ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***

பசு மாட்டுக்கு பள பள தோல் வந்தது எப்படி? (Post No.4069)

Translated by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 14-46
Post No. 4069

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பசு மாட்டுக்கு கொம்பும் குளம்பும் வந்தது எப்படி என்பதை போன வாரம் சொன்னேன். இன்று அதற்கு பளபளப்பான தோல் எப்படி வந்தது என்று பார்ப்போம். இது சதபத பிராமண (3-1-2-16) த்தில் உள்ள கதை.

 

“பசு மாட்டின் மீதுள்ள அதே தோல்தான் முன்னர் மனிதன் மீது இருந்தது. தேவர்கள் சொன்னார்கள்: ‘இந்த பூமியில் உள்ள எல்லோருக்கும் உணவு மற்றும்  வேறு பொருள்களை தருவது பசுதான்; ஆகையால் நாம் இப்போது மனிதன் மீதுள்ள தோலை எடுத்து பசுமாட்டுக்குப் போர்த்துவோம். அப்படிச் செய்தால் அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கும்’

 

இதன் பிரகாரம் மனிதனின் தோலை உரித்து பசு மாட்டின் மீது போர்த்தினார்கள்; அதற்குப் பின்னர்,  அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கியது

 

மனிதன் தோல் உரிக்கப்பட்டதால், அவனை ஒரு புல்லோ, முள்ளோ அல்லது வேறு ஏதாவதோ  அறுத்தால் அவன் மீது ரத்தம் வருகிறது. பின்னர் தேவர்கள் அவனுக்கு தோல் என்னும் ( தோலுக்குப் பதிலாக) உடையை அணிவித்தார்கள். இதனால்தான் மனிதன் மட்டும் உடை அணிகிறான். ஆகையால் ஒருவன் சரியாக ஆடை அணிய வேண்டும். அப்போதுதான் அவன் முழுமை அடைகிறான். இதனால்தான் அவலட்சணமான மனிதனாக இருந்தாலும் எல்லோரும் உடை அணிவதை  எதிர் பார்க்கிறார்கள்; அதுதான் அவனுடைய தோல்.

 

ஒரு பசு மாட்டிற்கு முன்னால் கூட அவன் நிர்வாணமாக நிற்கக்கூடாது ஏனெனில் பசுமாடு பயந்து ஓடிவிடும்; மனிதன் தன் மீதுள்ள ‘அவனுடைய தோலை’ எடுத்துக் கொண்டு விடுவானோ என்று அதற்கு அச்சம்.

 

 

ஆகையால்தான் நல்ல உடை அணிந்தவன் மீது பசுக்கள் அன்புடன் இருக்கின்றன.

 

இந்தக் கதையில் பல நீதிகள் உள்ளன. மேம்போக்காகப் பார்த்தால் “குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம், பட்டனம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்” என்ற சின்னக் குழந்தை கதை போல இருக்கும். ஆனால் அஸ்வமேதம், ராஜசூயம் வாஜபேயம் போன்ற மாபெரும் யக்ஞங்களை விவாதிக்கும் – விவரிக்கும் — சதபத பிராமண நூலில் இது இருப்பதால் இது ரகசிய மொழியில் – மறை மொழியில் சொல்லப்பட்ட கதை என்பது விளங்கும்

 

யாராவது நிர்வாணமாக நின்றால் பசுக்கள் பயப்படுமாம். இந்த ஆள் உடை இல்லாமல் வ ந்தி      ருக்கிறான்; நம்முடைய உடைகளை (தோல்) எடுத்துக்கொள்வான் என்று நினைத்து ஓடிவிடுமாம்.

 

நல்ல உடை அணிந்தவர்கள் இடம் பசுக்கள் அன்பு பாராட்டுவது இதனால்தான்.

 

இந்தக் கதையிலிருந்து பெறப்படும் நீதிகள் என்ன?

  1. மனிதன் தோலைப் போர்த்துமளவுக்கு பசு உயர்ந்த பிராணி; அது மனிதனுக்கு நிகரானது. இதை ருசுபிக்கும் வகையில் நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் (எண்.9) முதல் சிலப்பதிகாரம், தேவாரம் வரை பசுவையும் பார்ப்பனனையும் இணைத்துப் பேசியே புகழ்கின்றன.

 

2.இரண்டாவதாக பசுவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; ஒர் பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தர வேண்டும்; யாரும் நிர்வாணமாக நிற்கக் கூடாது அதற்காகத்தான் தேவர்கள் உடைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

 

(மனு ஸ்ம்ருதியும் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்; பெண்களை அழ வைக்கும் எந்தக் குடும்பமும் வேருடன் அழியும் என்று எச்சரிக்கிறார்.)

 

பசு ஒரு புனிதமான பிராணி மட்டும் அல்ல; மிகவும் உபயோகப்படும் மிருகம். அதன் பால், வெண்ணெய், மூத்திரம், சாணி, தயிர் ஆகிய எல்லா வற்றையும் இந்துக்கள் அன்றாடம் பயன்படுத்துவர்.

 

எல்லாப் பிராணிகளுக்கும் இந்துக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுத்தாலும் பசுவுக்கு தனி இடம்; எறும்பு முதல் யானை வரை – என்ற மரபு வாக்கியம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது. இத்தனைக்கும் உதவ இந்துக்கள் தினமும் ஐவேள்வி (பஞ்ச மஹா யக்ஞம்) செய்கிறார்கள். பசுவுக்கும் யானைக்கும் மட்டும் பூஜையும் செய்வார்கள்.

