Index 63- London Swaminathan Articles posted in February 2018 (Post No.9525)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9525

Date uploaded in London – –24 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

February  2018,  Index 63

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9500 PLUS POSTS.

Xxxx

ENGLISH ARTICLES WRITTEN  BY LONON SWAMINATHAN IN February 2018

Christian Miracle Anecdotes, Post 4689;1 February,2018

Christian Conversion Anecdotes, 4693;2/2

Ayurveda Exhibition in London, 4696;3/2

2600 year old Plastic Surgery , 4700; 4/2

What did Dr.Paira Mall buy for Rs.229 for London Museum in 1911;4704;5/2

Zodiac Man and Rare Pictures of Human Body in London,4708;6/2

Shocking blessing of living Buddha, 4713; 7/2

I you don’t find god, you must leave the college,4716;8/2

Muslim,Christian Superstition Anecdotes,4725;10/2

Stories based on two Tamil Proverbs,4730;11/2

Crow in Chanakya Niti, 4733;12/2

Chanakya Niti and Tamil poetess Avvaiyar,4739;13/2

None has grown richer by envying- A story,4744; 14/2

Aasa dukkasya karanam,4748;15/11

Isa vasyam idam sarvam story,4752;16/2

Treat your son as your friend,4755;17/2

Sin and Sinners Anecdotes,4759;18/2

I am your Treasure, preserve me, Vedas said to Brahmins,4764;19/6

No make up, No Drama, No Song- Chanakya strict with Students, 4768;20/2

Chanakya s praise for Brahmins, 4771;21/2

Good and bad Brahmins- Chanakya s definition, 4775; 22/2

31 Quotations from the Rigveda,4778;23/2

Poets observation on bees,4782; 24/2

Divorce Anecdotes 4787;26/2

Animals in Human forms: Attack on meat eaters and Drunkard s , 4791; 27/2

Wealth accumulated by Frauds disappears after ten years ,4795: 28/2

xxxx

பிப்ரவரி 2018 இண்டெக்ஸ் 63

ஆணா , பெண்ணா ? யார் நல்லவர்? பழமொழிக்கதை ,

போஸ்ட் 4690, முதல் தேதி,பிப்ரவரி 2018

காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- அடித்துச் சொல்கிறார் மநு , 4693, 2/2

லண்டனில் ஆயுர்வேதக் கண்காட்சி , 4697, 3/2

அதிசய மூக்கு ஆபரேஷன், லண்டன் கண்காட்சி தரும் தகவல், 4701, 4/2

லண்டன் கண்காட்சியில் அரிய செக்ஸ் புஸ்தகம், 4705, 5/2

மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும் -ராமாயண,

மஹாபாரத அதிசயம், 4709, 6/2

ஆயுர்வேத அதிசயங்கள் , 4712, 7/2

செப்பியது யாரோ? தப்பாமல் சொல்!, 4717, 8/2

காதல் நோய்க்கு களிம்பு! அவுரங்க சீப் மகிழ்ச்சி 4721, 9/2

டெலிபோனுக்கு முஸ்லீம் கடும் எதிர்ப்பு, 4724, 10/2

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? 4728, 11/2

பழ மொழிக் கதை : சுழியா வருபுனல் இழி யாதொழிவது 4729, 11/2

காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது ,4734, 12/2

96 தத்துவங்கள் எவை? 4737, 13/2

சித்தர்கள் செய்த எட்டு வகை அற்புதங்கள் ,4738, 13/2

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி, 4742, 14/2

பிராணா யாம ரஹசி யங்களும் அற்புதங்களும் , 4744, 14/2

வள்ளுவன் கதை : அழுக்காறு என ஒரு பாவி ,4747, 15/2

பேராசை பெரு நஷ்டம், பழமொழிக் கதை 16/2

அவனின்றி ஓர் அணுவும் அசையாது கதை , 4756, 17/2

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்

சாணக்கியன் அறிவுரை , 4760, 18/2

TAMIL QUIZ நீங்கள் தமிழ் புஸ்தகத்தைக் கரைத்துக் குடித்தவரா ? 4762, 19/2

வேதம் ப்ராஹ்மணனிடம் என்ன சொன்னது? 4763, 19/2

பண்டம் ஓரிடத்தில், பழி ஓரிடத்தில் – பழமொழிக்கதை ,4767, 20/2

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது –

சாணக்கியன் கட்டளை , 4770, 21/2

சொர்க்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் –

சாணக்கியன் செப்பியது ,4774, 22/2

நல்ல பிராஹ்மணன் யார்? சாணக்கியன் இலக்கணம் 4778, 23/2

நேதாஜியின் அரிய கடிதங்கள் ( IN ENGLISH AND TAMIL)  , 4780, 24/2

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன?புலவர்கள் கண்டுபிடிப்பு, 4781, 24/2

