More Dictator Anecdotes (Post No.3683)

Compiled by London swaminathan

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-6-46 am

 

Post No. 3683

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

In the days of Mussolini’s higher prestige, it is said that he was once stranded in a small town due to the breaking down of his automobile. He went into a local cinema. When his picture appeared on the screen every one rose but he remains seated. The manager of the theatre came forward, tapped him on the shoulder, whispering in his ear, I feel the same way but you would better stand up. It is safer.

 

Xxx

 

Calamy, the celebrated Presbyterian minister, on one occasion objected to Cromwell assuming supreme power as Protector, as being in his opinion, both unlawful and Impracticable. Cromwell observed, he cared little about the lawfulness; but why may I ask you is it impracticable?

OH! Observed the divine. It is Impracticable inasmuch as it is against the voice of the people; you will have nine in ten against you.

Very well, sir, replied Cromwell, but what if I should disarm the nine and put the sword into the tenth man’s hand; would that not do the business, think you?

The events which succeeded proved that Cromwell not only entertained the, opinion he thus expressed, but that he also acted upon it.

 

Xxx

Frank Gannet, American newspaper publisher, spent three hours one afternoon in No.10, Downing Street, where prime minister Stanley Baldwin cocked his feet on an old fashioned roll top desk, smoked pipe after pipe, and opened his mind to Gannet. Baldwin had already announced in the House of Commons that the frontier of Britain was on the Rhine.

What do you intend to do about that man across the Rhine? Gannet asked.

 

  • If a python gets out of a cage, replied Baldwin, one man would be a fool to try alone in to get him back. But several men can get him back without much trouble No, we are not going to tackle him alone.

Xxx

 

In Italy the underground wiseacres are asking

What is the difference between Christianity and fascism?

The answer is,

In Christianity one man sacrifice s himself for all. Under Fascism all men sacrifice themselves for one.

 

Xxx

Mussolini dies and went to Heaven. He received a tremendous ovation. Millions of angels sang and praised him. He was given a crown and put on a great throne. Looking around he was surprised to notice that his crown and his throne were bigger than those of God the Father. Even he was unprepared for this. How is it?he asked of God .

You are greater than I, said God respectfully.

I gave your people one day of fasting a week. You have given them seven. I gave them faith. You have taken it away.

Xxx

 

In the year when the 20th anniversary of Fascism was celebrated; a stranger was riding through the streets of Naples in a carriage.

They passed a bakery and he saw a great mob of people storming place. He asked the driver about it, and the cabby, afraid to speak, said that it was a film being made. Not much farther along another mob of people was seen outside a grocery.

What is that? Asked the stranger

The second scene, said the driver.

Further along a similar mob was besieging a butcher.

Without waiting to be asked, the cab driver said,

This is the third scene.

What the name of the picture, anyway? asked the passenger.

Twenty years after, said the driver.

xxx

When that late and noble statesman Neville Chamberlain, was about to start from the fatal Munich conference, Herr Hitler said to him

Mr chamberlain, would you be so kind as to give me your umbrella for a keepsake?

No, no, said chamberlain, I can’t do that.

But Mr chamberlain, it would mean so much to me. I request it of you, please!

I am sorry. I can’t oblige you, said chamberlain

Hitter flew into a rage. I insist, he screamed stamping on the prime minister’s foot.

No, said, chamberlain firmly, it is impossible. You see, the umbrella is mine.

 

adolf-hitler

–Subham–

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? (Post No.3682)

Written by S NAGARAJAN

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3682

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

24-2-2017  பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

 

ச.நாகராஜன்

 

தமிழ் நாட்டுப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள். அதிலும் கொங்கு நாட்டுப் பெண்க்ள் அறிவில் சிறந்திருப்பதோடு தாங்கள் சிறந்திருப்பதை தக்க விதமாக எடுத்துக் காட்டுவதிலும் சிறந்தவர்கள். எளிதில் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி ஆணுக்கு அறிவு அதிகமா அல்லது பெண்ணுக்கு அதிகமா என்பது.

 

 

இதற்கு தக்க விதமாக விடையளித்த கொங்கு நாட்டுப் பூங்கோதையின் சரித்திரம் சுவையானது.

தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பூங்கோதை அறிவில் சிறந்தவர். கவி பாட வல்லவர். அடக்கத்திற்கும் பெயர் பெற்றவர்.

 

 

ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவ்ருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.

 

திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.

 

 

வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

 

ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

 

 

அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

அறிவில்  முதிஞரே ஆவர் – அறிகரியோ

தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

தான் கொண்ட சூல் அறியார் தான்

 

 

இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். பேச முடியாமல் திகைத்திருந்த புலவர்களைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டு நடந்ததை அறிந்தார் எம்பிரான் கவிராயர்.

புலவர்கள் அவரது மனைவியார் எழுதிய பாடலை கவிராயரிடம் கொடுக்கவே அதைப் படித்துப் பார்த்துச் சிரித்த அவர் தன் மனைவியாரிடம் விளக்கம் கேட்டார்.

 

 

ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே  ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவ்ர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கற்பமுற்றி சிசு பிறக்கிறது. இதை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கவில்லையா, என்ன? ஆகவே தங்கள் கர்ப்பதைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.

 

உயிர்கள் பிறத்தலைப் பற்றி பிரம்மசூத்திரம் மூன்றாம் அத்தியாயம் முதல் பாதம் முதல் சூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள் அருளிய விளக்கவுரையையும் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தில் உள்ள விளக்கவுரையையும் பூங்கோதை வீட்டின் உள்ளிருந்தபடியே நன்கு விளக்கினார்.

 

மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

சொர்க்கம் சென்ற ஆன்மா,  மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலைத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

 

 

விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

விஷயம் கொங்கு  மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

 

 

இந்த் சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

கொங்கு மண்டல சதகத்தில் 45வது பாடலாக மலர்ந்துள்ள பாடலைப் பார்ப்போம்:

 

 

குறுமுனி நேர்  தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

 

பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

****

 

 

 

Cabinet Ministers Anecdotes (Post No.3681)

Written by London swaminathan

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:- 19-57

 

Post No. 3681

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Twelve Apostles and Lincoln

When Attorney General Bates resigned in 1864, the Cabinet was left without a Southern member. A few days before the meeting of the Supreme Court, which then met in December, Mr Abraham Lincoln sent for Titian G Coffey , and said,

“My cabinet has shrunk up North, and I must find a Southern man . I suppose if the Twelve Apostles were to be chosen nowadays, the interests of locality would have to be heeded.”

Xxx

How to control a Christian Preacher and Minister?

Lincoln received many complaints because of the stern dictatorial methods employed by the Secretary of War, Stanton. He finally silenced them by saying,

“We may have to treat Stanton as they are sometimes obliged to treat a Methodist minister I know out West . He gets wrought up to so high a pitch of excitement in his prayers and exhortations that they put bricks in his pockets to keep him down. But I guess we will let him jump awhile first.”

X xx

Keep my wife out of it—Oz PM

When former prime minister Menzies of Australia was sworn into office, various representatives of the press were on hand to interview him. The reporter from the radical press said, somewhat bluntly,

“I suppose Mr Prime Minister, that you will consult the powerful interests that control you in choosing your cabinet?”

 

“Young man, snapped the Prime Minister, keep my wife’s name out of it”.

 

Xxxx

 

Mayor anecdote

A mayor of a city in southern Italy, in an address of welcome to King of Italy, said

“We welcome you in the name of five thousand inhabitants, three thousands of whom are in America.”

