வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது! (Post No.7772)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7772

Date uploaded in London – – 2 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது!

ச.நாகராஜன்

கம்பனின் சுந்தரகாண்டம் அற்புதமான பாடல்களைக் கொண்ட ஒரு பாடல் களஞ்சியம்.

அனுமனின் ஆற்றலை இதில் காண முடியும்.

கிட்கிந்தா காண்டத்தில் அனுமப்படலத்தில் இராமனிடம் தன்னை யார் என்று தேர்ந்தெடுத்த சொற்களால் அறிமுகப்படுத்திக் கொண்ட அனுமனை ‘யார் கொல் இச்சொல்லின் செல்வன்’ என வியந்து இலக்குவனிடம் கேட்கிறான்

இராமன்! (பாடல் 33)

சுந்தர காண்டத்தில், சொல்லின் செல்வன் என்று இராமனால் வியந்து புகழப்படும் அனுமன் இராவணனைச் சந்திக்கின்ற போது அவனது சொல்லின் ஆற்றலைக் கண்டு வியக்க முடியும்.

சொல்வலன்

சோர்வில்லான்

யார்க்கும் அஞ்சான்

இப்படிப்பட்ட அருங் குணமுடைய அனுமன் – ராம தூதன் – இராவணனைச் சந்திக்கிறான்.

அவன் இராவணனிடம் பேசுவதை பிணி வீட்டு படலத்தில் விவரிக்கிறான் கம்பன். பிணி வீட்டு படலம் சுமார் 140 பாடல்கள் கொண்டது. அநுமன் பிரம்மாஸ்த்ரத்திலிருந்து விடுபட்டு ராவணனை நேருக்கு நேர் சந்திப்பதை இந்தப் படலம் விவரிக்கிறது.

சொல்லின் செல்வன் பேசுகிறான் என்பதால் தேர்ந்தெடுத்த சொற்களை கம்பன் உபயோகிக்கிறான்.

அனுமனை உயர்த்துவதோடு தானும் உயர்கிறான்.

அநுமன் இராவணனோடு பேசும் நீண்ட உரையாடலில் ஒரு பகுதியாக ஒளிர்கிறது 16 கவிகள்.

sri Rama

 அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்:

பாரைஞ் ஞூறுவ பற்பல பொற்புயல்

ஈரைஞ் ஞூறு தலையுள வென்னினும்

ஊரைஞ் ஞூறுங் கடுங்கன லுட்பொதி

சீரைஞ் ஞூறவை சேமஞ் செலுத்துமோ

பாடலின் பொருள் : பாரை நூறுவ பல்பல் பொன்புயம் – உலகை அழைக்க வல்ல பற்பல அழகிய புயங்களும்

ஈர் ஐ நூறு தலை உள என்னினும் – ஆயிரம் தலைகளும் உனக்கு உள்ளன என்றாலும்

சேமம் செலுத்துமோ –  அவை உனக்கு நல்லதை உண்டாக்குமா (ஆக்காது)

அவை ஊரை நூறும் சுடுக் கனல் உன் பொதி – அவை ஊரையே  அழிக்கும் கொடிய கனலினை உள்ளே பொதிந்து பத்திரப்படுத்தி வைத்த

நூறு சீரை – நூறு சீலைகளே ஆகும்.

பிராட்டி என்னும் கனலின் முன் குவித்து வைத்த கந்தைத் துணி போல நீ அழிந்து போவாய் என அற்புதமாக அநுமன் ராவணனுக்குக் கூறுகிறான்.

அடுத்த பாடல் அற்புதமானது.

அதில் சங்கரனிடமிருந்து பெற்ற  வரபலம் தவறாது; அதன் மூலம் ராமனின் சர பலத்தைத் தவறச் செய்யலாம் என எண்ணுகிறாயா; அது நடக்கவே நடக்காது; ராமனின் சரம் தவறாது, (ஆகவே நீ பிழைக்க மாட்டாய்) என்கிறான் அநுமன்.

இதில் அற்புதமான ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

Hanuman in Madura.

ஒரு காலத்தில் இராவணன் கைலை மலையையே அடியோடு தூக்க முயற்சிக்கும் போது கோபம் கொண்ட சிவபிரான் தன் காலை அவன் தலையில் அழுத்த இராவணன் மலையின் கீழ் நசுங்கி அழுது புலம்பினான். பின்னர் தன் தலை ஒன்றை அறுத்து கை நரம்புகளை எடுத்து அதை யாழாக அமைத்துச் சாம கானம் பாட ஆரம்பித்தான். இதனால் மகிழ்ந்த சிவ பிரான் அவனை விடுவித்து வரமும் அருளினார்.

சிவனிடமிருந்து ஒரு வாளைப் பெற்றான். முக்கோடி வாழ்நாளையும் பெற்றான். (மூன்றரை கோடி) எவராலும் வெல்லப்படமாட்டாய் என்ற வார்த்தையையும் பெற்றான்.

முக்கோடி வாழ் நாள் , முயன்றுடைய பெருந்தவம், சங்கரன் கொடுத்த வாள், நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா என இப்படிக் கம்பன் இராவணனை ஏற்றம் தந்து பிறிதோரிடத்தில் பேசுவான்.

