விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

படம்: கோழிக்கோடில் அக்னிஹோத்ரம், வேத சங்கத்தினர் நடத்தியது

ச.நாகராஜன்

போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும்

வேதம் கூறும் யக்ஞத்தை மேலை நாடுகள் விஞ்ஞான பூர்வமாக ஆர்வத்துடன் ஆராய ஆரம்பித்து வெகு காலமாயிற்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களை வியக்க வைத்தன. ஆனால் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியாத இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நடந்த கோர விபத்தினால் வெளி வந்து பிரபலமாகி அக்னிஹோத்ரத்தின் மகிமையை அதிகமாகப் பரப்பின.

யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த MIC விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.

ஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது!

எம்.எல்.ரதோர் என்பவர்  ஐந்து வருடங்களாக அக்னிஹோத்ரம் செய்து வருபவர். அவரும் அதே நள்ளிரவில் எழுந்த ஓலக்குரல்களையும் அழுகுரல்களையும் கேட்டு யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவினால் ஏராளமானோர் இறந்ததைக் கேட்டார். உடனே த்ரயம்பக் யக்ஞத்தை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம். அவர் வீட்டில் விஷப் புகை நுழையவில்லை; அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எந்த விதமான விஷ பாதிப்புமின்றி நலமுற இருந்தனர்.

 

வர்ஜீனியா ஆராய்ச்சி 

யூனியன் கார்பைடு நிறுவனம் இந்த ‘ஹோம எபெக்டைப்’ பற்றிக் கேள்விப்பட்டது. வெஸ்ட் வர்ஜீனியாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இதைப் பற்றி ஆராய உத்தரவிட்டதோடு லட்சக்கணக்கான டாலர்களையும் ஆராய்ச்சிக்காகத் தந்து உதவியது.

விஞ்ஞானிகள் அக்னிஹோத்ரத்தின் நல் விளைவுகளை ஆராய ஆரம்பித்தனர்.

ஏற்கனவே அக்னிஹோத்ரம் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்த பாரி ரத்னரின் முடிவுகளை இந்த விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்தினர்.

அக்னிஹோத்ர பயன்கள்

ரத்னர் அக்னிஹோத்ரத்தின் பயன்களாக பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்:

 

ரணமாகி இருக்கும் வளி மண்டலத்தை அக்னிஹோத்ரம் சீராக்குகிறது.

வளிமண்டலத்திற்கு உறுதியான ஊட்டச்சத்தை அக்னிஹோத்ரம் அள்ளித் தருகிறது.

அக்னிஹோத்ரம் தாவரங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறது; பறவைகளைச் சந்தோஷமடையச் செய்கிறது.இயற்கையில் உள்ள ஆக்ஸிஜன் மறு சுழற்சிச் சுழலை லயத்துடன் இருக்கச் செய்ய உதவுகிறது. நீர் நிலைகளில் சூரிய ஒளியை நன்றாக உறிஞ்ச வழி வகை செய்கிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல மருந்துகளைத் தயாரிக்க முடிகிறது.அக்னிஹோத்ரத்தால் நல்ல பயிர்களை விளைவிக்க முடிகிறது. அக்னிஹோத்ரம் விஷத்தை முறிக்கும் அருமருந்தாக இருக்கிறது!

 

வேதம் கூறும் விஞ்ஞானம்

 

வேதம் கூறும் பயோ எனர்ஜி விஞ்ஞானம் பிரபஞ்சத்தில் கோடானுகோடி சூரிய மண்டலங்கள் உள்ளது என்றும் அதில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பூமியைப் போல அரிதான ஒன்று இல்லை என்றும் கூறி மனிதனின் பிராண சக்தியை வளர்ப்பது யக்ஞங்களே ஆகும் என்று கூறுகிறது.

 

பல நாடுகளிலும் பரவி வரும் அக்னிஹோத்ரம்

ரத்னர் மேற்கு ஜெர்மனியில் ஆறு வருடங்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு வியாதிகளை அக்னிஹோத்ரம் குணமாக்க வல்லது என்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.

 

இஸ்ரேலில்

 

இஸ்ரேலில் ஹோமா தெராபி மிகவும் பிரபலமானது. நாஜெவ் பாலைவனத்தில் அராடிற்கு தெற்கே  60 மைல்கள் தொலைவில் உள்ள மொஷாவில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அக்னிஹோத்ர வகுப்புகள் நடைபெறுகின்றன.

டென்மார்க் தலை நகரில் அக்னிஹோத்ர மையம் ஒன்று உண்டு.

 

அமெரிக்காவில் 

பிலடெல்பியாவில் அக்னிஹோத்ர மகிமை பற்றி நாடகம் நிகழ்த்திய •ப்ரென் ரோஸன் சாயர் “எப்போதும் கோபமாய் இருப்பவர் மறுபடியும் சந்தோஷத்துடன் இருக்கிறார்” என அக்னிஹோத்ரத்தின் பயனையே தன் நாடகத் தலைப்பாக வைத்தார்.

 

அமெரிக்காவில் மேரிலாண்ட் அருகே உள்ள பால்டிமோரில் தினமும் அக்னிஹோத்ரம் நடைபெற்று வருகிறது. ஒய்ட் ஹவுஸிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தான் பால்டிமோர் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம்!

வாஷிங்டன் அருகே வர்ஜினியாவில் அக்னிதேவன் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டிற்குப் பலமுறை யக்ஞங்கள் நடத்தப்படுகிறது. வர்ஜினியா சுற்றுப்புறச்சூழல் மாசு இல்லாத இடம் என்ற பெயரைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது!

இந்த ஆலயம் 1973 செப்டம்பர் 22ம் தேதி அமைக்கப்பட்டது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது அக்னிஹோத்ரம் நடைபெறுவதோடு இங்கு தொடர்ந்து பூரண மவுனம் அனுஷ்டிக்கப்படுகிறது!

சிலியில் 

இதே போல சிலியில் ஆன்டெஸ் மலையில் அக்னிதேவன் ஆலயம் இருக்கிறது.இங்கும் தினசரி அக்னிஹோத்ரம் நடைபெறுகிறது. இங்கு குடியிருப்போர் மன அழுத்தம் இல்லாமலும் எந்த வித வியாதிகளும் இல்லாமல் சந்தோஷத்துடன் இருப்பதாகக் கூறுவது வியப்பை ஏற்படுத்தும்!

பல விதமான வியாதிகளுடன் இருக்கும் மிருகங்கள் கூட இங்கு கொண்டு வரப்படுகின்றன; பூரண குணமடைகின்றன. இங்கு சிலகாலம் முன்னர் ஒரு பெரும் பனிப்புயல் அடித்தது. பலர் மாண்டனர். ஆனால் தினசரி அக்னிஹோத்ரம் செய்யும் குடும்பத்தில் யாருமே இறக்கவில்லை. அனைவரும் அதிசயித்தனர்.

போலந்தில் 

போலந்தில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி அக்னிஹோத்ரத்தை ஆராய்ந்து அதன் பயன்களை நேரடியாகக் கண்டு 17 மையங்களைத் தொடங்கினர். தொடர்ந்து அக்னிஹோத்ரம் செய்து வருகின்றனர்!

ஜெர்மனியில் 

ஜெர்மனியில் அக்னிஹோத்ரம் பற்றி மிக விரிவான விஞ்ஞான ஆராய்ச்சி செய்யப்பட்டது.அமில மழையால் பாதிக்கப்பட்ட காடுகளில் அக்னிஹோத்ரத்தின் விளைவாக மீண்டும் பசுந்துளிர் தளிர்ப்பதைப் பார்த்து அவர்கள் பரவசமானார்கள்!

 

டாக்டர் மத்தியாஸ் பெர்பிஞ்சர் ஜெர்மனியில் செய்த ஆராய்ச்சிகள் மிக பிரபலமானவை அதிசயமானவை. அக்னிஹோத்ரம் செய்வதற்கு முன்னரும் செய்த பின்னரும் செய்தவரின் கையை கிர்லியன் போட்டோகிராபி முறைப்படி அவர் போட்டோ எடுத்து அதில் அக்னிஹோத்ரம் செய்து முடித்தவுடன் அவரது கையில் பிராண சக்தி கூடியுள்ளதைக் காண்பித்தார். சுற்றுப்புறச் சூழல் எப்படி ஆற்றல் வாய்ந்தவையாக அக்னிஹோத்திரத்தினால் மாறுகின்றன என்பதையும் அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்.

மந்திரம் மூலம் தீ 

காளிநாத் பந்த் சிதோர் என்பவர் தினசரி அக்னிஹோத்ரம் மற்றும் யக்ஞங்களைச் செய்பவர்.

அக்னிமீளே புரோஹிதம் என்ற மந்திரத்தை மும்முறை  சொன்னவுடன் ஹோமகுண்டத்தில் உள்ள சமித்துகளில் தீ தோன்றி பரவ வைத்தார். இது போல தீக்குச்சி இல்லாமல் மந்திரம் மூலமாகவே அவர் பலமுறை அக்னியைத் தோற்றுவித்துள்ளார்.

படம்: Agnihotra in Calicut organised by Vedic Society

அக்னிஹோத்ர நாடு 

அக்னிஹோத்ரத்தின் பயனை வெளி நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் கண்டு வியப்பதைக் கண்ட நமது அரசாங்கமும் நம் விஞ்ஞானிகளை இதை ஆராயப் பணித்துள்ளது. அவர்களும் இதன் பயனை உணர்ந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

நாளுக்கு நாள் பல பயன்களைச் சுட்டிக் காட்டும் இந்த  ஆராய்ச்சிகள் நமது ரிஷிகளின் ஆற்றலையும் சமூக அக்கறையையும் லோக ஹிதத்தில் அவர்களுக்குள்ள ஆர்வத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன.

அக்னிஹோத்ரம் செய்ய சில நிமிடங்களே ஆகும்; சில ரூபாய்களே செலவாகும் என்பது இதன் எளிமையைக் குறிக்கிறது. நேரமும் செலவும் குறைவு. பலனோ மிகப் பெரிது!

அக்னிஹோத்ர நாடு நமதே என்னும் போது மனம் மிகவும் மகிழ்கிறதல்லவா!

