வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 October 2018

 

Time uploaded in London –14-36 (British Summer Time)

 

Post No. 5528

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து 16, 17, 18, 19, 20 எண்ணிட்ட ஸ்லோகங்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

 

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

 

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

 

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

 

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

 

கொடுத்தாலும் நிறைவன்றிக்

குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி

உழல்வதென்னே

 

XXXX

 

 

இன்னுமொரு பாடல்

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

 

அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்

த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி

அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்

ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைக ளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

 

 

xxx

 

இன்னுமொரு பாடல்

 

अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

 

அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ

ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா

 

ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்

வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.

 

XXX

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

 

 

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

 

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

 

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

 

சொல் அழகு

 

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

XXXX

 

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

 

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு

 

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

XXXX SUBHAM XXX

 

 

மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? (Post No.5527)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 October 2018

Time uploaded in London – 8-04 AM (British Summer Time)

Post No. 5527

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?

ச.நாகராஜன்

போர்! போர்! மஹாபாரதப் பெரும்போர்!

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கு இடையே நடந்த பெரும் போர் அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையிலே நடந்த பெரும் யுத்தம்.

கௌரவர் பக்கம் பதினொரு அக்ஷௌஹிணி சேனை இருந்தது.

பாண்டவர்களிடமோ ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டுமே இருந்தது.

ஒரு அக்ஷௌஹிணி சேனை என்றால் என்ன அர்த்தம்?

21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 காலாட்படையினர் கொண்டது ஒரு அக்ஷௌஹிணி.

அப்படியெனில், கௌரவரிடம் இருந்தது 2,40,570 ரதங்கள், 2,40,570 யானைகள், 7,21,710 குதிரைகள், 7,65,450 காலாட்படை  வீரர்கள் இருந்தனர்.

பாண்டவரிடமோ 1,53,090 ரதங்கள், 1,53,090 யானைகள், 4,59,270 குதிரைகள், 7,65,450 காலாட்படை வீரர்கள் இருந்தனர்.

உக்கிரமான போர் பதினெட்டு நாட்கள் நடந்தது.

இரு தரப்பிலும் ஏராளமானோர் இறந்தனர்.

போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஸ்தீரி பர்வம் விவரிக்கிறது.

அதன் படி நூற்றறுபத்தைந்து கோடியே இருபதினாயிரவர் இந்தப் போரில் கொல்லப்பட்டனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இருபத்திநாலாயிரத்து நூற்றறுபத்தி ஐந்து பேர்கள்.

இப்படி மிகச் சரியாக கணக்கைச் சொல்ல முடிகிறதென்றால் போர் முடிந்தவுடன் அன்றன்று எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேரைக் காணோம் என்பதைக் கணக்கிட ஒரு துல்லியமான முறை மஹாபாரத காலத்தில் இருந்தது என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

போர் முடிந்தவுடன் கௌரவர் பக்கம்  மீதி இருந்தவர்கள், கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகிய மூவர் மட்டுமே.

பாண்டவர் பக்கம் போரில் மீதி இருந்தது பஞ்ச பாண்டவர்கள் ஐவர், கிருஷ்ணர், சாத்யகி ஆகிய ஏழு பேர்கள் மட்டுமே.

இப்படி ஒரு போரில் பெரிய சேனை கொண்டிருந்த கௌரவர் ஏன் ஜெயிக்க முடியவில்லை?

அவர்கள் பக்கம் வயதிலே முதிர்ந்த பீஷ்மாசாரியர், வில் வித்தையைக் கற்றுக் கொடுத்த ஆசாரிய துரோணர்,  கிருபர், அஸ்வத்தாமா, பெரும்போர் வீரனான கர்ணன், ஆயிரம் யானை பலத்தைக் கொண்ட துரியோதனன், அவனது சகோதரர்கள் இன்னும் ஏராளமான வீரர்கள் இருந்தனர்.

பாண்டவர்களிடம் பஞ்ச பாண்டவர் ஐவர், சாத்யகி,அபிமன்யு உள்ளிட்ட பெரும் வீரகள் இருந்தனர். இவர்களுடன் கிருஷ்ணர் ஆயுதம் எடுக்காமல் அர்ஜுனனின் சாரதியாக மட்டுமே இருந்தார்.

இருந்தும் கூட பாண்டவர் வென்றது எப்படி?

ஏனெனில் நடந்த போர் அறத்திற்கும் மறத்திற்குமான போர். தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர்.

இதில் யதோ தர்ம: ததோ கிருஷ்ண:

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணர்.

யதோ கிருஷ்ண; ததோ ஜய:

எங்கு கிருஷ்ணரோ அங்கேயே வெற்றி.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ச்ருஜாம்யஹம் ||

எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு விளைவிக்கப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதர்மம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

இது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கீதையில் கூறும் வாக்கு.

இதற்கிணங்க அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி, தீயோரை அழித்து நல்லோரைக் காக்க எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

புல்லரிக்க வைக்கும் போர் நிகழ்ச்சிகள் மிக விவரமாக மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

குருக்ஷேத்திரத்தில் நடந்த இந்தப் போரில், போர் வீரர்களின் அணிவகுப்பிற்கும், சண்டைக்கும் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு யுத்த களத்திற்கென இருந்திருக்க வேண்டும்.

அஸ்திர சஸ்திர பிரயோகங்கள், போர் வியூகங்கள், மகா ரதர்கள், அதி ரதர்கள் உள்ளிட்ட வியத்தகு விவரங்கள் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளதை மஹாபாரத்தில் காணலாம்.

உலக இலக்கியங்களில் போர் நிகழ்ச்சிகளை இவ்வளவு துல்லியமாக, அதிக விவரங்களுடன் தந்த நூல் மஹாபாரதத்தை அன்றி வேறொன்றில்லை என்பது மெய்.

தர்மத்தின் வெற்றியை எடுத்துரைப்பதால் இதற்கு ஜயம் என்ற பெயர் உண்டு.

இதை மாலையில் படித்தால் பகலில் மனத்தாலும் இந்திரியங்களாலும் செய்த பாவம் அகலும்.

இதைக் காலையில் படித்தால் இரவில் செய்த பாவங்கள் அகலும்.

ஜயம் என்னும் இதைப் படிக்கும் இடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும் எப்போதும் சந்தோஷமும் இருக்கும்!

இப்படி மஹாபாரதம் படிப்பதன் பயனை இந்த நூலே அறுதிட்டு உறுதியுடன் கூறுவதைக் காணலாம்.

பாரதம் படிப்போம்; அறவழியில் நிற்போம்!

***

How Indians were fooled in Coir Sales (Post No.5526)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 October 2018

 

Time uploaded in London –14-42 (British Summer Time)

 

Post No. 5526

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

How Indians were fooled in Thorium Sales

During the time of world war time, India was exporting coir to Germany from Kerala and Tamil Nadu. At that time it was a single province. Tamils and Malayalees who were in the export business found a fraudulent and novel way of making money. Since the money for the coir was given on the basis of its weight, they increased the weight by choking them in water and rolling them onto the sand. It naturally increased the weight of the exported materials and brought them more money.

