மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1

tamil poets
Images of Tamil Poets

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291; தேதி: 16 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது நாலாவது கட்டுரை.

மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:

சங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–

1.கபிலன்
சங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.

தமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))

கபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.

2.பரணன்
கபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். “வரலாறு எழுதிய முதல் தமிழன்” — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.

இந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.

3.உதியன்
இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது!!!

4.கல்லாடன்
கல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் “நாகன்” என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

athiyaman

Tamil poetess Avvaiyar with Chieftain Athiyaman

5.நாகன்
நாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல “நாகன்” பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக ஒன்றும் சொல்ல இயலவில்லை.

6.இளநாகன்
மருதன் இளநாகன் என்ற புலவன் சங்ககாலத்தில் சக்கைப்போடு போட்ட புலவர்களில் ஒருவர். கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை Accidental Coincidence –“கோஇன்சிடென்ஸ்”– என்று ஒதுக்க முடியாது (காண்க:– அத்தியாயம் 35)

perunthalai saaathanaar and kumanan

Tamil chieftain Kumanan with the Tamil poet

7.குமணன் கதை
புறநானூற்றில் பாடல் 158 முதல் 165 வரை குமணன் கதை வருகிறது. குமணன் என்ற சிற்றரசனை அவன் தம்பி இளங்குமணன் விரட்டிவிட்டு நாட்டை ஆள்கிறான். அது மட்டுமல்ல. அண்ணன் தலையைக் கொண்டு வருவோருக்கு பெரும் பரிசு தருவேன் என்றும் அறிவிக்கிறான் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இதுகண்டு வருத்தம் அடைகிறார். இருவரிடையே சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார்.

காட்டில் வாழ்ந்த பெரிய குமணனைச் சந்தித்துப் பாடுகிறார். அவன் இந்தப் புலவர் காசுக்காகப் பாடும் புலவன் என்று எண்ணி, “அன்பரே, பொருள் அற்ற நிலையில் வாடுபவன் நான். இதோ இந்த வாளை எடுத்துக் கொள்ளும். இதனைக் கொண்டு என்னைக் கொல்லும். அப்படிக் கொன்றபின் என் தலையை என் தம்பி இளம் குமணனிடம் கொடுத்தால் உமக்குப் பெரும் பொருள் கிட்டும்” — என்கிறான். என்னே! தமிழர்களின் பெருந்தன்மை! தான் இறந்தாலும் புலவருக்குப் பணம் கிடைத்து வறுமை நீங்கினால் போதும் என்று எண்ணுகிறான்.

அந்தப் புலவர் ஒரு பெரிய வாழை மரத்தின் அடிப்பகுதியை வெட்டி அதில் செந்நிறச் சாயம் பூசி, ஈரமான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து இளங் குமணனிடம் சென்று பாடுகிறார். “பார், உன் அண்ணனின் பெருந்தன்மையை” கையில் வாளைக் கொடுத்து தலையைச் சீவச்செய்து அதைக்கொடுத்து உன்னிடம் பரிசு பெறச் சொன்னான் என்கிறார். வாளையும், வாழைத் தண்டையும் கண்டு அண்ணன் இறந்தானே என்று கண்ணீர் வடித்து தன் தவறை உணர்கிறான். “அது அண்ணன் தலை அல்ல, வெறும் வாழை மட்டையே, வருந்தற்க” என்றவுடன் மனம் மாறி அண்ணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைக்கிறான்.

மகாவம்சம் அத்தியாயம் 36-ல் சங்க கால குமணன் கதை போலவே ஒரு கதை வருகிறது. கோதகாபயன் என்ற மந்திரி திடீர்ப் புரட்சியில் இறங்கி படை எடுக்கவே சங்கபோதி என்னும் அரசன் தப்பி ஓடுகிறான். அப்போது வழியில் தனக்கு உணவு கொடுத்த ஒரு வழிப்போக்கனிடம் என் தலையைச் சீவி கோதகாபயனிடம் கொடு; உனக்கு நிறைய பொருள் கிடைக்கும் என்கிறான். ஆனால் வழிப்போகன் மறுத்துவிடுகிறான். அவனுக்கு உதவுவதற்காக அரசன் அங்கேயே அமர்ந்து உயிர்விடுகிறான். உடனே அந்த வழிப்போக்கன் , சங்கபோதியின் தலையை கோதகாபய னிடம் கொடுக்கவே நிறைய பொருள் கிடைக்கிறது. இறந்துபோன மன்னனுக்கு உரிய ஈமச் சடங்குகளை கோதகாபயன் செய்தான்

8.மனுநீதிச் சோழன் கதை
அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்துவந்த ஏலாரா இலங்கையை 44 ஆண்டுகளுக்குச் சீரும் சிறப்புடனும் ஆண்டான். அவன் சயன அறையில் ஆராய்ச்சிமணி தொங்க விட்டிருந்தான். குறை தீர வருவோர் அதை அடிக்கலாம்.. ஏலாராவின் மகன் ஒருநாள் ஒரு ரதத்தை ஓட்டிச் சென்ற போது அதில் ஒரு பசுங்கன்று அடிபட்டு இறந்தது. உடனே தாய்ப்பசு அரண்மனைக்கு வந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்கவே மன்னன் தனது மகனை தேர்ச் சக்கரத்தின் அடியில் கொல்கிறான்.

இந்தக் கதை அப்படியே மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. நாம் திருவாரூரில் இது நடந்ததாகக் கூற, மகாவம்சமோ தீசவாபியில் நடந்ததாகச் சொல்லும். ஆனால் இருவரும் சோழ வம்சத்தினர். இது வியப்பான ஒற்றுமை. மேலும் ஆராய வேண்டிய விஷயம். ஏலாராவைத் துட்டகாமினி கொன்ற பின்னரும் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறான். அவன் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த இலங்கை மன்னர் ஒவ்வொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செய்வது மரபாகிவிட்டது. நீதி நேர்மை தவறாது ஆண்ட மாபெரும் தமிழன் ஏலாரன் (அத்தியாயம் 25ல் காண்க).

elara
Stories of Elara of Sri Lanka and Manu Neethi Choza of Tamil Nadu are similar.

9.மலய மலை/ சந்தனக் கட்டை
பல இலங்கை மன்னர்கள் மலய மலையில் வந்து தங்கி படை திரட்டிச் சென்றதை மகாவம்சத்தில் காணலாம். அதே போல பொதியம், மலயம் ஆகியவற்றின் சந்தனமும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. (உ.ம்: அத்தியாயம் 28 மற்றும் 36, 37)

10.பறவைகள் அரிசி கொணர்தல்
அத்தியாயம் 5 & 11:– அசோகன் மற்றும் தேவனாம்ப்ரிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பறவைகள் அரிசி கொண்டுவந்தன என்பது கபிலர் காலத்தில் நடந்தது போல இருக்கிறது. மூவேந்தர்களும் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டுவந்தார் என்று சங்க இலக்கியம் கூறும்.

