சிரித்துக் கொண்டே பாகிஸ்தான்; சண்டையிட்டு ஹிந்துஸ்தான்! (Post No.5059)

 

Written by S NAGARAJAN

 

Date: 30 MAY 2018

 

Time uploaded in London –  8-16 am  (British Summer Time)

 

Post No. 5059

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சிரித்துக் கொண்டே பாகிஸ்தான்; சண்டையிட்டு ஹிந்துஸ்தான்!

 

ச.நாகராஜன்

 

1

காந்திஜியும் நேருஜியும் தான் கூறிய வார்த்தைகளைத் தவற விட்டதை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இந்தக் கட்டுரைக்கு உடனடி விமரிசனமாக திரு நஞ்சப்பா (மெத்தப் படித்த இவரின் விமரிசனக் கருத்துக்கள் அழகானவை; ஆழமானவை; இவர் யார், எந்த ஊர் என்பது எனக்கு இதுவரை தெரியாது) அவர்கள் பதிவிட்ட கருத்துக்கள் மிக்க மதிப்பு வாய்ந்தவை. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.

அதை விமரிசனப் பகுதியில் படிக்கத் தவறிய அன்பர்களுக்காக அதன் முக்கிய பகுதியை அப்படியே இங்கு தருகிறோம்:

 

  1. இரண்டாம் உலகப் போருக்குப்பின் , இங்கிலாந்து இந்தியாவிடம் கடன்பட்டது. இது காலனி ஆதிக்க முறைக்கே எதிர்மறையானது. இதை இங்கிலாந்து ஏற்கவில்லை.
  2. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவின் பாதுகாப்பு பெரிய பொறுப்பையும் செலவையும் இங்கிலாந்தின் மீது சுமத்தியது, இதை ஏற்க இங்கிலாந்து தயாராக இல்லை.

3.நேதாஜியின் இந்திய தேசியப் படையினால் நாட்டில் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது. ராணுவம், கடற்படை ஆகியவற்றில் இருந்த இந்தியர்கள் புதிய எழுச்சி பெற்றனர். பம்பாயில் கடற்படையினர் Mutiny யில் ஈடு பட்டனர்.ஆங்கில அரசினர் அரண்டுவிட்டனர். இனி இந்திய வீரர்களை அடக்கிவைக்க முடியாது என்ற கருத்து அவர்கள் மனதில் உதித்து நிலைத்தது. இந்தியாவிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதை பின்னாட்களில் அன்றைய பிரதமராக இருந்த அட்லி பிரபுவே கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பற்றி ஜின்னா கூறியதை முழுதும் நம்ப முடியாது. ஜின்னாவை சர்ச்சில் மறைமுகமாக தூண்டிவந்தார். பாகிஸ்தான் பற்றி உறுதியாக இருக்குமாறு ஊக்குவித்து வந்தார். இது ஆதாரபூர்வமான விஷயம்.

இந்தியாவில் முஸ்லிம் பிரிவினை உணர்ச்சி வளர காந்தியே காரணமானார். 1857 புரட்சிக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் அடியோடு ஒடுக்கப்பட்டனர். முதல் உலகப் போரின்போது துருக்கிக்கு ஆதரவாக கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தார். துருக்கியே கைவிட்ட இந்த இயக்கம் இந்திய முஸ்லிம்களை ஒன்றுபடுத்தியது. முஸ்லிம்கள் எந்த நிலையிலும் எந்த நாட்டிலும் பிறருக்கு அடங்கி இருக்கமாட்டார்கள். இது குரானில் உள்ள நிலை. அதனால் பிரிவினை வாதம் முஸ்லிம்களின் அடிப்படை கோரிக்கையாகியது.
[மௌலானா ஆஸாத் போன்ற சிலர் பிரிவினையை ஆதரிக்காதது போல் இருக்கலாம்; ஆனால் இதன் அடிப்படை பிரிவினை வேண்டாம் என்பதல்ல, இந்தியா முழுதுமே முஸ்லிமாக மாறவேண்டும் என்பதே!]

 

காந்திஜியின் அரசியல் வாழ்க்கையை ஊன்றிப் படிப்பவர்கள் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேணும். 1921க்குப் பிறகு காந்திஜியின் எந்தப் போராட்டமும் வெற்றியடையவில்லை! அவர் எதையும் இறுதிவரை முழுமையாக நடத்தவில்லை! ( உப்பு சத்யாக்ரஹம் தனி நபர் போராட்டமாதலால் அது வேறுவிதமானது; ஆனால் அதன்பின் விளைவுகள் கடுமையாக இருந்தன). 1942 ஆகஸ்டு புரட்சியோ, அபத்தத்தின் உச்சம். ‘வெள்ளையனே வெளியேறு ‘ என்ற கோஷத்தைக் கொடுத்தார்; செய் அல்லது செத்து மடி என்றார்.ஆனால் தொண்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்குமுன் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தலையில்லாத இயக்கம் ஆறு மாதத்திற்குள் முழுதும் ஒடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் , இங்கிலாந்து இந்தியாவை விட்டு வெளியேற அவசரமாக முடிவெடுத்தது; அவர்கள் நினைத்தவிட வேகமாகவே மௌன்ட்பேட்டன் செய்துமுடித்தார். இதற்குக் காரணம் காந்திஜியல்ல; இந்தியாவை வைத்திருப்பதால் தமக்கு ஆதாயமில்லை, விரயம் தான் என்பதை ஆங்கிலேயர் நன்கு உணர்ந்ததே ஆகும்.
பிரிவினைக்குப்பின் நடந்த வன்முறைக்கு பிரிவினை மட்டுமே காரணமாகாது.
பஞ்சாப், சிந்து, வங்காளம் ஆகிய பகுதிகளில், ஹிந்து-முஸ்லிம் கலந்து வசித்த பகுதிகளில் எந்த இடம் எப்படிப் பிரியும் என்பதை மவுன்பேட்டன் நிச்சயிக்கவில்லை; நமது தலைவர்களிடமும் கலந்துபேசவில்லை. 1947 ஜூலை மத்திய வாக்கில் [ இந்த விஷயத்தைப் பற்றி ஏதுமே அறிந்திராத ]ஒரு லண்டன் வக்கீலைப் பிடித்து வந்து, ஒரு தனி இடத்தில் அமர்த்தி , தேசப்படத்தைக்கொடுத்து நாட்டைப் பிரிக்கச் சொன்னார், மௌன்ட்பேட்டன். அவரும் படத்தில் பென்சிலால் கோடு போட்டு, ‘இது அங்கே, அது இங்கே’ என்று தன்னிச்சையாக முடிவுசெய்தார். சுதந்திர தினத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக வந்த இந்த வரை படத்தை இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டினார் மவுன்பேட்டன். ஆக, சுதந்திர தினத்தன்று எந்தப் பகுதி இந்தியா, எந்தப் பகுதி பாகிஸ்தான் என்பது பிரதமர் நேருவுக்கே தெரியாது! மவுன்ட் பேட்டன் பெரிய எம்டனாகி, நேருவை முட்டாளாக்கினார்! இது ஹிந்துக்களையே அதிகம் பாதித்தது. இதை காந்தியோ நேருவோ கண்டுகொள்ள வில்லை. முஸ்லிம்கள் ஏரியாவில் ஹிந்துக்கள் சிக்கிக்கொண்டனர், இதுவே வன்முறையின் வித்து.

 

ஆகஸ்டு புரட்சியைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் 4 ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.. அவர்களுக்கு தேசியப் போராட்டத்தில் இருந்த ஊக்கம் போய்விட்டது. உடல் நிலை காரணமாக வெளியே வந்த காந்திஜி, ராஜாஜியின் யோஜனைப்படி ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதற்காக ஜின்னாவைச் சந்திக்க அவர் இருப்பிடத்திற்கே சென்றார். இந்த முட்டாள் தனமான செய்கை, ஜின்னாவின் மதிப்பை உயர்த்தியதுடன், அவர்தான் முஸ்லிம்களின் ஏகோபித்த பிரதிநிதி என்ற மாயையையும் உருவாக்கியது. இதன்பின் ஜின்னா பிடிகொடுக்கவில்லை. பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது ( காந்தி-ஜின்னா போட்டோவுடன்.)

1926க்குப் பிறகு எந்த இக்கட்டான நிலையிலும், எந்தப் பிரச்சினைக்கும் காந்திஜியால் ஒரு தீர்வோ, உருப்படியான யோசனையோ சொல்ல முடியவில்லை. 1946ல் சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்களுக்கு, ‘இன்னும் எத்தனை நாள் போராடுவது’ என்ற சலிப்பு உணர்ச்சி ஏற்பட்டது. பதவி யேற்போம் என்ற ஆசையும் தோன்றியது. நேருவும். படேலும் சுமுகமாக இல்லை; இருவருக்கும் காந்திஜியின் மேல் நம்பிக்கை யில்லை. [ அதாவது அவர் ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்வார் என்ற நம்பிக்கை இல்லை]. இந்த நிலையில் நேரு மவுன்ட் பேட்டனின் வலையில் சிக்கினார். அவர் சொல்வதற்கெல்லாம் சரியென்றார்.
‘பாகிஸ்தான் வேண்டும்’ என்பதில் ஜின்னா உறுதியாக இருந்தார்; பிரிவினை கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக இல்லை.
At that stage, Gandhiji was unfit to command. Nehru & Co were unwilling to obey.

