ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் (Post No.3477)

Written by S NAGARAJAN

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:- 4-55 am

 

Post No.3477

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாரதி இயல்

 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள்

 

ச.நாகராஜன்

 

 

ஏ.கே. செட்டியார்

 

திரு ஏ.கே. செட்டியார் உலகம் சுற்றிய தமிழர். நேதாஜியைப் பற்றிய அழகிய திரைப்படம் (டாகுமெண்டரி) தயாரித்தவர். சிறந்த தமிழ் ஆர்வலர்.பழமையைப் போற்றுபவர். பாதுகாப்பவர்.

 

 

நட்புக்கு முதலிடம் தருபவர்.

 

குமரி மலர் என்ற மாதப் பத்திரிகையை சென்னையைத் தலமையிடமாகக் கொண்டு நடத்தி வந்தார்.

பத்திரிகை பக்க அளவில் சிறிது என்றாலும் உள்ளிருக்கும் விஷயங்கள் மிக கனமானவை. தேடித் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டவை. இதரர்களால் சுலபமாக அணுக முடியாத அற்புத விஷயங்களைக் கொண்டவை.

சிறந்த குணநலன்களைக் கொண்ட இவர் முகம் எப்போதும் புன் முறுவல் பூத்தபடியே இருக்கும்.

 

 

எனது தந்தையார் (மதுரைப் பதிப்பு – தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம்) அவர்களின் நெருங்கிய நண்பர். குமரி மலரின் சந்தா தொகை மிக அற்பமான ஒரு தொகை. அதை வசூல் செய்வதற்காக, தன்னுடைய சொந்தப் பணத்தில் பெரிய தொகையைச் செலவழித்துக் கொண்டு, நேரில் வருவார். நண்பர்களைப் பார்க்க இது ஒரு வாய்ப்பு என்று கருதியே வீடு வீடாகச் செல்வார்.

 

மதுரையில் எங்கள் வீட்டில் இவர் வரும் போது சுடச்சுட இட்லியில் தேன் விட்டுச் சாப்பிடுவார். இவரது உயரிய டேஸ்டே தனி!

 

பின்னர் டிவிஎஸ் ஸ்தாபகர் திரு சுந்தரம் ஐயங்காரின் மகனான திரு ராஜம் அவர்களின் மகன் திரு ஆர். ராமச்சந்திரன் அவர்களை (மதுரை ஆர்.ஆர்) சென்று பார்ப்பார். இப்படி அனைத்து நண்பர்களைப் பார்ப்பதுடன் பழைய கால பத்திரிகைகளைத் தேடும் பணியும் கூடவே நடக்கும். மதுரை பிரம்மஞான சபையில் அபூர்வமான இதழ்கள் கிடைக்கும். எனது ஆசிரியரும் பாரதியின் அணுக்க பக்தருமான திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள் இப்படிப்பட்ட அரிய விஷயங்களைத் தரும் பத்திரிகைகளை இனம் காண்பிப்பார்.

 

ஆக, இப்படி ஊர் ஊராகச் சென்று பழைய இதழ்களைத் தேடி அதில் வியக்கத்தக்க செய்திகளை இனம் கண்டு எடுத்து தொகுத்து குமரி மலரில் பிரசுரிப்பார்.

 

குமரி மலரின் பழைய இதழ்கள் ஒரு பொக்கிஷம். பாரதி அன்பர்களுக்கோ அது ஒரு அபூர்வமான வர பிரசாதம்.

ஏராளமான பாரதியார் கட்டுரைகளையும், பாரதியார் பற்றி பல நண்பர்கள், பாரதியாரோடு பழகியவர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும் பழைய இதழ்களில் காணலாம்.

 

 

இவற்றில் சில புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டதுண்டு.

தமிழ்நாடு என்ற ஏ.கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள் அடங்கிய நூலில் பாரதியார் சுதேசமித்திரன் 1919 ஜனவரி மாத இதழில் எழுதிய பாபநாசம் என்ற கட்டுரையை அவர் வெளியிட்டார். அதை பாரதி ஆர்வலர் திரு ரா.அ.பத்மநாபன் தான் தொகுத்த பாரதி புதையல் – மூன்றாம் தொகுதியில் வெளியிட்டுள்ளார்.

 

 

ஏ.கே. செட்டியார் குமரி மலர் நவம்பர் 1971 இதழில் பாரதியார் சக்திதாஸன் என்ற பெயரில் எழுதிய விநோதச் செய்திகள் என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதையும் பாரதி புதையல் மூன்றாம் தொகுதியில் பார்க்கலாம்.

பாரதியார் பற்றியும் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் பற்றியும் வெளியாகியுள்ள அனைத்து குமரி மலர் கட்டுரைகளையும் தொகுத்தால் அதுவே ஒரு சிறந்த புத்தகமாக அமையும்.

