Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை
எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. -(5)- கட்டபொம்மன் தம்பி
4. (4) வலமிருந்து இடம் செல்க-தடுமன் வந்தால்
இதுவும் வரும்
6.(2) – செங்கல் செய்யும் இடம்
7.- ( 5)- கனியன் பூங்குன்றன் பாட்டின் முதல் வரி
10.- (2)- க ணக்கில் கூட்டலுக்கு எதிர்ப்பதம்
11. -(4) – கல்யாண வீட்டில் கேட்கும் மேள சப்தம்
கீழே
1. -(3) – ஊஞ்சல் என்பதன் சுருக்க வடிவம்
2. (4) – பேரிகை வாத்தியம்
3. – (4) கிர்நார் மலையின் மற்றொரு பெயர்
5.- (5) — சிறுவர்கள் ஆடுவது; ஒலிம்பிக்கிலும் உண்டு
6.- (2)- தர்மபுத்திரன் இதற்கு அடிமை
8.– (3)- அனுமானம்
9. –(2) – வீட்டு வாசலையும் முதல் கட்டு ஹாலையும் இணைக்கும் நடைபாதை
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
During my
third trip to India this year (September 5 to 18, 2019) I visited Bengaluru,
Sringeri, Kollur, Agumbe, Udupi and Kukke. Before entering Karnataka, I toured
in Trichy area visiting Samayapuram, Srirangam and Tiruanaikka. It was a
productive trip. I hit all my targets!
Gods seek
help from human beings for publicity!!! Sabarimalai became popular due to
actors like Nambiar; Manthralaya became popular due to actors like Rajnikanth;
Kollur became famous due to actors like MGR and Jayalaitha. I remember former
Chief Minister of Tamil Nadu and famous actor M G Ramachandran donating a golden
sword to Kollur Mookambika. Chief
ministers of Tamil Nadu and Rajasthan Jayaalalitha and Vadundhara and Sri
Lankan Prime Minister Wikramasinghe and several political heavyweights have
visited the temple. When Jayalaaitha
came to Kollur in 2004 she was shown the golden sword offered by her
predecessor MGR and she offered Rs.30,000 towards food offering in the temple
and one ton Ghee (clarified butter). After Tamil politicians’ visits, the Tamil
crowd in the temple increased!!
My driver (Narasimha of Vishnu Travels, Bengaluru) told me that Keralites come in big numbers to the temple. I saw lot of Malayalees.
Where is
Kollur?
It is in the
midst of ever green forests of Western Ghats in Karnataka. Kollur is 45
kilometres from Kundapur and 80 kms from Udupi. I went by car from Udupi.
Temple of Goddess Mookambika (Parvati) is on top of Kodachadri hill. River
Sauparnika is flowing nearby. People from Karnataka ,Tamil Nadu and Kerala come
to this temple in big numbers. The reason for attraction, it is believed, is
the installation of a Sri Chakra by Adi Shankara. Wherever Adi Shankara
installed Sri Chakra Yantras (plate with magical drawings of triangles) people
throng the places and pour money in to the money boxes of the temples. Tirupati
and Varanasi are other examples).
The main
deities here are Goddess Mookambika and Shiva linga. The goddess killed Mooka (dumb) Asura (demon).
I remember another Mooka. He is known as Dumb Poet/ Mooka Kavi. The dumb poet
received the blessings of Goddess Kamakshi of Kanchipuram and burst out in
poems (Mooka Panchasati).
Goddess Mookambika is very beautiful. During festival time the temple attracts huge crowd. But I was fortunate to have Darshan at 3 pm in the afternoon within 15 minutes. See the pictures taken by me. Jayalalitha picture is from Mangalorean news.
7 Jun 2014 – Compiled by London swaminathan. Post No.1091; Dated 7th June 2014. मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं । यत्कृपा …
MALGUDI DAYS AND AGUMBE
When I was studying B.Sc in Madura College in Madurai we were taken to Western Ghats for botanical collections. We were promised the viewing of beautiful tropical rain forests and big water falls in Agumbe. But after passing Singeri we stayed at Central Coffee Research Institute ( in 1968 or 1969). We were told by our professor that the weather was very bad and we couldn’t proceed any further. All the students were disappointed. But we did plant collections on our way back. From that day I wanted to visit Agumbe. When my driver told me that we were going via Agumbe I felt that my long time dream was fulfilled. Though I did not go deep into the forest, I stopped at the sunset viewing point. My driver told me the area was infested with most poisonous king cobras. We saw small water falls and streams along the Ghat section. At a distance huge water falls were visible. Agumbe receives the highest rain fall in South India like Cherrapunji in Assam in North East India..
