‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–

கம்பன் கவி இன்பத்தில் வம்பு-2 (Post No.4296)

Written by S.NAGARAJAN

 

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 6–08 am

 

 

Post No. 4296

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! – 2

.நாகராஜன்

 

4

இனி அடுத்து கவிதா ரஸிகரான வ.வெ.சு. ஐயர் எப்படி வர்ஜில், ஹோமர், கம்பன், வால்மீகி, கம்பன் ஆகியோரின் கவிதையை ரஸித்தார் என்று பார்ப்போம்.

கம்பன் கவிதை என்ற தொகுப்பு நூல் பிரமாதி (1939), பங்குனி 8,9,10 ஆகிய நாட்களில் காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளில் வெளியிடப்பட்டது. அதில் முதல் கட்டுரையாக ‘கம்ப ராமாயண ரசனை’ என்ற தலைப்பில் வ்.வெ.ஸுப்ரஹ்மண்ய ஐயர் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. வ.வெ.சு, ஐயரின் கம்பராமாயண ரசனை நூலை தில்லி தமிழ்ச் சங்கமும் பின்னாளில் வெளியிட்டது.

102 பக்கங்கள் உள்ள அந்த நூலில் சில பகுதிகளை மட்டும் இங்குக் காண்போம்.

5

வ.வே.சு. ஐயரின் கட்டுரை, அவரது சொற்களில் :

இது மாத்திரமில்லை, கம்ப ராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலீயன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதல் நூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட பெருங் காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அநேகமாய் எல்லாவற்றிலும் வென்று விட்டது என்று சொல்லுவோம். இவ்விமரிசனத்தைத் தொடர்ந்து வாசிப்போருக்கு எமது இவ்வபிப்ராயத்தை மெய்ப்பிக்க முயலுவோம்.  (பக்கம் 4)

கவிதை என்னும் அணங்கு இலக்கண வித்துவானைத் தந்தையென மதித்து அவனை அணுகாள். தார்க்கிகளைச் சகோதரன் என்று பாவித்து அவனை நெருங்காள். வேதாத்தியயனம் செய்தவனை (யும், சந்தத்தையே கவனிப்பவனையும்) விட்டுச் சண்டாளர்களிடம் நின்று ஓடுகிறவர்கள் போல ஓடியே போய் விடுகிறாள்.; மீமாம்சையை ஆராய்பவனை நபும்ஸகன் என்று நினைத்து அவமதித்து விடுகிறாள்; காவியாலங்கார சாஸ்திரமறிந்தவனைக் கண்டதும் அவனையே தன் கொழுநனாகப் பாவித்து அவனைச் சேருகிறாள்…….. வால்மீகியைச் சாமானிய கவியாக நாம் பாவிக்கவில்லை. உலகத்திலுள்ள முதல் ஏழெட்டு மகா கவிகள் என்று கணக்கிட்டு எந்த ஜாதி அறிஞர் எண்ணினாலும் அந்தக் கணக்கில் வால்மீகியின் பெயரைச் சேர்க்காதிருக்க முடியாது. எமது சொந்த அபிப்ராயத்தில் உலகத்தின் ஒரு தனிக் காவியம் என்று சொல்லத் தகுந்தது கம்பராமாயணம் தான் என்றும், வால்மீகி ராமாயணம் அதற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் என்றும் சொல்லுகிறோம்.   (பக்கம் 10,11)

ஹோமர் எழுதிய ஒதூஸியத்தில் வரும் குக்ளோப உபாக்கியானம், விர்க்கீலியனுடைய ஏனையத்தில் வரும் ஹார்ப்பியரின் செய்தி, ஆகிய இவைகளோடு தான் இந்த விராதன் கதையையும் இக்காண்டத்தின் கடைசியில் வரும் அயோமுகியின் கதையையும் ஒப்பிடலாகும். (The episode of Polyphemus the Cyclops in the Odyssey of Homer and the account of the Harpius in Virgil’s Eneid.) (பக்கம் 14)

 

மகாகவிகளெல்லாம் இத்தகைய மகா சந்தர்ப்பங்களில் பிரகிருதி மனித உணர்ச்சியோடு நடப்பது போல எழுதுவது சகஜமாயிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இலியாதின் 30-வது சருக்கத்தில் ஹோமர் பின்வருமாறு பாடுகிறார்:

“போர்க்கடவுள் துரோயா மீது வட்டமிட்டுக் கொண்டு தன் பயங்கரமான உருவத்தைப் ப்யற்காற்றாலும் மழை வேகத்தாலும் போர்த்தி மறைத்துக் கொண்டு, அத்துரோயாவின் உன்னதமான கோபுரங்களின் மீது நின்று கர்ஜித்துத் தன் வேகத்தைத் துரோயா நெஞ்சில் ஊற்றினான்.”

“பூதேவி புண்பட்டாள்; முடிவு வந்துற்றதென்று பகுதியாளும் தான் நிற்கும் அனைத்துப் பொருள்களினும் உயிர்த்துக் கொண்டு பொருமினாள், துடித்தாள் “ –

“Earth felt the wound and nature from her seat

Sighting through all her works, gave signs of woe

That all was lost” என்று மில்தனும் கற்பித்தெழுதுகிறான். எந்த ஜாதியினராயினும் பெருங் கவிகளின் இதயத்தில் ஒரே  மகாநாதம் ஒலிக்குமன்றோ? (பக்கம் 37)

 

உபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான் – அவனும் இலியாதைப் பாடுகையில்தான் மிக சாமர்த்தியசாலி என்னலாம். அவன் எழுதிய ஒதூஸியம் என்னும் காவியத்தை உண்மையாக மகா காவியமென்று சொல்லக் கூடாது. அதை அநேகமாக உபாக்கியானங்களின் சேர்க்கையென்று சொல்லுவதே முறையாகும். ஆனால் இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவய்வயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில் உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று. (பக்கம் 39)

 

இவ் யுத்தகாண்டம்  ஒன்று மாத்திரம் அளவில் மேனாட்டுப் பெரிய மகா காவியங்களுக்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிறது. சாதாரணப் பதிப்புகளில் யுத்த காண்டத்தில் 4,358 விருத்தங்கள் காணப்படுகின்றன. இலியாதில் 15,693 அறுசீர் வரிகளே இருக்கின்றன என்று கணக்கிடுகிறார்களாதலால் கம்பனது யுத்த காண்டம் இலியாதை விடப் பெரியதாகவே இருக்கிறது. அவ் இலியாதில் உள்ள சகல சுவைகளையும் இக் காண்டத்தில் நாம் காணலாகும். (பக்கம் 53)

 

போரை வர்ணிப்பதில் ஹோமரே தான் சிறந்த கவி என்று மேனாட்டு ஆசிரியரின் கூற்றுக்களைக் கண்டும், ஹோமரின் உத்கிருஷ்டமான யுத்த வர்ணனைகளைப் படித்துப் பார்த்தும் நாம் மயங்கிப் போய், ஹோமரின் போர்ச் சித்திரங்களை விட உயர்ந்த சித்திரங்கள் கிடையா என மதித்திருந்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தைப் படித்துப் பார்த்ததும், கம்பன் போர் வர்ணனையில் ஹோமருக்குத் தாழ்ந்தவனில்லை என்றும், சில இடங்களிலும் சில விஷயங்களிலும் ஹோமரது போர் வர்ணனையை வென்றிருக்கிறானென்றும் கண்டு கொண்டோம். ஹோமரில் ஓர் குற்றம் இங்கு எடுத்தற்பாலது….. (பக்கம் 60)

தொடர்ந்து ஹோமரின் மீதான குற்றத்தை வ்.வெ.சு. ஐயர் விரிவாக விளக்குகிறார்.

