Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Ritual for lunar eclipse
அரிஸ்டோக்ரடீஸ் என்ற கிரேக்க சிறுவனுக்கு அவனது ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட ஜாதகம் களிமண் கல்வெட்டில் உள்ளது. இன்று நாம் எப்படி ஜாதகம் எழுதுகிறோமோ அதே பாணியில் ஜாதக வாசகம் உளது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
சமராஞ்ச்
பிறப்பு- 17 ஜூலை 1920
இறப்பு – 21 ஏப்ரல் 2010
நான் தினமணியில் கட்டுரை எழுதிய தேதி 25-10-1992
அடுத்த ஒலிம்பிக் ஜப்பானி ன் தலைநகரான டோக்கியோவில் 24 ஜூலை 2020ல் துவங்குகிறது
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில் 9-12-2019 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை!
‘தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தி இடு… சண்முகன் கை வேலே’ என்று முருகனின் கையில் இருக்கும் வெற்றி வேலில் தேடியும் கிடைப்பதற்கு அரிதான ஒன்பது இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பதை வேல் விருத்தம் போற்றிப் புகழ்கிறது.
நவ ரத்தினங்களில் ஒன்றான புஷ்பராகம் நமது இதிஹாஸங்களிலும் அக்னி புராணம், கருட புராணம் ஆகிய நூல்களிலும் பெரிது சிறப்பாகப் பேtசப்படும் ரத்தினம்.
கருடபுராணத்தில் 68ஆம் அத்தியாயம் முதல் 80ஆம் அத்தியாயம் வரை ஒன்பது நவரத்தினங்கள் பற்றிய விளக்கமும் அவற்றைச் சோதனை செய்து தேர்வு செய்யும் முறையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. 74ஆம் அத்தியாயம் புஷ்பராகத்தைப் பற்றிப் புகழ்ந்து விளக்குகிறது.
தெய்வாம்சம் பொருந்திய இந்தக் கல் தேவர்களுக்கு மிகவும் பிடித்தது.
அமராவதி உள்ளிட்ட தேவ லோகமே அற்புதமாக புஷ்பராகத்தால் அமைக்கப்பட்டது தான் என நமது புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீ தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைப் பற்றி விவரிக்கையில் மணித்வீபத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது (12ஆம் ஸ்கந்தம், 10,11 அத்தியாயங்கள்) நவரத்தின பிரகாரங்களை வர்ணிக்கிறது.
“புஷ்பராக மயமான பிரகாரம், பூமியும் வனங்களும், உபவனங்களும், சோலைகளில் உள்ள ரத்ன விருட்சங்களும், மதில்களும் புஷ்பராக மயமாகவே பிரகாசித்தும், பட்சிகள், ஜலங்கள், மண்டபங்கள், தூண்கள், குளங்கள், குளத்தில் மலரும் தாமரைகள் முதலியனவும் ரத்ன மயமாகவே இருப்பதால் ரத்னசாலை என்று பெயர் பெற்றும் விளங்குகிறது” என்று இவ்வாறு புஷ்பராக பிரகாரத்தை அது வர்ணிக்கிறது!
அனைத்து நாகரிங்களும் போற்றும் ரத்தினம்
புஷ்பராகத்தை ஆங்கிலத்தில் டோபாஸ் (Topaz) எனக் கூறுவர். தபஸ் என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து டோபாஸ் என்ற வார்த்தை உருவானதாக மொழியியல் அறிஞர் கூறுவர். தபஸ் என்பதற்கு ஒளி பொருந்திய அக்னி என்று ஒரு பொருள் உண்டு. அதை இந்தக் கல் குறிக்கிறது.
இன்னும் சிலர் டோபாஜியோஸ் (Topazios) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை உருவானதாகக் கருதுகின்றனர்.
மஞ்சள் நிற இரத்தினம் பற்றிப் பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகிறது. இதை புஷ்பராகம் என்று சிலரும், அதன் இன்னொரு வகை என்று சிலரும் கருதுகின்றனர்.
