IMPORTANCE OF KRITHIKA NAKSHATRA (Post No.4215)

Written by London Swaminathan

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 19-32

 

Post No. 4215

 

Pictures are taken from various sources; thanks.

 

 

The following extract from Satapata Brahmana (dated 850 BCE by foreigners) shows that even before the Greeks wrote their literature we have all the stars mentioned in our Vedic literature. So foreigners claim that Hindus borrowed astronomy from the Greeks is  false. They themselves contradict their dates. They believed that Greeks contact came only after Alexander’s invasion.

 

The following piece shows also how complicated and symbolic is the language of the Brahmanas.

 

it is interesting to note that Tamil Sangam literature says that the Tamils celebrated the marriages under the star Rohini (see my earlier research article).

 

It is also noteworthy that Agni, Krithika Star (the Pleiades) and Lord Kartikeya are always linked in later Puranas. This has its  origin in the Vedas. in short, Hindu astronomy is older than the Greek literature. But in the time of Aryabhata, some new elements were introduced in to Hindu astronomy. Since we have lost enormous amount of Vedic literature we may never know who proposed those things first.

 

Vedic astronomers calculated that Pleiades was rising star at the horizon around 2100 BCE. So this will help us to date the Satapata Brahmana.

 

“The priest may set up fire (Yaga fire) under the Pleiades (Krithika nakshatra) for the Pleiades are Agni’s constellation (asterism) so that if he sets up fire under Agni’s constellation he will bring about a correspondence between his fires and the constellation.

 

For this reason be may setup his fires under the Pleiades. The Pleiades are the most numerous  of asterisms; hence he thereby obtains an abundance. For this reason he may set up his fires under the Pleiades. And again they do not move away do move from the eastern quarter. Thus his two fires are established in the eastern quarter; for this reason be may up his fires under The Pleiades.

 

On the other hand it is argued why he should not set up fires under the Pleiades originally the later ( the Pleiades) were the wives of the Bears (Rikshas or the Ursa Major = the great bear constellation). for the seven rishis (Saptarishi) were in former times called Rikshas. They (the Pleiades) were however precluded from intercourses with their husbands, for the latter ( the Seven Rishis) rise in the north and the  the Pleiades  in the east.

 

Now it is a misfortune for one to be precluded from intercourse with his wife. He should set fires under the Pleiades. He therefore should not set up fires under the Pleiades lest he should thereby be precluded from intercourse. But he may nevertheless set up his fire under the Pleiades; for Agni doubtless is their mate, and it is with Agni that they have intercourse.

 

 

for this reason he may set up fire under the Pleiades’ He may also set up his fire under the  constellation of Rohinii for under Rohini it was that Prajapati, when desirous of progeny, set up his fires. He created beings, and the creatures produced by him remained invariable and constant, like red cows ;hence the cow like nature of Rohini. Rich in cattle and offspring therefore he becomes- whosoever, knowing this, sets up fires under Rohini. Under Rohini indeed, the cattle set up their fires thinking that they may attain to (ruh) the desire or love of men. They did attain the desire of men; and whatever desire the cattle then obtained in regard to men, that same desire he (the sacrificer) obtains in regard to cattle, whosoever  knowing this, sets up his fire under Rohini.

 

Satapata Brahmana . 2.1-2-1-7

 

Ursa Major= Saptarishi= Great Bear

 

xxx

In the time of Alexander the Great the Hindus did not claim greater antiquity than 6777 B. c. The mode of reckoning adopted by the Hindus by which they got the Yugas is very simple. Given the precession of 49-8 seconds as determined by Hipparchus, the period of one revolution through the whole circle of 360 degrees would be  26,024 and16/166 (fraction) years. Getting rid of the fraction in the usual way by multiplying by 166 and adding the 16 we have 4,320,000 years – a Yuga.   The same result is obtained by Parasara;s precession of 46-5 or Aryabhata’s 46-2

 

-Subham–

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

 
Written by London Swaminathan

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 6-33 am

 

Post No. 4214

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்திரலோகத்தில் ஒரு கொண்டாட்டம்; எல்லா தேவர்களும் வந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் அதிகரித்தது; அப்சரஸ் என்னும் அழகிய தேவதைகள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்திரனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் கந்தர்வசேனு. அவன் ஒரு அப்சரஸ் மீது கை வைக்கவே இந்திரனுக்கு மஹா கோபம்.

“சீ! கழுதை! நீ பூலோகத்தில் கழுதையாகப் போகக்கடவது” என்று சபித்துவிட்டார்.

 

 

உடனே வாயுதேவன், அக்கினி தேவன், யமன் , சூரியன், வருண தேவன் முதலானோர், ” அடக் கடவுளே! இளம்சிட்டு அறியாமல் பருவக் கோளாறினால் செய்த செயலுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? ரத்து செய்யுங்கள்” என்று மன்றாடினர்.

 

ஆனால் உலகிலேயே அற்புதமான இந்துமதம் உண்மை- ஸத்யம் என்னும் அஸ்திவாரத்தின் மீது அமைந்தது; கடவுளே ஆனாலும் இதை மீற முடியாது. ஒரு வரமோ சாபமோ கொடுக்கப்பட்டுவிட்டால் அதில் பின்வாங்குதல் என்பதே கிடையாது. இதிஹாச, புராணங்கள் அ னைத்திலுள்ள கதைகளிலும் இந்த அற்புதமான கொள்கையைக் காணலாம். ஆனால் வருத்தப்படுவோருக்கு சாப விமோசனம் கொடுக்கலாம். ஆகவே இந்திரனும், “சரி, போ! பகல் முழுதும் கழுதையாக இரு; இரவு நேரத்தில் அழகிய இளைஞனாக இரு” என்று ஒரு துணை விதியை நுழைத்தார்.

 

 

இந்திரன் மகன் என்றால் என்ன கொக்கா? கொம்பனா? சாபத்தின் படியே பூமியில் கழுதையாக விழுந்தார். அப்போது ஒரு பிராமணன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அன்பரே எனது கதையைக் கேளும் என்று ஆதீயோடு அந்தமாக நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, இந்த நாட்டு மன்னனான தாரு என்பவரின் மகளை—இளவரசியை– எனக்கு மணம் முடிக்க அருள் செய்க” என்று வேண்டினான்.

 

அந்தப் பிராமணனும் அரசன் தாருவிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லி கல்யாணம் செய்து கொடுங்கள் என்றார்.

கழுதைக்கு என் மகளைக் கல்யாணம் முடிப்பதா? அவன் சொல்லுவது உண்மையானால் ஒரு அற்புதத்தையாவது செய்து காட்டட்டும்; அப்போதுதான் நான் நம்புவேன் என்றார்.

 

இந்திரன் மகன் கந்தர்வ சேனு கழுதை உருவத்தில் இருந்தபோதிலும் ஒரு பெரிய இரும்புக் கோட்டையை இரவோடிரவாக கட்டிக் காட்டினான். அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது.

மன்னரே! மனிதனின் உருவம் என்பது மேல் சட்டை போன்றது. அதைக்கண்டு ஏமாறக்கூடாது; ஆளைக் கண்டு ஏமாறாதேடா ஊது காமாலை என்றும் ஆள் பாதி ஆடை பாதி என்றும் பழமொழிகள் இருப்பதை நீங்கள் அறியவில்லையா? என்றெல்லாம் கந்தர்வசேனு மன்னனிடம் சொல்லி அவரை அமைதிப்படுத்தினான்.

 

 

 

உடனே அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது. கல்யாணத்திற்கு, பிராமணர்களைக் கொண்டு தேதி நிச்சயித்தார். வெளி நாட்டு அரசர்களுக்கும் உள்நாட்டு அரசர்களுக்கும் அழைப்புகள் பறந்தன. ஊரெல்லாம் கொண்டாட்டம்; அலங்காரம்.

 

இள்வரசி தேவதை போல உடுப்பு அணிந்து அலங்கார பவனி வந்தாள். கழுதை மாப்பிள்ளையிடம் இளவரசியை ஒப்படைத்தான் மன்னன் தாரு. கழுதைக்கு ஏக குஷி; ‘காழ் காழ்’ என்று கழுதை போலக் கத்தியது

 

கழுதையைப் பார்த்தவுடன், அதன் குரலைக் கேட்டவுடன்,  மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு; முகத்தை மறைத்துக் கொண்டு இளி இளி என்று இளித்தனர். பல இளவரசர்களுக்கு வருத்தம். நமக்கு இந்த தேவதை– பேரழகி கிடைக்க வில்லையே! ஒரு கழுதைக்கு அடித்ததே யோகம் — என்று அங்கலாய்த்தனர்.