மொத்தத்தில் சுவையான நூல்.

கம்பனின் காவியத்தை சிகரத்தில் நிறுத்தும் நேர்மையான விமரிசனம்.

அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.

கட்டுரையை முடிக்க வேண்டுமென்று நினைத்தாலும் அரவிந்த ரிஷியின் கருத்துக்களைப் பார்க்கவில்லை என்பதால் அடுத்த கட்டுரை தொடரும். அத்துடன் இந்த விமரிசனம்  பற்றிய தொடர் முடியும்.

***

 

MILTON’S VIEWS SIMILAR TO HINDU VIEWS! (Post No.4295)

Written by London Swaminathan

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 20-32

 

 

Post No. 4295

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Hindus believe that spirits or angels live everywhere in nature- from sea to the hill top. They are the guardians of hills, groves, streams, fountains, paths, trees, rivers, paths and cities. Sangam Age Tamils called them Anangus. They are cognisant of every human action. In considering the domination of the above, compare Milton’s lines:-

 

 

Millions of spiritual creatures walk the earth

Unseen, both when we wake and when we sleep

—Paradise Lost

 

Xxx

 

Worship of Earth by the Hindus

 

They always ask for forgiving before stepping on it or ploughing or digging a well. The worship of the earth assumes many forms. The pious Hindu does reverence to her when he rises from his bed in the morning and even the indifferently religious man worships her when he begins to plough or sow.

 

Pious Hindu recites a couplet saying, please forgive me for stepping on you, Vishnu patni namastubhyam padas sparsam kshmasvame

 

In Punjab when a cow or a buffalo  is first bought, or when she gives milk after calving, the first five streams of milk drawn from her allowed to fall on ground in honour of the goddess Mother Earth, and at every time of milking the first stream is so treated.

 

The dying man is laid on the earth at the moment of dissolution and so is the mother at the time of parturition.

 

Milton in his Paradise Lost says

………till like ripe fruit thou drop

Into thy mother’s lap- 9-273

 

 

Earth again is regarded as a remedy for disease. It is used frequently as a poultice, and an application for the cure of wounds and sores.

 

Xxxx

Earth in Wedding Ceremony of Lower Castes

 

Following incident is mentioned by Rev. Osborne Martin in his book Gods of India, year 1914

 

 

At the side of a Mission compound in North India is a tank which during half the year is dried up. The women of a neighbouring Chamar village, before any wedding, go in a procession to the dry tank to fetch from it sacred earth used to make the marriage altar and fire place on which the wedding feast is cooked.  The ground close to which the earth is taken is smeared away with vermillion, and marigold flowers are scattered here and there, while puja is offered before the soil is removed. The earth is always given by the digger to a maiden, and married women are not allowed to touch it. The maiden receives it in her sari and heads the procession on its return to the village. This rite is performed with secrecy, and usually at nightfall. This is part of ancient earth worship.

xxx

Valluvar and Milton

 

Tamil poet Tiru Valluvar says,

 

If one exercises self-restraint with knowledge and intent

He will gain distinction among the wise (Kural couplet 123)

 

If one practises self-control in respect of thought, word and deed, he will certainly come to be counted among the good people of the world. In fact as the great English poet Milton would say

 

“The command of one’s self is the greatest

Empire one can aspire to”

 

Lord Krishna says in the Bhagavad Gita about the Self-Restrained:

“But the self-controlled man, moving among objects with senses under restraint, and free from attraction or aversion, attains tranquillity- Gita 2-64

 

xxx

Milton says

The Ionian Gods – of Javan’s issue held

Gods, yet confessed later than Heaven and Earth

Their boasted parents – Paradise Lost 1-508

 

Vedic Rishis also give queer notions of their gods.

 

xxx

In the Vedas there is a hymn called the Bhumi Sukta and that is the oldest hymn by a community to Mother Earth. I Have already written about it:-

 

 Bhumi Sukta | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bhumi-sukta/

Posts about Bhumi Sukta written by Tamil and Vedas.

–SUBHAM—

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294)

Written by London Swaminathan

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4294

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Asaram Bapu, accused in several cases

 

அறநெறிச்சாரம் என்பது அருமையான கவிதை நூல்;

226 வெண்பாக்களைக் (வெண்பா= நான்கு அடிகள்) கொண்டது.

இதை இயற்றியவர் முனைப் பாடியார். இது 600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயத்தில் நம்பிக்கை உடையவரால் இயற்றப்பட்டத்து, அருகக் கடவுள் பற்றிய பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

நம் எல்லோருக்கும் எது நல்லது எது கெட்டது என்பது அனுபவ அறிவாலும் அப்பா, அம்மா, ஆசிரியர் சொற்களாலும் தெரியும். இருந்த போதிலும், போலீசும், ராணுவமும், கோர்ட்டுகளும், வக்கீல்களும் எதற்கு? ஏன் என்றால் பெரும்பாலோர் நல்லனவற்றைப் பின்பற்றுவதில்லை. இதனால் சிறைச் சாலைகள் நிரம்பி வழிகின்றன.

 

ஆகையால் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் நன்மையே; ‘எனைத்தானும் நல்லவை கேட்க’– என்பார் வள்ளுவப் பெருமான்; அடக் கடவுளே! கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்களென்பதே வள்ளுவன் வாக்கு.

 

கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் பற்றி வள்ளுவன் மூன்று அருமையான விஷயங்களைச் சொல்கிறார்:-

 

  1. ஒருவன் பொய் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கையில் அவன் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம் ( kural 271)

 

  1. ஒரு பசு மாடு புலித்தோலைப் போர்த்திக் கொண்டு மேய்கிறதாம். அதாவது, தவ வலிமை அற்றவன், சந்யாசி வேடம் போற்று நடிக்கிறானாம். (273)

 

3.சந்யாசி போல வேடம் போட்டுவிட்டு, இரவு நேரத்தில் அல்லது ரகசிய இடத்தில் பாவம் செய்பவன், புதர் மறைவில் நின்று பறவைகளைப் பிடிக்கும் வேடனாம் (274).

Premananda arrested

என்ன அற்புதமான உவமைகள்!

இது போல அறநெறிச்சாரம் நூலிலும் மனதில் பதிய வைக்கும் விதத்தில் பாக்கள் அமைந்துள்ளன. இதோ அந்தப் பாடல்கள்:

 

 

பாசண்டி (போலித் துறவி- புறச்சமயி) மூடம்

 

தோல் காவி சீரைத்துணிகீழ் விழவுடுத்தல்

கோல்காக் கரகம் குடை செருப்பு — வேலொடு

 

பல்லென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்

நல்லவரால் நாட்டப்படும்

 

முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம்

 

பொருள்:-

தோல் காவி சீரைத் துணிகீழ் விழவுடுத்தல்= மான் தோல், கல்லாடை/காவிஉடை, மரவுரி இவைகளை கீழே புரளுமாறு அணிவதும்

 

கோல்காக் கரகம் குடை செருப்பு – வேலொடு பல்லென்பு தாங்குதல் = தண்டு, காவடி, கமண்டலம், குடை, செருப்பு, வேல், எலும்பு/கபாலம், புலிப் பல் ஆகிய இவற்றை அணிந்து கொள்ளுதலும்

 

பாசண்டி மூடமாய் நல்லவாரால் நாட்டப்படும் – போலி வேடதாரிகள் அல்லது புறச் சமயத்தைச் சார்ந்தோரது அறியாமை என்று பெரியோர்கள் சொல்லுவர்.