ஆக, மிகப் பழங்காலத்தில் இருந்தே புஷ்பராகம் பல நாகரிகத்தினராலும் அரிதாக மதிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.
குருவுக்குரியது புஷ்பராகம்
ஜோதிட சாஸ்திரத்தில் கனக புஷ்பராகம் என்று குறிப்பிடப்படும் இந்தக் கல் குரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இயக்க சக்தியைக் குறிக்கும் கிரகம் – குரு கிரகம்.
தனுர் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு உகந்த கல் இதுவே. குரு பகவான் தரும் நல்ல பலன்களை அதிகப் படுத்தவும் இந்தக் கல் பரிந்துரைக்கப்படுகிறது. குரு பகவானின் தீய பார்வையைப் போக்க வல்லது புஷ்பராகம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதை அணிந்தால் அதன் தாக்கம் குறையும். எண் கணிதக் கலையில் குரு கிரகமானது 3 என்ற எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். இந்தக் கல்லை 3 எண்காரர்கள் (பிறந்த தேதி 3 அல்லது கூட்டு எண் 3 இருந்தால்) இதை அணியலாம்; அனைத்துப் பலன்களையும் பெறலாம்.
திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். வயிற்று நோய்கள் போகும் என்பது ஜோதிட சாஸ்திரம் பரிந்துரைக்கும் பலன்களாகும்.
புக்ராஜ் என வட இந்தியாவில் இது கூறப்படுகிறது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
ரஸ ஜல நிதி என்னும் நூல் தரும் சுவையான தகவல்கள் இவை:-
புஷ்பராகம் இரு வகையான சுரங்கங்களிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு அபூர்வமான ரத்தினம். மாணிக்கம் மற்றும் மரகதம் கிடைக்கும் சுரங்கங்களில் இது காணப்படும்.
ரத்தினக்கற்களில் தேர்ச்சி பெற்ற சந்திர சேனர் என்ற ராஜா இதன் நிறத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது மஞ்சள் நிறமாக இருக்கும், ஒளி ஊடுருவ வல்லது, வைரம் போலப் பிரகாசிப்பது என்று குறிப்பிடுகிறார்.
இது புத்திர பாக்கியம் இல்லை என்று ஏங்குவோருக்கு மகனைத் தரும். இதை அணிபவர் பெரும் செல்வந்தர் ஆவார்.
இதர ரத்தினக்கற்களிலிருந்து புஷ்பராகத்தை எப்படி இனம் பிரித்து அறிவது?
மஞ்சள் வண்ணத்துடன் பிரகாசமாக இருப்பது புஷ்பராகம் ஆகும்.
மஞ்சள் வண்ணத்துடன் சிறிது சிவப்பு கலந்திருந்தால் அதன் பெயர் கௌராந்தகம் எனப்படும்.
மஞ்சள்-சிவப்புடன் ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருப்பின் அதன் பெயர் கஷவம் எனப்படும்.
நீல வண்ணத்துடன் சிறிது வெண்மை கலந்திருந்து அது மிருதுவாக இருப்பின் அதன் பெயர் சோமலகம் எனப்படும்.
(மிகவும் சிவப்பாக இருப்பது மாணிக்கம். மிகவும் நீலமாக இருப்பது நீலம்.)
புஷ்பராகத்தில் வேறு வண்ணங்களும் உண்டு. அவையாவன 1) வெண்மை 2) மஞ்சள் 3) வெளுத்த வெண்மை 4) கறுப்பு
நல்ல புஷ்பராகத்தின் குணங்கள் :
கனமாக இருக்கும். ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். அதன் மேல் எண்ணெய் பூசப்பட்டது போல இருக்கும். அருமையான வடிவத்துடன் இருக்கும். கர்னிகர மலர் போல இருக்கும்.
விலக்கத்தக்க புஷ்பராகம் :-
மேல் பரப்பில் கரும் புள்ளிகள் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, வெண்மையாக இருப்பது, ஒளி இழந்து இருப்பது, இயல்பான தனது வண்ணத்துடன் இன்னொரு வண்ணம் கலந்திருக்காமல் இருப்பது, புள்ளிகள் இருப்பது – இப்படி உள்ள புஷ்பராகம் விலக்கத்தக்கது.