இது தான் நடந்தது. இங்கு சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரமாக புத்தகங்களைச் சொல்லமுடியும். ஆனால் பட்டியல் நீண்டுவிடும். காந்திஜி-ராஜாஜியின் பேரரான ராஜ்மோஹன்  காந்தி எழுதிய காந்திஜி, படேல், ராஜாஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களிலேயே ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன.\

*

இந்த விமரிசனப் பகுதியைப் படித்த பின்னர் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்வேறு உண்மைகளைத் தரும் புத்தகப் பட்டியலையும் அவர் விமரிசனப் பகுதியில் உடனே பதிவு செய்தார்.

மேலும் விஷயங்களை அறிய விரும்பும் பல அன்பர்கள் இந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். அவர் தந்த புத்தக விவரங்கள்:

 

I give below a short list of recent books which readily come to mind.

1.Land of the Seven Rivers by Sanjeev Sanyal. Penguin, 2013
Gives details of how the London lawyer divided India!

  1. Indian Summer: by Alex Von Tunzelman. Simon and Schuster, 2008.
Deals with the developments in the summer preceding Independence, esp ecially covers
Mountbatten-Nehru dealings.

3.Churchill’s Secret War: by Madhusree Mukerjee. Basic Books, 2010.
Clearly details how Churchill’s hatred of Hindus affected India during the Second World
War, and how Churchill encouraged Jinnah. This book is well researched.

4.Keeping the Jewel in the Crown: by Walter Reid. Penguin Random House, 2016.
It reveals British secret designs and how they thwarted and outwitted Indian efforts.

  1. History of the Freedom Movement In India : by R.C.Majumdar. It is difficult to find this book
as it has been suppressed by the Nehruvian establishment as it explodes many myths of
Gandhi-Nehru mystique.
  2. Biographies of Gandhiji, Rajaji, and Sardar Patel by Rajmohan Gaandhi. The first two are published by Penguin, and the last one by Navjivan Publishing House, Ahmedabad. These are detailed chronicles, and shed light on many subjects/issues from different standpoints. It makes for painful reading , as we realise how increasingly irrelevant Gandhiji became in the movement, especially towards the closing stages, how Gandhiji’s voice did not count, and even how he failed to find his voice!
  3. Mahatma Gandhi: The Last Phase, by Pyarelal,published by Navjivan, Ahmedabad.
Written by Gandhiji’s secretary, it is a painful chronicle of how Gandhiji struggled on all fronts in the last stages of his movement, how Congress leaders became power-hungry, how they increasingly disregard
ed Gandhiji, and became corrupt. I do not know whether this book is in print.
  4. Gandhi & Churchill by Arthur Herman , Arrow Books, 2008.
This is a voluminous book in small print. Well researched and detailed. It reveals how Churchill’s hatred for Gandhi made him support Jinnah secretly so that Gandhi would not succeed. Churchill supported and encouraged Jinnah even when he was out of office!

Among the British, Lord Wavell , the viceroy before Mountbatten alone appreciated the geographical integrity of India, and held that any division would jeopardise India’s security. But his bosses in London were in no mood to listen to him, and were impatient to drop India like a hot potato and thrust Mountbatten, a proven incompetent fellow as the viceroy to speed up their exit. It is ironical that an empire begun by a vagabond like Robert Clive was ended by one who carried Royal blood! But they destroyed the integrity of India. India is now surrounded by hostile neighbours, created by British malevolence matched, and perhaps exceeded by Indian incompetence.

மேலே கண்ட பகுதிகள் விளக்கமாக இருப்பதால் இதை இன்னும் அதிகமாக விளக்கத் தேவையில்லை.

 

2

உலக வரலாற்றை நன்கு ஊன்றிக் கவனித்தால் முஸ்லீம்கள் அதிரடியாகவோ அல்லது சமாதானமாகவோ வசிக்கச் சென்ற நாடுகளை அவர்கள் ஆக்ரமிப்பதோ அல்லது அங்குள்ளவர்களை மதமாற்றுவதோ வழக்கமாக இருப்பதைக் காணலாம்.

இப்போது பிரிட்டன் இதற்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவோ அரண்டு போய் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, “இங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று அதிரடியாகச் சொல்லி வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் முகலாய ஆக்கிரமிப்பைத் தாங்கி, அதை விரிவு படுத்த விடாமல், வேரூன்ற விடாமல் செய்த ஒரே நாடு இந்தியா தான் என்பதை உறுதிபடச் சொல்லலாம்.

தனது உள்ளீடான சக்தியால் இந்து மதம் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இந்த வெற்றியைத் தக்க வைப்பது ஹிந்துக்கள் கையில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

3

இனி பிரிவினையின் கதைக்கு வருவோம்.

ஆறு லட்சம் ஹிந்துக்களும் சீக்கியர்களும் அநியாயமாகப் பிரிவினையால் கொல்லப்பட்டனர்.

இவர்களைக் கொன்றவர்கள் முஸ்லீம்களே. இதை நேருஜியோ அல்லது மௌலானா அபுல்கலாம் ஆஜாதோ கண்டுகொள்ளவில்லை.

சில நூறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது ஆ, ஊ என்ற பல தலைவர்கள் அலறினர். ஆனால் லட்சக் கணக்கில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்ட போது இவர்களின் குரல் ஒலிக்கவில்லை.

இதே பாரம்பரியம் தான் இன்றும் நீடிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒரு விஷயம்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு (பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே)

2, செப்டம்பர், 1946இல் பிரதம மந்திரியாக ஆனார்.

அதைத் தக்க வைத்துக் கொள்வது அவரது பிரதான நோக்கமாக இருந்தது.

ஹிந்துக்கள் கொலையைப் பற்றி அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

எது இந்திய எல்லை, எது பாகிஸ்தான் எல்லை என்பதே நேருஜி உட்பட யாருக்குமே தெரியவில்லை.

இப்படியா ஒரு பிரம்மாண்டமான தேசத்தைப் பிரிப்பது?

தேசம் சுதந்திரம் அடைந்த இரு தினங்களுக்குப் பின்னரே நேருஜி எது இந்தியப் பகுதி, எது பாகிஸ்தான் பகுதி என்பதை அறிவித்தார்.

அதற்குள் விஷயம் எல்லை மீறி விட்டது.

இந்தியப் பகுதியில் இருக்கிறோம் என்று நினைத்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் சந்தோஷமாக இருந்த சமயத்தில் அவர்கள் இருப்பது பாகிஸ்தான் பகுதியில் என்று தெரிய வந்த போது அவர்களை அடித்துக் கொன்று, அவர்களிடமிருந்த சொத்து மற்றும் இதர உடைமைகளை பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இவர்களைக் காப்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை அல்லது எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முன்பேயே கொலைகள் முடிந்து விட்டன!

என்ன ஒரு கோரம் இது!

இதனால் சந்தோஷப்பட்ட பாகிஸ்தானிய முஸ்லீம்கள்

சிரித்துச் சிரித்து பாகிஸ்தானைப் பெற்றோம் – இனி

சண்டையிட்டு ஹிந்துஸ்தானைப் பெறுவோம்

என்று கோஷமிட்டனர்.

ஹன்ஸ்தே ஹன்ஸ்தே லியே பாகிஸ்தான்

லட்தே லட்தே லேங்கே ஹிந்துஸ்தான்

என்பது அவர்களின் கோஷம்.

4

16, ஆகஸ்ட், 1946இல் கல்கத்தாவில் 5000 ஹிந்துக்களை முஸ்லீம் வெறியர்கள் கொன்றனர்.

இனி அரங்கேறப் போகும் காட்சிகளுக்குக் கட்டியமாக அது அமைந்தது.

பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களைக் கொல்வது, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை மைனாரிடி உரிமையின் பேரில் பாதுகாப்பது என்ற நிலை உருவான போது காந்திஜிக்கே மிக்க கோபம் வந்தது.

கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களா தேஷ்) அவர்கள் ஹிந்துக்களை கொலை செய்த போது, இந்தியப் பகுதியில் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் அலறி ஓடி வந்து மகாத்மாவின் காலில் விழுந்து பாதுகாப்புக் கேட்டனர்.

காந்திஜியோ, கிழக்கு பாகிஸ்தானில் கொலைகள் நிறுத்தப்படும் வரை நீங்கள் எந்த வித பாதுகாப்பையும் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது என்று கண்டிப்பான குரலில் கூறினார்.

அடுத்து நடந்தது ஆச்சரியமான விஷயம்.

தந்திகள் பறந்தன. கிழக்கு பாகிஸ்தானில் கொலைகள் நின்றன!

 

இப்படி பல விசித்திர சம்பவங்களைக் கொண்ட இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போல உலக சரித்திரத்தில் இன்னொரு சம்பவம் இல்லை என்பது வேதனைக்கும் வியப்புக்கும் உரிய விஷயம்!

 

5

பழைய கதையைக் கிளறுவதால் வெறுப்பு உணர்ச்சி அல்லவா ஏற்படும் என்ற கேள்வி இதைப் படிப்பவர்க்கு எழலாம்.

இன்றைய அவல நிலைக்குக் காரணமே நமது தவறான கொள்கைகளே என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.

முஸ்லீம்களுக்கு மைனாரிடி உரிமைகள் இங்கு உண்டு; ஏராளமான பதவி சுகங்கள் உண்டு – ராஷ்டிரபதி பதவி உட்பட!