11.பாரா நட்பு
கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் (வடக்கிருத்தல்) இருந்தபோது பிசிராந்தையார் என்னும் கிழப் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கச் சொன்னார். “யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள்!! மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார்!! அதேபோல இலங்கை மன்னன் தேவனாம்ப்ரியன் காலத்தில் ரத்தினங்களும் விலை உயர்ந்த உலோகங்களும் கிடைத்தன. அவற்றை இதுவரை பார்த்தே இராத அசோகனுக்கு அனுப்புகிறார்!

siva_kuthirai

12.குதிரை வியாபாரிகள்/ மாணிக்கவாசகர்
அத்தியாயம் 21-ல் சேனன், குட்டகன் என்ற இரண்டு தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு வருகிறது. இவர்கள் குதிரை வியாபாரிகளின் பிள்ளைகள். இதைப் படிக்கையில் மாணிக்கவாசகரின் கதை நினைவுக்கு வரும். அவரது காலமும் சம்பந்தருக்கு முந்தியது என்று நான் கட்டுரையில் நிரூபித்திருக்கிறேன்.

13.தேர் விழா
சிலப்பதிகாரத்தில் சமணர்களின் தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். மகாவம்சத்தில் புத்தமத தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். போதிமரத்தைத் தேரில் வைத்து ஊர்வலம் விடுகின்றனர். பிரபல பிராமணர் கிராமம் வந்தவுடன் அதைத் தரையில் இறக்கி மன்னன் மரியாதை செலுத்துகிறான்.

14.கார்த்திகை விழா
கார்த்திகை விழா சங்க இலக்கியத்திலும் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இதை இலங்கை மன்னரும் கொண்டாடியதை அத்தியாயம் 17-ல் காணலாம்.

karaikal
Karaikal Ammaiyar walking on head

15.மந்திர மாங்கனி
காரைக்கால் அம்மையார் என்ற சைவப் பெரியார் காலத்தால் சம்பந்தர் முதலிய நால்வருக்கும் முந்தியவர். இவர் திருமணம் ஆனபின் மந்திர மாங்கனி வரவழைத்ததும் இவரது கணவர், மனைவியின் அமானுஷ்ய சக்திகளைக் கண்டு பயந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார். பின்னர் அப்பெண்மணி சிவனடியாராக மாறி அற்புதமான திருவந்தாதிகளைப் பாடி தமிழில் அந்தாதி இலக்கியம் தோன்ற படி அமைத்துத் தருகிறார்.

மகா வம்சத்தில் 15ஆம் அத்தியாயத்தில் ஒருதேரர், மாம்பழத்தச் சாப்பிட்டு கொட்டையைப் போடவுடன் அது உடனே மீண்டும் வளர்ந்து கனிகள் நிறைந்த மா மரமாயிற்று!

16.உண்பது நாழி
உண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறம் 189) — என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரின் கூற்று. இந்த அருமையான சொல் மகாவம்சம் 36 ஆம் அத்தியயத்தில் வருகிறது. குஜ நாகன் தம்பி குஞ்சநாகன் ஆட்சிக்க்காலத்தில் ஏக நாழிகைப் பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கூறும் மகாவம்ச உரை நாழி என்பது கையளவைக் குறிக்கும் ஒரு அளவை என்றும் ஒரு கவளம் சோறு இது என்றும் கூறும். ஒரு கவளம் கூடச் சோறு கிடைக்காத காலம் ஏக நாழிப் பஞ்சம் என்று அழைக்கப்பட்டது. நாழி என்னும் சொல்ல் இப்போது புழக்கத்தில் இல்லை.

05FR-KARAIKKAL_29905g

Magic mango incident of Karaikal ammaiyar

27 காரணங்களில் 16 காரணங்களை இங்கே பட்டியலிட்டேன். அடுத்த கட்டுரையில் மிக முக்கியமான, பாண்டிய ராஜகுமாரி—விஜயன் திருமணம், யானையை விட்டு குழந்தையைக் கொல்ல முயன்றது, கஜபாகு என்னும் மன்னனால் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கண்டறிந்தது, சோழ நாட்டுப் புத்த பிட்சு இலங்கையில் போர்க்கொடி உயர்த்தியது, நாகர்களின் பட்டியல் முதலியவற்றைக் காண்போம்.

Brahmins and Candalas in Mahavamsa

Mahavamsa1

Research paper written by London Swaminathan
Post No.1290; Dated 15th September 2014.

This is the fourth in the series of my research articles on Mahavamsa.

“One should never hurt a Brahmin; and a Brahmin should never return evil for evil. Alas for the man who hurts a Brahmin. Alas for the Brahmin who returns evil for evil” — Buddha in The Dhammapada, sloka 389

It is very interesting to note that Mahavamsa has recorded a number of prominent Brahmin names in ancient Sri Lanka. It is also interesting to know that Brahmins have settled in Sri Lanka even before the Buddha was born. More interesting is that talk about Yakshas, Rakshasas, Candalas, Lambakarna- rhyming with Kumbakarna of Ramayana. Even though the Buddhist scriptures blacked out all that is Hindu in the island, indirect evidence gives so much information. Though the Pali scriptures never mentioned anything about Lord Rama or Lord Krishna, the names that we come across show that they existed as we see them in Ramayana or Mahabharata. Lord Siva’s name is not found in Sangam Tamil literature, but we come across many early kings with “Siva” suffix! This is also very important to write the history of Saivism in Sri Lanka!!!

Brahmin No 1
Chapter 3: When the Buddha died on the Vaisak Full Moon Day countless number of Bikshus, Brahmins, Kshatriyas, Sudras and Devas assembled there.

Brahmin No 2
Chapter 4: When some Bikshus were doing false propaganda Yasa Thera, son of Brahmin Kasanthaka went to solve the problem. Then Kalasoka convened the Second Council.

Brahmin No 3
Chapter 5: Brahmin Chanakya crowned King Chandragupta to rule all over Jambudwipa (India)
Candalas only wear yellow dress. He must be a candala, said one of the brothers of a shop keeper. He was born as a candala in a Candala village in his next birth but he attained ‘Vimochan’ in seventh year

Brahmin No 4
Chapter 5: A Brahmin by name Dasaka of Vaishali studied Vedas for twelve years. Buddha converted him to Buddhism.

mahavamsa-003

Brahmins in Sri Lanka
Brahmin No 5
Chapter 7: Vijayan’s first wife was Kuvenna who was a Yakshini. Her descendants are Pulindas.
Chapter 9: Brahmins well versed in scriptures predicted queen’s sons will kill their own uncles to capture power.

Brahmin No 6
Chapter 10: Pandula, a Brahmin, was a rich man. He was well versed in the Vedas. He was living for long in Pandulagama (Pandula Grama; in Kerala the places where Brahmins lived were called ‘grama’. In Tamil Nadu those villages were called Mangalam)

Pandula predicted that Pandu Abhaya would become a king and rule Sri Lanka for seventy years. He and his son Chanda taught would- be king all about statecraft.

