WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,076
Date uploaded in London – 11 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?!
ச. நாகராஜன்
ஹிந்து விரோத சக்திகளின் ஏராளமான நடவடிக்கைகளில் ஒன்றாகத் திகழ்கிறது பி.ஜே.பி. எம்.பி. டாக்டர் மேதா குல்கர்னி புனாவில் உள்ள மஹாத்மா பூலே வாதா வளாகத்தில் உள்ள ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு நடத்தியதை எதிர்த்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய விவகாரம்.
காலம் காலமாக ஏராளமான சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வேண்டி நடத்தி வரும் வழிபாடு இது.
இதில் அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கும் தீய சக்திகளை இனம் கண்டு கண்டிக்க வேண்டிய காலமாக ஆகி விட்டது இந்தக் காலம்.
இது சனாதனமயமாக்குதலின் ஒரு அங்கம் என்று சொல்லும் இந்த தீய சக்திகள் மசூதிக்குள் நுழைபவர்களையும் சர்ச்சுக்குள் நுழைபவர்களையும் அவர்களின் இஷ்டப்படி வழிபாடு நடத்துவதை என்றுமே எதிர்ப்பதில்லையே, ஏன்?
ஹிந்துக்கள் என்றால் இழிவான பிறவிகள் என்ற எண்ணமா?
ஆர்கலாஜிகல் பிரிவு இதற்கு முதலில் அனுமதி வழங்கவில்லை. அனைத்து ஹிந்துப் பெண்மணிகளும் ஒருங்கிணைந்து இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவே ஆர்கலாஜிகல் பிரிவு பணிந்து இந்த வழிபாட்டிற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
வட் எனப்படும் ஆலமரத்தைச் சுற்றி வட் பூர்ணிமா வழிபாடு தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒன்று. இங்கு ஆலமரத்தில் தங்கள் வழிபாட்டு சரடைக் கட்டி விட்டு அதைச் சுற்றி வந்து வேண்டிக் கொள்வது பெண்களின் வழக்கமாகும்.
மஹாபாரதத்தில் வரும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சடங்கு இது,
சத்தியவானை மணந்த சாவித்திரி தன் கணவனுக்கு ஆயுள் அற்பம் என்பதை அறிந்து எமனுடன் புத்திசாலித்தனமாக வாதிட்டு அவனது உயிரை மீட்கிறாள்.
தீவிர தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக எமனையும் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக் காட்டான சாவித்திரியை தங்கள் இலட்சியப் பெண்மணியாகக் கொள்வதில் என்ன தவறு?
ஆலமரம் என்பது பிரம்மா (வேர்) விஷ்ணு (அடிமரம்) சிவா (கிளைகள், இலைகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் குறிக்கிறது. இந்த மூவரின் அருளையும் பெற வழி வகுக்கும் வழிபாடு இது.
திருமணம் என்னும் புனித நிகழ்வை நினைவூட்டி கணவன் மனைவி நீடித்து வாழுமாறு செய்வதோடு பெண்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி இனிப்பு, ஆடை அணிகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு இருக்கும் வழிபாட்டு நாள் இது.
ஒரு பெண்மணி பாராளுமன்றத்தில் நுழைந்ததாலேயே அவர் தன் மதத்தை துறந்து விட்டார் என்பதில்லை. நமது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மக்கள் அனைவருக்குமான மத சுதந்திரத்தையும் வழிபாட்டு உரிமையையும் தந்துள்ளது.
அப்படி இருக்க டாக்டர் மேதா குல்கர்னியின் பங்கேற்பைக் கொச்சைப் படுத்தி விமரிசிக்கும் ஹிந்து விரோதிகளை அடையாளம் காண இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.
எமனையே வென்ற ஹிந்துப் பெண் சக்திக்கு இந்த தூசு போன்ற கயவர்களைத் தட்டித் துடைக்க எத்தனை விநாடிகள் வேண்டும்!
ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும், இவர்களை இனி தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டும்.
**