 

பிராமணர்களோவெனில் ஒருகாலத்தில் ஒட்டகத்துக்கும் கழுதைக்கும் நடந்த கல்யாணக் கதைகளைச் சொல்லி மன்னனை ஊக்குவித்தனர். அவர்களுக்கு நல்ல தட்சிணை கிடைத்தது.

 

 

அரண்மனைப் பெண்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப வருத்தம். மன்னரே இப்படிச் செய்வது நல்லதா? உமக்கே அடுக்குமா? இது என்ன அநியாயம்? என்றார்கள்.

 

ஆனால் அன்றிரவு ஒரு அற்புதம் நடந்தது; கழுதையானது அழகிய இளவரசன் ரூபத்தில் தோன்றியது. மன்ன னுக்கும் இளவரசிக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

 

 

அரசனுக்கு ஒரு யோஜனை உதித்தது. ஒன்றிரண்டு நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் செத்துப்போன கழுதையின் உடல் வெளியே இருப்பதைப் பார்த்தான். இந்த கழுதை உடலை எரித்துவிட்டால் இளவரசன் எப்போதும் இளவரசனாகவே இருப்பானே என்று கருதி ஒரு நாள் இரவில் கழுதையின் உடலை எரித்துவிட்டான்.

 

அன்று முதல் கந்தர்வ சேனு சாபம் நீங்கி என்றும் இளவரசனாக விளங்கினான்.

 

இந்தக் கதை நூறு ஆண்டுகளுக்கு முன் பாதிரியார் ஆஸ்பார்ன் மார்டின் எழுதிய இந்தியக் கடவுள்கள் என்ற புத்தகத்தில் உள்ளது; மொழி பெயர்ப்பு லண்டன் சுவாமிநாதன்.

—சுபம்—

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2 (Post No.4213)

Written  by S.NAGARAJAN

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 5-25 am

 

Post No. 4213

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

15-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 30வது) கட்டுரை

இரஸவாதத்தால் தங்கமாக்கியோர்!

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2

by ச.நாகராஜன்

 

 

“ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நகர்வதற்கு முன்னர் காத்திரு; அடி எடுத்து வைப்பதற்கு முன்னர் விழியைப் பதி; அனைத்தையும் உற்று கவனி. – நிக்கோலஸ் ஃப்ளாமல்

 

 

   இரஸவாதத்தில் பித்துப் பிடித்து அலைவோர் ஏராளம். இவர்களை நாகத்திலிருந்து வெளீப்படுவதாகச் சொல்லப்படும் நாகமணிக் கல்லைத் தேடி அலைவோருடன் ஒப்பிடலாம்.

     தங்கள் கையில் இரஸவாதப் பொடி இருப்பதாகவும் அதனால் தங்கத்தை “உருவாக்க முடியும் என்றும் கூறும் இவர்கள் தங்கப் பொடியையும் கூடக் காண்பிப்பார்கள்.

ஆகவே தங்கம் பற்றிய சில இரகசியங்களை அனைவரும் அறிந்து கொள்வது ந்ல்லது.

உண்மையான தங்கத்தையும் போலித் தங்கத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

 

     இரஸவாத நிபுணர்களும் பொற்கொல்லர்களும் தங்கத்தின் மீதான ஆசையுடன் ‘தங்கமான துறையில் ஈடுபடுபவர்களும்  தங்கத்தின் தூய்மையைப் பார்ப்பதற்கு என்ன வழியைச் சொல்கின்றனர்? அதைச் சூடாக்கி, உருக்கிப் பார்ப்பதே சிறந்த வழி என்று அனைவரும் ஏகோபித்துக் கூறுகின்றனர்.

 

 

இப்படி உருக்குவதால் தூய்மையற்ற இதர உலோகங்கள் மற்றும் கசடுகள் அகன்று விடும்.

 

  இன்னொரு பழைய வழி தங்கத்தை உரைகல்லில் உரசிப் பார்ப்பது. தங்கத்தையும் அத்துடன் ஒப்பிட வேண்டிய இன்னொரு உலோகத்தையும் உரைகல்லில் உரசிப் பார்த்தால் உடனே நல்ல வித்தியாசம் தெரியும். இதனால் போலிகளைத் தூக்கி எறிந்து விடலாம்.

 

  இன்னொரு வழி – அடர்த்தியை வைத்துக் கண்டு பிடிப்பது. தங்கத்தையும் , தங்கத்தைப் போல உள்ள இன்னொரு உலோகத்தையும் ஒரே எடையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பீக்கரில் நீரை விட்டு அதில் தங்கத்தைப் போட வேண்டும். தங்கம் உடனடியாக நன்கு உள்ளே அமுங்கி மூழ்கி விடும். அப்போது நீரின் மட்டத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தங்கத்தை எடுத்து விட்டு ஒப்பிட வேண்டிய பொருளை அதே பீக்கரில் போட்டுப் பார்த்து நீர் மட்டத்தைப் பார்க்க வேண்டும். ஒப்பிடும் பொருள் தங்கமாக இருந்தால் அதே மட்டத்தை நீரில் காட்டும்; இல்லையேல் நீர் மட்டம் உயரும்.

 

 

இந்தச் சுலபமான வழியும் போலிகளைக் காட்ட உதவும்.

       தங்கத்தை உருவாக்கும் இரஸவாதிகள் அதை இப்படிப்பட்ட அறிவியல் வழிகளின் மூலம் அது தங்கம் இல்லை என்று சொல்லும் போது நம்ப மறுக்கின்றனர்; அல்லது மிகவும் மன வருத்தம் கொள்கின்றனர்.

 

     தங்கம் போல இருக்கும் ஒரு பளபளப்பான பொருள் நார்டிக் கோல்ட் ((Nordic Gold) இதில் 89% தாமிரம், 5% அலுமினியம், 5% துத்தநாகம், 1% டின்

இதை உருவாக்க முயலும் போது அலுமினியத்தை உருவாக்குவது மிகவும் கஷ்டம்.

 

    இன்னொரு தங்கம் போல இருக்கும் பொருள் கோல்ட் டாம்பாக் (Gold Tombac or Red arsenic Tombac)

இதில் 85% தாமிரமும் துத்தநாகமும் உள்ளது ரெட் ஆர்செனிக் டாம்பாக்கில் 98% தாமிரமும் 2% ஆர்செனிக்கும் உள்ளது.

லெட் ஐயோடின் (Lead Iodine) பார்க்கத் தங்கம் போலவே இருக்கும்.

 

 

இரஸவாதக்கலையில் ஈடுபட்டவர்கள் பல விதமாக தங்கம் இருப்பதாக நம்புகின்றனர்.

கெபர் (Geber)  தங்கமானது நுட்பமான பாதரஸத்தால் ஆனது என்றும் கந்தகம் போன்றவை அதற்கு தங்க வண்ணத்தை அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

 

 

சென் யின் என்னும் சீன இரஸவாதி தனிம மாற்றத்தால் (Tranmutation) தங்கத்தை விட உயர்தரமான சில மூலகக் கூறுகள் அதில் கலந்திருக்கும் என்று கூறுகிறார்.

சில இரஸவாதிகளோ திரவ வடிவத்தில் தங்க திரவத்தை குடித்தே இருக்கின்றனர்.

 

பெரிய இரஸவாதிகள் யாரும் தங்களைச் சாதாரணமான பொற்கொல்லர்கள் சோதனை செய்வதை விரும்பியதில்லை. படாடோபமான அவர்களது பகட்டுக்கு முன் மற்றவர்கள் எம்மாத்திரம்! அப்படி ஒருவர் சோதனை செய்வது தனக்கு இழைக்கும் அவமதிப்பு என்றும் தெய்வ குற்றம் என்றும் கருதினர்.

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல இரஸவாதியான நிக்கோலஸ் ஃப்ளாமெல் (Nicholas Flamel) 1330ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர்.

