ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே!!

Bee_In_Flower

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.—1115; தேதி-. 18th June 2014.

(((((((சங்கத் தமிழ் இலக்கியம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் மலர் மேயும் வண்டுகளாம். அழகான ‘மலர்களை’—அது தான்—மலர் விழிகளை— அதுதான் மலர் இதழ்களை— விட மாட்டீர்களாம்!!! மலர் மலராக உட்கார்ந்து செல்லும் தேனீயும் நீங்களும் ஒன்றுதானாம்!))))))

இன்று, வீட்டிற்கு கணவன் தாமதமாகவோ அல்லது ஒரு இரவு வராமல் மறு நாளோ வந்தால் பெண்கள் என்ன என்ன எல்லாம் சந்தேகப் படுகிறார்கள்! 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே கதைதான்! கணவன் தும்மல் போட்டாலே சந்தேகப்படும் பெண்ணை திருவள்ளுவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது 1500 ஆண்டுகளுக்கு முன்.

“ நான் தும்மினேன். தீர்க்க ஆயுஸ்! Bless You ! (நீண்ட ஆயுள் உமக்கு) என்று வாழ்த்தினாள். திடீரென அழுதாள்! உண்மையைச் சொல், எந்தக் காதலியை நினைத்தவுடன் தும்மல் வந்தது? என்றாள்” ( குறள் 1317)
kannadi pen

“ இன்னொரு தும்மல் வந்தது .அடக் கடவுளே. இவளுக்கு முன் தும்மினால் இன்னும் பிணங்குவாளே என்று அடக்கினேன். அதையும் பார்த்துவிட்டாள் அந்தக் கள்ளீ !! உன்னை நேசிக்கும் மற்ற பெண்கள் உன்னை நினைப்பதை மறைக்கத்தானே தும்மலை அடக்கினாய்? என்று என்னைப் பிடித்துக் கொண்டாள் (குறள் 1318)

அதற்கும் முன் சங்க இலக்கியத்தில்:-
நற்றிணப் பாடலில் ஆண்களை மலர் மேயும் வண்டு என்று தோழி சாடுகிறாள். பாடல் 290 மருதன் இளநாகனார் பாடியது:
“நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டென மொழிப மகனென்னாரே”

பொருள்: தோழி கூறுவது: நெடிய நீரை உடைய பொய்கையிலே நடுயாமத்தில் தண்ணிதாய் நறுமணங்கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டெனச் சொல்லுவாரல்லாமல் நல்ல ஆண்மகனென யாரும் கூறார் ( நள்ளிரவிலே சென்று புதிய பரத்தையை விரும்பித் துய்ப்பவன் என்பாள் நடுயாமத்து விரியும் பூவை உண்ணுகின்ற வண்டெனக் கூறினாள் (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் உரை)

bee-sweet-in-pink

காளிதாசனும் சாடுகிறான் ஆண்களை!!
தமிழ்ப் புலவர்களுக்கு சளைத்தவனா காளிதாசன்? அவனும் ஆண்களை வசை பாடுகிறான். சாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற வடமொழி நாடகத்தில் நாடக மேடைக்குப் பின்னால் இருந்து வரும் பாட்டு மூலம் பழைய காதலி சகுந்தலையை மறந்து போன மன்னன் துஷ்யந்தனை இடித்துரைக்கிறான் கவிஞன். அவன் கொடுக்கும் இடி, துஷ்யந்தானுக்கு மட்டுமல்ல. அததனை ஆண்களுக்கும்தான்.
“முன்னர் மாமரப் பூவில் தேன் உண்டாய். இப்போது தாமரைக்குப் போய்விட்டு அதை நுகர்கிறாயே. எப்போதும் புது பூவை நாடுகிறாயே” – என்பது பாட்டின் பொருள்.

Kalidasa in Shakuntalam Drama (Act 5- verse 8)
O you honey pilfering bee!
Greedy as ever for fresh honey
Once you lovingly kissed
The mango’s fresh spray of flowers
Is she then forgotten so soon?
You are content now merely to stay
Within the full blown lotus

பழைய கால கருப்பு/வெள்ளை திரைப் படத்தில் ஒரு இனிய பாடல் வருகிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் இடித்துரைக்கும் சுவைமிகு பாடல்:–

இரட்டையர்
பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் – அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்,
வெடுக்கின்னு முறைப்பாங்க

ஆண் : ஹா! ஹா!
பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் – அது
அடிக்கடி மாறும் இப்படித்தான்
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான் – இந்த (பெண்)
மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க – திரு
மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
குஸ்திக்கும் வருவாங்க

014maruthi
பெண் : ஓஹோ ஹோ ஹோ!
ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்
பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வருவாங்க
ஆண் : ஓஹோ!

பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க (ஆண்)
ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமை யடைவாங்க
பெண் : ஆமா!
ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க (பெண்)
பெண் : மானே தேனே என்பதெல்லாம் – ஒரு
மாதம் சென்றதும் மாறிடுதே
ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் – ஒரு
வாரம் சென்றதும் ஓடிடுதே
பெண் : ஹா…ஹா…ஹா…

maruthi blogspot
ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)
ஆண் : இந்தப்
பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்

[நான் வளர்த்த தங்கை,1958] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 – 1959
bee-in-flower

(அனைவரும் கேட்க வேண்டிய அருமையான பழைய படப்பாட்டு. கூகுள் செய்து கேட்கலாம். நானும் அப்படித்தான் கேட்பேன்).

ஆண்களே ! நீங்கள் கேள்விக் குறியா? அல்லது ஆச்சரியக் குறியா?
Pictures are used from various sites; thanks.
—சுபம்—

தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து!!

tiger claw

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்/–1114; தேதி— 18 June 2014.

சங்கத் தமிழ் நூல்களிலும் அதர்வ வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் உள்ளன. இது அந்தக் கால மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்றும் கூட மந்திரிக்கப்பட்ட தாயத்துக்களைக் கருப்புக் (காசிக்) கயிற்றிலோ குழந்தைகளின் அரைஞாண் கயிறுகளிலோ அணிவதைப் பார்க்கிறோம். இது சங்க காலத்தில் இருந்து வந்துள்ளது. அதற்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால், அதர்வ வேதத்தில் தாயத்துக்களைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன. சிலவற்றை இங்கே காண்போம்:-

ரக்ஷை என்றும் பந்தனம் என்றும் காப்பு என்றும் அழைக்கப்படும் தாயத்து, ஒரு காலத்தில் தாலி என்று அழைக்கப்பட்டது. சிறுவர்களுக்கும் மணமானவர்களுக்கும் தாலி கொடுக்கப்பட்டது. சிறுவர்கள் ஐம்படைதாலி என்று விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாயத்தை அணிந்தனர். சங்கு, சக்ரம், வாள், வில்,கதை ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டதால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்று தமிழர்கள் நம்பினர்.

Thirumangalyam from mr srinivasan

(Tali designs: Mangala Sutra=Tali)

குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.

பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர். பழைய காலத்தில் அணிந்த தாயத்துக்களே இப்படி தாலி போன்ற வடிவங்களில் இன்று பயன்படுத்தப்படுகின்றன.

ஐம்படைத் தாலி பொன்னுடைத் தாலி என் மகன் — அகம்.54;
தாலி களைந்தன்றும் இலனே — புறம்.77
ஆதாரம்:- இந்தியப் பண்பாடும் தமிழரும், பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே), 1971ம் ஆண்டு வெளியீடு.

பி.டிசீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு (1930) என்னும் நூலில் புலிப்பல் தாலியே பிற்காலத் தங்கத் தாலிக்கு வழி செய்தது என்று வாதாடுகிறார். குறுஞ்சி நிலப் பெண்களும் இதை அணிந்தனர் என்பார்.
Impadai_thaali

Picture of Aimpatai Thali

பிற்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (3-135, 7-56), பெரியபுராணம் ஆகியவற்றில் சிறுவர்கள் தாலி புலிப் பல் தாலி முதலியன பற்றி கூடுதல் விவரங்கள் கிடைக்கின்றன.