ஜோதிடர் மோசடியும், 114 மோசடி முறைகளும் 4784, 25/2

31 நாலடியார் பொன்மொழிகள் , மார்ச் காலண்டர், 4785, 25/2

ஒரு தாஸியின் எட்டு அடுக்கு மாளிகை , 4788, 26/2

தமிழில் இருந்து  ஆங்கிலமும் உலக மொழிகளும் தோன்றினவா?4790, 27/2

மாம்ஸ பக்ஷிணி , குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன்

கடும் தாக்கு , 4794, 28/2

மாமியின் புலம்பல்கள் : தலையணை மந்திரோபதேசம் ,4794, 28/2/2018

—subham—

tags- சாணக்கியன், Index 63, February 2018, பிப்ரவரி 2018 இண்டெக்ஸ் 63

ஐயர் குடுமி அவிழ்ந்தது ஏன்? (Post No.6770)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 13 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  7-57 am

Post No. 6770

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியன் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. பழங்கால பாரதத்தில் மூன்று ஹீரோக்கள் (Three Heroes) இருந்தனர். அவர்கள் – 1.விக்ரமாதித்தன், 2.உதயணன், 3.சாணக்கியன் ஆவர். இவர்கள் மூவரும் சரித்திர புருஷர்கள். கட்டுக்கதை, கற்பனை கதாபத்திரங்கள் அல்ல. இவர்களில், 2000 ஆண்டுக்கு முன் எழுந்த ஸம்ஸ்க்ருத நாடகங்களில் சாணக்கியன் பற்றி பல கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் அவை காணப்படும். ஆயினும் அவை அனைத்திலும் இழையோடும் கருத்து ஒன்றுதான்.

நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்ட 9 மன்னர்கள், இப்போது தமிழ்நாட்டிலுள்ள திராவிடர்களைப் போல ஒரு பக்கம் பூஜையும் மறு பக்கம் பிராமண எதிர்ப்பும் காட்டி வந்தனர். அவர்கள் க்ஷத்திரியர்கள் அல்ல. சாணக்கியனோ கறுப்பு நிற பார்ப்பான்; காக்கையுடன் அழகிலும் வண்ணத்திலும் போட்டி போடுவார்!!

அவர் ஒரு முறை பிராஹ்மண போஜனத்தில் பந்தியில் அமர்ந்தார். அவரை நந்தர்கள் கேலியும் கிண்டலும் செய்து பந்தியிலிருந்து தர தர என்று வெளியே இழுத்து அவமானப் படுத்தினர்.

திரவுபதி கூந்தலை அவிழ்த்த்து கௌரவர்களை அழிக்க சபதம் செய்தது போல அவரும் குடுமியை அவிழ்த்தார். இந்த நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதம் செய்து, முரா என்ற மயில் வளர்க்கும் கீழ் ஜாதியைச் சேர்ந்த மௌர்ய சந்திர குப்தனுக்குப் படைப் பயிற்சி அளித்தார். அவன் தலைமையில் மகத்தான மௌர்ய சாம்ராஜ்யம் உருவானது. நந்தர்களும் பிராமண எதிர்ப்பும் அடியோடு ஒழிந்தது. மௌர்ய சந்திர குப்தனின் மஹத்தான படைபலத்தை அறிந்த அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் நுழையாமல், காஷ்மீர் எல்லையுடன் திரும்பிப் போனார்.

கௌடில்யம் எனும் அர்த்த சாஸ்திரத்தை — உலகின் முதல் பொருளாதார புஸ்தகத்தை — எழுதி புகழும் பெற்றார். அவர் பெயரில் பல நீதி சாஸ்திர நூல்களும் உண்டு.

அத்தனையும் சொல்லும் message

மெஸ்ஸேஜ் ஒன்றுதான்  – முள்ளை முள்ளால் எடுக்கலாம்; வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஒரு தலித் ஜாதி ஆளைக் கொண்டே அதர்மத்தை அழிக்கலாம்.

வாழ்க ‘தலித்’ சந்திர குப்தன்  ! வளர்க பார்ப்பான் சாணக்கியன் புகழ்!!

இத்துடன் இணைத்துள்ள பகுதியில் ஐயர் குடுமியை அவிழ்த்த சுவையான சம்பவம் உளது. படித்து மகிழ்க.

–subham–

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! (Post No.4819)

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 16-22

 

Post No. 4819

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

 

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

 

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

 

என்று தமிழ்ப் பெரும் சித்தர் சிவவாக்கியர் பாடினார். இது 2300 ஆண்டுகளாகப் பாரதத்தின் தென் குமரி முதல் வட இமயம் வரை நிலவிய கருத்து என்பது சாணக்கிய நீதியைப் படித்தோருக்கு விளங்கும்.

சாணக்கியன் சொல்கிறான்,

படந்தி சதுரோ வேதான் தர்மசாஸ்த்ராண்யனேகசஹ

ஆத்மானம் நைவ ஜானதி தர்வீ பாகரஸம் யதா

 

மக்கள் நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் படித்தும் தன்னை அறியும் அறிவில்லாவிடில் என்ன பயன்? சுவையான உணவைப் பரிமாறும் கரண்டிக்கு அந்த உணவின் சுவை தெரியுமா?

–சாணக்கிய நீதி 16-12

 

 

சாணக்கியன் சொல்லும் மரபியல் விஞ்ஞானம்

சாணக்கியன் உலக மஹா அறிவாளி; அலெக்ஸாண்டர் காலத்தில் வாழ்ந்தவன்; 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் மரபியல் பற்றிப் பேசுகிறான்; கருவிலேயே திரு உற்றதாக நாயன்மார்கள் பாடினர்; மாணிக்க வாசகரோவெனில் திருவாசகத்தில் ஒரு கருவின் பத்து மாத வளர்ச்சியைப் பாடினார்.