புத்தக விற்பனையாளரான நிக்கோலஸ் இரண்டு கடைகளுக்குச் சொந்தக்காரர். சாதாரண எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் ஒரு நாள் ஒரு கனமான பழைய புத்தகத்தை எடுக்க வேண்டி இருந்தது. அதைத் திறந்து பார்த்தவர் அசந்து போனார். அதில் பல எழுத்துக்கள் மாறி மாறி இருந்தன. பல மொழிகளில் அந்தப் புத்தகம் எழுதப் பட்டிருந்தது.

 

 

நிக்கோலஸிற்கு பல மொழிகள் அத்துபடி. நிக்கோலஸின் மனைவியான பெரெனெல்லி அவரை விட பத்து வயது மூத்தவர். அவரும் இந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு இந்த மர்மமான புத்தகத்தில் உள்ள சங்கேத சொற்களில் இருந்த புதிரை அவிழ்க்க ஐரோப்பா முழுவதும் சுற்றினார். இறுதியில் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆப்ரஹாம் (Abraham the mage) என்று அவர்கள் கண்டு பிடித்தனர்.

 

   ஆப்ரஹாம் உடல் முழுவதும் தங்க மயமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவர் எழுதிய கோடக்ஸ் (Codex) என்ற புத்தகம் நிக்கோலஸை இரஸவாதத்தில் புகுத்தியது.

  அவருக்கு இறந்தவருடன் தொடர்பு கொள்வதோ அல்லது மந்திர தந்திரங்களோ தெரியாது. ஆனால் அவரது மனைவியோ இதில் வல்லுநர்.

 

இருவரும் இணைந்து கடைசியில் ஒரு வழியாக கோடக்ஸ் புத்தக்த்தில் இருந்த மர்மத்தைக் கண்டு பிடித்துவிட்டனர். நிக்கோலஸின் மனைவி “என்றும் இளமையுடன் இருப்பதற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தார்,

 

   ஆனால் அந்த விசித்திரமான இளமை மருந்தைத் தொடர்ந்து அவர்கள் அருந்த வேண்டும். கோடக்ஸ் புத்தகம் கூறும் சரியான வழி முறைப்படி அருந்தாவிட்டால் ஒரு நாளில் ஒரு வருட வயது மூப்பு வந்து விடும்.

 

  இதற்கிடையில் இங்கிலாந்தின் அரசிக்கு உயர் ஆலோசனை கூறும் ஜான் டீ என்பவரை அவர்கள் தங்கள் சிஷ்யனாக ஏற்றனர். ஆனால் விதி வசமாக அவரே இவர்களைக் கொல்ல முயன்றார். ஆகவே நிக்கோலஸும் அவரது மனைவியும் தாங்கள் இறந்து விட்டதாக தங்கள் முடிவை உலகிற்கு அறிவிக்க போலியாக நடிக்க வேண்டியதாயிற்று,

   நிகோலஸின் அபார சக்தியைப் பற்றி ஏராளமான கதைகளும் சம்பவங்களும் உண்டு.

 

 

அவரைச் சுற்றி ஒளி வட்டம் உண்டு என்றும் அவர் பல மிருகங்களின் கண் கொண்டு பார்க்க வல்லவர் என்றும், அவர் எந்த வித உலோகத்தின் அணுவையும் மாற்ற வல்லவர் என்றும் இன்ன பிற சக்திகள் அவருக்கு உண்டு என்றும் ஏராளமான செய்திகள் உலவி வந்தன.

 

இரஸவாதத்தில் குறிப்பிடத் தகுந்த ஒருவராக கூறப்படுபவர் நிக்கோலஸ். இரஸவாத மர்மம் போலவே அவர் வாழ்வும் கூட ஒரு மர்மம் தான்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

,,

பிரபல கணித மேதையான கோடல் (Godel)  குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். அதனுடைய இறுதி கட்ட விசாரணை நீதிபதியின் முன்னர் வந்தது. அதே நீதிபதி தான் ஐன்ஸ்டீனின் குடியுரிமை பற்றி விசாரித்து அளித்தவர். ஆகவே கோடலுடன்  ஐன்ஸ்டீனும் இன்னொரு நண்பரான ஆஸ்கர் மார்கென்ஸ்டர்னும் (Oscar Morgenstern) கூடச் சென்றனர். ஐன்ஸ்டீனைப் பார்த்த நீதிபதிக்குத் தலைகால் புரியவில்லை.

 

அவருடன் நெடுநேரம் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நாஜி ஜெர்மனியில் என்னவெல்லாம் நடந்தது உள்ளிட்ட அனைத்தையும் கூறி முடித்த நீதிபதி கடையில் கோடல் பக்கம் திரும்பினார்: “ நமது அரசியல் சாஸனத்தை நீங்கள் நன்கு படித்திருப்பீர்களே!  அதெல்லாம் இங்கு நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருப்பீர்களே என்றார்.

 

உடனே கோடல், “உண்மையைச் சொல்லப் போனால்.. என்று ஆரம்பித்தார்.

அவ்வளவு தான், கூட இருந்த நண்பர் அவர் தோளைப் பலமாக இடித்தார். உடனே கோடல் புரிந்து கொண்டு தன் வாயை மூடிக் கொண்டார்.

 

பிறகென்ன,அவருக்கு நீதிபதி குடியுரிமையை வழங்கினார்.

நல்ல வேளையாக உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கவில்லை கோடல்.(அமெரிக்க சாஸனத்தைத் தா படித்ததில்லை என்று சொன்னாலும் ஆபத்து, நாஜி ஜெர்மனியில் அவர் நடந்ததாகச் சொல்லியதை எதிர்த்துச் சொன்னாலும் ஆபத்து தான்!)

 

சில சமயம் சில இடங்களில் உண்மையைச் சொல்லக் கூடாது இல்லையா?

***

 

 

 

TWO STRANGE STORIES ABOUT INDRA AND HIS SON (Post No.4212)

Picture sent by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 14-54

 

Post No. 4212

 

Pictures are taken from various sources; thanks.

 

 

INDRA’S SON BECAME AN ASS!

 

The following is characteristic of the stories told of this god and his doings:

 

On a certain occasion, many of the gods were invited to an entertainment in Indra’s palace. To complete their happiness, several of the Apsaras, beautiful nymphs, danced before them. Gandharvasenu, son of Indra, was so fascinated with the charms of one of them and behaved so indelicately that that his father commanded him to descend to earth in the form of an ass. All the assembled gods beseeched him to modify this sentence, and ultimately Indra agreed that his son should be an ass by day, but a man by night. With this he dismissed him to wander about the earth. One day a Brahman  came to bathe at a pond near which the ass was wandering. The animal spoke to him and told him he was Indra’s son and asked him to speak to King Dharu to give him his daughter in marriage. The Brahman consented, and next day the king went with his counsellors and held a conversation with the ass, who related his story and the cause of his degradation. The king refused consent to the marriage unless the ass would perform some miracle to prove his descent. To this he agreed, and the following night he built a fort of iron, forty miles square and six high. Then the king was forced to yield, and appointed the day of marriage.

 

The day came, and with splendid show, dancing, and music the bride, adorned with jewels and the richest attire, was led into the iron fort to be married to the ass. The bridegroom on seeing her could not refrain from giving voice. Th guests on hearing the ass bray were filled with grief and astonishment. Some hid their faces with sorrow, some because of laughter. Others, more bold, went to the king and said “O King, is this the son of Indra O Monarch, you have found an excellent bridegroom. Don’t delay the wedding! we never saw so glorious a match. We have heard of a camel being married to an ass, when the ass, looking the camel said, “Bless me what a fine form and the camel, hearing the voice of the ass, said Dear me what sweet voice! In that wedding the bride and the bride groom were equal, but that your daughter should have such a bridegroom is truly wonderful!

 

Then the Brahmans said “Oh King at some weddings, as a sign of joy, the sacred conch shell is blown, but thou hast no need of that (alluding  to the braying of the ass).

 

 

 

The women then cried out, “O King, what is this? To give so angelic a damsel in marriage to an ass! The king felt ashamed and hung his head. At length Gandharvavenu reminded the king of his promise, and urged upon him that the body is merely a garment, that wise men never estimate the worth of a person by the clothes he wears, and, moreover, he was in this shape from the curse of his father, and during the night he would assume the form of a man.

