Asura’s Mistake- Satapata Brahmana Story (Post No.4087)

Compiled by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London-19-03


Post No. 4087


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Once upon a time the gods and the Asuras, both of them sprung from Prajapati, strove together. And the Asuras even though arrogance, thinking,

“Unto whom, forsooth, should we make offering? went on offering into their own mouths. They came to naught, even through arrogance; wherefore let no one be arrogant, for verily arrogance is the cause (mouth) of ruin.

“Pride goeth before destruction.

But the gods went on making offerings to one another.

Prajapati game himself to them; thus the sacrifice became theirs; and indeed the sacrifice is the food of the gods – Satapata Brahmana.

xxx

“This which is sacrifice is the soul of all beings and of all gods”

–Satapata Brahmana14-3-2-1

 

Prajapati gave himself to the gods and became their sacrifice. He then created sacrifice as his own image or counterpart. Hence they say that ‘Prajapati is sacrifice’; for he created it as his own image.

–Satapata Brahmana 11-1-8-2

xxx

 

Women in Vedic Times

The following passage is of interest as clearly indicating that women in Vedic times had access to the Vedas; they took part in the sacrifices is clear from quite a number of passages:

Ida, the daughter of Manu, was a revealer of sacrifice. She heard, ‘The Asuras are placing fire’……………. Ida said to Manu, ‘I shall so place thy fire that thou shalt increase in offspring, cattle and twins; thou shalt be firmly established in  the world and shalt conquer the heavenly  word’. She first placed the Garhapatya fire. It was through the Garhapatya she produced for him offspring.

Taittiriya Brahmana 1-1-4-4

(Garhapatya is one of the three fires in a house)

xxx

Manu’s Wife Sacrificed!

There is another story where one must read between the lines; this one of the  symbolic stories:

“Manu had a bull. Into it an Asura slaying, enemy slaying voice had entered. In consequence of this bull’s snorting and bellowing. Asuras and Rakshasas were continually destroyed.

 

Then the Asuras said, “This bull, alas! does us mischief; how shall we overcome him? Now there were two priests of the Asuras called Kilata and Akuli. They said, ‘Manu is a devout believer; let us make trial of him’. They went and said to him, “Let us sacrifice for thee”

“Wherewith”, he asked.

With this bull, they replied.

Be it so, he answered.

 

When it had been slaughtered, the voice departed out of it and entered into Manu’s wife, Maanavaa.

Wherever they hear her speaking, the Asuras and Rakshasas continue to be destroyed in consequence of her voice.

The Asuras said, “She does yet more mischief; for the human voice speaks more”

 

Kilata and Akuli said, Manu is a devout believer; let us make trial of him. They went and said to him,

“Manu, let us sacrifice for thee”.

“Wherewith?, he asked.

“With this thy wife”, they replied.

Be it so, he answered.

When she had been slaughtered, the voice departed of her”.

–Satapata Brahmana 1-1-4-16

The same story is found with variations in the Kathaka Brahmana.

This is a symbolic story. One must rely on saints of India rather than foreigners.

–Subham–

 

 

திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? (Post No.4086)

Written by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London- 6-34 am


Post No. 4086


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:

 

ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

வண்ணக்கஞ் சாத்தனார்.

 

சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.

 

இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்

 

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்

 

அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம்,  உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.

 

பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.

 

வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்

ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால்  செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.

 

நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு

 

பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே!  படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று

 

ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்

மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–

 

மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா? (Post No.4085)

Written by S NAGARAJAN

 

Date: 16 July 2017

 

Time uploaded in London:- 5-54 am

 

 

Post No.4085

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி.ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உங்க உடலின் எடை திடீரென்று கூடுகிறதா?

ச.நாகராஜன்

ள்﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ம்பிதவtsRSதிடீரென்று உடல் எடை கூடுகிறதே என்று கவலைப்படுபவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் உடனடியாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தீர்களா என்பதைச் சரி பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

 

ஆம், சில மருந்துகள் உடலின் எடை கூடுவதற்குக் காரணமாக அமைகின்றன. பக்க விளைவாக உடல் எடையைக் கூட்டும் மருந்துகளைப் பற்றிய கவனம் தேவை.

On Planet Pluto

எடை குறைவாக இருந்தால், பரவாயில்லை சரி என்று விட்டு விடலாம்.ஆனால் ஏற்கனவே எடை கூடுதலாக இருந்தால் உடலின் எடை இன்னும் கூடுவது அபாயத்தில் அல்லவா முடியும்!

 

சிலருக்கு மாதத்தில் 5 முதல் 10 கிலோ வரை எடை கூடி விடுகிறது. டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்துகளை அவர்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?