 

சாணக்கியன் பகர்வதாவது,

 

கருவில் இருக்கும்போதே கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரணம்.

என்ன அதிசயம்!

இதைப் பார்க்கையில் ஜோதிடம் உண்மையே என்பது விளங்கும்.

 

இந்துக்கள் குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னர் குடும்ப ஜோதிடர் மூலம் ஜாதகத்தை எழுதி வாங்குவர்; அதில் அவர் அக்குழந்தையின் படிப்பு, ஆயுள், வேலை, செல்வ வளம் முதலியன குறித்து எழுதி விடுகிறார். இது 2300 ஆண்டுகளாக இருப்பது சாணக்கிய நீதி மூலம் தெரிகிறது:–

ஆயுஹு கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச

பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யதே கர்பஸ்தஸ்யைவ தேஹினஹ

4-1

 

ஒரு தாயின் கரு பத்து மாத வளர்ச்சியில் நோக்கும் ஆபத்துகளை போற்றித் திரு அகவல் என்னும் திருவாசகப்   பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார். அவர் தேவாரம் அருளிய மூவர்க்கும் முதல்வர்.

 

 

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

  1. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
  2. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
  3. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

–சுபம்–

கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து! (Post. 4804)

Written by London Swaminathan 

 

Date: 3 MARCH 2018

 

Time uploaded in London – 13-18

 

Post No. 4804

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மேல் ஜாதி கீழ் ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், சாணக்கியன் ஒரே கருத்து! (Post. 4804)

 

நான்கு வருண (ஜாதி) மக்களில், கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் கற்றால் அவனையே எல்லோரும் வணங்குவர், போற்றுவர் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றிலும், வள்ளுவன்  திருக்குறளிலும், சாணக்கியன் சாணக்கிய நீதியிலும், மனு அவரது தர்மசாஸ்திரத்திலும் உரைக்கின்றனர்.

 

மேல்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

 

பொருள்

உயர் குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவராக இருந்தால், கீழ்க்குடியில் பிறந்து கல்வி கற்றுச் சிறந்து விளங்கும் கற்றாரைப் போலப் பெருமை பெற முடியாதவர்களே.

 

 

xxx

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு சாணக்கியன்

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் ஜாதி மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

xxxx

 

மனு தர்ம சாஸ்திரத்தில்

மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.

 

“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;

குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;

எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;

தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”

மனு ஸ்ம்ருதி 2-239

“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,

தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்

ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-240

 

“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-241

xxx

புற நானூற்றில் நெடுஞ்செழியனும்

இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!

பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்

ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே

 

 

 

பொருள்:-

“நான்கு ஜாதிகளில்,  கீழ் ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)

 

அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்தவனை, பிராமணனும் வணங்குவான்.

 

 

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் …

https://tamilandvedas.com/…/மேல்-ஜாதி-கீழ்-ஜா…

16 Apr 2017 – மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! … இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) … என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன.

 

–subham–

 

 

 

காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734)

Date:12 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-26 am

 

Written by London swaminathan

 

Post No. 4734

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

Kaka Vahana from Tirunallaru Temple; Lalgudi Veda Picture

காகத்திடம் நல்ல குணங்களும் உண்டு; தீய வழக்கங்களும் உண்டு; அவரவர் பார்வையில் எது தென்படுகிறதோ அதை வைத்து அதனைப் பாராட்டவும் செய்வர்; இகழவும் செய்வர்; காகம் எல்லாரையும் அழைத்து உண்பதையும், மறைவாக செக்ஸ் செய்வதையும் தமிழ்ப்புலப்வர்கள் பாடினர். ஆனால் சாண்க்கியனோ அதிரடிட் தாக்குதலில் இறங்கிவிட்டார். இது 2300க்கு முந்தைய பாடல்; தமிழர்கள் பாடியதோ அவருக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்!

 

எனது முந்தைய காகக் கட்டுரைகளில் நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றையும் காண்க.

 

சாணக்கியன் உரைப்பான்

 

நராணாம் நாபிதோ தூர்த்தஹ பக்ஷீணாம் சைவ வாயஸஹ

சதுஷ்பதாம் ஸ்ருகாலஸ்து ஸ்த்ர்ரீணாம் தூர்த்தா மாலினீ

 

ஸ்லோகம் 21, அத்யாயம் 5, சாணக்கிய நீதி

பொருள் என்ன?

மனிதர்களில் தந்திர சாலி நாவிதன்

பறவைகளில் தந்திர சாலி காகம்

மிருகக்ங்களில் தந்திர சாலி நரி

பெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி

 

XXXX

 

கெட்ட பறவை! சண்டாளன்!

இன்னொரு ஸ்லோகத்தில் காகத்தை சண்டாளன் என்று சாடுகிறான் சாணக்கியன்:

பக்ஷீணாம் காகஸ் சாண்டாளஹ பசூனாம் சைவ குக்குரஹ

கோபீ முனீனான் சாண்டாளஹ சர்வேஷாம் சைவ நிந்தகஹ

 

பொருள் என்ன?