 

 

சில குமரி மலர் கட்டுரைகளை மட்டும் இங்கு காணலாம்:

  • அர்ச்சுனன் புலம்பல் என்ற பாரதியார் கவிதை – பரலி சு.நெல்லையப்பர் தினமணி சுடர் 10-9-1967 இதழில் வெளியிட்டது – (செப்டம்பர் 1973 குமரி மலர் இதழ்)
  • பாரதியாரும் தமிழும் – இளசை மணியன் வெளியிட்ட பாரதி தரிசனம் என்ற நூலி வெளியான கட்டுரை (ஜ்னவரி 1975 இதழ்)
  • மது பானம் – சி.சுப்பிரமணிய பாரதி (1909)
  • இராமதாஸ் ஸ்வாமிகள் கோட்டை – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
  • மௌனத்தின் வலிமை – பாரதியாரின் சக்ரவர்த்தினி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. பாரதியாரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்ற அனுமானம் தெரிவிக்கப்படுகிறது.
  • பட்டினத்துப் பிள்ளையின் சரித்திரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1906)
  • திருவல்லிக்கேணியில்ப் பொதுக்கூட்டம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
  • இறவாமை – சி.சுப்பிரமணிய பாரதி
  • பாரதியாரின் இந்தியா – இந்தியா இதழில் வெளியான 7 கட்டுரைகள்
  • பாரதியாரின் கர்மயோகி – கர்மயோகி இதழில் வெளியான 3 கட்டுரைகள்
  • பாரதியார் நூல்கள் மதிப்புரை – சுவதேச கீதங்கள் (1907) பாரதியாரின் கவிதைத் தொகுப்பிற்கு மதுரையிலிருந்து வெளியான் செந்தமிழ் பத்திரிகை தந்த மதிப்புரை

 

மதிப்புரையில் ஒரு வரி:-

“இயற்கையில் இனிய கவிகள் பாட வல்ல பாரதியார் தம் சக்தியை இத்தகைய புது வழியில் திருப்பி உபயோகப்படுத்தியிருப்பது நம்மவர்க்கு ஒரு நல்ல வழியைக் கற்பிக்கின்றது.”

 

 

  • பாஞ்சாலி சபதம் (1913) நூலுக்கு ஞானபாநு மாதப் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.சுப்ரமணிய சிவா தந்துள்ள மதிப்புரை

மதிப்புரையில் ஒரு வரி:-

பாஷாபிமானிகளும் தேசாபிமானிகளும் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது. விலை அணா எட்டு. தபாற் செலவு வேறு. வேண்டியவர்கள் நமது ஆபீசுக்கேனும் அல்லது பிரஹ்ம ஸ்ரீ ஸி.சுப்பிரமணிய பாரதியவர்கள், புதுச்சேரி யென்ற விலாசத்திற்கேனும் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

          சென்னை நவம்பர் 1913

 

 

  • புதுச்சேரி பற்றிய கவிதை – பாரதியார் வாழ்ந்த ஊர் பற்றிய வெண்பா (எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை)

பாரதி வாழ்ந்த ஊர்; பண்பார்ந்த செந்தமிழின்

சீரதிகம் பெற்றுச் சிறந்த ஊர் – கார்கடலின்                        ஓசை முழங்கும் ஊர்; ஒய்யாரமான ஊர்,                         வாசம் வளர்ப் புதுவை நகர்

 

 

  குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகளின் தலைப்புகளை அடுத்து காண்போம்

****

 

                                             

Kalidasa and Tamil Poets on God! (Post No.3476)

Written by London swaminathan

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 18-23

 

Post No.3476

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Kalidasa, the greatest poet of India, believed in the concept of One God. Like every Hindu, he also worshipped him in various forms through his poems and yet he made it very clear that God is one echoing the thought of the Rig Vedic seer: Ekam sat vipraa: Bahuta vadanti.He refers to all the important gods and goddesses in his seven works; His list includes Brahma, Vishnu, Siva and Vedic Gods Indra, Agni, Yama, Tvastra, Rudra, Surya, Prajapati,Varuna, Kubera, Kartikeya and Goddesses Kali, Lakshmi, Sarasvati, Uma, Sapta Mata and demi gods.

 

After referring to various Gods in various places in his works, he says:

Siva is divided threefold (Brahma, Vishnu and Siva) which points to Monism.

“May the Eternal One who is attainable by firm faith and meditation; who is hailed as the Supreme Spirit in the Vedanta, who pervades and is present in the whole of heaven and earth; to whom alone the name of Lord, not signifying any other being, is properly applied; and who is sought within themselves by those desirous of salvation by restraining the vital breaths, Prana and others, bestow upon you the highest bliss (Vikramorvasia 1-1)

The two other plays of Kalidasa open with similar benedictory stanzas in praise of Shiva.  The Raghuvamsa too opens with a salutation to Shiva. In the Megaduta and Kumarasambhava also, we come across several appreciative references to Siva (This shows he lived long before the Gupta Kings who were Parama Bhagavatas (Worshippers of Vishnu).

All these show that he was a great devotee of Lord Siva. But we must remember that he praised Brahma and Vishnu as well.

 

In Kumarasambhava (7-44), he praised Siva as: “That was but one form which divided itself in three ways. Their seniority or juniority is common (interchangeable); sometimes Siva is prior to Vishnu or Vishnu to Siva; sometimes Brahma to them both; and sometimes the two to Brahma”.

This sloka shows his understanding of oneness. People of his days believed in such oneness. That is why he makes a passing remark in the middle of the Kavya without much empahsis.