 

பல ஸ்ட்ராய்ட் மருந்துகள் (Steroid Drugs) உங்களுக்குப் பசி உணர்வைத் தூண்டி விடுகிறது. அதே போல மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தரும் மருந்துகள் கூட – மனச்சோர்வு, schizophrenia போன்ற வியாதிகளுக்குத் தரப்படும் மருந்துகள் கூட – உடலின் எடையை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் இந்த மருந்துகள் பசி உணர்வைத் தூண்டுவதால் அதிகம் சாப்பிடத்  தோன்றும். இதன் விளைவாக உடலின் எடை கூடும். சில மருந்துகளோ உடலில் கலோரியை மிக மெதுவாகச் செலவழிக்க வைத்து உடல் கூற்றையே மாற்றும். இன்னும் சில மருந்துகளோ சர்க்கரைச் சத்தையும் சில ஊட்டச் சத்துகளையும் அவற்றை உறிஞ்சுவதிலும் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தி அதன் விளைவாக உடலின்

எடையை அதிகரிக்கச் செய்யும்.

உங்களுக்கு சுவாசம் விடுவதில் சில மருந்துகள் சிரமத்தை ஏற்படுத்தினால் இயல்பாகவே நீங்கள் உடல்பயிற்சியை செய்ய விரும்ப மாட்டீர்கள். இதன் விளைவாகவும் கூட உடல் எடை கூடக் கூடும்.

 

இன்னும் சில மருந்துகளோ நீரை உடலில் அப்படியே தங்கச் செய்யும். அதன் விளைவாக உடல் எடை கூடலாம். உடலில் கொழுப்பு சக்தி அதிகம் இல்லை என்றாலும்  உடலின் எடையை இந்த நீர் அதிகரித்தே காட்டும்! இன்னும் சில மருந்துகளைப் பற்றி ஆய்வாளர்களே அவை ஏன் எடையைக் கூட்டச் செய்கின்றன என்பதை அறியாது  தொடர்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள்னர்.

உடலின் எடையைக் கூட்டும் மருந்துகளின் பட்டியல் இதோ:-

டயபடீஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் இன்சுலின், Thiazolidinediones, Sulfonylureas போன்றவை

ஆன்ட்டி சைகாடிக் (Antipsychotic)மருந்துகள் எனப்படும் Haloperidal, Clozapine, Lithium போன்றவை

Anttidepressant drugs எனப்படும் மனச்சோர்வை அகற்றும் மருந்துகளான amitriptyline, paroxetine மற்றும் sertraline போன்றவை

 

வலிப்பு நோய்க்கான Valproate, carbamazepine போன்றவை

ஸ்ட்ராய்ட் ஹார்மோன் மருந்துகளான prednisone அல்லது குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள்

பீட்டா ப்ளாக்கர்ஸ் (Beta –blockers) போன்ற ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்

 

 

ஒரு முக்கியமான விஷயம்; இங்கு குறிப்பிடப்படுள்ள இவை அனைத்துமே உடல் எடையைக் கூட்டும் மருந்துகள் என்பதில்லை. உதாரணமாக metformin என்ற டயாபடீஸுக்கான மருந்து உடல் எடையைக் கூட்டுவதற்கு பதிலாக எடையைக் குறைக்கவும் கூடும். மைக்ரேன் மற்றும் இழுப்புக்கான மருந்தான Topiramteம் கூட ஒருவரின் உடல் எடை இழப்பதற்கான காரணமாகக் கூடும். ஆகவே முடிவெடுப்பதில் கவனம் தேவை.

ஒருவரின் எடை கூடுகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு

 

ஒருவர் எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட மருந்து, அவரது வயது போன்றவற்றைச் சொல்லலாம்

முதலில் டாக்டரிடம் சென்று உடல் எடை கூடுவதைச் சொன்னவுடன் அவர் பல்வேறு காரணங்களைப் பகுத்து ஆராய்வார்.

 

இப்போது உட்கொள்ளும் மருந்து தான் காரணமெனில அவர் வேறு ஒரு மாற்று மருந்தை உட்கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.

 

அதே மருந்து தான் உங்கள் வியாதியைக் குணப்படுத்த தேவை எனில் அதன் உட்கொள்ளும் அளவை அவர் குறைக்கக் கூடும்.

 

சில வகையான கான்ஸர்கள் மற்றும்

உளவியல் ரீதியிலான வியாதிகள் போன்றவற்றில் மருந்துகளை மாற்ற முடியாத சூழ்நிலையில் டாக்டர் இப்படிப்பட்ட முடிவை பரிந்துரைக்கலாம்.

ஒரு மருந்தை உங்கள் டாக்டர் பரிந்துரைக்கும் போது அவரிடமே இதன் பக்க விளைவாக உடல் எடை கூடுதல் போன்றவை ஏற்படுமா என்று முதலிலேயே கேட்டுத் தெளிவு பெறலாம்.

நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றால் உங்கள் எடையை எப்பொழுதும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சாத்தியம்.

அவசரப்பட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுப்பதோடு தொடர்ந்து உங்கள் எடை மீது கவனம் வைப்பது சாலச் சிறந்தது.

 

****

 

 

 

Common Sense Anecdotes (Post No.4084)

Compiled by London Swaminathan


Date: 15 July 2017


Time uploaded in London-13-57


Post No. 4084


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Why I tell Many stories?

Lincoln once said to Chauncey Depew , “They say that I tell a great many stories; I reckon I do, but I have found in the course of a long experience that common people, take them as they run, are more easily informed through the medium of a broad illustration than in any other way, and to what the hypercritical few may think, I don’t care”.

 

Xxx

Common Sense- Gift of God!

This is one of the favourite stories of Dr Karl Compton , the noted physicist of  M I T . His sister lives in India. She was having a simple electrical installation done by a native electrician. He troubled her so much for instructions that she at last said irritably, “You know what I want; just use your common sense and do it.”

The electrician salaamed politely and said, “Madam, common sense is a rare gift of God. I have only a technical education”.

Xxxxx

 

Literature Anecdotes 

 

Two passengers were overheard in a literary discussion on the Brooklyn express,

“Whatcher favourite readin?”

“Popeye, Superman, and Flash Gordon”

“Howcha like O Henry?”

“Naw, the nuts get in my teeth”

Xxx

Did Little Neil Die? Suspense in the Story!

The magazine which published The Old Curiosity Shop came to America by sailing vessel. As interest in Dickens story mounted from week to week, the crowds became larger on the New York wharf waiting to buy copies as soon as the boat docked. By the time the story reached its last chapter these crowds had grown to such large numbers and to such a pitch of suspense that they swarmed, five or six thousand strong, upon the wharf and could not wait until the ship docked, when they spied the captain on the deck they called out across the narrowing in waters

The question that burned in everyone’s heart, “Did little Neil Die?”

–Subham–

 

 

தமிழ்ச் சங்கத்தில் மோதல்! (Post No.4083)

Written by London Swaminathan


Date: 15 July 2017


Time uploaded in London-6-59 am


Post No. 4083


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மதுரையில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கடைத் தமிழ்ச் சங்கத்தில் புலவரிடையே காழ்ப்புணர்ச்சியும் பொய்யும்,புரட்டும் மிகுந்திருந்தது. இது பற்றி திருவிளையாடல் புராணத்தில் பல படலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

1931ஆம் ஆண்டில் வெளியான திருவள்ளுவர் சரித்திரத்தில் சில சுவையான பாடல்கள் உள்ளன:

 

சங்கத்தாரை வெல்ல வேண்டி அவ்வையார் ஞானக் குறிகளால் கை சைகைகள் பண்ணி இவை என்னென்று கேட்கச் சங்கத்தார் சொல்லியது:-

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவாய்க்

காமத் தலைவனையும் காணாது கன்றினால்

நாமத்தை காட்டுகுறி நன்கு

 

இஃது தகுதியான உத்தரவன்றென்று அக்குறிகளுக்கு ஔவை சொல்லியது

 

ஐயமிடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்

இவ்வளவேனும் மனத்தை இட்டுண்மின் றெய்வம்

ஒருவனே யென்ன உணரவல்  லீரேல்

அருவினைகள் ஐந்தும் அறும்

 

 

இப்படியென்று ஔவை சொல்ல சங்கத்தார் நாணமுற்று இவளை வெல்லப் படாதென்று திருவள்ளுவரைப் பார்த்து நீர் எந்த வூரென்றதற்கு அவர் சொல்லியது

எந்தவூர் என்றீர் இருந்தவூர் நீர் கேளீர்

அந்தவூர்ச் செய்தி அறியீரோ – வந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாலும் பாழாயறும்

 

என்றிது முதலான ஞானார்த்தமான செய் யுட்களளாலவர் வினவியவைகளுகெல் யு லா முத்தரவு சொல்ல (உத்தரவு=பதில்)

சொல்ல, இவரையும் வெல்வ தரிதென்று இடைக்காடருடனே பேச, அவர் சொல்லியது

 

ஆற்றங்கரையின் அருகிருந்த மாமரத்தில்

காக்கை யிருந்து கஃகஃகென்னக் — காக்கைதனை

எய்யக்கோல் இல்லாமல் இச்சிச் செனவெய்தான்

வையக்கோ னார்தன் மகன்

 

இது போன்ற அனேகஞ் செய்யுட்களை அவர்களாலெழுதப் படாமலும்

கற்றுக்கொள்ளப்படாமலுஞ் சொல்ல நாணித் தோற்படைந்தார்கள்

 

திருவள்ளுவ நாயனார் திருவடி வாழ்க!

xxx

நாகலிங்க முதலியார் வெளியிட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும் என்ற நுலில் திருவள்ளுவர் சரித்திரம் என்ற பகுதியில் உள்ள விஷயம், ஆண்டு 1931.