-சுபம்–

 

A Vedic Story: How did the Cow get a Shiny Skin? (Post No.4068)

Compiled by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 10-20 am
Post No. 4068

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

There is a symbolic story in the Satapata Brahmana (3-1-2-16)

“That same skin which belongs to the cow was originally on man. The gods speak, ‘verily the cow supports everything here on earth; come, let us put on the cow that skin which is now on man; therewith she will be able to  endure rain and cold and heat’.

Accordingly having flayed man, they put that skin on the cow, and therewith now she endures rain and cold and heat. For man was indeed flayed; and hence wherever a stalk of grass or some other object cuts him, the blood trickles out. They then put that skin, the garment on him; and for this reason none but man wears a garment, it having been put on him as his skin. Hence also one should take care to be properly clad, so that he may be completely endued with his own skin. Hence also people like to see even an ugly person properly clad, since he is endued with his own skin. Let him then not be naked in the presence of a cow, for the cow knows that she wears his skin and runs away for fear lest he should take the sin from her. hence also cows draw fondly near to one who is properly clad”

 

 

Taittiriya Brahmana has the following passage:

“That a calf extorted a promise from certain sacrifices not to milk a cow within the first ten days after calving, and to let the calf suck for a fifth of the day after milking, and that for all time the promise has been honoured” (2-1-1-4)

Silence is observed when cows are milked.

My comments:

This story shows that the cow is the most sacred animal. It is needless to say that is the most useful animal. The cow is treated like a human being, particularly like a woman, who should be given all respect. Manu Smrti says that a woman must be respected, adorned and adored; if she is made to cry the family will be destroyed lock stock and barrel.

Probably they want us to understand that cows and human beings are same when it comes to giving respect. In Sangam Tamil literature and in the later devotional Tamil literature Brahmins and cows are treated equally.

 

This story can be interpreted in many ways. One should not misbehave in front of the cows or with the cows. One should also note that no other animal is dealt with in this way. Hindus gave respect to all animals  — Sanskrit and Tamil literature has stock phrase “from ant to elephant”—- the animals from plankton to whale should be fed and respected. Hindus do it in life every day. They do use flour to feed the ants when they draw kolams (rangoli) in front of their houses. It is a common decoration seen in front of all the houses in South India. This is part of Pancha Yajna (five sacrifices0 done by all orthodox Hindus.

Also read

How did Cow get Hoofs and Horns? A Vedic Story (Post No.4059)

Posted on  7 July 2017

–Subham–

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்! (Post No.4067)

Written by S NAGARAJAN

 

Date: 10 July 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4067

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பிராத்தனை இரகசியம்

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்!

ச.நாகராஜன்

 

பிரார்த்தனையில் மகான்களும் ரிஷிகளும் வேண்டுகின்ற பான்மையே தனி. ஆகவே தான் அவர்களுடைய பிரார்த்தனையையே நாம் சொல்லி உய்ய வழி தேடுகிறோம். புதிதாகச் சொற்களைக் கோர்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

 

அருணகிரிநாதரின் திருப்புகழ் இந்த வகையில் ஒரு தனித் தன்மை கொண்டதாக இலங்குகிறது.

எடுத்துக்காட்டாக இரு இடங்களில் வரும் இரண்டிரண்டான பிரார்த்தனை வேண்டுகோளை இங்கு பார்க்கலாம்.

 

 “மதியால் வித்தகனாகி

மனதால் உத்தமனாகி” (கருவூரில் பாடியது – மதியால் வித்தகனாகி எனத் தொடங்கும் பாடல்)

 

இருக்க வரம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

மதியால் ஒருவன் வித்தகன். ஆனால் அவன் உத்தமன் இல்லை. மகா புத்திசாலித்தனத்தை ஊரை ஏய்ப்பதில் பயன்படுத்தி என்ன பிரயோஜனம்?

 

மனதால் ஒருவன் உத்தமன். ஆனால் சாமர்த்தியசாலி இல்லை. ஊரார் எல்லோரும் அவன் மேல் “குதிரை ஏற”த்தானே செய்வர்.

 

ஆகவே மனதால் உத்தமனாக இருக்கும் ஒருவன் மதியால் வித்தகனாக இருந்தால் தான் அவனும் செழிப்பான். ஊரும் செழிக்கும்.

 

அற்புதமான இந்த இரட்டை வேண்டுகோளை அருணகிரிநாதர் முன் வைக்கிறார்.

 

நானும் வாழ வேண்டும்; நான் சார்ந்திருக்கும்ச் சமுதாயமும் வாழ வேண்டும் என்ற அற்புதமான இந்தக் கொள்கையை என்ன ‘இஸம்’ என்று பிராண்ட் செய்வது.

 

கம்யூனிஸம். சோஷலிஸம் என்று பல இஸங்களைச் சொன்னாலும் அருணகிரிநாதரிஸம் முன்னால் எடுபடுமா, என்ன?

இன்னொரு இடத்தைப் பார்ப்போம்.

“அறிவால் அறிந்து உன்

இரு தாள் இறைஞ்சும்”

அடியார் இடைஞ்சல் களைவோனே

என இப்படி முருகனின் அருள் திறத்தைப் பாடுகிறார். (திருச்செந்தூரில் பாடியது – விறல்மாரனைந்து எனத் தொடங்கும் பாடல்)

 

அறிவால் அறிந்து முருகன் இருதாள் இறைஞ்சும் படியான வாழ்க்கை தர வரம் வேண்டுகிறார் அவர்.

