மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள்

soothsayer-1a

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1281; தேதி: 11 செப்டம்பர் 2014

மகாவம்சம் என்றால் என்ன?

இது பாலி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாறு. இலங்கையின் வரலாறு என்பதைவிட இலங்கையில் புத்தமதம் பரவிய வரலாறு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை என்னும் நாடு இராமாயண காலத்தில் இருந்தே வாழும் நாடு. இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் மன்னன் இலங்கையில் வந்து இறங்கிய நாள் முதல் மஹாசேனன் (கி.மு. 543 முதல் கி.பி. 361 முடிய) என்ற மன்னனின் ஆட்சி முடியும் வரையுள்ள இலங்கையின் வரலாற்றை இன்னூல் இயம்புகிறது.

காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற ரகுவம்சம் என்னும் காவியம் சூரியவம்ச அரசர்களின் அருமை பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது. அதை மனதிற்கொண்டு மஹாவம்சம் என்று பெயரிட்டனர் போலும்.

அக்கால சோதிட, ஆரூட நம்பிக்கைகளைச் சுருக்கித் தருகிறேன்.

சங்க காலத் தமிழரின் ஜோதிட நம்பிக்கைகள், கிளி ஜோதிடம் பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். மஹாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஆருடக்காரர்கள் எப்படி அதைச் சொன்னார்கள் என்று எழுதப்படவில்லை. குஷ்டரோகிகளும் குருடர்களும் கூட ஆரூடம் சொன்னதை அது எடுத்துரைக்கிறது. ஒருவேளை உள்ளுணர்வால் (இன் ட்யூஷன்) அல்லது சாமுத்ரிகா லட்சணத்தால் இப்படிச் சொல்லி இருக்கலாம். இந்தியாவில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்துக்கூட மந்திரி ஆவாய், அரசன் ஆவாய் என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

adilabad kili
ஆரூடம் 1

பாண்டு அபயன் பட்டாபிஷேகம் என்பது பத்தாவது அத்தியாயத்தின் பெயர். அவனைக் கொல்ல பல சதிகள் நடந்ததால் ஒளிந்துவாழ வேண்டிய நிலை. அப்போது பண்டுலா என்னும் பணக்கார, வேதம் கற்ற பிராமணன் அவனைச் சந்தித்து நீ தான் பாண்டு அபயனா என்று கேட்கிறார். அவன் ஆம் என்றவுடன் நீ அரசன் ஆகப் போகிறாய், எழுபது ஆண்டுகள் அரசாட்சி புரிவாய். இப்போதே ராஜ தர்மங்களைக் கற்றுக் கொள் என்கிறார். அவனும் அவருடைய மகன் சந்தனும் அவருக்கு அரசாளும் கலையைக் கற்றுத் தருகின்றனர்.

இதில் வேறு சில உண்மைகளையும் உய்த்தறியலாம். 2600 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஒரு கிராமத்தில்கூட வேதம் கற்ற பிராமணன் இருந்தான். அவன் பணக்காரன். அவன் முக்காலமும் உணர வல்லவன். அவன் மாற்றானுக்கு பிரதிபலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்தான். அவனும் அவன் மகனும் போர்க்கலையிலும் ராஜ தந்திரத்திலும் வல்லவர்கள்.
அர்த்தசாஸ்திரம் என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன நாம் எல்லோரும் அறிவோம்

மஹாபாரத காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் தான் பாண்டவ ,கௌரவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் எனபது நமக்குத் தெரிந்த விஷயமே. இலங்கையில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கற்றறிந்த பிரமணன் இருந்தான் என்றால் தமிழ்நாடு என்ன சளைத்ததா?

ஒல்காப்புகழ் தொல்காப்பியனுக்கே, நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தான் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தார். அவருக்கு முன்னால் அகத்தியன் என்னும் வேதியன் என்பான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.

1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான் (பாரதியார் பாடல்)

ஆரூடம் 2

மகாவிகாரை என்னும் 15-ஆவது அத்தியாயத்தில் மன்னனிடம் தேரர் கூறுகிறார்: உன்னுடைய சகோதரன் மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயகதீசன் இனிமேல் அரசன் ஆவான். அவன் மகன் கோத அபயன், அவன் மகன் காகவனதீசன், அவன் மகன் அபயன் ஆகியோர் அடுத்தடுத்து அரசன் ஆவர். அபயன் என்பவன் துட்டகாமனி என்னும் பெயருடன் புகழ்பெற்று விளங்குவான் என்பது ஆருடம்.

புண்ய புருஷர்கள், சாது சந்யாசிகள் ஆகியோர், எதிர்காலத்தை உணர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. மக்கள் அவர்கள் சொல்வதை நம்பினர் என்பதை மஹாவம்ச சரிதம் காட்டுகிறது. இது போன்ற விஷயங்கள் பவிஷ்ய புராணத்திலும் இருக்கிறது.

Congress Yagna

Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi doing Yagas as instructed by their astrologers. Individually they won the elections, but their party failed miserably!

ஆரூடம் 3

12 அரசர்கள் என்ற 35-ஆவது அத்தியாயத்தில் வசபன் என்ற லம்பகர்ணன் அரசன் ஆவான் என்று ஒரு ஆருடம் இருந்தது. அவனைப் பார்த்த ஒரு குஷ்டரோகியும் கூட இதை அவனிடம் சொல்கிறான். முன்னரே வசபன் என்ற பெயருள்ளவன் அரசன் ஆவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயர்கொண்ட எல்லா வாலிபர்களியும் தீர்த்துக் கட்டினான் மன்னன். அப்படியும் ஆருடப் படியே ஒரு வசபன் அரசன் ஆனான். உடனே தனது ஆயுட்காலம் பற்றி ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். அவன் இவனுக்கு 12 வருடமே ஆயுள் என்றவுடன் புத்தமத தேரர்களைச் சந்தித்து ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிகிறான். அதன்படி தான தருமங்களைச் செய்கிறான்.

ஆரூடம் 4

13 அரசர்கள் என்ற 36-ஆவது அத்தியாயத்தில் ஒரு அந்தகன் ஆரூடம் சொன்ன அதிசய சம்பவம் வருகிறது. சங்கதீசன், சங்கபோதி, கோதகாபயன் என்ற மூன்று லம்பகர்ணர்கள் நடந்துவரும் காலடி சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு கண்பார்வையற்ற ஆள், மூன்று மன்னர்களை இந்த மண் தாங்கிநிற்கிறது என்றான். அவர்கள் மூவரும் விஜயகுமரன் என்ற அரசனிடம் சேவகம் செய்து பின்னர் அவனைக் கொன்றுவிடுகின்றனர். சங்கதீசன் என்ற லம்பகர்ணனை மற்ற இருவரும் சேர்ந்து முடி சூட்டுகின்றனர்.

இந்த சம்பவங்கள் அக்காலத்தில் ஜோதிடர்கள் இருந்ததையும் அவர்களை மன்னர்கள் அல்லது எதிர்கால மன்னர்கள் கலந்தாலோசித்தனர் என்பதையும் காட்டுகின்றன.

அடுத்தாற்போல “மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”, “மகாவம்சத்தில் படுகொலைகள்”, “மகாவம்சத்தில் தமிழ் வரலாற்றுச் செய்திகள்” என்ற ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும்.

( கட்டுரைக்கு உதவிய மூல நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சென்னை, 1962)

Miracles in Mahavamsa!

????????????????????????

Research paper by London swaminathan
Post No. 1280; dated 10th September 2014.

Mahavamsa Research article No-2. Yesterday I posted “Astrology in Mahavamsa”.

There are lot of miraculous anecdotes in the Mahavamsa as any old book would have. Some of the stories have remarkable coincidence with Sangam Tamil Period anecdotes. Stories resembling Manuneethi Choza and Kumanan episodes of Sangam age are in the book. Buddha’s miracles in Sri Lanka are also reported in the book. If we get rid of the miracle portion of those stories, we can get some historical information.