 

மண்டோதரி பற்றி இரண்டு விசித்திரக் கதைகள் (Post No.3680)

0e629-mandodari-in-siya-ke-ram-piyali-munsi

Written by London swaminathan

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:- 8-27 am

 

Post No. 3680

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ராவணனின் மனைவியான மண்டோதரியை இந்துப் பெண்கள் தினமும் காலையில் வணங்குகின்றனர்சீதை.அஹல்யா,திரவுபதி, குந்தி, தாரா, மண்டோதரி என்ற பஞ்சகன்யைகளை (5 பெண்களை) யார் தினமும் நினைக்கிறார்களோ அவர்களுடைய பாபங்கள் அகன்று அவர்கள் புண்ணியம் அடைவார்கள் என்பது இந்துக்களின் வௌவான நம்பிக்கை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் , மாணிக்கவாசகரும் மண்டோதரி பற்றி சொல்லும் கதைகள் விநோதமானவை.

 

மண்டோதரி மயன் என்னும் அசுரனின் மகள்; இந்திரஜித்தின் தாய்; ராவணன் உயிர் துறந்தவுடன் உயிர் நீத்த பத்தினி; சீதையை விட்டுவிடும்படி ராவணனுக்கு புத்திமதி சொன்ன வீராங்கனை!

 

 

“ஸீதையைத் தங்கள் நாயகியாக்கிக் கொள்வது கருத்தானால், தங்களுடைய மாயா சக்தியால் ராமனுடைய உருவத்தை எடுத்துக்கொண்டு அந்த ஸீதையைத் தாங்கள் ஏன் ஏமாற்றிவிடக் கூடாது? என்று மண்டோதரி தன் கணவனான ராவணனைக் கேட்டாள்.

 

அதற்கு ராவணன் “சீ! போ, ராமனை நினைத்த மாத்திரத்தில் எனக்குச் சொல்லவொண்ணாத ஆனந்தமும் இன்பமும் உண்டாகின்றன. பரமபதமான சொர்கமும்கூட வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது. அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக்கொண்டால் எனக்குச் சிற்றின்பத்தில் எப்படி மனம் செல்லும்?” என்று பதில் சொன்னான்.

 

ஆதாரம்:— ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் உபதேச மொழிகள், பக்கம் 152 (ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை)

 

மாணிக்க வாசகர், திருவாசகத்தில் இரண்டு இடங்களில் மண்டோதரி பெயரைக் குறிப்பிடுகிறார்.

 

உந்து திரைக்கடலைக் கடந்தன்

றோங்கு மதிலிலங்கையதனில்

பந்தணை மெல்விரலாட்கருளும்

பரிசறி வாரெம்பிரானவாரே

–திருவார்த்தை, திருவாசகம்

 

 

இதற்கு வியாக்கியானக்காரர்கள் சொல்லும் விளக்க உரை:-

 

மண்டோதரி ராவணன் மாளிகையில் இருந்து இறைவனைத் தியானித்தாளாக, இறைவன் குருமேனி தாங்கியிருந்த  கோலத்துடன், அங்குச் சென்று அவளுக்குக் காட்சியளிக்க, இறைவனுடைய பேரழகில் ஈடுபட்டுப் பேரின்பத்தைக் கேட்கவிருந்த அவள் மயங்கிச் சிற்றின்பத்தில் தன்னுடைய சிந்தையைச் செலுத்தினாள். அவளுடைய அறியாமையைக் கண்ட இறைவன், அவள் கற்பொழுக்கம் கெடாதிருக்க, உடனே அந்த இடத்தை விட்டு மறைந்தார். அவள் வருந்தினாள். அவள் கொண்டது ஒருதலைக் காமம் ஆதலின் பெண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அதனைப் பெட்டியுள் வைத்துக் கடலில் விட்டாள். அதுவே மிதிலையில் வந்து ஒதுங்கிப் புதையுண்டு ஜனகனுடைய உழுகால் நுனியில் வெளிவந்தது என்பது வரலாறு.

 

ஆதாரம்:–பக்கம் 1168,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

3510a-mandodari-stopping-ravan

ராவணனைத் தடுத்து நிறுத்தும் மண்டோதரி

 

இன்னொரு இடம்:

 

ஏர்தரு மேழுல கேத்த எவ்வுரு வுந்தன் நுருவாய்

ஆர்கலி சூழ்தென்னி லங்கை யழகமர் வண்டோதரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவுவாய்

–குயில்பத்து, திருவாசகம்

 

 

பொருள்:

 

கடல் சூழ்ந்த அழகிய இலங்கையில் வண்டோதரிக்கு எழுச்சியை விளைவிக்கும் ஏழுலகத்தவர்களும் போற்றக் காணப்பெறும் எல்லா வடிவங்களும் தன் வடிவேயாய்ப் போந்து பேரருளால் பேரின்பத்தையளித்த பெருந்துறைக்கண் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானை, தென்பாண்டி நாட்டானை உனது புகழமைந்த வாயால் வரக்கூவுவாயாக குயிலே என்றவாறு.

 

ஆதாரம்:–பக்கம் 748,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

 

அசுரப் பெண்களையும் இந்துக்கள் தினமும் கொண்டாடுவது ஆரிய-திராவிட மாயையைப் பரப்பும் அறிவிலிகளுக்கு செமையடி கொடுக்கும்; எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துக்களே; ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என்று அங்கலாய்க்கும் பொந்தெலிகளுக்கும் பேதிலிகளுக்கும், ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அசிங்கங்களுக்கும் இது செமையடி தரும்.

 

–subaham–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 31 (Post No.3679)

Buddha in Dambulla, Sri Lanka; picture by Dr Devaraj of London.

 

Written by S NAGARAJAN

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:-  5-24 am

 

 

Post No.3679

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 31

by ச.நாகராஜன்

 

 

107ஆம் வயது (1946-1947)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 107. ஒரு வழியாக இரண்டாம் உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருந்ததால்,. அனைத்து அரசு அலுவலகங்களும் தங்கள் பழைய இடங்களுக்குத் திரும்பின. வசந்த காலத்தில் உரிய சூத்திரங்கள் இசைக்கப்பட்டன.  யுத்தத்தில் இறந்த்வர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை புரியுமாறு அனைத்து ம்டாலயங்களுக்கும் அரசு உத்தரவிட்டது.  ஆகவே காண்டனில் உள்ள ஜின் ஹுயி ஆலயத்திற்கு  அது போன்ற ஒரு பிரார்த்தனைக்கு வருமாறு அதிகாரிகளும் உயரிய பிரபுக்களும் ஸு யுன்னுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

 

 

நவம்பர் மாதம் அங்கு ஆலயத்திற்குச் சென்றார் ஸு யுன். அங்குள்ள பீச் மரங்கள் பிரார்த்தனை புரியும் போது திடீரென்று மலர்ந்தன. பிரமாதமாக நறு மணம் வீசியது. ஒரு லட்சம் பேர் ஆலயத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சீஸனே இல்லாத போது மலர்கள் மலர்ந்த  இந்த மாபெரும் அதிசயத்தைப் பார்த்து வியந்தனர். உபாசிகா ஜெங் பி-ஷான் பழைய கால புத்தரை எம்ப்ராய்டரியில் செய்து பீச் மலர்களால் அலங்கரித்தார். உபாசகர் ஹூ யி-ஷெங் புனித மலர்களை ஒரு ஓவியமாகத் தீட்டினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அனைத்து அதிகாரிகளும் பிரபுக்களும் கை யுயான் மடாலயத்திற்கு வந்து புத்த தர்மத்தைப் போதிக்குமாறு வேண்டினர். ஏராளமான பேர்கள் அங்கு குழுமினர். குளிர்காலத்தில் ஸு யுன்னின் மூத்த சீடரான குவான் பென் காலமானார்.