 

ஒருவன் மிகப் பெரிய விஞ்ஞானி. அவன் அறிவால் ஆராயாத விஷயமே இல்லை. ஆனால் அவனுக்கு இறைவன் என்ற மஹாசக்தியின் மீது நம்பிக்கை இல்லை. அவன் இருந்து என்ன பிரயோஜனம். அவன் இருந்தும் இறந்தவனே!

 

 

இன்னொருவன் சதா இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நாள் நிச்சயம் அவன் இறைவன் அருளால் உய்வைப் பெறுவான். ஆனால் மஹாசக்தியின் உண்மையை அவன் அறிந்து கொண்டால், அந்த அறிவின் அடிப்படையில் தன் பிரார்த்தனையை அவன் புரிந்தால் அவனுக்கு ‘இன்ஸ்டண்ட்  அருள்’ அல்லவா கிடைக்கும்?!

இதைத் தான் அருணகிரிநாதர் விரும்புகிறார்.

இறைவன் தந்த அறிவு அவனை அறிவதற்கே.

 

 

கற்றதனால் ஆய பயன் என்கொல்?

வாலறிவன் நற்றாள் தொழார் எனின் (வள்ளுவரின் குறள்)

 

 

இப்படி இரண்டிரண்டாக அவர் வேண்டுவதைத் திருப்புகழ் நெடுகக் காணலாம்.

 

ஆகவே தான் அந்த அருளாளரின் திருப்புகழைப் பாடினால் அனைத்தும் நமக்குச் சேரும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

 

மகாத்மா காந்திஜி கூட மிக மோசமான பாவங்களைப் பட்டியலிட்ட போது இப்படி இரு விஷயங்களை இணைத்தே பட்டியலிட்டார்.

அந்த ஏழு பாவங்கள்:

 

உழைக்காமல் வரும் ஊதியம்

Wealth without Work

மனசாட்சி இல்லாத இன்பம்

Pleasure without Conscience

ஒழுக்கம் இல்லாத அறிவு

Knowledge without Character

அறப்பண்பு இல்லாத வாணிபம்

Commerce without Morality

 

மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் Science without Humanity

தியாகம் இல்லாத மதம்

Religion without Sacrifice

கொள்கை இல்லாத அரசியல்

Politics without Principle

 

இந்த ஏழு பாவங்களை விலக்கிய சமுதாயம் மேன்மையுறும்.

 

பெரியோர்கள், அருளாளர்கள், மகான்களின் வாக்குகளில் எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது என்பதை எண்ணும் போது மனம் உவகையுறுகிறது.

அவர்கள் கூறிய தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தங்களே, வேத மந்திரங்களே, உபநிடதங்களே நமக்குப் போதும். புதிதாக ஒன்றையும் புனைந்து பிரார்த்தனை செய்ய அவசியமில்லை என்று ஆகிறது.

 

 

ஆயிரக்கணக்கான நாமாவளிகள், பாடல்கள், தோத்திரங்கள், மந்திரங்கள் உள்ளன.

நமக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அறிவையும் பக்தியையும் இணைத்தவர்களாக ஆவோம்!

அவர்களின் பிரார்த்தனைகளை வாயால் ஓதி மனதால் இருத்தி முன்னேறுவோமாக!

***

 

 

சேலைக்கும் மாலைக்கும் எத்தனை பெயர்கள்? (Post No.4066)

Written by London Swaminathan

Date: 9 July 2017

Time uploaded in London- 16-55

Post No. 4066

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நான் பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் (55 ஆண்டுகளுக்கு முன்னர்) மாலை வேளை இலவச சம்ஸ்கிருத வகுப்புக்குப் படிக்க்ச் சென்றபோது முதல் வகுப்பிலேயே எங்களுக்கு அமரகோஷம் என்னும் நிகண்டை மனப்பாடம் செய்ய வைத்தனர். அதை உலகின் முதல் திஸாரஸ் THESARUS (ஒரு பொருட் குறித்த பல சொற்கள் )என்று சொல்லலாம்.

இது போல சங்கரமடம் போன்றவற்றிலும் எல்லோருக்கும் சொல்லித் தருவர் என்று கேள்வி. உலகில் இப்பேற்பட்ட கல்வி முறை எங்கும் கிடையாது. முதலில் மனப்பாடம் செய்ய வைத்துவிட்டு, வயதானவுடன் தானாகப் புரிந்துகொள்ளச் செய்வர். பெரிய வேதங்களையே இப்படி மனப்பாடம் செய்ய வைக்கும் போது நிகண்டுகள் எம்மாத்திரம்!

“ஸார்! புத்தகம் இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் என்று நாங்கள் அங்கலாய்ப்போம்; போதும், போதும்! நான் சொல்லுவதைத் திருப்பிச் சொல், அது போதும்!” என்பார் எங்கள் ஆசிரியர் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் (இது மதுரை மேலச் சித்திரை வீதியில் ஒரு ஆடிட்டர் வீட்டின் வறாண்டாவில் நடந்த சம்ஸ்கிருத வகுப்பு)

தமிழிலும் பல நிகண்டுகள் உள்ளன. ஆனால் இதை மனப்பாடம் செய்ய (வாய்வழியாக by the word of mouth) வழி செய்தனரா என்பது எனக்குத் தெரியாது.

இதோ சேலைக்கும் மாலைக்கும் ஒரு நிகண்டில் எத்தனை பெயர்கள் பாருங்கள்!

