பாரதி போற்றி ஆயிரம் – 11 (Post No.4524)

Date: 21  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-33 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4524

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 11

  பாடல்கள் 75 முதல் 82

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

        நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 75 முதல் 82

 

பாரதி ஓர் ஆசான்

 

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்

பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையே நீக்க
உற்றடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்

வுலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய்’ என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட

தெய்வகவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

அஞ்சியஞ்சி உடல்வளர்க்கும் ஆசை யாலே

அடிமைமனம் கொண்டிருந்த அச்சம் போக்கி
வெஞ்சமரில் வேல்பகைவர் வீசி னாலும்

விழித்தகண்ணை இமைக்காத வீரன் போல
நெஞ்சுறுதி உண்டாக்கும் கவிகள் பாடி

நேர்மையுடன் சுதந்தரத்தை நினைக்கச் செய்து
விஞ்சைமிகும் மனப்புரட்சி விரவச் செய்த

வித்தகனாம் பாரதிஓர் ஆசான் மெய்தான்.

சாதிமதச் சழக்குகளைப் பற்றிக் கொண்டு

சமுதாயம் சீரழியும் தன்மை போக்க
நீதிநெறி நிறைந்தகுண ஒழுக்க வாழ்க்கை

நீங்காது நிற்பவரே மேலோர் என்னும்
போதனையே மூச்சாகப் பொழுதும் பாடிப்

புதுயுகத்தை நம்முளத்தில் புகுத்தி வைத்த
சாதனையால் எப்போதும் எல்லா ருக்கும்

சத்தியமாய்ப் பாரதிஓர் ஆசான் தானே!

கண்ணிரண்டில் ஒருகண்ணைக் கரித்தாற் போலும்

கைகால்கள் இரண்டிலொன்றைக் கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்

பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்

பாவையரைச் சரிநிகராய்ப் பாராட் டும்நல்
எண்ணமதை நம்மனத்தில் இருக்கச் செய்த

ஏற்றத்தால் பாரதிஓர் ஆசான் என்போம்.

‘மனைவிமக்கள் சுற்றத்தார் மற்றும் இந்த

மாநிலத்தில் காணுகின்ற எல்லாம் மாயை’
எனவுரைக்கும் கொள்கைகளின் இழிவைக் காட்டி

இல்லறத்தில் தெய்வஒளி இருக்கச் செய்தால்
நினைவிலுறும் முத்தியின்பம் தானே வந்து

நிச்சய்மாய் நம்மிடத்தில் நிற்கும் என்ற
புனிதமுள்ள தமிழறிவைப் புதுக்கிச் சொன்ன

புலவன்அந்த பாரதிநாம் போற்றும் ஆசான்.

உழைப்பின்றி உண்டுடுத்துச் சுகித்து வாழும்

ஊதாரி வீண்வாழ்க்கை மிகுந்த தாலே
பிழைப்பின்றி வாடுகின்ற ஏழை மக்கள்

பெருகிவிட்டார் நாட்டிலெனும் உண்மை பேசித்
தழைப்பின்றிப் பலதொழிலும் தடைப்பட் டேங்கத்

தானியங்கள் தருகின்ற உழவும் கெட்டுச்

செழிப்பின்றி வாழ்கின்றோம் இதனை மாற்றும்
செய்கைசொன்ன பாரதிஓர் சிறந்த ஆசான்.

கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்

கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்

காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து

நித்தநித்தம் சன்மார்க்க நினைப்பைக் காட்டும்
தலையாய தமிழறிவை நமக்குத் தந்த

தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்

தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்

இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி

அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்

ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

True Story of Padmavati (Rani Padmini) Post No.4523

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-54

 

 

Post No. 4523

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

After the controversy about the film Padmavati on Chittoor Rani Padmini, lot of people are reading Indian history again. Here is what they taught us when we were in school; this is the true story; Story as depicted in film Padmavati is wrong.

 

I give below the excerpts from a text book (published in 1956):-

 

 

 

 

 

 

 

 

 

xxxxxxxxxxxxxx

ஒரு நொடி வாழ்ந்தாலும் போதும்- சாணக்கியன் அறிவுரை (Post No.4522)

Markandeya Painting by Raja Ravivarma from Wikipedia

 

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-21

 

 

Post No. 4522

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முஹூர்த்தமபி ஜீவேத்வை நரஹ சுக்லேன கர்மணா

ந கல்பமபி கஷ்டேன லோகத்வயவிரோதினா

சாணக்ய நீதி 13-1

பொருள்

தகாத செயல்களை செய்துகொண்டு யுகக் கணக்கில் வாழ்வதைவிட, குற்றமற்ற தூய செயல்களைச் செய்துகொண்டு ஒரு நொடி வாழ்ந்தாலும் சிறந்ததே. தீய செயல்கள் இக, பர லோக வாழ்வுக்குத் தீங்கு இழைக்கும்.

மார்க்கண்டேயன் 16 வயது வாழ்ந்தும் அழியாத இடம் பெற்றான்.

ஆதி சங்கரர் 32 வயதும், சம்பந்தர் 16 வயதும் தான் வாழ்ந்தனர். பாரதியார் 39 வயதுதான் வாழ்ந்தனர். சுவாமி விவேகாநந்தரும் அவ்வாறே.

 

இவர்கள் அனைவரும் வரலாற்றில், இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டனர். ஆகையால் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைவிட. இருக்கும் காலத்தில் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த லட்சியம்.