வழுவழுப்பாக இல்லாமல் இருப்பது, பழுப்பு அல்லது பழுப்புடன் கூடிய சிவப்பு, வெளுத்த வெண்மை, வெறும் மஞ்சள் வண்ணம் மட்டும், வெறும் கறுப்பு வண்ணம் மட்டும் இருக்கும் கற்களும் விலக்கத் தக்கதே.
புஷ்பராகம் அணிவதால் ஏற்படும் பலன்கள்
விஷத்தை அகற்றும். வயிற்றுக் குமட்டலை நீக்கும். அதிகமான வாயுத்தொல்லையைப் போக்கும். ஜீரணசக்தி குறைந்திருந்தால் அதை அதிகப்படுத்தும். வீக்கத்தை வற்ற வைக்கும். குஷ்டரோகத்தை நீக்கும். ரத்தக் கசிவைப் போக்கும்.
இவையெல்லாம் பழம்பெரும் நூலான ரஸஜல நிதி தரும் தகவல்கள்.
டோபாஸ் ஐலேண்ட்
புஷ்பராகம் பண்டைய காலத்தில் அனைத்து நாகரிகத்தினராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. இதை டோபாஸ் என்று அழைத்தனர். ஜஸிரட் ஜபூகட் (Jazirat Zabugat) என்ற தீவிலிருந்து இது கிடைப்பதாகப் பழம் பெரும் கிரேக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீவு எங்கிருக்கிறது என்பதை ஆராயப் புகுந்த இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் இன்றைய டோபாஸ் ஐலேண்டே (Topaz Island) ஜஸிரட் ஜபூகட் என்று முடிவுக்கு வந்துள்ளனர். செங்கடலில் உள்ள இந்தத் தீவு இப்போது ஜபர்காட் (Zabargad) என அழைக்கப்படுகிறது.
இடது கையில் இதை அணிவது தீய கண்திருஷ்டியைப் போக்கும் என்றும் பிரச்சினைகள் வரும் போது அதை எதிர்கொள்ள வலிமையைத் தரும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன. கோலோன் கதீட்ரலில் உள்ள மாபெரும் மன்னர்களான காஸ்பர்,மெல்சியார்,பல்தஜார் ஆகியோர் புஷ்பராகம் அணிந்தவர்களே. ஏராளமான சிலுவைகளில் புஷ்பராகம் பதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளுடன் பச்சை வண்ணம் கலந்த புஷ்பராக வகைகள் குடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் பொறாமை எண்ணங்கள் மனதில் தோன்றாமல் தடுக்கும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன.
இதை நெக்லஸாக அணிவது துக்கத்தைப் போக்கி நுண்ணறிவைத் தீர்க்கமாக்கும் என்றும் நம்பப்பட்டது. விஸ்வாசம், நட்பு, நம்பிக்கை ஆகிய அனைத்திற்குமான ஒரே ரத்தினம் புஷ்பராகம் தான்.
புஷ்பராக சிகிச்சை
தீ விபத்து மற்றும் இதர விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் காக்கும் கல் புஷ்பராகம். பிரபல யோகியான பிஞ்ஜெனைச் சேர்ந்த செயிண்ட் ஹில்டிகார்ட் (St Hildegard of Bingen) 1255ஆம் ஆண்டு கண் சம்பந்தமான வியாதிகளைத் தீர்க்க ஒரு அரிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார்.புஷ்பராகத்தைச் ஒரு ஒயின் உள்ள பாட்டிலில் செங்குத்தாக மூன்று நாள் வைத்திருந்து, பின்னர் அதை எடுத்துக் கண்களின் மீது லேசாகத் தேய்க்க வேண்டும். பின்னர் அதைக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மங்கலான கண்பார்வை மறைந்து கண் பார்வை தீர்க்கமாகி கூர்மையான பார்வை உருவாகும். பைத்தியம் போகவும் புஷ்பராக சிகிச்சைப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வானவில்லில் இருக்கும் அனைத்து வண்ணங்களிலும் புஷ்பராகம் கிடைப்பது அதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. சிவப்பு வண்ணத்துடன் கூடிய புஷ்பராகம் இம்பீரியல் டோபாஸ் என அழைக்கப்படுகிறது. கிடைக்கின்ற புஷ்பராகக் கற்களில், இது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே கிடைக்கிறது.
