MORE TAMIL WISDOM- NAL VAZI BY AVVAIYAR-1 (Post No.5707)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 27 November 2018

GMT Time uploaded in London –14-55

Post No. 5707

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

I have already posted three books of  Tamil poetess Avvaiyar with Englsih translation.This is Nal Vazi- ‘Good Path’ composed by Avvaiyar in 40 verses. Part 1 contains 20 verses.

Nalvazi ( The Good Path)

Prayer to Lord Ganesh

Milk, pure honey, molasses, pulses— these four blended, I will offer you, O Pure Gem, beautifying the exalted elephant faced, give me the Triple Tamil of the ancient Academy or Tamil Sanga.

  1. நல்வழி

Tamil verses taken from Project Madurai website; thanks. English matter IS taken from two authors and edited by me.
கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

XXX

SHUN EVIL,DO GOOD

1.Virtue will accrue,sin will disappear, the past deeds are hoards to the earth born. On reflection naught; but this do men of all religions preach- Shun evil, Do good.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
1

XXX

 

GIVERS AND NON GIVERS

2.No castes exist but two, if we are to speak of it. According to the unfailing moral system, the givers are the great in the world and the non givers are base born, the bare truth as set forth in the codes.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.

XXX

DO CHARITY, LIBERATION IS ASSURED

3.This natural body is a bag of miseries. Don’t take this false body as true. Quickly do charity. If you do charity you, you will have moksha or liberation as those freed from mortal ills ordained by fate.
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

 

XXX

GOOD KARMA

4.It is hard for anyone to do good action as conceived by him unless his past merits favour it. It will be futile like the blind man throwing his walking stick, at the mango down unless the favourable time arrives for it.

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

XXX

WHAT IS YOURS WILL COME TO YOU

5 . The unattainable can never be attained, however hard we strive for the same. The attainable will never miss us, however kicked out they be. To sit in sorrow, ponder long by themselves, make the mind sore and die at best- is human lot.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

XXX

6.In this world it is hard to get one another’s felicity except what has been allotted. To the life spirit inhabiting this body, of what avail is crossing the billowy ocean and coming back ashore.
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

XXX

BE LIKE WATER ON LOTUS LEAF

7.Viewed in all possible ways, this body is a vile hut, replete with vile worms and foul diseases, and the sages who know it, don’t speak about it to others, but keep themselves in the world together and apart like the beautiful lotus leaf and the water about it: they live in the world and out of it at once.

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

XXX

WEALTH FLIES AWAY

8.Though countless are ways in which efforts are made to gather riches, they will not succeed unless ordained by fate. O men of great world, hearken, what is fit to acquire is honour. Wealth is unstable (takes to itself and flies away).
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

XXX

GREAT PEOPLE ARE LIKE WATER SPRINGS

9.Even when the flood in the river has dried away and when the solar heat scorches the feet, the world is fed with spring water. To the mendicant poor, men of good birth will not withhold their gifts nor will they willingly say no despite their own vicissitudes.

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து .

XXXX

 

GIVE  AND EAT

10.However we weep and wail year after year and roll on the earth, will the dead come back, O men of the great world? Let us not do so. That is our WAY too. Till we depart ask what have we here? So give, eat and rest in peace.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

XXX

APPETITE IS DIFFICULT TO CONTROL

11.O my body! Oppressed with appetites! If I say omit one day’s eating you will not. If I say take food for two days, you will not. You know not my trouble even for one day. To live with you is difficult indeed.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.

XXXX

AGRICULTURE IS THE BEST WORK

12.The tree standing on the river bank and the wealth acquired through intimacy with the king equally liable to fall. Is it not so? To plough and eat is the most excellent way of living. There is no work so noble as this. All other occupations are considered mean.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு,

 

XXX

FATE DECIDES EVERYTHING

13.Indeed in this world, those that are destined to live long, who can destroy? Or those that are destined to be destroyed, who can enable to escape? Or those that are destined to always live by begging who can divert from that course?
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.

XXX

HONOUR IS MORE IMPORTANT

14.Living frugally is better than begging. If the matter be well considered, it is disgraceful to procure one meal by flattery. To lose one’s life is far better than to lose his honour for the sake of a livelihood.
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

XXXX

LORD SIVA IS SUPREME

15.Those who meditate on Siva will have no suffering of any kind at any time. This is the way of over coming the decree of destiny. This is the true wisdom. None but these will ever subdue fate.

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

 

XXX

WOMEN AND CHASTITY

16.Know you that in the sea girt earth the quality of water is distinguished by the goodness of the soil. The quality of the good by liberality, quality of the eye by unvarying favour and the disposition of women, by a man not repugnant to chastity.



தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

XXXX

DON’T BLAME GOD

17.Those who are instructed by the wise not to do evil in this world, do not behave accordingngly or give alms. Hence they suffer want ; Why should they then attribute it to god, and not to their vicious actions? Will they obtain great wealth? Will an empty pot boil over?

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?

XXXX

MISERS CAUSE VIOLENCE

18.In this vast earth a niggard will not give anything to his parents, children, country men, relatives and friends, even though they prostrate themselves at his feet. But he will give to strangers who inflict pain on him.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.

XXX

19.For procuring a measure of rice in order to appease our hunger, we take uncommon pains to offer our services, or to beg from door to order, or to take long voyage s on the ocean of clear water, or to pay homage or to rule over kingdoms, or to make verses in honour of noble people.
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

XXX

PROSTITUTION

20.To satisfy pleasure ( not by means of a lawful wife) but by a prostitute, is like attempting to cross a river ( not by means of a boat) but by a grind stone: this way of living will destroy wealth and become the seed of poverty. It is not good for either this life or for the life to come.

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
20
—TO BE CONTINUED

Tags, Nal vazi-1, Good path,Avvai

–subham–

சிவ பூஜைக்குரிய சிவ பூஜை (Post No.5706)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 November 2018


GMT Time uploaded in London –6-38 AM

Post No. 5706


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

திருமூலர் திருமந்திரத்தில் தரும் மலர் விஷயம் சுவையானது:-

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திட்டே

–திருமந்திரம், திருமூலர் எழுதியது

பொருள்-

அம்புஜம் எனப்படும் தாமரை மலர், நீலோத்பல மலர், செங்கழுநீர்ப்பூ, அழகிய கருநெய்தல்மலர், வாசனை மிக்க கமுகம் பூ (பாக்கு மரம்), மாதவி என்னும் குருக்கத்தி மலர், மந்தார மலர், வகுளம் எனப்படும் மகிழம் பூ, சுரபுன்னை, மல்லிகை, செண்பக மலர், பாதிரிப்பூ, செவ்வந்தி எனப்படும் ஜிவந்தி ஆகியன சிவ பூஜைக்கு ஏற்ற மலர்கள். இவைகளை இறைவனுக்கு அணிவித்து பூஜை செய்க.

பொதுவாக வாசனை மிக்க மலர்களையே பூஜைக்குப் பயன்படுத்துவர். இவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசனை உண்டு. இரண்டாவதாக, நாம் வசிக்கும் இடத்தில் கிடைக்கக்கூடிய மலர்களாக இருக்க வேண்டும்.

திருமூலர் தரும் பட்டியல் ,இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு இணைந்தது என்பதைக் காட்டுகிறது.

எனது பழைய கட்டுரைகளில் இவைகளுக்கான ஆங்கில, தாவரவியல் பெயர்களைக் கொடுத்துள்ளேன்.

