கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், நாக்குக்கு வருணன் கடவுள் (Post No. 2905)

body parts

Compiled by London swaminathan

 

Date: 18  June 2016

 

Post No. 2905

 

Time uploaded in London :– 13-26

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

எந்த உடல் உறுப்புக்கு யார் தேவதை என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் வழக்கு உள்ளது.

 

காது – திசை

தோள் (த்வக்) – காற்று

கண் – சூரியன்

நாக்கு –வருணன்

க்ராணம்(முகர்தல்/மூக்கு) – அஸ்வினி

வாக்கு – அக்னி (வன்னி)

கை (ஹஸ்த) – இந்திரன்

கால்( பாத)  – உபேந்திரன்

பாயு: (குதம்) – மித்ரன்

ஜனன உறுப்பு – பிரஜாபதி

மனது – சந்திரன்

 

இந்திரிய அதிஷ்டான தேவதைகள்:-

ஸ்ரோத்ரஸ்ய திக், த்வசோ வாத:, நேத்ரஸ்ய அர்க:, ரசனாயா வருண:, க்ராணஸ்ய அச்வினௌ, வாகிந்த்ரியஸ்ய வன்னி:

 

elephant

Xxx

 

உறவினர்கள் (ஆத்ம பந்துக்கள்) யார், யார்?

 

ஆத்மமாது: ஸ்வசு: புத்ரா ஆத்மபிது: ஸ்வசு: சுதா:

ஆத்ம மாதுல புத்ராஸ் ச விக்ஞேயா ஹி ஆத்மபாந்தவா:

–சப்தகல்பத்ருமம்

சொந்த தாயார், தந்தை, மாமன், அத்தை, சித்தி (சின்னம்மா), பெரியம்மா, அம்மான் பிள்ளைகள் ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

 

பகவத் கீதையிலும் உறவினர்கள் பட்டியல் இருக்கிறது:-

 

ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:

மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: (1-34)

(ஆசார்யா: – ஆசிரியர்கள்), பிதர: – தகப்பன்மார்கள், புத்ரா: – பிள்ளைகள், பிதாமஹா: – பாட்டன்மார்கள், பௌத்ரா: – பேரன்மார்கள், மாதுலா: – அம்மான்மார்கள், ஸ்வசுரா: – மாமனார்கள், ஸ்யாலா: – மைத்துனர்கள், ஸம்பந்தின: – சமபந்திமார்கள்

 

(இவ்வளவு உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை; அதனால் போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன்)

என் குடும்பம்

Xxx

ஆத்ம யாஜீ யார்?

சர்வ பூதேசு ச ஆத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

சமம் பஸ்யன் ஆத்ம யாஜி ஸ்வராஜ்யம் அதிகச்சதி (மனு 12-91)

 

எல்லா உயிர்களிடத்திலும் தன்னையும், தன்னிடத்தில் எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவனே தன்னை அறிந்தவன். அவன் முக்தி பெறுகிறான்

ஆத்மயாஜி= தன்னையே தியாகம் செய்பவன், வேள்வி செய்பவன்

 

கீதையிலும்

இதே போன்ற ஸ்லோகங்கள் பகவத் கீதையிலும் இருப்பது ஒப்பிடற்பாலது:-

சர்வபூதஸ்தமாத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி

ஈக்ஷதே யோக யுக்தாத்மா சர்வத்ர சமத்ர்சன:

ப.கீதை 6-29

பொருள்:–

யோகத்தில் ஈடுபட்டவன், எங்கும் சம நோக்குடன், எல்லா உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா உயிர்களும் உறைவதாகவும் காண்கிறான்

இதே கருத்து அடுத்த இரண்டு ஸ்லோகன்களிலும் வலியுறுத்தப்படுகிறது.

–சுபம்–

 

 

 

புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்! (Post No.2904)

Article written by S.NAGARAJAN

 

Date: 18 June 2016

 

Post No. 2904

 

Time uploaded in London :–  5-37 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

செல்வந்தனாக, புண்ய காரியங்களைச் செய்து, நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்!

 

.நாகராஜன்

 

 

 

மூன்று ஆசைகள்

 

வாழ்வாங்கு வாழ் ஹிந்து மதம் காட்டாத வழியே இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று ஆசைகள் நிச்சயமாக வேண்டும்.

