MILTON AND RIG VEDA ON LIGHT (Post No.4921)

WRITTEN by London Swaminathan 

 

Date: 16 April 2018

 

Time uploaded in London –  15-51 (British Summer Time)

 

Post No. 4921

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

GAYATRI Mantra/hymn is the most powerful mantra in the Rig Veda and it is found in other Vedas as well. It is a great wonder that mantra which reverberated on the banks of River Sarasvati and later Sindhu (Indus) and Ganges is still chanted by millions in India. While Brahmins only were chanting in those days and in recent years, great saints like Chinmayananda and Sathya Sai baba made it popular among other communities as well.

 

The meaning of the Mantra is

Let us meditate on that excellent glory of the divine vivifying Sun (light) and May He enlighten us.

There are lot of Mantras/hymns on Ushas (the dawn):

Immortal Ushas, please by praise

What mortal may enjoy they days!

Who, mighty one, can reach thy place!

Rig Veda 1-30-20

 

The parallelism of thought is very remarkable, between the general Vedic concept of Ushas with the lines of blind poet Milton.

 

Compare the following lines on Ushas (Dawn)

 

English poet, though blind, sings about light in the following lines:

 

“Hail, holy light, offspring of Heaven first born,

Or of the eternal, co-eternal beam

May I express thee unblamed? since God is light,

And never but unapproached light

Dwelt from eternity, dwell thou in me,

Bright effluence of bright essence increate

Or hear’st thou rather, pure ethereal stream,

Whose fountain who shall tell? Before the sun

Before the heavens thou wert, and at the voice

Of God, as with a mantle, didst invest

The rising world of waters dark and deep

Won from the void and formless infinite.

Paradise Lost, Book 3

 

The Rig Veda says

Fair as a bride embellished by her mother thou showest forth thy form that all may see it

Blessed art thou, O dawn. Shine yet more widely. No other Dawns have reached what thou attainest.

 

Rich in cattle, horses, and all goodly treasurers, in constant operation with the sunbeams,

 

The Dawns depart and come again assuming their wonted forms that promise happy fortune.

Obedient to the reins of Law Eternal give us each thought that more and more shall bless us.

Sine thou on us today, Dawn, swift to listen. With us be riches and with chiefs who worship.

RV 1-123

 

Upanishads say,

To the illumined soul the Self is all. For Him, who sees everywhere oneness, how can there be delusion or grief?

–Isha Upanishad 7

The whole world is illumined by His ilight.

–Sveteshvatara Upanishad 6-14

 

Milton also said God is Light (see above)

 

–Subham–

 

யூத மத ‘ரப்பை’ ஜோக்குகள்! (Post No.4920)

யூத மத ரப்பை ஜோக்குகள்! (Post No.4920)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 16 April 2018

 

Time uploaded in London –  11-03 am (British Summer Time)

 

Post No. 4920

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

இது பழைய ப்ரஷ்யாவில் (ஜெர்மனி, போலந்தின் பகுதிகள் கொண்ட நாடு) நடந்தது. Frederic the Great பிரெடெரிக் தெ க்ரேட் (1740-86) என்று அழைக்கப்படும் மன்னரிடம் ஒரு ப்ராடெஸ்டன்ட்  (protestant bishop) பிஷப் சென்றார்.

“மன்னரே எனது சமயத்துக்கு ஒரு அலுவலகம் தேவை”.

“அடக் கடவுளே! இப்பொழுதுதானே அந்த இடத்தை வேறு ஒரு பிரிவுக்குக் கொடுத்தேன். ஆனால் கத்தோலிக்க மதப் பிரிவுக்கான ஆபீஸ் இடம் காலியாக இருக்கிறது.

அப்படியா! என்று சொல்லிவிட்டு ப்ராடெஸ்டன்ட் சமயப் பிரிவு பிஷப் போய்விட்டார்.

 

ஒரு வாரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.

“மன்னரே! உண்மைக் கடவுளைக் கண்டு விட்டேன். நான் இப்பொழுது கத்தோலிக்க குருவாக மாறிவிட்டேன். நீங்கள் சொன்னீர்கள், கத்தோலிக்கப் பிரிவு அலுவலகம் காலியாக இருப்பதாக. அடியேனுக்கு அருள்கூர்ந்து அதைக் கொடுக்கலாமே.”

மஹா ப்ரெடெரிக் சொன்னார். “என்ன துரதிருஷ்டம் உங்களுக்கு! அதுவும் போய்விட்டதே. ஆனால் ஒரு நல்ல செய்தி. நேற்று யூதமத ரப்பை (சமய குரு, அறிஞர், யூத சட்ட நிபுணர்) இறந்து விட்டார். இப்பொழுது அவர்களுடைய சைனகாக் (கோவில்) என் கையில் உள்ளது.

 

ஒருவேளை நீங்கள்  யூதமத………………………………

 

அவர் போய்விட்டார்.

 

xxx

 

Bronx Zoo ப்ரான்க்ஸ் நகர மிருகக் காட்சி சாலை

 

ஒருவர் ப்ரான்க்ஸ் நகர மிருகக் காட்சி சாலையில் வேலை கேட்டு வந்தார். அவர் ஒரு பருமனான ஐரிஷ்காரர். அவரிடம் வேலை வாய்ப்பு மனுவைக் கொடுத்து,

“அன்பரே, இதைப் பூர்த்தி செய்யுங்கள்; பின்னர் நிரப்பிய மனுவை எங்களிடம் கொண்டு வாருங்கள்” என்றனர் அதி காரிகள்.

அவரும் பூர்த்தி செய்தார்.

ஒரு கேள்வி ரபிஸ்(Rabies) என்றால் என்ன? அதை எப்படி தடுப்பீர்கள்?

அவர் எழுதினார்,

ரப்பைஸ் என்பவர் யூத சமய நிபுணர்; அவர் வந்தால் யாரும் தடுக்க முடியாது!

 

ரபிஸ் (Rabies) என்பது வெறிநாய்கள் மற்றும் மிருகங்களின் எச்சில் மூலம் பரவும் கொடிய வைரஸ் நோய்; மரணம் கூட வரும்; ரப்பைஸ் (Rabbis) என்பவர் யூத சமய சட்ட நிபுணர்கள்; சமய வித்தகர்)

 

விலங்கியல் பூங்காவின் மனுவை நிரப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் பொருத்த மற்ற பதிலை எழுதினார் ஐரிஷ்காரர்!!!