தாயத்துக்களை ஏன் அணிந்தனர்?
அவைகள் பாதுகாப்பு தருவதோடு, அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பினர். தீய சக்திகள், பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும் எதிரிகளை வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். அதர்வ வேத மந்திரங்களில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.

ஒரு காலத்தில் பனை மர ஓலைச் சுருளில் மந்திர தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வடமொழியில் ‘’தால’’ என்று பெயர். இதில் இருந்தே தாலி, டாலிஸ்மேன் (ஆங்கிலச் சொல்) ஆகியன வந்திருக்க வேண்டும்.

ஆதிசங்கரர் காலம் முதல் இன்றுவரை காஞ்சி காமாக்ஷி, திருச்சி அகிலாண்டேஸ்வரி கோவில்களில் தாடங்கப் பிரதிஷ்டை என்ற பெயரில் அம்மனுக்கு ((தாள்+அங்கம்= தாடங்கம் என்னும்)) காதணி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தால (பனை ஓலை) என்பதே அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்து பின்னர் தங்க அணியாக மாறியதற்கு இது ஒரு உதாரணம். சந்திர சூரிய கிரஹண காலங்களில் எந்த நட்சத்திரங்கள், ராசிகள் பாதிக்கபடுகின்றனவோ அந்த ராசிக் காரர்களுக்கு பனை ஓலையில் எழுதப்பட்ட மந்திர ஓலையை பட்டம் கட்டும் வழக்கமும் பிராமணர் வீடுகளில் உண்டு. பனை ஒலை மந்திரச் சுருள் புழக்கத்தில் இருந்ததைக் காட்ட இதுவும் ஒரு உதாரணம்.

swastika-stamps
Swastika Stamps of Hitler’s Germany.

சிந்து சமவெளியில் தாயத்து
சிந்து சமவெளியில் நிறைய ‘ஸ்வஸ்திகா’ வில்லைகள் கிடைத்தன. இவைகளை மக்கள் பயன்படுத்திய தாயத்துகள் என்று கருத இடம் உண்டு. உலகம் முழுதும் பழைய கலாசாரங்களில் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்தே இது சென்றதை உணரமுடிகிறது. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் கூட ‘ஸ்வஸ்திகா’ என்ற சம்ஸ்க்ருத சொல்தான் இருக்கும். ‘’மங்களம்’’, (சு+ அஸ்தி) ‘’நல்லவை’’ என்னும் பொருள் தரும் இச்சொல் விஷ்ணு சஹஸ்ர நாம மந்திரத்திலும் வரும்.

ஆரிய இனவெறிக் கொள்கையை நம்பிய ஹிட்லர். இதை ஆரியர்கள் சின்னம் என்று கருதி கொடிகளிலும், ஜெர்மானிய தபால் தலைகளிலும் பயன்படுத்தியதால் மேலை நாடுகளில் இதற்கு அவப் பெயர் ஏற்பட்டது. ஆனால் இன்றுவரை இந்துக்கள் திருமண அழைப்பிதழ்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் ‘’ஸ்வஸ்திகா’’ சின்னத்தைப் பொறித்து வருகின்றனர்.

tamil tali2

பெண்கள் தாலி :–புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50
தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.

இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.

“ஈகை அரிய இழை அணி மகளிர்” —

(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)

“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47

(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)

“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “

(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்.

tamil tali

. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.

ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதிடுகின்றனர்.

அதர்வணவேதத்தில் தாயத்து
நாலாவது வேதமும், மாய மந்திர தந்திரங்களும் அடங்கிய அதர்வ வேதத்தில் இருபதுக்கும் மேலான தாயத்து வகைகள் உள்ளன (இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தில் மண்டலம் வாரியாக குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்). பெரும்பாலானவை பேய், பிசாசுகளை ஓட்டும் தாயத்துகள்; சில, அரசர்களை போரில் வெற்றி வாகை சூட வைக்கவும், எதிரிகளை ஒழித்துக் கட்டவும் பயன்படுத்தப்பட்டவை. கேரளத்தில் அதர்வ வேதத்தைப் பின்பற்றிய பலர் இருந்ததால் இந்த (‘ஆபிசார’) வகைப் பிரயோகங்கள் அண்மைக் காலம் வரை பயன்படுத்தப்பட்டு வந்தன.

AV3
அதர்வண வேத தாயத்துக்கள் பலாச முதலிய தாவரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதும் நோக்கத் தக்கது.

இப்போது கத்தி கபடாக்கள், ஏ.கே 47 துப்பாக்கிகள், ரிவால்வர்கள் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதால் அதர்வண வேதக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. மக்களே புரோகிதர் உதவி இன்றி எதிரிகளை சுட்டும், வெட்டியும் வீழ்த்தி விடுகின்றனர். பேய், பிசாசு என்போருக்கு நரம்புகளை மரக்கச் செய்யும், வாயில் நுரை தள்ள வைக்கும் (‘லிதியம்’ வகை மருந்துகள்) மன நோய்களைக் ‘’குணப்படுத்தும்’’ மருந்துகளைக் கொடுத்து அமுக்கிவிடுகின்றனர்.

–Subham—

Talismans in Atharva Veda & Ancient Tamil Literature

AV1

Written by London Swaminathan
Post No.1113; Dated 17th June 2014.

(Also read my earlier post “Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda” – posted on 26th September 2012)

What is a Talisman?
A Talisman is an inscribed ring or stone, supposed to be endowed with magic powers, especially averting evil from or bringing good luck to its holder. It is also a charm or amulet which is capable of working wonders (The Concise Oxford Dictionary).

Impadai_thaali
Picture of Aimpatai Thali of Tails with Five of Vishnu’s weapons.

Talismans are found in the Vedas and in the Indus Valley Civilisation. Though SWASTIKA is found all over the world, India is the only country which has some explanation for it. So the Sanskrit word is used all over the world including the Oxford Dictionary. Swastika seals were found in the Indus Valley excavations.
Talismans conveyed joy and confidence to their owners and gave them warning of coming events, inspiring courage and faith in the fearful; they have played a part in the lives of individuals.

swastika-stamps
Swastika Stamps of Hitler,Germany.

Swastika
Hitler, who believed in the Aryan Racist Theory, misused the symbol and so it earned a bird name after World War II in Western countries. But Hindus use it even today in their wedding invitations and shops for good luck. There is a mantra in the Vishnu Sahasra Nama with the word Swasti.
In Sanskrit its name means happiness, pleasure and good luck.
Su = good and Asti = being; full meaning = well being.

Tamil Talismans
Ancient Tamils used talismans from young age. Tamil children were given talismans made up of tiger nails or tiger tooth. That gave them courage to fight the evil. Tamils called it Aimpatai Thali or simply Thayathu. Tamil Women wore talismans in yellow thread (Purananuru 127and Tamil epic Silappadikaram 1-47 & 4-50) when they got married.

chettiar tali
Picture of Chettiyar Thali.

Tamil children had Aimpataith thali made up of five symbols: Vishnus’s conch,Chakra/wheel, Bow, Sword and Mace.
Ref.Akam.54, Puram.77

(Ref.S Ramakrishnan’s Tamil Book Inthaiya Panpatum Thamizarum, Meenatchi Puthaka Nilayam, Madurai 1971)

Even married women wore Pulippal Tali ( Tiger Teeth) in the hill areas. It was worn hanging from the neck. For children they tied it around their waist. They believed in the magical powers of the teeth and nails of the tigers. When we look at the Talis of today, we can still see the shape of tigers’ claw or teeth. P.T Srinivasa Iyengar thinks that it was the origin of later Golden Talis.
(Ref. History of The Tamils, 1930)

There are more references in Silappadikaram, Manimekalai (Fifth Century CE) and Peria Puranam (Tenth Century CE).
Thirumangalyam from mr srinivasan

Tirumangalyam designs provided by MR Srinivasan

Among the tribes living in the hills of Tamil Nadu, we find various types of talismans.
I guess the English word Talisman and Tamil word Tali came from the Sanskrit word Tala for Palmyra leaf. In the ancient India, Hindus wore ornaments made up of Palmyra leaf in which they wrote mantras. Adi Shankara and his followers installed Thadanga in Kanchi Kamakshi Temple and Trichy Akilandeswari Temple. But that is worn on the ear as ear studs.

