of this rite, and will make his offering in the morning; and consequently, they all come to his house and abide there. The gods know the mind of man”.

–Satapata Br. 2-1-1-7

 

“The gods are secreted from men and secret also is what is enclosed on every side; this is why they enclose it on every side. Not every one may enter it, but only a Brahmin, a Kshatria or a Vaisya, for these are able to sacrifice. Let him not commune with everyone; for he who is consecrated draws nigh to the gods, and becomes one of the deities. Now the gods do not commune with everyone, but only with a Brahmin, a Rajanya (kshatria) or a Vaisya (businessman), for these are able to sacrifice. An intermediary is necessary to talk with a Sudra—Sata. Br. 3-1-1-8/10

 

“He who sacrifices, doubtless sacrifices with a desire that he also may also obtain a place in the world of the gods. That sacrifice of his then goes forth towards the world of the gods”- 1-9-3-12

MYSTIC LANGUAGE

Half baked, jaundice eyed, biased and stupid foreigners tried to find fault with every Vedic mantra. Those idiots were so cunning that they wanted to create confusion and doubts in the minds of Hindus and destroy Hinduism. Every religious scripture has lot of controversial, absurd and idiotic sayings ( if you look at it with coloured glasses and biased mind) and these white skinned scholars and their  friends– Marxist stooges– never touched any religious book in the world except Hindu scriptures; they never criticised anything in those books; this shows their motives. This shows their true colours. They were paid coolies!

 

One must be careful when one reads the English translations of the Vedas or Brahmanas by those biased minds. Some key words are translated according to their whims and fancies. If you read the 41 interpretations of ASURA by 41 idiots you will understand how stupid they were. If you read the book Minor Vedic Deities by Joshi, you will know how they differ in their interpretation; he beautifully summarises in the very first paragraph who said what. It is like the 53  different interpretations of Indus Valley script!!!!

 

Above all these things Vedic seers say they love mystic language. If you take the literal meaning you will laugh at them. And they will have the last laugh!

“The gods love the mystic” is a phrase that occurs in several places in the Rig Veda, the oldest book in the world and most of the Brahmanas.

 

Here is one example:

Bhaga, Pushan are minor Vedic deities.

Pushan lost his teeth; Bhaga lost his eyes!

 

“They took it round to Bhaga, who sat on the south side. Bhaga (Savitri) looked at it. It burnt out his eyes. And thus it came to pass. Hence they say Bhaga is blind. They said—- take it to Pushan! They accordingly took it round to Pushan. Pushan tasted it. It knocked out his teeth. And thus it came to pass. Hence they say Pushan is toothless – Satapata Brahmana 1-7-4-6/7

 

Gods have cars; Asuras don’t have!

“The gods drove about on wheels (cars, carts)and the Asuras stayed at home”

 

“At first the gods were all alike, all good. Of them being all alike, all good, three desired,

May we be superior! Agni, Indra and Surya.

They went on praising and toiling… they became superior, even as they are now superior – Sata. Br. 5-4-1-2

Probably the Vedic seers tell us that whoever works hard, whoever pursues something will achieve it.

Genius is one percent inspiration and 99 percent perspiration—they say!

 

—subham–

 

வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!(Post No.4303)

Written by London Swaminathan

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 10-40 am

 

 

Post No. 4303

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த வேனன் கதையைப் படிக்கும் போதெல்லாம் ‘வீண்’ என்ற சொல்லே இவன் பெயரில் இருந்துதான் வந்ததோ என்று எண்ணினேன்.

 

 

“ஏண்டா வீண் வம்பு பேசுகிறாய்? ஏண்டா இப்படி வீணாப் போற” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

 

பழைய ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் பார்த்த போது,

வீண்= பயனின்மை

என்று ஒரே சொல்லில் முடித்துவிட்டனர்.

 

சங்க இலக்கிய சொற்களஞ்சியத்தைப் பார்த்தபோது, வீண் என்ற சொல்லோ, வீணை என்ற சொல்லோ இல்லை!

 

திருக்குறள் சொல்லடைவைப் பார்த்தபோதும் ‘வீண்’ என்ற சொல்லே இல்லை. இதை எல்லாம் பார்தவுடன் என் ஊகம் சரிதான் என்று தோன்றியது. மேலும் ‘வீண்’ பற்றி ஆராய்ச்சி செய்தேன். கழகப் பழமொழி அகரவரிசையில் ‘வீண்’ என்ற சொல்லில் பிறந்த சில பழமொழிகள் இருந்தன. அதில் வீண் என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த “வீணன் (வெட்டிப்பயல், துட்டன்)” என்ற சொல்லைக் கண்டேன்.