 

In the Sakuntala (1-1) he praised Siva as follows:-

“The First Creation of the Creator;

The Bearer of oblations offered with Holy Rites;

That one who utters the Holy Chants;

Those two that order Time;

That which extends, World-Pervading

in which sound flows impinging on the ear;

That which is proclaimed the Universal Womb of Seeds;

That which fills all forms that that breathe with the Breath of Life.

May the Supreme Lord of the Universe

who stands revealed in these Eight Forms

perceptible preserve you.

The most popular prayer of Kalidasa in the Raghuvamsa is taught to every child on the very first day when they go to learn Sanskrit:-

 

Vagarthaviva sampriktau vagarthah pratipattaye | Jagatah pitarau vande parvathiparameshwarau || – Raghuvamsha 1.1

 

 

I pray to the parents of the world, Lord Shiva and Mother Parvathi, who are inseparable as word and its meaning to gain knowledge of speech and its meaning.

 

 

Tamils followed Kalidasa

Tamils also followed Kalidasa. Sangam Literature which was nearly 2000 year old has more praise for Shiva in the Prayer. These prayers were added when they compiled the anthology in the fourth or fifth century CE, that is after Kalidasa who lived in the First Century BCE. Purananauru, Akananauru, Ainkurunuru, Pathtrupathu and Kalitokai beging with an invocation to Lord Siva. Kuruntokai has a prayer for Lord Skanda and Natrinai has a Vishnu Sahasranama Sloka (in Tamil) as its prayer. Paripatal begins with a poem on Lord Vishnu and Pathupattu begins with a poem on Lord Skanda (Murugan in Tamil). Most of the prayer songs were done by on Mr Mahadevan who translated Mahabharata in Tamil. His name in tamil is Bharatam Patiya Perunthevan (Mahadevan who sand Bharata).

 

Since Sangam period Tamil Poets used over 200 similes of Kalidasa (out of 1200) ,Kalidasa must have lived in first century BCE or earlier (Please see my research paper written a few years ago and posted here).

–Subham–

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post No. 3475)

Written by London swaminathan

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 8-27 AM

 

Post No.3475

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் என்ன? ஒரே புதிர்! இருந்தபோதிலும் அப்பர் நரி-பரி ஆன லீலையைக் குறிப்பிடுவதால் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. (நான் சில ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய எனது ஆய்வுக் கட்டுரையில் மேலும் பல சான்றுகளைக் கொடுத்துள்ளேன்).

 

 

அது சரி! அப்படியானால் இவர் ஏன் அப்பரையும் சம்பந்தரையும் குறிப்பிடவில்லை. அவர்கள் ஏன் இவர் பெயரைச் சொல்லவில்லை? ஒரே மர்மம்

 

அது போகட்டும்? இவரை 63 நாயன்மார்களில் சேர்க்காதது ஏன்? ஒரே புதிர்! திருத் தொண்டத்தொகையிலும் பாடவில்லை ( ஆனால் நான் இவர் பெயர் சத்ய வாகீஸ்வரர் என்று கண்டுபிடித்துள்ளேன்; அதை பொய்யடிமை இலாத புலவர் என்று திருத்தொண்டத் தொகையும் குறிப்பிடும்)

 

எனினும் எல்லோரும் அவர் பெயரை எங்குமே சொல்லாமல் திருவாதவூரர் என்றும் இறைவன் கொடுத்த மாணிக்க வாசகர் என்ற பெயரையுமே பயன்படுத்துகின்றனர். அப்பா, அம்மா வைத்த பெயர் என்ன என்பது எழுத்தில் எங்ஙனும் இல்லை. மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் திருவாதவூரில் பிறந்ததால் ஊர்ப்பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது.

 

 

சரி, பெயர்தான் தெரியவில்லை. சத்யவாகீஸ்வரன் என்பதெல்லாம் ஊகமே. கடவுள் ஏன் இவரை “மாணிக்க வாசக” என்று அழைத்தார்?

 

இவர் பாடிய 656 பாடல்களில், 3000 வரிகளுக்கு மேலுள்ள திருவாசகத்தில் அருமையான சொற்பிரயோகம் இருப்பதை தமிழ் ஆர்வலர் எல்லோரும் ரசிப்பர். ஒரு சில சொற்களை மட்டும் காண்போம்.

 

இரும்பின் பாவை

நம் எல்லோருக்கும் மரப்பாவை (மரப்பாச்சி), மண் பொம்மைகள் (சுதை) தெரியும். பார்த்து இருக்கிறோம். பஞ்சலோக விக்ரஹம் எனப்படும் ஐம்பொன் சிலைகளும் தெரியும். பாவை விளக்கு போன்ற பித்தளை பொம்மைகளையும் பார்த்து இருக்கிறோம். இவரோ தன்னை “இரும்பின் பாவை” என்று சொல்லுகிறார். யாருக்கும் இல்லாத ஒரு கற்பனை! இதற்கு உரை எழுதிய ஆன்றோர், இறைவன் காந்தம் என்றும் அவரால் இவர் கவர்ந்திழுக்கப்பட்டதால் இரும்பின் பாவை என்றும் சொல்லுகிறார் என்பர். மிகப் பெருத்தமகவே தோன்றுகிறது. ஏனெனில் இரும்பு-காந்த உவமையை காளிதாசன், திருமூலர், ஆதிசங்கரர் போன்ற பலரும் பயனன்படுத்தியுள்ளனர்.