In the incidents reported so far we come to know that Brahmins were well versed in the Vedas and statecraft. They were the teachers. They were rich and well respected. They could predict future; probably they were experts in Samudrika lakshan or astrology!

Brahmin No 7
Chapter 10: During Pandu Abhaya period, he created special place for Brahmins. He had one Maha Yajnasala. He appointed 500 Candalas to clean the city and 200 Candalas to clear the drainage. He appointed 150 more candalas to carry the dead bodies and created a Candala village. Exclusive burial ground was allocated to them.

Brahmin No 8
Chapter 11: When Devanampriya Tissa sent some messengers to Emperor Asoka, one of them was Raja Guru, a Brahmin. Asoka paid him all respects due to a Brahmin Guru.
Like ancient India, Sri Lanka also had Brahmins as Raja Gurus.

Brahmin No 9
Chapter 19: Just to guard the Bodhi Tree that came from India, King Devanam priya Tissa appointed 18 people from the royal family and 8 each from the Brahmins, Vaisyas and Cowherds. One or two from each of the Tharaksha, Kulingas, Weaver, Potter and Handicraft communities.

He took the tree in a chariot procession. As a mark of respect he put it on the ground in front of Brahmin Diwakar’s village.
So much respect was given to learned Brahmins by the Sri Lankan kings.
Later one tree was planted in his village.

maha2

Brahmin No 10
Chapter 23: Prince ordered one of servants to go to a far off village where his friend Kundali, a Brahmin lived.

Kundali had foreign goods and the servant was given a letter addressed to the Brahmin. The Brahmin asked him to come after a bath. He went and took a bath and came with lotus flowers. The Brahmin gave him a letter and gifts for the prince.

Brahmin No 11
Chapter 30: When there was a fight to get the share of Buddha’s bones and ashes, only a Brahmin by name Dona solved the problem by dividing the bones into eight parts. It looks like Buddha lived a pure Hindu life. He was cremated according to Hindu scriptures.
Brahmin No 12
Chapter 27 briefly mentions about Asokan, a Brahmin of Kasyapa Buddha period.

Brahmin No 13

Chapter 31: Here in this chapter we hear about a Brahmin called Nandhuttara who gave a reception to the Buddha.

Brahmin No 14
Chapter 33 deals with a revolt by a Brahmin known as Tissa of Rohana. He joined with seven Tamils and sent a threatening letter to the king. He wrote back that he had to drive away the Tamils first and then the country belonged to him. Tisisa failed in his mission and later the king was also defeated.

maha3

Brahmin No 15
Chapter 34 gives an interesting love story of Anula. She loved several people and killed them one after another by poisoning them. One of them who fell a prey to her was a Brahmin by name Niliya. Queen Anula married him and Niliya ruled just for 6 months before he lost his life.

Brahmin No 16
In the last chapter 37, we hear about a new Buddhist Vihara built at the village of the Brahmin Kalanda. Because Brahmins were prominent citizens they were mentioned wherever an opportunity arose.

Conclusion: Even during the Buddhist rule, they were mentioned first and then only the Bikshus and other castes were mentioned. This is due Buddha’s strict instruction not to harm Brahmins in Dhammapada sloka 389.

Contact swami_48@yahoo.com

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

God heiroglyph

Indra Dwaja symbol meant GOD in Egypt!

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.

This article was already published in English.

உலகம் முழுதும் இந்திரன் வழிபடப்படுவது பாரத மக்களுக்கு பெருமைதரும் விஷயமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் ஒலித்த அதே மந்திரங்கள் இன்று இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்களில் விழாக் காலங்களில் ஒலிப்பதும், “த்ரி கால சந்தியா வந்தனம்” செய்யும் பிராமணர்களின் வீடுகளில் நாள்தோறும் ஒலிப்பதும் அதிசயத்திலும் அதிசயமான விஷயம் ஆகும்.

அதைவிட அதிசயம், கரிகால் சோழன் முதல் சிலப்பதிகார காலம் வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட இந்திர விழா இன்றும் நேபாளத்தில் அதே பெயரிலும் தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் “நீர்ப் பெருக்கு விழா” (Water Festival) என்ற பெயரிலும் கொண்டாடப்படுவதாகும். இதை எல்லாம் பார்க்கும்போது ‘’ஒல்காப்புகழ் தொல்காப்பியன்’’ ஏன் இந்திரனையும் வருணனையும் தமிழ் தெய்வங்கள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான் என்பதும் தெள்ளிதின் விளங்கும்.
Vientine, Laos
Indra in Vientine, Laos (South East Asia)

இதைவிட வியப்பான விஷயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில் உள்ள அண்டிரன் (Andiran) என்பது இந்திரனின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பிராமணப் பெண் புலவர் அண்டிரனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் இந்த ரகசியத்தை வெளியிடுகிறார். அதை விட வியப்பான விஷயம் எகிப்தில் இந்திர த்வஜத்துடன் இந்திரனைக் கடவுள் என்ற பெயரில் வணங்கியதாகும். சுமேரியர் என்ன சளைத்தவரா? கிரேக்கர்கள் என்ன இளைத்தவரா? அவர்களும் கும்பிட்டதோடு வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கும் இந்திரன் பெயர்சூட்டினர்.

தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்திரன் சிலை இருப்பதும், நேபாளம் முதல் கண்டி வரை இன்றும் மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு இந்திரன், இந்திராணி, சசி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வதும் நாம் அறிவரும் அறிந்ததே.

இந்திர அதிசயம் 1
எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!
indra saci nepal
Indra in wooden sculpture , Nepal

இந்திர அதிசயம் 2
சுமேரியாவில் அண்டர ANDARA என்றால் இந்திர என்று ஒரு புத்தகம் (India We Lost) கூறுகிறது. சுமேரிய, பாபிலோனிய மெசபொட்டோமிய நாகரீகம் நிலவிய இராக், சிரியா பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி (Dictionary of the Near East) கூறுகிறது.
பழைய பாரசீக மொழியில் உள்ள Zend Avesta செண்ட் அவஸ்தாவில் இந்திரன் பெயர் இரண்டு இடங்களில் வருகிறது என்றும் அதுவும் அண்டிர என்ற சப்தத்தில் இருப்பதாகவும் இன்னொரு நூல் பகரும்.

இந்திர அதிசயம் 3
இந்திய புராணங்களில் இந்திரன் மனைவி பெயர் அய்ந்திரி Aindri. ஆக கணவன் பெயர் அய்ண்டிரன் என்பதில் பொருத்தம் உளது. மேலும் இந்திரன் மனைவி இந்திராணி, புலோமன் என்ற அசுரனின் பெண். ஆக ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்திரன் கொன்ற 30 அசுரர்களில் இருவர் பிராமணர்கள்! ஆக இதுவும் ஆரிய திராவிட இனவெறிக் கொள்கையைத் தகர்க்கிறது.