*************

 

சோதிட தபால்தலைகள் வாங்க போட்டாபோட்டி!!

கட்டுரை எழுதியவர்: எஸ். நாகராஜன்

சீனாவில் ஜோதிட தபால்தலைகள்

அதிகாலை 4 மணியிலிருந்தே மக்கள் கூட்டம் அஞ்சல் அலுவலகங்கள் வாசலில் தபால்தலை வாங்க கூடியது என்றால் நம்பக் கூடிய விஷயமா, என்ன? அதுவும் கம்யூனிஸ சீனாவில் ஜோதிட ஆண்டுகள் குறிக்கும் மிருகங்களின் தபால்தலைகளை வாங்க போட்டா போட்டி என்றால் மூக்கின் மீது விரலை வைக்கும் விஷயமாக அல்லவா இருக்கிறது. என்றாலும் இது உண்மை தான்.

சீனா சாந்திரமான அறுபது ஆண்டுகளைப் பின்பற்றி வரும் தேசம். ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மிருகம் உண்டு. நீங்கள் முயலா, குரங்கா,நாயா. எருதா என்று கேட்டால் கோபப் படக் கூடாது! அதற்கு நீங்கள் முயல் ஆண்டில் பிறந்தவரா அல்லது குரங்கு ஆண்டில் பிறந்தவரா என்று அர்த்தம்? இல்லை நான் நாய் அல்லது எருது என்று பதில் கிடைத்தால் அந்த ஆண்டில் அவர் பிறந்தவர் என்று பொருள்.

சின்னஞ்சிறுவர்கள் கூட   முயல் தபால்தலை வாங்க அங்கே பெருங்கூட்டமாகத் திரண்டது தான் அதிசயம். சீனர்களின் அறுபது ஆண்டு சுழற்சி  இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, மரம், தீ, மண், உலோகம். நீர் ஆகிய பஞ்ச பூதங்களின் அடிப்படையிலானது; அடுத்தது 12 ராசிகளுக்கான மிருகங்களைக் கொண்டுள்ளது. எலி, எருது, புலி,முயல், ட்ராகன்,பாம்பு, குதிரை.ஆடு.குரங்கு. சேவல்,. நாய் மற்றும் பன்றி ஆகிய 12 மிருகங்களே அவை. சீனரின் மூதாதையர்கள் மனிதர்களின் விதி ஜோதிட ராசிக்குரிய மிருகத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம்பியதால் இன்றளவும் இந்த ஆண்டுகளுக்குரிய மிருகங்களின் மீது மக்கள் பெருமளவு மதிப்புக் கொண்டுள்ளனர். முயல் தபால் தலை வெளியிடப்பட்ட போது வரலாறு காணாத அளவில் மக்கள் அதை வாங்கி மகிழ்ந்தனர்.

இஸ்ரேலில் ஜோதிட தபால் தலைகள்

எங்கள் நாடு ஜோதிடத்தை நம்பாத நாடு என்று சொல்வதற்கு அநேகமாக எந்த நாட்டிற்குமே இன்று அருகதை இல்லை என்று சொல்லி விடலாம். எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஜோதிடம் காட்டும் 12 ராசிகளின் தபால் தலைகளையும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகின்றன.இஸ்ரேல் 1961-62ல் வெளியிட்ட ராசிகளுக்குரிய தபால்தலைகளுக்கு இன்றளவும் பெரும் கிராக்கி உள்ளது.

இந்தியாவில் ஜோதிட தபால் தலைகள்

அடிமைத் தனத்திலேயே ஊறிப் போன இந்தியர்கள் நமது பழம் பெரும் பார்ம்பரிய ஜோதிடக் கலையை மதிப்பதற்குச் சற்று தயங்குபவர்கள். அதிலும் விஞ்ஞானிகள் என்றாலோ அவர்கள் ஜோதிடத்தை இகழ்வதை தங்களின் அந்தஸ்துக்கான ஒரு அடையாளமாகக்  கொண்டுள்ளனர். ஆனாலும் கூட சென்ற ஆண்டு இந்தியா 12 ராசிகளுக்கான தபால்தலைகளை வெளியிட்ட போது அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஏனெனில் மக்கள் பாரம்பரிய ஜோதிடக் கலையின் பக்கம் திரும்பி வருவதற்கு இதுவும் ஒரு சான்று. அவரவர்க்குரிய ராசியின் தபால்தலைகளை ஏராளமாக வாங்கி உபயோகித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, கனடாவின் தபால் தலைகள்

உலகின் பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இப்போது ஜோதிட சம்பந்தமான தபால்தலைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது ஜோதிட ஆர்வம் உலகெங்கும் பெருகிக் கொண்டே போகிறது.இந்த ஆர்வலர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வது அரசாங்கங்களின் கடமையாக ஆகிறது. பண்பாட்டைப் பல நாடுகளுக்கும் பரவச் செய்ய ஜோதிடத்தை ஒரு முக்கிய வழியாக பல நாடுகளும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. இரண்டாவது இப்படித் தபால்தலைகளை வெளியிடுவதன் மூலம் ஏராளமான வருவாய் அரசுக்குக் கிடைக்கிறது.வெளிநாட்டுச் செலாவணியும் கூடக் கிடைக்கிறது.

ஆஸ்திரேலியா 2007ல் 12 தபால்தலைகளை முதலில் வெளியிட்டது. இதற்குக் கிடைத்த பெரும் ஆதரவைத் தொடர்ந்து அடுத்து வந்த ஆண்டுகளில் 24 தபால்தலைகளை வெளியிட்டது.

கனடா இந்த ஆண்டு ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மூன்று தபால்தலைகளை வெளியிட்டது. மிதுன இரட்டையரை அதற்கு உரிய மே மாதத்தில் கனடா வெளியிட்டு தனது ஜோதிட ஆர்வத்தை நிரூபித்துக் கொண்டது.

ஒவ்வொரு தபால் தலையின் வடிவமைப்பும், வண்ண அமைப்பும் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் உள்ளதால் இப்போது ஜோதிட தபால்தலைகளைச் சேர்ப்பது ஒரு பெரும் பொழுது போக்காக ஆகி விட்டது.

இந்தியா வெளியிட்டுள்ள ஜோதிட தபால்தலைகளை வாங்க உங்கள் அருகில் உள்ள தபால்தலை சேகரிப்பு அஞ்சல் மையத்தை அணுகலாம்.கிடைத்தால் உங்கள் ஜாதகப்படி  ஜோதிட தபால்தலைகளைச் சேகரிக்கும் ராசி உங்களுடையது என்பதை உறுதிப் படுத்துக் கொள்ளலாம்.

                             *********************

Did Olympics Originate in India?

Picture shows Olympic Torch,Olympia,Greece, May 2012

Olympics originated in Olympia, Greece in 776 BC and were stopped after one thousand years. It was started again about one hundred years ago and held every four years in different cities. This is what we read in encyclopaedias. But not many people know that the ancient Olympics were completely different from the Modern Olympics. In the early stage very few games were held for a day and olive wreaths were given as prizes. But if we look at the prizes offered in India around the same time for winners, no one will have any doubt that India was the pioneer in this field. We gave gold coins and women as prizes. We have enough proof for this in Tamil and Sanskrit literature. When Janaka held a philosophical contest the prize he gave Yagnavalkya was gold coins tied to the horns of cows. When a poor Tamil poet Dharumi went for a poetry contest in the court of Pandya king he was given one thousand gold coins. When Krishna recovered the famous diamond Syamantaka by his heroic deeds he got two women Sathyabama and Jambavati. Yadhava Tamils won girls after bull fighting. So the prizes in ancient India were gold and women, not Olive branches!!

If all the Hindu mythological characters are alive today Krishna would have won gold medal in Discus throw, Parasurama and Kartikeya in Javelin throw, Hanuman in weight lifting, a Tamil in Bull fighting and Rama, Arjuna and Tamil chieftain Ori in Archery (in different Olympics), Bheema and Ghatotkacha in wrestling. Our literatures were very clear about who was good at what. Look at the following proofs and you decide whether we gave this idea of Olympics to the world or not.

  1. Contest in Mahabharata: Arjuna-Karna clash (1400 BC)

Mahabharata, the longest epic in the world wais very clear in describing the archery contest held at Indraprastha. A lot of people contested and when Karna came forward to challenge Arjuna it was declared that an ordinary man can’t challenge a prince. Immediately Duryodhana declared Karna as the ruler of Anga Desa. Karna was loyal to him forever for this face saving measure. We know from this episode contests were held in certain games where Kings from different countries participated. In ancient Greece also not all the men were allowed.

2. Discus throw of Krishna: Lord Krishna’s most famous discus was named as Sudarsana Chakra/ wheel. Unlike other discusses it will come back to him like a Boomerang. Probably Krishna only knew some tricks like googly balls (in Cricket). He beheaded Sishupala with his Boomerang when he made the 100th insult against Krishna. Krishna would have easily won discus gold medal.

3. Weight lifting by Krishna and Hanuman:

For weight lifting gold medal we have two contestants, but in two different Yugas. Hanuman would have lifted the gold in Treta Yuga for lifting Sanjeevi hill and Krishna would have got it in Dwapara Yuga for lifting Govardhana Giri.

Don’t think that all these are myths. They did something  great and so they were remembered. There may be some exaggeration.

4. Krishna’s wrestling with a Mallan

Krishna like Greek hero Hercules did win all the contests. He was to fight with a woman wrestler called  Bhutaki whom he crushed to death.

 

5. Bull fighting of Krishna

People of cowherd caste (Yadhavas) started this sport in ancient India. In Tamil it was clearly written two thousand years ago that the person who tackled the bull will be married to the daughter of the chieftain. Krishna also had to fight with a bull, which he threw away on a tree like a stone.

6. Bheema’s Gathyudha and Ghatotkachan

Mace fight was one of the sports practised in the ancient world. Bheema and his son Ghatotkacha were champions of this art.

7. Ram’s bow trick: seven trees at one go

When Sugreeva wanted to test the strength of Ram to see whether he was fit enough to fight his brother Vali, he asked him to pierce seven trees with his arrow. Rama did win the contest. This shows that in ancient days however big your name may be, they did test every one before entrusting a task. Contests were there in everyday life.