During lunar and solar eclipse times the Brahmin priests visited my house and asked us to wear the Palmyra leaf with written mantra on our foreheads. This is to ward off the evil effects of the planets, if the eclipse occurred on the day of your birth star etc. This custom shows that wearing the palm leaf with written mantra has been there for ages.
TALI WITH SHIVE & PARVATI
Tali with Shiva, Durga.

Following Atharva Veda passages also confirm the usage of plant materials as talismans. Tamils give importance to Ganesh made up of Vellerukku plant.

Talismans in the Atharva Veda
Following list is taken from the book “Common Life in The Rig Veda and Atharva Veda” by Chhanda Chakraborty, Calcutta, 1977.

“ A study of the A.V. and the Kausika Sutra reveals the faith of the people in a number of amulets used for various purposes, both defensive and offensive. Certain herbs and plants as well as conch shells, lead etc. appear to have been used as amulets the chief of which are mentioned below.
1.Ajasrngi (AV 4-37):- Destroys the influence of Picasas, Asuras, Gandharvas etc.
2.Apaamarrga (AV 4-17;8-65; K 39-7-12): Removes all sorts of evil and is used against witch craft.
3.Astra (AV 19-46) : Kills one who curses
4.Asvatta (AV 3-6; KK 48-3-6): Destroys enemies
5.Badhaka (AV 8-8-3) :Used in Witchcraft
AV2

6.Darbamani (AV 19-28,29,30,32,33): Destroys enemies.Brings prosperity to warriors
7.Dasavrksa (AV 2-9;K 27-5,7) : Used against Brahmagraha
8.Jangida (AV 2-4; 19-34,35) Removes dangers arising from hostile demons and sorcerers
9.Khadira Nairbadhya : Used in Witchcraft
10.Havis Nairhasta (AV 6-75) : Used in Witchcraft

11.Havis Parnamani (K 19-22): Used for subduing enemies (Amulet of Palasa)
12.Phaalamani (AV10-6): Made up of Khadira wood and wrapped in gold, can destroy Dasyus.
13.Pratisara (AV 4-40;8-5-5, 20) :Repels hostile witchcraft which harms its performer himself; protects the wearer even against the Apsaras, Gandharvas and prosperity to him;Made from Sraktya Tree)
14.Prsniparni (AV 2-25) : Repels demons called Kanva.
15.Sraktyaa (AV 8-5, 8, 9) : Repels Abhicaara

AV3
16. Sadampuspaa ( AV 4-20; 5-1-1; K 28-7, 39-6): Used in Witchcraft; The wearer can see everything in front, at back, far and near, on earth and in the sky etc., kills sorcerers
17.Sahadevi Samkhamani : Same as Apaamaarga : Destroys the influence of Rakshasas, Amiiva, Sadanvaa etc.
18.Satavaara (AV 19-36) : Cures diseases like Yaksma, kills Rakshasas. Used against hostile Apsarases and Gandharvas.

tiger claw
Picture of Tiger Claw Talisman

19.Sisa (AV 1-16-1-2) : Used in Witchcraft.
20.Sunodivyasya (AV-6-80): Used in Witchcraft.
21.Havis Taarchya (K 48-24) : Made up of bone, according to some, of Palasa wood, according to others. Believed to ward off Pisacas, Viskhandas etc.
22.Trisandhyaa ( Made from the navel of a Snataka, hairs of a lion, a tiger, a goat or a ram, a bull or a king and pasted with lac, covered with gold. It is worn by a king so that he is endowed with lustre. For the same purpose another amulet made from pieces of a holy wood on which AV 3-6; 6-38, 39, 69; 11—1 are recited, is also prescribed. The seven vital parts of a lion and a tiger was mixed with.

aveda chart

Pictures are used from various sites;thanks.
Contact swami_48@yahoo.com

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு!!!

atom bomb queen

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1112 ; தேதி:– 17 ஜூன் 2014.

உணவை அளவோடு உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்; நல்லதைச் செய்யும் என்பது இதன் பொருள்.

அது என்ன? பெண்களுக்கு மட்டும் இந்த அறிவுரை? ஆண்கள் நிறைய சாப்பிட்டுவிட்டு தொந்தியும் தொப்பையுமாக ‘’டைனோசரஸ்’’ மிருகம் போல வலம் வரலாமா? ஏன் பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்?

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு – என்று கொன்றை வேந்தன் கூறுகிறது, காரணம்? — பெண்கள் சமையல் அறையில் அதிகம் புழங்குவதால் ‘’ருசி பார்க்கும்’’ சாக்கில் அல்லது குழந்தைகளுக்கு ஊட்டும் சாக்கில் அதிகம் சாப்பீட்டுவிட்டு எப்போதும் ‘’கர்ப்பிணி போல’’ காட்சி அளித்தால் நன்றாக இராது.

மனைவியைத் தவிர வேறு பெண்களை நோட்டம் விடும் ஆண்களுக்கு நல்ல சாக்கு கிடைத்து விடும் அல்லவா? ஆண்களை ‘’மலர் மேயும் வண்டுகள்’’ – என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் திட்டுகின்றனர் ((இது பற்றி எனது தனிக் கட்டுரையைக் காண்க)).

big-bottom

மீதூண் விரும்பேல் – என்று ஆத்திச் சூடி கூறும்.
பொருள்:– அதிகமாகச் சாப்பிட்டால் தொந்தி விழும்! தொந்தி சரிந்தால் சர்க்கரை வியாதி வரும். பின்னர் அதன் சகோதரர்களான இரத்த அழுத்தமும், இருதய நோயும் வாடகை தராமலேயே நம் வீட்டில் குடிபுகுந்து விடுவார்கள்! ((காண்க:– எனது பழைய கட்டுரை; ‘’ஒருவேளை உண்பான் யோகி’’……கட்டுரை இட்ட தேதி நவம்பர் 15, 2012))

மருந்து – என்ற தலைப்பில் திருவள்ளுவன் நமக்கு பத்து அறிவுரைகள் தருகிறான். அதில் ஒன்று:–

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் – குறள் 946

பொருள்:– குறைவாக (இழிவு) உண்பவனுக்கு என்றும் இன்பம்; அதிகமாக உண்பவனுக்கு என்றும் நோய்!!

VLUU L100, M100  / Samsung L100, M100

பாலோடாயினும் காலம் அறிந்து உண் – என்று கொன்றை வேந்தன் சொல்லுகிறது.
பொருள்: பாலும் தேனும் கிடைத்தாலும்கூட அதற்கு உரிய காலத்தில்தான் சாப்பிட வேண்டும். அந்தக் காலத்திலேயே ‘’கொலஸ்ட்ரால்’’ (கொழுப்புச் சத்து) பற்றிய மருத்துவ அறிவு இருந்திருக்கிறது!!

((எங்கள் லண்டனில் பால் பாட்டில்களில் நீல நிற மூடி, பச்சை நிற மூடி, சிவப்பு நிற மூடி என்று பல வகை பால்-கள் விற்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இந்த விழிப்புணர்வு இருக்கிறதா என்பதை யாம் அறியோம் பராபரமே!! டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி வந்தாலேயே டாக்டர்கள் பச்சை மூடி அல்லது சிவப்பு நிற மூடிக்கு மாறிவிடுங்கள் என்று எச்சரிப்பர். காரணம்? அவருடைய சகோதர வியாதிகள்— பிளட் பிரஸ்ஸர், ஹார்ட் ப்ராப்லம்ஸ்!!!))

மருந்தேயாயினும் விருந்தோடு உண் –என்று தமிழ் பழமொழி செப்புகிறது.
பொருள்: அமிர்தமே கிடைத்தாலும் அதை விருந்தினருடன் பகுத்து உண்ணுங்கள். அதிகம் உண்டால் அமிர்தம் கூட விஷம் ஆகி விடும். மற்றொரு பொருள்:- சில வகை மருந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் சாப்பாட்டுடன் சாப்பிடுங்கள்.