 

 

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல

இனையனானென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம்பிரானாய் இரும்பின் பாவை

அனைய நான் பாடேனின் றாடே நந்தோ

அலறிடேன், உலறிடேன் ஆவி சோரேன்

முனைவனே முறையோ நானானவாறு

முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே

 

பொருள்:

கடவுளே! தோற்றம், இறுதிக்குக் காரணமானவனே! இருவினைக் குவியலில் கிடந்து வருந்தும் என்னை வலிய ஆட்கொண்டு, ” வா, உன் வினைகளை ஒழிப்பேன் என்று கூறுவது போல சொல்லி என்னை அடிமையாக ஏற்றாய்.  நானோ இரும்பின் பாவை போல இருக்கிறேன். உன்னைப் பாடவில்லை; ஆடவில்லை; வாய் உலரவில்லை;  உயிர் மயங்கவில்லை. நான் இப்படி இருப்பது முறையா? இதன் முடிவை அடியேன் அறிகின்றேன். இல்லை

 

பொல்லாமணி

புகவேதகேன் உனக்கன்பருள்

யானென் பொல்லா மணியே

தவே யெனை யுனக் காட்கொண்ட

தன்மையெப்புன்மையரை

மிகவேயுயர்த்திவிண் நோரைப்

பணித்தியண்ணாவமுதே

நகவேதகும் எம்பிரான் என்னை

நீ செய்த நாடகமே

–திருச்சதகம் பாடல் 10, திருவாசகம்

பொருள்:

என் முழு மாணிக்கமே! யான் உன் அடியார் கூட்டத்தில் புகவே தகுதி இல்லாதவன். அங்கனம் இருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாய்? இது உனக்கு பெருமை தருமா? எவ்வளவு இழிந்தவரானாலும் அவர்களை  மிகவும் உயரச் செய்கிறாய். உயர்ந்த தேவர்களைத் தாழ்த்துகிறாய். தந்தையே! அமுதமே! எம்பிரானே! நீ செய்த நாடகம் தான் என்ன? இது நகைப்புக்கு இடம் தருகிறதே!

 

இதில் பொல்லாமணி என்ற சொல் மிகவும் முக்கியமானது. பொள்ளல் என்றால் துளைபோடுதல் என்று பெயர். முத்து, பவளம் போன்ற நவரத்னங்களை மாலையாகக் கட்டுகையில் அதில் துளைபோட்டுக் கோர்க்கமுடியும். ஆனால் வைரம், மாணிக்கம், மரகதம் போன்ற உயர்ந்த ரத்னக் கற்களைத் துளையிட முடியாது; அதாவது பொள்ள முடியாது. ஆகையால் இறைவா நீ ஒரு முழு மாணிக்கம். (இதைத் தங்கத்துக்கிடையே வைத்துதான் மாலை கட்டலாமே தவிர ஓட்டை போட முடியாது. ஆகையால் பொல்லா மணியே என்றழைக்கிறார்.)

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

பொருள்:-

ஓம் நமச்சிவாய போற்றி. பாம்பை அணிந்தவனே மயங்குகின்றேன். ஓம் நமச்சிவாய போற்றி. அடைக்கலம் புகுவதற்கு வேறு வழியொன்றும் இல்லை. ஓம் நமச்சிவாய போற்றி. அடியேனைப் புறத்தே தள்ளிவிடாதே; ஓம் நமச்சிவாய போற்றி. ஜய ஜய போற்றி

 

இதில் ஓம் நமச்சிவாய என்ற பிரணவ பஞ்சாக்ஷரம் நான்கு முறை வந்திருத்தல் காண்க.

 

வேதங்களைப் போலவே ஓம்காரத்துடன் துவங்கி அதிலேயே முடிக்க வேண்டும் என்று கருதி திருவாசகத்தில் முதல்பாட்டையும் (சிவ புராணம்), கடைசி பாட்டையும் (அச்சோ பதிகம்) ஓம்காரத்துடன் அமை த்துள்ளார் என்பதை முன்னரே ஓம்காரம் பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

 

இது போல இன்னும் நிறைய சொற்கள் உள்ளன. நேரம் கிடைத்தபோது பகிர்வேன்.

 

–சுபம்—

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2 (Post No. 3474)

Written by S NAGARAJAN

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 5-18 am

 

Post No.3474

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 16

 

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் இரண்டாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

 

                        ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

பரிபாடலின் இரண்டாம் பாடல் 76 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கீரந்தையார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நன்னாகனார். பாடல்  முழுவதும் திருமாலின் பெருமையைக் காணலாம்.