மடிதுகில் கோசிகங் காழகஞ் சேலை
புடைவை கலிகந் தானை தூசு – படமாடை
புட்ட மறுவை புனை சாடி யம்பரம்
பட்டுடை கூறை படாம்

மடி, துகில், கோசிகம், காழகம், சேலை, புடைவை, தானை, கலிங்கம், தூசு, படம், ஆடை, பட்டு, புனை, அறுவை, சாடி, அம்பரம், புட்டம், கூறை, படாம், உடை

 

மாலை
தொங்கல் பிணைய றொடைவண்டு சூழணிய
லங்கண்ணி செந்தேன் மலியலங்கல்- பைங்கோதை தேமனொலிய றெறிய லிலம்பகம் பூந்
தாம மொளிர் மாலை தார்

பொருள்:-

தொங்கல், பிணையல், தொடை, அணியல், கண்ணி, அலங்கல், கோதை, ஒலியல், தெரியல், இலம்பகம், தாமம், தார், மாலை.

கண்ணி, கோதை, அலங்கல், தாமம், தார் என்பன அதிகம் புழங்கும் சொற்கள். மதுரையில் பூக்காரிகள் முதற்கொண்டு கண்ணி என்ற சொல்லைப் பயன்படுத்துவர்.

 

எச்சரிக்கை
தமிழ் அகராதி, தமிழ் நிகண்டு என்றெலாம் பெயரிட்ட புத்தகங்களை எடுத்தால் அதில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் இருக்கும். அந்தக் காலத்தில் இந்த இரண்டு மொழிகளையும் இரு கண் போலப் பாவித்ததால் அவர்கள் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அஞ்சவில்லை. இன்றும் எந்த இந்தியனும் ஐந்து நிமிடம் கூட சம்ஸ்கிருதக் கலப்பில்லமல் பேச முடியாது. திருகுறளில் சம்ஸ்கிருதச் சொல் இல்லாத அதிகாரம் கிடையாது!

ஒரு மொழியில் கலர்களுக்கு (வர்ணம்) எத்தனை சொற்கள் உண்டு என்பதை வைத்து அந்த மொழியின் வளத்தைக் கணக்கிடும் முறையும் உண்டு.சில மலைஜாதியினர் மொழிகளில் வெள்ளை அல்லது கருப்பு என்ற இரண்டு சொற்களே உண்டு. மற்ற கலர்களை அவர்கள் பழம், பூ இவைகளைச் சொல்லித்தான் குறிப்பிட வேண்டும். பெயிண்ட் கடைக்கு (Paint Shop) போனால் ஒரு புத்தகம் கொடுப்பர். அதில் எத்தனை வகையான வர்ண பெயிண்ட் கிடைக்கும் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். இவ்வளவு பெயர்களில் வர்ணங்கள் இருக்கிறதா என்று வியப்போம். ஆனால் ஆங்கிலம் என்பது கலப்பட மொழி; தூய மொழி அல்ல. எல்லா மொழிகளிலிருந்தும் கூசாமல் கடன் வாங்கி வளர்த்த மொழி.
இதோ வெள்ளைப் பாட்டு
வெள்ளை என்பதற்கு எத்தனை சொற்கள் என்று பாருங்கள்

இவற்றில் ஆடை, உடை, சேலை புடைவை முதலியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம்.அறுவை, காழகம், கலிங்கம் என்பன பழந்தமிழ் நூல்களில் வருகின்றன. கூறை என்பதை பிராமணர் வீட்டுக் கல்யாணங்களில் இன்றும் பயன்படுத்துகின்றனர். அம்பரம் என்பதை திகம்பரர் (வானமே ஆடை), ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடையினர்) என்ற சமணப் பிரிவுகளில் காண்கிறோம். ஆக நிகண்டை மனப்பாடம் செய்தால் செய்யுட்கள் எளிதில் புரியும். அம்பரம் திருப்பாவையிலும் வரும்.

 

பாண்டுரங் கௌரஞ் சிதஞ்சுவே தந்தவளம்
பாண்டரம் பால் வாலருச்சனம் – பாண்டு
சுசியவதாதஞ் சுதை சுப்பிரமே
விசதம் விளர்க்கம் வெளுப்பு

பொருள்
பாண்டுரம், கௌரம், சிதம், சுவேதம், தவளம், பாண்டரம், பால், வால், அருச்சசுனம், பாண்டு, சுசி, அவதாதம், சுதை, சுப்பிரம், விசதம், விளர் கம், வெளுப்பு (வெள்ளை)

இவைகளில் பாண்டு (ரோகம்) வால், பால், தவளம், கௌரம் என்பன அதிகம் புழங்கும் சொற்கள்.
ஸ்வேத என்ற சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான ‘ஸ்’வைட் (WHITE) வந்தது!

வளமான தமிழ் மொழியை வளர்க்க நிகண்டுகளைக் காப்போம், படிப்போம்.

தமிழ் வாழ்க! வளர்க!!

–SUBHAM—

 

Hindu’s Life according to Atharva Veda- Part 2 (Post No.4065)

Compiled by London Swaminathan
Date: 9 July 2017
Time uploaded in London- 12-29
Post No. 4065

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

He was a man of importance in his village, and when he attended the assembly — which may have been a kind of Municipal Committee or Council his great ambition was to  command respect and attention aa a speaker, and with this view he fortified himself with charm and magic herb that inspired eloquence, and enabled him to overpower his opponents in debates.

 

 

His life on the whole somewhat monotonous and dull but it seems to have suited him as he was continually praying that it might be extended to its full natural duration of hundred years.

 

 

At the end of that time, with his sons and his son’s children around him, he was ready to pass away to the felicity  that  awaited him in the world of the Fathers

 

 

The small merchant or trader lived a less settled life and saw some of the world than the agriculturist. We see him on the point of starting on a journey for business purposes with his little stock of goods.