Gurmeet Ram Rahim

கழுதை மேல் உட்கார்ந்தவன் தலை மேல் மூட்டை!

 

ஆவரணமின்றி அடுவாளும் ஆனை தேர்

மாவரணமின்றி மலைவானும் — தாவில்

கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்

பழுதாகும் பாசண்டியார்க்கு

 

ஆவரணமின்றி அடுவாளும்= கேடயம் இல்லாமல் போரில் பகைவரைக் கொல்லும் வாளும்,

 

ஆனை தேர் மாவரணமின்றி மலைவானும் =  யானை, தேர், குதிரை, முதலிய படைகளும், அரணும் இல்லாமல் போர் செய்யும் வீரன் செயலும்

 

தாவில் கழுதையி லண்டஞ் சுமந்தானும் போலப்= கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு அவன் தலையில் சுமையைச் சுமப்பவன் செயலும் போல

 

பாசண்டியார்க்கு பழுதாகும் = போலித் துறவிகளுக்கு அவர்கொண்ட வேடமும் பயனற்றதாகும்

 

று

Amrita Chaitanya, accused in several cases

வேறு பொருள்:

கழுதை + இலண்டம் = கழுதை விட்டை

தா இல் கழுதை = கோவேறுக் கழுதை

 

நல்ல உவமை! இப்போதாவது இந்தச் செய்தி நம் மனதில் பதிந்தால் முனைப்பாடியார் சந்தோஷப்படுவார்.

 

–சுபம்–

 

வர்ஜிலையும், ஹோமரையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! -1 (Post No.4293)

Written by S.NAGARAJAN

 

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 67-16 am

 

 

Post No. 4293

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

கம்பன் கவி இன்பம்

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! -1

.நாகராஜன்

1

கட்டுரை எண்4272 – பிரசுரமான தேதி :5-10-2017

கம்ப ரஸிகர் திரு கே.என். சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணி மாலை என்ற நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இறுதியில் வரும் பாடல் இது>

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

 

கட்டுரையைப் படித்த அன்பர் திரு ஆர்.நஞ்சப்பா அவர்கள் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அவர் நல்ல ஒரு அறிஞர். பல நூல்களைக் கற்றறிந்தவர். யார் மனதும் நோகாதபடி தன் கருத்துக்களைப் பதிவு செய்யும் வல்லமை படைத்தவர்.. அதில் சில பகுதிகளைக் கீழே பார்க்கலாம்.

 

 

கவிஞர் சிவராஜபிள்ளையின் கம்பர்-வால்மீகி பக்தியும் பற்றும் போற்றுதற்குரியன. ஆனால், அதற்காக வர்ஜிலையும், ஹோமரையும் மில்டனையும் வம்புக்கிழுக்கவேண்டாமே !
ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர்ந்த தெய்வீகக் கவிகள் இருந்திருக்கிறார்கள். உயர்ந்த விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். பண்பாட்டு மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்திருக்கிறார்கள். அவரவர்கள் பண்பாட்டிற்கும் மொழி நடைக்கும் ஏற்றவகையில் பாடியிருக்கிறார்கள். வெவ்வேறு மரபுகளைச் சார்ந்த, மொழிகளில் உள்ள உயர்ந்த காவியங்களை ஒப்பிடுவது சரியாகுமா என்பது சந்தேகத்துக்கிடமானது. ஆனால் சில உயர்ந்த, ஆன்மீகக் கருத்துக்கள் மனித குலம் முழுமைக்கும் பொதுவாக இருக்கின்றன. இவற்றை சிறந்த கவிகள் சிறப்பித்தே இருக்கிறார்கள். Great minds think alike.

 

சிவராஜபிள்ளையவர்கள் வர்ஜில், ஹோமர், மில்டன் நூல்களை அந்தந்த மொழிமூலத்திலேயே பயின்றாரா என்பது தெரியாது! அப்படிப் பயிலாமல் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்?………….

ஹோமர் பார்வையற்றவர். அவர் அகக்காட்சியில் கண்டு எழுதினார். இது ஒரு தெய்வீக உந்துதலால் நடந்தது. [ இதை மேலை நாட்டினரை விட நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்! ] மில்டன் ” Paradise Lost ” காவியம் எழுதியபோது பார்வை இழந்திருந்தார் ! ஆனால் ஓர் உயர்ந்த காவியம் படைக்கவேண்டும் என்ற உந்துதலால் , கங்கணம் கட்டிக்கொண்டபடி, எழுதினார் ! இதுவும் தெய்வீக அருளால் நடந்ததே! அவரவர் மரபுக்குத் தக்கபடி எழுதினார்கள். ஹோமரும் வர்ஜிலும் தேசீயக்கவிகளாக போற்றப்படுகிறார்கள்., மில்டன் அத்தகைய இடத்தைப் பெறாவிட்டாலும் உயர்ந்த கவிஞராக மதிக்கப்படுபவர்.,

நமக்கு வால்மீகியும் கம்பரும் இரு கண்கள். அதற்காக பிற மொழி கவிஞர்களை என் குறைத்து மதிப்பிடவேண்டும்? It looks uncharitable.

இதே கட்டுரைக்கு அன்பர் டி.எஸ்,கே. ரகு அவர்கள் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் சில பகுதிகளைக் கீழே பார்க்கலாம்.

tskraghu

 

I have enjoyed and been enlightened by your posts, thank you.

While I don’t see you doing it much, but I do come across in blogs and fb posts that leads me to perceive this: we tamils seem to labour under an enormous inferiority complex that we feel compelled to shout at every turn how we are ‘better,, ‘superior’, ‘cultured’ than others. Isn’t it possible to enjoy the treasure available to us peaceably without putting others down or drawing odious comparisons? Isn’t time we look at it more maturely and let the beauty speak for itself instead of thirsting for endorsements?

இந்த இரு அன்பர்களும் பொதுவாகக் குறிப்பிடும் கருத்து மற்ற கவிஞர்களைத் தாழ்த்தித் தான் வால்மீகியையும் கம்பனையும் உயர்த்த வேண்டுமா?

 

பதில் : வேண்டாம்.

 

ஆனால் திரு சிவராஜ பிள்ளை வாழ்ந்த காலம் சென்ற நூற்றாண்டு. அநத பழைய நாட்களில் பலரும் ஆங்கிலத்தில் எதை எழுதினாலும் புகழ்வதோடு உடனடியாக ‘டமிளில் என்ன இருக்கிறது’ என்று ஏளனம் செய்வது வழக்கம்.

அதையொட்டி மனதில் எழுந்த எண்ணத்தின் விளைவாக இப்படி எழுதி இருக்கலாம்.

 

 

2

இதே கால கட்டத்தில் வாழ்ந்தவர் மஹரிஷி அரவிந்தர். ஆங்கில பேராசிரியராக ஆரம்ப காலத்தில் பணியாற்றியவர். லத்தீன், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட்ட பல மொழிகளை அறிந்தவர்.