What is Mahavamsa?
Mahavamsa is a book in Pali language narrating the history of Kings of Sri Lanka. It gives a continuous history from the date Vijayan from Bengal ( India ) landed in Sri Lanka. It covers the period between 543 BCE and 361 CE. The book was called Mahavamsa following the Raguvamsa of Kalidasa in which Kalidasa gives history of solar race that ruled Northern India. Mahavamsa means Great Dynasty or Great Chronicle.

Miracle 1
In the chapter 10 on consecration of Pandu abhayan, we hear about a miracle of banyan leaves changing into gold cups. Later the princess was called Swarnapali (Swarna means god). We have similar stories in Mahabaharta. Whoever donates food can change something into gold. Half of A mongoose changes into gold by rolling on the leftover food of a poor charitable family.

srilanka landing

Miracle 2
In chapter 11 on King Devanampiya Tissa, we hear about miracles of gemstones coming out of earth on its own. Eight types of pearls were heaped on sea shores. He decided to send them as gifts to his friend, the great king of India, Asoka. But they had never met until then. It is similar to Tamil king Kopperunchoza and poet Pisiranthaiyar who became great friends without meeting.

Miracle 3
A few “earth quake miracles” are in Mahavamsa. In Chapter 15 on The acceptance of the Mahavihara, when the king donated the Mahamegha park area to the Buddhist brotherhood, the earth shook. The king asked the (thera) Guru why the earth quaked, and he said, “Because the doctrine is founded in the island”. When the thera scattered the jasmine flowers given by the king, again the earth shook. Now the thera gave another explanation about the Bhodi tree getting rooted in the island.

sl stamps2

Miracle 4
A lot of miracles are about Buddha or his disciples travelling through sky and landing like air planes. We hear about such stories in the Hindu Puranas. Narada is one of the space travellers. He is an interplanetary and inter galactic traveller according to Hindu mythology. This type of miracle is found throughout Mahavamsa.(Eg.Chapter 14)

Miracle 5
In Chapter 17- The Arrival of the Relics, the urn containing Buddha’s bones and ashes rose in the air from the back of an elephant to the amazement of the king and the people.

Miracle 6
In the chapter 19- The Coming of the Bodhi Tree, the tree rose into air 80 cubits high and was floating and sending forth six colour rays. When it landed the earth shook. Though Hindus wore worshipping trees from time immemorial, Sri Lankan Buddhists took the tree worship to new heights. It was worshipped, decorated, taken into processions and temples were built over them.

sl4

Miracle 7
In the chapter 28 on building a Thupa, we hear about iguana miracle. Hindus have similar stories in most of the temples: some animals or birds worshipping or indicating the divinity or sanctity of the place. Here an angel appeared in the form of an iguana and led the hunters to a brick kiln. He immediately informed the king about bricks in the middle of the forest which can be utilised for building a Stupa. Later different types of precious metals and gem stones appeared everywhere. People gathered them and presented them to the king.

???????????????
Miracle 8
I have already reported Elephant Miracles from Indian literature separately. We have such reports in Mahavamsa as well. One of them is in chapter 35- Twelve Kings. A servant maid takes a child to an elephant to be beheaded by the elephant. When she said to the elephant that the queen has sent the child for beheading, the elephant cried and went to the prison where the king was imprisoned. It broke open the prison gates and took the king on its back and helped him to cross the river. He came back after three years with a big army and won his territory back and the same elephant was made the royal elephant.
Tamil literature is full of elephant miracles:
a)Tamil saint Murthy Nayanar was crowned as a king by an elephant
b)Famous Tamil king Karikalan was made a king by an elephant.
c)Mighty king Mahendra Pallava sent an elephant to behead saint Appar, but it refused to kill him.
d)Tamil Choza king ordered beheading of a child, but a bold poet stopped it
e)An elephant stopped grazing the crops and listened to a Tamil girl’s song.
f)Kanchi Paramacharya made one hesitant elephant to be on its track again.
g)U.Ve.Swaminatha Iyer, Doyen of Tamil literature, also gave a similar story about a crying elephant in his essays.
h)The elephant name Asvattama changed the course of the Mahabharata war.
i)Kalidasa gives information about elephant bridge for the army.
j)Hannibal took the first elephant to Europe.
k)Hindus lost war because of cats scaring the elephants in North West Frontier.
l)Pallavas had a mysterious elephant crown like an Indo-Greek king.
m)Tiruvanaikaval Temple is based on a spider and elephant story.
n)Gajendra Moksha story happened again in African jungle
o)Buddha tamed elephant Nalagiri
p)Udayana and Kovalan tamed elephants.
q)Hindu temples and religious Mutts do Gaja Puja (Elephant worship) every day.

I have posted all the proverbs and anecdotes about elephants in my earlier posts. So Mahavamsa story is not uncommon.

sl stamp3

Miracle 9
I have reported all the Rain Miracles separately. We have a similar rain miracle in Chapter 36- Thirteen Kings. King Sangabhodi made a vow to bring rain to drought affected areas. He went into Maha Vihara (Buddhist temple) and lied in the corridor. Until the Devas (angels) bring rains to my land I woudn’t budge an inch. I will die here if there is no rain, he said. Immediately there was copious rain which was brought by the Devas.

There are a lot of miracles about Buddha’s visit to the island in The Mahavamsa.

contact swami_48@yahoo.com

ஆரிய பாரதி வாழ்க!

mahakavi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1279; தேதி: 10 செப்டம்பர் 2014

தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழால் உயிர்பெற்ற பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. அந்தக் கவிஞன் பெயரைச் சொன்னாலேயே போதும். நம் நாவில் தமிழ் பொங்கித் ததும்பும். உடல் முழுதும் சக்தி பாயும்.

சீரிய சிந்தனை!
நேரிய பார்வை!
வீரிய உணர்வு!
பாரிய நோக்கு!
கூரிய மதி படைத்த பாரதியின்
ஆரியப் பாடல்களைக் காண்போமா?

ஆரிய என்றால் ‘பண்பாடுமிக்கவர்’ என்று பொருள். இது பிராக்ருதத்தில் ‘அஜ்ஜ’ என்று மருவி தமிழில் ‘ஐயர்’ என்று புழங்கியது. ஐயர் என்றால் குணத்தால், ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்பது ‘பழம் பொருள்’.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி 1921 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். அப்பொழுதுதான் சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி துவங்கியது. உலகிற்கு ஹரப்பா நாகரீகம் என்று ஒன்று இருப்பதே அப்போது தெரியாது. ஆனால் ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்கள் புகுத்திவிட்டனர். சுவாமி விவேகாநந்தர் போன்றோர் இந்தக் கொள்கையை எள்ளி நகை ஆடியதே இதற்குச் சான்று.

பாரதிக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை அவர் பாடல்கள் மூலம் காட்டிவிட்டார். இக்கொள்கையைப் பற்றிப் பாடாமல், பரிகசிக்காமல் நாசசூக்காக — வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல — ஆரிய என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி அதன் உண்மைப் பொருளைக் காட்டிவிட்டார். அவர் பாடல்களில் எங்கு எங்கெல்லாம் ஆரிய என்ற சொல் வருகிறதோ அதுதான் வேதத்திலும், இதிஹாசத்திலும் கையாளப்பட்ட பொருள். வடமொழி நூல்களில் கணவனை, மனைவி “ஏ ஆர்ய!” என்று அழைப்பார். “ஐயா, மதிப்புக்குரியவரே, உயர் குணச் செம்மலே” என்பது அதன் பொருள். இன வெறிப் பொருளைப் புகுத்தியது வெள்ளைத்தோல் “அறிஞர்”களே.

mahakavi2

இதோ சில பாரதி பாடல்கள்:
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி

ஆரியர் யார்?

4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

maha3

பாரத மாதா= ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

bharathy and Chelamma

9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

bharati kutty

10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார். ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு பாரதி கொடுத்த சரியான அடி இது என்றால் எதிர்ப்பொரும் உளரோ?