 

 

108ஆம் வயது (1947-1948)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 108. வசந்த காலத்தில் நான் ஹூவா மடாலயத்திற்கு ஸு யுன் சென்று சூத்ரங்களை இசைத்தார். ஹாங்காங்கில் உள்ள டோன்ஹுவா ஆஸ்பத்திரிகளின் குழுமம் ஸு யுன்னை  அழைத்து க்ரவுன் காலனி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை புரியுமாறு வேண்டியது. சோங்-லான் பள்ளியில் நட்ந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குழுமினர்; ஸு யுன்னின் சீடர்களாயினர். உபாசிகா ஜெங் பி-ஷான் ஸு யுன்னுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார்

அடுத்து மக்காவோவில் உள்ளவர்கள் அழைக்கவே அங்கு ஒரு வார கால தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஸு யுன்னின் சீடர்களாயினர்.

 

உபாசகர் மா ஷி சுவான் அழைப்பை ஏற்று மவுண்ட் ஜோங் சென்ற ஸு யுன் அங்கு ம்ஹா கருணை கூட்டத்தை நடத்தினார். அங்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்; அவர்களும் சீடர்களாக ஆயினர். பின்னர் யுவான் மென் மடாலயம் திரும்பிய ஸு யுன் அங்கு புனருத்தாரண வேலையை துரிதப்படுத்தினார்.

வருடம முடிவுக்கு வந்தது.

 

 

109ஆம் வயது (1948-1949)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 109.. வசந்த காலத்தில் நான் ஹுவா மடாலயத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.  ஸு யுன் காண்டனில் உள்ள  ஜி டே மருத்துவமனையைத் திறப்பதற்காக அழைக்கப்பட அங்கு சென்றார். அந்த விழாவை முடித்து விட்டு ஹாங்காங்கில் சி ஹாங் ஆலயத்தில் சூத்ரங்களை இசைத்தார்.

அங்கு ஒரு வார காலம் ப்யூர் லேண்ட் தியானத்தை நடத்தி சரணாகதி சூத்ரத்தையும் ஐந்து சூத்ரங்களையும் கற்பித்தார்.  பின்னர் யுன்  மென் மடாலயத்திற்குத் திரும்பினார்.

யூனானில் ஐந்தாம்  மாதம் தர்ம குரு ஜியா சென்  மறைந்தார்.

 

 

இலையுதிர்காலத்தில் அமெரிக்கப் பெண்மணியான ஆனந்தா ஜென்னிங்ஸ் அங்கு வந்து உபதேசம் செய்தார். ஒருவார காலம் சான் தியானம் நடைபெற்றது. அவருக்கு ஒரே மகிழ்ச்சி.

.ஆனந்தா ஜென்னிங்ஸ் புத்த தர்மத்தை ந்னகு கற்றுத் தேர்ந்த வல்லுநர். அவரை ஸு யுன்னின் சீடரான மாஸ்டர் குவி ஷி சோதனை நிமித்தம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

சரித்திர பிரசித்தி பெற்ற இந்த உரையாடலின் போது ஆனந்தா ஜென்னிங்ஸ் உடனுக்குடன் கேள்விகளுக்கு பளீர் பளீரென்று பதில் அளித்தார்.

 

இதனால் அனைவரும் மகிழ்ந்தனர். ஸு யுன்னும் குவி ஷியும் அவரை ஆசீர்வதிக்க அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.

 

 

110ஆம் வயது (1949-1950)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 110.. நான் ஹுவா மடாலயத்தில் போதனைகள் முடிந்த பிறகு யுன் மென் திரும்பிய ஸு யுன் எண்பது சிலைகளுக்கான பூச்சு வேலையையும் அதன் பீடங்கள் உருவாக்கப்படுவதையும் மேற்பார்வையிட்டார்.

இது முடிய ஒரு வருட காலம் ஆனது.

இப்படியாக ம்டாலயம் தொண்ணூறு சதவிகிதம் புதுப்பிக்கப்பட்டது.

 

ஹாங்காங்கில் புத்தர் கோவில் ஒன்றைத் திறக்க வருமாறு உபாசகர் பாங் யாங் கியூ அழைக்கவே அங்கு விரைந்த ஸு யுன் பிரக்ஞா விஹாரத்தில் சூத்ரங்களை போதித்தார்.

ஒரு மாதம் அங்கு கழிந்தது. பின்னர் அவர் யுன் மென் திரும்பினார்.

 

யுன் மென் மடாலயத்தின் ஆவணங்களைத் திருத்துமாறு ஸு யுன், உபாசகர் சென்ஸியூ லு-ஐக் கேட்டுக் கொண்டார்.

வருடம் முடிவுக்கு வந்தது.

 

-தொடரும்

 

Two Interesting Stories about Mandodari! (Post No.3678)

Picture: Mandodari stopping Ravana

 

Written by London swaminathan

 

Date: 28 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-09

 

Post No. 3678

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

Mandodari was daughter of Demon king Maya and wife of Ranvana, King of Sri Lanka. She was the mother of Indrajit and died immediately after Ravana’s death.

 

Sri Ramakrishna Paramahamsa gives an interesting anecdote about Mandodari:-

 

Mandodari told her royal husband Ravana, “If you are so intent upon having Sita as your queen, why don’t you impose on her assuming the form of her husband Rama with the help of your magical powers?”

 

“Fie upon you!”, explained Ravana, “Can I stoop the pleasures of the senses while I am in the holy form of Rama – a form the very thought of which fills my heart wih such unspeakable joy and blessedness that even the higest heavens appears to me worthless?”

 

Hindu women remember five women’s names every day to purify themselves. Mandoari was one of the five great women. This explodes the Aryan- Dravidian Racist theory. Though Mandodari was a Rakshasa’s wife, every Hindu prays to her. More over all the 18 Hindu mythologies say that the demons got these powers by worshipping to Hindu Trinity. That also explodes the Aryan Dravidian racist theories concocted by the westerners.

Ahalya, Draupadi, Sita, Tara ,Manodari   thatha

Pancha kanya smaren nithyam sarva papa vinashanam

–Prathasmaranam

(All the sins of those who think about the five great women Ahalya, Draupadi, Sita, Tara and Mandodari will be destroyed).

Manikkavasagar’s Story

Great Tamil saint Manikkavasagar mentioned Mandodari in his Tiruvasagam (Kuyil Pathu and Tiruvarthai).

A strange legend is given in the explanatory nots for the verse in the Tiruvarthai section of Tiruvasagam as follows:

Ravana’s wife Mandodari was praying to Lord Shiva. He came in the form of a Guru. He was so handsome that Mandodari forgot herself and fell for him and asked for sensual pleasures. But Lord Shiva did not want her to fall a prey to sensual pleasures and so he disappeared. Then she repented her action. But later she gave birth to baby girl and set it afloat in the sea. That baby girl reached the country of Janaka (Bihar in India) and he found her when he went to plough the land. That baby girl was Sita. In other words, Sita was Mandodari’s daughter!

Manikkavasagar said that she was blessed by Lord Shiva. Only the commentators added this strange story. Whatever may be the story, she was one of the five chaste women every Hindu remembers.

–Subham–

31 ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் (Post No.3677)

 

Compiled by London swaminathan

 

Date: 28 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 9-31 am

 

Post No. 3677

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

March 11 மாசிமகம்; 13 , ஹோலி; 14 காரடையான் நோன்பு ;  29 யுகாதிTelugu New Year; 8-சர்வதேச மகளிர் தினம்;

27—அமாவாசை New Moon Day

12 – பவுர்ணமி Full Moon Day

சுபதினங்கள் Auspicious Days— 9, 15, 23, 26.