Germans who were desperate to make advanced weapons, particularly nuclear weapons during the war time found that the sand contained Thorium, nuclear material. Then they wrote back to coir exporters saying that they were ready to buy the sand itself. Only then the locals came to know the value of the monazite sand in their area.

India has the largest deposit of Thorium in the world. Next to India stands Australia. Monazite is the mineral that contains Thorium.

 

Discovery
In 1815, Jons Jakob Berzelius of Sweden discovered Thorium.

Thorium is fertile but not fissile. It is a silvery white metal which turns into blak thorium dioxide when It is exposed to atmosphere.

The advantages of using Thorium in the nuclear reactors are–
1.This fuel produces 70% less toxic materials than uranium and other fuels
2.No rogue state can make an atom bomb with the used materials.

India made a nuclear device with the materials from its Canada built reactor. That reactor used Uranium.
Thorium has always intrigued nuclear physicists; the question has been how best to use it. It has similar radioactive properties of uranium 238, the isotope which makes up all nuclear fuels. It is three or four times more abundant in nature than Uranium.
It is named after the Scandinavian thunder god Thor. He is similar to Indra in the Rig veda. Thursday also is named after Thor.

Like U-238, Thorium in its naturally available form, will absorb neutrons from another nuclear material such as enriched U -235, and start to break down releasing huge amounts of energy. The difference comes in the family of radioactive elements and isotopes that are created as a result. The key absence from the Thorium reaction is large quantities of man- made element plutonium, particularly Pu-239 form favoured as a weapons material.

With less quantity of Thorium we can produce more electricity. It is said that Thorium deposits can produce electricity for another 1000 years.

God has given two gifts to India— Thorium and Solar energy. With these two, INDIA can prosper without damaging environment.


25 isotopes
Thorium-232 is the main isotope that occurs naturally. It has a half- life of 14 billion years. Of the other 24 known isotopes of Thorium, the longest lived is Thorium 230 with a long life of 75 000 years.

In the early years of X Ray diagnosis, patients were injected with a colloidal suspension of Thorium oxide to highlight the blood streams in the body. It was later found that those who took such a solution suffered from higher incidence of leukaemia. In 1900s German company was using it in toothpaste. Now all these are discontinued.

Thorium oxide is used in the manufacture of refractory materials for the metallurgical industry. Thermionic emitting devices and photo electric cells that measure the wave length of ultra violet light, both contain Thorium. It is used in high quality camera lenses too.

Thorium based nuclear reactors are functioning at experimental level. Once they become commercial it will be good for the world.


Chemical properties

Symbol Th
Atomic number 90
Melting point 1750 degrees C
Boiling point about 4800 degrees C
Atomic weight 232.0381

 

Xxx Subham xxxx

தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை! அதிசய தோரியம்!! (Post No.5525)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 October 2018

 

Time uploaded in London –9-05 am (British Summer Time)

 

Post No. 5525

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை!

 

தோரியம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரமான 118 மூலகங்களில் ஒன்று; இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த அருள் பிரஸாதங்கள் அநேகம்; ஆனால் பொருள் பிரஸாதங்கள் குறைவு. ஆயினும் கன்யாகுமரி,கேரளத்தின் கடலோரமாகக் கொட்டிக் கிடக்கும் தாதுவில் இருக்கும் தோரியம், அணுசக்தி எரிபொருள் ஆகும். அதை வைத்து ஜெர்மானியர்களை ஏமாற்ற நினைத்த தமிழர்கள் ஏமாந்து போன சுவையான நிகழ்ச்சியுடன் தோரியத்தின் கதையைத் துவக்குவேன்

ஜெர்மனிக்கு  கயிறு ஏற்றுமதி

ஏமாறாதே, ஏமாற்றாதே என்பது ஆன்றோர் பொன்மொழி.

 

‘கள்ளனுக்கும் குள்ளன் உண்டு’ ‘ நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன்’ என்ற பழமொழிகளை நிரூபிக்கும் சுவையான விஷயம்.

 

உலக யுத்த காலத்தில் ஜெர்மானியர்கள் அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த புது வகை ஆயுதங்களையும் செய்வதில் முனைப்பு காட்டினர். அப்பொழுது ‘கும்பிடப் போனவனுக்கு தெய்வம் குறுக்கே வந்தது போல’ தமிழர்களும் மலையாளிகளும் உதவினர்.

 

ஜெர்மனி நாடு இந்தியாவிலிருந்து கயிறு இறக்குமதி செய்து வந்த காலம் அது. கப்பலில் செல்லும் ஏற்றுமதிக் கயிற்றுக்கு எடையின் பேரில் ஜெர்மனி பணம் கொடுத்து வந்ததது. கன்யாகுமரி முதல் கேரளத்தின் தென்பகுதி வரை இந்தக் கயிறு ஏற்றுமதியில் ஈடுபட்டது.

கயிற்றின் எடையைக் கூட்டிக் காண்பித்துக் கூடுதல் பணம் பெறுவதற்கு நம் ஊர் ஆட்கள், அந்தக் கயிற்றைத் தண்ணீரில் நனைத்து மணலில் புரட்டி எடை போட்டனர். ஈரத்தினாலும் மணலினாலும் எடை கூடவே மக்களுக்கு மகிழ்ச்சி. கூடுதல் பணம் கிடைத்தது.

 

இறக்குமதி செய்த ஜெர்மானியர்கள், கயிற்றுடன் வரும் மணல், ‘ஒரு மாதிரியாக’ இருந்தவுடன் அதை ஆராய்ச்சி செய்தனர்; அற்புதமான தோரியம் எனும் அணு சக்திப் பொருள் அது என்று தெரிந்தது. பின்னர் அவர்கள், கயிறு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களுக்கு கடிதம் எழுதினர்.  ‘அன்புடையீர், தாங்கள் கயிற்றுடன் நிறைய மணலைச் சேர்க்கிறீர்கள். அந்த மணலையும் எங்களுக்கு அனுப்புங்கள்; கயிற்றைவிடக் கூடுதல் பணம் தருகிறோம் என்று!!! பின்னர்தான் தெரிந்தது. நாம்தான் ஏமாளிகள் என்று!

 

கன்யாகுமரி முதல் கேரளத்தின் கடலோரம் வரை, கிழக்கில் விசாகப் பட்டிணம் வரை மோனசைட் என்னும் கலர் மணல்- வண்ண மணல் கிடைக்கிறது. இதில் தோரியம் (THORIUM) எனப்படும் மூலகம் உள்ளது. இது அணுசக்தியை உண்டாக்கப் பயன்படும் மூலகம். கடவுள் நமக்குக் கொடுத்த பொருட் பிரசாதம். உலகிலேயே அதிகம் தோரியம் உடைய நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான்.

 

 

 

அணு உலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தினால் செலவும் குறைவு. ஆயுதம் செய்யக்கூடிய தரத்துக்கு துணைப்பொருள் கிடைக்காததால்   அணு ஆயுத உற்பத்தி வாய்ப்பும், ஆபத்தும் குறைவு.

