மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!(Post No.2862)

rathi.meenakshi13

Research Article written by London swaminathan

 

Date: 2 June 2016

 

Post No. 2862

 

Time uploaded in London :–  6-33 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

(English version of this article was published here yesterday)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தின் தென்கோடி முதல் வடகோடி வரை ஒரே பண்பாடு நிலவிவந்தது. தொல்காப்பியத்திலேயே வேதத்தில் போற்றப்படும் இந்திரன், வருணன், துர்கை ஆகியோரை தமிழர் தெய்வங்களாகப் போற்றுவதையும், தொல்காப்பியரும் மனுதர்ம சாத்திரத்திலுள்ள எண்வகை மணத்தைப் போற்றுவதையும் அவரும் தர்மார்த்த காம மோக்ஷம் ஆகிய வாழ்க்கை மூல்யங்களை பெரும் பண்புகளாகப் (அறம் பொருள் இன்பத்தைப்) போற்றுவதையும் சில கட்டுரைகளில் தந்தேன். மன்மதன் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறே இருந்துள்ளது!

 

மன்மதனுடைய கொடி மகரக் கொடி. மகரம் என்னும்  சொல் மீன், டால்பின் மற்றும் முதலையைக் குறிக்கப் பயன்பட்ட சொல். மன்மதனின் மகரக் கொடி பற்றிய குறிப்பு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அக நானூற்றிலேயே வந்துவிடுகிறது. மேலும் இதைப் பாடிய பார்ப்பனப் புலவன் பரணன், அதே பாட்டில் மன்மதனை எரித்த சிவபெருமானையும் பாடியிருக்கிறார். பட்டினப்பாலையில் மன்மதன் கோவில் குறிப்பிடப்படுகிறது.

 

காளிதாசனின் காலம் பல சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறியது போல கி.மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டு என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சங்க இலக்கியம் வாயிலாக நிரூபித்தேன். மன்மதன் பற்றி காளிதாசன் சொன்னதை நம்மவர்களும் சொல்வதிலிருந்து எனது வாதம் மேலும் உறுதிப்படுகிறது.

 

rathi 1

1.அகநானூறு (பாடல் 181)

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய

பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்

கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகரநெற்றி வாந்தோய் புரிசைச்

சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்

பொருள்:-

பழமையான நான்கு வேதங்களை அருளிய முக்கண்ணனின் ஆலமுற்றம் என்னும் இடத்திலே, அழகாக அமைந்த பொய்கைகள் சூழ்ந்த பூங்காவில், சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர் செய்த மண்பாவைகள் (பொம்மைகள்) இருக்கும் துறையில் மகரக்கொடியை மதில் உச்சியில் கொண்ட மிக உயர்ந்த மாடங்களை உடைய அரண்மனைகளையுடைய புகார் நகரம்…..

 

காமன் விழா நடபெறுகையில் கட்டப்படும் மகர தோரணத்தை இது குறிக்கும் என்று  பழைய உரைகள் விளக்கும்.

இந்தக் காமன் பண்டிகை குறித்து வடமொழி பிருஹத் கதாவிலும், அதன் மொழிபெயர்ப்பான பெருங்கதையிலும் உண்டு.

நாடு முழுதும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டதை இது உறுதி செய்யும்.

 

2.கலித்தொகை, பரிபாடல்

மன்மதன், மகரக் கொடி ஆகியன பற்றி கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு சங்க இலக்கியங்களிலும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு சில குறிப்புகளைக் காண்போம்:-

காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு (கலி. 92-67/68)

 

கலித்தொகையில் வரும் மற்ற குறிப்புகள்: கலி. 108-4; 109-19/20; 147-59/60; பரிபாடல்11-123

மேற்கூறிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதச் சொல்லான காமன் வருகிறது. கலி.94-33ல் காமர் என்று இருக்கிறது.

காமவேள்- கலி.27-24, பரி.18-28

மன்மதனின் மற்றொரு சம்ஸ்கிருதப் பெயர் மாரன். இச்சொல் பரிபாடலில் (8-119) கையாளப்படுகிறது.

rathi3

3.ரதியும் காமனும்

உலகிலேயே மிகவும் அழகான பெண் ரதி. அவள் மன்மதனின் மனைவி. இரதிகாமன் என்ற சொல் பரிபாடலில் 19-48/49) பயன்படுத்தப்படுகிறது.

மன்மதன் என்பவன் விஷ்ணுவின் மனதில் பிறந்தவன் என்று சம்ஸ்கிருத புராணங்கள் கூறும். இதை நெடியோன் மகன் என்று கலித்தொகை இயம்பும் (140-89)

 

4.ஐந்து மலர் அம்பு

மன்மதனின் கரும்புவில்லிலிருந்து மலர் அம்புகளை விடுவான் என்று காளிதாசனும் பிற கவிஞர்களும் பாடுவர். இதை ‘அரிபடு ஐவிரை என்றும் (பரி.10-97), விரைமலர் அம்பினோன்’ என்றும் (பரி.22-26) பரிபாடலில் காணலாம்.

காமனின் அம்புப் புட்டில் பரி.18-30ல் வருகிறது.

ஓவியக்கூடம் காமனின் சிலம்பக்கூடம் போன்றது என்ற உவமை ‘எழுது எழில் அம்பலம் காமவேள் தொழில் வீற்றிருந்த நகர்’- என்ற வரிகளில் பளிச்சிடும் (பரி 18-27)

ஐந்து மலர்கள்:

மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:-தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.

 

5.மீன்கொடி

உலகில் கொடிகளையும், வாகனங்களையும்,சின்னங்களையும் பயன்படுத்திய முதல் நாடு பாரதம் என்று கொடிகள், வாகனங்கள் பற்றிய கட்டுரைகளில் சொன்னேன். இங்கே மீன் கொடி பற்றி கலித்தொகை புலவர்கள், மீனேற்றுக் கொடியோன் (கலி.26-3), காமன் கொடியெழுதி (கலி.84-24) என்ற வரிகளில் விளக்குவர்.

 

6.காமனின் தம்பி சாமன்

காமனின் தம்பி சாமன் பற்றி சம்ஸ்கிருதத்தில் பல குறிப்புகள் உண்டு. அதையும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிடத் தவறவில்லை( கலி. 26-4; 94-33/34)

இதுதவிர இன்னும் சில குறிப்புகளும் உண்டு.

 

தமிழ் என்சைக்ளோபீடியாவான அபிதான சிந்தாமணியில் மன்மதன் வருணனையை, சிங்காரவேலு முதலியார் தந்துள்ளார்.

(சில புத்தகங்களில் கலித்தொகை பாடல் எண்களில் சிறிய மாற்றம் இருக்கும் ஆகையால் சங்கம் வோர்ட் இண்டெக்ஸ் புத்தகத்திலுள்ள வரிகளையும் தருகிறேன்:- மாரன் பரி. 8-119, காம வேள் கலி.27-24, பரி.18-28;காமற்கு கலி.92-67; காமன் கலி 84-24, 108-4, 109-19, 147-59, பரி. 11-123, 19-48; காமனது கலி.139-22;)

rthi2

7.திருக்குறளில்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197)

பொருள்:-

காமதேவன், காதலர் இருவர் இடையேயும் இருந்து இயங்காது, ஒருவர் பக்கத்திலேயே இருந்து செயல்படுவதால், அவன் என்னுடைய வருத்தத்தையும் தடுமாற்றத்தையும், உணரமாட்டான் போலும்!

