ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 1 (Post No.4150)

Written by S.NAGARAJAN

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 6-01 am

 

Post No. 4150

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

4-8-2017 பாக்யா வார இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை (ஏழாம் ஆண்டு 24வது கட்டுரை)

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 1

 ச.நாகராஜன்

 

“இரஸவாதம் பற்றிச் சொன்னவர்களுடைய கொள்கை இரசாயனத்தின் அடிப்படையிலான ஒரு அதீத கற்பனை அல்ல என்பதை எனது ஆரம்ப கால் ஆராய்ச்சிகளில் நான் தெரிந்து கொண்டேன். அது உலகத்திற்கும் மூலக்கூறுகளுக்கும் ஏன் மனிதனுக்கே கூடப் பொருந்தும் ஒரு தத்துவம் என்பதைக் கண்டு கொண்டேன்: – இரஸவாதம் பற்றி டபிள்யூ.பி. யேட்ஸ்

 

 

    இரஸவாதம் என்றும் அல்கெமி (Alchemy) என்றும் அனைவரும் அறிந்திருக்கும் வார்த்தையின் அர்த்தம் ஈயத்தை எப்படித் தங்கம் ஆக்குவது என்பதற்கான வழியைக் கூறும்  வித்தையாகும்!

 

   பல சித்தர்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாகும் இரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பதாக வழிவழியாக கர்ண பரம்பரைக் கதைகள் பல உண்டு.

     மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் கூட ஈயத்தைத் தங்கமாக்கும் முயற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டதுண்டு. சிலர் வெற்றியையும் பெற்றிருப்பதாக சில நூல்கள் கூறுகின்றன.

 

 

     விஞ்ஞானிகளும் இந்த இரஸவாத வித்தைக்கு விலக்கல்ல. உலகின் மிகப் பிரபல விஞ்ஞானியும் பேரறிஞருமான சர் ஐஸக் நியூட்டன் விஞ்ஞானத்தில் பல விதிகளைக் கண்டு உருவாக்கியவர். இது அவரது ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு பக்கத்தில் அவர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி; அத்துடன் மட்டுமல்லாமல் இரஸவாதத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்டு பல்லாண்டுக் காலம் தன் கவனத்தையும் ஆராய்ச்சியையும் அதில் செலுத்தியவர்.

அவரது விஞ்ஞான விதிகள் பிரசுரிக்கப்பட்டாலும், அவரது இரஸவாத ஆராய்ச்சிக் குறிப்புகள் பெரிய அளவில் வெளி உலகிற்குத் தெரியவில்லை; அந்தக் குறிப்புகள் பிரசுரிக்கப்படவும் இல்லை.

 

 

        இரஸவாதக் கல்லைத் (Philosophers Stone) தேடி அவர் அலைந்தார். இந்தக் கல்லை சிந்தாமணி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஸ்பரிசவேதி – அதாவது தொட்டதெல்லாம் தங்கமாக்கும் கல் என்றும் சொல்வர்.

     தனக்கு முன்னால் இது பற்றி ஆராய்ச்சி செய்த அனைவரது ஆய்வையும் நியூட்டன் சேகரித்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் சங்கேதமாகக் குறிப்பிட்ட குறிப்புகளிலிருந்து இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் முயன்றார்.

 

 

தமிழில் சித்தர் பாடல்களில் ‘இரு குரங்கின் கை என்று மூலிகையின் பெயரைச் சங்கேதமாகச் சொல்வர். அது உண்மையில் ‘முசுமுசுக்கையைக் குறிப்பிடுவதாகும். இதே போல ஆங்கிலத்திலும் சங்கேத வார்த்தைகள் இருந்தன.

‘அது வெள்ளி அல்ல; டயானா டவ்ஸ்,(Not silver but  Diana’s Doves) ‘இழிவான வேசியின் மாதவிலக்கு உதிரம் (Menstrual  blood of the sordid whore) போன்ற இரகசிய வார்த்தைகள் அவரைக் குழப்பின. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு குறியீட்டு பாஷையில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். இவற்றை ஆராய்ந்த நியூட்டன் தனது குறிப்புகளைத் தனியே எழுதலானார்.

 

 

   நியூட்டனின் குறிப்புகளை வைத்து இந்தியானா பல்கலைக்கழகத்தினர் அதை சரளமான இன்றைய ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய முயன்றனர். சாடர்ன் (சனி கிரகம்) என்ற வார்த்தை காரீயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நியூட்டனின் ஆதாரமான உலோகம் ஸ்டிப்னைட் (Stibnite) என்பதாகும். பிரகாசிக்கும் ல்யூனா ( Luna ) பற்றியும் க்ரீன் லியான் ( Green Lyon – stibnite) பற்றியும் அவர் விளக்கமாக எழுதியுள்ளார். சுமார் 30 ஆண்டுக் காலம் அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

 

 

    1669ஆம் ஆண்டிலிருந்து 1693 முடிய அவர் செய்த ஆராய்ச்சிகளும் அதைப் பற்றிய குறிப்புகளும் கைப்பிரதியில் எழுதப்பட்டு இருந்த, 348 பழுப்பேறிய காகிதங்கள் அப்படியே பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேறியிருந்தாலும் அவர் ஈயத்தைத்  தங்கமாக்குவதில் வெற்றி அடையவில்லை.

ஆரம்ப காலத்தில் அறிவியல் அறிஞர்கள் எந்த உலோகத்தையும் தங்கமாக்குவது சாத்தியம் இல்லை என்றே கருதினர். என்றாலும் கூட இப்படி ‘மாற்றும் வித்தை இரசாயனத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தத் துறையில் இருந்தவர்கள் அதில் அதிகம் ஈடுபாடு காட்டினர்.

இப்போது நவீன அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் இப்படி ஈயத்தை தங்கமாக்குவது சாத்தியம் தான் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

 

 

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் லாரன்ஸ் பிரின்ஸிப் (lawrence Principe) என்ற ஒரு விஞ்ஞானி கெமிகல் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் பழைய இரசாயன புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஆச்சரியகரமான ஒரு விஷயம் அவருக்குக் கிடைத்தது. ஆம், சர் ஐஸக் நியூட்டன் தன் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள் அவருக்குக் கிடைத்தது. இதை அனைவரும் மறந்தே விட்டார்கள்.

 

இந்தக் கைப்பிரதி ‘தங்கத்திற்குச் சமானம் என்று அவர் ‘எடை போட்டார்.

 

உண்மை தான், எதையும் தங்கமாக ஆக்குவது எப்படி என்ற நியூட்டனின் குறிப்புகள் அல்லவா அது?! ‘தங்கமான நோட்ஸ் தானே! அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் (Johns Hopkins University)  கெமிஸ்டாகவும் வரலாற்றாசிரியனாகவும் பணியாற்றுபவர்.

 

தன் கையில் மஞ்சள் நிறமாக பழுப்பேறிக் கிடந்த பேப்பர்களை அதிசயமாக அவர் பார்த்தார். உலகின் தலை சிறந்த ரகசியம் தன் கையில் கிடைத்திருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.

 

இரஸவாதக் கல் என்று உலகமெல்லாம அதிசயமாகப் பேசப்படும் கல்லை எப்படிச் செய்வது என்பதை அதில் நியூடன் எழுதியிருந்தார். அந்தக் கல் இரும்பு, ஈயம் போன்றவற்றைத் தங்கமாக மாற்றி விடும்!