8. Rama’s javelin throw: Kakasura

Rama threw his javelin (spear) against an anti social element called Kakasura and he had to fall at the feet of Rama to escape from it.

9. Runners to bring sea water

Tamil inscriptions boast about Indian kings bathed in waters of two seas or four seas at the same time. They wanted to show that they have control over the land stretching from one end to another end. Great Gupta king Samudra Gupa also said in his inscription that he controlled the vast land in between two oceans. To get the water from two seas in the East and the West , they had hired runners. The runners did a relay race and brought the water from two seas for the king to bathe. Mayan civilisation also had some runners. They were like the Marathon runners.

10. Breaking the pot

During Krihna Leela celebrations though out India all the sports enthusiasts assemble and climb the oil smeared polls to get the money that was tied at the top. Then they go and break the pots with sticks. It was not an easy job. The people will lift the pots beyond their reach. Whoever wins at the end will get some gold coins or some money.

11. Chariot race: Rituparna

Chariot races were held in ancient India. Rituparana, father of Damayanti of Nishada country was a great charioteer. His chariot was faster than modern Formula one Race cars. Dasaratha was a great charioteer whose chariot can travel in dasa/ Ten directions. At one time Kaikeyi drove that chariot and won the war for him. Vedas mention chariot races.

12. Arya Panan visit to Tamilnadu

Tamil Nadu was a place where all arts and sports were supported. We have references to visiting musicians, gymnasts (Arya Kuthadi) and wrestlers (Arya Porunan) in Tamil literature. This is a very clear reference to travelling sportsmen from North India challenging everyone around the country.

13, Great wrestlers of Mahabharata period

Jarasandhan, Bheema and Ghatotkachan were great wrestlers of ancient India.

14. Wrestling schools in Maharashtra

Following the ancient tradition Maharashtra started wrestling schools in every town.

15. Horses and elephants riding

Kings and princes must learn horse riding and elephant riding. They gave special names for the royal horses and elephants which are in Tamil and Sanskrit books. Krishna’s horse was named Ucchaisravas and Indra’s elephant was named Airavata. More names are found in our Sanskrit and Tamil books.

16. Parasuraman’s javelin:

Parasuraman was a good javelin thrower. He threw his javelin against the sea and the sea went back in fear leaving him a new land called Kerala/ God’s own country. This was a symbolic language to say that he recovered vast lands or won a vast country with his javelin/ spear power.

17. Camel race

Camel race has been practised in Rajasthan deserts for ages.

18. Sanskrit Books on Games

Books on games are written in Sanskrit one thousand years ago. I don’t think any other language has such detailed books on games ( Manasollasam). Of the 64 arts ,one of them is about winning in the games. Chess, Gambling, Dice and such indoor games find a better place in Vedas and epics than out door games.

All these sports and the spirit behind it are equal to the motto of Modern Olympics.

TAMIL OLYMPICS

  1. Bull Fighting

Tamil book Kalitokai described the bull fighting in graphic details. It created lot of excitement among women watchers who will be marrying the winners. The bulls were groomed specially by the ladies for this purpose.

  1. Kabadi

Kabadi is a Tamil game which is included in modern Olympics. Tamils have been playing this game from time immemorial.

  1. Silambam

Silambam was stick fight, but its modern version Fencing / sword fight, is included in the Olympics.

  1. Kraunchabedanar: Javelin throw

Lord Kartikeya must have been an excellent javelin thrower. His spear broke the hill in to two and so he was called Krauncha Bedanar. The Krauncha pass ( also known as Niti pass in the Himalayas) is used by the migratory Krauncha birds from the Northern Siberia even today. Tamil and Sanskrit SKanda Purana praised him for this great task.

 

  1. Ori’s Bow Trick

Like Rama pierced seven trees at one go, Sangam Tamil literature described how Ori’s arrow pierced five different animals at one go. Paranar praised his great skill in archery. He shot an arrow that went through an elephant, a tiger, a deer ,a boar and a forest iguana!! He would have easily won gold medal for archery. Another great archer was Ekalaivan of Mahabharata period.

 

  1. Weight lifting: Idumban Kavadi

Weight lifting was done by Idumban, sage Agastya’s helper. Idumban was hired by sage Agastya to carry two hills and he laid them on the ground half way through his journey. When he tried to continue his journey Lord Skanda prevented him from carrying the hills and  Idumban was made the guard of the hills at Palani, a holy town in Tamil Nadu. (Kavadi is like a balance– a rod suspended on one’s shoulder which carried heavy things tied to both the ends of the rod–It is similar to weights in weight lifting on either side.)This story of Idumban is a land dispute between the locals and sage Agastya, but amicably settled in the end.

 

  1. Hand Ball by women

Foot ball was invented by Mayans of Central America. But hand balls were invented by Tamil women. We have innumerable references to Tamil women playing hand balls in groups (Orai Ayam).

 

  1. Water Sports: Pari Patal and Attanathi & Adimanthi

Water sports were described in great detail in ancient Tamil book Paripatal and Akananuru. A tragic incident was sung by two or three Sangam poets. Adi Manthi, daughter of great king Karikal Chola married a gymnast who was an expert in Gymnastic swimming. When he was displaying his skill in the river Kaveri during a festival ,something went wrong and he was washed away by the river. The entire crowd was in a great shock. His wife cried in pity and followed him along the river. At last he was saved by a Samaritan and he lost his life in the rescue attempt. This and Paripatal showed very clearly all the water sports like swimming and gymnastics were enjoyed by the Tamils .

 

  1. Arya Porunan  Vs Panan

Another tragic tale is about a wrestling contest. Panan, a wrestler from North India visited Tamil Nadu and challenged everyone for a contest. His friend Katti was also a North Indian. Tamil Nadu also had a great name in Wrestling –Kanaiyan. He was friendly with another northerner called Arya Porunan. At first Panan from the North challenged Arya Porunan, a migrant from north settled in Tamil country. Arya Porunan’s body was cut into two pieces. His friend Kanaiyan was shaking in fear and ran away from the scene. Now Panan became more arrogant and went to Uraiyur, the capital of Chola country to challenge Thithan Veliyan. Before entering the town he heard about big celebrations for Thithan Veliyan. People were praising his heroic acts. That gave Panan a big shock and now he was shaking in fear. Panan ran away without entering Uraiyur. Tamil poet Paranar made fun of him in his poems (please read my article The First Tamil Historian-Paranar)

 

  1. Runners: Tamil runners who brought sea water from the west and the east were mentioned in several copper plates. (Details are given above)

 

  1.  Wrestling School: Like in Maharashtra , Tamils had wrestling schools in every town in ancient Tamil Nadu. The teachers were respected like heroes and strict discipline was maintained throughout one’s learning. These people took the art of Karate to the Far Eastern countries. The Buddhist monks learnt it for their self defence.

 

  1. Horse riding:

Horse riding was part of a regular syllabus for kings and princes. Kari, the Tamil chieftain had named  his horse Kari as well. Lovers riding the chariots were mentioned in Tamil poems.

 

  1. Pandya king Javelin throw

Like Parasurama,  a Pandya king was also credited with acquiring a vast country by throwing his spear into the sea. Needless to say that it is a symbolic way of saying he won a country across the sea by his javelin/ spear power. What interests us here is they use Javelin throw as a phrase to bring out a message. My conclusion is Throwing a Javelin was a common sport. The Pandya was Nilam Tharu Thiru Vil Pandyan (Vadivel Erintha Pandya)

 

Was It Olympics?

How can we call these games Olympics?

We can call these games Olympics because 1. General public were allowed to participate and watch 2.Prizes were given at the end 3.The motto of the games were friendship and culture 4. We did not spill blood like the Romans where slaves were mauled to death by tigers and lions and the Roman kings and the public cheered the Gladiators.

 