 

The king then withdrew his objection and the man marriage was celebrated. By the time the guests were dismissed the night drew on, and a handsome man, suitably dressed, presented himself to the king. The king brought the bride in great state to the palace and gave her to her husband. The next day he gave jewels, horses, camels, and servants to her and dismissed the guests with suitable presents. Dharu, however, could not but feel anxious that his son-in- law should finally throw off his ass body. After a thousand contrivances, he said to himself Gandharvasenu is the son of Indra, therefore he can never die; at night he casts off his ass’s body, which lies like a dead body. I will burn it and so keep him always in the form of a man. This he did and the curse was removed.

 

xxx

STORY ABOUT INDRA

 

 

On one occasion Indra assumed the form of a shepherd boy so that he might more easily steal some pomegranate blossoms from a garden to deck the dark tresses of his consort Indrani.

 

The sequel is told in Sir William Jones’ charming hymn to him

 

“The reckless peasant, who these glowing flowers, Hopeful of rubied fruit has fostered long,

Seized and with cordage strong,

Shackled the god who gave him showers.

Straight from the seven winds immortal genii flew- Varuna green, whom foamy waves obey;

Bright Vahni, flaming with the lamp of day

Kuvera, sought by all, enjoyed by few;

Marut, who bids the wingéd breezes play

Stern Yama, ruthless judge! and Isa cold

With Narrit, mildly bold:

They, with the ruddy flash that points his thunder,

Rend his vain bands asunder.

Th’ exulting god resumes his thousand eyes,

Four arms divine, and robes of changing dyes.

 

These “robes of changing dyes” are of course the clouds, and the thousand eyes were the marks of the displeasure of the gods for his intrigue with Gautama’s wife.

 

 

SOURCE: The Gods of India by the Rev.E.Osborn Martin, London ,1914

 

–SUBHAM–

 

 

 

சரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள்! (Post No.4211)

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 10-47

 

Post No. 4211

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்

 

சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!

 

ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது. அந்த வற்றாத ஜீவ நதிக்கு நம் நாவில் வெள்ளமெனப் பொழியும் சரஸ்வதி தேவியின் பெயரை வைத்தது என்ன பொருத்தம்!

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் நின்ற வேத கால இந்துக்கள் நதிகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டினர். தாய்மார்களின் கருணையும் அளவற்றதன்றோ!

 

ரிக்வேதம் போற்றும் சரஸ்வதி!

 

நீயே சிறந்த தாய்

நீயே தலைசிறந்த நதி

நீயே கடவுள்

 

ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!

இந்த துதிப்பாடல் சரஸ்வதி நதியை சட்லெஜ்-யமுனை நதிகளுக்கு இடையே வைக்கிறது

 

நதிகளில் எல்லாம் புனித மான சரஸ்வதி உயிர்த்துடிப்புள்ள நதி; மலையிலிருந்து கடல் நோக்கிச் செல்லும் இந்த நதி அபரிமிதமான வளத்த்தைச் சுரக்கிறது

 

இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.

 

1872ம் ஆண்டில் சி.எF ஓல்தமும் ( C F Oldham and R D Oldham) ஆர்.டி. ஓல்தமும் நடத்திய சர்வேயில் சரஸ்வதியும் அதன் உபநதிகளும் ஒரு காலத்தில் ஓடியதை உலகிற்கு அறிவித்தனர். சரஸ்வதி நதிக்கு யமுனையும் சட்லெஜ் நதியும் தண்ணீர் கொண்டுவந்தன என்றும் புவியியல் மாற்றங்களால் அவை விலகிச் செல்லவே சரஸ்வதியின் ஒளி மங்கியது என்றும் அவர்கள் எழுதிவைத்தனர்.

விஞ்ஞானிகள் என்ன கண்டார்கள்?

 

வி.எம்.கே.புரி, பி.சி.வர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இந்த நதி அப்பர் ப்ளைச்டோசின் (UPPER PLEISTOCENE ) காலத்தில் இருந்தது,

கார்வால் இமயமலைப் பகுதியில் இருந்த பனிக்கட்டி ஆறுகள் உருகி இதற்கு தண்ணீர் அளித்தது. பின்னர் பனிக்கட்டி யுகத்தில் கதை மாறியது என்று சொன்னார்கள்.

 

(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.

 

இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.

 

இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:

கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சரஸ்வதி நதிதீர நாகரீகம் இருந்தது . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் கி.மு3100 முதல் கி.மு 1900 வரை சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் இருந்தது.

கிமு 1900 முதல் கிமு 1000 வரை சரஸ்வதி-சிந்து நாகரீகம் படிப்படியாக அழிவு நிலை க்கு வந்து சரஸ்வதி நதி அடியோடு மறைந்தது. இதனால் மக்கள் அங்கேயிருந்து கங்கைச் சமவெளிக்குக் குடியேறினார்கள்.

 

இந்த தேதிகள், வரலாற்று ரீதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஆயினும் விரிவான ஆய்வுகள் மூலம் புதிர்களை விடுவிக்கலாம்.

 

1995 ஆம் ஆண்டு ஆய்வுகள்

 

ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி  நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்  ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.

 

நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.

 

 

1910 ஆம் ஆண்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட ஜி.இ. பில்க்ரிம் ( G E PILGRIM) என்பவரும் மிகப் பழங்கால வண்டல் மண் படுகைகள் காணப்படுவதாகவும் இமயத்தின் அடிவாரத்திலிருந்து சிந்து வளைகுடா வரை காணப்படும் இப்படுகைகள் சிவாலிக் என்ற நதியாக இருக்கலாம் என்றும் எழுதினார்.

ரிக்வேத சரஸ்வதி பற்றி அவருக்குத் தெரியாது.

ரிக்வேதம் இந்த நதியை நதிகளுக்கு எல்லாம் தலையாயது என்று பாராட்டியதை அவர் அறியார்.

அம்பிதமே நதிதமே தேவிதமே சரஸ்வதி (ரிக்.2-41-16) புகழ்கிறது

 

(சிறந்த தாய், சிறந்த நதி,  சிறந்த தேவி சரஸ்வதி)

 

மஹோ ஆர்ணா சரஸ்வதி ப்ரசேதயதி கேதுன தியோ விஸ்வ  விரஜதி 1-3-12

 

சரஸ்வதி கடல் போன்றது; அவள் ஒளிவீசுகிறாள்; எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி ஊட்டுபவள் அவளே

 

நி த்வததே வர அப்ருதிவ்ய இளைஸ்பதே சுதிநத்வே அஹ்னம்; த்ருஷத்வயம் மானுஷே அபயயாம் சரஸ்த்வயாம் ரெவத் அக்னே திதி (3-23-4)

 

ஓ அக்னியே நாங்கள் உன்னை பூமியின் புனிதமான இடத்தில் — இலா பூமியில்-  ஒளிமிகு நாட்களில் ஏற் றியுள்ளோம். த்ருஷத்வதி, அபயா, சரஸ்வதி ஆறுகளின் கரை மீது மானுடர்களுக்காகப் பிரகாசிப்பாயாக.

சித்ர இத் ராக ராஜக இத் அன்யகே சரஸ்வதீம் அனு: பர்ஜன்ய இவ ததநதி வர்ஷ்த்ய சஹஸ்ரம் அயுத ததாத் 8-21-18

 

சரஸ்வதி தீரத்தில் வசிக்கும்  புகழ்மிகு அரசன், மற்ற எல்லாரும் இளவரசர்கள். மழைக்கடவுள் மழையைப் பொழிந்து தள்ளுவது போல, அவன் பத்தாயிரம் பசுமாடுகளை ஆயிரம் தடவை தருகிறான்

அயஸி புரஹ; விஸ்வ ஆபோ மஹின: சிந்துர் அன்ய: சுசிர் யதி கிர்ப்ப்ய அ ஆ சம்த்ராத் 7-95-1/2

 

சரஸ்வதி ஒரு வெண்கல நகரம்; எல்லா நதித் தீரங்களைளையும் , நீர் நிலலைகளையும் விஞ்சி நிற்கிறது. மலையிலிருந்து சமுத்ரம் வரை தூய நீராக ஓடுகிறாள்

 

இப்படி எல்லா மண்டலங்களிலும் சரஸ்வதி புகழ்ப்படுவதால் ரிக் வேதம் என்பது கி.மு.3000க்கும் முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரைகளில் ஒலித்திருக்க வேண்டும்!