அதே போல வ.வே.சு. ஐயர் கம்ப ராமாயணம். வால்மீகி ராமாயணம், மில்டனின் பெருங் காப்பியங்கள், வர்ஜில், ஹோமரின் காவியங்களை நன்கு படித்தவர். அலசி ஆராய்ந்தவர்.

அவர்களது கருத்துக்களை மிக மிகச் சுருக்கமாக தர விழைகிறேன்.

அத்துடன் பேராசிரியர் மதுரையைச் சேர்ந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கம்பனும் மில்டனும் நூலின் சில முக்கிய கருத்துக்க்ளையும் இங்கு தர விழைகிறேன்.

 

3

டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் மில்ட்டனும் – ஒரு புதிய பார்வை என்ற நூல் 1978 நவம்பரில் முதல் பதிப்பைக் கண்டது.407 பக்கங்களைக் கொண்ட விரிவான புத்தகம்.

இதில் ஒரு வார்த்தை கூட இவரை உயர்த்தியோ அவரைத் தாழ்த்தியோ இல்லை.

மில்ட்டன் மற்றும் கம்பனின் காவியப் போக்கு, சுவை, உத்தி உள்ளிட்டவற்றை விளக்குகிறார் நூலாசிரியர்.

ஹோமர் இயற்றிய இலியத் ஆடிசி என்னும் கிரேக்க காவியங்களும் வான்மீகி இயற்றிய இராமாயணமும் வியாச பாரதமும் இயற்கைக் (கேள்விக்) காவிய இனத்துக்கு எடுத்துக் காட்டுகளாகும். (பக்கம் 19)

கொள்கையளவில் கருதினால் கம்பனும் மில்ட்டனும் த்த்தம் காவியத்தை மூன்றில் ஒரு வகையில் அமைக்கலாம்.

 

  1. இருபாகக் கதையை ஒரே ஒரு நிகழ்ச்சியாக ஐக்கியப்படுத்தி அதனைக் காலமுறையில் நடத்துவது.
  2. அவ்வாறு ஒன்றிய நிகழ்ச்சியை இடையில் தொடங்கி முந்திய செயலைப் பின்னோக்கு உரையாக அமைப்பது.
  3. கதையின் பிற்பகுதியிலிருந்து நிகழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு முற்பகுதியை ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய கிளைக் கதையாக அமைப்பது.

கம்பன் முதல் முறையையும் மில்ட்டன் மூன்றாம் முறையையும் பின்பற்றுவர். (பக்கம் 71)

 

துறக்க நீக்கம் போலவே தமிழ் இராமாயணமும் கதையின் இடையிலும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் ஆரம்பமாகிறது. விண்ணகப்போரை மிலட்டன் ஒதுக்கியதைப் போலவே, கம்பனும் இராவணன் அருந்தவம் செய்து வரம்பிலா ஆற்றல் பெற்றதையும் அதைக் கொண்டு எல்லா உலகங்களையும் வென்று கொடுங்கோலோச்சியதையும் எடுத்துச் சொல்லாது விடவேண்டியிருக்கிறது. (பக்கம் 76)

 

கம்பனுக்கு முதனூலாக வான்மீகமும் முன்மாதிரியாக சிலப்பதிகாரமும் பயன்பட்டன. ஆனால் மில்ட்டனுக்கு இன்னும் வளமான காவிய மரபு கை கொடுத்தது.

எளிய நிகழ்ச்சியையும் விசாலமான வீச்சையும் சாத்ரியமாக இணைப்பதில் மில்ட்டனுக்கு முன் மாதிரியாக அமைந்தது இலியத். (பக்கம் 85)

 

 

ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கலைஞனின் மனோபாவனையில் இலட்சியக் கோசலம் உயிர்த்தெழுந்ததென்றால் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞனின் ஒளிக் காட்சியில் ஆதாமும் ஏவாளும் ஈடன் சோலையில் நடத்திய வாழ்வு துவங்கியது. கம்பன் காவியத்தில் கோசலம் பெறு சிறப்பிடத்தை மில்ட்டன் காவியத்தில் ஈடன் பெறும். (பக்கம் 121)

 

 

உயிரினங்களுக்குப் பெயரிட்டவன் ஆதாமாக, மலர்களுக்குப் பெயர் சூட்டியவள் ஏவாளே; நாள்தோறும் காலையும் மாலையும் பூக்களைப் பேணும் பணியும் புரிந்தாள் அவள் (XI: 273-77)

 

கம்பனும் மறுப்புவமைகளை ஆளத் தயங்கான். எடுத்துக் காட்டாக, அயோத்தி மாளிகையின் மிகுந்த வெண்மை, நிலவு பொழியும் சந்திரனையும் கரிது எனச் சொல்லும்படி இருந்தது என்பான். (பக்கம் 142)

Kamban image from wikipedia

இப்படி பக்கத்திற்குப் பக்கம் மில்ட்டனையும் கம்பனையும் அரவணைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

அருமையான நூல் இரு கவிஞர்களையும் உயரத்தில் ஏற்றி வைத்துப் பார்த்து மகிழ்கிறது.

 

(என் தந்தையின் நெருங்கிய நண்பர் திரு எஸ்.ராமகிருஷ்ணன். மதுரையில் வடக்குமாசி வீதியில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாவது வீடு அவருடையது. பல வருடங்கள் அடிக்கடி திரு ராமகிருஷ்ணன் எங்கள் வீட்டிற்கு வருவார்; அல்லது நாங்கள் அவர் வீட்டிற்குச் செல்வோம். அந்த இனிய நாட்கள் மறக்க முடியாதவை)

 

அருமையான இந்த நூலைப் படிப்போர் கம்பனையும் மில்ட்டனையும் ஒருசேரப் பாராட்டுவர்.

  • கட்டுரை நீண்டு விட்டதால் வ.வேசு. ஐயர், அரவிந்தர் ஆகியோரின் கருத்துக்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..
  • அடுத்த கட்டுரையுடன் இந்த வம்பு முடியும்.

–SUBHAM–

Interesting Anecdote about Shaalagraama (Fossil) Marriage (Post No.4292)

Written by London Swaminathan

 

Date:11 October 2017

 

Time uploaded in London- 16-26

 

 

Post No. 4292

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Interesting Anecdote about Shaalagraama (Fossil) Marriage (Post No.4292)

What is a Shalagrama?

Hindus worship fossils with several designs made by the impressions of dead animals. Such stones are millions of years or thousands of years old. Devotees of Lord Vishnu regard them as a most sacred objects. They see the symbols of Lord Vishnu (Chakra=wheel, Shank= Conch) in it. Normally other stone images of Gods must be consecrated in a special ceremony by a priest before they can be used; but with Shalagrama (Fossil stone) you can worship straight away. This stone is inherently sacred and is worshipped as a part of deity himself. It is a round black ammonite and is found in River Gandaki in Nepal. They are valued according to their size, hollowness, and inside colouring and impression. For rarer kind big amount of money is given.

 

Hindus believe that whoever keeps this celebrated stone in the house can never become poor; they never want to part with it. It is passed from one generation to another generation for Puja/worship.

Bhagavata Purana has a story about Shalagrama:

Vishnu created nine planets (celestial objects) to preside over the fates of men. Sani/Saturn commenced his reign by requesting Brahma to become subject to him for 12 years. Brahma referred him to Vishnu, who asked him to call on him next day. When he called, he found that the god, dreading the influence of the inauspicious planet, had transformed himself into a mountain. Sani them became a worm, and ate into the vitals of the mountain for twelve years. At the expiration of that time Vishnu resumed his proper shape, and ordered henceforth the stones of this mountain Gandaki should be worshipped as the representatives of himself.