Indra-Jatra-14-,nepal

Indra Festival in Nepal

இந்திர அதிசயம் 4
கிரேக்கர்கள் கும்பிட்ட ZEUS சூஸ், ரோமானியர்கள் கும்பிட்ட JUPITER ஜூபிடர், நார்வீஜியர் கும்பிட்ட THOR தோர், கெல்ட்ஸ் கும்பிட்ட TARANIS தாரனிஸ் ஆகியோர் இந்திரன் போன்றே “இடி” எனும் வஜ்ர ஆயுதத்தை THUNDERBOLT கையில் வைத்திருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம். இதைவிட முக்கியமான செய்தி கேட்டை நட்சத்திரம் ஆகும். “ஜ்யேஷ்டா” என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை இந்திரன். அந்த கிரேக்க நட்சத்திரத்தின் பெயர் ANTARES அண்டாரெஸ். அண்டிரன் என்பதையே இப்படி சொல்கிறார்கள். அவருக்கு இதற்கு விளக்கம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு இதற்கு வேறு பொருள் கற்பித்தனர்!

இந்திர அதிசயம் 5
ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் PURANANURU 240-மற்றும்-241-ல் இரண்டு முக்கியச் செய்திகளைக் கூறுகிறார்.

1.ஆய் அண்டிரன் இறந்தவுடன் “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலில்” அவனை வரவேற்க முரசுகள் முழங்கி வானில் ஒலி எழுந்தது என்கிறார் புலவர்.— இதற்கு மூன்றுவிதப் பொருள் உண்டு (அ) அவர் இறந்த அன்று மழைமூட்டமாக இருந்ததால் இடி இடித்தது (ஆ) அவர் நிறைய கொடையளித்துப் புண்யம் சம்பாதித்ததால் அவர் சொர்க்க (இந்திர) லோகம் போவார் (இ) அவர் பெயரில் அண்டிரன் / இந்திரன் இருப்பதால் புலவர் இப்படிப் பாடினார். இந்தக் கடைசி பொருளே சரி என்பது என் முடிவு. மற்ற எல்லா இடங்களிலும் மேல் உலகம் என்று புலவர்கள் பாடுவர். இங்கோ ‘வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்’ — என்று இந்திரன் பெயரை நீட்டி முழக்குகிறார் புலவர். இதே வரியை இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்துகிறார்.

2. இரண்டாவது செய்தி என்னவென்றால் அவனது உரிமை மகளிர் (மனைவியர்) அவனுடன் (சிதைத்தீயில்) எரிந்தனர். ‘சதி’ என்னும் இவ்வழக்கம் வட நாட்டில் அதிகம் உண்டு. இன்னொரு புறப்பாடலில் பூதப்பாண்டியன் பெருந்தேவியாரும் கணவனுடன் சிதைத் தீயில் ஏறி மாண்டதைக் காண்கிறோம். ஆய் அண்டிரன் வடக்கே இருந்து வந்த வேளிர் மரபைச் சேர்ந்தவன். கபிலரின் புறநானூறு 201 ஆம் எண் பாடலின் உரையில் வேளிர் என்போர் அகத்தியர் தலைமையில் துவாரகா புரியில் இருந்து வந்தவர்கள் என்பதை அறிகிறோம். இவை அனைத்தையும் ஒரு சேரவைத்துப் பார்த்தால் ஆய் அண்டிரன் — இந்திரன் என்ற பெயரைக் கொண்டதில் வியப்பில்லை.

indra nepal 3
Indra Festival

இந்திர அதிசயம் 6
இந்திரனை அடிக்கடி காளைமாடு என்று ரிக்வேதம் வருணிக்கிறது. சிந்து சமவெளியிலும் முத்திரைகளில் காளைகளே அதிகம். அதுமட்டுமல்ல. உலகின் பழைய நாகரீகங்களில் யானைச் சின்னம் உள்ளது சிந்து சமவெளியில் மட்டுமே. இந்திரனுடைய வாகனம் யானை வாகனம் என்பதோடு அத்தகைய சின்னம் ஒன்றும் சிந்துவெளியில் கிடைதிருக்கிறது. ஒரு யானையின் மேல் ஒரு உருவம் நிற்க அதன் மேல் சக்ர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆக இந்திரன் எனபவர் மத்திய ஆசியாவில் அல்லது சைபீரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெய்வம் என்ற கூற்று எல்லாம் பொய்யாய்ப் ப்ழங்கதையாய்ப் போயிற்று!!

இந்திர அதிசயம் 7
இந்திரனுக்கு ஒதுக்கப்பட்ட திசை கிழக்கு என்பதாலும் அவர் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியானவர் இல்லை என்பது புலப்படும். இந்திய இந்திரனே குதிரையிலும், காளையிலும், யானையிலும் ஏறி உலக வலம் வந்தான் என்று கொள்வதே சாலப் பொருத்தம்!!
antares_m4_stargazerbob_600

Red Colour Jyeshta (kettai in Tamil) Antares Star in Scorpio constellation.

தொல்காப்பியம் புகழும் இந்திரன் வாழ்க !!
தமிழ் தெய்வம் இந்திரன் வெல்க !!!

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” – பாரதியார்.
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” — பாரதியார்.

contact swami_48@yahoo.com

Why did Sumeria and Egypt worship Indra?

Vientine, Laos

Indra in Vientaine, Laos (South East Asian country)

Research Paper written by London Swaminathan
Post No.1288; Dated:14th September 2014.

Indra is the oldest God in the world worshipped until today. There are over 100,000 temples in India and millions of Brahmins all over the world. In all these places we hear Indra’s name every day. Children are named after Indra or his wife Indrani (Saci) from Nepal to Sri Lanka and all over South East Asia.

I have written umpteen articles on Indra creating an Encyclopaedia of Indra to dispel the false notion spread by foreign ‘scholars’. He is NOT an “Aryan” God from Central Asia or Siberia. He is a Hindu god from India travelling to different parts of the world. In my previous article, I published the pictures of Laos and Mongolia stamps on Indra.

My conclusion is Indra is not one person. It is a title like KING or a LEADER. Indra is also used for GOD. In ancient Hindu India, kings were considered God. We see it in the Rig Veda and 2000 year old Sangam Tamil literature.

This article gives more proof to show that Indra was worshipped as God in Egypt, Sumer and Greece.

Indra referred to a title is confirmed by Mahabharata (Santi Parva, Chapter 224) and Vayu Purana (64-6-9). While Vayu Purana allocated 14 Indras for 14 Manvanataras, Mahabharata said that there were thousands of Indras in the past (See Indra in Indian Mythology by Muralidhar Mohanty for more details).

indra saci nepal
Wooden Sculpture of Indra and Saci from Nepal.

Foreign ‘scholars’ who did not study Tamil Tolkappiam or Mahabaharta made wrong statements that one Indra killed more than 30 demons in the Rig Veda. In fact they were not demons. Indra ‘s most celebrated episode is about killing a Brahmin !!!