சுட்ட எண்ணையை தொடாதே, வறுத்த பருப்பை விடாதே –என்று சித்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

manuel-uribe-fattest-man-diet

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதில் தீய ‘’கொலஸ்ட்ரால்’’ அதிகம் இருக்கும் (கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் வகையும் இருக்கிறது). இதே போல உருக்கிய வெண்ணெயைவிட (அதாவது நெய்), வெண்ணை நல்லது. அதை உருக்க உருக்க, உங்கள் உடலையும் உருக்கிவிடும்!

வறுத்த பருப்பு = நல்ல புரோட்டீன்= அதாவது உடலுக்குத் தேவையான புரதச் சத்து!

இறுதியாக
மூலம் சேர் கறி நுகரோம், மூத்த தயிர் உண்போம்
முன்னை நாள் செய்த கறி அமுதெனினும் அருந்தோம்
ஞாலம்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கேதுகவை நாம் இருக்கும் இடத்தே
–தேரையார் வாகடம்
பொருள்:– ஞாலம்= உலகமே கிடைத்தாலும், நமன்= யமன்.

Do-You-Know-Your-BMI-This-Might-Help

எனது முந்தைய கட்டுரையில் (நவம்பர் 15, 2012) சொன்ன பாடலினையும் மீண்டும் ஒருமுறை பயிலுவது நலம் பயக்கும்:

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே
இருபோது போகியே என்ப – திரி போது
ரோகியே நான்கு போது உண்பான் உடல் விட்டுப்
போகியே என்று புகல் (நீதி வெண்பா)

bmi-chart

BMI Chart: If you dont understand this chart, please ask your doctor.

—சுபம்—

Baba’s Story on Humility

baba sun

Compiled by London Swaminathan
Post No.1111; Dated 16th June 2104.

Sri Sathya Sai Baba, in one of his lectures, stressed the importance of humility. He said that one of the methods to cultivate humility is not only to bow before god but also prostrate before holy saints and obtain their blessings. Baba narrated a story from the life of Emperor Asoka.

“Once Asoka went round the capital city with his minister. When he saw a Buddhist monk, he placed his head at the feet of the monk and bowed. But his minister did not like this. Asoka knew what was going on in the mind of his minister. He asked him to fetch the heads of a goat, a tiger and a man’s. When they were brought he asked the minister to sell them in a market. While the heads of animals had buyers, no one came to purchase that of the human being. There was none even to take it free.

The king then said, “This head is valued only when there is life in the body. Hence, when there is an opportunity, place your head at the feet of the noble men and secure their good wishes.”

Tamil King who had Siva’s Feet on His Head
Seran Senguttuvan was a powerful Tamil king who ruled Tamil Nadu about 2000 years ago. He decided to go to holy Himalayas to bring a stone for making a statue for the chaste woman Kannaki. On the eve of his expedition to North India, he went to the Siva temple and bore the feet (sandals) of Lord Siva on the head as a mark of respect to Him (See Kalkot Katai, Silappadikaram).

Kings of those days were so humble that they did not hesitate even to take bricks on their head to build temples.

Another powerful Pandya king Muthu Kudumi Peruvazuthi was praised by one of the Sangam poets that his head would bow on two occasions only:
1.When the king goes round the temple of Lord Siva and
2.When Brahmins raise their hands to bless him.
(See Karikizar’s poem on Mudukudumi, Purananuru verse 6)
baba ratha

Varaguna Pandyan was another great Pandya king who saw God in everything and I have narrated eight incidents that happened in his life time (Please see “The King who saw God in Everything”- posted April 26, 2013).
Another Saivite saint fell at the feet of a Dhobi (washer man) because his body was smeared with white sand. The saint saw holy ash ‘Vibhuti’ in everything that looked white!

Ramakrishna Paramahamsa’s Story
A man went to a saint and said with a great show of humility, “Sir, I am a very low person. Tell me, O Master, how I am to be saved”. The saint reading the heart of the man, told him, “Well, go and bring that which is meaner than you”. The man went out and looked all around, but found nothing whatsoever meaner than himself. At last he saw his own excrement and said, “Well here is something worse than myself”. He stretched forth his hand to take it up and carry it to the saint when suddenly he heard a voice say from within the ordure, “Touch me not, O Sinner, I was a sweet and delicious cake, fit to be offered to the Gods, and in appearance so pleasing to all the spectators. But my ill-fortune brought me to you. And by your evil contact I have been reduced to such a detestable condition that men runaway from me with handkerchiefs covering their noses. Once only did I come in contact with you and this has been my fate. What deeper degradation may I not be thrown into if you touch me again”. The man was thus taught humility and became the humblest of the humble. As a result he attained the highest perfection.
(See page 311, Sayings of Sri Ramakrishna , Sri Ramakrishna Math, Chennai)

aseervatham

“Humility is good for all, it is an ornament for the rich in particular”, says Tamil poet Tiruvalluvar in Tirukkural (125).

“Before destruction a man’s heart is haughty,
And before honour is humility”, says the Bible (Proverbs 18-12).

XXXX***XXXX***XXXX

கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள்

Waitomo-glow-worm-New-Zealand
Glow worms in New Zealand Waitomo Caves

தமிழ் இலக்கியம், காளிதாசனில் மின்மினிப் பூச்சி

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1110; தேதி 16 ஜூன் 2014.

கம்பனும் காளிதாசனும் புகழ் பெற்ற கவிஞர்கள். வடமொழியில் ஏழு நூல்கள் எழுதிய காளிதாசனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. எப்படி சங்கத் தமிழ் நூல்களைக் கல்லாதோருக்கு, இந்திய கலாசாரம் பற்றிப் பேச அருகதை இல்லையோ அப்படிக் காளிதாசனைக் கல்லாதோரும் இந்தியப் பண்பாடு பற்றிப் பேச அருகதை இல்லாதோர் ஆகிவிடுகின்றனர். ஆயிரம் உவமைகளுக்கு மேலாக அள்ளித் தெளித்து அறுசுவை உண்டி – செவிக்கு உணவு—படைத்திருக்கிறார் காளிதாசர்!!

கம்பன் புகழைப் பாரதியார் பல இடங்களில் பாடிப் பரவியதில் இருந்து அவனுடைய மேன்மையை நாம் உணரலாம். கம்பனும் காளிதாசனும் ‘’மின்மினிப் பூச்சி’’ பற்றி சில அதிசயச் செய்திகளைக் கூறுகின்றனர். இது தவிர அகநானூற்றுப் புலவர்களும் நற்றிணைப் புலவர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சில பாடல்கள் காளிதாசன் சொல்லும் ரகசியப் புதிரை விடுவிக்கிறது. இயற்கை வரலாற்று நிபுணரும், பி பி சி டெலிவிஷன் படத் தயாரிப்பாளருமான டேவிட் அட்டன்பரோ காட்டிய சில காட்சிகளைப் பார்த்தோருக்கு காளிதாசன் சொன்னது இதுதானோ என்று வியக்கவும் செய்வர்.

Fairies-nagoya city
Fireflies in Nagya City, Japan.

கம்பன் சொன்ன செய்தி
இந்திய கிராமப் புறங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்வோர் மின்மினிப் பூச்சிகளைக் கண்டிருப்பர். இந்த மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் பிடித்துச் சென்று தனது கூடுகளில் வைத்து மகிழும். கூடுகளுக்கு மின்சார விளக்குப்போடுவது போல இவைகள் வெளிச்சம் தருவதால் அவைகள் இப்படிச் செய்கின்றன போலும். இந்தக் காட்சியை கம்பன் பால காண்டத்தில் வருணிக்கிறான்:–

அயோத்தி மாநகரம் செல்வச் செழிப்பில் மிதக்கிறதாம். அங்கே கோழிகள் குப்பையைக் கிளறினால் கூட ரத்தினக் கற்கள்தான் வருமாம். அவை களைக் கண்ட குருவிகள் , மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணி அவை களைக் கூடுகளில் கொண்டு வைக்குமாம். இதோ அந்தப் பாடல்:–

சூட்டுடைத் தலைத் தூநிற வாரணம்
தாள் தனைக் குடைய தகைசால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ
(கம்ப ராமாயணம், பால காண்டம், பாடல் 59)

பொருள்: வாரணம்=கோழி, மணி= ரத்தினக் கற்கள், குரீஇ=குருவி.

