Written by London Swaminathan
Post No. 16,003
Date uploaded in London – 22 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted already; RA beginning words continued…………………
ராமாவதாரம்
விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பற்பல; அவைகளில் பத்து அவதாரங்களை மட்டும் தசாவதாரம் என்ற பெயரில் போற்றி வருகிறோம் ; அந்த பத்து அவதாரங்களில் ராமனே அதிகம் போற்றப்படுகிறார் ; காரணம் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் (ல்லறத் துணைவி) என்பது அவருடைய கொள்கை ; காலத்தால் அழியாத ராம காவியம் இந்தியாவின் சாது சன்யாசிகளை உருவாக்கியது; காந்தி போன்ற அரசியல்வாதிகளும் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று எழுதிவைத்துள்ளனர் ; ஜாதி இன வேறுபாடுகளை அகற்றி குகன் என்னும் வேடனையும், குரங்கு அடையாளம் பொறித்த வன + நர = வானர = காட்டு மனிதர்களையும் , கரடி அடையாளம் போட்டுக்கொண்டு வாழ்ந்த ஜாம்பவான் இன மக்களையும், , பறவை அடையாளம் போட்டுக்கொண்டு வாழ்ந்த கானக ஜடாயு இனத்தாரையும் சகோதரர்களாக பாவித்து விபிஷணன் போன்றோர் மூலம் அகதிகளுக்கு வாழ்வும் கொடுத்ததால் பெரும்புகழ் பெற்றார் ; அரசர்கள் பல மனைவியரை மணந்து கொள்வதை இந்து மதம் அனுமதிக்கிறது; ஆயினும் மூன்று மனைவியுடைய தந்தையைப் பின்பற்றாமல் ஒரே மனைவி சீதையுடன் வாழ்ந்தார் ; ராவணன் கடத்திச் சென்ற அந்த சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வந்து அயோத்தியில் ஆட்சியைத் தொடர்ந்தார் ; ராமனுக்கு இணையாகப் புகழ்பெற்ற பரதனும் சீதையும் இந்துக்களின் உதாரண மனிதர்களாக விளங்குவதால் ராமனின் அவதாரம் பல லட்சம் இந்துக்களை இன்றும் ஊக்குவிக்கிறது .
***
ராமதாஸ் பெயரில் மூன்று சாது சன்யாசிகள்!
ராமதாசர் என்ற பெயரில் மூன்று பெரியார்கள் வாழ்ந்தனர்; வீர சிவாஜியை ஊக்குவித்து வழி நடத்திய சமர்த்த ராமதாசர், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் ; படையெடுத்து வந்த முஸ்லீம்களின் ஆட்சியை ஒழித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ உதவினார் . சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக்காலம் (1627/30–1680).
பத்ராசல ராமதாசு (1620–1688)
இரண்டாவது ராமதாசரை நாம் பத்ராசலம் ராமதாஸ் என்று போற்றுகிறோம் . மாணிக்கவாசகரைப் போலவே அரசாங்க பணத்தைக் கோவில் கட்டப் பயன்படுத்தியதால் 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார்; இறுதியில் ராம லெட்சுமணரே மாறுவேடம் கொண்டு சுல் த்தானிடம் வரிவசூல் பணத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் சிறைவாசம் நீங்கியது . பத்ராசலம் இப்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. இவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் இவருடைய பக்தி ரஸ கீர்த்தனைகளை இன்றும் நாம் பஜனைகளில் பாடி வருகிறோம் ; கர்நாடக இசைக் கச்சேரிகளில் கேட்கிறோம்.
சுவாமி ராமதாஸ் (1884–1963)
மூன்றாவது ராமதாஸ் சுவாமிகள் கேரளத்தில் காசர் கோடு ஜில்லாவில் கஞ்சங்காடு என்ற இடத்தில் ஆனந்தாஸ்ரமத்தை அமைத்தார்; .சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபட்டு சந்நியாசியாக வலம் வந்தார். ராம நாமே சிறந்தது என்று போதித்த அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே பல குட்டிக்கதைகளைக் கூறியுள்ளார் ; ராம கிருஷ்ண உபதேச மஞ்சசரியைப் படித்தவர்கள் இவரது குட்டிக்கதைகளையும் விரும்புவார்கள்.