அநுமன் இராவணனின் இந்த வரலாற்றை அவனுக்கு நினைவூட்டி சங்கரன் கொடுத்த வரபலம் இருக்கிறது என்று மகிழாதே. ராமனின் சரபலத்தை நீ தாங்க மாட்டாய் என்கிறான்.

பாடல் இதோ:

புரம்பி ழைப்பருந் தீப்புகப் பொங்கியோன்

நரம்பி ழைத்தன பாடலி நல்கிய

வரம்பி ழைக்கு மறைபிழை யாதவன்

சரம்பி ழைக்குமென் றெண்ணுதல் சாலுமோ

Surpanakha meeting Sri Rama, Deogarh Temple

பாடலின் பொருள் ; புரம் – திரிபுரத்திலும்

பிழைப்பு அரும் தீ புக – எவரும் தப்ப முடியாத பெரும் தீ புகுந்து எரிக்குமாறு

பொங்கியோன் – கோபம் கொண்டு பொங்கிய சிவபிரான்

 நரம்பு இழைத்தன பாடலில் நல்கிய – நரம்புகளைக் கொண்டு நீ பாடிய பாடல்களுக்காக மனமுவந்து உனக்குக் கொடுத்தருளிய வரமானது

பிழைக்கும் – நீ மறைநெறி தவறியதால் தவறிப் போனாலும் போகும்

மறை பிழையாதவன் சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ- வேத மார்க்கம் தவறாத ராமபிரானது அம்பு தவறிப் போகும் என்று நீ நினைப்பது தகுமா . தகாது!

தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது என்று கூறி அநுமன் வாயிலாக ராமாயணத்தின் உயிர் சாரத்தை இங்கு வைக்கிறான் கம்பன் இன்னொரு பாடலில். அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் கம்பனின் – உயிரோட்டமான பிரதான செய்தி – theme!

இராவணன் சிவனின் கீர்த்தியைத் தனது கையின் அழகிய நரம்புகளைக் கொண்டு பாடிய செய்தியை இதற்கு முன்னர் வரும் படலமான ஊர்தேடு படலம் பாடலிலும் (178) கம்பன் இப்படி அழகுற எடுத்துரைக்கிறான்:

“கூடி நான்குயர் வேலையுங் கோக்க நின்று

ஆடினான் புகழ் அங்கை நரம்பினா

நாடி நற்பெயரும் பண்ணும் நயப்பு உறப்

பாடினான்”

இராவணனுக்கு தனது வருகை கடைசி வாய்ப்பு – Last Chance-  என்று துணிச்சலுடன் அநுமன் சொல்வது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரிய பாடல்.

Tribal woman SABARI blessed by Sri Rama, Deogarh Temple

இன்று வீந்தது நாளைச் சிறிதிறை

நின்று வீந்த தலாலிறை நிற்குமோ

ஒன்று வீந்தது நல்லுணர் வும்பரை

வென்று வீக்கிய வீக்கம் விதியினால்

இன்று வீந்தது – இன்றைத்தினம் என்பது அழிந்ததே ஆகும்

நாளை – நாளைய தினம் என்று சொல்லப்படுவது

சிறிது இறை நின்று வீந்தது அலால் – சிறிது நேரம் நின்றதாய் இருந்து அழிவதே ஆகுமல்லாமல்

இறை நிற்குமோ – சிறிது நேரம் நிலை பெற்றிருக்குமோ?

(நிலை பெற்றிருக்காது)

நல் உணர்வு உம்பரை – நல்ல அறிவுடைய தேவர்களை

வென்று வீக்கிய வீக்கம் ஒன்று -வெற்றி கொண்டு தேடித் தொகுத்து வைத்த

உன் வாழ்வின் பெருமையாகிய ஒன்று

விதியினால் வீந்தது – உனக்கு ஏற்பட்டுள்ள விதியின் கொடுமையால் அழிந்து போயிற்று

இந்தப் பாடலை பல்வேறு விதமாகப் பொருள் கொள்ள முடியும்.

“தேவர்களை அக்கிரமமாக வென்ற போதே உன் பெருமை போயிற்று. இராம தூதனாகிய் என் வருகையில் உனக்கு மிச்சமிருந்ததில் பெரும்பாலான  பெருமையும் போயிற்று; இன்னும் கொஞ்சம் ஏதேனும் பாக்கி இருந்தால் அது நாளை ராமபிரான் வருகையால் போய் விடும்” என்றும் பொருள் கொள்ள முடியும்.

அருமையான இந்த சுந்தர காண்டத்த்தின் பிணி வீட்டு படலம் அற்புதமான பாடல்களைக் கொண்டதாகும்.

இந்தப் படலத்தில் பகவத்கீதையை அப்படியே மொழி பெயர்த்துக் கம்பன் தருவதையும் இராம பிரானின் உண்மைத் தன்மையையும் அநுமன் கூறுவது மெய்சிலிர்க்க வைக்கும்.

