வாக்கு நயம், யாக்கை நயம்-காக்கை இசை, குயில் இசை (Post No.3883)

Written by London Swaminathan

 

Date: 6 May 2017

 

Time uploaded in London: 14-48

 

Post No. 3883

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு தமிழ்ப் புலவர் குயிலையும் காக்கையையும் வைத்து நமக்கு ஒரு நல்ல அறிவுரை வழங்குகிறார்.

 

ஒருவருடைய தோற்றத்தைக் கண்டு அவரை எடை போடாதீர்கள். அவருடைய பேச்சை வைத்து, அதாவது கருத்து ஆழத்தைக் கொண்டு, அவரை எடை போடுங்கள் என்று தமிழ்ப் புலவர் மொழிகிறார்.

 

ஒருவர் பட்டு வேஷ்டி, ஜரிகை அங்க வஸ்திரம், குங்கும சந்தனப் பொட்டு, வைர மோதிரம் அணிந்து மேடை ஏறிப் பாட வரலாம். ஆயினும் அவர் பாடும் பாட்டு ரசிக்கும்படியாக இல்லையானால் கூட்டம் கலைந்துவிடும். அது போலவே ஒருவர் நன்றாக உடை அணிந்து பெரிய மனிதர் தோரணையில் உலா வரலாம். ஆயினும் அறிஞர் இடையே அவர் பேசத் துவங்கினால் அவருடைய உண்மை மதிப்பு தெரிந்துவிடும்.

 

வாக்கு நயத்தாலன்றிக் கற்றவரை மற்றவரை

ஆக்கை நயத்தால் அறியலாகாதே – காக்கையொடு

நீலச் சிறுகுயிலை நீடிசையால் அன்றியே

கோலத் தறிவருமோ கூறு

–நீதி வெண்பா

பொருள்:-

காக்கையொடு நீலச் சிறுகுயிலை-காக்கையையும்   அதைப் போலவே கருநிறக் குயிலையும்

 

நீடு இசையால் அன்றி – இனிமை மிக்க இசைக்குரலால் அல்லாமல்

கோலத்து அறிவருமோ கூறு-  உருவத்தினால் அவற்றின் பெருமையை அறியக்கூடுமோ, நீ சொல்

(அவற்றின் பெருமையை எப்படி உருவத்தால் அறிய முடியாதோ, அதைப் போலவே)

 

கற்றவரை மற்றவரை – படித்த பெரியவர்களையும், படிக்காத மற்றவர்களையும்

வாக்கு நயத்தால் அன்றி – அவரவர்களின் பேச்சின் இனிமையினால் அல்லாமல்

ஆக்கை நயத்தால் அறியலாகாதே – உடம்பு அழகினால் அறிய முடியாது.

 

 

இதைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் ஒரு பா உண்டு:-

 

காகஹ கிருஷ்ணஹ பிகஹ கிருஷ்ணஹ கோ பேதஹ பிககாகயோஹோ

வசந்த காலே சம்ப்ராப்தே காகஹ காகஹ பிகஹ பிகஹ

 

பொருள்:-

காகமும் கறுப்பு, குயிலும் கறுப்பு; பின்னர் குயிலுக்கும் காகத்துக்கும் வேறு என்னதான் வேறுபாடு?

(ஓ அதுவா?)

 

வசந்த காலம் வந்துவிட்டால், காக்கை காக்கைதான், குயில் குயில்தான்! ( அதாவது அதன் வண்டவாளம் தெரிந்து விடும்.குயில் இனிமையாகப் பாடத் துவங்கும்; காகம் கர்ண கடூர சப்தம் உண்டாக்கும்)

 

 

ஏன் இப்படிக் காகத்தையும் குயிலயும் ஒப்பிடுகிறார்கள் என்றால், காகத்தின் கூட்டில் குயில்கள் முட்டை இடும். அவைகளுக்கு அடைகாக்கத் தெரியாது. காக்கையும் குயிலின் தந்திரத்தை அறியாமல் எல்லாவற்றையும் அடை காத்து குஞ்சு பொறிக்கும். வசந்த காலம் வருகையில் குயில் இனிமையாகப் பாடிக்கொண்டு பறந்தோடிப் போகும்.

காளிதாசன், குயிலின் இந்தக் குணத்தைக் குறிப்பிட்டு பெண்களின் தந்திர புத்தியைச் சாடுகிறான். ஒன்றுமறியாத பறவை இனமே இப்படி ஏமாற்றினால், எல்லாம் அறிந்த மனித இனப் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்? என்று அவனது உலகப் புகழ் பெற்ற சாகுந்தல நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது (5-22)

 

அதே போல ரகு வம்ச காவியத்திலும் (12-39) சூர்ப்பநகை குயில் போல இனிமையாகப் பேசி ராம லெட்சுமணர்களைக் கவரப் பார்த்தாள் என்று காளிதாசன் சொல்லுவான். அதன் உட்பொருள் குயில் போலத் தந்திரம் செய்து ஏமாற்றப் பார்த்தாள் என்பதே.

இவ்வாறு ஓரிரு இடங்களில் குயில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், நூற்றுக் கணக்கான இடங்களில் பெண்களை வருணிக்கையில் குயில் போன்ற இனிமையான குரலையும் மயில் போன்ற அழகையும் உடையவர்கள் என்றே இந்தியப் புலவர்கள் போற்றிப் புகழ்வர்.

 

–subham–

.

பூமியைக் காப்பாற்ற நாஸாவின் புதுத் திட்டம்! (Post No.3882)

 

Written by S NAGARAJAN

 

Date: 6 May 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.3882

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 5-5-2017 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

பூமியைக் காப்பாற்ற நாஸாவின் புதுத் திட்டம்!

