I laugh when I hear that fish in the water is thirsty! – Kabir (Post No 2734)

Clownfish and anemone

Compiled by london swaminathan

Date: 17 April, 2016

 

Post No. 2734

 

Time uploaded in London :–21-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kabir stamp

kabir stamp

 

The great saint and poet Kabir says

The Jewel

The jewel is lost in the mud,

And all are seeking for it;

Some look for it in the East, and some in the West;

Some in the water and some amongst stones.

But the servant Kabir has appraised it at its true value, and has warpped it with care

In a corner of the mantle of his own heart.

xxx

gem in the rocjk

The Real is in Your Own Home

“I laugh when I hear that fish in the water is thirsty;

You do not see the Real in your home, and you wander from forest to forest listlessly!

Here is the truth! Go where you will, to Benares or to Mathura, if you do not find your soul, the world is unreal to you……

To what sore would you cross, O my heart? There is no traveller before you, there is no road……………..

There, there is neither mind nor body and where is the plae that shall still the thirst of the soul? You shall find naught in the emptiness.

Be strong, and enter into your own body; for there your foothold is firm. Consider it well O my heart! Go not elsewhere.

Kabir says :Put all imagination away, and stand fast in that which you are

Xxx

hairpin bends, ghat section

An Endless World

There is an endless world, O my brother,

And there is a nameless Being, of whom naught can be said:

Only he knows who has reached that region.

It is other than all that is heard or said

No form, no body, no length, no breadth is seen there;

How can I tell you that which it is?

Kabir says: “It cannot be told by the words of the mouth, it cannot be written on paper;

It is like a dumb person who tastes a sweet thing – how shall it be explained?

–Subham–

வீண் பகட்டும், டம்பமும், ஆடம்பரமும் பெண்களுக்கே அதிகம்? (Post No.2733)

girl in lotus pond

Translated by london swaminathan

Date: 17 April, 2016

 

Post No. 2733

 

Time uploaded in London :–14-36

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நியூயார்க் நகர முனிசிபல் பெண்கள் லீக் தலைவி மிஸ் பிரான்ஸிஸ் கெல்லர், ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். இவர், பெண்ணுரிமை இயக்கத்தவர் என்று தெரிந்து ஒருவர் ஒரு ‘காமெண்ட்’ அடித்தார். பெண்கள் வீண்பகட்டு, ஆடம்பரம், டம்பம் உடையவர்கள் என்று.

உடனே அவர் சொன்னார்: உண்மைதான் மறுப்பதற்கில்லை. பெண்கள் ஆடம்பரப் பிரியர்கள்தான். இதற்கு ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. அது சரி! இந்த அறையிலேயே மிகவும் அழகான ஒரு ஆண்மகன், ஏன் தனது ‘டை’ யை தப்பாக –முன் பின்னாக –அணிந்திருக்கிறார்? என்று ஒரு குண்டு போட்டார். அந்த அறையில் ஆறு ஆண்கள் இருந்தனர். அத்தனை பேரும் யாரும் பார்க்காதபடி, மெதுவாக, லாவகமாக, தன் கையை சட்டையின் காலருக்குப் பின்னால் நகர்த்தி தடவிப் பார்த்துக் கொண்டனர்.

 

அந்தப்பெண், ஒரு புன்னகையை நெளியவிட்டாள். (அத்தனை ஆண்களையும் ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கிவிட்டாள். யாரும் ‘டை’யை தப்பாக அணியவில்லை!)

Xxx

 

IMG_4507

டார்லிங்; அது பாவம் இல்லை; மிஸ்டேக்!

 

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பாதிரியார் Fபாதர் ஹீலியிடம் ஒரு அழகான இளம் பெண் வந்தாள். பாவ மன்னிப்புக் கூண்டில் நின்றாள். அந்தப் பக்கம் பாதிரியார் அந்தப் பெண் செய்த பாவம் என்ன என்று அறிய காதை நீட்டினார்

“Fபாதர்! நான் பெரிய தப்பு செய்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று, நான்தான் மிக அழகான பெண் என்று நினைத்து கர்வமடைகிறேன். இந்தப் பாவத்தை மன்னியுங்கள்”.

பாதிரியார் சொன்னார்: இது பாவமில்லை. ஒரு தப்புக் கணக்கே!

(அந்தப் பெண்ணுக்கு ஏன்தான் கேட்டோம் என்று போய்விட்டது. அது வரை அழகி என்று எண்ணியிருந்தாள். பாதிரியாரோ பாவமில்லை.தப்பான அபிப்ராயமே/மிஸ்டேக் என்றார்)

Xxx

நான்தான் உலக மகா எழுத்தாளன்!

உலகப் புகழ் பெற்ற இதாலிய எழுத்தாளர் டி’அனன்சியோவுக்கு பிரான்ஸில் வசித்தபோது ஒரு கடிதம் வந்தது. “இதாலியின் புகழ்மிகு எழுத்தாளர்” என்று எழுதி அவர் பெயரை எழுதியிருந்தார் கடிதம் அனுப்பியவர்.

 

தபால்காரர், பெருமையாக, “பாருங்கள் உங்கள் விலாசத்தைக் கூட முழுக்க எழுதவில்லை. நீங்கள் அவ்வளவு புகழ் மிக்கவர். உங்களுக்கு கடித்தத்தைக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்.

“அவர் நான் இதை வாங்க மாட்டேன். இது எனக்கல்ல” என்றார்.

தபால்காரருக்குப் புரியவில்லை.