மேன்மை கொள் ஆரிய நீதி விளங்குக உலகமெலாம்!!

kutti bharathi

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)

எனது சகோதரர் ச.நாகராஜன் எழுதியவை
1.பாரதி தரிசனம் (Posted on 10-12-2013)
2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013)

பாரதியுடன் 60 வினாடி பேட்டி

12TH_Bharati_GJ_12_1295977e

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
Post No.1278; Dated 10th September 2014.
September 11 is Bharati Memorial Day.
(( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ))

கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை!

* வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

* உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

* உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

bharati kutty

* உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

* நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

* மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

bharati new, fb

* சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

* இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

* இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

bharati family

* கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

* நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

* சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

bharati

* இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

* உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

bharathy statue

* அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

* கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.

kutti bharathi

I have done 25 more 60 second Interviews in Tamil and English with all the famous people including Socrates, Vivekananda, Buddha, Sathya Sai baba, Kamban, Ilango, Appar, Sundarar, Samabandar, Manikavasagar, Andal, Pattinathar, Thayumanar, Tirumular, Tiruvalluvar and Lord Krishna.
Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites;thanks.

Astrology in Mahavamsa!

soothsayer-1a

(Mahavamsa Research Essay No.1)
Research paper written by London Swaminathan
Post No. 1277; Dated 9th Sept. 2014.

What is Mahavamsa?
Mahavamsa is a book in Pali language narrating the history of Kings of Sri Lanka. It gives a continuous history from the date Vijayan from Bengal ( India ) landed in Sri Lanka. It covers the period between 543 BCE and 361 CE. The book was called Mahavamsa following the Raguvamsa of Kalidasa in which Kalidasa gives history of solar race that ruled Northern India. Mahavamsa means Great Dynasty or Great Chronicle.

There are lot of interesting astrological references in the book. It shows that the people of the land between Kandy and Kashmir had the same belief. I have already given the astrological beliefs of Sangam age Tamils. It is all the same. But we don’t know whether they worked on the basis of planetary positions in their horoscopes or they did face reading and predicted out of intuition. Even lepers and blind people do predictions in Mahavamsa. In Indian real life stories we come across incidents where someone predicts that this little boy would become a great king. We did not know how they worked it out. It may be intuitive power or mastery of Shamudrika Lakshan (body marks or shape).

adilabad kili
Parrots predicts your future: It is practised from Kanyakumari to Kashmir

Prediction No.1
In the tenth chapter “Consecration of Pandukabaya”, a rich Brahmin by name Pandula makes a prediction that he (Pandu Abhaya) would become the king and rule the country for seventy years. He asked him to learn the art (of ruling) and Pandukabaya learnt the art from Brahmin’s son Canda. Pandu abahya ruled for seventy years. This is one of the longest rules we hear in history!

Pandula was learned in the Vedas and has been living there for long. This shows that Vedic studies were available in Sri Lanka in the fourth century BCE. This is similar to Chanakya teaching Chnadragupta. In those days only Brahmins were teachers from Kashmir to Kandy. Even the Pandavas learnt only from the Brahmin teacher Drona. Parasurama also taught the Kshatriyas (Ruling class).

Prediction No.2
In the fifteenth chapter “The acceptance of Mahavihara”, a thera gives predictions about future kings:
“One descended from you will build this Stupa. The son of your brother Yaththalayakatissa will become the king. His son Gothabhaya and his son Kakavnna tissa will be the rulers. And his son Abhaya with the name of Duttagamini will build the Stupa here”.

This shows that people believed that saints or people like theras can make predictions for 3 or 4 generations. We see such predictions in the Hindu Puranas.

Prediction No.3
In the chapter on Thirteen Kings (Chapter 36) a blind man who had the gift of prophesy makes predictions just by listening to the sound of the foot steps of three Lambakarnas: “The ground bears here the three rulers of the earth”. When they asked for clarification he predicted that the last of the three men Samghatissa will be the king. And he ruled for four years.

Congress Yagna
Congress leaders did Hindu Yagna before last general elections for their victory. Individually they won, but their party lost miserably.

Prediction No.4
In Chapter 35, Twelve Kings, one Lambakarna man by name Vasabha was predicted to become the king. He escaped from several dangers and became the king. Even a leper told him that he would become the king. When he became the king he consulted an astrologer to know the length of his life. He told him that he would live for 12 years only. Then the king met the Buddhist teachers and asked what would prolong one’s life. And he did donate whatever they told him to donate to prolong his life.

This shows that even the kings were concerned about their future and they were at the mercy of soothsayers.

There are many more things in Mahavamsa, but strictly speaking they would fall under the category of Miracles. I will write about them in another post.

Contact swami_48@yahoo.com

கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்!

RNG
Sri Ramnath Goenka

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1276; தேதி: 9 செப்டம்பர் 2014

((கட்டுரையாளர் மதுரை தினமணி நாளேட்டில் 16 ஆண்டுக்காலம் சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியவர். லண்டன் பி.பி.சி. தமிழோசையில் (BBC WORLD SERVICE, BUSH HOUSE, LONDON) ஐந்து ஆண்டுக் காலம் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் (ப்ரொட்யூசர்-PRODUCER) பணியாற்றியவர். அவருடைய தந்தை வெ. சந்தானம், மதுரை தினமணிப் பொறுப்பாசிரியராக News Editor நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்)).

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று “என் அப்பாவிடம் கற்றது” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் (INDIAN EXPRESS) பத்திரிக்கை சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த திரு ராம்நாத் கோயங்காவின் (RNG= Ramnath Goenka) வரலாறு மிக அற்புதமான வரலாறு. இந்தியாவில் அவரைக் கண்டால் இரண்டு பேருக்கு சிம்ம சொப்பனம். திருமதி இந்திரா காந்திக்கும், கம்யூனிஸ்டு களுக்கும் அவரைக் கண்டால் பிடிக்காது. கீரியும் பாம்பும்– எலியும் பூனையும்— வட துருவமும் தென் துருவமும் — என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். மதுரையில் எங்கள் வடக்கு மாசிவீதி வழியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலங்கள் போகும். “டாட்டா, பிர்லா, கோயங்கா! டவுன், டவுன், டவுன்! Tata, Birla, Goenka! Down, Down, Down! (ஒழிக)! “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி வாழ்க) என்று வானம் அதிரக் கோஷமிட்டவாறு செல்வர். அந்த அளவுக்கு கம்யூனிஸ்டுகள் மனதில் “நீங்கா இடம் பெற்றவர்” கோயங்கா.

நாங்களும் கம்யூனிஸ்ட்களை லேஸில் விடமாட்டோம். ஒரு முறை மதுரையில் அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. அன்று மீனாட்சி கோவில் முழுதும் ஒரே சிவப்புத் துண்டு! சிவப்பு வர்ணம்!! மறு நாளைக்கு தினமணியிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் கொட்டை எழுத்துக்களில் பெட்டிச் செய்தி போட்டு கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்தோம்.. மதமும் கம்யூனிஸ்டும் இரு துருவங்கள் என்பது கம்யூனிஸ்ட் கொள்கை. “சமயம் என்பது அபினி” (Religion is Opium) என்று கூறியவர் கார்ல் மார்க்ஸ்! நிற்க.

கோயங்கா பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம் கூறியது:
வட நாட்டு மார்வாரியான கோயங்கா, தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மவுண்ட் ரோடில் ஒருகாலத்தில் துணி விற்றவர். அவர் காயத்ரி மந்திரம் ஜபித்து வாழ்க்கையில் முன்னேறியவர். அதி பயங்கர அளவில் ஜபம் செய்வாராம். யாராவது குறுக்கிட்டால் மிகவும் கோபம் வருமாம். இதை என் தந்தை நேரில் பார்த்து இருக்கிறார். கடற்கரையில் காயத்ரீ ஜபம் செய்வார் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.