லண்டனில் வசிக்கும் திருச்சி திரு எம்.என் கல்யாண சுந்தர சிவாச்சார்யார் கந்த புராணத்திலுள்ள மலர்கள் பட்டியலை அனுப்பியுள்ளார். இது பற்றி தமிழில் தனி கட்டுரை எழுதுகிறேன். கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் 99 மலர்ப் பட்டியலுக்கு இணையாக அமைந்துள்ளது இது.

TAGS– சிவ பூஜை, மலர்கள்,பூ

ब्रह्मोवाच ।। ।।
माहात्म्यं वद देवेश पुष्पजातिसमुद्भवम् ।।
येनयेन च पुष्पेण यत्फलं लभते नरः ।। १ ।।
।। श्रीभगवानुवाच ।। ।।
शृणु पुत्र प्रवक्ष्यामि माहात्म्यं पुष्पसंभवम्।।
येन पुष्पेण मे प्रीतिर्भवेत्सम्यङ्न संशयः ।। २ ।।
मल्लिका मालती चैव यूथिका चातिमुक्तका ।।
पाटला करवीरं च जयन्ती विजया तथा ।। ३ ।।
कुब्जकस्तबकश्चैव कर्णिकारं कुरंटकः ।।
चंपकश्चातकः कुन्दो बाणः कर्चूरमल्लिका ।। ४ ।।
अशोकस्तिलकश्चैव तथैवाऽपरयूथिकः ।।
अमी पुष्पप्रकारास्तु शस्ता मे पूजने सुत ।। ५ ।।
केतकीपत्रपुष्पं च भृंगराजस्तथैव च ।।
तुलसीपत्रपुष्पं च सद्यः प्रीतिकरं मम।। ६ ।।
पद्मान्यंबुसमुत्थानि रक्तनीलोत्पले तथा ।।
सितोत्पलं सहोमासे ममाऽत्यन्तं हि वल्लभम् ।। ७ ।।
तान्येव च प्रशस्तानि कुसुमानि च मे सुत ।।
यानि स्युर्वर्णयुक्तानि रसगन्धयुतानि च ।। ८ ।।
निर्गंधान्यपि शस्तानि कुसुमानि मतानि मे ।।
सुरभीणि तथाऽन्यानि वर्जयित्वा तु केतकीम् ।। ९ ।।
बाणं च चंपकाऽशोकं करवीरं च यूथिका ।।
पारिभद्रं पाटला च बकुलं गिरिशालिनी ।। 2.5.7.१० ।।
बिल्वपत्रं शमीपत्रं पत्रं भृंगिरजस्य च ।।
तमालामलकीपत्रं शस्तं मे पूजने सुत ।। ११ ।।
पुष्पैररण्यसंभूतैः पत्रैर्वा गिरिसंभवैः ।।
अपर्युषितनिश्छिद्रैः प्रोक्षितैर्जंतुवर्जितैः।। १२ ।।
अथारामोद्भवैर्वापि पुष्पैः संपूजयेच्च माम् ।।
पुष्पजातिविशेषेण भवेत्पुण्यं विशेषतः ।।१३।।
तपःशीलगुणोपेते पात्रे वेदस्य पारगे ।।
दश दत्त्वा सुवर्णानि यत्फलं लभते नरः ।।
तत्फलं लभते मर्त्यः सहे कुसुमदानतः ।। १४ ।।
द्रोणपुष्पे तथैकस्मिन्मह्यं च विनिवेदिते ।।
दश दत्त्वा सुवर्णानि फलं तदधिकं सुत ।। १५ ।।
पुष्पात्पुष्पांतरे भेदो यथाऽऽसीत्तन्निबोध मे ।। १६ ।।
द्रोणपुष्पसहस्रेभ्यः खादिरं तु विशिष्यते ।।
खादिरात्पुष्पसाहस्राच्छमीपुष्पं विशिष्यते ।। १७ ।।
शमीपुष्पसहस्रेभ्यो बिल्वपुष्पं विशिष्यते ।।
बिल्वपुष्पसहस्रेभ्यो बकपुष्पं विशिष्यते ।।१८।।
बकपुष्पसहस्रेभ्यो नंद्यावर्तं विशिष्यते ।।
नंद्यावर्तसहस्राद्धि करवीरं विशिष्यते ।। १९ ।।
करवीरसहस्रस्य कुसुमं श्वेतमुत्तमम् ।।
करवीरश्वेतपुष्पात्पालाशं पुष्पमुत्तमम् ।। 2.5.7.२० ।।
पालाशपुष्पसाहस्रात्कुशपुष्पं विशिष्यते ।।
कुशपुष्पसहस्राद्धि वनमाला विशिष्यते ।। २१ ।।
वनमाला सहस्राद्धि चंपकं च विशिष्यते ।।
चंपकस्य पुष्पशतादशोकं पुष्पमुत्तमम् ।। २२ ।।
अशोकपुष्पसाहस्राच्छेवन्तीपुष्पमुत्तमम् ।।
शेवन्तीपुष्पसाहस्रात्कुजकं पुष्पमुत्तमम् ।। २३ ।।
कुजपुष्पसहस्राद्धि मालतीपुष्पमुत्तमम् ।।
मालतीपुष्पसाहस्रात्सन्ध्यापुष्पं विशिष्यते ।। २४ ।।
सन्ध्या पुष्पसहस्राद्धि त्रिसंध्यापुष्पमुत्तमम् ।। २५ ।।
त्रिसंध्यारक्तसाहस्रात्त्रिसंध्याश्वेतमुत्तमम् ।।
त्रिसन्ध्याश्वेतसाहस्रात्कुन्दपुष्पं विशिष्यते ।। ।। २६ ।।
कुन्दपुष्पसहस्राद्धि जातीपुष्पं विशिष्यते ।।
सर्वासां पुष्पजातीनां जातीपुष्पमिहोत्तमम् ।। २७ ।।
जातीपुष्पसहस्रेण यच्छेन्मालां सुशोभनाम् ।।
मह्यं यो विधिवद्दद्यात्तस्य पुण्यफलं शृणु ।। २८ ।।
कल्पकोटिसहस्राणि कल्पकोटिशतानि च ।।
मत्पुरे वसते नित्यं ममतुल्य पराक्रमः ।। २९ ।।
येषां संति च पुष्पाणि प्रशस्तानि ममाऽर्चने ।।
तेषां पत्राणि शस्तानि तदभावे फलानि च ।। 2.5.7.३० ।।
एतैः पत्रैश्च पुष्पैश्च फलैश्चाऽपि तथाहि माम् ।।
अर्चन्दशसुवर्णस्य प्रत्येकं फलमाप्नुयात् ।। ३१ ।।
एताभिः पुष्पजातीभिः सहोमासेऽर्चयंति ये ।।
भक्तिं ददामि तेषां वै तुष्टः सन्नात्र संशयः ।। ३२ ।।
धनं पुत्रांस्तथा दारान्यत्किंचिद्वांछते हि सः ।।
तत्तद्ददामि देवेश पुष्पैरेभिः प्रतोषितः ।। ३३ ।।
इति श्रीस्कांदे महापुराण एकाशीतिसाहस्र्यां संहितायां द्वितीये वैष्णवखण्डे ब्रह्मविष्णुसंवादे मार्गशीर्षमाहात्म्ये जातीपुष्पश्रैष्ठ्यकथनपूर्वकं विष्णुकण्ठे तत्सहस्रपुष्पांकितमालास्थापनफलयोवर्णनंनाम सप्तमोऽध्यायः ।। ७ ।।

2000 ஆண்டுகளாக பெண்கள் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/2000-ஆண்டுகளாக-பெ…

2 Jun 2013 – 2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம் (Please read my earlier post FLOWERS IN TAMIL CULTURE ) தமிழர்களுக்கும் பூக்களுக்கும் உள்ள ..