 

xxx

 

ஒரு யூத மத நபர் பின்ஸ்க் (Pinsk) நகரில் இருந்து மின்ஸ்க் (Minsk) நகருக்கு வேலைக்குப் போனார். ஆறு மாதம் ஆகிவிட்டது வெள்ளிக்கிழமை மாலை வேளை; நண்பரிடம் விடைபெற்றார்.

அடக்கடவுளே! நாம் யூதர்கள்! வெள்ளி மாலை முதல் சனி மாலை வரை Sabbath சப்பத் என்பது மறந்துவிட்டதா? நீ மின்ஸ்க் நகருக்குப்  பயணம் செய்தால், அது அபச்சாரம். என்னுடன் தங்கி விட்டு மெதுவாகப் போகலாம்.

 

அவர் சொன்னார்,

“இதோ பார், பிள்ளைக்குட்டி பெண்டாட்டியை விட்டு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. எனக்கு வார இறுதி விடுமுறைதான் பெரிது; சப்பத் அல்ல.

அட நீ ஒன்று ஆறு மாதம் பிரிந்து இருந்து விட்டாய்! 24 மணி நேரம் கூட இருந்தால் குடி முழுகிப் போய்விடுமா? பெரிய வீடு இருக்கிறது. இங்கே நல்ல யூத மத சம்ப்ரதாய உணவு கிடைக்கும்; வா, உள்ளே என்று தர தர என்று இழுத்து, அறைக்குள் விட்டார்.

 

 

அவரும் வேண்டா வெறுப்பாக அங்கே தங்கினார். 24 மணி நேரத்துப்பின் புறப்பட்டார். அவரது நண்பரோ உள்ளே மீண்டும் இழுத்துச் சென்று இன்னும் ஒரு நாள் தங்கிவிட்டுப் போ என்றார்.

மீண்டும் அதே பல்லவி; என் பிள்ளைக்குட்டி,பெண்டாட்டி…..

 

“சீ போ; ஒரே ஒரு நாள் இரு”.

அவரும் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நாள் இருந்தார்.

மறு நாள் வீட்டை விட்டு ஓடிவிடத் தயாராக இருந்த அவர் நண்பரிடம்; இப்பொழுது திருப்திதானே?  நான் பின்ஸ்க் நகருக்குப் புறப்படுகிறேன் என்றார்.

 

கட்டாயம் போகலாம், நண்பா! இதோ பில்! இரண்டு நாள் சாப்பாடு, தங்குமிடச் செலவு!

 

அதைப் . பார்த்தவுடன் அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆகாஸத்துக்கும் பூமிக்கும் குதித்தார்

 

இது என்னையா அநியாயம்! நீ என்ன கொள்ளைக்கார பிஸினஸ் நடத்துகிறாயா?

ஊருக்குப் போக எத்தனித்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து உள்ளே தள்ளினாய். மீண்டும் புறப்பட்டபோது இன்னொரு நாள் விருந்தினராக இரு என்றாய்? இப்பொழுது என்ன மூஞ்சிக்கு பில்?

 

இருவருக்கும் இடையே பயங்கர கார சார வாதம். அப்பொழுது இடம் கொடுத்து பில்லும் கொடுத்த நண்பர் சொன்னார். இரு நான் மின்ஸ் நகர ரப்பையைக் கூப்பிடுகிறேன் அவர் என்ன சொல்கிறார் என்று கேள்- என்றார்.

அவரும் சம்மதித்தார்; நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

 

ரப்பையும் வந்தார்; நீண்ட தாடியைப் பல முறை உருவித் தடவிக் கொடுத்தார். சொன்னதையே திரும்பத் திரும்பக் கேட்டார். பல முறை கேட்ட பின்னர், நீ பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்றார்.

இவரோ மறுத்தார்; நியாயமே இல்லை என்று வாதாடினார்.

இறுதியில் மனைவிமக்களைக் காண வேண்டும் என்ற பேரவாவில், சரி நாசமாய்ப் போய்த் தொலை; இந்தா உன் பணம்; எழுத்து மூலம் ரசீது கொடு; என்றார்.

இடம் கொடுத்த நண்பரும் அதை வாங்கிக் கொண்டு, ரப்பை வெளியே போனவுடன் ரஸீதையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தார்.

பின்ஸ்க் நகர நண்பருக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.

என்ன மயி===== க்கு இவ்வளவு நேரம் என்னிடம் பணம் கேட்டாய்? ஏன் இப்பொழுது திருப்பித் தருகிறாய்?

 

அன்பரே! இந்த ஊர் Rabbi ரப்பை எவ்வளவு முட்டாள் என்பதை காட்டத்தான் இப்படிச் செய்தேன்.

இவருடன்தான் நாங்கள் தினமும் மாரடிக்கிறோம்.

 

நண்பருக்கு அழுவதா சிரிப்பதா- என்று தெரியவில்லை!

 

குட் பை Good Bye என்று சொல்லி விட்டு பின்ஸ்க் நகருக்கு ஓடினார்- ஓடினார்- ஓடிக்கொண்டே இருந்தார்.

 

சுபம்-

குரானில் உள்ள எழுத்துக்கள் 323015 அல்லது 330113! (Post No.4919)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 16 April 2018

 

Time uploaded in London –  8-07 AM  (British Summer Time)

 

Post No. 4919

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

குரான் சிறப்பு

 

குரானில் உள்ள எழுத்துக்கள் 323015 அல்லது 330113!

 

ச.நாகராஜன்

 

இஸ்லாமியர்களுக்கு புனிதமான நூல் திருமறையான குரான். அதன் சிறப்பை முற்றிலுமாகச் சொல்ல முடியாது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவு.

 

சர் இ.ஏ.வாலிஸ் பட்ஜ் (Sir E.A.Wallis Budge, Kr) என்னும் அறிஞர் கேம்பிரிட்ஜில் பணியாற்றிய அறிஞர்.

அவர் குரானைப் பற்றித் தொகுத்துத் தரும் உண்மைகள் அதன் சிறப்பை விளக்குவனவாக அமைகின்றன.