 

(நான் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளில் திருவள்ளுவருடன் பிறந்த ஆறு பேர் கதைகளையும், தமிழ்ச் சங்கத்தில் ஏற்பட்ட மோதல்கள் பற்றிய திருவிளையாடல் புராணக் கதைகளையும் கொடுத்துள்ளேன்)

–சுபம்–

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! (Post No.4082)

Written by S NAGARAJAN

 

Date: 15 July 2017

 

Time uploaded in London:- 5-38 am

 

 

Post No.4082

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

 

கம்பன் கவி இன்பம்

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை!

 

ச.நாகராஜன்

 

 

தமிழுக்குக் ‘க-தி’ – க- கம்பன் – தி-திருவள்ளுவர்.

இருவர் புகழையும் யாராலும் முழுதும் உரைக்க முடியாது.

ஏனெனில் அப்படி ஒரு ஆழம். அப்படி ஒரு  அகலம். அப்படி ஒரு வீச்சு. அதிலே தான் தமிழின் மூச்சு.

 

கம்ப ராமாயணத்தையோ அல்லது திருக்குறளையோ முழுதுமாக அதன் அகல்,ஆழ, வீச்சுடன் யாராலும் இன்னொரு மொழியில் மொழியாக்கம் செய்ய முடியாது.

 

ஏனெனில் தமிழின் திறம் அப்படி.

ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தங்களைச் சொல்லும் உன்னத மொழி தமிழ்.

 

கம்பனைப் போற்றி எழுந்த பாடல்கள் ஏராளம்; ஏராளம்.

அவற்றில் சமீப காலத்தில் எழுந்த ஒரு அழகிய நூல்

கம்ப ராமாயணக் கவுத்துவ மணிமாலை.

 

கம்பனை முழுதுமாக ரசிக்கத் துடித்த கம்ப ரசிகர் கே.என்.சிவராஜ பிள்ளை அவர்கள் இயற்றிய அற்புதமான நூல் இது.

18-6-̀1968இல் எனது குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதி வைத்துள்ள பாடல்கள் 90. (தொண்ணூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டா எனத் தெரியவில்லை)

 

ஒவ்வொன்றும் கம்பனின் புகழ் பாடும் சுவை மிகுந்த பாடல்.

 

கம்பன் என்னும் ஓர் காளமே கம்தமிழ்

அம்பு ராசி அ டங்கலும் மொண்டு வான்

பம்பும் ஆரிய மாம் இம யம்படிக்

கிம்பர் நாட்டிற் கிறைத்ததண் வாரியே

 

என்று தொடங்குகிறது நூல்.

 

கம்பன் என்னும் இயற்கை வளம் நிறைந்து இருண்ட ஒரு மேகம் எழுந்து சென்று தமிழ் இலக்கிய இலக்கணக் க்டல் முற்றிலும் உண்டு அதனோடு அமையாது வானம் அளாவி ஓங்கி நிற்கும் வடமொழியாகிய சம்ஸ்கிருதம் என்னும் இமயமலையிற் சென்று படிந்து ஆங்குச் சூல் முதிர்ந்து இந்நாட்டுள்ளார் அனைவரும் பருகித் தழைக்கும் வண்ணம் பொழிந்த குளிர்ச்சியான மழைத்தாரையாகும் – இக்கம்ப ராமாயண மகா காவியம்.

 

குறிப்பு: மஹாகவியாகிய கம்பன் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்தகன்ற பாண்டித்தியமுடைய ஒரு பெரும் புலவன் என்ன இங்குக் குறிப்பிடப்படுகின்றது.

 

 

இப்படித் தொடங்குகிறது நூல்.

 

முதல் பாடலிலேயே சம்ஸ்கிருத வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்றி

கம்பன் தொட்ட மூலத்தைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை.

 

முக்கியமான ஒரு விஷயம் அந்தக் காலத்தில் , அதாவது ஆயிரத்த்தி தொள்ளாயிரத்து அறுபதுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சம்ஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் எனத் தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டு வந்தது.

சம்ஸ்கிருதம் அறிந்த பான்மையினால் தமிழின் வளத்தையும் சிறப்பையும் நன்கு அனுபவிக்க முடிந்தது. தமிழின் தனிச் சிறப்பை ஓங்கிய குரலில் உலகுக்கு எடுத்துரைக்கவும் முடிந்தது.