 

மார்கண்டேய புராணம் காட்டிய பாதை

புகழ் சேர்க்கும் 16 வயதுப் புதல்வன் (( மார்க்கண்டேயன் )) வேண்டுமா? பூமிக்குப் பாரமாக வாழும் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக 100 ஆண்டுகள் வாழும் புதல்வன் வேண்டுமா? என்று மிருகண்டு ரிஷியை இறைவன் கேட்ட போது புகழ் சேர்க்கும்- தோன்றிற் புகழொடு தோன்றும்  — 16 வயதுப் புதல்வன் போதும் என்றனர் ம்ருகண்டுவும் அவரது மனைவி மருத்வதியும். நல்ல அருமையான கதை. இந்துக்களின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கதை. வள்ளுவனை புகழ் என்னும் அதிகாரத்தின் கீழ் பத்து குறட்பாக்களைப்  பாடவைத்த கதை!

 

 

ஏதேனும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடித்த பாரதி பாடுகிறான் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்று. அவனுடைய ஆசை இந்த பூமிக்குப் பாரமாக இருக்கக்கூடது என்பதே.

உலகமெங்கும் தமிழ் மொழி ஓசையையக் கேட்கச் செய்ய வேண்டும்; வேத முரசு எங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழில் பழ மறையைப் பாட வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; இல்லையென்ற கொடுமை இல்லையாக வேண்டும்; கோடி கவிதைகள் இயற்றல் வேண்டும்; விட்டு விடுதலையாகி (முக்தி)  சிட்டுக்குருவி போல பறக்க வேண்டும்- என்று பாடுபட்டான்; அழியாப் புகழும் பெற்றான்.

 

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

பாரதி பாடல்

 

 

வள்ளுவனும் சொன்னான்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)

 

பொருள்

புகழ்பட வாழாத உடம்பைப் பெற்ற நிலத்தில் விளைச்சல்கூடக் குறைந்து விடும்.

 

வசையொ  ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர் (240)

 

பொருள்

உலகத்தில் தம் மீது பழியில்லாமல் வாழ்கின்றவரே வாழ்கின்றவர் ஆவார்கள். புகழ் தேடாமல் வாழ்வோர், இறந்தர்கள் போலத்தான்.

 

‘They alone live for who live others; the rest are more dead than alive’ -Swami Vivekananda

பிறருக்காக வாழ்பவனே — அதாவது சுயநலம் இல்லாமல் — வாழ்பவனே வாழ்பவன்; மற்ற எல்லோரும் செத்தாருள் வைக்கப்படும் – என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

 

வள்ளுவன், பாரதி, விவேகாநந்தர், 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாணக்கியன்– எல்லோரும் சொன்னது ஒன்றே:

லட்சியத்துடன் வாழ்; புகழுடன் வாழ்.

–SUBHAM-

 

 

QUIZ ON HINDU SEERS- RISHIS! (Post No.4521)

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-33 am

 

 

Post No. 4521

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

CAN YOU ANSWER THE FOLLOWING QUESTIONS ON HINDU RISHIS AND TEST YOUR KNOWLEDGE IN THE RISHI LORE?

1.WHO WAS THE RISHI WHO GOT THE TITLE BRAHMA RISHI FROM VASISTHA?

2.WHO WAS THE SHORTEST RISHI?

3.WHO WAS NOTORIOUS FOR HIS ANGER AMONG RISHSIS?

4.WHO DID INTER GALACTIC TRAVEL BETWEEN THREE WORLDS RECITING NARAYANA’S NAME?

  1. WHO ARE THE SAPTA RISHIS?

6.WHO HAD AN EYE IN HIS FOOT?

  1. WHICH RISHI HAD A HORN (LONG BULGE) ON HIS HEAD?

8.WHO OWNED THE WISH FULFILLING COW-KAMADHENU?

  1. WHO WAS THE RISHI WHO MARRIED LOPAMUDRA OF RIG VEDIC FAME?
  2. A RISHI LIVED THREE LIVES AND HE HEARD LEARNT SO FAR WAS ONLY A HAND FULL OF SAND COMPARED TO THE MOUNTAIN OF VEDAS. WHO WAS HE?

 

11.RIG VEDA HAS FAMILY MANDALAS/CHAPTERS IN 2,3,4,5,6,7 MANDALAS. WHO ARE THE RISHIS ?

12.WHO WAS ANASUYA’S HUSBAND?

  1. WHO WAS THE ONE ( RISHI) WHO MARRIED AHALYA?
  2. WHO ‘DRANK’ (CROSSED SEA TO ESABLISH HINDU KINGDOMS IN SOUTH EAST ASIA) THE SEA”

15.WHOSE NAME WAS GIVEN TO THE CITY OF AJMEER IN RAJASTHAN?

16.THE SUBMARINE FIRE IN THE SEA KNOWN AS BADAVA OR VADA MUKA AGNI WAS CAUSED BY A RISHI. WHAT IS HIS NAME?

17.CAN YOU NAME THE FOUR RISHIS WHO VEDA VYASA ENTRUSTED WITH THE FOUR VEDEAS?

18.WHICH RISHI HAS THE THREE FORMS OF BRAHMA, VISHNU AND SHIVA?

19.WHO IS THE FATHER OF MEDICINE ACCORDING TO HINDU SCRIPTURES?

  1. CAN YOU NAME THE RISHI/SEER WHO CAME OUT OF AN ANTHILL AND GOT THE NAME ‘ANTHILL’?

 

ANSWERS:

1.Viswamitra, 2.Agastya, 3.Durvasa, 4.Narada, 5.Sapta Rishis- Atri, Bruhu, Kutsa, Vasistha, Gautama, Kashyapa, Angirasa, 6.Bruhu 7.Rishya Srnga, 8.Vasistha, 9.Agastya, 10.Bharadwaja, 11.Family Mandalas of Rig Veda- Grtsamada/Bruhu 2,Viswamitra 3, Vamadeva Gautama 4, Atri 5, Bharadwaja 6, Vasistha 7th mandala, 12.Atri, 13.Gautama, 14.Agastya, 15.Ajameeda, father of Kanva Maharishi, 16.Aurva, 17.Four Vedas were entrusted to Pailar-Rig Veda, Vaisampayana- Yajur Veda, Jaimini- Sama Veda and Sumantu- Atharvana Veda, 18.Dattatreya, 19. Danvantri, 20.Valmiki.