சரிதான்! நான் ஊகித்தது நூற்றுக்கு நூறு சரியே என்று சொல்லியது போல இருந்தது “வீணன்” என்ற சொல்.

 

அதாவது, வீண் என்ற சொல் திருவள்ளுவர் காலத்திலோ, அதற்கு முந்தைய சங்க காலத்திலோ  தமிழில் இல்லை! அந்தச் சொல்

தோன்றக் காரணமான வீணன்/ வேணன் என்னும் துட்டன் பற்றிய கதை சுவையான கதை.

 

அது என்ன கதை?

விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. வேனன் என்ற மன்னன் மிகவும் கொடியவன்; துஷ்டன். ஹிரண்யகசிபு போல எல்லா சமயச் சடங்குகளுக்கும் தடை போட்டான். ரிஷி முனிவர்களுக்குக் கோபம் வந்தது; அவனைக் கொன்றுவிட்டனர். ஆனால் அது “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கியது போல” ஆயிற்று. அரசன் இல்லாத நாட்டில் “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற காட்டு நீதி நிலவியது.

 

அதை சம்ஸ்கிருதத்தில் அ+ராஜகம்= அராஜகம்= அரசன் இல்லாத நிலை என்பர். இன்று கூட தமிழிலும் அராஜகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த சொல்; எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரயோகிக்கும் சொல்!

 

அராஜக நிலையை மாற்ற ரிஷி முனிவர்கள் மஹாநாடு கூட்டினர்; சரி வேனனின் இடது கையைக் கடைந்து ஒரு அரசனை உருவாக்குவோம் என்று முயன்றனர். ஒரு கோரமான கருப்பு பூதம் வந்தது; அடச் சீ! நீ போ!! என்று விரட்டி விட்டனர். பின்னர் வேனன் சடலத்தில் வலது கையைக் கடைந்தனர். பிருது என்ற அழகிய ஆண் மகன் வந்தான். அவனை அரசனாக நியமித்தனர். ஆனால் அராஜக நிலையால் யாரும் வேலைக்குப் போகவில்லை; விவசாயம் நடக்கவில்லை; உடனே பிருது பூமியை மிரட்டினான். அது பசு வடிவம் கொண்டு பிரம்ம லோகம் வரை சென்றது; விடவில்லை பிருது; பின்னர் அந்தப் பூமி சொன்னது:

“இதோ பார்; இந்துக்கள் பெண் கொலை, பிராமணக் கொலை இரண்டும் செய்ய மாட்டார்கள்; நானே பசுவாகப் பாலைப் பொழிகிறேன்” என்று பாலைப் பொழிந்தது. இந்தப் பூமி முழுதும் வளம் கொழித்தது; பயிர்கள் செழித்தன. அன்று முதல் பூமிக்குப் ‘பிருத்வீ’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இந்தக் கதை அருமையான தத்துவம், சங்கேத மொழி (CODED LANGUAGE, SYMBOLIC) நிறைந்த சிம்பாலிக் கதை!

 

அதாவது ராஜா இல்லாவிடில் — நல்ல ஆட்சியாளர் இல்லாவிடில் — அ ராஜகம் தாண்டவம் ஆடும்; மக்கள் ஸ்டிரைக் செய்வர்; பயிர்கள் விளையாது; பஞ்சம் ஏற்படும் அவனே கடுமையான விதிகளைப் பின்பற்றி அராஜகப் பேர்வழிகளை ஒடுக்கி நல்லாட்சி செய்தால் பூமி பாலாய்ச் சொறியும்; அதாவது மக்கள் வேலை செய்வர்; பலன் கிடைக்கும். அருமையான சிம்பாலிக் ஸ்டோரி Symbolic Story!

 

இந்து மதத்தில் புராணங்களில் இப்படித்தான் அடையாள பூர்வ, சங்கேத மொழியில், மறை மொழியில் கதைகள் இருக்கும்; வேதங்களில், பிராமணங்கள் என்னும் நூலில் எல்லாக் கதைகளும் சங்கேத மொழிக் கதைகள்தாம்; அவைகளைப் புரிந்து கொள்ள முடியாத வெள்ளைத்தோல் வெளிநாட்டாரும், மார்கஸீய வாந்திகளும், ஆங்கிலம் மட்டுமே படித்த அரை வேக்காட்டு அறிவிலிகளும் இந்து மதத்தை எள்ளி நகை ஆடினர்.

“வீண்” என்ற சொல்லைக் கொடுத்ததே வேனன் கதைதான்!!

வேனன்= வீணன்= வீண்

 

இதனால்தான் சங்க காலத்தில் இல்லாத இச் சொல், வள்ளுவர் பயன்படுத்தாத இச் சொல் பிற்காலத்தில் தமிழில் வந்தது என்பது எனது ஊகம்; புதிய சான்று– எதிர்ச் சன்றுகள் இல்லாதவரை- எனது ஊகம் சரியே!