Agumbe is
the Cherrapunji of South India receiving 300 inches of rain (760 cms) in a
year. This part of Karnataka experiences continuous rain fall for four months
in a year.
My driver
showed me a place connected with the most famous TV serial Malgudi Days of R K
Narayan. Probably director and actor Shankar hailed from the place.
I saw cloud
and fog topped mountain peaks. That reminded me of Pillar Rocks in Kodaikanal.
The 1500 mile long Western Ghats is a paradise for nature lovers.
Don’t miss your next opportunity to visit this part of Karnataka! Study well before you visit that area.
spot connected with Malgudi Days according to my driver.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
ஹெல்த்கேர்
செப்டம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. கட்டுரையின் முதல் பகுதி 8-8-19 அன்று
வெளியாகியுள்ளது : கட்டுரை எண் 6744
புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote
Parkinson, M.K. Rustomji 187 pages
ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்!
– 2
தமிழில் தருபவர் : ச.நாகராஜன்
Exercise (உடல் பயிற்சி)
உடல் பயிற்சி ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கான அநேக
காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தக் காரணங்கள் அனைத்துமே சரியில்லை.
எந்த வயதிலும் கூட உடல் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனைத்து டாக்டர்களும்
ஒருமித்துக் கூறும் ஒரே கருத்து உலகில் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் மிக முக்கியமான
ஒன்று உடல் பயிற்சியே.
ஒரு விமானத்தின் ஆயுள்காலம் அது பறக்கும் மணி நேரங்களை
வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஒரு காரின் ஆயுள்காலம் அது ஓடும் மைல்களைப்
பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.ஆனால் மனிதனைப் பொறுத்த மட்டில் அவன் வயதாகும்
விகிதம் என்பது அவன் வாழும் வருடங்களின் எண்ணிக்கையல்லாது அவன் எவ்வளவு (சக்தியை)
செலவழிக்கிறான் எவ்வளவு சேகரிக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும்
இரு விதமாக வயதானது அமைகிறது. காலண்டர் படி வருடங்கள் ஆகும் போது அமையும் வயது
ஒன்று. இன்னொருன்று அவனது உடல் தகுதியை வைத்து அமைவது. இது உடல் பயிற்சியால் நன்கு
நிர்ணயிக்கப்படலாம். ஒரு மனிதனின் காலண்டர் வயது அவன் உடல் தகுதி வயதை விட சுமார்
30 ஆண்டுகள் என்ற மலைக்க வைக்கும் அளவு மாறுபடலாம். அதாவது ஒருவன் காலண்டர் வயது
படி 60 வயதை எட்டி விட்டாலும் உடல் தகுதி வயது அடிப்படையில் அவன் மிகவும்
இளமையானவனாக இருக்க முடியும்.
மாவீரன் நெப்போலியன் முடிந்த போதெல்லாம் குதிரை சவாரி
செய்து சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம்.
உடல்பயிற்சி தினமும் முறைப்படியாக சீராகச் செய்து வருவது
அவசியம்.
15 நிமிடம் நாளுக்கு என்ற கணக்கில் வாரத்தில் மூன்று
நாட்கள் உடல் பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.
உடலின் அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்குள்ளாக்கும் படி
பார்த்துக் கொள்வதும் அவசியம்.
எப்போதுமே நிமிர்ந்து நடத்தல் நல்லது.
பூனை எப்படி தன்னை நீட்டித்துக் கொள்கிறது என்று பாருங்கள்.
அது போல டெலிபோன் ரிசீவரை எடுக்கும் போது கூட நீட்டித்துக் கொள்ளுங்கள்.
குளித்தபின் நன்கு அழுத்தித் துடைத்துக் கொள்ள வேண்டும்.
உட்காரும் போது எப்போதுமே முதுகை நேராக வைத்து உட்கார்ந்து
கொள்ள வேண்டும்.
ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஜப்பானில் இதை
இளம் வயதிலிருந்தே சொல்லித் தருகிறார்கள்.
உடல் பயிற்சியைப் பற்றி மட்டுமே அனைவரும் வலியுறுத்துவது
வழக்கம். ஆனால் மனதிற்கும் பயிற்சி அவசியமே. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம்
மனதை அமைதியாக ஓய்வாக வைத்துக் கொள்வது அவசியம்.
Physiology (உடலியல்)
பழைய காலத்தில் மனிதர்களைப் பெருமளவில் இறக்கச் செய்தது
தொற்று வியாதிகள். ஆனால் நவீன காலத்திலோ மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவையே பெரிய
ஆட்கொல்லிகளாக இருக்கின்றன.
இதைத் தடுக்க உரிய
பயிற்சிகளைச் செய்வது அவசியம்.
சரியான உணவுத் திட்டமும் கூட மாரடைப்பையும் பக்கவாதத்தையும்
தடுக்கும். குண்டாக இருப்பது இதயத்திற்கு அதிகப்படியான இறுக்கத்தைத் தருகிறது.
ஆகவே சீரான அளவில் உடல் எடையைப் பராமரிக்க உடல் பயிற்சியும் உணவுத் திட்டமும் அதன்
மீதான அன்றாட கவனிப்பும் தேவை.
சவாசனம் மிகப் பெரிய அளவில் ஆரோக்கியத்தை உறுதிப்
படுத்தும்.
பெரும்பாலோனோருக்கு முதுகுவலி ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு:- சரியாக நிமிர்ந்து நடப்பது நல்ல பயனைத் தரும். இன்னொரு பயிற்சி முழங்கால்களை மடித்து அதன் மீது எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு நேராக உட்காரும் பயிற்சியாகும்.
நீரிழிவு நோய் ஒரு அபாயகரமான வியாதியாகும். இதை
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
திடீரென அனைத்து சக்தியும் போய் விட்டது போல உணர்வது, தீராத
தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, திடீரென
அதிகப்படியாக உடல் எடை குறைவது, உடலில் கட்டிகள் தோன்றி மறைவது, விளக்கமுடியாதபடி
திடீரென உடல் வலி ஏற்படுவது – இவை டயபடீஸுக்கான் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக இனிப்புச் சத்தைக்
குறையுங்கள்; கார்போஹைட்ரேட்டைக் குறையுங்கள்.
அல்சர் எனப்படும் வாய்ப்புண் அல்லது குடல் புண்ணும் ஆபத்தான
ஒன்று தான். அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பேர்கள் இதனால் அவதிப்
படுகிறார்கள் என்றால் உலக அளவில் எத்தனை
பேர் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.
தீராத புண்கள் சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விடும்.
38 முதல் 55 வயது முடிய உள்ளோருக்கு சாதாரணமாக அல்சர்
வருகிறது.
காரமில்லாத உணவு, வயிற்றைப் பொரும வைக்காத உணவு எடுத்தல்
அவசியம்.
ஒரு சுலபமான வழி – அதிகப்படி அமிலத்தைக் கட்டுப்படுத்த
உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எதையேனும் உட்கொள்வது ஒரு தீர்வாகும் –
ஓரிரு பிஸ்கட் கூட போதும்!
1.36 கிலோ எடையுள்ள கல்லீரல் உடலின் முக்கியமான அங்கம். இது
பிரம்மாண்டமான மல்டி பர்பஸ் – பல்நோக்கு கெமிக்கல் அங்கமாகும். அனைத்து உணவையும்
புரோட்டின், கார்போ ஹைட்ரேட், மற்றும் கொழுப்புத்
துகள்களாக இது மாற்றுகிறது. சுத்திகரிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும்
ரத்தத்தில் சேர்கிறது.
அற்புதமான இந்த அங்கம் ரீ ஜெனரேஷன் எனப்படும்
புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. மது அருந்தி இதைக் கெடுக்காமல் பார்த்துக் கொள்ள
வேண்டும்.
அடுத்து உடலின் மிக முக்கியமான அங்கம் உடலில் உள்ள இரு
சிறுநீரகங்கள். ஒவ்வொரு சிறுநீரகமும் சில கிராம் எடையே கொண்டது. ஆனால் இவற்றில்
நம்பமுடியாத பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபில்டர் – வடிகட்டிகள் உள்ளன. இதற்கு
நெஃப்ரான் என்று பெயர். இவை இரத்தத்தை வடிகட்டுகின்றன.