 

–subham–

 

பாரதி போற்றி ஆயிரம் – 10 (Post No.4520)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 8-19 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4520

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 10

  பாடல்கள் 62 முதல் 74

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 62 முதல் 74

பாரதி எனும் பெயர் !

பாரதி எனும்பெயரைச் சொல்லு–கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு.
நேரினி உனக்குநிகர் இல்லை–உடன்

நீங்கும் அடிமைமனத் தொல்லை.

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு–பாடிச்

சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.
ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும்–அதுவே

உன்பலத்தை நீஉணரக் காட்டும்.

துள்ளிக் குதித்துவரும் சந்தம்–செயல்

தூண்டித் துணைபுரியச் சொந்தம்.
அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன்–நம்

அருமைப் பாரதியை மறவோம்.

அன்பு நிறைந்ததமிழ் மொழியில்–செயல்

ஆண்மை குறைந்ததெனும் வழியின்
தென்பு மறைந்துழன்ற போதில்–நல்ல

தீரம் கொடுக்கவந்த தூதன்.

அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில்–பல

ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
நமது பாரதியின் பாட்டே–தமிழ்

நலத்தைக் காக்கும்ஒரு கோட்டை.

இனிமை யான தமிழ்ப் பா¨–அதில்

‘இல்லை வேகம்’ எனும் ஓசை.
முணகிப் பேசும்ஒரு வகையை–வென்று

முழங்கும் பாரதியின் இசையே.

முன்னோர் பெருமைமட்டும் பேசிப்–புது

முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
சின்னா பின்னமுற்று வாடும்–நாம்

சீர்திருந்தக்கவி பாடும்.

அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம்–வெறும்

அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
கொடுமை கண்டுமனம் கொதித்தான்–கவி

கொட்டி வீரியத்தை விதைத்தான்.

ஊனைப் பெரியதெனக் கொண்டோம்–ஆன்ம

உணர்வை விற்றுருசி கண்டோம்.
மானம் போகும்என்ற நிலமை–தனை

மாற்றும் பாரதியின் புலமை.

பண்டைச் சிறப்புகளைப் பாடிக்–கிழப்

பாட்டிகள் கூட்டமெனக் கூடி
அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில்–நவ

ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.

தீரன் அறிவுரையை இகழ்ந்து–வெறும்
திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
பேரைக் கெடுத்துவிட மாட்டோம்–எனும்
பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.

கவிஞன் வாக்குறுதி பலிக்கும்–நம்

கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம்–வெகு

புதுமை யாகஅர சாள்வோம்.

வாழ்க பாரதியின் அருமை–அதில்

வளர்க தாய்மொழியின் பெருமை.
வாழ்க வையகத்தில் யாரும்–பிணி

வறுமை அச்சமற்று வாழ்க.

***

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

 

3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து! (Post No.4519)

Date: 20  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-54 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4519

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

15-12-17 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 43வது) கட்டுரை

மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போஸ்டன் நகரில் மிகவும் பிரபலமான நைட் கிளப்பாகத் திகழ்ந்தது கோகனட் க்ரோவ் என்னும் க்ளப்.

 

இதில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோரமான தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் காரணம் அதிகாரபூர்வமாக இன்று வரை யாருக்கும் தெரியாது. ஆனால் பல ஊகங்கள் இது பற்றி உண்டு. தப்பான வயரிங் தான் இதற்குக் காரணம் என்றும் ஒரு பல்பை மாற்றும் போது ஏற்பட்ட மின்கசிவினால் இந்த மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது என்றும் சிலர் கூறுவர்.

 

தீ விபத்து ஏற்பட்ட நாளில் அதிலிருந்த ஹாலில் அதில் இருக்கக் கூடிய நபர்களுக்கு மேல் மிகவும் அதிகமாகக் கூட்டம் இருந்தது. ஹாலின் பக்கவாட்டில் கதவுகள் இருந்த போதும் அவை வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. ஆகவே உள்ளிருப்போர் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

 

இன்னொரு காரணம் தீ பற்றிய் எச்சரிக்கை மணி ஒலித்தவுடன் அவசர வழி வழியாக அனைவரும் தப்ப முயன்றனர்.

 

ஆனால் கிளப்பில் இருந்த ஒரு முட்டாள் அவசர வழி கதவுகளைத் திறக்க முடியாதபடி அடைத்து விட்டான். அதன் காரணம் தீ என்ற சாக்கில் கிளப்பிற்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் எல்லோரும் ஓடி விட்டால் என்ன செய்வது என்று அவன் முட்டாள்தனமாக எண்ணியதே காரணம்.

ஹாலில் இருந்தவர்களில் 492 பேர்கள் தீயினால் கருகி மாண்டனர். அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து இது தான்.

 

(28-11-2017 அன்று நடந்த) இதன் 75வது நினைவு தினத்தை ஒட்டி  இந்த ஹாலில் தீ விபத்தில் அகப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாகத் தப்பி மீண்ட 91 வயதான மார்ஷல் கோல் என்பவர் இதைப் பற்றி நினைவு கூர்ந்து பேசுகையில், “கோரமான அந்த விபத்தில் பிழைத்து மீண்டதிலிருந்து எங்கு போனாலும் முதலில் வெளியேறும் வழிகள் எங்கு உள்ளன கதவுகள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்வதைத் தவறாமல் செய்வது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது” என்றார்.

இந்தத் தீ விபத்தின் கோரமான இழப்பு ஒரு புறம் இருக்க, இதனால் மூன்று பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தது.