அவரது ஆங்கில மூலத்தை இணைப்பாகத் தருகிறோம். அவர் கூறியுள்ளவற்றில் சில முக்கிய கருத்துக்கள் தமிழில் இதோ:

நன்கு கற்றறிந்த இஸ்லாமியர்கள் குரான் சுவர்க்கத்தில் எப்போதும் உள்ள ஒரு நூல் என்றும் அதுவே எல்லா நூல்களுக்கும் தாய் என்றும் கூறுகின்றனர்.

அது படைத்த கடவுளின் எஸன்ஸ் எனப்படும் சாரத்தில் ஒரு பகுதி.

இதனுடைய ஒரு பிரதி பேப்பரில் சுவர்க்கத்தில் உள்ளது. பட்டுத் துணியினால் பைண்ட் செய்யப்பட்டு தங்கம் மற்றும் இதர சுவர்க்கத்தில் உள்ள விலைமதிப்பரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இது ஆர்ச் ஏஞ்சல் காப்ரியலின் (Prophet Archangel Gabriel) பாதுகாப்பில் உள்ளது. இதை ப்ராபெட் பீஸ்மீலுக்கு (Prophet Piecemeal) அவர் தெரிவித்தார். வருடத்திற்கு ஒரு முறை அவர் முழு நூலையும் பார்க்க அவருக்கு அனுமதி உண்டு.

குரான் 114 பகுதிகளைக் கொண்டது.

ஒவ்வொரு பகுதியும் சுரா (Surah) என அழைக்கப்படுகிறது.

சில மக்காவில் வெளிப்படுத்தப்பட்டன.

சில மக்காவில் பகுதியாகவும் மதினாவில் பகுதியாகவும் வெளிப்படுத்தப்பட்டன.

குரானில் உள்ள மொத்த செய்யுள்களின் எண்ணிக்கை 6000 அல்லது 6214 அல்லது 6219 அல்லது 6225 அல்லது 6226 அல்லது 6236.

அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை 77639 அல்லது 99464.

அதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 323015 அல்லது 330115.

ஒவ்வொரு பகுதியும் In the Name of Allah , the Merciful, The Compassionate

கருணை வாய்ந்த, இரக்கமுள்ள அல்லாவின் பெயரால் – என்று ஆரம்பிக்கப்படுகிறது.

அராபியர்கள் எல்லா அறிவும் எல்லா ஞானமும் குரானிலிருந்தே வருகின்றன என்று நம்புகின்றனர்.

உலகில் அதில் உள்ள மொழியே சுத்தமான அராபிய மொழி, அது அழகிய மொழி, அதன் வார்த்தைத் திறன் எதனுடன் ஒப்பிட முடியாத ஒன்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

அதை மிகவும் பாதுகாப்பாக அராபியர்கள் பாதுகாத்து வந்தார்கள் என்றாலும் கூட சில சிறிய மாற்றங்கள் அதில் உள்ளன.

இது எதனால் என்றால் ஏழு தனித்தனியான பேச்சு வழக்கு மொழிகளில் அது தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டதால் தான் என்று காரணம் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் எந்தப் பெண்களும் அதன் பிரதியை வைத்திருக்க அனுமதி இல்லாமல் இருந்தது. ஒரு ஆண் இறந்து விட்டால அவனுடன் அவன் வைத்திருந்த குரானும் புதைக்கப்பட்டது.

ஆனால் நான் பெர்ஸியன் எல்லையில் டியாரோ மாவட்டத்தில் இருந்தபோது  மண்ணுடன் கூடிய லினனால் சுற்றப்பட்டு சற்று ஈரமாகவும் இருந்த பல பிரதிகளை வாங்கினேன்.

பசியினால் வாடும் விதவைகள் தங்கள் கணவன்மாரின் கல்லறைகளைத் தோண்டி அதிலிருந்த குரான் பிரதிகளை அதை வாங்க முன்வருவோரிடம் விற்றனர்.

அராபியர்கள் குரான் முழுவதையும் ஒரு சக்தி வாய்ந்த தாயத்தாகக் கருதுகின்றனர்.

அதில்லாமல் பலர் வெளியூர் பயணம் மேற்கொள்வதில்லை.

சமீப வருடங்களில் அதன் சிறிய அளவு பிரதிகள் போட்டோ லிதோகிராபி மூலம் எடுக்கப்பட்டு ஒரு சிறிய உலோகப் பெட்டியில் வைக்கப்பட்டு மோதிரம், நெக்லேஸ் ஆகியவை இணைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

அதன் ஒரு புறம் சிறிய பூதக்கண்ணாடியாகப் பயன்படும் லென்ஸ்களும் வைக்கப்பட்டுள்ளன.

முழு நூலும் ஒரு அங்குலம் உயரம் முக்கால் அங்குல அகலம் 7/16 அளவு கனமும் கொண்டதாக உள்ளது!

பயணிகள் கூடாரம் அடித்து தங்கும் போது இரவில் தங்களுக்கு விருப்பமான அத்தியாயங்களைப் படிக்கலாம்.

அதன் ஒரு போட்டோவை படத்தில் காணலாம்.

 

 

(இது 1930ஆம் ஆண்டு எழுதப்பட்டது)

***

 

JEWISH (RABBIS) JOKES ! (Post No.4918)

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  21-54 (British Summer Time)

 

Post No. 4918

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

Converted to New Religion and yet No Office!

 

A place hunter in Prussia (part of Old Germany and Poland), having asked the Frederick the Great for the grant of some rich Protestant Bishopric (office), the king expressed his regret that it was already given away, broadly hinted that there was a Catholic abbacy at his disposal.

 

The applicant managed to be converted in a week and to be received in the bosom of the true church; after which he hastened to his friend, the king, and told him how his conscience has been enlightened.

“Ah”, exclaimed Frederick, “how terribly unfortunate! I have given away the abbacy. But the chief rabbi is just dead, and the synagogue is at my disposal; suppose you were to turn Jew?”

 

xxx

Rabbis in Zoo!

Applying for a post as keeper at the Bronx Zoo, a burly Irishman came to the question,

What is rabies and what can you do about it?

The applicant wrote: :Rabies is Jewish priests, and you cant do anything about it.”

 

(Rabies= a contagious and fatal viral disease of dogs and other mammals; transmissible to humans through the saliva to humans causing madness and convulsions;

Rabbis= Jewish religious leader, scholar, teacher).