We know for sure from the oldest Tamil book Tolkappaiam that Tamils worshiped the Vedic deity Indra. We know that Vedic Hindus gave top place to Indra in their worship. He is praised more than anyone else in the Vedas. But Indra worship did not stop there. Even Iranians, Sumerians, Egyptians and Greeks worshipped Indra! In their languages Indra meant The God!

In Egypt:
In Egypt “ntr” meant God. The hieroglyph ‘ntr’ meaning god is derived from a staff bound with cloth. This is Indra Dwaja (Flag of Indra) found in Ramayana and Tamil literature. Tamil epic Silappadikaram describes the Indra festival and Indra flag in great detail. Many of the ancient languages never write vowels. We have to insert vowels before reading it. “Ntr” will become Intra, if we introduce vowels into them.

indra nepal 3
Indra Festival in Nepal

3000 Gods in Sumeria

More than 3000 deities’ names have been recovered from Mesopotamia alone. These were organised by the Mesopotamians into groups resembling households, extended families or states (See Dictionary of the Ancient Near East published by The British Museum for more details).

In Avesta, Andira meant Indra and in Tamil Andiran meant Indra. I explain them below; Indra is mentioned in a two places in Zend Avesta.

In Sumeria Andara is Indra ( See page 147 of the ‘India We have Lost’)
Laos has issued stamps for Indra and Mongolia has issued stamps for Vajrayudha! Indra’s name is found all over the world in names like Andrew etc.

antares_m4_stargazerbob_600
ANTARES = INDRA

Of the 27 stars, Jyeshta is one. Greeks named the star Antares, i.e Indra. In Hindu scriptures the Devata/deity for Anatres is Indra! Hindus called this red star as Jyeshta meaning ‘the eldest’. This is another proof to show that Greek name Anatres and Indra are one and the same. (Among the goddesses also there is one Jyeshta). Scholars who did not know linked Antares with Ares (Mars) without any rhyme or reason!

There is another proof from ancient Sangam Tamil literature. Oldest book Tolkappiam called Indra with the name “Vendhan” meaning The King. But Sangam Tamil literature and later books like Tirukkural used Sanskrit word Indra. But not many people know that Andiran in Sanagam Tamil literature is also Indra.

There are two verses (240 and 241) in Purananuru sung by a Brahmin woman Uraiyur Enicheri Mudamosi. She composed many poems in praise of Ay Andiran, a Tamil chieftain. Only three poets used this word Andiran — all meaning chieftain Ay Andiran.

Miss Mudomosi gives us two vital facts:

1.When Ay Andiran died his wives burnt themselves in the funeral pyre. This custom known as “Sati” was practised more in the north from the Mahabharata days. But it was not compulsory. Even in the Mahabharata days, Pandava’s mother Kunti did NOT die in funeral pyre after Pandu’s death. Dasaratha’s wives did NOT die after Dasaratha’s death as well. There are two more references to Sati in Tamil literature, which I have already dealt with.

2.When Ay Andiran died Indra’s temple drums started playing loudly to welcome him! Miss Mudamosi described very clearly “Vajara Thadakkai Nediyon Koyil” meaning the “Temple of God one who wields the weapon Vajra/thunderbolt”. Why did she suddenly mention Indra welcoming her in the heaven? This is because Andiran meant Indra. Ayu/Ay is also found throughout Mahabharata and the Puranas (Hindu Mythlogy)

Ay Andiran’s forefathers came from Dwaraka of Krishna. He belonged to Velir clan which was brought to Tamil Nadu by Agastya 3000 years ago — around 1000 BCE. Another Brahmin poet of Sangam age Kapila gave this information in Purananuru verse 201.

indra nepal
Indra Festival in Nepal

Indra in the Indus Valley Civilization
The Rig-Veda identifies Indra with the bull which is the predominant seal in Indus valley civilisation. So we can conclude that Indra worship prevailed in the Indus Valley.

Indra’s vehicle is an elephant known as Airavata which is a predominant animal in Indus valley civilization. No other ancient civilization has elephant figure or association of an elephant with any ancient god. This is a very clear proof to show that Indra is an Indus God and not a foreigner from central Asia or Siberia. I have already explained the elephant and the standing figure with a wheel above, on an Indus tablet is Indra.
He is the god of the direction “East” which shows that he belongs to India and not a foreign god from the “West”.

His wife Indrani is the daughter of Asura Puloman which shows that Asuras belonged to one and the same race, belying Aryan – Dravidian racist theory. She is also known as Paulomi and Aindri. Andiran is Indra and Aindri is Indrani.

The English name Andrew and Andreas all came from Indra. Later new explanations were added by struggling foreign “Scholars”!!!

Indra-Jatra-14-,nepal
Indra Jatra in Nepal. This was celebrated in ancient Tamil Nadu.

Afghans worship Indra!
Indra and Imra are worshipped as Kafir gods in Afghanistan. The place where he was worshiped was called Kafiristan. He is worshiped in Waigal, Prasun areas of Hindukush and in Nuristan.

Indra is identified with Zeus of Greece,Thor of Norse Jupiter of Romans and Taranis of Celts.

Please read my earlier research papers on Indra:
1.Encyclopedia of Indra (Posted on 7th Sept. 2014)
2. Indra-Thor-Taranis in Indus Valley Civilization (5th Sept. 2014)
3. Oldest Engineer in the World –Indra: A Dam Buster or a Dam Builder? (4th Sept. 2014)

4).Why did Indra kill Brahmins? – (posted on 25 May 2014).
5).How many people did Indra kill? (17th July 2014)
6).Do you know Indra? (14th July 2014)
7).Indus Valley – Brahmin Connection (10th May 2014)
8).Indus Valley Case: Lord Indra Acquitted (28 December 2013)
9).Indra in the Oldest Tamil Book
10). Indra Festival in the Vedas and Tamil Epics
11).Vishnu in Indus Valley
vajrayudha, mongolia
Mongolia Stamp on Vajrayudha

Most of these articles are available in Tamil also. Indra is mentioned in all my articles on Aryan Dravidian ‘Racist’ Theory.

Contact swami_48@yahoo.com

பொங்கி வரும் புனிதம்! கங்கோத்ரி ரகசியம்!!

Sunrise_Varanasi
Sun Rise at Varanasi

By ச.நாகராஜன்
Post No.1287; Posted on 14th September 2014.

“ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ( நதிகளுக்குள் கங்கா நதி நான்! )
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் (10ஆம் அத்தியாயம், 31ஆம் ஸ்லோகம்)

விஸ்வ பாவினி மாதா
பிரபஞ்சத்தையே தூய்மையாக்கும் ‘விஸ்வ பாவினி’ என்றும், அனைவரின் பயங்களைப் போக்கும் ‘பய ஹாரிணி’ என்றும், அற்புதமான அங்கங்களைக் கொண்டிருக்கும் ‘சுப அங்கிணி; என்றும்,உலக மக்கள் அனைவரின் நதியாக ‘லோக நதி’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஆயிரக்கணக்கான நாமங்களால் பூஜிக்கப்படுபவள் கங்கா மாதா!