 

He first propitiates Indra who as a merchant also, the God who trades and traffics with his worshippers, requiring and receiving prayer and oblations in exchange for the blessings which he sends, and who will now free the travelling merchants from wild beasts, robbers, and enemies of every kind.

 

 

He prays also to many other deities that he may make a rich profit and gain a hundred treasures, and commits the care of his children and cattle in his absence to Agni, God of all men. His ritual is an extensive one and he may be about to journey to all points of the compass, and he must accordingly conciliate all the divine Warders of  heavenly regions He has  to recite some ten hymns of Book VI invoking the aid of all protecting deities, not forgetting to consult the Weather Prophet, and to obtain from him the promise of auspicious mornings, noons, and nights. He bids an affectionate farewell to the houses of his village, and departs on his way encouraged by the hymn which ensures him a safe and successful journey.

 

In due time he returns having bartered his wares for the treasurers of distant places, for bdellium and other fragrant gums and unguents, for Kushta and other foreign plants and drugs of healing virtue, for mother of  pearl, ornaments for the women, and perhaps cloth of finer wool.

 

 

The merchant’s object in life is gain, and he is not always very scrupulous in his dealings. 1f he is in debt he would prefer to be freed by the intervention of a god, and not by his own exertions; and he is bold enough even to pray for release from debts which he has incurred without intending to pay them. He is probably the gambler who prays for success in play and for pardon when he has been guilty of cheating”

 

My comments:

 

Griffith is imagining the worst thing and gives the reasons for using charms. It is like taking one bad word from a scripture and imagine everything bad about the community. He himself uses “probably” “intend” etc We can do this sort of trick to any book or scripture. Sangam Tamil poems have been divided into two groups : one dealing with family life and another dealing with war and public life. There lot of poms dealing with prostitutes in the family life section. If one goes by the number of such poems one will paint a very bad picture about Tamil community. Tamil Veda Tirukkural has umpteen chapters about bad qualities and virtues that which one should shun. I anyone takes only those couplets than one will think that the Tamils are bad. But it is not correct.  Unless one is involved in the culture one wouldn’t understand it. So it is dangerous to interpret it literally.

Foreigners interpret Vedas literally where they want to attribute bad meaning. If there are good things they hide it.  Same Atharva Veda has got very good and unique poems on motherland, earth, nature and Vedic gods. They project only the charms.

 

Most Beautiful Love Poem

 

A MAN’s LOVE CHARMS: There are seven hymns entitled, “A Man’s Love Charms”. They show that infant marriage did not prevail in Vedic times.

 

A Charm to win a Maiden’s Love. AV.VI. 8.

1.Like as the creeper throws her arms on every side around the tree,

So hold thou me in thine embrace that thou mayst be in love with me, my darling, never to depart.

 

2.As when he mounts, the eagle strikes his pinions downward on the earth,

So do I strike thy spirit down that thou mayst be in love with me, my darling, never to depart.

 

3.As in his rapid course the Sun encompasses the heaven and earth, So do I compass round thy mind that thou mayst be in love with me, my darling, never to depart.

 

There are many more love poems in the Atharva Veda.

–Subham–

 

 

ஒலியின் மஹிமை: ஆச்சரியமூட்டும் புதிய தகவல்! (Post No.4064)

Written by S NAGARAJAN

 

Date: 9 July 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

 

Post No.4064

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

மந்திர மஹிமை

ஒலியின் மஹிமை: விஞ்ஞானம் தரும் ஆச்சரியமூட்டும் புதிய தகவல்!

 

ச.நாகராஜன்

 

விஞ்ஞானம் முன்னேற முன்னேற எந்த மதம் பயந்தாலும் இந்து மதம் பயப்படாது.

 

அது கூறும் ஒவ்வொரு கொள்கையையும் விஞ்ஞானம் ஆராய்ச்சி மூலம் உறுதிப் படுத்திக் கொண்டே வருகிறது.

இதைக் கடந்த இருநூறுக்கும் மேலான ஆண்டுகளாக உலகம் பார்த்து வருகிறது.

 

‘ஹிந்து’ பத்திரிகையின் 27-6-2017 இதழ் வெளியிட்டுள்ள ஒரு புதிய செய்தி ஒலியின் மஹிமையை புதிய கோணத்தில் நம்மைப் பார்க்க வைக்கிறது.

‘Body Beats: Using Sound to spot Cancer’ – Passive Elastography is a technique that can non-invasively study tumours deep inside the body

 

 

என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி நம்மைக் கவர்கிறது.

ஒவ்வொரு உடலிலிருந்தும் இயற்கையாக ஒலி வெளி வருகிறதாம். அதை உரிய முறையில் பயன்படுத்தி கான்ஸர் இருக்கிற்தா இல்லையா என்பதை அறிய முடியுமாம்.

செய்தியின் சில பகுதிகளை மட்டும் இங்கு பார்க்கலாம். முழுச்செய்தியையும் பத்திரிகையில் படிக்கலாம்.

 

PRESS TRUST OF INDIA

LONDON

 

Natural sound waves made by the human body can be used to diagnose cancers and other diseases non-invasively at the earliest stages, scientists say.

 

Elastography, sometimes referred as ‘seismology of the human body’, is an emerging technology used to enhance medical ultrasound imaging.

 

The technology is used to measure the elasticity of biological tissue to diagnose cancer or liver disease more accurately, researchers said.

 

செய்தியின் கடைசி பகுதி தரும் தகவல் இது:-

 

The idea , as in seismology, is to take advantage of shear waves naturally present in the human body due to muscles activities to construct a shear elasticity map of soft tissues,” Mr Catheline said. ”It is thus a passive elastography approach since no shear wave sources are used,” he said.