 

xxx

Rabbi is Stupid!

A certain Jewish man had left Pinsk to go to work in Minsk. For six months, he had been away. He had a short vacation and was very anxious to get back home to see his wife and children It was late on a Friday afternoon, however, and his friend said,

Look, you shouldn’t travel on the Sabbath. It is against religion. Stay over with me until the Sabbath is over. Be my guest.”

No said the other, I am anxious to get back to Pinsk. Six months I have been away.

Six months, said his friend, so what is another day? You shouldn’t travel on the Sabbath. Stay with me. I have got a nice house. I will give you nice Jewish meals.

After much argument, the man yielded against his better judgement, and remained over the Sabbath. Even then his friend would not let him go ad insisted on detaining him yet another day, entertaining him practically to exhaustion. At last he announced his departure.

I can’t stay another minute. I am going right away.

All right, said his host at last, and as his friend was about to leave the house he presented him with a bill for food and lodging. Outraged, the man cried, What kind of a business is this? You make me stay against my will; you won’t let me go. You insist that I should be your guest. You keep me overtime – then you give me a bill! I won’t pay it.

 

Equally firmly, his host insisted that he must pay. Finally he said, All right. We will consult the Rabbi.

They sought out the Rabbi. He heard the whole story, stroked his beard and pored at length over the Books of Law. At last, after recapitulating, the whole case, he delivered his verdict: you must pay.

 

The victim flew into a rage. They thrashed the case back and forth many times. But the rabbi was adamant: you must pay.

At last, weary and desirous only of getting to Pinsk, the man drew out his wallet and paid the money, demanding a receipted bill. His friend took the money, receipted the bill, and then handed the money, receipted bill back again saying ‘Forget it!’

 

What! screamed the other in despair. You force me to be your guest; you wont take no for an answer; you keep me there; you give me a bill; you drag me to the rabbi; he tells me I must pay; I pay. Now you give me back the money. What is this?

Ah, said his fried, I just wanted you to see what kind of a stupid person we have got for a rabbi n Minsk.

–subham–

 

 

அனுமன் தோல்வி! ஆனைக்கும் கூட அடி சறுக்கும்! (Post No.4917)

அனுமன் தோல்வி! ஆனைக்கும் கூட அடி சறுக்கும்! (Post No.4917)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  16-36 (British Summer Time)

 

Post No. 4917

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

கம்பன் ஒரு உண்மைக் காட்சியை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறான். கும்ப கர்ணனுக்கு, ஒரு வீரன் போல அனுமன் சவால் விடுக்கிறான். கும்பகர்ணனும் அதை ஏற்று ஒரேயடியில் அனுமனை வீட்டுக்கு அனுப்புகிறான். பின்னொரு முறை கும்பகர்ணன் அனுமனே! உன் கூட சண்டை போட எனக்கு ஆசை. வாயேன் என்கிறான். அப்போது அனுமன் உண்மை பேசுகிறான். இதோ பார்! நான் ஒரு முறை உனக்குச் சவால் விட்டேன். தோற்றால் இனிமேல் உன்னுடன் சண்டை போட மாட்டேன் என்றேன்; நான் தோற்றதால் இனிமேல் எனக்கு போர் செய்ய நியாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டு போய் விடுகிறான். சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு? முன் ஒன்று பின் ஒன்று பேசுவார் அக்காலத்தில் இல்லை!

 

யுத்த காண்டத்தில் கும்ப கர்ணன் வதைப் படலத்தில் கம்பன் ( அனுமன் வாய் மொழி மூலம்) சொல்கிறான்:

எறிகுவென் இதனை நின்மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை

அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னொடு அமரும் செய்யேன்

பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும்புகழ் பெறுதி என்றான்

 

பொருள்

இந்த மலையை உன்மேல் எறியப் போகின்றேன். இமைப் பொழுதில் உன் சக்தி அழியும். ஆனால் நீ இந்த மலையைத் தடுத்துவிட்டால், உன் பலத்தை உலகமே தெரிந்து கொள்ளும். அப்படித் தடுத்துவிடால் நான் திரும்பிப் போய்விடுவேன். உன்னோடு சண்டை போட மாட்டேன். இந்தச் செயலைச் செய்து உலகப் புகழ் பெறலாமே! என்று அனுமன் கிண்டல் தொனியில் பேசுகிறான்.

 

அதற்குக் கும்பகர்ணன் சொன்னான்:–

 

மாற்றம் அஃது உரைப்பக் கேளா மலை முழை திறந்தது என்னக்

கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை

ஏற்றெனன் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்

தோற்றனென்  உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான்

 

 

பொருள்

அனுமன் சொன்ன சொல்லைக் கேட்டு கும்பகர்ணன் நகைத்தான். மலைக் குகை போன்ற வாயைத் திறந்து சிரித்தான். நீ எறியும் மலையைத் தாங்கும் போது என் தோள்கள் சிறிது தளர்ந்தாலும் நான் தோற்றவன் ஆவேன் என்றான் கும்ப கர்ணன்.

 

அடுத்த இரண்டு பாடல்களில் அனுமன் மலையை எறிந்ததையும் அது கும்பகர்ணனின் தோளில் பட்டு நூறாகச் சிதைந்து போனதையும், அதைப் பார்த்து அனுமன், இவனை ராமனின் அம்புகள் மட்டுமே தாக்க முடியும் என்று எண்ணித் திரும்பிப் போனதையும் சொல்கின்றன.

 

அவ்வளவு வலிமை ராவணன் தம்பிக்கு!

 

இதே படலத்தில் பின் ஒரு காட்சி. சுக்ரீவன் மீது கும்பகர்ணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்து விடுகிறான். அபோது கும்பகர்ணனும் அனுமனின் செயலை- ஆற்றலை — வியந்து என்னுடம் போருக்கு வா என்கிறான். அதற்கு அனுமன் சொன்ன பதில்:

முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய

பின் இலை பழுது எனப் பெயர்ந்து போயினான்

 

பொருள்:

முன்பு இனிமேல் உன்னை எதிர்த்துப் போரிட மாட்டேன் என்று சொல்லி போரை முடித்துக் கொண்டேன். இனிமேல் உன்னுடன் போர் செய்வது பிழையாகும் என்று விளம்பிவிட்டு அனுமன்  அகன்றனன்.

