Tamils have no Tamil Names for 12 Months:25-Purananuru wonders-25, Tamil Encyclopedia-65 (Post.15,729)

Written by London Swaminathan

Post No. 15,729

Date uploaded in London –12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 508 Poverty

Here in Puram verse 69 composed by Ālathūr Kizhār we get some interesting information about the appearance of a bard suffering from poverty. He is a musician with Yaaz (Veena like instrument). He is wearing torn clothes. The bards led a nomadic life.

***

Item 509 Wealth of Kings

In the next few lines, we see a quite contrasting scene with king wearing golden chains, sitting at Uraiyur with big shining mansions. Also bloddy scenes from battles are described. One more interesting point is kings saw saints and bards without waiting.

***

Item 510 Golden Lotus

Kings used to give Golden Lotus to bards. It is in other poems as well.

***

Puranānuru 69, Poet: Ālathūr Kizhār sang for Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

1
O bard who is sad!  You carry a yāzh used to playing perfect music.
Your body is hungry, since you do not have a patron.  The clothes
around your waist are darned and soaked in sweat.  You protect and
wear them.  You have a large family that is depressed like the body
of a man with no will.  Since you have travelled around the world
and you ask me gently, I will tell you.

2

The battle elephants of kings are in pain in a camp with flags,
while other elephants have been cut down and they lie in pools of
blood, his army has caused flesh to stink, the King of Uranthai with
shining mansions, who raises his spear against advancing warriors
and he is ready to march into the lands of his enemies!

If you go and see Killivalavan who wears a fine garland and lovely
gold ornaments that flash like fire, you will not have to wait at
his tall gate without seeing him donate chariots at harsh noon time

3
in his court.  You will not fail to gain a golden lotus flower upon
which bees that swarm on flowers do not buzz!

(Vaidehi Herbert’s translation is used; thanks

***

Notes:  Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 226, 227, 228, 373, 386, 393 and 397 were written for this Chozha king who wrote Puranānūru 173.  Ālathūr Kizhār who came from a town called Ālathūr, wrote Puranānūru 34, 36, 69, 225 and 324.  

****

புறநானூறு 69, பாடியவர்: ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், திணை: பாடாண், துறை: பாணாற்றுப்படை

1

கையது கடன் நிறை யாழே, மெய்யது
புரவலர் இன்மையின் பசியேஅரையது
வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்  5
பெரும் புல்லென்ற இரும்பேர் ஒக்கலை
வையகம் முழுதுடன் வளைஇப் பையென
என்னை வினவுதி ஆயின்,

2

மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறைக்
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்,  10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன், தகைத் தார்
ஒள் எரி புரையும் உருகெழு பசும்பூண்  15
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,

3
நெடுங்கடை நிற்றலும் இலையே கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற்கண்ட பின்றைப் பூவின்
ஆடு வண்டு இமிராத் தாமரை  20
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

****

Item 511 Snskrit names for Tamil Months

Kōvūr Kizhār copied the greatest poet Kalidasa in Puram verse 70

Tamils have no names in Tamil for 12 months. All the names we use now for 12 so called Tamil months are Sanskrit names. In some cases they are Tamilized. Kanchi Shankaracharya (1894-1994) who was a great linguist, has explained the names of all the 12 months. No one could have any doubt because we get Panguni in Akananuru 137, Karthikai in other poems. Silappadikaram also used Sanskrit month. This shows ancient Tamils considered Tamil and Sanskrit as two eyes of a man. More over all the Tamil dictionaries and Nikandus have more Sanskrit words than Tamil.

***

Item 512 Bee= Six Legged Bird

This poem shows that Kovur Kizar as a great Sanskrit scholar. He not only used Sanskrit Thai, but also used Six Legged Bird (bee) of Kalidasa.

***

Item 513 Interesting Folklore- Gold Diggers

Hindu folklore is full of finding gold in the middle of the forest. This is used as a simile here. They always add those gold are protected by snakes. There are two reasons for it:1. Gold is found as nuggets in many places in those days. Now they were all exploited by gold diggers. 2.Tamils have a proverb Tamilan puthithuk kettan—meaning Tamils spoiled themselves by burying (treasures). In those days there were no banks or lockers in villages So they buried the treasure and told no one. After their death, some lucky person stumble on it.

***

Item 514

Another notable point is the appearance of a drum held by the bards.

like a pond tortoise strung
on an iron rod

***

Puranānuru 70, Poet: Kōvūr Kizhār sang for Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan,

1

O bard with ancient wisdom carrying a small yāzh with
honey-sweet music!  You show me sweetly your clear-eyed
kinai drum tied with sticks like a pond tortoise strung
on an iron rod,
 and urge me strongly to rest here a little.

2

Killivalavan is the lord of a fine country with abundant
rice and water.  His huge city is filled with food
and there is constant abundance like a Thai month pond whose
level never goes down despite taking.  There are only kitchen
fires and no war fires.  Go to him thinking of his renown.

3

If you travel leisurely and quietly with your female dancer,
her forehead glowing, her smile sweet, adorned with pāthiri
flowers from Sirukudi of Pannan who gives very generously,
where six-legged bees buzz on small white waterlilies desiring
fragrance, you will become rich. 

4

Do not think that his
generosity is not a rare matter, like woodcutters going to the
forest to cut wood finding gold. 
  May his efforts prosper!

Notes:  Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 173, 226, 227, 228, 373, 386, 393 and 397 were written for this Chozha king.   Kōvūr Kizhār wrote Puranānūru 31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386 and 400.  He hailed from Kōvūr town in Thondai Nadu.  It is presently in Chengalpattu district. 

****

புறநானூறு 70பாடியவர்: கோவூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: பாடாண்துறை: பாணாற்றுப்படை


தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க இவண் தணிக எனக் கூறி,
வினவல் ஆனா முதுவாய் இரவல!  5

1
தைத் திங்கள் தண் கயம் போலக்,
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியன் நகர்,
அடு தீ அல்லது சுடு தீ அறியாது,
இரு மருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி,  10

2
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறு குடிப்
பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச்  15
செல்வை ஆயின் செல்வை ஆகுவை

3
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை,
நினைக்க வேண்டா, வாழ்க அவன் தாளே.

****

Item 515 Bhutapandyan

In Puranānūru 71, we come across the pandya king

Bhuta pandyan. This name is also found in alupa kings of Karnataka. Also we come across a queen, whose husband was Bhuta pandyan; see Puranānūru 246. This is a Sanskrit name. also note devi is used in verse 246.

Item 516 Names of dear friends

The king gives us a list of his dear friends that makes interesting reading.

May I lose the great joy in the company of my friends who
are as precious to me as my own eyes – Māvan who is the ruler
of Maiyal town and cities surrounded by the famous Vaiyai
River with abundant riches and unending prosperity, Ānthai
of long established Eyil town, Anthuvan Sāthan of great
renown, famous Āthan Azhisi, Iyakkan with intense rage
and others!

Also we get the names of river and towns.

***

Item 517 Dhama Sabhai and rebirth and Patriotism

The king makes two more points. His assembly is a place of Justice. Rig Vedic Sanskrit word Sabha is used in the poem. All over India B=V are interchangeable and so we see Avai in Tirukkural and Sangam literature.

Another point is rebirth. He makes a vow that he would be born in a country that is not Pandya country. This shows his patriotism and loyalty towards his mother land. This shows his belief in rebirth as well.

***

Puranānūru 71, Poet: King Ollaiyur Thantha Poothappandiyan, Thinai: Kānji, Thurai: Vanjina Kānji


They say that kings enraged like lions and owning
armies that do not succumb have formed a federation,
and announced that they will go into battle against me.