  • நீண்ட நாள் வாழ ஆசைப்படுங்கள்
  • செல்வந்தனாக வாழ ஆசைப்படுங்கள்
  • நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்ப்டுங்கள்

வெறுமனே ஆசைப்படுங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்வில்லை ந்ம் அருளாளர்கள்.

இந்த மூன்று ஆசைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதையும் மிகத் தெளிவாக வழிமுறைகளுடன் விளக்கியுள்ளனர்.

 

சரக சம்ஹிதா என்று வாழ்வாங்கு வாழ வழி உரைக்கும் நூலில் சரகர் ஆரோக்கியம் சம்பந்தமாகச் சொல்லாத விஷயமே இல்லை.

 

பதினோராம் அத்தியாயத்தில் ஆரம்பித்திலேயே இதைச் சொல்லி விடுகிறார்.

 

இஹ கலு புருஷேணானுபஹதசத்வ, புத்தி, பௌருஷ, பராக்ரமேண ஹிதமிஹ சாமுர்ணிமிச்ச லோகே சமநுபஷ்யதா திஸ்ர ஏஷணா: பர்யேப்ருதிவ்யா பவந்தி | தத்யதா – ப்ராணைஷனா, தநைஷனா,பரலோகைகஷணேதி ||

 

 

சாதாரண திறமையுடன், புத்திசாலித்தனம், பலம், ஆற்றல் உள்ளவனாக, இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நலமாக  இருக்க ஆசைப்படும் ஒரு சாமானியன் மூன்று ஆசைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

1)நீண்டநாள் வாழ, 2) நன்கு சம்பாதிக்க, 3)நல்ல புண்ணிய காரியங்களைச் செய்ய ஆசைப்பட வேண்டும்.

 

 

 

நீண்ட நாள் வாழ ஆசைப்படு!

 

அடுத்து சரகர் அதிரடியாகச் சொல்வது:

இந்த மூன்று ஆசைகளிலும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஏன்?

ஏனெனில் இந்த வாழ்வு முடிந்து போனால் எல்லாம் முடிந்து போகும்.

 

 

இப்படி நீண்ட நாள் வாழ்வதற்கு, ஆரோக்கியமாக வாழும் மனிதர்களுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாதி வரும்போது அதை அலட்சியப்படுத்தாமல் (உடனடி) சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை நாம் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளோம். அதைப் பின்பற்றுங்கள். ஆக நீண்ட நாள் வாழ்வது பற்றி இப்போது விளக்கப்பட்டுள்ளது.

 

செல்வந்தனாக ஆசைப்படு!

 

 

அடுத்து வருவது செல்வந்தனாக வாழ ஆசைப்படும் இரண்டாவது ஆசைஒருவன் ஏன் செல்வந்தனாக வாழ ஆசைப்பட வேண்டும்? ஏனெனில் நீண்ட நாள் வாழும் போது பணமில்லாமல் வாழ்வது போன்ற துக்ககரமான விஷயம் வேறொன்றுமில்லைஆகவே பணம் வரும் வெவ்வேறு வழிகளையும் ஒருவன் நாட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் என்ன? விவசாயம் செய்வது, பசு போன்றவற்றை வளர்ப்பது, வணிகம் செய்தல், அரசாங்க சேவை உள்ளிட்ட பல உத்தியோகங்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவையே வழிகளாகும். நல்ல பெரியோர்களால் நிந்திக்கப்படாத, ஒதுக்கப்படாத எந்த ஒரு வேலையையும் ஒருவன் மேற்கொள்ளலாம். இப்படி நீண்ட நாள் வாழ்வதால் ஒருவன் தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழலாம். இப்படியாக இரண்டாவது அடிப்படை ஆசை விளக்கப்படுகிறது

வையகம் காப்பவரேனும் சிறு                             வாழைப்பழக்கடை வைப்பவரேனும்                     பொய்யகலத் தொழில் செய்தே பிறர்

போற்றிட வாழ்பவர் பூமியில் எங்கணும் மேலோர்

 

 

என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

 

இங்கு கஞ்சனாக வாழாதே என்பதும் மறைமுகமாக சரகரால் சொல்லப் படுகிறது. பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக கெட்ட வேலைகளில் ஈடுபடாதே என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

 

 

மேலுலக சந்தோஷத்துக்கும் சேர்த்து ஆசைப்படு!