 

சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்; அனுமனுக்கும் கூட தோல்வி வரும்!

(ஆயினும் இறுதி வெற்றி வானர சேனைக்கும் ராமனுக்கும் என்பதை மறத்தல் கூடாது– அறம் வெல்லும்- பாவம் தோற்கும் என்பது கம்பன் வாக்கு. தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ.

 

–சுபம்–

லெட்சுமணன் படித்த ‘ஸ்கூல்’ பற்றி கம்பன் தகவல் (Post No.4916)

லெட்சுமணன் படித்த ஸ்கூல் பற்றி கம்பன் தகவல் (Post No.4916)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  14-27 (British Summer Time)

 

Post No. 4916

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

நான் வாழும் லண்டனில் வேலைவாய்ப்பு பேட்டிகளில் எந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படித்தான் என்பதற்கும் மார்க் (mark) உண்டு. நேருஜி படித்த ஈடன் (Eton) பள்ளி, மற்றும் அரசியல் பேர்வழிகளின் பிள்ளைகள் படித்த கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு (Cambridge, Oxford) பல்கலைக் கழகங்கள், பிரைவேட் ஸ்கூல் (மாதத்துக்கு 2000, 3000 பவுண்டு பீஸ்/fees) ஆகியவற்றுக்கு தனி மதிப்பு. அதிலிருந்தே அவர்களின் குணநலனும், அந்தஸ்தும், அறிவும் புலப்படும் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை.

 

ராமனின் தம்பி லெட்சுமணன் படித்த ஸ்கூலில் தியரி (theory) கிடையாதாம்; அதிகம் பிராக்டிகல் (practical) பாடங்கள்தானாம்! இதைக் கம்பனே இலக்குவன் வாய்மூலம் இயம்புகிறான். அதைப் படித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், கம்பன் எவ்வளவு   நுணுக்கமாகப் பார்க்கிறான் என்பது புலப்படும்,

 

“நீ ராமன் தம்பி, நான் ராவணன் தம்பி, வா, கொஞ்சம் வீர வசனம் பேசுவோம்; அதில் யார் வெல்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம் என்கிறான்” கும்பகர்ணன்.

 

அதற்கு இலக்குவன் பதில் சொல்கிறான். “அப்பனே நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்த பாடம் வேறு; நீங்கள் சொல்லினால் பேசுவீர்கள்; நாங்கள் வில்லினால்தான் பேசுவோம்; அதுதான் நான் கற்ற பாடம்”.

 

முதலில் போர்க்களத்தில் வாக்குவாதம் நடத்துவது என்பதே இந்திய வழக்கு; பகவத் கீதை இதற்குச் சான்று. யுத்த காண்டத்தில் பல எதிர் எதிர் தரப்பு வீரர்கள் சொற் கணைகளைப் பெய்த பின்னரே விற்கணைகளைத் தொடுப்பர் என்பதைக் கம்பனும் காட்டுவான் .

இலக்குவன் மட்டும் எங்கள் ஸ்கூல் சிலபஸ் School syllabus வேறு என்று சொல்வதை கம்பன் கவி வழி சுவைப்போம்:

 

இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்

பொரநின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்

பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து

விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா

யுத்த காண்டம், கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்

நீ ராமனுக்குத் தம்பி; நான், ராவணனுக்குத் தம்பி. இருவரும் இப்போது போரிட நிற்கிறோம்.  இப்போரினைப் பார்க்க தேவர்களும் வந்தனர். புகழத் தக்க பழமையான போர் முறையில், நம் பலத்துக்கேற்ற வகையில் முதலில் கொஞ்சம் கதைப்போம்; பின்னர் கை கலப்போம் – என்று கும்ப கர்ணன் செப்பினான்.

 

இலக்குவன் பதில்

 

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர்

மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்பால்

வில்லினால் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச்

சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்

பொருள்

இருளையே உருக்கி வார்த்து செய்தாற் போல இருந்த கும்ப கர்ணன் சொல்லினைக் கேட்ட (மல்யுத்தம் செய்ததால் உரம் ஏறிப்போன தோள் கொண்ட)  இலக்குவன் உரைத்தான்— “உனக்கு பதில் சொல்வது வில்லினால் மட்டுமே இயலும். வீரத்துக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் சொல்லினால் சொல்ல யாம் கற்கவில்லை”.

 

என் வில்தான் பேசும்; சொல் வேண்டாம்; இதுதான் நான் கற்றது.

நல்ல அருமையான பதில்

 

சில கம்பன் பாட்டில் சொல் நயம் இருக்கும்; சில கம்பன் பாட்டில் பொருள் நயம் இருக்கும்; இன்னும் சில பாடல்களில் இரு நயமும் இருக்கும்.

 

படித்துச் சுவையுங்கள்.

 

-சுபம்–

பாரதி போற்றி ஆயிரம் – 78 (Post No.4915)

COMPILED by S NAGARAJAN

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  7-04 AM  (British Summer Time)

 

Post No. 4915

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 78

  பாடல்கள் 654 முதல் 665

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

                           பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு பத்தாம் அத்தியாயமான பாரதி பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.

பத்தாம் அத்தியாயம்: பாரதி பார்வையில் பாரதி

1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்

 

காலச்சக் கரத்தின் மேற்பகு தியெனில்

     காணுமு யிர்களின் பிறப்பாகும்

சீலமு றவது சுழல்கையில் கீழே

    சென்றிட லென்பது இறப்பாகும்

ஓலமிட் டழுவதில் பயனென் பிறந்தோர்

     ஒருநாள் மடிவது முறையாகும்

கோலமிட் டழித்தல் போல்பிறப் பிறப்பும்

    கோலம்மா றிவரல் இயல்பாகும்

 

எவரிறந் தாலும் மறுகணம் மறத்தல்

    இப்புவி மாந்தர் குணமாகும்

அவர்போல் எனையும் மறந்திடு வாரெனில்

    அதுவே வாழ்வின் நிலையாகும்

தவறா ததுவே நிகழும் எனயென்

    தமிழ்நாட் டினையும் நினைந்திட்டேன்

தவறாய் நினைத்தேன் எனும்படி என்றும்

    தமிழகம் என்னைப் போற்றிடுதே

 