மார்ச் ((மாசி/பங்குனி)) 2017 காலண்டர்

 

 

மார்ச் 1 புதன் கிழமை

ஈஸ்வரன், வெளியிலும், வெகு தூரத்திலும் இருப்பதாகத் தோன்றும் வரையில் அஞ்ஞானம் இருக்கும்; ஆனால் உள்ளே ஈசுவரன் இருப்பதாக உணர்ந்துகொண்டதும், உண்மையான ஞானம் உண்டாகிறது.

xxx

மார்ச் 2 வியாழக்கிழமை

 

அம்மா எனக்குப் பசிக்கும்போது என்னை எழுப்பு என்று குழந்தை சொல்லிற்று; அதற்கு குழந்தாய்! உன் பசியே உன்னை எழுப்பிவிடும் என்று அதன் தாய் சொன்னாள்.

xxx

மார்ச் 3 வெள்ளிக்கிழமை

இந்தக் கலியுகத்தில் ஈசுவரனின் கிருபையைப் பெறுவதற்கு மூன்று நாள் தீவிரமான பக்தி செய்தால் போதுமானது.

xxx

மார்ச் 4 சனிக் கிழமை

பண ஆசை பிடித்து அலையும் லோபியைப் போல, உன் மனம் ஈசுவரன் மீது ஆசை கொண்டு அலையட்டும்.

xxx

மார்ச் 5 ஞாயிற்றுக் கிழமை

தண்ணீரில் மூழ்கிவிட்டவன், மூச்சுவிடுவதற்கு மிகவும் தவிப்பதைப்போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.

xxx

 

மார்ச் 6 திங்கட் கிழமை

கடவுளை அடைய எத்தகைய அன்பு வேண்டும் என்று உனக்குத் தெரியுமா? தலையில் அடிபட்ட நாய் கலக்கமுற்று ஓடுவதைப் போல ஒருவன் சஞ்சலப்பட்டு அலையவேண்டும்.

xxx

மார்ச் 7  செவ்வாய்க் கிழமை

பித்தளைப் பாத்திரத்தைத் தினமும் தேய்க்காவிட்டால் களிம்பு ஏறிவிடும். அது போல தினமும் கடவுள் வழிபாடு செய்யாத மனிதனுடைய மனது மாசு அடையும்- என்று தோதாபுரி சொல்வதுண்டு. அதே பாத்திரம் , தங்கப் பாத்திரம் ஆனால் தேய்க்கத் தேவை இல்லை.

xxx

மார்ச் 8 புதன் கிழமை

பாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால், கொதித்துப் பொங்கும். நெருப்பை அணைத்துவிட்டால் பொங்குதல் நின்றுவிடும். அதுபோல சாதனா மார்கத்தில் இருக்கும் வரையில்தான் புதிய ஆத்மார்த்தியின் மனம் மகிழ்ச்சியில் பொங்கும்.

xxx

மார்ச் 9 வியாழக்கிழமை

 

பெரிய மீனைப் பிடிக்க வேண்டுமானால், தூண்டிலில் இரையைக் கோத்து, தண்ணீரில் போட்டுவிட்டு, அவ்விரையை மீன் கவ்வும் வரை பொறுமையாகக் காத்திருப்பான். அதுபோல பொறுமையுடன் சாதன வழிகளைப் பின்பற்றும் பக்தன் கடைசியில் கடவுளைக் காண்பது நிச்சயம்.

xxx

மார்ச் 10 வெள்ளிக்கிழமை

நீந்தக் கற்றுக் கொள்பவன், கொஞ்ச நாட்களுக்கு நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நாள் நீச்சல் கற்றுக்கொண்டவுடன், கடலில் நீந்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது. அது போல, பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பாட்டால், பல தடவை பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக்கூடிய சக்தி உனக்கு உண்டாகும்.

xxx

மார்ச் 11 சனிக் கிழமை

வெருளுகிற குதிரைக்குக் கண்மூடி போடாவிட்டால் அது நேரான வழியில் போகாது. அது போல, விவேக, வைராக்கியங்களாற்கிற தடைகளால் மறைக்கப்பட்டால் பக்தனுடைய மனம் தீய வழியில் செல்லாது.

xxx

மார்ச் 12 ஞாயிற்றுக் கிழமை

 

வண்ணத்துப்புழு (பட்டுப்புழு), தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. ஆனால் இறக்கை முளைத்தவுடன் அந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு, பட்டுப்பூச்சியாக ஆனந்தம் அனுபவிக்கிறது. அதுபோல உலகப் பற்றில் உழலும் ஆன்மாவானது, அந்த மாய வலையைக் கிழித்துக்கொண்டு வைராக்கியம், விவேகம் என்ற இரண்டு சிறகுகளால் வெளியே வந்தால் பேரின்பம் அனுபவிக்கலாம்.

xxx

மார்ச் 13 திங்கட் கிழமை

பாதரசம் தடவிய கண்ணாடியில் ஒருவனுடைய முகம் பிரதிபலிக்கும். அதுபோல சக்தியையும், தூய்மையையும், பிரம்மசர்யத்தால் காப்பாற்றிக் கொண்டிருகிறவனுடைய இருதயத்தில் ஸர்வேஸ்வரனுடைய திவ்விய ரூபம் பிரதிபலிக்கும்.

xxx

மார்ச் 14  செவ்வாய்க் கிழமை

ஒருவன் எப்போதும் ஸத்தியத்தையே பேசுகிறவனாக இல்லாவிட்டால், ஸத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.

xxx

மார்ச் 15 புதன் கிழமை

ஒருகுடும்பத்திலுள்ள மருமகள், தனது மாமன் மாமிக்கு மரியாதையுடன் பணி செய்து, அவர்களை இகழாது கீழ்ப்படிந்து வந்தாலும், அவள் தனது புருஷனையே பிரியமாகக் கொண்டாடுவாள். அதுபோல உனது இஷ்ட தேவதையிடம் பூரண பக்தியோடு இருந்தாலும், மற்ற கடவுளரை இகழாதே.

xxx

 

மார்ச் 16 வியாழக்கிழமை

இராமபிரான், இலங்கைக்குப் போய்ச் சேருவதற்கு அணை (பாலம்) கட்ட வேண்டி இருந்தது. ஆனால் அவனுடைய பரமபக்தனான ஹனுமான், ராமபிரானிடத்தில் வைத்திருந்த திட பக்தியால், சமுத்திரத்தை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டான். இங்கு எஜமானனைவிட, சேவகனே அதிகம் சாதித்தான். காரணம்- நம்பிக்கை!

xxx

மார்ச் 17 வெள்ளிக்கிழமை

சிக்கிமுக்கிக் கல், கற்பகோடி காலம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்தாலும் அது உள்நெருப்பை ஒருபோதும் இழப்பதில்லை. அதைத் தட்டினால் தீப்பொறி பறக்கும். அதுபோலத்தான் பக்தனும். ஈசுவரனுடைய நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தன்னை மறந்தவனாய் விடுகிறான்.

xxx

மார்ச் 18 சனிக் கிழமை

வீட்டின் உச்சி முகட்டுக்குப் போக, ஏணி, மாடிப்படி, மூங்கில் கம்பு, கயிறு இவைகளில் ஏதேனும் ஒன்றின் உதவியைக் கோண்டு ஏறலாம். அதுபோல ஈசுவரனை அடைவதற்கு  வேறு வேறு வழிகளும் சாதனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட வழிகளுள் ஒன்றைதான் காட்டுகிறது.

xxx

மார்ச் 19 ஞாயிற்றுக் கிழமை

வாய்விட்டு உரக்கத்தான் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டுமா? உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையைக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.

xxx

 

மார்ச் 20 திங்கட் கிழமை

பிரார்த்தனையால் உண்மையில் பலன் உண்டா? மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும்.

xxx

மார்ச் 21  செவ்வாய்க் கிழமை

ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போக வேண்டுமானால், வாயிற் காப்போனையும் ஏனைய அதிகாரிகளையும் நயந்துகொள்ள வேண்டும். ஸர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் பக்தி செய்து, அவனுடைய பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நீண்டகாலத்துக்கு சாதுக்களுடன் சஹவாசம் செய்யவேண்டும்.