பாகிஸ்தானிலோ ஒரு அரசு பதவியைக் கூட ஒரு ஹிந்து பெற முடியாது!

இது இரட்டை நிலை – டபிள் ஸ்டாண்டர்ட்.

இதற்குக் காரணம் பிரிட்டிஷாரின் நயவஞ்சகத் தந்திரமும், அதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த ஜின்னா உள்ளிட்ட கோஷ்டிகளும், இதை எதிர்க்காமல் ஆமாம் சாமி போட்ட நமது கையாலாகாத ‘செகுலர் தலைவர்களுமே!

சுதந்திரம் பெற்றதில் அனைவருக்கும் சந்தோஷம் ஏற்பட்டது உண்மை தான்; அதை அனைவரும் வரவேற்றனர் என்பதும் உண்மை.

ஏனெனில் பிரிட்டன் என்னும் வஞ்சகக் குள்ளநரியை நாட்டை விட்டு ஓட்டினோம் அல்லவா.

ஆனால் அதற்காக நாம் கொடுத்த விலையும் வாங்கிக் கொண்ட தீராத தொடர் வியாதியும் (மைனாரிடி சலுகைகள்) தவிர்த்திருக்கக் கூடியதோ, என்னவோ!

காலம் தான் பதில் சொல்லும்!

***

வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)

Written by London Swaminathan 

 

Date: 29 May 2018

 

Time uploaded in London – 14-35

 

Post No. 5058

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)

தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் அறிந்ததே:

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுன்ண்ணலாம்;

வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

 

அற்புதங்களின் ப்ட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவதுஅதை விடக் கடினம் என்கிறார்.

 

இந்த மாதிரி அற்புதங்களை தமிழ் சித்தர்கள் சர்வ சாதாரணமாகச் செய்து வந்தனர். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல! இறைவனின் அற்புதங்களை சொல்லும் தமிழ் மொழி நூல்களும் அதை திரு ‘விளையாடல்’ என்றே செப்பும். ஸம்ஸ்க்ருதத்தில் அதை லீலா விநோதங்கள் அல்லது விபூதி என்பர்.

இதற்கெல்லாம் மிக மிக முந்தைய அற்புத துதிகள் உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் உள்ளன.

 

ரிக் வேதம் 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுவரை பழமையுடைத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு. அதில் பத்தாவது மண்டலத்தில் ஜடை தரித்த (கேசீ) முனிவர்களைப் பற்றியும் அந்த முனிவர்களின் சக்தி குறித்தும் வருகிறது

 

ஏழு ரிஷிகள் சூரியனை முனிவனாக உருவகித்து பாடிய பாடல் அது.

அதில் வரும் சில வரிகளைக் காண்போம்:

கேசீ பூமியையும் சோதியையும் தாங்குகிறான்

 

முனிவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். காற்று போலச் செல்கிறார்கள்.

நாங்கள் காற்றின் மேலே ஏறினோம்; மானுடர்களே; நீங்கள் தூல தேகத்தையே பார்க்கிறீர்கள்

 

காற்றின் குதிரையும் வாயுவின் நண்பனுமான முனி, தேவனால் ஊக்கம் அடைந்து, கிழக்கு மேற்கிலுள்ள இரு கடல்களுக்கும் செல்கிறான்.

 

அப்சரஸ், கந்தர்வர்கள் செல்லும் இடங்களிலும் வனவிலங்குகள் செல்லும் இடங்களிலும் ( வானம், காடு)  முனிவன் சஞ்சரிக்கிறான்.

 

கேசீ ஜடையுள்ளவன். அவன் ருத்திரன் விஷத்தை அருந்தினான்.

 

இந்தப் பாடலில் வரும் விஷம் அருந்தும் வரிகள் நமக்கு விஷம் உண்டு பெயர் பெற்ற திரு நீலகண்டன் (சிவ பெருமான்) கதையை நினைவு படுத்துகிறது.

 

இந்தத் துதியின் அடிக்குறிப்பில் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் கூறுவதாவது:-

முனிவர்கள் தங்கள் நேர்மையான வாழ்க்கை நடைமுறைகளால் வாயு, ருத்திரன் போன்ற தேவர்களின் தன்மையை அடிய முடியும்.  அவர்களைப் போல சிறந்த சக்திகளையும் பெற முடியும். எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்; நீண்ட அழகான முடியுடைய முனிவர்கள் தவத்தின் போது மழிப்பதில்லை. தீ ஜோதி, பூமி ஆகியவற்றைத் துதிப்பார்கள்.

 

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீக நிகாயம்’ என்ற பௌத்த மத நூலும் ஆறு அதி மானுட சக்திகளை விவரிக்கிறது. ரிக் வேதம் காலத்தினால் பழமையானதால் அவர்கள் மறை பொருளில் பேசுவர். ஆனால் பிற்காலத்தில் எழுந்த பௌத்த, சமண சமய நூல்கள் நமக்குப் புரியும் நடையில் எல்லாவற்றையும் நுவல்வர்.

 

இதோ புத்த மத நூல் இயம்புவன:

 

“ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; பலர் ஒன்றாகலாம்.

மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்

தண்ணீருக்குள் முங்கு நீச்சல் அடிப்பது போல பூமிக்குள் மூழ்கி எழுந்திருக்கலாம்.

தண்ணீர் மீது நடந்து செல்லல்லாம்

யாருக்கும் தெரியாமல் மாயமாய் உலவலாம்

காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்.

 

நிலவையும் கதிரவனையும் தொடலாம்;

பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.”

 

 

இவை அனைத்தும் சாதாரண மனிதனால் செய்ய இயலாது.

சமண மத நூல்களும் இதையே சொல்லும்.

 

அஷ்டமா சித்திகள்

 

 

ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு:

 

“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.

மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்

காற்றை விட லேஸாகலாம்.

இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம்.

 

பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம்

 

நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் பு குந்து எழலாம்

பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.

உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.”

 

ஆக ரிக் வேதம், பழங்கால மொழியில் பகன்றதை பிற்கால நூல்கள் எளிய மொழியில் செப்பின என்றால் மிகை இல்லை.

அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.

அஷ்டமா சித்திகள் என்பதில் மேற் சொன்ன அற்புதங்கள் எல்லாம் அடக்கம். ஆனால் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை எண்வகைச் சித்திகளில் மட்டுமே காணப்படுகிறது. இது பர காயப் பிரவேசம் ஆகும். அதாவது ஒருவர் உடலில் உள்ள உயிர் வேறு ஒருவரின் உடலுக்குள் புகலாம். இதைத் திருமூலர் கதையில் விளக்கியுள்ளேன்

 

–சுபம்–

 

SUPERNATURAL POWERS OF SAINTS- FROM RIG VEDA TO THAYUMANAVAR (Post No.5057)

Written by London Swaminathan 

 

Date: 29 May 2018

 

Time uploaded in London – 10-14 am

 

Post No. 5057

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

POWER OF TAMIL SIDDHAS AND SEERS IN RIG VEDA

Rig Veda is the oldest book in the world and it is dated between 1500 and 6000 BCE. It has got several hymns where the Yogic powers are beautifully described. Though lot of saints in later ages have sung about the mystic powers of saints and seers in North and South of the country, this is the oldest to document such powers. This hymn describes SUN in terms of earthly Yogis and Munis.

 

Psychic power of Levitation

1.Here is the hymn (RV 10-136)

 

The long haired one (Kesi) carries the fire;

The long haired one (Kesi) carries the poison;

The long haired one (Kesi) carries heaven and earth;

The long haired one (Kesi) carries all the sky which is to be seen;

The long haired one (Kesi) is called the Light.

 

2.The Munis (seers) wind girdles, wear soiled yellow garments; they follow the course of the wind when the gods have entered them.

 

3.Transported through the practise of Muni- asceticism, we mount the winds; you mortals see only our bodies.

4.He flies through the air looking upon forms of every sort, the Muni, who has become a friend to benefit every god.

5.The Wind’s horse (Vata), the Wind’s (Vayu) friend is then the Muni, incited by the gods. In both oceans he dwells, the eastern and the western.

6.Wandering on the path of the Apsarasses, the Gandharvas (in the sky), and wild beasts (thick forests), is the long haired one, who knows every desire, a friend sweet and more intoxicating.

7.Vayu, has churned for him; for him he pounds things most hard to bend, when the long haired one drank from the cup of poison with Rudra.

 

(Lord Shiva drank poison to save Devas and Asuras (demons and angels) when they churned the Milk ocean for Amrta (Ambrosia). Goddess Uma stopped it half way through the neck of Siva and he had it in his neck for ever and he is called Neela (bluish black necked) Kanta.

 

Like most of the hymns of the Rig Veda this hymn has also different translations. It is sung by Sapta Rishis. But all the translators agree on one point- the mystic powers of saints are explained here and the Sun is compared with them or used as a symbol for them. One interpretation is that the Yogis get the power of Sun, Wind etc through their practices.

Buddhists’ Six Supernatural Powers

 

Buddhists also describe six super natural powers in Digha Nikaya of third century BCE.

“With thoughts thus concentrated, purified, cleansed, stainless, free from contamination, impressionable, tractable, steadfast, immovable, he inclines, he bends down, his thoughts to the acquisition of the various kinds of Magic Power. He enjoys, one after another, the various kinds of magical power, the several varieties thereof:

Being one man, he becomes many men. Being many men, he becomes one man.

