More Rudeness Anecdotes (Post No.3773)

Compiled by London swaminathan

 

Date: 30 March 2017

 

Time uploaded in London:- 19-57

 

Post No. 3773

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

One Wrong action!

When a diplomat remarked that he could not understand why he was called ill natured, for in all his life he had never done but one ill -natured action, Talleyrand asked, “And when will it end?”

 

Xxx

Oscar Wilde’s Wit

Oscar Wilde indulged his penchant for baiting Yankees when he met Richard Harding Davis.

“So you are from Philadelphia where Washington is buried?”

“Nonsense. He is buried in Mount Vernon”, Davis answered abruptly.

Wilde, miffed, switched the talk to a new French painter,

“Do let’s hear what Davis thinks of him”, he purred.

Americans always talk so amusingly of art .

Davis answered, “I never talk about things when I don’t know the facts”

Wilde rapier wit flashed back, “That must limit your conversation frightfully.”

Xxxx

Samuel Johnson annoyed

Samuel Johnson was once vexed by the presence of a man at a small dinner party who laughed inordinately and with a great and ostentatious show of appreciation at everything the good Doctor said.

Finally, irritated in the extreme, Johnson turned upon the fellow and said,

“Pray, sir, what is the matter? I hope I have not said anything that you can comprehend.”

 

Xxx

Action is familiar!

Oliver Hereford was having lunch at his club one day, when a man whom he particularly disliked came up to him. Hereford attempted to disregard him but the man, smiling broadly, slapped him on the back and said jovially,

“Hello, Ollie, old boy, how are you?”

Hereford looked at the man coldly and answered,

“I don’t know your name and I don’t know your face, but your manners are very familiar”.

 

Xxxxx Subham  xxxx

 

இடிதாங்கிக் கருவி பற்றி கம்பன் தகவல்? (Post No.3772)

Written by  London swaminathan

 

Date: 30 March 2017

 

Time uploaded in London:- 10-21 am

 

Post No. 3772

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்கத் தமிழ் இலக்கியங்களில் மதில் சுவர் மீது என்ன என்ன எந்திரப் பொறிகள், கருவிகள் வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்புகள் உள. அந்தக் காலத்திலேயே உயரமான கட்டிடங்களை இடி மின்னல் தாக்காமல் இருக்க நம் முன்னோர்கள் பலவழிகளைக் கண்டு பிடித்தனர்  கோபுரங்களின் மீதுள்ள மிகப்பெரிய கலசங்களில் வரகு என்னும் தானியத்தை நிரப் பிவைப்பர். இதுவும் இடி தாக்காமல் இருப்பதற்கான ஒரு உத்தி என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எது எப்படியாகிலும், இவ்வளவு காலமாக இடி தாக்கி அவைகள் அழிந்ததாகச் செய்திகள் இல்லை. கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் அவைகளின் பலவீனம்தான் காரணம் அல்லது பூகம்ப/ நில அதிர்ச்சி போன்ற இயற்கை  உற்பாதங்கள்தான் காரணம் என்றும் அறிகிறோம்.

 

கலைக் களஞ்சியங்களைப் பார்த்தால் இடி தாங்கியை (lightning rod OR conductor)  பென்சமின் பிராங்ளின் (Benjamin Franklin) கண்டுபிடித்தார் என்று போட்டிருக்கும். ஆனால் கம்பன் காலத்திலேயே இடிதாங்கிக் கம்பிகள் கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டதாக அவன் பாடலில் இருந்து அறிகிறோம்.

 

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண் புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண் பொறி அடக்கிய செயலால

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

–பால காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:-

அயோத்தி மாநகரத்தின் கோட்டை மதில் மிகவும் உயரமானது. அதன் முடிவு எங்கே இருக்கிறது என்று காணமுடியாது; ஆகையால் முடிவே காணமுடியாத வேதத்திற்கு இணையானது; இதன் ஒரு பக்கம் விண்ணுலகத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் இதைத் தேவர்களுக்கு ஒப்பிடலாம்;  போர் பொறிகளை (எந்திரங்களை) ஒளித்து வைத்திருப்பதால் பொறிகளை (ஐம்புலன்களை) அடக்கிய முனிவர்களுக்குச் சமமானது. காவல் தொழிலில் கலைமானை வாஹனமாகக் கொண்ட துர்க்கைக்குச் சமம். தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளி தேவி போல இருக்கும்;  எவரும் நெருங்க முடியாத தன்மையால் ஈசனைப் போல இருக்கும்.

 

“மதில் சுவர் மிக உயரமானது” — என்று ஒரே வரியில் சொல்லி இருக்கலாம். ஆனால் அங்கே அது வேதம், தேவலோகம், முனிவர், துர்கை, காளி, ஈஸ்வரன் போன்றது என்று சொல்லும் அழகு மிகவும் ரசிக்கத்தக்கது. அது மட்டுமல்ல; பொறி, துக்கை என்ற சொற்களில் இரு பொருளை வைத்து சிலேடை செய்து விளையாடுகிறான் கம்பன்!

 

ஐம்பொறி என்பது ஐம்புலன்கள்; மதிலில் ஒளிந்திருக்கும் பொறிகள்- எந்திரங்கள்.

 

துர்கா என்றால் பாதுகாப்பு அரண் என்று பொருள்; வடநாட்டில் கோ ட்டைகளின் பெயர்கள் ‘துர்க்’ என்றே முடியும் (தமிழ்நாட்டிலும் கூட இப்படிச் சில ஊர்கள் உண்டு). நம்மைப் பாதுகாப்பதால்தான் அவளைத் துர்கை என்று வழிபடுகிறோம்.

 

பாட்டில் இடிதாங்கி என்ற சொல் இல்லை. ஆயினும் கோட்டையின் மீது திரிசூலத்தை நட்டு வைப்பதும் கோவில் கோபுரம் மீது உலோகக் கலசங்களை வைப்பதும் இதற்காகவே என்பதை எல்லோரும் அறிவர். பழைய உரைகாரர்களும் இப் படியே பொருள் சொல்லி இருக்கிறார்கள்.