 

அகத்தியர் விந்திய மலையை கர்வபங்கம் செய்தது, கடலைக் குடித்தது, பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டது, பகீரதன் ஊசிமுனையில் தவம் செய்து கங்கையைக் கொண்டு வந்தது, காக்கை கவிழ்த்த கமண்டலம் மூலம் அகத்தியர் காவிரியை உருவாக்கியது — முதலியன எல்லாம் பிரமாண்டமான பொறியியல்- எஞ்ஜினீயரிங் அதிசயங்கள் (Engineering Marvels) , பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம்! ஒலி அலைகளையும் தண்ணீரையும் பயன்படுத்தி பிரம்மாண்டமான சக்தியை உருவாக்கலாம், மனோவேகத்தில் சென்று பல வெளி உலகங்களை அடையலாம்; ஐன்ஸ்டைனின் கொள்கையை மாற்றலாம் – என்று நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளையும் படிக்கவும்.

TAGS:— வேனன் கதை, வீண், விஷ்ணு புராணம், ஆராய்ச்சி

-சுபம்-

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST No.4302)

Written by S.NAGARAJAN

 

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 5–51 am

 

 

Post No. 4302

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாக்யா 13-10-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 34வது) கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

 ச.நாகராஜன்

 

“மூன்று விஷயங்கள் மிக மிக கடினமானவை 1) எஃகு 2) வைரம் 3) தன்னைத் தானே அறிவது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

பஞ்சாபின் தலை நகரான லாகூர் நகரமே சோகக் கடலில் மூழ்கியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, கூட்டத்தில் இருந்தோரெல்லாம் ‘வேண்டாம், வேண்டாம் என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதவாறே அரற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு வந்த செய்தி சரியானது தான்.

தங்களுக்குப் பிரியமான மஹாராஜா ரஞ்சித் சிங் எரிக்கப்படும் போது அவரது ராணிகள் உடன்கட்டை ஏறப்போவதாக செய்தி நகரெங்கும் பரவி இருந்தது.

காவல் வீரர்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி ஒழுங்கை நிலை நாட்ட முயன்று கொண்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்கின் உடல் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ரதத்திற்குப் பின்னால் அவருக்கு மிகவும் பிரியமான் நான்கு ராணிகள் – இளம் விதவைகள் -தங்க நாற்காலிகளில் அமர்ந்து வர ஐந்து அடிமைப் பெண்கள் கூடவே நடந்து வந்தனர்.

உடல் மயானத்தை அடைந்தது.

நல்ல பட்டுப் போர்வையால் தன் உடலைப் போர்த்திக் கொண்டு ரஞ்சித் சிங்கின் பிரியமான மஹாராணி அவர் சிதைக்குத் தன் கையாலேயே தீ மூட்டினார்.

சந்தனக் கட்டைகளின் மேல் நெய் பொழிய தீ ஜுவாலைகள் வானளவு உயர்ந்தன. கூடவே கொஞ்சமும் கந்தகமும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் தீப்பந்து சுழன்று எழுந்தது. ராணிகள் நால்வரும் அடிமைப் பெண்கள் ஐவருடன் சிதையில் பாய்ந்தனர்.

அவ்வளவு தான்!

ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது.

அனைவரும் கருகிச் சாம்பலாயினர்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

இதை விட ஒரு இனிய சந்தர்ப்பம் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு அமைய முடியுமா என்ன?

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

      சரியாக பதினைந்தே மாதங்களில் மூடி சூட்டப்பட்ட மன்னனை அவரது மனைவியும் மகனுமே விஷத்தைக் கொடுத்துக் கொன்றனர். மகன் தானே முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அரசனாக அவன் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இருந்தான்.

உப்பரிகை இடிந்து விழ அவன் கொல்லப்பட்டான்.

ரஞ்சித்சிங்கின் இரண்டாவது மகன் ஷெர்சிங் 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரியணை ஏறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1843இல் அவர் மல்யுத்த மைதானம் ஒன்றில் மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொலையாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்து  முடிந்த சில நிமிடங்களிலேயே அவரது 12 வயது மகனும் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

அவர் மந்திரியும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

   ரத்தக் களரி தொடர்ந்தது.இந்த நிலையில் தான் இதுவரை பொறுத்திருந்த மஹா ராணி ஜிந்த் கௌர் (பிறப்பு 1817; மறைவு 1-8-1863) களத்தில் குதித்தார். இவரை மக்கள் ஜிண்டான் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். ரஞ்சித் சிங்கின் மிக இளவயது மனைவியான இவர் பேரழகி. பெரிய புத்திசாலி. செயலூக்கம் மிகுந்த சுறுசுறுப்பான மஹாராணி ஜிண்டான் 1843 முதல்  மூன்று வருடம் அரசாண்டார்.

