

Written by London Swaminathan
Post No. 16,150
Date uploaded in London – 31 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பாஷா அல்லது பாஸா என்பவர் யார்? அவர் எத்தனை நாடகங்களை எழுதியுள்ளார் ?
2
அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது எது? அது யாரைப் பற்றியது ?
3
அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள் என்ன?
4
பாஸா வின் காலத்தை அறிய உதவும் முக்கிய விஷயம் எது ?
5
கிரேக்க நாடகங்களைக் காப்பி அடித்துதான் நாடகம் என்பதே இந்தியாவுக்கு வந்ததா ?
6
இவருடைய நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்ஸங்கள் என்ன ?
7
இவருக்குப்பின்னர் நாடகம் எழுதிய காளிதாசன் உவமைகளால் சிறப்பு அடைந்தார் ; இவர் பெயர் அந்த அளவுக்குப் பரவாதது ஏன் ?
8
காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களை தமிழ் உபாதா எல்லா மொழிகளிலும் காணலாம் பாஸா நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்களா?
9
இவர் வாழ்ந்த காலம் பற்றி சம்ஸ்க்ருத அறிஞர்கள் கூறுவது என்ன ?
10
பாஸா நாடகங்களில் காணப்படும் பொன்மொழிகள் என்ன ?
**********************
விடைகள்



1.பாஷா அல்லது பாஸா அல்லது பாசர் என்று குறிப்பிடப்படும் இவர் காளிதாசனுக்கும் முன்னால் வாழ்ந்த இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் ஆவார்; இவர் 13 நாடகங்களை எழுதியுள்ளார் .பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.
ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.
***
அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது “ஸ்வப்னவாசவாதத்தா“.இது உதயணன் – வாசவாதத்தா ஆகிய இருவரின் காதல் கதை ; இதில் அரசியல் செய்திகளும் உள்ளான
பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறது.
***
3. அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள்:
மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்கள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பாஷா இந்த நாடகங்களை இயற்றியுள்ளார்.ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:
1.பிரதிமா நாடகம் (Pratima Nataka): ராமாயணத்தின் ஆரண்ய காண்டம், அயோத்தியா காண்டப் பின்னணியில், கைகேயி போன்ற பாத்திரங்களின் நற்பண்புகளையும் விளக்கும் தனித்துவமான நாடகம்.
2.அபிஷேக நாடகம் (Abhiseka Nataka): ராமரின் பட்டாபிஷேகத்தை மையமாகக் கொண்ட நாடகம்.
மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:
3. ஊருபங்கம் (Urubhanga): துரியோதனனின் தொடை பிளக்கப்பட்டு வீழ்வதைச் சித்தரிக்கும் சமஸ்கிருதத்தின் அரிய சோக நாடகம்.
4. கர்ணபாரம் (Karnabhara): கர்ணனின் அஸ்திரக் கொடை மற்றும் அவனது மனபாரத்தை விவரிக்கும் ஒரு அங்கம் கொண்ட நாடகம்.
5. தூதவாக்யம் (Duta Vakya): கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது செல்லும் கதை.
6. தூதகடோத்கஜம் (Duta Ghatotkaca): கடோத்கஜனின் தூது பற்றிய நாடகம்.
7. மத்யமவ்யாயோகம் (Madhyama Vyayoga): பீமனுக்கும் இடும்பனைக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது.
8. பஞ்சராத்ரம் (Panca Ratra): பாண்டவர்களின் ஐந்து இரவு கால மறைமுக வாழ்வை மையமாகக் கொண்டது.கிருஷ்ணரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது:
9. பாலசரிதம் (Bala Carita): கிருஷ்ணரின் இளமைக்கால லீலைகள் மற்றும் கம்ச வதத்தைப் பாடும் நாடகம்.உதயணன் மற்றும் கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை:
10. ஸ்வப்ன வாசவதத்தா (Svapna Vasavadatta): பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படும் அரசியல் மற்றும் காதல் கலந்த நாடகம்.