He becomes visible; he becomes invisible.

He passes through walls and ramparts and mountains without adhering thereto, as though through the air.

He darts up through the earth and dives down into the earth, as though in the water.

He walks on water without breaking through, as though on land.

He travels through the air cross-legged, like a bird on the wing.

He strokes and caresses with his hand the moon and the sun, so mighty in power, so mighty in strength.

He ascends in the body even to the World of Brahma”.

 

What the Rig Veda described in an archaic language (Vedic Sanskrit)  is described here in a plain language.

A yogi can pass through walls

Can become invisible

Can ascend to the Brahma loka with physical body

Can become many

Can walk on water and fly through the air.

 

Such is magical power, the first of Six Supernatural powers, of which the others are the Heavenly Ear, Mind-reading, Recollection of Previous States of Existence, the Heavenly Eye, the Knowledge of Means of destroying the Three Contaminations.

 

Jain Supernatural Powers

The Jains called such supernatural powers as ‘labdhi, sakti, rddhi’. We have the description of such powers in Hemachandra’s Trisatisalaakaa purusacarita:–

 

“They (Jain sages) were able to reduce themselves into so minute a form that they could pass, like a thread, even through the eye of the needle.

They could heighten their bodies to such an extent that even Mount Sumeru would reach up only to their knees.

They could make the body so light that it was even lighter than air

The gravity of their bodies surpassed that of Indra’s thunderbolt, and hence their strength (i.e. strong blow) could not be borne by the Gods of Indra and others.

Their power of extension was such that they could touch while standing on earth, the planets or even the top of Mount Meru with their fingers as easily as we touch the leaves of a tree.

 

Their strength of will was so great that they could walk on water as on land, and could dive into or come out of the ground as if it were water.

Their supernatural powers with regard to worldly glory were such they could gain for themselves the empire of a Cakravartin (Universal Monarch) or of an Indra.

Unprecedented was their power by which they brought under control even wild beasts.

Their motion was so irresistible that they could enter into a mountain as easily as into a hole.

Their power of becoming invisible was so unchecked that they could fill in the space of the universe with their multiple forms”.

 

This is more elaborate description of what we found in the Rig Veda (3-33 and 10-36)

Following is reproduced here from my old posts:–

Eight Types of Supernatural Powers

 

Hindu Yogis are very familiar with the eight types of powers called Ashtama Siddhis.

Siddhar is one who attained Siddhi i.e. special psychic and supernatural powers, which has been defined to be eight-fold in the science of yoga.

 

 

1.Anima :power of becoming the size of an atom and entering into smallest life.

2.Mahima : power of becoming mighty and co-extensive with the universe.

3.Laghima : capacity to be light, though big in size

4.Garima : capacity to be heavy though seeming small in size

5.Prapthi : capacity to enter all the worlds from Brahmaloka to Pathalam

6.Prakamya

: power of disembodying and entering into other bodies and going to heaven and enjoying whatever one wants from one place

7.Isithvam :  having the creative power of God and control over the sun, the moon and the elements

8.Vasithvam : power of control over kings and Gods.

Tamil Saint Thayumanavar sings about the Supernatural powers in one of his verses:

You can control a mad elephant

You can shut the mouth of bear or tiger

You can ride a lion

You can play with the cobra

You can make a living by alchemy

You can wander through the world incognito

You can make vassals of the gods

You can be ever youthful

You can walk on water

You can live in fire

You can achieve all Siddhis at home

But to control the mind is rare and difficult.

 

(*Tamil original is given at the end)

Controlling mind is harder than doing miracles. When a person starts doing severe penance he gets lots of temptations from the angels. (Kanchi Paramacharya says in one of his lectures that the angels hover around you and beg you to use them). Anyone who falls a prey to such temptation is trapped with women or gold or some strange desires such as building a new temple or starting a new movement or creating a Utopia. Those who ignore and go beyond that temptation will reach God. But there are some saints, who come back from that stage to awaken the mankind. Ramakrishna Paramahamsa said that knowing that there is a big ocean of ever bliss, they rush back to the world to announce: Please Believe me, Please come with me, Please Join me to merge with the Nithya Ananda=Bliss forever.

 

*Tamil Original of Thayumanavar song:

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுன்ண்ணலாம்;

வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

–Subham–

 

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்! (Post No.5056)

Written by S NAGARAJAN

 

Date: 29 MAY 2018

 

Time uploaded in London –  8-06 am  (British Summer Time)

 

Post No. 5056

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்கு மண்டல சதகம்

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

 

ச.நாகராஜன்

 

உலக வரலாறு கண்ட சிறந்த மன்னர்களுள் சோழ மன்னன் கரிகால் சோழனும் ஒருவன். சிறந்த வீரன். நீதிமான். பல சிறந்த வியத்தகு சம்பவங்களைத் தன் வாழ்க்கையில் கொண்டவன்!

 

அவன் புகழை கொங்கு மண்டல சதகம் பாடல் 33 எடுத்துரைக்கிறது.

பாடல் வருமாறு:-

நீர்மை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்

பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி

ஏருறு சிங்கா தனமேறக் கையாலெடுத்துமத

வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே

கொங்கு மண்டல சதகம் – பாடல் 33

பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்கதானம் ஏற்ற யானை எடுத்துப் போனதும் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பாடல் குறிக்கும் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கு ஆதாரமாக இந்தப் பாடல் விளங்குவதால் இது தனியிடத்தைப் பெறுகிறது.

 

இது குறிக்கும் வரலாறு இது தான்:

உறையூரில் அரசு புரிந்து வந்த உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் அழுந்தூர் வேள்மகளை மணந்தான். கருப்பமுற்று அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் ஒரு முகூர்த்த காலத்தில் பிள்ளை பிறப்பானாயின் அவன் சக்கரவர்த்தி ஆவான் என்பதைச் சொல்லக் கேட்ட அரசி, தன்னைத் தலைகீழாகக் கட்டும் படி கூறி நல்ல ஹோரை வந்தவுடன் இறங்கி ஆண்மகனைப் பிரசவித்தாள்.

இளம் பருவத்திலேயே குழந்தையின் தந்தை இறந்தான். உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டிலிருந்து வந்த சண்டையும் அவனை அரியணை ஏறச் செய்யவில்லை. பிழைப்பதே அரிதாக இருந்தது. மாறுவேடம் பூண்ட இளவரசன் கொங்கு நாட்டில் புகுந்து ஊர் ஊராய்த் திரிந்து வாழ்ந்தான்.

இதற்கிடையில் உறையூரில் சிங்காதனம் ஏறத் தக்க ஒருவனைத் தேடவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி பட்டத்து யானையை விடுவதென்று தீர்மானித்து அதன்படியே யானையை கழுமலத்திலிருந்து கட்டவிழ்த்து அனுப்பி அதன் பின்னால் அனைவரும் சென்றனர்.

 

யானை கருவூர் சென்றது.அங்கிருந்த கரிகாலனைத் தன் பிடரி மீது தூக்கி வைத்துக் கொண்டு திரும்பியது.

கரிகாலன் அரசனாக்கப்பட்டான். ஆனால் இது பொறாத தாயத்தார் (உறவினர்) அவனைச் சிறைப்படுத்தினர். அது மட்டுமின்றி சிறைக்குத் தீயும் வைத்தனர். அந்த நெருப்பையும் மீறி அவன் சிறையிலிருந்து தப்பி வந்தான். தனது மாமன் இரும்பிடர்த்தலையாரின் துணையைப் பெற்று பகைவர்களை வென்று அரியணை ஏறினான்.

சிறையில் தீ எரிந்த போது அந்த நெருப்பால் கருகிய காலைப் பெற்றதால் கரிகாலன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.

கரிகாலனின் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 100 என்று நிச்சயிக்கின்றனர். அதாவது  2118 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகச் செங்கோலோச்சியவன் கரிகாலன்!

 

இவனைப் பற்றி பழமொழி கூறுகையில்.

“கழுமலத்தில் யாத்த களிறுங் கருவூர்

விழுமியோன் மேற்சென் றதனால்” – பழமொழி

என்று கூறுகிறது.

பழமொழியின் இன்னொரு பாடல் இது:-

 

“சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை

உயிருடையா ரெய்தா வினை”  (பழமொழி)

 

பொருனராற்றுப்படையில் வரும் குறிப்பு இது:-

 

“மூச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்

இச்சகக் கரமே அளந்ததால் – செச்செய்

அரிகான் மேற்றேன் றொடுக்கு மாய்புன னீர்நாடன்

கரிகாலன் கானெருப் புற்று   – (பொருனராற்றுப்படை)

 

திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் வரும் ஒரு பாடலையும் கீழே பார்ப்போம்:

“விண்ணுளார் மறைகள் வேதம் விரித் தோதுவார்

கண்ணுளார் சழலின் வெல்வார் கரிகாலனை

நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்

தண்ணலா ராடுகின்ற வலங்காரமே”

 

எத்தனை அற்புதமான மன்னன் கரிகாலன்; அவனை ஆதரித்தது கொங்கு மண்டலமே என்கிறது கொங்கு மண்டல சதகம்.

தமிழருக்குப் புகழ் சேர்த்த மன்னன் கரிகாலனைக் கொண்டாடுவோமாக!