 

தனது ஆராய்ச்சியின் மீது நியூடனுக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது. நியூடனுக்கு இந்த இரஸவாதக் கல் பற்றிய நம்பிக்கை பிரபலமான பிரிட்டிஷ் கெமிஸ்டான ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவரால் வலுப்பட்டது. பாயிலும் இரஸவாதக் கலையில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் நியூட்டனின் சம காலத்தவர்.

 

 

லாரன்ஸ் பிரின்ஸிப்புடன் இன்னொருவரும் இந்த அபூர்வ ஆய்வில் இணைந்தார். அவர் பெயர் வில்லியம் நியூமேன். (William Newman)

 

இந்த இருவரும் இணைந்து யோசித்தனர்.இரு பெரும் விஞ்ஞானிகளான ஐஸக் நியூட்டனும் ராபர்ட் பாயிலும் மிகத் தீவிரமாக இரஸவாதத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்டனர் என்றால் அது நம்பக்கூடாத விஷயமல்ல; மிகவும் முக்கியமான விஷயம் என்று அவர்கள் தீர்மானித்தனர்.

புதிய அல்லாய்கள் உருவாகி இருப்பது எதனால்? ஏராளமான அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுவதும், பிக்மெண்ட் எனப்படும் வண்ணமூட்டும் பொருளூம் உற்பத்தி செய்யப்படுவதும் புதிய அறிவியலினால் தானே! வடிகட்டல் எனப்படும் புதிய செய்முறை விஞ்ஞான முன்னேற்றத்தினால் அல்லவா ஏற்பட்டது. புதிய ஃபெர்ஃப்யூம்கள் உற்பத்தி செய்யப்படுவதும் அறிவியல் முன்னேற்றத்தினால் அல்லவா! ஆக இப்படி பல வித மாற்றங்களை ஏற்படுத்தும் செய்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டபோது ஈயத்தை தங்கமாக மாற்ற முடியாதா என்ன என்று அவர்கள் இருவரும் விவாதித்தனர்.

ஆகவே திரும்பத் திரும்ப புது மாதிரியான முறைகளாலும் சோதனைகளினாலும் தங்கள் ஆய்வைத் தொடர்வது என்று தீர்மானித்தனர்.

 

 

பழைய கால இரஸவாத புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து 15, 16, 17ஆம் நூற்றாண்டில் எந்த மாதிரியான சோதனைச்சாலைகள் இருந்தனவோ அதே மாதிரியான சோதனைச்சாலைகளையும் அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளையும், பாத்திரங்களையும் அப்படியே உருவாக்கி சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தனர்.

 

                     (தங்கமாக்கும் இரகசியம் தொடரும்)

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ல்யூதர் பர்பாங்க் (luther Burbank 1849-1926) என்பவர் பிரபலமான தாவர இயல் விஞ்ஞானி. அவர் புதுப்புது தாவர வகைகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார். அவர் உருவாக்கியவை அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்று அவருக்கு வெற்றியைத் தந்தன. ஆனால் ஒரே ஒரு தாவர வகையில் மட்டும் அவர் தோற்றுப் போனார்.

 

புது வகையான வால்நட்டை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்போது இருக்கும் வால்நட்டை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துச் சாப்பிடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. காரணம் அதன் கடினமான மேல் ஓடு தான். அதை மட்டும் மெல்லியதாக மாற்றி விட்டால் பருப்பை எடுப்பது சுலபமாயிற்றே என்று அவர் நினைத்தார்.

 

தான் நினைத்தபடியே அப்படி ஒரு வால்நட்டையும் உருவாக்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. அதற்கான காரணம் விசித்திரமானது.

 

சந்தையில் அதை வாங்க ரெடியாக ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். அவர் உருவாக்கிய மரத்தை வளர்க்க ஏராளமானோர் முன் வந்தனர்.

 

என்றாலுன்ம் கூட பருப்பை உடைப்பது முன்பு கடினமாக இருந்தது; இப்போதோ வெகு எளிது என்பதால் பறவைகளும் அணில்களும் ஒரு பருப்பை கூட மரத்தில் விட்டு வைக்கவில்லை.

 

இதைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தத் தாவரத்தில் மட்டும அவர் தோல்வியுற்றார்.

 

அவர் ஒன்று நினைக்க பறவைகளும் அணில்களும் வேறு மாதிரியாக நினைத்து விட்டன!

***

.

 

PICASSO AND WORLD WAR ANECDOTES (Post No.4149)

COMPILED by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 10-02 am

 

Post No. 4149

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

One night, at the beginning of the World War, Picasso and Gertrude Stein were taking a walk when they saw a camaflouged truck for the first times. He was amazed by the resemblance of to cubist art, and, in the tone of a man who has just been plagiarised, said,

“Why, it is we who invented that !”

Later when a new field uniform for the French army was discussed, he told Cocteau

“If they want to make an army invisible at a distance, all they have to do is dress the men as harlequins”

Xxx

Not giving Tea is recrimination!

Harvey Klemmer tells of how one of the London wardens , a slim, elderly man , directed the work of removing bodies

“They got my house last night”, he said simply.

I heard from one of the other wardens that while this man was working on a job, someone came running to tell him his own house, a few streets away had been hit. The house and all his belongings had been destroyed; his wife and children fortunately, had gone to a nearby shelter. I asked the man what he would do if he could lay his hands on the airmen who had dropped the bomb.

He gulped a couple of times and I waited eagerly to hear what sort of punishment he would be prepared to mete out.

“Well”, he said slowly, “I don’t think I would give him a cup of tea”.

That is the nearest thing to recrimination I have heard in England.

Xxx

 

An American who had gone to England to carry out certain duties in connection with the War, was wearied by a seemingly interminable season of fog and rain. One day he glanced out of his window at the barrage balloon s which could be seen mistily at their cable ends in the sky and asked ,”Why don’t they just cut the ropes on those thongs and let the place sink!”

Xxx

 

During the First World War, the Germans entered and occupied a small Belgian town. Seeking keep the occupants of the town under control, an officer of the German army called all the citizens to the town hall and insisted that they all take the oath of allegiance to the German emperor.

One particularly truculent and obstinate inhabitant refused to be intimidated, and kept boasting of the defence the Belgian s put up against the superior German force.

Finally the German officer lost all patience ,”Take this oath of allegiance or you will be shot”.

Faced with this alternative, the man gave in and took the oath.

“That’s the spirit, said the German, now you may come and go as you please. You are one of us”.

 

With a sly grin on his face, the Belgian turned and said,

“Say, didn’t those Belgians give us a hell of a fight?”

Xxxx SUBHAM Xxxxx

 

 

 

 

 

புறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்! (Post No.4148)

Written by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 7-25 am

 

Post No. 4148

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே-

 

புறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

கடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்!

கடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்!

 

இன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.

இதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை  விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்

இன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை    ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.

 

முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!

பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.

 

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

 

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்

 

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

 

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

 

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.

ஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்

இதோ பாடலும் அதன் பொருளும்:

 

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

 

— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.

 

பாடலின் பொருள்:-

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்);  அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.

 

18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர்,  அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்

 

புறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்!

சில சொற்களுக்குப் பொருள்:

நீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு

வாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்!

 

—–subam—-

 

 

 

புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம் (Post No.4147)

Written BY S NAGARAJAN

 

Date: 11 August 2017

 

Time uploaded in London:- 6-03 am

 

Post No.4147

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாக்யா 28-7-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியமும், அளித்த இரண்டு நோபல் பரிசுகளும்!