எமர்ஜென்ஸி (Emergency) நேரத்தில் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டல் செய்யப்பட்ட “த ஹிந்து” The Hindu நாளேடு தன் மார்க்சிஸ்ட் கொள்கையைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு பிராவ்டா (ரஷ்ய கம்யூனிஸ்ட் நாளேடு PRAVDA) பத்திகையாக மாறியது. அந்தக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் மொழி நாளேடுகளான தினமணி, ஆந்திரப் ப்ரபா, கன்னடப் ப்ரபா, லோக சத்தா, ஜனசத்தா முதலிய நாளேடுகள் மட்டும் இந்திரா அரசையும் எமர்ஜென்ஸியையும் எதிர்த்து எழுதின. தினமலர் நாளேடோ சஞ்சய் காந்தியை கிருஷ்ணாவதாரம் என்று எழுதி அசிங்கமான பெயர் எடுத்தது! ஆர்.எஸ்.எஸ்.காரகளுக்கு செமை கோபம்!

பெரிய பணக்காரகளுக்கு பொருளாதார கைச் சுத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆயினும் தேச பக்தியில் கோயங்கா அப்பழுக்கற்றவர். அந்த ‘ஸ்பிரிட்”Spirit தான் அவரை அவசரகால பிரகடனத்திலும் அஞ்சா நெஞ்சனாக்கியது. எமர்ஜென்ஸி இருந்த 20 மாத காலமும் எங்களுக்கு தினமும் தொல்லைதான். சென்சார் அதிகாரிகள், எனது தந்தையை நள்ளிரவுக்குப் பின் இரண்டு மணிக்கு டெலிபோனில் கூப்பிட்டு “இந்தச் செய்தியைப் போடாதீர்கள், அந்தச் செய்தியை முதல் பக்கத்தில் இருந்து நீக்குங்கள்” — என்றெல்லாம் இன்ட்ஸ்ரக்ஷன் Instruction கொடுப்பார்கள். அதாவது எங்கள் பத்திரிக்கை, மறு நாள் காலையில் கொள்ளிடம் கடற்கரை வரை போக காலை பத்து மணி ஆகிவிடும். இதனால் மிகவும் சர்குலேஷன் டவுன் (Circulation was down) ஆயிற்று. இதே தொல்லை சென்னையில் தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமனுக்கும் இருந்தது.

ஏ.என். சிவராமன், தினமணி (எடிட்டோரியல்) தலையங்கத்தை எவ்வளவுதான் அடக்கி வாசித்தாலும் தினமும் அதைக் காரணம் காட்டி தினமணியைப் பழித்து வந்தனர் சென்சார் (Press Censor Officer) அதிகாரிகள். உடனே ஏ.என். சிவராமன், கோயங்காவைக் கூப்பிட்டு என்னால்தானே உனக்கு இந்தத் தொல்லை. நான் ராஜினாமா செய்கிறேன் என்றார்.

அதற்கு கோயங்கா “இf அட் ஆல் வீ ஹேவ் டு சிங்க், லெட் அஸ் சிங்க் டுகெதெர்” IF AT ALL WE HAVE TO SINK, LET US SINK TOGETHER என்று சொல்லிவிட்டார். நமது கப்பல் மூழ்கத்தான் வேண்டும் என்றால் மூழ்கட்டும். நாம் எல்லோரும் சேர்ந்து ஜல சமாதி அடைவோம் என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்குக் கொள்கைப் பற்றுடையவர்!!

நாட்டில் உள்ள புகழ்பெற்ற பத்திரிக்கை எல்லாம் எமர்ஜென்சிக்கு ஜால்ரா அடித்த காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் மட்டும் எதிர்த்து நின்றது நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டும். அவ்வப்போது என் தந்தை, ஏ.என்.சிவராமன், கோயங்கா ஆகியோர் ரகசிய விஷயங்களைப் பரிமாறிக்கொள்வர். அவைகள் வீட்டுக்கும் கொண்டு வரப்படுவதால் நானும் படிப்பேன். அவசர நிலைப் பிரகடன காலத்தில் கோயங்கா நிறுவனங்கள் மீது இந்திரா அரசு போட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரு நூறு 200 !!!

ராம்நாத் கோயங்கா மதுரைக்கு வரும்போதெல்லாம், மீனாட்சி கோவிலுக்குப் போகையில் “சந்தானம் வா” என்று சொல்லி என் தந்தையை மட்டும் அழைத்துச் சென்றுவிடுவார். அவர் சாமி கும்பிடும் போது யாரும் பக்கத்தில் வரக்கூடாது என்பது என் தந்தை ஒருவருக்குத் தான் தெரியும். புது கரன்ஸி நோட்டுகளுடன் அவருடன் ஒரு சில செயலாளர்களும் வருவர். அதை என் தந்தையின் கையில் கொடுத்து விடுவார்கள். அவர், கோவில் பட்டர் முதல் சேவகர் வரை எல்லோருக்கும் வாரி வழங்கி விடுவார்.

book on RNG

கன்னத்தில் விழுந்த அறை!
ஒரு முறை கோயங்காவை காக்கா பிடிக்க (கால் கை = காக்கா) விரும்பிய ஒரு அதிகாரி, “சார், நாளக்கு Boss பாஸ்-ஐ நான் கோவிலுக்குப் கூட்டிப் போகிறேன் என்றார். என் தந்தைக்கும் ஒரு வேலை மிச்சம் என்று மகிழ்ச்சி! அவரும் சொன்னபடியே போனார். ஆனால் கோயங்கா சாமி கும்பிடும்போது யாரும் குறுக்கிடக் கூடாது, பேசக்கூடாது என்று அவருக்குத் தெரியாது. அவரிடம் நல்ல பெயர் வாங்கும் ஆசையுடன் Boss பாஸ் – இடம் ஏதோ சொல்லப் போயிருக்கிறார். கோயங்கா அவர்கள், அந்த பெரிய அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.

மறு நாளைக்கு என் தந்தையைக் காரில் அழைத்துச் செல்ல அந்த அதிகாரி வந்தபோது கொஞ்சமும் வெட்கப்பாடாமல் நடந்த விஷயத்தை என் தந்தையிடம் சொன்னார். அவருக்கு அவ்வளவு மனக் குமுறல். யாரிடமும் சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது. என் தந்தை வழக்கம் போல புன் சிரிப்புடன், “அடடே, உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன். அவர் சாமி கும்பிடும் போது யாரும் பேசக்கூடாது” என்றார். Too Late Advice!! டூ லேட் உபதேசம்!!

எங்கள் மதுரை தினமணி அலுவலத்தில் ஒரு நீண்ட ஹால் உண்டு. அதை மூன்றாகப் பிரித்து இடையில் டெலிபிரின் டர் Teleprinter அறையும் ஒரு புறம் இந்தியன் எக்ஸ்பிரஸ், மறு புறம் தினமணிக்கு என்று ஒதுக்கி இருந்தனர். டெலிபிரிண்டரில் Reuters ராய்ட்டர், பி.டி.ஐ (Press Trust of India), யு.என்.ஐ (United News of India) , யுபி.ஐ (United Press International), மற்றும் எங்கள் கரஸ்பண்டன் ட்களிடமிருந்து (FOC= From Our Own Correspondent) 24 மணி நேரமும் செய்தி வந்த வண்ணம் இருக்கும்.

thirupparangkunRam_a
Thirupparankundram Temple with a powerful Durga

மூன்று சக்திவாய்ந்த தெய்வங்கள் !!