 

8.மன்மதனுக்கு 19 பெயர்கள்!!!

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமர கோசத்தில், மன்மதனின் 19 சம்ஸ்கிருதப் பெயர்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவையாவன:-

மதன:, மன்மத: (மனதைக் கடைபவன்), மாரன், ப்ரத்யும்னன், மீனகேதன: (மீன் கொடியோன்), கந்தர்ப:, தர்பகன், அனங்க: (உடல் அற்றவன்), காமன், பஞ்சசர: (ஐந்து அம்புடையோன்), ஸ்மர:, சம்பராரி: (அலிகளுக்கு எதிரி), மனசிஜ: (மனதில் பிறந்தோன்), குசுமேஷு (மலர் அம்பன்), அனன்யஜ:, புஷ்ப தன்வா (மலர் வில்லன்), ரதிபதி (ரதியின் கணவன்), மகரத்வஜ; (மீன் கொடியோன்), ஆத்மபூ: (மனதில் தோற்றுவிக்கப்பட்டவன்).

சம்ஸ்கிருத நூல்களில் காமனுக்குப் பல அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன (எனது ஆங்கிலக் கட்டுரையில் நிறைய பெயர்கள் கொடுத்துள்ளேன்; இங்கே அந்தப் பட்டியலை எழுதினால் காமதேவன் அஷ்டோத்திரம் போல ஆகிவிடும்!)

 

  1. கற்பனைக் கதா பாத்திரம்

அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள்; சிவன் மனதில் காம உணர்வை ஏற்படுத்த மன்மதன் முயன்றபோது அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி ரதி தேவி அழுது புலம்பவே உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான் என்று சிவன் வரம் கொடுத்ததாக வரலாறு. இது ஒரு தத்துவார்த்த கதை. உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் முகநக நட்பு போய், மனைவியரிடதே அகநக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம்; சுருக்கமாக சிவன் எரித்தது காம வெறியைத் தான். உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று.

இதே போல திருமாலின் மனதில் பிறந்தவன் என்ற பெயரும் அடையாள பூர்வ கதையே; எல்லோருக்கும் மனதில் பிறக்கும் காதலே/ காமமே கல்யாணத்திலும், இனப் பெருக்கத்திலும் முடிகிறது.

மன்மதன்= மனதைக் கடைபவன் என்பதும் காரணப் பெயரே. ஒருவருக்கு காதல் வியாதி வந்துவிட்டால், அதௌ மனதைக் கடைந்து படாதபாடு படுத்தும்!

மொத்தத்தில் மன்மதன் என்பது ஒரு எண்ணத்துக்கு (அப்ஸ்ட்ராக்ட் ஐடியா), ஒரு உருவம் கொடுத்த (கான்க்ரீட் ஷேப்) கற்பனைக் கதையே.

rati or who

10.காளிதாசனில்

காளிதாசன் காவியங்களில் வரும் மன்மதன் பற்றிய குறிப்புகள்:–

சாகுந்தலம்:– காமன் வழிபாடு(6-3), மதன பாண/அம்பு (3), மகரகேது/மீன் கொடி (3-5).

இது தவிர குசுமாயுத (பூ ஆயுதம்), குசுமாஸ்திர (பூ ஆயுதம்).

விக்ரமோர்வசீயம்:–மகர கேது 2-2;

குமாரசம்பவம்:– 1-41 மகர கேது

ரகுவம்சம்:– மகர கேது 9-39

ஐந்து மலர் அம்பு பற்றிய குறிப்புகள்:– குமாரசம்பவம் 7-92; விக்ரம 2-6,11; மாளவிகாக்னிமித்ரம் 4-12 (பஞ்சசார);

குசுமசர, குசுமாயுத என்ற மலர் அம்பு பற்றிய சொற்கள் காளிதாசனின் எல்லா நூல்களிலும் (மேகதூதம் 104, ரகு 9-39, 11-45, குமார சம்பவம் 3-10, 4-40, 45) முதலிய இடங்களில் வருகின்றன.

 

காளிதாசன் நூல்களில் வரும் உவமைகள் சங்க இலக்கியத்தில் 200க்கும் மேலான இடங்களில் வருவதால், சங்ககாலத்தின் அவன் நூல்கள் கற்ற புலவரிடத்தே பரவியிருந்ததை அறியமுடிகிறது. ரெவரெண்ட் ஜி.யூ.போப்பும் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

11.வேதங்களில்

மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இருக்கிறது. ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது. அதன் பிறகு அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு. அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது. அறிவியலோ மாபெரும் வெடிப்பு – BIG BANG பிக் பாங்- ஏற்பட்டு பிரபஞ்சம் தோன்றியது என்று விளம்பும். ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது, ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை. பிரஜாபதி பரமேஷ்டின் என்ற ரிஷி உலகின் முதல் விஞ்ஞானி ஆவார். அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு ரிஷி பாடியது உலகின் முதல் நாகரீகம், பாரதத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.

 

“ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது

மனதின் மூல வித்து அதுவே;

ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,

இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்”

–ரிக் வேதம் 10-129

 

Haridass_1944_film_2

12.திரைப்படத்தில்

12.இறுதியாக முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்:–

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம் : ஹரிதாஸ்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

 

தற்காலத்தில் வந்த மன்மத லீலை என்ற திரைப்படத்தை அனைவரும் அறிவர்.

 

–சுபம்–

 

 

 

 

அதிசய மலர் மருந்துகள்! (Post No.2861)

flower medicine 3

Article written by S.NAGARAJAN

 

Date: 2 June 2016

 

Post No. 2861

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 flower medicine1

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 3-6-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அதிசய ‘பாட்ச்’ மலர் மருந்துகள்!

ச.நாகராஜன்

 

மலர்கள் எப்போதும் மனிதர்களைச் சிறந்தவர்களாகவும் சந்தோஷமுடையவர்களாகவும் மற்றவருக்கு உதவி புரிவபவராகவும் ஆக்குகின்றன. அவை ஒளி பொருந்தியவை. அவை உணவாக இருக்கின்றன; அவை ஆன்மாவிற்கான மருந்தாகவும் அமைகின்றன” – லூதர் பர்பேங்க்          

 

உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்குவதில் மலர் மருந்துகள் ஒரு தனி இடத்தை வகிக்கின்றன.

இந்த மலர் மருந்துகளைக் கண்டு பிடித்தவர் டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr Edward Batch) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.

டாக்டர் பாட்ச் (தோற்றம் 24, செப்டம்பர்1886 ;  மறைவு 27, நவம்பர் 1936) ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணர். பாக்டீரியா இயல் நிபுணரும் கூட.