 

 ச.நாகராஜன்

 

“பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்குவதில் பிக்-பேங் கொள்கை பிரதானமாகத் திகழ்கிறது ஜான் சி.மாதர்

 

   “சொல்லப்போனால் பெரு வெடிப்பில் ஒரு பெரிய வெடிப்பே இல்லை. இரண்டாவதாக வெடிப்பே நிகழவில்லை. பெரு வெடிப்புக் கொள்கையானது எது வெடித்தது எப்போது வெடித்தது எப்படி வெடித்தது என்பதைத் தெரிவிக்கவில்லை. வெடித்தது என்பதை மட்டும் அது சொல்கிறது. ஆகவே பெரு வெடிப்பு கொள்கை என்பது பொருந்தாத தவறான கொள்கை – விஞ்ஞானி மிச்சியோ ககு (பெரு வெடிப்புக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூறியது)

 

         உலகில் சாதாரண அற்பமாக நாம் கருதும் ஒரு விஷயம் மிக பிரம்மாண்டமான அரிய விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

 

நம்ப முடியாத விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

 

ஆனால் உலகின் மிக பிரம்மாண்டமான, அசத்தலான கண்டு பிடிப்பு நாம் மிக அற்பமாகக் கருதும் புறா எச்சத்தால் – புறாவின் கழிவினால் – கண்டு பிடிக்கப்பட்டது என்றால் ஆச்சரியமாயில்லை. அது மட்டுமல்ல, அந்தக் கண்டுபிடிப்பு இரண்டு பேருக்கு நோபல் பரிசுகளையும் வாங்கித் தந்தது என்றால் அதை விட ஆச்சரியமாக இல்லை?!

 

    பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்பு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு தானே!

 

பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணமாக கூறப்படும் பிக் பேங் – பெரு வெடிப்பு பற்றிய கண்டுபிடிப்பை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வழிகாட்டியது புறா எச்சம் தான்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பெரு வெடிப்பு பற்றிய கொள்கை உருவாகியது. ஆனால் அதை ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

 

அமெரிக்காவில் இருந்த ரேடியோ அஸட்ரானமர்களான ஆர்னோ பெஞ்சியாஸ் (Arno Penzias) மற்றும் ராபர்ட் உட்ரோ வில்ஸன்  (Robert Wooderow Wilson) ஆகியோர் ஹோல்ம்டெல் ஹார்ன் ஆண்டெனாவை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதன் மூலம் பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பினால் ஏற்பட்டது என்று அவர்கள் எண்ணினர்.

 

ஆனால் விஞ்ஞானிகளில் சிலரோ ஸ்டெடி ஸ்டேட் தியரி என்னும் கொள்கையை முன் வைத்தனர். இதன் படி பிரபஞ்சம் எப்போதும் போலத் தொன்று தொட்டு இருந்து கொண்டே வருகிறது; இனியும் மாறுதல் பெரிதாக இல்லாமல் பிரபஞ்சம் நீடித்து இருக்கும்.

 

இதில் எது சரி?

 

நியூ ஜெர்ஸி நகரில் இருந்த பெல் லாபரட்டரியில் 1964ஆம் ஆண்டு பெஞ்சியாஸும் வில்ஸனும் ஆறு மீட்டர் குறுக்களவுள்ள ஹார்ன் ஆண்டெனாவை வைத்து ரேடியோ அலைகளை எக்கோ பலூன் சாடலைட்டுகளின் மீது மோத வைத்து அதில் உருவாகும் எதிரொலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ரேடியோ அலைகள் பலஹீனமானதாக, மெல்லிய ஒலையைக் கொண்டிருந்ததால் வேறு விதமான அலைகளின் குறுக்கீட்டை அவர்கள் தடுக்க வேண்டி இருந்தது.

 

       ஆண்டெனாவில் புறாவின் எச்சம் ஏராளமாக இருந்தது. அவற்றால் ஒரு விதமான குறுக்கீடும் இருக்காது என்று முதலில் அவர்கள் நம்பினர்.

 

      ஆனால் புறாவின் எச்சத்தைத் துடைத்துச் சுத்தம் செய்து தான் பார்ப்போமே என்று அவர்கள் ஆண்டெனாவைத் தீவிரமாக சுத்தம் செய்தனர்.

 

      என்ன ஆச்சரியம், புறாவின் எச்சம் பிரபஞ்ச ரகசியத்தை மறைந்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

 

 ஒரு சீரான, மெல்லிய, மர்மமான ஒரு ஓசை வந்து கொண்டே இருந்தது. ரேடியோ அலைகள் அவர்களுக்கு ஒரு புதிய உண்மையைச் சுட்டிக் காட்டின. ஆம், பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பினால் உருவானது தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர்களால் உணர முடிந்தது.

 

ஆனால் இதை வெளியில் ஆதாரபூர்வமாக சொல்ல முடியவில்லை.

 

இதே கால கட்டத்தில் டிக், ஜிம் பீபிள்ஸ்,டேவிட் வில்கின்ஸன் ஆகிய விஞ்ஞானிகள் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மைக்ரோவேவ் கதிரியக்கம் பற்றி ஆய்வு நடத்தி வந்தனர். பெரு வெடிப்பு மூலம் ஒரு பெரும் கதிரியக்கம் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

 

இவர்களின் ஆராய்ச்சி பற்றி தற்செயலாக அறிந்த பெஞ்சியாஸ் உடனே டிக்கை தனது ஆய்வுக் கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

அனைவரும் ஒருங்கே இணைந்த போது பிக்-பேங் என்னும் பெரு வெடிப்புக் கொள்கை உறுதியானது.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக 1978இல் பெஞ்சியாஸ் மற்றும்

வில்ஸன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

உலகினர் அனைவரும்  புறாக்கள் தந்த நோபல் பரிசுகள் என்று செல்லமாக இவர்கள் பெற்ற பரிசுகளைப் பற்றி இன்றும் கூறுகின்றனர்.

ஒரு சிறிய எச்சம் எவ்வளவு பெரிய உண்மையை ஆண்டெனாவில் மூடி வைத்திருந்தது. எச்சத்தைத் துலக்கப் போய் ஒரு பெரும் மர்மத்தையே துலக்கி விட்டனர் விஞ்ஞானிகள்!

 

தொன்று தொட்டு வழங்கி வரும் ஆன்றோர் மொழியானஅற்பம் அற்பமல்ல என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு இந்தச் சம்பவம்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான டார்வின் முதலில் ஒரு டாக்டராகத் தான் விரும்பினார். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் அவரால் ரத்தத்தைப் பார்க்கவே முடியவில்லை, மிகவும் பயப்பட்டார்! சரி, ஒரு பாதிரியாராக மாறி விடலாம் என்று நினைத்தார்.

அப்போது ஹெச் எம் எஸ் பீகிள் என்ற கப்பலின் காப்டனான ராபர்ட் ஃபிட்ஸ்ரே தென் அமெரிக்காவில் ஒரு மாபெரும் ஆய்வுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.

நீண்ட பயணம்! தனி ஒருவனாகத் தன்னால் அந்தப் பயணத்தையும் ஆய்வையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. அந்தக் கப்பலின் முந்தைய காப்டன் இதே காரணங்களால் தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஆகவே துணைக்குச் சரியான ஆளை அவர் தேட ஆரம்பித்தார்.