“நான் உலக மகா எழுத்தாளன். இதில் இதாலியின் மிகப் புகழ்பெற்ற” — என்று மட்டுமே எழுதியிருக்கிறான். எடுத்துக் கொண்டு போ” – என்றார்.

(அத்தனை அகந்தை)

Xxx

 

rail station

நகர வாழ்வு!

அமெரிக்காவில் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழை நன்கு படித்து நகரத்துக்குச் சென்று வங்கியில் சேர்ந்து மிகப் பெரிய பதவி பெற்று செய்திப் பத்திரிகையில் எல்லாம் படங்கள் வந்திருந்தன. சரி! நம் புகழ் திக்கெட்டும் பரவிவிட்டது நம் சொந்த கிராமத்துக்குச் சென்று எல்லோருக்கும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு வருவோம் என்று புறப்பட்டார். அவர் கிராமத்துக்கு ரயில் வசதி மட்டுமே உண்டு. விமானம் கிடையாது.

 

தன்னை வரவேற்க ஏராளமானோர் மாலை மரியாதைகளுடன் காத்திருப்பார்கள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். ஊரும் வந்தது; ரயிலும் நின்றது. ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஈ, காகா இல்லை. அவருக்கு ஒரே ஆச்சரியம். சரி, ரயில் நேரத்தைத் தப்பாக நினைத்திருப்பாகள். கொஞ்சம் காத்திருப்போம் என்று காத்திருந்தார். பாவம்! யாரும் வரவில்லை. அந்த ரயில்வேஸ்டேஷன் போர்ட்டர் அவரிடம் வந்தான். உடனே அவன் ஏதேனும் வரவேற்பு பற்றி நல்ல செய்தி கொண்டுவந்திருப்பான் என்று ஆர்வத்துடன் அவனருகே போனார். அவன் கேட்டான்:

“என்ன ஸார், வெளியூருக்குக் கிளம்பிட்டீங்களா? எந்த ஊருக்குப் போறீங்க?”

 

–சுபம்–

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5 (Post No 2732)

happy_birthday_100_years_old_card-

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 April 2016

 

Post No. 2732

 

Time uploaded in London :–  6-59  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

இதற்கு முந்தைய நான்கு கட்டுரைகளைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் வெளியாகும்  இறுதிக் கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -5

(ஸ்ரீ நிரோத்பரன் –அரவிந்த ஆசிரமம்)

 

.நாகராஜன்

 

 

FTSHappyBirthday

மஹரிஷி அரவிந்தர் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதைத் தாண்டிய பெரியார் ஸ்ரீ நிரோத்பரன்.

 

ஒரு பெரும் மஹாபுருஷருடன் நெருக்கமானத் தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்ததால் இவர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

மேலும் அரவிந்தர் சாதாரணமாக யாருடனும் பேசுவதுமில்லை; பேட்டி கொடுப்பதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டும் ஆசிரமத்தில் வருகை புரிந்தோருக்கு அவரது தரிசனம் கிடைக்கப் பெறும். அந்த நிலையில் அவருடன் நெருக்கம் கொள்ளும் அபூர்வ பாக்கியத்தைக் கொண்டவர் நிரோத்.

 

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

 

 

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்பட, அரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

 

 

இப்படி சுமார் 4000 கடிதங்களை அவர் எழுதி இருக்கிறார் என்றால் அவரது அருமையை நாம் எளிதில் உணரலாம்.

 

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு  மஞ்சரியாக ‘12 இயர்ஸ் விந்த் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindo) என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

 

 

அரவிந்தரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களைக் கூட அவர் அவரிடமே கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறார்.

ஒரு முறை அவர் அரவிந்தரிடம்,“ஏன் கன்பூஷியஸ், அரவிந்தர் போன்றோர் மண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்?” என்று கேட்ட போது அரவிந்தர், “அது இயல்பானதே! ஆன்மீக மாறுதலுக்கு முன்னர் அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். மாற்றம் வந்த பிறகு திருமணம் பழைய ஆன்மாவிடம் இருந்தது. புதிய ஆளுக்கு இல்லை” என்று பதிலிறுத்தார்.

 

 

 

ஆன்மீக வாழ்க்கையின் இரகசியத்தை அரவிந்தர் ஒரு முறை இப்படி விளக்கினார்: “அதற்கு இரண்டு படிகள் உள்ளன”

முதல் படி என்ன என்பதை அரவிந்தர் பாசு என்பவருக்கு எழுதிய கடிதத்தில்,“அன்னையிடம் சரணாகதி அடைவதே முதல் படி”

 (“One of the two great steps in this yoga is to take refuge in the Mother”) என் று விளக்கினார்.

 

 

அடுத்த இரண்டாம் படி?

 

அதை நிரோத்பரனிடம் அவர் விளக்கினார்: “தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற சாதகனின் துடிப்பான ஆர்வம் (“Aspiration of the sadhak for the divine life.”)

 

 

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த பொக்கிஷம் போன்ற ஆன்மீக ரகசியங்களை அவர் வெளியிட்டது தான்!

 

அவரது நினைவலைகள், கடிதங்கள், அரவிந்தர் வரலாறு, அரவிந்தருடனான அவரது சம்பாஷணைகள் ஆகியவை எந்தவொரு ஆன்மீக சாதகருக்கும் கிடைத்தற்கரிய ஒரு அரும் பொக்கிஷமாகும்.