11. பிரதிஞ்ஞா யுகந்தராயணம் (Pratijna Yugandharayana): வாசவதத்தையின் தந்தை பிரத்யோதனின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் மந்திரி யுகந்தராயணனின் கதை.
12. சாருதத்தம் (Carudatta): ஏழை வணிகன் சாருதத்தன் மற்றும் வசந்தசேனையின் காதலைப் பேசும் சமூக நாடகம்.
13. அவிமாரகம் (Avi maraca): இளவரசன் அவிமாரகன் மற்றும் குந்தீபோஜனின் மகள் குரங்கியின் காதல் கதை
***
4. இவர் நந்த வம்ச மன்னர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்; ஆகையால் மெளரியர்களுக்கும் முன்னால் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். உதயணன் என்ற புகழ்பெற்ற மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அவருடைய காதல் கதையே இவருடைய புகழ்மிகு படைப்பின் கரு ஆக அமைந்துள்ளது . சமஸ்கிருதத்தின் மகாக்கவியான காளிதாசரே தனது மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் முன்னுரையில், தனக்கு முந்தைய சிறந்த நாடக ஆசிரியராகப் பாஷாவைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
ஆகையால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாஸருக்கும் முன்னால் இவர் இருந்தது உறுதியாகிறது . இருவருடைய கதை களுக்கும் அணுகுமுறைக்கும் இடையே நல்ல வித்தியாசம் இருப்பதால் 100, 200 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். பரத முனியின் நாட்டிய சாஸ்திர விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் காலத்துக்கு முன்பே பாஷா வாழ்ந்ததும் காலத்தைக் கணைக்கப்பயன்படுகிறது
***
5.கிரேக்க நாடகங்கள் கிண்டல், கேலி, கீழ்த்தரமான செக்ஸ் ஜோக்குகள் உடையவை ; இந்துக்களின் நாடகங்கள் எல்லாம் புனிதக் கதைகள் அல்லது தர்ம விஷயங்கள் கொ ண்டவை. மேலும் கிரேக்கர்கள் நாடக ம் எழுதுவதற்கு 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தில் சுமார் 20 நாடக உரையாடல்கள் உள்ளன. இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .
கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.
1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .
2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன
3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.
4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .
5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர். கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம்
****
6.பாஸா நாடகங்கள் ஒவ்வொன்றிலும் நந்த வம்சத்தைக் குறிப்பிடுகிறார். அவருடைய நாடகங்களில் 230 கதா பாத்திரங்கள் வருகின்றனர் . அவர் நட்சத்திரங்களை மட்டும் குறிப்பிடுகிறர்; 12 ராசி மண்டலம் பற்றிக் குறிப்பிடவில்லை. 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்தில் கூட ராசி மண்டலம் வருணிக்கப்பட்டுள்ளது . காசு என்று குறிப்பிடும் போதெல்லாம் சுவர்ண மாசக என்கிறார் கனிஷ்கர் காலம் முதல் நாணயம்/ நானக என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது . மெளரியர்களின் தென் இந்தியப் படையெடுப்பு குறித்து சங்கப் புலவர் மாமூலரும், மைசூர் கல்வெட்டுகளும் பேசுகின்றன. அதற்கு முன் வாழ்ந்த பாஸா, நர்மதைக்கு வடக்கேயுள்ள நிலப்பரப்பையே குறிப்பிடுகிறார் . பரத வாக்கியம் என்னும் தேசீய கீதம், நாந்தி என்னும் துவக்க அறிமுகங்களும் உள்ளன . பிற்கால நாடக ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது, இவரது நாடகங்கள் தேவையற்ற வர்ணனைகள் இன்றி, மிகச் சுருக்கமான மற்றும் வேகமான உரையாடல்களைக் கொண்டவை.நாடகத் தொடக்கம்: வழக்கமான சமஸ்கிருத நாடகங்கள் போலன்றி, ‘நாந்தி’ (மங்கள வாழ்த்துப் பாடல்) முடிந்தவுடனேயே சூத்திரதாரன் (நாடகப் இயக்குனர்) மேடைக்கு வந்து கதையைத் தொடங்கிவிடுவார்
***
7.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1912 ஆம் ஆண்டு) தி. கணபதி சாஸ்திரிகள் என்பவரால் திருவிதாங்கூர் பகுதியில் 13 நாடகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கண்டு பிடிக்கப்கப்பட்து மிகவும் பிந்தியகாலம்; மேலும் பிறமொழிகளிலோ இந்திய மொழிகளிலோ உடனே மொழிபெயர்க்கப் படவில்லை; இவை உண்மையிலேயே பழைய நாடகங்கள்தானா? ஏன் கேரளத்தில் மட்டும் கிடைத்தது? என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன; ஆகையால் காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நாடகத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி இவரது நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை ; உண்மையில் ஸ்வப்னவாசவதத்தம் மிகவும் சிறப்புடையது.