இது ஒரு கதிரியக்கம் உடைய வெள்ளி போன்ற உலோகம் (RADIO ACTIVE, SILVERY METAL) ஆனால் காற்றுப் பட்டவுடன் கருத்துப் போய் தோரியம் டைஆக்ஸைடாக மாறி விடுகிறது

கடவுள் பெயர் சூட்டப்பட்ட மூலகங்கள் மிகவும் குறைவு. தோரியத்துக்கு தோர் (THOR) என்னும் நார்வீஜிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அவர் இடி மின்னல் ஆகியவற்றுக்கான அதி தேவதை. நம்முடைய இந்திரனுக்கு இணையானவர். வியாழக் கிழமையும் அவர் பெயரில் தர்ஸ்டே (THURSDAY= THOR’S DAY) என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

தோரியத்தின் மற்றொரு சிறப்பு- 70 சதவிகிதம் குறைவான விஷக் கழிவுப் பொருட்களை வெளியிடுகிறது

 

யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன. தோரியத்தில் அது குறைவு.

 

தோரியம் கலந்த கண்ணாடிகள் காமெரா லென்ஸுகளாகவும் விஞ்ஞானக் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இதற்குக் காரணம் தோரியத்தின் உருகு நிலை மிக அதிகம்.

 

உலகெங்கிலும் தோரிய அணு உலை ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன. சோதனை முறையில் வெற்றியும் கிட்டின. தோரியத்தைப் பயன்படுத்தினால் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்குப் பஞ்சமில்லையாம். அதுவும் உலகில் அதிக அளவு தோரிய         இந்தியாவில் இருப்பதால் நமக்கு ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெர்ஸீலியஸ் என்பவர் முதலில் இதைத் தனியாகப் பிரித்தெடுத்து இது ஒரு புது மூலகம் என்று உலகிற்கு  அறிவித்தார்.

 

தோரியத்தின் அணு எண் 90

உருகு நிலை 1750 டிகிரி சி

கொதி நிலை 4800 டிகிரி

சிம்பல் Th

 

 

25 ஐசடோப்புகள் (ISOTOPES)

 

கதிர் வீச்சு மூலகங்கள் காலப்போக்கில் கதிர்வீச்சு காரணமாக அழியும்.

தோரியம் 25 அவதாரங்கங்ளை எடுக்கும்.

அதில் அதிக காலம் வாழும் அவதாரம்–தோரியம் 232 என்னும் ஐசடோப்பு;

பாதி அழிவதற்கு (HALF LIFE) ஆகும் காலம் 14 பில்லியன் ஆண்டுகள் (பில்லியன்= நூறு கோடி)

தோரியம்-230. அதில் பாதி அழிவதற்கு ஆகும் காலம் 75,000 ஆண்டுகள்.

தோரியம் யுரேனியத்தை விட அதிகமாக இயற்கையில் கிடைத்தாலும் அதுபோலப் பிரியும் (NOT FISSILE) மூலகம் இல்லை. ஆகையால் இதை நேரடியாக அணுசக்தி உண்டாக்கப் பயன்படுத்த முடியாது. ஏனைய பிரியும் அல்லது கதிர் வீசும் மூலகங்களை அருகில் வைத்தால் அதி

லிருந்து வரும் நியூற்றான்கள் இதையும் பிளக்கும் பொருளாக்க மாற்றி பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கும்.

துவக்கத்தில் தோரியம் ஆக்ஸைட் கரைசலைக் குடிக்கச் செய்து எக்ஸ்ரே எடுத்தனர். இதன் மூலம் இரத்தக் குழாய்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்படிக் கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு இரத்தப் புற்று நோய் வந்தவுடன் நிறுத்தப்பட்டது.

 

ஒரு காலத்தில் பற்பசையிலும் கூட ஜெர்மானிய கம்பெனி இதைப் பயன்படுத்தியது. இப்பொழுது மனிதர்கள் உடலில் பயன்படுத்தப்படும் எதிலும் தோரிய உப்புகளைச் சேர்ப்பதில்லை. ஆயினும் அறிவியல் கருவிகளில் தோரியம் ஆக்ஸைட் முதலியன உண்டு.

 

தோரியமும் சூரிய ஒளியும் இறைவன் இந்தியாவுக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் – வளங்கள். அவற்றை நன்கு பயன்படுதுவோமானால் பெற்றோல் என்பதே நமக்குத் தேவை இல்லை.

XXX

இரசாயன/ வேதி இயல் மாணவர்களுக்கு மட்டும்:–

தோரியம்-232 இயற்கையில் கிடைக்கிறது.

இதன் மீது யுரேனியம் மூலம் நியூற்றான் (NEUTRON) தாக்குதல் நிகழும்.

உடனே தோரியம் 233 உருவாகும். அதன் அரை வாழ்வு 22 நிமிடம் மட்டுமே

அது யுரேனியம் 233 ஆக அவதாரம் எடுக்கும்.

பின்னர் அந்த யுரேனியம் 233  விஸ்வருபம் எடுத்து,

யுரேனியம் 235 போல பிரம்மாண்டமான சக்தியை வெளியிடும்.

அதைக் கட்டுப்படுத்தப்பட்ட சக்தியாக வைத்து அந்த வெப்பத்தில்

மின்சாரத்தை உருவாக்கலாம்.

 

-சுபம்–

 

 

 

ஒப்பற்ற தமிழின் உயர்வு! பூமிக்கு 62 சொற்கள் (Post No.5524)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 October 2018

 

Time uploaded in London – 6-53 AM (British Summer Time)

 

Post No. 5524

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பூமிக்கு தமிழில் 62 சொற்கள்

ஒப்பற்ற தமிழின் உயர்வு!

 

ச.நாகராஜன்

தமிழின் உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு. இறைவன் அருளிய மொழி என்பதிலிருந்து காரணங்களை ஆரம்பித்து, அடுக்கிக் கொண்டே போனால் அது ஒரு கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிந்து விடும்.

சுயநலமுடைய அரசியல் சார்ந்த திராவிடக் கும்பல்களின் அரசியல் அடிப்படையிலான “பற்றினால் இதை விளக்கி விட முடியாது.

பல மொழி கற்ற அறிவு, புராண, இதிஹாஸ அறிவு, பண்டைய தமிழ் இலக்கிய அறிவு, சொற்களின் வேர் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்துறை வித்தகம் இதற்கு வேண்டும்.

தமிழில் உள்ள சொற்களை ஆய்ந்து உற்றுக் கவனித்தால் அதன் வேர் பலமானது எனத் தெரிய வரும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. வேர்ச் சொற்கள் வழியே சென்றால் பல சொற்களைப் பெற முடியும்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு சொல்லை இங்கு பார்க்கலாம்.

பூமி உருண்டை என்று சொன்னதற்காக கத்தோலிக்க குருவான போப்பாண்டவரிடம் பிரபல விஞ்ஞானி பட்ட பாடும் மரணமடைந்ததும் நமக்குத் தெரியும்.

ஆனால் தமிழனின் விஞ்ஞான அறிவு தமிழ்ச் சொல்லிலேயே வடிக்கப்பட்டிருப்பதை பூமி என்ற சொல்லிலிருந்தே காண முடியும்.

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர்.

அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி.