If I do not assault them so that I can hear their scream
in harsh battles as they show their backs and flee in their
chariots, may I separate from my wife with large, calm
kohl-lined eyes!  And in my kind court that does not sway
from justice, let me install someone unworthy and rule with
a weak scepter, moving away from righteousness!

May I lose the great joy in the company of my friends who
are as precious to me as my own eyes – Māvan who is the ruler
of Maiyal town and cities surrounded by the famous Vaiyai
River with abundant riches and unending prosperity, Ānthai
of long established Eyil town, Anthuvan Sāthan of great
renown, famous Āthan Azhisi, Iyakkan with intense rage
and others!

May I no longer reign as king of this southern land, known
for its ancient lineage and protection to its citizens!  May
I be born into a family that protects the dry lands of others!

*1**

புறநானூறு 71பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், திணை: காஞ்சிதுறை: வஞ்சினக் காஞ்சி


மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,
என்னொடு பொருதும் என்ப, அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப் புறங்காணேன் ஆயின், சிறந்த  5
பேரமர் உண்கண் இவளினும் பிரிக,

2
அறன் நிலை திரியா அன்பின் அவையத்துத்
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலி கோல் செய்தேன் ஆகுக, மலி புகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்  10

3
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும்உரை சால்
அந்துவஞ்சாத்தனும் ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்,
கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த  15
இன் களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇப்பிறர்

4
வன்புலம் காவலின் மாறி யான் பிறக்கே.

****

Item 518

Puram verse 72 was composed by a famous king called Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan. The battle of Thalaiyālankānam as famous as Venni Battle where Choza Karikalan defeated many kings and Velirs. Here the young Boy King defeated many kings.

His story is in Thiru Vilayadal Puranam which says Lord Siva helped him. I have pointed out in my research articles on Tiru Vilayadal Puranam of Madurai.

***

Item 519 Proof for Tamil Sangam

Sangam is a Sanskrit word which we see from Panini days to modern times. Arthasastra of Kautilya/ Chanakya also mentioned Sangam(Association). But Tamil Tolkappiar banned all Sa beginning words in Tamil. So scholars were wondering what the association was called in Sangam period. We can only guess. But Nedunchezian in this verses says there was a group of poets under the leadership of Mangdi Maruthan. He was the author of the longest Sangam poem Madurai Kanchi.

Puranānūru 72, Poet: King Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan, Thinai: Kānji, Thurai: Vanjina Kānji

1


They cause me anger, those who say, “They are laughable
who praise his land.  He is too young.” 

They also say,
“We have fine, tall elephants with wide feet and huge legs
that wear tinkling bells, chariots, horses and able warriors.”
They have no fear and they are filled with fury as they
utter disparaging words.

If I do not attack those enraged kings, who don’t fear my strength,
in harsh battles and ruin their drums, may my citizens who live under
the protection of my shadow no longer see any shade!  Let them cry and
and blame me as a cruel king and insult my office! 

3

 Poets with great skill,
their leader Mānkudi Maruthan with his vast and great learning, as well
as others firmly established in this earth, let them leave my
country and sing no more about it!  May I lose wealth and become
unable to help those who come to me in need, and remove their sorrow!

Notes:  This is the only poem written by this king.  Puranānūru 18, 19, 23, 24, 25, 26, 76, 77, 78, 79, 371 and 372 were written for this king.   He defeated the Chera and Chozha kings along with five Vēlir kings in a battle at Thalaiyālankānam in the Chozha country.   

1

***

புறநானூறு 72பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்திணை: காஞ்சிதுறை: வஞ்சினக் காஞ்சி

2
“நகு தக்கனரே, நாடு மீக்கூறுநர்,
இளையன் இவன்” என உளையக் கூறிப்,
“படுமணி இரட்டும் பாவடிப் பணைத் தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம்” என்று   5
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,  10
“கொடியன் எம் இறை” எனக் கண்ணீர் பரப்பிக்
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக,

3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,

3உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்  15
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

To be continued

Tags- No name for months in Tamil, Sangam, Mangudi Maruthan, Item 519, Tamils have no Tamil Names for 12 Months:25Purananuru wonders-25, Tamil Encyclopedia-

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,728)

Written by London Swaminathan

Post No. 15,728

Date uploaded in London –12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்

மூலவர் – த்ரிவிக்ரமன், தாடாளன், உலகளந்த திருவுருவம், நின்ற திருக்கோலம், கிழக்கே ஸகல வசதிகளும் உண்டு.

உத்ஸவர் – த்ரிவிக்ரம நாராயணன்.

தாயார் – மூலவர் – லோகநாயகி. உத்ஸவர் – மட்டவிழ்குழலி.

தீர்த்தம் – சங்கபுஷ்கரிணி, சக்ரதீர்த்தம்.

விமானம் – புஷ்கலாவர்த்த விமானம்.

ப்ரதயக்ஷம் – அஷ்டகோண மஹர்ஷி.

விசேஷங்கள் – பெருமாள் இடதுகாலைத் தூக்கி விண்ணை அளக்கிறார். இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் “கடியுண்டநெடுவாளை” என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார் என்று ஒரு செய்தி உள்ளது . ஆனால் இருவர் வாழ்ந்த காலமும் வெவ்வேறு என்பதால் சைவர்கள் இந்தக் கதையை மறுக்கின்றனர்  

செல்வ தெய்வநாயகன் ஸந்நிதியும் இங்கே உள்ளது.

சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். ‘தாள்’ என்றால் ‘பூமி அல்லது உலகம்’, ‘ஆளன்’ என்றால் ‘அளந்தவன்’ என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு “தாளாளன்’ என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது.

ஒருசமயம் கோயில் இருந்த இடம் பாழ் பட்டுப்போனது. அப்போது கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.

மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று  மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.

உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

ப்ருஹ்மாவுக்கு தன் ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்ட பொழுது, ரோமசமுனிவர் “உன் ஆயுசும் என் ஒரு ரோமமும்” ஸமம் என்று சொல்லி அவர் கர்வத்தை அடக்கின ஸ்தலம்.

இங்கு விஷ்ணு திரிவிக்கிரம பெருமாளக காட்சியளிக்கிறார். வாமன அவதாரத்தில், வாமனன் மன்னன் மகாபலியிடம் மூன்றடி நிலத்தைக் கேட்டார், பின்னர் அவனது அளவை அதிகரித்து, ஒரு படியால் வானத்தையும், இரண்டாவது படியால் பூமியையும் மூடினான். இந்தக் கோவிலில், விஷ்ணு தனது இடது காலை உயர்த்திக் காட்டுகிறார் –

***

விஷ்ணு நகரம் அல்லது நித்திய இடத்தைக் குறிக்கும் ஆறு இடங்கள் விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றன. அவை: திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்), நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), அரிமேய விண்ணகரம் (நாங்கூரில் உள்ள குடமாடு கூத்தன் கோயில்), வைகுண்ட விண்ணகரம் (நாங்கூரில் உள்ள வைகுண்டநாதர் கோயில்) பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சிபுரம்).

***

இக்கோயிலில் கோதண்டராமருக்கு தனி சன்னதி உள்ளது.

திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி வாசலிலேயே இறங்கலாம்.

மங்களா சாஸனம் -திருமங்கையாழ்வார் – 1178-1187 – 10 பாசுரங்கள்.

***

திவ்யதேச பாசுரங்கள்

1178.  

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*

ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*

தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)

1179.  

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*

நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*

எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1180.  

வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*

நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*

செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1181.  

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*

நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*

செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1182.  

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*

வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*

செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.  

1183.  

பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*

வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*

திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1184.  

பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*

செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*

தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.        

1185.  

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*

மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*

பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.

1186.  

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*

கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.   

1187.  

செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*

அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)

***

திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு அருகே உள்ள ஒரு பழைமையான வைணவத் தலம். இது 108 திவ்ய தேசங்களில் 7-வது தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தொடர்புடைய சிறப்பான தலமாகவும் விளங்குகிறது.

:தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், திருவையாறிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் குடமுருட்டி மற்றும் வெண்ணாறு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

வேறு பெயர்கள் கண்டன ஷேத்ரம், பஞ்சகமல ஷேத்ரம்

***

மூலவர்: ஹர சாப விமோசன பெருமாள் (நின்ற கோலம்).

தாயார்: கமலவல்லி நாச்சியார்.

சிவன், பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெருமாளை வணங்கிய தலம். எனவே, இத்தலம் ‘கண்டன க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.மூர்த்திகள்: இங்கு மும்மூர்த்திகளான சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருப்பது சிறப்பாகும்.

தீர்த்தம்: கபால மோட்ச புஷ்கரணி.

திருக்குளம் / ஆறு    கபால மோட்ச புஷ்கரிணி, ஹத்யா விமோசன தீர்த்தம், பத்ம தீர்த்தம் (பலி தீர்த்தம்)

ஆகமம்   வைகானச ஆகமம்

வழிபாடு  நான்கு கால பூசை

திருவிழாக்கள்  பங்குனியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்

சிற்பங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் .

தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது.

சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்திதலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு பிரம்மா மற்றும் ஸரஸ்வதி சிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர்.

திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத்தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன்மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.

. மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார் எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.

***

 

திருக்கண்டியூர்   பாசுரங்கள்

பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-

உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-

கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-

மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)

***

திருவையாறில் அமைந்துள்ள (தேவாரத்தில்) பாடப் பெற்ற பஞ்சனாதீஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தானங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே திருக்கண்டியூர் வீரட்ட சிவாலயம், சைவ-வைணவ ஓற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது ! சிவாலயத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதி தேவிக்கும் சன்னிதிகள் உள்ளன.

***

திருக்கண்டியூருக்கு அருகே கல்யாணபுரம் என்ற பசுமையான கிராமத்தில் கல்யாண வேங்கடசுவரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னனின் துணைவியின் (பெயர்: கல்யாணி) நினைவாகவே கல்யாணபுரம் என்ற பெயரை இக்கிராமம் பெற்றது என்று கூறப்படுகிறது.

வருடம் முழுதும், இக்கோயிலில் விழாக்களும், உத்சவங்களும் நடைபெறுகின்றன. சித்திரையில் வசந்த உத்சவமும், அட்சய திருதியையும், வைகாசியில் விசாக உத்சவமும், நவராத்திரியும், தீபாவளியும், கார்த்திகையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தினமும் கருடசேவை நடைபெறுகிறது!

To be continued……………………………….

Tags- சீர்காழி , திருக்கண்டியூர், ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தாடாளப் பெருமாள் கோவில், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21, திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள்

ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி – பல்துறை கண்ட வித்தகர் (Post.15,727)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,727

Date uploaded in London – 12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

சப்தரிஷிகள் வரிசையில் நான்காவது ரிஷி! 

ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி – பல்துறை கண்ட வித்தகர் – சப்தரிஷிகளின் வரிசையில் நான்காவது ரிஷி! 

ச. நாகராஜன்          

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

 அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

 இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி. 1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி ஆர் எஸ் எஸ்ஸின் பிரசாரகராக ஆகி திருமணம் செய்யாமலேயே தன் வாழ்க்கையை சங்கப் பணிக்கு அர்ப்பணித்தார் அவர்.

 மஹாராஷ்டிர மாநிலத்தில் விதர்பா பகுதியில் வர்தா மாவட்டத்திலுள்ள ஆர்வீ நகரில் 1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் நாளன்று பாபுராவ் தாஜீபா தெங்கடி என்பவருக்கும் ஜானகீ பாயி அம்மையாருக்கும் தத்தோபந்த் தெங்கடி பிறந்தார்.

  இள,மையிலேயே சுறுசுறுப்பாகவும் தேசபக்தியுடனும் திகழ்ந்த தெங்கடி மிக இளம் வயதிலேயே வானர சேனை என்று ஒரு சேனையை அமைத்தார்.

படிப்பில் சூரராகத் திகழ்ந்த இவர் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டம் (எல் எல் பி) மற்றும் முதுகலை (எம்.ஏ) பட்டங்களைப் பெற்றார். 

குருஜி கோல்வல்கரின் தொடர்பில் வந்த அவர் ஏராளமான இயக்கங்களை நிறுவினார். பாரதிய மஸ்தூர் சங் (1955ல் நிறுவப்பட்டது), பாரதிய கிஸான் சங் (1979ல் நிறுவப்பட்டது), ஸ்வதேசி ஜாகரன் மஞ்ச் உள்ளிட்ட பல இயக்கங்களை ஆரம்பித்தார். அத்துடன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்  இணை நிறுவனராகவும் திகழ்ந்தார்.

தெங்கடி பாரதிய ஜனசங்கத்தின் சார்பில்  இரு முறை ராஜ்ய சபை உறுப்பினராகத் திகழ்ந்தார்.

 தொழிலாளர் மேம்பாடு, மாணவர் மேம்பாடு என பல துறைகளிலும் அவர் ஆற்றிய பணியைப் பார்த்து நாடே வியந்தது.

பிரதமர் வாஜ்பாயி அவர்களின் ஆட்சிக் காலத்தில் 2003ம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்க மத்திய அரசு முன்வந்தபோது அதைப் பெற அவர் மறுத்து விட்டார். 

சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் முன்னுரைகளை எழுதியுள்ளார்.

 சங்கேத ரேகா மற்றும் தேர்ட் வே என்ற அவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் புத்தகங்களாயின.

கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருடனும் அன்புடன் பழகி வந்த அவரை அனைவரும் மதித்துப் போற்றினர்.

தனது வாழ்நாளில் ரஷியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

1989ம் ஆண்டிற்குள் பொதுவுடமை வாதம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று அவர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கணித்து கூறியபடியே கம்யூனிஸம் ஒரு முடிவுக்கு வந்தது.

 நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது தலைமறைவாகி இயக்கத்தைத் திறம்பட வழிகாட்டி அவர் நடத்தினார்.

தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான போனஸ் வழங்கப்படவேண்டும் என்று குரலெழுப்பி அதற்காகப் போராடி வெற்றி பெற்றார் அவர்.

அவரது வாழ்க்கையில் ஏராளமான அதிசயிக்கவைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1989ம் ஆண்டு தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சி மஹாபெரியவரை சந்திக்கச் சென்றார். அப்போது மௌனவிரதம் மேற்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்த பெரியவாள் இவருடன் மட்டும் பேசியதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

ஶ்ரீ தெங்கடி அவர்கள் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதியன்று புனேயில் காலமானார். 

இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார். 

சப்தரிஷிகளில் முதல் நான்கு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த மூன்று ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.

 விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 64 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும். 

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 62; இந்து மத கலைச்சொல் அகராதி-62 (PostNo.15,726)

Written by London Swaminathan

Post No. 15,726

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted yesterday.

மங்களாசாசனம்

தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பட்ட விஷ்ணு/ பெருமாள் கோவில்களை   மங்களாசாசனம் செய்யப்பட திருத்தலங்கள் என்று அழைப்பார்கள் . இந்த ஆழ்வாரால் அல்லது ஆழ்வார்களால் என்று பெயர் சொல்லி இந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள்; ஆழ்வார்கள் பாடல்கள் அனைத்தும் திவ்யப்பிரபந்தத்தில் உள்ளது அவர்கள்  பாடிப்பரவிய தலங்களை 108 திவ்ய தேசங்கள் என்று பட்டியலிட்டுள்ளனர்; குமரி முதல் இமயம் வரையுள்ள இந்தத்தலங்களில் பரமபதம் என்னும் வானுலக தலத்தை மட்டும் பக்தர்கள் மனித உடலில் காண முடியாது.