 

கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தமிழனின் கண்டு பிடிப்போ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் வட நாட்டில் கோட்டைகளின் மீது திரிசூலம் இருந்ததாக பார்த்தது இல்லை; படித்ததுமில்லை. மேலும் கம்பன், சோழ நாட்டில் என்னென்ன கண்டானோ அதை அப்படியே அயோத்தி நகரத்தின் மீது ஏற்றிப் பாடி இருக்கிறான். ஆக சோழர் காலத்தில் கோட்டைகளின் மதில் மீது சூலம் இருந்தது தெளிவாகிறது. கோவிலின் உயரத்துக்கேற்ற பிரம்மாண்டமான கோபுரக் கலசங்களை வைத்தவனும் தமிழனே. நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் மீதேறிக் கலசங்களைக் கட்டிப்பிடித்து நின்றிருக்கிறேன். 169 அடி உயரத்தில் நின்றுகொண்டு மதுரையைப் பார்க்கும்போது தலை சுற்றும்; காற்றுவேறு அடிப்பதால் ஒரு சில நிமிடங்களுக்கு கலசத்தைக் கட்டிக்கொண்டே நின்று பார்த்துவிட்டு போதும் என்று திரும்பி விடுவோம். கோபுரக் கலசங்களையும், கோட்டையின் திரிசூலங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கையில் இதன் காரணமும் விளங்குகிறது. இது தமிழனின் கண்டு பிடிப்பு என்றும் தெரிகிறது. ஆயினும் இவை,  விஞ்ஞான முறையில் இடியைத் தடுக்கவல்லதா என்பதை ஆராய்தல் அவசியமே!

 

–SUBHAM–

 

ஆத்ம தரிசனம்- ஆன்மீக மின்னணு இதழ் (Post No3771)

Written by S NAGARAJAN

 

Date: 30 March 2017

 

Time uploaded in London:-  5-59 am

 

 

Post No.3771

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ஆன்மீக இதழ் அறிமுகம்

 

ஆத்ம தரிசனம்

ஆன்மீக மின்னணு இதழ்

 

‘ஆன்மீக பொக்கிஷம்’ என்றும் ‘நமது பாரத தேசத்தின் ஆன்மீகம், கலை, கலாசாரம், பண்பாடு, சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இவைகளை நம் ஆன்மா உணர்ந்து கொள்ள ஆத்ம தரிசனம்’ என்றும் முதல் பக்க பீடிகையோடு சென்னையிலிருந்து வெளி வரும் பத்திரிகை ஆத்ம தரிசனம்

 

மார்ச் 2017 இதழில் சத்தியவான் சாவித்திரி பற்றிய கதையைக் காண்கிறோம்.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வாழ்க்கை வ்ரலாறு அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ள கட்டுரை இந்த இதழுக்குப் பெருமை சேர்க்கிறது

 

மஹாபாரதத்தில் அர்ஜுனனின் தேர் எதனால் எரிந்தது என்ற கதையை அடுத்துக் காண்கிறோம்.

 

வேதத்தில் பெண்மை என்ற கட்டுரையில் வேதம் பெண்களை இழிவு படுத்தியிருக்கிறதா என்பது அலசி ஆராயப்பட்டிருக்கிறது. அப்படி சில ஸ்லோகங்கள் இருப்பின் அவை இடைச்செருகல் என்பதை கட்டுரை ஆசிரியர் கூறுவதோடு நாம் பிறந்த பூமியை தாய் நாடு பாரத மாதா என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவதிலிருந்தே வேதம் பெண்மையை எப்படிப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது என்பதை அறியலாம் என முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

 

இந்த இதழ் பெண்மைச் சிறப்பிதழ் என்பதால் இந்தக் கட்டுரை பெண்மையின் சிறப்பைப் போற்றும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், காரடை செய்யும் விதம்,ஹோலி பண்டிகை தோன்றிய வரலாறு போன்ற கட்டுரைகளுடன் பிள்ளையார் தலங்கள் சிலவற்றைப் பற்றிய பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரையும் இதழுக்கு அழகு சேர்க்கிறது.

 

நமது வைதீக கலாசாரத்தைப் பாதுகாக்க புராண பிரவ்சனம். பெரியோர்களின் அணுக்க தீட்சை, மகான்களின் தரிசனம், ஆலய வழிபாடு, குல தர்மப்படியான சடங்குகள், வழிபாடுகள், மக்களுடன் இணைந்து ஒரு தாய் மக்களாக கொண்டாடப்படும் பண்டிகைகள், இசை, நாடகம் வழியே பரம்பரைக் கதைகளை உணரும் அனுபவம் போன்ற ஏராளமான வழிகள் உள்ளன. இவற்றுடன் பத்திரிகையும் ஒரு வழியாக இணைந்தது.

 

 

காலத்திற்கேற்றவாறு சென்ற தலைமுறைகளில் வைதிக மார்க்கத்தின் பெருமைக்கு பெரும் அணியாக தர்ம பத்திரிகைகள் புதிய பொலிவுடன் மக்களைக் கவரும் வண்ணம் வெளி வர ஆரம்பித்தன. ஆனால் காலப் போக்கில் இவற்றில் பல வணிக நோக்குள்ள்வையாக காலத்தின் கட்டாயத்தால் மாற்றப்படவே உண்மையான அற உணர்வுகளை ஆதாரத்துடன் கூறும் பத்திரிகைகள் குறைந்தே போயின்.

 

 

ஸ்ரீ வத்ஸ சோமதேவ சர்மாவின் வைதீக தர்மவர்த்தனி உள்ளிட்ட சில குறிப்பிடத்தகுந்த பத்திரிகைகள் கடந்த காலத்தில் உலவி வந்தன..

 

இந்த வகையில் பழைய பாரம்ப்ரிய வழியில் ஆத்ம் தரிசனம் வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நல்ல செய்தி!

அதுவும் காலத்திற்கேற்றபடி டிஜிடல் முறையில் அதி நவீன தொழில்நுட்பத்தையும் தன்னுள் கிரகித்து உலகளாவிய விதத்தில் ஒரு நொடியில் ஆன்மீக உணர்வு அனைவரையும் சேரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பான செய்தி.

ஆசிரியர் குழுவைப் பற்றிய செய்தி நம்மை நம்பிக்கை கொள்ள வவக்கிறது.

 

 

இதன் ஆசிரியர் சிம்மம் ரகு. இந்திய தொலைக் காட்சிக்கு பல வருடங்கள் நிகழ்ச்சிகள் தயாரித்த பெரிய பின்புலமே இவரது பலம்.

முனைவர் இராகவேந்திர ஷர்மா  மீமாம்ஸ சாஸ்திர நிபுணர் இந்த இதழில் வேதமும் பெண்மையும் பற்றிய கட்டுரை இவருடையதே.

 

 

திரு ஹரிகேசநல்லூரி வெங்கட்ராமன், திருமதி இராஜேஸ்வர், திருமதி ஐஸ்வர்யா நிதேஷ் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

 

34 பக்கங்கள் கொண்ட இதழின் விலை ரூ 15/

குட்டையும் ஷொட்டையும் சுட்டிக் காட்டச் சொல்கிறது ஆசிரியர் குழு.