ச.நாகராஜன்

 

“சந்திரனை ஆராய்வதற்காக இவ்வளவு தூரம் சந்திரனுக்கு நாம் வந்துள்ளோம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போது நாம் நமது பூமியைக் கண்டு பிடித்திருக்கிறோம் – அபல்லோவில் சென்ற் விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ்

 

    தத்து எடுப்பது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் தான்! பிள்ளைகளை சுவீகாரம் எடுப்பது போல இப்போது நிறுவனங்களும் பல கிராமங்களை தத்து எடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்க ஒரு நவநாகரீக முன்னேற்றம்.

 

    இந்த வழியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா ஒரு புதுத் திட்டத்தை வகுத்திருக்கிறது. பூமியை தத்து எடுக்கும் திட்டம் தான் அது.

 

    நாளுக்கு நாள் பூமியில் இருக்கும் அனைத்து வளங்களும் சுரண்டப்பட்டு வருகின்றன. நீர் வளம், ஆற்றில் உள்ள மண் வளம்,  போன்றவை சுரண்டப்படுகின்றன; பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மாசு படுத்தப் படுகிறது.

 

   இதனால் புவியைப் பாதுகாக்க நாஸா விழிப்புணர்ச்சிய ஏற்படுத்த முன் வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி பூமியின் மேற்பரப்பானது 64000 அறுகோண வடிவமுள்ள துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 55 மைல் அகலமுள்ளது. இவற்றில் யார் வேண்டுமானாலும் ஒரு பகுதியைத் தத்து எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஏதாவது ஒரு பகுதி அளிக்கப்படும். அவர்களுக்கு தத்து எடுத்ததற்கான நற்சான்றிதழும் வழங்கப்படும். 2017, ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் என்பதால் அதற்குள் 64000 துண்டுகளையும் தத்து எடுக்க அனைவரும் முன் வர வேண்டுமென்று நாஸா வேண்டுகோள் விடுத்துள்ளது. 64000 பகுதிகளும் தத்து எடுக்கப்பட்டால் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

புவி விஞ்ஞானம் சம்பந்தமாக 18 விண்வெளி கலங்களை நாஸா இதுவரை அனுப்பியுள்ளது. இவற்றிற்கு உறுதுணையாக பெரும் கப்பல்கள், விமானங்கள், தரையில் இயங்கும் பெரும் சோதனைக்கூடங்கள் ஆகியவை அனைத்து உதவிகளையும் செய்கின்றன. இதன் மூலம் பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை இவை அளிக்கின்றன.

இந்த திட்டங்களின் மூலம் கடல் உஷ்ணநிலை, தாவரங்களின் நிலை, மேகங்கள் இருக்கும் உயரம், வளிமண்டலத்தில் உள்ள தூசு, மாசு, மண்வள்ம் உள்ளிட்ட பல அரிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பூமியைத் தத்து எடுத்துக் கொண்டோர் புவி வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், அவ்வளவு தான்!

பூமியைப் பற்றி ஏராளமான அரிய தகவல்கள் உள்ளன.

நமக்குத் தெரிந்த வரையில் இந்த பிரபஞ்சத்தில் உயிரினம் வாழத் தகுதி உள்ள ஒரே கிரகம் பூமி தான்!

 

பூமியில் என்ன அடங்கியிருக்கிறது என்று பார்த்தால் நமக்குக் கிடைப்பது இரும்பு – 32.1%, ஆக்ஸிஜன் – 30.1%, சிலிகான் – 15.1%, மக்னீஷியம் – 13.9% மற்றவை 8.8 %

 

பூமியின் மேற்பரப்பில் 70 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. நீலக் கடலை விண்வெளி விஞ்ஞானிகள் மேலிருந்து பார்த்து ஆச்சரியப்பட்டு இதற்கு நீல கிரகம் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது சரி தான் என்று மகிழ்ந்து கூறினர்.

பூமியின் வளி மண்டலம் சுமார் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை உள்ளது. முதல் 50 கிலோமீட்டர் மிகவும் அடர்த்தியாக இருக்கிறது

 

பூமி ஒரு முறை சுற்றுவதற்காக ஆகும் காலம் 23 மணி, 56 நிமிடம் 4 விநாடிகள். சூரியன் தனது பாதையில் ஒரு டிகிரி நகர்தலையும் எண்ணிப் பார்க்கும் போது இது 24 மணி நேரமாக ஆகிறது

 

பூமியில் ஒரு வருடம் என்பது சரியாகப் பார்த்தோமேயானால் 365.2564 நாட்கள் ஆகும். கூடுதலாக உள்ள .2564 நாளை நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீப் வருடத்தில் சேர்த்துக் கொள்கிறோம். பூமிக்கு ஒரு சந்திரனும் இரண்டு சாடலைட்டுகளும் உண்டு.

இப்படி புவி பற்றிய அரிய விவரங்கள் ஏராளம் உண்டு. ஆகவே தனித்துவம் மிக்க நாம் வாழும் கிரகத்தைக் காப்பாற்ற உத்வேகமூட்டவே பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

 

இதை நாஸா நல்ல விதத்தில் கொண்டாட, தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு செய்தியே 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

    ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு பல விசித்திரமான பொழுதுபோக்குப் பழக்கங்கள் உண்டு.     

     ஒவ்வொரு வருடமும் ஒரு புது ஹாபியை அவர் மேற்கொள்வார். 2009ஆம் ஆண்டு அவர் ஒவ்வொரு நாளும் ஒரு புது டையை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தினார். 2010ஆம் ஆண்டு அனைவருக்கும் அவர் ஒரு சவால் விட்டார்- தான் சீன மொழியான மாண்டரினைக் கற்று புலமை பெறப்  போவதாக! அதன்படியே சீன மொழியை தினமும் கற்றார்.