 

காமர் பூவுதிர் கற்பகக் காக்கொலோ?!

பூமகள் செவ்வி பொங்கும் பயோதமோ?!

நாமகள் மெய்ந் நடம் செயும் ரங்கமோ?!

பாமகார் பதிகம்பன் நற் பாடலே

 

கம்பனின் காவியம் அழகிய பூக்களைச் சொரியும் கற்பகக் கா வா?

இலக்குமி தேவியினுடைய ஐசுவரிய அழகு பெருகித் ததும்பும் பாற்கடல் தானோ?

 

அல்லது சரஸ்வதி தேவி தன் முழு மேனியும் கொண்டு நடனம் செய்யும் ஒரு நாடக சாலையோ?

இவற்றில் எவற்றுடன் கம்பனை நான் ஒப்பிடுவேன்.

அனைத்தையும் ஒப்பிடலாம்; அதற்கு மேலும் ஒப்பிடலாம்!

என்பது கவிஞரின் கருத்து.

 

இப்படி தொண்ணூறு பாட்ல்களில் கம்பனின் தமிழ் அமுதத்தைச் சுவைத்த பான்மையை மிக அருமையாகச் சொல்கிறார் சிவராஜ பிள்ளை.

அவரது தமிழ் வன்மையையும் சுவைக்கும் பான்மையினையும் இந்த நூலில் காணலாம்.

கம்ப ராமாயணத்தைச் சுவைக்கும் அன்பர்களுக்கு இந்த நூல் ஒரு அமுத நூல்!

***

சிவபெருமானுக்கு நக்கீரர் சவால் (Post No.4081)

Written by London Swaminathan
Date: 14 July 2017
Time uploaded in London-21-27
Post No. 4081
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

திருவள்ளுவர் சரித்திரத்தின் (Year 1931) இறுதியில் நக்கீரருக்கும் சிவ பிரானுக்கும் இடையே நடந்த சண்டை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ள்து.

 

சண்டை எப்படி துவங்கியது?

மதுரையை ஆண்ட செண்பக பாண்டியனுக்கு ஒரு சந்தேகம்; பெண்களின் கூந்தலில் இயற்கையாக மணம் உண்டா?

 

அமைச்சரவையில் யாருக்கும் பதில் தெரியாததால், நாடு முழுதும் தண்டோராப் போட்டு யார் ஒருவர் சரியான விடை தருகின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தான்.

இதைக் கேட்ட ஒரு ஏழைப் பிராமணன் மதுரை மீனாட்சி கோவிலில் நின்றுகொண்டு அடக்கடவுளே! எனக்கு மட்டும் விடை தெரிந்தால் என் வறுமை எல்லாம் நீங்குமே! என்று அங்கலாய்த்தான். அந்த ஏழைப் பார்ப்பனனின் குரலைச் செவிமடுத்த சிவபிரான் மனமிறங்கி ஒரு திருவிளையாடல் செய்வோமே என்று அந்த அந்தணனிடம் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் பின்வருமாறு:-

 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற்

செறியெயிற் றருவை கூந்தலின்

நறியவுமுளவோ நீயறியும் பூவே

குறுந்தொகை பாடல் 2

பொருள்:-

 

பூந்தாதுக்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டே! என்னிடத்துள்ள அன்பின் காரணமாகச் சொல்லாமல், உன் கண்ணால் கண்டபடி சொல்வாயாக. நீ அருந்திய மலரில், இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நல்ல மணமுடைய மலர்களும் உளவோ? சொல்வாயாக.

 

 

இதைக் கொண்டு பாண்டிய ராஜன் சபையில் வாசித்த தருமி என்ற பிராமணனை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவர் சகட்டுமேனிக்குக் கேள்விகள் கேட்டார். பாடலில் சொற் குற்றமும் பொருட் குற்றமும் இருப்பதாகப் பழி சுமத்தினார்.

 

தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று புலம்பவே மறுநாள், சிவபெருமானே நேரில் வந்து நக்கீரருடன் மோதினார். அப்போது சிவன் சொன்னதாவது:

 

அங்கங் குலைய அரிவாளி நெய் பூசிப்

பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் சங்கதனை

கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை

ஆராயும் உள்ளத்தவன்

 

பொருள்:

எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்?

 

இதைக் கேட்டவுடன் புலவர் நக்கீரனுக்குக் கோபம் வந்தது.