 

ஷொட்டுகளே அதிகம்.

 

வடமொழி மூலத்துடன் தமிழ் உரை கொண்ட பல கட்டுரைகள் வெளியிடப்பட்டால் இப்போது வெளியிடப்பட்டு வரும் ஆன்மிக இதழ்களிடமிருந்து மாறுபட்டு இந்த இதழ் தனித்து விளங்கும். இதைச் செய்வதற்கான இதன் பலம் இதன் டிஜிடல் வடிவமே!

 

முதல் பாராவில் நாம் பார்த்த பத்திரிகையின் பீடிகையை உண்மையாக்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஆத்ம தரிசனம் வெற்றியுடன் தர்ம பவனி வர வாழ்த்துக்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

 

ஆத்ம தரிசனம்

எண் 1, மீனாட்சி பிளாட்ஸ்.

135, பாலகிருஷ்ணன் (நா) தெரு,

மேற்கு மாம்பலம், சென்னை- 600033

கைபேசி எண்கள் 9841263010, 9445692485

மின்னஞ்சல் : athmadarshan@yahoo.com

***

Questions and Answers: Where can I get books on the Vedas? (Post No.3770)

Written by by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 21-07

 

Post No. 3770

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Every day I get at least one e mail asking for some details about Hinduism, Tamil Names, Word meaning and availability of books; some are personal questions which I cant share; If it is for book review I send the enquiries to my brother S Nagarajan, who writes regular book reviews. If it is regarding some astrological questions or predictions, I send it to my eldest brother S Srinivasan who does it free of cost. Since my brothers are in India they can give them quick reply in person or by phone or by email.

 

Here are a few recent questions and my answers; they may be useful to others:

Dear sir,

 

I read your articles in google, really very useful.

 

I need Atharvana Veda book in Tamil, pls help me.

 

I went to many shops, but not available.

 

Please give me the address for the book

xxxx

 

My quick reply

 

Books on Vedas in Tamil are very few and difficult to get. If you contact

 

Jayalakshmi Indological Book House  

 

Book store in Chennai, India

AddressShop No.6, Appar Swamy Koil Street,, Opp. Sanskrit College, Mylapore, Chennai, Tamil Nadu 600004, India

Phone+91 44 2499 0539

 

She will get them for you or tell you whether they are out of print

 

For any book on Indology, Hinduism, Sanskrit in English and Tamil, she is the best; she will provide you details.

 

1).Tamil Maran’s book on Atharvana Veda is good.

 

2).Anuragam has published one booklet on each Veda in Tamil.

 

3).Kumtham Bhakti gave a booklet each for all the Vedas some years ago.

 

xxx

 

Question on V Sahasranama

 

This Is XYZ from Dibrugarh, Assam currently I am working as

XYZ. I came to know about you through Tamil

Brahmin website. I daily recite Vishnu Sahasranamam. I am very much

eager to Know any particular slokas there to excel in studies,

research, career growth, Success etc.

 

 

My quick reply:–

 

Dear XXXX
Glad to know that you recite Vishnu Sahsranama everyday.

If you are very keen to achieve great grades and success in your studies.

please recite couplets 19 and 27

 

Sloka 19

beginning MAHABUDDHIR MAHAAVEERYA MAHAASAKTHIR……………..MAHADHRIDHRUTH

 

Sloka 27

ASANKHYEYO APRAME-YAATHMAA…………………………………….. SIDDHI SAADHANAHA

 

All the Best.

Good luck in all your endeavours.

xxxx

 

Respected Swami ji,

one thing kept me worried is about the correct pronunciation
of the slokas. I was following M.S Subbalaksmi and Sooryagayatri. I
was going through the English PDF of VS but I encountered several
mistakes in spelling for eg XXXXXXXXXXX
My question is if I make wrong pronunciation any of the slokas due to
this difference in spelling will it affect its efficacy?

 

MY Quick reply
God is Karunamurthy (FULL OF MERCY)

God just smiles at us when we do mistakes like a mother smiles at her childrens’ mistakes and enjoys. (So God wont punish us for wrong pronunciation)
But it is always good to follow correct pronunciation so that is kept intact for the future generations.
I follow MS Subbulakshmi on audio and Ramakrishna Mutt, Mylapore, Chennai book for written version.

 

Just follow that one which you think is correct or follow MS

 

xxxx

 

Some typical questions received:

Can you get me XYZ book from the British Library?

I want to name my child XYZ. Is it a Tamil name?

Can you give me some ghost stories? We want to make a feature film?

Can you give me some verses from Sangam literature portraying Navarasam ( Nie sentiments) for a dance performance?

Are there any sex boosting medicines in our scriptures?

Can you give some names about water for my business?

 

Hundreds of people have asked: Where can I sell my old Indian currency notes? You wrote that one rupee and two rupees currency fetch thousands of rupees. ( I have answered this question umpteen times.)

 

Questions on Astrology:

When will I my sufferings end?

When will I get married?

When will I get a child?

 

xxx

If you are not bored yet, read the following: –

Respected Swami ji,

Are the UFOs time travellers?

Regards, S S

 

xxxx
uncle

I just found this on Wikipedia about shenbagam (flower).

there is lots of differing opinion on it

my priest told he says its most auspicious to Siva however

another devotee told no, don’t offer it….

even in the Wikipedia article it strangely says

he can’t resist a devotee who offers him shenbagam however

it is not to be offered….it is very strange uncle. see below….

a devotee……………………

 

 

If you are a publisher or author and you want your book reviewed in our blogs please contact me at swami_48@yahoo.com

 

–Subham–

Stinginess Anecdotes (Post No.3769)

Compiled by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 18-21

 

Post No. 3769

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Dog’s Father is Rich!

A poor German, relative of John Jacob Astor, once applied to him for charity. Mr Astor gave him a five dollar.

“Why?, said the disconcerted relative, “your son just gave me ten dollars!”

“Well, he may!”| , said the stingy old magnate; “the dog has a rich father”

 

Xxx

Perfect Likeness!

Fenelon had for some time been besieging Richelieu for a contribution to a charity fund, but all his diplomacy had failed to make the wily French minister ” come across”

Meeting Richelieu in the Louvre one day, Fenelon remarked,

“I have just seen a portrait of you in the other room”.

“And did you ask it for a subscription?” replied Richelieu with a polite smirk.