அவருக்குத் தெரிந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஒருவர், 22 வயதான சார்லஸ் டார்வின் இதற்குச் சரியான ஆள் என்று சிபாரிசு செய்தார். டார்வினின் தந்தைக்கோ இந்தப் பயணம் பிடிக்கவில்லை. திரும்பி வர நெடுங்காலம் ஆகுமே என்று அவர் நினைத்தார். ஆனால் டார்வினின் மாமா அவரை ஆதரித்து அந்தப் பயணத்தை மேற்கொள்ளச் சொல்லியதோடு அதற்கான நிதியையும் தர முன் வந்தார்.

 

டார்வினும் ஃபிட்ஸ்ரேயும் நன்கு இணைந்து பழகினர். ஆனால் பின்னால் தான் டார்வினுக்குத் தெரிந்தது தான் ஒரு மயிரிழையில் தப்பித் தான் இந்தப் பயணத்திற்கு ஃபிட்ஸ்ரேயால் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பது.

 

ஃபிட்ஸ்ரே ஒரு மனிதனின் சாமுத்ரிகா லட்சணத்தைப் பார்த்தவுடன் ஆள் எப்படி என்று கூறி விடுவாராம். அந்தக் கலை அவருக்கு அத்துபடி. அவரது சாஸ்திர அறிவின் படி டார்வினின் மூக்கு சரியில்லை. இந்த மூக்கு உள்ளவர் எப்படி வெற்றிகரமாக ஒரு பெரிய  பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று ஐயப்பட்டார் ஃபிட்ஸ்ரே.

ஆனால் பின்னால் தான் அந்த மூக்கு பற்றிய தனது கணிப்பு தவறானது என்பதை அவர் உணர்ந்தார்.

(ஆதாரம்: சார்லஸ் டார்வின் : ஹிஸ் பப்ளிஷ்ட் லெட்டர்ஸ் -1902)

***

 

 

Civilians in War Anecdotes (Post No.4146)

compiled by London Swaminathan

 

Date: 10 August 2017

 

Time uploaded in London- 14-57

 

Post No. 4146

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

VICTOR HUGO SHARED SUFFERINGS

When the disasters of Franco Prussian War were falling thickly, and the iron band was closing  around Paris , word came that Victor Hugo was coming to the city. He came at the very moment that the investment was complete, with the last train, the last breath of fresh air. On the way he had seen Germans, seen villages burned with petroleum, and he came to imprison himself in Paris. A memorable ovation was given him by the people, and they never forgot his voluntary sharing of their sufferings.

 

Xxx

To Hell with Hitler

Harvey Klemmer tells this story,

“Just before leaving England, I met a Cockney who had been buried beneath the ruins of his fish and chip shop. Fish and chips are not my idea of the proper food for building morale. However, there was nothing wrong with the morale of this chap. When the rescue workers dug him out of the remains of his little business– which by now consisted of a potpourri of fish, fat, bricks and plaster– he dusted himself off, drew himself up to his full five feet seven and spat into the wreckage

“To ‘ell with ‘itler”

Xxx

An old watchman in a London warehouse was a bit perturbed because his son wouldn’t take cover in the air raids. He went into the street and gave the lad a cuff on the ear.

“Get the hell inside”, he said, “and let the shrapnel fall down”.

Xxx

PATRIOTIC TAXI DRIVER

At the outbreak of the Franco Prussian War one patriotic Parisian cab man, after driving a Prussian attaché to the station to join the regiment, refused to take any fare.

“A man does not pay for being driven to his own funeral. So, adieu, Monsieur”..

 

Xxx

INQUISITIVE LADY

Many persons who have taken first aid courses in the present war will be interested in the case of an inquisitive elderly lady who bent solicitously over a wounded soldier whose head was swathed with bandages.

“Are you wounded in the head, my boy ?”, she asked.

“No, madam”, said the victim feebly,

“I was shot in the foot and the bandaged slipped up”.

 

–SUBHAM–

 

வேத கால அரசர்கள் பற்றிய விநோதச் செய்திகள்! (Post No.4145)

Written by London Swaminathan

 

Date: 10 August 2017

 

Time uploaded in London- 11-08 am

 

Post No. 4145

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வெள்ளைக்காரன் எழுதிய இந்திய சரித்திரம் அசோகரின் தாத்தா காலத்தில் இருந்து துவங்குகிறது. அதாவது நமது சரித்திரம் எல்லாம் 2400 ஆண்டு மட்டுமே பழமையானவை! அதற்கு முன் நம்மை ஆண்ட மன்னர்கள் யார் என்று எம்.ஏ. சரித்திரப் புத்தகம் வரையிலும் கிடையாது!! (கட்டுரை ஆசிரியர் மதுரை பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பட்டதாரி). ஆனால் ரிக்வேதத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பெயர்களும், ஈரானை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் மஹாபாரதத்தில் சிந்துசமவெளியை ஆண்ட மன்னர்கள் பற்றியும் உள்ளன. சிரியாவை ஆண்ட பிரதர்தனன், தசரதன் (1350 BCE) பற்றிய கல்வெட்டு பற்றி 1935 ஆம் ஆண்டிலேயே காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரையாற்றியது உலகம் முழுதும் மிட்டனி நாகரீகப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் இந்திய சரித்திரப் புத்தகத்தில் கிடையாது. என்ன விநோதம்? நாமின்றும் அடிமைகளாகவே வாழ்கிறோம்! சரித்திரப் புத்தகமா? தரித்திரப் புத்தகமா? உடனே மாற்றி எழுதுவது நமது தலையாய கடமை.

 

வேதங்களில் உள்ள மந்திரப் பகுதிகளை சம்ஹிதை என்பர். அவை முழுதும் துதிப் பாடல்கள். அதற்குபின் பாதி உரை நடையிலும் கொஞ்சம் பாடல்களாகவும் உள்ளது பிராமணங்கள். இதற்கு வெள்ளைக்காரன் போட்ட தேதி சுமார் கி.மு 1000 அல்லது 800. ஆனால் இந்துக்கள் போடும் தேதி கி.மு.4000. சங்கத் தமிழ் நூல்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகளும் நீண்ட நெடுங்கால வரலாறு ப ற்றிப் பேசும். புராணங்களில் சுமார் 150 அரசர்களின் பெயர்களை வரிசைக் கிரமமாக கொடுத்துள்ளனர். இது பற்றி நிறைய எழுதிவிட்டேன். இப்பொழுது பிராமண நூல்களில் படித்த சுவையான விஷயங்களைச் சொல்லுவேன்:-

 

இந்திய அரசியல் சாசனம் “இந்தியா என்னும் பாரத நாடு…………………….” என்று துவங்குகிறது ஏன்? தபால்தலைகளில் ஆங்கிலத்தில் ‘இண்டியா’ என்றும் ஹிந்தியில் ‘பாரத்’ என்றும் உள்ளது. ஏன்?

 

உலகமே வியக்கும் வண்ணம் ஆண்டான் பரதன் என்ற மன்னன், அவன் நூறு அலக்ஸாண்டர்களுக்குச் சமமானவன். ஆயிரம் நெப்போலியன்களுக்குச் சமமானவன். புலிக்குட்டிகளும் சிங்கக்குட்டிகளும் அவன் நண்பன். அஞ்சாத நெஞ்சன்; அதி சூரன்; மஹா வீரன்; மாபெரும் பேரரசன்.

 

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்

தட்டி விளையாடி – நன்று

உகந்ததோர் பிள்ளை பாரத ராணி

ஒளியுறப் பெற்ற பிள்ளை

என்று சொற்தேரின் சாரதியாம் பாரதியால் பாடப்பெற்றவன்; பாராட்டப் பெற்றவன்.