பறவகளில் தாழ்ந்தது  காகம்

மிருகங்களில் தாழ்ந்தது நாய்

முனிவர்களில் தாழ்ந்தவர் கோபக்காரர்

மனிதர்களில் தாழ்ந்தவன் பிறரைத் தூற்றுபவன்

அத்யாயம் 6, ஸ்லோகம் 2

 

XXXX

கவிஞர்களும் காகமும்

கவயஹ கிம் ந பஸ்யந்தி கிம் ந குர்வதி யோஷிதஹ

மத்யபாஹா கிம் ந ஜல்பந்தி கிம் ந பக்ஷந்திவாயஸாஹா

அத்யாயம் 10, ஸ்லோகம் 4

 

பொருள்

கவிஞர்கள் கண்களுக்குப் புலப்படாதது ஏதேனும்  உண்டா?

பெண்கள் செய்யாதது ஏதேனும்  உண்டா?

 

குடிகாரர்கள் உள றாதது ஏதேனும்  உண்டா?

 

காகங்கள் சாப்பிடாதது ஏதேனும்  உண்டா?

 

xxxxx

 

காகம் கருடன் ஆகுமா?

 

க்ணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ

ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே

அத்யாயம் 16, ஸ்லோகம் 6

 

ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;

அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?

 

MY OLD ARTICLES

கா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/கா-கா-பராசக்தி-பாட…

Translate this page

கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …

 

 

காகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காகம்/

Translate this page

5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.

 

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் …

https://tamilandvedas.com/…/பிரிட்டனில்-கா-கா-…

Translate this page

27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …

 

 

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு …

https://tamilandvedas.com/…/காகத்திடம்-கற்க-வே…

Translate this page

5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …


(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

–Subham —

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

Written by London Swaminathan 

 

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

 

Post No. 4572

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

 

 

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

 

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

 

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

 

தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு

அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:

கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள்  – இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.

குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா

புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்

—அத்தியாயம் 4, ஸ்லோகம் 8

 

xxxx

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !

இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும்  சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது  குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;

பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;

சபையில்  நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;

வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.

 

 

விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.

அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்

திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

xxxx

திருப்தி வேண்டும்

ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.

 

ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே

த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ

—அத்தியாயம் 7, ஸ்லோகம் 4

பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna)  தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist);  நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ்  பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.

 

அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.

அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:

எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து  அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.

 

இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.

இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.

 

நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.

 

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள்.

 

–சுபம்—

 

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

Written by London Swaminathan 

 

Date: 31 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-32 am

 

 

Post No. 4568

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)

உணவு அருந்த போது மவுனமாக இருக்க வேண்டும் யார் சொன்னார்? உலக மஹா அறிவாளி சாணக்கியன்

 

இதன் தாத்பர்யம் நமக்கும் புரியும். உப்பு போடவில்லை அல்லது உப்பைக் கூடுதலாகப் போட்டுவிட்டாய்; ஒரே புளிப்பு, ஒரே உரைப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மனைவியையோ அம்மாவையோ, ஹோட்டல் சர்வரையோ திட்டிக் கொண்டே சாப்பிடுபவர்களைக் கண்டுள்ளோம்.

 

இதில் இரண்டு ஆபத்துகள் உண்டு:

ஒன்று நம் கோபத்தால் உடலில் ஏற்படும் நாடித் தளர்ச்சி, AFRINALIN அற்றினலின் சுரப்பு ஆகியன உடல் நலத்தைப் ,,,,,,,,,,,,திக்கும்

இரண்டாவது ஆபத்து- உணவு பரிமாறுவோரின் உள்ளக் கிளர்ச்சியும் மன வருத்தமும் நம்மைக் கட்டாயம் பாதிக்கும்.

 

இதனால் சாணக்கியன் சொல்கிறான்:–

 

யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி

யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே

சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9

 

பொருள்

எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இதன் உட்கருத்து மௌனமாக உண்க; மதிப்பு பெறுக – என்பதே.

 

பிராமணர்கள் தினமும் உணவை நீரினால் சுற்றி மந்திரம் சொல்லிச் சாப்பிடுவர். அதில் அந்த உணவை அமிர்தம் என்று போற்றுவர். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் மந்திர சக்தியும் பெருகியது.  சாப்பிட்டு முடியைந்தவுடன் ‘’அன்னதாதா சுகி பவ’’ என்று ஆஸீர்வதிப்பர்; உண்டி கொடுத்தோர் நீடுழி வாழ்க என்பது இதன் பொருள்.

 

கிறிஸ்தவர்கள் உணவை உண்ணும் முன், அதை வழங்கிய ஆண்டவனுக்கு நன்றி சொல்லிச் சாப்பிடுவர்.

 

முன்னோர்களின் சடங்குக்ள் உளவியல் ரீதியில் நற்பலன்களை விளைவிக்கும்.

 

நமது காலத்தில் மவுனத்தின் மூலம் அருள் வழங்கிய ரமண மஹரிஷியை நாம் அனைவரும் அறிவோம்.