சண்பகம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சண்பகம்/

26 Dec 2016 – பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்குசெண்பக மலரும் பிடிக்கும் .

சிவனுக்குரிய எட்டு பூக்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/சிவனுக்குரிய-எட்ட…

26 Dec 2016 – பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்குசெண்பக மலரும் பிடிக்கும் …

மன்னிக்க வேண்டுகிறேன்! மரங்களே! | Tamil …



https://tamilandvedas.com/…/மன்னிக்க-வேண்டுக…

21 Feb 2015 – பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, …

Trees of Wisdom | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/trees-of-wisdom/

If your shadow touches Shenpaka செண்பகம், it will bloom. Picture shows Sita under Asoka Tree. Paalai= Wrightia Tinctoria or Alstonia Scholaris; Makizam= Mimusops eEengi; Paathiri =Stereospermum Suaveblens; Mullai= Jasminium …

You’ve visited this page 2 times. Last visit: 08/04/18

மலர்கள் குறுக்கெழுத்துப் போட்டி (Post …



https://tamilandvedas.com/…/மலர்கள்-குறுக்கெழ…

12 Nov 2018 – … செம்பருத்தி, சிவந்தி, செண்பகம், குவளை, மனோரஞ்சிதம் , காசித் தும்பை, இரு வாச்சி, அந்தி மந்தாரை, குமுதம், தாழம் பூ, மரு.

seven types of women | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/seven-types-of-women/

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால்செண்பக மரம் பூக்கும் …

பெண்களின் ஏழு வகைகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/பெண்களின்-ஏழு-வக…

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால்செண்பக மரம் பூக்கும் …

உதிய மரம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/உதிய-மரம்/

(தினமணி, 29-11-1977). தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், …

Missing: செண்பகம் ‎| ‎Must include: ‎செண்பகம்

Trees | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/trees/

Karnikara = Pterospermum acerifolium (kanaka champaka in Kan)செண்பகம். 48.Karcura = Hedychium spicatum. 49.Karpasa = Gossypium herbaceum (hatti in Kan.) பருத்தி. champaca. (Champaka=Michelia). 50.Kalama – Gryza …

—subham—

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! – 2 (Post No.5705)

 

Written by S Nagarajan

Date: 27 November 2018

GMT Time uploaded in London –6- 04 am
Post No. 5705

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 2

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் மேடையின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலைப் பார்த்தான்; மகிழ்ந்தான்.

முதல் நாள் கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன் மஹாராணி குறிப்பால் மன்னனை அருகில் அழைத்தாள்.

காலையில் சபை ஆரம்பிக்கும் போது இருந்த மக்கள் எண்ணிக்கை மாலையில் எப்படி இருந்தது பார்த்தீர்களா? – ராணியின் கேள்வி மன்னனைச் சிந்திக்க வைத்தது.

பல் மடங்கு பெருகி இருந்தது. வள்ளுவரை அருகில் வந்து தரிசித்து வணக்கம் சொல்வதிலேயே பெரும்பொழுது சென்று விட்டது.

நாளை என்ன ஆகும்? கூட்டம் பெருகுமல்லவா? அவர்கள் நன்கு அமர்ந்திருக்க சரியான பந்தல், நீர் பந்தல் ஆகியவற்றை அமைக்க வேண்டாமா? – ராணியின் கேள்வியால் மகிழ்ந்த மன்னன் உடனடியாக அமைச்சரையும் தளபதியையும் அழைத்தான்.

“நாளை இன்றைய தினத்தை விட பன்மடங்காக மக்கள் திரளுவர். எத்தனை தச்சர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்! அலங்காரப் பந்தல் பெரிதாக வேண்டாமா!”

அமைச்சர் தானும் அதையே நினைத்ததாகக் கூறி ராணியின் மதியூகத்தை எண்ணி வியந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

மயன் கூட அமைக்க முடியாத மாபெரும் பந்தல். ஆங்காங்கு தண்ணீர்ப் பந்தல்.

ராணியார் இரவு முழுவதும் பந்தல் அமைப்பை மேற்பார்வையிட்டார். ஒரு சமயம் ஒரு செம்பில் நீர் கொண்டுவரச் சொல்லி அதை மேலிருந்து ஊற்றச் சொல்லி பந்தலில் அமர்ந்தார். ஒரு சொட்டு நீர் கூட கீழே சொட்டவில்லை. ராணியாரின் கவனத்தையும் அக்கறையையும் கண்ட தச்சர்கள் இன்னும் சாந்துப் பூச்சுக் கலவையை நிதானமாகப் பூசி தண்ணீர் விழாத படியும், சூரிய ஒளி ஆங்காங்கு பிரகாசமாக ஜொலிக்கும் படியும் பந்தலை நிர்மாணித்தனர்.

மறுநாள் வள்ளுவர் வந்தார்; பந்தலைப் பார்த்தார்; புன்முறுவல் பூத்தார்.

மக்களோ பிரமித்தனர்.

மகானுக்கு ஏற்ற மரியாதை!

புலவர் குழாம் ஒரு புறமும் அரசவை உறுப்பினர் ஒரு புறமும் மகளிரும் ஆண்களும் அவரவர் இடத்திலும் அமர்ந்தனர்.

புலவர் குழாத்தில் ஒரு புலவர், வள்ளுவரை எப்படி மாட்டி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர், தனது சாதுரியத்தை முதலிலேயே காட்ட எண்ணினார். முதல் கேள்வியிலேயே வள்ளுவரைத்  திணற வைத்தால் அந்த வித்வத் சதஸ் என்னும் அறிவுக் கூட்டம் சீக்கிரமே முடியுமல்லவா?

பவ்யமாக வள்ளுவரை நோக்கினார்: “பெருமானே, ஆமையைப் பற்றிக் கூறி அதனால் என்ன கற்க முடியும் என்று சொல்லுங்களேன்!

கூட்டத்தினர் கொல்லென்று சிரித்தனர்.

அந்தப் புலவரின் புலனுக்கடங்கா சேஷ்டைகள் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும். இப்படி இடக்காகக் கேட்கிறாரே!

ஆமைக்கும் வள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்.

மன்னன் கூடத் திடுக்கிட்டான். பெரிய புலவர் வாய்த்துடுக்காக இப்படிக் கேட்கலாமா?

யாரும் யோசித்து முடிக்குமுன்னரே பளீரென்று வள்ளுவர் வினவினார்:

“நீவீர் எந்த ஆமையைப் பற்றிக் கேட்கிறீர்? பிறனில் விழையாமை,அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை,  வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை,  நிலையாமை,

கல்லாமை,சிற்றினஞ்சேராமை,  பொச்சாவாமை,  வெருவந்த செய்யாமை, இடுக்கணழியாமை,  அவையஞ்சாமை,  பெரியாரைப் பிழையாமை,  கள்ளுண்ணாமை,  பிரிவாற்றாமை !” கடகடவென்று வள்ளுவர் அடுக்கிக் கொண்டே போனார்.

 

மக்கள் பிரமித்தனர்!

“இவற்றில் எந்த ஆமையைப் பற்றி அறிய ஆசை?”

வள்ளுவரின் கூர்மையான கேள்வியைக் கேட்டு மக்கள் அனைவரும் ஆஹா ஆஹா என்று கூவினர். சிலரோ நாவல் நாவல் என்று கத்தினர்.

கேள்வி கேட்ட புலவர் நடுநடுங்கிப் போனார்!

இடக்கான கேள்வியைக் கேட்டதற்கு நொந்து போய் மென்று விழுங்கி, “நான்கு கால்களால் நிலத்திலும் நீரிலும் செல்லும் ஜந்து …” என்று தட்டுத் தடுமாறிக் கூறி அமர்ந்தார்.