   இவரை புரட்சி ராணி என்றே சொல்லலாம். (இவரைப் பற்றிய தி ரெபல் க்வீன் என்ற படம் நியூயார்க் நகரில் பன்னாட்டு சீக்கிய திரைப்பட விழாவில் 2010ஆம் வருடம் திரையிடப்பட்டது)  பிரிட்டிஷ் அரசு இவரை அப்படித்தான் பார்த்தது.

   ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான். ஜிண்டான் அரசாட்சிப் பொறுப்பாளர் (regent) ஆனார்.

 உள்ளூரில் சதி வேலை ஆரம்பித்தது. மஹாராணியை எதிர்க்க ராணுவம் துணிவு கொண்டது. கால்ஸா – அதாவது சீக்கிய ராணுவம் தக்க தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

    அப்போது பிரபலமான ஒரு தளகர்த்தன் இறந்து விடவே இந்தக் கொலையில் மந்திரியை சம்பந்தப்படுத்தி அவரைத் தங்கள் முன்னே ஆஜராக உத்தரவிட்டது ராணுவம்.

    யானை மீது அம்பாரி ஏறி பாதுகாப்பிற்காக இளம் மஹாராஜாவைத் தன் மடியின் மீது அமர்த்தி பவனியாக வந்தார் மந்திரி. மஹாராஜாவை பத்திரமாக இறக்கி விட்ட ராணுவம் மந்ரியைக் குத்திக் கொலை செயதது.

ராணுவத்தை பயப்பட வைக்க வழி என்ன? அரண்மனையில் ஆலோசனை நடந்தது.

   எல்லையில் பலம் மிக்க எதிரி வந்தால் ராணுவம் அங்கே போய்த்தானே ஆக வேண்டும். பிரிட்டிஷாரை விட சிறந்த பலம் பொருந்திய எதிரி வேறு யார்?

ஒரு பிரிட்டிஷ் தளகர்த்தன் எல்லையில் போர் தொடுக்குமாறு செய்யப்பட்டான்.

கால்ஸா ராணுவம் எல்லைக்குச் சென்று போரிட ஆரம்பிக்கவே பெரும் போர் எழுந்தது. சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் அரசாட்சி செய்தார்.

மஹாராணி ஜிண்டான் பிரிட்டிஷார் தன்னைக் கைவிட்டுவிட்டதை எண்ணி மனம் நொந்தார். என்றாலும் அவரது வசீகரமும் அரசியல் சாதுரியமும் அவரை பலம் பொருந்திய ஒரு சக்தியாக ஆக்கவே, அதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷார் அவரை கண்காணாத ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். பதிமூன்று ஆண்டுகள் கழித்தே அவர் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

     1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போகவைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

   கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனாக சுமார் 50000 பவுன் தர பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அதன் இன்றைய மதிப்பு 20 லட்சம் பவுன்)

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று.

   புதிய இடம் துலிப் சிங்கை ஈர்த்தது.புதிய நண்பர்கள், தோழியர் கிடைத்தனர். கிறிஸ்தவ மதத்தில் சேர முடிவு செய்தார் துலிப்.

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்தது.

       (வைரத்தின் சரிதம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எட்வின் ஜி. க்ரெப்ஸ் (Edwin Gerhard Krebs — பிறப்பு :6-6-1918 மறைவு: 21-12-2009) அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் வேதியியல் விஞ்ஞானி (Bio chemist).

அவருக்குக் காது கேட்காது. இருந்தாலும் கூடத் தனது ஆராய்ச்சியில் முனைப்பாக இருந்து அபூர்வமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் மனித உடலில் உள்ள உயிரணுக்களின் இயக்கம் பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்தார். இதனால் ஹார்மோன்களைப் பற்றிப் பின்னால் நன்கு அறிய முடிந்தது.

தனக்கு இயல்பாக இருந்த காது கேளாமையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உலகின் பெரும் விஞ்ஞானி ஆனார்.

அவரது அரிய சேவையைக் கருதி 1992ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி ஒரு சில நொடிகளில் உலகமெங்கும் டெலிபோன் மூலம் பரவியது.

ஆனால் அதைக் கடைசியாகத் தெரிந்து கொண்டவர் க்ரெப்ஸ் தான்.

ஏனெனில் அவர் டெலிபோன் மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த போதும் அவரால் எடுக்க முடியவில்லை – அவருக்குத் தான் காது கேட்காதே!

சாதனை புரிய உடல் குறை ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த விஞ்ஞானிகளில் ஒருவர் க்ரெப்ஸ்.

****