 

அண்டம் என்பதால் உயிர்ப் பொருள்கள் தோன்ற ஆதாரமானதும் கூட என்பதும் பெறப்படுகிறது.

ஞால் என்ற வேரின் அடிப்படையாகப் பிறந்தது ஞாலம். ஞால் என்றால் தொங்குவது என்று பொருள் படும். பூமி பேரண்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறு வடிவம் என்பது இதனால் பெறப்படுகிறது.

இது தொங்கிக் கொண்டிருந்தாலும் இதில் வைக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை விழாது என்பதால் இது வையகம் என அழைக்கப்படுகிறது.

காசியப முனிவர் தானமாகப் பெற்றதால் இது காசினி என அழைக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பின்னணியும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டிருப்பதைக் காணலாம். அதுவே தமிழ் வார்த்தைகளின் மகிமை.

 

முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சொற்கள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. ஆனால் அவற்றைத் தமிழ் அறிஞர்கள் தமிழ்ச் சொற்களாகவே கொண்டனர்; கையாண்டனர்.  சம்ஸ்கிருதம் இதுதமிழ் இது என்று அவர்கள் பாகுபாடு செய்ததில்லை. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதச் சொற்களை இரு கண்கள் என அவர்கள் கொண்டிருந்த பான்மையை உற்று நோக்குங்கால் மொழி பற்றிய காழ்ப்புணர்ச்சி தமிழகத்தில் ஒரு போதும் இருந்ததில்லை என்பதே தெரிய வரும். இந்தச் சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் அறிஞர்கள் மட்டுமின்றி சாமான்யரும் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இப்படிப்பட்ட ஆயிரக் கணக்கான சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

சரி, பூமியைக் குறிக்க மட்டும் எத்தனை சொற்கள் தமிழில் உள்ளன?

 

பூமி, பிருதுவி, பார், பூ,அகலிடம்,தரணி, கோ, மகி, அளக்கர், பொறை,கு, அசலை, நேமி, படி, பாரி, அகிலம், குவலயம், காசினி, அவனி, தாரணி, வசுந்தரை, தலம்

 

தாத்திரி, தரை, தரித்திரி, பணாதரி, மண், கோத்திரி, கிடக்கை, சதுக்கோணி, தறை, பாத்திபம், சக்கரம், நிலம், புவி, சலாம்பரி, மாதிரம், விமலை, வசுதை

 

தாலம், உலகு, இம்பர், வையம், சாந்தை, விசுவம், புடவி, ஞாலம், வசுமதி, நகம், ப்வளம், பாலம், உகம், பூதியம், ஏமாங்கி, வையகம், பொழில், இகம், பவனி,மேதினி, சகம், புவனம்

ஆக இப்படி 62 பெயர்களை நாமதீப நிகண்டு குறிப்பிடுகிறது.

நிகண்டின் பூமிக்கு உரித்தான சொற்களைச் சொல்லும் பாடல்கள் இதோ:

பூமி பிருதுவிபார் பூவகலி பந்தரணி                    கோமகிய ளக்கர்பொறை குவ்வசலை – நேமிபடி

பாரியகி லங்குவல யங்கா சினியவனி

தாரணிவ சுந்தரைத லம்

 

தாத்திரி யேதரைத ரித்திரிப ணாதரிமண்

கோத்திரிகி டக்கை சதுக்  கோணிதறை – பாத்திபம்

சக்கரநி லம்புவிச லாம்பரியே மாதிரமே

தக்க விபுலைவசு தை

 

தாலமுல கிம்பர்வையஞ் சாந்தைவிசு வம்புடவி

ஞாலம் வசுமதிந கம்பவளம் – பாலமுகம்

பூதியமே மாங்கிவைய கம்பொழிலி கம்புவனி

மேதினிச கம்புவன மே

 

இன்னும் சில நிகண்டுகளைப் பார்த்தால் இன்னும் பல பெயர்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிக் கவனித்தால் அந்தப் பெயரால் பூமி அழைக்கப்படுவதன் காரணத்தையும் உணர முடியும்.

இப்படித் தமிழ்ச் சொற்கள் பல்லாயிரத்திற்கும் அர்த்தம் காண எத்தனை நாட்கள் வேண்டும்!

தமிழனாக வாழ்வதில் பெருமைப் படுவதோடு தமிழ்ச் சொற்களின் ஆழம் கண்டு ஆனந்திப்போம்; அதை உலகறியச் செய்வோம்!

***

குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் (Post No.5223)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –14-49 (British Summer Time)

 

Post No. 5523

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் (Post No.5223)

 

 

நம்மையெல்லாம் வியக்கவைக்கும் அளவுக்குக் குழந்தைகள் புத்திசாலிகளாகி வருகின்றன. பிறக்கும்போதே மொபைல் போன், ஐ-பேட், கம்ப்யூட்டர் சஹிதம் பிறக்கின்றன. பொம்மை மொபைல் போனைக் கொடுத்தால் நம் மீது விட்டெறிந்து, என்னை ‘முட்டாள் பயன் மகன்’ என்று நினைத்தாயா என்ற தொனியில் நம்மை முறைத்துப் பார்க்கின்றன. இன்னும் பேச்சு முழுதும் வராததால் சொல்லாமல் சொல்லுகின்றன. தவறான ‘வெப்; (website) பக்கத்துக்கோ, வழக்கத்துக்கு மாறான பாடலுக்கோ போனால் நம்மைக் கையைப் பிடித்து இழுத்து, ‘அட முட்டாள்! யூ ட்யூபில் (You Tube) இங்கு அல்லவா வரும் என்று காட்டுகின்றன. இது இன்றைய உலகம். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கூட குழந்தைகள் நம்மை விட, அல்லது நாம் அவர்களை எடை போட்டதைவிட புத்திசாலிகளே என்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

 

இதோ சில சம்பவங்கள்:-

 

ஸர் ஜோஸையா ஸ்டாம்ப் (Sir Josiah Stamp) என்பவர் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். அவர் கண்ட, கேட்ட ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

 

ஒரு பார்லிமெண்ட் தேர்தல் வேட்பாளர் ஒரு வீட்டுக்கு ஓட்டு வேட்டைக்காகப் போனார். தேர்தல் வந்து விட்டால், எல்லா அபேட்சகர் முகத்திலும் அசடு வழியும்; ஜொல்லு விடுவார்கள் அல்லவா?

 

அவரும் ஒரு வீட்டின் முன்னால் இரண்டு சிறுவர்களை நோக்கினார். இருவரு ருக்கிடையேயும் ஒருவரை ஒருவர் அச்சு எடுத்து வார்தாற்போல் ஒற்றுமை.

 

பையன்களா, நீங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளா?

 

இல்லை ஐயா– கறாரான பதில்

 

சஹோதரர்களா?

ஆம், ஐயா.

 

உங்கள் வயது என்ன?

இருவருக்கும் ஐந்து வயது- பொட்டில் அடித்தாற் போல் விடை.

 

ஏய்!!!!! அப்படியானால், இருவரும் இரட்டையர்தானே; இருவரும் சஹோதரர் என்று மொழிந்தீர்கள். இருவருக்கும் ஐந்து வயது என்று செப்பினீர்களே!