 

அடுத்து சரகர் கூறுவதைப் பார்ப்போம்:

 

அடுத்து வருகிறது மேலுலக சந்தோஷத்திற்கு ஆசைப்படுவது.

இதில் சில சின்ன சந்தேகங்கள் எழுகின்றன. இறந்த பின்னர் மறு உலகம் உண்டா என்ன? ஆனால் ஏன் இந்த சந்தேகம் எழுகிறது? ஏனெனில் இந்த உலகில் பலரும் பிரத்யட்சமாகக் காண்பதையே நம்ப முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் தான். ஆகவே பிரத்யட்சமாக காணமுடியாத மறு உலக வாழ்க்கையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இதற்கு மாறாக மறு உலக வாழ்க்கையை நம்புகின்றவர்கள் சாஸ்திரங்கள் சொல்வதில் நம்பிக்கைக் கொண்டிருப்பதால் அதை நம்புகின்றனர். இதிலும் பல்வேறு கொள்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. பெற்றோர், இயற்கை, அழிவற்ற ஆன்மா”, “மதி (Free will) ஆகியவை மறுபிறப்புக்கு காரணம் என பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன.

முதலில் இறப்புக்குப் பின்னர் மறு பிறப்பு உண்டா என்பதை ஆராய்வோம்.

 

 

இதை அடுத்து மறுபிறப்பு உண்டா, உண்டு என்றால் காரணங்கள் என்னென்ன என்று அலசி ஆராய்கிறார் சரகர்.

சரகர் சொல்லாத ஆரோக்கிய விஷயமே இல்லை என்று தோன்றும் சரக சம்ஹிதையைப் படித்தால்!

 

                                 _தொடரும்

 

 

How to win Friends? How to succeed in Life? (Post No.2903)

Blog_Post_Books_5

Compiled by London swaminathan

 

Date: 17  June 2016

 

Post No. 2903

 

Time uploaded in London :– 14-51

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

how to  win

Dale Carnegie’s book How to Win Friends and Influence People was sold like hot cake and then lot of Self-Improvement books with the stereotyped titles such as How to become rich? How to become handsome? How to Succeed in Life? Flooded markets. Now in every book shop there is a section or shelf for Self-Improvement books. There is no doubt that they spread positive thoughts and motivate people. But for a Hindu there is nothing new in the book. Most of the Hindu Hymns spread optimism and positive vibrations. There are hundreds of Sanskrit couplets which have similar messages. One of them deals with how to move with different sections of the society.

 

There are over 25,000 Sanskrit ‘subhasitas’ (Golden Sayings in verses) in Subhaasita ratna Bhaandaagaara, Subhaasita ratna kosa, Subhaasitaavali, Paththathi, Bhartruhari’s Satakas etc. Here is a  Self-Improvement Verse from Bhartruhari’s Nitisataka:-

 

Daakshinyam svajane, dayaa parajane, saatyam sadaa durjane,

Priitih saadhujane, nayo nrupajane, vidvadsajjane saarjavam

Sauryam satujane, kshamaa gurujane, Naarijane dhuurtata  (kantaajane dhrustataa)

Ye chaivam purushaaH kalaasu kusalaastesveva lokastitih

grow rich

Daakshinyam svajane – show courtesy to your own people

Dayaa parajane – be compassionate with others

Saatyam sadaa durjane- always be careful with bad people

Priitih saadhujane- be kind to good people

Nayo nrupajane – be tactful with the rulers/government

Vidvadsajjane saarjavam –be honest with the learned

Sauryam satrujane- show heroism to your enemies

Kshamaa gurujane- be patient with your teachers

Naarijane Dhurtataa/Kantaajane dhrustataa – look after well your wife’s people (shrewdness towards women)

Ye chaivam purushaah –those men who are adept in the above arts

Kalaasu kusalaastesveva lokastitih – hold his sway over the world

 

who-dares-wins

दाक्षिण्यं स्वजने दया परजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने नारिजने धूर्तता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥

–subham–

பழகத் தெரிய வேணும், பெண்ணே (ஆணே) பார்த்து நடக்க வேணும்! (Post No.2902)

HowtoWinFriendsandInfluencePeopleCover

Compiled by London swaminathan

 

Date: 17  June 2016

 

Post No. 2902

 

Time uploaded in London :– 8-35 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

grow rich

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? உங்கள் நண்பர்களை வெல்லுவது எப்படி? ( How to win friends and Influence People) என்றெல்லாம் நூற்றுக் கணக்கான புத்தகங்களை (Self-Improvement Series) விலைக்கு வாங்குகிறோம். இதையெல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருதத்தில் ரத்தினச் சுருக்கமாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். புகுந்த வீட்டுக்குப் போகும் (புக்காத்துக்கு= புகுந்த+ அகத்துக்கு) புதுமணப் பெண்ணுக்கு உலக மஹா கவிஞன் காளிதாசன் சொன்ன அறிவுரைகளை முன்னரே ஒரு கட்டுரையில் தந்தேன். அற்புதமான அறிவுரையை, நாலைந்து ஸ்லோகங்களில் வடித்துக் கொடுத்துவிட்டான். இப்பொழுது வேறு ஒரு கவிஞனின் பாடலைக் காண்போம்:–

 

கீழ்கண்ட அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்– யார், யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று பொட்டில் அடித்தது போலச் சொல்கிறது:–

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே, தயா பரிஜனே,சாட்யம் சதா துர்ஜனே, ப்ரீதி: சாது ஜனே, நயோ ந்ருப ஜனே, வித்வத் ஜனே சார்ஜவம்,

சௌர்யம் சத்ருஜனே, க்ஷமா குருஜனே,காந்தாஜனே த்ருஷ்டதா, யேசைவம் புருஷா: கலாசு குசலாஸ்தேப்வேவ லோகஸ்திதி:

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே- நமக்கு நெருக்கமானவரிடத்தில் பரிவும்

தயா பரிஜனே – சுற்றத்தாரிடம் கருணையும்

சாட்யம் சதா துர்ஜனே – கெட்டவரிடத்தில்  ஒதுங்கிப்போ கும்போக்கையும்

ப்ரீதி: சஜ் ஜனே – நல்லோரிடத்தில் அன்பையும்

நயோ ந்ருப ஜனே- ஆள்வோரிடத்தில் (அரசாங்கம்) நாசூக்கையும்/ நைச்சியத்தையும்

வித்வத் ஜனே சார்ஜவம்- அறிஞர்களிடத்தில் நேர்மையையும் ( ச+ ஆர்ஜவம்)

சௌர்யம் சத்ருஜனே – விரோதிகளிடத்தில் சூரத்தனத்தையும் (வீரத்தையும்)

க்ஷமா குருஜனே- ஆசிரியர்/குருவிடத்தில் பொறுமையையும்

காந்தாஜனே த்ருஷ்டதா- மனைவி மற்றும் அவளுடைய வட்டத்தில் பற்றையும்

யேசைவம் புருஷா: – எந்த மனிதர்கள் கடைப்பிடித்து

கலாசு குசலாஸ்தேப்வேவ – இந்தக் கலையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களோ

லோகஸ்திதி: – அவர்கள் கையில்தான் உலகம் இருக்கிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் (குறள் 140)

Blog_Post_Books_5

–சுபம்–

 

 

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.

 

Greedy, Greedier, Greediest! (Post No.2900)

chasing-money

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2900

 

Time uploaded in London :– 12-55

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Greed Anecdotes

Greedy Actress

One evening Rachel, the famous French actress, dined at the house of Comte Duchatel. The table was loaded with the magnificent flowers. But Rachel’s keen eyes presently spied out the great silver centrepiece. Immediately began to admire it. The Count fascinated by her manners, said that he would be glad to present it to her. Being greedy, she accepted it at once, but was rather fearful lest he should change his mind. She had come to dinner in a cab, and mentioned the fact. The count offered her to send her home in his carriage.

“Yes, that will do admirably”, said she.

“There will be no danger of my being robbed of your present, which I had better take with me”.

With pleasure, Mademoiselle, replied the Count. But you will send me back my carriage, won’t you?