நமது உடலில் உள்ள மொத்த ரத்தத்தின் அளவின் இரு மடங்கு
உடலில் அமைந்துள்ள இரு சிறுநீரகங்களின்
வழியே ஒவ்வொரு மணி நேரமும் செல்கிறது. இரத்தம் இப்படி இடையறாது வடிகட்டப்பட்டு
கழிவுகள் அதிலிருந்து எடுக்கப்பட்டு ப்ளாடர் எனப்படும் சிறுநீர்ப்பைக்கு கொண்டு
செல்லப்படுகின்றன.
முதுகுவலி, சிறுநீரில் இரத்தம் அல்லது நிறமாற்றம்
தோன்றுதல், சிறுநீரில் நாற்றம் – இவையெல்லாம் சிறுநீரகக் கோளாறுக்கான
அறிகுறிகளாகும்.
அதிகமான திரவ பதார்த்தத்தை எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்க சிறந்த வழி.
General – பொது
மது அருந்தாதீர்கள். அளவுக்கு மீறும் போது அது ஆட்கொல்லியாக
மாறும்.
சிகரெட் புகைக்காதீர்கள். கார்பன் மானாக்ஸைடு
நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுப்பதைப் பாதிக்கிறது. புகை பிடிக்கும்
பழக்கம் இதய நோயில் கொண்டு விடுகிறது
அதிகமான சத்தமும் ஆபத்தானது தான். 110 டெசிபல் என்ற ஓசை
அளவு ஆபத்தானது. இரண்டு மணி நேரம் இந்த டெசிபல் அளவில் நாம் இருந்தால் நம் காது
கேட்கும் திறனை இழக்க ஆரம்பிக்கும். உலகின் அனைத்து மகான்களும் அறிஞர்களும்
ஒருமிக்க வலியுறுத்துவது மௌனத்தையே!
வாழ்க வளமுடன்!
***
புத்தகத்தின் மிக முக்கியமான பகுதிகள் மட்டுமே இங்கு
தரப்பட்டிருக்கின்றன. புத்தகம் முழுவதையும் ஆழ்ந்து படித்து நூலாசிரியர்கள் தரும்
அறிவுரைகளின் படி நடப்போர் ஆரோக்கியமான் நல்வாழ்வு வாழ்வது திண்ணம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Sanskrit words used in
this crossword are known to most of the people.
ACROSS
1. – (6 letters) -reply,
northern direction
6– (6) forest
9. – (4) invincible,
Indumati’s husband in Raghuvamsa
11 – (4) one of 12 Sun’s
names in Surya namaskara
12. – (6) one of 2 sun’s
names in Surya namaskara
DOWN
(7) minister in Dwaraka; friend of Krishna; a Gita is named after him
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
இந்த
ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா செல்ல நேரிட்டது. கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் விட்டுக்
கொடுக்கலாமா? அப்போது நல்ல திருமண விருந்துடன் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள், சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார், கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், குக்கே சுப்ரமண்யர் ஆகிய அனைவரின் தரிசனமும்
தமிழ்நாட்டில் சமயபுரம் மாரியம்மன், திருச்சி
தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதன், சேலையூர் புவனேஸ்வரி/ பிரத்யங்கரா தேவி
ஆகியோரின் தரிசனமும் கிடைத்தது. வழக்கம்போல தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும்
சூறாவளி சுற்றுப் பயணம்தான். இயற்கை எழில் மிக்க ஆகும்பே, பெங்களூரு விஸ்வேரய்யா மியூஸியம்
ஆகியவற்றையும் பார்க்கத் தவறவில்லை.
உங்களில்
பலரும் அறிந்த விஷயம் என்பதால் சுருக்கி வரைகிறேன்.
உடுப்பி எங்கே உள்ளது?
அரபிக்
கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.
உடுப்பியில்
என்ன பிரசித்தமானது?
த்வைத
மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன்
கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.
நான் இரவு நேரத்தில் உடுப்பியை அடைந்தேன். சமன்வய என்ற ஹோட்டலில் தங்கினேன். 3 நட்சத்திர அந்தஸ்து உடைய இந்த ஹோட்டல், லண்டன் நகர ஹோட்டல்களுக்கு இணையான தரம் உடையது. ஹோட்டலில் ஒரு உணவு விடுதியும் உள்ளது.