பகீரதனின் தவத்தால் பூமியில் கங்கை இறங்கிய அரிய செயலை நினைத்து மனம் மகிழ்ந்த நரசிம்மவர்ம பல்லவன் அந்த அழியாக் காவியத்தை சிற்பமாக மாமல்லபுரத்தில் வடித்து பாரத ஒற்றுமையையும், நல்லோரின் அரிய செயல் உலகத்திற்கே நன்மை பயப்பதையும் சுட்டிக் காட்டினான் ராமேஸ்வரத்தில் மணல் எடுத்து கங்கோத்ரியில் கரைப்பதை தொன்று தொட்டு செய்து வரும் பண்பாட்டுப் பழக்கமும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சான்று!

GANGA SUNSET

நான்கு ‘க’காரங்கள்
ஹிந்துக்கள் போற்றும் நான்கு ‘க’காரங்கள் கங்கா, கீதா, காயத்ரி, கோ (பசு) ஆகும். மரணமடைந்த ஜீவனைப் பற்றி யமன் சர்ச்சை செய்யாமலிருக்க வேண்டுமா? ஆதி சங்கரர் அதற்கான எளிய உபாயத்தைக் கூறி இருக்கிறார்:

பகவத் கீதா கிஞ்சிததீதா கங்கா ஜல லவ கணிகா பீதா சக்ருதபி யேன முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
-பஜ கோவிந்தம் பாடல் 20

“பகவத் கீதையைச் சிறிது படித்தாலோ கங்கை ஜலத்தில் துளியை உட்கொண்டாலோ கிருஷ்ண நாமத்தை ஒரு முறையேனும் உச்சரித்தாலோ அப்படிப்பட்டவரைப் பற்றி யமன் விவாதிக்கவே மாட்டான்” என்று ஆணித்தரமாக ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளும் உரையைப் படிக்கும் போது கங்கா, கீதா, கிருஷ்ணா பற்றிய மஹிமையை உணர்கிறோம்; மலர்கிறோம்.
கங்கா ஜலத்தின் ஒரு சிறு துளி யமனையும் சற்று விலகி இருக்கச் செய்யும்!

அலெக்ஸாண்டர் விரும்பிய இறுதி இடம்
கங்கை எங்கிருந்து தோன்றுகிறது என்பது ஒரு அரிய ரகசியம். அந்த ரகசியத்தைப அறிய ஏராளமானோர் முயன்றதை சரித்திரம் விளக்குகிறது, அக்பர் (கி.பி,1336-1605) ஒரு பெரிய குழுவையை அனுப்பி கங்கை தோன்றும் இடத்தைப் பார்த்து வருமாறு அனுப்பினார். அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அப்துல் ஃபஜல், அவர் எப்போதும் கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார் என்று குறிப்பிடுகிறார். வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் போது கூட ஹரித்வாரிலிருந்து எடுக்கப்பட்ட கங்கை ஜலத்தையும் கூடவே அக்பர் கொண்டு சென்று பயன்படுத்தினார் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்பெயினிலிருந்து வந்து அக்பர் அரசவையில் இருந்த கிறிஸ்தவ மிஷனரியான பாதர் மான்சரேட் தான் முதன் முதலாக இமயமலையின் வரைபடத்தைத் தயாரித்தார். 1807இல் பிரிட்டிஷார் கங்கையின் தோற்றம் காணத் துடித்து முயற்சியை ஆரம்பித்தனர். 1857இல் தான் அது சாத்தியமானது.

மாமன்னன் அலெக்ஸாண்டர் தனது இறுதி இருப்பிடமாக இருக்க விரும்பித் தேர்ந்தெடுத்த இடம் கங்கை பிரதேசம்!ஆனால் அவன் அல்பாயுளில் மறைந்து போனதால் அவன் விருப்பம் நிறைவேறவில்லை.

2500 கிலோமீட்டர் தூரம் ஓடுகின்ற புனித நதி கங்கை. அதன் அகலமோ மூன்று கிலோமீட்டர்கள். மழை காலத்தில் சில இடங்களில் பத்து கிலோமீட்டராகப் பரந்து ஓடும்! கோமுகியில் தோன்றி 250 கிலோமீட்டர் தூரம் பாகீரதியாகப் பரிணமிக்கும் பிரவாகம் தேவ ப்ரயாக்கில் அலக்நந்தாவுடன் இணைந்து கங்கையாக உருவெடுக்கிறது.

GANGA LAMP

அமேஸான் நதி 90 கிலோமீட்டர் அகலமும் 6992 கிலோமீட்டர் நீளமும் கொண்டு பெரிய நதியாக விளங்கினாலும் புனிதத்திலும் அரிய குணங்களிலும் சற்றும் கங்கைக்கு அருகில் கூட வர முடியவில்லை.

கங்கை நீரின் புனிதமும் அதிசயத் தன்மையும்
டி.எஸ்.பார்கவா என்பவர் மூன்று வருட கால ஆராய்ச்சியை கங்கையில் மேற்கொண்டு ஆக்ஸிஜனைப் பெற விரும்பும் அளவானது மற்ற நதிகளை விட கங்கை நீரில் மிகவும் குறைவு என்று கண்டு பிடித்துள்ளார். கங்கை நீரின் தூய்மையாக்கும் தன்மை உலகின் இதர எல்லா நதிகளைக் காட்டிலும் 25 மடங்கு அதிகம் என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் நிபுணரான் சி. இ.நெல்ஸன் ஹூக்ளி நதிப் பகுதியிலிருந்து எடுத்த நீர் லண்டனைச் சேரும் வரையில் கெடாமல் இருந்தது என்று அதிசயிக்கிறார் ஹூக்ளி கங்கையின் அசுத்தமான பகுதி. அதுவே இப்படி நீண்ட காலம் தூய்மையோடு இருந்தது என்றால் கங்கோத்ரியில் எடுக்கப்படும் நீர் எவ்வளவு காலம் புனிதத் தன்மை கெடாமல் இருக்கும்! பிரமித்து வியக்க வேண்டியது தான்!

1896ஆம் ஆண்டு, எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின் என்ற பிரிட்டிஷ் உயிரியல் நிபுணர் கங்கை நீரை நன்கு ஆராய்ந்து தன் முடிவுகளை பிரான்ஸை சேர்ந்த அறிவியல் இதழில் எழுதி அறிவித்தார். அதில் காலரா கிருமிகளை கங்கை நீரில் விடும் போது அவை துடிதுடித்து மூன்றே மணி நேரத்தில் இறந்து விடுகிறது என்ற அதிசயச் செய்தியை அறிவித்தார்.இதே கிருமிகள் தூய்மையாக்கப்பட்ட நீரில் 48 மணி நேரமானாலும் அப்படியே இருப்பதை அவர் விவரித்த பொது உலகமே அதிசயித்தது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் கங்கை நீர் கொசுக்களை உற்பத்தி செய்ய விடுவதில்லை என்ற அரிய ரகசியத்தைக் கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட இயற்பியல் உண்மைகளாலும் தெய்வீக ரகசியத் தன்மைகளாலும் தான் போலும், ஆயுர் வேத ஆசார்யர் சரகர் பல வித வியாதிகளுக்கு கங்கை ஜலத்தை அருமருந்தாக உட்கொள்ளுமாறு அறிவுரை பகர்கிறார்.