***

மதயந்தி

செளதாச என்ற அரசனின் மற்றோரு பெயர் கல்மாஷபாதன்; அதாவது கரிகாலன் ; இவர்களுடைய கதை புராணங்களிலும் மகாபாரதத்திலும் உள்ளது.வசிஷ்ட முனிவரின் சாபத்தால் உடல் நிலை மாறியபோதும் அவனிடம் அன்பு பாராட்டிய கற்புக்கரசி மதயந்தி ; அவர்களுக்குப் பிறந்த குழந்தை அஷமாக. மதயந்திகா என்றால் மருதாணி என்று பெயர்; சிலர் இரண்டினையும் தவறாக எண்ணி குழம்புவார்கள். தமயந்தி – நளன் ஆகியோருடனும் குழம்பிக்கொள்ளக் கூடாது.

***

மதுரை

தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ; கடைச் சங்க காலம் முதல் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றிலும் இலக்கியத்திலும் உள்ள பெயர் ; சங்கப்புலவர் இருந்தது இந்த இடம்தான் என்பதற்குச் சான்றாக அதிகமான புலவர்களின் பெயர்களுடன் மதுரை இணைக்கப்பட்டுள்ளது; தற்போது உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர்  என்ற பாடல் பெற்ற சிவன் கோயிலாலும் ஆண்டு  தோறும் நடக்கும் சித்திரைத் திரு விழாவினாலும் மங்காத புகழுடன் விளங்குகிறது பாண்டிய மன்னர் முதல் நாயக்க மன்னார் வரை வளர்த்த கோவில் இது.

***

மலையாளம்

ஒரு மொழியின்  மற்றும் அந்த மொழி புழங்கும் மாநிலத்தின் பெயர் ; பழங்காலத்தில் சேரநாடு என்றும் தற்போது கேரளா என்றும்    அழைக்கிறோம். தமிழ் மொழியின் சகோதர மொழியான மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குப்பின்னால் தோன்றியது ; எழுத்தச்சன் ராமாயணம் முதலிய இலக்கியங்கள் உடைத்து. 

***

மலய பர்வதம்

மேற்குத்தொடர்ச்சி மலை என்றும் சம்ஸ்க்ருதத்தில் சஹ்யாத்ரி என்றும் இதற்குப் பெயர் ; அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலை இதன் ஒரு பகுதிதான்.

***

மதுரா

கிருஷ்ணர் பிறந்த இந்த நகரம் உத்தர பிரதேசத்திலுள்ள புனித நகரம் ஆகும்; இந்துக்களின் புனிதமான ஏழு நகரங்களில் ஒன்று; ராமர்ப்பிறந்த அயோத்தி கோவில் போலவே கிருஷ்ணர் பிறந்த மதுராவுக்கும் பக்தர்கள் வரத்து அதிகம்; இதைச் சுற்றியுள்ள பிருந்தாவனம் கோகுலம் என்பன பக்தர்களின் புண்ய பூமி ஆகும்.’

***

மஹா பாரதப் போர்  &  மஹா பாரதம்

மஹா பாரதம், உனக்கிலேயே நீளமான புஸ்தகம் ; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடையது; வியாசரால் எழுதப்பட்ட இந்த நூலில் இல்லாத விஷயம் உலகில் இல்லை என்று ஒரு பொன்மொழி உள்ளது. பகவத் கீதை இதில் ஒரு அத்தியாயத்தில் உள்ளது மொத்தம் பதினெட்டு பருவங்களை உடைய இந்த நூல் சம்ஸ்க்ருத மொழியில் இருக்கிறது .

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நடந்த சண்டை குருக்ஷேத்ரம்  என்னும் புண்ய பூமியில் நடந்தது இது தற்கால ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது. மஹாபாரதப்போரில் பங்குகொண்ட தேசங்கள் மற்றும் மன்னர்களின் பெயர்களைப் பார்க்கையில் இது பெரிய யுத்தம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இரும்பு, குதிரை ஆகியவற்றைக் குறிப்பிடுவதால் BCE1500  வாக்கில் நடந்ததாக பெரும்பாலான ஆராய்சசியாளர்கள் வாதிடுகின்றனர் ; இந்துக்களோவெனில் கலியுகம் துவங்குவதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்ததாக எழுதியுள்ளனர் கலியுகம் துவங்கியது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்; அதாவது கி மு 3102 BCE.

***

மஹா பாஷ்யம்

பதஞ்சலி முனிவர் எழுதிய இலக்கண உரை இது ; பாணினியின் இலக்கணத்துக்கு உலகில் எவ்வளவு பெருமை உண்டோ அவ்வளவு பெருமை இதற்கும் உண்டு 2150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் பாணினியின் அஷ்டாத்யாயி நூலுக்கு எழுதிய உரை மஹா பாஷ்யம் ஆகும்; இதில் அவர் இலக்கணம் தவிர வேறு நிறைய விஷயங்களையும் தருகிறார். அவர் காட்டும் உதாரணங்களால் அக்கால அரசியல் நிலை, பண்பாடு , சமயம் முதலிய பல விஷயங்களை  அறிய முடிகிறது .

***

மஹா மகம்

கும்ப கோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெரிய பண்டிகை ; தென்னாட்டின் கும்ப மேளா என்றும் பெயர் ; குடந்தையில் கும்பேஸ்வரர் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஸ்னாநம் செய்யும் விழா அடுத்த முறை மார்ச் 9, 2028-ல் நடக்கும். குரு என்னும்   வியாழன் கிரகம் சிம்ம ராசியில் நுழையும் போது இது கொண்டாடப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண தேவ ராயர் விஜய நகரத்திலிருந்து இந்த விழாவுக்கு வந்து ஸ்நானம் செய்ததைக் கல்வெட்டுகள் விளம்புகின்றன.

***

மாயா

மாயை என்று தமிழில் சொல்லுவோம் ; இல்லாத ஒன்றினை இருப்பதாக நினைப்பது மாயை; மாயா ஜாலம் என்றும் மாஜிக் காட்சிக்குப் பெயர் ; இந்த உலகம் என்பதே மாயத் தோற்றம் என்பது ஆதிசங்கரின் அத்வைத வாதம் கூறும்; பாம்பினை கயிறு என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் தவறாக கருதி நாம் அஞ்சுவதை உதாரணமாகக் காட்டுகிறார் அவர் .

***

மகமாயி / மஹா மாயா

சக்தி தேவிக்கு இப்படி ஒரு பெயர்  ; இந்த உலகினையே நமக்கு மாயத்nதோற்றத்தில் காட்டுபவர் அவர்; தமிழர்கள் இவரை மகமாயி என்றும் மாரியாம்மன் என்றும் அழைக்கிறார்கள் ; அம்மை நோய் வந்தால் மகமாயி வந்திருக்கிறாள் என்று சொல்லி அந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டித் தொங்க விடுவார்கள்; நோய் குணம் ஆனவுடன் அருகிலுள்ள கிராம தேவதை கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவார்கள் .

***

யோகமாயா

கம்சனைக் கொல்வதற்கு ஒரு ஆண் குழந்தை  பிறக்கப்போகிறது என்று ஆரூடம்/ அசரீரி வந்ததால் அவன் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று வந்தான்; தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை கிருஷ்ணன் ; அவளுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன், வாளால்  குழந்தையை வெட்டப்போன போது அக்குழந்தை வானில் தோன்றி மறைந்தது உண்மையான கிருஷ்ணனை வேறிடத்துக்கு மாற்றியது ; கம்சனுக்கு முன்னர் தோன்றிய யோகமாயா கம்சனுக்கு இறுதி எச்சரிக்கையையும் விட்டுச் சென்றது .