***********************

அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! – Part 2

ச.நாகராஜன்
ஜோதிடம் மட்டுமல்லாமல் வானவியல், பௌதிகம், இரசாயனம், உலோகவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் ரிஷிகள் இயற்றிய நூல்களை அப்படியே ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் சுட்டிக் காட்டிய நூல்கள் கணக்கில் அடங்கா. சில நூல்களின் தலைப்பையும் அவற்றில் என்ன அடங்கி உள்ளது என்பதையும் கீழே பார்ப்போம்.
1)அக்ஷர லக்ஷ கணித சாஸ்திரம் :- வால்மீகி முனிவர் அருளியது. இதில் 64 கணித சித்தாந்தங்கள் விளக்கப்படுகின்றன.
2) அனுகரன சப்த சாஸ்திரம் :- கண்டிக ரிஷி அருளியது.எதிரொலிகள் பற்றியும் ஒவ்வொரு சப்தமும் என்ன பிரதிபலிப்பை உருவாக்குகிறது என்பது  பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
3) ஸ்த்ரீ¢ லக்ஷண சாஸ்திரம் :- சகதாயன ரிஷி அருளியது.உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் பெண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது?இதை அற்புதமாக விளக்கும் நூல் இது.
4) புருஷலக்ஷண சாஸ்திரம் :- பப்ரு ரிஷி அருளியது. மிருகங்களில் ஆண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது. இதை விளக்கும் நூல் இது.
5) கன்யா லக்ஷண சாஸ்திரம்:- பப்ரு ரிஷி அருளியது.ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா என்பதை எப்படி அறிவது? இதை விளக்கும் நூல் இது.
6)சகுன சாஸ்திரம்:- கர்க மஹரிஷி அருளியது. பறவைகளின் வெவ்வேறு ஒலிகளாலும் அவை பேசுகின்ற பாஷைகளின் மூலமும் மனிதர்களுக்கு நன்மை உண்டாகுமா அல்லது தீமை உண்டாகுமா என்று விளக்கும் சகுன சாஸ்திரம் இது.
7)சில்ப சாஸ்திரம்:- மயன் அருளியது.32 விதங்களாகக் கூறப்படும் தேவ சில்பி,கந்தர்வ சில்பி, யக்ஷ சில்பி, பைசாசிக சில்பி,அசுர சில்பி, மானுஷ சில்பி, முதலிய சில்பிகளை விவரிப்பதோடு  முழு விவரங்களையும் தரும் நூல் இது.
8)சுப சாஸ்திரம்:- சுகேசர் அருளியது.128 விதமான சுவையான சமையல்களைப் பற்றி விவரிக்கும் ருசியான நூல் இது.சுவையான நூல் மட்டுமல்ல இது; செய்முறையைச் சொல்லித் தரும் நூலும் கூட!
9)மாலினி சாஸ்திரம்:- ரிஷ்ய சிருங்க முனி அருளியது.உருமாற்றம், மாயத் தோற்றம், கானல் நீர் மாயைகள் ஆகியவை பற்றி விளக்கும் நூல் இது.
10) ப்ரளய சாஸ்திரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.மஹா பிரளயங்கள் நான்கைப் பற்றியும் சிறு பிரளயங்களில் உள்ள 64 வகைகளையும் விளக்கும் நூல் இது.
11) கால சாஸ்திரம்:-ஷண்முகர் அருளியது.ஜோதிடம், வானவியல், பௌதிகம் ஆகிய துறைகளுக்கு ஆதாரமான மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நூல் இது.காலம் என்றால் என்ன என்பதை பிரமிக்கத் தக்க விதத்தில் விளக்கும் இது அறுபத்திநான்காயிரம் காலபுருஷர்களின் விவரத்தையும் தருகிறது!
12)மாயா வாத சாஸ்திரம்:-ஆஞ்சனேயர் அருளியது. பெயர் சுட்டிக்காட்டுகின்ற படியே மாயா வாதத்தை விளக்கும் நூல்.
13) தாது வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது.கனிமங்கள், கூட்டுப் பொருள்களைப் பற்றி விளக்கும் நூல்!அதிலிருந்து என்னென்ன பொருள்களை உருவாக்கலாம் என்பதையும் கூட இது விளக்குகிறது!
14)விஷ வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது. வெவ்வேறு விதமான விஷங்களைப் பற்றியும் அதில் அடங்கிய விஷத்திற்கான மூலப் பொருளையும் விளக்கும் நூல் இது.செயற்கை விஷம் எது, இயற்கை விஷம் எது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
15) காருடம்: வைல ரிஷி அருளியது.இந்திய மாயாஜால நிபுணர்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கும் 32 விதமான மாயாஜாலங்களை விளக்கும் நூல் இது. எந்த விஷத்தை எப்படி முறிப்பது என்பதையும் கற்றுத் தருகிறது!
16)சித்ர கர்மா:பீமர் அருளியது. வர்ணம் பூசுவது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது எப்படி என்பதைக் கற்றுத் தரும் நூல் இது.
17)மல்ல சாஸ்திரம்:-மல்லர் அருளியது. மல்யுத்தம் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி விளக்கும் நூல் இது.
18)பரதம்:-கணபதி அருளியது. நாட்டியம், அதற்கான இசை, தாளம்,அதற்கான கால நுட்பம் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
19)பரகாய ப்ரவேசம்:-வால்கீய ரிஷி அருளியது.இன்னொரு உடலில் எப்படிப் புகுவது என்பதை விளக்கும் நூல் இது!
20)அஸ்வ ஹ்ருதயம்:-சுக்ரீவர் அருளியது. குதிரைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது. (சரஸ்வதி மஹால் நூல்நிலையம் வெளியிட்டுள்ள அஸ்வ சாஸ்திரத்தைப் படிப்பவர்கள் பிரமித்துப் போவார்கள் என்பதை இங்கு நினைவு கூரலாம்.)
21)கஜ ஹ்ருதயம்:- குமாரசுவாமி அருளியது.யானைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது.
22)ரத்ன பரிக்ஷ¡:-வாத்ஸாயன மஹரிஷி அருளியது.நவரத்னங்களை இனம் பிரித்து அறிந்து அவற்றை சோதிக்கும் முறையைக் கூறும் அபூர்வ நூல் இது!
23)இந்த்ரஜாலம்:-வீரபாகு முனிவர் அருளியது.மாயாஜால வித்தைகள், மாஜிக், புதிய பொருள்களை உருவாக்கிக் காட்டல் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
24)மஹேந்திரஜாலம்:- வீரபாகு முனிவர் அருளியது ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் உள்ளிட்ட116 விதமான ஸ்தம்பங்கள் இதில் விளக்கப்படுகிறது.
25)அர்த்த சாஸ்திரம்:-மஹரிஷி வியாஸர் அருளியது. தர்ம வழியில் செல்வம் சேர்க்கும் முறையை விளக்கும் நூல் இது. இதே துறையில் இன்னும் 24 சாஸ்திரங்கள் தனியே உள்ளன. அவற்றை முற்றிலுமாக விளக்க இங்கு இடம் இல்லை.ஆகவே அதி நுட்பமான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
அ) அகஸ்திய மஹரிஷி அருளிய சக்தி தந்திரம்:-மூல பிரகிருதியில் அடங்கியுள்ள 32 விதமான ஆற்றல்கள் அல்லது சக்திகளைப் பற்றி விளக்கும் நூல் இது.
ஆ)மஹரிஷி மதங்கர் அருளிய சௌதாமினி கலா:-அயல் கிரகவாசிகள், வானில் உள்ள வஸ்துக்கள் மற்றும் தேவதைகளை எப்படி போட்டோ எடுப்பது என்பதை விளக்கும் நூல் இது.இன்று நாம் கூறும் எலக்ட்ரானிக்ஸ் நூல் இது!
இ)மஹரிஷி ஆஸ்வாலயனர் அருளிய சுத்த வித்யா கலா:- பிரபஞ்சம் தோன்றியது எப்படி,நம்முடைய பிரபஞ்சம் தவிர வேறு எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன, எங்கே உள்ளன, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் என்பதை விளக்கும் ஆச்சரியமான நூல்.
உ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய மேகோற்பத்தி ப்ரகரணம்:- 12 விதமான மேகக் கூட்டங்கள், அவை ஒன்பது விதமாக உருவாகும் விதம் உள்ளிட்ட ஏராளமான மேக ரகசியங்களை விளக்கும் அபூர்வ நூல் இது!
ஊ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய காரக ப்ரகரணம்:- சூரிய கிரணங்கள் மேகங்களின் ஊடே செல்லும் போது அண்டஜம், ஸ்வேதஜம்,உத்பிஜம் ஆகிய வித்துக்கள் உருவாகின்றன.நவரத்தினங்கள், சங்கு,முத்து ஆகியவையும் உருவாகின்றன. இவை எப்படி உருவாகின்றன என்பதை விளக்கும் அபூர்வ நூல் இது.
எ)மஹரிஷி பாரத்வாஜர் அருளிய ஆகாச தந்த்ரம்:- ஆகாசத்தில் இல்லாத மர்மங்களே இல்லை.ஏழு விதமான ஆகாயங்கள் மனித குலத்தின் மீது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் நூல் இது.
1940ம் ஆண்டு தனது 74ம் வயதில் மறைந்த ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி அவர்களின் மேதைத் தன்மை ஆகாயம் போல விரிந்தது, கடலை விட ஆழமானது. சூரியனை விட பிரகாசமானது, சந்திர ஒளியை விட மனதிற்குக் குளுமை தருவது. பாரத அறிவை முற்றிலும் ஜொலிக்க வைப்பது. சில ஜோதிட நூல்களுக்கு அவர் விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவரைப் பற்றிய நூல்களும் வெளி வரத் தொடங்கி உள்ளன. இந்த மாமேதை அருளிய நூல்கள் அனைத்தையும் படிக்க முயன்று அதில் நமக்கு உகந்த துறையில் நாம் திறமை பெற்று உலக அரங்கில் அதை ஜொலிக்கச் செய்வது ஒன்றே அவருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.

This is written by my brother S Nagarajan.
*****************

Hindu Wonders in a Muslim Country!

 

  1. Many of us know that Indonesia is the largest Muslim country in the world, but many of us do not know the fourth largest Hindu population is in Indonesia! This is the country which has highest number of Hindus outside Indian subcontinent (next to Nepal and Bangladesh). It is a country with 17,000 islands and 300 volcanoes.
  2. Bhagavad Gita statue in Bangkok

Knowing the popularity of Mahabharata and Bhagavad Gita, a statue of Krishnopadesam was erected in Jakarta, capital of Indonesia. Arjuna and Krishna are riding a chariot. When Suharto, President then, opened the statue he exhorted the people to follow Bagavad Gita’s main teaching: Work without expecting any benefits (selfless Service).

3. Sukarno=su+Karna

Indonesia’s great leader Sukarno was named after the famous Mahabharata character Karnan. Sukarno’s father was very much attracted by the characterisation of Karnan. But Karna supported the wrong side in the great war. So his father named his son as Su (good) Karna. Sukarno’s daughter was also given a Sanskrit name Meghavati Sukarno Puthri. She is the president of the country now.

4.Ramayana, Mahabharata dance drama and puppet show:

Throughout the year Ramayana and Mahabharata dance and puppet shows are staged. They are called Wayang Kulit and  Wayang Wong. We can’t see such a running show even in India, the land of Ramayana! Hanuman was in their military emblem/mascot!

Picture: Arjuna and Krishna in Jakarta

5.Lord Ganesh on Currency Note:

Lord Ganesh picture is inscribed on 20,000 rupee currency in Indonesia. Ganesh was worshipped in India even before Ganesh came to South India. Tamils have Ganesh statue from 6th century AD. But Indonesia has Ganesh statues from 1st century AD, discovered in in Panaitan islands. Lord Ganesh travelled faster by sea than on land in his Mushika (mouse) vahana! There is lot of scope for further research in this field. Ganesh was depicted as Bhuta Ganathipathi with skulls! Java is also known as Ganapathya Land, country where Ganesh is worshipped. A very big  Kapala / Skull Ganapathy is in Leiden Museum (Holland).

6. Ramayana, Mahabharata stamps:

Indonesia has issued many stamps on Ramayana and Mahabharata . All the characters are known to Indonesians, whether they are Muslims or Hindus. But the picture is changing very fast because of modern culture and extremists’ propaganda.

7. Ramayana Translation even before Kamban:

Ramayana was translated in to Kawi language of Java even before Kamban ‘s  most famous Tamil translation known as Kamba Ramayanam (1200 AD). Kakawin Ramayana in old Javanese language was translated in to 1200 verses in 870 Ad during the era of Medang Kingdom. There are more than 200 research works on Kakawin Ramayana.  Even awards in the name of RAMA, are given.