வள்ளுவர் பளீரென்று கூறினார்:

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

மக்கள் கரங்களைத் தட்டிப் பாராட்ட, புலவர்கள் அதற்கு விரிவுரை கூற கேள்வி கேட்டவர் வெட்கித் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவருக்கு ஏற்ற பதில்! இனியாவது ஆணவம் பிடித்து அலையாமல் கண்,காது, மூக்கு, நாக்கு, உடல்  ஆகியவற்றை அடக்கி அவர் வாழ்வாரா என மன்னன் எண்ணினான்.

அந்தப் புலவர் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதை மக்கள் வரும் நாட்களில் அறிந்தனர்.

அடுத்து பந்தலில் ஒரு கோடியில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மெலிந்தவர் எழுந்தார்.

புலவர்கள் முகம் சுளித்தனர். படைவீரர்கள் துணுக்குற்றனர். அவர் மன்னனின் தேரை ஓட்டும் சாரதி.

“ஐயனே! தேரை வைத்து ஒரு கூற்றை உங்கள் வாயிலாகக் கேட்க ஆசைப்படுகிறேன்”.

‘தேரில் என்ன இருக்கிறது? இவன் எல்லாம் ஒரு ஆள்’, என்று சிறுமையாக அவரை நோக்கிப் பலரும் பார்க்க வள்ளுவர் கூர்மையாகக் கூறினார்:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

இவன் பெரியவன், இவன் சிறியவன் என்று தோற்றத்தை வைத்து எடை போடாதே, உருளும் தேருக்கு அச்சாணி அல்லவா முக்கியம், அது போல தோற்றத்தால் எளிமையாக இருப்பினும் அவர்கள் முக்கியமான விஷயத்திற்கு அச்சாணி போன்றவர்கள்!

மன்னன் எழுந்து பாண்டிய நாட்டிலேயே விரைவாகத் தேர் ஓட்ட வல்லவன் அவன் என்று கூறி அவனது பெயரும் நளனே என்று கூறி மகிழ்ச்சியுடன் அமர்ந்தான்.

அனைவரும் இந்தப் புகழுரையைக் கேட்டு மகிழ்ந்து கரங்களைத் தட்ட நளனோ வெட்கத்தால் அனைவரையும் வணங்கி அமர்ந்தார். நளன் எப்படி தேரை விரைவாக ஓட்ட வல்லவன் என்பதைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் கூறப்பட்ட நள தமயந்தி சரித்திரத்தை அனைவரும் அறிந்தவர்கல் ஆதலால் அவர்கள் பெருமையுடன் மன்னனின் தேர்ப்பாகனான நளனைப் பார்த்தார்கள்.

வள்ளுவர் தொடர்ந்தார்:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

மன்னனையும் மந்திரியையும் அவர் பார்த்துக் கூறிய வார்த்தைகளால் இடம் அறிந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதை அவர் கூறுகிறார் என மக்கள் புரிந்து கொண்டனர். வலிய சக்கரங்களை உடைய நெடுந்தேர் கடலில் ஓடாது. அதே போல பெரிய கப்பலாக இருந்தாலும் அது நிலத்தில் ஓடாது.

கேள்வியைக் கேட்டு வாழ்வியல் ரகசியத்தை அறியச் செய்த தேர்ப்பாகனை அனைவரும் பாராட்ட கூட்டத்தில் வறியவராக இருந்த ஒருவர் எழுந்தார்.

“ஐயனே! நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளேன். எங்கள் ஊர்களில் மழையே பெய்யவில்லையே! என்ன செய்வது?”

என்று மெலிந்த குரலில் கேட்டார்.

அவரது கேள்வியைக் கேட்ட வள்ளுவர் மஹாராணியைப் பார்த்துக் கூறினார்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

மஹாராணி வள்ளுவர் தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்டவுடன் ஆசனத்திலிருந்து எழுந்தாள்.

“அடடா, இப்படி மழையின்மையால் நீங்கள் வருந்துவது எனக்குத் தெரியாதே” என்று கூவி விட்டு வானை நோக்கிக் கைகளை உயர்த்தினாள் “வருண பகவானே! என் குடி மக்களுக்கு இப்படி ஒரு இடரா? மழையைப் பொழியுங்கள். பெய்க மழை” எனக் கூவி மனமுருக வேண்டினாள்.’அடுத்த சில கணங்களில் நிகழ்ந்தது அற்புதம்.

வானம் இருண்டது. மேகம் திரண்டது. வள்ளுவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் வானைப் பார்க்க ஒரு துளி பூமியில் விழுந்தது.

பின்னர் வந்தது அடைமழை.

மக்கள் ‘ஹாஹா’வென்று  பத்தினி தேவி ராணியின் சொல் பலித்தது என்று மகிழ கேள்வி கேட்டவரோ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.

மழை நின்றது.

ராணியை அடுத்து மன்னன் எழுந்தான். தன் செங்கோலைக் கையில் ஏந்தி வானை நோக்கினான்.

“வருண தேவரே! நாடெங்கும் பெய்க மழை!” என்று கூவி வேண்டினான்.

அடுத்து இன்னொரு மழை தொடர்ந்தது.

அனைவரும் அதிசயிக்க பந்தலிலொ ஒரு சொட்டு நீர் கூட விழவில்லை. மக்கள் பந்தல் நிர்மாணிப்பை சிலாகித்துத் தமக்குள் பேசிக் கொண்டனர்.

பெரிதாகப் பெய்த மழை ஓய்ந்தது.

புலவர் கூட்டத்தின் அருகில் அமர்ந்திருந்த வேதம் ஓதும் அந்தணர்கள் உடனே எழுந்தனர். வருண ஜபத்தை ஆரம்பித்தனர். அடடா! அதிசயம் இன்னொரு மழை தொடர்ந்தது.

புலவர்கள் பெருமையுடன் உரக்க மக்களைப் பார்த்துச் சொன்னார்கள் :

வேதம் ஓதும் வேதியர்க் கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக் கோர் மழை

மாதர் கற்புடை மங்கையர்க் கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

ஆனால் மாதம் மும்மாரி பெய்வதற்குப் பதிலாக இன்றே ஒரே தினத்தில் மும்மாரி பெய்து விட்டது! இது உலகம் காணா அதிசயம்!

அனைவரும் ஆஹா என்று கூவி மகிழ்ந்தனர்.

வள்ளுவர் அகம் மலர்ந்து முகம் மலர்ந்து அனைவரையும் ஆசிர்வதித்தார்.

அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வர மக்கள் பலவாறாக அன்று நடந்த அதிசயங்களை எண்ணிப் பேசியவாறே நடந்து சென்றனர்!

நாளை பெருங் கூட்டம் அல்லவா கூடப் போகிறது!!