_mycena_chlorophanos_33 species

Fungi with luminescence. 35 Fungal speecies emit light

காளிதாசன் சொன்ன செய்தி
காளிதாசன் அவனது பாடல்களில் ( குமார சம்பவம் 1-30; ரகு வம்சம் 9-70 ) பல இடங்களில் ஒளிவீசும் தாவரங்கள் (ஜோதிர்லதா) பற்றிப் பகருவான்.
தசரதர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது காட்டில் தனியே தங்க நேரிட்டது என்றும் அப்பொழுது ஒளிவீசும் தாவரங்களே அவருக்கு விளக்குகளாக இருந்து உதவின என்றும் காளிதாசன் கூறுகிறான். (ரகு வம்சம் 9-70).

உமை அம்மை பற்றி வருணிக்கும் இடத்தில் குமார சம்பவத்தில் (1-30) மூலிகைகள் இரவு நேரத்தில் ஒளிவிடும் என்றும் சொல்கிறான்.

மேகதூத காவியத்தில் (பாடல் 80) மேகத்துக்கு வழங்கும் அறிவுரையில், “நீ மலைச் சிகரத்தில் குட்டி யானை அளவுக்கு உன் வடிவத்தைச் சுருக்கிக் கொள். மின்மினிப் பூச்சிகள் எந்த அளவுக்கு ஒளி சிந்துமோ அந்த அளவுக்கு ஒளி வீசி வீட்டிற்குள் எட்டிப் பார்” என்கிறான்.
கம்பனும் கூட “உம்பர் வானத்து நின்ற ஒளிவளர் தருவின்” – என்று தேவலோக ஒளி உமிழும் கற்பக தரு பற்றிப் பாடுகிறான் (பால காண்டம் 793)

glowing_plant_genetically engineered
Light emitting tobacco plant.

விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி:-
சில வகை மீன்கள், பூச்சிகள், கடல் வாழ் ஜெல்லி மீன்கள், தாவரங்களில் காளான் வகைகள் ஆகியன மட்டுமே ஒளி வீசக்கூடியவை. பெரிய மரங்களோ, செடி கொடிகளோ ஒளி வீசக்கூடியவை அல்ல. தற்காலத்தில் செயற்கை முறையில் புகையிலைத் தாவரத்துக்கு ஒளி ஊட்டி செயற்கையாக ஒளிரச் செய்துள்ளனர். ஆனால் இயற்கையில் உள்ள சில அதிசயங்கள் டெலிவிஷன் மூலம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன. நியூசிலாந்தில் ஒரு குகை முழுதும் மின்மினிப் பூச்சி வகைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் அந்தக் குகை ஜெகஜ் ஜோதியாகச் ஜொலிக்கிறது. விழா நாட்களில் கட்டிடங்களில் அலங்கார விளக்கு போடுவது போல அவை அணைந்தும் ஒளிவீசியும் ஜாலவித்தைகள் செய்கின்றன. பி.பி.சி போன்ற சில இயற்கை பற்றி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோருக்கு இது தெரியும்.

காளிதாசன் கம்பன், சொல்லும் ஒளிவிடும் தாவரங்கள், இது போல மின்மினிப் பூச்சிகளால் சூழப்பட்ட மரங்களாக இருக்கக்கூடும் அல்லது இபோது நாம் காணும் ஒளிவிடும் மீன்கள் போல அந்தக் காலத்தில் ஒளிவிடும் தாவரங்களும் இருந்திருக்கலாம்.
சங்கப் புலவர்கள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் (அகம். 67-16, 72-3, 202-7, 291-8; நற் 44-10)) வரும் சில பாடல்கள் மூலம் பலா மரம் முழுதும் மின்மினிப் பூச்சிகள் இருந்ததையும் குறவர்கள் இரவு நேரத்தில் மேகங்களைப் பார்க்க மின்மினிப் பூச்சிகள் விளக்காக இருந்து உதவி செய்வதையும் பாடிவைத்துள்ளனர்.

பாலை நில பருக்கைக் கற்கள், மின்மினிப் பூச்சிகள் போல இருப்பதாக நோய்பாடியார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம்.67)

எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடிய பாடலில் ஒரு அரிய உவமை தருகிறார். இரவு நேரத்தில் காட்டில், கரடிகள் பாம்புப் புற்றில் கையை விட்டுக் கறையான்களைப் பிடிக்கப் போகும்போது மின்மினிப் பூச்சிகள் பறக்கும் காட்சி கொல்லன் பட்டறையில் பறக்கும் தீப்பொறிகள் போல இருக்கும் என்கிறார். கரடியை இரும்புவேலை செய்யும் கொல்லனுக்கும் கறையான் புற்றுகளை பட்டறைக்கும் ஒப்பிட்டது ஒரு நல்ல உவமை. (அகம்.72)

ஆவூர்க் கிழார் மகனார் கண்ணகனார் பாடிய பாடலிலும் இதே கொல்லன் உலைக்கள உவமையைத் தருகிறார்.
நற்றிணைப் பாடல் (44) ஒன்றில் பெருங் கௌசிகனார் வேறு ஒரு காட்சியை வருணிக்கிறார்: குறவர்கள் இரவு நேரத்தில் மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் மேகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பர் என்கிறார்.

குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து….

தமிழ் நிகண்டுகளில் மின்மினிப் பூச்சிக்குப் பல பெயர்கள் உள்ளன அவை:–நிசாமணி, ஞவல், நுளம்பு, கத்தியோதம், அலகு, கசோதம், அலத்தி.

இயற்கையோடியைந்த வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், மின்மினிப் பூச்சி மூலம் வழங்கும் செய்திகள்தாம் எத்தனை எத்தனை !!
–சுபம் —

Fireflies in Sanskrit and Tamil Literature!

Waitomo-glow-worm-New-Zealand
Waitomo Glowworm Caves, New Zealand.

Written by London Swaminathan
Post No. 1109; Dated 15th June 2014.

Great poet Kalidasa is famous for his similes and descriptions of nature. His works abound in imageries. One of the imageries is about the fire flies. Fire-flies are seen in thousands in Indian villages during night time. No one would have missed them. But using them in poetry in appropriates places needs lot of literary skills. Tamil and Sanskrit poets are very keen observers of nature. They use it to the maximum in their poems to convey lot of messages. The fire fly imagery brings out another fact of the natural world.

Kamban who wrote Ramayana in Tamil gives us an interesting fact in Bala Kanda (Verse 59) of Kamba Ramayana. While describing the fields of Ayodhya, he describes how the sparrows mistook the gems for fireflies and took the gem stones lying on the ground to illuminate their nests. They thought that they were fireflies. He compared it to the sparrows’ natural habit of taking fireflies to their nests for lighting! Human beings, probably, got the idea of lighting from the sparrows!

Fairies-nagoya city
Fireflies in Nagoya City, Japan.

Kalidasa in his Meghaduta (verse 80) says,
“The flash of lightning of a very mild brilliancy is imagined to resemble the soft and twinkling light of a row of fireflies. The lovely and varying illumination with which these fireflies light up the roads at night gives quite an idea of enchantment”.

Three Tamil poets of Sangam age give us a similar picture:

“The bear thrusts its hand like front leg into the anthill raised by the termites and scoop out their comb for its food at midnight. A poor snake that had its abode in the anthill, was fatally wounded by the sharp claws of the beast.

The fireflies surrounding the ant-hill fly scattered and emit phosphorescent light”.
This scene is repeatedly pictured in many passages by different poets and compared to that of a smithy. The beast covered with thick black fur all over the body is likened to the blacksmith working in the smithy, the ant-hill to the raised structure of the furnace, the hard breath and action of the beast to the roar and action of the bellows, and fireflies flying and emitting light to the sparks of red hot iron beaten there — Akam.72,Akam 81,Nar 125.