அதே பாட்டில்

தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்

செய்த தெவர் கவிதை? – அயன்

செய்த தனைத்தின் குறிப்புணர் பாரத

 

தேவி அருட்கவிதை என்றும் பாடுகிறார்.

அப்பேற்பட்ட சாகுந்தல நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற காளிதாசன் பரதனின் புகழைப் பாடுகிறான். இந்தப்பிள்ளை உலகம் முழுதும் ஆள்வான் என்கிறான். இதற்கு முன்னர் மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் பரதன் புகழ் இருக்கிறது.

 

இந்த பூமியில் பரதனுக்கு முன்னால் பிறந்த அனைவரும்

அவனுக்குப் பின்னால் பிறந்த அனைவரும்  அவனது பெயராலேயே அழைக்கப்படுவர்

–ம.பா. 1-69-49

இவனைப் பற்றி சதபத பிராமணம் ஐதரேய பிராமணம் என்ன செப்புகின்றன என்பதைக் காண்போம்:–

தீர்கதமஸ் என்ற ரிஷி துஷ்யந்தன் மகனான பரதனுக்கு முடி சூட்டியதாக ஐதரேய பிராமணம் பேசும் (8-39). அவன் இந்த பூமி முழுதையும் வசப்படுத்தி 133 அஸ்வமேத யாகங்களைச் செய்ததாகவும் கூறும். 78 குதிரைகளை யமுனை நதிக்கரையிலும் 55 குதிரைகளை கங்கை நதிக்கரையிலும் கட்டி வைத்து அஸ்வமேதம் செய்தான் பரதன்.

 

அஸ்வமேதம் செய்த ஒவ்வொருவரையும் பாராட்டும்  பாடல் உண்டு.  அதில் ஆயிரம் குதிரைகளுடன் அஸ்வமேதம்செய்தான் என்று போற்றுகிறது அதாவது அலங்கரிக்கப்பட்ட அவனது குதிரை எங்கெல்லாம் சுற்றித் திரிகிறதோ அந்த இடமெல்லாம் அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதி. ஒருவரும் அதைத் தடுக்கவோ பிடிக்கவோ முன்வரவில்லை. ஆகையால் இந்த பூமி முழுதும் அவன் வசமானது.

தங்க நகைகளுடன் 10000 பெண்கள் பரிசு

 

எந்த ரிஷி அஸ்வமேதம் செய்விக்கிறாரோ அவருக்கு தானம் அளிப்பது மன்னர் மரபு.

அங்க என்னும் அரசனை அத்ரியின் மகனான உதமன்ய பட் டாபிஷேகம் செய்வித்தார். அவருக்கு அங்க மன்னன்

10,000 யானைகள்

10,000 தங்க நகை அணிந்த பணிப்பெண்கள்

ஒரு கோடி பசு மாடுகள்

87,000 வெள்ளைக் குதிரைகள்

கொடுத்தான். ( கவிஞர்கள் மிகைபடக்கூறல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. ஆகையால் இவைகளை ஆயிரத்தால் வகுப்பது சரி என்று தோன்றுகிறது. மேலும் ஆயிரம் என்பதை “எண்ணற்ற” (innumerable, uncountable) என்ற பொருளிலும் வேத காலத்தில் பயன்படுத்தினர். ஆகவே நாம் ஒவ்வொரு எண்ணையும் ஆயிரத்தாலோ அல்லது நூறாலோ வகுக்க வேண்டும். இது நான் சொல்லுவதல்ல. மஹாபாஷ்யமெழுதிய பதஞ்சலி முனிவரே ராம ஆண்ட ஆயிரக் கணக்கான ஆண்டுகளை 365ஆல் வகுத்து இத்தனை ஆண்டுகள் ஆண்டான் என்று எழுதி இருக்கிறார்.

 

இன்றும் கூட பிராமண வீடுகளில் கல்யாணம், ஆயுஷ் ஹோமம், சீமந்தம்-வளைகாப்பு ஆகியவற்றில் நெருங்கிய உறவினர்கள் என்ன தொகை ஓதிவிட்டாலும் அதை உரத்த குரலில் மந்திரம் ஓதி அளிக்கும் புரோகிதர்கள் “லட்சம் கட்டி வராஹன்” என்றே சொல்லித் தருவர். ஆக இந்த நடைமுறை அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

இறையனார் களவியல் உரையில் மூன்று தமிழ்ச் சங்ககங்களுக்குக் கொடுத்த ஆண்டுகளை வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் 37-ஆல் வகுத்தனர். நான் வேறு ஒரு கணக்குக் காட்டி இருக்கிறேன். (மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுகதையா என்ற எனது  பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

இனி வேத கால அரசர் பெயர்களும் அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் பெயரையும் காண்போம். யமுனை நதி முதல் சிந்து-சரஸ்வதி வரை பிரம்மாண்ட பூமியில் வேத கால அரசர்கள் வாழ்ந்தனர்; ஆண்டனர். அவர்கள் செல்வம், உலகம் வியக்கும் வண்ணம் இருந்தது. வேதம் முழுதும் தங்கம் பற்றி வரும் குறிப்புகளைப் பார்த்தால் கஜினி முகமதுவும் அலெக்ஸாண்டரும், கொலம்பசும் ஏன் இந்தியாவை நோக்கிப் பயணம் செய்தனர் என்பது விளங்கும்.

 

வேத காலத்தில் இந்தியாவில் தங்கம் ஆறாக ஓடியது என்பதை “ஹிரண்யம்” என்ற சொல் வரும் இடங்களை ஆராய்ந்தால் விளங்கும்.

துஸ்தரிது பௌம்சாயன என்ற மன்னன், தான் தொடர்ந்து வரும் ஆட்சியில் பத்தாவது மன்னன் என்று பெருமை அடித்துக் கொள்கிறான் (சதபத. 12-9-3-1) ஒரு மன்னக்கு 35 ஆண்டு சராசரி வைத்தாலும் இவனது வம்சம் 350 ஆண்டுகள் ஆண்டதை பிராமண நூல்கள் செப்புகின்றன.

 

பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயனை துர காவசேய என்ற ரிஷி பாட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

இது கலியுக துவக்கத்தில் கி.மு 3100ல் நடந்திருக்க வேண்டும். அதாவது மாபாரத யுத்தத்துக்குப் பின்னர் வந்த அரசர்கள்.

 

மனு வம்சத்தில் வந்த சார்யாத என்ற மன்னனை சியாவன பார்கவ முனிவர் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

சதானீக சாத்ராஜித என்ற மன்னனை  வாஜ ரத்னனின் மகனான சோமசுமா பட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

அமவாஸ்த்ய மன்னனையும் யுதாம் ஸ்ரௌஸ்தி ஔக்ரசேன்ய மன்னனையும் பர்வத, நாரத முனிவர்கள் பட்டாபிஷேகம் செய்வித்தார்கள்.

 

விஸ்வகர்மா பௌவன மன்னனை காஸ்யப மஹரிஷி பட்டாபிஷேகம் செய்வித்தார்.

சுதாஸ பௌஜாவனனை வசிஷ்ட மஹரிஷி பட்டாபிஷேகம் செய்வித்தார்.

மருத்த ஆவிக்ஷித மன்னனை சம்வர்த ஆங்கிரஸ் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

இது போல அஸ்வமேதம் செய்த மன்னர்களின் நீண்ட பட்டியலும் உளது.