 

***********                                                       இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது பண்டிட் ஸ்ரீ சாதவலேகர், காஞ்சி பெரியவாள், யோகி ஸ்ரீ கிருஷ்ணமாசார்யா, ஸ்ரீ நிரோத்பரன் ஆகியோரின் நூல்களையும் அவர்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களையும் படித்து அனைவரும் உத்வேகம் பெறலாம். ஹிந்து  மதத்தின் வாழ்க்கை முறைக்கான நேரடிப் பலனை நிரூபித்தவர்கள் அண்மையில், சமகாலத்தில் வாழ்ந்த இவர்கள் என்பதே இவர்கள் அனைவரது பொதுவான தனிச் சிறப்பாகும்.

முற்றும்.

.

 

India- Land of Fine and Noble Manners: Edwin Arnold, Year 1886 (Post No 2731)

nautchee women

Written by london swaminathan

Date: 16 April, 2016

 

Post No. 2731

 

Time uploaded in London :–20-06

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

“On the evening of our visit to the city of Poona and to the sacred hill of Parvati, we were invited to a nautch dance at the house of an old people and most esteemed friend, Mr Dorabji Pudumji.

 

It is the custom on festive occasions to illuminate the gardens and house fronts with numberless oil lamps set on pyramidal stands, or suspended in the trees. A flood of light, therefore, welcomes the guest on arrival, and he passes into spacious apartments equally bright, with candles in brass buttis, or handsome glass chandeliers.  There is nowhere greater grace or cordiality of greeting than among the educated families of India; but, in truth, this is the land of fine and noble manners, and from the cultivated Parsee and Mohammedan friends to the peasant and the peon, the Western traveller may receive, if he will, perpetual lessons of good breeding.

I day 2015

The ladies of old friend’s family were ranged round the large central room in dresses of light gauzy muslins or silks delicately embroidered, and dyed with all the loveliest tints imaginable, rose colour predominating. The effect was like a garden of beautiful flowers. The gentlemen wore black coats and hats of the well-known Parsee fashion, with trousers of crimson or white. In the centre of the apartment sat the two nautch girls, Wazil -Bukshs, a Mohammedan, and Krishnaa, a Hindu, both amazingly arrayed in I skirts of scarlet and gold, with saris of bright hue, plentifully spangled, tight gilded trousers, and anklets of silver and gold bells, which make a soft tinkling of  at every movement of soft brown feet. Behind them stand their three musicians, one playing the sarangi, a sort of violin,  the other the tamboora, a deep sounding kind of violoncello, and the third provided with a bass and treble drum tied round his waist  on an ornamented scarf. The girls rose to their feet, salammed, and one of them began a slow pas, advancing and retreating with a rhythmical  waving of hands and measured beat of foot, which the other dancer then repeated.

 

Next followed a song, or a series of songs, delivered in high head notes, and principally of an amatory character.

“My beloved is absent, and by day there is no sun in the sky, no moon for me at night! But he is coming, ek hath Khali – with one hand empty – yet in that he carries me back my heart.”

 

Then Krishnaa sang the “Taza ba Taza”, the musicians advancing and retreating with her tinkling paces, leaning over the absorbed performer, and seeming in the intensity of their accompaniment to nurse the singing and draw it forth note by note.

 

After this the Muslim girl and her Hindu sister executed together a famous dance called the “Kurrar”, which consists of a series of character pictures. They placed coquettish little caps of spangled velvet on their black hair, and acted first of all the Indian jeune amorexux, adjusting his turban, stroking his moustache and pencilling his eyebrows. The it was Govinda, one corner of the sari twisted up to represent the bansula, on which the light hearted god  piped to the shepherdess, and  Radha listening and singing. Next to the same never ending  rise and fall of the amorous  music – Wazil Bhukshs became a love-sick maiden  in the jungle, picking up blossoms to fasten in her hair, and Krishnaa followed, enacting a serpent charmer. Playing on the beaded gourd that snake  music which brings the hooded cobra forth from his deepest hole, she swayed her lithe body  over the imaginary reptile, chanting the notes of dreamy, bewildering, beguiling song;  bent herself over the half entranced snake, coaxing him with out long , low, weird passages of wild melody , until the charm have supposed to have  triumphed, the serpent was bewildered and captured; whereupon Krishna rose to her feet, and drawing the glittering fringe  of her sari over forehead, expanding it with both hands, so as to resemble a cobra’s hood , she finished with the snake-dance, amid cries of “shabash” (well done)! Which were acknowledged with deep salaams.

We were favoured after this, with special request, with the Holi and Wasanta songs, albeit not of the season; for Hindu singing is always more or less religious, and there are certain of these melodies set apart for the time of  year, and for the daylight and others which must never be given except after the hour of midnight. When the first portion was concluded  the mistress of the house hung “hars” or garlands, of sweet scented blossoms on  the necks and the writs of the nautch dancers, since it is always the custom to honour them in this way before any  other guests. Nor does anybody slight or abuse these Deva dasas, or servants of the god, though their profession is perfectly understood

 

South Indian Devadasis

In southern India the Nautchee is married solemnly to a dagger, by a ceremony called ‘shej’, and lives afterwards as a Bhavin, dedicated to the temple and dance.  But because so many of them can read, write and in fact are the cleverest and most accomplished, as well as the most generous of their sex, the Hindus have come to shudder at the idea of education for their wives, and this is one of the greatest obstacles  to female instruction. When they rested and munched their betel leaf, a skilful player from Canara discoursed singular passages upon an eight stringed sitar, accompanied by a boy on tamboora; and afterwards followed sweetmeats, and attar of roses, whereupon some of us had had enough, and we made adieux. The natives will, however, sit out the whole nights, listening to such music, and watching the soft movements of the Nautchees, which are the more interesting, of course,  the better they are comprehended.”