கோவிலுக்குச்
சென்றேன். மங்களகரமான மஞ்சள் புடவைகள் அணிந்த மாதர்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள
மண்டபத்தில், கிருஷ்ண கானம் இசைத்துக்
கொண்டிருந்தனர். மறு நாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு ஓடினேன். அப்போதும் மஞ்சள்
புடவை அழகிகள் கிருஷ்ணனின் புகழ்பாடிய வண்ணம் இருந்தனர். இரு முறையும் நான் எடுத்த
புகைப் படங்களைப் பார்த்தபோதுதான் இரண்டும் வெவ்வேறு கோஷ்டிகள் என்பது
தெரியவந்தது. ‘ரிலே
ரேஸ்’ (relay race)
போல ஒரு கோஷ்டிக்கு அடுத்ததாக இன்னுமொரு கோஷ்டிவீதம் பாடிக்கொண்டே இருப்பர்
போலும்.
கோவிலுக்குள்
போனால், கிருபானந்த வாரியார் போல உரத்த குரலில் ஒரு பெண்மணி
உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அங்கும், சுமாரான
கூட்டம்.
15 நிமிடங்களுக்குள் தரிசனம் கிட்டியது.
என்ன
விநோதம்?
ஒவ்வொரு
கோவிலிலும் பல விநோதச் செய்திகள், விக்ரஹங்கள்,
பழக்க
வழக்கங்கள், பிரசாதங்கள் இருக்கும். உடுப்பியிலும்
அது உண்டு.
உடுப்பியில்
ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து
கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர்
கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி
மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே
கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும். கோவிலுக்குள்
எப்போதும் நல்ல கூட்டம். மழை பெய்தாலும் கூட்டம் வருவது நிற்பதில்லை.
இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.
கப்பல்
கேப்டன் வந்து அவரிடம் நன்றி சொன்னான். தங்களைக் காப்பாற்றியதற்காக கப்பலில் உள்ள
விலையுயர்ந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். சந்யாசியான
மத்வர் எந்த விலையுயர்ந்த பொருளையும் தொட மறுத்துவிட்டார். ஆனால் அந்தக் கப்பல், புனிதத் தலமான துவாரகையில் இருந்து
கல்லையும் மண்ணையும் ஏற்றி வருவதை அறிந்தவுடன் மஞ்சள் நிற களி மண் பாறை ஒன்றை
மட்டும் எடுத்துக்கொண்டார். அதை நாமம் போடவும் உடல் முழுதும் சமயச் சின்னங்களை
அணியவும் பக்தர்கள் பயன்படுத்தினர். காலப் போக்கில் அந்தப் பாறையை சிறு துண்டுகளாக
உடைத்தபோது, அதில் கிருஷ்ணன் சிலையும், பலராமன் சிலையும் இருப்பது
தெரியவந்தது. பலராமனை கடலோரக் கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டு, கிருஷ்ணன் சிலையை உடுப்பிக்குக் கொண்டு
வந்தார். அபோது எழுப்பப்பட்ட கோவில் இன்று வரை மக்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியாக
விளங்குகிறது..
மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில் ஏற்கின்றனர்.
உடுப்பியைச்
சுற்றி மனம் கவரும் இயற்கைக் காட்சிகளும், மணல்
நிறைந்த கடற்கரையும் பல கோவில்களும் உண்டு. மத்வாச்சார்யார் பிறந்த பஜக கிராமம்
உடுப்பியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த வட்டாரத்தில் பல கோவில்கள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்கி எல்லாவற்றையும்
பார்ப்பது நல்லது. இயற்கை அன்பர்களுக்கு கடற்கரை விடுதிகளும் அருகாமைத் தீவுகளும்
விருந்து அளிக்கும்.
கடைசியாக
உடுப்பி ஹோட்டல்களைப் பற்றியும் ஒருவார்த்தை. தென்னிந்தியா முழுதும் ‘உடுப்பி ஹோட்டல்’ என்ற போர்டுகளைப் பார்க்கலாம். சுவை
மிகு உணவுகளுக்கு பெயர்போன இடம் உடுப்பி என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
கண்ணனின்
நாமத்துக்கு எவ்வளவு ருசியோ அவ்வளவு ருசி
உடுப்பி ஹோட்டல்களின் உணவுக்கும் இருக்கிறது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
A gentleman,
considerably inexperienced in travel, had made a transcontinental touring trip.