 

   2011ஆம் ஆண்டு அவர் எடுத்த ஹாபி – தன் கையால் கசாப்பு செய்யப்பட்ட மாமிசத்தையே தான் உண்ணப் போவதாக எடுத்த முடிவு. கலிபோர்னியாவில் பன்றி மாமிசத்தை நண்பர்களுடன் அவர் சாப்பிடும்போது அவர்கள் தாங்கள் அதை விரும்பிச் சாப்பிட்டாலும் கூட அது உயிருடன் இருந்ததை நினைக்க விரும்பவில்லை என்றனர். இதை பொறுப்பற்ற தன்மை என்று விமரிசித்த அவர் கோழி வெள்ளாடு பன்றி போன்றவற்றை எப்படி அறுப்பது என்பதைக்  கற்று தானே கசாப்பு வேலையை ஆரம்பித்தார். இதனால் வெளியிடங்களில் சென்று சாப்பிடும் போது அவர் சைவ உணவையே சாப்பிட வேண்டியிருந்தது. இப்படி விசித்திர பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் ஃபேஸ்புக்கில் உள்ள வேலைப் பளுவிலிருந்து மீள முடிகிறது என்கிறார் அவர்!

***

Women are Cuckoos: Kalidasa and Tamil Poets agree! (Post No.3881)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 14-12

 

Post No. 3881

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Women are Cuckoos (Koels) say Kalidasa and other poets. Is it a compliment or a complaint? Both, I would say.

When the poets want to praise them, they say that women’s voice is like the Koel (Cuckoo). When they wanted to attack their cunningness, they say women are as cunning as a cuckoo!

 

There is a popular couplet in Sanskrit:

“The crow is black and the cuckoo is black. What is the difference between the two? It is when spring arrives that the crow is identified and the cuckoo is identified as cuckoo” (by their harsh and sweet voice)

 

kakah krsnah pikah krshnah ko bedhah pikakakayoho

vasanta kale samprapta Kakah kakah pikah pikah

 

Kalidasa in his most famous work, Shakuntalam says, “king Speaks,

Intuitive cunning is seen even in females

of lower creatures; what then of those

endowed with reason and understanding;

the cuckoo, as we know, has her young reared

by other birds before they take to the air”

(Shakuntalam Act 5- 22)

 

The voice of cuckoo is sweet but cuckoo is cunning by nature. In the Raghuvamsa (12-39), Surpanakha speaks in sweet voice as that of a cuckoo. But she is planning cunningly to capture Rama and Lakshmana by her magical wile.

 

in the Shakuntalam drama women are portrayed as tricky as cuckoo. Intuitive cunningness exists even in females other than humans (species of animals and birds). What then in regard to those that possess power of understanding? The female cuckoos indeed, cause their offspring to be reared by other birds, before flying in the sky (AS 5-22 and Malavikagni Mitram 3-41)

 

In hundreds of places, the poets described the voice of women is as sweet as a cuckoo.

 

In one of the verses in Niti Venba, a collection of didactic poems by an anonymous author, the poet says “a person’s nature can’t be known by his appearance but known only by his speech like we know a crow from a cuckoo from its difference in voice.”

 

–Subham–

 

 

 

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்! (Post no.3880)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 6-16 am

 

Post No. 3880

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் அழகாகச் சொல்லுகின்றனர்:

 

1.காலை எழுந்திரு

 

2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்)

 

3.மாலையிலும் குளி

 

4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.

 

5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை)

 

6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

 

 

காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல் – சால

உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்

கற்றாயோ காக்கைக் குணம்

 

வள்ளுவனும் தமிழ் வேதமாகிய திருக்குறளில்  செப்பினான்:

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

 

பொருள்:-

 

பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் ஒரு கட்டுரையில் முன்னரே தந்து விட்டேன்

 

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள  (குறள் 527)

 

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும்

 

My articles on Crows

INDIAN CROW by Mark Twine ; 9 February 2013

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subahm–

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! (Post No.3879)

Written by S NAGARAJAN

 

Date: 5 May 2017

 

Time uploaded in London:-  5-37 am

 

 

Post No.3879

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 29

 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் : பாரதி மணி மண்டப வரலாற்றில் சுவையான சம்பவங்கள்!

 

ச.நாகராஜன்

 

    தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலையின் நினவலைகளை அவர் மிக மிகச் சுவையாகக் கூறும் நூல் : சொன்னால் நம்ப மாட்டீர்கள். 40 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை எடுத்தால் முடிக்க வேண்டியது தான்! முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது!

 

  ஏராளமான சம காலத்திய சம்பவங்களை அவர் சுவைபடக் கூறும் போது பாரதி பற்றிய செய்திகள் ஆங்காங்கே விரவி வருகின்றன. இவற்றில் பாரதி பக்தர்களைப் பற்றியும், பாரதியைப் பரப்பியவர்களைப் பற்றியும் மக்கள் உலக மகாகவியை எப்படி ஏற்றுக் கொண்டனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

 

 

     குறிப்பாக பாரதிக்கு மணி மண்டபம் அமைக்க முயன்ற கல்கியும் சின்ன அண்ணாமலையும் நேசத்தாலும் பாசத்தாலும் இணைந்தவர்கள். இதை விளக்க ஒரே ஒரு சம்பவம்.

திடீரென்று ஒரு நாள் அண்ணாமலையை அழைத்த கல்கி அவரிடம் போர்டு ஆங்கிலியா காரின் சாவியைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்கிறார். காரை ஓட்டிப் பார்த்த அண்ணாமலை அது நன்றாக இருப்பதாகக் கூறுகிறார். சாவியை அவரிடமே தந்த கல்கி இது உங்களுக்குத் தான் என்கிறார்.

 

 

எத்தனை நாள் தான் தினமும் கல்கி வீட்டிற்கு அவர் பஸ்ஸில் போவதாம்! என்ன ஒரு அபாரமான அன்பு, நட்பு.

   கல்கியினால் சொற்பொழிவாளனாக மாறிய சின்ன அண்ணாமலை தமிழகத்தையே தன் நகைச்சுவை பேச்சினால் சிரிக்க வைத்தார்.