 

Hindus worship this form of Vishnu in homes. They first bathe or wash the stone, reciting the mantras and then offer flowers, incense, light sweetmeats and water, repeating the mantras. After the worship the offerings ae eaten by the family.

 

In the hot months, to cool the sacred stone,  a vessel is suspended over it, as in the case of the Linga/ Shiva, and a small hole is bored into the bottom of the vessel. The water poured into the vessel drips over the Shalagrama stone/s. The water is collected and used as holy water. The marks of the stone are shown to dying men, in the belief that the concentration of the mind on this object will ensure the soul a safe passage to Vaikund, Vishnu’s abode.

A separate room or a particular spot in the Hindu houses is kept for the worship of the gods.

 

Shalagrama – Tulsi Plant Wedding

 

There is a very interesting account of a marriage of Shalagrama with Tulsi (Holy Basil) plant in a 100 year old book:

 

“The king of Orrcha in Central India, used to spend three lakhs of rupees (100 years ago) on this marriage. The officiating priests get good fees. A procession of 8 elephants, 1200 camels and 6000 horses, all mounted and elephants caparisoned. On the leading elephant of this cortege was carried the Pebble God (shalagrama/ fossil). He was carried to pay his bridal visit to the little shrub goddess/Tulsi.

 

All the ceremonies of a regular marriage were gone through, and when completed the bride and bridegroom were left to repose together in the temple of Ludhaura till the next year. Over one lakh people were present, and they were feasted at the king’s expenses”.

 

In addition to the black ammonites (shalagrama), white agates, typifying Shiva in his linga form and red stones, as symbolising Ganesa with certain forms of coral, are also worshipped.

 

Shashthi, protectress of married women and of children has no temples or idols, but her proper representation is  a rough stone, smeared with red paint and set up at the foot of a banyan tree. Lord Shiva is worshipped by the well known Linga (formless) stone.

Source: The Gods of India by Rev Osborne Martin, 1914

 

–SHUBAM–

நம்மாழ்வார் பாசுரத்தில் தமிழர் வரலாறு (Post No.4291)

Wikipedia picture of Nammalvar

Written by London Swaminathan

 

Date:11 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4291

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இந்துக்களுக்கு வரலாறே எழுதத் தெரியாது என்று எள்ளி நகையாடுவது மேல் நாட்டு “அறிஞர்களின்” வாடிக்கை. இதைக் கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்லுவது மார்கஸீயவாந்திகளின் மற்றும் ஆங்கிலத்தில் வரலாறு படித்த சுயபுத்தி இல்லாத நம்மவர் சிலரின் வாடிக்கை. ஒத்து ஊதுவதில் சிறந்தவர்கள்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரி பிராமணன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினிதான் இந்தியாவின் முதலாவது வரலாற்று நூல் எனபர் வெள்ளையர்.

 

ஆனால் நம்மவர்கள் மிகத் தெளிவாக வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு புற நானூறும் பிருஹதாரண்ய உபநிஷத்தும், கோ கருநந்தடக்கன் போன்றோர் கல்வெட்டுகளும் சான்று; நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!

 

நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்

எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ

–பாடல் 3010

 

பொருள்:-

பல யுகங்கள் இவ்வுலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போன அரசர்கள் மிகப்பலர். நினைக்கப்பு குந்தால் கடல் மணல்திட்டிலே உள்ள நுண்மையான மணலைக் காட்டிலும் அவர்கள் பலர் ஆவர். அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாமல் அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை. ஆதலால் பனைமரம் போன்ற பெரிய கால்களை உடைய மதயானையைக் கொன்ற கண்ணபிரானது திருவடிகளை வணங்குங்கள்.

 

மேல்நாட்டோர் போல குறுகிய கால எல்லை பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்துக்கள். அவர்கள் எல்லாம் மாபெரும் யுகக் கணக்கில்தான் (eras and eons) எதையும் பார்ப்பார்கள். சின்னக் குழந்தைகூட சூர்ய கோடி சமப்ரபா என்றும் சஹஸ்ர கோடி யுகதாரிணே நம: என்றும் தினசரி வழிபடுவர். ஆக இவர்கள் சொல்லும் கி.மு. கி.பி. எல்லாம் இந்துக்களுக்கு கொசு அல்லது — கொசுறு!!

Picture from Wikipedia

எகிப்திய, மாயன், சுமேரிய, பாபிலோனிய, சீன ,கிரேக்க வரலாறுகள் எதுவும் கி.மு 3000-ஐத் தாண்டுவதில்லை. ஆனால் கி.மு 3102ல் வாழ்ந்த வியாசர் எழுதிய மஹாபாரதமோ நூற்றுக் கணக்கான அரசர்கள் பெயர்களைச் சொல்லுகிறது.  கோ கரு நந்தடக்கனின் எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கலியுகம் துவங்கி இத்தனையாவது நாள் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்று நாள் கணக்கில் சொல்லுகிறது! ஆக மஹாபாரதம் சொல்லும் காலக் கணக்கு சரியே என்பது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் பொறித்த கல்வெட்டில் உளது. பிருஹதாரண்யக உபநிஷத் ஐம்பதுக்கும் மேலான ஆசிரியர் பரம்பரையை அப்படியே தருகிறது. இது கி.மு 850ல் எழுதப்பட்டது என்று மேல் நாட்டு “அறிஞர்களும்’ ஒப்புக்கொள்வர். கபிலரோ புற நானூற்றின் 201 ஆவது பாடலில் இருங்கோவேள் என்ற குறு நில மன்னனின் 49 தலை முறை பற்றிப் பேசுகிறார்.

அவ்வையாரோ புற நானூற்றுப் பாடலில் அதியமானின் முன்னோர்கள் கரும்பு கொண்டுவந்த வரலாற்றைப் (இக்ஷ்வாகு வம்சம்) பற்றிப் பாடுகிறார். ஒரு சதுர் யுகத்தில் பிரம்மாவின் ஆயுட்காலமே முடிந்து வேறு ஒரு பிரம்மா வருவார்; இது போல பல பிரம்மாக்களைக் கண்டது இந்து மதம். ஆகையால்தான் புற நானூற்றுப் புலவர்களும் நம்மாழ்வாரும் மன்னர்களின் எண்ணீக்கயை மணல்துகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

 

இதோ புறநானூற்றுப் பாடல்:

 

சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நி ரை கண்டன்ன

வேற்றுமை இல்லாத  விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந்தோரை எண்ணுங்காலை

 

–புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்

 

இந்த உலகத்தில் ஆண்ட மன்னர்கள் தாமரைக் குளத்தில் மாரும் தாமரை போன்ற எண்ணிக்கை உடையவர்கள்….

 

இதோ இன்னும் ஒரு பாடல்:-

 

இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்

உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்

தாமே ஆண்ட ஏமம் காவலர்

இடுதிரை மணலினும் பலரே

–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர் பாடிய பாடல் இது

கரிய கடலால் சூழப்பட்ட இப்பெரிய இடத்தையுடைய மண்ணுலகத்தை– வேல மரத்தின் அளவு இடமும் மற்றவர்க்கு விடாதபடி— தாமே ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை கடல் அலைகள் ஒதுக்கும் மணலை விடப் பலர் ஆகும்.