To be continued…………………

Tags- மகமாயி , மஹா மாயா, மங்களாசாசனம்,HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 62; இந்து மத கலைச்சொல் அகராதி-62

Tirukkural Encyclopaedia- Chapter Four (Kural 31 to 35) Post.15,725

Written by London Swaminathan

Post No. 15,725

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

These five couplets show that Tiru Valluvar was great Sanskrit scholar. In Kural 34, he used Sanskrit Manam, Akulam (vyaakoolam) .

In Kural 35, he used Sanskrit expression. Listing some things one by one and then saying these ….. is from Sanskrit Subhasitas and Niti Sataka of Bhartruhari.  Before Tirukkural, we don’t see it in Sangam literature. In Bhagavad Gita, this is the style Lord Krishna follows. No doubt Valluvar was a great Hindu!

***

Part 7

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Tiru Valluvar with his wife Vasuki.

Chapter 4 The Might of Virtue or Aram/Dharma or The Importance of Virtue

31.It is the spirit of righteousness that flings open the doors of heaven and unlocks the treasures of the earth; what else does profit man mor than righteousness? — ANM+2

***

31.What more does a man require than virtue, which ends the cycle of births,

And also confers contentment through wealth and fame – SMD

***

31.
It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?– GUP.

***


From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?  – SB       31

***

31.What brings glory to a man than righteousness?  It gives prosperity ( on earth) and also happiness ( in heaven) –EVS.

***

31.Than virtue true what greater good is there for man

It gives eternal bliss and temporal wealth -HAP

***

Tamil Original

31. சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தினுஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Vasuki Miracle- The pot is hanging in the middle of the well; for her, Husband is God. When he called her she came  running leaving the pot halfway through the well. It is still there without going down.

32.To dwell in the spirit of the higher law of your being is life, but to forget it is death itself — ANM+2

***

32.A man’s adherence to virtue raises him to  great heights;

His failure brings him down – SMD

***
32.
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it. — GUP.

***

Virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.   – SB      32

***

32.There is no greater good than the practice of virtue; nor is greater evil than the neglect of it –EVS.

***

32. Than virtue, greater good doth not exist;

No greater ill than to lose it -HAP

***

32. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

33.Be unwearied in your service in the cause of righteousness and pursue its spirit wheresoever it guides you — ANM+2

***

33.Do all the good you can, at all times and places,

And in all the ways possible – SMD

***
33.
To finish virtue’s work with ceaseless effort strive,
What way thou may’st, where’er thou see’st the work may thrive.
As much as possible, in every way, incessantly practise virtue. — GUP.

***
Perform good deeds as much you can
Always and everywhere, o man!  – SB       33

***
33.Do good dees unceasingly, as far as you are able, by thought word and deed –EVS.

***

33.By every means, by every way you can,

With never halt, live virtuously- HAP

***

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

34.Be spotlessly pure in your heart; verily everything is in this one commandment; all else is nothing but a vain show and a hollow symbol — ANM+2

***

34.A blemish less mind is the basis of all virtue;

Everything is empty show – SMD

***
34.
Spotless be thou in mind! These only merits virtue’s name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show. — GUP.

***

In spotless mind virtue is found
And not in show and swelling sound. – SB        34
***

34. To be of pure, spotless mind is real virtue; all else is of no avail –EVS.

***

34.Be pure in mind, for that true Virtue is;

All else is merely sound and sham- HAP

***

34. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

35.Steer clear of envy, lust, wrath and bitter speech in your short sojourn on earth; that is the only way to be virtuous ANM+2

***

35.Thoughts and deeds fee of envy, greed, wrath and

Bitter words alone, constitute virtue – SMD

***
35.
‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,
Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech. — GUP.

***

Four ills eschew and virtue reach,
Lust, anger, envy, evil-speech.   – SB      35
***

35.To be free from envy, greed and anger and bitter words is virtue –EVS.

***

35.Envy, greed, anger , bitter words- these four

Avoiding, and then pressing on, is Virtue true- HAP

***
35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

To continued……………………

Tags- Part 7, Tirukkural Encyclopaedia, Chapter Four (Kural 31 to 35), Vasuki Miracle, Tiruvalluvar

கங்கை நதி பற்றி வியத்தகு புதிய தகவல்! 1117 மூலிகைகள்! 935 மருந்துகள்! (Post.15,724)

Written by London Swaminathan

Post No. 15,724

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கங்கைக் கரையில் வசிப்பவன் நீர் பெறுவதற்கு ஊற்று தோண்டுவது மடமை ; வைரச் சுரங்கத்துக்கு வருபவன் தாவர குந்துமணிகளை நாடுவதும் மடமை அன்றோ !

சுவாமி விவேகாநந்தர் 

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தவும் , கரையோர தாவரங்களைக் கணக்கிட்டு  அவைகளைப் பாதுகாக்கவும் , சாக்கடை நீர் கலப்பத்தைத் தடுத்து கங்கை மாதாவுக்கு புத்துயிர் அளிக்கவும் 2014 ஆம் ஆண்டிலொரு திட்டம் துவங்கப்பட்டது ; இதற்கு மத்திய  அரசு ரூ.20000 கோடியை ஒதுக்கியது.

நமாமி கங்கே ( கங்கை அன்னைக்கு வணக்கம் ) என்று இந்த திட்டத்துக்குப் பெயர் . இதன் அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது ;அதன்படி 935 ஆயுர்வேத மருத்துகளைத் தயாரிக்கத் தேவையான 1117 மூலிகைகளும் தாவரங்களும் கங்கை நதி ஓரம் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுவிட்டது.

கங்கை நதி ஓரம் வளரும் தாவரங்கள் பற்றி நிறைய நாட்டுப்புற பாடல்களும் பழமொழிகளும் 200 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பதை அறிந்தும் கேட்டும் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அதை இந்து சமய மூட நம்பிக்கை என்று கருதி வாளா  இருந்துவிட்டனர்.

1914 ஆம் ஆண்டில் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் இயற்றிய சட்டம், ஆயுர்வேத மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது; இதனால் இந்துக்களின் மூவாயிரம் ஆண்டு மருத்துவ அறிவு மழுங்கிப்போனது.

நரேந்திர மோடி தலைமையில் அமைந்த அரசு 2014 ஆம் ஆண்டில் கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியைத் துவக்கி கங்கையை வணங்குவோம் என்ற முழக்கத்தை  முரசு கொட்டியது. கங்கை நதி ஓடும்  2525 கிலோமீட்டர் நெடுகிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது .

இதனிடையே 212 சாக்கடை நீர் சுத்திகரிப்பு திட்டங்களை உத்தரப்பிரதேச யோகிஜி அரசு துவக்கி சாக்கடை நீர்,  புனித கங்கையில் விழாமல் தடுத்தது ; அதற்காக 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தது.

சரகர் என்ற அறிஞர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை தோன்றும்  இடத்திற்கு அருகில் சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூலை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினார் . அவரையடுத்து வந்த சுஸ்ருதர் வாரணாசியில் கங்கைக் கரையில் அமர்ந்தே இன்னு மொரு நூலை எழுதினார்.

ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட்ட அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற நூல் கங்கை நதி நீரை  குளிர்ச்சியானது லேசானது , அமிர்தம் போன்றது என்று வருணித்தது.