600 பேர்கள் இருக்கக் கூடிய ஹாலில் ஆயிரம் பேருக்கு மேல் அன்று குழுமி இருந்தவர்களில் பெரும்பாலோர் தம்பதிகளாக ஜோடி ஜோடியாக வந்திருந்தனர்.

திடீரென்று தீப்பொறிகள் தென்பட்டன. அது என்னவென்று உணருவதற்கு முன்னர் ஹாலே தீ ஜுவாலைகளால் பற்றி எரிய ஆரம்பித்தது.

 

492 பேர் இறந்ததோடு 150 பேர் தீக்காயத்தினால் பீடிக்கப்பட்டனர். போஸ்டன் சிடி ஹாஸ்பிடலில் தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 300 பேர் அட்மிட் செய்யப்பட்டனர். மசாசுசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு இன்னொரு நூறு பேர் எடுத்துச் செல்லப்பட்டனர்.

 

அங்கிருந்த பிளாஸ்டிக் சர்ஜன் ப்ராட்ஃபோர்ட் கானான் (Bradford Cannon) என்பவர் தீக்காயங்களுக்கு ஒரு நவீன சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தார். சாதாரணமாக தீக்காயங்களுக்கு டைகள் மற்றும் டேனிக் ஆசிட் ஆகியவையே உடனடி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். அதற்கு பதில் அவர் காஸ்  (gauze)-  உடன்  பெட்ரோலியம் ஜெல்லியை போரிக் ஆசிட் மீது தடவி அதைப் பயன்படுத்தினார். அவர்கள் தீயினால் வெந்திருந்த சதைப் பகுதிகளை அகற்றி தோலை ஒட்டும் புது முறையைக் கையாண்டார். கானான் இந்த சிகிச்சை முறையை பிலடெல்பியாவிலும் பின்னர் வேலி ஃபோர்ஜ் ஜெனரல் ஹாஸ்பிடலில் கையாண்டார்.

 

அது மட்டுமின்றி அந்த 500 பேர்களும் தவித்த தவிப்பு உளவியல் ரீதியாக அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தது. அந்த வழிமுறைகள் உலகெங்கும் இன்று தீ விபத்துக் காயம் ஏற்பட்டவரிடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இந்த நவீன சிகிச்சை முறையால் பிற்காலத்தில் நலம் அடைந்தனர்.

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது கண்டுபிடிப்பு உளவியல் ரீதியில் அமைந்தது.

இந்தப் பெரிய தீ விபத்தில் உயிர் பிழைத்தோரையும் , போரில் தீக்காயம் பட்ட இராணுவத்தினரையும் உளவியலாளர் எரிச் லிண்டிமான் (Erich Lindemann) முறையாக பேட்டி எடுத்து விவரங்களைச் சேகரித்தார். இப்படி ஒரு துயரமான சம்பவத்தில் அகப்பட்டோரின் துக்கம் எப்படி இருக்கும், அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஆய்வு செய்தார்.

அப்போது தான் மணமுடித்திருந்த ஒரு இளம் வயதுப் பெண் தன் கணவனை அந்தத் தீவிபத்தில் இழந்திருந்தார். அந்தக் கணவன் அவளுடன் ஒரு சண்டையைப் போட்டு விட்டு அந்த கிளப்புக்குச் சென்றிருந்தான். இன்னொருவரோ தன் இளம் வயது மனைவியை அந்த விபத்தில் இழந்திருந்தார். அவளைக் காப்பாற்றுமுன்னர் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இப்படிப் பல துயரகரமான நிகழ்வுகளையும் அதையொட்டிய மனித உணர்வுகளையும் தொகுத்த லிண்டிமான் உளவியல் துறையில் துக்கம் அடைந்தோருக்கான உளவியல் சிகிச்சை முறையைக் கண்டார். அதற்கு இந்த தீ விபத்து தான் வழி வகுத்தது.

 

மூன்றாவது கண்டுபிடிப்பாக ஒரு  விபத்தில் காயம்பட்டோர்  அது நடந்து முடிந்தவுடன் எப்படி தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பதை தீவிபத்தில் உயிர்பிழைத்தவர்களைச் சந்தித்து அலெக்ஸாண்ரா ஆட்லர் (Alexandra Adler) என்ற பெண்மணி ஒரு ஆய்வு நடத்தினார். இப்படிப்பட்ட ஒரு ஆய்வை முதலில் செய்த உளவியலாளர் இவர் தான். கோகனட் கிளப் தீ விபத்தை வைத்து இவர் செய்த இவரது உளவியல் ஆய்வு பெரிய மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆய்வுப் பேப்பர்களைக் கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டில் டாக்டர் ஆட்லர் மறைந்தார். அவர் மறைவை ஒட்டிய இரங்கல் செய்தியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உல்ப்கேங் சாக்ஸன் என்ற நிபுணர், “490 பேருக்கு மேல் கொல்லப்பட்ட விபத்தில் அங்கிருந்து மீண்ட பலருக்கு மூளை நிரந்தரமாக சேதம் அடைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்த ஆட்லர் மன அழுத்தமும், கவலையும் எப்படி ஒரு விபத்தைத் தொடர்ந்து பலரையும் நிரந்தரமாக பாதிக்கிறது, அதை எப்படிப் போக்குவது என்பதையும் ஆராய்ந்தார். அதன் பலனாகவே இரண்டாம் உலகப் போரில் காயம்பட்டிருந்த பல வீரர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

 

 

இந்த மாபெரும் தீ விபத்து உலகினருக்குத் தரும் செய்தி என்ன?

ஜனசந்தடி அல்லது கூட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்குப் போகும் போது அங்கு எங்கெல்லாம் வெளியேறும் வழிகள் உள்ளன, எப்படி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது ஆகியவற்றைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில், இது பெண்களையும், குழந்தைகளையும், முதியோரையும் தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து செல்வோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்பதைச் சொல்ல தேவையே இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உடை விஷயத்தில் எப்போதுமே அக்கறை இல்லை.