Source : India Revisited by Edwin Arnold, 1886

 

–Subham–

வேதாந்த தேசிகர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post No.2730)

sri_vedanta_desika_makers_of_indian_literature_idg228

Written by london swaminathan

Date: 16 April, 2016

 

Post No. 2730

 

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

DAYA-SATAKAM_BY_VEDANTA_D

வேதாந்த தேசிகர், ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். நூற்றுக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத நூல்களை யாத்தவர். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர். இவர் இற்றைக்கு 750 ஆண்டுகளுக்கு முன் வழ்ந்தவர். வித்யாரண்ய ஸ்வாமிகளின் சம்காலத்தவர். இவருடைய பாதுகா சஹஸ்ரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

 

காஞ்சீபுரம் அருகிலுள்ள தூப்புலில் அவதரித்த வேங்கடநாதன் (பிற்காலப் பெயர் வேதாந்த தேசிகர்) ஆதி சங்கரர் போலவே இளம் வயதிலேயே வேத, வேதாந்த நூல்களில் கரைகண்டார். அவரைப் போலவே கீதை, உபநிஷதம் முதலியவற்றுக்கு விசிஷ்டாத்வைத பூர்வமாக உரையும் கண்டார். (ஆதி சங்கரர் அத்வைத பூவமாக உரைகண்டர்)

 

 

ஒரு நாள் சிற்பி ஒருவன் தேசிகரிடம் வந்து நீங்கள் சிற்ப நூலிலும் வல்லவராமே; என்னை வெற்றிகொள்வீரானால் உமது ‘சர்வ தந்திர சுதந்திரர் – என்னும் பட்டம் நீடிக்கும் அல்லது உமக்களிக்கப்பட்ட பட்டத்தை விட்டுவிட வேண்டும் என்றார்.

இது சிற்பியின் வேலை அல்ல, தன் மீது பொறாமை கொண்ட கும்பலின் வேலை என்பது வேதாந்த தேசிகருக்கு நன்கு தெரியும். பெருமாளின் அருளுடன் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவரும் போட்டிக்கு இசைந்தார். ஆனால் தான் செய்யும் மூர்த்திக்குப் பீடம் அமைத்து அதை நிறுவும் பணியைச் சிற்பி செய்யவேண்டுமென்று தேசிகர் பதில் நிபந்தனை போட்டார். அதைச் சிற்பியும் ஏற்றான்.

 

என்ன விக்ரகம் செய்வதென்று எண்ணியபோது, அவருக்கு ஆவேசம் வந்தது. இடது கையில் கோசமும், வலது கையில்  ஞான முத்திரையும் உள்ள கோலத்தில் அமைக்கவும் என்று ஸ்ரீரங்கநாதரே உத்தரவிட்டார். அப்படியே தேசிகர், ஒரு விக்கிரகமும் செய்து கொடுத்தார்.

 

விக்கிரகததை வாங்கிய சிற்பி, அதில் கண்பார்வை சரியில்லை என்று சொல்லி, அதைச் சரி செய்வதாக, விக்கிரகத்தின் கன்னத்தில் ஆயுதத்தால் தட்டினான். உடனே எதிரேயிருந்த  தேசிகர் கன்னத்தில் ரத்தம் கசிந்தது. அங்குள்ளோர் உடனே விக்கிரகத்தில் பிழை இல்லை, சிற்பி செய்த பீடத்தில்தான் தப்பு என்று சொன்னார்கள்.

உடனே தேசிகரே பீடத்தை வாங்கிச் சீராக்கி, அதில் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தார். பின்னர் சிற்பி, அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வந்த வழியே திரும்பிப் போனான்.

Xxx

eleven-rahasya-granthas-of-sri-vedanta-desika

டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டிற்குப் படையெடுத்து வந்து, மதுரை ஸ்ரீரங்கம் கோவில்களைச் சூறையாடினான். கோவிலை இடித்து டன் கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்தான். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த பட்டர்கள், மூலஸ்தான விக்கிரகத்துக்கு முன்னால் ஒரு போலிச் சுவர் எழுப்பி அதுதான் கோவில் என்பது போலவும் சிலைகள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டன என்பன போலும் காட்டினர். உற்சவ விக்கிரகங்களை திருமலை/திருப்பதிக்கு அனுப்பினர். அதை எடுத்துச் சென்ற குழுவில் தேசிகரும் ஒருவர்.

 

அக்காலத்தில் செஞ்சி பகுதியை  கொப்பணாரியர் என்பவர் ஆண்டுவந்தார். அவருடைய ஆளுகையிலிருந்த அழகிய மணவாளம் என்ற கிராமத்திலிருந்த  சிங்கப்பிரான் என்பவன், முஸ்லீம் படைத்தலைவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய நம்பிக்கையைப் பெற்றான். எல்லா செல்வங்களையும் கொள்ளையடித்து அவனிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னான். துருக்கப்படைகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.