 

ஐயா; பில்லி, உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறான். நாங்கள் மூவராகப் பிறந்தோம்!

(ஒரே சூலில் மூன்று குழந்தைகள்)

 

வேட்பாளர் ஐயா முகத்தில் அசடு வழிந்தது!

 

xxxxx

தாயாரைத் தவிக்கவிட்ட பெண்

ஒரு வீட்டில் ஒரு சிறுமி தாய் சொல்லைத் தட்டினாள். அவளுக்குத் தண்டனை கொடுக்க தாய் திட்டமிட்டாள்.

 

ரோமன் கத்தோலிக்க குடும்பங்களில் பிராஹ்மணர்கள் போல பரிசேஷன மந்திரம் சொல்லிச் சாப்பிடும் வழக்கம் உண்டு

(பிராஹ்மணர்கள் மூன்று முறை இலையைச் சுற்றி தண்ணீர் விட்டு– எறும்பு முதலிய ஜந்துக்கள் வராமல் இருக்க – சுற்றிவிட்டு— சோற்றைப் புகழ்ந்து இது அமிர்தம் என்று சொல்லிவிட்டுச் சாப்பிடுவர். முடிவில் தீர்த்தம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, ‘அன்ன தாதா சுகீ பவ’– அன்னமிட்ட இந்தப் பெண்மணியின் குடும்பம் நீடூழி வாழ்க– என்று சொல்லிவிட்டு எழுந்திருப்பர்).

 

 

கிறிஸ்தவர் குடும்பங்களில் ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ‘டைனிங் டேபிளில்’ அமர்ந்து சாப்பிடுவார்கள். அப்பொழுதுதான் அன்யோன்ய அன்பு வளரும். கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்; இது இல்லாவிடில் பெரும் தண்டனை என்பது தாத்பர்யம்/ பொருள்.

 

ஆகவே தாயார் கொடுத்த தண்டனைப்படி, விஷமம் செய்த சிறுமி ஒரு தனி ‘குட்டி’ மேஜையில் உட்கார வைக்கப்பட்டாள்.

கிரேஸ் (grace) மந்திரம் சொல்லும் தருணம் வந்தது. குட்டிப் பெண்ணை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவளோ வழக்கத்துக்கும் மாறான உரத்த குரலில் முழக்கமிட்டாள்.

 

‘’ஆண்டவனே! இன்று எனக்குப் படி அளந்தமைக்காக, உனக்கு நன்றி செலுத்துகிறேன்.அதுவும் என் எதிரிகளுக்கு  முன்னால் எனக்கு தனியான குட்டி மேஜை போட்டு அன்னம் அளித்தாயே! உனக்கு நன்றி.

 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

 

xxx

கவிஞர் பைரன் கடித்த பீங்கான் தட்டு

 

ஆங்கிலம்  படித்தவர்களுக்கு நன்கு அறிமுகமானவர் லார்ட் (Lord Byron) பைரன். அவர் சின்ன வயதில் ஒரு ‘மூடி’ moody முத்தண்ணா? அதாவது அவ்வப்பொழுது ‘mood’ மூட் மாறும்; உணர்ச்சி வசப்படுவார். காரணமென்ன வென்றால் அவரைக் கவனித்த தாதி கொடுமைக்காரி. இதனால் பைரனுக்கு அவள் மீது அச்சமும் வெறுப்பும்.

 

பைரனின் அம்மாவோ கோபக்காரி; புயல் போலச் சீறுவாள்; அனல் போலக் கொதிப்பாள்; குதிப்பாள். எவரையும் மதியாள்.

 

பைரன் நாலு வயதிலேயே ஒரு பீங்கான் தட்டைப் பாதிக்க டித்தெடுத்து, துண்டு போட்டவர்.

அவர் பத்து வயது இருக்கும் போது அவருக்கு லார்ட் lord பட்டம் கிடைத்துவிட்டது. பரம்பரையாக வரும் இப்பட்டம் ஒருவர் இறந்த பின்னர் அடுத்த வாரிசுக்குக் கிடைக்கும்.

 

பள்ளிக் கூடத்தில் அவரை வாத்தியார் ‘டோமினஸ்’ (பிரபுவே) என்று அழைத்தவுடன் கண்ணீர் மல்கியது; கன்னத்தில் வடிந்தது.

 

ஆனந்தக் கண்ணீர்!

 

xxx

 

சிறுவர்கள் வாழ்வினிலே

 

தெமிஸ்டோக்ளிஸ் (Themistocles) என்பவர் கிரேக்க நாடு அரசியல்வாதி. 2500 ஆண்டுகளுக்கு முன்னர்- புத்தருக்கு  சம காலத்தில்– வாழ்ந்தவர்.

 

அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் சரியான ‘அம்மாக்கொண்டு’ (அம்மாவின் கண்மணி)

 

தெமிஸ்டோக்ளிஸ் புகன்றார்:

இவன்தான் கிரேக்க நாட்டு முழுமைக்கும் மன்னன்.

 

 

அருகில் இருந்த நண்பருக்கு வியப்பு.

 

அண்ணலே! அது எப்படிப் பொருந்தும்? என்று வினவினார்.

 

உடனே அவரோ அவ்வையார் ஸ்டைலில் பதில் சொன்னார்

 

“பெரியது கேட்கின் வரிவடிவேலோய் பெரிது, பெரிது, புவனம் பெரிது, அதனினும் பெரிது…” என்று பாடவில்லை.

 

அவர் செப்பினார்:

அன்பரே. என் மகன் தாய்க்கு இனியன். அவளை ஆளும் அரசன். அந்தப் பெண்மணியோ என்னைப் பிடித்து ஆட்டும் அரசி; நானோ ஏதென்ஸ் மாநகர ஆட்சியாளன். ஏதென்ஸ் நகர அதீனியர்களோ கிரேக்க நாட்டையே கட்டி ஆள்பவர்கள்.

நான் சொன்னது சரிதானே.

 

(அரசியல் வாதிகளுக்கே உண்டான அகந்தை, பெருமிதம், அசாத்திய தன்னம்பிக்கை!)

 

xxxxx

பதப் படுத்தப்பட்ட பாலா இல்லையா?

ஒரு பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. முதல் மகனுக்கு ஆறு வயது. வீட்டில் வேறு எவரும் இல்லை. அவள் கொஞ்சம் ஓபன் (open) ஆக தாய்ப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.அந்தப் பையன் வியப்புடன் உற்று நோக்கினான்.

உடனே அம்மா, பையாலஜி (Biology) பாடம் சொல்லிக்கொடுக்க இது நல்ல தருணம் என்று கருதி  பல்லவி பாடினாள்

 

பார்த்தாயா! நீ குழந்தையாக இருந்த போதும் இப்படித்தான் பால் சாப்பிட்டாய்; யானை, குதிரை, பசுமாடு எல்லாம் இப்பத்தான் பால் கொடுத்து குட்டிகளை வளர்க்கும். மனிதர்களும் அப்படித்தான்…. என்று முழக்கமிட்டுக் கொண்டு போனாள்.

ஆறு வயதுப் பையன் இடைமறித்தான்.