 

நக்கீரர் சொன்னார்

சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்

பங்கமறச் சொன்னாற் பழுதாமோ – சங்கை

அரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல

இரந்துண்டு வாழ்வதில்லை

 

பொருள்:

ஏய்! சிவா! நாங்களாவது சங்குகளை அறுத்து வளையல் மோதிரம் செய்யும் வேளாப் பார்ப்பான் என்ற அந்தண ஜாதியைச் சேர்ந்தவர்கள்; உனக்கோ குலம் கோத்திரம் ஏதுமில்லை

நாங்களாவது சங்குகளை அறுத்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறோம்; உன்னைப் போல பிச்சை எடுத்து வாழவில்லையே.

 

இதற்குப் பின்னர் வாக்கு வாதம் முற்றவே சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறக்கவே நக்கீரன் அடி பணிந்தார் என்பது திரு விளையாடல் புராணக் கதை.

 

–subham–

Dickens and Voltaire: More Author Anecdotes (Post No.4080)

Compiled by London Swaminathan
Date: 14 July 2017
Time uploaded in London- 10-49 am
Post No. 4080
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Meeting one’s literary idol face to face is sometimes a sad experience. According to George Dolby, who was dickens lecture manager.

During the progress of a reading, he tells, my attention was drawn to a gentleman who was in a most excited state. Imagining to be ill and wanting assistance,

I said, “What is the matter with you?”

“Say, who is that man on the platform reading ?”

“Mr Charles dickens”, I replied

“But that ain’t the real Charles dickens, the man as wrote all them books I have been reading all these years?”

“The same”

“Well, all I have to say about it then is that he knows no more about Sam Weller a cow does of pleating a shirt, at all events that ain’t my idea of Sam Weller, anyhow. And he clapped his hat on his head and left in a state of high dudgeon.

Xxxx

 

Voltaire and Casanova

While Voltaire was living in retirement in Geneva, he was visited by the Italian Casanova. Voltaire had been reading some recent works by Haller, the Bernese savant, and praised him to his guest.

“That is commendation which is indeed ill requited”, said Casanova.

“I have heard that Haller, far from returning your compliment says that your writing is more than half nonsense”.

Ah, well, then returned the famous wit with a wry smile, “it may be that we were both mistaken in our judgments”.

Xxxx

 

Dr Johnson and Oliver Goldsmith

One day Dr Johnson received a message from Oliver Goldsmith that his land lady had called in an officer to arrest him for non- payment of his bill. Johnson immediately sent him a guinea and himself proceeded to the scene of battle at his own speed.

 

When he arrived Goldsmith had already broken the guinea to procure a bottle of Madeira, and being well stimulated by the contents was berating his land lady soundly when Johnson entered.

  

The heavy angel interrupted his eloquence to inquire if he had any means of raising money, whereat Goldsmith produced the manuscript of a novel.  This Johnson pocketed, hurried away to Newbury the book seller and returned shortly with sixty pounds. This was the “Vicar of Wakefield “

–Subham–

 

மறைந்திருக்கும் ஆற்றல்-2 (Post No.4079)

Written by S NAGARAJAN

 

Date: 14 July 2017

 

Time uploaded in London:- 6-01 am

 

 

Post No.4079

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

யோகிகளின் ஆற்றல்

 

மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 2

ச.நாகராஜன்

 

 

அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ் (The Invisible Influence): Alexander Cannon ) என்னும் புத்தகம் பளீர் பளீரென ஹிந்துக்களின் அபாரமான ஆன்மீக மற்றும் அமானுஷ்ய விஷயங்களின் மீதான விவரங்களைத் தருகிறது, புகழ்ந்து தள்ளுகிறது!

 

      அவர் முதல் அத்தியாயத்திலேயே தெளிவாக இப்படிக் கூறுகிறார்:

 

The science of Hypnotism and the Art of Telepathy, The Master of Destiny, date back more than three thousand years. The Aryan Hindoos devoted centuries to unraveling the secrets of the control of the human mind, and to divulge those secrets meant more than the  forfeiture of life itself. They realized that human intelligence is frail and finite, but life infinite; that to be forewarned is to be fore-armed. They knew that every moment of one’s life has to be accounted for; that they must lean on no one, yet not stand aloof; that rust destroys more than use. Their philosophy was and is one of deeds, not words; they understood that impossible is the adjective of fools; fear is the proof of a degenerate mind; speech is silvern, silence is golden; that one must be master of his own faculties and slave to none of his desires; that as a man thinketh in his heart, so will he become, and that every action is the result of preconceived idea. They taught that a great character founded on the living rock of principle, is a fact, not a solitary phenomenon, to be at once perceived, limited, and described. It is a dispensation of Providence designed to have not merely an immediate but a continuous, progressive, and never-ending agency. Such a character survives the man who possesses it, and leaves its imprint not only upon the sands of time,  but upon eternity.

 

These Hindoo adepts were a cultivated sect when Western people were almost barbaric. Music and all the refinements of taste, architecture and the like were in exquisite development when England was ruled by Boadicea, and had the Druids as the heads of their religious faith. These adepts of a Hindoo religious sect not only knew the secrets for the government and control of the mind of man, but they also held sway over the animal kingdom.