 

செஞ்சி அரசன் கொப்பணாரியனுக்குச் சிங்கப்பிரான் ஒரு ரகசிய கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட நாளன்று ஸ்ரீரங்கம் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைப்பதாகவும், செஞ்சி அரசன் படைகளுடன் வந்து அதைக் கைப்பற்றலாம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தான். அந்தத் திட்டப்படி செஞ்சி அரசனும் திருவரங்கத்துக்குப் படைகளுடன் வந்து சேர்ந்தான். சிங்கப்பிரான், முன் ஜாக்கிரதையாக கண்ணனூரில் தங்கியிருந்த படைகளுக்கு மதுபான விருந்து வைத்து அதில் மயங்கி மூழ்கும்படி செய்து வைத்தான். கோட்டைக்குள் புகுந்து கோவிலுக்குள் வந்த செஞ்சி அரசன், அங்கு இருந்த மிலேச்சர்களை விரட்டிவிட்டு, வைணவ ஆச்சார்யார்களை மீண்டும் அழைத்து, கோவிலைச் சுத்தம் செய்து, அலங்கரித்து மீண்டும் உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்தார். மூலத்தானத்திலுள்ள கல்திரையை அகற்றி பெருமாள் சேவையை முன்போல் மீண்டும் துவக்கினார்.

 

திருவரங்கத்தில் நடந்த இந்த விருத்தாந்தங்களையெல்லாம் கேட்டறிந்த வேதாந்த தேசிகர் தம் பரிவாரம் புடை சூழவந்து பெருமாளைத் தரிசித்து ஆனந்தப் பரவசக் கடலில் மூழ்கினார். அப்பொழுது கோவிலிலிருந்த பட்டரின் வேண்டுகோளின்படி கொப்பணாரியர் செய்த அரும்பணியை இரண்டு ஸ்லோகங்களில் பாராட்டினார்.  அவை சேனை முதலியார் பிரகாரத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.

 

அவர் பாடிய பாடலின் பொருள்:-

“நீல நிறமான சிகரங்களோடு கூடி மக்களுக்குப் ப்ரீதியை உண்டாக்குகிற அழகிய மணவாளனை, உபய நாச்சிமாருடனும், திருமலையிலிருந்து இங்கே எழுந்தருளப் பண்ணி, (அதற்கு முன்) செஞ்சி  நாட்டிலே சில நாள் ஆராதனம் செய்வித்துப் பிறகு, துருக்கரை வெற்றி கொண்டு, பெருமாளை அவரது இடத்தில் எழுந்தருளச் செய்த, ஸ்படிகம் போல மாசுமருவற்ற புகழுடைய   கொப்பணாரியர் விசேஷமான பணிகளைச் செய்து ஸ்ரீரங்கத்தில் மீண்டும் கிருதயுகத்தை உதிக்கச் செய்தார்.”

VEDANTA_DESIKA_HIS_LIFE_WORKS_PHILOSOPHY_by_Satyavrata_Singh_Chowkhamba_Sanskrit_Series_1958

இதற்குப் பின்னர், தேசிகர் நாள்தோறும், அழகிய மணவாளனுக்கு மங்களாசாசனம் செய்துகொண்டு சுகமாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.

–சுபம்–

சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்! (Post No 2729)

A total solar eclipse – but cloud cover means Australia's best viewing area might get only a glimpse

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 April 2016

 

Post No. 2729

 

Time uploaded in London :–  6-34  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பாக்யா 8-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணமும்  மன்னர்கள் மரணமும்!

 

ச.நாகராஜன்

 

solar-eclipse

“சுக்கிரனின் சஞ்சாரம் என்பது பிரமாதமான ஒரு விஷயம் இல்லை. ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன்

 

 

பவேரியா மன்னனான லூயி 840ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்றைப் பார்த்தான். பின்னர் உடனே அவனது மரணம் சம்பவித்தது. அவனது மூன்று மகன்களும் அரசுரிமைக்காகச் சண்டையிட ஆரம்பித்தனர். மூன்று வருடங்கள் கழித்து இந்த உரிமைப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் மூன்றாகப் பிரிந்தது. அந்த மூன்று நாடுகள் தான் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி!

 

 

1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் பார்க்கும்படி நிகழ்ந்தது. இங்கிலாந்து மன்னர்  முதலாம் ஹென்றி இந்த கிர்கணம் முடிந்தவுடன் நார்மண்டி என்னும் இடத்தில் இறந்து விட்டார். ஜெர்மானியிலோவெனில் அகஸ்பர்க் என்ற நகரில் வாழ்ந்து வந்தோரை ட்யூக் ஃப்ரடரிக் என்ற பிரபு கொலை செய்ததால் ஜெர்மனியே துயரில் ஆழ்ந்தது.

 

 

மன்னன்  மூன்றாம் ரிச்சர்டுக்கு சூரிய கிரகணம் என்றாலே பிடிக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரிட்டனில் 531 வருடங்களுக்கு முன்னர் 1485ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் முடிந்தவுடன் ரிச்சர்டின் மனைவி இறந்து விட்டார். ஐந்து மாதங்கள் கழித்து ரிச்சர்டும் போஸ்வொர்த் என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். கதை இத்துடன் முடியவில்லை. 527 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் உடல் 2012இல் மறுபடியும் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

இள்வரசி டயானா பரிதாபகரமாக ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார்.  1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சூரிய் கிரகணம் நிகழ்ந்ததற்கு முதல் நாள்  இந்த விபத்து நேர்ந்தது.

 

வரலாற்று ஆசிரியரான யூயார்சுகியாடி சூரிய கிரகணமும் மன்னர்கள் ம்ரணமும் என்பது பற்றி ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார். தாய்லாந்து வரலாறு பற்றி இவர் ஆராய்ச்சி செய்ததால் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய சுவையான தகவல்களை இவர் தந்துள்ளார்.