திடீரென கோயங்காவிடம் இருந்து என் தந்தைக்கு கான்பிடென்சியல் மெசேஜ் Confidential Messageகள் வரும் . சந்தானம் 40 நாட்களுக்கு திருநள்ளாறு, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி கோவில்களில் அர்ச்சனை துவங்குங்கள் என்று. கோயங்கா வேறு எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்வாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் திருப்பறங் குன்றம் துர்க்கை, திருநள்ளாறு சனீஸ்வரன் (சனைச் சரன்= மந்த கதியில் செல்லும் கிரகம்), மதுரை மீனாட்சி ஆகிய மூன்று மிக மிக சக்தி வாய்ந்த தெய்வங்களை அவர் வாழ்நாள் முழுதும் பிடித்துக் கொண்டார். உடனே எனது தந்தை மாயவரம், தஞ்சாவூர் நிருபர் மூலம், திருநள்ளாறு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்வார். திருப்பறங்குன்றம் துர்க்கை, மதுரை மீனாட்சி கோவில் அர்ச்சனைகளை மட்டும் எங்கள் மேற்பார்வையில் செய்வோம் 40-ஆவது நாள் அர்ச்சனை முடியும்போது அவரது குடும்பத்தினர் யாரவது ஒருவரை கோயங்கா அனுப்பிவைப்பார். அவர் பெரிய தங்கச் சங்கிலி அல்லது தூக்க முடியாத கனம் உடைய வெள்ளி வாளியுடன் வந்து என் தந்தையிடம் கொடுப்பார். அதை அர்ச்சனை செய்த தலைமை பட்டரிடம் அவரைக்கொண்டே கொடுக்கச் செய்வார் என் தந்தை.

சில நேரங்களில் இவற்றை மதுரை மீனாட்சி கோவில் தலைமை ஸ்தானீகர் ம.க.சுந்தரேச பட்டர், எங்களிடம் பெருமையாகக் காட்டுவார். நானும் என் சகோதரர்களும் அந்த வெள்ளி வாளி, தேர்வடம் போன்ற தங்கச் சங்கிலிகளைத் தூக்கியும், தொட்டும் மகிழ்வோம்.

அந்தக் காலத்தில் மீனாட்சி கோவில் நகைகளைப் பார்க்க, 500 ரூபாய் கட்டினால் போதும் கோயங்கா குடும்பத்தினர் யார் வந்தாலும் கோடிக்கணகான ரூபாய் விலை மதிப்புடைய நகைகளையும் தரிசனம் செய்ய என் தந்தை ஏற்பாடு செய்வார்.

(இதற்குப் பின், திராவிடக் கட்சிகளின் சில மஹா பாவிகள் கையில் கோவில் நகைகள் சிக்கவே, பின்னால் வந்த ஜெயலலிதா அரசு —ஒத்தக்கூட்டன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்— என்ற கதையாக மூன்று பூட்டுப் போட்டு, கோவில் நகைகளைப் பூட்டிவைத்துவிட்டார். இப்போது அவைகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது!

கோயங்கா தனது காலம் முடியும் வரை அஜாதசத்ருவாக (வெல்ல முடியாதவன்) விளங்கினார். அவர் இறந்த (1991) போது லண்டனில் பி,பி.சி.யில் வேலை பார்த்துவந்தேன் — எனது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள் —- சில நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் லண்டன் டைம்ஸ் The Times, London பத்திரிகையில் கோயங்கா பற்றி அப்பத்திரிக்கை எழுதிய பெரிய இரங்கல் (Obituary) கட்டுரையைக் காட்டினேன். கோயங்கா இறந்த அன்று நீ ஏன் பி பி. சியில் அதை அறிவிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவருக்கு பி.பி.சி.அளவுக்குப் புகழ் உண்டு என்று தெரியாமல் போனது. அந்தச் செய்தியை பி.பி.சி..யில் சொல்லாமல் விட்டதில் எனக்கும் வருத்தம்தான்.

எனக்கு கோயங்கா மீது கொஞ்சம் கோபம் (He is the Himalayas, I am a mosquitoe!) உண்டு. அவரோ இமய மலை, நானோ கொசு! இருந்தபோதிலும் கொசுவுக்கும் காதுக்கு அருகில் ரீங்கரம் செய்யும் உரிமை உண்டல்லவோ! பி.பி.சி.காரர்கள் சென்னைக்கு வந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாலைந்து பரீட்சை நடத்தியதில் நான் முதலாவதாக நின்றதால் பி.பி.சி. என்னை லண்டனுக்கு அழைத்தது. அவர்கள் முதலில், ஆறு மாதத்துக்கே என்னை அழைத்து இருந்ததால் நான் தினமணியில் அன்பெய்டு லீவு Unpaid Leave தான் கேட்டிருந்தேன். இரண்டு முறை கோரிக்கை அனுப்பியும் அதை அவரோ அவரது பரிவார தேவதைகளோ கண்டுகொள்ளவே இல்லை.

லண்டன் பி.பி.சியில் இருந்து இந்தி-தமிழ் துறைகளுக்குத் தலைவரான கைலாஷ் புத்வார் Kailash Budhwar எனக்கு அடிக்கடி போன் செய்து ஏன் தாமதமாகிறது? எப்போது லண்டனுக்கு வருவீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னவுடன் அவரே டில்லியில் உள்ள பி.பி.சி. நிருபர் மார்க் டல்லி, சுபாஷ் சக்ரவர்த்தி (Mark Tully and Subash Chakravarthy) ஆகியோருக்குப் போன் செய்தவுடன் கோயங்கா அலுவலகம், “சுவாமிநாதன் இடமிருந்து எங்களுக்கு எந்த கோரிக்கை மனுவுமே வரவில்லை” — என்று தடலடியாக அடித்து (பொய்) விட்டனர். உடனே நான் ஒரு கடிதம் டெலிப்ரின் டர் மூலம் அனுப்பவே மறுநாளைக்கே எனக்கு விடை கொடுத்து அனுப்பினர்! இதுதான் எனது பொருளற்ற கோபத்துக்குக் காரணம்!

எமர்ஜென்ஸி காலத்தில் இந்தியா முழுதும் ஒரு பயம் நிலவியது. எமர்ஜென்ஸி நீங்கிய மறு நாளைக்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவன நாளேடுகள் இந்திராவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தின. அதுவரை தொடை நடுங்கிகளாக இருந்த பத்திரிக்கைகளின் சர்குலேஷன் மறு நாளே இமய மலை போலச் சரிந்தது. அதற்குப் பின்னர் அவை எல்லாம் எமர்ஜென்ஸி கால அக்கிரமங்களை எதிர்த்து எழுதின. தேர்தலில் இந்திரா காந்தியும் படுதோல்வி அடைந்தார்.

கோயங்காவைப் பார்க்க எனக்கும் ஆசை. ஒருமுறை மதுரை தினமணி அலுவலத்துக்கு வந்தவுடன் ஒரே பரபரப்பு! எங்கள் பகுதிக்கும் வருவார் என்று எண்ணி வேலையில் மும்முரமாக இருப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தோம்!!! டெலிப்ரிண்டர் பகுதிக்கு அந்தப் புறம் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுதிக்கு மட்டும் வந்துவிட்டு ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் எல்லோரும் டெலிபிரின் டர் பகுதி கண்ணாடி வழியாக அரைகுறையாக (திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பது போல) தரிசித்தோம். 16 ஆண்டுகள் தினமணியில் வேலை பார்த்தும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

கருத்து சுதந்திரத்தின், பத்திரிக்கைச் சுதந்திரத்தின் பாதுகாவலராக விளங்கியவர் ராம்நாத் கோயங்கா (ஆர்.என்.ஜி) அவர்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!

வாழ்க ஆர்.என்.ஜி! வாழ்க பத்திரிக்கை சுதந்திரம்!!
Long Live Press Freedom! Long Live R.N.G!!

Hindu Gods and other Ancient Gods

roman-gods-and-goddesses-source
Roman Gods

Compiled by London swaminathan
Post No 1275; Dated 8th September 2014.

No two clocks agree, they say. And no two Gods agree in full. But we can see similarities between two cultures in the comparative mythology. This shows that the thinking of human beings works in the same way. It may also reveal another fact that we all lived under one roof long ago. The third point is that Hindu gods were there in the beginning, what they call as pagan gods and slowly other cultures absorbed them. When new Semitic religions were founded those gods were sent to museums. Hindu Gods alone survived this onslaught.