அது அடுத்த கட்டுரைக்கான பொருள். அதை அடுத்துக் காண்போம்

tags — வர பலம், சர பலம், கம்பன் , சுந்தரகாண்டம்,

***

இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்! (Post No.7722)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7722

Date uploaded in London – – 21 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்!

ச.நாகராஜன்

கம்ப ராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10576 வரை உள்ளன. சில பாடல்கள் இடைச் செருகலாக இருக்கக் கூடும்.

கம்பன் பாடிய வண்ணங்கள் 96 என்று ஒரு தனிப்பாடல் கூறுகிறது. இதைக் கூறியவர் நிச்சயமாக கம்பனின் பாடலைத் தனித்தனியாக சந்தத்தைக் கண்டு பாக்களின் வகைகளைக் கணக்கிட்டு 96 வித வண்ணங்களை அவர் கையாண்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்த 96 வண்ணங்கள் மற்றும் சந்தங்கள் பற்றிய ஆராய்ச்சி சம்பந்தமாக (எனக்குத் தெரிந்து) இரண்டு ஆய்வுப் புத்தகங்கள் வந்துள்ளன. 1. இரா.திருமுருகன், புதுச்சேரி எழுதியுள்ள கம்பன் பாடிய வண்ணங்கள் – முதல் பதிப்பு ஏப்ரல் 1987 2. The Metres in Kambaramayana by Dr. K.V. Dakshayani, Annamalai University, Annamalai Nagar, 1979)

பல்வேறு வகையான பா வகைகளைக் கம்பன் கையாளுகிறான். ஒண்பா என்னும் விருத்தத்திற்கு உயர் கம்பன் என அறிஞர்கள் கூறி வந்ததால் கம்பனைப் போல் விருத்த வகைகளைக் கையாளும் திறன் படைத்த கவிஞர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த 10000 + பாடல்களில் அவன் சுமார் 43 வகையான விருத்த வகைகளைக் கையாளுகிறான். இந்த 43 வகைகளில் எண்சீர் விருத்தமும் ஒரு வகை. ஆனால் 10576 பாடல்களில் எண்சீர் விருத்தப் பாடல்களாக அவன் அமைத்தது ஆறு பாடல்களே!

இந்த அதிசயப் பாடல்கள் ஆறும் இந்திரன் இராமனை நோக்கிச் செய்யும் துதிப் பாடல்களாக அமைந்துள்ளன.

இதில் இராமனின் பரத்துவத்தை நிர்ணயிக்கும் ஒரு செய்தியை உள்ளே வைக்கிறான் கம்பன். ‘வல்லை வரம்பு இல்லாத’ என்று எண்சீர் விருத்தத்தில் கடைசிப் பாடலாக அமையும் இதை கீழே கட்டுரையின் இறுதியில் காணலாம்.

இதில் வரும் சுவையான வரலாறு இது:

முன்னொரு காலத்தில் முனிவர் தேவர்கள் அனைவரும் மேருமலையின் சிகரத்தில் கூடினர். அங்கு பரத்துவ நிர்ணயம் செய்வதில் பெரும் விவாதம் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் ஒருவரைச் சொல்ல அவர்கள் சப்த ரிஷிகளைச் சரண்டைந்து தங்கள் ஐயத்தைத் தீர்க்குமாறு வேண்டினர். சப்தரிஷிகளில் தலைமை பீடம் பெற்ற பிருகு முனிவர், முக்குணங்களுள் சத்வ குணம் உடையவர் எவரோ அவரே பரதத்துவம்; அதை நேரில் அறிந்து வந்து சொல்கிறேன் என்று கூறி  விட்டு முதலில் நேராகக் கைலாயம் சென்றார்.

அங்கு நந்திதேவரால் அவர் தடுக்கப்பட்டார். ஏழுநாள் காத்திருந்தார். பின்னர் தான் சிவபிரான் உமாதேவியோடு கலவியில் – புணர்ச்சியில் – ஈடுபட்டிருந்ததை அறிந்தார். தாமச குணத்தால்  காமமுற்று என்னை காக்க வைத்த அக்கடவுட்கட்கு இரு குறியும் விழக் கடவது என்று சபித்தார். அந்த நேரத்தில் சிவபிரான் நந்தியால் நடந்தது அனைத்தையும் அறிய, பிருகுவை அழைத்தார். அவரைத் தழுவும் எண்ணத்துடன் அவரை நெருங்கிய போது, ‘வாலாமை (அசுசி)யான நீ என்னத் தொடாதே என்று தடுக்க சிவபிரான் சினம் கொண்டார். தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து நெருப்பு  கிளம்ப பிருகு முனிவரோ அஞ்சாது தன் பாதத்தின் பெருவிரலிலுள்ள நெருப்புக் கண்ணை விழித்து அதிலிருந்து எழுந்த நெருப்பால் சிவபிரானின் நெருப்பை அடக்கி விட்டு, ‘நீ பிராமணிய தெய்வம் ஆகாது போகக் கடவது’ என்று இன்னொரு சாபத்தையும் கொடுத்தார்.