yoga-meditation-rishikesh
Meditation in Rishikesh

கங்கோத்ரி ஆலயம்
உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி நோக்கிச் செல்லும் பாதை நெடுகிலும் அதிசயங்கள், ஆன்மீக வரலாறுகள், அவற்றுள் பொதிந்திருக்கும் ரகசியங்கள் தாம் உள்ளன.
சிவனின் ஜடாமுடியிலிருந்து கங்கை பூமிக்கு அவதரித்த கங்காவதரண் தினம் ஜேஷ்டா (ஆனி) மாதம் சுக்ல பட்சம் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த சுக்ல தசமியை கங்கா தசரா எனக் கொண்டாடுகின்றனர் அனைவரும்! கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படுவதும் இன்று தான்! கங்கோத்ரி ஆலயத்திற்கு அருகில் உள்ளது பகீரதன் தவம் செய்த அற்புத இடம்!

உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி செல்லும் பாதையில் கங்கா நானியில் ரிஷி குண்ட் என்று அழைக்கப்படும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. அதைத் தாண்டிச் சென்று சுகி எனும் அழகிய இடத்தில் பாகீரதி நதிக்கரை சரிவில் திரௌபதி கா தண்டா என்னும் இடம் உள்ளது. சுவர்க்கத்திற்கு செல்லும் வழியில் திரௌபதி உடலை உகுத்த பிரதேசம் இது. இந்தப் பகுதியின் அருகில் உள்ள ஹிமாச்சல் பகுதியில் திரௌபதி உடலை உகுத்த இடம் உள்ளது.

சுகியைத் தாண்டிச் சென்றால் ஹரிசில் என்று அழைக்கப்படும் ஹரி சிலா உள்ளது.கங்கை பூமியில் இறங்கியவுடன் விஷ்ணு தவம் செய்த இடம் ஹரிசில்! சில்லென்று அதி வேகமாக இங்கு வீசும் காற்றைப் பற்றி பக்தர்கள் கூறும் போது வாயு பகவான் விஷ்ணுவை வழக்கமாக வணங்கும் இடம் இது என்பதால் அவர் பிரத்யக்ஷமாக இங்கு இருக்கிறார் என்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் பிரபலமான கூர்க்கா வீர்ர் அமர்சிங் தாபா கட்டிய கங்கா மாதா கோவிலை அடையலாம்.

சுமார் 21 அடி சதுரபீடத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள கங்கா மாதா சிலை அற்புதமாக அமைந்திருக்க சற்று கீழே லக்ஷ்மி, சரஸ்வதி,அன்னபூரணி பாகீரதி, ஜாஹ்னவி,யமுனை ஆகியோரின் தெய்வீகச் சிலைகள் அமைந்துள்ளன.

3200 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக அமைந்துள்ள கங்கோத்ரியிலிருந்து கங்கா மாதா பொங்கி வரும் புனிதமாக, அமிர்த பிரவாகமாகப் பாய்ந்து அனைவரின் உடல் அழுக்கையும் உள்ள அழுக்கையும் போக்கி முக்தி என்னும் பேரின்ப நிலையையும் காலம் காலமாக அளித்து வருகிறாள்.

modi-aarti-1_051814120309

பொங்கி வரும் புனிதம்
அவளை மாசு படுத்தும் நவீன கால முயற்சிகளைத் தகர்த்து புகழோங்கிய பழைய காலப் பெருமையையும் புனிதத்தையும் திருப்பிக் கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கங்கையின் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. தூய்மைப் பிரவாகமாகப் பெருகி வரும் அலையில் ஊழல் எல்லாம் அடிபட்டு, அகற்றப்பட்டு மகோன்னதமான, பாரதம் உருவாக இருக்கிறது; உத்வேகம் ஊட்டப்பட்ட கங்கையின் செல்வர்களான நாம் உலகின் தலைமை பீடத்தைப் பெறப் போகிறோம்!

ganga ARTI2

கங்கா மாதா கீ ஜெய்!
(This article was written by my brother S.Nagarajan for a Tamil magazine: London Swaminathan)
ஞான ஆலயம் ஆகஸ்ட் 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மெஜாரிடி பெற்றவுடன் நரேந்திர மோடி கங்கா ஆரத்தியை நிகழ்த்தி கங்கையை வழிபட அதைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்தவர்களின் மெய் சிலிர்த்தது. காலம் காலமாக நாம் வழிபட்டு வரும் கங்கா மாதா தூய்மைக்குத் தூய்மை தருபவள் அவளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பமாகி விட்டதை ஒட்டி மலரும் கட்டுரை இது!
CONTACT swami_48@yahoo.com

The Holy Ganga River

(Pictures are taken from various websites;thanks)
***************
.

காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம்!!

IndiaNameplate

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1286; தேதி: 13 செப்டம்பர் 2014

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு புறம். மான்களையும் மாதவிப் பூங்கொடிகளையும் மனிதனுக்கு நிகராக நேசிக்கும் சகுந்தலையும் கண்வ மகரிஷியும் மறுபுறம்.

மனிதனின் சிந்தனையை இமயமலை அளவுக்கு உயர்த்தும் காளிதாசனின் உவமை நயம் ஒருபக்கம். அவனது சம்ஸ்கிருத மொழி நடை என்னும் அழகு மறுபக்கம். இப்படித் திரும்பிய இடமெல்லாம் சுவைதரும் காவியத்தில் ஒரு அரிய பெரிய விஞ்ஞான உண்மையையும் புதைத்து வைத்துள்ளான் கவி காளிதாசன்.

சாலைப் போக்குவரத்து

முதல் காட்சியில் சாலைப் போக்குவரத்து பற்றி ஒரு அரிய காட்சி வருகிறது. மன்னன் துஷ்யந்தனின் ரதம் செல்லும் வேகம் பற்றியது அந்தக் காட்சி. அதைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் ‘’சூப்பர் Fஆஸ்ட்’’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிகரான வேகத்தில் செல்லும் வண்டிகள் இருந்ததோ என்று எண்ண வைக்கிறான். எங்கள் பிரிட்டனின் மோட்டர்வேயில் கார்கள் செல்லும் வேகம் மணிக்கு 70 மைல். இங்கு ரயில்கள் 130 மைல் வேகம் வரை செல்ல முடியும். ஆகையால நமக்கு காளிதாசன் வருணிக்கும் காட்சி எதுவும் புதுமை இல்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு வேகமாகச் செல்லும் ரதங்கள் இருந்ததா? அப்படிப்பட்ட வேகத்தில் செல்ல கான்க்ரீட் அல்லது ரப்பர் ரோடு அல்லவா வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த சாலைகள் இருந்தனவா?