 

இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)

 

ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது

 

 

ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகர்ப்ப மாற்றங்களால் நான்கு முறை திசை மாறி ஓடியது.

 

டெக்கான் காலேஜ் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகம் சரஸ்வதி நதியின் பாதை எப்படி எல்லாம் மாறியது என்று ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. கிமு4000 ஆம் வாக்கில் இமயமலையில் தோன்றிய சரஸ்வதி, மதுரா, கட்சிலுள்ள பஞ்சபத்ரா வழியாக ஓடியது. நாலாவது முறை திசை மாறியபோது அது சிந்து நதியில் இணைந்து தனது பெயரையும் புகழையும் இழந்தது. யமுனையும் சட்லெஜ்ஜும் தண்ணிரைக் கொணந்து கொட்டிவிட்டு யமுனை நதி திசை மாறிக் கங்கையில் கலந்தவுடன் சரஸ்வதியின் வளம் குறைந்தது

 

ஹரப்பன் நாகரீக நகரங்களான லோதல் காலிபங்கன் ஆகியன சரஸ்வதி நதிப் ப டுகையிலேயே அமைந்துள்ளன.

 

5000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையின் சிவாலிக்  குன்றுகளில் உதயமாகி ஹிமாசல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் வழியாக ஓடி அரபிக் கடலில் கலந்த சரஸ்வதியின் கதை இது!

 

பேராசிரியர் வைத்யா போன்றவர்கள் சரஸ்வதி நதியின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தமிழிலும் சரஸ்வதியின் கதை வெளியாகியுள்ளது. நான் கொடுத்தது எல்லாம் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பகும்.

 

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதே சரஸ்வதின் மறைவுக்குக் காரணம்.

 

சரஸ்வதி நதி பற்றிய வேத, இதிஹாச, பிராமன நூல்கள் தகவல்களை வரிசைப் படுத்தினால் வேத காலம், சிந்துவெளி, சரஸ்வதி நாகரீக காலங்களை உறுதிப்படுத்திவிடலாம்.

 

Geo Morphologist Dr Amal Kar ஜியோ மார்ப்பாலஜிஸ்ட டாக்டர் அமல் கர் சில சுவையான விஷயங்களைச் சொல்லுகிறார்:

 

பத்து லட்சம் ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடையே சரஸ்வதி நதி தார்ப் பாலைவனம் வழியே ஓடியது

லோக்பட் என்னும் துறைமுக நகரம் கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்பெற்ற இடம்.  இந்த நதிக்கரையில் இருந்தது.

மஹாபாரதம் குறிப்பிடும் நாராயண சரோவர் இதன் கரையில் இருந்தது

 

ஹரப்பன் நாகரீகத்துக்கும் முந்தைய அலிபங்கன், கலிபங்கன் நாகரீகம் இதன் கரையில் செழித்தோங்கியது.

சதத்ரு (சட்லெஜ்) என வேதம் குறிப்பிடும் நதி இதன் உபநதியாகும்.

 

மஹாபாரதம் சப்த சரஸ்வதி என்னும் நதி பினாசன் (விநாசன்) என்னும் இடத்தில் மறைவதைக் குறிப்பிடுகிறது.

 

TAGS: சரஸ்வதி, கக்கர், வேத நதி, நதி துதி

 

–SUBHAM–

 

 

 

புலவர்கள் பல விதம்! (Post No.4210)

Written  by S.NAGARAJAN

 

Date: 14 September 2017

 

Time uploaded in London-5-01 am

 

Post No. 4210

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தனிப்பாடல்களில் புலவர்கள்

புலவர்கள் பல விதம்!

 

ச.நாகராஜன்

 

புலவர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

 

பாண்டிய மன்னன் ஒருவன் புலவர்களைப் பற்றிப் பாடியதாகப் பழம் பெரும் பாடல் ஒன்று உள்ளது.

 

போற்றினும் போற்றுவர்  பொருள்கொ டாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே

 

எமனை விட மோசமானவர்கள் புலவர்கள் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லும் பாண்டிய மன்னன் அதற்கான காரணங்களையும் வரிசையாக அடுக்கி விட்டார்.

தூக்கி வைத்தால் ஒரேயடியாக இந்திரன் சந்திரன் என்று புகழ்வர்.

கையிலே காசு தரவில்லை எனில் கீழே போட்டு மிதித்துத் தாழ்த்தி விடுவர். சொன்ன சொற்களை நிலைமைக்குத் தகுந்த மாதிரி மாற்றினும் மாற்றுவர். இவர்களிட்ம் மாட்டிக் கொண்டால் ஒருவன் படும் பாடு – எமனே தேவலை!

 

இதைச் சோழ மன்னன் ஒருவன் பாடியதாகவும் பரம்ப்ரைக் கதை கூறும்.

 

இராமச் சந்திரக் கவிராயர் என்று ஒரு கவிஞர். அவரது அனுபவமோ இதற்கு நேர் எதிர்.

ஒரு கஞ்சனிடம் அவர் சென்று சேர்ந்தார். அவர் அனுபவத்தை ஒரு பாடலிலேயே கூறி விட்டார் இப்படி:-

 

கல்லாத ஒருவனை நான் கற்றா யென்றேன்

    காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

   போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்

மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை

     வழங்காத கையனை நான் வள்ள லேயென்றேன்

இல்லாது சொன்னேனுனக் கில்லை யென்றான்

      யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே!

 

 

 

நான் கல்வி அறிவில்லாத ஒருவனைக் கல்விமானே என்று புகழ்ந்தேன். காட்டை வெட்டுகின்ற மறவனை நாட்டை ஆள்பவனே என்று புகழ்ந்தேன். பொல்லாதவன் ஒருவனை நல்லவனே என்றேன். யுத்தத்திற்கே செல்லாத ஒருவனை புலியே என்றேன். சுருங்கித் திகைந்த தோள்களை உடையவனை மற்போர் செய்வதற்கு உரிய தோள் என்றேன்.யாருக்கும் ஒன்றும் கொடாத கைகளை உடையவனை வள்ளலே என்றென்.

 

இவ்வாறு இல்லாத குணங்களைச் சொன்ன உனக்கு இல்லை என்றான் அவன்.

நானும் நான் செய்த பிழையால் பேசாமல் செல்கின்றேன்.

சரி தானே!

 

தத்துவப் பிரகாசர் என்று ஒரு புலவர்.

தன்னைப் பற்றி விரிவாக அவர் குறிப்பிடுகிறார் மூன்று பாடல்களில்.

நினைவு கவி சொல்வோமெனச் சொலிப் பலகவிதை

      நினைவினைத் திருடி வையோம்

நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று

       நீள்வசைகள் பாட வறியோம்

பினையிளைய நாவல ருடன்பங்கு பேசிப்பிர

     பந்தங்கள் பாடிக் கொடோம்

பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய

      பேய்க்கிரந் தங்கள்  பேசோம்

 

இனிமைதரு பூருவத் துக்குருக் களைமறந்

        தெங்கணுந் தீட்சை யேற்கோம்

இட்டவொரு பேர்மாற்றி மாதமொரு பேரிட்

  டிடப்பெறோ மிறுமாந் திரோம்

தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்கணெஞ்

   சமுமுருகு கவிபா டுவோம்

சமணூல் களைப்பொரு ளெனக்கொளோந் திருஞான

    சம்பந்த ரடியர் நாமே

 

பாம்புகடி த்தாலதுவு நீக்க வல்லோம்

   பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்

வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்

    விற்ல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்

சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்

   தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை

தீம்பரைநல்ல் வராக்கிக் குணமுண் டாக்குந்

       திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே   

 

தத்துவப் பிரகாசர் மிகத் தெளிவாகத் தன் இயற்கை இயல்புகளைக் கூறி விட்டார்.

திருஞான சம்பந்தரின் அடியாராகிய் அவர் தேவாரம் தவிர வேறு

பேய்க் கிரந்தங்களை ஓத மாட்டார். சமணரின் நூல்களைப் படிக்க மாட்டார். மனிதர்களைப் பாட மாட்டார். பல கவிதைகளை உடனடியாகப் பாடுவதாகக் கூறி நினைவில் வைத்திருக்கும் கவிதைகளைத் திருட்டுக் கவிதைகளாகக் கூற மாட்டார். ஊருக்கு ஒரு பெயர் வைத்து ஏமாற்ற மாட்டார்.