அது சரி, அம்மா! இது ‘பாஸ்சரைஸ்டு மில்க்’கா (பாலா) இல்லையா? (Pasteurised or not)

 

பெண்மணி முக்கில் விரலை வைத்தாள்; வாயடைத்துப் போனாள்.

 

ஆகவே, தோழக்ர்ளே; சின்னப் பயல்கலைளைத் தவறாக எடை போடாதீர்கள்.

அவர்கள் அனைவரும் ஆய்ந்தவிடங்கியகொள்கைச் சான்றோர் போல!

ஆய்ந்து+ அவிந்து+ அடங்கிய+ கொள்கை+ சான்றோர்)

 

–சுபம்–

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 4 (Post No.5522)

COMPILED by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –10-57 am (British Summer Time)

 

Post No. 5522

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

TAMIL WISDOM- AVVAIYAR’S KONDRAI VENTHAN IN ENGLISH AND TAMIL – PART 4 (Post No.5522)

மகர வருக்கம் – APHORISMS BEGINNING WITH ‘MA

70.EAT IN COMPANY, THOUGH IT BE OF AMBROSIA
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

ANOTHER INTERPRETATION- DON’T EAT MEDICINE IN EMPTY STOMACH; TAKE IT WITH FOOD

XXX

71.WITHOUT RAINING NOTHING WILL PROSPER
71. மாரி அல்லது காரியம் இல்லை.

TIRUKKURAL 11

BY THE UNFAILING FALL OF RAIN THE DOES WORLD SUBSIST. THEREFORE IT IS CALLED AMBROSIA OF ALL THAT BREATHES.

XXX

72.LIGHTNING IS FOLLOWED BY RAIN
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.

XXX

73.NO SHIP SAILS WITHOUT A PILOT
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

TIRUKKURAL 560

COWS YIELD LESS. BRAHMINS FORGET THEIR BOOKS/ VEDAS IF THE LEADER DOES NOT GUARD JUSTICE.

TIRUKKURAL 544

THE WORLD CLINGS TO THE FEET OF  THE GREAT LEADER WHO WIELDS HIS SCEPTRE WITH LOVE FOR HIS SUBJECTS.

 

XXX

74.YOU WILL REAP THE FRUIT HEREAFTER OF WHATEVER YOU DO.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

TIRUKKURAL 375

ALL THINGS, GOOD AND PROMISING, END IN SMOKE UNDER THE INFLUENCE OF FATE.BUT OUT OF EVIL FLOWS WHEN YOUR LUCKY STAR IS IN THE ASCENDANT.

XXX

75.ADVICE GIVEN BY SENIORS IS NECTAR
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

TIRUKKURAL 893

GREAT MEN HAVE MIGHTY POWERS. IF YOU MEAN RUIN TO YOURSELF, OFFEND THEM AND SLIGHT THEM.

TIRUKKURAL 894

THE WEAK WHO INSULT AND OFFEND MIGHTY MEN OF WISDOM ONLY INVITE DEATH  WITH THEIR OWN HANDS.

 

XXX

76.A SOFT BED PROMOTES SLEEP
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.

XXX

77.THE WEALTH OF THE PLOUGH IS UNFAILING.
77. மேழிச் செல்வம் கோழை படாது.

TIRUKKURAL 1036

IF THE FARMERS HANDS SLACKEN, EVEN THE SAINTS STATE WILL FAIL

XXXX

78.HAVE NO CONTACT WITH WOMEN POSSESSING PAINTED EYES (HARLOTS)
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.

TIRUKKURAL 919

THE DELICATE SHOULDERS OF HARLOTS WITH FINE JEWELS ARE A HELL INTO WHICH ARE PLUNGED THE IGNORANT VILE

TIRUKKURAL 912

THEY PRETEND LOVE FOR SELFISH GAIN. THEIR NATURE IS BAD. AVOID CONTACT WITH THE WHORES. BEWARE OF THEIR SNARE.

XXX

79.IF YOU NEGLECT HE ADVICE GIVEN BY THE GREAT YOU WILL BE RUINED
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.

TIRUKKURAL 448

NO ENEMIES NEED HARM HIM; THE CARELESS LEADER WHO IS SHARPLY REBUKED SHALL RUIN HIMSELF

XXX

80..SILENT MEDITATION IS THE WAY OF WISDOM
80. மோனம் என்பது ஞான வரம்பு.

TIRUKKURAL 403

EVEN A MAN OF NO LEARNING MY BE CONSIDERED WISE IF HE HOLDS HIS TONGUE IN GATHERINGS OF LEANED.

 

XXX

வகர வருக்கம் – APHORISMS BEGINNING WITH ‘VA

81.ALTHOUGH YOU ARE AS RICH AS CHOZA KING KNOW THE AMOUNT OF YOUR  INCOME, THUS SPEND AND EAT.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.

 

XXX

83,.IF RAIN BE SCARCE, CHARITY IS SCARCE.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

TIRUKKURAL 18

IF RAINS FAIL , FESTIVALS OF THE YEAR AND THE DAILY WORSHIP OF THE GODS WILL CEASE

TIRUKKURAL 19

CHARITY AND DEVOTIONAL PRACTICES WILL NOT BE OBSERVED IN THE WORLD UNLESS RAIN FALLS.

XX

83.THOSE WHO ARE NOT HOSPITABLE TO GUESTS, POSSESS NO GOOD MANNERS.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.

TIRUKKURAL 83

HE WHO DAILY ENTERTAINS THE GUESTS WHO GO TO HIM WILL NEVER BE RUINED BY POVERTY

XXX

84.THE FRIENDSHIP OF A HERO MAY BECOME A SHARP ARROW TO OUR ENEMIES
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.

TIRUKKURAL 875

MAKE ONE OF THEM YOUR ALLY TACTFULLY IF SINGLY YOU HAVE TO WAGE WAR WITH TWO FOES AT THE SAME TIME

XXX

85.GREAT MEN ARE THOSE WHO NEVER ASK FOR A FAVOUR.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.

TIRUKKURAL 978

GREAT SOULS ARE HUMBLE AND MODEST. PETTY MINDED BOASTS AND BRAGS.

TIRUKKURAL 983

VIRTUE RESTS ON FIVE SUPPORTS- LOVE, TRUTHFULNESS, KIND REGARD, MODESTY, BENEVOLENT GRACE

XXX

86.PERSEVERANCE IN BUSINESS IS AN ORNAMENT TO WEALTH.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

TIRUKKURAL 613

GLORIOUS BENEVOLENCE TO ALL DEPENDS UPON THE EXCELLENCE OF MANLY EFFORT

XX

87.A PURE MIND IS FREE FROM FRAUD
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.

TIRUKKURAL 295

ONE WHO IS TRUE IN THOUGHT AND WORD GREATER THAN THOSE WHO DO PENANCE/ TAPAS AND DO CHARITY

XXXX

88.IF THE KING BE ANGRY, THERE IS NO DELIVERANCE
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.

TIRUKKURAL 895

THOSE WHO HAVE INCURRED THE WRATH OF A POWERFUL KING  WILL NOT SURVIVE WHEREVER THEY MAY GO.