ரிக்வேத மன்னர்கள், பிராமண நூல் மன்னர்களை வரிசைப் படுத்தும் ஆராய்ச்சியைத் துவக்க வேண்டும். சிரியா-துருக்கி மிட்டனி (Mitannian Civilization)  சாம்ராஜ்யத்தில் தசரத பிரதர்தன மன்னர்களின் பெயர்கள் கி.மு 1350ல் கிடைப்பதாலும் ரிக்வேத மந்திரத்தில் உள்ள அதே ஆர்டரில் (in the same order as in Rig Veda) இந்திர-மித்ர- வருணன் பெயர்கள் கியூனிFஆர்ம் (Cuneiform inscription) கல்வெட்டில் கிடைப்பதாலும் வேத கால மன்னர்கள் அதற்கும் முற்பட்டவர்களே. பாஞ்சாலம் முதலிய தேசங்கள் குறிப்பிடப்படுவதாலும் மஹாபாரத யுத்தத்தில் சிந்துசமவெளி மன்னர்கள் கலந்து கொண்டது பற்றீய குறிப்பு உளதாலும் ராமாயணத்தில் ராமனின் சகோதர்கள் சிந்து சமவெளி பகுதியை வென்ற குறிப்பு உளதாலும் சரஸ்வதி-சிந்து சமவெளி நாகரீகமும் வேத காலத்துக்குட்பட்டது என்பது எனது துணிபு.

 

ஆனால் கால வரிசைக் கிராமத்தை அறிய மேலும் ஆராய்ச்சி தேவை. தற்போது வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புராண, இதிஹாச, வேத மன்னர் பட்டியலைத் தர வேண்டும். காலக் கணிப்பீட்டை எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு விட்டுவிடலாம்.

 

சுமேரிய, எகிப்திய, சீன,மாயன் நாகரீகங்களை கி.மு3000ல் துவங்கிவிட்டு அதற்கு முந்தைய பாரத நாகரீகத்தை கி.மு 300ல் துவக்குவது நியாயம் இல்லை. வரலாற்றை மாற்றி எழுதுக!

 

–Subham–

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36 (Post No.4144)

Written BY S NAGARAJAN

 

Date: 10 August 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4144

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36

பாரதிதாசன் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவரது கவிதா சந்நிதானத்தில் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்ந்தவர்; பாரதியின் புகழை இடைவிடாது பரப்பியவர்; பாரதியாருக்குத் தன் அருமையான கவிதைகளினால் புகழாரம் சூட்டியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதிதாசன்.

 

புதுவையில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் பற்றி அதிகாரபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் பாங்கும் வன்மையும் தொடர்பையும் பெற்றவர் பாரதி தாசன் என்பதால் பாரதியார் பற்றிய அவரது எழுத்துக்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை.

 

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் அவர் பாரதிக்குச் சூட்டிய கவிதை முத்தாரங்களைப் படித்து மகிழலாம்.

அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்” என்ற கவிதையாகும்.

அதில் வரும் வரிகள் வைர வரிகள்:

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’                   தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

 

இப்படி இனிய கம்பீரமான அழகிய சொற்களால் பாரதியைப் போற்றி மகிழ்ந்தார் பாரதிதாசன்; இந்தப் பாடலைப் பாடி மகிழ்கிறோம் நாம்!

“பாரதி உள்ளம்” என்ற கவிதையில்,

மேலவர் கீழவர் இல்லைஇதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

 

என்று கூறும் கவிஞர் பாரதியார் ‘நாலாயிரத்தவர் காண, தோலினில் தாழ்ந்தவ்ர் என்று சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார்’ என்று கூறுகிறார்.

 

கல்கி ஆரம்ப காலத்தில் பாரதியாரை உலக மகாகவி என்று சொல்ல முடியாது என்று ஆனந்தவிகடனில் எழுதிய போது வெகுண்டெழுந்தார் பாரதிதாசன்.

 

ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு

    நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்

போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?

    புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே

தேனினிப்பில் தருபவர் யார்? மற்றும் இந் நாள்

  ஜெய பேரிகை கொட்டடா என் றோதிக்

கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்

  கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்

 

என்று முழங்கி அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி வீசி மஹாகவி சாதாரண கவிஞர் அல்ல; உலக மகா கவி என்று சான்று காட்டி நிறுவினார்.

 

பின்னால் கல்கி மனம் மாறி பாரதிக்கு மணி மண்டபம் அமைத்ததை நாம் அறிவோம். அதற்குக் காரணமாய் அமைந்த பாரதி தாசர்களில் முத்ல் தாசனாக பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அமைந்தார் பாரதி தாசன்.

 

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையில் இந்தத் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதை எப்படி எதனால் பிறந்தது என்ற கதையைச் சொல்கிறார் பாரதிதாசன்.

 

மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக்களிப்போம் பரிசு” என்று அறிவிப்பை வெளியிட அதனால் அன்பர்கள் பாரதியாரை வேண்ட அவர் எழுதிய கவிதை தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை!

 

 

திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதியார் ஏன் பாடினார்? அதற்கான விடையைத் தருகிறார் தன் கவிதையில் பாரதிதாசன்.

ஒரு நாள், “பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில்” நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவயதன்னையார் அவரை வேண்டிக்கொள்ள, அவர் திருப்பள்ளி எழுச்சி பாடலைப் பாடினார்.

 

 

நாடக விமர்சனம் என்ற கவிதையில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றைக் கவிஞர் தருகிறார்.

ஒரு நாள் அனைவருடனும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார் பாரதியார். அதில் விஷமருந்திய மன்னன் ஒருவன், “என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ” என்று பாடத் தொடங்கினான். இதைக் கேட்ட பாரதியார், மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ள வேண்டியது தானே! வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா?” என்றார்.

 

 

அனைவரும் சிரித்தனர். இயல்புக்கு அல்லாததை ஒரு நாளும் ஏற்றவர் இல்லை கவிஞர் பிரான்.

 

பாரதியாரைப் பற்றி தெள்ளு தமிழ் வார்த்தைகளில் பாரதி தாசன் எழுதிய கவிதைகள் காலத்தால் அழியாதவை.

 

பாரதி இயலில் ஆர்வம் கொண்டோர் பாரதியாரைப் போற்றி பாரதிதாசன் இயற்றிய கவிதைகளைப் படித்தால் களியுவகை கொள்வது நிச்சயம்!

***

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே – புற நானூறு (Post No.4143)

Written by London Swaminathan

 

Date: 9 August 2017

 

Time uploaded in London- 21-17

 

Post No. 4143

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்க இலக்கிய நூல்கள் 18-ல் மிகவும் முக்கியமானது புறநானூறு. தமிழர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அறிந்த வாழ்வியல் கோட்பாடுகளையும் அறிவியல் உண்மைகளையும் எடுத்துரைக்கிறது

 

புற நானூற்றில் 18 ஆவது பாடல் குடபுலவியனார் பாடியது. முதலில் புலவரின் பெயரே பல புதிர்களைப் போடுகிறது. எவருக்கும் சரியாகப் பொருள் சொல்ல முடியவில்லை ஒருவேளை, புலஸ்த்ய மகரிஷியின் குடியைச் சேர்ந்தவரோ என்று (குடி புலஸ்திய) என்று ஐயப்பாடு எழுப்பியோர் உண்டு. ஆனால் அதுவும் சரியாகத் தோன்றவில்லை. இவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.

 

இந்தப் பாடலில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன?