2019 ஆம் ஆண்டில் ரூர்கியில் உள்ள ஐ ஐ டி நடத்திய ஆய்வு கங்கையின் தூய்மைப் படுத்தும்  சக்தி ஏனைய நதிகளை விட அதிகம் என்றது; இதற்கு இமய மலையிலுள்ள தாதுக்கள் மற்றும்  பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் உயிரினங்கள் இந்த நதியில் இருப்பது காரணம் என்று காட்டியது.

டாக்டர் ஹான்பரி ஹேங்கின் British physician E. Hanbury Hankin பிரிட்டிஷ் 1896 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சி செய்து அறிவித்தார். காலரா கிருமிகளை கங்கை நீரில் விட்டால் சில மணி நேரத்துக்குள் இறந்து விடுகின்றன அதே கிருமிகளை சுத்த மான சாதாரண நீரில் விட்டால் அவைகள் பல நாட்களுக்கு உயிருடன் உள்ளன என்றார்

தற்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட சில தாவரங்களின் பயனைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவார்கள் ; துளசி, வேம்பு, அசுவகந்தி, வல்லாரை முதலிய பல மூலிகைகளின் சக்தியைப் பாமர மக்களும் அறிவார்கள்; தற்போதைய ஆராய்சசிகள் அவைகளில் என்ன ராசாயனப் பொருள் உள்ளது என்ற மேல் விவரங்களை வெளியிட்டு வருகின்றது. கோவிட் நோய் பரவியபோது துளசிக்கு 400 சதவிகிதம் அதிக கிராக்கி ஏற்பட்டது .

குப்தர் காலத்தில் இருந்த நாளந்தா பல்கலைக் கழக வளாகத்தில் மூலிகைத் தோட்டமும் இருந்தது ; அப்போதே முறையான ஆராய்ச்சிகளை  இந்திய பல்கலைக் கழக்கங்கள் துவக்கிவிட்டன!

–subham—

Tags- கங்கை நதி , வியத்தகு புதிய தகவல், 1117 மூலிகைகள், 935 மருந்துகள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-20;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,723)

Written by London Swaminathan

Post No. 15,723

Date uploaded in London –11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்பார்த்தன்பள்ளி

திருப்பார்த்தன்பள்ளி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவியுடன் தாமரையாள் கேள்வன் என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

திருப்பார்த்தன்பள்ளி பற்றிய முக்கிய தகவல்கள்:

  • மூலவர்: தாமரையாள் கேள்வன் (பார்த்தசாரதி) – நின்ற கோலம்.
  • தாயார்: தாமரைநாயகி.
  • சிறப்பு: குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பார்த்தசாரதி பெருமாள் அர்ஜுனனுக்கு காட்சி கொடுத்த தலம்.
  • ஆழ்வார் பாசுரம்: திருமங்கையாழ்வார் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.
  • அமைவிடம்: சீர்காழி – திருவெண்காடு சாலையில், திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.
  • திருநாங்கூர் திருத்தலங்கள்: இது திருநாங்கூர் பதினொரு திருத்தலங்கள் குழுவில் ஒன்றாகத் திகழ்கிறது. 
  •  

திருவெண்காட்டிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ள இக்கோவில், மிகவும் அமைதியான மற்றும் பிரார்த்தனை தலமாக போற்றப்படுகிறது. 

மூலவர், உற்சவர், இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி

என்று மூன்று தேவி மார்கள் சூழ காட்சி அளிக்கிறார்கள்.

இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்று திருநாமம். சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும், கொண்டு காட்சி அளிக்கிறார்.

இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் திருநாமத்தில் திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவரும் இருப்பது ரசிக்க வேண்டிய ஒன்று.

பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு சன்னதி உண்டு.

பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில்

எழுந்தருளியுள்ள எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.

மூன்று நிலை ராஜகோபுரம், 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது.

***

திருக்காவளம்பாடி

திருக்காவளம்பாடி திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) 108 வைணவத் திவ்ய தேசங்களில் 27-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் ஒன்றாகும்.

முக்கியத் தகவல்கள்:

மூலவர்: கோபாலகிருஷ்ணன் (ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன்).

நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்

தீர்த்தம் – தடமலர்ப்பொய்கை.

விமானம் – ஸ்வயம்பு விமானம்.

ப்ரத்யக்ஷம் – சேனைத் தலைவர், ருத்ரன்,

அமைவிடம்: சீர்காழி – பூம்புகார் சாலையில் திருநாங்கூரிலிருந்து சுமார் 1.5 மைல் தொலைவில் உள்ளது சென்னை மாயூரம் ரயில் பாதையில் வைதீசுவரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் இருக்கிறது. சீர்காழி ஸ்டேஷனிலிருந்து கிழக்கே 7 மைல். சீர்காழியிலிருந்தும், திருவெண்காட்டிலிருந்தும் பஸ்ஸில் வரலாம். திருநகரியிலிருந்து வண்டிப்பாதை உள்ளது.

: இத்தலம் வட துவாரகைக்கு இணையாகக் கருதப்படுகிறது.திருவிழா: ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் திருநாங்கூர் கருட சேவை (திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவம்) மிகவும் முக்கியமானது.

விசேஷங்கள் – திருமங்கையாழ்வார் அவதாரஸ்தலமான திருக்குறையலூர், மங்கை மடம், இரண்டும் இத்தலத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.

மங்களாசாஸனம் -திருமங்கையாழ்வார் – 1298-1307 – 10 பாசுரங்கள்.

–Subham—

Tags- திருக்காவளம்பாடி,திருப்பார்த்தன்பள்ளி, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-20,  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

ஶ்ரீ ஏக்நாத் ரானடே – தீர்வு கண்ட தீரர் – சப்தரிஷிகளின் வரிசையில் மூன்றாவது ரிஷி! (Post.15,722)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,722

Date uploaded in London – 11 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சப்தரிஷிகள் வரிசையில் மூன்றாவது ரிஷி!

ஶ்ரீ ஏக்நாத் ரானடே – தீர்வு கண்ட தீரர் – சப்தரிஷிகளின் வரிசையில் மூன்றாவது ரிஷி!

ச. நாகராஜன்

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

அவரைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பை பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவகோல்வல்கர் ஏற்க சங்கத்தின் பொதுச் செயலாளராக  1956 முதல் 1962 வரை பொதுச் செயலாளராக இருந்து சங்கப் பணியை ஆற்றியவர்

ஶ்ரீ ஏக்நாத்ஜி ரானடே.

பல்வேறு எதிர்ப்புகளைச் சமாளித்து விவேகானந்தருக்கு கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையில் பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கிய இவரது வாழ்க்கைச் சரிதம் அற்புதமான வியக்க வைக்கும் ஒரு சரித்திரமாகும்.

இந்த நூலில் அவரைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள் அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றியவர்களால் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது.

நூலைத் தொகுத்து அளித்தவர் நாமக்கல்லைச் சேர்ந்த, சிறந்த ஸ்வயம்சேவகரான  திரு ஹரிஹரகோபாலன்.

ஶ்ரீ ஏக்நாத்ஜி ரானடே.1914ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் நாளன்று  மஹராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் திம்தலா என்ற கிராமத்தில் ஶ்ரீ ராமகிருஷ்ணராவுக்கும் ஶ்ரீமதி ரமாபாய் அம்மையாருக்கும் எட்டாவதும் கடைசி குழந்தையுமாகப் பிறந்தார்.

சிறுவயதிலேயே புத்திகூர்மையுடன் விளங்கிய ஏக்நாத் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருந்து உயர்கல்வியை முடித்தார்.

1936ல் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் முழு நேர பிரசாரக்காக ஆனார்.

1956 முதல் சங்க சர்காரியவாஹ் பொறுப்பை ஏற்றார்.