***

VEDIC GODS INDRA, VARUNA, YAMA IN THAILAND (Post No.5055)

Written by London Swaminathan 

 

Date: 28 May 2018

 

Time uploaded in London – 18-59

 

Post No. 5055

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

HINDU GODS IN THAILAND-2

Sculptures of Vedic Gods Indra, Varuna, Yama and Kubera are found in many temples in Thailand. They are sculpted on the panels, gable and bas reliefs. Indra is more prominent than other gods. In some places he is portrayed with three headed Airavata, his elephant vehicle. In other places he is riding Airavata with one head. Varuna is sculpted with three Hamsas/swans. In India his vehicle was Makara (Crocodile or fish). Yam is riding his vehicle buffalo. It is very rare to see Kubera in India in temples. In Thailand we see him with goddess.

 

Along with the trinities Brahma, Vishnu and Shiva we see the Vedic Gods. But there is no temple for them. Kala, a strange figure is also found in Thai temples. Let us look at some beautiful sculptures of those Vedic Gods.

 

Indra

Indra with mysterious Kala with a big mouth

 

 

Indra with three headed Airavata

 

Varuna with three swans

Kubera with goddess of wealth

Locations

Varuna: Prasat Phimai, 12th Century

Kubera: Temple at Mo Ee Daeng

Yama:Prasat Phnom Rung

Indra: Prasat Narai Jaeng Waeng, Prasat muang khaek, Khao Phra Viharn and many more places

Source book for pictures: Palace of Gods

 

–Subham–

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

Written by London Swaminathan 

 

Date: 28 May 2018

 

Time uploaded in London – 7-43 am

 

Post No. 5054

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

தாய்லாந்து நாட்டில் குனோய் KUNOI என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கல்வெட்டுகள், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தகவலகளை பொறித்துள்ளன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள கல்வெட்டு. குனோய் KUNOI என்னும் இடத்தில் தோண்டும் வேலைகள் நடந்தபோது இந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. இதில் பெரிய, நடுத்தரமான, சிறிய கல்வெட்டுகள் உள. நடுத்தர அளவு கல்வெட்டுகளில் இந்தச் செய்திகள் உள. இவை ஏழாவது ஜயவர்மன் காலத்தியவை. அவன் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தை ஆண்டனன். மருத்துவமனை பற்றிய கல்வெட்டு அடிப்பகுதி உடைந்து காணாமற்போய்விட்டது

 

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேயா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மத ராஜாக்கள் ஆட்சி நடந்தது. அந்த நாடுகள் அனைத்திலும் முக்கியமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகளில் இருந்து மிக முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் பாங்காக், காங்கேயன் முதலிய நகரங்களில் மியூஸியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் அதிகம்.

 

வட தாய்லாந்து வழியாக KHMER க்மேர் (குமரிக் கண்ட?) நாகரீகம் தாய்லாந்தில் நுழைந்தது. வியட்நாமில்தான் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டு உளது. இது ஸ்ரீஇமாறன் (திருமாறன்) என்ற பாண்டிய மன்னனுடையது. அதன்பிறகு கம்போடியாவில் நிறைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. சம்பா என்று அழைக்கப்பட்ட வியட்நாம் ஆட்சியில் மட்டுமே 800 ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகள் உள.

 

வட தாய்லாந்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. இதுதான் தாய்லாந்தின் பழைய கல்வெட்டு. இதில் மஹேந்திரவர்மன் என்ற மன்னன், சிவனின் வாஹனமான நந்தியை நிர்மாணம் செய்தி உளது.

இதில் விநோதம் என்னவென்றால் அதேகாலத்தில் காஞ்சீபுரத்தில் மாபெரும் பல்லவ மன்னனான மஹேந்திர பல்லவன் நந்தி சின்னத்தோடு ஆட்சி புரிந்துள்ளான். இருவருக்குமிடையேயான தொடர்பு ஆராயப்படவேண்டியது. கம்போடிய, தாய்லாந்து மன்னர்களும் பல்லவர்களைப் போல  ‘வர்மன்’ பட்டத்துடன் ஆண்டனர் என்பதும் குறிப்பிடற்பாலது.

 

மஹேந்திரவர்மன் கல்வெட்டு சூரின் (SURIN PROVINCE) மாகாணத்தில் கிடைத்   தது; அவன் எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டதற்காக சிவ பிரானுக்கு ‘நந்தி’ அமைத்ததாகக் கல்வெட்டு செப்புகிறது

 

இந்தியாவை போலவே அங்கும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்தது, கோவில் கட்டியது முதலிய செய்திகள் உள. இவை இல்லாவிடில் அந்த நாட்டின் வரலாறே அழிந்து போயிருக்கும். தமிழ் நாட்டிலும் இப்படி பிரம்மதேய (பிராமணருக்கு தானம்), தேவதான (கோவிலுக்கு தானம்) கல்வெட்டுகள் இல்லாவிடில் வரலாறே தெரியாமல் போயிருக்கும். இலக்கியங்களில் தேதி தெரியாது; கல்வெட்டுகளில் ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கும்.

 

பாங்காக் நகர மியூஸியத்தில் இரண்டாவது உதயாதித்ய  வர்மணின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டு பல சுவையான செய்திகளைத் தருகிறது பிராமண அர்ச்சகர் பரம்பரை பற்றிய செய்தி இது. தமிழ்நாட்டில் வேள்விக்குடி சாசனம் எப்படி பிராமணர்களுக்கு பாண்டிய மன்னர்கள் பழங்காலம் முதல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறதோ அதே போல இந்த தாய்லாந்து கல்வெட்டு கைவல்ய சிவாச்சார்யார்கள் பற்றி சுமார் 400 ஆண்டுக் கதைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது

 

இது பிரசாத் கோக் சுதோத் தாம் என்னும் இடத்தில் கிடைத்தது. இப்பொழுது பாங்காக் தேஸீய மியூஸியத்தில் இருக்கிறது

 

க்மேர் வன்ம்சத்தை ஸ்தாபித்த ஜயவர்மன் காலத்தில் இருந்து அந்த பிராமணக் குடும்பம் மன்னர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறும் இக் கல்வெட்டு 1052 ஆம் ஆண்டினது ஆகும்; ஜயவர்மன் 802-ல் வம்சத்தை நிறுவினான். அவன் ஜாவவிலிருந்து (இந்தோநேஷியா) வந்து இந்திரபுரத்தில் அரசு நிறுவிய கதை; பின்னர் அதை ஹரிஹராலயத்துக்கு மாற்றிய கதை ஆகிய அனைத்தையும் இக் கல்வெட்டு விளம்புவதால் தாய்லாந்து வரலாற்றுக்கும் க்மேர் வரலாற்றுக்கும் இன்றியமையாதது இது என வரலாற்றுப் பேரறிஞர்கள் உரைப்பர்.

 

 

அத்தோடு க்மேர் அரசாட்சி முறை, அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுக்குக் குருவாக விளங்கிய பிராமணர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மொழிகிறது.

11 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

பிரஸாத் பனம் ரங் (PRASAT PHNOM RUNG) என்னும் இடம் மிகப் பிரஸித்தமானது. அங்குதான் நிறைய இந்துக் கடவுளரின் சிலைகள், சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அங்கு 11 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. இதிலிருந்து வட தாய்லாந்தின் 400 ஆண்டு வரலாற்றை அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நரேந்திர ஆதித்யன், அவன் மகன் ஹிரண்யன் ஆகியோரின் வீரப் பிரதாபங்களை இவை நுவலும்.

 

27க்கு 53 (27×53) செண்டிமீட்டர் உடைய (ஒன்றரை அடிக்கும் மேல் உயரம்) உள்ள ஒரு ஸம்ஸ்க்ருத கல்வெட்டு சிவ பெருமானின் துதியோடு துவங்குகிறது. சிவ பெருமானை மஹா யோகி என்று புகழ்கிறது. அதில் ஹிரண்யன் தனது தந்தைக்குத் தங்கத்தினால் சிலை செய்து வைத்ததாகப் புகல்வான். சைவ மடங்களுக்குப் புதுக் கட்டிடங்கள் கட்டியதைக் கொண்டாடும் முகத்தான் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத கல்வெட்டு நாலே வரிகளில் உளது.

 

மடங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், சிவன், விஷ்ணு, லிங்கம் ஆகிய மூர்த்திகளை நிறுவியது ஆகியான பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள. அனைத்தும் அரிய பெரிய செய்திகளைத் தருகின்றன.

 

தமிழர் ஒருவர் சென்று ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிடுவது பல முக்கிய செய்திகளைத் தரக்கூடும். ஸம்ஸ்க்ருத மொழி அறிவின்றி பழந் தமிழர்களின் கடலாதிக்கத்தை அறிவது அரிதிலும் அரிது.

 

ஆங்கிலேயர்கள் எழுதிய 1992 ஆம் ஆண்டு நூலில் உள்ள தகவல்களை நான் வடித்துத் தந்தேன். அவர்களுக்கு ஆழமான அறிவும் பற்றும் இல்லை என்பதால் நாம் ஆராய வேண்டியது அவஸியமாகும். ஆயிரம்   ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளை ஆராயும் கடமை நமக்குளது.

ஸம்ஸ்க்ருதம் படிக்க! தமிழ்  வாழ்க!!

 

-சுபம்,சுபம்-

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள் (Post No.5053)

Written by S NAGARAJAN

 

Date: 28 MAY 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5053

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சத்திய சோதனை

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள்! – தேசப் பிரிவினையின் சோகமான அம்சம்!