***
ராமேஸ்வரம்/ ராமநாத (சுவாமி)
இந்தியாவின் புகழ்மிகு புண்யஸ்தலங்களில் ஒன்று ராமேஸ்வரம்; 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே தலம்.காசி- ராமேஸ்வரம் சென்று வந்தேன் என்பது வாழக்கிலுள்ள பொது மொழி; இவ்விரண்டையும் தரிசிப்பது இந்துக்களின் தலையாய கடமைகளில் ஒன்று. பாம்பன் பாலம் என்னும் புதுமையான பாலத்தால் இணைக்கப்படும் ராமேஸ்வரம் தீவு, ராம பிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் (ராமநாத சுவாமி) இருப்பதாலும் எண்ணற்ற தீர்த்தங்கள் இருப்பதாலும் கூடுதல் கவர்ச்சியைப் பெற்றுள்ளது; ராமர், வானர சேனை உதவியுடன் அமைத்த சேது என்னும் கடற் பாலம் அருகிலுள்ள தனுஷ்கோடியில் துவங்கியது. .
மதுரை நகரிலிருந்து 173 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராமேஸ்வரத்தை மூன்றரை மணி நேரத்தில் அடையலாம் .
***
ராம்தீர்த், பஞ்சாப் Swami Rama Tirtha (1873–1906)
சுவாமி ராம தீர்த்தா பெரிய தத்துவ ஞானி ; சுவாமி விவேகானந்தரைப்போல ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி இந்து சமய தத்துவங்களை விளக்கினார் ; கணிதப் பேராசிரியராக இருந்த அவர் ஆன்மீக நாட்டம் கொண்டு இமயமலையில் தவம் செய்தார். ஜப்பான் , அமெரிக்கா முதலிய இடங்களில் சொற்பொழிவாற்றினார் ; அவர் பிறந்த இடம் இப்போது பாகிஸ்தானிலுள்ளது . அவருடைய அனுபவம், வாழ்க்கை, சொற்பொழிவுகள் அடங்கிய( a seven-volume collection titled In Woods of God Realization) ஆங்கில நூல் மிகவும் புகழ்பெற்றதாகும்..
***
ரஸம் – நவரசம்
ரசம் என்பது சாறு என்ற பொருளில் பழ ரசம் , பருப்பு ரசம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் உள்ளது ; கலைத்துறையில் இது உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்ற பொருளில் பயன்படுகிறது. நாட்டியத்தில் முக பாவம் மூலம் இதைக் காட்டுவார்கள் . நாடகம், திரைப்படங்களில் வசனம், குரல் மாற்றம் , முக பாவம் மூலம் இதை வெளிப்படுத்துவார்கள் . பரத நாட்டிய சாஸ்திரத்தை சம்ஸ்க்ருதத்தில் எழுதிய பரத முனி, எட்டு ரசங்களை மட்டுமே இயம்பினார்; ஆனால் பிற்காலத்தில் எழுந்த கலை நூல்கள் அதை நவரசமாக்கி செப்பின. தொல்காப்பியரும் பரத முனியைப் பின்பற்றி எட்டு வகை ரசங்களை/ உணர்ச்சிகளை மட்டுமே உரைத்தார்.
நவ ரசங்கள் என்பன:
1. வீரம் (heroism)
2. சிருங்காரம் /காதல் (eroticism)
3. அத்புதம் / வியப்பு (wonder)
4. ரௌத்ரம் /கோபம் (fury)
5. பயனாக (भयानक): பயம் (fear); in some schools Shame.
6. பீபத்சம்/ வெறுப்பு (disgust)
7. ஹாஸ்யம்/ நகைச்சுவை (comedy or humour)
8. கருணை (pity or compassion)
9. சாந்தம் (tranquillity)
அபிநவகுப்தர், சாந்தம் என்ற உணர்ச்சியைப் பிற்காலத்தில் சேர்த்தார்
To be continued……………………….
Tags– ராமதாஸ், ராமதீர்த், ராமேஸ்வரம், நவ ரஸம், ராம, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-85