 

Passive elastography is compatible with slow imaging devices.

 

   ஒலி அலைக்குச் சக்தி உண்டு. அதை முறைப்படுத்திச் சொல்வதால் உடல் இயக்கம் மேன்மையுறும்; ஆன்மீகத்தில் உயரிய நிலையைப் பெறலாம்.அவை பிரபஞ்சத்தின் வெவ்வேறு இயக்கங்களை மந்திர சக்தியின் ஒலி அமைப்புக்கேற்ப இயங்கச் செய்யும் என்று நமது முன்னோர்கள் கூறி வந்திருக்கின்றனர்.

 

வாயிலிருந்து வெளியாகும் ஒலியை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை நுணுக்கமாக பாணிணி ஆராய்ந்திருக்கிறார்.

 

ஒலியின் மன்னன் என்று அவரைச் சொல்லலாம்.

யாக்ஞவல்ய ஸ்மிருதி, ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அழகுறச் சொல்கிறது.

 

 

யதா வ்யாக்ர ஹரேத் புத்ரம்

தஷ்ட் ராபிர்ன  பிதாயேத்

பிதா பதன் பேதாப்யாம்

தத் வர்ணம் ப்ரயோஜயேத்

 

“ஒரு பெண்புலியானது எப்படி தன் குட்டியைத் தன் வாயில் கவ்வி அதன் பற்களால் கடியுறாதபடி எடுத்துச் செல்கிறதோ அதே போல ஒருவன் ஒரு வார்த்தையை உச்சரிக்க வேண்டும்

இப்படி உச்சரிப்பைக் கூடச் சரியாகச் சொல்லும் உத்தியையும் அது தரும் பலனையும் உலகின் வேறு எந்த மொழியும் அறிவியல் ரீதியில் சொன்னதில்லை.

 

சம்ஸ்கிருத ஒலி மஹிமையோ தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது

 

22-3-2003 தேதியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் (கல்கத்தாவிலிருந்து வெளி வரும் பத்திரிகை இது) எந்த ஒலியும் 360 டிகிரி சுழற்றப்பட்டால் அது நோயாளியின் நோயைக் குணமாக்க உதவும் என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

 

செய்தியின் ஒரு பகுதி இது:

 

Any sound, if rotated 360 degrees, can nurse chronically ill patients back to health,”pasycho-physicist” Sajal Bandopadhyay claims.

 

In a major breakthrough , Bandopadhyay had last year succeeded in rotating sound.  A team of psychologists had been researching the therapeutic potential of this discovery. Under the leadership of Dr Arnab Banerjee, they had tried out the rotating sound on patients at the Sevak Hospital.

 

 ஒலி சுழற்சி சிகிச்சையானது 4000 நோயாளிகளில் 99 சதவிகிதம் நோயாளிகளிடம் வெற்றியைத் தந்திருக்கிறது என்று இந்தச் செய்தி கூறுகிறது.

 

நாளுக்கு நாள் ஒலி பற்றிய புதிய அறிவியல் செய்தியைப் பெற்று வருகிறோம்.

 

ஒலிக்கு மஹிமை உண்டு என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டி வருகின்றன.

 

மந்திர சக்தி உடல் மற்றும் ஆன்மாவை உயர்த்த வல்லது என்ற நம்பிக்கையை இந்தச் செய்திகள் வலியுறுத்துகின்றன.

ஒலியின் மஹிமையை உலகிற்கு உணர்த்திய ஒரே மதம் ஹிந்து மதம் என்பதில் பெருமை அடைகிறோம்!

***

வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு! (Post No.4063)

Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Image of Varuna (sea)

வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

 

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

 

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.

 

ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.

 

என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.

Image of Mitra (sun)

பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-

 

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;

உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்

கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

 

நாமம்/பெயர்– சிவன், நாராயணன்

 

வாகனம் – ரிஷபம், கருடன்

நூல்கள் – ஆகமம், வேதம்

வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)

தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்

ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்

உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு

ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

 

விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.

 

—சுபம்–

 

Hindu’s Life according to Atharva Veda

Image of Vedic God Varuna

compiled by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 15-43
Post No. 4062

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The life of a Vedic Hindu may be introduced by the following graphic sketch by Griffith:

“Setting aside the rivalries, wars and conquests of kings princes, and the lofty claims and powers of the hierarchy, we may follow the course of the middle-class Hindu’s life from the cradle to the funeral pile, and even accompany him to his final home in the world of the Departed.

We hear the benedictive charm pronounced over the expectant mother before her child is born, and in due time on the darling’s first two teeth. We attend the solemn ceremony in which the youth is invested with his new garment whose assumption signifies his recognition as an adult member of the family with new responsibilities and new duties to perform.

 

As his fancy turns to thoughts of love, we hear him murmuring the charm which shall win him the maiden of his choice, and the lullaby which shall seal every eye but hers in his beloved’s house and enable him to visit her without detection or suspicion.

Picture of Vedic God Indra

 

We follow him in his formal and somewhat unromantic wooing of a bride through a friend who acts as match-maker; we see the nuptial procession and the bride’s introduction to her new home; we hear her benediction on the bridegroom, and the epithalamium pronounced over the wedded pair.

 

The young husband is an agriculturist, and we see him supe rintending the ploughmen and praying to Indra and Pushan and the Genii of agriculture to bless their labours. Anon, with propitiatory prayer, he is cutting a new channel to bring the water of the brook to the land which is ready for irrigation; or he praying for rain or an abundant crop.