For some Hindu gods and goddesses we see two names and this is because the Greek Gods were slowly absorbed in to Roman religion and got new names. But these foreign gods are not worshiped anymore and found their place in the museums around the world.

Ancient-Greek-Gods
Greek Gods

Hindu – Slav
Varun – Perun
Haridasva Hors / sun
Surya Hors / sun
Moksha Mukosh / death

Roman or Greek Gods & Hindu Gods
Zeus – Indra (Taranis, Thor)
Jupiter – Indra
Saturnus – Brahma
Minas – Yama
Neptune – Varuna
Sol -Surya
Lunus – Chandra
Hercules – Krishna (Hari kula esa)
Janus – Ganapathy
Hephaestus/ Vulcan – Visvakarma /Tarkhan/Takshan
Plutarch – Kubera
Apollo – Krishna (also Hercules)
Mercury – Narada
Burgos – Rama
Mars – Skanda
Juno – Durga (also Diana & Artemis)
Minerva – Sarasvati (Also Athena)
Venus – Rambha
Aurora -Usha
Cybele -Prithvi
Ceres – Sree /Lakshmi
Cronos – Kashyap (Father of Asuras and Devas)
Zeus, Poseidon, Hades -Trimurti
Hera – Lakshmi
Hades -Yama
Poseidon – Varuna
Ares – Skanda
Kronos -Shiva
Pleiades – Kritika stars
Hera, Hestia, Demeter- Durga, Lakshmi, Sarasvati
Demeter – Devamata (same as Tiamath in Sumer)
Bacchus –Shiva
Hermes – Sarama
Cybele – Sribali
Gaiya – Jaya
Uranus – Varuna
Hestia – Vastu
Diana /Artemis – Durga

old gods

Other cultures:
Gilgamesh – Sri kamesa
River Congo/River Mekong – River (Ma) Ganga

hindu-gods

Hindu Gods and Foreign Gods
Indo European gods –page 13—the sun goddess Sheena Mc Grath

India -Ireland -Iceland -Italy
First -Mitra -Nuada -Tyr -Jupiter
Varuna – Lugh -Odin -Dius Fidus*

Second -Indra -Ogma -Thor -Mars

Third -Asvins -Bres -Freyr -Quirinus

Goddess -Sarasvati -Macha -Freya -Juno

*My comments: Dius Fidus is Dyaus Pita in the Vedas, Zeus in Greek and Ptah in Egypt.
From page 178 table 2

roman-gods-source

Some suggested correspondences for the deities who appear in the rituals

Deities -herbs -colours -runes -trees
Sun -juniper – red -siegel -bay
Moon -mugwort – white -lagu -willow
Sky -basil -blue -tyr -ash
Twins -vevain -orange -ehwaz – hazel
Thunder -leek -brown -thorn -oak
Maiden -mint -rose -gyfu -plane
Earth -crocus – green -odal -linden

Table 3 – page 179

norsegods

The relations of sun and moon
Sun– moon
Red– white
Female– male
Hot — cold
Blood– semen
Fire– water
Summer –winter

celtic gods

sky– thunder– fire
dievas– perkumas– ugunsmate
nuada — taranis– aine

tyr — thor– loki
svarog — perun– istie

zeus — zeus– Hestia
dsius — teshub– –?

armazd — vagahn– -sister fire
dyaus — parjanya– agni

roman,greek chart

Sun — dawn — moon — twins
Saule — auszrine– menuo — dieva deli
Grian — der greine — manannan– emain macha

Sol — svanhild– mani — alcis

Solnste — zorya — myesyats– cosmas and
Damien

Heliosa — Helen — mene — dioscouroi
Arinitti– hulla and kushukh — sheri and hurri
Mezulla

Arev– arevhat — amins — ?

Surya – suryaa– soma — Asvins

From the sun goddess page178

Hope these charts will help future researchers.

Contact swami_48@yahoo.com

Pictures are taken from various sites;thanks.

Indra’s 35+ Names!

Indra Sabha in Ellora
Indra Sabha in Ellora caves

Compiled by London Swaminathan
Post No.1273; Dated 7th September 2014.

Indra
The etymology of Indra is debatable.
Indra means who lacerate the seeds of the corn;
Indra means one that makes the cloud burst into rain;
Indu refers to a drop that leads to rain drops.
E.g Indra Dhanus= Rainbow; Indra Festival = Water Festival throughout India including ancient Tamil Nadu, Nepal and South East Asia.

Names of
Indra’s wife – Saci, Indrani, Pulomaja
Indra’s son — Jayantha
Indra’s city – Amaravati
Indra’s garden -Nandana
Indra’s palace- Vaijayanta
Indra’s horse -Uccaisravas
Indra’s elephant – Airavata
Indra’s Driver- Matali
Indra’s weapon – Vajra ayuda
Indra’s bow — Rainbow

indra-Cambodia
Indra in Cambodia

Indra is the greatest hero in the world. No other ancient literature has any one equal to him. The epithets he carries are too many. He is praised in 250 hymns in the oldest scripture in the world – Rig Veda. Apart from that he is mentioned in 50 more hymns along with other Vedic Gods. If we take into account later Hindu scriptures and Buddhist scriptures it will be several thousand times more. Above all he is mentioned as a Tamil God in the oldest Tamil book Tolkappiam. That means the area covered by Indra is from Iran to Indonesia. His name is in Bogazkoi inscription in Turkey. His statues are though out South East Asian countries. Unlike ‘museum gods’, he is worshiped even today. Neither Gilgamesh nor Hercules will come anywhere near him. Moreover he is more ancient than other heroes.

Indra’s battles are listed in the Rig Veda: 1-53-8, 1-100-18, 1-103-3, 1-104-3, 1-130-8, 1-133-2/5, 1-174-7/8, 1-82-4, 2-20-6/7, 3-10-6, 4-38-5, 4-30-15, 4-30-20, 4-30,31, 5-70-3, 6-18-3, 6-25-2, 6-47-20, 5-29-10, 8-96-13, 10-22-8.

Laos_indra_
Laos Postage Stamp for Indra

Amarakosa, Sanskrit thesaurus, gives 35 names for Indra.

Aakhandala- one who crush his enemies
Aaji krt (Race maker) RV 8-53-6
Aaji pati (Lord of the Horse Race)RV 8-53-14
Vritrahan/ Vrtrahan
The destroyer of Vritra. This is his greatest achievement. He killed a Brahmin called Vritra. Aryan – Dravidian racist theory crumbles here. So foreign scholars hides this fact (Vritra, a Brahmin) or goes a bit dodgy, because it doesn’t suit their racist theory.

Vajrapani / Vajrin:–The holder of Vajra, the thunderbolt.
Marutmaan:–Lord of the winds
Maghavaan:–Honourable , respectful
Bidojaa:–Wealthy, rich, Bright
Paakasaasana:–Subduer of Paaka
Sunaasira: –Ploughshare, one who leads the army
Puruhuta:–One who gets more offerings in sacrifice
vajrayudha, mongolia
Mongolia Postage Stamp for Vajrayudha

Purandhara:–Destroyer of cities
Also Shiva is called Purandhara because he destroyed the Tripura (Three Forts);
Western “Scholars” are very dodgy about this epithet of Shiva because it doesn’t suit their racist theories. They wanted to project him as a Dravidian God. According to Hindu scriptures there is no Aryan or Dravidian god. Hindus have the highest number of hymns in the world and no where the gods are divided as Aryan and Dravidian.

Jisnu:– One who always wins, Leader of the hosts.
Lekhasravaa:–Expert in writing
Sacra:–Powerful
Satamanyu: –One who has defeated 100 demons, one who did 100 yagas. Performers of one hundred sacrifices. Hindus discovered decimal system and gifted to the world. Indra has lot of number epithets such as Mr Thirty, Mr Hundred, Mr Thousand.