ஒவ்வொரு மனிதரின் வியாதிக்கும் காரணம் உடல் மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல; ஆத்மாவுடனும் சம்பந்தப்பட்டது என்று அவர் நம்பினார். அது மட்டுமின்றி பிரபஞ்சம் முழுவதும அதிர்வுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் அறிந்து அதற்கேற்ப  மருந்து கொடுத்தால் அது பலன் அளிக்கும் என்றும் அவர்  நம்பினார்.

இயற்கை தந்துள்ள அரிய பல  மலர்களை அவர் ஆராய ஆரம்பித்தார். புலர் காலைப் பொழுதில் மலர்களின் பனித்துளிகளில் இருக்கும் மலரின் சக்தி வாய்ந்த சாரத்தை எடுத்து அவர் பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர் ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் விளைவாக 38 வித  மலர் மருந்துகளை உள்ளுணர்வினால்  கண்டு பிடித்து அவர் தயார் செய்தார். மலர்களின்  சாரமான துளிகளை அதற்குச் சம்மான அளவு பிராந்தியுடன் கலந்து தன் கலவையை அவர்  முதலில் உருவாக்கினார். பின்னர் அதை  மேம்படுத்தி தன்  மலர் மருந்தைப் பக்குவப்படுத்தி பூரணமான மருந்தாக்கினார்.

இதில் குறிப்பான ஒரு மருந்தாக ரெஸ்க்யூ ரெமடி என்று ஒரு வகை உருவானது.

திடீரென எதிர்பாராத ஆபத்தில் சிக்கிய ஒருவரின் அதிர்ச்சியுற்ற நிலையை இந்த ரெஸ்க்யூ ரெமடி உடனடியாகப் போக்கும்.

இன்று வரை இது தனது அபூர்வமான் ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் ரீதியாக இந்த மலர் மருந்துகளின் சக்தியை ஆய்வு செய்த டாக்டர் எர்னஸ்ட் என்பவர் தனக்குக் கிடைத்த முடிவுகளின் படி அப்படி ஒன்றும் இவை சக்தி கொண்டவை அல்ல என்று கூறினார்.

ஆனால் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மலர் மருந்துகளுக்கு சக்தி உண்டு என்று கூறுகின்றன.

குறிப்பாக உணர்ச்சி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இவை உடனடி நிவாரணம் அளிக்கின்றன என்பது ஒரு சுவையான செய்தி.

‘ஃப்ளவர் எஸன்ஸ் சொஸைடி’ நடத்திய ஒரு ஆய்வில் ஆய்வு முடிவுகள் இவை எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதைத் தெரிவிக்கின்றன! டாக்டர் ஜெஃப்ரி க்ராம் (Dr Jeffrey Cram) என்பவர் நுட்பமான ஆற்றல்களை இந்த மலர் மருந்துகள் உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார்.

நீருக்கு தகவல்களை ஏந்திச் செல்லும் அரிய தன்மை உண்டு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நீருடன் சக்தி வாய்ந்த மலரின் சாரமும் சேர்ந்து வியாதிகளைக் குணமாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த மலர்  மருந்துகள் முப்பத்தெட்டின் விலையும் அதிகம் இல்லை.

இவை ஏழை முதல் பணக்காரர் வரை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் வாங்கிப் பயனடைய முடியும். அத்தோடு இந்த மலர் மருந்துகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதலான செய்தி!

 

flower medicine2

மலர் மருந்துகளைத் தரும் ஒரு வைத்தியரிடம் ஒருவர் சென்றவுடன் அவரிடம் அவருக்குள்ள தொந்தரவு என்ன என்பதை அவர் வாய் மொழி மூலமாகக் கேட்டறியப்படுகிறது. அவரிடமிருந்து வெளி வரும் சொற்களை வைத்து அவரது மனநிலை நன்கு அறியப்பட்டு அதற்குத் தக மலர் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

வீடு அல்லது வாகனம் வாங்க ஒருவர் செல்கிறார். அவரது பேரம் படிவதற்கு அவர் உட்கொள்ள வேண்டிய மலர் மருந்து அக்ரிமனி என்பதாகும்.

பார்ப்பதற்கே பரிதாபகரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நோயாளிக்கு மலர் மருத்துவர் உடனடியாகத் தருவது ராக் ரோஸ் என்னும் ம்லர் மருந்து.

தாங்க முடியாத கோபம், வறுமை, வாழ்க்கையே பிரச்சினை என்றால் அவருக்குப் பரிந்துரைக்கப்படுவது செர்ரி ப்ளம்.

காதலில் தோல்வி என்றால் சிக்கரி.

அகம்பாவம், மண்டைக்கனம் போக வைன்.

இருட்டில் போக பயம், வியாதி, முதுமை பற்றிய பயம் என்றால் மிமுலஸ்

போர் அடிக்கிறது என்று சொல்பவருக்கு வால்நட். தன்னம்பிக்கை  கூடுவதற்கு லார்ச். செல்வம் சேர கார்ஸ்.

ஒரு நோயாளிக்குத் தேவையானப்டி மலர் மருந்துகளில் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கும் மேலாகவோ மருத்துவர் தேர்ந்தெடுத்துத் தருவதும் நடைமுறைப் பழக்கமாக இருந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு வியாதியிலிருந்து மீண்ட நோயாளி எடுத்துக் கொள்ள வேண்டியது கிராப் ஆப்பிள் மற்றும் வால்நட்.

கற்பனை ஆற்றலை மேம்படுத்த விரும்பும் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டியவை ஒய்ட்செஸ்நட் ம்ற்றும் க்ளிமாடிஸ்.

 

இப்படி மன நிலைகளுக்குத் தகுந்தபடி மருந்துகள் இதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

பத்தியம் இல்லாத விலை குறைவான மருந்து என்பதால் இதை பரீட்சித்துப் பார்ப்போரின் தொகை இப்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நகரிலும் மலர் மருந்துக் கடைகள் அதிகமாகி வருகின்றன; மலர் மருத்துவ நிபுணர்களும் பெருகி வருகின்றனர்.

மல்ர் மருந்துகள் இன்றைய உலகில் ஒரு அரிய வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல!

cycle

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1896ஆம் ஆண்டு ஐயோவாவைச் சேர்ந்த ஒருவரால் இசை சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு இசைப் பெட்டி முன் சக்கர போர்க்குகளுடன் இணைக்கப்பட்டிருக்க அது சுற்றும் போது ஒரு பல்சக்கரம் இசைப் பெட்டியை இயக்க வெவ்வேறு விதமான இசை ஒலிகள் எழுப்பப்பட்டன. மக்கள் இதை வியந்து பார்த்தனர்.

இதற்கு  வெகு காலம் முன்பே 1824 ஆம் ஆண்டு வின்கெல் (M. Winkel) என்பவர் மெக்கானிகல் இசைப் பெட்டி ஒன்றை வடிவமைத்து அனைவரையும் அசத்தினார். அது தானாகவே இசையை அமைக்கும் என்ற அவர் பத்திரிகையாளர்களையும் விஞ்ஞானிகளையும் அழைத்துப் பரிசோதித்து மதிப்புரை எழுதச் சொன்னார்.  பிரெஞ்சு அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1824 பிப்ரவரி 2ஆம் தேதி  வந்து ஆராய்ந்து பார்த்து மெக்கானிகல் இசைப்பெட்டியின் உள்ளே ஒன்றும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் வெவ்வேறு வித இசை அமைப்புகள் தானாக கம்போஸ் செய்யப்படுகின்றன என்றும் மதிப்புரை தந்தனர். பத்திரிகைகளும் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி எழுதின! இந்த இசைப் பெட்டியின் பெயர் கம்போனியம் (Componium)

அன்றே இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் எழுந்துள்ளன என்பது சுவையான ஒரு செய்தி!