8. Bali Islands:

Bali Island has the biggest Hindu population in Indonesia. There are over 4,600 Hindu temples. But the Balinese follow some strange and ancient customs not known in India!

Saraswathy Puja/ Vijaya Dasami is a national holiday here. Temples with 11 tier towers are of Shiva, 9 tiers –Brahma and 7 tiers- Vishnu. Badara Guru, a form of Shiva, was typical Indonesian Hindu God.

9. Garuda Airlines and Kubera Bank:

The official airline of the country is named after Vishnu’s Vahana Garuda (eagle) and the National bank is named after the Hindu god of wealth Kubera. Serayu river in Java is named after Sarayu River of Ayodhya. Kings of Java bore the Sanskrit titles Bhupati,Arya and Adyaksha

10. Bhasa Indonesia:

Brahmi script is the basis for all the S E Asian languages.

Sanskrit words are found everywhere. Sumeru, Brahmo, Kaliya mardhan, Tharmasagara etc.

The language of Indonesia is Bahasa=Bhasha=language in Sanskrit. Thousands of Tamil and Sanskrit names are found in Indonesia, many of them in their corrupted forms because of distance in time and space. Kawi is the language of poetry in Indonesia. Kavi means poet in Sanskrit.

11. Pallankuzi (Mancala, Congklak):

The whole world agrees that the board games including Chess originated in India (British Musem in London has a display board). But the Pallangkuzi= a wooden board with 14 or 12 pits played with seeds or cowries is found in Africa and Indonesia. It is called Mancala in Africa. This shows that Tamils took their board games wherever they went. It is known as Congklakin Indonesia. Indonesian Hindus took their rice cultivation, Sanskrit language and Pallangkuzi to Madagascar and other places (Please read my article Madagascar-India Link via Indonesia).

12.Agastya statues:

Agastya whose name we find in Rig Veda, is associated with Tamil language  from the very beginning. He was the one who established land route to South India by crossing the Vindhyas and he was the first one to travel across the ocean for migration.(Please read my article “Is Bramastra a Nuclear Weapon?” for more details about Agastya drinking the ocean).

So Agastya statues are dug out in several places in South East Asia. Some are in Indonesian museums. A two meter tall Agastya idol was also discovered. Singasari and Yeh-Pulu were two places which gave us lot of Hindu statues and Idols.

13.Mulavarman Inscription in Jungle:

Please read my blog “Sanskrit Inscriptions in Strange Places”.

Picture: Agastya Statue

 

14.Indian Business Community:

A ninth century inscription in Central Jawa listed all the communities that frequented the island: Kalinga, Arya, Sinhalese, Pandiyas, Keralites, Dravidians, Chams, Khmers.

 

15. Borobudur

Borobudhur Buddhist temple is considered one of the 100 Wonders of the World. It is in Sri Chakra form. It is spread over ten kilometres. Hindu King Vishnu (775 AD) began the work on this temple. But it was stopped after his death in 785 AD. Another king of Sailendra Dynasty made it as a Buddhist temple in 11th century. Scenes from Dasavatara, Ramayana, Mahabharata were sculpted here. It is said that there are one million sculptures in the monument. All the Hindu Gods are found in it. Lot of materials are available on the websites about this wonder. The dimensions of the structure, its gigantic conception and its lavish decoration make it one of the most renowned monuments of the world.

16.Kalidasa, Manimegalai ,Ramayana references:

Indonesian islands, particularly Java and Sumatra, are known to Indians from time immemorial. Ramayana, Kalidasa’s works and Tamil epic Manimegalai refer to these islands as Yava Dwipa = Island of Barley and Suvarna Dweepa= Island of gold. They were famous for their spices and the Dutch named these islands as East Indies.

17. Mathura, Kaliyamardhana:

We see lot of names of Lord Krishna such as Mathura, Kalya Mardhan (Kalimanthan).  Borneo Island was named after Varuna. Baruna= Borneo=Varunasya Island. Omkara (Aum) is used in coronation ceremonies. Pranava (Aum) is in Javanese language.

18.Jakarta Museum wonders:

Statues of Ganesh, Agastya, Vishnu, Shiva and other Sanskrit inscriptions are kept in Jakarta Museum. A lot of sculptures were taken by foreigners and seen around the world in museums and private collections. Victoria and Albert Museum in London has an Agastya statue.

 

19.Volcano temple miracle

10300 feet high Mount Agung or Gunung Agung is a mountain in Bali  . There is an active volcano. The famous goddess Pura Besakih (Vaisaki Devi) temple is situated at 3000 feet on the slopes of a volcano. The volcano erupted in 1964 sending huge debris into the sky. Though lava overflowed for a few weeks, it missed the temple by a few yards. Balinese believed this was a miracle of the goddess. They call this mountain Meru. On top of the mountain there is a Shiva temple. Though there were massive volcanic explosions in 1980, the temple is still intact. Every hundred years Eka Dasa Rudra Makha Yagna is performed here. A crater with 10 mile diameter was formed in 1926 eruption.

 

20.Meaning of Indonesia:

The country’s name is Indus Land (country of Hindus)

21.1500 year Hindu empire:

Hindus established their cultural empire in Java 2000 years ago. Then they wielded some political power during the periods of Sailendra and Majapahit empires. They had their own kings. Mulawarman of fourth century AD was one of the famous kings. His Sanskrit inscriptions were found in the thick tropical forests of Borneo Island. Since they were written in Pallava grantha, their South Indian link is established beyond doubt. King Airalanga of 11th century was another famous king who translated lot of Sanskrit works.

22.Prambanan-largest Hindu temple

Borobudur was the largest Buddhist temple and Prambanan Shiva temple was the largest Hindu temple in Indonesia. Prambanan temple has a 140 feet tower and three corridors. Fa Hien (337-422 AD), the Chinese traveller of fourth century AD mentioned that there were many Shiva temples in Java.  A traveller of first century AD referred to Prambanan temple. The temple was rebuilt in 850 AD. But whether it is Hindu or Buddhist, the sculptures of all the Hindu gods Brahma, Vishnu, Shiva, Goddess Chandi and Ganesh are seen everywhere.

 

23.Cock fight:

Cock fight is an ancient sport which is mentioned in Sangam Tamil literature and Sanskrit dramas. Hindus of Bali islands use cock fighting in a strange way. They do it as religious practise to spill the evil out of people.

24. Bheema and Ghatotkachan statues

BJP leader LK Advani was invited to attend World Sindhi Conference in Indonesia. When he was driven in car in Denspar, capital of Bali he saw big statues of Ghatotkacha and his father Bheema (one of the five Pandava brothers). Shri LK Advani has written about his visit in his blogs.

 

26. Bali Yatra: People from East Coast of India went to Java and Sumatra islands for business two thousand years ago. Even today Bali Yatra is done symbolically from Paradeep  port of Odisha to Bali islands in Indonesia. Paradeep may be Para Dweepa=port for Islands beyond and Bali= named after the king Bali who was sent to Patala =islands below India , by Vishnu in his Vamana Avatar. If it is true this must have happened before 1500 BC. Vaman avatar is mentioned even in Rig Veda. Pallava Dynasty’s trade with the Indonesian islands is referred to in a Malay language History book.

27. Karaikal Ammaiyar:

The earliest Tamil saint Karaikal Mother (Ammaiyar) was known and worshipped throughout S E Asia. Statues and Idols of Karaikal Ammaiyar were discovered in Indonesia as well.

28. Music and Musical instruments: Indonesian musical instruments and the tunes/ ragas are very close to Indian classical music. A lot of scope for research awaits music scholars.

29. Balaputra Deva of Indonesia erected a monastery in Nalanda. It shows that the Mahayana Buddhists travelled to Nalanda University in Bihar 1600 years ago.

 

30.Recorded history takes us to 73 AD, when a Prince of Gujarat landed on Java Island. Tara daughter of Dharmapala, a king of Bengal introduced Mahayana Buddhism into the island around fifth century according to Dr Stutterheim, the Dutch archaeologist.

31.  The great Indian astronomer Aryabhatta (476 AD) calculated noon at Yavakoti (in Java) when it was midnight at the land of Romans. So these islands were known to all Indians by fifth century AD.

 

32. A legendary Indian called Aji Saka taught the Javanese their system of writing and chronology, and gave them their first social and political organisation.

 

 

தமிழ் ஒரு கடல்!!


“கல்வி கரையில, கற்பவர் நாள் சில” என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று கூறினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள் 
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்
சிலப்பதிகாரம் 5,001 அடிகள்
மணிமேகலை 4,759 அடிகள்
பெருங்கதை 16,230 அடிகள்

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்
கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்
சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்
திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்
பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்
தாயுமானவர் 1,454 பாடல்கள்
அருணகிரி 1,361 பாடல்கள்


இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

20,000 பழமொழிகள்

தமிழில் 20,000க்கும் மேலாக பழமொழிகள் இருக்கின்றன. மூன்று வெள்ளைக்காரர்கள் இவைகளைத் தொகுத்து தனித்தனி புத்த்கங்களாக வெளியிட்டனர். அவைகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அல்லது ஆங்கிலத்திலுள்ள இணையான பழமொழிகளைக் கொடுத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம்!!
முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!

******************

 

சம்ஸ்கிருதம் என்னும் சமுத்திரம் !

சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டி, மற்ற மொழிகளை உயர்த்திப் பேசுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர்களுடைய அறியாமையை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் என்பது பெரிய சமுத்திரம். அதன் கரையைக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஏனைய பழைய மொழிகளில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டு விட்டார்கள். ஆனால் வட மொழி நூல்களைப் பட்டியல் இடுவதுகூட முடிந்தபாடில்லை. உலகம் முழுதுமுள்ள நூலகங்களில் அவ்வளவு சுவடிகள் உள்ளன.

பல நூல்களுக்கு மூல நூல் மறைந்து போயின. ஆனால் அவைகளின் மொழி பெயர்ப்புகள் சீன மொழி உள்பட பல மொழிகளில் இருக்கின்றன. மொழிபெயர்க்க ஆள் இல்லை. உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பல்வேறு லிபிகளில் எழுதப்பட்டுள்ளன.