No, I knew it was no use, said Fenelon, passing on. “It was a perfect likeness”.

 

Xxx

 

Counting Fingers!

Russel Sage, the financier, had a wide reputation as a man difficult to separate from his money. A couple of promoters approached him one day and tried to sell him on a scheme they had. Sage talked with them for a while but said he could give them no definite answer yet. Telling them that he would communicate with them in a few days he showed them out of the office.

One of the promoters seemed quite optimistic and voiced the opinion to his partner that he thought Sage was pretty well sold on their proposition.

“I don’t know, replied the other sceptically. He seemed too suspicious to me. Didn’t you notice tha , after shaking hands with me, he started to count his fingers”.

 

Xxx

How to become Rich!

The young journalist was sent to get a personal interview with the wealthy old Scotch merchant His paper desired a human-interest story on how he had accumulated his riches.

“Well, it’s a long story”, said the old man.

“And while I am telling it we may as well save the candle”.

Wherewith he blew it out.

“Never mind about the story, said the reporter. I understand”.

 

Xxx

When J P Morgan drinks…………………

A legend of doubtful authenticity has it that J P Morgan was once present with a group of men at a bar in the financial district. Beckoning to the waiter, he ordered a beer; at the same time, saying, “When Morgan drinks, everybody drinks”.

Everybody had a beer and when Morgan had finished, he slapped a dime upon the table, saying,

“When Morgan pays, everybody pays.”

 

Xxxxx SUBHAM xxxx

 

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள் (Post No.3768)

Compiled by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 6-12 am

 

Post No. 3768

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

ஏப்ரல் 2017 காலண்டர்

துர்முகி பங்குனி–  ஹேவிளம்பி சித்திரை 2017

 

அவ்வையாரின் அருமையான 30 பொன்மொழிகள்

 

Festival/ Holidays:

ஏப்ரல் 5- ராம நவமி, 9-மஹாவீர் ஜயந்தி, பங்குனி உத்திரம்; 13–பைசாகி, 14-தமிழ் புத்தாண்டு; ஹேவிளம்பி வருஷப் பிறப்பு; புனித வெள்ளி;  16-ஈஸ்டர்; 29-அக்ஷய த்ருதியை; 30- ஆதி சங்கரர், ராமானுஜர் ஜயந்திகள்

 

ஏகாதசி–6, 22

பௌர்ணமி- April 10

அமாவாசை- April 26

சுபமுகூர்த்த தினங்கள்- April 2, 9, 10, 17, 21

 

Pictures are from Newspapers;Gudi Padwa (New Year) in Maharashtra

ஏப்ரல் 1 சனிக்கிழமை

பயன்கருதாது உதவுக:

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல் என வேண்டா – மூதுரை செய்யுள் 1

 

ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை

நல்லோர்க்குதவி=கல்மேல் எழுத்து‘;தீயர்க்குதவி=நீர்மேல் எழுத்து

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே மூதுரை செய்யுள் 2

 

ஏப்ரல் 3 திங்கட்கிழமை

இளமையில் வறுமை துன்பம் தரும்

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் – இன்னாத

நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே

ஆள் இல்லா மங்கைக்கு அழகு- மூதுரை செய்யுள் 3

 

ஏப்ரல் 4 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் வறுமையிலும் பண்பாளரே

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்- மூதுரை செய்யுள் 4

 

ஏப்ரல் 5 புதன் கிழமை

காலம் அறிந்து காரியம் செய்

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை செய்யுள் 5

 

ஏப்ரல் 6 வியாழக்கிழமை

நுண் அறிவு

நீர் அளவே ஆக்கும் ஆம் நீர் ஆம்பல் தான் கற்ற

நூல் அளவே ஆகும் ஆம் நுண் அறிவு – மேலைத்

தவத்து அளவே ஆகும் ஆம் தாம் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம்–மூதுரை செய்யுள் 7

 

ஏப்ரல் 7  வெள்ளிக்கிழமை

மானம் காக்க உயிர் கொடுப்பர்

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ? – கல்தூண்

பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான் –மூதுரை செய்யுள் 6

 

ஏப்ரல் 8 சனிக்கிழமை

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே –மூதுரை செய்யுள் 8

 

ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை

வலியவர்க்கும் துணை வேண்டும்

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமிபோனால் முளையாது ஆம்- கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி

ஏற்ற கருமம்  செயல்- மூதுரை செய்யுள் 11

 

ஏப்ரல் 10 திங்கட்கிழமை

தீயரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே –மூதுரை செய்யுள் 9

 

 

ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை

தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை — மூதுரை செய்யுள் 10

 

ஏப்ரல் 12 புதன் கிழமை

உருவத்தைக் கண்டு மதிப்பிடாதே

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா- கடல் பெரிது

மண் நீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூரல்

உண் நீரும் ஆகிவிடும் மூதுரை செய்யுள் 12

 

ஏப்ரல் 13 வியாழக்கிழமை

மரமண்டை யார்?

சபைநடுவே நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நல் மரம்- -மூதுரை செய்யுள் 13

 

ஏப்ரல்  14  வெள்ளிக்கிழமை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்

பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி – – மூதுரை செய்யுள் 14

 

ஏப்ரல் 15 சனிக்கிழமை

அடக்கம் உடையார்

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு — மூதுரை செய்யுள் 16

 

ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை

தீயோர்க்குதவி செய்தல் வீண்

பாங்கு அறியாப் புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம் — மூதுரை செய்யுள் 15

 

ஏப்ரல் 17 திங்கட்கிழமை

வறுமை வந்ததும் பிரிபவர் உறவினரல்லர்

அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – மூதுரை செய்யுள் 17

 

ஏப்ரல் 18 செவ்வாய் க்கிழமை

மேன்மக்கள் – கீழ்மக்கள் வேறுபாடு

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும்;என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக்கால்- மூதுரை செய்யுள் 18

 

ஏப்ரல் 19 புதன் கிழமை

கணவனும் செல்வமும் விதிப்படியே

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன் – மூதுரை செய்யுள் 19

 

ஏப்ரல் 20 வியாழக்கிழமை

உடன்பிறந்தும் கொல்வர்; தொலைவில் மலையில் உள்ள மூலிகையும் உயிர்காக்கும்

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்கவேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி- மூதுரை செய்யுள் 20

 

ஏப்ரல் 21  வெள்ளிக்கிழமை

அடங்கா மனைவி= புலி இருக்கும் புதர்

இல்லாள் கத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை

இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் – இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல்

புலிகிடந்த தூறுஆய் விடும் மூதுரை செய்யுள் 21

 