 

மௌனப் ப்ரார்த்தனையின் மஹிமை

இன்னொரு பாட்டில் மௌனப் பிராத்தனையின் மஹிமையைச் சொல்கிறார்:

உத்யோகே நாஸ்தி தாரித்யம் ஜபதோ நாஸ்தி பாதகம்

மௌனே ச கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாகரிதே பயம்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 11

 

முயற்சி திருவினை ஆக்கும்; அங்கே வறுமை தலைக் காட்டாது.  மௌனப் பிரார்த்தனை செய்பவனுக்குப் பாபம் ஒட்டாது; மவுனமாக இருக்கும் இடத்தில் சண்டை சசச்சரவுகள் தோன்றாது; விழித்திருப்பவனுக்கு அச்சம் என்பதே கிடையாது.

நல்ல ஸ்லோகம். கோபத்தில் சுடு சொற்களைப் பொழிந்துவிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்! எவ்வளவு வருத்தப்படுகிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை? ஆட்சிகள் கவிழ்கின்றன; குடும்பங்கள் பிரிகின்றன. இதை எல்லாம் அறிந்தும் நாம் தவறிழைக்கிறோம்!

 

பிரார்த்தனையில் சிறந்தது மௌனப் பிரார்த்தனை. அதற்கு பன் மடங்கு சக்தி அதிகம். முதலில் உரத்த குரலில் சொல்லிப் பழகிவிட்டால் பின்னர் மௌனப் பிரார்த்தனை எளிதாகும்.ஜபம் என்பதே மௌனமாகப் பிரார்த்திப்பதே!

 

 

My old articles on Silence and Prayer.

 

ஜோதி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜோதி/

Translate this page

… மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று! யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனைபுரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் …

பிரார்த்தனை, செய்வது எப்படி? – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பிரார்த்தனை-செய்…

Translate this page

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்டபிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை …

Missing: மௌனப்

நீண்ட ஆயுளுக்கு வேதப் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…

Translate this page

நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206). Written by London Swaminathan. Date: 12 September 2017. Time uploaded in London- 17-35. Post No. 4206. Pictures are taken from various sources; thanks. வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு …

 

 

–SUBHAM–

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

Image of Roman Wine

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 30 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-54 am

 

 

Post No. 4564

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

 

 

யவனர்கள் யார்?, மிலேச்சர்கள் யார்? என்று மூன்று ஆண்டுகளாகச் சில ஆராய்ச்சிக்  கட்டுரைகளை எழுதிவிட்டேன். இப்பொழுது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போலவே சாணக்கியன் காலத்திலும் ‘யவன வெறுப்பு’ இருந்ததைக் காட்டும் பாடல் கிடைத்துள்ளது அதையும் பார்ப்போம். காளிதாசன் கவிதைகளைக் கண்ட போது ஒரு புதிய எண்ணமும் மனதில் உதித்தது. அதையும் சொல்லுவேன்.

 

எனது துணிபு

 

யவனர் என்பது கிரேக்க, ரோமானிய, பாரசீக, அராபிய இனங்களைக் குறித்தது.

 

யவனர் மீது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் வரை இருந்த வெறுப்பு பின்னர் சிறிது சிறிதாகத் தணிந்தது.

 

யவனர்களை கடும் சொல் பேசுவோர், அவர்கள் காவல் வேலைக்கு உகந்தோர், அந்நாட்டு அழகிகள் அந்தப்புரத்தைக் காக்க உதவுவர்; நம் மொழி தெரியாததால் அரசு ரஹஸியங்களைப் பாதுகாக்க அவர்களை அரசனுக்குக் காவலாக வைக்கலாம், மதுபானம் கொடுத்து உபசரிக்க அந்த அழகிகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் தமிழ் , ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து தெரிகின்றன.

Image of Persian Wine

முதலில் சாணக்கியன் சொல்லும் செய்தியைக் காண்போம்:-

 

சாண்டாலானாம் ஸஹஸ்ரைஸ்ச ஸூரிபிஸ்தத்வதர்சிபிஹி

ஏகோ ஹி யவனஹ ப்ரோக்தோ ந நீ சோ யவனாத் பரஹ

 

 

 

 

“உண்மை நிலையை உணர்ந்த அறிஞர்கள் செப்பியது என்ன? ஒரு யவனன் ஆயிரம் சண்டாளர்களுக்குச் சமமானவன். யவனனை விடத் தாழ்ந்தது உலகில் எதுவுமே இல்லை”.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 8, ஸ்லோகம் 5

 

ஏன் இந்த வெறுப்பு? சாணக்கிய நீதி நூலை மொழி பெயர்த்த ஸத்ய வ்ரத சாஸ்திரி பகர்வது யாதெனில், இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள். மேலும் வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்பதாகும்.

 

உண்மைதான் இந்துக்கள் வெறுக்கும் பசு மாமிசத்தைப் புசித்திருப்பர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க வம்ஸத்தினரின் ஆட்சி நிலவியது. அவர்கள் படை எடுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

மேலும் அவர்கள் படுத்துக் கொண்டே உணவு உண்பார்கள் என்பதும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ளது; ‘’சயானா முஞ்சதே யவனாஹா’’ என்று ஸ்லோகம் உள்ளதால் அவர்களுக்கு ‘’துர்யவனம்’’ என்ற அடைமொழி (கெட்ட யவனன்) கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ‘’துர் யவனம்’’ என்பதை ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விளக்க எப்போதும் பயன்படுத்தினர். ஆக பழக்க வழக்கங்களாலும் கடும் சொற்களாலும் (மிலேச்ச பாஷை பேசியதாலும்) இவர்கள் தீண்டத் தகாதவர்கள் (சண்டாளர்) ஆனார்கள்.