பிறகு நேராக சத்திய லோகம் சென்று பிரம்மாவைப் பார்த்து வணங்கினார். பிரம்மா தந்தையைத் தனயன் வணங்குவது தக்க முறைப்படியானதே என்று பிருகுவிற்கு பதில் வணக்கம் செய்யாதிருந்தார். இராஜஸ குணம் மிகுந்தவராக பிரம்மா இருப்பதைக் கண்ட பிருகு, “இன்று முதல் உமக்கு ஆலய பிரதிஷ்டை இல்லாது போகக் கடவது’ என்று தந்தை என்றும் பாராமல் சாபம் கொடுத்தார்.

பின்னர் நேராக வைகுந்தம் சென்றார். அங்கு வாயில் காவலர் அஞ்சி நிற்க நேராக அனந்தாழ்வான் மீது திருமகளும் நிலமகளும் திருவடி வருடிக் கொண்டிருக்க பள்ளி கொண்டிருந்த திருமாலின் மார்பில் ஒரு உதை உதைத்தார்.

அவ்வளவில் திருமால் மக்கள் மேல் விழுந்த தாய் சந்தோஷப்படுவது போல் மகிழ்ச்சியுற்றார். ‘உமது திருவடி பட்டதால் என் மார்வம் திருநிலை பெற்றது; நுமது வரவை அறியாது நான் படுத்திருந்ததைப் பொறுப்பீர்” என்று பலவாறு முகமன் கூற மகிழ்ச்சி அடைந்த பிருகு பரமனது காலில் விழுந்து வணங்கினார்.

‘சுத்த சத்வ குணத்தைக் கொண்ட பரதத்துவத்தை அறிய நான் செய்த இப் பெரும் பிழையைப் பொறுத்தருள்க’ என்று பலவாறு வேண்டினார்.

பின்னர் மேருவை அடைந்து ஸ்ரீமன் நாராயணனே பரத்துவம் என்று சித்தாந்தம் செய்தார்.

கம்பன் இந்த வரலாற்றை இந்திரன் துதியில் வைக்கிறார்.

வான்மீகி முனிவர் இராமனைப் பார்க்காமல் இந்திரன் சென்றதாகக் குறிப்பிடுகிறார். கம்பன் இங்கு மாறுபட்டு இந்திரன் இராமனைத் துதி செய்ததாக அமைக்கிறார்; அதுவும் எண் சீர் விருத்தப் பாடல்கள் ஆறை இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டும் அமைத்து இராமனின் பரதத்துவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் இந்திரன் வாயிலாகப் புகழ்கிறார்.

பாடல்கள் இதோ:-

துவசம் ஆர் தொல் அமருள், துன்னாரைச் செற்றும், சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்,

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும், திரு அளித்தும், வீடு அளித்தும், சிங்காமைத் தங்கள்

கவசம் ஆய், ஆர்உயிர் ஆய், கண் ஆய், மெய்த்தவம் ஆய், கடைஇலா ஞானம் ஆய், காப்பானைக் காணா,

அவசம் ஆய், சிந்தை அழிந்து, அயல் ஏகி நின்றான், அறியாதான் போல,அறிந்த எலாம் சொல்வான்:

தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற

   சுடரே! தொடக்கு’ அறுத்தோர் சுற்றமே! பற்றி

நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம்

   நிலயமே! வேத நெறி முறையின் நேடி

ஆய்ந்த உணர்வின் உணர்வே! வெம் பகையால்

     அலைப்புண்டு அடியேம் அடி போற்ற, அந் நாள்

ஈந்த வரம் உதவ எய்தினையே? எந்தாய்!

    இரு நிலத்தவோ, நின் இணை அடித் தாமரை தாம்?

‘மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;

மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;

தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,

காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே; கருங்கடலில் கண்வளர்ந்தோய்! கைம்மாறும் உண்டோ?

‘நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக, நளினத்து நீ தந்த நான்முகனார் தாமே

ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும் உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! மேல்நாள்,

தாழி தரை ஆக, தண் தயிர் நீர் ஆக, தட வரையே மத்து ஆக, தாமரைக் கை நோவ

ஆழிகடைந்து,அமுதம் எங்களுக்கே ஈந்தாய்;-அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ?

‘ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி, உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி

சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி, திறத்து உலகம் தான் ஆகி, செஞ்செவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! எங்கள் நவை தீர்க்கும் நாயகமே! நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி; அயல் பேரைக் காய்தி; நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே?

‘வல்லை வரம்பு இல்லாத மாய வினைதன்னால் மயங்கினரோடு எய்தி, மதி மயங்கி, மேல்நாள்,

“அல்லை இறையவன் நீ ஆதி” என, பேதுற்று அலமருவேம்; முன்னை அறப் பயன் உண்டாக,

“எல்லை உலகங்கள் நின்னுழை” என்று, அந் நாள் எரியோனைத் தீண்டி, எழுவர் என நின்ற

தொல்லை முதல் முனிவர், சூளுற்ற போதே, தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ? -எந்தாய்!’