 

அவர் காலத்தில் இருந்த மன்னர்கள் எண்ணிக்கையே அவ்வளவு!

 

புராணங்களும் ஒரு வம்சத்தில் மட்டும் 140 தலை முறைகளுக்கு மேலாக பட்டியல் இட்டுள்ளது. இது போல நாடு முழுதும் பல வம்சங்கள். ஆக இவ்வளவு பெயர்களும் ஒரு தூசுக்குச் சமானம் என்பதால் இந்துக்கள் அதைத் தனித் தனியாக எழுதி இருந்தாலும் அவை இன்று அர்த்தமில்லாத வெறும் குப்பையே.

 

கிரேக்க ஆசிரியர்கள் இந்திய வரலாறு அலக்சண்டருக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடையது என்று எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

–Subham–

அழகியின் அழகு தரும் அனுபவம்! (Post No.4290)

Written by S.NAGARAJAN

 

 

Date:11 October 2017

 

Time uploaded in London- 6–43 am

 

 

Post No. 4290

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

 

வீ ணா நாதமோ, பேச்சோ, கலசமோ, மார்பகமோ, வாழைத் தண்டோ, தொடையோ, – அழகியின் அழகு தரும் அனுபவம்!

 

ச.நாகராஜன்

 

 

சம்ஸ்கிருதப் பாடல்களில் தனிச் சுவை கொண்டது சிருங்கார ரஸப் பாடல்கள்.

இப்படி சிங்கார ரஸப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

எடுத்துக்காட்டாக இரு பாடல்களை இங்கு பார்க்கலாம்.

 

அச்சின்னாம்ருதபிந்துவ்ருஷ்டி சத்ருஷீம் ப்ரீதிம் ததத்யா வ்ருஷாம்

யாதாயா விகலத்பயோதரபாராத் த்ருஷ்டவ்யதாம் காமபி I

அஸ்யாச்சந்த்ரமசஸ்தநோரிவ கரஸ்பர்ஷாஸ்பதத்வம் கதா

நைதே யன்முகுலிபவந்தி ஸஹஸா பத்யாஸ்த தேவாத்புதம் II

 

சுபாஷித ரத்னாகார பாண்டாகாரம் நூலில் உள்ள இந்தப் பாடல் அமைந்துள்ள சந்தம் சார்தூலவிக்ரிதம்.

இதன் பொருள்:

இடைவிடாது பொழியும் அமுத தாரையைப் போல  இன்பம் தருவது,

மார்பகங்கள் அசைவதால் விவரிக்கமுடியாத அழகைக் கொண்டிருப்பது, (அல்லது மழை பொழிவது)

காதலன் கை பட்டதால் ( அல்லது சந்திரனின் கிரணங்களால்)

இந்த தாமரை மார்பகங்கள் திடீரென்று சுருங்கவில்லை.

இது ஒரு ஆச்சரியம்!

 

இதை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் ஏ.ஏ.ராமநாதன் இப்படி:

 

Giving  pleasure to the eyes similar to a continuous shower of nectar, possessing an indescribable beauty by the movements of the breasts (or : shower of clouds) and touched by the hand of the lover (or: rays of the moon) these lotuses of breasts do not become contracted suddenly. This is a wonder.

Translation by  A.A.Ramanathan

 

இன்னொரு பாடலைப் பார்ப்போம்:

 

அதந்திரி வாக்வீணா ஸ்தனயுகலமக்ரீவகலஸா

வனப்ஜம் விருடதிலோத்பலதலமத்ரோருகதலி I

அகாண்டா தோர்வல்லி வதனமலகலங்க ஷஷதரஸ்

ததஸ்யாஸ்தாருண்யம் புவன விபரீதம் கடயதி II

 

இது  ஸ்ரீதரதாஸரின் சத் உக்தி கர்ணாம்ருதம் என்ற நூலில் வரும் ஒரு பாடல்.

இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி.

ஸ்ரீதரதாஸர் என்ற கவி வதுதாஸர் என்பவரின் புதல்வர்.

வங்கத்தை ஆண்ட மன்னனான லக்ஷ்மணசேனன் என்பவன் இவரை ஆதரித்தான்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1205ஆம் ஆண்டாகும்.

 

பாடலின் பொருள்:

அவளது பேச்சோ தந்தி இல்லாத வீணா நாதம் போல இருக்கிறது.

அவளது மார்பக கலசங்களோவெனில் கழுத்தில்லாத கலசம் போல உள்ளது.

அவளது தொடைகளோ இலைகளற்ற வாழைத் தண்டு போல இருக்கிறது.

அவளது கைகளோ கிளை இல்லாத கொடி போல உள்ளது.

அவளது முகமோ களங்கமற்ற சந்திரன் போல உள்ளது.

ஆக இப்படி அவளது இளமை பொதுவாக அனுபவிக்கும் விஷயங்களுக்கு மாறாக எதிராக புவன விபரீதமாக அல்லவா இருக்கிறது!

 

இதை அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஏ.ஏ.ராமநாதன் இப்படி:

 

Her speech is sweet as from a lute but without strings, her bosom-pots without necks, her eyes lilies  but not grown in water, her thighs plantain stems without leaves, her hand creepers  without branches, her face the moon without  the black spot – thus  does her youth bring together things which are opposed to common experience.

 

Translation by  A.A.Ramanathan

 

சாதாரண வாழ்வில் நாம் பார்க்கும் வீணை, கலசம், வாழைத் தண்டு, கொடி, சந்திரன் ஆகியவற்றைக் கொண்டு பெண்ணழகை வர்ணிக்கும் பாணியில் ஒரு புதிய உத்தியைக் காண்பிக்கும் கவிஞரின் திறன் தான் என்னே, என்னே!

 

சம்ஸ்கிருதத்தில் உள்ள பெண்களை வர்ணிக்கும் பாடல்களை ஒப்பிட வேறு மொழியில் சுவையான பாடல்கள் உண்டா, என்ன?

 

***

DIWALI FIRE CRACKERS- ‘TO BE OR NOT TO BE THAT IS THE QUESTION’ (Post No.4289)

Written by London Swaminathan

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 16-58

 

 

Post No. 4289

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

WE HAVE A BIGGER DILEMMA THAN THE SHAKESPEAREAN HAMLET! TO BUY FIRE CRACKERS OR NOT, THAT IS THE QUESTION.

During Deepavali, every year Hindus are faced with a question whether to buy sparklers and crackers or not. Do I do anything wrong by using fire crackers?

My view is………………

Hindu youths must buy fire-crackers and fire them happily.

Otherwise arson attacks will increase!

During bandhs and riots, more houses, buildings and buses will be burnt. Why?

Human beings are pyromaniacs according to science journals.

From the days we lived in caves millions of years ago, we started big fires for cooking and to drive away the wild animal ; in cold places we did it for keeping us warm.

This is in our genes. If we don’t allow to use this genetic trait, our youths will use it during riost and bandhs.

In Hindiusim, everything is scientifically thought and placed in the scriptures. Thy have made cushions and shock absorbers to solve all sorts of problems to reduce tension, depression , riotous behaviour and suicides.

 

Even western countries allow fire works and bonfires during Guy fawkes day and other events.

BILLIONS OF CIGARETTES SMOKED EVERY MINUTE CAUSE MORE POLLUTION AND CANCER THAN FIRE WORKS. STOP IT. DONT STOP FIRE CRACKERS.