Gilt_copper_statue_of_Indra_nepal
Copper Statue of Indra from Nepal

Divaspati:–Ruler of the atmosphere
Swargapati :–Lord of Paradise
Uluuka :–The owl.
Ugradhanwan:– Holder of terrible bow.
Vaasava:–One who was born from Vasu
Vrisa:–The Strong Bull, causing Rain
Vaastospati:–Lord of the dwelling

Surapati/ Devapati:–Chief of Sura/Devas
Balaaraati :–Enemy of demon bala/vala
Sacipati:–Husband of Saci also known as Indrani.
Jambhavedin:–Enemy of demons
Harihaya:–One who rides a green horse
Svarana:–One who rules devas
Mahendra: Great Indra. This name is used from Kashmir to Kandy in Sri Lanka till this day.
Namuchisudana:–One who killed demon namuci
Swargapati:–Lord of the Heaven
Sancrandana:–On who terrifies others, terror to others
Duscavana:–One who destroys evil people
Turasah:–Who who travels quickly
Meghavaahana :–Borne upon the clouds, literally one who rides on the cloud.
Sahasraaksa :–One who has one thousand eyes.
Vrudhasrava :–Famous in the circle of learned pundits
Godrabid :–One who broke the mountain.
indra in chennai dhenupureeswar tem
Indra in Dhenupureeswar Temple, Chennai

Other names found elsewhere: Ruviksana ,Govida, Sutramaan, Brudhasravaas.

Laos has issued stamps for Indra and Mongolia has issued stamps for Vajrayudha! Indra’s name is found all over the world in names like Andrew etc.
Contact swami_48@yahoo.com

thailand-Erawanmuseum2003
Thailand statue for Indra’s Airavata (Erawan)

சுமேரியா, எகிப்துக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி!

lapis block
Lapis lazuli in rock formation.

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1272; தேதி: 7 செப்டம்பர் 2014

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பெருநிலப்பரப்பில் இருந்து லபிஸ் லசூலி (Lapis Lazuli) என்னும் நீலக்கல் உலகின் பழம்பெரும் நாகரீகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதை சுமேரிய, எகிப்திய நாகரீக தொல்பொருட் தடயங்கள் மூலம் ஐயம் திரிபற அறிகிறோம்.

ஒருகாலத்தில் இந்துக்களின் ஆட்சி பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அதற்கும் அப்பால் உள்ள இராக், ஈரான், துருக்கி, சிரியா வரை பரவி இருந்தது. இதற்கு மறுக்க முடியாத தொல்பொருட் சான்றுகள் இருப்பதால் எல்லா தேச அறிஞர்களும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதில் ஒரு வரி கூட வெள்ளைக்காரன் எழுதிய பாடப் புத்தகத்தில் கிடையாது. இது அவன் பிழை அன்று. அதை இன்று வரை படித்துக் கொண்டிருக்கும் முட்டாள்களாகிய நம்முடைய பிழையே.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கூட 1936-ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கத்தில் சொன்ன பொகஸ்கோய் Bogazkoy (துருக்கி) கல்வெட்டோ, போர்னியோவின் (இந்தோநேசியா) அதிபயங்கர காட்டிற்குள் கண்டு பிடிக்கப்பட்ட மூலவர்மனின் (Mulavarman Inscription in Borneo) கல்வெட்டோ இன்றுவரை நமது பாடப் புத்தகத்தில் இல்லாதது இந்துக்களின் தலைவிதி! இந்தியாவின் துரதிருஷ்டம்.

இராக் நாட்டில் ‘ஊர்’ (Ur) என்னும் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரசர் கல்லறைகளில் நீலக்கல் (லபிஸ் லசூலி) நகைகள் உள்ளன. இது கி.மு.2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

goddess hathor
Egyptian Goddess Hathor

எகிப்து நாட்டில் லபிஸ் லசூலி இல்லாத இடமோ நகைகளோ இல்லை. அவர்களுக்கு நீல நிறத்தில் அவ்வளவு ஆசை. உயர்ந்தவகை நீலம் (சFபைர் Saphire) அரிதாகவே கிடைக்கும்; விலையும் உயர்வு. ஆகையால அவர்கள் ஆப்கனிஸ்தான் (படக்சான் Badaksan), பாகிஸ்தான் ( Quetta குவெட்டா) ஆகிய இடங்களில் வெட்டி எடுத்து சுமேரியா வழியாக வந்த நீலக் கல்லைப் பயன்படுத்தினர். எகிப்தில் பெரும்பாலும் இவை மெசபொடோமியா பொருட்களுடனே கிடைக்கிறது. லபிஸ் லசூலி என்றால் நீலக் கல் என்று பொருள். இதை வெட்டி எடுப்போர் இன்றும் நீலி (நீலம்), அஸ்மானி (வானம்), சுவ்சி என்ற வடமொழித் தொடர்புடைய சொற் களையே பயன்படுத்துவது குறிப்பிடற்பாலது

இப்போது ஆப்கனிஸ்தான, பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாடுகள் எல்லாம் இஸ்லாம் என்னும் மதம் தோன்றுவதற்கு முன் இந்து பூமியாக இருந்தன. ஆப்கனிஸ்தானில் உள்ள காண்டஹார் (Kandahar) நகரம் காந்தாரம் என்னும் சொல்லின் மருவு ஆகும். அங்கிருந்து வந்த காந்தாரியைத்தான் மஹாபராதப் புகழ் திருதராஷ்ட்ரன் கல்யாணம் கட்டினான். ஈரான் ஆப்கன் எல்லையில் உள்ள கேகய நாட்டின் பேரழகி கைகேயியைத் தான் தசரத மாமன்னன் மணம் புரிந்தான். அவள் வீராதி, வீரி, சூராதி சூரி!! தேர் ஓட்டுவதில் நிபுணி. ஒரு போரில் அசுரர்களை வெல்ல அவள் உதவியதே இரண்டு வரங்களுக்குக் காரணம் ஆகி ராமனைக் காட்டுக்கு அனுப்பி வைத்தன.

தசரதன் இறந்தவுடன் பரதனுக்கு விஷயத்தைச் சொல்லாமல் அவனை அழைத்த வந்தனர். அவன் தேரில் சிட்டாகப் பறந்துவந்த மார்க்கத்தை வால்மீகி வருணித்துள்ளான. இதன் மூலம் ராமாயாண கால ‘ரோட் ட்ரான்ஸ்போர்ட்’ (சாலைப் போக்குவரத்து), ஈரான் எல்லை முதல் உத்தரப் பிரதேச அயோத்தி வரை எவ்வளவு சீராக இருந்தது என்பதை அறிய முடிகிறது!!

1450 bce

இந்த காந்தார நிலப்பரப்புக்கு அருகில்தான் லாபிஸ் லசூலி வெட்டி எடுக்கப்பட்டது. பிற்காலத்தில் பாகிஸ்தான் குவெட்டா பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் ஒரு சில பகுதிகள் சிந்து சமவெளி நாகரீகப் பகுதிக்குள் இருந்தவை. சுமேரில் கிடைத்த ஒரு நீலக்கல் முத்திரையில் சிந்து சமவெளிக் காளையின் படமும் உளது.

இப்போது முஸ்லீம்களின் ஆட்சிக்குள் வந்துவிட்ட சிரியா-துருக்கி பிரதேசங்களில் வேத கால நாகரீகம் கி.மு 1480-ல் கொடிகட்டிப் பறந்தது. துருக்கி நாட்டின் தலை நகரமான அங்காரவில் இருந்து 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பொகாஸ்கோய் என்னும் இடத்தில் களிமண் பலகைக் கல்வெட்டுகளின் இந்திரன், மித்திரன், வருணன், அக்னி ஆகிய நான்கு வேத கால தெய்வங்களின் பெயரில் சத்தியம் செய்து சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளனர். நான் இன்றும் லண்டனில் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் இந்த நாலு தெய்வங்களையும் வணங்கும் மந்திரம் வருகிறது. இதை எழுதும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. 4000 ஆண்டுகளாக ஒரு மந்திரம் ஆசியா கண்டம் முதல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்ற நாட்டுக கடவுளர் எல்லாம் மியூசியத்துக்குள் கண்ணாடிப் பெட்டிக்குள் பூட்டப்பட்டு விட்டனர்.