ஏப்ரல் 22 சனிக்கிழமை

கற்பக மரத்தில் தங்கினாலும் முன்வினை விடாது

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முன்பவத்தில் செய்தவினை மூதுரை செய்யுள் 22

 

ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை

நல்லவர் சினமும் அல்லவர் சினமும்

கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோடு ஒப்பாரும்……. சான்றோர் சினம் –செய்யுள் 23

 

ஏப்ரல் 24 திங்கட்கிழமை

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பு இல்லா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்– செய்யுள் 24

 

ஏப்ரல் 25 செவ்வாய் க்கிழமை

வஞ்சகரே ஓடி,ஒளிவர்

கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவுவார்

கரவு இலா நெஞ்சத்தவர் –செய்யுள் 25

 

ஏப்ரல் 26 புதன் கிழமை

மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு– செய்யுள் 26

 

ஏப்ரல் 27 வியாழக்கிழமை

வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்- கூற்றமே

இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் — செய்யுள் 27

 

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை

மருவு இனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் – திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் –மூதுரை செய்யுள் 29

 

ஏப்ரல் 29 சனிக்கிழமை

சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆம் தனையும் காப்பர் அறிவு உடையோர் – மூதுரை செய்யுள் 30

 

 

Disguised as Veera Shivaji

 

ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை

மன்னர்கள் மன்னர்களே; தாழார்

தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று –மூதுரை செய்யுள் 28

 

-Subham–

 

 

 

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 25 (Post No.3767)

 

Written by S NAGARAJAN

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:-  5-31 am

 

 

Post No.3767

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 25

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 10

 

by ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்/

 

52) அடுத்து 1973ஆம் ஆண்டு மே மாத குமரி மலர் இதழில் (பிரமாதீச – வைகாசி இதழ்) வீர்யம்  என்ற தலைப்பில் உள்ள  பாரதியார் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

 

அருமையான இந்தக் கட்டுரையானது “ஜெயபாரதி” சென்னை 1936  வருஷ அனுபந்தம் – இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன் மறுபதிப்பை குமரிமலர் இதழில் காண்கிறோம்.

கட்டுரையின் முதல் நான்கு பாராக்களைக் கீழே காணலாம்:

  “வீர்யமாவது வீரனுடைய குணம். வீரன் எவன் என்பதை லட்சண ரூபமாகக் காட்டுவதைக் காட்டிலும், திருஷ்டாந்த ரூபமாகக் காட்டினால் நன்கு விளங்கும்.

 

 

    அர்ஜுனன் வீரன்; கர்ணன் வீரன்; இந்திரஜித் வீரன்; ராவணன் வீரன்; ராமன் வீரன்; லட்சுமணன் வீரன்; ஹனுமான் வீரன்; சிவாஜி வீரன்; காந்திஜி வீரன்;

     வீரர்களில் தர்மவீரர் என்றும், அதர்ம வீரர் என்றும் இருபாற் படுவர்.

      ராமன், பார்த்தன் போன்றோர் தர்ம வீரர்; ராவணன் முதலியோர் அதர்ம வீரர்.

 

 

    ஜெய பாரதி பத்திரிகை பாரதியாரின் கட்டுரைகளை தேடிப் பிடித்து வெளியிடுவதை தனது முக்கிய குறிக்கோள்களின் ஒன்றாகக் கொண்டிருந்தது.

 

இந்தப் பத்திரிகையில் எனது தந்தையார் திரு வெ.சந்தானம் பணியாற்றி வந்தார். பின்னரே தினமணி இதழில் சேர்ந்தார்.ஜெயபாரதி பத்திரிகை முனைந்து பாரதியாரின் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டதையும் என் தந்தையாரைப் பற்றியும் பாரதி ஆர்வலர் ரா.அ.பத்மநாபன் பாரதி புதையல் திரட்டு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

53) அடுத்து குமரி மலர் வெளியிட்டுள்ள கட்டுரை அன்பே தீர்ப்பு.

 

 

அன்பே தீர்ப்பு

 

சி.சுப்பிரமணிய பாரதியார்.

 

இந்தக் கட்டுரையும் “ஜெயபாரதி”, சென்னை  வருஷ அனுபந்தம் 1936 – இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையாகும்.

இதில் அன்பின் வலிமையை அழகுற மஹாகவி விளக்குகிறார்.

 கட்டுரையின் இறுதி ஐந்து பாராக்களை இங்கே காணலாம்:

 

      “அன்பு கொள்கையில் இருந்தால் போதாது. செய்கையில் இருக்க வேண்டும்.

 

        உன்னிடம் ஒரு கொடி ரூபாய் இருந்தால், அந்த ஒரு கோடி ரூபாயையும் தேச நன்மைக்காகக் கொடுத்து விட்டு நீ ஏழையாகி விடத் துணிவாயானால் நீ தேசத்தின் மீது அன்புடையவ்னாகக் கருதப்படுவாய்.

 

         உன்னுடைய குழந்தையின் உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதாலவ்து கையிடத் துணிவாயானால், நீ குழந்தையிடன் அன்புடையவ்னாகக் கருதப்படுவாய்..

 

         பறையனுக்கு ஸ்நானம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்  கொண்டு சாப்பிட்டால் நீ மனித ஜாதியினிடம் அன்புடையவனாக விளங்குவாய்.

 

       எல்லா ஜந்துக்களிடத்திலும் ஆரம்பப் பழக்கத்துக்கு, எல்லா மனித உயிர்களிடத்திலும் தெய்வபக்தி காண்பித்தால் உலகத்தின் துயரங்கள் தீர, நியாயமான ஜனவகுப்பு ஆரம்பமாக ஹேது உண்டாகும்.

 

54) அடுத்து பாரதியார் கடிதம் (1919) என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையின் முற்பகுதியை இங்கே காணலாம்:-

                                    க்டையம்

                              15, நவம்பர் 1919

 

ஸ்ரீமான் வயி. சு. ஷண்முகம் செட்டியாருக்கு ஆசீர்வாதம்.

  • ……
  • பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள். தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதி யனுப்புகிறேன்.. நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.

தங்களன்புள்ள சி.சுப்பிரமணிய பாரதி என்று கடிதம் முடிவுறுகிறது.

     மஹாகவியின் புத்தகப் பதிப்பு ஆர்வத்தைத் தெளிவாக இக்கடிதத்தில் காண்கிறோம்.