என்பெய ராலே எண்ணிலா மன்றம்

    இருப்பதைக் கண்டு வியக்கின்றேன்

என்கவி தைகளை பலவடி வத்தில்

     எங்கணும் பாடக் கேட்கின்றேன்

என்னைப் பற்றிய ஆய்வுகள் பலவும்

     ஏடுக ளில்வரக் காண்கின்றேன்

என்தமிழ் நாட்டார் எனைமறப் பாரோ

    என்பதைக் கண்டு மகிழ்கின்றேன்

 

இந்நாள் எனையான் திரும்பிப் பார்க்கின்

     என்வாழ் வெனக்கே திகைப்பூட்டும்

அந்நாள் நடந்ததைச் சொல்கிறேன் எந்தன்

     ஆடையே பிறர்க்கு நகைப்பூட்டும்

எந்நா ளும்நான் நிம்மதி யாக

    இருந்தேன் என்றிட வாய்ப்பில்லை

இந்நாள் அதனை நினைத்துப் பார்த்தால்

    எனக்கே என்நிலை புரியவில்லை

 

சுயபுத்தி இல்லாமல் ஏதேதோ செய்வதாய்

     சூழ்ந்தவர் யாரும் சொல்ல

சுயசாதி வெறுப்புக்கு ஆளாகி அவரோடு

    சுற்றத்தால் ஒதுக்கப் பட்டேன்

சுயமாக எதனையும் செய்திட இயலாத

    சூழ்நிலைக் கைதி யானேன்

சுயசரி தம்எழுத முயன்றாலும் அதனையும்

    தொடராமல் நிறுத்த லானேன்

 

என்னிளம் பருவத்தின் பெருமைகள் ஈதென

     இயம்பிட ஏது மில்லை

சின்னஞ்சி றுவர்க்குள விளையாட்டில் கலந்திட

    சிறிதேனும் உரிமை யில்லை

இன்னுமோர் கொடுமையாய் சிறுமியைக் கொணர்ந்து

    என்மனைவி யாக்கி வைத்தார்

பின்னுமோர் சோதனை தந்தையார் மடிந்திட

    போகயிட மின்றி நின்றேன்

 

நிரந்தர மில்லாமல் ஊர்ஊராய் ஓடிநான்

     நிலையற்ற வாழ்வு வாழ்ந்தேன்

அரசனாம் தருமன்போல் அல்லல்கள் பலபட்டு

    அஞ்ஞாத வாசம் செய்தேன்

கரம்பிடித் திட்டநல் மனைவியொடு மக்களின்

     கடமையைச் செய்தி டாத

முரடனாய் வாழ்வியல் புரியாது முரண்படும்

    மூடனாய் தூற்றப் பட்டேன்

 

இத்தனைத் துயர்கள் இருப்பினும் கவிதை

     இயற்றுதல் மட்டும் நின்றதில்லை

எத்தனைத் தடைகள் குறுக்கிட்ட போதும்

     எழுதாமல் இருக்க இயலவில்லை

சித்தத்தில் ஒளிரும் சுடரென இருந்தென்னைச்

     சிறப்புறச் செய்தது தமிழன்றோ?

நித்தமென் சுவாசக் காற்றென இயங்கி

    நிலைபெறச் செய்தது கவியன்றோ?

 

வறுமையே தொடர்ந்தென்னைத் துரத்திய போதும்

    வடித்திடும் பாடலில் ஒருபோதும்

சிறுமையோ குறையோ நேர்ந்திட விடாமல்

     சீருடன் ஆய்ந்ததைப் படைத்திட்டேன்

பெறுமிச் சுதந்திரப் பயிரினை வளர்த்திட

    பாடுபட் டோரில் என்பெயரும்

உறுமென் பதுவே போதுமத னிலுமே

    உயர்நிலை எனக்குத் தந்திட்டார்

 

என்கவியைப் பாடாத மேடையில்லை எங்கும்

     என்புகழைப் பேசாத சபையுமில்லை

என்றாலும் நானன்று பாடியே மகிழ்ந்திட்ட

    இனிய பாரதமின்னும் தோன்ற வில்லை

என்சாதி என்மதம் என்னினம் என்மொழி

     எனமூளும் சண்டைகள் ஓய வில்லை

என்றுதான் இவையெலாம் தீருமோ அதுவரை

     என்பாடல் ஒலிப்பதில் பொருளு மில்லை

 

நல்லதோர் வீணையைச் செய்ததை மீட்டிட

     நல்லிசை அதனிலே கேட்க வில்லை

பல்லெழில் மிக்கதோர் ஓவியம் வாங்கியும்

    பார்த்திட விழிகளோ இரண்டு மில்லை

சொல்லழகு கொண்டதென என்கவியைப் பாடினார்

     சொல்பொருளை செயலாக்க முனைய வில்லை

அல்லல்கள் பலபட்டு அயராமல் இயற்றிய

    அருங்கவிகள் போல்நாடு அமையவில்லை

 

 

என்றென் தமிழ்மொழி உலகம் முழுதும்

ஏற்கும் செம்மொழி யாகிடுமோ

என்றென் பாரதம் எல்லா நலனும்

இருக்கும் நாடாய் உயர்வுறுமோ

என்றிவ் வுலகம் மாந்தர் யாவரும்

என்றும் சமமென இணைந்திடுமோ

அன்றென் கவிதைகள் உயிர்பெற் றிடுமே

அவற்றுள் நிலையாய் வாழ்வேனே!!!

 

பாரதி பார்வையில் பாரதி முற்றும்

பாரதி பத்துப்பாட்டு நூல் முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

TAMIL POET VALLUVAR AND WESTERN THINKERS ON RIGHT CONDUCT (Post.4914)

TAMIL POET VALLUVAR AND WESTERN THINKERS ON RIGHT CONDUCT (Post.4914)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  20-31 (British Summer Time)

 

Post No. 4914

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

The greatest of the ancient Tamil poets, Tiruvalluvar had composed ten verses on right conduct or discipline. As it is the main topic in religious scriptures, we have lot of verses in religious books. But by comparing the verses with other western poets we learn that great men think alike irrespective of the race, religion and geographical location.