 

    அவர் பாரதி நிதி பற்றி குறிப்பிடும் இடத்தை அவர் சொற்களிலேயே பார்ப்போம்: அத்தியாயத் தலைப்பு : பாரதி நிதி

 

 

      “எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். இலக்கிய ரசிகர்கள் நிரம்பிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டோம். ரசிகர்கள் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

       கூட்டத்திலிருந்த ஒரு ரசிகர் எழுந்து கல்கி அவர்களே! தாங்கள் எழுதும் ‘சிவகாமியின் சபதம்’ நீண்டு கொண்டே போகிறதே?” என்று சொல்லிக் கொண்டே வரும் போதே நான் இடைமறித்து, “ஆமாம்! நீண்டு கொண்டு தான் போகிறது.

      ஐயா, குரங்கிற்குத் தான் வால் நீண்டு கொண்டு போகக் கூடாது. மயிலுக்குத் தோகை நீண்டால் என்ன?” என்று ஒரு போடு போட்டேன்.

 

      அதைக் கேட்டவுடனே மேற்படி ரசிகர், “தங்கள் பதில் என்னைப் பரவசமடையச் செய்து விட்டது. நான் பாரதி நிதிக்குப் பத்து ரூபாய் தான் கொடுக்கலாம் என்று வந்தேன். இப்போது இதோ நூறு ரூபாய் கொடுக்கிறேன்” என்று கூறு ரூ 100 பாரதி நிதிக்குக் கொடுத்தார்”.

 

கல்கி பாரதி மணி  மண்டபம் கட்ட எப்படியெல்லாம் உழைத்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இன்னொரு சம்பவத்தை சின்ன அண்ணாமலை, ‘நாடோடியாக நடித்தேன்’ என்ற அத்தியாயத்தில் தருகிறார்.

 

 

பெங்களூரில் பாரதி மணி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் நாடோடி அவர்களைக் க்லந்து கொண்டு நிதியைப் பெற்று வர கல்கி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. சின்ன அண்ணாமலையிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார் கல்கி.

நாடோடி என்று ரிஸர்வ் செய்யப்பட்ட சீட்டிலேயே பயணம் செய்தார் சின்ன அண்ணாமலை. பெங்களூரிலும் ரயில் நிலையத்தில் அவரை ‘நாடோடியாகவே’ வரவேற்றார்கள்.

 

 

சின்ன அண்ணாமலை தான் யார் என்பதைச் சொல்லவில்லை.

கூட்டத்தில் அவரை நாடோடியாகவே நினைத்து அவரைப் பற்றி அனைவரும் பேசினர். 2000 ரூபாய் நிதி  கிடைத்தது.

கூட்டத்தில் நாடோடியாகப் பேசிய சின்ன அண்ணாமலை இறுதியில் “நான் ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேன். அதைக் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஆனால் அதை நான் இலவசமாகச் சொல்ல விரும்பவில்லை. ஆளுக்கு நான்கணா பாரதி மணி மண்டப நிதியாகத் தருவதாக ஒப்புக் கொண்டால் சொல்கிறேன்” என்று கூறி நிறுத்தினார்.

“தருகிறோம். ஆனால் நீங்கள் சொல்லப்போகும் உண்மை எங்க்ளுக்குத் தெரிந்ததாக இருந்தால் என்ன செய்வது” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

 

 

“அது தெரிந்திருக்கவே முடியாது” என்றார் சின்ன அண்ணாமலை.

 

“நீங்கள் நாடோடி அல்ல. சின்ன அண்ணாமலை என்பது எங்களுக்குத் தெரியும் என்றார் அவர்.

சின்ன அண்ணாமலை அசந்து போனார்.

கல்கி நாடோடிக்குப் பதிலாக் சின்ன அண்ணாமலை வருவதாகத் தந்தி ஒன்று கொடுத்திருந்தார்.

சின்ன அண்ணாம்லை நாடோடியாக இருப்பதை விரும்பியது போலவே கூட்டத்தினரும் அவரை நாடோடியாக ஏற்றுக் கொண்டனர்.

 

 

 

இதன் விளைவு: கூட்டத்திற்கு வந்தவர்கள் தனித் தனியாகக் கொடுத்த தொகை ரூ 650/

 

அடடா, எப்படிப்பட்ட சம்பவங்களின் மூலம் பாரதி மணி மண்டபம்   எழுந்திருக்கிறது!

மணி மண்டபத்திற்கு பாரதி அன்பர்கள் தந்த ஒவ்வொரு காசும் பொற்காசு தானே!

 

சங்கப் பலகை என்ற அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாரதி மணி மண்டப நிதி சேர்ப்பு சம்பவம் இருக்கிறது.

தேச பக்தர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளும் நூலில் அடக்கம்.

 

 

பாரதி அன்பர்கள் பாரதி மணி மண்டப வரலாற்றை அறிவது அவசியம்.

 

அதற்கு இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

குமரன் பதிப்பகம், சென்னை டிசம்பர் 2004இல் வெளியிட்ட இந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 242.

***

 

Follow the Habits of a Crow: Tamil Poets’ Advice (Post No.3878)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 22-07

Post No. 3878

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

Tamil poets use several birds or their habits to teach certain morals to the society. Tiruvalluvar, the author of the Tamil Veda ‘Tirukkural’ send us two messages using the crow:

The crow does not hide what it has got, but cries out to is fellows, before it eats

Prosperity among men will come only to those who have this disposition (Kural 527)

The message is “Go to the crow and learn, you selfish man”.