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் : 126, 667, 496, 55

-தொடரும்

TAGS- பாண்டியன்,100 கேள்விகள்! – 2

***  subham ******

24 Avatars of Vishnu Word Search (Post No.5704)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –20-22

Post No. 5704


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

We have 24 incarnations of Lord Vishnu in the word search square. Just to make it easy to identify all the names, the initial letters are given in the capitals

 

S a n a k a b a s i R
H a y e r t a t t a D
a a B a l a r a m a h
y N a r a s i m h a a
a a n K a l k i m n
g y h V a n a m a V
r a s y a v r h D r a
i r i a s m a H B u n
v a r s a m a R u h t
a N K a l k i d s r
V a r a g a d a i
r a m r u K h r r
M a t s Y a g n a a a
N u h t i r P H

 

ANSWERS:-

24 AVATARS OF VISHNU

1.SanakadiMunis (Four Saints), 2.Rishab(h)a, 3.Dattatreya, 4.Dhanvantri

5.Hayagriva, 6.Balarama, 7.Narasimha, 8.Dhr(u)va, 9.Vyasa, 10.Naranarayana

11.Vamana, 12.Matsya, 13.Kalki, 14.Krishna, 15.Hamsa, 16.Parashurama

17.Hari, 18.Prithu, 19.Rama, 20.Buddha 21.Varaga

TAGS- 24 avatars, Word search

–SUBHAM–

Tamil Cross word புயல் 40 Words (Post No.5703)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –12-07

Post No. 5703


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் சுமார் 40 சொற்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்கச் சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பாருங்கள்; தெரியாவிட்டால் விடைகளைக் காண்க.

1 2
3 4   5
6 7
8 9
10  11 12
13 14
15 16 17
25
18 19 20 21
22 23 24

குறுக்கே

2.சாம்பார் செய்ய எது தேவை

2.திருமணப் பெண்

2.இது இல்லாவிடில் எதையும் வாங்க முடியாது

4.கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

6.வெற்றி

7.பிரமுகர் வருகை

8.வலிமை

9.பறவைகள் செய்வது

11.பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சப்தஸ்வரம்,

12.மக்கள்

14.கல்யாணம், வாசனை

16.பானை

15.செவ்வகத்தின் ஒரு பகுதி

17.எரிக்கும் கிரியை

18.ஒரு கேந்திரம்

19.இல்லம்

19.இல்லறத் தலைவி

21.எலியின் எதிரி

22.ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படுக்கையில் விழு

கீழே

  1. எது வீசினால் மரங்கள் சாயும்

3.பானை, இசைக்கருவி

4.இடதின் எதிரப்புறம்

5.மரத்தை அறுக்க உதவும் கருவி

7.நகைச் சுவை காட்சி

8.குதிரை

  1. முனிவர்கள் செய்வது
  2. சூரியன்

12.அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.வியாபாரம்

14.உள்ளம்

12.மக்கள்

15.பூமியின் பெயர்

16.ஆண் குரங்கு

17.அடக்கம்

19.குளம், ஏரியின் வாயில்

20 போய்…………, விட்டு………………..

21.சிவபெருமான் பட்டாளம்

24.செயல்

25.தாக்குதல்

25.கர்நாடக, தெலுங்கு ஆள், பிரம்மச்சாரி,

25.சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

 

 

 

ANSWERS–

புயல், துவரம் பருப்பு, துட்டு, விகடம், கடம், வது, வரம், ஜயம், விஜயம், தவம், வலது, சரிகமபதநி, சலம், மனம், சனம், மணம், பூதகணம், ரம்பம், பலம்,பற, பகலவன், கலம், கடுவன், வடு, வன்,

தொடு, மடு, மனை, மனைவி, விடி படு, வினை, பரி, விற்பனை, பூனை, வடுக,  பவன், அகலம், தமனம், தகன, அவநி

 

பு ப் ரு ம் து ட் டு
ல்   ர ம்
ம் வி ம் ம்
ம்
நி ரி ம்
 வ வி ம்
ம் ற்
டு
ன் னை வி பூ னை
ன் தொ டு டு வி

1.புயல்- எது வீசினால் மரங்கள் சாயும்

2.துவரம் பருப்பு- சாம்பார் செய்ய எது தேவை

  1. வது- திருமணப் பெண்

3.துட்டு- இது இல்லாவிடில் எதியும் வாங்க முடியாது

3.கடம்- பானை, இசைக்கருவி

4.வலது- இடதின் எதிரப்புறம்

4.வரம்- கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

5.ரம்பம்- மரத்தை அறுக்க உதவும் கருவி

6.ஜயம்- வெற்றி

7.விஜயம்- பிரமுகர் வருகை

7.விகடம்- நகைச் சுவை காட்சி

8.பரி- குதிரை

9.பலம்- வலிமை

9.பற- பறவைகள் செய்வது

10.தவம்- முனிவர்கள் செய்வது

11.பகலவன்  — சூரியன்

11.பதநி- பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சரிகமபதநி- சப்தஸ்வரம்,

12.சனம்- மக்கள்

12.சலம்- அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.விற்பனை- வியாபாரம்

14.மனம்- உள்ளம்

14.மணம்- கல்யாணம், வாசனை

15.அகலம்- செவ்வகத்தின் ஒரு பகுதி

15.அவநி  – பூமியின் பெயர்

16.கலம்- பானை

16.கடுவன் — ஆண் குரங்கு

17.தமனம்- அடக்கம்

17.தகன-எரிக்கும் கிரியை

18.பவன்  — ஒரு கேந்திரம்

18.வன்  —  தாக்குதல்

19.மடு- குளம்,ஏரியின் வாயில்

19.மனை– இல்லம்

19.மனைவி- இல்லறத் தலைவி

20.விடு

20.விடு

21.பூனை- எலியின் எதிரி

21.பூதகணம்- சிவபெருமான் பட்டாளம்

22.தொடு- ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படு- படுக்கையில் விழு

24.வினை- செயல்

25.வடு- சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

25.வடுக- கர்நாடக,தெலுங்கு ஆள் ,பிரம்மச்சாரி, கடி- பல்லால் செய்யும் செயல்

TAGS–புயல் 40 Words , Tamil Cross word

–subham–

நாலாவது கடவுள் ஹனுமான்! கம்பன் புகழாரம் (Post No.5702)

WRITTEN by London Swaminathan



swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –7-47 am

Post No. 5702


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Written for the Radha Madhav Kalyan Mahotsav Souvenir in London released on 25-11-2018

கம்ப ராமாயணத்தில் ஹனுமானை மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கிறான் கம்பன். . ‘சொல்லின் செல்வன்’ என்ற சிறப்புப் பட்டத்தை, அடை மொழியை, ஹனுமானுக்கு ராமன் வழங்கியதைப் பலரும் அறிவர். யுத்த காண்டத்தில் ஓரிடத்தில் எதிரி கூட அனுமனைப் புகழும் ஒரு பாடலை நம் முன் வைக்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்.

எல்லோருக்கும் தெரிந்த கடவுள் திரிமூர்த்தி- அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு அடுத்தபடியாக யாராவது உளரா? அப்படியானால் அவர் யார்?

கம்பன் சொல்கிறான்:- உண்டு, அவன்தான் அனுமன்.

ஒருவரை நண்பர்கள் புகழ்ந்தால் நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஒருவனை அவனுடைய எதிரியே புகழ்ந்தால்- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம் அல்லவா?

ராவணன் தரப்பைச் சேர்ந்த மாலியவான் கூற்றாக கம்பன் சொல்லும் பாடல் இதோ:

 

முறைகெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்

குறைஇலை குணங்கட்கு என்னோ கோள்  இலா  வேதம் கூறும்

இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமேதான்

அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.

-மாயா சீதைப் படலம், யுத்த காண்டம்,

பொருள்

உலகப் படைப்பின் முறையே மாற வேண்டுமானாலும், அனுமன், தான் நினைத்ததை செய்து முடித்து விடுவான். அவனிடமுள்ள குணங்களுக்குக் குறைவில்லை. குற்றமற்ற வேதங்கள் சொல்லும் கடவுளர் மூவர்தான் என்பது ஆராயாதோரின் கருத்து ஆகும். ஒலிக்கும் வீரக் கழலை அணிந்த அனுமனோடு முதற் கடவுளர் நால்வர் ஆவர்.