 

                                -தொடரும்

 

Office Seekers (Chaucer & Lincoln) Anecdotes (Post No.3766)

Compiled by London swaminathan

 

Date: 28 March 2017

 

Time uploaded in London:- 15-16

 

Post No. 3766

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

A Commissioner to the Hawaiian Islands was to be appointed, and eight applicants had filed their papers, when a delegation from the South appeared at the White House on behalf of the ninth. Not only their man was fit – so the delegation urged – but was also in bad health, and a residence in that balmy climate would be of great benefit to him.

 

President Abraham Lincoln was rather impatient on that day, and before the members of the delegation had fairly started in, suddenly closed the interview with this remark:

“Gentlemen, I am sorry to say that there are eight other applicants for that place, and they are all sicker than your man”.

 

xxx

 

Chaucer got a job!

Master Geoffrey Chaucer was a man of law, for he had studied at the Temple, probably about the time when he is said to have cudgelled a friar in Fleet Street; he was a soldier, and had been taken captive in the wars; he was a courier and an ambassador, and had negotiated a royal marriage. There was probably ground, therefore, for supposing that were he given an office of profit under the Crown he would take his pleasure and leave the duties to be performed by others, as was not uncommon in those days. Wherefore he was bound down to this close bargain:

“That the said Geoffrey write with his own hand the rolls touching the same office, and continually reside there, and do and execute all things pertaining to the said office in his own proper person, and not by his substitute.”

xxx

Too big a post for him…………………….

An old acquaintance of President Lincoln visited him in Washington. Lincoln desired to give him a place. Thus encouraged, the visitor, who was an honest man but wholly inexperienced in public affairs or business, asked for a high office, Superintendent of the Mint.

The president was aghast, and said:

Good gracious! Why didn’t he ask to be the Secretary of the Treasury (Finance Minister), and have done with it?”

Afterward, he said: “Well, now, I never thought Mr—- had anything more than average ability, when we were young men together. But, then, I suppose he thought the same thing about me, and – here I am!”

 

xxx

Where in the world…………………

To someone who wanted an appointment which was already filled, Lincoln sent the following telegram:

“What nation do you desire General Allen to be made quarter -master-general of? This nation has already has a quarter -master-general – A.Lincoln.

xxx SUBHAM xxx

நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்கிருத மறுமலர்ச்சி! (Post No.3765)

Written by London swaminathan

 

Date: 28 March 2017

 

Time uploaded in London:- 12-46

 

Post No. 3765

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருதம் உயிருடன் வாழும் மொழி என்பதற்கு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருகிய சம்ஸ்கிருத நூல்கள் சாட்சி பூதங்களாக நிற்கின்றன. நாயக்க மன்னர்களும் எழுதினர். அவர்களிடம் அமைச்சரான தீட்சிதர்களும் எழுதிக் குவித்தனர்.

நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருத நாடகங்களும், காவியங்களும், சாஸ்திர நூல்களும்,அலங்கார சாஸ்திர நூல்களும் இயற்றப்பட்டன.

நாயக்கர் ஆட்சிபற்றி விஜய விலாச காவியம், சாகித்ய ரத்னாகர காவியம் முதலியன சொல்கின்றன.

 

 

கி.பி. 1614 முதல் அரசாண்ட தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கர்

பாரிஜாதஹரணம்

நளாப்யுதயம்

அச்சுதாப்பியுதயம்

ராமாயண ஸார சங்கிரஹம்

மஹாபாரத ஸார சங்ரஹம்

 

முதலிய பல கிரந்தஙளை தாமே இயற்றினார்.

 

ரகுநாத நாயக்கர து ஆட்சிக்கால அமைச்சர்கள் எல்லோரும் பெரிய வித்வான்கள். சம்ஸ்கிருதத்தில் காவியம் எழுதிப் புகழ்பெற்ற  கவிஞர்கள்.

 

சீனிவாச தீட்சிதர்

இவர் பாரதம் முழுதும் புகழ் பெற்ற பண்டிதர். பாஷ்யக்காரர் என்று பெயர்பெற்ற பவஸ்வாமி பட்டரின் ஆறவாது தலைமு றை யில் வந்தவர்.

அவர் வட ஆற்காடு ஜில்லா சத்திய மங்கலத்தில் பிறந்தார். அக்கால அரசர்,  அவரைப் பார்த்து வானத்திலுள்ள ஜோதியை வருணிக்கச் சொல்ல,உடனே அவர் “சந்தியாசந்து…………….” என்ற சம்ஸ்கிருத கவியைப் பாடினார். “உதய கிரி, அஸ்த கிரி என்ற இரு வீரர்கள் போரிட்டனர். மேகங்கள் எனும் பீரங்கிகள்  செவ்வானத்தை உண்டாக்கின. அவைகளிலிருந்து நட்சத்திரங்கள் என்னும் குண்டுகள் வெளி வந்தன. அவ் வீரர்கள் இருவரும், இந்தக் குண்டுகள் மேலே படாமல் பிடித்த கேடயங்களே சந்திரனும் சூரியனும். இதோ பாருங்கள் சந்திரனையும் சூரியனையும்” — என்று காட்டினாராம்..

இதைத் தொடர்ந்து அவருக்கு இரத்தின “கேடய” தீட்சிதர் என்ற பட்டத்தை மன்னர் வழங்கினார்.

அவர் பாவனா புரு ஷோத்தமம் முதலிய 18 நாடகங்களையும், சதகண்ட விஜயம் முதலாக 60 காவியங்களையும், சாஹித்ய சஞ்சீவினி, ரசாஸ்ரவம் முதலிய அலங்கார கிரந்தங்களையும், வேதாந்த ரத்னாவளி, வரத தாராவளி, மணிதருப்பணம், அத்துவைத கௌஸ்துபம், விதிநிர்ணயம், சர்வ சமய சர்வஸ்வம், ஸ்மிருதி ரத்னப் ரதீபம், ஹஸ்தபங்கம் முதலிய வியாக்கியானக் கிரந்தங்களையும், தத்துவாவ போதம், பரிசுத்தி முதலிய சாஸ்திரக் கிரந்தங்களையும் இயற்றினார்.

 

அவருக்கு கேசவ தீட்சிதர், அர்த்தநாரீசுவர தீட்சிதர் , ராஜசூடாமணி தீட்சிதர் என்று மூன்று புதல்வர்கள். ராஜசூடாமணி தீட்சிதர் சிறு வயதாயிருக்கும்போது அவரது தந்தை தேக வியோகம் அடைந்தார்.