_mycena_chlorophanos_33 species
Mycena chlorophenos, 33 species of fungi emit light.

Perumkausikanar, in one of his poems (Nar. 44), described the glow worms on a jack tree. The heroine looks at the dark sky and observes the movement of the clouds in the light emitted by the glow worms among the branches of a jack tree.

Kalidasa described the light emitting plant ‘Jyotirlatha’ (Raghuvamsa 9-70 & Kumara Sambhava 1-30) which is not known to any biologist. We know only lower organisms such as fungi, jelly fish, planktons and insects like fireflies with this light emitting quality. Probably lit is like the jack tree full of fireflies (Nar. 44).

glowing_plant_genetically engineered
Genetically engineered tobacco plant emitting light.

David Attenborough, in his nature series on the BBC, described a cave full of fireflies in New Zealand. They looked like the illumination in the amusement parks or the government buildings on National Holidays. They emit light on and off. Millions of fireflies living in a narrow area! Only when we know such natural wonders we can get a glimpse of what Kalidasa described as Jyotirlatha. Kamban also described light emitting Kalpalatha (Balakandam 793)

contact swami_48@yahoo.com

சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

Suttee in Bali in 1597 (Wikipedia picture)

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

சதி என்று அழைக்கப்படும் வழக்கம் பழங்கால இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இருந்தது. கணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும். இதை ஆரிய வழக்கம் என்று பிதற்றியோருக்கு புற நானூறும் பிற்கால இலக்கியமும் பதில் கூறுகிறது.

சதி என்பது ராமாயண, மஹாபாரத காலங்களில் கூட கட்டாயம் இல்லை. விரும்பினால் உடன்கட்டை ஏறலாம். அதீத அன்பினால் நடைபெறும் ‘தற்கொலை’ இது. தசரதன் இறந்தபோது அவன் அன்பு மனைவியர் உடன்கட்டை ஏறவில்லை. பாண்டு இறந்தபோது முதல் மனைவியான குந்தி தேவியும் உடன்கட்டை ஏறவில்லை. இரண்டாவது மனைவியான மாத்ரீ மட்டுமே உடன்கட்டை ஏறினாள். ஆக இது அந்தக் காலத்திலும் கூடப் பெருவாரியாக நடக்கவில்லை.

sati2

வெளிநாடுகளிலும் கூட அன்பின் காரணமாகவோ, பயம் காரணமாகவோ கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதையும், அல்லது ஒருவர் இறந்தவுடன் அடுத்தவர் தற்கொலை செய்து கொள்வதையும், பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கையில் அவர்களின் அன்பைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். இது போலவே முன்காலத்திலும் சதி மூலம் இறக்கும் பெண்களை பத்தினித் தெய்வமாக வணங்கி கோவில் எழுப்பி வழிப்பட்டனர். தமிழ் நாட்டில் நடுகல் வைத்து வீரர்களை வணங்கியது போல, வட இந்தியாவிலும் கர்நாடகத்திலும் கை சின்னத்துடன் கோவில்கள் வைத்து பத்தினிகளை வழிப்பட்டனர்.

சதி என்பது ஆரிய வழக்கம் என்று பிதற்றிய பி எச். டி.வாலாkகளும் வெள்ளைத்தோல் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’ உள் நோக்கத்தோடு இந்தியா பற்றி அவதூறுகளைக் கிளப்பினர். பெண்களை தீயில் தூக்கி எறிவது போல படங்கள் போட்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஆரிய வழக்கம் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக கணக்கான வழக்கங்கள் இமயம் முதல் குமரி வரை இருப்பதோடு உலகில் ஆரியர்கள் வாழ்ந்ததாக ‘’அறிஞர்கள்’’ கூறும் வேறு எவ்விடத்திலும் இல்லை!! ஆரியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் சைபிரீயவிலோ மத்திய ஆசியாவிலோ ஒரே இடத்தில் வசித்திருந்தால் நூற்றுக் கணக்கான ’’ஆரிய’’ பழக்க வழக்கங்கள் அங்கே இல்லதது ஏனோ??

சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வழக்கங்கள் வடக்கிலும் 2000 ஆண்டுகளுக்கு மேல் இருந்தன. ஆரிய- திராவிட வேறுபாடு அல்லது அத்தகைய இனச் சொல்லாட்சி எங்கனும் இல்லை. சங்க காலத்தில் வாழ்ந்த 461 கவிஞர்கள் எழுதிய 2389 பாடல்களில் உள்ள 27,000 வரிகளைக் கரைத்துக் குடித்தோருக்கு ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை நகைப்பைத் தரும். அது ஒரு பொய்மை வாதம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரியும். இதற்குப் பின்னும் விளங்கவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் “விளங்காதவர்களே”!

ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை வைத்து ‘’திராவிடங்கள்’’ கோடிக் கணக்கில் பணம் குவித்ததையும், ஹிட்லர், முசோலினி போன்றோர் கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததையும் உலகம் அறியும்.

sati 3

சங்க இலக்கியத்தில் குரங்கு கூட ‘’சதி’’ செய்ததை அறிகிறோம். இதோ புற நானூறு முதல் நற்றிணை வரை சில ‘’சதி’’ பற்றிய பாடல்கள்:–

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

sati3

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

அலாவுதீன் கில்ஜி என்ற வெறியன் உலக மஹா அழகி சித்தூர் ராணி பத்மினியை எப்படியும் அடைய வேண்டும் என்று வந்தபோது, அந்த மஹா உத்தமி ஆயிரம் பெண்களுடன் தீப்பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தாள். வரலாற்றில் அழியாத இடம் பெற்றாள். அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறது கோவூர் கிழாரின் பாடல்.

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)
கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

குரங்கு கூட அன்பின் மிகுதியால் மலையில் இருந்து பாய்ந்து உயிர் நீத்தது. இது பற்றி எழுதிய மு. வரதராசனார் இதை ‘சதி’ என்றே எழுதியமை குறிப்பிடத்தக்கது. (காண்க:– Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

பஞ்ச தந்திரக் கதையில் புறாக் கூட தீப்பாய்ந்த கதை வருகிறது. கணவன் புறாவை வேடன் பிடித்துச் சாப்பிட்டவுடன் மனைவி புறாவும் அவனுக்கு உணவாக தீயில் பாய்ந்தது சதி என்னும் வழக்கத்தினால் வந்ததன்றோ!!

ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள சில பாடல்கள் ‘’சதி’’ என்னும் வழக்கத்தைக் குறிப்பிடுவதகச் சொல்வர் வெளி நாட்டோரும் பி. எச். டி. வாலாக்களும்— அதே பத்தாவது மண்டலத்தை நீங்கள் வேறு எதற்காவது மேற்கோள் காட்டினால் அது பிற்காலச் சேர்க்கை என்பர். வெளி நட்டோரும் அவர்களுக்கு அடிவருடும், ஒத்து ஊதும் நம்மவர்களும் அரை வேக்காடுகள் மட்டும் மல்ல, பாம்பு போல இரட்டை நாக்கினர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா? உங்களுக்கே புரியாதா?

எல்லை மீறிய அன்பு, பாசம் தொடர்பான கதைகளையும் நாவல்களையும் படித்தோருக்கு உடன்கட்டை ஏறும் பழக்கம் வியப்பைத் தருமேயன்றி அருவருப்பைத் தராது. எனினும் ஆதிகால வழக்கத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட காலையில் ராஜாராம் மோஹன்ராய் போன்ற பெரியோர்கள் முன்னின்று பிரம்ம சமாஜம் மூலம் அதற்குத் தடை போட்டதும் சரியே!

“Aryan SATI” in Sangam Tamil Literature!

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

(Sati in Bali, 1597 picture (from Wikipedia)

Written by London Swaminathan
Post No. 1107; Dated 14th June 2014.