 

solar britain

1699ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை நராய் என்னும் மன்னன் பார்த்தான். அவன் சூரிய ராஜா என்று புகழப்பட்ட பதினான்காம் லூயியுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டிருந்தான்.பொழுதுபோக்காக வானியல் நிகழ்வுகளை ஆராய்வது நராயின் வழக்கம்.. அவன் நாட்டிற்கு வந்த பிரெஞ்சு மிஷனரிகள் கூறிய பீஜிங்கில் நிறுவப்பட்ட வானியல் ஆய்வுக் கூடம் பற்றிக் கேள்விப்பட்ட் அவன் தனது நகரிலும் அது போல ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பி லாப்பூரி என்ற இடத்தில் இருந்த தன் அரண்மனையில் அமைக்கச் சொன்னான். அங்கு அமைக்கப்பட்ட வானியல் கூடத்திலிருந்து தான் அவன் இந்த கிரகணத்தைப் பார்த்தான்.அவனுடன் கூட இருந்து கிரகணத்தை அவனது அரசவை பிரபுக்களில் ஒருவனான பெட்ராச்சாவும் பார்த்தான். பெட்ராச்சாவின் ஜோதிடர்கள் வானில் வரும் பெரிய அறிகுறி அவன் மன்னனாகப் போவதற்கான அறிகுறி என்று தெரிவித்திருந்தனர்.

 

 

 

இந்த நிகழ்வைப் பார்த்த பெட்ராச்சா, :’தனக்கான அறிகுறி’ அது தான் என்று நம்பினான். எங்கே மன்னன் நராய் மிஷனரிகளின் பேச்சைக் கேட்டு கிறிஸ்தவ மதத்திற்குத் தழுவி விடுவானோ என்று பயந்த பெட்ராச்சா நராயைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினான். மிஷனரிகள் உள்ளிட்ட அயல் நாட்டார் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஜோதிடர்கள் கூறிய படியே வானியல் நிகழ்வு ஒன்று அவன் மன்னனாக வழி வகுத்தது!

 

 

அடுத்து ஒரு சூரிய கிரகணம் 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்தது. தாய்லாந்தில் அப்போது மன்னனாக இருந்தவன் சயாமைச் சேர்ந்த மாங்குட் என்பவன். இந்த கிரகணத்தைப் பார்க்க அவன் வா கோ என்ற கிராமத்திற்குச் சென்று அதைப் பார்த்தான். (இந்த மன்னனாக யூல் பிரின்னர் 1956ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி கிங் அண்ட் ஐ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்)

 

 

மன்னனாக ஆவதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாங்குட் ஒரு பிட்சுவாக இருந்தான். ஐரோப்பிய வானவியலையும் கணிதத்தையும் அப்போது மாங்குட் நன்கு கற்றிருந்தான். தனது தேசத்திய சயாமிய வானவியலிலும் அவன் தேர்ந்திருந்தான். அது அவ்வளவு சரியாக இல்லை என்பதை உணர்ந்த அவன் அறிவியல் முறைப்படி காலண்டரையே மாற்றினான். தனது கணிதத்தின் படி சரியான நேரத்தைக் கணித்த அவன் கிரகணத்தைப் பார்க்க சிறந்த இடம் என்று வா கோ கிராமத்தையும் தேர்ந்தெடுத்து ஏராளமான அயல்நாட்டார், பிரெஞ்சு மிஷனரிகள் உள்ளிட்டோருடன் அங்கு முகாமிட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வா கோவில் மலேரியா ஜுரத்தினால் பீடிக்கப்பட்டு அவன் மரணமடைந்தான். இன்றும் தாய்லாந்து மக்கள் ம்ன்னன் மாங்குட்டை மறக்கவில்லை.

TSE99alderney1

 

 

அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இன்றும் கூட தாய்லாந்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசீய அறிவியல் நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

சூரிய கிரகண நிகழ்வுகளையும் மன்னர்களையும் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்!

 

stamp alexis

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும் பிரபல உயிரியல் விஞ்ஞானியுமான அலெக்ஸி காரல் (தோற்றம் 28-6-1873 மறைவு 5-11-1944) Alexis Carrel மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1912ஆம் ஆண்டு பெற்றவர். பெரிய பகுத்தறிவுவாதியாக கடவுள் ந்மபிக்கையற்று இருந்த அவர் ஆத்திகவாதியாக மாறியது எப்படி? 1902ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் தான். அன்றைய தினம் அவர் ஒரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பயணம் செய்த ஒரு மேரி பெய்லி என்னும் பெண் மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த் நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த அலெக்ஸி காரல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார்.

book alexis2

லூர்துவிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள ம்ருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துவின் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வ்யிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இதைப் பார்த்த அலெக்ஸி காரலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அநேகமாக இறந்து விட்ட ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது. பெரும் ஆத்திகராக் மாறிய் அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த க்ட்டுரைகளில் ஒன்றாக் அது இன்று வரை போற்றப்படுகிறது!

carel

*************
 

 

 

 

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 1 (Post No 2728)

todu spare1

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2728

 

Time uploaded in London :– 21-02

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

மொத்தம் 64 கட்டங்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு தொடலாம் அல்லது ஒரு சிறுவனைக் கொண்டு தொடச் சொல்லலாம். அல்லது ஜோதிடம் கேட்க வருவோரை 111 அல்லது அதற்கு மேலே ஒரு எண்ணைச் சொல்லும்படி கேட்கலாம். பின்னர் ஒவ்வொரு எண்ணுக்குமுள்ள பாடலைப் படிக்கவும். சுருக்கமான பொருளும் கொடுக்கப்பட்டுளது.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

toduspare2

 

toduspare3

 

toduspare4

 

todu5

 

todu6

 

todu7

 

todu8

 

todu9

 

todu10

 

todu11

 

todu12

 

 

தொடரும்………………….