 

அவர் மனைவிக்கு இதில் பெரிதும் வருத்தம்.

நன்றாக உடை உடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி அவர் சொல்வார்.

 

“எதற்காக? என்னை எல்லோருக்கும் அங்கே நன்றாகத் தெரியும்” என்று சொல்லி மனைவியின் வாயை மூடி விடுவார் ஐன்ஸ்டீன்.

 

ஒரு சமயம் பெரிய மாநாட்டிற்கு மனைவியுடன் அவர் செல்ல வேண்டியிருந்தது.

 

வழக்கம் போல அவர் மனைவி, “நன்றாக உடை உடுத்திக் கொண்டு போக வேண்டும்” என்று ஆரம்பித்தார்.

வழக்கம் போல ஐன்ஸ்டீனும்,” எதற்காக? அங்கே எல்லோருக்கும் என்னைத் தெரியும்” என்றார்.

உடனே அவர் மனைவி, “ என்னை அங்கே யாருக்கும் தெரியாதே!” என்று பதில் சொன்னார்!

 

ஐன்ஸ்டீன் சிரித்தார். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டார்!

***

 

 

ரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில் (Post No.4518)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-49

 

 

Post No. 4518

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உங்களுக்கு ரிஷிகள் பற்றித் தெரியுமா? இதோ இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-

 

1.வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய ரிஷி யார்?

 

2.குள்ளமான ரிஷி யார்?

 

3.கோபத்துக்குப் பெயர்பெற்ற ரிஷி யார்?

 

4.நாராயணா என்ற கோஷத்துடன் த்ரிலோக சஞ்சாரம் செய்பவர் யார்?

 

5.சப்த ரிஷிகள் யார், யார்?

 

6.காலில் கண்ணுடைய ரிஷி யார்?

 

7.கொம்புள்ள ரிஷி யார்?

 

 

8.காமதேனுவின் சொந்தக்கார ரிஷி யார்?

 

 

9.லோபாமுத்ராவின் கணவர் (ரிஷி) யார்?

 

10.கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு- என்ற மொழி எந்த ரிஷியினால் ஏற்பட்டது?

 

11.ரிக் வேதத்தின் 2,3,4,5,6,7 மண்டலங்களுக்குரிய ரிஷிகள் யார்?

 

12.அனசூயையின் கணவர் (ரிஷி) யார்?

 

13.அஹல்யாவின் கணவர் (ரிஷி) யார்?

 

  1. கடலைக் குடித்த ரிஷி யார்?

15.ஆஜ்மீர் என்ற நகரம் எந்த ரிஷியின் பெயரில் உள்ளது?

 

16.கடலில் தோன்றும் வடவைத் தீக்கு காரணமான ரிஷி யார்?

 

17.வியாசர் 4 வேதங்களையும் எந்த 4 ரிஷிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்?

18.த்ரிமூர்த்திகளின் உருவம் உடைய ரிஷி யார்?

19.மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரிஷி யார்?

20.புற்றிலிருந்து தோன்றிய ரிஷி யார்?

 

xxxx

 

விடை:

1.விஸ்வாமித்ரர், 2.அகஸ்தியர், 3.துர்வாசர், 4.நாரதர் 5. சப்த ரிஷிகள்:அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸர் 6.ப்ருகு, 7.ரிஷ்ய ச்ருங்கர், 8.வசிஷ்டர், 9.அகஸ்தியர் 10.பரத்வாஜர் (மூன்று ஜன்மங்கள் வாழ்ந்து 3 வேதங்களைக் கற்றர். ஆயினும் அது கைமண் அளவே), 11. ரிக் வேத மண்டல ரிஷிகள்–இரண்டாம் மண்டலம்- க்ருத்சமடர்/ப்ருகு, மூன்றாம் மண்டலம்-  – விஸ்வாமித்ரர் , நான்காம் மண்டலம்- வாமதேவ கௌதம-  , ஐந்தாம் மண்டலம்-  -அத்ரி, ஆ றாம் மண்டலம்- – பரத்வாஜர் ஏழாம் மண்டலம்-  – வசிஷ்டர்: 12. அத்ரி மஹரிஷி. 13.அஹல்யாவின் கணவர் கௌதம ரிஷி 14.அகஸ்தியர் 15.அஜாமீடர் (கண்வ மஹரிஷியின் தந்தை), 16. ஔர்வ மஹரிஷி 17.நான்கு வேதங்களை வியாசரிடம் கற்ற ரிஷிகள்- வைஸம்பாயனர்(யஜூர்), ஜைமினி (சாமவேதம்), பைலர் (ரிக்), சுமந்து (அதர்வண), 18. தத்தாத்ரேய மகரிஷி 19.தன்வந்திரி மஹரிஷி, 20. வால்மீகி ரிஷி

 

–subham–

 

நிகழ்காலத்தில் வாழுங்கள்: சாணக்கியன் புத்திமதி (Post No.4517)

Written by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  20-05

 

 

Post No. 4517

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதியும் சாணக்கியனும் ஒரே கருத்துக்களை சொல்லுவதைப் படிக்கும் போது இனிக்கிறது. இந்திய சிந்தனை 2300 ஆண்டுகளுக்கு முன்ன்ரும் ஒன்றே; பாரதி காலத்திலும் ஒன்றே.