xxx

மார்ச் 22 புதன் கிழமை

காம்பஸ் எனப்படும் திசை அறி கருவியின் முள் எப்போதும் வடதிசையையே காட்டும். அதைப் பின்பற்றிச் செல்லும் கப்பல்கள் ஆபத்துக்குள்ளாவதில்லை. மனித வாழ்க்கை என்னும் கப்பல் மனம் என்னும் திசையறி கருவியில் பரப்பிரம்மத்தை நோக்கியே சென்றால் எல்லா ஆபத்துகளையும் தாண்டலாம்.

xxx

மார்ச் 23 வியாழக்கிழமை

மந்திரித்த கடுகைப் பேய் பிடித்தவன் மீதூ தூவினால் பேய் அகன்றுவிடும். ஆனால் பேய் கடுகுக்குள்ளேயே புகுந்துகொண்டால் என்ன ஆகும்? பகவானை தியானம் செய்யும் மனத்துக்குள்ளேயே தீய எண்ணங்கள் புகுந்துவிட்டால், பின்னர் எப்படி பக்தி மார்கத்தை அனுசரிக்க முடியும்?

xxx

மார்ச் 24 வெள்ளிக்கிழமை

மிருதுவான களிமண்ணில் எந்த  உருவமும் பதியும். கருங்கல்லில் பதியாது பகதனுடைய ஹிருதயத்தில் ஈசுவர ஞானம் தானே பதியும்; பந்தப்பட்ட ஜீவனுடைய இருதயத்தில் பதிவதில்லை.

xxx

மார்ச் 25 சனிக் கிழமை

 

 

முதலில் உள்ளமாகிய கோவிலில் ஈசுவரனைப் பிரதிஷ்டை செய், முதன்முதலில் அவனை உள்ளபடி அறிந்துகொள். பிரசங்கம், உபதேசம் எல்லாம் பிற்பாடு ஆகட்டும்.

xxx

 

மார்ச் 26 ஞாயிற்றுக் கிழமை

‘கீதா, கீதா, கீதா’ – என்று அடுத்தடுத்து பலமுறை சொன்னால் த்யாகி என்று பொருள்படும் ‘தாகி, தாகி’ என்ற ச ப்தம் வரும். உலகப் பற்றுள்ளவர்களே! துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு விட்டு ஈசுவரனிடத்தில் இருதயத்தை நிலை நிறுத்துங்கள் என்று பகவத் கீதை ஒரே வார்த்தையில் போதிக்கின்றது.

xxx

மார்ச் 27 திங்கட் கிழமை

எனது திவ்ய மாதாவாகிய ஸரஸ்வதி தேவியினிடமிருந்து வரும் ஒரே ஒளிக்கிரணம், மஹா மேதாவியான பண்டிதனை நசுங்கிப் போன புழுவுக்குச் சமமானமாக அடக்கிவிடும்

xxx

மார்ச் 28  செவ்வாய்க் கிழமை

ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ என்று வாயால் சொல்லுவது எளிது. ஆனால் ஒரு வாக்கியத்தில் அந்த ஸ்வராவளி வரும்படி செய்வது சிரமமானது. அதுபோல தர்மத்தைப் பற்றி பேசுவது எளிது. அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது சிரமமானது

xxx

மார்ச் 29 புதன் கிழமை

பகவானது சந்நிதானத்தில் தர்க்கம், புத்தி, படிப்பு – இவைகளில் எதுவும் பிரயோசனப்படாது அங்கே ஊமை பேசும், குருடு காணும், செவிடு கேட்கும்.

xx

மார்ச் 30 வியாழக்கிழமை

குடத்தில் தண்ணீர் மொள்ளும்போது ‘பக், பக்’ என்ற சப்தம் உண்டாகிறது; குடம் நிரம்பியவுடன் அந்த சப்தம் நின்றுவிடுகிறது. அதுபோல ஈசுவரனைக் காணாதவன் வீண் வாதங்களில் ஈடுபடுகிறான். அவன் ஈசுவரனைக் கண்டுவிட்ட பின்னர், பேசாமால் அந்த திவ்வியானந்தத்தை அனுபவிக்கிறான்.

xxx

 

மார்ச் 31  வெள்ளிக்கிழமை

ஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அஞ்ஞானம்.

Source: ராமகிருஷ்ணரின் உபதேசமொழிகள், ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை

 

–Subham–

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 21 (Post No.3676)

Written by S NAGARAJAN

 

Date: 28 February 2017

 

Time uploaded in London:-  8-23 am

 

 

Post No.3676

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

 

  • தராசு என்னும் நூலிலிருந்து ஸி.ஆர் ஸ்ரீநிவாஸன் (1939) எழுதிய கட்டுரை ஒன்றை குமரி மலரில் காண்கிறோம்.

 

அந்தக் கட்டுரை:

 

     எந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.

 

 

 

     தமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 

      மாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.

 

 

       பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.

 

 

41) இதே குமரி மலர் இதழில் பாரதியார் பாமணம் என்ற தலைப்பில் பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) எழுதிய கவிதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

  • கண்ணிகள் கொண்ட இந்தப் பாடல் பாரதி என்ற மாதப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

 

பாரதியார் பாமணம்

 

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியில் என்ற மெட்டு

 

  1. பூ மணக்குது புகழ் மணக்குது

     புண்ணியர் பாடலிலே                               \           

   பாமணக்குது பயன் மணக்குது

     பாரதி பாட்டுள்ளே

  1. இனிமை மொழி இனிசையிலங்குது

      இன்பப் பாடலிலே

   பனிமொழிச்சியர் கலை மணக்குது

      பாரதி பாட்டுளே

  1. காவியக்கனி  கனிந்திருக்குது

       காமர்ப் பாடலிலே

   பாவியலணி பரந்திருக்குது

       பாரதி பாட்டுளே

  1. புண்ணிய நெறி பொலிந்திருக்குது

       புதுமைப் பாடலிலே

   பண்ணியல்களின் நடை நடக்குது

       பாரதி பாட்டுளே

  1. தகைமை தத்துவந் தவழ்ந்திருக்குது

        தண்ணார் பாடலிலே

    பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது

         பாரதி பாட்டுளே

  1. தேஞ்சார்ம் பசுந் தேறலிருக்குது

         தேசப் பாட்லிலே

   பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது

         பாரதி பாட்டுளே

  1. ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது

       திவ்யப் பாடலிலே

   ப்யந்தொதுங்குது தீண்டாமைப் பேய்

        பாரதி பாட்டுளே

  1. சாதிக் கொடுமைகள் தகர்ந்தழியுது

       சங்குப் பாடலிலே
பாதகர் செயும் மோசமோடுது

       பாரதி பாட்டுளே

  1. சேவை முறைகள் சேர்ந்திருக்குது

       தேசப் பாடலிலே

   பாவையர் சுதந்திரமிலங்குது

        பாரதி பாட்டுளே

  1. விடுத்லையெனும் வீணையொலிக்குது

        வித்தகப் பாடலிலே

   படுப்வத் தொழில் பறந்திரியுது

        பாரதி பாட்டுளே

  1. அச்சமென்ற சொலகன்றிருக்குது

          அன்புப் பாடலிலே

      பச்சமென்ற சொல் பரவி நிற்குது

          பாரதி பாட்டுளே

  1. கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது

        குயிலின் பாடலிலே

   பஞ்சமோடிட வழியிருக்குது

        பாரதி பாட்டுளே

  1. அடிமையென்ற சொலகன்றிருக்குது

        அமுதப் பாடலிலே

   படிதலென்ற சொல பழுதுபட்டது

         பாரதி பாட்டுளே

  1. முத்தமிழெனும் வெற்றிமுழங்குது

        முரசுப் பாடலிலே

   பத்தழகுகள் பரவி நிற்குது

       பாரதி பாட்டுளே

  1. அண்டத்தை வெல்லும்

       ஆண்மை தங்குது அழகுப் பாட்லைலே

   பண்டைத் தமிழர் வீறிலங்குது

       பாரதி பாட்டுளே

  1. பாரதியென்றிட சக்தி ஜெனிக்குது

      பாப்பாப் பாடலிலே

  “பாரதி” மாளிகை தன்னிலுலாவுது

      பாரதி பாடல்களிலே

  • “பாரதி”

மாதப் பத்திரிகை

உத்தமபாளையம் 1933 ஆகஸ்டு

அடுத்து சில சுவையான கட்டுரைகள் உள்ளன.