Practice of Sati is found in ancient Sangam Tamil literature at least in three places. Sati is the custom practised by some Hindu women in the olden times. The wife of the diseased husband will enter the funeral pyre of her husband. This happened in extremely rare cases. We see it even in Western countries that wife and husband commit suicide together or wife committing suicide immediately after her husband’s death. We read such news items rarely. It happens because of extreme love or some fear. Sati was also seen rarely in the olden days.

White skinned racists proposed Aryan – Dravidian Racist theory with ulterior motives. Dravidian politicians used this theory to establish their rule and to make billions and billions of rupees, dollars and pounds (Swiss Accounts) for themselves. There are hundreds of Hindu customs which were NOT found in European countries or any other race. If Aryans have migrated from those areas where they lived with the white skinned people, those customs must have prevailed there. But to everyone’s surprise those customs prevailed only in South India and North India, from the Northern most Himalayas to the Southernmost Kanyakumari. This debunks the Aryan – Dravidian racist theory. There was no difference between the Tamils and other communities!

When you finish reading the following, you can have a good laugh at those who still stick to the Aryan – Dravidian Racist theory!

sati3

First of all one must know that Sati was not practised by all women even in the days of Ramayana and Mahabharata! When Pandu died, his second wife Madri only died with Pandu in the funeral pyre; but his old and first wife Kunti did not die with him. When Dasaratha died none of his queens died with him in the funeral pyre. In Tamil Nadu also not all the wives died in the funeral pyre when their husbands died. There are lot of Sangam poems concerning widows. Women lived longer than men in Ancient India like today. There are lots of rules regarding widows in Tamil and Sanskrit literature. This shows they lived long after their husbands’ death. Had all the women died with their husbands, India would have reduced ratio of women! Reduced population as well! Because we have to take into account the natural death of young women as well, in addition to ‘Sati’ deaths. In short, all this Sati issue was blown out of proportion by Christian missionaries and Ph.D.wallas !!

Even when the Ph.D.wallas quoted some Vedic hymns, they quoted from the10th Mandala of Rig Veda which is vague about Sati. When ‘YOU’ quote any other hymn from the same 10th Mandala, these foreign scholars would say that it was a later addition and not the ‘original’ Rig Veda!!

Sangam Tamil literature is 2000 year old where we have 2389 poems composed by 461 poets running to 27,000 lines. There are several poems which deal with widow’s life. But we have three poems where we have direct or indirect references to sati: Puram.246, Puram.374 and Kuru.69

sati 3

Purananauru 246 by Perngo pendu, wife of Bhutha Pandya.

When the Pandyan King Bhutha Pandya died, his wife Perum Koppendu wanted to commit Sati. But all the Tamil scholars and ministers tried to prevent her from entering the fire. She criticised every one assembled there and then entered the funeral pyre. She told them that the fire is like a cool lotus pond for her. Her statement in the crematorium was reported verbatim in her poem in Sangam literature.

Purananuru verse 373 (Lines 10-15) was by Kovur Kizar on Cholza king Kulamtrathu Thunjiya Killi Valavan. The poet says that the wives of the deceased soldiers did not find a better place than the feet of their husbands after their death They did not return home, but committed Sati by lighting the fire. This was what the Rajput Queen Chitoor Rani Padmini did in a later period, when her husband was killed by Alauddin Khilji.
Kuruntokai verse 68 sings about a monkey which committed suicide. Tamil scholar Professor M.Varadarajan described it as ‘Sati’:

“On the death of its loving mate, a female monkey is imagined to hand over its young one to its kith and kin and perform sati by falling down from the top of a hill” (Kuruntokai 68).
(Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

When Kannaki proved that the Pandya king was wrong in sentencing her husband Kovalan to death, the king died of heart attack on the spot. Immediately his wife also died, says the Tamil epic Silappadikaram. We did not know whether she committed sati or suicide or had a heart attack due to extreme love and affection for her husband.
sati2

If we read about sati with this background knowledge, Sati would not get a bad name as painted by the authors of the Aryan racist theory.

Contact swami_48@yahoo.com

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

saraswathimahal1

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

By ச.நாகராஜன்; Post No 1106; dated 14th June 2014.

அற்புதமான தமிழ் ஏடுகளையும் அரிய புத்தகங்களின் கை பிரதிகளையும் நூல்களையும் சேர்த்து வைத்துள்ள சரஸ்வதி மஹால் நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அறிவுக் கோவில். சரஸ்வதி மஹால் பல அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் சரஸ்வதி மஹாலின் தமிழ்ப் பணிக்கு உரிய மதிப்பும் மரியாதையும் என்றுமே இருந்ததில்லை. இது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்!

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் நம்மை வியக்க வைக்கும் ஒரு நூல்.
சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் இந்த நூலை, பல தமிழறிஞர்களும் மேற்கோள் காட்டுவது வழக்கம்!

இந்த நூல் நானுறு வருடங்களுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ளது. 30 அத்தியாயங்கள் கொண்டது. 49 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியை ஆராய்ந்து மூலத்தையும் தமிழாக்கத்தையும் (டி.ஆர்.தாமோதரன், எஸ்.ராஜலெக்ஷிமி, என்.சீனிவாசன் ஆகியோர் தமிழாக்கத்தைச் செய்துள்ளனர்) 1985ஆம் ஆண்டு சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள சில அரிய விஷயங்களை மட்டும் சுருக்கமாகச் சில வரிகளில் காண்போம்.

1)கர்வட என்ற கிராமத்தில் குலோத்துங்கன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான்.சிறந்த சிவ பக்தனான அவனை சிவ பெருமான் சோதிக்க வந்தார். அவனும் அவன் துணைவியும் தக்க முறையில் சிவனடியாரை வரவேற்று உபசரித்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனை சோழ வம்சத்தின் அரசனாக்கினார். மது, மயன், விஸ்வகர்மா, தாதா விதாதா ஆகிய தேவ சிற்பிகள் மூலம் காவிரிக் கரையில் சோழ தேசம் அமைக்கப்பட்டது. ஐயாரப்பர் ஆலயத்தையும் திருப்பழனம் ஆலயத்தையும் குலோத்துங்கன் கட்டுவித்தான்.

2) தஞ்சாசுரனை சிவபெருமான் சூலத்தால் வீழ்த்தும் போது அவன் உயிர் பிரியும் தருணம் “என் பெயரால் இந்த நகரம் விளங்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள அந்த நகருக்கு தஞ்சாவூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

3) தேவ சோழனின் மகன் சசிசேகர சோழன் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், திருவாலங்காடு உள்ளிட்ட 60 ஆலயங்களை எடுப்பித்தான். ஒரு சமயம் காவிரியில் பெரு வெள்ளம் வர நாடே அழியும் சூழ்நிலை ஏற்பட்டது. 48 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வேண்ட, ‘இறைவன் காவிரியின் குறுக்கே அணை கட்டுக’ என்று அருள் பாலித்தான். அதன் படியே மன்னனும் அணை கட்டினான்.

sarasvatimahal2

4) சசிசேகர சோழனின் மகன் சிவலிங்க சோழன் திருவாரூரை ஆண்டு வந்த போது பசுங்கன்று ஒன்று தேர்ச்சக்கரத்தில் வந்து சிக்கிக் கொண்டு இறந்தது. தாய்ப் பசு அரண்மனை வாயிலை அடைந்து கதறியது. இதைக் கண்ட மன்னன் தன் மைந்தன் மீது தேர்ச்

சக்கரத்தை ஏற்றி நீதி பரிபாலித்தான். இறைவன் அருளால் இருவரும் மீண்டு எழுந்தனர்.சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான்.

5)சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

6)வீர சோழனுடைய மகன் கரிகாலன். இவன் ஹரதத்த சிவாச்சாரியாரைத் தன் குருவாகப் பெற்றான். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். துர்கேஸ்வரம் மங்களேசம் ஆம்ரவனம் ஆகிய இடங்களிலும் ஆலயங்களை அமைத்தான். ஆனால் விதி வசமாக கருங்குஷ்டம் இவனைப் பிடித்தது.