சங்க விழா ஒன்றில் கருநாகம் ஒன்று மேடை அருகே தென்பட்டது. அதனைப் பற்றி அவர் சொல்ல விழைந்தாலோ அல்லது கொல்ல முயன்றாலோ பெரும் அமளி ஏற்பட்டிருக்கும். ஆனால் இவர் அந்த கருநாகத்தின் தலையைத் தன் காலின் கீழ் வைத்து அழுத்தி அப்படியே நின்று கொண்டார்.

மிகச் சிறந்த சொற்பொழிவாளரான ஏக்நாத் டயரி எழுதும் பழக்கம் உடையவர். குறிப்பிடத்தகுந்த முக்கிய உரையாடல்களை ஒரு சொல்லும் விடாமல் அப்படியே குறிப்பெடுக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1963 ஜனவரி முதல் 1964 வரை ஸ்வாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

ஸ்வாமிஜி கன்யாகுமரியில் கடல் அருகே உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்து உத்வேகம் பெற்று அமெரிக்கா சென்று ஹிந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பினார். அங்கு அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று கன்யாகுமரி மக்கள் விரும்பினர். நாடெங்கும் இதற்கு ஆதரவு பெருகிற்று.

இதைச் சரிவர அமைக்க ஒருவர் வேண்டுமே! சங்கத்திலிருந்து இதற்காக குருஜி கோல்வல்கர் ஏக்நாத்தை அனுப்பினார்.

விவேகானந்தர் நினவுச் சின்னம் ஆறு லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பித்தது. ஆனால் ஏக்நாத் அவர்களின் தீவிர ஈடுபாட்டால் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் ஆனது. ஒரு ரூபாய் நினைவுச் சின்ன நிதி திரட்டலை அவர் ஆரம்பித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ளவர்கள் இந்த தேசீய அஞ்சலித் திட்டத்தில் பங்கு கொண்டனர்.

கம்யூனிஸ்டான ஜோதிபாசு வங்க அரசின் சார்பில் 15 லட்ச ரூபாய் நிதியைத் தந்தார். காஷ்மீரிலிருந்தும் நிதி திரண்டது.

ஒரு சிலை மட்டும் நிறுவப்பட இருந்த திட்டம் பெரும் நினைவுச் சின்ன மண்டபம் நிறுவும் திட்டமாக ஆகி வெற்றி பெற்றது.

சில கத்தோலிக்கர்கள் இதை விரும்பவில்லை. அங்கு ஒரு சிலுவையை நிறுவி இதை சேவியர் பாறையாக ஆக்க முயன்றனர்.

ஆனால் சிலுவை உடைத்தெறியப்பட்டது. சத்தியம் வென்றது

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த பக்தவத்ஸலத்தைச் சந்தித்து நினைவுச் சின்னத்தின் அவசியத்தை விளக்கினார் ஏக்நாத்ஜி.

பல வித எதிர்ப்புகளையும் தகர்த்து 1970ல் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து 1972ல் விவேகானந்த கேந்திரம் நிறுவப்பட்டது.

 1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அவர் உடலை உகுத்தார்.

 இந்த நூலில் பாரத பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி 9-11-2014 அன்று புது டில்லியில் நடைபெற்ற விழாவில் ஶ்ரீ ஏக்நாத் ரானடே பற்றி ஆற்றிய உரை இடம் பெற்ற்ள்ளது. திரு லட்சுமி நாராயணன், திரு ஆர்பிவி எஸ் மணியன் ஆகியோரின் நினைவலைகளும் பகிரப்பட்டுள்ளது.

ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ ஏக்நாத் ரானடேஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார். 

சப்தரிஷிகளில் முதல் மூன்று ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த நான்கு ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.

 விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 56 பக்கங்களைக் கொண்டுள்ளது.

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

**

My Visit to Mayuram Veda Patasala: சிவபுரம் வேத சிவாகம பாடசாலை (Post No.15,721)

Written by London Swaminathan

Post No. 15,721

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிவபுரம் வேத சிவாகம பாடசாலை (மயிலாடுதுறை): இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவாச்சாரிய மாணவர்கள் பயின்று, உலகெங்கிலும் உள்ள கோயில்களில் சேவை செய்து வருகின்றனர்.

லண்டன் சுவாமிநாதனுக்குப் பொன்னாடை ; ஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் அளித்தது .5-3-2026; Mayiladuthurai.

சிவபுரம் வேத பாடசாலை மாணவர்களுடன் புகைப்படம்

I visited Sivapuram Veda Agama Patasalai in Mayiladuthurai (old name Mayuram) on 5th March 2026. Every time I visit Mayuram, I used to go to Sivapuram Veda patasala run by Sri A V Swaminatha Sivachariar. I was very keen to get the blessings from the Vedic scholars there.

Sri Swamintha Sivachariar and his son Srikandan welcomed me and we had a chat about the Vedic school and his new project at near by Karavazaikkarai கருவாழைக்கரை  . He honoured me with a shawl, in Tamil Ponnadai, and gave me lot of books and souvenirs published recently. I felt very happy when he told me about 30 students are studying Yajur Veda. His project at Karuvazaikkarai கருவாழைக்கரை slowed down because of unusual heavy rain fall during last monsoon season. So it may take a few more years to complete it.

Sri AV Swaminatha Sivachariar came to London last year to perform the Kumbabishekam of Highgate Murugan temple. He was also here to perform the Rudra Homam organised by the Mitra Seva, UK.

I was able to meet some students and talk about their studies. One student accompanied me to the Mayuranatha swami Temple and showed me around. Because of him I was able to get quick darshan and prasad from the shrines.

Sivachariyar has a very busy schedule during this summer. He has received invitations from temples in different countries.

He answers religious and spiritual questions in a popular daily in Tamil Nadu. If anyone needs genuine answers in Tamil, one can approach him.

His website address is as follows:

+914364-212773 info@sivapuramtrust.org

SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் அமைந்துள்ள சிவபுரம் வேத சிவாகம பாடசாலை, வேதம், ஆகமம் மற்றும் சாஸ்திரங்களைக் கற்பிக்கும் ஒரு புகழ்பெற்ற குருகுலமாகும். 1997-ல் நிறுவப்பட்ட இது, ஆதிசைவ சிவாச்சாரியார்களுக்குத் தேவையான ஆன்மீக மற்றும் வேதாகமப் பயிற்சிகளை வழங்கி, திருக்கோயில்களில் ஆகம முறைப்படி பூஜை செய்ய மாணவர்களைத் தயார்படுத்துகிறது. SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI +2முக்கிய அம்சங்கள்:பயிற்சிகள்: வேதம், சிவாகமம், பூஜை முறை மற்றும் சாஸ்திரக் கல்வி.தலைவர்: இந்த பாடசாலையின் தலைவர் ரவி சிவாச்சாரியார்.கிளை: இலங்கையில் மன்னார், திருக்கேதீச்சரத்திலும் இதன் கிளை உள்ளது.செயல்பாடுகள்: ஆண்டு ஆன்மீகப் பயணம், வேத பாராயணம் மற்றும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI

தொடர்பு மற்றும் விபரங்கள்:பாடசாலை தொடர்பான மேலதிக விபரங்கள், மாணவர்கள் சேர்க்கை மற்றும் இணையதளப் பக்கத்தைப் பார்வையிட அவர்களின் அதிகாரப்பூர்வ சிவபுரம் டிரஸ்ட் இணையதளத்தை பார்க்கலாம்

Kelungal Solgirom / கேளுங்கள் சொல்கிறோம்

Our Guru Nathar answers people’s spiritual questions. contact@sivapuramtrust.org

எனது தந்தை இறந்து ஒரு ஆண்டு நிறைவடயவில்லை, நாங்கள் புதிதாக கட்டியுள்ள வீட்டில் க்ருஹபிரவேசம் செய்யலாமா?

