பெரிய புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,012)

Written by London Swaminathan

Post No. 16,012

Date uploaded in London – 24 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பெரிய புராணம்  நூலை எழுதியவர் யார் ? அது இந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது?

2

பெரிய புராணம் படித்ததால் சன்யாச வாழ்க்கை பூண்டு உலகப் புகழ்பெற்ற தமிழர் யார் ?

3

இந்த நூலின் இன்னமும் ஒரு பெயர் என்ன ?

4

பெரிய புராணத்தில் யாருடைய கதைகள் உள்ளன ?

5

கம்பராமாயணம் பெரிய புராணம், சிலப்பதிகாரம் போன்றவை நாட்டின் சிறப்பு, நகரத்தின் சிறப்பு முதிய அத்தியாயங்களுடன் தொடங்கும்; பெரியபுராணத்தில் எந்த நாட்டின் எந்த நகரத்தின் சிறப்பு உள்ளது?

6

பெரிய புராணத்தின் துவக்கப் பாடல் எது ?

7

சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்! இருந்தன: இதை சேக்கிழார் எப்படிப்பாடுகிறார் ?

8

பெரிய புராணம் அரங்கேறிய இடம் எது?

9

இந்த நூலின் காலம் என்ன?

10

இந்தப்பாடலைப் பூர்த்தி செய்யுங்கள்………………..

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

……………………………………………………………………………………….

விடைகள்

1.பெரிய புராணம் நூலை கவிதைகளாக எழுதியவர் சேக்கிழார் பெருமான். அது 12 ஆம்  திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.

*

2. பெரிய புராணம் படித்ததால் சன்யாச வாழ்க்கை பூண்டு திருவண்ணாமலைக்குச் சென்று வெளிநாட்டினரையும் கவர்ந்து இழுத்தவர் ரமண மஹரிஷி.

*

3. பெரிய புராணத்தைத் திருத்தொண்டர் புராணம் என்றும் அழைப்பார்கள்.

*

4. பெரிய புராணத்தில் 63 சைவப்பெரியார்களின் — அதாவது நாயன்மார்களின் — கதைகள் உள்ளன.

*

5.பெரியபுராணத்தில் முதலில் சோழ நாட்டின் சிறப்பினையும் திருவாரூர் நகரத்தின் சிறப்பினையும் காணலாம்.

*

6.பெரிய புராணத்தின் துவக்கப் பாடல்

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.

*

7.சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்! இருந்தன: இதை சேக்கிழார்

பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு  வெங்குரு நீர்

பொரு  இல் திருத் தோணிபுரம்  பூந்தராய்  சிரபுரம்  முன்

வரு புறவம் சண்பை  நகர்  வளர் காழி கொச்சை வயம்

பரவு திரு கழுமலம்  ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917

ஒரே பாட்டில் வைத்துள்ளார்.

*

8. பெரிய புராணம் அரங்கேறிய இடம் -சிதம்பரம் தில்லை அருள்மிகு நடராஜர் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம்

*

9. பெரிய புராண நூலின் காலம் 12-ஆம் நூற்றாண்டு. சேக்கிழார் அரச பதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி_ராமதேவர் என்ற பெயர் இடப்பட்டது.  சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார்.  1133-ஆம் ஆண்டு முதல் 1150-ஆம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது.

*

10. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத

சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904

—subham—

Tags- பெரிய புராணம், சேக்கிழார், 10 கேள்விகள்

Leave a comment

Leave a comment