 

COME TO LONDON AND WASHINGTON. DURING DEEPAVALI AND INDEPENDENCE DAY MILLION CRACKERS ARE FIRED BY THE GOVERNMENT. GO TO OLYMPICS. WHAT YOU DO ON DIWALI DAY IS DONE IN ONE OR TWO HOURS THERE. BILLIONS OF CIGARETTES AND BEEDIS AND CIGARS CAUSE MORE POLLUTION.

ASK AMERICA TO STOP THE ARMS SALE. ASK BRITAIN TO STOP THE ARMS SALE. THE FIRE ARMS AND BOMBS THEY SELL ARE USED IN 55 COUNTRIES IN THE WORLD EVERY DAY– SAYS ECONOMIC TIMES.

 

MAKING FIRE CRACKERS IS A BIG INDUSTRY IN TAMIL NADU. ANTI TAMILS ARE AGAINST THE DIWALI CRACKERS.

Leather industry and factories pollute the air more than anything.

NOISE POLLUTION

Some people argue fireworks create noise pollution.

Loud speakers at political meetings and mosques don’t allow us to have an undisturbed sleep. The bombs that explode in 55 countries on any one day, the billions of cigarettes smoked at any one day cause more deaths. No US President could stop the arms sale even inside US after weekly shooting on innocent people. Mac Donalds in USA sell fire arms! Why shouldn’t we sell fire works for one week?

 

In short the arms and weapons, the cigars and cigarettes, one dollar or one pound shops run by Chinese or with Chinese goods, the fireworks done during Olympics, New Year Day, Independence day, Special celebrations, the leather industry, the nuclear tests by the Western countries, the jet planes manufactured by the Western countries, the thousands of cargo / container ships and Oil Tankers cause terrible pollution.

 

When we consider such big every day, every minute pollution, one day Diwali fire crackers won’t harm the world. Having said that

A word of caution…………..

In those days Hindus lived in big towns wide apart; nowadays we live in big multi story buildings accommodating 500 families or so in one building!

Nearby there are hospitals and offices.

Old and sick people live very near the buildings in care homes and hospitals.

Birds and animals live in the near by woody areas.

Just born children may also be in many flats. Pregnant ladies may be there.

Since we live in densely populated areas,  doing fire works may disturb many people.

 

So Hindus must show self-restraint.

 

Fix the time for fire works between 5 am and 11 am on Diwali  day and Diwali Eve.

Let us do fireworks without hurting the feelings of others or harming them.

 

Tamil Temples paintings show that the fire- works have been in use for many centuries.

China is making big money by selling Fireworks to all the countries in the world. Let us also think how we can give more jobs suing Diwali. We know that textile industry, restaurants, sweet shops and transport make big money. Workers get Diwali bonus ad inams. Let us think positive.

 

I have already written two articles about the significance of Diwali. Please read those articles as well.

 

MY OLD ARTICLES:–

 


SCIENCE BEHIND DEEPAVALI- Part 1 | Tamil and Vedas

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

3 Nov 2012 – Science behind Deepavali (swaminathan’s Talk delivered today 03/11/2012) Actual Diwali falls on 13-11-2012 Good Evening,Namsthe …

 

SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/science-behind-diwali-2-175-sweet-ite…

Translate this page

3 Nov 2012 – SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! Picture from Wikipedia : Making Fire Crackers. This is Second Part of my speech: swami.

 

–SUBHAM–

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

 
Written by London Swaminathan

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 14-56

 

 

Post No. 4288

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1 | Tamil and Vedas

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

3 Nov 2012 – Science behind Deepavali (swaminathan’s Talk delivered today 03/11/2012) Actual Diwali falls on 13-11-2012 Good Evening,Namsthe …

 

SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/science-behind-diwali-2-175-sweet-ite…

Translate this page

3 Nov 2012 – SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! Picture from Wikipedia : Making Fire Crackers. This is Second Part of my speech: swami.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி பற்றி இரண்டு நீண்ட கட்டுரை எழுதினேன். கட்டுரையில் விவரம் காண்க.

இளஞர்களை வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும் பஸ்ஸுக்கும் தீ வைப்பார்கள். ஏனெனில் நாம் எல்லோரும் பைரோமேனியாக் (PYROMANIAC) என்று விஞ்ஞான சஞ்சிகைகள் விளம்புகின்றன. இது பற்றி எனது கட்டுரையில் விளக்கியுள்ளேன். நாம் ஆதிகாலத்தில் குகைகளில் வசித்தோரின் வழி வந்தவர்கள். உணவு சமைக்கவும் இரவு நேரத்தில் வனவிலங்குகளை விரட்டவும், குளிர் காயவும் தீ மூட்டி பழக்கப்பட்டவர்கள். இது நமது மரபணுக்களில் (GENES) உள்ளதால்தான் நாம் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் சிறு வயதில் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் நெருப்புப் பெட்டியுடன் விளையாடினோம். வெளியில் சொக்கப்பனை கொளுத்தினோம். ஆகையால் கோர்ட்டுகள் மூலமோ, அரசாங்க போலீஸ் மூலமோ இளைஞர்கள் வெடி வெடிப்பதை  — தீபாவளி பட்டாசு வெடிப்பதைத் — தடுத்தால் பந்த், ரகளை, கலாட்டாக்களின் போது வீட்டுக்குத் தீ வைப்பதும், பஸ், ரயில்களுக்குத் தீ வைப்பதும் அதிகரிக்கும்; குறிப்பாக ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம்.

 

ஆகையால் தீபவளி வெடி வெடிக்கத் தடை வேண்டாம்.

ஆனால்……………………..

இந்துக்களிடையே சுய கட்டுப்பாடு (SELF CONTROL and SELF RESTRAINT) வேண்டும்; விஞ்ஞான அணுகு முறை (Scientific approach)  வேண்டும். அது என்ன?

அந்தக் காலத்தில் பரந்த நிலப் பரப்பில், சின்ன ஜனத்தொகை.

இப்பொழுதோ அடுக்கு மாடி வீடுகளில் 500 குடும்பங்கள்;

அருகே ஆஸ்பத்திரிகள்; அ லுவலகங்கள்.

வீட்டூக்குள் நோயாளிகள்1 வெடிகளுக்கு அஞ்சும் சிறு குழந்தைகள்!

இவ்வளவு பேரின் நலத்தையும் மனதில் கொண்டு இரவு 11 மணிக்கு மேல், காலை 5 மணிக்கு முன்னர் வெடிகளை வெடிப்பதில்லை என்று உறுதி பூண வேண்டும்.

இது போல கிராமப் பகுதிகளில், காட்டோரப் பகுதிகளில் பறவைகள், விலங்குகள் நலன்களை மனதிற் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் பல கிராமங்களில் பறவைகளின் நலனை மனதில் வைத்து தீபாவளியே கொண்டாடுவதில்லை- அதாவது வெடி வெடிபதில்லை. நல்ல உள்ளங்கள் !!

 

புறச்சூழல் கேடு வருமா?