 

TIRUKKURAL 691

NEITHER GO TOO NEAR NOR TOO FAR FROM THE KING LIKE ONE WHO WARMS ONESELF IN THE FIRE.

XXX

89.WORSHIP GOD IN EVERY PLACE
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.

TIRUKKURAL 2

OF WHAT AVAIL IS A MAN’S LEARNING IF HE DOES NOT PRAY TO GOD.

XXX

90.SLEEP IN A SUITABLE PLACE
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.

TIRUKKURAL

XXX

91.THOSE WHO ARE NOT ACCUSTOMED TO READ GOOD BOOKS, POSSESS NEITHER KNOWLEDGE NOR MANNERS.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

TIRUKKURAL  396

THE SAND SPRINGS FLOWS WITH WATER AS YOU DIG DEEPER. BY DEEPER STUDY KNOWLEDGE FLOWS.

XXX SUBHAM XXX

கடற் கொள்ளையர் பற்றிக் கம்பன் தகவல் (Post No.5521)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –7-39 am (British Summer Time)

 

Post No. 5521

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடற் கொள்ளையர்கள் பற்றி சங்க இலக்கியத்திலும் கம்ப ராமாயணத்திலும் வரும் தகவல்கள் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் கடலில் கப்பலுடைந்த காட்சி பற்றிப் பேசுகிறான். அதற்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேதத்தில் கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த ஒருவனை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தி பல ரிஷி முனிவர்களால் பாராட்டப் படுகிறது. சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் கப்பல் திசை காணும் பறவை உட்கார்ந்து இருக்கும் முத்திரை கிடைத்துள்ளது. இந்தோநேஷியாவில் போரோபுதூர் சிற்பங்களில் தமிழ்க் கப்பல் காட்சி தருகிறது.

சாதவஹனர் நாணயங்களில் கப்பல் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அராபியக் கடல்களில் அட்டூழியம் செய்த யவன (ரோமானிய) கடற் கொள்ளையர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பிடித்து வந்து, தலையை மொட்டை அடித்து, எண்ணையைத் தலையில் ஊற்றித் தண்டித்த காட்சி சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடம்பர் என்னும் கடற் கொள்ளையர்களை அழித்து அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தியது சூரபன்மனின் காவல் மரத்தை முருகன் அறுத்தைப் போன்றது என்றும் சங்கநூலான பதிற்றுப்பத்து பாடும்.

 

கம்பனோ போகிற போக்கில் ஒரு பாடலில் கடற் கொள்ளையர்களை உவமையாகப் பயன்படுத்துவது, அந்தக் காலத்தில் கடல் பயணம் எவ்வளவு நிகழ்ந்தது, என்ன என்ன பேரிடர்களை  அவர்கள் சந்த்தித்தனர் என்று காட்டுகிறது.

 

இதோ கம்ப  ராமாயண யுத்த காண்டப் பாடல்:-

 

மீயவர் யாவரும் விளிய வெங்கரி

சேயிருங் குருதியில் திரிவ சோர்வு இல

நாயகர் ஆள் எலாம் அவிய அம்பிகள்

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என

–படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்

யானை மீது இருந்த அனைவரும், வில்லால் தாக்குண்டு இறந்தனர். அப்பொழுது யானைகள் மட்டும் கொடிகளுடன் ரத்த வெள்ளத்தில் அங்கும் இங்கும் திரிந்தன; வெளியேற வழியில்லாமல் திகைத்தன; இது எப்படி இருந்தது என்றால் மாலுமிகள் உள்பட அனைவரும் கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் இறந்து போனபின்னர் பாய்மரத்துடன் கடலில் திரியும் கப்பல்கள் போலக் காட்சி தந்தன.

 

என்ன அருமையான ‘கடல்- கப்பல்’ காட்சியை கம்பன் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்.

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அது எல்லோருக்கும் ஸர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை உவமையாகப் பயன்படுத்த முடியும். அந்தக் காலத்தில் வங்கக் கடலில் நடந்த கடல் தாக்குதல் இது. அதையும் சமாளித்து ராஜ ராஜ சோழனும் ராஜேந்திரனும் மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபூப்பாளம்,சாவகம், புட்பகம்,சிங்களம் எனப் பல தீவுகளை வென்றனன்.

வாழ்க தமிழ்!!  வளர்க தமிழன் பெருமை!!

 

–subham–

 

ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு! (Post No.5520)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 October 2018

 

Time uploaded in London – 6-23 AM (British Summer Time)

 

Post No. 5520

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

  

இதற்கு முன்னர் வெளியான ஒரு வழக்கை எப்படி வாதாடுவது என்ற கட்டுரையைத் தொடர்ந்து இதைப் படிக்கலாம்!

ஆப்ரஹாம் லிங்கன் வாதாடிய வழக்கு!

 

ச.நாகராஜன்

1

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் சிறந்த மேதாவி. புத்திகூர்மையுள்ளவர். மனிதாபிமானி. எளிமையானவர். இன்னும் பல சிறப்புக்களைக் கொண்ட இவரது கூற்றுக்கள் பலராலும் இன்றும் மேற்கோளாகக் கூறப்படுகிறது. இவற்றில் இடம் கருதி பத்தை மட்டும் இங்கு பார்ப்போம்:

 

I am a slow walker, but I never walk back.

 

Whatever you are, Be a good one.

 

Give me six hours to chop down a tree and I will spend the first four sharpening the axe.

 

Do I not destroy my enemies when I make them my friends?

 

The ballot is stronger than the bullet.

 

Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.

 

Character is like a tree and reputation like a shadow. The shadow is what we think of it; the tree is the real thing.

 

Leave nothing for tomorrow which can be done today.

 

Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power.

 

The best way to predict your future is to create it.

 

அவரது சுருக்கமான சூத்திர மயமான இதர மேற்கோள்கள் அனைத்தும் கூட அருமை தான்!

 

2

அவர் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார்; கடுமையாக உழைத்தார். அப்போது ஒரு கொலை வழக்கை நடத்த குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் அண்டினார். அவரோ நிரபராதி. இதை அறிந்த லிங்கன் அவருக்காக நீதி மன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

 

லிங்கன் பதட்டமின்றி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகச் சொன்ன சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார்.

அந்த ஒருவர் தான் முக்கியமான சாட்சி. ஏனெனில் அவர் தான் கொலையை ‘நேரில் பார்த்தவர்’!

குறுக்கு விசாரணை ஆரம்பித்தது:

 

லிங்கன் : நீங்கள் கொலை செய்யப்பட்ட நபருடன் கொலை நடப்பதற்கு சற்று முன்பு இருந்திருக்கிறீர்கள். துப்பாக்கியால் சுடப்படுவதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

சாட்சி : ஆமாம்

லிங்கன் : இருவருக்கும் அருகில் இருந்திருக்கிறீர்கள்

சாட்சி : ஆமாம்

லிங்கன் : அது திறந்தவெளியில் நடந்ததா?

சாட்சி : இல்லை, மரங்களுக்கிடையில் நடந்தது

லிங்கன் : என்ன மரங்களுக்கிடையில்?

சாட்சி : பீச் மரங்களுக்கிடையில்

லிங்கன் : இலையுதிர்காலத்தில் பீச் மரங்களின் இலைகள் அடர்த்தியாக இருக்கும்.