 

ச.நாகராஜன்

 

1

பாரத தேசத்தின் சரித்திரத்தின் 1947இல் நடந்த பிரிவினை சோகமான ஒன்று. தேவையற்ற ஒன்று.

இது பற்றி நமது தேசத்தின் பெரும் தலைவர்களான காந்திஜி, நேருஜி முதலில் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி பாரதம் சுதந்திரத்தை அடைந்தது.

பிரிவினையுடன்.

 

 

இதற்கு முன்னர் ஏப்ரல் 1947இல் பண்டிட் ஜவஹர்லால் நேரு

ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசினார்:

 

“All talk of a partition of India as fantastic nonsense. We shall never agree to it.”

  • Pandit Jawaharlal Nehru, addressing a public meeting in April 1947, two months before he accepted it.

 

இப்படி வீர முழக்கம் செய்த இரண்டே மாதங்களில் அவர் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார்!

 

ஹிந்துக்கள் காந்திஜியையும் நேருஜியையும் மலை போல நம்பினார்கள்.

 

ஆனால் நேருஜி வார்த்தை தவறி விட்டார்.

அவர் ஏன் இப்படி தனது வார்த்தையைத் தவற விட்டார்?

அதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்!

Leonard Mosley  என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அவர்  ‘The Twilight of the British Raj’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

நேரு தனக்கு அளித்த பேட்டியை அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

அதன் ஒரு பகுதி இது:

 

“I was getting old”, said the fart in effect, and I did not want to engage myself in another struggle and lose my post as Prime minister of India. Partition of the country began to look like a solution to my problems.”

ஆறு வாரங்களில் ஆறு லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர் – பிரிவினையால்.

 

தனது பிரதம மந்திரி பதவி போய் விடக்கூடாது, இன்னொரு போராட்டத்திற்குத் தான் தயாராக இல்லை, வயதாகிக் கொண்டே போகிறது என்பது நேருவின் வாயிலிருந்தே வந்த வார்த்தைகள்!

 

 

2

ஜின்னா என்ன நினைத்தார்?

இதை மைக்கேல் எட்வர்டின் புத்தகம் தெரிவிக்கிறது.

Michael Edwardes  எழுதியுள்ள  ‘The Last years of British India’ என்ற புத்தகத்தில் ஜின்னா கூறிய வார்த்தைகள் அப்படியே தரப்பட்டுள்ளது.

“I never thought it would happen. I never expected to see Pakistan in my lifetime.”

ஜின்னாவே எதிர்பார்க்காத பிரிவினை ஏற்பட்டது!

 

3

மகாத்மா காந்திஜி பாகிஸ்தான் உருவாவதைப் பற்றி என்ன சொன்னார்?

“Even if the whole of India burns, we shall not concede Pakistan, even if the Moslem League demanded it at the point of a word.”

மகாத்மா காந்திஜி 1947 மே மாதம் 31ஆம் தேதி இப்படிக் கூறினார்.

 

இதை Michael Edwardes மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

ஆனால் மேயில் கூறிய வார்த்தைகளை உடனேயே அவர் தவற விட்டார். ஆகஸ்ட் பிரிவினை ஏற்பட்டது.

என் உடலின் மீது தான் பிரிவினை ஏற்பட்டால் ஏற்படும் என்ற மகாத்மாவின் கூற்றையும் நாம் அனைவரும் அறிவோம்.

அவர் ஏன் மனம் மாறினார்!

 

 

முப்பது கோடி மக்களின் நம்பிக்கை தெய்வமாக இருந்த அவர் ஏன் தன் வார்த்தையைத் தவற விட்டார்.

ஜவஹர்லால் நேரு தனது பதவி மோகமே தன்னை பிரிவினைக்கு ஒப்புக் கொள்ள வைத்தது என்று கூறி விட்டதாக அறிகிறோம்.

 

ஆனால் மகாத்மா?

அவர் ஏன் வார்த்தையைத் தவறவிட்டார்?

தெரியவில்லை.

 

அவரது சொற்களைத் தான் ஆராய வேண்டும்?

பிரிவினையால் எத்தனை லட்சம் மக்கள் இறந்தனர்.

புதிய எளிதில் தீர்வு காண முடியாத தொடர் பிரச்சினையாக மைனாரிட்டிகளுக்கு (அதிக!) உரிமை என்ற அபத்தமான வாதம் இந்தியத் திருநாட்டை இன்று எந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.

 

வியக்கிறோம்!

சத்தியத்திற்கே சோதனையா?

***

 

குறிப்பு : மிக அருமையான நூலான, Hindu Destiny by Nostradamus  என்ற நூலை ஜி.எஸ். ஹிரண்யப்பா என்பவர் எழுதியுள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது. இவரது நூலைப் பற்றியும் இவரைப் பற்றியும் நான் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையை அன்பர்கள் படிக்கலாம்.

 

xxxx

 

 

 

 

RARE SANSKRIT INSCRIPTIONS WITH MEDICAL INFORMATION (Post No.5052)

Written by London Swaminathan 

 

Date: 27 May 2018

 

Time uploaded in London – 20–39

 

Post No. 5052

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

RARE SANSKRIT INSCRIPTIONS WITH MEDICAL INFORMATION (Post No.5052)

 

Thailand has several inscriptions with interesting information. They provide documented history. Like India the donations to Brahmins and temples stand as historical documents. A very interesting inscription is the Hospital Inscription.

The Stone inscription is in Sanskrit language. Its from the Ku Noi Hospital, Khonkaen Museum. It belongs to Jayavarman VII of 13th century CE. The inscription was discovered in the excavations at Kunoi.

 

It states that the site was a hospital at the time of Jayavarman VII. The bottom part of the stele is broken and missing. There are three different sizes of stone inscriptions- large, medium and small. Ku noi is in the middle group. All the stone inscriptions gave details regarding the hospital, such as the number of doctors, nurses and types of offerings etc.

 

The earliest inscriptions of Khmer history in Northern Thailand dated to the end of the 6th century CE. One found in the province of Surin, north of Ta Muen, was erected by a king called Mahendravarman. The inscription written in Sanskrit, commemorates the installation of Shiva’s bull Nadin. Mahendravarman ordered the inscription carved after he has conquered ‘all the country’.

 

The interesting coincidence is that at the same time the great Pallava King Mahendravarman was ruling from Kancheepuram in South India.

 

There is another stele in Bangkok museum, a Sanskrit inscription  giving the details of land given by the King Udyadityavarman II. Land was donated to priestly family of Brahmins. It is in Prasat Sdok Kok Thom.  This is one of the most important inscriptions for the study of the Khmer history. Now housed in the National Museum in Bangkok, it dates to about 1052 CE and chronicles the history of Shivakaivalya dynasty of priests who served the King Jayavarman II, founder of the Khmer Empire in 802. It relates how Jayavarman arrived from Java, became king of Indrapura and later moved his capital to Hariharalaya, close to Angkor on northern shore of the Tonle Sap.

 

In addition it also provides information on subsequent Khmer history, the Khmer system of kingship, the various beliefs adhered to and details about the Brahmin family and their involvement with later Khmer kings.

 

11 Inscriptions in Phnom Rung

The inscriptions of Prasat Phnom Rung offer a unique insight into the nature of Khmer rule in Northern Thailand between the 10th and 13th century CE. They record the family history of Narendra Adiytya and his son Hiranya. They were independent rulers and not the vassals of king at Angkor. Altogether 11 inscriptions were found at Phnom Rung. The name Phnom Rung itself occurs once on a stele inscribed with a Sanskrit eulogy and several times in Khmer inscriptions.

 

The earliest inscriptions found at Prasat Phnom Rung is in Sanskrit. It is only four lines, but has been dated to 7th century CE. This inscription might have been shifted from another site, because other structures at the site are of later periods.

 

Of the other Sanskrit inscriptions, the most important bears the inventory no K.384. It is also the biggest measuring about 27X 53 centimetres. Another inscription is also in Sanskrit. Hiranya is talking about installing a golden image of his father. The inscription commemorates the new additions to Saivite monastery in Phnom Rung. Hymn to Shiva is in the beginning which praises Shiva as Maha Yogi.

 

Among other inscriptions, however are fascinating details of the religious practices of the monastery on Phnom Rung Hill. One inscription with an inventory no. BR 14 is carved on a round stone slab almost a metre high, a shape associated with sema stones of boundary markers. The 12th century Inscription refers to a pool called Sri Surya as well as setting up the images of gods Shiva, Vishnu, Linga etc.

 

Sanskrit inscriptions in Thailand serve as a great source of history.

Source book Palace of the Gods, Smiththi Siribhadra and Elizabeth Moore; photography Michael Freeman Year 1992.