 

சென்றது மீளாது

 

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா — பாரதி பாடல்

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:-

கடந்தகாலத்தை எண்ணி வருந்தாதே;

எதிர்காலத்தை எண்ணி கவலைப் படாதே

புத்திசாலிகள் நிகழ்காலத்துக்கு ஏற்ப நடப்பார்கள்

 

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத்

வர்த்தமானேன காலேன ப்ரவர்தந்தே விசக்ஷணாஹா

–சாணக்ய நீதி 13-2

சீன தத்துவ ஞானியான லாவோட்ஸி கிட்டத்தட்ட புத்தர், மஹாவீரர் ஆகிய ஞானிகளின் சம காலத்திய ஞானி. அவர் மிகவும் அழகாகச் சொல்கிறார்:

நீ மனத்தொய்வுடன் காணப்பட்டால் நீ கடந்த காலத்தில் வாழ்கிறாய்;

 

நீ கவலையுடன் காணப்பட்டால் நீ எதிர்காலத்தில் வாழ்கிறாய் என்று அர்த்தம்;

 

நீ அமைதியுடன் காணப்பட்டால் நீ நிகழ் காலத்தில் வாழ்கிறாய் என்று தெரிகிறது.

ஆக அறிஞர்கள் சொல்லுவது இதுதான்:

 

கடந்த காலத்தில் நிகழ்ந்தனவற்றை எண்ணி எண்ணி வருந்தாதே; மனக் கலக்கம் அடையாதே.

எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று கவலை தோய்ந்தமுகத்துடன் இராதே.

கிடைத்த பொழுதை, கண் முன்னால் நிற்கும் நிகழ் காலத்தை, எப்படி நன்கு பயன்படுத்துவது, எப்படி இன்பமாகப் பயன்படுத்த முடியும் என்று சிந்திக்கவும்; அப்படி இருந்தால் மகிழ்ச்சி பொங்கும்; கவலை மறையும்; மனத் தொய்வு நீங்கும்.

 

பாரதி, சாணக்கியன், சீன தத்துவ ஞானி லாவோட்ஸீ ஆகிய மூவரும் சொன்ன பிறகும் நமக்கு என்ன தயக்கம்?

 

நிகழ் காலத்தில் வாழ்வோம்!

 

–சுபம்-

 

Part 2 of Tirukkural and Gita compared by Rev G U Pope and VRR Dikshitar (Post No.4516)

 

Tirukkural and Bhagavad Gita compared by Rev G U Pope and VRR Dikshitar -Part 2

 

Compiled by London Swaminathan 

 

Date: 19 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-53 am

 

 

Post No. 4516

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Following is from the book STUDIES IN TAMIL LITERATURE, V R RAMACHANDRA DIKSHITAR, LECTURER IN INDIAN HISTORY, UNIVERSITY OF MADRAS, YEAR 1936)

 

KURAL 53

There is no lack within the house, where wife in worth excels;

There is no luck within the house, where wife dishonoured dwells

 

Manu gives expression to similar sentiments:

Where women are honoured, there the God dwells; in the houses where they are not honoured, everything done become fruitless- Manu 3-56 also 9-26

xxx

Kural 57

Of what avail is watch and ward?

Honour is a woman’s safest guard.

Similar ideas are found in Manava Dharma Sastra.

Those women who are bound by restraints by her won devoted kinsmen are not truly protected; those who guard themselves are well protected- Mnau 9-12

xxxx

Kural 58

If wife be wholly true to him who gained her as his bride,

Great glory gains she in the world where gods in bliss abide.

Manu furnishes a parallel:

She who will not abuse her rights either by mind, speech or body, attains the world of Pativratas (holy chaste women) and is styled Saadhvi or the good by the righteous- Manu5-165

xxx

Kural 82

Though food of immortality should crown the board,

Feasting alone, the guests without unfed, is thing abhorred.

Similar ides are found in the Dharmasastra:

A householder is to partake of the food remaining after he has fed the gods, sages, guests, manes, and household deities. He who prepares food for the sake of self, simply eats sin—Manu 3-117, also 118, 106

(Also in Bhagavad Gita 3-13)

xxx

Kural 91

Pleasant words are words with all pervading love that burn;

words from his guileless mouth who can the very truth discerns.

The same ideas occur in Manu Smrti:

Speak the Truth; speak pleasant things.

Do not speak unpleasant and false words; speak pleasant and truthful words- Manu 4-138

xxx

Kural 121

Self Control places a man among gods; the want of it sends him to the hideous darkness of hell.

Manu says that the indulgence of sense organs leads to evil without doubt; having controlled them, one attains salvation- Manu 2-93

xxx

Kural 134

Though he forget, the Brahmin may regain his Vedic lore;

Failing in ‘decorum due’, birthright is gone for evermore.

In the Laws of Manu, it is said that a Brahmin who is devoid of decorum will not attain the fruits of the study of the Vedas. On the other hand, one who observes decorum will reap the full reward—Manu 1-109

 

xxx

Kural 144

How great so’ver they be, what gain have they of life,

Who not a whit reflecting, seek a neighbour’s wife?

Manu’s remarks are appropriate:

There is no other thing which results in diminution of life than the fact of a person’s criminal intimacy with the neighbour’s wife- Manu 4-134

xxx

 

V R R Dikshitar gives 85 more comparisons. I will list all of them.

——to be continued

–SUBHAM–

 

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின்…………….(Post No.4515)

Date: 19  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-37 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4515

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அனுபவத்தின் மதிப்பு!

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும்!

 

.நாகராஜன்

 

1

அனுபவத்தைப் போன்ற சிறந்த ஆசான் கிடையாது என்பது முதுமொழி.

நிறையப் படித்தவனை விட அனுபவத்தால் தன் அறிவைப் பகிர்ந்து கொள்பவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி மதிப்பு உண்டு.

காஞ்சி பெரியவாள் கண்ணதாசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியதாக கவிஞரிடம் சொன்ன போது ஓடோடி வந்து அவரைத் தரிசித்தார்.

அவரிடம் பெரியவாள் பல விஷயங்களைப் பேசினார்.அப்போது அவர் கூறிய ஒரு முக்கிய விஷயம்: “என்னைப் போன்றவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்வதை விட உங்களைப் போன்றவர்கள் அனுபவத்துடன் அதைக் குழைத்துச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கப்பட்டு நலம் பயக்கும்” என்றார் பெரியவாள்.