 

 

 

தெள்ளத் தெளிவாக ஒரு ஆங்கிலேயர் இப்படி அழகுறச் சொல்வதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. சாதாரணமாக ஹிந்து தத்துவங்களை இழித்தும் பழித்தும், திரித்தும், திருத்தியும் கூறுவது மேலை நாட்டோரின் இயற்கைக் குணம்.

 

மாறாக மேலை நாட்டினர் காட்டுமிராண்டிகளாக இருந்த போது மிகவும் உயரிய நாகரிகம் படைத்தவர்களாக ஹிந்துக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெளிவு படக் கூறுகிறார் அலெக்ஸாண்டர் கானான்.

 

தனது புத்தகத்தில் ஏராளமான சுவையான சம்பவங்களை கானான் கூறுகிறார்.

 

ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

ஒரு பெண்மணியின் கணவன் மரணப்படுக்கையில் இருந்தான். அந்தப் பெண்மணிக்கு குழந்தைகளே கிடையாது. அவளது கணவன் இறந்தவுடன் அவனது சொத்து முழுவதும் கணவனுடைய தம்பிக்குச் சேர கணவன் உயில் எழுதி வைத்து விட்டான்.

இதை அறிந்த அந்தப் பெண்மணிக்கு ஒரு தீய எண்ணம் வந்தது.

 

அவள் ஒரு மந்திரவாதியை அணுகினாள். ஆபிசார பிரயோகத்தினால் அவனை எப்படியாவது கொல்ல வேண்டுமென்றாள். அவனும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தால் அவனைக் கொல்ல சம்மதித்தான்.

இந்தச் செய்தி கணவனின் தம்பிக்கு எட்டியது. பயந்து போன அவன் ஒரு நல்ல மகானை அணுகினான். அவர் அவனுக்கு பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியதோடு ஒரு மந்திரத்தை உபதேசித்து, இரவு முழுவதும் அதை இடைவிடாமல் சொல்லுமாறு கூறினார்.

 

ஒரு கணம் கூட விடாமல் சொல்ல வேண்டும்; இரவில் தூங்கி விடக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

மகானின் அருளுரையை ஏற்ற அவன் மந்திரத்தை உச்சரிக்கலானான்.

அன்று நள்ளிரவு ஒரு பெரிய ராட்ஸச உருவம் ஒரு கறுப்புக் குதிரையின் மீது வந்து அவன் முன் தோன்றியது.

 

 

அந்த உருவத்தின் கையில் ஒரு பெரிய கத்தி இருந்தது.

அதை அந்த உருவம் கத்தியை ஓங்கியவாறே வந்து அவனை வெட்ட வந்தது.

மந்திர உச்சாடனத்தை அவன் நிறுத்தவில்லை. அருகில் நெருங்கிய உருவத்தால் ஓங்கிய கையை கீழே இறக்கி வெட்ட முடியவில்லை.

 

 

மூன்று மணி நேரம் நீடித்த இந்த முயற்சி தோல்வி அடைந்தது; அந்த உருவமும் அங்கிருந்து அகன்றது.

மறு நாள் தீய மந்திரத்தை ஏவிய ,மந்திரவாதி இறந்து கிடப்பதை அனைவரும் கண்டனர்.

நல்ல மந்திரம் நல்லவரைக் காப்பாற்றும். தீய மந்திரம் ஏவியவனையே சூழ்ந்து அவனுக்கு கெடுதி விளைவிக்கும்.

 

   இப்படி பல சுவையான நடந்த சம்பவங்களை சரி பார்த்து இந்தப் புத்தகத்தில் கானான் தந்துள்ளார்.

***

  இன்னும் இந்தப் புத்தகம் தரும் சில கருத்துக்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

 

பெரியாரைப் பேணு: வள்ளுவர், மனு அறிவுரை (Post No.4078)

Written by London Swaminathan
Date: 13 July 2017
Time uploaded in London- 13-02
Post No. 4078

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘பெரியாரைப் பின்பற்று; உனக்கு ஒரு கேடும் வராது’ என்று மனுவும் திருவள்ளுவரும் உரைப்பர்.

 

பகவத் கீதையில் கண்ணனும் உலகமே பெரியாரைத்தான் பின்பற்றும் என்று சொல்கிறார். லாங்பெலோ (Longfellow) போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர்.

 

முதலில் யார் பெரியார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்; ஒழுக்கத்தில் உயர்ந்தோரே பெரியார். சத்தியத்தைக் கடைப்பிடிப்போரே பெரியார்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் –443

 

பொருள்:-

 

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெரியவர்களைப் போற்றி தமக்கு சுற்றமாக வைத்துக் கொள்வது சிறந்த செயல் ஆகும்; கிடைப்பதற்கு அரிய பேறாகும்.