 

இதைத் தொகுக்க திருஏ.கே. செட்டியார் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் அவரின் அருமை தெரியும்.

 

                   -தொடரும்

***

 

31 Beautiful Quotations from the Panchatantra! (Post No.3675)

March 2017 GOOD THOUGHTS Calendar

 

Compiled by London swaminathan

 

Date: 27 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-33

 

Post No. 3675

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

March 11 Masi Makam; 13 Holi; 14 Karadaiyan Nonbu;  29 Telugu New Year (Yugadhi); March 8 -International Women’s Day

27– New Moon Day

12 –Full Moon Day

Auspicious Days— 9, 15, 23, 26.

March 1 Wednesday

Wealth: “Let the wealth you earn circulate (invest)

and you keep it still

Water in a full tank, lacking an outlet

spills over and go to water (Chapter 1-2)

 

March 2 Thursday

Wealth: “Wealth lures wealth as tame elephants the wild;

wealth cannot be earned by wishful thinking

there can be no trade without wealth (1-3)

 

March 3 Friday

Wealth: “The man who lets the wealth that Fortune showers on him

sit idle, finds no happiness in the world,

nor I the next. What is he then?

A confounded fool performing a watchman’s role- 1-4

 

March 4 Saturday

Earned by valour alone:

“No rite of consecration

no sacred ablution

do beasts of the forests perform

to crown the lion as king? (1-6)

 

March 5 Sunday

Poking Nose: “He who pokes his nose where it does not belong,

surely meets his end;

for that’s what happened to the monkey who meddled

with the wedge, my friend” (1-8)

March 6 Monday

Kin and kith: If a man does not hold dear the well-being

of parents, kin, dependants, and himself,

what good is his living in the world of men?

A crow too lives long eating ritual offerings (1-11)

 

March 7 Tuesday

Scurvy: Easily filled is a tiny stream

easily filled the cupped paws of a mouse

easily pleased a scurvy fellow;

he gives thanks for crumbs (1-14)

 

March 8 Wednesday

Effort and Conduct: By no man’s smile is any many raised high;

frown is any man cast down;

By no man’s up or down, a man rises or falls in life,

by the true worth of his actions and conduct 1-18

 

March 9 Thursday

Virtue and Vice: With greatest effort are stones carried uphill;

and with the greatest ease do they tumble down;

so too with our own self, through Virtue and Vice 1-19

 

March 10 Friday

Understanding: “What is left unsaid, the learned, wise, infer

The intellect sees clearly revealed

another’s true intent and purpose,

gains knowledge from expression of face and eyes

from tone of voice, gait

from gesture and deportment 1-20

March 11 Saturday

Courtier: “A courtier in the palace should act with extreme caution;

a pupil in his teacher’s house, with respect and discretion;

Those unmannerly who do not know their place

will soon meet with extinction like oil lamps

lighted at dusk in dwellings of the poor -1-25

 

March 12 Sunday

Women: Kings and women and slender climbing wines

cling to whatever they find close to them

such is the way of the world 1-27

 

March 13 Monday

Wise: “The wise do not care to serve the King

Who cannot recognise each ones individual merit

Such service is wholly barren of all fruit

Like the tillage of a salt meadow 1-31

 

March 14 Tuesday

He who stands in the forefront in battle

But walks behind King in the city

Waits in the palace at the Royal chamber door

He is beloved of princes 1-35

March 15 Wednesday

He who looks upon dice as Deaths messenger

And drink as Deadly Poison

Who sees other men’s wives simply as forms

He is beloved of princes 1-44

 

March 16 Thursday

If the master gets angry, his man bends low

Sings his praise, extols at his largesse

Hates his foes, dotes on those who he favours,

That is the sure way to win someone over

Without recourse to magical arts 1-53

 

March 17 Friday

Even a worthless bit of straw comes in handy

For the great ones to pick their teeth or scratch their ears

What today then of the service a person

Endowed with speech and limbs can render, O King 1-58

 

March 18 Saturday

A fine gem fit to grace a gold jewel,

If mounted in a cheap tin setting

Does not scream, nor refuses to gleam

It is the jeweller who is put to shame 1-63

 

March 19 Sunday

In a place where no difference is perceived

Between a priceless gem with eye of fire

And a fragment of pale crystal

How can a gem trade flourish there? 1-66

 

March 20 Monday

Shaping: A horse, a weapon, a text, a lute

A voice, a man and a woman

They perform Ill, or well

According to who master’s them 1-68

 

March 21 Tuesday

Birth: Silk is spun by the humble worm

gold is born of rock

the lotus from the mud

ruby from the serpent’s hood

A person of merit shines

by the light of his own rising merits

of what consequence is his birth? 1-69

 

March 22 Wednesday

Confiding: A man might confide some things to his wife

some to his close friends, and some to his son;

these deserve his trust; but not reveal

all matters to everyone in sight 1-73

 

March 23 Thursday

Relief:  true and tested friend, a faithful wife,

a loyal servant, a powerful master,

disclosing his troubles to these

a man discovers great relief 1-74

 

March 24 Friday

Son: Joyous in prosperity,

not cast down in adversity

steadfast in battle

rarely does a mother bear such a son

the ornament of the three worlds  1-79

 

March 25 Saturday

Sycophants: A blade of grass bends low, powerless,

tosses about, light, lacking inner strength

A man who lacks a sense of honour and pride,

is like a pitiful blade of grass -1-80

 

March 26 Sunday

King: As a man in perfect health

disdains all doctors and drugs

so, a king free of troubles

thinks little of his ministers 1-89

 

March 27 Monday

Lie: Even the smallest lie spoken before a king

has the gravest consequences;

the ruin of the speaker’s parent and teacher

and that of the gods as well 1-90

 

March 28 Tuesday

King is God: Blended of essences of all gods,

a king is formed; so sages sing

Look upon him, therefore, as a god

never speak an untruth to a king 1-91

 

March 29 Wednesday

Humility: A hurricane does not uproot the pliant grass

that bends low before its fury;

it snaps only proud, lordly trees;

A man might let his valour speak

only to others of equal might 1-93

 

March 30 Thursday

Ministers: A kingdom is held firm by ministers

who are tested and true, straight, resourceful,

accomplished and endowed with inner strength,

as a temple is well-supported by pillars

straight, strong, well polished and firmly grounded 1-95

 

March 31 Friday

Sweetness: Sweet as nectar is the fire’s warmth in winter;

Sweet as nectar is the sight one’s beloved;

Sweet as nectar is royal favour;

Sweet as nectar is food cooked in milk 1-97

 

Book used : The Pancatantra, translated by Chandra Rajan (Panchatantra was written by Vishnu Sarma before fifth century CE in Sanskrit)

 

–Subham–

பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11

கீஸா  பிரமிடு

Written by London swaminathan

 

Date: 27 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-18 am

 

Post No. 3674

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

நாலாவது வம்சம்

 

நாலாவது வம்சாவளியின் சிறப்பு மாபெரும் பிரமிடுகளைக் கட்டியதாகும்.