As he was about to disembark he was in some doubt as to what sum he should give
the Pullman porter who had catered to him throughout most of the journey.
“Sam”, he
asked, “What is the average tip you get?”
“Five
dollars” replied Sam.
Whereupon he
was presented with that sum.
Overcome and
embarrassed, Sam shuffled his feet for a moment, and then said,
“Well, Boss,
ah (I) reckon ah ought to tell you that so far you is de fust one what’s come
up to the average.”
Xxx
AUTOS
An old mountaineer
was on his way to the town. He decided to use the new highway that had just
been completed. Just as he was about to steer his horse onto the road, an
automobile whizzed by. The old man had never before seen one of these new
fangled machines. Open mouthed he stared after it. Scarcely a minute passed,
came a motor cycle cop. The old man was astonished. Muttering to himself he
said,
“Well, by
gol! Who’da thunk that thing could have a colt?
(Colt= young
male horse)
Xxx
BOATS
An old lady
on a sinking ship was told that they had no other hope but trust in Providence.
“Has it come to that?” said she.
Xxx
TRAVEL
The poet,
John Godfrey Saxe, had his bag packed
for a trip when a friend encountered him and asked,
“Where are
you going?”
“To Boston,
Deo Volente”
“What route
is that?, his acquaintance asked.
“By way of
Providence, of course”, replied Saxe.
Dictionary meaning:–
Deo volente
/ˌdeɪəʊ vɒˈlɛnteɪ/
adverb
God willing; if nothing prevents it.
“she has signed the lease for the house—it will be for both of
them, Deo volente”
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
வருங்கால
ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில், தினமலர் பத்திரிக்கையில் வெளியான விலைவாசி விவரம் இதோ (செப்டம்பர் 2019, சென்னை நகர நிலவரம்)-
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
During my
third trip to India this year (2019), I was fortunate enough to have darshan of
Lord Krishna in Udupi in Karnataka on 12th September 2019. It is a
big town and district headquarters. So I saw a lively town. I was lucky to have
darshan in 15 minutes. I stayed there in Hotel Samanvay which I think is a
three star hotel. It’s standard was very high and came equal to good hotels in
London. It has a restaurant as well.
Let us go to the temple now. Before we entered the temple we saw yellow sari clad ladies singing the Kirtans on Lord Krishna. The sweet music was broadcast by loudspeakers. When I went to the temple next morning to get a book on the temple still the bhajan was going on. Only when I examined my pictures, I came to know it was a different group in the same uniform. It looks like the temple surroundings are surcharged with this Bhajans and Kirtans 24 hours a day. (Please see the pictures taken by me).
Where is
Udupi?
It is a
coastal town in Dakshina Kannada, 380 kilometres from Bengaluru and 60
kilometres from Mangaluru. Well connected by railways and road routes.
What is
there to see?
The
famous temple of Lord Krishna founded by Saint Madhvacharya is in the town.
There are
two interesting things about the temple. Kanakadasa was a great saint. He was
born in a low caste and so he was not allowed to have darshan (viewing’ seeing
) of the Lord through the main entrance of the temple. But when he came to the
temple complex Lord Krishna himself turned in the direction of Kanaka dasa. He
saw the lord’s idol through the window. From that day onwards Lord Krishna was
seen only through the Kanakadasa window. It is similar to the story of Saint
Nandanar of Tamil Nadu. The low caste devotee was not allowed to have the
Darshan of Lord Shiva and so Siva ordered his lieutenant Nandkikeswara to move
to a side so that Nandanar can see him.
Lord Krishna of Udupi is decorated with lot of valuable jewellery. The second important thing about the temple is that eight mutts run the temple in rotation. Every tow years, a new mutt takes charge of the temple. All the eight mutts are around the temple.
Udupi is
surrounded by many famous towns and beauty spots. Famous Manipal Medical
college, beautiful sandy beaches, several temples are in the vicinity. So one should
spend a few days in Udupi to see all the places.