 

 

ராஜசூடாமணி தீட்சிதர்

புகழ்பெற்ற ராஜசூடாமணி தீட்சிதர் ருக்மிணி பரிணயம் என்ற நூலை எழுதினார். கம்சத்வம்சனம், காந்திமத்தியுபமயம், சங்கராப்யுதயம்,  ரத்ன கேட விஜயம் முதலிய காவியங்களும், கமலினீகளஹம்சம், ஆனந்தராகவம் முதலிய நாடகங்களும், சித்திரமஞ்சரி, சிங்காரசர்வஸ்வம்,முதலிய நூல்களும், காவியதர்பணம், அலங்காரசூடாமணி, சாஹித்ய சாம்ராஜ்யம் முதலிய அலங்கார கிரந்தங்களும், தந்திர சிகாமணி, சங்கர்ஷமுக்தாவளி, நியாய சூடாமணி,முதலிய சாஸ்திரக் க்ரந்தங்களும் இவரால் இயற்றப்பட்டன.

 

கோவிந்த தீட்சிதர்  

இவர் அச்சுதப்ப நாயக்கர் காலத்திலும் ரகுநாத நாயக்கர் காலத்திலும் அமைச்சராக இருந்தவர். ஹரிவம்ச ஸார சரித்திரம் என்னும் 23 சர்கங்களடங்கிய ஒரு காவியம் படைத்திருக்கிறார்.

அந்தக் காவியத்திற்கு அப்பய்ய தீட்சிதர் எழுதிய ஒரு வியாக்கியானமிருக்கிறது

அவர் பெரிய இசைமேதை; சங்கீத ஸுதாந்தி என்ற ஒரு நூலும் செய்திருக்கிறார்.

 

யக்ஞநாராயண தீட்சிதர்

கோவிந்த தீட்சிதரது மூத்த புதல்வர் யக்ஞநாராயண தீட்சிதர்.

அவருக்கு அரசரிட்ட பெயர் ராஜசூடாமணி தீட்சிதர்.

சாகித்ய ரத்னாகர காவியம்

ரகுநாத பூப விஜயம்

ரகுநாத விலாச நாடகம் முதலியன இவர் எழுதிய நூல்கள்.

 

சாகித்ய ரத்னாகார காவியத்தில், இப்பொழுது 16 சர்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

தீட்சிதர், மன்னர் ரகுநாத நாயக்கரைவிட வயதில் சிறியவர் என்றும், அவர் கால சரித்திரம் பற்றி இக்காவியங்களில் சொல்லப்பட்டிருக்கி றதென்றும் தெரிகிறது.

 

வேங்கடேசுவர தீட்சிதர்

இவர் யக்ஞ நாராயண தீட்சிதரின் சகோதரர். அவரிடம் கல்வி கற்றவர். இவர் இயற்றிய நூல்கள்: 1.சதுர் தண்டிப் ப்ரகாசிகை; இது சங்கீதம் பற்றியது. 2.வார்த்திகாபரணம். இவர் 1638 ஆம் ஆண்டு நீலகண்ட விஜய சம்பூ காவியம் செய்த நீலகண்ட தீட்சிதருக்கு ஆசிரியர்.

சம்ஸ்கிருதம் இறந்துபோன மொழி என்று  யாராவது சொன்னால் அவர்களுக்கு இதையெல்லாம் எடுத்துக் காட்டுவோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சம்ஸ்கிருதத்தில் இயற்றிய சம்ஸ்கிருதக் கவிதை/ பாடல் ஐ,நா. சபையில் திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி  மூலம் ஒலித்ததையும் சுட்டிக்காட்டுவோம்.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க இந்து மதம்!!

 

–Subham–

‘அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!’ (Post No.3764)

DAVID HAND

Written by S NAGARAJAN

 

Date: 28 March 2017

 

Time uploaded in London:-  6-42 am

 

 

Post No.3764

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பாக்யா 17-3-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆராய்ந்து பார்த்தால் அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல என்று கூறும் நிபுணர்!

BY ச.நாகராஜன்

 

 

“உனது வாழ்க்கையை வாழ இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று எதுவுமே அற்புதம் இல்லை என்று வாழ்வது. இன்னொன்று எல்லாமே அற்புதங்கள் தான் என்பது போல வாழ்வது!” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 

      வாழ்க்கையில் நாம் அற்புதங்கள் என்று சொல்பவை எல்லாம் அற்புதங்களே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் ஒரு புள்ளி விவர நிபுணர்.

 

     ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு அற்புதம் மாதம் ஒரு தடவையாவது நிகழ்கிறது என்பது அவரது வாதம்.

 

   டேவிட் ஜே. ஹாண்ட் (David J Hand)  என்ற அந்த நிபுணர் எழுதிய புத்தகத்தின் பெயர் ‘தி இம்ப்ராபபிலிடி பிரின்ஸிபிள்’ (The Improbability Principle – Why coincidences, Miracles and Rare Events  Happen Every Day)

     Probability என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நிகழ் வாய்ப்பு’ என்பது பொருள். இதற்கு எதிர்மாறாக நிகழ வாய்ப்பே இல்லாத நிலை நிகழ்வதற்கும் கூட ஒரு  கொள்கை இருக்கிறது ; இதன் படி பார்த்தால் எதுவுமே அற்புதம் இல்லை என்பது ஹாண்டின் கொள்கை.

 

 

      ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். பிரிட்டனில் டார்லிங்டனில் ஹில்டா சாலையில் வாழ்ந்த எண்பது வயதான ஃப்ராங்க் ஹ்யூஸ் என்பவர் இறந்து விட்டார் என்ற செய்தியை செய்தித்தாளில் பார்த்த அவரது நண்பர்கள் அனைவரும அவருக்காக நடந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு சென்று ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தனர்; அவ்ர் நினைவை போற்றிப் பேசினர். அவர் ஒரு டிரைவராகப் பணியாற்றியவர்.

 

 

     ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அவர்கள் இரங்கல் தெரிவித்த அந்த் ஹ்யூஸ் கொஞ்ச தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அனைவரும் விக்கித்து நின்றனர்.

செய்தித்தாளில் வெளி வந்த ஃப்ராங்க் ஹ்யூஸ்  என்பவர் இன்னொரு நபர். அவர் கடல் வழியில் சென்று அடிக்கடி வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி. அதனால் தான் இரங்கல் கூட்டத்தில் தமக்கு அறிமுகமாகாத ஏராளமான நபர்கள் இருந்தபோதும் கூட குடும்பத்தினர் அதைக் கண்டுகொள்ளவில்லை.

