கீத கோவிந்தம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,039)

Written by London Swaminathan

Post No. 16,039

Date uploaded in London – 31 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கீத கோவிந்தம் என்பது என்ன ? இதை யார் இயற்றினார் ?

2

இதில் அடங்கியுள்ள விஷயம் என்ன ?

3

இந்த நூலில் எத்தனை பிரிவுகள்? எத்தனை பாடல்கள் உள்ளன ?

4

இதை எங்கே கேட்கலாம் ?

5

இதை ஜெயதேவர் எங்கு பாடினார்  ?

6

இந்த நூலின் பிரிவுகளுக்கு அவர் கொடுத்த 12 பெயர்கள் என்ன ?

7

ஜெயதேவர் செய்த சமயப் புரட்சி என்ன ?

8.

முதல் அஷ்டபதியின் சிறப்பு என்ன ?

9

இந்த கீத கோவிந்தம் நூலை மேலை உலகில் பரப்பியவர்கள் யார் ?

10.

கல்யாண அஷ்டபதி எது ?

விடைகள்

1.கீத கோவிந்தம் சம்ஸ்க்ருத பக்திப்பாடல் நூல்; இதை ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயதேவர் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றினார் . பஜனைகளுக்கும் கச்சேரிகளுக்கும் நாட்டியத்துக்கும் ஏற்றபடி ராகங்கள் உள்ள நூல்; இது இதன் தனிச் சிறப்பு. ஒரிஸா மாநிலத்தில் குர்தா மாவட்டத்தில் உள்ள பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளிசாசன் என்ற இடத்தில் ஜெயதேவர் பிறந்தார்.

***

2.கிருஷ்ணருக்கும் கோபியருக்கும், குறிப்பாக ராதாவுக்கும் உள்ள காதல் விஷயங்கள் இதில் அடக்கம்; இது பக்திக் காதல், அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவுக்காக ஏங்கும் காதல் ; சினிமா பால்களைக் கேட்டால் காம உணர்ச்சி மிகும் ; இந்தக் காதல் பாடல்களைக் கேட்டால் காம உணர்ச்சிகள் மறையும்.

***

3.இந்த நூலில் 12 சர்க்கங்களும் 24 பாடல்களும் உள்ளன . சம்ஸ்க்ருத மொழியில் 8 சரணங்கள் உள்ளன. (இதனால்  அஷ்டபதி எனப் பெயர் பெற்றது)

***

4.எல்லா சம்பிரதாய பஜனைகளிலும் அஷ்டபதிகளைக் கேட்கலாம் ; ராதா கல்யாணம் என்று இரண்டு மூன்று நாட்களுக்கு ராதா கல்யாணம் நடைபெறும் இடங்களில் 24 அஷ்டபதிகளையும் கேட்கலாம் .

***

5.இதை அவர் பூரி ஜகந்நாதர் கோவிலில் பாடியதாகவும் அவருடைய மனைவி பத்மாவதி, அதற்கேற்ப அபிநயம் செய்து  ஆடியதாகவும் சம்பிரதாயத் செய்திகள் உள்ளன.

***

6.இதில் 12 ஸர்க்கங்கள் உள. கண்ணனுடைய த்வாதசாக்ஷரீ என்ற மஹா மந்திரத்தை மனசில் வைத்து 12 ஸர்க்கமாக அமைத்திருக்கிறார். ஒவ்வொரு ஸர்க்கத்திற்கும் அவர் வைத்த பெயர் மிக அருமையானவை. அர்த்த புஷ்டி நிறைந்தவை. அருள் சுரப்பவை.

ஸாமோத தாமோதரன்: உரலோடு கட்டிய தாய்க்கும் ஆனந்தம் அளிப்பவர்.

அக்லேச கேசவன்: ப்ரம்மாவையும் சிவனையும் கஷ்டப்படாமல் காத்தவர்.

முக்த மதுஸூதனன்: மோஹங் கொண்ட மது எனும் அரக்கனைச் சிக்ஷித்தவர்.

ஸ்நிக்த மதுஸூதனன்: மது கைடபருக்கும் தன் அழகைக் காட்டியவன்.

ஸாகாங்க்ஷ புண்டரீகாக்ஷன்: தன்னை நாடி பக்தர் வருவார்களா என விசாலமான கண்களால் பார்ப்பவன்.

த்ருஷ்ட வைகுண்டன்: அல்லது தன்ய வைகுண்டன்: வைகுண்ட இன்பத்தை எல்லோருக்கும் அறிவிப்பவன்.

நாகர நாராயணன்: க்ராமத்தில் கோபகோபியருடன் இருந்து பழகினாலும் நகரத்தில் உள்ளவர்க்கும் ஏற்றபடி நடப்பவர்.

விலக்ஷ்ய லஷ்மீபதி: பகவத் கருணையைக் கோரும் அனைவரையும் லக்ஷ்மீயாகப் பாவித்து மணப்பவர்.

முக்த முகுந்தர்: விசேஷ அனுபவத்தைத் தரும் ஸத்குரு.

சதுர சதுர்புஜம்: ஸகல புருஷார்த்தங்களையும் அள்ளி அளிக்கும் நான்கு கைகள் உள்ளவர்.