தீபாவளியின் போது விஷப்புகை வெளியேறுவது உண்மையே; ஆனால் அதை விட கூடுதல் விஷப்புகை ஒவ்வோரு நிமிடமும் உலகெங்கும் புகைக்கப்படும் சிகரெட், பீடி, சுருட்டு மூல ம் வெளியாகிறது. இதனால் புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் (PASSIVE SMOKING IS MORE DANGEROUS)  வரும் என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

அமெரிக்காவும் மேலை நாடுகளும் விற்பனை செய்யும் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் உலகில் எந்த ஒரு நேரத்திலும் 55 நாடுகளின் மோதல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மே ல் நாட்டுப் பத்திரிக்கைகளும் தார்மீக உணர்வு இல்லாத, அற நெறி அறியாத குருடர்களின் கைகளில்தான் இருக்கின்றன. இந்தியாவைப் (INDIAN MASS MEDIA) போலத்தான். பணம் ஒன்றே குறி.

 

உலகில் சண்டை சச்சரவுகள் இருப்பதையே விரும்புகின்றனர்.

லண்டனில் ஆண்டுதோறும் நடக்கும் ஆயுத விற்பனைக் கண்காட்சியில் எந்த பயங்கரவாத இயக்கமும் ஆயுதம் வாங்கலாம். உலகில் 55 நாடுகளில் யுத்தம் நடப்பதை ஊக்குவிப்பது மேலை நாடுகள்!!

அமெரிக்காவில் தினமும் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தும் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ஆயுத விற்பனையை நிறுத்த முன்வரவில்லை; ஏனெனில் அங்கே மக் டொனால்டு (Mac Donald) உணவகத்திலும் துப்பாக்கி வாங்கலாம்; இவர்கள்தான் உலகில் மிகப்பெரிய புறச்சூழல் கேட்டை விளைவிக்கிறார்கள். ஆயுத விற்பனையை நிறுத்தினால் 55 நாடுகளில் வெடி குண்டுகள் வெடிக்காது. POLLUTION/ புறச் சூழல் கேடு குறையும்.

நாம் பறக்கும் ஜெட் விமானங்கள் கக்கும் புகையும், அவை எழுப்பும் ஒலியும் அதி பயங்கர POLLUTION!

 

உலகில் கடலில் மிதக்கும் கப்பல்கள், குறிப்பாக எண்ணய்க் கப்பல்கள், கடல் முழுவதையும் சாக்கடையாக்கிவிட்டன. மீன்களை சாகடித்து விட்டன அல்லது மீன் சாப்பிடுவோரின் உடல்களை விஷமாக்கிவிட்டன. ஆக இந்த கேடுகளைப் பார்க்கையில் ஒரு நாள் தீபாவளியில் ஒரு கேடும் வாராது. இந்தக் கப்பல்களையும் விமானங்களையும் தயாரிப்போர் மேலை நாடுகள்; அதில் பயணம் செய்வோரோ, மத்தாப்பு வெடிகளுக்கு எதிராகக் கூச்சல் போடும் மேல் நிலை வர்கம்!

 

பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்

 

சிவகாசி போன்ற இடங்களில் பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்– அவர்கள் வயிற்றில் மண்ணை அடித்து விடாதீர்கள். யாராவது புறச்சுழல் கேடு பற்றிப் பேசினால் அதை பீடி, சிகரெட் குடிப்போரிடம் சொல்லச் சொல்லுங்கள்; புற சூழலையும் கெடுத்து சிகரெட் குடிக்காதவர்களுக்கும் புற்று நோயை (PAASIVE SMOKING IS MORE DANGEROUS THAN ACTIVE SMOKING) உண்டாக்கும் அந்தக் கம்பெனிகளையும் ஆட்களையும் விரட்டி அடியுங்கள். பட்டாசு உண்டாக்கும் புறச்சூழல் கேடு– ஒரு கொசு அளவே!

 

ஒலிக் கேடு (NOISE POLLUTION)

தீபாவளி வெடிகளின் வீரியத்தை, சக்தியை வெளி நாடுகள் தடுத்துவிட்டன. ஆகையால் சட்டப்படி அதிக ஒலி கேட்கும் வெடிகளை வாங்கவும் இயலாது; விற்கவும் முடியாது; இது போன்ற கட்டுப்படுகள் அவசியமே

 

நாமும் வெடி வெடிக்க என்று சில இடங்க ளை ஒதுக்கலாம்.

லண்டனில் 33 கவுன்சில்கள் உள்ளன. பெரும்பாலான கவுன்சில்கள் பொது இடங்களில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகளை நடத்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான பவுன்களுக்கு பட்டாசு வாங்கி வெடிக்கின்றனர். இது தவிர வீடுகளில், தோட்டங்களில் தனி. எல்லா பேட்டைகளிலும் வெடிகள், மத்தாப்புகள் வாங்கலாம். பெரும்பாலானவை வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகள்.

 

அமெரிக்கர்களுக்கு பெற்றோல் PETROL விற்பவர்கள் எல்லாம் நல்லவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பயங்கர வாதிகள் என்று சொல்லி ஏதாவது ஒரு வகையில் அவர்களை வம்புக்கு இழுத்து அழித்து விடுவர். எ.கா (சதாம் ஹுசைன், கடாபி)

 

 

அரபு நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாம். அவர்கள் சத்தியசந்தர்களாம்; ஏனெனில் பெற்றொல் PETROL கொடுக்கிறார்கள். பிரிட்டனைப் பொறுத்தமட்டில் அவர்களிடம் வணிகம் செய்ய வேண்டும்;

 

ரிக்வேதம் இத்தகையவர்களை தஸ்யூக்கள் என்று திட்டுகிறது. காளிதாசன் , திருடர்களை “தஸ்யூக்கள்: என்று தனது நூலில் திட்டுகிறான். ரிக் வேதம் இவர்களை பாணிக்கள் என்றும் திட்டுகிறது.

பிற்காலத்தில் சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் இவர்களை மிலேச்சர்கள் என்று திட்டுகின்றன. பாரதியாரும் இப்படித் திட்டுகிறார். ஆரியனாக (பண்பாடு உடையவானாக) இரு என்கிறார்.

 

சீனா தனது ஆலைகள் மூலம் வெளியே தள்ளும் புகை, முஸ்லீம்கள் நடத்தும் தோல் தொழிற்சாலை  தள்ளும் கழிவு, ஆகியன மிக மிக மோசம்.

 

அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கிகளில் அலற வைக்கும் பாடல்கள்  நமது காதுகளைச் செவிடுபட வைக்கும். முஸ்லீம்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் மசூதிகளில் இருந்து அலறும் தொழுகைக் குரல் நம் காதுகளில் அழுகைக் குரலாக ஒலிக்கிறது. காலை ஐந்து மணிக்கு நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. இவை எல்லாம் என்ன ஒலிக்கேடுகள் (NOISE POLLUTION) இல்லையா?

 

நமது கோர்ட்டுகளை நாம் நம்புவதில் பயன் இல்லை. முஸ்லீம் மசூதிகளின் ஒலி பெருக்கிக்கு எதிராகவோ, சிகரெட், தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகவோ வழக்குப் போட்டால அடுத்த நிமிடம் அதைத் தள்ளுபடி செய்வார்கள்.

 

பட்டாசு வாங்குங்கள்; எங்கள் லண்டனைப் போல கட்டு திட்டங்களுடன் வெடியுங்கள்; நமக்கு நாமே கட்டுப்                    பாடு வைத்துக் கொண்டால் நம்மவர்களிடம் இருந்து எதிர்ப்பு வாராது.

 

பட்டாசு வாழ்க; சிகரெட் பீடி ஒழிக!

 

TAGS:–தீபாவளி பட்டாசு, மத்தாப்பு, புறச்சூழல் கேடு, ஒலி, விஷப்புகை

 

–subham–