அறிவியல் தகவல்கள்
மோவின் அலகின் படி இதன் கடினத்தன்மை 8 ஆகும்.
அறிவியல் ரீதியாக இதைச் சொல்லப் போனால் இது அலுமினியம் மற்றும் புளோரின் ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. இதன் இரசாயன சமன்பாடு Al2SiO4(F,OH)2 .
இதன் ஒப்படர்த்தி : 3.49 – 3.57
புஷ்பராகம் கிடைக்கும் இடங்கள்
இன்றைய நவீன யுகத்தில் பிரேஜிலில் கிடைக்கும் புஷ்பராகம் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது. அமெரிக்கா (ஊடாஹ் என்னுமிடம்), ரஷியா, ஆப்கனிஸ்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,ஜிம்பாப்வே, ஜெர்மனி,நைஜீரியா போன்ற பல நாடுகளிலும் புஷ்பராகத்தின் வெவ்வேறு வகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதிகளில் இது கிடைக்கிறது.
புஷ்பராகத்தின் அரிய கற்கள்
19ஆம் நூற்றாண்டில் ரஷியாவில் ஜார் அரசாண்ட காலத்தில், இளஞ்சிவப்பில் புஷ்பராகம் கிடைக்கவே அரிதான இந்த ரத்தினக் கல்லை ஜார் மன்னரும் அவர் குடும்பத்தினரும் மட்டுமே அணிய வேண்டும் என்றும் அவர் கொடுத்தால் மட்டுமே இதரர் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
1680 கேரட்டில் கிடைத்த புஷ்பராகம் போர்த்துக்கீசிய மன்னரின் மகுடத்தில் பதிக்கப்பட்டது. இது வைரம் என முதலில் நினைக்கப்பட்டு பின்னால் புஷ்பராகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அமெரிக்கன் கோல்டன் டோபாஸ் 22892 கேரட் அதாவது 4.5785 கிலோ எடை உள்ளது. இது 172 வெட்டுக்களைக் கொண்டது. பல வர்ணஜாலங்களைக் காட்டுகிறது. 11.8 கிலோ மஞ்சள் வண்ணக் கல்லிலிருந்து இது வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. பிரேஜிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல் 1988ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைவரும் கண்டு களிப்பதற்காக வாஷிங்டன் மியூஸியத்தில் வைக்கப்பட்டது.
இன்னொரு அரிய 31000 கேரட் உள்ள கல் எல்-டோராடோ டோபாஸ் என அழைக்கப்படுகிறது. இதன் எடை 6.2 கிலோ ஆகும். இதுவும் பிரேஜிலில் வெட்டி எடுக்கப்பட்ட கல் ஆகும். 37 கிலோ கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த அரிய கல் இப்போது பிரிட்டிஷ் அரச வம்சத்தினரிம் உள்ளது.
தெய்வீக மணி புஷ்பராகம்
கோயிற் புராணம் என்ற நூல் ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு கிழமையன்றும் ஒவ்வொரு ரத்தினம் இறைவனுக்கு அர்ப்பிக்கப்படுவதைச் சிறப்பித்து “நண்ணித் தினகரன் முதலோர் கிழமை கொணல்மார் நவமணி அணி மேவ” என்று கூறுகிறது. இதன் படி வியாழக்கிழமை புஷ்பராகம் அர்ப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது.