ஸாநந்த கோவிந்தர்: இடையர்க்கும் பூமியில் தோன்றிய அனைவருக்கும் ஆனந்தமளிப்பவர்.

ஸுப்ரீத பீதாம்பர: பக்தரது பக்தியால் பரம ஸந்தோஷமடைந்து பக்தரைப் பீதாம்பரதாரியாகச் செய்பவர்.

***

7. கீத கோவிந்தம் என்ற நூலினை நமக்கு அளித்த ஜெயதேவர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தரையும் ஒரு அவதாரமாகச் சேர்த்தார். அதற்கு முன்னுள்ள அவதாரங்களை மட்டுமே நாம் ஆழ்வார் பாடல்களில் காண்கிறோம் பாகவதம் முதலிய நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களை குறிப்பிடப்பட்டாலும் தசாவதாரம் என்ற பத்து அவதாரக் கணக்கு ஆழ்வார் பாசுரங்களிலேயே வந்துவிட்டன . இவர் அதில் ஒரு அவதாரத்தை நீக்கிவிட்டு புத்தரைச் சேர்த்தார்.

***

8.இதில்தான் புத்தர் அவதாரம் ஆன செய்தி வருகிறது.

முதல் அஷ்டபதி –

ராகம் மாளவம்

ப்ரளய பயோதி ஜலே த்ருத வானஸி  வேதம்

விஹித வஹித்ர சரித்ரம் அகேதம்

கேசவ த்ருத மீனஸரீர (ஜயஜக தீஸஹரே )

க்ஷிதிரதி விபுலதரே தவதிஷ்டதி ப்ருஷ்டே

தரணி தரண கிண சக்ர கரிஷ்டே

கேசவ த்ருத கச்சப ரூப (ஜயஜக தீஸஹரே )

வஸதி தஸன ஸிகரே தரணீ தவ லக்னா

ஸஸினி களங்க களேவ நிமக்னா

கேசவ த்ருத ஸூகர ரூப (ஜயஜக தீஸஹரே )

தவகர கமலவரே நகமத்புத ஸ்ருங்கம்

தளித ஹிரண்ய கஸிபு தனு ப்ருங்கம்

கேசவ த்ருத நரஹரி ரூப (ஜயஜக தீஸஹரே )

சலயசி விக்ரமணே பலிமத்புத வாமன

பத நக நீரஜ  நித ஜன பாவன

கேசவ த்ருத வாமன ரூப (ஜயஜக தீஸஹரே )

க்ஷத்ரிய ருதிரமயே ஜகத பகத பாபம்

ஸ்னபயஸி பயஸி ஸமித பவ தாபம்

கேசவ த்ருத ப்ருஹுபதி  ரூப (ஜயஜக தீஸஹரே )

விதரஸி திக்ஷுரணே திக்பதிகமனீயம்

தஸமுக மௌளி பாலிம் ரமணீயம்

கேசவ த்ருத ரகுபதி ரூப (ஜயஜக தீஸஹரே )

வஹசி விபுஷி விஸதே வஸனம் ஜலதாபம்

ஹலஹதி பீதி மிளித யமுனாபம்

கேசவ த்ருத ஹலதர ரூப (ஜயஜக தீஸஹரே )

நிந்தஸி  யக்ஞ விதே அஹஹ ஸ்ருதி ஜாதம்

ஸதய ஹ்ருதய தர்ஸித பஸுகாதம்

கேசவ த்ருத புத்த ஸரீர (ஜயஜக தீஸஹரே )

ம்லேச்ச நிவஹநிதனே கலயஸி கரவாளம்

தூமகேதுமிவ கிமபி கராளம்

கேசவ த்ருத கல்கி ஸரீர (ஜயஜக தீஸஹரே )

ஸ்ரீ ஜயதேவ கவே: இத முதிதம் உதாரம்

ஸ்ருணு ஸுகதம் ஸுபதம் பவஸாரம்

கேசவ த்ருத தஸவித ரூப (ஜயஜக தீஸஹரே )

***

9.ஆங்கில மொழியில் – வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்தார் ;

பிரெஞ்ச்சு மொழியில் கிறிஸ்டின்லாசன் 1800-1876

ஜெர்மன் மொழியில் கவிஞரும் அறிஞருமான பிரீட்ரிக் ரூக்கர்ட் (Friedrich Rückert) .

***

(10). 22-வது அஷ்டபதி (ராதா வதன விலோகன…) ‘கல்யாண அஷ்டபதி’ என்று அழைக்கப்படுகிறது. இது ராதா-கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவத்தின் போது பாடப்படும் முக்கிய பாடலாகும்.;

பாடல் தொடக்கம்: “ஸா ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன…” மற்றும் “ராதா வதன விலோகன விகஸித…” எனத் தொடங்குகிறது.

இடம்: கீத கோவிந்தத்தின் 11-வது சர்க்கத்தில் இடம்பெற்றுள்ளது.;: வைணவத் திருமணங்கள் மற்றும் ராதா கல்யாண விழாக்களில் மங்கலப் பாடலாகப் பாடப்படுகிறது.

–SUBHAM—

TAGS- அஷ்டபதி, கீத கோவிந்தம், ஜெயதேவர் , 10  கேள்விகள்

Leave a comment

Leave a comment