இந்தப் பாடல்கள் அனைத்தையும் மனதினில் நிறுத்திப் படித்தால் இராமனின் பெருமை நன்கு புரிகிறது அல்லவா!

தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே!

தொடக்கு அறுத்தோர் சுற்றமே!

பற்றி நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம் நிலயமே!

வேத நெறி முறையின் நேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே!

இப்படி, சொற்களின் வலிமையால் தான் எடுத்த காவியத்தின் தலைவனுக்குப் புகழாரம் சூட்டும் கம்பனின் திறனே திறன்; கவிதையே கவிதை; பக்தியே பக்தி!

image of Indra

பாடல்களை மெதுவாகப் படித்து ரசித்தால் கம்பனின் அருமை புரியும்!

கம்பனின் 10000 + பாடல்களில் அதிசயப்பாடல்கள் இந்து ஆறு மட்டுமே எண்சீர் விருத்தப் பாடல்கள்!

tags –இந்திரன், இராமன், துதி, கம்பன்

Indra in Indus Valley on Airavata Vahana, Indra’s name Cakra is above him

****

கவிகள் திலகம் கம்பன் கண்ட திலகம்! (Post No.6653)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 20 JULY 2019


British Summer Time uploaded in London – 9-38 AM

Post No. 6653


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

பூலோகத்துக்குப் பெயர் எப்படி வந்தது? கம்பன் கண்டுபிடிப்பு! (Post No.6190)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 13 March 2019


GMT Time uploaded in London –15-12


Post No. 6190

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நாலாவது கடவுள் ஹனுமான்! கம்பன் புகழாரம் (Post No.5702)

WRITTEN by London Swaminathan



swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –7-47 am

Post No. 5702


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Written for the Radha Madhav Kalyan Mahotsav Souvenir in London released on 25-11-2018

கம்ப ராமாயணத்தில் ஹனுமானை மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கிறான் கம்பன். . ‘சொல்லின் செல்வன்’ என்ற சிறப்புப் பட்டத்தை, அடை மொழியை, ஹனுமானுக்கு ராமன் வழங்கியதைப் பலரும் அறிவர். யுத்த காண்டத்தில் ஓரிடத்தில் எதிரி கூட அனுமனைப் புகழும் ஒரு பாடலை நம் முன் வைக்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்.

எல்லோருக்கும் தெரிந்த கடவுள் திரிமூர்த்தி- அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு அடுத்தபடியாக யாராவது உளரா? அப்படியானால் அவர் யார்?

கம்பன் சொல்கிறான்:- உண்டு, அவன்தான் அனுமன்.

ஒருவரை நண்பர்கள் புகழ்ந்தால் நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஒருவனை அவனுடைய எதிரியே புகழ்ந்தால்- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம் அல்லவா?

ராவணன் தரப்பைச் சேர்ந்த மாலியவான் கூற்றாக கம்பன் சொல்லும் பாடல் இதோ:

 

முறைகெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்

குறைஇலை குணங்கட்கு என்னோ கோள்  இலா  வேதம் கூறும்

இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமேதான்

அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.

-மாயா சீதைப் படலம், யுத்த காண்டம்,

பொருள்

உலகப் படைப்பின் முறையே மாற வேண்டுமானாலும், அனுமன், தான் நினைத்ததை செய்து முடித்து விடுவான். அவனிடமுள்ள குணங்களுக்குக் குறைவில்லை. குற்றமற்ற வேதங்கள் சொல்லும் கடவுளர் மூவர்தான் என்பது ஆராயாதோரின் கருத்து ஆகும். ஒலிக்கும் வீரக் கழலை அணிந்த அனுமனோடு முதற் கடவுளர் நால்வர் ஆவர்.

இது அருமையானதொரு பாராட்டு. அனுமனின்றி ராமன் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆகவே கம்பன் கூறுவது உண்மையே.

 

இதற்கு முன்னர், ராமனே அனுமனைப் புகழ்ந்த காட்சியையும் காணலாம்.:

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா (Welcome to Kishkinda) ” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராம லெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

TAGS–  நாலாவது கடவுள், ஹனுமான், கம்பன், அநுமன்

-சுபம்-

கம்பன் பாட்டில் ஏழு கடல்கள் (Post No.5655)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12 November 2018

GMT Time uploaded in London –11-20 am
Post No. 5655

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்துக்கள்  இயற்கைப் பொருட்களையும் செயற்கைப் பொருட்களயும் கடவுளரையும் ஏழு ஏழாகப் பிரித்து இருப்பதை நாம் அறிவோம்.

பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு குகை தாண்டி’ என்றெல்லாம் எழுதினர்.

நாம் உலகை ஏழு த்வீபங்களாக (பெருநிலப்பரப்பு) பிரித்தோம். கடல்களை ஏழாகப் பிரித்தோம்.

உதிரம் = இரத்தம்

1000 ஆண்டுகளுக்கு முன்னர், கம்பன் காலத்தில், மக்களுக்கு இவை நன்கு தெரிந்து இருந்ததால்  கம்பன் இது பற்றி ஒரு பாடலில் பாடுகிறான்.