தெய்வீக மணியான புஷ்பராகம் தேவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, என்றால் பல நலன்களைத் தரும் அது மனிதர்களுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன?!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஹிட்லரின் வி -2 ராக்கெட் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் , ஹிட்லரின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது .போர் முடிந்த பின்னர் அவை எல்லாம் ஏலம் விடப்பட்டன .நான் அக்டோபர் 25, 1992-ல் எழுதிய கட்டுரை இதோ —
வரலாறு படிக்கும் மாணவர்களுக்குப் பயனுள்ள குறிப்பு —
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
TWELVE is a number of great importance. 12 signs of zodiac, 12 months in the caledars of different cultures, 12 acts of Hercules, 12 tribes of Israel, 12 Apostles of Jesus are all well known.
From the fifth century BCE onward there were 12 Gods in Greek pantheon:-Zeus, Hera, Poseidon, Demeter, Apollo, Artemis, Ares, Aphrodite, Hermes, Athena, Hephaestus and Hestia. I Athens the altar was sacred to the Twelve.
Tamil month begins in the middle of English month and finish in the middle of following month. For instance April 14th is the first day of the Tamil month Chitra.
Badi or Krishna Paksha- Fortnight of the waning moon
Sudi or Sukla Paksha- Fortnight of the waxing moon
BABYLONIAN AND ASSYRIAN MONTHSSUMERIAN MONTHS
Xxxx
TWELVE YEAR HINDU FESTIVALS
Kumbhamela –When the planet Jupiter enters Kumbha Rasi (Jupiter in Aquarius)
At the confluence of Ganga, Yamuna and invisible Saraswati at Prayag (Allahabad in Uttar Pradesh)
Mahamaham- When the planet Jupiter (Guru) enters Simha Rasi (In Leo)
At the Mahamaham Tank in Kumbakonam in Tamilnadu
Kurinji flower favourite of Lord Muruga also blooms once in 12 years.
Mahamastabisheka- Ritual bath of Jain saint Gomateswara statue in Sravanabelagola in Karnataka
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. – (8 எழுத்துக்கள்) ஐந்து உபாயங்கள், சிறுவர் கதைகளும் இதே தலைப்பில் உண்டு
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ACROSS
1. (8 letters)- the last of the four Hind Yugas
7. (6)- wave in Sanskrit; famous slokas of Sankara has this suffix
8. (5)- one of the names of Indra
9. (5)- elephant; prefix of Pandava’s capital city
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
நாமக்கல் மலையிடையில் கீழ்ப்புறம் பாறையைக் குடைந்து அரங்கநாதனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தூண்களை உடைய மேடை ஒன்று, அதன் அடிப்பாகம் மூன்றடுக்குகள், இரண்டு தூண்களை உடைய கூடம், குகையின் மேல் பாகம் வளைவாக வந்து நீண்டிருக்கும் ஒரு தாழ்வாரம். தூண்களுக்குச் சரியாகச் சுவர் எழுப்பி மூன்று கதவுகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கதவின் வழியாகத் தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். மற்ற இரண்டு வாயில்களும் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுபவை.
உயரமான மேடையில் கார்க்கோடகன் என்னும் பாம்பைப் பாயலாகக் கொண்டு அரங்கநாத சுவாமி சயனகோலம் பூண்டிருக்கிறார். அக்குகையின் மேற்குப் புறச் சுவரின் அருகில் தும்புரு, நாரதர், பதஞ்சலி, பிரமன், நான்கு கந்தர்வர்கள் ஆகியோருடைய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியின் பாதத்தின் அருகில் மேடையின் வடக்குச் சுவரில் மது, கைடபர், சந்திரன் ஆகியோரது சிலகள் உள்ளன. சூரியனின் உருவம் சுவாமியின் சிரசுக்குச் சமீபத்தில் தெற்குச் சுவரில் இருக்கிறது. படுக்கையின் கீழ் பஞ்சாயுதங்கள் இருக்கின்றன.