அவரின் திறமைகளோ எல்லையற்ற ஒன்று. பாம்பு கடித்தால் அந்த விஷத்தை இறக்க வல்லவர். பிசாசு பிடித்தால் அதைப் போக்க வல்லவர். வேம்பு போலக் கசப்பாக இருந்தாலும அதை நீக்கிச் சுவையான் கறி படைக்க வல்லவர். மதம் பிடித்த யானையைக் கூட அடக்க வல்லவர். இறக்கும் போது கூடத் திடமாக பயப்படாமல் பேச வல்லவர். அவர் கற்காத கலைகள் ஒன்றுமே இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட அறிவாளிக்கும் முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

 

தீயவர்களை நல்லவராக்கி அவரை குணவான்களாக ஆக்கும் திறமை மட்டும் அவருக்கு இல்லை. அதனால் அவர் திகைக்கின்றார்.

 

புலவர்கள் பல விதம்.

எப்படியும் பாடும் புலவர்களைக் கண்டு பாண்டிய மன்னனுக்குப் பயம். எப்படிப் புகழ்ந்தாலும் மசியாத கஞ்சனைப் பாடி நொந்து போன கவிஞருக்கு அப்படிப்பட்டவர்களைக் கண்டால் பயம். எதையும் சாதிக்க வல்ல இன்னொரு கவிஞருக்கோ தீயவர்களைக் கண்டால் பயம். அவர்களை நல்லவராக்கும் திறம் மட்டும் அவருக்கு இல்லை!

 

 

அதாவது வல்லவன் யாராக இருந்தாலும் அவர்கள் தீமையே உருவாக இருப்பவரைத் திருத்தல் அரிது.

ஒவ்வொரு புலவரையும் பற்றி அறியும் போது சுவையான தகவல்கள் பல வருகின்றன.

அனைவரையும் படித்தால் நமக்குத் தான் ஆதாயம்!

 

 

ஆதாரம் : தனிச் செய்யுள் சிந்தாமணி மற்றும் தனிப்பாடல் திரட்டு ஆகிய நூல்கள்

 

(இவற்றில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளில் ஐந்தை மட்டும் மேலே பார்த்தோம்.)

***

 

What did the Vedic Hindus pray for? (Post No. 4209)

Written by London Swaminathan

 

Date: 13 September 2017

 

Time uploaded in London- 16-14

 

Post No. 4209

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Vedic Hindus prayed for wealth, long life, good and heroic sons, cows and horses. They prayed to destroy internal enemies ( violent atheists- violent non believers). They always aimed high; they asked hundred fold and thousand fold of everything; they talk of gold; they were very well organised and organised ploughing ceremonies with golden plough. They were great agriculturalists. They talk of paddy, barley, sugar cane ,sesame seeds etc. They were sons of the soil. Most of the plants and herbs they mentioned are tropical plants. They did not come from cold places. Rice and sesame seeds were part of their ceremonies. They were great mathematicians who always used decimal system in their prayers. The wonder of wonder is that they always prayed for ‘us’ not ‘me’. They conducted group prayers. Highly intelligent, well organised and heroic people were the Vedic Hindus. Their prayers are echoed in simple Sanskrit and Tamil hymns of today.

They even fixed the human life span as 100 years! A healthy and prosperous people were they!

 

Their three great contributions to the human race are

 

Cows

Horses and

Decimal system

 

No other – Egyptian, Babylonian, Mayan, Chinese- ancient books have such clear cut, venerable references to the above three. All these happened between 1500 BCE and 6000 BCE. Rig Veda is the most wonderful book in the world.

 

Following are few examples from over 1000 hymns and 10,000 mantras of the Rig Veda.

 

 

PRAYER FOR WEALTH

Bring us the wealth for we long 8-45-42

 

O Soma drinker, ever true, utterly hopeless though we be,

Do thou, O Indra, give us hope of beauteous horses and of kine in thousands, O most wealthy one

 

O Lord of strength, whose  jaws are strong, great deeds are thine, the powerful;

Do thou, O Indra,

give us hope of beauteous horses and of kine in thousands, O most wealthy one 1-29

 

O Indu, Soma, send us now great opulence from everyside.

Pour on us treasurers thousand fold 9-40-40

Pour out on us abundant food, when thou art pressed, O Indu, wealth

In kine and gold and steeds and strength 9-41-4

 

will ye then, Maruts, grant us riches, durable, rich in defying onslaught

A hundred, thousand fold, ever increasing 1-64-15

 

Knowing our chief felicity, O Agni bring hither ample riches to our nobles 7-1-24

 

O wondrous Indra, bring us wondrous riches 7-20-7

 

At he commencement of Ploughing, the following verse was repeated with an offering of fire:

 

Auspicious sita, come thou near; we venerate and worship thee

That thou mayst bless and prosper us and bring us fruits in abundantly 6-57-6

 

A hymn to Varuna, in which deliverance from sin is sought ends with,

“King, may I never lack well-ordered riches 2-2-8

PARDON FOR SINS

 

Sons, long life, wealth and victory over enemies are  frequent requests of Vedic Hindus. There are, however, scattered prayers for spiritual blessings, especially in hymns to Varuna. The Rig-Veda, v. 85, contains the following

 

“If we have sinned against the man who loves us, have ever wronged a brother, friend, or comrade,

The neighbour ever with us, or a stranger, O Varuna, remove from us the trespass. 5-85-7

 

If we, as gamesters, cheat at play, have cheated, done wrong unwittingly or sinned of purpose,

 

Cast all these sins away like loosened fetters, and, Varuna, let us be thine own beloved.”

 

“Absolve us from the sins of our fathers, and from those which we committed with our own bodies, It was not our own will, O Varuna, but some seduction which led us astray–an intoxicating draught, passion, dice, thoughtlessness. The stronger perverts the weaker even sleep brings un- righteousness. (Rig-Veda, 7- 86.)

 

 

 

Prayers of this nature chiefly occur in the hymns to Varuna, the principal of which have been quoted. A few other extracts may be given.

 

Aditi, Mitra, Varuna, forgive us however we have erred and sinned against you. 2. 27.14.

 

Prolong our days of life (ye Asvins), wipe out our trespasses.1-157-4

 

Most, youthful god (Agni) whatever sin through folly, here in the world of men we have committed.

 

Before  great Aditi make thou us sinless remit entirely, Agni our offences. 4-12-4

 

Let us not suffer for the sins of others, nor do the deed which ye. O Vasus, punish.” 6, 51. 7.

 

“What secret sin or open stirs their (Maruts) anger, that we implore the swift to forgive us.7 58. 5.

 

That he, the bounteous god (Brihaspati) may find us sinless, who giveth at a distance like a father.” 7- 97, 2

 

“Save us (Visvedevas) from uncommitted and committed sin, preserve us from all sin to-day for happiness 10-63-8

 

 

FUTURE WORLD

 

The references to this are few, and chiefly found in the Ninth and Tenth Books the Rig Veda. The great desire of the Hindus was to enjoy the present life.

 

“The givers of rich meads are made immortal; the givers of rich fees prolong their life time.” I. 125, 6

 

 

“May I attain to that his well loved mansion when men devoted to the gods are happy

 

We pray for rain, your boon (Mitra varuna) and immortality.” 5-63-2

 

“When I and Indra mount high up to the bright one’s place and home

We, having drunk of Meath, will reach his seat whose friends are three times seven.” 8-38-7

 

We have drunk Soma and became immortal; we have attained the light, the gods discovered.” 8- 48- 3.

 

High up in heaven abide the guerdon-givers; they who give dwell with the Sun for ever. They who give gold are blest with life eternal: they who give robes protect their lives, o Soma. 10. 107, 2.