************

 

 

புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி (Post No.2859)

கம்ப1

Article written by London swaminathan

 

Date: 1 June 2016

 

Post No. 2859

 

Time uploaded in London :–  8-03 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

kalidasa_20405

Poet Kalidasa

அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது. ஆயினும் அவர்கள் முதல் பாடலை எழுதி பெரும் காவியத்தைத் துவக்கியபோது இது மக்களின் ஆதரவைப் பெறுமா, காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா என்றெல்லாம் பயமும் ஐயமும் இருந்திருக்கும். அவர்களிருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன் காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:

திதீர்ஷு துஸ்த்ரம்  மோஹாத் உட்டுபேன  அஸ்மி சாகரம்

 

சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!

காளிதாசனின் ரகுவம்சம் 1-2

xxx

மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்

ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

 

எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)

ரகுவம்சம் 1-3

xxx

அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:

மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்

ரகுவம்சம் 1-4

 

காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.

cat

கம்பன் ஒரு பூனை!

கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

–பாலகாண்டம்

பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.

valmiki

தெய்வ மஹா கவி வால்மீகி

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே

பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.

(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)

ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.

raguvamsam_b

–சுபம்–

 

எனது மூன்றாவது மனைவி!(Post No.2858)

are-three-wives-better1

Article written by S.NAGARAJAN

 

Date: 1 June 2016

 

Post No. 2858

 

Time uploaded in London :–  6-17 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

எனது மூன்றாவது மனைவி!

ச.நாகராஜன்

 

எனக்கு மூன்று மனைவிகள். மற்ற இரண்டு மனைவிகளும் என்னை விட்டாலும் விடுவார்கள், மூன்றாவது மனைவி என்னை ஒருபோதும் விட்டுப் பிரியவே மாட்டாள்!

கவிஞரின் இந்தச் சொற்களைக் கேட்டதும் மனம் திடுக்கிடுகிறதல்லவா?

 

 

ஒரு மனைவியை வைத்துக் கொண்டே சம்சார சாகரத்தில் படும் பாடு போதாதா, மூன்று மனைவிகளா. அடடா..

மனம் பரிதாபப்பட அந்த மூன்று மனைவிகள் யார் என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

 

 

கவிஞர் உடனே பதிலைச் சொல்கிறார். அதைக்  கேட்டு நமக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஏனெனில் நம் ஒவ்வொருவருக்குமே இந்த மூன்று மனைவிகள் உண்டு.

 

அதிலும் இந்த மூன்றாவது மனைவி என்றுமே பிரியாதவள்.

99.9 சதவிகிதம் பேர்களை விட்டு அவள் பிரியவே மாட்டாள் என்பது உண்மை!

சரி விஷயத்திற்கு வருவோம்!

 

 

“பசி

தாகம்

ஆசை

ஆகிய இவர்களே எனது மூன்று மனைவிகள்!

நான் உயிரோடு இருக்கும் வரை இவர்கள்  யாரிடமும் போக மாட்டார்கள்.

 

இந்த மூன்று பேரில் வேறு யார் என்னை விட்டுப் போனாலும் எனது மூன்றாவது மனைவி என்னை விட்டு ஒருபொழுதும் நீங்கவே மாட்டாள்!”

 

 

பாரவியின் அற்புதக் கவிதை இது. கிராதார்ஜுனீயம் என்ற காவியத்தில் வருவது இது!

 

முதலில் எஸ்.பி. நாயரின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்து விட்டுப் பின்னர் சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்.

 

Hunger, thirst and desire are my three wives who never go to anybody else, as long as I live; among them desire is the most faithful one that never quits me ( S.B.Nair)

 

ஷுத்தூடாஷா: குடும்பின்யோ மயி ஜீவதி நான்யகா: I

தாஸாமாஷா மஹாசாத்வி கதாசினி மாம் ந முஞ்சதி  II

 

சார்தூலவிக்ரீதிதா சந்தத்தில் அமைந்துள்ள இதை விரும்பாவதர்களே இருக்க முடியாது.

 

 

கவிதையைப் படித்தவர்கள் அனைவரும் பாரவியின் கட்சியில் சேர்ந்து விடுவார்களோ!

 

–Subham–

 

The Choice of Four Friends (Post No.2857)

number_4_orange_T

Compiled by london swaminathan

 

Date: 31 May 2016

 

Post No. 2857

 

Time uploaded in London :– 10-18 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

joshua-tree-shadows

Once when Tzu-Lu, Tseng Hsi, Jan Chhiu and Kunghsi Jua were seated in attendance on the Master, he said, “You consider me as a somewhat older man than yourselves. Forget for a moment that I am so. At present you are out of office, and feel that your merits are not recognised. Now supposing someone were to recognise your merits, what employment would you choose?”

 

Tzu-Lu promptly and confidently replied “Give me a country of a thousand war chariots hemmed in by powerful enemies, or even invaded by hostile armies, with drought and famine to boot – in the space of three years I could endow the people with courage and teach them in what direction right conduct lies.”

 

Our Master smiled at him and said, “What about you, Chhiu?”

 

 

Jan Chhiu replied saying, “Give me a domain of fifty to seventy square leagues, and in the space of three years I could bring it about that the common people should lack for nothing. But as to rites and music, I should have to leave those to a real Chun-tzu”

 

What about you, Chhih?”

Kunghsi Jua answered, “I do not say what I could; but I should like at any rate to be trained for it. In ceremonies at the ancestral temple, and at the audiences of  the Princes with the High King, I would like, dressed in the dark square made robe and the black linen cap, to act like a junior assistant”

 

Tien, what about you?

Tseng Hsi laid aside the lute on which  he had been softly playing, rose and said, “I fear my words and will not be so well chosen as those of the other three.:

 

The Master said, “What harm is there in that? All that matters is that each should name his desire.”

 

Tsen Hsi said, “At the end of  spring, when the making of the Spring clothes have been completed, to go with five or six newly capped  young men and six or seven boys, the perform the lustration and bathe in the River Yi, enjoy the breeze among the Rain Dance  altars, and return home signing”.

The Master sighed and said, “ I agree with Tien.”

 

–subham–

 

 

 

தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856)

papanasam sivan 1

Compiled by london swaminathan

 

Date: 31 May 2016

 

Post No. 2856

 

Time uploaded in London :– 8-25 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட்ட மொழி; சம்ஸ்கிருதம் என்றாலே நன்கு செய்யப்பட்டது எனப் பொருள்; 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பாணினியால் இலக்கணம் பெற்ற மொழி. அவருக்கு முன்னால் இருந்த இலக்கண கர்த்தாக்களின் நீண்ட பட்டியலும் உள்ளது. அப்படியானால் எவ்வளவு பழமை என்று தெரிந்து கொள்ளலாம்.அதற்கும் முன்பாக இருந்த பழைய மொழி வேத கால சம்ஸ்கிருதம்.