மூன்றாவது வம்சத்தின் கடைசி அரசர் ஹூனீ (Huni). அவருடைய புதல்வி ஹெதபரிஸ் ((Hetepheres I)  நாலாவது வம்சத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்நெபரு (Sneferu) என்பவரை மணந்தார். அவரும் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பினார். ஆனால் அவருடைய மகனான குனம் கூஃபு (Khnum Khufu) என்பவர் கட்டிய பிரமிடுதான் கீஸாவின் பெரிய பிரமிடு ( Great Pyramid at Giza) என்று அழைக்கப்படுகிறது. ஸ்நெபெருதான் அதிகம் பிரமிடுகளை — மூன்று அல்லது நான்கு பிரமிடுகளைக் கட்டினார். 90 லட்சம் டன் கற்களை வெட்டிச் செதுக்கி இவைகளை அமைத்தார். இருந்தபோதிலும் கூஃபுவின் பிரமிட் மிகப்பெரியதாகையால், அதற்கே பெருமை முழுதும்!

 

பெரிய பிரமிடின் சிறப்புகள்

 

இது கீஸாவில் (Giza near Cairo) உள்ளது எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சுற்றித்தான் பிரமிடுகள் உள்ளன. பெரிய பிரமிடுதான் மிகப்பழைய பிரமிடு. இதன் காலம் கி.மு.2560.

 

இதன் உயரம் 481 அடி. மதுரை மீனாட்சி கோவிலைப் போல மூன்று மடங்கு உயரம்! இது ஆக்ரமிக்கும் பரப்பு 14 ஏக்கர். அதுவும் மீனாட்சி கோவிலின் பரப்புக்குச் சமமானதே. இந்த பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று.

 

4500 ஆண்டுகளுக்கு முன்னர் இதைக் கட்டியபோது வெள்ளைச் சுண்ணாம்புக் கறகள் பள பளவென்று சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. காலை சூரிய உதயத்தின்போது பிரமிடின் ஒருபக்கம் ஒளிமயமாக ஜொலித்திருக்கும். மாலையில் சூரியன் மறையும் போது வானவில்லின் ஏழு நிறங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைந்திக்க வேண்டும். இமய ,மலையிலுள்ள கயிலை மலையை இத்தோடு ஒப்பிடலாம். அதுவூம் சூரிய ஒளி படப்பட நிறம் மாறிக்கொண்டே இருக்கும்!

இந்தப் பிரமிடின் பெயர் கூஃபு தொடுவானத்துக்குச் சொந்ததமானவர் (Khufu is belonging to the Horizon).

Ivory Statue of Khufu, கூஃபு மன்னரின் தந்தச் சிலை

 

பௌர்ணமி நிலவு உதித்த காலங்களில் இந்தப் பிரமாண்டமான பிரமிடு நிலவு ஒளியி வெள்ளை நிறத்தில் ஜொலித்திருக்கும். இதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. மேலும் ஏழு அதிசயங்களில் காலாத்தால் அழியாதது பிரமிடு ஒன்றுதான்.

 

காலப்போக்கில் கீசா வட்டாரம் முழுதும் பிரமிடுகளால் நிரம்பி வழியத் தொடங்கியது. மன்னர்களின் கல்லறைகளை இவ்வாறு பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளைக் கற்களாலும், கடவுளரின் கோவில்களை கருங்கற்களாலும் கட்டினர். அருகிலேயே அதிகாரிகளின் மஸ்தபா (Mastaba)  கல்லறைகளும், மஹாராணியார், குழந்தைகளின் சிறிய கல்லறைகளும் இருக்கின்றன.

 

கூபூ பிரமிடு முதலியன, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமாதேவியின் கிரீடம் போலத் தோன்றியிருக்க வேண்டும்.

 

வரலாற்றின் தந்தை என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரதாத்தஸ் (Herodotus)  ஒரு விநோதமான செய்தியை எழுதி வைத்துள்ளார்

கூஃபு என்ற மன்னரின் கிரேக்க மொழிப் பெயர் கீயாப்ஸ் (Cheops). கீயாப்ஸ் மன்னரின் கல்லறை ஒரு தீவு போன்ற இடத்தில் இருந்ததாகவும் அதற்கான தண்ணீர், நைல் நதியிலிருந்து கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டதாகவும் எழுதி வைத்துள்ளார். அப்படி ஒரு நிலத்தடித் தீவு இல்லை. தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகளும் இல்லை. காலம்தான் இந்தப் புதிருக்கு விடை காணும்.

மன்னர் கல்லறை உள்ள அறை சிவப்புக் கற்களால் (Red Granite) ஆனது. வேறு எந்தப் பிரமிடிலும் இல்லாதவாறு இங்கு மூன்று அறைகளுள்ளன. இவைகளை இணைக்க வழியும் இருக்கிறது. முதலில் வரைபடத்திட்டங்கள் மாற்றப் பட்டதால் மூன்று அறைகள் என்று நினைத்தனர்.

 

கீழ்மட்ட அறை பூமிக்கு 100 அடி ஆழத்தில் உள்ளது. இது பாதாள உலகம் எப்படி இருக்கும் என்பதைக் காட்ட இப்படி இருட்டாக கரடு முரடாக விட்டிருக்கலாம் என்று இப்போது நினைக்கின்றனர். மேல் அறையில் மன்னர் கல்லறை உள்ளது. அதிருந்து செல்லும் சாளரம் மூலமாக நேரடியாக நட்சத்திரத்தைக் காணலாம். முதலில் காற்று வருவதற்காக இப்படி இரண்டு திறந்தவெளிப் பாதைகள் வைத்ததாகக் கருதினர். இப்போது அவைகளுக்கு வேறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இறந்த மன்னரின் ஆவி நேரடியாக நடசத்திரங்களை அடையவே இந்த அமைப்பு.

 

இது எப்படித் தெரிய வந்ததென்றால் ஐந்தாவது வம்சம் உருவாக்கிய பிரமிடுகளில் மன்னன் (எகிப்திய பாரோ) வானுலகத்துக்குப் போவது பற்றி எழுத்திலேயே எழுதி வைத்துள்ளனர். மேலும் கூஃபு பிரமிடின் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட சித்திர எழுத்தின் வடிவில் (Hieroglyph) அமைந்திருப்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தின் பொருள்: உயரே போதல் (Ascension), அதாவது வானுலகப் பயணம் (Ascending to the Stars!)

 

எகிப்து முழுதும் அதிசயங்கள்தாம்; மேலும் மேலும் புதிய விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எகிப்தியல் பற்றி மாதம்தோறும் வெளிவரும் பத்திரிக்கைகள் முத்லியன, இங்கே எங்கள் லண்டன் முதலான நகரங்களில் கிடைக்கின்றன. எப்போது திறன்ந்து பாரத்தாலும் புதிய அகழ்வாராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, புதிய விளக்கம் என்று பேழுதிக்கொண்டே இருக்கிறார்கள்!

இந்த அதிசயமான விஷயம் ஏற்கனவே வியாசர் சொன்னதுதான்!

 

இதோ நான் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை:

நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் !!

 

ஆராய்ச்சிக் கட்டுரை:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.

நாம் அனைவரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோம். இது ஒரு விஞ்ஞானச் செய்தி. ஆனால் புண்யம் செய்தவர்கள் எல்லோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்பது மஹபாரதம் தரும் அதிசயச் செய்தி. நட்சத்திரங்கள் எல்லாம் கடவுள் என்பது எகிப்திய, மாயா நாகரீக வரலாறு தரும் செய்தி; அனைத்தையும் சுருக்கமாகச் சொல்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

 

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மஹாபாரத வனபர்வத்தில் வரும் அர்ஜுனனின் விண்வெளிப் பயணத்தைப் படித்து அதிசயித்துப் போனேன். ஆனால் அது ‘’சிம்பாலிக்’’க்காக (அடையாளபூர்வமாக) சொன்ன செய்தி என்று விட்டு விட்டேன். லண்டனுக்கு வந்த பின்னர் ராஜாங்க ஆஸ்தான விண்வெளி விஞ்ஞானி பாட்ரிக் மூர் (Patrick Moore’s Sky at Night)  நடத்தும் “இரவு நேரத்தில் வானக் காட்சி” என்ற கிரகங்கள்—நட்சத்திரங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன். ஒரு நாள் அவர் சொன்னார், “ நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோ என்று! மஹாபாரத வன பர்வ செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தபோது புல்லரித்தது.