அசோகர் காலம் வரை பனை ஓலைகளிலும் மரப் பட்டைகளிலும் எழுதி வந்ததால் அவைகள் அழிந்துவிட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் தோன்றிவிட்டன. நேபாளம் முதல் இந்தோநேஷியா வரை ஆயிரக் கணக்கான பாடல் வடிவக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதே காலத்தில் மற்ற மொழிகளில் உரைநடைக் கல்வெட்டுகள்தான் கிடைக்கின்றன.

 

வேதங்களின் பெரும் பகுதி (சாகைகள்) அழிந்துவிட்டன. பிராமணர்கள் வாய் மொழியாக ஆசார அனுஷ்டானங்களுடன் அத்தியயனம் செய்துவந்ததால் எழுதிவைக்கவும் இல்லை. இப்போது இருக்கும் வேதங்களை டேப்புகளில் பதிவு செய்ததே 600 மணி நேரத்துக்கு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை வேதப் படிப்பில் உண்டு. இடைச் செருகல் வந்து விடக் கூடாது என்பதற்காக வேதத்தில் இருக்கும் சொற்களை ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் கூட்டிக் கூட்டி சொல்லிக் கொண்டே பாராயணம் (கண பாடம், ஜடா பாராயணம்) செய்வார்கள். இதை எல்லாம் பதிவு செய்துவிட்டார்கள் ராஜஸ்தான் பலகலைக் கழகத்தினர்.

சம்ஸ்கிருதம் மாபெரும் சமுத்திரம். கரை காணாத அளவுக்கு பெருகியது. உலகில் இதுவரை அதிலுள்ள புத்தகப் பெயர் பட்டியல் அனைத்தையும் ஒரே வால்யூமாகக் கூட கொண்டுவர முடியாத அளவுக்குப் பெரியது. கிரேக்க நாடு, முதல் காவியத்தை எழுதுவதற்குள் சம்ஸ்கிருதத்தில் 4 வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் தோன்றிப் பெருகிவிட்டன.

 

3500 ஆண்டுக்கு முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.

 

உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன.

வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.

18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.

 

 

கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்).

 

கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.

 

பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.

 

 

சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் 

சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்

பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,

சதுக்தி கர்ணாம்ருத 2370பாடல்கள்–485கவிஞர்கள்,

சூக்தி முக்தாவளி 2790பாடல்கள்,  240கவிஞர்கள்,

சரங்கதார பத்ததி 4689பாடல்கள்–282கவிஞர்கள்

ப்ருஹத் பத்ததி 7586பாடல்கள்,

வல்லப தேவ சுபாஷிதாவளி 3527பாடல்கள் 360கவிஞர்கள்

 

 

(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு என்றால்!!! )

இரண்டாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன! ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள அதிசயங்களை The Wonder That is Sanskrit (published by Sampad and Vijay, Sri Aurobindo Society,Pondichery) என்ற நூலில் படிக்கலாம். இந்த மொழியை பிராமணர்கள் கூட படிக்காமல் ஐரோப்பியர்களிடம் மட்டும் விட்டால், அவர்கள் சொன்னதே “வேதம்” என்றாகிவிடும்!!

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து முதலிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருக்கின்றன. கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின்  உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

 

Please read Sanskrit Inscriptions in strange places and Sanskrit Inscriptions in Mosques and on coins in my blogs. ( Swami_48@yahoo.com )

 

 

மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!!

(English translation of this article is already posted here)

மாயா நாகரீகம் மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, ஹான்டுராஸ்

குவாடிமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. யார் இந்த மாயா இன மக்கள்? இவர்கள் எங்கிருந்து வந்து தென் அமெரிக்காவில் நுழைந்தனர்? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் எல்லோரும் ஏற்கக்கூடிய பதில்கள் கிடைக்கவில்லை. மாயா நாகரீகம் மர்மங்களும் புதிர்களும் நிறைந்ததாகவே நீடிக்கிறது. ஆனால் இந்துக்களின் கலியுகம் துவங்கும் ஆண்டை ஒட்டியே இவர்கள் ஆண்டும் துவங்குவதால் ஓரளவுக்கு புதிரை விடுவிக்க முடிகிறது. இவர்களுடைய தடயங்களும் சின்னங்களும் கி.மு.2600 முதல் கி.பி.1500 வரை கிடைக்கின்றன. ஆயினும் இவர்கள் காலக் கணக்கீடு கி.மு. ஆகஸ்ட் 11, 3114-ஆம் ஆண்டு துவங்குகிறது. நமது கலியுகம் கி.மு 3102 ல் துவங்குகிறது. உலகில் வேறு யாரும் இப்படி நெருக்கமாக ஆண்டுத் துவக்கத்தைச் சொல்லவில்லை!

அற்புதமான துல்லியமான காலண்டர்கள், வான சாத்திரக் கணக்குகள், பிரம்மாண்டமான கோவில்கள், தங்கம், பச்சைக் கல் நகைகள், புத்தகங்கள் ஆகியன இவர்களின் சிறப்பு அம்சங்கள். 1500ம் ஆண்டுகளில் இவர்களுடைய செல்வத்தைக் கொள்ளை அடித்து இவர்களை கிறிஸ்தவர்களாக்க முயன்ற ஸ்பெயின் தேசத்து ஆட்கள், மாயா இன மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். தங்கம், ஜேட் எனப்படும் பச்சைக் கல் நகைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். அருமையான மாயா நூலகங்களைத் தீகிரையாக்கினர். நல்ல வேளையாக மாயா இனக் கோவில்கள் மிகப் பெரிய கோவில்கள் ஆதலால் அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். பழங்காலத்தில் மக்கள் தங்களை இனம் காண கரடி (ஜாம்பவான்), கழுகு (ஜடாயு), குரங்கு (ஹனுமான்), பாம்பு (நாகர்) சின்னங்களை அணிவது வழக்கம். காலப் போக்கில் புராணக் கதை சொல்லுவோர் சுவை ஊட்டுவதற்காக இப்படி மிருகங்களின் பெயர்களை உண்மை என்று சொல்லிவிட்டார்கள்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

மொகலாய சாம்ராஜ்யத்தில் அவுரங்கசீப்பினால் சிறைப் பிடிக்கப்பட்ட மாமன்னன் சிவாஜியும் இப்படி பழக்ககூடை மூலம்தான் சிறையிலிருந்து தப்பித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றதற்காக டில்லியில் இரவோடிரவாக ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்றது போல. இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு

அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அகத்தியர் வழியில் பிறந்த பிற்கால அகத்திய ரிஷி கம்போடியாவில் உள்ள யசோவதி என்ற நாக மங்கையை மணந்தது போல. பீலிவளை என்னும் நாக இன அழகியை சோழன் கிள்ளி வளவன் மணந்தது போல.

அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

இதைத் தொடர்ந்து மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி! ஜனமேஜயர் ஆட்சிக்கலத்தில் இது நடந்தது.

இந்துக்கள் கலியுகத்துக்கு முந்தைய காலம் பற்றித் தெளிவாகக் கூறுகின்றனர். ஆனால் மாயாக்கள் இதற்கு முன் எங்கேயிருந்தனர் என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.

அதிசய நாகா ஆடைகள்

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் மஹாபாரதத்திலும் நாகர்கள் தயாரிக்கும் அதிசய உடுப்புகள் பற்றியும் இரண்டு குறிப்புகள் கிடைக்கின்றன. அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நீல நாகன் என்பவன் கொடுத்த அற்புதமான ஒரு ஆடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்குச் சூட்டியதாக புலவர்கள் (சிறுபாஅண். 96-99) பாடுகின்றனர். இதே போல நிஷத நாட்டு மன்னனான நளனுக்கு கார்க்கோடகன் என்ற நாகர் இனத் தலைவர் ஒரு ஆடையைக் கொடுத்து அவன் மனைவிக்கு அடையாளம் தெரிய அதைப் போட்டுக் கொண்டால் போதும் என்கிறான். அதாவது நளனுக்கும் அவன் மனைவி தமயந்திக்கும் அந்த ஆடை பாற்றி முன்னரே தெரியும்.

நாகர்கள் பாம்புத்தோல் போன்ற மெல்லிய ஆடைகளை அணியும் நெசவாளர்கள். சங்க இலக்கியம் பல இடங்களில் பாம்புத் தோல் போன்ற மெல்லிய ஆடைகளைப் பற்றி (பொருநர். வரிகள்82/83, புறம்383) பேசுகிறது.

(இத்துடன் நாகர்-மாயா அற்புத ஒற்றுமைகள் பற்றித் தொடர்ந்து வரும் இரண்டு கட்டுரைகளையும் படிக்கவும்).

************************************

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1

( English translation is already posted in this blog )

  1. கலியுக துவக்கம் கி.மு 3102, மாயா ஆண்டு துவக்கம் கி.மு 3114.மாயா மக்களும்
  2. இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பர்.
  3. பல்லவ, தென் கிழக்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களை தென், மத்திய அமெரிக்க மாயா கட்டிடங்களிலும் காணலாம்.
  4. நாகர்கள் தான் மாயாக்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது மாயா கட்டிடங்களில் காணப்படும் பாம்பு உருவங்கள்.
  5. மயன் என்பவன் பெரிய கட்டிடக் கலை நிபுணன். இவன் பெயரில்தான் மாயா நாகரீகமே இருக்கிறது. பெயருக்கேற்றார் போல எங்கு நோகினும் கட்டிடம்தான்.
  6. மதுரை நாயகர் கட்டிய மீனாட்சி கோவில் போன்ற கோவில்களிலும் வேதத்திலும் ஆயிரம் கால் மண்டபம் பற்றிக் கேள்விப் படுகிறோம். மெக்சிகோவில் யோகஸ்தான் தீபகற்பத்தில் கிஷன் இட்சா என்னும் இடத்தில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது.
  7. மாயாக்களும் இந்தியர்களும் ஒரே ஆடு புலி ஆட்டத்தை விளையாடுகின்றனர். இப்படி ஒரே விளையாட்டை இரண்டு இன மக்கள் தனித் தனியே கண்டுபிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம்!
  8. மாயாகள் கட்டமரத்தில் பயணம் செய்திருக்கலாம். இன்றும் மெக்சிகோவில் தமிழ் சொல்லான கட்டமரம் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கலத்தில் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகவே பயணம் செய்வார்கள்.
  9. நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் போருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

10. நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

11. சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன.

12. சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேலான நாகர்கள் பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.

13. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

14. இந்துமத நூலகள் கிருஷ்ணனை நாகர்களின் எதிரியாகவும் இந்திரனை நாகர்களின் நண்பனாகவும் சித்தரிக்கின்றன.

15. நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

16. கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

17. அர்ஜுனனின் பெயரான பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

18. ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.

19. நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

20. பத்மபுராணம் மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் நன்றாக வருணிக்கிறது. அதள,பாதாள, ரசாதள என்பது தானவர்கள் நாகர்கள் வசிக்கும் இடம் என்றும் சொல்லுகிறது.மாயா பெயர்களில் வரும் ஏ டி எல் என்ற எழுத்துக்கள் அதள, தள என்ற பின் ஒடு சொல்லாக இருக்கலாம்.

21. தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர். நாகர்களை மட்டப்படுத்தும் வகையில் கிருஷ்ணபக்தர்கள் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளனர். யார் பாம்புக் கட்டத்துக்கு வந்தாலும் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.

22. நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

23. பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

24. அமரிக்காவில் ஸ்வாமி த்ரிபுராரி எழுதிய நூலில், மாயாக்களும் இந்தியர்களும் வெண்கொற்றக் குடையை அரசர்களுக்குப் பயன்படுத்துவதும் ,ஒரே ஆட்டத்தை விளையாடுவதும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு வர்ணத்தை ஒதுக்கியதும், ஒரே வான சாத்திரக் கதைகளைக் கூறுவதும் தன்னிச்சையாக ஏற்படக் கூடிய ஒற்றுமைகள் இல்லை. உலகில் இப்படி எங்காவது கண்டது உண்டா? என்று கேட்கிறார். புத்த மதத்தினர், சைவர்கள், மாயாக்கள் ஆகிய மூவரும் நான்கு திசைகளுக்கு நான்கு வர்ணங்களை ஒதுக்கியிருக்கின்றனர்.

25. மாயாக்கள் தொடர்பான பெயர்களில் பல சம்ஸ்கிருத சொற்கள்: க்வாடிமாலா நாடு= கேதுமால த்வீபம் அல்லது கவ்தம ஆலய, மிட்லா=மிதிலை, அஸ்டெக் நாகரீகம்= ஆஸ்தீக ரிஷி, மாயா= தேவலோக சிற்பி மயன்,டிகல் நகரம்=த்ரி கால/ சிவன்,தெவாதிஹுவசன்= தேவ தக்ஷன், ஒரிநாகோ= ஓரி நாகன், மச்சுபிச்சு= மச்ச புச்சம்/ மீன் வால். இதே பெயரில் இமயமலையிலும் பெரு நாட்டிலும் இடங்கள் உள்ளன. யூகடன் தீபகற்பம்=யோகஸ்தானம், துலா, யகடக்ளி=யக்ஷ தளி, யக்ச்சிலன்= யக்ஷ சீலன்.

26. நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் அதலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும்.

27. மாயாக்களின் சிற்பங்களில் தாமரை, ஸ்வஸ்திகா, யானை முதலியன இருக்கும். இவைகளில் எதுவுமே அந்த இடத்தில் கிடையா.

28. மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது கருட சத்ரு என்பதன் திரிபாக இருக்கலாம்.

29. மாயாக்களின் ஒரு ராஜாவின் பெயர் தீயில் பிறந்தவன் (கி.பி 378). மகாபாரத கால திரவுபதி, ராஜஸ்தானிய சௌஹான் ஜாதியினர், சேர மன்னர்கள், வேளிர்கள் (கபிலர் புறநானூற்றில் தடவினில் தோன்றியவனே என்று வேளிரைப் பாடுகிறார்) ஆகியோர் தங்களை யாக குண்டத்தில் பிறந்தவர்கள் என்பர். அகத்தியர், வசிட்டர் போன்றோர் தங்களை குடத்தில் (கும்ப முனி) பிறந்தவர்கள் என்பர். இன்னொரு மாய மன்னரின் பெயர் கான் மாக்ஸ் (கி.பி700). இதன் பொருள் மகா நாகன். கான் என்றால் மாயா மொழியில் நாகம்/பாம்பு என்று பொருள். கான் என்பதைத் திருப்பிப் படித்தால் நாக என்று வரும். இதை மொழியியல் ஆய்வாளர்கள் மிர்ரர் இமேஜ் (கண்ணாடியில் பார்ப்பதைப் போல வட இடமாக)  என்பர். மக்ஸ் என்பது சம்ஸ்கிருத மஹா என்பதன் திரிபு.

30. மாயாக்களின் முக்கிய நகரங்களில் ஒன்று பளிங்கு. அங்கே பளிங்கு போன்ற கற்கோவில்கள் இருக்கின்றன. பளிங்கு என்பது கண்ணாடி, படிகம் என்ற பொருளில் தமிழில் புழங்கும் சொல். தமிழ் நாகர்களும் தென் அமெரிக்க சென்றனர் என்பது கட்டமரம், பல்லவ கிரந்தம், மருதன் இள நாகன் போன்ற சொற்களிலிருந்து புலனாகிறது. மாயாக்களின் எழுத்து பல்லவ கிரந்தம் போலவே சுழிவுகளுடன் இருக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பேஎசும் எல்லா மொழிகளுக்கும் பல்லவ கிரந்தமே மூல எழுத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

( பகுதி இரண்டில் மேலும் 30 ஒற்றுமைகளைப் படிக்கலாம்)

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 2

(English translation is already posted here)

(“மாயா இன மக்கள், இந்திய நாகர்கள்” என்ற கட்டுரையையும், நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1 என்ற கட்டுரையையும் படித்துவிட்டு இந்தக் கட்டுரையைப் படிக்கவும்)

 

31. மாயாக்களுக்குப் பின்னர், அஸ்டெக், இன்கா இன மக்களும் தென் அமெரிக்க ,மத்திய அமெரிக்க பகுதிகளை ஆண்டனர். ஒலெமக் என்ற நாகரீகம் இதற்கு முன் இருந்தது. மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அஸ்டெக் காலண்டர் இருக்கிறது. அதில் இரண்டு பெரிய பாம்புகள் உள்ளன. இவைகளை இந்துக்கள் கால சர்ப்பம் என்று அழைப்பர். காளி என்ற பெயரில் பிரமிடும் கோவிலும் இருக்கின்றன.

 

32. மகன், மகள்களை தாத்தா, பாட்டி பெயர் கொண்டே (பெயரன்) அழைக்கின்றனர். பூ, பழம், பாம்பு,கருடன்- இவைகளைப் பெயராகச் சூட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி தாமரை, மல்லிகை மற்றும் பூ, பழம் பெயர்களையே அதிகம் சூட்டுகின்றனர். இந்துக்கள் அனுஷ்டிக்கும் நாமகரணம், புன்யாஹ வசனம், குருகுல வாசம் ஆகியன மாயாக்களிடமும் இருந்தன.

33. இந்தியாவில் படை வீரர்கள் நவ கண்டம் முதலியவற்றின் மூலம் உயிர்த் தியாகம் செய்தனர். கபிலர், குமாரில பட்டர் போன்றோர் தீயில் புகுந்து உயிர்வீட்டனர். மகாபரதத்திலும் அரவான் களபலி கொடுக்கப்பட்டான். இதை மாயாக்களும் செய்தனர்.

 

34. இந்திய மன்னர்கள் சிம்மாசனத்தைப் பயன்படுத்தினர். மாயாக்கள் சிங்கம் இல்லாததால் ஜாகுவார் புலி ஆசனத்தைப் பயன்படுத்தினர். சிங்கத்தைக் குறிக்கும் சிங் என்ற சொல்லும், கேசரி (சீசர்) என்ற சொல்லும் பல மொழிகளில் உள்ளன.

35.மாயாக்களும் உயரமான கோபுர வடிவக் கோவிலகளைக் கட்டினர். எகிப்தில் பிரமிடுகள் இப்படி இருந்தபோதிலும் அவைகள் சவ அடக்கம் செய்யப்பட்ட இடங்கள். மாயாக்களும் இந்திய ராஜாக்களைப் போலவே நகைகள் அணிந்தனர். எகிப்தியர் போல அல்ல. கிருஷ்ணர் மயிற்பீலி அணிந்தது போல மாயாக்களும் பறவை இறகை அணிந்தனர்.

36. வேத கால காலண்டரில் நாலைந்து வருடத்துக்கு ஒரு முறை மல மாதம் என்று விலக்கப்பட வேண்டிய தீட்டு மாதம் வரும். மாயாக்கள் ஒவ்வொரு மாதத்திலுமே 5 நாட்களை வேண்டாத நாட்களாக கருதினர்.

 

37. இந்துக்களைப் போலவே நிலவில் முயல் இருப்பதாகக் கருதினர். வேறு பண்பாடுகளில் இதைக் கிழவி, மன் என்றெல்லாம் சொல்லுவார்கள். ராகு கேது பாம்புகள் நிலவை விழுங்குவதே கிரகணம் என்று இந்துக்கள் சொல்வதைப்போல அவர்களும் நம்பினர்.

38. டிகால் என்னும் ஊரிலுள்ள கோவில் மதுரை மீனாட்சி கோவில் போல இருப்பதாக ஒப்பிடுவர். ஊர்ர்ப் பெயர் கூட த்ரிகால என்று சிவனின் பெயர் போல இருக்கிறது.

39. மாயாக்காளும் சப்பாத்தி உணவைச் சாப்பிட்டனர். ஆனால் கோதுமைக்குப் பதிலாக தென் அமெரிக்காவில் அதிகம் விளையும் சோள மாவில் அதைச் செய்தனர். அதன் பெயர் டோர்டியா.

40. சூரிய வழிபாடு இந்த நாகரீகத்திலும் உண்டு. அது 1500ஆம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக சூரியனை வழிபட்ட இன்கா இன மக்களின் பெயர் இனன் (சூரியன்) என்ற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது என்பர்.