–subham–

கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)

கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)

 

Written by London Swaminathan 

 

Date: 27 May 2018

 

Time uploaded in London – 17–35

 

Post No. 5051

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

கம்பனுக்குக் கணக்குத் தெரியாது. கம்ப ராமாயணத்தில் ஆயிரம் கோடி, நூறு கோடி என்றெல்லாம் படைகளின் எண்ணிக்கைக்குப் பயன்படுத்துவார். அந்தக் காலத்தில்– ராமாயண காலத்தில்– அல்லது அதற்குச்  சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த கம்பன் காலத்தில் ஜனத் தொகை மிகவும் குறைவு. ஆயினும் கவிஞர்கள் எதுகை மோனைக்காக இஷ்டப்பட்ட எண்களைப் பயன் படுத்துவர். ரிக் வேதம் முழுதும் இந்திரன் அழித்த அசுர படை எண்ணிக்கை ஆயிரக் கணக்கிலேயே இருக்கும்; அக்காலத்திலும் அவ்வளவு ஜனத்தொகை கிடையாது. ஆனால் கவிஞர்களுக்கே உரித்தான  உரிமை அது. புத்த மத நூல்களில் 500 அல்லது ஆயிரம் என்ற எண்ணை சர்வ சாதாரணமாகப் பிரயோகிப்பர். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் கம்பன் சில பாடல்களில் பேய்கள் பற்றிச் சொல்லும் போதும் ஆயிரம் பேய்கள் பற்றிப் பேசுகிறான்!

 

 

 

பல பாடல்களில் ராவணன் படையில் இருந்த பேய்கள் பற்றிப் பாடுகிறான். இதோ ஒரு பாடல்

 

பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினைப் பழித்த தோளான்

வெய்யன் என்று உரக்க சாலத் திண்ணியான்  வில்லின் செல்வன்

பெய்கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழப் பிறக்கு பல் பேய்

ஐ இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலாம்

யுத்த காண்டம்

 

பொருள்:

 

“வயமத்தன் என்ற ஆள் பொய்யைக் காட்டிலும் பெரிய உடலைக் கொண்டவன்; மலையினை விடப் பெரிய தோள்கள் உடையவன்;  கொடியவன் என்று சொல்லத்தக்க தோற்றம் கொண்டவன்;  வில் வீரன்;  வீரக் கழல் அணிந்த ராவணன் சேனை ஆரவாரம் செய்து கிளம்புமாறு ஆயிரம் பேய்கள் பூட்டிய பல சக்கரத் தேரில் வருபவன்.”

இதில் பேய்கள் என்பது நாம் சாதரணமகப் பயன்படுத்தும் பேய்=பூத= பிசாசு என்னும் பொருளுடைத்தா அல்லது வேறா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். இந்தப் பாட்டுக்குப் பொருள் எழுதிய பழைய உரைகாரர்   களும் பேய்களை அப்படியே ‘பேய்’ என்று எழுதிவிட்டுப் போய் விட்டனர்.

 

 

நாமோ ஒரு பேய்க்கே மக்கள் பயந்து ஓடுவர் என்று கதைகளில் படிக்கையில் 1000 பேய்கள் தேரில் பூட்டப்பட்டது என்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்திரஜித்தின் கொடி பேய்க் கொடி என்பதைப் பின்னொரு பாடலில் கம்பன் பகர்வான்.

 

பேய்கள் என்பது வேடம் அணிந்த விசேஷப் படை என்று நான் ஊகிக்கிறேன். தற்காலத்தில் பெருந்  தலைவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க ‘கருஞ் சிறுத்தைகள்’ (BLACK PANTHERS) ‘கருப்புப் பூனைகள்’ (BLACK CATS) என்ற கமாண்டோகளைப் பயன் படுத்துகிறோம். காலப்போக்கில் இவர்களின் பெயர்கள் மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, செய்திப் பத்திரிக்கைகளைப் படிப்போருக்கு நாம் விளக்கம் சொன்னால்தான் அவர்களுக்கு அர்த்தம் புரியும். ஆனால் கம்ப  ராமாயண உரைகாரர்கள் விளக்கமே சொல்லாமல் போய்விட்டனர்.

 

இப்பொது நாம் Commando கமாண்டோ படைகள் என்று சொல்லும் சிறப்புப் படையினர் போல அக்காலத்திலும் இந்திரஜித் மற்றும் ராவணன் படையில் கருப்பு உடை அணிந்த  வீரர்கள் இருந்திருப்பர். அவர்கள் தேரை இழுக்காமல் தேருக்கு இரு புறமும் பாதுகாப்புக்காக  வந்திருப்பர்!!!

–SUBHAM–

 

மிகச் சிறந்த ஆங்கிலக் காதல் கவிதை எது? (Post No.5050)

Written by S NAGARAJAN

 

Date: 27 MAY 2018

 

Time uploaded in London –  7-06 am  (British Summer Time)

 

Post No. 5050

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பல புத்தகங்கள”oughtsours, not a flower of which but took root and grew…கவிதை பிறந்த கதை!

 

மிகச் சிறந்த ஆங்கிலக் காதல் கவிதை எது? – 1

ச.நாகராஜன்

How Do I Love Thee? by Elizabeth Barrett Browning

 

1

1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனில் பி.பி.சி.ஒரு கருத்துக் கணிப்பை எடுத்தது. ‘மிகச் சிறந்த காதல் கவிதையாக நீங்கள் கருதுவது எந்தக் கவிதையை? என்பது தான் கேள்வி.

வில்லியம் ஷேக்ஸ்பியர்

டி.ஹெச்.லாரன்ஸ்

பிலிப் சிட்னி

தாமஸ் ஹார்டி

டபிள்யூ.பி.ஈட்ஸ் இன்னும் இன்ன பிற கவிஞர்கல் எல்லாம் எழுதிய கவிதைகளைப் புறம் தள்ளி விட்டு மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த காதல் கவிதையின் தலைப்பு : How Do I Love Thee?

கவிதையை இயற்றியவர் :  Elizabeth Barrett Browning

கவிதை எழுதப்பட்டு 168 ஆண்டுகள் கழிந்து விட்ட போதிலும் கவிதையின் முதல் இரண்டு அடிகளை இன்றும் ஆயிரக்கணக்கானோர் போற்றி அதை அடிக்கடி சொல்லி மகிழ்கின்றனர்.

மக்களின் மனம் கவர்ந்த காதல் கவிதை இது தான்:

How do I love thee? Let me count the ways

I love thee to the depth and breadth and height

My soul can reach, when feeling out of sight

For the ends of Being and ideal Grace.

I love thee to the level of everyday’s

Most quiet need, by sun and candlelight.

I love thee freely, as men strive for Right;

I love thee purely, as they turn from Praise.

I love thee with the passion put to use

In my old griefs, and with my childhood’s faith.

I love thee with a love I seemed to lose

With my lost saints—I love thee with the breath,

Smiles, tears, of all my life!—and, if God choose,

I shall but love thee better after death.

 

2

 

 

எலிஸபத் பாரெட் ப்ரௌனிங் யார்? பிரபல ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங்கின் மனைவி. (பிறப்பு : 6-3-1806 மறைவு : 29-6-1861)

இந்தக் கவிதை பிறந்த கதையே சுவாரசியமான ஒன்று.

எலிஸபத் பாரெட் – ராபர்ட் ப்ரௌனிங் – இவர்களிடையே மலர்ந்த காதல் கதையும் சுவாரசியமான ஒன்று.

எட்வர்ட் மோல்டன் பாரட் என்பவருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் மூத்தவர் எலிஸபத் பாரெட்.

எட்வர்டுக்கு ஜமைக்காவில் பெரிய தோட்டங்கள் இருந்தன. அடிமைகளை வைத்து அங்கு அவர் வேலை வாங்கி வந்தார். என்றாலும் கூட குடும்பத்தை அங்கு கொண்டு செல்லவில்லை. இங்கிலாந்தில் ஹெர்போர்ட்ஷைர் என்ற இடத்தில் ஹோப் எண்ட் என்ற பெயருடைய பெரிய மாளிகை ஒன்றில் தன் குடும்பத்தினரை வசிக்க வைத்தார். அனைத்துக் குழந்தைகளுக்கும் வீட்டிலேயே படிப்பு உண்டு. எல்லாக் குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசத்தைப் பொழிந்த எட்வர்ட் அதே அளவுக்குக் கண்டிப்பையும் காட்டினார். அவரது சொல் தான் அங்கு மந்திரம். அதற்கு மேல் அப்பீலே கிடையாது.

குழந்தைகள் யாருக்கும் திருமணம் கிடையாது என்று அந்தத் தந்தை முடிவெடுத்தார்.

கண்டிப்பான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த எலிஸபத்துக்கு 15 வயது நிறைந்தது. ஒரு நாள் குதிரை மீது அவர் சவாரி செய்யும் போது கீழே விழ அது அவரை ஆபத்தான நோய்க்கு இட்டுச் சென்றது. அவரது நரம்புகள் பலஹீனமாயின.

அவரது நிலையைக் கண்ட தந்தையார் அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

எலிஸபத்தின் தாயாரும் அவரது ஒரு சகோதரரும் இறக்கவே அவர் துடிதுடித்துப் போனார்.

இந்த நிலையில் அடிமைகளை வைத்து வேலை வாங்கும் முறை முடிவுக்கு வரவே தந்தையின் வருமானம் படுத்தது.

எலிஸபத்தின் தந்தை தனது ஹோப் எண்ட் வீட்டை விற்று விட்டு லண்டனில் 50, விம்பிள்டன் ஸ்ட்ரீட்டுக்குக் குடி பெயர்ந்தார். இந்த வீதி பின்னால் உலகப் புகழ் பெற்று விட்டது.

எலிஸபத்திற்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் போதை மருந்துக்கு அடிமைப்பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் எழவே அந்த அறை எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டது.