உப்புதேன் மதுஒண் தயிர் பால் கரும்பு

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்

தப்பிற்று  அவ் உரை இன்று ஓர் தனிவினால்

-யுத்த காண்டம், மூல பல வதைப்படலம்

பொருள்

பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.

ஸம்ஸ்க்ருதத்தில்  இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்),  சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்

TAGS–

-subham–

ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை! (Post No.5223)

Very Rare Picture of Tamil Yaz- Musical Instrument

Written by London swaminathan

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London – 8-06 am  (British Summer Time)

 

Post No. 5223

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.

காரைக்கால் அம்மையார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மலைபடுகடாம் ஆசிரியர்) ஆகியோரை விஞ்சும் பட்டியலைக் கம்பன் தருகிறான்!

கும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி

பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை

அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே

 

பொருள்:-

 

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு,  சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.

 

இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.

கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.

From my old Aticles:-

 

தமிழ் இசைக் கருவிகள்

1.காரைக்கால் அம்மையார் ஏழு பண்களையும் 11 இசைக் கருவிகளையும் கம்பனுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலிட்டார்

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண்  கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

காரைக்கால் அம்மையாருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் மலைபடுகடாமில் ஒரு பட்டியலைப் பார்க்கிறோம்

 

M S WITH SAROJINI DEVI

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இசை!!

Music from Temple Pillars- Indian Wonder

–சுபம்–

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

 

Written by London Swaminathan 

 

Date: 30 APRIL 2018

 

Time uploaded in London – 16-00  (British Summer Time)

 

Post No. 4963

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

கம்பன் இயற்றிய ராமாயண காவியத்தில் நிறைய அறிவியல் செய்திகள் உள்ளன. நமது பூவுலத்தைத் தவிர நிறைய உலகங்கள் உள்ளன; அங்கேயும் உயிரினங்கள் உள்ளன என்பதெல்லாம் மிகவும் தெரிந்த விஷயங்கள் போல போகிற போக்கில் அனாயாசாமாகச் சொல்கிறான் கம்பன்; உண்மைதான்; மஹாபரதத்திலேயே அர்ஜுனன் மேலுலகம் சென்று திரும்பி வந்த விஷயம் உள்ளது;  வால்மீகி ராமாயணத்திலேயே விமானம் பற்றிய செய்திகள் உள்ளன. இதே போல அணு விஞ்ஞானம் அவ்வையார் பாடல்களிலும் திருமூலர் பாடல்களிலும் கம்பன் பாடல்களிலும் காணப்படுகின்றன. இது பற்றிய முந்தைய எனது கட்டுரைகளின் இணைப்பை கீழே காட்டுவதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை. கம்பன் பாடல்களை மட்டும் தருகிறேன்.

 

இந்த பூமியும் கோள்களும் பிரபஞ்சமும் வட்ட வடிவானமவை. இதை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே அறிந்த இந்து மத விஞ்ஞானிகள் இதை அண்டம் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லால் குறித்தனர். அண்டம் என்றால் முட்டை; அந்த வடிவில் வானத்தில் இருக்கும் எல்லா  கிரஹங்களும் நட்சத்திரங்களும் தென்படுவதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவர்

கம்பன் எழுதிய காவியம் சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. ஆனால் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களோ பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. வேதங்களிலும் இந்தக் கருத்து உளது.

மாணிக்கவாசகர் முதல் பாரதியார் வரை பல்லாயிரம் அண்டங்கள் இருப்பதைப் பாடிப் பரவியுள்ளனர்.

 

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும்

கற்றை அஞ்சடைக்கடவுளும் காத்து அழிக்கும்

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன்புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்

 

பொருள்

மேலும் அந்த இரணியன் (ஹிரண்யகஸிபு), எந்தக் காலத்தும் அழியாமல் இருப்பவன் என்று வேதங்கள் சொல்லும் திருமாலும், நான்முகனும் அழகிய சடையுடைய திருமாலும் முறையே காத்து அழிக்கும்  அண்டத்தின் எல்லை மட்டுமா? இந்த அண்ட கோளத்திற்கு அப்பாலுள்ள  மற்ற அண்டங்களில் உள்ள எல்லாரும் தன் பெயரையே சொல்லித் துதிக்குமாறு வாழ்ந்தனன்.

 

ஏனைய அண்ட கோளங்கள் இருப்பதும் அங்கே வசிப்பவர்கள் பேச முடியும் என்பதும் நம்மவர்களுக்குத் தெரிந்த மிக சாதாரண விஷயம் என்பதை இந்தப் பாட்டு காட்டுகிறது.

 

அண்டம் என்பது முட்டை வடிவினதே என்று அறுதியிட்டுக் கூறுகிறான் கம்பன்:

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்

பயிற்றிய பருவமொத்த……………………………………..

 

திருமாலால் படைக்கப்பட்ட அண்ட கோளங்கள் குஞ்சு பொரிக்காத நிலையில் உள்ள முட்டைகள் போல விளங்க……………….

 

இதில் அண்டம் என்பது முட்டை வடிவமே என்று தமிழ்ப்படுத்திக் காட்டுகிறான் கம்பன்.