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை …………

இதைப் பலவகையாக நோக்கலாம்

1, 10, 100, 1000, 10,000, 100,000, கோடி, பத்து கோடி, 100 கோடி, 1000 கோடி

தசாம்ச முறை எனப்படும் டெஸிமல் சிஸ்ட (Decimal System) த்தைக் கண்டுபிடித்தவர்கள் வேத கால ரிஷிகள். உலகின் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் டெஸிமல் முறை காணப்படுவதோடு சஹஸ்ரநாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று நம் சமய வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது. இந்துக்களின் பழமொழிகள் கூட டெஸிமல் மு முறையில் இருக்கும். சாபம் இடும் இடங்களில் கூட உன் தலை சுக்கு நூறாக உடையட்டும் என்று தசாம்ச முறையில்தான் இருக்கும்.

அணைகள் கட்ட அறிவுரை

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

 

மக்களுக்கான குடிநீர் வசதிகளைச் செய்து தா; அணகள் கட்டி நீர்ப்பாசனத்துக் கு உதவுக என்பது புலவரின் அறிவுரை. இது அக்காலத்தில் நடந்த அறப்பணிகளையும் பொதுநல சிந்தனையையும் காட்டுகிறது. புலவர் தனக்கு தங்கம் கொடு, நிலம் கொடு என்று கேட்காமல் பொது மக்களுக்கு வசதிகள் செய்து தா என்று இறைஞ்சுகிறார்.

 

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே

உலகில் குடி நீர் இல்லாமல் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது

யார் ஒருவர் அன்னதானம் செய்கிறாரோ அவர், மற்றவர்களுக்கு உயிர் கொடுத்ததற்குச் சமம்

 

இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லுவார்:

அன்னாத் பவதி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:

யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ: (3-14)

 

உணவிலிருந்தே உயிர்கள் உண்டாகின்றன

மழையிலுருந்து உணவு உண்டாகின்றது

யக்ஞத்திலிருந்து மழை உண்டாகின்றது

நல்வினைகளில் இருந்து  வேள்வி உண்டாகின்றது.

 

 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை – என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவரும் பத்தினிப் பெ ண்களால் மழை பெய்யும். நல்லாட்சி நடைபெறும் வேந்தன் நாட்டில்  முயற்சியின்றியே அறுவடைகள் பெருகும் என்றெல்லாம் செப்புகிறார்.

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே = நல்ல நிலமும் நல்ல நீர்ப் பாசனமும் இருந்தால்தான் உணவு விளைச்சல் கிடைக்கும்.

 

மேலும் நீரும் ஒரு உணவு. இதை வள்ளுவரும் சொன்னார்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ  மழைகுறள் 12

உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவ்வுணவுகளை உண்பவர்க்குத் தாமும் உணவாகி, இருப்பதும் மழையே.

 

இதைத்தான் குடபுலவியனாரும் செப்பினார்.

இன்னொரு படலில் ‘’நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’–186- மோசிகீரனார்

என்று சொல்லுவதிலிருந்து நெல்லும் (நிலம்) நீரும் உயிருக்கு இன்றியமையாதவை என்பது புலப்படும்

 

இவைகளை எல்லாம் பார்க்கையில் குடபுலவியனார் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெளிவாகிறது.

 

உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 

இது பகவத் கீதையிலும் உள்ளது. தனக்கென மட்டும் உணவு சமைப்பவன் பாவி என்று கண்ணன் உரைப்பான் (பகவத் கீதை 3-13)

யே ஆத்ம காரணாத் பசந்தி, தே பாபா: அகம் புஞ்சதே.

 

இப்பொழுது புறநானூற்றுப் பாடலின் முழுப் பொருளையும் பார்ப்போம்:

கடல் சூழ்ந்த உலகில் முயற்சியால் புகழை நிலைநாட்டிய அரசர் வழி வந்தவனே! சங்கம் எனச் சொல்லப்படும் பெரிய எண் அளவுக்கு உன் வாழ்நாள் அமையட்டும். வாளை, ஆரல், வரால், கெடிற்று மீன்களை உடைய நீர் நிலைலகளையும் உயர்ந்த மதிலிலையும் உடையவனே!

நீ மறுமைச் செல்வம் விரும்பினாலும், மன்னர்களை வென்று புகழ்பெற விரும்பினாலும் அதற்கான வழியை நான் சொல்லித் தருகிறேன்.

நீரை முக்கியமாக கொண்டுள்ள உடம்புக்கு உணவு கொடுத்தவர் உயிர் கொக்டுத்ததற்குச் சமம்.

அந்த நெல்லையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்தவர் உயிரையும் உடலையும் சேர்த்தவர் ஆவர். நெல் முதலியவற்றை விளைவிக்கும் நிலம் பெரிதாக இருந்தாலும் மன்னன் முயற்சிக்குப் பலன் தராது; ஒரு வழி சொல்லித் தருகிறேன். அதைக் கடைப் பிடிப்பாயாக. பள்ளமான இடத்தில் நீர் தேங்கும்படி செய்தவர்கள் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்தவர் ஆவர்; அதோடு புகழும் கிட்டும் அப்படிச் செய்யாதவர் புகழ் நிற்காது. எனவே நீயும் நீர் நிலை பெருகச் செய்வாய்.

 

இதில் 4 வகை மீன்களைச் சொல்லுவதைக் கவனிக்கவும். நீர் சூழ்ந்த உலகம என்னும் அறிவியல் உண்மை சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் திரும்பித் திரும்பி வரும். இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரம்பிய உண்மை இந்தியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். அது மட்டும் அல்ல; “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பது மணிமேகலையிலும் நீரின்றமையாது உலகம் என்னும் வரி திருக்குறளிலும் வருவது காண்க. உணவும் நீரும் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்னும் இந்து மதக் கருத்தும் பாரதத்தில் மட்டுமே காணப்படும். பிற நாட்டு இலக்கியத்தில் இப்படிப்பட்ட கொள்கைகளைக் காண முடியாது.

வாழ்க குடபுலவியனார்.

India, That is Bharat! Why do we call India, Bharat?

Written by London Swaminathan

 

Date: 9 August 2017

 

Time uploaded in London- 18-08

 

Post No. 4142

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

India’s true name is Bharat. It is in Mahabharat. Indian constitution also begins with the words, India, that is  Bharat……………….”

This country is named after the greatest of the Indian kings  Emperor Bharat.

“All those born in this land before Bharata

All those born after, are called after this name”

–Mahabharata 1-69-49

 

Kalidasa’s most popular drama Sakuntalam is about Dushyana, Sakuntala and their child Bharata. He is known as Sarva Damana – all tamer. He could play with wild animals. Greatest of the modern Tamil poets Bharatiyar sings that Bharata played with little lion cubs.

We are all sons of Bharatavarsa- the country of Bharata.

Kalidasa says,

“He will be a sovereign of the World. Know this too.

Crossing the oceans in a chariot gliding smooth

he shall conquer and rule unopposed

the rich Earth with her seven continents;

named All Tamer here, because he subdues all creatures

by his strength, the future will see his name

proclaimed Bharata; He who bears the world

 

There are very interesting details about Bharata in the Vedic Brahmana literature.

“Sage Dirgatama consecrated King Bharata, son of Dusmanta, who conquered the earth and performed 133 Asvamedha sacrifices.” – Aitareya Brahmana

 

The Aitareya Brahmana gives more details about the coronation ceremonies of other kings. The names of the kings consecrated along with their priests who anointed them are mentioned.

 

In Greece, Egypt and Babylonia all the old kings are listed in the history of those countries. But in India, British people began our history with Asoka in third century BCE! We must change it and begin our history from 4000 BCE.