இரண்டாம் பகுதிக்குச் செல்க.

–சுபம்–

 

 

உங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்! –பகுதி 2 (Post No 2727)

todu12

Hindu Astrology – Magic Square (I will give the English Translation separately)

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2727

 

Time uploaded in London :– 17-26

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது முன்னோர்கள் பல வழிகளைக் கையாண்டனர். ஜோதிடரிடம் ஜாதகத்தையோ, கைரேகையையோ காட்டி பலன் அறிவது அல்லது ரோட்டில் “சோசியம் பார்க்கல்லியோ, சோசியம்!” என்று கூவிக்கொண்டுவரும் நரிக்குறத்தி அல்லது குறிபார்க்கும் பெண்ணிடம் கேட்பது, அல்லது கோவில் மதில்சுவரை ஒட்டிக் கடை போட்டுள்ள கிளி ஜோதிடனிடம் கேட்பது என்று பல வழிகள் உண்டு. ஆனால் இதற்கு பணம் கொடுக்கவெண்டும்.

 

வீட்டிற்குள்ளேயே சுவாமி படத்துக்கு முன்னால் சீட்டு எழுதிப் போட்டு, உண்டா, இல்லையா? செய்யலாமா, செய்யக்கூடாதா? என்றும் பார்ப்பதுண்டு. நாம் படிக்கும் தேவாரம், திவ்யப் பிரபந்தம், ராமாயணம், பகவத் கீதை முதலிய புனித நூல்களில் ஒரு கயிறு அல்லது நூலை நுழைத்து அந்தப் பக்கத்திலுள்ள செய்தியின் படி சுபமா, அசுபமா என்று அறிவதுமுண்டு. இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே  கட்டுரை எழுதிவிட்டேன்.

 

 

நமது பஞ்சாங்கத்தில் சிறிதாக, சீதா-ராம சக்கரங்கள் உண்டு. பலரும் பார்த்த்திருப்பீர்கள். ஆனால் அதில் ‘கலகம்’, ‘நாசம்’ போன்ற சொற்கள் நம்மை மிரட்டுவதால் பலரும் அதைத் தொடுவதில்லை. இதன் பெரிய வடிவம்தான் இந்த தொடுகுறி சாஸ்திரம். இந்தப் புத்தகத்தை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். 16 பக்கம் என்பதால் புத்தகம் முழுதையும் ‘காப்பி’ எடுத்தேன். இது பஞ்ச பாண்டவர்களில் சோதிடத்தில் வல்லவனான சகதேவன் அருளியது என்று புத்தகத்திலுள்ள பாடல் கூறும்.

 

 

நம்பிக்கையுடையோர், குளித்துவிட்டு மடியாக/சுத்தமாக, பூஜை அறை அல்லது கோவிலில் ஒரு கட்டத்தைத் தொட்டு அதற்கான பலனை அறியலாம். சாதகமான விடை வராவிடில் கடுமையான பிரார்த்தனைக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறைதொட்டுப் பார்க்கலாம். அப்பொழுதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல சகுனம்/ பதில் கிடைக்காவிடில், “கடவுளே நீ தருவதை நான் ஏற்கிறேன், அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் தடு அல்லது அதை புல்லென மதிக்கும் இரும்பு மனத்தை எனக்கருளுவாயாக” என்று மனமாறப் பிரார்த்திக்கலாம். அர்ஜுனன் மீது ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தை, கண்ண பிரான் அருளால், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் (கிரீடத்துடன்) போனது என்று தடுத்தாட்கொண்டது போல நமக்கும் கண்ணன் அருள் கிட்டும்.

-சுபம்-

இதோ தொடுகுறி சாஸ்திரம்:–

 

todu13

 

todu14

 

todu15

 

todu16

 

todu17

 

todu18

 

todu19

 

todu20

 

todu21

 

todu22

-subam–

‘Women are vainer than Men’ – Disproved!(Post No.2726)

pen by maruthi

Compiled by london swaminathan

Date: 15 April, 2016

 

Post No. 2726

 

Time uploaded in London :– 14-57

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Anecdotes about VANITY

It is not a Sin, it is a Mistake!

A young girl came to Father Healey of Dublin and confessed that she feared she had incurred the sin of vanity.

“What makes you think that?” asked Father Healey.

“Because very morning when I look into the mirror I think how beautiful I am.”

“Never fear, my girl, was the reassuring reply.

“That is not a sin, it is only a mistake.”

 

Xxx

Headstrong!

While D’Annunzio was living in France, a letter addressed to him simply with the words

To

“Italy’s Greatest Poet”

He declined to accept it, saying that he was not Italy’s greatest poet — he was the World’s Greatest Poet!

 

Xxx

 

pen from face book

Who is vain? Man or woman?

Miss Frances Keller of the Women’s Municipal League of New York illustrated at a dinner party a point she wished to make in reply to a man who had said,

“Women are vainer than men.”

“Of course”, Miss Keller answered, “I admit that women are vain and men are not. There are a thousand proofs that this is so. Why, the necktie of the handsomest man in this room is even now up the back of his collar.”

 

There were six men present and each of them put his hand gently behind his neck!