 

கால நேரம் பற்றிய அற்புத அறிவு

 

ஒரு நொடியை ஆயிரம் கூறாகப் போடுவது குறித்து பாடல் பாடுவதால் அக்கால மக்களுக்கு இவை எல்லாம் அத்துபடி என்பது சொல்லாமலேயே விளங்கும்:-

அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி

உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்

 

பொருள்:-

ஒரு இமைப் பொழுதை நுட்பமாக ஆயிரம் கூறாகப் பிளந்து, அந்த பகுப்புகளுள் ஒரு பகுப்பான சிறிது பொழுதிலே, உன் தந்தையை அவன் செய்த குற்றத்துக்காக யான் சினந்து அவன் உடலை நகங்களால் பிளந்து வருத்தியதைக் கண்ணெதிரே கண்டும் உள்ளம் கலங்காத மனநிலைக் கொண்ட நினக்கு யாம் இப்பொழுது என்ன கைம்மாறு செய்வோம் என்று பிரஹலாதனை நரசிம்மன் வடிவெடுத்த  விஷ்ணு கேட்கிறான்.

 

 

இன்று நம்மிடையே கம்ப்யூட்டர்கள் இருப்பதால்  ஒரு வினாடியை ஆயிரத்தால் வகுத்து,விண்கலங்களை விண்ணில் செலுத்த முடிகிறது. அந்தக் காலத்தில் இப்படி ஒரு நொடியை ஆயிரமாகப் பிரிக்கும் விஷயங்களை வெளிநாட்டார் சிந்திக்கவும் இல்லை; சிந்திக்கவும் முடியாது. ஏனெனில் கணிதமும் ‘டெஸிமல் சிஸ்டமும்’ (தசாம்ஸ முறை) எண்களும் பூஜ்யமும் உலகிற்கு நாம் கற்றுக் கொடுத்த விஷயங்களாகும்!!!

MY OLD ARTICLES ON EXTRA TERRESTRIALS AND CONCEPT OF TIME

 

வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/

2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் … இந்துக்களின் வெளி உலகவாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் …

 

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது …

https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…

22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண …

 

 

science and religion | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/science-and-religion/

15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும். வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் …

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய …

https://tamilandvedas.com/…/வெளி-உலகவாசிகள்-… – Translate this page

2 Jul 2017 – … ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது. 5.அவர்கள் மானசீகமாக எங்கும்பயணம் செய்யலாம். 6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே. ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு …

 

காலப் பயணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காலப்-பயணம்/

Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் …

 

விண்வெளி அறிவியல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/விண்வெளி-அறிவிய…

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு … காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) …

தமிழர்கள் கணித மேதைகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தமிழர்கள்-கணித-மேத…

ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974. சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் …

Tamil and Vedas | A blog exploring themes in Tamil and vedic …

https://tamilandvedas.com/page/10/?ca – Translate this page

21 Sep 2017 – திருமந்திரம். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை. மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில். தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி. சிங்கார மான ….tamilandvedas.com/tag/ka. Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this .. –சுபம்–. Leave a comment.

 

Science & Religion | Tamil and Vedas | Page 14

https://tamilandvedas.com/category/science…:/tamilandvedas…/14/

17 Dec 2012 – அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப்பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) …

 

–சுபம்–

கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம் (Post No.4960)

Written by London Swaminathan 

 

Date: 29 APRIL 2018

 

Time uploaded in London – 9-25 am (British Summer Time)

 

Post No. 4960

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

எட்டெழுத்து, ஐந்தெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களின் புகழை இந்துக்கள் அனைவரும் அறிவார்கள்.

 

ஓம் நமோ நாராயணாய என்று சொல்லி, கோபுரத்தின் உச்சியில் இருந்து எட்டெழுத்து மந்திரத்தின் பெருமைதனை பறை  சாற்றினார் ராமானுஜர்.

ஐந்தெழுத்தின் மந்திர சக்தியை நமசிவாய என்று சொல்லி பல அற்புதங்களைச் செய்து தமிழ் கூறு நல்லுலகத்தை சைவ நெறியில் திருப்பினர் அப்பர், சம்பந்தர், சுந்தர மாணிக்க வாசகர் முதலானோர்.

 

ஓம் சரவண பவ என்று சொல்லி ஆறெழுத்தின் மந்திர சக்தியை உலகிற்கு நிலை நாட்டினர் அருணகிரி நாதர், தேவராய சுவாமிகள் முதலானோர்.

 

கம்பன் பாடிய ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் பிரஹலாதன் வாயிலாக எட்டெழுத்து மந்திரத்தின் மஹிமையை கம்பன் சொல்லும் அழகு தனி அழகு. கம்பன் வழி தனீ,,,,,,,,,,,,,,,,,, தனி வழி!

 

கம்பன் பாடல் ஒவ்வொன்றையும் மென்று, கடித்து, சுவைத்து, ரஸித்துப் படிக்க வேண்டும்.