 

xxx

PRAYER FOR RAINS

 

Lift up the mighty vessel; pour down water, and let the liberated streams rush forward

 

Saturate both the earth and heaven with fatness, and for the cows let there be drink abundant. 5. 83. 8

 

 

XXX

 

Sons

 

The following are a few examples

 

“ Men yearn for children to prolong their line, and are not disappointed in their hope.1-68-4

 

May the wealth giver (Agni) grant us wealth with heroes (sons)

May the wealth giver grant us food with offspring.” I, 96, 8

 

Help us to wealth, exceeding good and glorious, abundant, rich in children and their progeny 2-2-12

 

To us be born a son and spreading offspring 1-96-8

 

Brihaspati, may we be lords of riches, with noble progeny, and store of heroes 4. 50. 6.

xxx

 

LONG LIFE

 

Hindus reckoned their years by winters Probably in later hymns autumns are substituted. ( Hindus are most scientific; even today in North India and European countries, old people die more during winter. So Hindus prayed that they must survive the hard and cold winter)

 

 

 

 

Grant unto us to see a hundred Antumns; ours be the happy life of our forefathers.” II, 27, 10

 

Long let our life, O Agni, be extended 4, 12, 6.

 

Accept, o Maruts, graciously this hymn of mine that we may live a hundred winters through its power 5- 54, 15

 

Be gracious, Indra, let my days be lengthened

6, 47, 10

 

xxx

 

 

Preservation from Danger.

 

Amidst constant wars with the atheists, this request frequently occurs in the hymns.

But safety is also sought from other dangers, as snake bites.

 

In thy kind grace (Indra) find favour may we still be strong to expose not to any foe’s  attack.

 

With manifold assistance guard and succour us, and bring us to felicity.” 8-3- 2.

 

May  weathy Indra as our good protector, Lord of all treasures, favour us with succour

 

Baffle our foes, and give us rest and safety.6. 47, 12.

 

Savitar, god, send far away all sorrows and calamities

 

And send us only what is good.” 5. 82, 5

 

Give us not up to any evil

creature, as spoil to wolf or she- wolf, O ye holy 6, 51,6

 

May they, Earth, Aditi, Indra, Bhaga, Pushan increase our land, increase the fivefold people.

Giving good help, good refuge, goodly guidance, be they our good deliverers, good protectors 6-51-11

Not to the fanged that bites,not

to the toothless give not us up, thou conqueror to the spoiler 1-190-5

 

xxx

 

 

DESTRUCTION OF ENEMIES

 

 

Next to wealth, this is one of the most frequent petitions; some prayers include all who are unfriendly; others single out individuals

 

Destroy this ass, O Indra, who in tones discordant b rays to thee

 

Slay each reviler, and destroy him who in secret injures us.” 1-29-5

 

0 Agni,radiant one, to whom the holy oil is poured, burn up enemies whom fiends protect.1-12-5

 

Cast thy dart knowing, thunderer, at the Dasyu I. 103, 3

 

Whatever mortal with the power of demons fain would injure us.

 

May be impetuous, suffer harm by his own deeds, 8. 18.3

 

Crunch up on  everyside the dogs who bark at us slay ye our foes, O Asvins. I. 182, 4.

 

Consume for ever all demons and sorcerers, consume thou each devouring fiend. I. 36, 20.

 

Drive from us with thy tongue, o god, the man who doeth evil deeds

 

The mortal who would strike us dead.” 6, 16, 32.

 

  1. Annihilate the fools, slay them and burn them up. Chase them away from us, pierce the voracious ones.
  2. Against the foe of prayer, devourer of raw flesh, the vile fiend, fierce of eye, keep ye perpetual hate.

 

  1. The fiend O Agni, who designs to injure the essence of our food, kine, steeds, of bodies,

May he, the adversary, thief, and robber, sink to destruction both himself and offspring.

 

  1. “May be he swept way, himself and children. May all the three earths press him down beneath them.

 

May his fair glory, O ye gods, be blighted, who in the day or night would fain destroy us. VII 104

 

Quotations have been given from Hymn 87 Book X. addressed to Agni, the Slayer of Rakshasas.

 

 

–SUBHAM–

ரிக்வேதத்தில் பாவ மன்னிப்பு துதிகள் (Post No.4208)

Written by London Swaminathan

 

Date: 13 September 2017

 

Time uploaded in London- 6-54 am

 

Post No. 4208

 

Pictures are taken from various sources; thanks.

 

மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா  பூ ஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆ த்ம  ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.

 

கிறிஸ்தவமதம் போன்றவற்றில் பாவ மன்னிப்பு இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெட்டிக்குள் ஒளிந்து கொண்டு பக்கத்துப் பெட்டியில் நிற்கும் பாதிரிமாரிடம் சொல்லுவதோடு நின்றுவிடும். இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும்  “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.

 

ஆனால் இந்தக் கட்டுரையில் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் (கி.மு1500 முதல் கிமு.6000) உள்ள சில பாவ மன்னிப்பு துதிகளைக் காண்போம்.

 

நாங்கள் எங்களை அன்பாக நேசிக்கும் மனிதனுக்கு எதிராகவோ சகோதரனுக்கு எதிராகவோ, நண்பனுக்கு எதிராகவோ, சகாவுக்கு (கூட்டாளி) எதிராகவோ, எங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவனுக்கு எதிராகவோ, முன்பின் தெரியாத ஒருவனுக்கு எதிராகவோ பாவம் (தீங்கு) செய்திருந்தால், ஓ வருண பகவானே அவைகளை நீக்கு வாயாக.

 

விளையாட்டில் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருந்தாலோ  அவற்றையும் நீக்குக

 

இந்த எல்லா பாவங்களையும், கட்டுகளை அவிழ்ப்பது போல அவிழ்த்துவிடு; ஓ வருண பகவானே என்றைக்கும் உன் அன்புக்குப் பாத்திரமானவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்- 5-85-7/8

 

 

எங்கள் தந்தையர் செய்த பாவவங்களில் இருந்து எங்களை விடுவிப்பாயாக; எங்கள் தேகத்தினால் செய்த பாவங்களிலிருந்தும் விடுவி.

 

நாங்கள் திட்டமிட்டு செய்த பாவம் இல்லை; ஓ வருணா! நாங்கள் குடித்த பானமோ, உணர்ச்சிவசமோ, சூதாட்டமோ, சிந்திக்க மறந்ததாலோ தவறான வழியில் செலுத்தப்பட்டுவிட்டோம்; வலுவானவர், பலவீனமானவரை தீய வழிகளில் செலுத்துகின்றனர்; தூக்கம் கூட அதர்மத்துக்கு வழிகோலுகிறது – 7-86

 

 

அதிதி, மித்ரா, வருணா எவ்வளவு பாவங்களை உங்களுக்கு எதிராகச் செய்தாலும்  எங்களை மன்னித்து விடுக 2-27-14

 

அஸ்வினி தேவர்களே! எங்கள் வாழ்நாட்க ளை நீட்டியுங்கள் பாவங்களை துடைத்து அழியுங்கள் 1-157-4

 

அழகிய இளம் கடவுள் அக்னி தேவனே! இந்த மானுட உலகத்தில் அறிவீனத்தால் நாங்கள் இழைத்த பாவங்களை

 

பெருமைமிகு அதிதிக்கு முன்னால் அடியோடு அகற்றிவிடு; நாங்கள் செய்த கொடுமைகளைத் துடைத்தொழி 4-12-4

 

மற்றவர் செய்த பாவங்களுக்காக எங்க ளை  வருத்தாதீர்கள் வசுக்களே: எங்க ளைத் தண்டிக்காதீர்கள் 6-51-7

மருத் தேவதைகளே! நாங்கள் ரஹசியமாகவோ பகிரங்கமாகவோ செய்த எந்த பாவச் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டிவிட்டது? விரைவாக அவைகளை அழிப்பாயாக -7-58-5

அந்த எல்லையற்ற வ ளம்பெற்ற பிருஹஸ்பதி எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்யட்டும்; ஒரு தந்தை போல எங்களைக் கவனிக்கட்டும் 7-97-2

 

செய்த பாவவங்களில் இருந்தும் செய்யாத பாவங்களில் இருந்தும் எங்களைப் காப்பாற்றுங்கள் விஸ்வே தேவர்களே! இன்று எங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை அருளுக 10-63-8

 

 

எவ்வளவு நேர்மையான முறையீடுகள்!

எவ்வளவு அழகான சொற்கள்;

அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருந்தி வெளியிட்ட மனக்குமுறல்கள்!

 

உலகில் பாபிலோனிய, எகிப்திய கிரேக்க நாகரிகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவ மன்னிப்பு துதிகள் உண்டு.

 

ஆயினும் கி.மு 3100ல் வியாசரால் நான்காக வகுக்கப்பட்ட வேதங்களில் பழமையான ரிக் வேதத்தில் கோர்வையாக, தொகுப்பாக துதிகள் இருப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்கில!