 

திருமாலின் பெருமையில் ஊழிகளின் தோற்றம், வராக கற்பம், திருமாலின் நிலைகள், திருமாலின் சிறப்பு, படைச் சிறப்பு, திருமாலின் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள், பல் புகழும் பரவலும் என பல அரிய செய்திகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

 

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த                    கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் (வரிகள் 24, 25)

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் என்று மாசில்லாத உயர்ந்த கொள்கையை உடைய முனிவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஆய்ந்தது கெடு இல் கேள்வி. கெடு இல் கேள்வி என்பதால் ஒரு பிழையும் தவறும் இல்லாதது உயர்ந்த வேதம் என்பது பெறப்படுகிறது. நடு ஆகுதலும் என்பதால் அந்த அற்புதமான வேதத்தின் நடுவாக உட்பொருளாக அமைபவன் திருமால் என்பது பெறப்படுகிறது.

 
சாயல் நினது, வான் நிறை-என்னும் 
நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே: 
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் 
எவ் வயினோயும் நீயே.  (வரிகள் 56 முதல் 60 முடிய)

 

 

சாயல் நினது, வான் நிறை  என்பதால் வானம் பொழிவது போன்று உனது அருள் ஒவ்வொருவரின் மீதும் பொழிகிறது என்கிறார் புலவர். நாவன்மை பொருந்திய அந்தணர் ஓதும் அருமறையின் – வேதத்தின் – பொருளே என்ற பொருளில் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே என திருமாலை இங்கு விளிக்கிறார் புலவர் பெருமான்.

அதுவும் அதற்கு மேலாகவும் இருப்பவன் நீ என்பதை அவ்வும் பிறவும் ஒத்தனை என்பதால் குறிப்பிடும் புலவர் உவ்வும் எவ்வயினோயும் நீயே என்பதால் நீயே இதர அனைத்துப் பொருள்களிலும் இருப்பவன் என்று முத்தாய்ப்பாகக் கூறி விடுகிறார்.

 
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் 
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா 
நின்னொடு புரைய 
அந்தணர் காணும் வரவு.  (வரிகள் 61 முதல் 68 முடிய)

 

 

இந்த வரிகளின் பொருள் :- நீயே வேதத்தின் சாரம். அந்தணர்களுக்கு, பசுக்கள் பிடிக்கப்பட்டு, ஜ்வாலை உள்ள அக்னியுடன் உள்ள ஹோமத்தில் உணவுகள் படைக்கப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் சடங்குகள் உள்ள வேதங்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களாய் இருப்பவன் நீயே. நம்பாதவர்கள் கூட நம்பி ஒப்புக் கொள்ளும்படி உடன்பட வைப்பவன் நீ.

 

அனைத்தும் அறிந்த புலவர் பிரான் திருமாலின் பெருமையை அருமையாகத் தக்க விதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகவே உன்னை தலை உற வனங்கினேம், உன்னை ஏத்தினேம், வாழ்த்தினேம் என்று பாடலை முடிக்கிறார்.

என்ன அற்புதமான் பாடல். ஆழ்ந்த பொருளைக் கொண்ட அற்புதமான சொற்கள்.

பல முறை படித்து மகிழ வேண்டிய அழகிய பரிபாடல் பாடல் இது!

*******

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Written by London swaminathan

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 10-26 AM

 

Post No.3473

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-

 

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்

கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்

கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்

டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதலந்தமில்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)

திருவாசகம் திருச்சதகம்

 

 

பொருள்:

கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம்  79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.

பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.

 

பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.

 

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.

 
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

 

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

 

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

 

இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.

 

–Subahm–

 

 

Churchill’s Moustache! More Rough and Ready Anecdotes (Post No. 3472)

Compiled by London swaminathan

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 8-13 AM

 

Post No.3472

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Did you call me X Y Z?
Chief Justice Marshall of the US Supreme Court related that Governor Giles of Virginia once addressed a note to Patrick Henry
“Sir, I understand that you have called me a “Bobtail politician “. I wish to know if it be true and, if true, your meaning” – W M Giles

Patrick Henry replied
“Sir, I do not recollect calling you a Bobtail politician at any time but think it probable I have. Not recollecting the time of the occasion, I can’t say what I did mean; but if you will tell me what you think I meant, I will say whether you are correct or not”.
Very Respectfully,
Patrick Henry

Xxx

 

Winston Churchill’s Moustache!

At that stage in his political career at which Winston Churchill switched over from the Conservative to the Liberal side of the house , many of his erstwhile adherents were sorely offended. A snappish young lady once told him playfully, “There are two things I don’t like about you, Mr Churchill.
“Yes”, he inquired.

“Your new politics and your new moustache”.
“My dear Madam, said Churchill coldly, you are not likely to come into much contact with either”.

Xxx

Shooting just for the Motion!

At Kentucky (USA) political meeting a certain participant in the debate was shot by the several of the others at the meeting. The event occurred on the open floor and created a considerable stir in the community .

A Northerner, who was in the town, asked an
acquaintance who had been present, why the shooting had occurred.
“He made a motion that was Out of order”, explained the Kentuckian.
Horrified at this excess of parliamentarianism ,
“You mean to tell me that they shot a man in cold blood on the floor of the meeting just for making a motion that was out of order!”
“Well, drawled his informant, the motion was toward his hip pocket ”

–SUBHAM–
 

Know Thyself first!(Post No.3471)

Written by S NAGARAJAN

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 6-10 am

 

Post No.3471

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

Know Thyself first!