 


சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

 

என்று பாரதி சொன்னானே அது பாரதி கவிதைக்கும் பொருந்தும்; கம்பன் கவிதைக்கும் பொருந்தும்.

 

இதோ எட்டெழுத்து மந்திரப் பாடல்கள்:

இரணியன், அவனுடைய மகனான பிரஹலாதனை, ஓம் நமோ ஹிரண்யகஸிபே நமஹ என்று சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இதற்காக ஒரு பிராஹ்மண வாத்தியாரையும் அமர்த்தி பாடம் சொல்லிக்  கொடுக்கிறான். அவனோ மீண்டும் மீண்டும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தை உச்சரிக்கிறான். ஆசிரியர் ஐயாவுக்கு குலை நடுக்கம் எடுத்தது. உடனே ஓடிப்போய் ஹிரண்யகஸிபுவிடம் உண்மையை உரைக்கிறார். அவர் நுவல்வதைக் கேட்டு பிரஹ்லாதனைப் பல வகைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறான். அவனும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மாமன்னன் மஹேந்திர பல்லவனின் சித்திரவதைகளில் இருந்து ஐந்தெழுத்து மந்திரம்ர சொல்லி தப்பியது போல, எட்டெழுத்து மந்திரம் சொல்லித் தப்பி விடுகிறான்.

 

அப்பொழுது இரணியன் நேரே வந்து தன் மகனை அடக்கப் பார்க்கிறான். அந்தக் கட்டத்தில் பிரஹலாதன் சொல்லுவான்:

 

 

 

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

 

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

 

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

 

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய

 

கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய.

மண்ணின் நின்று மேல் மலர் அயனுலகு உறவாழும்

எண் இல் பூதங்களில் நிற்பனதிரிவன இவற்றின்

உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்

எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே பிறிது இல்லை

 

பொருள்

இந்த பூமி முதல் மேலேயுள்ள பிரம்ம லோகம் வரையுள்ள எல்லா உலகங்களிலும் இருக்கும் உயிரினங்களிலும் அறிவும் நினைப்பும் இந்த எட்டெழுத்துதான்.

 

முன்கண் டேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா

மக்கள் காறும் இம்மந்திரம் மறந்தவர் மறந்தார்

புக்குக் காட்டுவதரிது இது பொதுவுறக் கண்டார்

ஒக்க நோக்கினர் அலவர் இதன் நிலை உணரார்

பொருள்:

மூன்று கண் உடைய சிவனும் நான்கு முகம் உடைய பிரம்மாவும் முதலாக சாதாரண மனிதர் வரை யாராவது இந்த எட்டெழுத்துப் பெயரை மறந்தால் அவர்கள் இறந்தவர்களே இதன் மஹிமையை விரித்துச் சொல்ல இயலாது; சமய வேறுபாடின்றி நடு நிலையோடு பார்க்கும் விவேகம் உடையோருக்கு– ஞானிகளுக்கு– இதன் மஹிமை நன்கு விளங்கும்; கல்லாத மற்றவர் இதன் பெருமையை அறியார்.

 

இவ்வாறு பிரஹலாதன் விளக்கிக் கொண்டே போகிறான்.

கம்பன்   இ ந்தப் படலத்தில் ஓம், உபநிஷதம் முதலிய தத்துவங்களையும் விளக்குகிறான்.

 

ஒவ்வொரு பாடலையும் ஊன்றிப் படிப்போருக்கு ஆனந்தம் கிட்டும்.

 

–சுபம்–

வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-37

 

Post No. 4508

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.

 

புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்

என்னும் ஈது அருமறைப் பொருளே

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி

மாதவம் அறத்தொடு வளர்த்தார்

எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்

ஏழ் உலகு ஆள் இடம் என்றால்

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்

உறைவு இடம் உண்டு என உரைத்தல்

——பால காண்டம்

பொருள்

 

இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள்  கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.

 

xxxxxxxxxxxxx

காலத்தால் அழியாத மறை!

தாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா

கீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்

கோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.

கிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்

பொருள்

காம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன்,  தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே! கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.

 

அதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.

xxxxx

வேதத்தின் உயர்வு

 

மேவ   அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண்புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண்பொறி அடக்கிய செயலால்

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

 

—–பாலகாண்டம்

 

பொருள்:

அந்த மதில், அறிவினால்  முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;

விண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;

போர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;

காவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;

தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;

 

யாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.

 

 

நல்ல கற்பனை! அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.

 

இந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.

 

xxxxxxxxxxxx

வேதம் பொய்க்குமோ?

 

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ

இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்

சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்

 

பொருள்:

துன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா? நரகத்துக்கு உரியவனான  இராவணன் வெற்றி அடைவதா?  தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ? பாவம் வெற்றி பெறுமா? இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா? என்று சீதை புலம்பினாள்

 

இதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.

xxxxx

வேத பாராயணம்

கிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:

அருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்

முருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப

இருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்

திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்

 

பொருள்:

கலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும்,  முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இசை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.

 

வானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.

 

எங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது!

 

 

உபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.

TAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை

 

–SUBHAM—