இன்று சங்க காலத் தமிழ் மொழியை நாம் புரிந்துகொள்ள உரைகாரர்களின் உரை தேவைப்படுகிறது. 2000 ஆண்டுகளில் நம் தமிழ் மொழி மாற்றம் அடைந்தது போல, பாணினி காலத்துக்குள் வேதகால சம்ஸ்கிருதம் புத்துருப் பெற்றுவிட்டது.

 

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. அழகான மொழியும் கூட. சொல்லாக்க முறையைத் தெரிந்துகொண்டு விட்டால் புதிய சொற்களை நாமே உருவாக்கலாம். வேர்ச் சொல்லின் பொருளும் வினைச் சொற்களின் வடிவமும் தெரிந்துவிட்டால், அகராதி தேவையே இல்லை. பொருளை நாமே கண்டுபிடித்து விடலாம்.

p sivan 2

தமிழ் இசை மன்னன் பாபநாசம் சிவன் அவர்கள் வடமொழிச் சொற்கடல் என்ற ஒரு நூலில் சம்ஸ்கிருதச் சொற்களை புதிய முறையில் அழகு படத் தொகுத்துள்ளார். அந்த மொழியின் அழகை விளக்க சில சொற்களை மட்டும் காண்போம்:–

கரம் என்றால் கை; கையால் செய்யப்படுவது காரியம். கர என்ற விகுதியைக் கொண்டு முடியும் சொற்களின் அழகைப் பாருங்கள்:–

சுககர:= இன்புறச் செய்பவன்

ருசிகர:= இனிமை அளிப்பது

சுசிகர:= சுத்தம் செய்பவன்

கஜகர:= துதிக்கை, விக்னேச்வரன்

கடகர:= குயவன் (கடம்/பானை செய்பவன்)

ஹிதகர: = நன்மைசெய்பவன்

ரதிகர: = பிரியத்தை அளிப்பவன்

ரதகர: = தேர் செய்பவன் (ரதகாரன்)

மதுகர: = தேனீ (மதுவைச் செய்வது)

தினகர:= சூரியன் (பத்திரிக்கையின் பெயர்)

அனுகர: = உதவி செய்பவன்

லிபிகர:= கணக்குப் பிள்ளை

சுபகர:= க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

ஹிமகர: = சந்திரன் (குளிர்ச்சி தருபவன்)

பரிகர:= பரிவாரம், கட்டில், கூட்டம்

அவகர: = குப்பை

சவிகர: = சோபை/அழகு தருவது

சசிகர:= சந்திர கிரணம்

அஸிகர: = வாள் பிடித்தவன்

ரவிகர: = சூரிய கிரணம் (ரவி= சூரியன்)

வசிகர= ஆகர்ஷண சக்தி (வசீகரம்)

நிசிகர:= நிலவு

அசுகர: = செயற்கரிய செயல்

பசுகர:= செல்வம் தருவது

பஹுகர:= பல கை உடையான்; நகர சுத்தி செய்பவன்

அஜகர: = பெரிய பாம்பு

 

 

ஜலதர, ஹலதர, சசிதர, விஷதர

இதே போல ‘தர’ என்பது தரிப்பவன், தாங்குபவன் எனப்பொருள்படும்:-

நகதர:= கண்ணன்; ம்ருகதர:= சந்திரன் ( மானைத் தாங்குபவன்); ஜலதர: = மேகம் (நீரைத் தாங்குபவன்); ஹலதர:= பலராமன் (கலப்பையைத் தாங்குபவன்); சசதர: = சந்திரன் (முயல் தாங்கி); சசிதர: = சிவன் (பிறை அணிந்தவன்); விஷதர: = பாம்பு (விஷம் தாங்கி); மஹிதர: = மலை.

 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

மடாதிபதி, ஜனாதிபதி போன்ற சொற்களை நாம் தமிழிலும் பயன்படுத்துகிறோம். அதிபர், அதிப என்பதெல்லாம் தலைவன் என்ற பொருளில் வரும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

அகாதிப:, நகாதிப:= இமயமலை; ககாதிப: = கருடன்; ம்ருகாதிப: = சிங்கம்; மடாதிப: = மடாதிபதி; கணாதிப: = கணபதி (கணங்களின் தலைவன்); மதாதிப: = மதத்தின் தலவன்; ஜனாதிப: = அரசன்; தினாதிப: = சூரியன்; தனாதிப:= குபேரன் (தனத்திற்கு அதிபதி);தராதிப:, நராதிப: = ராஜா (நரர்களுக்குத் தலைவன்); சுராதிப:= சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்); தசாதிப:=ஒன்பது கிரகங்கள்; திசாதிப; = திக்குகளின் தலைவன்; நிசாதிப: = நிசி/ ரவின் தலைவன்/சந்திரன்.

ஆதாரம்:- வடமொழிச் சொற்கடல், தொகுத்தவர்- பிரும்ம ஸ்ரீ பாபநாசம் சிவன், வெளியீடு—டாக்டர் ருக்மிணி ரமணி, 30, கிருபா சங்கரி தெரு, சென்னை- 600 033, விலை ரூ 150; வருடம்- 2000 (முதல் பதிப்பு 1954)

(வடமொழி பயில விரும்புவோர் வாங்க வேண்டிய நூல்)

 

எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்? (ஜூலை 4, 2015)

பாணினி மாஜிக்!! Panini Magic!! ( 7-4-2015)

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி! (19-2-2015)

கடவுள் தந்த இரண்டு மொழிகள் (13 நவம்பர் 2014)

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! (20-12-2014)

 

p sivan 3

–சுபம்—

 

 

 

தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்! (Post No.2855)

thirumazhapadi

Article written by S.NAGARAJAN

 

Date: 31 May 2016

 

Post No. 2855

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

அரிய ஆன்மீகக் கட்டுரைகளைக் கொண்டு  மாதந்தோறும் சென்னையிலிருந்து வெளி வரும் ஆன்மீக இதழ் ஞான ஆலயம். இதன் ஆசிரியை திருமதி மஞ்சுளா ரமேஷை தமிழ் மக்கள் நன்கு அறிவர். சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் :  editorial @aalayam.co.in

 

ஞான ஆலயம் ஜூன் 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

 

தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!

 

ச.நாகராஜன்

 

பாரதமெங்கும் மஹாபாரதத் தலங்கள்

 

பரந்த பாரதமெங்கும் மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்டுள்ள ஏராளமான தலங்கள் உள்ளன. பெரும் வீரர்களாக இருந்ததினால் மட்டும் பாண்டவர்களை அனைவரும்  கொண்டாடவில்லை, அந்த வீரர்கள் தர்மத்தின் பக்கம் சார்ந்து இருந்து இறைவனின் உற்ற அருளுக்குப் பாத்திரர்களாக விளங்கினர் என்பதனாலேயே அவர்களுக்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் உள்ளன.அவர்களை இன்றும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகின்றனர்.