 

Santhanam Nagarajan

 

It is very interesting to note that the world best teachers preach the same doctrine.

 

Know thyself first; everything follow suit!

 

This is the final teaching given by the sages of the past.

 

In Bhagavatam, the Hindu Scripture, there is an interesting dialogue take place between Sage Narada and Sanatkumara.

 

 

Narada asked Sage Sanatkumara to teach him.

 

Sanatkumara said : ‘Say what you know: I will say what you do not’

Narada said: ‘Lord, I know Rig Veda, Yajur Veda, Sama Veda, Atharvana Veda, history and tradition called the fifth Veda, grammer,  ritual, mathematics, astrology, mineralogy, logic, economics, physics, meta-physics, zoology, politics, astronomy, ,ecjamocs, fine arts.    ‘Lord, yet these things are but elementary knowledge; I do not know the Self. I have heard from masters, that he who knows Self, goes beyond sorrow, I am lost in sorrow. Help me to go beyond’.

 

So in order to go beyond sorrow one has to know oneself.

 

The same doctrine was emphasized by Socrates also.

 

Socrates asked the king Euthydemus, ‘Tell me, have you ever been to Delphi?’

 

“Yes, certainly, twice’ replied Euthydemus.

 

“And did you notice an inscription somewhere on the temple?’

 

“I did”.

 

“Did you possibly pay no regard to the inscription? Or did you give it heed, and try to discover who and what you were?’

 

“ I can safely say I did not’, he answered. That  must I made quite sure I new, at any rate; since if I did not know even myself, what in the world did I know?”

 

This easy supposition ruined Euthydemus.

 

Socrates always empahasised on his first commandment , ‘Know Thyself.’

 

According to Socratic discipline this first commandment promise the desired result.

 

The play of our intelligence is the beginning of wisdom. Any true admission of ignorance, the faintest consciousness of having been on the wrong path, can, form the starting-point f a truer method of search.

 

The sage of Arunachala, Ramana maharishi of Thiruvannaamalai, Tamilnadu, India also emphasized  to enquire oneself, Who am I? This enquiry of Who am I means  finding the source of ‘I’. When this is found, that which you seek is accomplished.

 

This means the ultimate goal of a human being is achieved.

 

Be it the teaching of Sanatkumara, or Socrates, or Ramana maharishi, the point is the same.

 

First one hast to enquire himself and find out Who he is.

 

The starting point is enquiry. Who am I?

 

If this is found, everything is accomplished. This is the great secret.

 

 

Published in www.ezinearticles..com

http://ezinearticles.com/?Know-Thyself-First&id=9600903

 

 

*******

நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470)

 

Written by London swaminathan

 

Date: 21 December 2016

 

Time uploaded in London:- 20-13

 

Post No.3470

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்துக்கள் கருணை மிகுந்தவர்கள்; குறிப்பாக செடி கொடிகளிடத்திலும் பறவை, விலங்குகளிடத்திலும் பேரன்பு கொண்டவர்கள். முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி மன்னன்; மயிலுக்குப் போர்வை ஈந்தான் பேகன் என்னும் மன்னன். சிவபெருமான் சுவீகார புத்ரனாக எடுத்த தேவதாரு மரத்துக்கு பார்வதி தங்கக் குடங்களிலிருந்து தண்ணீர் வார்த்தாள்; இது குமரக் கடவுளுக்கு அவள் தாய்ப்பால் கொடுத்தது போல இருந்தது என்று காளிதாசன் ரகு வம்சத்தில் (2-36/39) கூறுகிறான். மேகதூதம் என்னும் நூலில் தனது காதலி ஒரு மந்தார மரத்தை மகன் போல வளர்ப்பதைக் கண்டு வா என்று மேகத்திடம் யக்ஷன் கூறுவதாக கவி புனைந்துள்ளான்.

 

பாரதியாரோ “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று சொல்லிவிட்டு மலையையும் கடலையும் கூட தங்கள் கூட்டம் என்பார்.

சங்க இலக்கிய நூலான நற்றிணையில் ஒரு பெண் ஒரு புன்னை மரத்தை அன்போடு சகோதரி போலக் கருதி அதற்கு பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்த பாடல் உள்ளது (நற்றிணை 172).

 

சாகுந்தல காவியத்தில் சகுந்தலை என்ற கானகப் பெண் செடிகொடிகளுக்க்ப் பெயர் சூட்டுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் சாப்பிடப் பாகாமல் இருப்பது, ரிஷி முனிவர்கள் செடி கொடி மரங்களைப் புதல்வர்களாகப் பாவிப்பது ஆகியவற்றை காளிதாசன் பாடுகிறான்.

விஷ மரமானாலும் கூட மனிதர்கள் வெட்ட மாட்டார்கள் என்று காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் பாடுகிறான் (2-55).