Xxx

265px-Walsall_railway_station.p5

City life and Village life

A young man, who had come to the city from a small rural community, had toiled diligently until at last he had attained some prominence in the banking world.

Belatedly he returned for a visit to his home town, half expecting that the greater part of the community would be marshalled out to meet him at the station, and that some considerable fuss would be made over the local boy who had made good.

To his disappointment, there was not a soul around when he alighted at the station platform. He waited doubtfully as several people came and went, none of them giving him so much as a glance.

At last he was recognised by an old baggage handler who shuffled forward and looked at him with some interest, “Hello, George!”, he said at last, “going away?”

–Subham–

 

யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா (Post No.2725)

4bb116e0a41af94e-Krishnamacharya_Anjali_Mudra

WRITTEN BY S NAGARAJAN

Date: 15 April 2016

 

Post No. 2725

 

Time uploaded in London :–  9-38  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வேத வழி

 

இதற்கு முந்தைய மூன்று கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் நான்காவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -4

(யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா)

 

.நாகராஜன்

 jnanayoginet_whois3

யோகம் காட்டிய நெறியில் வாழ்ந்து நூறு வயதை எட்டிய பெரியவர் யோகி ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாசாரியா.

1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிறந்த இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்து 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.

 

 

யோகா முறையை அதன் அற்புத பலன்களை நிரூபித்து எங்கும் பரப்பிய இவரது வாழ்க்கை முழுவதும் அதிசயமான சுவையான சம்பவங்கள் நிறைந்த ஒன்றாகும்.

 

 

மைசூர் மஹாராஜா கிருஷ்ண ராஜ உடையார் (1884-1840) தன் தாயாரின் 60வது பிறந்த தினத்தைக் கொண்டாட காசி சென்றார். அங்கு யோகி கிருஷ்ணமாசார்யாவின் பெருமையைக் கேட்டறிந்து அவரைச் சந்தித்தார். தம்முடன் மைசூர் வருமாறு அவரை அழைத்தார். அதை ஏற்ற கிருஷ்ணமாசார்யா மைசூருக்குக் குடியேறினார். மைசூர் அரண்மனையில் யோகம் கற்பிக்க ஆரம்பித்தார்.

 

 

யோகத்தின் அபூர்வ ஆற்றல்களைப் பரப்பும் விதமாக தானே ப்ல நேர்முக செய்முறை விளக்கங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் செய்து காண்பித்தார்.

தனது நாடித்துடிப்பை அவர் நிறுத்திக் காட்டினார். உலகமே அதிசயித்தது.

 

 

வெறும் கையினால் ஓடுகின்ற காரை நிறுத்திக் காட்டினார். தனது பற்களால் கனமான பொருள்களைத் தூக்கிக் காட்டினார்.

மைசூர் மஹாராஜாவின் மறைவுக்குப் பின்னர் சென்னையில் குடியேறிய அவர் அங்கு யோகா பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தார்.

 

 

ஆயுர்வேதத்திலும் மிகுந்த பயிற்சி உடையவராதலால் பல நோய்களைக் குணப்படுத்தும் அபூர்வ ஆற்றலும் அவருக்கு இருந்தது.

 

 

யோக மகரந்தம், யோக ரகஸ்யம் உள்ளிட்ட பல் நூலகளை அவர் இயற்றியுள்ளார்.

 

 

1935ஆம் ஆண்டில் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தெரீஸ் ப்ராஸ் என்ற கார்டியாலஜிஸ்ட்   (There Brosse) முன்னர் அவன் தனது இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டினார். தனது கருவி மூலம் அவரது இதயத்துடிப்பைக் கண்காணித்த ப்ராஸ் அது ஜீரோவைக் காட்டவே திகைத்துப் போனார். மருத்துவ ரீதியாக யோகி கிருஷ்ணமாசார்யா‘இறந்து விட்டதாகவே’கூற வேண்டும் என்றார் அவ்ர். பல வினாடிகள் இந்த நிலை நீடித்தது. பின்னர் இயல்பான நிலைக்கு அவர் வர இதயத்துடிப்பு வழக்கம் போல இயங்க ஆரம்பித்தது!

1961ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இப்படி இதயத்துடிப்பை நிறுத்துவோரை ஆராய வந்த ஒரு குழுவினர் முன்னும் அவர் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார். உலகமே யோகத்தின் அற்புத ஆற்றலைக் கண்டு வியந்தது!

 

 

96ஆம் வயதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவர் மறுத்து விட்டார். படுக்கையில் இருந்தவாறே பல பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை குணப்படுத்திக் கொண்ட அவர் நூறாண்டு நிறை வாழ்வை வாழ்ந்தார்.

 

 

அவருக்கு யோகாவில் பல சிஷ்யர்கள் உருவாயினர். அவர்கள் அவர் காட்டிய வழியில் யோக முறையைப் பரப்பும் நற்பணியை மேற்கொண்டனர்.

 

 

நவீன அறிவியல் யுகத்தில் யோகாவின் ஆற்றலையும் பெருமையையும் உலகிற்குக் காண்பித்த அவர், யோகா நெறியின் படி வாழ்ந்தால் நூறு என்ற பூரண வயதை எட்ட முடியும் என்பதை நிரூபித்தார்.

yogi

வேத வழியில் வாழ்ந்த பெரியோர்களின் பட்டியலில் யோகி கிருஷ்ணமாசார்யாவுக்குத் தனியிடம் உண்டு.

*****                                                           (அடுத்த கட்டுரையுடன் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும்)