 

அர்ஜுனனின் விண்வெளிப் பயணம்
அதாவது அர்ஜுனனை மாதலி என்ற சாரதி விண்வெளி ரதத்தில் ஐந்தாண்டுகளுக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் வர்ணனை மஹா பாரத வன பர்வத்தில் உள்ளது. அர்ஜுனன் ஒளிமிகுந்த ஆயிரக் கணக்கான ரதங்களைப் பார்த்து இவர்கள் யார் என்று கேட்கிறான். இந்த ஒளிமிகுந்த மக்கள் எல்லாம் புண்யம் செய்தவர்கள், இவர்களைத்தான் நீங்கள் நட்சத்திரங்களாக பூமியில் பார்க்கிறீர்கள் என்று மாதலி விளக்கம் தருகிறான். இதை பாட்ரிக் மூர் என்ற வானியல் அறிஞர் சொன்னதோடு ஒப்பிடுகிறேன்:

கோடி கோடி வருடங்களுக்கு முன் மாபெரும் வெடிப்பு (பிக் பேங் Big Bang) ஏற்பட்டது. அப்போது விரிவடையத் துவங்கிய பிரபஞ்சம் இன்னும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதில் தோன்றிய ஒரு சின்னத் துகள் சூரிய மண்டலம். அதிலுள்ள ஒரு இம்மி அளவான பூமியில் அந்த நட்சத்திரத் துகள்கள் இறுகி மனித இனம் தோன்றியது என்பர் விஞ்ஞானிகள்.

அவர்கள் கணக்குப் படி நட்சத்திரங்கள் என்பது கோள உருவத்தில் சுற்றும் வாயுக் கோளங்கள். அதில் ஹைட்ரஜனும் ஹீலியமும் பிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் கோடிக் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் அவை வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கின்றன. சூரியனும் ஒரு சின்ன வகை நட்சத்திரம்தான்.

இதை எல்லாம் விஞ்ஞானம் சொன்னாலும் மாபெரும் வெடிப்பு BIG BANG  ஏன் நிகழ்ந்தது? அதன் முடிவு என்ன? என்பதை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை. பாட்ரிக் மூர் சொன்னது போல நாம் எல்லோரும் நட்சத்திரத் தூசியாக இருந்ததை ஒப்புக் கொண்டாலும் அதற்குள் ஆத்மா ஒன்று இருப்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை. அங்குதான் மதம் வந்து கை கொடுக்கிறது!

வியாசர் எழுதிய மஹாபாரத வனபர்வத்தைப் படிப்பவர்கள் இன்றும் வியப்படைவார்கள். அவர் சொன்ன பல விஷயங்களுக்கு இப்போது விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. அவரை ஒரு விஞ்ஞானி என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞான புனைக் கதை (OLDEST SCIENCE FICTION WRITER) எழுதிய முதல் மனிதன் என்ற பட்டத்தையாவது கொடுக்க வேண்டும். நீண்ட விண்வெளிப் பயண வர்னணையை வன பர்வத்தில் படிக்கலாம். அது பற்றி தனியாக எழுதுவேன்.

சிவன் எனும் திருவாதிரை நட்சத்திரம்

 

இந்துக்களின் நட்சத்திர வழிபாடு
நாமும் அருந்ததி (Algol) , அதை ஒட்டியுள்ள சப்தரிஷி (Ursa Major)  மண்டலம், அகத்திய (Canopus) நட்சத்திரம், துருவ நட்சத்திரம் (Pole Star) , திரிசங்கு (Southern Cross) நட்சத்திரம் ஆகியவற்றை புனிதர்களாகவே வழிபடுகிறாம். வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” என்று சங்கப் புலவர் புகழ்கிறார். கார்த்திகை (Pleiades) நட்சத்திரம், ரோகிணி (Aldebaran) நட்சத்திரம் ஆகியனவும் நம்மால் வழிபடப் படுகின்றன. சங்க காலத் தமிழர்கள் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் கல்யாணம் செய்ததை சிலப்பதிகாரமும் அகநானூறும் பாடுகின்றன.

இதே போல எகிப்தியர்களும் மாயா நாகரீக மக்களும், மன்னர்கள் இறந்த பின்னர் நட்சத்திரங்களாக மாறுகின்றனர் என்று எழுதி வைத்துள்ளனர். அண்மைக்கால ஆரய்ச்சியில் கியாப்ஸ்-குபு பிரமிட்டில் நட்சத்திரப் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 90 பிரமிடுகளில் மூன்று பெரிய, பழைய பிரமிடுகள் ‘’ஓரியன்’’ நட்சத்திர மண்டலத்திலுள்ள மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது காற்றுப் போவதற்கான மூன்று ஓட்டைகள், அந்த மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளன. 1994 பிப்ரவரியில் பி.பி.சி. ஒளிபரப்பிய ஓரியன் மிஸ்ட்ரி (The Orion Mystery) என்ற டாகுமெண்டரியில் இது பற்றி விரிவாகக் காட்டினார்கள். அப்போது நான் எழுதி வைத்த ஆராய்ச்சிக் குறிப்புகளை இப்பொழுது சொல்வதற்குக் காரணம் உண்டு.

சிவன் என்னும் வேடன்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆருத்ரா (Betelgeuse)  நட்சத்திரம் சிவனுக்கு உரிய நட்சத்திரம். சிவ பெருமானை வேடனாக நாம் உடைகள் போட்டுக் காட்டுவதோடு அல்லாமல் ருத்ரம் என்னும் யஜூர்வேத மந்திரம் அவரை வேடனாகவே வருணிக்கிறது. இதே கதை சிறிது மாற்றத்தோடு கிரேக்க புராணத்திலும் இருக்கிறது. கிரேக்கர்களின் புராணக் கதைகள் சிதைந்து போன வடிவத்தில் இயற்றப்பட்ட இந்து புராணக் கதைகள் (Distorted version of Hindu Mythology)  என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஆக்வே நம்மிடம் காப்பி அடித்த கதைதான் ஓரியன் வேடன் கதை என்பதாகும்.

 

ஐதரேய பிராமணம் என்னும் வேதப் பகுதியில் ம்ருக வ்யாத (வேடன்) என்ற பெயரில் ஓரியன் நட்சத்திரம் வருணிக்கப்படுகிறது. அவர் பிரஜாபதி என்றும் அவர் மகள் ரோகிணியை துரத்திச் செல்கிறார் என்றும் பிராமணங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்போது சிரியஸ் (Sirius) வேடன் வடிவத்தில் அம்பு எய்ததாகவும் உள்ளது. அதர்வ வேதம் 27 நட்சத்திரங்களையும் பட்டியல் இடுகிறது. கிரேக்கர்கள் நூல்களை எழுதுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வேதகால கீதங்கள் சரஸ்வதி நதிதீரத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஆக வேடன் கதை இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஜனவரி மாதத்தில் தெரியும்கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, மிருகசீர்ஷம், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்கள்

உதவிய நூல்கள்:
Page 308, Mahabharata, The Book of the Forest (Vana Parva), Translated by A B Van Buitenen
Page 141 of Fingerprints of the Gods by Graham Hancock
Page 174, Volume 2 of Vedic Index by A A MacDonnell and A B Keith.
Page 160, An Illustrated Dictionary of Classical Mythology by Gilbert Meadows.

 

தொடரும்……………