மேடைக்கும் வெளியில் உள்ள இரண்டு தூண்களுக்கும் இடையே சாம்பவந்தன், மகாபலி மற்றும் சில கந்தர்வகள் இருக்க வாமனாவதாரத்தோடு திருவிக்கிரமாவதாரமும் உள்ளன. இதற்கு எதிர்த்த வடக்குச் சுவரில் சிவனும், இடது புறம் விஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணனது சிலை இருக்கிறது. ஏழு முக்கிய நதிகளும், அவற்றின் அருகே பால நரசிம்மனது உருவமும் இருக்கிறது.
அதே நாமக்கல் மலையின் மேல்புறம் பாறையைக் குடைந்து நரசிம்ம சுவாமி கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிற்ப வேலைகளுடனான மூன்று அறைகளும் முன்னால் இரண்டு தூண்களும் ஒரு தாழ்வாரமும் இருக்கின்றன. உயர்த்தப்பட்டதும், இரண்டு இரட்டைத் தூண்களும் உடையதுமான நடுவறை மேடையின் மேல் அமைந்துள்ளது. நரசிம்ம சுவாமியின் உருவம் உட்கார்ந்த நிலையில் இருக்கிறது. சுவாமியின் பீடத்திற்குச் சரியான மட்டத்திற்கு வலது புறத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக சந்திரன் – சூரியன் -ஜனகர் ஆகியோரும், இடது புறத்தில் சனந்தனன்-சந்திரன் – பிரம்மா ஆகியோரும் இருக்கிறார்கள். இதில் சூரியனும் சந்திரனும் சாமரம் போடுகின்றனர். ஜனகனும் சனந்தனனும் உயரத்தில் நடக்கும் காரியங்களைத் தெரிவிக்கின்றனர். ருத்திரனும், பிரமனும் இரணியனின் வதத்தின் போது உண்டான கோபத்தைத் தணிக்கின்றனர்.
இரண்டாவது அறையில் இரணியனைத் துடையின் மேல் வைத்து இரு கைகளால் அவன் வயிற்றைக் கீறுவதும், இரண்டு கரங்களால் அவன் கைகால்களைப் பிடித்துக் கொண்டிருப்பதும், மற்றும் இரு கரங்களில் சங்கு சக்கரமும் ,வேறிரண்டு கைகளில் வாளும் வில்லும் கொண்டிருப்பது போலவும் காணப்படுகிறது.
மூன்றாவது அறையில் வராகவதாரம் உள்ளது. வராகத்தின் தலைக்கு மேலே நான்கு வேதங்களாகிய நான்கு தலைகள் உள்ளன. அடியில் ஒரு புறம் ஆதிசேஷனும், மறுபுறம் பூமி தேவியும் கலியுகத்தின் முடிவில் வரப்போகும் பாதங்களைக் காணக் காத்திருக்கின்றனர்.
வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு சுவர்களிலும் இரண்டு மாடங்கள் உள்ளன. தெற்கே இருப்பது வாமனாவதாரம். நடுவில் இருப்பது திருவிக்கிரமன்.
கீழே குடை பிடித்துக் கொண்டிருப்பது வாமனாவதாரம். மேலே தூக்கியுள்ள பாதத்தைப் பிரம்மா பூஜை செய்வது போலவும் அதற்குப் பக்கத்தில் திருவிக்கிரமனது வெற்றிக்காக் ஜாம்பவந்தன் பேரிகை அடிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
கீழே மஹாபலி தானம் கொடுப்பதற்குச் செம்பில் தண்ணீரோடு நிற்கிறான்.
திருவிக்கிரமனது இடது காலுக்கு அருகில் கருடன் சுக்கிரனது முதுகில் ஏறிக் கொண்டு, மாவலியின் கொடையைத் தடுத்ததற்காகத் துன்புறுத்துகிறான். வடக்குச் சுவரில் மாடத்தில் வைகுண்ட நாராயணனது சிலை உள்ளது. தேவர்கள் தஙகளைத் துன்புறுத்துபவனாகைய இரணியனைக் கொல்லும் உருவத்தைக் கண்டு களிக்க, சுவாமி அபய ஹஸ்தம் கொடுப்பது போல இருக்கிறது.