இந்த தலங்களுள் பாண்டவர்களுடன் தொடர்புள்ள தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவை மிக  முக்கியமானவையும் கூட. சிலவற்றை இங்கு பார்க்கலாம்:

 

 

திருவேட்களம்:

காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.

சிவபிரான் வேட ரூபம் கொண்டு அர்ஜுனனோடு போர் புரிந்த இடம். வேடன் களம் என்பது வேட்களமாக ஆகி விட்டது.

இங்குள்ள தல விருட்சம் : புன்கு

தீர்த்தம்: ஞான தீர்த்தம் அல்லது ஞான கங்கை

சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம்.

thiruvettakudy

திருவேட்டகுடி:

திருமேனியழகர் ; சுந்தரேஸ்வரர்

அம்பிகை: ஸௌந்தரநாயகி

தல விருட்சம் : புன்னை

சந்நிதிக்கு எதிரில் உள்ள தீர்த்தம் ருத்திர புஷ்கரணியாகும்.

அர்ஜுனனோடு சிவபெருமான் போர் செய்கையில் வேட வடிவம் எடுத்ததால் வேட்ட குடி. அக்காலத்தில் காவலாக இருந்தவர் சாஸ்தா. இவர் பெயர் பிரமனார்.

இந்த ஊருக்கு மேற்கே ஒரு மைலில் இப்போது வரிச்சாகுடியாக உள்ள ஊரின் பழைய பெயர் வஸிட்டா குடி.

 

பாண்டவர் பூஜித்த் சில தலங்கள்

பஞ்சபாண்டவர் பூஜித்த தலங்களில் சில: கோடம்பூர், தலையாலங்காடு, பெரும்பன்றியூர் முதலியன.

 

 

மண்ணிப்படிக்கரை

காவிரிக்கு வடகரையில் உள்ள தலம். .

இந்த தலத்தில் ஐந்து சிவ சந்நிதிகள் உண்டு. நீலகண்டேசுவரர் பிரதானமான வாயிலை சந்நிதியாகப் பெற்றுள்ளார். இவரை தருமபுத்திரர் பூஜித்தார். அம்பிகையின் நாமம் அமிருதகரவல்லி.

அடுத்து படிக்கரை நாதேசுவரரை அர்ஜுனன் பூஜித்தான். அம்பிகை மங்களநாயகி. இந்தக் கோவில் வடக்கே உள்ளது.

அடுத்து தெற்கேயுள்ள மூர்த்தி மகதீசர். இவரை பீமசேனன் பூஜித்தான்.

தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள பரமேசுவரரை நகுலன் பூஜித்தான்.

 

 

:இங்குள்ள முத்தீசுவரரை சகாதேவன் பூஜித்தான்.

இந்த தலத்திற்கு சுந்தரரின் பதிகம் ஒன்று உண்டு.

இந்த தலத்திற்கு திரிசிரபுரம் ம்கா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஒரு புராணம் இயற்றியுள்ளார்.

 

tirumazapadi

திரு மழபாடி

 

காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.

இங்குள்ள லிங்கத்தில் வைரம் இருக்கிறது. புருஷாமிருகம் பூஜித்து பேறு பெற்ற தலம்,

 

கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள மழபாடியில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அதற்கு உடல் வலிமையையும், தீர்க்க ஆயுளையும் பிறரால் வெல்ல முடியாத ஆற்றலையும் இறைவன் அருளினார்..

 

சிவலிங்கத்தைப் பெற தவம் செய்த புருஷாமிருகத்திற்கு  பூமியைப் பிளந்து கொண்டு வஜ்ஜிர ஸ்தம்ப வடிவமாக ஈசன் தோன்றினார். அதனால் அவருக்கு வச்சிரஸ்தம்பேஸ்வரர் என்று பெயர். பிரமதேவன் பூஜித்த சிவலிங்கமே இங்கு இந்த வடிவமாகத் தோன்றியது. தான் பூஜித்த லிங்கத்தைக் காணாது திகைத்த பிரமதேவன் இந்த இடத்தில் வந்து அதைப் பார்க்கும் போது லிங்கத்தை புருஷாமிருகம் பூஜித்துக் கொண்டிருந்தது.  உடனே  பிரம்மா தனது லிங்கத்தை புருஷாமிருகம் திருடிக் கொண்டு வந்து விட்டதென்று எண்ணி அதனுடன் போர் செய்யத் தொடங்கினார். போர் நீடித்துக் கொண்டே போன சமயம் பரமசிவன் லிங்கத்தினின்று தோன்றி, “யாமே இந்த மிருகத்தின் தவத்திற்கு இரங்கி இங்கு வந்து விட்டோம் இந்த மிருகம் திருடவில்லை. இனி யாம் இங்கேயே இருப்போம். நீ இங்கு வந்து பூஜை செய்க” என்று அருளினார்.

 

 

சிவபூஜையைத் தொடர்ந்து செய்த புருஷாமிருகம் ஆடகேஸ்வரர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கும் கீலமலை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தது.

 

சிவபக்தியில் சிறந்து விளங்கிய புருஷாமிருகத்தை சிவ பகதர்கள் பெரிதும் போற்றுவர். இந்த புருஷாமிருகத்தைத் தனது யாகத்திற்கு அழைத்து வருமாறு தர்மபுத்திரர் பீமனைப் பணித்தார். ஜெயித்து அழைத்து வருதலே மரபாதலால, பீமன் இங்கு வந்து புருஷாமிருகத்தைப் போருக்கு அழைத்தான்

 

மழபாடியில் புருஷாமிருகத்தைக் காணாத பீமன்  கீலமலையில் புருஷாமிருகத்தைக் கண்டு யுத்தத்திற்கு அழைக்க அந்த மிருகம் பீமனை நோக்கி, “நீ ஆயுதத்துடன் இருக்கிறாய். என்னிடமோ ஆயுதம் இல்லை.” என்றது. உடனே பீமன் தன் கதாயுதத்தை புருஷாமிருகத்திடம் அளித்தான்.

purushamirugam,Silver-vahanam-kapali-temple-300x200

 

இப்போது புருஷாமிருகம்,” நீ இப்போது ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கிறாய். என்னிடமோ ஆயுதம் இருக்கிறது. ஆகவே உன்னிடம் யுத்தம் செய்வது தரமம் அல்ல” என்றது.

பீமன் யுத்தம் செய்யவே விரும்புகிறான் என்பதை நன்கு அறிந்த மிருகம், “ நான் மழபாடியை நோக்கி ஓடுவேன். என்னைப் பிடிப்பதற்குத் துரத்தி வர வேண்டும். நான் மழபாடியின் எல்லையைத் தாண்டுவதற்குள் என்னைப் பிடித்து விட்டால்  நீ என்னை வென்றவன் ஆவாய்” என்று சொல்லி விட்டு ஓடத் தொடங்கியது.

பீமனும் துரத்தினான். ஆனால் அவன் புருஷாமிருகத்தைப் பிடித்த போது பீமனின் ஒரு கால் மழபாடி எல்லையிலும் இன்னொரு கால் எல்லைக்கு அப்பாலும் இருந்தது.