இது அருமையானதொரு பாராட்டு. அனுமனின்றி ராமன் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆகவே கம்பன் கூறுவது உண்மையே.

 

இதற்கு முன்னர், ராமனே அனுமனைப் புகழ்ந்த காட்சியையும் காணலாம்.:

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா (Welcome to Kishkinda) ” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராம லெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

TAGS–  நாலாவது கடவுள், ஹனுமான், கம்பன், அநுமன்

-சுபம்-

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! (Post No.5701)

 

Written by S Nagarajan

Date: 26 November 2018

GMT Time uploaded in London –6- 08 am
Post No. 5701

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்!

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான். அருகிலே அமைச்சர்களும், தளபதியும், ஒற்றர் தலைவரும் நின்றிருந்தனர்.

‘என்ன செய்தி?’ என அமைச்சரை நோக்கி மன்னன் கேட்க, அவர் ஒற்றர் தலைவரை நோக்கித் தலையை அசைத்தார்.

“ மன்னரே! நல்ல செய்தி தான்! வள்ளுவர் தனது தவத்தை முடித்துக் கொண்டு பாண்டிய நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!”

ஆஹா என மன்னன் துள்ளிக் குதித்தான். அமைச்சர் புன்முறுவல் பூத்தார்.

“அமைச்சரே! தெய்வப்புலவரின் திருப்பாதங்கள் இந்த சங்கம் வளர்க்கும் மதுரையில் பதியப் போகிறதா! உடனே கிளம்புவோம்! அவரை உரிய முறைப்படி வரவேற்போம். ராணியிடம் செய்தி தெரிவியுங்கள். மகளிரும் வருவர்”- பாண்டியனின் உற்சாகமான ஆணையை ஆமோதித்த அமைச்சர் குறுகுறுவென்று பாண்டியனைப் பார்த்தார்.

பாண்டியன் : “தங்கள் பார்வையில் ஏதோ ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறதே!”

அமைச்சர் : ஆம் மன்னா! தெய்வப்புலவரின் வருகையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் அவர் தவத்தின் பயனையும் அவர் உற்றுணர்ந்த அறிவையும் கொண்டு சேர்க்க வேண்டும். இது மன்னராகிய தங்களின் கடமையாக நான் நினைக்கிறேன்.

பாண்டியன்: அருமை! அருமை! அப்படியே செய்வோம்.  எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களிடம் – ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, வாழ்வியல் மர்மங்களில் அவர்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை எழுதி அரண்மனையில் சேர்க்கச் சொல்லுங்கள்; புலவர்களை விட்டு விடாதீர்கள்; அவர்களுக்குத் தெய்வப்புலவரின் புலமையின் மீதும் சந்தேகம்; அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் மீதும் பொறாமை! ஆகவே அவர்கள் அறிவுத் தெளிவு பெற இதுவே சரியான சந்தர்ப்பம். வந்து சேரும் கேள்விகளில் தலையாய நூறு கேள்விகளை – அவை ரகசியங்களை விளக்கச் சொல்லும் கேள்விகளாக, என்றும் எல்லோருக்கும், அதாவது மனித குலத்திற்கே பயன்படுபவையாக இருத்தல் வேண்டும். கேள்விகளை நாமே தேர்ந்தெடுப்போம். என்ன சொல்கிறீர்கள்!

அமைச்சர்: உத்தரவு மன்னா! தங்களின் அறிவும் முடிவும் மக்களை எப்போதுமே மேம்படுத்துவதாக அல்லவா அமைகிறது!

*

மன்னரின் வரவேற்பை வள்ளுவப்பிரான் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். பாண்டியனை செங்கொல் தவறாது அரசாளச் செய்யும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தார்.

அம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவனத்தில் மக்கள் கூட்டம் – ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.

மகளிர் ஒரு பாலும் ஆண்கள் மறு புறமும் சீராய் அமர்ந்திருக்க பெரிய மேடையில் சிறப்பான ஆசனத்தில் வள்ளுவப் பிரான் அமர்ந்திருந்தார். அவருக்குக் கீழே ஆசனங்களில் மன்னரும், மஹாராணியும், அமைச்சரும், தளபதியும், முக்கிய அரசவை பிரமுகர்களும் அமர்ந்திருக்க மன்னருரும் ராணியும் வள்ளுவருக்குப் பாதபூஜை செய்து மகிழ்ந்தனர்; மக்கள் கரம் தட்டிப் பாராட்டி மகிழ்ந்தன்ர்; பக்தியுடன் வள்ளுவரை வணங்கினர்.

*

சபை ஆரம்பித்தது. மன்னர் வள்ளுவரை நோக்கி, “வாழ்வியல் மர்மங்களை, அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இங்கே பல்லாயிரக் கணக்கானோர் கூடி உள்ளனர். அவர்கள் கேள்விகளோ எண்ணற்றவை. அவற்றில் தலையாய நூறு கேள்விகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

தேர்ந்தெடுத்தவர்களிடமே அந்தக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி விட்டோம். ஆரம்பிக்கலாமா சபையை?

வள்ளுவர் சொற்களில் சிக்கனமானவர். அவர் வாயிலிருந்து வரும் தமிழெல்லாம் அமிர்தம். தலையை அசைத்தார்.

ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்களும் மேடையின் அருகிலே அமர்ந்திருந்து இடக்காகக்  கேட்கும் புலவர்கள் உள்ளிட்டோரும் கற்றோரும் மற்றோரும் அமர்ந்திருக்க முதல் கேள்வியே அற்புத இரகசியத்திற்கான கேள்வியாக அமைந்தது.

சாமானியர் ஒருவர் எழுந்தார்: “வள்ளுவப் பிரானே! நீடு வாழ வேண்டும் என்பதே  மக்கள் அனைவரது ஆசையும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்க அவர் கூறினார்:

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

கூட்டம் ஆரவாரித்தது. மன்னன் தன் சிரம் வாழ்த்தி மதுரைச் சொக்கரையும் அன்னை மீனாட்சியையும் நினைந்து உருகினான்.மஹாராணியோ கண்ணீர் திவலை சொட்ட பிரார்த்தித்தாள்.

அடுத்த கேள்வி புயலென வந்தது.”வள்ளுவரே! எங்கும் துன்பம்; எனக்கு எப்போதும் துன்பம்; துன்பம் நீங்க வழி என்ன?”

வள்ளுவர் கூறினார்: “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல”

ஒரு பிரமுகர் எழுந்தார் : ஐயனே! என்னிடம் இல்லாத செல்வம் இல்லை; இல்லாத ஆடை, அணி, ஆபரணங்கள், உணவு வகைகள், தோட்டங்கள், மணிகள், ரத்தினங்கள் இல்லை. ஆனால் என்னால் ஒரு பிடி உணவைக் கூட ஏற்க முடியவில்லையே! உடல் வியாதி வருத்துகிறதே! காரணம் என்ன?

வள்ளுவர் கூறினார் :

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

அருகிலிருந்த புலவர்களில் ஒருவர் கர்மவினை பற்றி விளக்கி வள்ளுவரின் சொற்களின் ஆழத்தை விரித்து எடுத்துரைத்தார்.

மக்கள், தம் தம் வினைகளே எதற்கும் காரணமாக அமைவதை வள்ளுவர் எடுத்துரைத்த பாங்கினைக் கண்டு வியந்தனர்.

இன்னொருவர் எழுந்தார் :”ஐயனே! அவர் செல்வம் இருந்தும் உண்ண வகையின்றித் தவிப்பதை எடுத்துரைத்தார். இன்றும் நாளையும் எனக்கு உதவும் உணவுக்குப் பஞ்சமில்லாத ஒரு நல்ல துய்க்கும் சேமிப்பு உபாயத்தைச் சொல்லி அருள்வீர்களாக!