 

நான்     இன்னும் ஒரு கருத்தையும் சேர்ப்பேன். ஆரம்ப காலத்தில் இவர்கள் மேலைக் கடற்கரையில் சென்ற நமது வணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளை அடித்திருப்பர். சந்திர குப்த மௌர்யன், அவனுக்குப் பின்னால் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆகியோர் இவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்த பின்னர் கடுமை குறந்து இருக்கும்.

 

பாரஸிக மதுபானம்

என்னுடைய இன்னும் ஒரு ஆராய்ச்சி தமிழகத்துக்குப் பாரஸிக மதுபானம் வந்த செய்தியாகும். யவன அழகிகள் தமிழ் மன்னர்களுக்கு தங்கக் கிண்ணங்களில் மது பானம் வழங்கிய செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது (கீழே எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கான லின்க் LINK உள்ளது. அவைகளில் சங்க இலக்கியம் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கும்.

 

காளிதாசன் அவனது நாடகங்களான சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம், விக்ரம ஊர்வஸீயம் ஆகியவற்றிலும் ரகு வம்ஸத்திலும் யவனர் பற்றிய பல காட்சிகளைத் தருகிறான்:

 

 

ரகுவம்ஸ ஸ்லோகம் இதோ:–

 

யவனீ முக பத்மானாம் ஸேஹே மதுமதம் ந ஸஹ

பாலாமிவாப்ஜானாம் அகால ஜலதோதுயஹ

ரகுவம்ஸம், அத்யாயம் 4, ஸ்லோகம் 61

 

 

பொருள்:

காலை வேளையில் சூரியன் உதயமானவுடன் தாமரை மலர்கின்றது. முன்பே செந்நிறம் பெற்றுள்ள தாமரை மலர்கள், சூரியனது இளம் வெய்யில் படும் பொழுது மேலும் அழகு பெறும். ஆயினும் மேகக் கூட்டம் வந்து ஒளியைத் தடுத்தால் அவை ஒளி குறைந்து காணப்படும் பாரஸீகப் பெண்களின் முகம் செக்கச் செவே என்று தாமரை போல உள்ளன. அந்த அழகிகள் மதுபானம் செய்து மேலும் அழகு பெற்றனர். ஆயினும் ரகு மன்னன், பாரஸீகம் (ஈரான் நாடு) மீது படை எடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன் வாடினர். ஏனெனில் மது பானம் செய்வதைத் தவிர்த்தனர்.

 

யவன என்பதற்கு வியாக்கியானம் செய்தவர்கள் கொடுக்கும் பொருள் பாரஸீகம்

 

இந்த பாரஸீக மதுதான் சங்கத் தமிழ் நூல்களிலும் பயிலப்பட்டது என்பது எனது துணிபு.

Yavana in Barhut Sculpture; 2300 year old.

ஸாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற நாடகத்தில், இரண்டாம் காட்சியிலும் ஆறாம் காட்சியிலும் யவன ஸ்த்ரீகள் நடமாடுகின்றனர். மாமன்னன் துஷ்யந்தனின் படைகளுடன் வந்த பரிவாரத்தில் யவன அழகிகளும் இருந்தனராம் (இதைத் தமிழிலும் காண்கிறோம்). மன்னன் எங்கு எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் யவன மாது ‘வில்’லை எடுத்து வந்தாளாம்.

 

முற்கால மன்னர்களின் சபைகளிலும், அரண்மனைகளிலும் யவன மகளிருக்கு வேலைக்காரி வேலை கொடுக்கப்பட் டத்தை ஏனைய நாடகங்கள் காட்டுகின்றன. இதைத் தில் இலக்கியத்திலும் காண்கிறோம்.

 

ஆக யவனர்கள் என்பது கீழ் மட்ட வேலைக்காரர் அல்லது வேலைக் காரி என்ற பொருளிலேயே சாணக்கியனும் தமிழரும் பயின்றனர்.

 

 

காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் சங்கத் தமிழ் நூல்களில் உபயோகிக்கப்பட்டதால் காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தையவன் என்பதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டினேன். இந்த பாரஸீக மது, யவன வேலைக்காரிகள் என்பதை இன்னும் ஒரு சான்றாகக் கொள்க!

 

 

Persia (Iran)

 

யவனர்கள் யார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யவனர்கள்-யார்/

 

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும்யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன …

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்! | Swami’s …

swamiindology.blogspot.com/2014/08/blog-post.html

1 Aug 2014 – சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று …

“மிலேச்ச” என்றால் என்ன? | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/மிலேச்ச-என்றால…

  1. 6 Sep 2012 – பலுச்சிஎன்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர்.

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி …

https://tamilandvedas.com/…/மிலேச்சர்களை-அழி…

21 Mar 2015 – … ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு. முந்தைய கட்டுரைகள்:–. MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012). “மிலேச்சஎன்றால் என்ன? (Posted on 6 September,2012) …

 

சுபம்–

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

Written by London Swaminathan 

 

Date: 27 DECEMBER 2017 

 

Time uploaded in London- 8-09 am

 

 

Post No. 4553

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

சாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.