இதையே மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் சொல்லுவது ஒப்பிடற்பாலது:

 

விச்சதின்றியே விளைவு செய்குவாய்

விண்ணு மண்ணக முழுதும் யாவையும்

வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்

புலையனேனையுன் கோயில் வாயிலிற்

பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்

குரியனாக்கினாய் தாம் வளர்த்ததோர்

நச்சு மாமரமாயினுங் கொலார்

நானும் அங்கனே யுடைய நாதனே

–திருச்சதகம், திருவாசகம், பாடல் 96

 

பொருள்:-

விதை இல்லாமலே செடிகொடிகளை வளரச் செய்பவன் நீ; விண்ணுலகம், மண்ணுலகம் ஆகியவற்றை நிலைபெறச் செய்து, உரிய காலத்தில் அவைகளை, அழிப்பவனும் நீயே; புலையனைப் போன்ற என்னையும் உன் கோவிலின் முன்னே வைத்துப் பித்தனாக்கினாய் —அடியார்களுக்கு உரியவானாக ஆக்கிவைத்தாய்.  உலகத்தார் தாமே வளர்த்த மாமரங்கள் நச்சுத்தனமை எய்தினாலும் கொல்ல மாட்டார்கள்— என்னை அடிமையாக உடைய தலைவனே! யானும் அத்தகையேன் ஆவேன்.

 

 

 

 

“மரம் சா மருந்தும் கொள்ளார்”– என்று தமிழ் நூல்கள் பகரும். மருந்தே வேண்டினும் அந்த மரம் சாகும் அளவுக்கு அதன் பட்டைகளைத் தோலுரிக்க மாட்டார்கள்.

 

மாணிக்க வாசகரும் காளிதாசனும் ஒரே கருத்தைப் பாடி இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை நிலவுவதற்கு எடுத்துக் காட்டு.

 

மரங்களை வெட்டாதே என்று காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலும் புறநானூற்றில் (57) வருகிறது:-

 

கடிமரம் தடிதல் ஓம்பு – நின்

நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாகவே– என்கிறார் புலவர்.

 

 

மரங்கள் வாழ்க! நச்சு மரங்களும் வாழ்க!!

Please read my earlier posts on Kalidasa:

1.Gem stones in Kalidasa and Tamil Sangam Literature

2.Holy River Ganges in Kalidasa and Sangam Tamil Literature

3.Gajalakshmi in Kalidasa and Sangam Tamil Literature

4.Sea in Kalidasa and Sangam Tamil Literature

  1. Bird Migration in Kalidasa and Tamil literature

6.Hindu Vahanas in Kalidasa and tamil literature

7.Amazing Statistics on Kalidasa

8.Kalidasa’s age: Tamil works confirm 1st Century BC

 

9.சங்கத்தமிழ் இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள்

  1. காளிதாசனின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்டு

11. Lord Shiva and Tamils adopted Trees! (Posted on 6 July 2013)

 

12. சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார புத்ரர்கள்! (Posted on 6 July 2013)

 

 

–Subham–

Rudeness Anecdotes (Post No.3469)

Compiled by London swaminathan

 

Date: 21 December 2016

 

Time uploaded in London:- 18-14

 

Post No.3469

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

The would -be wit found himself quietly put down several pegs when, at the dinner table, he held up his fork with a piece of meat upon it and asked his hostess,
“Is this pig?”
“To which end of the fork do you refer ?”, asked one of his fellow guests.

Xxx
I can’t remember your name
At a recent gathering of Hamilton college alumni, Alexander Woollcott was interrupted in the telling of a story by a former classmate, who said, “Hello Alex! You remember me, don’t you?”

Mr Woollcott shook his head,
“I can’t remember your name, but don’t tell me……” He then went on with his story.

Xxxx

Real Pearls and False Teeth!

At a stuffy English garden party, Beatrice Lilly, Lady Peel, wearing the Peel pearls, was approached by a lady of lineage who said maliciously,
“What lovely pearls, Beatrice, are they genuine?”
Miss Lillie nodded,
“Of course you can always tell by biting them” , she said.
“Here, let me see.”
“Gladly, said Lady Peel, preferring her jewels, but remember Duchess, you can’t tell real pearls with false teeth”.

Xxxx
 

“I simply can’t bear fools”.

One of Dorothy Parker’s more telling retorts was in answer to the snobbish young man who had been discoursing at some length at a party and had finally observed,
“I simply can’t bear fools”.
“How odd, was Miss Parker’s reply.
“Apparently your mother could”.

Xxxx

For deadly comments on deadly occasions Beatrice Lillie deserves some accolade.
“Don’t think it has been charming”, she said to her hostess when leaving a party, “because it has not” .
Xxx

 

Polished Brass!
Robert Hall being unsuccessful in securing the hand of a Miss Steel, while smarting under his disappointment, took tea with a company of ladies, one of whom, the lady of the house, said, in bad taste ,
“You are dull, Mr Hall, and we have no polished steel to brighten you”.
“O, madam, replied Hall, that is of no consequence; you have plenty of polished brass”.

Xxx

I never forget a Face, but……
A celebrity hound approached Groucho Marx at a party.
“You remember me, Mr Marx. We met at the Glynthwaites some months ago”.
“I never forget a face”, Groucho replied, “but I will make an exception in your case”.

Xxx
Against the charge of malice, Samuel Rogers defended himself thus:
“They tell me I say ill- natured things. I have a very weak voice; if I didn’t say ill- natured things no would hear what I said”.