NearEastSealFromBadakshanLapisSeal
Sumer Sear with Indus Valley Bull

இந்த ஒரு தடயம் மட்டும் இருந்திருந்தால் வெள்ளைக்காரன் மூடி மறைத்து புதிய வியாக்கியானம் கொடுத்திருப்பான். மிட்டனியை (Mitanni) ஆண்ட மன்னர்களின் பெயர் எல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்கள்!! தசரதன், பிரதர்தனன் (விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர்) முதலிய பெயர்கள். அவன் ராஜ்யத்தைல் இருந்து குதிரைப் பயிற்சிக்கு அனுப்பிய கிக்குலி Kikkuli என்பவன் ஒரு அஸ்வசாஸ்திர நூல் Horse Training Manual எழுதி இருக்கிறான. அதில், ஏகம், த்வீதியம், த்ருதீயம் முதலிய சம்ஸ்கிருத எண்கள் உள. அதுமட்டுமல்ல. அந்த தசரதன் எழுதிய கடிதங்கள் எல்லாம் எகிப்து நாட்டில் ‘’அமர்னா லெட்டர்ஸ்’’ Amarna Letters என்ற பெயரில் களிமண் பலகைகளில் சேர்த்துவைக்கப் பட்டுள்ளன. அதில் தசரதன் ஒரே புலம்பல்! படிக்கும்போது வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை எகிப்து மன்னன் மூன்றாம் அமனோபிஸ் (Amenophis III மன்னனுக்கு மணம் முடித்தான். அவள் பெயர் ததுகிபா (Taduhepa). அதற்குப்பின் ‘’அன்புள்ள மாப்பிள்ளையே உனக்கு ஐந்து தேர்கள், ஐந்து குதிரைகள், என் பெண்ணுக்கு தங்க மோதிரம், கொஞ்சம் தங்கம், நிறைய ரத்தினக் கற்கள் அனுப்[பியுள்ளேன். பெற்றுக்கொள்க’’. என்கிறான். இதற்குப் பின் எழுதிய கடிதங்களில் ‘’ஏன் பதிலே போடவில்லை, நான் அனுப்பியது எல்லாம் என்ன ஆயிற்று?’’ — என்றெல்லாம் புலம்பி இருக்கிறான்.

கி.மு 1340ஆம் ஆண்டில், இன்றைக்கு 3340 ஆண்டுகளுக்கு முன், தசரதனைப் (Tushretta) படுகொலை செய்து விடுகின்றனர். எகிப்திய மன்னனும் காலமாகி விடுகிறான். தசரதன் பெண் தது கிபாவை (தத்த சிவா) அமனோபிஸ் இறந்தவுடன் அவன் மகன் திருமணம் செய்துகொள்கிறான். எகிப்தியர்கள் தங்கையையே கல்யாணம் செய்கையில் சின்னம்மா எம்மாத்திரம்!!

silkroads2000BCE

இந்த தசரதன் ராமாயண தசரதன் அல்ல. இவன் வேறு. ஆக கி.மு.1400 ஆண்டை ஒட்டி கங்கை நதி முதல் ஈரான் வரை நம்மவர்கள் ஆண்டுவந்தனர். இப்போது எல்லாம் மாற்று மதத்தினரின் கைக்குள் போய்விட்டதால் இந்த ஆராய்ச்சி எல்லாம் ஆமை வேகத்தில், நத்தை வேகத்தில் நடைபெறுகிறது. சிரியா (சூர்ய), இரான் (ஆர்ய), பாக்தாத் (பகவான் தத்), துருக்கி (துரக / குதிரை ஸ்தானம்) என்பதெல்லாம் அறிஞர்கள் கண்ட உண்மை. ஆனால் இன்றுவரை எல்லா நாடுகளிலும் ‘’ஸ்தானம்’’ என்ற சம்ஸ்கிருதச் சொல் மட்டும் அழியா இடம் பெற்றுவிட்டது. ஜனஸ்தானம் (மக்கள் இருப்பிடம்) என்பது இப்படிச் சுருங்கிச் சுக்காய்ப் போய்விட்டது!!

வேத கால முனிவர்களுக்கு நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள் பரிசளிக்கப்பட்டதை உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பகரும். இது காணப்படும் ரிக் வேத (Eighth Mandala) எட்டாம் மண்டலம் மிகவும் மர்மம் நிறைந்த மண்டலம். பலரும் இது ஈரானிய நிலப்பரப்பைச் சேர்ந்ததோ என்றும் ஐயம் கொள்வர். இது பற்றி தனியாக எழுதுகிறேன். ரிக் வேதத்தில் 99,000 வண்டிகள், 99000 வண்டிச் சரக்குகள் பற்றி எல்லாம் பாடி இருக்கின்றனர். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கையில் நம்மவர்கள் இராக் ( சுமேர், பாபிலோனிய, மெசபொடோமிய பூமி) மற்றும் ஈரான் வரை செல்வதெல்லாம் நம்பக் கூடியதே என்று காட்டும். இதற்கு லபிஸ் லசூலி கற்களும் அவைகளாலான நகைகளும், சிலைகளும் அழியாத சான்றுகளாக நீடிக்கின்றன.
lapis_lazuli_map

INDUS VALLEY CIVILIZATION என்னுடைய முந்தைய கட்டுரைகள்:
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.

caravanseraiEVCAU
Trade Routes of ancient world.

சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! March 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி பிராமணர் தொடர்பு ((Post No 1033, Date 10-5-14)
சிந்து சமவெளியில் இந்திரன்- செப்.6, 2014.

contact swami_48@yahoo.com

பாம்பன் சுவாமிகள் சதுரங்க பந்தம்

Sreemath pamban pocket

தமிழ் என்னும் விந்தை! சதுரங்க பந்தம் – 6

பாம்பன் சுவாமிகள் சதுரங்க பந்தம்
By ச.நாகராஜன்
Post No 1271; Dated 7th September 2014.

பாம்பன் சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.

வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்

சென்ற இரு அத்தியாயங்களில் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய பாடல்களுக்காகக் கொடுக்கப்பட்ட துருவக் குறிப்பு மீண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துருவக் குறிப்பு
{ 1-64 – 2+62 — 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 — 53×73 – 57+72}
மொத்த எழுத்துக்கள் 78.

இந்த இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.

Bandham 6

பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ளா
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி

துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.

இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.

இன்னொரு விந்தை! மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் சதுரங்கப் பாடல்களையும் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில எழுத்துக்கள் அதே கட்டங்களில் அமையும் விந்தையையும் பார்க்கலாம்.
சுவாமிகள் பாடி அருளிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 6666. இந்தப் பாடல்கள் அனைத்து நலன்களும் அருளும் மந்திரங்கள். குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியம் சித்தியாகும் என்பது பக்தர்களின் அனுபவம். வடமொழியும் தமிழையும் நன்கு கற்றவர் சுவாமிகள். வடமொழி காழ்ப்புணர்ச்சி இன்றி வடமொழியையும் தேன் தமிழையும் கற்று வல்லவராக வேண்டும் என்று திருஞான சம்பந்தர் அருளியதை சுவாமிகளும் அப்படியே ஆமோதிக்கிறார். இரு மொழிகளிலும் வல்லவராக வேண்டும் என்பதையே சுவாமிகளின் வாழ்க்கை நமக்கு எடுத்து இயம்புகிறது.

சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.

சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.

சுவாமிகள் அவதரித்த ஆண்டாகக் கருதப்படுவது 1853. 1929ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி சுவாமிகள் சமாதி அடைந்தார். அவரது சமாதி சென்னை திருவான்மியூரில் உள்ளது.
******************
contact swami_48@yahoo.com