வள்ளுவர் அருளினார் : அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.

புலவர்களில் ஒருவர் ஆஹா என்று கூவி வைப்புழி என்றால் பிற்காலத்தில் பலனைத் தரும் ஒரு சேமிப்பு உத்தரவாதம் என்று கூவி மகிழ்ந்தார்.

கூட்டத்தில் இருவர் ஒரே சமயத்தில் எழுந்தனர்:

“ஐயனே! இந்த உலகத்தில் வியக்கத் தகாதது ஏதாவது உண்டா?”

அதே சமயத்தில் இன்னொருவர், “ஐயனே! கூட இருந்தே குழி பறிக்கிறார்களே, அதைச் செய்யலாமா? என்றார்.

முதல்வரை நோக்கி வள்ளுவர் கூறினார்: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

அடுத்தவரை நோக்கிக் கூறினார்: நயவற்க நன்றி பயவா வினை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

வள்ளுவரின் சீரிய சொற்களுக்கு பண்டிதர்களும், புலவர்களும் பல்வேறு மேற்கொள்களைக் காட்டிப் பேசி மக்களுக்கு உத்வேகம் ஊட்டினர்.

மக்கள் மகிழ்ந்தனர்.

செய்தி நாடெங்கும் பரவ, எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் திரள் மீனாட்சி அம்மன் திருவாலயத்தை நோக்கி வர ஆரம்பித்தது.

மறுநாள் தன் முயற்சி அனைத்தையும் கொண்டு படைவீரர்களை அழைத்து அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தான் பாண்டியன்; இதை மேற்பார்வை

பார்த்தவர் மஹாராணி.

அடுத்த நாள் சபை ஆரம்பித்தது!

–      தொடரும்

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110

Tags– 100 கேள்விகள்

xxxx subham xxx

HUMBUG – NEW INSECT DISCOVERED! (Post No.5700)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 25 November 2018

GMT Time uploaded in London –8-06 am

Post No. 5700

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

SCIENTISTS ANECDOTES

A Cambridge lecturer on the history of chemistry thus describe the celebrated Mr Boyle,
He was a great man; a strong man; he was the father of modern chemistry, and the brother of Earl of Cork.

Xxx

I DON’T KNOW ELECTRICITY!

Lord Kelvin, the great physicist once paid an unexpected visit to an extensive electrical plant. He had not disclosed his identity and was shown through the plant by a young foreman who painstakingly explained all the rudiments of electrical science, as here manifested to the great man.

When the tour was completed, Kelvin asked him quietly,
What then is electricity?
His guide was stumped.
No matter, Lord Kelvin said kindly,
That is the only thing about electricity which you and I do not know..

Xxxx

NEW INSECT DISCOVERED- HUMBUG


The great naturalist Charles Darwin, was once approached by two small boys of the family whose guest he was.
They had caught a butterfly, a centipede, and a grass hopper.
Taking the centipede s body, the butterfly s wings, the beetle s head and the grasshoppers legs, they had glued them together to make an alarming and original insect.

We caught this bug in the field, they said innocently.
What kind of a bug is it Mr Darwin?
Darwin examined it with great solemnity.
Did you notice whether it hummed when you caught it,boys? He asked gravely.
Yes sir, they answered , trying to conceal their mirth
Just as I thought, said Darwin, it is a humbug.

FROM THE DICTIONARY—-

HUMBUG noun

  1. 1.

deceptive or false talk or behaviour.

“his comments are sheer humbug”

synonyms: hypocrisy, hypocritical talk/behaviour, sanctimoniousness, posturing, cant, empty talk; More

o

verb

  1. 1.

deceive; trick.

“poor Dave is easily humbugged”

synonyms: deceive, trick, delude, mislead, fool, hoodwink, dupe, hoax, take in, beguile, bamboozle, gull, cheat; More

Xxx

USELESS DOCTOR!

The wife of the great physicist Robert A Millikan, happened to pass through the hall of her home in time to hear her maid answer the telephone,
Yes, Mrs Millikan overheard,
This is where Mr Millikan lives, but he is not the kind of doctor that does anybody any good.

Tags- Millikan, Darwin, Humbug, Boyle, Kelvin

XXXX SUBHAM XXXX

யாரடாவன் கூட்டத்துல பாம்பு விடறது? (Post No.5699)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 25 November 2018

GMT Time uploaded in London –7-39 am

Post No. 5699

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சார்ல்ஸ் லாம்ப் (CHARLES LAMB) என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர், கவிஞர். அவர் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். திடீரென்று கூட்டத்தில் ‘உஸ்’ என்ற சப்தம்.  பலமாகக் கேட்டது. திடீரென்று ஒரே நிசப்தம். எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

லாம்ப் கொஞ்சமும் அசரவில்லை. உலகத்தில் மூன்று ஜந்துக்கள்தான் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒலி உண்டாக்கும்

1.குள்ள வாத்து

2.பாம்பு

3.முட்டாள் பயல்

யாரடாவன்? இந்த மூன்றில் இங்கே எது இருக்கிறது? துணிச்சல் இருந்தால் உன் மூஞ்சியைக் காட்டு.

(அவர் இப்படிச் சொன்னபின் பேரமைதி; கூட்டம் இனிதே நடந்தது.)

xxxxx

scientist Scheele

தவறான ஆளுக்கு விருது! அடித்தது குருட்டு யோகம்!

மூலகங்கள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய அஸ்திவாரக் கற்கள். 118 மூலகங்கள் திட, திரவ, வாயு ரூபங்களில் இருக்கும். அவற்றில் ஒன்று மக்னீஷியம் (MAGNESIUM). அதைக் கண்டு பிடித்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஷீல் (SCHEELE) என்பவர் ஆவார்.

ஒருமுறை, பிரெஞ்சு விஞ்ஞானிகள் பாரீஸ் நகருக்கு வந்த சுவீடன் மன்னர் மூன்றாவது குஸ்டாவைச் (GUSTAV III) சந்தித்தனர்.

மன்னரே! நீவீர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலி; உமது நாடு மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் என்பவரை உடைத்தாய் இருக்கிறதே! அஹோ, பாக்யவான்! என்று சிலாகித்துப் பேசினர்.

மன்னருக்கு ஒரே வெட்கம்: ஏனெனில் அவர் விஞ்ஞான முன்னேற்றம் பற்றி அறியாத ஞான சூன்யம்! இருந்தபோதிலும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு ‘நன்றி நன்றி’ என்று புகன்றார்.

அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன், சுவீடனுக்கு செய்தி பறந்தது.

“ஷீல் அவர்களுக்கு பிரபு (COUNT) என்ற பட்டம் கொடுத்து கௌரவியுங்கள்”.

சுவீடன் பிரதமர் அந்தச் செய்தியைப் பார்த்து,

அட ராஜாவின் கட்டளை; உடனே நிறை வேற்ற வேண்டும்.உடனே ஷீல்  என்பவரின் விலாசத்தைக் கண்டுபிடித்து முழு விவரமும் அறிக; இங்கே கொணர்க– என்று காரியதரிசிக்குக் கட்டளையிட்டார்.

அவர் உடனே அட்ரஸ் புஸ்தகத்தைப் பார்த்து ஒரு ஷீல் என்பவரைக் கண்டு பிடித்தார்.