Xxxx
When one of the town’s most important movie producers had his secretary call the late john Barrymore to invite him to a party, Barrymore politely murmured  into the telephone,
“I have a previous engagement which I shall make as soon as possible”.

Xxx

 

I am Herman Goering!

Herman Goering accompanied the Fuehrer on one of his visits to Rome. On the crowded railway platform filled with dignitaries and troops, the massive Marshal roughly jostled past an Italian gentleman of aristocratic bearing, who turned and haughtily demanded an apology. Fiercely the Marshal turned upon him and snapped,
“I am Herman Goering”. The Italian bowed and replied,
“As an excuse that is not enough, but as an explanation it is ample”.

 

–Subham–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 23 (Post No.3468)

Written by S NAGARAJAN

 

Date: 21 December 2016

 

Time uploaded in London:- 5-41 am

 

Post No.3468

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 23

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 83.

 

ஹுவா டிங் ஆலயம் இந்த வருடம் புதுப்பிக்கப்பட்டது. குன் மிங் ஏரிக்கு மேற்கே பி-ஜி என்ற பெயருடைய மலை ஒன்று உண்டு. இந்திய சக்கரவர்த்தியான பேரரசர் அசோகரின் இரண்டாம் மகன் அங்கு வந்தார். அவர் அந்த இடத்தில் மரகத பீனிக்ஸ் பறவைகளின் கூட்டத்தைப் பார்த்தார்.

 

 

அங்கேயே தங்க விரும்பிய அவர் நிர்வாணத்திற்கான உயர் வழியைக் கண்டு உய்ந்தார். அவரை மரகத பீனிக்ஸின் ஆவி என்று அனைவரும் அழைத்தனர். அந்த மலையும் கூடவே அவரது பெயரைப் பெற்றது.

 

ஸூவான் ஃபெங் என்ற குரு அங்கு ஒரு ஆல்யத்தை நிர்மாணித்தார். பூக்களால் நிரம்பிய இடமாதலால் அது மலர்த் தண்டு என்று பெயரிடப்பட்டது.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தை யூனான் நிர்வாகம் வெளிநாட்டவருக்கு விற்க முனைந்தது.

இதனால் மனம் வருந்திய ஸு யுன் கவர்னராக இருந்த டாங்கை அணுகி அதை அவரையே வாங்கச் செய்தார் டாங் அந்த மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஸு யுன்னை வேண்டினார்.

 

 

அதை மீண்டும் புனருத்தாரணம் செய்து கட்டும் போது ஒரு கல்லிலாலான மேஜை ஒன்று கிடைத்தது. அதில் மேகத்தின் ஆலயம் என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது. அது உடனடியாக இறந்தவர்களின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த ஹை ஹுய் ஸ்தூபத்தின் மீது வைக்கப்பட்டது.

 

ம்லையடிவாரத்தில் இன்னொரு ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு வேலைகள் துவங்கின.

 

ஒரு நாள் அந்த இடத்தில் இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள தங்க, வெள்ளி நாணயங்கள் அடங்கிய மூட்டை ஒன்று கிடைத்தது.

 

அதை அப்படியே அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ஸு யுன். ஆனால் அங்கிருந்த மற்றவர்களோ அதை ஆலய புனருத்தாரணத்திற்கு ஆகும் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம் என்றனர்.

 

ஆனால் புத்த தர்மத்தில் இருக்கும் சாதுக்கள் எந்த ஒரு புதையலையும் தான் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருப்பதைச் சுட்டிக் காட்டிய ஸு யுன் அதை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்படியே அந்த புதையல் மூட்டை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த் வருடம் கடுமையான பஞ்சத்தால் யூனான் மாகாணம் தவித்தது. மக்கள் டிப்தீரியா வியாதியால் அவஸ்தைப்பட்டு மரித்தனர்.

 

 

அங்குள்ள ராணுவமும் மக்களும் கவர்னர் டாங்கை மீண்டும் கவர்னராக்க விரும்பினர். அவரும் அதை ஏற்று மீண்டும் கவர்னராக யூனானுக்கு வந்தார்.

 

 

கவர்னரான உடன் மடாலயத்திற்கு வந்த டாங், ஸு யுன்னிடம் மழைக்காக பிரார்த்தனை புரியுமாறு வேண்டினார்.

 

ஸு யுன்னும் அதை ஏற்று ம்ழைக்காக பிரர்ர்த்தனை புரிய மூன்றே நாட்களில் மழை பெய்ய ஆரம்பித்தது.

 

ஆனால் டிப்தீரியா பரவுவது நிற்கவில்லை. ஆகவே டாங் மீண்டும் ஸு யுன்னிடம் வந்து, “ பனிப்பொழிவு ஏற்பட்டால் டிப்தீரியா நிற்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பனிப் பொழிவிற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

 

அதை ஏற்றுக் கொண்ட ஸு யுன், ‘நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் தூயமையாக இருந்து வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.
டாங் விதிகளை அனுசரிக்க ஸு யுன் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார்.

 

மறு நாளே ஒரு அடி உயரம் வரை பனிப் பொழிவு பெய்தது.

அனைவரும் போதிதர்மரின் எல்லையற்ற கருணையை நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.

*******