 

The Kings who ruled India, that is Bharat, are :

King Janamejaya – Tura Kavaneya consecrated him

King Saaryaataa – Cyaavana Bhaargava consecrated him

Sataaniika Satraajita – Soma Suusmaa consecrated him

 

Amvassthya – Paravata consecrated him

 

Yudhaamsrausti  Augrasenya- Narada consecrated him

 

Visvakarmaa Bhauvana – Kasyapa consecrated him

Sudaas Paijavana – Vasistha consecrated him

Marutta Aviksita – Samvarta Angirasa consecrated him

Anga – Udamanya consecrated him

 

Very clear history is in the Vedic literature. We have to rewrite our history before it is too late.

Sage Udamaya ,son of Atri, anointed king Anga and the latter made a gift of

10,000 elephants

10,000 maid servants, decorated with gold ornaments

Ten million cows

87,000 white stallions to the sage.

TEN GENERATIONS OF VEDIC KINGS!

Satapata Brahmana (12-9-3-1 and 13) gives historical details of Vedic Kings:

Dustaritu Paumsayana (Srnjaya King) boasts that he inherited the kingdom through ten continuous generations. Aitareya Brahmana also refers to Dasapurusam Rajyam.

This shows that one kingdom had at least 350 year history (10X35 years). Before him many other kings  might have ruled that area.

 

Tamil Sangam literature which came into existence 2000 years ago says that the number of kings ruled this land is equal to the sand particles (Innumerable, uncountable). Even before 2000 years they knew that Bharat had thousands and thousands of kings.

 

The history of Three Tamil Sangams (Tamil Academy) also give the number of kings who ruled the Tamil Land. If we put all these data together we will get a picture of ancient Bharat.

 

Asvamedha Yajna

Brahmana books give the list of all the kings who did Asvamedha Yajna:-

Satapata Brahmana (13-5-4) gives a long list of kings:

Indrota Daivaapa Saunaka did Asvameda for Janamejaya Parikshit

Bhimasena, Ugrasena, Srutasena in his line also did Asvameda. They may be brothers of Parikshit or separate kings

Kosala (Kausalya) King Para Aaanaara, son of King Aaatnaara

King Purukutsa of Iksvaku race

Ayoga King Marutta Aviksita

Pancal aKing Kraivya

Matsya King Dhvasaa Dvaitavana

Bharata Dauhsyanti

—–all performed Asvamedha.

Bharata did use 78 steeds on the banks of Yamuna and 55 steeds on the banks of Ganga.

In total he used 133 horses and covered the whole country and brought it under his rule. That is why we call this country (India)  Bharat.

There is one Gaathaa (laudatory verse) for every king who did Asvameda.

One laudatory verse says that King Bharata used 1000 horses and no one could beat him.

King Rsaba Yajnatura of Siviknas and  Sona Saatrasaaha of Pancala also performed horse sacrifice.

King Dhrtarastra’s white horse was captured by King Saataniika Saatraajita.

 

So much detail about the kings and their kingdoms were given in the Brahmana literature dated 1000 BCE.

 

This is foreigners’ date. We think that they are all Pre Puranic Kings. We have 150 generations in the Puranas under Chandra and Surya vamsas.

 

So Vedic kings must have ruled the vast North India from Yamuna to Sarasvati before 3100 (Kaliyua beginning) BCE.

We must rewrite Indian History and start our history from 4000 BCE.

Moses is not a historical figure. So far they haven’t found any historical material to confirm his existence. But three religions  stand upon his shoulders!!!

My old articles on Yagas and Yajnas:-

 

List of Tamil Kings who performed Yagas and Yajnas -Post No. 3086In “Culture”

Why do Hindus say ‘Idam Na Mama’/ It is Not Mine? (Post No. 3309)In “Science & Religion”

 

 

Hindu Fire Ceremonies: 7 Paka Yajnas and 14 Srauta Yajnas (Post No.3310)In “Religion”

Interesting Titbits about Asvamedha Yajna- Part 1(Post No.3159)In “சமயம். தமிழ்”

Tamil King’s Rajasuya Yagna! (Post No.3084)In “Culture”

 

Asvamedha: New Explanation (Post No.3163)

 

 

400 Types of Yagas (Fire Ceremonies) | Tamil and Vedas

https://tamilandvedas.com/2014/03/06/400types-of-yagas-fire-ceremonies/

6 Mar 2014 – Kanchi Paramacharya Sri Chandrasekarendra Saraswati Swamikal mentioned in one of his lectures that there are 400 different types of Yagas …

 

 

400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் …

https://tamilandvedas.com/…/400வகையாகங்கள்

Translate this page

6 Mar 2014 – 400 வகை யாகங்கள்காஞ்சி பரமாசார்யார் உரை. rudra baba. Sri Sathya Sai Baba in Ati Rudra Maha Yagna.

5 மஹா யக்ஞம், 14 ச்ரௌத யக்ஞம், 7 பாக …

swamiindology.blogspot.com/2016/11/5-14-7-post-no3312.html

Translate this page

2 Nov 2016 – … கட்டுரையையும் படிக்கவும்:– 400 வகை யாகங்கள்காஞ்சி பரமாசார்யார் உர

 

தமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்! (Post No.3085)

 

 

–subham–

 

 

 

CONFIDENCE : THE KEY TO SUCCESS (Post No.4141)

Compiled BY S NAGARAJAN

 

Date: 9 August 2017

 

Time uploaded in London:- 6-15 am

 

 

Post No.4141

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

 

 

All of us know how many times Abraham Lincoln failed.

Very many times we have come across the list given below in books and net sites.

Abraham Lincoln overcame great setbacks and obstacles on his journey.

1809 Born February 12

1816 Abraham Lincoln’s family was forced out of their home and he needed to work to support his family.

1818 His mother passed away

1828 His sister dies

1831 A business venture failed

1832 He ran for the State Legislature. He lost.

1832 In the same year, he also lost his job. He decided he wanted to go to law school but couldn’t get in.

1833 He borrowed money from a friend to start a business. By the end of the year, he was bankrupt.

1834 He ran for the State Legislature again. This time he won.

1835 The year was looking better as he was engaged to be married. Unfortunately, his fiancee died and he was grief stricken.

1836 This was the year he had a total nervous breakdown and for 6 months was bedridden.

1836 He sought to become Speaker of the State Legislature. He was defeated.

1840 He sought to become Elector. He was defeated.

1842 He gets married to a woman named Mary Todd. They have 4 boys but only one would live to maturity.

1843 He ran for Congress. He lost.

1846 He ran for Congress again. He won and moved to Washington.

1848 He ran for re-election to Congress. He lost.

1849 He sought the job of Land Officer in his home state. He didn’t get the job.

1850 His son, Edward, dies.

1854 He ran for the Senate of the United states. He lost.

1856 He sought the Vice Presidential nomination at a national convention. He got less than 100 votes.

1858 He ran for the Senate again. He lost again.

1860 Abraham Lincoln is elected President of the United States

1862 His son, Willie, dies at age 12.

1865 On April 14, Abraham Lincoln is assassinated

Lincoln’s confidence took him to the top post of the U.S.

He made every stumbling block as a stepping stone.

‘Self trust is the first secret of success’ said Ralph Waldo Emerson.

‘For a man to achieve all that is demanded of him he must regard himself as greater than he is’ said Johann W. Von Gothe.

‘They are able who think they are able‘– Thus observed the great Virgil.

Failures are not failures; They are the stepping stones; that is all.

Let us have confidence and then we will also  achieve anything and everything.

***