In another couplet, he says,

“A crow may overcome a much stronger bird, the owl, during day time,

Even so, at the right opportunity, the king could succeed easily in his campaigns” (481)

It is said that in the nocturnal fight, the owl could easily beat the crow; but if the fight takes place during the day time, the crow will be the victor. There is a story to this effect in the Panchatantra. Asvattama also used this tactic to kill important Pandava family members (see below my Mahabharata article link)

Follow the Six Points

Another Tamil poet lists six points in a four-line verse:

1.Get up early in the morning

2.Do sex like the crows, unseen by anyone

3.Take a bath everyday like the crow

4.When you have food call everyone

5.Come back to ‘your house’ (don’t go to other women)

6.Socialise like crows (they sit in a line and caw)

The crying of crows when it sees food and sharing it with others have been noticed by many other poets. They also praised the crows.

 

My articles on Crows

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subham–

எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள்! (Post No.3877)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 20-08

Post No. 3877

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

முருகனுக்கு இரண்டு மனைவி – -வள்ளி, தெய்வானை

 

விஷ்ணுவுக்கு இரண்டு மனைவி– ஸ்ரீ தேவி, பூதேவி

 

விநாயகருக்கு இரண்டு மனைவி – – சித்தி, புத்தி

 

கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவி – – ருக்மணி, சத்யபாமா

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இதில் நமக்குத் தெரிவது என்னவென்றால் இரண்டு மனைவியர் வரை “அனுமதி உண்டு” (allowed) ! ஆனால் நீங்களும் விநாயகரைப்போல, விஷ்ணுவைப் போல, முருகனைப் போல, கிருஷ்ணனைப் போல அபூர்வ சக்தி படைத்தவராக இருக்க வேண்டும்; மனைவி விஷயத்தில் மட்டும் இவர்களைப் பினபற்றுவேன் மற்ற விஷயங்களில் “நான் நான்தான்” என்று சொல்லக் கூடாது!!!

 

 

இரண்டுக்குப் பின்னர் எப்போதும் வேண்டாம் (ராம ராஜ்யத்தில்)!

இது ஒரு புறமிருக்க, மகன்கள் விஷயத்திலாவது நாம் கடவுளரைப் பின்பற்றலாம்:

 

சிவனுக்கு இரண்டே புதல்வர்கள் – விநாயகர், கந்தன்/முருகன்

வேதத்தில் வரும் அஸ்வினி குமாரர்கள் இரண்டே புதல்வர்கள்

 

ராமாயணத்தில்தான் அதிசய ஒற்றுமை; எல்லா சகோதர்களுக்கும் இரண்டிரண்டு புதல்வர்கள்! அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள்? ஒருவேளை மரபியல் அம்சமோ (Genetic factor) என்னவோ!

 

ராமனுக்கு இரண்டே புதல்வர்கள்- லவன் குசன்

மனைவி பெயர் – சீதை

 

பரதனுக்கு இரண்டே புதல்வர்கள் – தக்ஷன், புஷ்கலன்

மனைவி பெயர் மாண்டவி

 

லெட்சுமணனுக்கு இரண்டே புதல்வர்கள் –  அங்கதன், சந்திரகேது

மனைவி பெயர் ஊர்மிளை

 

சத்ருக்னனுக்கு இரண்டே புதல்வர்கள் – சத்ருகாதி, சுபாகு

மனைவி பெயர் ஸ்ருத கீர்த்தி

 

லவன், குசன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

 

உலகப் புகழ் பெற்ற கவிஞர் காளிதாசர், அவரது ரகுவம்ச காவியத்தில் சொல்கிறார்:-

 

“கவி வால்மீகி தர்பைப் புல்லினாலும், பசுவின் வால் மயிரினாலும் துடைக்கப்பட்ட , அந்த சீதையின் குமாரர்களை பெயரிடும் விஷயத்திலும், அவைகளின் பெயராலேயே குசன் ,லவன் என்றே செய்தார்” (15-320

 

தர்ப்பைப் புல்லின் பெயர் குச; பசுவின் வால் மயிரின் பெயர் லவ; அதாவது குழந்தை பிறந்தவுடன் தீய சக்திகள் நெருங்காது இருப்பதற்காக, முனி பத்னிக்களின் கையில் இவ்விரண்டு பொருட்களையும் கொடுத்து குழந்தைகள் மீது தடவச் செய்தார். இது காளிதாசன் சொன்னது.

வால்மீகி ராமாயணத்தில் வேறு கதை!

 

ஆனால் ராமாயண உத்தர காண்டத்தில் தர்ப்பத்தின் முனைப் பகுதியினால் ஒருவனுக்கு குச என்றும் மற்றொருவனுக்கு தர்ப்பத்தின் அடிப்பகுதியால்

லவ என்றும் பெயரிடப் பட்டதாக ஸ்லோகம் உள்ளது.

 

குழந்தைகளுக்குப் பெயரிட்ட வால்மீகி அவ்விரு பெயர்களாலும் அவர்கள் பிரசித்தமடைவர் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இரு குழந்தைகளுக்கும் வேதங்கள்,  சாத்திரங்களைக் கற்பித்ததோடு ராமனின் கதையையும் கற்பித்து பாட வைத்தார்.

 

அக்காலத்தில் சங்கீத உபந்யாசம் எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை லவ-குசனின் பாடல் ராமாயணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல அது இன்றுவரையும் நீடித்து வருகிறது!

 

-Subahm–

 

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் (Post No3876)

Written by S NAGARAJAN

 

Date: 4 May 2017

 

Time uploaded in London:-  6-28 am

 

 

Post No.3876

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் – பஞ்ச அங்க விளக்கம் : விதி விளக்கம் – 3

 

by ச.நாகராஜன்

 

  1. வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் : பஞ்ச அங்க விளக்கம்

நூலாசிரியர் மிட்டா முனிசாமி செட்டி ராகு காலம், குளிகை ஆகியவற்றை இன்றும் பார்த்து வரும் அன்பர்கள் பஞ்ச அங்கங்களை ஏன் கவனிப்பதில்லை என்று வியக்கிறார்.

அவர்  பஞ்ச அங்கங்களைப் பற்றி விளக்குகிறார்.