கண்ணதாசனின் இந்தச் சந்திப்பு பற்றித் தனியே படித்தால் பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணதாசன் தன் அனுபவத்தை அப்படியே உலக மக்களுடன் ‘சத்திய சோதனை’ வழியில் பகிர்ந்து கொண்டார்.

திராவிடப் பிசாசுகளின் கூட்டத்தில் தவறி விழுந்தவர் – பன்றிகளின் கூட்டத்தில் தவறி விழுந்த புள்ளி மான் போல விழுந்தவர் – பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மீண்டார்.

அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கண்டார்.

அவர் பிறந்த தேதி : 24-6-1927.

மறைந்த  தேதி : 17-10-1981

ஆக, அவர் வாழ்ந்த காலம் ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே!

இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்!

திராவிடப் பிசாசுகளின் ‘சங்காத்தம்’ அவர் ஆயுளின் மீது ‘கை வைத்து விட்டது’.

1976ஆம் ஆண்டு ஜூன் மாத ‘கண்ணதாசன்’ இலக்கிய மாத இதழில் அவர் தனது ஐம்பதாம் ஆண்டை இப்படி வரவேற்கிறார்:

50

இறந்த நாள் அனைத்தும் எண்ணி

இனிவரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம்

பிழை இலை: ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத்

தேர்ந்து கொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனிவ ராது

பாக்கி நாள் நன்னா ளாக!

 

50

ஐம்புலன் ரசித்த வாழ்வு

    அறம்மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு

     ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது

     அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண

      பரமனே அருள்வா னாக!

50

ஆண்டுகள் ஐம்ப தாகும்

     ஆரம்பம் திருநா ளாகும்

ஆண்டுகள் அறுபதா னால்

      அந்தியில் நன்னா ளாகும்

ஈண்டுயான் ஐம்ப தாண்டை

      இனிதுற வரவேற் கின்றேன்

நீண்டநாள் வாழ ஆசை

   நிமலன் என் நினைக்கின் றானோ!

 

நீண்ட நாள் வாழ ஆசைப் பட்டார் கவிஞர்! ஆனால் நிமலனோ அவருக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் மட்டுமே கொடுத்தான்!

பின்னாளில் அவர் மிகவும் வருந்திப் பாடினார் இப்படி:

சேராத கூட்டத்தில் என்னை மறந்து நான்

     சேர்ந்தேன் அந்த நாளே

செறிவான புத்தியை தவறான பாதையில்

      செலுத்தினேன் அந்த நாளே

பாராத பூமியைப் பார்க்கிறேன் இப்போது

     பார்த்தனைக் காத்த நாதா

பதிநினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம்

      பார்த்தருள் கிருஷ்ண காந்தா!

கண்ணனை நினைந்து மனமுருகிப் பாடிய கவிஞரின் பாடலை அழியாமல் காக்கிறான் கிருஷ்ணகாந்தன். அவரது புகழுடல் நிற்கப் பொய்யுடல் போய் விட்டது கால வெள்ளத்தில்!

என் வாழ்வைப் பார்க்காதே; என் பாடலைப் பார்த்து அதன் படி நட என்பது அவரே கூறிய அன்புரை.

ஆக, வனவாசத்தில் அவர் பார்த்த பிசாசுகளை நாம் படித்துப் புரிந்து கொள்ளலாம். அவர் மனவாசத்தில் கண்ட சத்தியத்தில் அவர் வாழ்வு புனரமைக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.

அனுபவம் பேசியதால், அருந்தமிழில் அதைக் குழைத்துக் கொடுத்ததால் அதை நாம் படிக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

ஆக கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் அனுபவத்தின் அடிப்படையிலான அற்புத உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்; இனி,  காலத்தில் சற்றுப் பின்னோக்கிப் போனால் நம் முன் வருவது இன்னொரு அனுபவஸ்தர். அருணகிரிநாதர்!

2

வாழ்வின் முற்பகுதியில் பெண்களின் மையலில் மனதையும் உடலையும் இழந்தவர் அருணகிரிநாதர். ஆனால் அனுபவம் தந்த பாடத்தால் மனம் வருந்தி, திருந்தி வேலனின் அருளை வேண்டினார்.

சும்மா இரு சொல் அற என்றவுடன்அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே என மயங்கிப் பின் தெளிவு பெற்றார்.

முருகனின் புகழைப் புதிய தமிழ் நடையில், புத்தமுதமாகக் கொட்டினார்.

ஆனால் தன் அனுபவங்களை ஆங்காங்கே கொட்டத் தவறவில்லை.

வேசியரின் விளையாட்டுக்களைப் பிட்டுப் பிட்டு வைத்து விட்டார்.

குலமகளிரின் புகழையும் கொண்டாடிப் பாடினார்.

நமக்குக் கிடைத்திருக்கும் ஏறத்தாழ 1311 பாடல்களில் எங்கு தொட்டாலும் அவர் தன்னிரக்கப்பட்டு புலம்பும் புலம்பலைப் பார்க்கிறோம்:

கொள்ளை யாசைக் காரிகள் பாதக

     வல்ல மாயக் காரிகள் சூறைகள்

     கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்   விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்

      வெல்லும் மோகக் காரிகள் சூதுசொல்

      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்

       அல்லை நேரொப் பாமன தோஷிகள்

       உள்வி ரோதக்காரிகள் மாயையி     லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு

       கையு நீபத் தார் முக மாறுமுன்

       உள்ள ஞானப் போதமு நீதர        வருவாயே

             (சிதம்பரத்தில் அருளிய பாடல் இது)

மதனச் சொற் காரக் காரிகள் பவளக் கொப்பாடச் சீறிகள்

    மருளப் பட்டாடைக் காரிகளழகாக

   மவுனச் சுட்டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்காரிகள்

    வகைமுத்துச் சாரச் சூடிகள்               விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்

     குசலைக்கொட் சூலைக் காலிகள்     மயல்மேலாய்க்

    கொளுவிக் கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை

     குமுதப் பொற் பாதச் சேவையி லருள்வாயே!