இவ்விரண்டு கோவில்களும் மலையைக் குடைந்தே தூண், கொடுங்கை, மேடை, விக்கிரஹம் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.
நரசிம்ம சுவாமிக்கும், அரங்கநாத சுவாமிக்கும் முறையே தமிழ்ப் பழம் பெயர் சிங்கப் பெருமாள் மற்றும் பள்ளி கொண்ட பெருமாள் எனச் சாஸனம் கூறுகிறது. இது வட கொங்கு நாடு, ஏழூர் நாடைச் சேர்ந்ததாகும்.
இவையெல்லாம் 1906ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சாஸன பரிசோதனை அறிக்கை பக்கம் 74,75,76-இல் தரப்பட்டுள்ளன.
இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் பாடல் எண் 42இல் கூறுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற நாமக்கல் மலை அதியேந்திர விஷ்ணுக்ரஹ கோவிலைப் பற்றியும் அதைக் குடைந்து உருவாக்கிய அதியன் பற்றியும் கொங்கு மண்டல சதகம் 80ஆம் பாடல் போற்றிப் புகழ்கிறது.
சிற்ப சாஸ்திரத்தில் வல்லுநர்களைக் கொண்டு மலையைக் குடைந்து பழங்கால இதிஹாசக் கதைகளான பிரதிமைகளைச் செதுக்கி அதியேந்திர விஷ்ணுக்கிரஹ என்று ஆலயத்துக்குப் பெயர் கொடுத்து அதியன் வாழ்வதும் கொங்கு மண்டலமே ஆகும்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Dhanadeva is a poet quoted by Sharngadhara Paddhati (1363). His verse mentions eloquent achievements of Shiilaa, Vijjaa, Maarulaa, Morikaa and others as poetesses of distinction.
We have already seen the works of Shila and Vijja.
Vijja alias Vidyavati lived before Rajasekhara’s time. One of her poems is in the Abhidhaa vrtti Maatrikaa of 855 CE . This work is written by Mukula who lived during the period of King Avantivarman of Kashmir (855-883 CE).
Vijja’s most often quoted verse is
Nilotpala dala shyamam Vijjakam mamajanata Vrithaiva Dandinapyuktam Sarma shukla
Mearning “Without knowing me ,Vijjaka , dark like the petal of a blue lotus, vainly has the poet Dandin said that the goddess of learning is all white.”
Some people change the word ‘maam’ in the verse to ‘taam’ and attribute it to a different person.
Of Marula and Morika little is known; but some of their stanzas are quoted in Jalhana’s SUkti Muktavali, 1258 CE
The Kavindra vachana Samuchchaya quotes some stanzas of poetess Bhaavadevi. Another book also gives her stanzas.
Another ancient poetess is Phalguhastini. Some of her stanzas appear in later anthologies. Since Vamana’s Kavylankara Sutra vrtti is quoting her one Stanza ,she must have lived before 800 CE. Vamana was the Minister King Jayapida of Kashmir 779-813 CE.
Chandala vidya! Sadukti karnamrita quotes a verse under the joint authorship of Chandala vidyaa, Kalidasa and Vikramaditya. So she must be from Gupta Period.
Another poetess is Jaghanachapalaa. Her stanza is found in Kavindra Vachana Samuchchaya.
We see two stanzas jointly composed by Bilhana and Rajakanya. Raja Kanya means Princess. Her real name was Shashikala or Chandrakala. Verses of a poetess named Sarasvati hav ebeen quoted in several anthologies beginning with Sadukti Karnamrita. But she lived before eleventh century.
Rajasekhara Charita mentions the following poetesses:- KaAmaliIla Kanakavalli Sunandaa Lalitaangi Madhu Ranga Vimalaanghi
Of these the last three are from Malwa (Madhya Pradesh). We don’t know much about others. We have lost their original works and only quoted stanzas are available now. No where in the world and in no other language we find such a galaxy of poetesses. Sanskrit stands far higher than other ancient languages when it comes to Poets and Poetesses.