அவற்றில் சில பகுதிகள் இதோ:

 

 

வாரம்

வாரங்களில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகியவைகள் சகல சுபங்களுக்கும் அனுகூலமானவை.

செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகியவை அவ்வளவு சிரேஷ்டமாக தினசரி அனுஷ்டானத்திற்கு எடுக்கவில்லை.

 

ஆனால் செவ்வாய், ஞாயிறு, வியாழன் ஆகியவற்றில் விவாகம் முதலிய சுபங்கள் நடந்தால் மேல் சொல்லிய சுப வாரங்களின் மஹிமை குறைவதில்லை.

 

 

,திதி

சூரியன், சந்திரன் இவைகள் ஒன்றுக்கொன்று இருக்கின்ற நிலையினால் பூமிக்கு ஏற்படும் ஒரு வித சுபாவ நிலையைக் குறிப்பது திதி.

 

திதியினால் சூரியனும் சந்திரனும் இருவரும் சேர்ந்து தங்கள் சர கதியினால் சக்தியை ஆகர்ஷணம் செய்து மனிதர்களுக்குப் பல வேளைகளிலும் , பல் இடங்களிலும் அவரவர் பிராரப்தம் போலவும், ஜெனன கால நவக்கிரக பிரசாத ஈடு போலவும் இயக்கி மண்மகனைப் பிணமகனாக்கலும் போன்ற அநேக பல்ன்களளச் செய்கின்றனர்.

கிரகண காலத்தில் மனிதர்களுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் ப்ரவச் செய்து தங்கள் சக்தியைக் காண்பிக்கின்றனர்

 

 

நட்சத்திரம்

 

நட்சத்திரம் சந்திரனுடைய நித்ய சரகதி நிலையைக் காண்பிக்கிறது.மற்ற கிரகங்களை விட பூமிக்கு மிகவும் ச்மீபத்தில் சஞ்சரிப்பதினால், சந்திரன் தின பலனை மனிதர்கள் யூகிப்பதற்கு உதவியாக இருக்கின்றான்.

 

 

யோகம்

 

இதுவும் நட்சத்திரத்தைப் போல 27 வகை உள்ளதென்றாலும் நட்சத்திரத்தைப் போல நாழிகை ஆதியந்தம் எடுத்து ஜெனனகால விசேஷம் கணக்கிட்டு , அந்த நாழிகையை வருடமாகவும், விநாடியை மாதமாகவும் வைத்துக் கவனித்தால் ஒவ்வொருவருடைய யோகம் மாறுவது போல, பூவுலகில் தங்கள் தங்கள் அனுபவ யோகம் எப்படி மாறி வருகின்றது என்பதைக் கவனிக்கலாம்.

 

நட்சத்திரத்தைக் கொண்டு திசை கணக்கிடுகிறோம்.

ஆனால் யோகம் ஸ்தூலமாக வாழ்நாள் யோகக் கூறுபாட்டை, ஜெனன சேஷ வருஷம் மாதம் வரையில் ஒவ்வொருவர் ஆயுள் காலத்தில், தெரிவிப்பதாக்த் தற்கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

கரணம்

 

கரணம் தீர்க்கமாக ஆயுள் பரியந்தம் ந்டக்கும் ஆன்ம சுபாவத்தைத் தெரிவிக்கிறது.

இது யோகத்தைப் போல மாறி வருவதில்லை.

 

இனி பஞ்ச அங்கங்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

வாரம்

 

  1. வார சூன்யம் : வாரமும் நட்சத்திரமும் கூடிய தினத்தன்று நன்மை உண்டாகாது. அப்படிப்பட்ட நாள்கள் சுபத்திற்கும் ஆகாது. எவ்வித காரியத்தையும் அன்று ஆரம்பிக்கக் கூடாது.

ஞாயிறு : – அனுஷம், கேட்டை, மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

திங்கள் :- பூராடம்,அனுஷம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

செவ்வாய்:- அவிட்டம், திருவோணம், சதயம்,கேட்டை, திருவாதிரை

புதன் :- மூலம், திருவோணம்,கார்த்திகை,அவிட்டம், அசுவினி, பரணி

வியாழன் – மிருகசீரிஷம்,பூராடம்,ரேவதி, புனர்பூசம்

வெள்ளி – பூசம், விசாகம், ரோகிணி, அவிட்டம்,மிருகசீரிஷம், ஹஸ்தம், அனுஷம்

சனி – ஹஸ்தம்,பூசம், புனர்பூசம், உத்திரம், ரேவதி

இவை பொது விதி. திதி,யோகம் ஆகியவற்றால் மேற்காட்டிய வாரசூனயம் நன்மையாக முடியும்.

தெய்வ அனுகூலத்தினால் மனித யத்தனமின்றி விசேஷ காரியங்களும் சுபங்களும், இஷ்ட பிராப்தியும் உருவாகலாம்.

 

  1. கிழமை பிறந்த ( நாள் என்று குறிப்பிடப்படும்) நட்சத்திரம் கூடிய வாரங்களில் செய்கின்ற கருமம் எல்லாம் தீமையாக முடியும்.

இது தினசரி அன்றாடம் கடைப்பிடிப்பதற்காக ஏற்பட்டது.

இது பின் வருமாறு

ஞாயிறு – பரணி

திங்கள் – சித்திரை

செவ்வாய் – உத்திராடம்

புதன் – அவிட்டம்

வியாழன் – கேட்டை

வெள்ளி – பூராடம்

சனி – ரேவதி

இது சிறப்பு விதி. இதை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

அடுத்து நட்சத்திரங்களைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்போம்.

– தொடரும்

Why did Valmiki name Rama’s Children Lava and Kusha? (Post No.3875)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 19-34

Post No. 3875

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Kalidasa, the greatest poet, describes the naming ceremony of Lava and Kusha in the hermitage of the Sage Valmiki. Lava and Kusha, sons of Rama and Sita were born in the hermitage when Sita was separated from Rama.