 

Again, when the corn is ripe he is busy among the men who gather in harvest, invoking the aid of good natured goblins, and leaving on the ground some sheaves the to remunerate their toil.  At sunset he superintends the return of the cows who have been grazing under the protection of the Wind-God in the breezy pastures and their return under Divine guidance, and the reunion of all the members of the household are celebrated with symbolical mixt oblation, with milk and a brew of grain.

 

 

His wealth and family increase in answer to his repeated prayer for children and riches, and a new house must be built on a large scale. The building is erected under the careful eye of the master and blessed and consecrated with prayers to the Gods and to the Queen of the Home. The mistress of the house brings forth the well filled pitcher, all present are rele gated with the stream of molten batter blent with nectar and the householder enters and takes formal possession his dwelling with fire, the two most important necessaries of human life. The house, moreover- a wooden building with a thatched roof has been specially assured against fire by a prayer to Agni the God of that element with the additional security afforded by the immediate neighbourhood of good stream of pool of water.

Image of praying for rains and it is called Varuna Japa.

 

Such or something like this, was the ordinary life of the agriculturist. A devout believer in the gods, he did not spend his substance on the performance of costly sacrifices, but was content with simple ceremonies and such humble offerings as he could well afford. His chief care was for the health and well-being of himself, his wife, children and dependents for plentiful harvests and for thriving and multiplying cattle; and these were the blessing for which he most frequently prayed. His chief troubles were an occasional touch of malarial fever or rheumatism, a late or scanty rainfall, a storm that lodged his ripe barley, lightning that struck his cattle, and similar mischances caused by the anger of the gods or the malevolence of demons; and he was always armed with prayers and spells against the recurrence of such disasters.

 

……………………continued in second part

 

 

செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்! (Post No.4061)

Written by S NAGARAJAN

 

Date: 8 July 2017

 

Time uploaded in London:-  10-20 am

 

 

Post No.4061

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

7th year 19th article (no 331) published in Bhagya weekly dated 23-6-2017 in Ariviyal thuligal serial

அறிவியல் துளிகள்

 

செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்!

ச.நாகராஜன்

 

இனி உலகத்தில் பேசிக் கொண்டே உலகை வலம் வரும் ரோபாட்டுகளின் வருகையைப் பார்க்க முடிகிறது. கண்டுபிடிப்புகளின் பொற்காலம் இது! – டேவிட் ஹான்ஸன்

 

எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க விரும்புபவர்கள் உடனடியாக தென் கொரியாவில் உள்ள சியோல் நகரத்திற்குச் செல்லலாம்.

 

வாழ்க்கையே ஒரு மாயாஜாலம் போலத் தான் இருக்கும். ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க எழுத்தாளரான கேரி ஷ்டின்கார்ட் (Gary Shteyngart) பல விருதுகள் பெற்றவர். அவர் என்ன தான் இப்படி ஒரு புகழ் சியோலுக்கு இருக்கிறது என்று பார்க்க அங்கே போனார்.

தமிழில் உள்ள எல்லா பூக்களும் அவரை முழுக அடித்து விட்டன.

 

திகைப்பு.பிரமிப்பு.வியப்பு.மலைப்பு. இத்தனை ‘பு’க்கள் போதாதா அவர் கைவண்ணத்தைக் காட்ட. மீண்டும் சியோலைக் கண்டுபிடிக்கலாம் என்று ஒரு கட்டுரையை எழுதி விட்டார்.

அதில் அவர் குறிப்பிடும் பல செய்திகள் வியப்பை ஊட்டுகின்றன.50 வருடங்களுக்கு முன்னர் வட கொரியாவுட்ன் போரிட்டு அதன் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக ஆனது தென் கொரியா. இன்றோ.. அறிவியலில் ரொபாட் துறையிலும், ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவிலும் உலகின் தலை நகராகத் திகழ்கிறது! நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், மதுரை உள்ளிட்ட வெகு சில் நகரங்களை உலகின் தூங்கா நகரங்கள் என்று கூறுவர். அப்படி ஒரு தூங்கா நகரமாகத் திகழ்கிறது இன்றைய சியோல்.

 

இரண்டரை கோடி பேர் சியோலில் வாழ்கின்றனர். அதாவது தென் கொரிய நாட்டில் உள்ள இரண்டு கொரியர்களுக்கு ஒருவ்ர் சியோல் அல்லது அதன் சுற்றுப்புறப் பகுதியில் வாழ்கின்றனர்.

வீடுகள் அதி நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. ஒரு பாத்ரூம் டாய்லெட்டை எடுத்துக்  கொண்டால் அங்கு கண்ட்ரோல் பேனலில் மட்டும் இருபது பட்டன்கள் உள்ளன. பாத்ரூமைப் பயன்படுத்த எதை அமுக்குவது என்று தெரியாமல் நியூயார்க் வாசி கூடத் திகைக்கும் நிலை!

 

எல்.கே.ஜி. படிக்கும் குட்டிக் குழந்தைகள் கூட -GO-கோ- என்ற அதி நவீன புத்திசாலித்தனமான விளையாட்டை விளையாடுகின்றன.

அங்கு குடியிருப்பு வீடுகளினுள்ளே கார் சென்றால் அதன் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கார் வந்து விட்டது என்பதை அறிவிக்கிறது

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்னர் வெளியில் கால நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் கருவி ஒன்று, குடையை எடுத்துக் கொண்டு செல்லுங்கள், மழை வரப் போகிறது என்று அன்பான அறிவுரையைப் பகர்கிறது!

சமையலறையிலோ உலகின் அதி ருசியான பண்டத்தை சமைக்கும் விதத்தை டெமோவாகக் காட்டுகிறது இன்னொரு கருவி.