இதோ இன்னும் ஒரு கதை:

நந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.

 

இது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.

 

ஏன் சிரித்தாய் மகளே? ஏன் சிரித்தாய்? என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு,     பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.

 

அவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.

சகதாரன் உதவி செய்ய முன்வந்தான்

பெண்ணே! அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்?

பெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.

அரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது?

ஒரு பெரிய மரம் இருந்தது.

 

ஓஹோ! அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா? என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.

மறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.

 

அவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.

 

இவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.

விடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று  வருந்தினான்.

 

ஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு புல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட! இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.

 

சிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.

 

 

இதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.

 

நாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.

பர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார்.  பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன்  மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.

 

இவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.

 

எல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.

பாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின்  முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம்.  அதில் உதித்தவனே        மாமன்னன் அசோகன்.

–சுபம்–

 

சாணக்கியன் பற்றிய சுவையான கதைகள் (Post No.4547)

Written by London Swaminathan 

 

Date: 26 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-36 am

 

 

Post No. 4547

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன் ஒரு பெரிய சிந்தனையாளர்; திட உறுதி பூண்டவர்; வெற்றி பெறுவதற்கு சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் பயன்படுத்தத் தயங்காதவர். இந்தியாவில் தோன்றிய மிகப் பெரிய அரசியல்வாதி அவர்தான் என்றால் மிகையல்ல. பெரிய ராஜ தந்திரி; ராஜதந்திரம் உடையோருக்கு எல்லாம் முன்னோடி என்பதால் எந்த திறமையான அரசியல் வித்தகரையும் ‘சாணக்கியன்’ என்ற அடைமொழியோடு அழைக்கும் அளவுக்கு முன்னுதாரணமானவர். சூழ்ச்சிமிக்கவர்.

 

நரியின் தந்திரமும் யானையின் பேருருவமும், சிங்கத்தின் பராக்ரமும், புலியின் பாய்ச்சலும் உடையவர். ஆயினும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவி; செல்வத்தையும் பதவியையும் துச்சமாக மதித்தவர். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை — அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த பிரம்மாண்டமான படையை– உருவாக்கிய – சாணக்கியன் இருந்ததோ ஒரு சிறு குடிலில்; இதனால்தான் அவருக்கு மதிப்பு; பற்றற்ற வாழ்க்கையில் பற்றுக் கொண்டதால் எதைக் கண்டும் அஞ்சவில்லை.

 

சிறந்த நிர்வாகியான சாணக்கியனை நிறைய புராதன எழுத்தாளர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நீதி நூல்களும் கதைகளும் அவர் பெயரை மொழிகின்றன. தண்டியின் தச குமார சரிதம், விஷ்ணு ஸர்மனின் பஞ்ச தந்திரம் அவர் பெயரைப் போற்றுகின்றன. பாணனும், வராஹமிஹிரரும், சோமதேவரும், நீதி சாஸ்திரத்தின் ஆசிரியர் காமந்தகியும் முதல் அத்தியாயத்திலேயே அவருக்கு முதல் வணக்கம் செலுத்துகின்றனர். விஷ்ணு புராணம் அவரைக் கௌடில்யர் என்ற பெயரில் குறிப்பிடுகிறது. பாகவத புராணம் நந்தர்களை முறியடிக்கும் பிராமணன் என்று மட்டும் சொல்லும்.

 

உயர்ந்த சிந்தனை, பரந்த அறிவு, எளிய வாழ்க்கைக்கு முன்னுதாரணம் சாணக்கியன். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் போன்ற பொருளாதார நூல் பழங்கால உலகில் எங்குமே இல்லை.

 

சந்திரகுப்த மௌர்யன் என்னும் பேரரசனின் அதிகாரி அவர் வீட்டிற்குள் சென்றபோது கண்ட காட்சியை வருணிக்கிறார்:-

 

அஹோ ராஜாதிராஜ மந்த்ரிணோ விபூதிஹி–

 

உபலஸகலமேதத் பேதகம் கோமயானாம்

படுபிருபஹ்ருதானாம் பர்ஹிஷாம் ஸ்தூபமேதத்

ஸரணமபி சமிதிபஹ ஸுஸ்யமாணாபிராபி

விர்னமிதபடலாந்தம் த்ருஸ்யதே ஜீர்ணகுட்யம் (3-15)

 

பொருள்:

மன்னாதி மன்னனின் மந்திரியின் செல்வத்தைப் பற்றிக் கேளுங்கள்:-

பசுஞ்சாண விரட்டிகளை உடைக்க ஒரு கல்லைக் கண்டேன்; அதோ இளம் சிறார்கள் — சிஷ்யப் பிள்ளைகள் — சேகரித்த தர்ப்பைப் புல் இருக்கிறது; அவருடைய குடிலின் சுவர்கள் பாழடைந்து இருக்கின்றன; மேல் கூரையில் காயப்போட்டுள்ள யாகத்துக்கான மரக்  குச்சிகளின் பாரம் தாங்காது கூரை சரிந்து நிற்கிறது.