        (சீர்காழியில் அருளிய பாடல் இது)

இப்படித் தோட்ட தொட்ட இடம் எல்லாம் தனது பழைய வாழ்வை நினைத்து வருந்தி முருகனின் அருள் நிரந்தரம் வேண்டி உய்யவே அருள் தாராய் என அவர் பாடும் பாடல்களைப் பார்க்கிறோம்.

திருப்புகழ் தரும் செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

 

இனி, இதே போல வாழ்வின் முற்பகுதியில் சேரக் கூடாதோருடன் சேர்ந்து சீரழிந்து பின்னர் சிவபிரானின் அருளால் தெளிவு பெற்ற அப்பரைப் பார்ப்போம்.

3

 

சமணர் தம் கூட்டத்தில் சேர்ந்து தன் இளமைக் காலத்தை வீணாக்கியதை நினைத்து பல இடங்களில் நாவுக்கரசர் தம்மை நொந்து கொள்கிறார்.

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேல் உலாம் பழன வேலித் திருக் கொண்டீச்சுரத்து உளானே

என்று இப்படி, ‘குறிக்கோள் இலாது கெட்டேனே என்று மனம் வருந்திப் பாடுகிறார்.

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர்தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக் கொண்டாய்

என்றும்,

 

மனை துறந்த வல் அமணர் தங்கள் பொய்யும்

  மாண்பு உரைக்கும் மனக் குண்டர் தங்கள் பொய்யும்

சினை பொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்

   மெய் என்று கருதாதே போத நெஞ்சே

என்றும் அமணர் தம் சேர்க்கை பற்றிப் பாடுகிறார் அப்பர்.

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர்

  சொல் கேட்டு துவர் வாய்க் கொண்டு

என்னாகத் திரிதந்து ஈங்கு இருகை

   ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

பொன் ஆகத்து அடியேனைப் புகப்

    பெய்து பொருட்படுத்த ஆரூரரை

என் ஆகத்து இருத்தாதே ஏதன்

 போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

என்று வருந்துகின்றவர்

சிவபெருமானின் அருளைப் பெற

வம்மின், வம்மின், பணிமின், பணிமின். தொழுமின், தொழுமின் என்று பல முறையும் பற்பல பாடல்களில் கூறுகிறார்.

தன் அனுபவத்தைக் கூறி நம்மை நல் வழிப்படுத்த அவர் பாடி அறைகூவல் விடுக்கும் பாங்கு நம்மை நெகிழ வைக்கிறது.

அப்பரின் அனுபவ வாக்கால், அதில் இருக்கும் சத்திய ஒளியால், அவர் அதில் குழைத்துத் தரும் சிவபக்தியால் சிவனின் அருளைப் பெற முயல்கிறோம்.

 

4

 

இங்கு நாம் பார்க்கும் மூவரிடமும் அனுபவம் பேசுகிறது. அதை உண்மையில் குழைத்துத் தரும் போது நாம் சற்று பிரமித்து உண்மையை உணரத் தலைப்படுகிறோம்.

கண்ணதாசன் திராவிட மாயையில் சிக்கிச் சீரழிந்தார். சீரழிக்கப்பட்டார்.

தமிழா, ஜாக்கிரதை மோசம் போய் விடுவாய்; அவர்களை கனவிலும் நினைக்காதே என்று நமக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார்.

அவர்களின் கள்ள விளையாட்டை எல்லாம் தனது கவிதையிலும், கட்டுரையிலும், கதையிலும் கூறி நம்மை எச்சரித்தார்.

கண்ணதாசனின் கதறல் அர்த்தமுள்ள கதறலாக மிளிர்ந்தது.

அருணகிரிநாதர் தன் அனுபவத்தைக் கூறி வேசையரைத் திட்டித் தன் இழிந்த வாழ்க்கையையும் சுட்டிக் காட்டி நம்மை எச்சரித்துக் காக்கிறார்.

அவரது புலம்பல் பொருள் பொதிந்த புலம்பல் ஆயிற்று.

அடுத்து அப்பர் பிரான் தன் வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கூடாதோருடன் சேர்ந்து கூத்தடித்தேனே என்று வருந்திக் கூறி, எழுமின், வம்மின், சிவனைத் தொழுமின் என்று அறைகூவல் விடுக்கும் போது அவரது சொல்லெல்லாம் பொருள் பொதிந்த அருள் சொல்லாக ஒளிர்கிறது.

அவரது அறைகூவல் அர்த்தமுள்ள சிவன்கூவலாக மிளிர்கிறது.

கண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின் புலம்பலும், அப்பரின் அறைகூவலும் அனுபவத்தின் விளைவு.

அதைப் பற்றி, காஞ்சிப் பெரியவர் கூறியது சத்திய வாக்கு.

     சாதாரணமாக சாசுவத உண்மைகளை எவ்வளவு பெரியவர் கூறினாலும், அதற்கான மதிப்பை விட, அதை அனுபவப்பட்டோர் தம் அனுபவத்துடன் குழைத்துக் கொடுத்தால் அதன் மதிப்பே தனி தான்.

இது தான் உண்மை. அன்றும் என்றும்.

அப்பரின் காலமானாலும் சரி, அருணகிரிநாதரின் காலமானாலும் சரி, கவியரசு கண்ணதாசனின் காலமானாலும் சரி அதுவே உண்மை!

அவர்களின் அனுபவத்தால் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம், இல்லையா!

****