 

They were named Lava  and Kusha after the ceremonial materials used by Valmiki, i.e. Cow’s tail and Sacred Kusha grass. But Valmiki differs from Kalidasa in one matter.

 

Kalidasa, in his classic Raghuvamsa, says,

सखा दशरथस्यापि जनकस्य च मन्त्रकृत्।
संचस्कारोभयप्रीत्या मैथिलेयौ यथाविधि॥ १५-३१

sakhā daśarathasyāpi janakasya ca mantrakṛt |
saṁcaskārobhayaprītyā maithileyau yathāvidhi|| 15-31

That expounder of the hymns, namely Valmiki, being the friend of Dasharatha as well as of Janaka, out of regard for both, procedurally performed purificatory ceremonies with regard to both the sons of Maithili. [15-31]

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

Verily the poet gave the names Kusha and Lava to the two sons of Seetha from the names of the wiping materials, namely kusha grass and the hair of the tuft of the cow’s tail (lava), since the infants had been wiped of the post delivery uterine moisture by means of those two materials. [15-32]

–o)0(o–

साङ्गम् च वेदमध्याप्य किंचिदुत्क्रान्तशैशवौ।
स्वकृतिम् गापयामास कविप्रथमपद्धतिम्॥ १५-३३

sāṅgam ca vedamadhyāpya kiṁcidutkrāntaśaiśavau |
svakṛtim gāpayāmāsa kaviprathamapaddhatim|| 15-33

 

No sooner had the boys come out of the stage of infancy than Valmiki taught them the Vedas with their ancillaries, and then made them chant his own composition RAMAYANA which was the first guiding principle for all later time poets. [15-33]

–o)0(o–

रामस्य मधुरम् वृत्तम् गायन्तो मातुरग्रतः।
तद्वियोगव्यथाम् किंचिच्छिथिलीचक्रतुः सुतौ॥ १५-३४

rāmasya madhuram vṛttam gāyanto māturagrataḥ |
tadviyogavyathām kiṁcicchithilīcakratuḥ sutau|| 15-34

Singing the pleasant legend of Rama before their mother the two sons slightly lessened her grief of separation from Rama. [15-34]

–o)0(o—

 

VALMIKI’S  VERSION

 

Valmiki’s version in the Uttara Kanada  (Chapter 66 )

of Valmiki Ramayana is slightly different from Kalidasa’s.

“During the night Shatrughna passed in the leaf thatched hut, Sita gave birth to two children, and at midnight the youthful ascetics brought the pleasant and auspicious tidings to Valmiki. Immediately he went to see the newly born children. On beholding those two infants, his heart was filled with delight and he performed the Rakshasa Rite ( to avert evil).

Taking a handful of Kusha grass with its roots, Valmiki pronounced the formula of protection for the destruction of evil forces, saying:-

‘Since they will rub the first born of the children with the Kusha grass blessed by the aid of Mantras, his name shall be Kusha and, as the last born will be carefully dried by the female ascetics with the roots of the grass, he shall be called Lava, and by these names that I have given them, they will become renowned.

 

Thereafter the female ascetics purified themselves and reverently received the grass from the hands of the Muni (Vamiki), applying it to the two children

xxx

 

Four Brothers had Eight Sons!(4 X 2=8)

Another interesting coincidence is that all the four brothers had two sons each. Not many people know the names of the wives of Rama’s brothers and their sons!

Rama and Sita were the parents of Lava and Kusha

Bharata and Mandavi were the parents of Dakshan and Pushkalan

Lakshmana and Urmila were the parents of Angathan and Chandraketu

Shatrughna and Sruthakeerthi were the parents of Shatrugathi and Subahu

 

इतरेऽपि रघोर्वंश्यास्त्रयस्त्रेताग्नितेजसः।
तद्योगात्पतिवत्नीषु पत्नीष्वासन्द्विसूनवः॥ १५-३५

itare’pi raghorvaṁśyāstrayastretāgnitejasaḥ |
tadyogātpativatnīṣu patnīṣvāsandvisūnavaḥ || 15-35

 

The other three scions of the race of Raghu, namely Lakshmana, Bharata, Shatrughna, who were as resplendent as the triple sacred fires, became the fathers, each begetting two sons on their wives who were pre-eminent ‘as wives’ by being married to them. [15-35]

 

Then Kalidasa describes their achievements.

 

(Sanskrit slokas are taken from sanskritdocuments.com; thanks)

 

–Subham–

 

 

காஷ்மீர் அமைச்சரின் தியாகம்! (Post No.3874)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 15-52

Post No. 3874

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

கல்ஹணர் என்ற பிராமணனை வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் சிலாகித்துப் பேசுவர். அவருக்கு ஏன் அவ்வளவு கியாதி (புகழ்)? ஏனெனில் இந்தியாவில் முதல் முதலில் வரலாற்றை எழுதியவர் இவர்தான் என்பது வெளிநாட்டு அறிஞர் கருத்து. சங்கத் தமிழ் நூல்களில் எண்பதுக்கும் அதிகமான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று மன்னன் பரணன் அளித்த போதும், அதற்கு முன்னால் 140-க்கும் மேலான தலைமுறை

 

மன்னர்களைப் புராணங்கள் பட்டியலிட்ட போதும் அதை எல்லாம் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்தக் காஷ்மீரி பிராமணன் 3400 க்கும் மேலான சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் “வருட”த்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதியுள்ளான்.

 

கல்ஹணர் சொன்ன பல அதிசய விஷயங்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் தந்தேன். இதோ மேலும் ஒரு அற்புதம்!

 

ரிக்வேதத்தில், தலைகொடுத்த தத்யாங்க் பற்றிப் படித்தோம். புராணங்களில் , வஜ்ராயுதம் செய்ய தன் முதுகெலும்பையே தியாகம் செய்த ததீசி முனிவர் கதையை அறிந்தோம்; சிவபெருமானுக்காக கண்களையே தியாகம் செய்த கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு பற்றிப் பெரிய புராணத்திலும் தேவாரத்திலும் கேட்டோம். ஆனால் உடலையே நீச்சல் அடிக்க உதவும் தோல் பையாயாக்கி உயிர்த் தியாகம் செய்த தேவ சர்மன் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம்.