 

 

முதல் கதை

 

பாடலிபுத்திரத்தில் கிரேக்க தூதர் பதவி ஏற்ற மெகஸ்தனீஸ் சாணக்கியனைப் பார்க்க வந்தார். அது இரவு நேரச் சந்திப்பு. ஆட்சி சம்பந்தப்பட்ட ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார் சாணக்கியன். ஒரு மூலையில் தீப ஒளி பிரகாஸித்துக் கொண்டிருந்தது. மெகஸ்தனீஸ் உள்ளே நுழைந்தவுடன் அந்த விளக்கை அணைத்துவிட்டு, சாணக்கியன் வேறு ஒரு தீபத்தை ஏற்றினார். மெகஸ்தனீசுக்கு பெரும் வியப்பு!

 

ஐயன்மீர்! ஏன் ஒரு விளக்கை அனைத்து இன்னும் ஒரு விளக்கை ஏற்றினீர்? இதன் தாத்பர்யம் என்னவோ? என்றார் மெகஸ்தனீஸ்.

 

சாணக்கியன் சொன்னார்:

நீவிர் வரும் வரை எரிந்த தீபம் அரசங்கப் பணி நிமித்தம் ஆட்சி நிர்வாக வேலைகளுக்காக, அரசு செலவில் ஏற்றப்பட்டது. இப்போது நாம் சந்திப்பது அரசுப் பணியல்ல நீவிர் எனது விருந்தாளி; ஆகவே இது என் செலவில் எரிக்கப்படும் தீபம் ; ஆகையால்தான் இதை ஏற்றினேன்.

 

இதுதான் சாணக்கியனின் குணாதிசயங்களைக் காட்டும் நிகழ்ச்சி. தன்னலம் கருதாத் தகைமையாளராக இருந்தும் அரசுப் பணி இது, சுய வாழ்வு இது என்று வரம்பு கட்டிய மாமனிதன்.

 

அவலட்சணப் பிராமணன்; இரண்டாவது கதை

 

சாணக்கியன் பல நீதி நூல்களுக்கும் ஆசிரியன்; அவனுக்கு விஷ்ணுகுப்தன் கௌடில்யன் (கௌடல்யன்) என்ற பெயர்களும் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் நவநந்தர்கள் எனப்படும் ஒன்பது பேர் ஆவர். மஹா பத்ம நந்தன் தலைவன். அவர்களுக்கு ராக்ஷஸன் என்ற திறமையான அமைச்சன் உதவினான்.

 

சாணக்கியன் பற்றி அதிகத் தகவல் கிடைக்கவில்லை. ஆனால் விஸாக தத்தன் எழுதிய முத்ரா ராக்ஷஸம் என்ற நாடகத்திலிருந்து வாழ்க்கைச் சரிதத்தை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. அவர் ஒரு முறை சாப்பாட்டுப் பந்தியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தாராம். அறிவின் சிகரத்தை எட்டிய அவருக்கு ஆண்டவன் அழகைக் கொடுக்கவில்லை.

யார் இந்த அவலட்சணமான பிராமணன்? முதல் வரிசையில் இவன் எதற்கு உட்கார்ந்தான்? என்று மன்னன் மஹா பத்ம நந்தன், சாணக்கியனை தர, தர வென்று இழுத்துச் சென்று வெளியே விட்டானாம். காரணமின்றி தன்னை அவமானப் படுத்திய நந்த வம்ஸத்தை வேர் அறுக்காமல் என் ஸிகையை முடிய மாட்டேன் என்று குடுமியை அவிழ்த்துவிட்டு அவரும் வெளி ஏறினாராம். அன்று முதல் அவர் திட்டம்போட்டு நவ நந்தர்களை ஒழித்ததோடுமில்லாமல் மயில் வளர்க்கும் முரா வம்ஸத்தைச் சேர்ந்த சந்திரகுப்தனைப் பேரரசனாக்கினார்.

 

முத்ரா ராக்ஷஸ நாடக வசனத்தில் வரும் காட்சி:

என்னை அன்று தர தர என்று வெளியே இழுத்ததை வேடிக்கை பார்த்த மக்கள் இன்று நவ நந்தர்களை அரசுக் கட்டிலில் இருந்து நான் விழுத்தட்டியதையும் பார்த்தார்கள்; ஒரு மலை உச்சியின் மீதுள்ள யானையை சிங்கம் மலை உச்சியில் இருந்து இழுத்துப் போட்டதைப் போல நான் செய்துவிட்டேன்.

 

‘நந்த வம்ஸத்தை விழுத்தாட்டியது இருக்கட்டும்; என் புத்தி மட்டும் என்றும் குறைந்து விடக்கூடாது’ என்று வேண்டியதாகவும் ஸம்ஸ்கிருத நாடக வசனம் செல்கிறது. நவ நந்தர்களின் திறமை மிகு அமைச்சன் ராக்ஷஸன் போட்ட ஒவ்வொரு திட்டத்துக்கும் சாணக்கியன் வேட்டு வைத்ததை ஸம்ஸ்கிருத நூல்கள் சித்தரிக்கின்றன.

 

வேறு சில சுவையான கதைகளும் உள. அவற்றைத் தனியே மொழிவேன்.

 

–சுபம்–