Since June to September is a rainy season for Karnataka we also experienced occasional heavy showers. Tourists and devotees throng the area . all through the year.
Another interesting story about Udupi Krishna
Madhvacharya,
the great Vaishnava saint and exponent of Dwaita philosophy was doing prayers
in the beach . He saw a ship sailing towards a big rock. Madhva alerted the
captain of the ship by waving his top cloth and the great disaster was averted.
The captain was very grateful and offered any valuable item on the ship. But Madhva
said that being a sanyasin / ascetic he couldn’t accept any valuable gift. When
Madhva came to know that ship is sailing from Dwaraka, another holy shrine of
Lord Krishna with ballast, he asked for the yellow ballast/clay so that he and
his devotees could use it for tilak and holy marks on their bodies. Years
rolled after this incident and when the ballast was broken into pieces, they
found the statues of Balarama and Krishna inside. Balarama was installed in a
temple on the beach and Lord Krishna’s statue was taken eight miles inland to
the modern Udupi. All this happened 800 years ago.
One more
important thing about Udupi is saint Madhva’s birth place Pajaka village is nearby.
Malpe is only a few miles away where Balarama temple is situated on the coast.
So one
can earn lot of Punya by visiting Udupi and its surrounding holy shrines. I saw
lot of Tulsi pots in front of the temple.
Whether one knows Udupi Krishna or not, Udupi hotels (restaurants) are very famous through out South India. The sign Udupi Hotel stands for quality and taste.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை
அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!
ச.நாகராஜன்
மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும்
சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.
செல்வம் சேர வேண்டும், நல்ல
உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு
ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ
சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.
அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும்
சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும்
கூட!
காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத்
தரும் அற்புதமான தேவதை!
அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை
வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள்
ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.
காமதேனுவில் அனைத்து தெய்வங்களும்
குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய
பெரும் பேறை அடைகிறோம்.
காமதேனுவிற்கு சுரபி என்றும்
நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.
முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச்
சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு
வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக
இருப்பாய் என்று கூறி அருளினார்.
பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள்
புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை
அறிய முடிகிறது.
சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா
தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து
வருகின்றன.
வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.
உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று
தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால்
நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி
அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன்
ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.
அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு
உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற
பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.
காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால்
அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில்
கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.
பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது
:
பசுவின் பற்களில் (புயல், மின்னல்
ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும், நாக்கில்
சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின் முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய
சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.
நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள்
அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய
நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும், லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.
எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும்
தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.
அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை,
மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள்
வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர்.
அது மாங்கல்ய தேவதை.”
பசுவின் நான்கு கால்களும் நான்கு
வேதங்கள் எனக் கூறப்படுகிறது.
பசுவைத் துன்புறுத்தவே கூடாது
என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.
குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.
காமதேனுவின் ஆலயங்கள் பல.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர்
ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.
ஒரு முறை இமயமலையில் மான் போல
வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு
பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.
பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க
மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான்
ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப்
பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.
காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை
தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு
அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.
அதன் வாலும் புனிதமானதே என்பதால்
பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து.
ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத்
தலங்களாகும்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம்
பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின்
பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு
அனுப்பியது.
பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு
ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம்
என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.
எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.
விசுவாமித்திரர் இங்கு தான்
பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு
ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி
தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.
கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர்
எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட
தலமாகும்.
இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது
ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர்
கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.
காமதேனு
வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம்
ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள இது தேவ கன்னியரும்,
காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.
இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை
உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.
இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை.
இவற்றை விரிப்பின் பெருகும்.
இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான
ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.
வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும்
காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.
அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும்
தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத்
தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.
கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட
உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.
அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில்
உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.
இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine
Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின்
அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.
காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith), காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.
இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச்
செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின்
இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.
பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம்.
நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து
பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை
விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.
பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத்
தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம்
பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று
குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும்
கதிரியக்கத்தை உண்டாக்குபவை.
ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும்
கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.
ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும்
தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம்
பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.
காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும்,
தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப்
பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!