தந்தையார் பிரார்த்தனை செய்ய அங்கு வருவார். சகோதர, சகோதரிகள் அவரைப் பார்க்க அனுமதி உண்டு. அங்கு வந்து பேசுவர்.

இயல்பாகவே பாரட்டுக்கு கவிதை மீது நாட்டம் பிறந்தது. கவிதைகளை எழுதலானார். அதை அனைவரும் ஆவலுடன் படித்தனர். தந்தையாரும் மகிழ்ந்தார். ‘பா’ என்று செல்லமாக அழைக்கப்படும் எலிஸபத் பாரட்டுக்கு புகழும் வந்து குவிந்தது.

பல கவிதைத் தொகுதிகளை வெளியிட ஆரம்பித்தார்.

அவரது டாக்டருக்கோ கவிதை என்றாலே பிடிக்காது. அது மூளையைக் கெடுக்கும் ஆபத்தான சமாச்சாரம் என்பது அவரது தாழ்ந்த அபிப்ராயம். ஆனால் இதையும்  மீறி அவரது கவிதைப் படைப்புகள் மலர்ந்தன.

ராபர்ட் ப்ரௌனிங்கின் (தோற்றம் 7-5-1912 மறைவு : 12-12-1889) கவிதைகளின் பால் எலிஸபத்துக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவர் தனது குறிப்புகள் ஒன்றில் அவரை மேற்கோள் காட்டி அவரைப் பாராட்டி எழுதினார்.

இதனால் மனம் மகிழ்ந்த ராபர்ட் ப்ரௌனிங் எலிஸபத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இதில் பிறந்தது ஒரு அபூர்வமான காதல் கதை!

 

How Do I Love Thee? by Elizabeth Barrett Browning

3

 

1845ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று தனது முதல் கடிதத்தை ராபர்ட் ப்ரௌனிங் எழுதி எலிஸபத்துக்கு (பா என்பது அவர் செல்லப் பெயர்) அனுப்பினார்.

 

“I love your verses with all my heart, dear Miss Barrett… into me it has gone, and part of me has it become, this greatliving poetry of yours, not a flower of which but took root and grew…”  என்று ஆரம்பித்த அவர் கடிதம் “பா”வின் கவிதை வரிகளை,

 

“fresh strange music ,true new brave thoughts என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியது.

 

இதனால் அகம் மகிழ்ந்த பா பதிலுக்குத் தன் இதய ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதினார். இப்படி ஆரம்பித்த காதல் கடிதப் பரிமாற்றம் நீண்டது.

காதலை இது வரை அறியாத பா 39ஆம் வயதில் ஒரு புதிய உணர்வைப் பெற்றார்.

 

நூற்றுக் கணக்கில் 1845-46ஆம் ஆண்டில் காதல் கடிதங்கள் இருவருக்கும் இடையே பறந்தன.

ஆனால் இந்தக் காதல் மிகவும் ரகசியமாகவே இருந்தது. அப்பாவோ பொல்லாத அப்பா! அவருக்கு இதெல்லாம் பிடிக்காது.

 

1846இல் பா இப்படி எழுதினார்:

 

‘For I have none in the world who will hold me to make me live in it, except only you – I have come back for you alone…at your voice…and because you have use for me! I have come back to live a little for you. I love you – I bless God for you – you are too good for me, always I knew.

காதல் என்பது புனிதமானது. உண்மைக் காதலுக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஒருவரை  ஒருவர் புரிந்து கொண்டு ஈருடல் ஓருயிர் ஆவதே காதல். பைபிளே கூறி விட்டது: “Three things will last forever–faith, hope, and love–and the greatest of these is love.” (I Corinthians 13: 13.)

 

உலகில் மிகப் பெரிய விஷயம் காதல் தான்.

ஆனால் பா-வைப் பார்க்க ஆசைப்பட்ட ப்ரௌனிங்கிற்கு அவரிடமிருந்து அழைப்பே வரவில்லை. பலமுறை பார்க்க வரலாமா என்று கேட்டார்.

கடைசியாக ப்ரௌனிங்கிற்கு பாவிடமிருந்து அழைப்பு வந்தது.

1845, மே மாதம் 20ஆம் தேதி சரியாக 3 மணிக்கு ப்ரௌனிங் பாவின் மேல் மாடிக்கு வந்தார். தனது காதல் தேவதையின் கண்களை ப்ரௌனிங் கண்டார். மயங்கிப் போனார்.

அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. மெதுவாக படுக்கையிலிருந்து கைத்தாங்கலாக பாவை ப்ரௌனிங் எழுப்பி நிறுத்தினார்.

பின்னர் நடக்க வைத்தார். ஜன்னல் அருகே சென்ற பா மலர்களைப் பார்த்தார். நீல வானத்தைப் பார்த்தார். மகிழ்ந்தார்.

அவருக்கு உற்சாகம் ஊட்டிய ப்ரௌனிங் அவரை வெளியே செல்ல வைத்தார். நல்ல உடல் நலத்தையும் உள்ள வலிமையையும் பெறுமளவு ஊக்கினார்.

இருவரும் மணம் புரிவது என்று தீர்மானித்தனர். ஆனால் தந்தையோ இந்தக் காதலைச் சற்றும் விரும்பவில்லை.

ஆகவே ஒரு நாள் தன் பணிப்பெண்ணுடன் சர்ச்சுக்குச் செல்ல தீர்மானித்தார் பா.

1846, செப்டம்பர் 12ஆம் தேதி பா தன் பணிப்பெண்ணுடன் செயிண்ட் மேரிலெபோன் சர்ச்சுக்குச் சென்றார். ப்ரௌனிங்கை மணம் புரிந்தார். வீடு திரும்பினார். திருமணம் ரகசியமாகவே இருந்தது.

இப்போது அவர் திருமதி ப்ரௌனிங். எலிஸபத் பாரெட் ப்ரௌனிங்!

செப்டம்பர் 19ஆம் தேதி தனது பணிப்பெண்ணுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீடு என்பது அவரைப் பொறுத்த மட்டில் ஒரு சிறை தான்.

அந்தச் சிறையிலிருந்து இப்போது விடுதலை! சுதந்திரப் பறவையாக அவர் பறந்தார்.

இதனால் அவரை வெறுத்த தந்தை இறுதி வரை அவரைப் பார்க்கவே இல்லை.

 

ப்ரௌனிங் தனது அருமை மனைவியுடன் பாரிஸ் சென்றார். பின்னர் ஃப்ளோரென்ஸ் சென்றார்.

பா உடல் நலம் தேறி நன்கு நடமாட முடிந்தது. 1849இல் அவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார்.

குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் இதுவரை தான் ரகசியமாக எழுதி வைத்திருந்த 44 சானெட் பாடல்களை அவர் ப்ரௌனிங்கிடம் தந்தார். அதைப் பார்த்த ப்ரௌனிங் வியந்தார்.

43ஆம் பாடலாக அமைவது தான் : How Do I Love Thee?

இதில் உள்ள ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த பொருள் கொண்டது.

தனது லண்டனுக்குப் பின்னர் வருகை தந்த பா தனது சகோதரிகளைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை மட்டும் பேசவே இல்லை. பாவின் மகனை தன் வீட்டில் ஒரு நாள் பார்த்த அந்தத் தாத்தா,இது யார்? என்று கேட்க பாவின் பையன் என்று பதில் வந்தது.

அட, இங்கு எதற்கு வந்தான், பிரார்த்தனை புரியவா என்று மட்டும் அவர் கூறினார்.

தன்னை விட 6 வயது இளையவரான ப்ரௌனிங்கை மணம் புரிந்தார் பா. ஆனால் மண வாழ்க்கை சிறப்பாக நீடித்தது.

1859இல் அவரது உடல் நலம் பாதித்தது. 1861 ஜூன் 29ஆம் தேதி அவர் படுக்கையில் அமைதியாக உயிர் துறந்தார். ப்ரௌனிங் அருகில் மௌனமாக அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கிய பா இறுதியாக, “Do you know me?” என்று கேட்டார்.

“My Robert, My heaven, my beloved” என்று முணுமுணுத்தவாறே அவர் ஆவி பிரிந்தது. ஃப்ளோரென்ஸில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இதற்குப் பின்னர் 28 ஆண்டுகள் மணம் புரியாமல் வாழ்ந்தார் ப்ரௌனிங்.

அவரை மணம் புரிய ஆசைப்பட்ட ஒரு பெண் அவரிடம் கேட்க, அவரோ, “My heart is buried in Florence” என்று பதில் கூறினார்.

ப்ரௌனிங் 1889, டிசம்பர் 12ஆம் தேதி மறைந்தார். அவரை இங்கிலாந்திலேயே வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நல்லடக்கம் செய்தனர்.

இறுதியாக அடக்கம் செய்வதற்கு முன்னர் அவர் உடலைப் பார்த்தவர்கள் அவர் கழுத்தில் எப்போதும் தொங்கும் ஒரு தங்க லாக்கெட்டைப் பார்த்தனர். லாக்கெட்டைத் திறந்து பார்த்த போது அதில் அவரது காதல் தேவதையான பாவின் தலைமுடி சிறிது இருந்தது.

4

ப்ரௌனிங்- பா ஆகிய இருவரின் காதல் பற்றிய பல புத்தகங்கள் உள்ளன.

How Do I Love Thee?  பாடலுக்கான வரிக்கு வரி வியாக்யானங்களும் பல உள்ளன!

படித்துப் பாருங்கள்!

***