 

இதோ கல்ஹணர் வாய்மொழியாக கேட்போம்:

காஷ்மீரில் கி.பி.750-ஆம் ஆண்டை ஒட்டி ஜெயபீடன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நேபாள நாட்டின்மீது படை எடுத்தபோது அங்கே அரமுடி என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவன் கில்லாடி. மந்திர தந்திரங்களில் வல்லவன்; ராஜ தந்திரமும் கற்றவன்.

 

ஜெய பீடனின் படைகளை நேரில் சந்திக்காமல் அவனைத் தாக்காட்டி தொலைதூரம் இழுத்து வந்தான். ஒரு கடலும் நதியும் சந்திக்கும் இடம் (முகத்துவாரம்) வரை படைகளை இழுத்தான். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஜெயபீடனின் படைகளும் மறுபுனிறத்தில் அரமுடியின் படைகளும் நிலைகொண்டிருந்தன. மிகவும் திட்டமிட்டு ஒரு நாள் திடீரென்று போர் முழக்கம் செய்து முரசு கொட்டினான் அரமுடி. அவனுடைய சூது வாது தெரியாத ஜெயபீடனி ன் படைகள், ஆற்றைக் கடந்தன. முழங்கால் அளவே தண்ணிர் என்று கருதி ஜெயபீடன் ஆற்றில் புகுந்தான். ஆயினும் நதியைக் கடப்பதற்குள் கடல் அலைகள் உள்ளே வந்து நீர் மட்டத்தை உயர்த்தின ஜெயபீடன் தத்தளி த்தான். பெரும்பாலான படைகளை வெள்ளம் கடலுக்கு அடித்துச் சென்றது

‘த்ருதி’ என்னும் தோல் பைகளை கட்டி நீந்தி வந்த வீரர்கள் வந்து ஜெயபீடனைக் கைது செ ய்து சிறைவைத்தனர். ‘த்ருதி’ என்பது எருமை மாட்டின் தோலினால் ஆனது. அதைக் காற்றடைத்து,  அதைப் பிடித்துக்கொண்டு நீந்துவது காஷ்மீரி மக்கள் அறிந்ததே.

ஜெயபீடனை ஒரு உயரமான கட்டிடத்தில் நதி ஒரமாகக் காவலில் வைத்தான் நேபாள மன்னன் அரமுடி!

 

ஜெயபீடனிடம் தேவ சர்மன் என்ற புத்திசாலி அமைச்சன் வேலை பார்த்து வந்தான். மன்னரைக் கடவுளாகக் கருதி தன் இன்னுயிரையும் ஈயும் உத்தம குணம் கொண்ட சத்திய சீலன் அவன். நல்ல தந்திரம் ஒன்றை வகுத்தான். மன்னன்  அரமுடிக்குத் தூது அனுப்பி, ஜெயபீடன், இதுவரை போரில் வென்ற செல்வப் புதையலை எல்லாம் அளிப்பதாகவும் ஜெயபீடனை மட்டும் விடுவித்தால் போதும் என்றும் செப்பினான்.

 

தலையில் குறை முடியே உடைய அரைமுடியும் அதற்குச் சம்மதித்தான். உடன்படிக்கை கையெழுத்தானது. தங்கள் மன்னரை ஒருமுறை சந்திக்க அனுமதி கோரினான் தேவசர்மன். அப்பொழுது நடந்த சம்பாஷணை:–

“மன்னர் மன்னவா

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? நீங்கள் சிறைப்பட்டாலும் உங்கள் வீரமும் மனோ திடமும் குலையவில்லை என்றே கருதுகிறேன்” – என்றான் தேவ சர்மன்

 

“அது எப்படி முடியும் சர்மா? என்ன வீரம் இருந்து என்ன பயன்? நான்கு சுவருக்குள் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” – என்றான் ஜெயபீடன்

 

“மன்னா! நான் படைகளை நதியின் மறு கரை யில் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் மட்டு ம் இப்பொழுது நதியில் குதித்து, மறுகரைக்கு நீந்திச் சென்றால் போதும்.”

“நானா? இவ்வளவு ஆழத்திலிருந்து குதித்தால் மேலே  உடல் வராது. தோல் பையைக் கட்டிக் கொ ண்டு குத்தித்தாலோ தோல் பை கிழிந்துவிடும்”.

 

“அரசே! துணிவை இழக்காதீர்கள் நான் சொல்லும்படி செய்யுங்கள். ஒரு இரண்டு நாழிகை ( 48 நிமிடம்) வெளியே நில்லுங்கள்” – என்று மன்னனிடம் சொல்லிவிட்டு மன்னனின் அறைக்குள் சென்று, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, தன்னையே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தான் தேவ சர்மன்.

 

அரசன் உள்ளே சென்ற போது சடலத்தைப் பார்த்து திடுக்கிட்டான். தனது உடலையே தோல்பையாகக் கொண்டு நீந்தி மறுகரைக்குச் செல்லும்படி குறிப்பு எழுதி வைத்திருந்தான் மன்னன் வசதியாக அமர பல பாகங்களில் துணிமணிகளைக் கட்டி வைத்தீருந்தான். மன்னனும் அவனது தியாகம் வீணாகக் கூடாது என்று எண்ணி உடனே ஆற்றுக்குள் குதித்தான். தனது படைகளை அடைந்தான்.

 

பின்னர் பெரும்படை திரட்டி, நேபாளத்தை நோக்கிச் சென்று அரமுடியைக் கவிழ்த்தான். தேவ சர்மனின் தியாகத்தால் காஷ்மீர் அரசு பிழைத்தது! இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

–சுபம்–