மண்டு, மக்கு, முட்டாள் காரியதரிசி கண்டுபிடித்தது இதுதான்ந்— ஷீல் என்பவர் நமது பீரங்கிப் படையில் லெப்டினன்ட் அந்தஸ்தில் இருக்கிறார். நல்ல திறமையான படைவீரன். அது மட்டுமா பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கில்லாடி என்று.

உடனே அந்த ஊர் பேர் தெரியாத ஆசாமிக்கு பிரபு பட்டம் கொடுத்து ஆசனத்தில் அமர்த்தினர்.

மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் அவர்களோ, முன்னைப் போலவே சோதனைச் சாலையில் ரசாயனக் குடுவைகளுடனும் சோதனைக் குழாய்களுடனும் மன்றாடிக் கொண்டிருந்தார்.

XXX

டேய் குரங்கு! என்ன முழிக்கிறாய்?

ஒரு பிரபல விலங்கியல் நிபுணர், ஒரு குரங்கைப் பிடித்து அதற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுத்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை; குரங்கு, குரங்காகவே இருந்தது. அவருக்கு ஒரு ‘ஐடியா ‘ (IDEA) தோன்றியது. ஒரு பந்தையும்  மட்டையையும் குரங்கின் கையில் கொடுத்து ஒரு அறைக்குள் பூட்டி வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் பேரார்வத்துடன் குரங்கு என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்று கிளம்பினார். சத்தம் இல்லாமல் சாவித் துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்தார். துவாரத்தின் மறு புறத்திலிருந்து ‘இரண்டு விழிகள்’ அதே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன!

(மனிதனுக்குக் குரங்கு புத்தி; குரங்குக்கு மனித புத்தி என்று சொல்லலாமே)

Tags-   கூட்டத்துல பாம்பு,ஷீல்,  மக்னீஷியம், குரங்கு பந்து

–சுபம்–

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்! (Post No.5698)

John Freeman, right, interviewing Carl Gustav

Written by S Nagarajan

Date: 25 November 2018

GMT Time uploaded in London –6- 30 am
Post No. 5698

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!

ச.நாகராஜன்

Jung’s regret over “I don’t need to believe, I know.”

வருடம் 1959. பி.பி.சி.யில் உள்ளோருக்கு ஒரே மகிழ்ச்சி. வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல உளவியலாளர் கார்ல் குஸ்டாவ் ஜங் ஒரு பேட்டி தர ஒத்துக் கொண்டார். ஸ்விட்ஸர்லாந்தில் ஜூரிச் நகரில் ஒரு ஏரிக்கரையின் அருகில் அமைந்திருந்த தனது வீட்டில் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். பேட்டி எடுக்க வந்தவர் பிரபல பேட்டியாளர் ஜான் ஃப்ரீமேன்.

ஜான் ஃப்ரீமேன் (John Freeman) (பிறப்பு 19-2-1915; மறைவு 20-12-2014),

சாதாரண பேர்வழி இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ராஜதந்திரி. போர்வீரர். பேட்டி எடுப்பதில் நிபுணர். அவர் சர்ச்சிலை பேட்டி எடுத்த போது அவரைப் பாராட்டியவுடன் சர்ச்சில் கண்ணீர் விட்டுக் கலங்கினார். இந்தியாவின் ஹைகமிஷனராக ஜான் ஃப்ரீமேன் நியமிக்கப்பட்ட போது இந்தியா காமன்வெல்த்திலிருந்து விலகி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்த போது அதை தனது சாதுரியத்தால் தவிர்க்க வைத்தவர். இங்கிலாந்தின் தூதுவராக அவர் வாஷிங்டனுக்கும் அனுப்பப்பட்டார்.

‘Face to Face’ என்ற அவரது நிகழ்ச்சி தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இன்றும் கூட அந்த நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பார்க்கலாம். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், எடித் சிட்வெல், சிசில் பீடன், ஈவிலின் வா, ஹென்றி மூர், மார்டின் லூதர் கிங் என ஏராளமான பிரபலங்களை அவர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் புகழ் பெற்றார்.

99 வயது வரை வாழ்ந்து அவர் 20-12-2014இல் மறைந்தார்.

ஆனால் ஜங்குடன் அவர் எடுத்த பேட்டி மட்டும் தனித் தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது. அருமையான அந்தப் பேட்டியில் காமராவிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்த ஃப்ரீமேன், ஜங்கிடமிருந்து உண்மைகளைப் பெற, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்.

1959இல் ஜங் இந்தப் பேட்டியைத் தந்த போது அவருக்கு வயது 84. இதற்குப் பின்னர் 18 மாதங்களில் அவர் மறைந்தார். (ஜங் பிறப்பு 26-7-1875 மறைவு 6-6-1961).

பேட்டியின் போது நான்கு முறை ஜங், “that  is difficult to say” என்று கூறினார். அப்படி கேள்விகள் கூர்மையாக  இருந்தன. ஆனால் அந்த வயதிலும் அவரது புத்தி கூர்மை வியக்கத் தக்கதாக இருந்தது.

பேட்டி மிக விரிவாகப் போய்க் கொண்டிருந்த போது திடீரென்று ஃப்ரீமேன், “கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.பேட்டி இப்படி அமைந்தது:

Freeman : And did you believe in God?

Jung: Oh! Yes.

Freeman : Do you now believe in God?

Jung : Now? (pause) Difficult to answer. I know. I don’t need to believe. I know.

பின்னர் பேட்டி தொடர்ந்தது.

நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஜங் பற்றி கடுமையான விமரிசனம் எழுந்தது. அவர் கிறிஸ்தவ இறையியல் கொள்கை பற்றிச் சற்று விமரிசித்தே வந்தவர். ஆகவே அவர் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று அனைவருக்கும் கோபம்!

ஜங்கிற்கு ஒரே வருத்தம். தான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்று!

ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போன்ற ஒரு விடையாக ஆகி விட்டது!

பின்னால் அவர் எழுதினார் இப்படி: “நான் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்ததை நான் நம்புகிறேன். ஆகவே தெரிந்த ஒன்றைப் பற்றிய நம்பிக்கை என்பது தேவையில்லாத ஒன்று. ஆகவே கடவுள் இருக்கிறார் என்பது நிச்சயமான போது அவர் இருக்கிறாரா என்பது பற்றிய நம்பிக்கை தேவை இல்லையே!”

இதைத் தான் அவர் சொல்லி இருந்தார்!

தனது பதிலை இப்படி விளக்கமாகக் கூறி இருந்தால் இப்படி ஒரு தவறான புரிதல் எழுந்திருக்காதே, விளக்கமாகப் பதிலைச் சொல்லாமல் ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போல ஆகி விட்டதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

கடவுள் பற்றிய உண்மை சிக்கலான ஒன்று.கடவுள் ஒரு மர்மம். கடவுளின் தன்மை மனித அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் நம்பினார்.

ஜங் ஸ்விட்சர்லாந்தில் உள்ள குஸ்நாஸ்ட்டில் இருந்த (Kusnacht, Switzerland)  தனது வீட்டின் வாசல் கதவில் இப்படி லத்தீன் வாசகங்களைப் பொறித்திருந்தார் : “VOCATUS ATQUE NON VOCATUS DEUS ADERIT.” இதன்பொருள், அழைத்தாலும் சரி, அழைக்கா விட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்!  (“Called or not called, the god will be there.)

கார்ல் ஜங் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றியெல்லாம் அறிவியல் துளிகள் தொடரில் விரிவாக எழுதி இருப்பதால் அதை இங்கு மீண்டும் தரவில்லை.

உலகம் கண்ட உன்னத உளவியலாளர்களில் ஒருவர் ஜங்!

TAGS–கடவுள் நம்பிக்கை,  கார்ல் ஜங்

***