 

 

சுபம்

 

TAGS: வேதம், பாவ மன்னிப்பு, துதிகள்

 

கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்! (Post No.4207)

Written  by S.NAGARAJAN

 

Date: 13 September 2017

 

Time uploaded in London-5-14 am

 

Post No. 4207

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!

 

ச.நாகராஜன்

 

வள்ளுவரின் காமத்துப் பாலில் தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள் இது:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம்மூன்றும் உடைத்து      (குறள் 1085)

 

உயிரை எடுக்க வருவதால் யமனோ?

கூர்மையாகப் பார்ப்பதால் கண்ணோ?

மருண்டு பார்ப்பதால் மானோ?

இம்மூன்றின் தன்மையும் இப்பெண்ணின் கண்களில் உள்ளன.

 

பெண்களின் கண்களுக்குள்ள சக்தியை வள்ளுவர் அழகுற வர்ணித்து விட்டார் ஒரே குறளில்.

அழகிய பெண் ஒருத்தியைப் பார்க்கிறார் புலவர் ஒருவர்.

அவள் கண்ணழகில் அசந்து போகிறார்.

விளைவு ஒரு பாடல்.

பாடியவர் நமச்சிவாயப் புலவர்.

பாடல் இது தான்:

 

 

மஞ்சுமஞ் சுங்கைப் பரராஜ சேகர மன்னன்வெற்பில்

பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி

அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட  லஞ்சுமஞ்சும்

நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே

              (தனிப்பாடல் திரட்டுப் பாடல்)

 

 

சொற்கள் கொஞ்சிக் கொஞ்சி விளையாடும் இப்பாடலின் பொருளைப் பார்ப்போமா:

 

மஞ்சும் – மேகமும்

அஞ்சும் – அஞ்சும்படியான

கை –  கொடைக் கையினை உடைய

பரராஜ சேகர மன்னன் வெற்பில் – பரராஜ சேகரன் என்னும் அரசனது மலையில் உள்ள

பஞ்சும் – செம்பஞ்சும்

அஞ்சும் – அஞ்சும்படியான

பதம் – பாதங்களை உடைய

பாவை நல்லாய் – பிரதிமை போன்ற பெண்ணே

படை – சேனையை உடை

வேள் – மன்மனது

 

பகழி அஞ்சும் அஞ்சும் – பாணங்களும் அஞ்சும் அஞ்சும்

கயல் அஞ்சும் அஞ்சும் – சேல் மீன்களும் அஞ்சும் அஞ்சும்

கடல் அஞ்சும் அஞ்சும் – கடலும் அஞ்சும் அஞ்சும்

நஞ்சும் அஞ்சும் – விஷமும் அஞ்சும்

உனது நயனங்கள் – உனது கண்கள்

வெற்றி வேலோ – வெற்றி வேல்களோ?!!

 

பாடலில் அஞ்சும் என்ற சொல் ஒன்பது இடங்களில் வருவதோடு மஞ்சு, பஞ்சு, நஞ்சு போன்ற சொற்கள் வேறு இணைந்து வ்ருவதால் சொல்லழகும் பொருளழகும் ஓசை நயமும் கூடி இன்பம் தருகின்றது.

பெண்ணின் கண்ணழகை வர்ணிக்க வந்த புலவரின் பாடலின் சொல்லழகில் சொக்கிப் போகிறோம் நாம்!

***

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206)

Written by London Swaminathan

 

Date: 12 September 2017

 

Time uploaded in London- 17-35

 

Post No. 4206

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு சொல்லப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு ஒரு சமுதாயம் முன்னேறியிருந்தால் இந்த அளவுக்குப் பாட முடியும் என்று சிந்திக்க வேண்டும். கி.மு 1400 முதல் கி.மு 6000 வரை தேதி குறிப்பிட்ட வேதத்தில் என்ன அற்புதமான சிந்தனை! உலகின் எந்த பழைய நூலிலும் இப்படி ஆயுள் நிர்ணயிக்கப்படவில்லை.

ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த யஜுர் வேதத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க, மகிழ்ச்சியுடன் வாழ்க என்று பெரிய மந்திரமே உள்ளது.

(பஸ்யேம சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் சரதம், நந்தாம சரதஸ்சதம், மோதாம சரதஸ்சதம், ப்ரப்ரவாம சரதஸ்சதம்)

 

“100 சரத்காலங்களைக் காண அருள்வாயாக; எங்கள் முன்னோர்கள் வாழ்ந்ததுபோல இன்ப வாழ்வைத் தருக (2-27-10)

எங்களுக்கு நீண்ட ஆயுளைத் தா, ஓ அக்னி! 4-12-6

ஓ மருத் தேவர்களே, என்னுடைய இந்த அன்பான பாடலைக் கேள்; இந்தப் பிரார்த்தனை மூலம் நாங்கள் 100 குளிர் காலங்களைக் காண்போமாக 5-54-5

 

இந்திரா, அன்பு காட்டுக! என்னுடைய வாழ் நாட்கள் நீடிக்கட்டும் 6-47-10

 

இவ்வாறு மண்டலம் தோறும் நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகள் இருக்கின்றன. மேலே கூறியவை சில எடுத்துக்காட்டுகளே.

நல்ல பிள்ளைகளை அருளுக!

 

“தங்கள் வம்சக் கொடி தொடர்வதற்காக மனிதர்கள் பிள்ளைகளுக்காக ஏங்குகிறார்கள்; அவர்கள் நம்பிக்கை பொய்ப்பதில்லை 1-68-4

 

செல்வம் தரும் அக்னிதேவன் செல்வத்தையும் வீரர்களையும் (வீர மகன்கள்) அளிக்கட்டும் 1-96-8

செல்வம் தருவோன் எங்களுக்கு உணவையும் பிள்ளைகளையும் அருளட்டும் 1-96-8

 

செல்வம், மிக நல்ல நல்ல, புகழ் வாய்ந்த அளவற்ற பிள்ளைகளையும் வம்ச விருத்தியையும் உதவுவாயாக 2-2-12

எங்களுக்கு ஒரு பிள்ளை பிறக்கட்டும், அவன் மூலம் வம்சம் பெருகட்டும். அக்னியே! இவ்வாறு அருள் செய்க.

 

பிருஹஸ்பதியே! நங்கள் செல்வங்களுக்கு அதிபதிகளாகட்டும்; நல்ல வம்சம் வளரட்டும் பல குதிரைகள் கிடைக்கட்டும் 4-50-6

 

இவ்வறு செல்வம், நீண்ட ஆயுள், நல்ல வம்சம் இவைகள் வேத கால ரிஷிகளின் பிரார்த்தனையில் அடக்கம்.

 

பெரும்பாலான மந்த்ரங்கள் எங்களுக்கு என்று பன்மையிலேயே (plural) இருக்கும். சில மந்திரங்களே எனக்கு என்று ஒருமையில் இருக்கும்.

 

ஆகையால் அவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்வதே வழக்கம். இது நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும். வேறு எந்த நூல்களிலும் 3500 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பிரார்த்தனைகள் இல்லை

 

எல்லோரும் கோவணாண்டிகளாக நாகரீகமற்ற நிலையில் ஓடிச் சாடிய போது வேத கால மக்கள் பாஸிட்டிவ் எண்ணங்க ளைப்( Positive thoughts) பரப்பும் கூட்டுப் பிரார்த்தனையில் அதுவும் டெஸிமல் சிஸ்டம் தெரிந்த (100, 1000, 10,000…. என்று) கணக்குப் புலிகளாகப் பிரார்த்தித்தனர்.

 

அடுத்த கட்டுரையில் எதிரிகள் ஒழிப்பு, பாவ மன்னிப்பு, ஆபத்திலிருந்து காத்தல் ஆகிய துதிகளைக் காண்போம்.

 

மந்திரங்களின் எண்கள் முழுதும் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேத மண்டல, மந்திர எண்கள் ஆகும்

ரிக்வேதத்தில் பத்து மண்டலங்கள் உண்டு. ஆயிரத்துக்கும் மேலான துதிகளும் 10,000க்கும் மேலான மந்திரங்களும் உண்டு.

TAGS: வேத துதிகள், நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகள், வீர மகன்கள்

 

–SUBHAM–