 

பீமன் தான் வென்றதாகக் கூற புருஷாமிருகமோ அதை மறுத்தது. வழக்கைத் தீர்த்து வைக்க தர்மபுத்திரரே உகந்தவர் என்று இருவரும் கருதி தர்மரிடம் வந்தனர்.

 

அனைத்தையும் கேட்ட தர்மபுத்திரர்,” புறவெல்லையில் காலை வைத்த பீமனின் ஒருகாலை நீ வெட்டி எடுத்துக் கொள்ளலாம்” என்று புருஷாமிருகத்திடம் கூறித் தீர்ப்பை அளித்தார்.

தர்மரின் நடுவுநிலைமையைக் கண்டு வியந்த புருஷாமிருகம் பீமனை வெட்டாமல் விட்டது.அனைவரும்  ம்கிழ்ந்தனர்.

இந்த வரலாறு திருமழபாடி புராணத்தில் ஸ்தல சருக்கத்தில் விவரமாக உள்ளது.

 

 

இது மட்டுமின்றி திருவாழ்கொளிபுத்தூர், திருவிசயமங்கை, பிரபலமாக உலகுக்குத் தெரியாத இப்போது திண்டுக்கல் மலை என்று அழைக்கப்படும் பத்மகிரி உள்ளிட்ட ஏராளமான தலங்கள் பஞ்சபாண்டவருடன் தொடர்பு கொண்ட தலங்களாகும்.

ஒவ்வொன்றும் ஒரு சுவையான மகாபாரத வீரர்களின் வரலாற்றைத் தருவதாகும்!

**********

 

Chinese and Indian Parables of the Turtles and Frogs (Post No.2854)

turtle-03

Compiled by london swaminathan

 

Date: 30 May 2016

 

Post No. 2854

 

Time uploaded in London :– 9-43 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

The philosopher Chuang Tzu was fishing on the bank of a river when a messenger appeared with an invitation form the king of Ch’u offering him the post of prime minister.

Without taking his eyes from the river, the philosopher replied,

“They say that the King has in his treasury a shell of a supernatural tortoise. If the tortoise had been allowed to choose, would it have preferred to adorn a king’s treasury or to continue to wag its tail in the mud of its native marsh?”

“It would have preferred to remain wagging its tail in the mud”, said the messenger.

“And I, too”, answered Chuang Tzu, “Prefer to live obscure but free. To be in the office often costs a man his life and always costs his peace of mind. Go back to the king and say that I will continue to wag my tail in the mud”.

XXX

 

turtle frog, croc

Tuttle and Frog on the back of a Crocodile

 

The Frog and the Turtle

 

A certain frog lived in an abandoned well.

“How you must envy my delightful existence!”, he said to a Giant Turtle of the Eastern Sea. “When I go into the water I can make it hold me up under the armpits and support my chin; when I jump into the mud, I can make it bury my feet and cover my ankles.  As for the baby crabs and tadpoles, none of them can compete with me………..To have at one’s command all the delights of a disused well, that surely is the most that life can give.”

 

The Giant Turtle tried to get into the well, but before his left foot was well in, the right got wedged fast. So he wriggled free and retired, saying, “As you have been kind enough to tell me about your well, allow me to tell you about the sea. Imagine a distance of a 1000 leagues, and you will still have no idea of its size; imagine a height of a thousand times man’s stature, and you will still have no notion of its depth. Not to be harried by the moments that flash by nor changed by the ages of the pass; to receive much, yet not increase, to receive little, yet not to diminish; this is the Great Joy of the Eastern Sea.”

—-Chuang Tzu (China)

 

Compare it with the Frog in the Well story of Swami Vivekananda’s Chicago Address at the Parliament of Religions.

 

Why We Disagree: Swami Vivekananda (from my post  ‘The Blind men and the Elephant: known Story, Unknown Facts’ (posted on 14 March 2014)

Swami Vivekananda expressed the somewhat a similar theme through his story Frog in the Well in the very second lecture in Chicago about 125 years ago:

I will tell you a little story. You have heard the eloquent speaker who has just finished say, “Let us cease from abusing each other,” and he was very sorry that there should be always so much variance.

But I think I should tell you a story that would illustrate the cause of this variance. A frog lived in a well. It had lived there for a long time. It was born there and brought up there, and yet was a little, small frog. Of course the evolutionists were not there then to tell us whether the frog lost its eyes or not but, for our story’s sake, we must take it for granted that it had its eyes, and that it every day cleansed the water of all the worms and bacilli that lived in it with an energy that would do credit to our modern bacteriologists. In this way it went on and became a little sleek and fat. Well, one day another frog that lived in the sea came and fell into the well.

“Where are you from?”

“I am from the sea.”

“The sea! How big is that? Is it as big as my well?” and he took a leap from one side of the well to the other.

“My friend,” said the frog of the sea, “how do you compare the sea with your little well?”

Then the frog took another leap and asked, “Is your sea so big?”

“What nonsense you speak, to compare the sea with your well!”

“Well, then,” said the frog of the well, “nothing can be bigger than my well. There can be nothing bigger than this. This fellow is a liar, so turn him out

XXX

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.

Appar’s Turtle Story!

Appar, Tamil Saint of seventh century, saw another scene along his travel route. In a village he saw people boiling turtle for their food. It was a big vessel with cool water. The turtle is swimming happily, but below the vessel firewood is just lighted. The flames are growing bigger and bigger. The happily swimming turtle is going to be boiled and eaten in an hour. Stupid turtle does not know the danger to its life and enjoyed the momentary pleasure. Such is our impermanent life, he says.

 

My previous posts:–

Frog in the mouth of a snake (posted on 9 March 2014)

In Tamil

கிணற்றுத் தவளை: அப்பரும் விவேகாநந்தரும் சொன்ன கதைகள் (9 மார்ச் 2014)

 

–Subham–

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட! (Post No 2853)

 

 

books picture

Article written by london swaminathan

 

Date: 30 May 2016

 

Post No. 2853

 

Time uploaded in London :– 8-41 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

 

Devi_Bhagavata_S_4f3ca6ead5de8

மதுரையை விட்டு லண்டனுக்கு வந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் மதுரை நினைவுகள் மறைவதில்லை. குளிக்கும் போதும், சாப்பிடும்போதும் வரும் பழைய நினைவுகள் திடீரென்று சிரிப்பை உண்டாக்கும். என் மனைவி , ஏதோ அவளைப் பார்த்துதான் சிரிக்கிறேன் என்று நினைத்து என்ன சிரிப்பு? என்பாள். ஒன்றுமல்ல 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்ததை எண்ணி சிரிக்கிறேன் என்பேன். உங்களுக்கு என்ன பைத்தியமா? என்பாள்.

இதோ ஒரு பழைய, சுவையான சம்பவம்:–

 

எனது தந்தை வெ. சந்தானம் மதுரை தினமணிப் பதிப்பு துவங்கிய காலத்திலிருந்து மதுரை தினமணிப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி; காமரஜருடன் சிறையிலிருந்தவர். ஆகையால் அந்தக் கால மனிதரைப் போலவே கதர் ஜிப்பா அணிவார். பணம், புகழ் முதலிய ஆசைகள் கிடையாது. அவருக்குப் பொழுது போக்கு புத்தகம் சேகரித்தல், படித்தல், உரையாற்றுதல்; குறிப்பாக ஆன்மீக விஷயங்களில்.