சாட்சி : அப்படித்தான் இருக்கும்

லிங்கன் : நீங்கள் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே, அவர் சுட்டதைப் பார்த்தீர்கள்?

சாட்சி : ஆமாம்

 

லிங்கன் : எவ்வளவு அருகில் இந்தக் கொலை நடந்தது?

சாட்சி : முக்கால் மைல் தூரத்தில்

லிங்கன் : எங்கே விளக்குகள் இருந்தன?

சாட்சி : பாதிரியாரின் மேடைக்குத் தள்ளி

லிங்கன் : அது முக்கால் மைல் தூரத்தில் அல்லவா இருக்கும்?

சாட்சி : நான் அப்படித்தானே சொன்னேன்!

 

லிங்கன் : குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாரே, அவர் நின்ற இடத்தில் வெளிச்சம் இருந்ததா?

சாட்சி : இல்லை. வெளிச்சம் எதற்கு வேண்டும்?

லிங்கன் : வெளிச்சம் தேவை இல்லையெனில் எப்படி சுடப்படுவதைப் பார்த்தீர்கள்?

சாட்சி : நிலா வெளிச்சத்தில்

 

லிங்கன் : ஆக, நீங்கள் இப்படி சுட்டதை இரவு பத்து மணிக்கு பீச் மரங்களுக்கிடையே விளக்கு இருந்த இடத்திலிருந்து முக்கால் மைல் தூரத்தில் பார்த்திருக்கிறீர்கள். பிஸ்டலைக் கொண்டு குறி பார்த்து சுட்டதைப் பார்த்தீர்கள். அதை நிலா வெளிச்சத்தில் பார்த்தீர்கள். சரி தானே?

 

சாட்சி : ஆமாம், அதைத் தான் அப்போதே சொன்னேனே!

இளம் வக்கீலான லிங்கன் மெதுவாக தனது பாக்கெட்டிலிருந்து  ஒரு பஞ்சாங்கத்தை எடுத்தார். அதை நீதிபதியிடம் காண்பித்தார்.

குற்றம் நடந்த தினம் ஒரு அமாவாசை தினம் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

 

குற்றம் சாட்டப்பட்டிருந்த நிரபராதி விடுதலையானார்.

லிங்கனின் புகழ் அன்றிலிருந்து ஊரெங்கும் பரவத் தொடங்கியது.

 

3

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

Lincoln : You were with the murdered man just before, and saw the shooting?

Witness : Yes

Lincoln : You stood near the two men?

Witness : Yes

Lincoln :

Lincoln : Was it in the open field?

Witness : No, in the timber

Lincoln : What kind of timber?

Witness : Beech Timber

Lincoln : The leaves of beech are rather thick in autumn?

Witness : Rather

Lincoln : You could see the prisoner shoot?

Witness : Yes

Lincoln : How near did this happen to the meeting place?

Witness : Three quarters of a mile away

Lincoln : Where were the lights?

Witness : Up by the minister’s stand

Lincoln : That was three- quarters of a mile away?

Witness : I have already said so

Lincoln : Was there a candle where the prisoner was standing?

Witness : No. What would he want a candle for?

Lincoln : Then how did you see the shooting?

Witness : By moonlight

Lincoln : You saw this shooting, at ten o’clock at night, in beech timber, three-quarters of a mile away from the lights? Saw the man point the pistol and fire? Saw it all by moon light?

Witness : Yes, I have already said so.

Then the young lawyer slowly drew from his pocket an almanac and showed that on the night of the crime the moon was not visible.

 

***

 

CHILDREN ARE SMARTER THAN ADULTS ANECDOTES (Post No.5519)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 8 October 2018

 

Time uploaded in London –18-39 (British Summer Time)

 

Post No. 5519

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Babies Anecdotes

 
During gold rush days in California, a lady took her infant to the theater ones evening and it started crying just as the orchestra began to play
Stop those fiddle s and let the baby cry, called a man in the pit
I haven’t heard such a sound in ten years!
The audience applauded the sentiment widely, the orchestra was stopped, and the baby continued its performance amid unbounded enthusiasm .
Xxx

The six year old wandered into the room where the brand new baby was being nursed. Because of her interest in the process, the mother carefully explained how mother animals furnish milk for their babies, even the human species. The child was satisfied on all but one point.
But mother, she demanded, is it pasteurised?

Xxx

Burdened with the care of a new baby the young mother sent her little brother to the department store to get some things for the new arrival.

He managed to get everything without too much trouble. The last item on his list was diapers. He went to the counter where they were sold , stated his wishes and in the space of a few minutes the salesgirl returned with a bundle.
That will be sixty cents for the diapers and two cents for the tax.

Ah, never mind the tacks , said the youngster , Sis puts them on the baby with safety pins”

Xxx

Small Children Anecdotes

When he was in a nursery school, Woody, the young son of Heywood Broun, was constantly annoyed by grown up visitors to whom he had been pointed out, who kept coming up to him and asking him in saccharine tones
And whose little boy are you?

To one such inquirer, when his patience was exhausted, Woody peremptorily replied
You know damned well whose little boy I am!

Xxx

Themistocles had a son who was the darling of his mother
This little fellow , said Themistocles, is the sovereign of all Greece
How so? Asked a friend.
Why?, he governs his mother, his mother governs me, I governs Athenians, and the Athenians govern all Greece.
Xxx

Napoleon the Third was practising a Spartan method of education for the little five year old Louise Napoleon .

One day, in pursuance of his course, at Biarritz the child was given a swimming lesson by being tossed head first into the water. He was quite terrified and was severely reproached for this. He, a corporal, who could face a loaded canonical without wincing, and yet was afraid of the water!
Well, whimpered, little Louis,
I am in command of the cannon but I am not in command of the sea.

Xxx

Generally Byron suffered a moody and irritable childhood, between his cruel nurse whom he hated and feared, and his eccentric and tempestuous mother. In fourth year he bit a large piece out of a China saucer “ in a silent rage “ . Coming into the title at ten , he burst into tears when first called ‘dominus ‘ (LORD) at school.

 

XXX

The late, Sir Josiah Stamp, the economist was fond of a story about a parliamentary candidate who approached a house in his constituency and saw two small children of identical size and appearance standing hand in hand before the cottage door.
Jovially he asked them if they were twins.
No sir, they answered.
You are brothers, aren’t you? He inquired.
Yes,they said.
Well, how old are you?
We are both five..
Well,m y goodness, if you are both  five and brothers you must be twins.
Please,sir, one of them,
We are triplets . Billie is indoors.
Xxx

The little young lady of the house, by way of punishment for some misdemeanour, was compelled to eat her dinner alone at a corner of the dining room. The rest of the family paid no attention to her presence until they heard her audibly delivering Grace over her own repast, with the words,
I thank Thee Lord for preparing a table before me in the presence of mine enemies.

GRACE:

Following after the example of Jesus himself, Christians for centuries have maintained the tradition of saying “grace” or “thanks” before consuming a meal. It is a simple way of recognizing how God is the one who ultimately provides the food that we enjoy each and every day.

Xxx subham xxx