Xxx

 

greedy-rich

Greedy World!

Rolland Diller who was one of Lincoln’s neighbours in Springfield, tells the following story:-

“I was called to the door one day by the cries of children in the street and there was Mr Lincoln, striding by with two of his boys, both of whom were wailing aloud.

“Why, Mr. Lincoln, what is the matter with the boys?”  I asked.

“Just what is the matter with the whole world”, Lincoln replied.

I have got three walnuts, and each wants two.

Xxx

Ring for you!

Rachel, celebrate d nineteenth century French actress, was notorious for her avarice. The younger Dumas once received a ring from her. Immediately he bowed low and returned it to her finger, saying

“Permit me Mademoiselle, to present it to you in my turn so as to save you the embarrassment of asking for it”.

Xxxx

Mexican War

The Mexican war was not a popular one with the American people. Abraham Lincoln, then a member of the Congress, opposed it, declaring that those who said that the war was not one of aggression made him think of the Illinois farmer who said

I am not greedy about land. I only want what is mine.

Xxx

How To Earn Fast Money

Rachel’s Guitar

Rachel, the famous French actress, had a curious way of asking everyone she met for present s and knickknack s whether they are valuable or not. She knew how to make them valuable.

Once in a studio she noticed a guitar hanging on the wall. She begged for it earnestly. As it was an old and worthless instrument, it was given to her. A little later it was reported that the dilapidated guitar had been purchased by a well-known gentle man for a thousand franks. The explanation soon followed Rachel declared that it was the very guitar with which she used to earn her living as a child in the streets of Paris.

Xxx

Expensive Dressing!

On one occasion P D Armour, the meat packer, made a present of a suit of clothes to each of his employees in a certain department. Each man was told that he might order his own suit, and send the bill to Mr Armour , no restriction being made  as to price. In order to avail himself fully of this liberality, one young man ordered evening clothes costing 80 dollars. When the bill was sent in, Mr Armour sent for the clerk to vouch for its accuracy, and finding it right assured the man it would be paid. As the clerk was leaving, Mr Armour said to him,

 

“I wish to say to you that I have packed a great many hogs in my time, but I never dressed one before”.

 

–Subham—

கண்ணு! கண்ணு! ஏ கண்ணூ!! சுவையான துணுக்குகள்! (Post No 2899)

sentamil chintamanai 1

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2899

 

Time uploaded in London :– 8-06 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

செந்தமிழ் சிந்தாமணி என்ற பழைய பத்திரிக்கையில் வந்த சுவையான விஷயங்கள்:–

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!!

 

white crow (2)

கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!!

 

kannu kannu (2)

 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை!

 

poy thay (2)

–subham–

 

 

Honesty Anecdotes (Post No.2898)

Rainbow --- Image by © Royalty-Free/Corbis

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2898

 

Time uploaded in London :– 19-13

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

honesty 2

Honesty is the best policy!

A young man, starting out on a business career was being given some advice by his father, himself a very successful and wealthy man.

“And remember, son”, said the older man “always keep in mind that honesty always has been and always will be the best policy”.

“Oh yes, indeed”, agreed the son.

“Oh, and incidentally” were the parting words of his father, “You might read a bit on corporation law. It is really surprising how many things can be done in a business way, and still be honest”.

 

Xxx

What is the meaning of Business Ethics?

A little boy asked his father, Papa, “what does it mean, business ethics?”

“Well,” explained the merchant, “it is like this. Comes into the store a man and makes a purchase. He gives me a bright, new five dollar bill, which is just the right amount, and he starts out. I am turning to the cash register when I discover that it is not one, it is two five dollar bills stuck together. Now comes it in the business ethics —  Should I tell my partner?”

Xxx

honesty

Jester’s Retort

Pace, jester to Queen Elizabeth, was so bitter in his retort s to her, that she forbade him her royal presence. After he had been absent for some time, a few of his friends interceded for him, assuring the queen that he would be more guarded in his remarks in the future.

The very first time Pace was as bad as ever.

“Come on, Pace”, said the queen in a gracious humour, “now we shall hear of our faults” .

“No, Madam”, said Pace, “I never talk of what is discoursed by all the world”.