 

இதை அரசியல் என்னும் பிரிவில் அரசனுக்குரிய செயலாகச் சொன்னாலும், அனைவருக்கும் பொருந்தக் கூடியதே.

வள்ளுவனுக்கும் முன்னால் மனு தனது மனு ஸ்ம்ருதியில் மிக அழகாகச் சொல்கிறார்:-

 

“ஒருவன் அவனுடைய தந்தையர்களும் பாட்டனார்களும் சென்ற வழியில் செல்ல வேண்டும்; அப்பேற்பட்ட நல்ல மனிதர்களின் காலடிச் சுவட்டைப் பின் தொடர்பவனுக்கு ஒருபோதூம் கெடுதல் வராது; தீங்கு நேரிடாது (மனு 4-178).

 

உலக மக்களும் நல்ல மனிதர்களையே தலைவர்களாகக் கொண்டு, அவர்களையே பின்பற்றுவர் என்ற கருத்தை முதலில் கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்கிறான் (3-21) அதே கருத்தை பி ன் னர் புறநானூற்றில் அவ்வையாரும் சொல்கிறார். அமெரிக்க கவிஞர் ஹென்றி வாட்ஸ்நொர்த் லாங்பெலோவும் சொல்கிறார். இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதால் அவை நம் அடி மனதில் ஆழப்பதிகிறது.

 

யத்ய- தாசரதி ச்ரேஷ்டஸ் – தத் ததேவேதரோ ஜன:

ஸ யத் ப்ரமாம் குருதே லோகஸ்- ததனுவர்த்ததே – 3-21

 

“ஒர் பெரியவன் எதை எதைப் பி ன் பற்றுகின்றானோ அதையே ஏனைய மக்களும் பின்பற்றுகின்றனர். அவன் எதை மதிப்புள்ளதாக செய்கிறானோ அதை உலகம் பின்பற்றுகிறது” – என்று கண்ணன் சொல்கிறான்.

 

தொல்காப்பியரும்

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்டு ஆகலான (சூத்திரம் 1592)

 

பொருள்:-

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்களின் ஆணையால் உலக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆதலால் உலக வழக்கு என்பது சான்றோரது நெறியாகும். இழிசினர் ஒழுக்கம் வழக்கு  எனக்கொள்ளப்படாது.

    

என்ன அதிசயம்! கிருஷ்ணனும் மனுவும் சொன்னதை அப்படியே தொல்காப்பியரும் சொல்கிறார்.

 

மனு இன்னும் ஒரு ஸ்லோகத்தில் தர்மம் என்பது கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்தது என்றும் எங்கேனும் சந்தேகமோ முரண்பாடோ தோன்றினால், அக்காலப் பெரியோர்கள் சொல்வதே பொருந்தும் என்றும் பகர்வார்.

 

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை

 

புறநானூற்றில் அவ்வையார் சொல்வதைப் பாருங்கள்:

 

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்.187)

 

பொருள்:

நிலமே! நீ நாடே ஆகுக அல்லது காடே ஆகுக. பள்ளமே ஆகுக; மேடே ஆகுக. அது எப்படிப்போனாலும் எவ்விடத்தில் மக்கள் நல்லவரோ, அந்த இடத்தில் உனக்கும் நல்ல பெயர்; உனக்கு என்று தனியாக  ஒரு நலமும் இல்லை; நீ வாழ்க.”

 

ஒரு நாட்டின் சிறப்பு அங்குள்ள நிலத்தா ல் விளைவதன்று;  நன் மக்களாலேயே பெயரும் புகழும் வரும் என்பது அவ்வைப் பாட்டியின் துணிபு.

 

இறுதியாக அமெரிக்க கவிஞர் லாங்பெலோவின் கவிதையைக் காண்போம்.


Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time ;

 

 

    Footprints, that perhaps another,
Sailing o’er life’s solemn main,
A forlorn and shipwrecked brother,
Seeing, shall take heart again.

 

 

Let us, then, be up and doing,
With a heart for any fate ;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.

 

 

உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை

நமக்கு உணர்த்துவது  யாதெனில்–

நாமும் உயரலாம் என்பதே!

அவர்கள் விட்டுச் செல்வது

காலம் எனும் மணற்திட்டில்

வெறும் காலடிச் சுவடுகள் தாம்

 

அந்தக் காலடிச் சுவடுகளும்

கலம் உடைந்த கப்பல் மாக்கள்

கரையேறிக் கண்டவுடன் களி

நடம் புரிந்து ஆடச் செய்யும்.

–Subham–