 

Let us compare a few verses: –

Right conduct makes one great; hence right conduct is greater than life (Tirukkural 131).

Mathew Arnold said,

Conduct is three fourths of life and its largest concern.

Dr S M Diaz, I G of Police in Tamil Nadu says,

“And that is precisely why in the National Police Academy at Hyderabad where officers of the Indian Police Service at all levels are trained, I had prominently placed the following inscription: –

No Niagara is ever turned into light and power

Until it is tunnelled and confined

No life ever grows great until It is Focussed,

Dedicated and Disciplined

According to Plato, what is to be feared in life is disgrace and not death.

 

Tiruvalluvar, author of Tirukkural says elsewhere,

Hair lost, the yak lives not.

Honour lost, noble men leave their life (Kural 969)

 

Noble men do not outlive loss of honour. The world hails their glory (970).

 

xxx

 

In another couplet, Valluvar says

Right conduct is true nobility;

The absence of it is just ignoble (Kural 133)

 

The great French dramatist Moliere said that ‘Virtue is the first title of Nobility’, while Benson and Forster would rate ‘sincerity’ and considerateness’ as the determinants of true aristocracy.

 

In Kural/couplet 134, Valluvar says,

The Brahmin who has forgotten his scriptures could read them up again;

But if he neglects right conduct he will lose his birth-right.

 

This couplet in fact is an amplification of the previous Kural 133, Moliere’s statement that ‘Birth is nothing where virtues is not” is relevant here.

S M Diaz, has given lot of comparisons from The Bible (Proverbs) for every couplet in this chapter.

 

In the couplet 140, Valluvar says

Even men of learning will be as ignorant as men,

If they do not live in tune with the world.

 

The following passage from Lord Chesterfield could be considered a felicitous alternative translation of this Kural:

“A man of the best parts and the greatest learning, if he does not know the world by his own experience and obligation, will be very absurd and consequently very unwelcome in company”.

What Indian Scholars say about conduct?

It may be sandal paste, incense or water lily or jasmine. The fragrance of good conduct has nothing superior to such perfumes – Dhammapada 4-12

 

As one acts according to one’s conduct. so does he become.

The doer of good becomes good; of evil, evil.

One become virtuous by virtuous acts.

-Brihad Aranyaka Upanishad 4.4.4

 

Do nothing to others which, if done to you , would cause you pain;  this is the sum of polity.

–Mahabharata, 5-1517

 

Forget not the good done to you;

Despise evil friends

Give not false evidence

And depart not from the truth.

Fail not to join the assembly of the learned,

Strive always to escape from the company of the lawless;

Abstain from others’ wives

Help the dying.

-Tamil Epic Silappadikaram

Conduct renders a man virtuous, a coward or her, transmuting purity into purity.

Valmiki Ramayana, Ayodhya Kanda, Chapter 108

 

Source books: Tirukkural Translation by S M Diaz

The Golden Treasury of Indian Quotations R N Saletore

–Subham–

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  14-18 (British Summer Time)

 

Post No. 4913

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தில், தண்டனை பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன.

 

கடுமையான தண்டனை கொடுத்தால் மக்கள் வெறுக்கிறார்கள்;

குறைவான தண்டனை கொடுத்தால் மக்கள்  நிந்திப்பார்கள்;

தவற்றுக்கு ஏற்ற தண்டனை கொடுத்தால் மக்கள் மதிப்பார்கள் (அர்த்தசாஸ்திரம் 1-4

 

யார் ஒருவன் அதிகமாகக் குடிக்கிறானோ சூதாடுகிறானோ, வேட்டை ஆடுகிறானோ அவர்களை, சட்டம் சந்தேகத்துடன் பார்க்கும் – (4-6)

 

பெண்கள் விஷயத்திலோ அல்லது வேறு எதிலோ அதிக ஈடுபாடு கொண்டிருப்பது குற்றம் – (8-1)

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழ வேண்டும். மாத விலக்குக்குப் பின்னர் மனைவியுடன் படுக்க மறுக்கும் கணவன் குற்றம் இழைத்தவன் ஆவான் (1-3; 3-2)

மஹா பாரதமும் இந்தக் கருத்தைச் சொல்கிறது.

ஒரு ஆண்மகன் இஷ்டப்பட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் சந்யாசி ஆகிவிட முடியாது. அவன் தனது மனைவியும், மகனும் வாழ வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவ ஒருவர் காவி ஆடை போட்டுக்கொள்ள விரும்பினாலும் அரசாங்க அதிகாரிகளுக்குச் சொல்லாமல் செய்வது தண்டணைக்கு உரிய குற்றம் ஆகும் – (2-1)

 

ஒரு அரசன் கூட எதிலும் நிதானம் காட்ட வேண்டும் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொள்கை. அரசன் சுக போக விஷயங்களில் ஈடுபட்டால் அறமும் இல்லை, பொருளும் இல்லை என்று ஆகிவிடும் (பொருள்= செல்வம்; அறம்= தர்மம்) – மநு 7-46

 

தொல்காப்பியமும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ( தர்ம, அர்த்த, காம) என்ற சொற்களைப் பல இடங்களில் வலியுறுத்துகிறது. இதையே கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் அவ்விரு நூல்களுக்கும் முன்னரே சொல்லிவிட்டான்.

இன்பம் இல்லாமல் வாழாதீர்கள் (ந நிஸ்ஸுகஸ்யாத்- 1-7) என்று கௌடில்யன் கூறுவான். உள்ளத்தில் ஆசைத் தீ எரியட்டும். ஆனால் அறத்துக்கும் பொருளுக்கும் ஊறு விளைவிக்காத வகை யில் காமம் (ஆசை) இருக்க வேண்டும் என்பான் (1-7).

 

சாணக்கியன் சொல்லும் பல விஷயங்கள் மஹா பாரத சாந்தி பர்வத்திலும் உள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததால் தமிழர்களும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் அறம், பொருள் இன்பமென்பதை அதே வரிசையில் அப்படியே (தர்ம, அர்த்த, காம) விளம்பினர்.

 

திருக்குறளின் பெயர்களில் ஒன்று முப்பால் (அறம், பொருள், இன்பம்).

இந்த மூன்று விஷயங்களை (த்ரிவர்க) என்று இயம்புவர்.

வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்ரமும் இது பற்றிக் கூறும்:-

 

ஒரு மனிதனுடைய வாழ்வு 100 ஆண்டுகள். இதை அவர்கள் முறையாகப் பிரித்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல், அனுசரணையாக இருக்கும்படி அமைத்துக்  கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கல்வியும், பொருள் ஈட்டும் வழிகளும் நோக்கம் ஆக இருக்க வேண்டும்.

வாலிபப் பருவத்தில் காம சுகங்களை நாட வேண்டும்; முதுமையில் மோட்சத்துக்கான வழிகளில் மனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, தக்க விதத்தில் இக்குறிக்கோள்கள்களைப் பின்பற்ற வேண்டும்.

 

திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?

த்ரிவர்கங்களில் (அறம், பொருள் இன்பம்) மூன்றையும் அல்லது இரண்டையாவது அடையும்   செயல்களைச் செய்ய வேண்டும்.  ஆனால் மூன்றில் எந்த ஒன்றும்  அடுத்த இரண்டு குறிக்கோள்களைப் பாதிக்கக்கூடாது.(காமசூத்திரம் 1-2-51)

இவற்றைக் காணும் போது திருக்குறளுக்கு முப்பால் என்று பெயர் வந்தது ஏன்? திருவள்ளுவர் ஏன் தன் நூலை முப்பால்களாகத் தொகுத்தார் என்பது நன்கு விளங்கும்.

 

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடிலும் கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.

 

எந்த ஒரு விஷயத்திலும் மிக அதிக ஈடுபாடோ மிகக் குறைவான ஈடுபாடோ அழிவை ஏற்படுத்தும். உடற்பயிற்சியில் இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் பலம் பாதிக்கப்படும்; மதுவிலோ, மாமிச உணவிலோ இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தைரியம், கோபம் முதலிய குணங்களில் ஏற்ற தாழ்வு இப்படி இருந்தால் அழிவை உண்டாக்கும்; நடுநிலை வகிப்பதே சாலச் சிறந்தது (ETHICS , ARISTOTLE எதிக்ஸ் 2-2)

 

மநுவும் மனு நீதி நூலில் இதையே உரைக்கிறார்:

மன்னன் என்பவன் தர்ம அர்த்த காம விஷயங்களைக் கற்றவன் ஆக இருத்தல் அவசியம்; தன் ஆட்சி அதிகாரத்தில் இம்மூன்றிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் (தர்ம காமார்த்தகோவிதம்; த்ரைவர்கேனாபிவர்ததே- மநு 7-26/27)

 

அர்த்தசாஸ்திரம் இதை இன்னும் தெளிவாகச் செப்பும்:

 

அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அளவுக்கு அதிகமாகப் பின்பற்றினால் பின்பற்றப்பட்ட ஒரு விஷயம் பாதிப்பதோடு மற்ற இரண்டையும் கெடுத்துவிடும் (1-7)

 

2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் சிந்தித்துஎழுதி இருப்பது சிறப்புக்குரியது.

xxxx

 

தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

… (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது. 9.

அறம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அறம்/

Translate this page

”தர்ம, அர்த்த, காம” என்ற வட மொழிச் சொற்றொடர் ”அறம்,பொருள்இன்பம்” என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம்(சூத்திரம்1037, 1363) …

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!! … ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். … வாழ்க்கையின் லட்சியங்களை அறம்பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது.

 

Bhagavad Gita in Tamil | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bhagavad-gita-in-tamil/

Translate this page

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும். அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்). மேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள். உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் …

You’ve visited this page 2 times. Last visit: 03/02/17

 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு | Tamil …

https://tamilandvedas.com/…/பகுதி4-தொல்காப்பி…

Translate this page

13 Sep 2012 – ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது). தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் …

தொல்காப்பியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

Translate this page

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே! ….. தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு …

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம் …

https://tamilandvedas.com/…/கண்ணனின்-பக்தி-அற…

Translate this page

1 Feb 2014 – … சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் …

–சுபம்–

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது! (Post No.4912)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  6-10 AM  (British Summer Time)

 

Post No. 4912

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்கு மண்டலப் பெருமை

 

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

 

ச.நாகராஜன்

 

தமிழக மன்னர்களும் பிரபுக்களும் புலவர்களுக்குத் தகுந்த பரிசுகளைக் கொடுப்பதைப் பெருமையாகவும் கடமையாகவும் கருதியவர்கள்.

கொங்கு மண்டல சதகத்தில் வரும் பல பாடல்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

இப்போதுள்ள கோபிச்செட்டி பாளையம் தாலுகா பழைய காலத்தில் காஞ்சிக்கோயில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் அடங்கியிருந்த ஊரான பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.

உலகத்தில் ஒருவனிடம் சென்று எனக்கு இல்லை என்று கேட்பது சிறுமை. கேட்போனுக்கு இல்லை என்று சொல்வதோ சிறுமையிலும் சிறுமை. அதிலும் நம் குலத்தைப் புகழ்ந்து கவி பாட வந்த புலவருக்கு இல்லை என்று சொல்வது நமக்கு தீரா வசையைத் தேடித் தரும். ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.

 

இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

 

 

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

 

பாடல் வருமாறு:

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

 

 

ஒரு சுவையான செய்தி, பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் சிவாலயத்தில் ஒரு கற்சாசனம் உள்ளது. அதில் செட்டி பிள்ளையப்பன் நில தானம் செய்த செய்தி உள்ளது.

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ…..வீர வல்லாள தேவர் .. ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற   … வத்ஸரத்து ஆவணி மாத முதல் காஞ்சிக் கூவல்நாட்டில் பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார் அமரவிடங்கப் பெருமாள் திருப்பள்ளிஎழுச்சிக்கு….”

 

இந்த அரிய சம்ப்வத்தை அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூ பாடலாக இப்படித் தருகிறது:

 

 

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்

கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித்தூறிற் புகுந்தநற்

றூயவன் கனவாள குலத்தினன்

செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெல்

தேவிமாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடையமர விடங்கனார்

கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே

 

தமிழ்ப் புலவர்களை மதித்து வாழ்ந்த நாடு தமிழ் நாடு; அதில் கொங்கு மண்டலத்தின் சிறப்பை இந்தப் பாடல் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

 

***