***
8. ஸ்வப்னவாசவதத்தம் முதலிய சில நாடகங்கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டன எல்லா நாடகங்களும் மொழிபெயர்க்கப்படவில்லை ; மொழிபெயர்ப்போரும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கின்றனர் ; ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து மொழிபெயர்க்கவில்லை
***
பாஸாவின் காலம் குறித்துப் பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லும் காலம்:
பிடே, தீட்சிதர், கணபதி சாஸ்திரி, ஹரிப்பிரசாத் சாஸ்திரி – BCE கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றா ண்டு வரை ;
ஜஹாங்கிர்த்தார், குல்கர்னி, செம்பவனேகர்- BCE கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ;
செளத்ரி , ஜெயஸ் வால், துருவ – BCE கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு;
லிண்டனோவ், சரூப், கோனோவ் வெல்லர் – CE.கி.பி.இரண்டாம் நூற்றாண்டு;
பானர்ஜி, பண்டார்கர், ஜாகோபி, ஜாலி, கீத் – CE> கி.பி.மூன்றாம் நூற்றாண்டு;
***
10. நாடகமே உலகம் என்று பலரும் பிற்காலத்தில் சொன்ன பொன்மொழி, கடவுள் ஒரு குழந்தை, காதலன், நண்பன் என்ற பொன்மொழி. நீதி நெறியுடன் மன்னன் ஆண்டால் புலிப்போத்தும் புல்வாயும் ஒருதுறையில் நீருண்ணும் என்னும் பொன்மொழி முதலியன 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாஷா நாடகங்களில் காணக்கிடக்கின்றன :
பாஸா133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1133 Beautiful Quotations (Subhashitas) of Playwright Bhasa – Part 1
Post No. 1050; Dated 18th May 2014
(Earlier on 18th April 2014, I posted under the title “Beautiful quotations from a Great Playwright”; Post No. 987. Following post is more comprehensive and 133 quotations are arranged subject wise.)
133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1
18 May 2014 — GOD 1.God owns everything in the universe, but keeps nothing for himself; He is the supreme renouncer. 2.God is our soul refuge, there is no …
133 Beautiful Quotations of Bhasa – Part 2
19 May 2014 — 133 Beautiful Quotations of Bhasa. DHARMA 76.Dharma is the foundation of universe. 77.Who in this world can ultimately survive his own misdeeds …
Missing: Playwright | Show results with: Playwright
Beautiful Quotations from a Great Playwright
18 Apr 2014 — Compiled by By London Swaminathan Bhasa is one of the greatest playwrights of the world. Beautiful Quotations from a Great Playwright | Tamil …
Missing: 133 | Show results with: 133
–subham—
Tags- பாஸா நாடகங்கள் ,10 கேள்விகள், பொன்மொழி, ஸ்வப்னவாசவதத்தம்