Xxx

 

Mirabeau was seldom sincere. Robespierre, nearly always. Once, when Robespierre was speaking, Mirabeau, who had listened attentively, bent his leonine head over to his neighbour and remarked

“That man Wilfred go far; he believes all he says”.

 

Xxxx

Honest Beggar

A beggar asking Dr Smottett for alms. He gave him through mistake, a Guinea. The poor fellow on perceiving it, hobbled after him to return it, upon which Smottett returned it to him with another Guinea as a reward for his honesty, exclaiming at the same time, “What a lodging honesty, has taken up with!”

–Subham—

இஷ்டம், பூர்த்தம் என்றால் என்ன? (Post No.2897)

family havan2

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2897

 

Time uploaded in London :– 8-20 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

தான தர்ம அனுஷ்டானங்கள், இஷ்டம் பூர்த்தமென இருவகைப்படும்:-

 

அக்னிஹோத்ரம் தப: சத்யம் வேதானாம் சைவ பாலனம்

ஆதித்யம் வைஸ்வதேவஸ்ச இஷ்டமித்யபிதீயதே

 

அக்னிஹோத்ரம்

தவம்

சத்யம்

வேதம் ஓதுதல்

அதிதி /விருந்தோம்பல்

வைஸ்வதேவம் ( எல்லா கடவுளர்க்கும் தினசரி அக்னியில் இடப்படும் பலி; இன்னொரு அர்த்தம் -பூத யக்ஞம்)

இவைகள் இஷ்டம் என்று அறியப்படும்.

(திருக்குறளில் துறவறவியல் மற்றும் இல்லறவியலில் இவை கூறப்பட்டுள்ளன).

 

WELL IN SALEM, AZAKIYA SINGAR

வாபீகூபதடாகாதி தேவதாயதனானி ச

அன்னப்ரதானமாராமா: பூர்தமர்த்யா: ப்ரசக்ஷதே

குளம் (வாபீ) தோண்டல், கிணறு (கூப:) வெட்டல், ஏரி (தடாகா:) அமைத்தல்,ஆலயம் கட்டுதல் (தேவ ஆயதனா:),அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்தல் (ஆரமா:) – இவைகள் பூர்த்தம் எனப்படும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இஷ்டம், பூர்த்தம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காண்க. குறிப்பாக வைஸ்வதேவம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்)

 

xxx

 

ஆறு வகையான ஆபத்துகள்

அதிக மழை (அதி வ்ருஷ்டி)

மழையின்மை/வறட்சி (அனாவ்ருஷ்டி)

வெட்டுக்கிளி (சாலபா:0

எலிகள் (மூஷகா:)

கிளிகள் (சுகா:)

அயல்நாட்டானின் படையெடுப்பு (ப்ரத்யாசன்னா:)

 

அதிவ்ருஷ்டிரனாவ்ருஷ்டி: சலபாமூஷகா: சுகா:

ப்ரத்யாசன்னாஸ்ச ராஜான: ஷடேதா ஈர்தய: ஸ்ம்ருதா:

belize_1984_parrots

–சுபம்–

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்! (Post No.2896)

eyeanat

Article written by S.NAGARAJAN

 

Date: 15 June 2016

 

Post No. 2896

 

Time uploaded in London :–  6-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

ச.நாகராஜன்

eye3

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

 

 

அறிவுஜீவியான இண்டிகோ  பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.

 

 

அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.

விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.

ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!

 

 

‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்

 

டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின்  மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.

இதை நம்ப  மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.

 

நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.

 

ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி   – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக  வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன்  மீதும் இடிக்காமல் நடந்தார்.

இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.

மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!

பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின்  முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.

 

 

உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.

இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

elizabeth susler

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.

 

பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.

2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில்  ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.

 

ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)

இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.

 

 

அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.

 

 

இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.

 

 

ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.

 

இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

7_Sulser

 

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய  முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!

 

ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு  மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)

இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

 

john bardeen

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.

டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.

முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.

 

 

ஜான் பர்டீனுக்கு  மூன்று  மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.

அவரை வரவேற்ற ஸ்வீடன்  மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.

 

 

உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.

எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.

 

 

அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?

 

ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.

1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!

************