 

வீடுகள் இருக்கும் பகுதிகளில் நுழையும் போதே வந்திருப்பது யார் என்பதை அறிந்து கொள்ளும் முகத்தை அறியும் கருவிகள் தேவையானவர்களை மட்டுமே உள்ளே விடுகின்றன.

வீட்டின் சொந்தக்காரர்கள் கையில் ஒரு வாட்ச் போன்ற வளையத்தைக் கட்டிக் கொள்கின்றனர். அது தான் எல்லாமே- கதவைத் திறக்க, லிப்டை வரச் சொல்ல, வீட்டில் உள்ள குடும்பத்தினர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய!

 

வீட்டிற்கு பெற்றோர்கள் வந்தால் அவர்களை ‘முகம் பார்த்து” (ஃபேஷியல் ரெகக்னிஷன்) உணரும் கருவிகள்  அவர்களது போட்டோக்களை வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்புகிறது.

 

காரை வரவழைப்பது, கதவைத் திறப்பது, வந்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வது எல்லாமே சுலபம். வயர்லெஸ் ஆபரேஷன்  மூலமாகத் தான்!

ரேமியான் என்ற கட்டிடக் கம்பெனி கட்டும் வீடுகளுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் 14 விண்ணப்பங்கள் காத்திருக்கிறதாம். விலையோ உலகின் அதிக விலையைக் கொண்டிருக்கும் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள வீட்டின் விலை தான்!

அருகில் அமர்ந்திருப்பவர் 18 வயது பேரழகி என்று அசப்பில் பார்த்து நிர்ணயித்து விட்டு, அவர் எழுந்திருக்கும் போது பார்த்தால் தான் அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல் என்பது தெரிய வரும். அப்படி ஒரு இளமைத் தோற்றம் எப்படி வருகிறது?

 

உலகின் பிளாஸ்டிக் சர்ஜரியின் தலை நகரம் என்று சியோலுக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு. அவ்வளவு பேரும் இளமையாக இருக்கலாம்! கண் இமைகளுக்கு சர்ஜரி, தொங்கும் கழுத்துகளுக்கு சர்ஜரி – இப்படி உடலை இளமையாக்கும் விந்தைகள் இங்கு  மட்டுமே உண்டு!

செயற்கை அறிவின தலை நகராக இதை பிரகடனப்படுத்துவது இங்குள்ள ஹ்யூபோ என்னும் ரொபாட் தான்.

 

அமெரிக்காவின் எம் ஐ டி மற்றும் நாஸா போன்ற நிறுவனங்க்ள் கலந்து கொண்ட போட்டியில் ஹ்யூபோ என்ற ரொபாட் வெற்றி பெற்றுள்ளது. உலகின் அதி உன்னதமான ரோபோவாக போற்றப்படும் ஹ்யூபோவின் புராணமே தனி. அதை அடுத்துக் காண்போம்..
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

 

1887ஆம் ஆண்டு ஸ்வீடன் மற்றும் நார்வேயின் மன்னராக இருந்த இரண்டாம் ஆஸ்கார் (King Oscar II) ஒரு முக்கியமான கணித பிரச்சினைக்குத் தீர்வு காண்பவருக்கு ஒரு  பரிசு தருவதாக் அறிவித்தார்.

 

சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் கிரகங்கள் போன்றவற்றின் பொருள்திணிவும் அவை செல்லும் திசையும் அவற்றின் வேகமும் தெரியும் போது நியூட்டனின் விதிகளைப் பயன்படுத்தி அவை செல்லுகின்ற பாதையைச் சொல்ல வேண்டும் என்றார் மன்னர்.

 

மன்னர் பரிசு அறித்தபின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அதை வென்றார் பிரான்ஸை சேர்ந்த கணித மேதை ஹென்றி பாய்ன்கேர் (Henri Poincare 1854-1912).

பரிசை வென்ற பின்னர் தான் அவருக்குத் தனது கண்டுபிடிப்பில் ஒரு பெரிய தவறு இருப்பது தெரிய வந்தது. இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் மன்னரின் பிறந்த நாளின் போது அவரது கண்டுபிடிப்பு நூல் வடிவில் வர இருக்கிறது. ஒரே குழப்பமாகி விட்டது அவருக்கு. நூலை வெளியிடுவதா அல்லது உண்மையைச் சொல்லி விடுவதா?

 

நல்ல மனிதரான அவர் மன்னரிடம் தன் தவறை ஒப்புக் கொண்டார். பிறகு ஒரு வருடம் கழித்து அவரது நூல் வெளியானது.

 

ஒரு சிறிய காரணமும் கூட மிக பிரம்மாண்டமான விளைவை ஏற்படுத்தும் என்பதை முதலில் கண்டவர் அவர் தான். பின்னால் பட்டர்ஃபிளை தியரி என்று பெரிய அளவில் இது பேசப்பட்டது. இப்படிப்பட்ட சிறிய காரணங்கள் காலநிலை மாற்றம் போன்றவற்றில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.

 

கம்ப்யூட்டர்களின் வருகைக்குப் பின்னர் மின்னல் வேகத்தில் கணக்கிடுவது சாத்தியமான போது அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது தெரிய வந்தது.

 

தனக்குத் தெரியாமலேயே பின்னால் கயால் தியரி (Chaos Theory) என்ற பிரம்மாண்டமான கொள்கைக்கு அவர் அஸ்திவாரமிட்டார்!

நாணயமான ஒரு விஞ்ஞானி பாய்ன்கேர்!

***