 

41.மாயா நாகரீகத்தில் உள்ள சில அம்சங்கள் பற்றி சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலில் அது இந்து நாகரீகம் என்று வந்துவிடும். அ) மாயாக்களுக்கு இந்துக்களுக்குத் தெரிந்த பூஜ்யம் என்பதை யார் சொல்லிக் கொடுத்தனர்? ஆ) அவர்களுக்கு யார் எழுதக் கற்றுக் கொடுத்தனர்? இ) யார் வான சாத்திரம் கற்பித்தனர்? ஈ) யார் அசோக மன்னன் போல கல்வெட்டில் பொறிக்கச் சொல்லிக் கொடுத்தனர்? உ) யார் மன்னர்களுக்குக் குடை பிடிக்கும் வழ்க்கத்தைக் கற்பித்தனர்? ஊ) சிவனின் 5 முகங்களுக்கும் ஐந்து வர்ணம் கூறுவது போல நாலு திசைகளுக்கும் மாயாக்கள் வர்ணம் ஒதுக்கினரே.இதைக் கற்பித்தது யார்? எ) கலியுகத்தை ஒட்டி ஆண்டு துவக்கியது ஏன்? ஏ) இந்துக் கோவில் போல உயரமான கோவில் கட்டக் கற்பித்தது யார்? ஐ) மாயாக்கள் எங்கிருந்து வந்தனர்? ஒ) இந்தியர் விளையாடும் அதே ஆடு புலி ஆட்டத்தை அவர்களும் ஆடுவது எப்படி? இவை எல்லாம் ஒரு தொடர்பும் இல்லாமல் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கக் கூடியது அல்ல.

 

41.மாயாக்களுமிந்தியர் போல பச்சைக் கற்களையும் முத்துக்களையும் நகை செய்யப் பயன்படுத்தினர்.

42. நம்மைப் போலவே சகுனங்களில் நம்பிக்கை வைத்தனர்.

43. இந்துப் புராணக் கதை போலவே சில கடவுள் கதைகள் உள்ளன.

44. இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது போல மாயாக்களும் ஆப்ரிக்க மக்களும் கரீபியன் தீவு மக்களும் செய்பா எனப்படும் இலவம் பஞ்சு மரத்தை ( சால்மலி) வழிபட்டனர். இந்து புராணங்களில் சால்மலித்வீபம் என்று ஒரு கண்டம் அழைக்கப்படும்.

45. இந்துக்கள் போல கால்களை மடித்து உட்காருகின்றனர். மன்னர்கள் பல்லக்குகளில் போகின்றனர். ஆனால் உலகில் பல நாகரீகங்களில் காணப்படும் சக்கரங்களைப் பயன்படுத்தாதது ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.

46.மாயாக்கள் இடையே ஜாதி முறை இருந்தது. மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளை சோழ பாண்டியர் போலவே கல்வெட்டுகளில் பதித்தனர்.

47. கற்பக விருட்சம், சொர்கம், அம்ருதம் ஆகியவற்றை நம்பினர்.

 

48. பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர்.

49. மத்திய அமெரிக்காவிலுள்ள முக்கிய தெய்வங்களில் ஒன்று வீரகொச்சா. பல்லவ மான்னர்களின் மூதாதையர் பெயரில் வீரகுர்ச்சா என்ற பெயருள்ளது.

50. பாம்புகளின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் காணப்படுதால் இவர்கள் நாகர்களாக இருக்கக்கூடும்.

51. 1994 ல் மெக்ஸிகோவில் “சோழன் நாகா” புரட்சி வெடித்தது. சோழன் நாகர் தங்களை பழைய நாகரீகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கிறனர்.

52. பகல் என்ற மன்னர் 683-ல் ஆண்டார். அவர் சூரிய திலக என்று அழைக்கப்படுவார். நாமும் ராமர் முதாலான அரசர்களை சூரிய குல திலக அல்லது சூர்ய வம்ச ரத்ன என்றெல்லாம் புகழ்கிறோம்.

 

53.அஸ்டெக்குகளும் மாயாக்களும் கழுகு வாயில் பாம்பு இருக்கும் சின்னத்தைப் பயன்படுத்தினர். சேர சோழ, பாண்டியர் போல இவர்களுக்குள்ளும் பிரிவுகள் இருந்ததைக் காணமுடிகிறது

54.இந்துக்கள் தட்சசீலம், நாளந்தா பல்கழைக் கழகங்களில் புத்தகங்களை சேகரித்து வந்தது போல மாயாக்களும் அழகான புத்தகங்கள் வைத்திருந்தனர். ஸ்பானியர்கள் அவைகள் எல்லாவற்றையும் குவித்து தீவைத்து எரித்து, ஒன்று கூட விடாமல் எரித்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 1562 ஆம் ஆண்டில் டீகோ டெ லாண்டா என்பவர் எழுதிய கடிதத்தில் எல்லா புத்தகங்களையும் எரித்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். 1546ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்களைக் கொன்றுகுவித்ததையும் எழுதி வைத்துள்ளனர்.

 

55. இந்து மத காபாலிகர்கள் போல சில சடங்குகளில் கறுப்பு உடை தரித்தனர் மாயாக்கள்.

57. குளத்தில் காணிக்கைகளைப் போடும் வழக்கமும் யோகாசன நிலையில் அமரும் வழக்கமும் இவர்களிடையேயும் இருந்தது.

58. குப்தர் காலம் போல குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.

59. தமிழ் செப்புச் சாசனங்களில் மன்னர்கள் நான்கு கடல்களின் நீரையோ அல்லது இரு பக்கமுள்ள கடல்களின் நீரையோ ஒரே பகலில் நீராடியதைப் பெருமையுடன் கூறுவர் ( நாற்கடல் நீரை ஒரு பகல் ஆடி). தங்களுடைய ஆதிக்கம் நாடுமுழுதும் இருந்தது என்பதை இது குறிக்கும். இதற்காக ரிலே ரேஸ்/ தொடர் ஓட்டம் ஓடும் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர். மாயாக்களும் இப்படி தொடர் ஓட்ட ஆட்கள் மூலம் பல செயல்களைச் செய்தனர். இதுவும் இந்திய வழக்கம்.

60. ரோமானியர்கள் போல இளம் சிவப்பு எனப்படும் பிங்க் கலர் மாயா உலகிலும் சிறப்பு வாய்ந்தது. இதை ஒரு வகை கடல் சிப்பியிலிருந்து எடுத்து ஏற்றுமதி செய்தது இந்தியர்களே.

 

61. “சாக்” எனப்படும் மழைத் தெய்வத்தை மாயர்கள் வழிபட்டனர். இது இந்திரன் என்றும் அவனுக்கு சக்ரன் என்று வடமொழியில் உள்ள பெயர் சாக் ஆனது என்றும் ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டுவர்.

62. தமிழ் நாட்டில் காணப்படும் அம்மியும் குழவியும் மாயா வீடுகளிலும் இருந்தன.

63. திரிலோக நாத் என்ற தெய்வத்தை அவர்கள் வழிபட்டதையும் அந்தப் பெயர் ஸ்பானியர்களால் உருத்தெரியாமல் மாற்றப்பட்டு எழுதப்பட்டதையும் மாயாக்களுடைய மந்திரங்கள் வேத மந்திரங்கள் போல இருப்பதையும் தாமரை, ஸ்வஸ்திகா சின்னம், யானை முதலியவற்றை அவர்கள் பயன்படுத்தியதையும் 75 ஆண்டுகளுக்கு முன்னரே “இந்து அமெரிக்கா” என்ற புத்தகத்தில் பிட்சு சமன்லால் எழுதிவிட்டார்.

64. மாயா கட்டிட வரைபடங்கள், கோவில் அமைப்புகள் பற்றி இப்பொழுது அமெரிக்கர்கள் புதிய புத்தகங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவைகளை நமது வாஸ்து சாத்திரக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளிப்படும்

65. மாயாக்கள் காதில் போட்டிருக்கும் வளையங்கள் குண்டலங்கள் நம் நகைகளைப் போலவே இருக்கும். மாயா மன்னர்களும் இந்திய மன்னர்களைப் போலவே அந்தப் புறத்தில் காமக்கிழத்திகளை வத்திருந்தனர். அவர்களை பள்ளா என்று அழைத்தனர். இந்தியில் பள்ளு என்பது புடவையின் மேல் தலைப்பு.

66. போனம்பாக் என்னும் இடத்தில் கிடைத்த படங்களில் நம் ஊர்க் கோவில்களில் சுவாமி ஊர்வலத்தில் இசைக் கலைஞர்கள் ஊர்வலம் போவது போல படங்கள் உள்ளன. குறவஞ்சி, கதகளி நடனம் போன்ற நாட்டியப் படங்களும் இருக்கின்றன.

 

67. இந்துக்கள் இறந்தோர் வாயில் வாக்கரிசி போடுவதைப் போல மாயர்கள் மக்காச் சோளத்தையும் ஜேட் எனப்படும் பச்சைக் கற்களையும் போட்டனர். இறந்த பின் மனிதன் உள்ள நிலை குறித்து இருவரும் ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டும்.

68. மற்றொரு புதிரிலும் அவர்கள் இந்தியரைப் போலவே இருக்கின்றனர். கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற நூலில் கலியுகத்துக்கும் அவர் கூறும் கணக்கிற்கும் 600 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. இதே போல மாயாக்கள் கி.மு.3114 என்று காலண்டரைத் துவக்கினாலும் அவருடைய வரலாற்றுத் தடயங்கள் 2600 முதலே கிடைக்கின்றன. ஆக, இந்தியாவைப் போலவே அங்கும் இரு வகை ஆண்டுக் கணக்கு இருந்தததோ என்று எண்ணவேண்டி இருக்கிறது. இந்தப் புதிரை எதிர்கால ஆய்வுகள் தீர்க்கக்கூடும் !!

 

69. நாகர்கள் வட கிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்து முதல் இலங்கையின் தென்கோடி வரை இருக்கிறார்கள். குப்தர்களின் கல்வெட்டுக்களிலும், இலங்கைத் தமிழ் கல்வெட்டுகளிலும் தமிழ் வடமொழி இலக்கியங்களிலும் ,மஹாவம்சத்திலும் குறிப்பிடப்படுவதால் இவர்கள் அமெரிக்கா வரை சென்று குடியேறினார்கள் என்று நம்புவதில் தவறில்லை.

*********