 

 

     இதே போல ஆங்கிலத்தில் விற்பன்னரான சாமுவேல் ஜான்ஸனுக்கு ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் நிர்வாகம் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. ஆனால் அதே அழைப்பு இன்னொரு சாமுவேல் ஜான்ஸனுக்கும் விடுக்கப்பட்டிருந்தது. அவர் செயிண்ட் மார்டின் பீல்டின் நூலகராக வேலை பார்த்த ஒருவர். ஆனால் இருவரும் புத்தகத்தை மொழிபெயர்க்கவில்லை என்பது வேறு விஷயம்!

 

 

     இப்படி நம்ப முடியாத தற்செயல் ஒற்றுமைகள் ஏராளம் ஏற்படுவதை அன்றாட வாழ்வில் நாம் காண்கிறோம். அதை அற்புத சம்பவம் என்று சொல்கிறோம்.

 CO INCIDENCE

     லாட்டரியில் ஒரு எண் தொடர்ந்து இரு முறை விழுவது, ஒரே நபரின் மீது இரு முறை இடி விழுவது, அடிக்கடி ஒருவரே லாட்டரி பிரைஸில் வெல்வது போன்றவை எல்லாம் இந்த ரகம் தான்!

 

 

     பிரம்மாண்டமான உலகில் ‘இதெல்லாம் சகஜம்ப்பா” என்று ஹாண்ட் கூறுவதற்கு ஐந்து விதிகளை முன் வைக்கிறார்.

நியூட்டனின் நகர்தல் பற்றிய மூன்று விதிகள் போல இவையும் உண்மை தான் என்பது அவரது வாதம்.

 

 

    1)தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தே தீரும் என்ற விதி 2) மிக பிரம்மாண்டமான நம்பர்களின் அடிப்படையிலான விதி 3) தேர்வு செய்வதிலான விதி 4) நிகழக்கூடியவையே என்பது பற்றிய விதி 5) இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் என்ற விதி ஆகிய ஐந்து விதிகளில் ஒவ்வொரு அற்புதத்தையும் உரசிப் பார்த்தால் அற்புதம் என்று ஆச்சரியப்பட ஒன்றுமே இருக்காது என்கிறார் ஹாண்ட்.

 

 

     தன் சொந்த அனுபவத்தின் மூலம் இந்த விதிகளை அவர் விளக்குகிறார்.

 

 

    2012ஆம் ஆண்டு அவர் பிரிட்டனில் டெல்போர்டில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போது ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனக்கென ஒரு அறையைப் பதிவு செய்தார்.

 

    ரிஸப்ஷனில் இருந்த பெண்மணி சற்று திகைத்தார். இப்போது தானே டேவிட் ஹாண்ட் என்று அறையை ‘புக்’ செய்தேன், அவர் உள்ளே இருக்கிறாரே என்று குழப்பத்துடன் வினவினார்.

 

    ஹாண்டும் சற்று திகைத்துப் போனார். ஆனால் சரி பார்த்ததில் உள்ளே இருந்தவர் இன்னொரு டேவிட் ஹாண்ட். இது எப்படி சாத்தியம்? இங்கு தான் அவரது ‘ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் இரண்டு சம்பவம் வரலாம்’ என்ற விதி வருகிறது.     

 

 

    ஒரு ஹோட்டலில் 400 பேர் அறையை பதிவு செய்வதாக கணக்கில் எடுத்துக் கொண்டு ஹாண்ட் வருடம் 20 முறை ஹோட்டலில் அறையைப் பதிவு செய்யும் வழக்க்ம் உடையவர் என்பதையும் கணக்கில் கொண்டால் ரிஸப்ஷனில் இருக்கும் பெண்மணிக்கு 8000 வாய்ப்புகள் ஒப்பிடுவதற்கு கிடைக்கின்றன. ஒரு வருடத்தில் ஹாண்ட் சந்திக்கும் நபர்களை விட இந்த எண்ணிக்கை  மிக அதிகமானது என்பதால் இப்படி ஒரே பெயரில் ஒரு ஹோட்டலில் இரு நபர்கள் இருப்பது சாத்தியம் தான் என்று ஆகிறது.

 

 

    திடீரென இப்படி ஒரே ஒரு சம்பவத்தைப் பார்த்து வியக்காமல் உலகில் உள்ள ஹோட்டல்களில் எல்லாம் எந்தப் பெயரில் எத்தனை பேர் தங்குகின்றனர் என்று பார்த்தால் இதை விட ஆச்சரியகரமான தற்செயல் ஒற்றுமைகளை நிறையக் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஹாண்ட்.

 

 

     ஜனத்தொகையில் 50000 பேர்கள் ஒரே பெய்ரைக் கொண்டிருந்தால் அவர்களில் 263 முறை ஹோட்டலில் அறையை பதிவு செய்தால் நிச்சயமாக இரு முறை ஒரே பெயரைக் கொண்டவர்கள் ஒரே ஹோட்டலில் இருப்பார்கள் என்கிறது அவரது புள்ளி விவர ஆய்வு.

 

    அற்புதங்களை நம்புபவர்களுக்கு இந்த ஆய்வு சற்று ஏமாற்றத்தைத் தருவது உண்மை. அவர்கள் தரப்பு வாதம் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்

 

 freud

     

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

     சைக்கோஅனாலிஸிஸின் தந்தை என்று புகழப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட் மனிதர்களுக்கு ஏற்படும் விதவிதமான் போபியாக்களைப் பற்றி – பல்வேறு பயங்களைப் பற்றி -விளக்கியுள்ளார்.

 

 

ஆனால் அவருக்கே இரண்டு போபியாக்கள் உண்டு. ஒன்று fern என்னும் ஒருவகை தாவரத்தைப் பற்றிய பயம். எதற்காக இந்த வகைச் செடியின் மீது பயம் வருகிறது என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

 

 

இன்னொரு பயம் ஆயுதங்களைப் பற்றியது. ஆயுதங்களைப் பற்றிய பயமானது உணர்ச்சி மற்றும் செக்ஸில் பக்குவமான முதிர்ச்சி அடைந்தவர்க்கு ஏற்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

 

அவருக்கு weapons  – ஆயுதம் என்றாலும் பயம்  fern – ஃபெர்ன் என்ற செடி என்றாலும் பயம்!

 

ஆயுதங்களைப் பற்றிய பயத்திற்கு HOPLOPHOBIA என்று பெயர்.

ஃபெர்ன் பற்றிய பயத்திற்கு PTERIDOPHOBIA என்று பெயர்

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட போபியாக்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போபியா இருக்கிறது!

 

 CZR 19 kc Freud

 –subham–