 

வீட்டிற்கு நா. பார்த்தசாரதி, கி.வா.ஜ. ஏ.கே. செட்டியார், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா போன்றோர், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்கள் எனப் பலரும் வருவர். அவர்கள் அமரும் முதல் அறையில் இரண்டு ‘காத்ரேஜ்’ பீரோக்கள் உண்டு. பேச்சு வாக்கில் ஏதேனும் புத்தகத்தை எடுக்க அந்த இரும்பு/எஃகு பீரோவைத் திறப்பார். அதில் பழுப்பேறிய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து வந்தவர்கள் ‘கொல்.லென்று சிரித்து விடுவர்!

 

“என்ன சார்! இது? அவனவன் காத்ரேஜ் பீரோவுக்குள் தங்க நகை, பணப்பெட்டி, பட்டுப்புடவை என்று வைத்திருப்பான். நீங்கள் பழுப்பேறிய புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள்? என்பார்கள். என் தந்தையோ பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். அவர் விட்டுச் சென்ற 6000 புத்தகங்களை, நாங்கள் சகோதர்கள் பிரித்தெடுத்துக் கொண்டு இன்றும் அனுபவித்து வருகிறோம்.

 

ஒரு நாள், என் தந்தையின் சகா (தினமணி உதவி ஆசிரியர்) ஒருவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல இலக்கிய, தெய்வீக, தேசீய தலைப்புகளில் சம்பாஷணை நீடித்தது. தேவி பாகவதம் பற்றிப் பேச்சு வந்தவுடன் வந்தவர் சொன்னார், “எனக்கும் படிக்க ஆசை. நல்ல புத்தகம் எங்கே கிடைக்கும் “ என்றார்.

 

உடனே பீரோவைத் திறந்து, இது நல்ல பதிப்பு. இதைப் படி” என்று சொல்லிக் கொடுத்துவிட்டார். அவர் நல்ல மனிதர். ஒரு சத்திய சந்தர். ஆனால் அவரது சகோதரர் அப்படியில்லை. “கெட்ட மனிதர்”; அதாவது சிகரெட் குடிப்பார். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீசை வைத்துக் கொண்டாலோ, சிகரெட் குடித்தாலோ, பெண் கூட கொடுக்க மாட்டார்கள்!!!!!

 

தேவி பாகவதம் இரவல் கொடுத்து பல மாதங்கள் கழிந்தன. நாங்கள் எங்கள் தந்தையுடன் வழக்கம்போல ‘புத்தக வேட்டை’யாட பழைய புத்தகக்கடைக்குச் என்றோம். மதுரை தெற்குச் சித்திரை வீதியில் அக்காலத்தில் இருந்த பழைய புத்தகக்கடைகளில் என் தந்தைக்கு தனி மதிப்பு. என் தந்தை வரும் நாட்களில் அவர்களுக்கு நல்ல வரும்படி உண்டு. ஒரு ரிக்க்ஷா வண்டி நிறைய புத்தகங்கள் வாங்கி வருவார். பழைய புத்தகக் கடைக்குள் நுழைய எங்களுக்கு முழு அனுமதி உண்டு. நாங்களும் நேரத்தை வீணடிக்காமல், அங்கே படியில் அமர்ந்து, அம்புலி மாமா பிரதிகளை எடுத்துக் கொண்டு, மூன்று மந்திரவாதிகள், டனால் கோட்டை, வால் நட்சத்திரம் முதலிய தொடர்கதைகளைப் படிப்போம்.

இவ்வாறு புத்தகங்களைப் புரட்டும்போது திடீரெனக் கண்ணில்பட்டது தேவி பாகவதம். அது என் தந்தை கையெழுத்துடன், அவர் ரப்பர் ஸ்டாம்புடன் இருந்தது. பழைய புத்தகக்கடைக்காரரிடம் இது என்ன விலை? என்று சிரித்துக் கொண்டே விலையைக் கேட்டார். அவன் சொன்ன விலையைக் கொடுத்து அதை வீட்டுக்கும் கொண்டுவந்தார். பழைய புத்தகக் கடைக்காரருக்குத் தெரியாது எங்கள் வீட்டுப் புத்தகம்தான் இரவல் கொடுக்கப்பட்டு, வட துருவம், தென் துருவம் எல்லாம் பயணம் செய்து, பின்னர் அங்கே விற்கப்பட்டது என்பது.

 

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? யார் இரவல் வாங்கினாரோ அவரது ‘கெட்ட’ சகோதரர், சிகரெட்டுக்கு காசு வேண்டி அந்தப் புத்தகத்தை அங்கே விற்றிருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.

 

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று சொல்லுவதைவிட,

“போன புத்தகம் திரும்பி வந்தது புது மணத்தோட” என்று சொல்லுவது சாலப் பொருந்தும்.

–சுபம்–

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்! (Post No 2852)

coins gold

Article written by S.NAGARAJAN

 

Date: 30 May 2016

 

Post No. 2852

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

வாழ்க்கை முன்னேற்றம்

 

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!

 

.நாகராஜன்

 babay, mother

வாழ்க்கையில் எதிர்ப்படும் பல்வேறு இன்னல்களை எப்படிக் கடப்பது?

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அருமருந்து!

 

என்றாலும் கூட மகான்களிடம் அணுகி ஆசி பெறுவோர் பல் வேறு இடர்களையும் கடப்பது உறுதி.

 

ஜோதிட ரீதியாக ஜோதிட வல்லுநர்களை அணுகினால் அவர்கள் பரிஹார யந்திரங்களை வைத்துக் கொள்ளுமாறு கூறுவர்.

காலம் காலமாக பலன் அளித்து வரும் சில பரிஹார யந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

 

உரிய பிரச்சினைக்குத் தகுந்தவாறு இவற்றைத் தாமிரத் தகட்டில் எழுதி (பொறித்து) வைத்துக் கொண்டால் பிரச்சினைகள் தீரும்.

 

சத்ரு நாசனம்

 

15 22 2 7
6 3 19 18
21 16 8 1
4 5 17 20

 

 

பரீட்சையில் தேறுதல்

 

23 30 2 7
6 3 27 26
29 24 8 1
4 5 25 29

 

 

ரோக நாசனம் (வியாதிகள் தீர)

 

 

13 20 2 7
6 3 17 16
19 14 8 1
4 5 15 18

 

 

தன லாபம்

 

 

44 51 2 7
6 3 48 47
50 45 8 1
4 5 46 49

 

புத்ர ஜனனம்

 

 

42 49 2 7
6 3 46 44
48 43 8 1
4 5 44 7

 

 

திருஷ்டி, செய்வினை தோஷம் விலக

 

 

3 10 2 7
4 3 7 6
9 4 8 1
4 5 5 8

 

பிரயத்தின காரிய ஜயம்

 

 

24 31 2 7
6 3 28 27
30 25 8 1
4 5 26 29

 

 

–Subham-

**********