ஹரதத்தர் ஒரு மண்டல காலம் ஆலயத்திலேயே வாசம் செய்து நூற்றெட்டு மறைவல்லோரை அழைத்து ‘ஏகாதசருத்ர’ ஜபம் செய்தார். சிவபெருமான் ஹரதத்தரின் கனவில் தோன்றி ‘தஞ்சாபுரீஸ்வரர் ஆலயத்திற்கு தென் மேற்கில் உள்ல சிவகங்கா பொய்கையில் மன்னரை நீராடச் சொல். சக்தி கூபம் கிணற்றுக்கு அருகில் உள்ள கந்தனின் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று தரிசனம் செய்யச் சொல். அதற்கு முன் துந்தில விக்னேசர் (தொந்தி விநாயகர்) ஆலயத்தை நிர்மாணம் செய்யச் சொல்” என்று இப்படி வரிசையாகக் கட்டளைகளை இட மன்னனும் அனைத்தையும் செய்து கருங்குஷ்டம் நீங்கப் பெற்றான்.
thanjavur-big-temple

7)கரிகாலனின் மகன் பீம சோழன் கேரள ராஜகுமாரி வித்யுல்லதா (மின்னற்கொடி)வை மணந்தான்.திருவண்ணாமலையில் கோபுரங்களை அமைத்தான்.77 ஆண்டுகள் இவன் உயிர் வாழ்ந்தான்.

மிக நீண்ட வரலாற்றைக் கூறும் மாஹாத்மியத்தின் இதர பகுதிகளையும் இதைப் பற்றி ஆங்கிலேய அறிஞர்களின் கருத்தையும் பிரபல சரித்திர ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்தையும் அடுத்ததாகப் பார்ப்போம்!

8)பீம சோழனின் மகன் ராஜேந்திர சோழன். சேர பாண்டியரை வென்று சிறப்பாக அரசாட்சி நடத்தினான்.திருமுல்லைவாயில், திருப்பூந்துருத்தி, திருவெண்ணியூர், திருநெல்லிக்கா, சிற்றேமம் ருஷிகானனம் ஆகிய ஊர்களில் சிவாலயங்களை எடுத்தான். இதைப் போன்று 80 ஆலயங்களைக் கட்டி முடித்தான்.

9) இவனது மகன் வீரமார்த்தாண்டன்.இவன் காலத்தில் வேத பாடசாலைகளும், சாஸ்திர பாடசாலைகளும் தோன்றின. அக்னிஹோத்திர வேள்விச் சாலையிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் ‘’படி’’ போலத் தோன்றியது. இவன் சுமார் 60 ஆலயங்களைக் கட்டினான்.

10) இவனது மகன் புகழ்ச் சோழன். இவன் முருக பக்தன். தனக்கு ஒரு மகன் இல்லையே என்று வருந்த முருகப்பெருமான் கனவில் தோன்றி குக பர்வதத்தை புனருத்தாரணம் செய்யச் சொல்ல அவன் அப்படியே
செய்தான். முருகனின் அருளால் ஜய சோழனை பெற்றெடுத்தான்.

thanjavur temple
11)ஜயசோழன் ஜயசோழபுரத்தில் பெருவுடையார் கோவிலைப் போல முக்கால் பங்கு இருக்குமாறு ஒரு ஆலயத்தைக் கட்டினான்.இவன் மகன் கனக சோழன். இவன் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்து ஏரண்ட முனிவரால் காவிரியை மீட்டான். ஏரண்ட முனிவர் காவிரையை மீட்க தன் உயிரை அர்ப்பணிக்க அவர் வழிபட்ட கொட்டையூர் ஆலயத்திற்குத் திருப்பணி செய்தான்.

12) கனக சோழனின் மகன் சுந்தர சோழன். மறையோன் ஒருவனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இடை மருதூர் சென்று வழிபட்டுத் தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டான். இவன் மகன் கால கால சோழன். இவன் திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தினான். இவன் மகன் கல்யாண சோழன். இவன் சிதம்பரத்தில் உள்ள கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டினான்.இவன் மகன் பத்ர சோழன். இவனும் தன் முன்னோர்களைப் போல பல ஆலயங்களைக் கட்டினான்.

13) நூலின் கடைசி ‘பாரா’ சிவ பெருமான் பார்வதி தேவி கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தெரிவிக்கிறது. இதன் படி பார்வதி தேவி ஸ்தலங்களைப் பற்றிக் கேட்க சிவபிரான், காவிரிக்கும் சேதுவிற்கும் இடையே சிவ க்ஷேத்ரம் – 23000, விஷ்ணு க்ஷேத்ரம் – 1000 முருகன் க்ஷேத்ரம் – 6000 விநாயகர் க்ஷேத்ரம் – 5000 காளி க்ஷேத்ரம் – 1000 நடராஜர் க்ஷேத்ரம் – 100 துர்க்கை க்ஷேத்ரம் – 3000, சாஸ்தா க்ஷேத்ரம் – 11000 இருப்பதாக அருளுகிறார்!.
enterance-gopuram-new1

பல நீண்ட சுவையான கதைகளை உள்ளடக்கிய இந்த மாஹாத்மியம் பிரபல வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களால் ஆராயப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு சோளா லெஜண்ட்ஸ் (Cola Legends) என்று ‘ஜர்னல் ஆஃப் ஓரியண்டல் ரிஸர்ச்’ இதழில் அவர் இது பற்றி ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளார்.

இந்த நூல் வரலாற்று நூல் என்பதை விட்டு விட்டு க்ஷேத்திரங்களை விவரிக்கும் நூலாகவும் அங்கு பாவங்களுக்கான பரிகாரங்கள் மற்றும் பிராயச்சித்தங்களைத் தெரிவிக்கும் நூலாகவும் உள்ளது. அந்த அளவில் இது மதிப்பு வாய்ந்தது. குலோத்துங்கன் வீரன், கரிகாலன் ,ராஜேந்திரன், சுந்தர சோழன் ஆகியோரைத் தவிர ஏனைய மன்னர்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. கரிகாலனுக்கு கருங்குஷ்டம் இருந்தது என்பதை இந்த ஒரு நூலில் மட்டுமே காண முடிகிறது. மனு நீதிச் சோழன் வரலாற்றை அப்படியே சிவலிங்க சோழன் வரலாற்றில் காண முடிகிறது. இருந்தாலும் காவிரித் தலங்களின் மகிமை பற்றியும் அதன் புராதன பழமையையும் பற்றி இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. இந்த நூலை மேற்கோளாகப் பல ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் காட்டுவது வழக்கம்.

மக்கென்ஸி என்பவரிடம் இருந்த இந்த நூலின் ஒரு கைப்பிரதி அதிர்ஷ்டவசமாக டெய்லர் என்னும் அறிஞரால் மீட்டெடுக்கப்பட்ட
தால்தான் இந்த நூல் பற்றி அறிய முடிந்தது. இந்த நூலின் இதர பிரதிகள் இங்கிலாந்து சென்றிருக்கக் கூடும். அவைகள் கிடைக்க வில்லை. தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா இதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். இதன் மூலமாகத் தான் சம்ஸ்கிருதத்தில் இருந்த க்ஷேத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அறிய முடிந்தது.

த்ருதிஸ்தலம் என்பது திருப்பண்டுருத்தி என்றும் கடேசம் என்பது திருக்கடையூர் என்றும், த்ரிகோடிகா என்பது திருக்கோடிக்காவல் என்பதும் வால்மீகநகரா என்பது திருவாரூர் என்பதும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாலேயே அறிய முடிந்தது.

Thanjavur_Brihadeeswar

மொத்தத்தில் சுவையான ஒரு சோழ புராணத்தைப் படித்த மகிழ்ச்சியை இந்த நூல் ஏற்படுத்துகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான சுவடிகளில் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம், பண்பாடு, கோவில்கள் மன்னர்கள் பற்றியும் பல நூல்கள் உள்ளன. அவை அனைத்தும் வெளி வரும் நாள் எந்த நாளோ! அந்த நாளும் வந்திடாதோ .. வெகு விரைவில்!

******************* !