Vasantha

Arasur

சண்டிகேஸ்வரரிடம் கைதட்டி வழிபாடு செய்யலாமா அய்யா? ஒவ்வொருவரும் வேறு வேறு கருத்து சொல்கிறார்கள்

Thiruchitrambalam

koradacheri

சிவராத்திரி தினம் அன்று காலையில் இருந்து விரதம் இருக்க வேண்டுமா, மாலையில் இருந்து விரதம் இருக்க வேண்டுமா அய்யா?

kamali kirushnan

Porur, Chennai

****

கருவாழக்கரை

கருவாழக்கரை, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது காவிரி கரையில் அமைந்திருப்பதால் ‘கருவாடக்கரை’ என்றும், கருவை (குழந்தையை) காத்து வாழவைக்கும் அம்மன் அருளும் தலம் என்பதால் ‘கருவாழக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது.

:ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்: இங்குள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில், கருவில் இருக்கும் குழந்தையைக் காத்து, உலகத்தில் பிறக்க வைத்து, நல்ல முறையில் வளர்க்கும் தாயாக போற்றப்படுகிறது.சோமசுந்தரேஸ்வரர் கோவில்: கருவாழக்கரையில் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 9 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.வரலாறு: வாழை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி ஒரு காலத்தில் ‘கதலிவனம்’ என்று அழைக்கப்பட்டது.

கர்ப்பக் கோளாறுகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் பக்தர்கள் இந்த அம்மனை வழிபடுகின்றனர். 

–subahm—

Tags- My Visit ,  Mayuram,  Veda Patasala, SIVAPURAM VEDA SIVAGAMA PATASALAI , சிவபுரம் வேத சிவாகம பாடசாலை, மயிலாடுதுறை

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 61; இந்து மத கலைச்சொல் அகராதி-61 (Post.15,720)

Written by London Swaminathan

Post No. 15,720

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

M words continued………………………………

Snake or Rope illusion = Maayaa 

Tamil Version will be posted tomorrow.

***

Mangalasanam 

Twelve Tamil Vaishnavite Saints known as Alvars, have sung the glory of Vishnu in 108 divine shrines spread over India and beyond. Those temples which are sung by an Alvar or more Alvars are said to have Mangalaasanam of this Alvar or these Alvars. The 108 Divine Shrines are called Divya Desam. The 4000 compositions of Alvars in praise ofVishnu shrines are in a Tamil book known as Divya Prabandham.

***

Madayanthi

Madayanti (or Madayanthi) is a virtuous queen of King Saudasa (Kalmashapada) in the Mahabharata and Puranas. Known for her loyalty, she aided her husband in overcoming a curse from Sage Vashishtha and is associated with the birth of their son, Ashmaka. 

Wife of King Saudasa of the Ikshwaku dynasty. She is depicted as a virtuous queen who, along with her husband, survived a difficult curse.

When her husband was cursed to be a cannibal, she remained by his side. Later, she was involved in a complex narrative involving the sage Vashishtha to obtain a son.

The name is sometimes spelled Madayanti and should not be confused with Madayantika, which is the botanical name for henna (Lawsonia inermis). 

It is a plant with medicinal properties known for treating skin diseases, jaundice, and as a natural hair dye.

 ***

MADURAI

A big city in Tamil Nadu known for its big and beautiful Siva temple called Meenakshi Sundareswarar temple. About 2000 years ago, there was a Tamil Academy called Tamil Sangam here with 49 poets. Madurai is synonymous with Tamil language because of this Tamil Sangam. Sangam Tamil literature has more than 40 poets with the prefix Madurai. Chitra festival celebrated here every year attracts lakhs of people.

***

Malayalam

It is the name of a language and the land where it is spoken. The place is called Kerala now. It is adjacent to Tamil Nadu. As a language it is junior to Tamil language. Kerala is also known for its temples and natural beauty. In the olden days it was called Chera Nadu.

***

Malaya Parvata

Common name of Western Ghats also known as Sahyadri. Pothikai hill is part of this mountain chain Where sage Agastya lived and wrote the first grammar book for Tamil. The mountain chain runs for over 1000 miles from the land’s tip up to Maharashtra.

***

Mathura

One of the Seven Sacred Cities in India. Lord Krishna was born here, and his playing field is called Brindavan It is in modern Uttar Pradesh with a beautiful Krishna temple.

***

Mahabharata & War

Mahabharata is one of the two Hindu epics; the other epic is Ramayana. Mahabharata is the longest religious book in the world with one hundred thousand Slokas/couplets describing the history of Pandavas and Kauravas. It has 18 chapters and the most popular Bhagavad Gita is in one of the 18 Chapters.

The 18 day war between the five Pandavas and their 100 cousins Kauravas was fought in Kurukshetra, now in Haryana. Hindus believe that the war was fought just before Kali Yuga began, that is before 3102 BCE. Majority of the modern historians believe that it should have happened around 1500 BCE.

Apart from the conflict, the epic has lot of sub stories ad a lot of didactic materials. And it is said thus in a famous quote:

“यदिहास्ति तदन्यत्र यन्नेहास्ति न तत्क्वचित्”Yad ihāsti tad anyatra, yan nehāsti na tat kvacit “What is here [in the Mahabharata] is found elsewhere, but what is not here is nowhere else”. The epic covers all aspects of human life.

***

Mahabhasyam

Mahabhayasam is the celebrated commentary on grammar given to the world by Maharshi Patanjali based on Ashtadhyayi of Maharshi Panini. It  deals with the theory of language from Bharatiya perspective. The siddhantas behind the origin and development of sound, syllable, word, sentence and context and their interrelated features are discussed in this commentary. It consists of nine ahnikas (Units) .

***

Mahamakam

Mahamaham is a major Hindu festival celebrated every 12 years in Kumbakonam, Tamil Nadu, often referred to as the Kumbh Mela of South India. It occurs during the Tamil month of Masi (Feb–Mar) when Jupiter passes through Simha Rasi, drawing millions for a holy dip in the sacred Mahamaham tank, which is surrounded by 16 small mandapams. It is very near the famous Siva temple- Kumbeswarar.

The next Mahamaham festival in Kumbakonam is scheduled to take place on March 9, 2028

 The Mahamaham tank is a massive, historic pond located in the heart of Kumbakonam town, featuring 20 “theerthams” (holy wells) on its banks, each associated with specific deities or blessings. During the festival all the nearby temples take part in it. 500 years ago, famous king Krishnadeva Raya travelled all the way from Vijayanagara to take part in it.

***

Maya, Mahamayi. Mahamaya

Maya is illusion.

Mahamaya (“Great Illusion”) is a multifaceted term in Indian philosophy and religion, primarily referring to the divine, all-encompassing, and bewildering creative energy of the Supreme Goddess (Shaktism) or the material world’s illusory nature (Vedanta). It represents the power that creates, maintains, and veils reality, often associated with Goddess Durga and the material world’s distracting, worldly attachments. 

In Tamil, Mahamayi is the goddess of small pox. If some one is sick with any type of pox, they hang Neem leaves outside the house to avoid spreading the disease. After recovering, they go to Marai Amman Goddess temple and offer Maa Vilakku. It is a flour and jaggery dish with ghee lamps lighted in the middle. They consume it after the lamp is extinguished

Mahamaya (or Yoga-maya) is the divine energy of illusion and Vishnu’s potency who facilitated Krishna’s birth to destroy the tyrant King Kamsa. She transferred Krishna from Kamsa’s prison to Gokul and replaced him with her own form, ultimately warning Kamsa that his killer had already been born, thus fulfilling the prophecy of Kamsa’s downfall. When Kamsa tried to strike her with his sword it flew into sky and disappeared.

To be continued………………

Tags-  Maya, Madurai,  Mangalasanam, Divya desam, mahamaham,