இதோ அவனது ஸ்லோகம்

Yad aaloke suuksmam vrajati sahasaa tad vipulataam
Yad ardhe vicchinnam bhavati krtasamdhaanam iva tat
Prakrtyaa yad vakram tad api samarekham nayanayor
Name duure kimcit ksanam api na parsve rathajavaat
Sakuntalam Act 1—9

(வடமொழியில் ஸ்லோகம் கிடைத்தால் சரியான உச்சரிப்புடன் தமிழில் எழுதி இருப்பேன். கிடைக்காததால் எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்ததை அப்படியே தருகிறேன்; பொறுத்தருள்க)

chandrayaan-1

விண்வெளிப் பயணம்
சாகுந்தலம் நாடகத்தின் ஏழாவது காட்சியில் விண்வெளிப் பயணம் பற்றி வரும் காட்சிதான் வியப்பானது. மஹாபாரத வன பர்வத்தில் வரும் அர்ஜுனனின் ஐந்து ஆண்டு விண்வெளிப் பயணம் குறித்து ஏற்கனவே எழுதி விட்டேன். அங்கு இந்திரனின் ரதத்தைச் செலுத்திய அதே டிரைவர் மாதலிதான் இங்கும் துஷ்யந்தனுக்கும் டிரைவர்.

இங்கு ரதம், டிரைவர் என்பதெல்லாம் சங்கேத மொழிச் சொற்கள் இந்திரன் ரதம் என்பது விண்வெளிக் கப்பல், டிரைவர்/சாரதி என்பது விண்வெளி வீரர். இப்போது அமெரிக்கா பயன்படுத்தும் கொலம்பியா, அட்லாண்டிஸ் முதலிய ‘’ஸ்பேஸ் ஷட்டில்’’ வாகனங்களைவிட அதி நவீன ‘’ஸ்பேஸ் ஷட்டில்’’ இந்திரனிடம் இருந்தது என்பது அதன் வருணனையில் இருந்து தெரிகிறது.
மன்னன் வாய் வழியாக காளிதாசன் கூறுகிறான்:

தூசி கிளப்பவில்லை
சத்தம் போடவில்லை
இறங்கிய இடத்தில் தடயம் ஏதும் விடவில்லை.

இப்போது ரஷ்யா, அமெரிக்காவிடம் உள்ள விண்வெளி ஓடங்கள் இதை மூன்றும் செய்தே தரை இறங்க முடியும். ஆனால் துஷ்யந்தன் வந்த விண்வெளி வாகனம் இதை மூன்றும் செய்யாதது துஷ்யந்தனுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

space_shuttle_4

காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) உட்கார்ந்திருப்போருக்கு அல்லது ராக்கெட்டில் பயணம் செய்வோருக்கு மட்டும் தெரியும் காட்சியை வருணிக்கும் ஸ்லோகம் இதோ:

Sailanaanaam avarohatiiva sikharaad unmajjataam medinii
Parnaabhyanataraliinataam vijahati skandhodayaat paadapaah
Samtaanais tanubhaavanastasalilaa vyaktim bhajanty aapaghaah
Kenaapy utksipateva pasya bhuvanam matpaarsvam aaniiyate

மாதலி: மன்னர் மன்னவா! இன்னும் ஒரு நொடியில் நாம் பூமியில் இறங்கப் போகிறோம்.

மன்னன்: (ரதத்தில் இருந்து கீழே பார்த்தவாறு): அம்மாடியோவ்! என்ன வேகத்தில் கீழ் நோகிச் செல்லுகிறோம். பூலோகவாசிகளின் தோற்றம் அற்புதமாக இருக்கிறதே!

மலைகளின் முகடுகள் மேல் நோக்கி எழுவது போலவும், பூமி கீழ் நோக்கி விழுவது போலவும் தெரிகிறதே.

இலைகள் போர்த்திய மரங்கள் எல்லாம் இப்போது அடிமரத்தோடு பெரிதாகத் தெரிகின்றன.

மேலேயிருந்து பார்க்கையில் மெல்லிய கோடாகப் பார்வையில் தெரிந்தும் தெரியாமலுமிருந்த நதிகள், பரந்த நீர்ப்பெருக்காகத் தோன்றுகின்றன.

அடடா, பூமியை யாரோ என்மீது எறிந்ததுபோல என்னருகே வருகிறதே (காட்சி 7-8)

shuttle3

மாதலி: மன்னவா! சரியாகச் சொன்னீர்கள் என்ன அற்புதமான பூமி இது!
இந்த சம்பாஷனைக்குப் பின் இருவரும் ஹேமகூட பர்வத ‘’கிம்புருஷர்கள்’’ பற்றி விவாதிக்கிறார்கள். ‘’கிம் புருஷன்’’ என்றால் “என்ன மனிதன்?” என்று பொருள். வெளி கிரக வாசிகளைப் பார்த்தாலோ, விண்வெளிவீரர் போல பூதாகார உடை (ஸ்பேஸ் ஸூட்) அணிந்து வந்தாலோ அவரைப் பார்த்து நாமும் கிம் புருஷ:? என்று வியப்போம். இப்படிப்பட்டவர்கள் ஹேமகூட பர்வதத்தில் வசிப்பதாக மதாலி கூறுகிறான்.

மன்னன் ( மிகவும் ஆச்சர்யம் கலந்த தொனியில்):
சக்கரங்கள் சத்தம் போடாமல் வழுக்கிச் செல்லுகின்றன!
சூறாவளித் தூசி எதுவும் எழும்பவில்லை!!
பூமியைத் தொடாமலேயே நிற்கிறது!!!
இறங்கிய இடத்தில் ஒரு தடயமுமே இல்லையே!!!!

மாதலி: மன்னர் மன்னா! இதுதான் உங்கள் இகலோக தேருக்கும் இந்திரனுடைய ரதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இப்படி இருவரும் அற்புதமாக பேசியதைக் காளிதாசன் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறான். ஒரு காலத்தில் அமெரிக்காவோ ரஷ்யாவோ இந்திரனுடைய விண்வெளி ரதம் போல ஒரு ஷட்டிலைக் கண்டுபிடித்தால் அதற்கு ‘’இந்திர ரதம்’’ என்று பெயர் சூட்ட வேண்டும் ஏனெனில் இப்போதுள்ள எல்லா விண்வெளி வாகனங்களையும் விட மிக Advanced Technology “அட்வான்ஸ்டு டெக்னாலஜி” — பற்றி காளிதாசன் பேசுகிறான்!!!

shuttle 1

–சுபம்–

மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

killing 3

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1285; தேதி: 13 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது மூன்றாவது கட்டுரை

மாமன்னன் அசோகன் பற்றி மூன்று அதிசய விஷயங்கள், இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூலான மஹாவம்சத்தில் உள்ளன.

1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் அப்பாவைக் கொன்றுதான் பதவிக்கு வந்தனர்.

2) தர்ம அசோகனுக்கு முன்னர் கறுப்பு அசோகன் என்பவன் ஒருவன் ஆண்டான். ((வெள்ளைக்காரகள் எழுதிய இந்திய வரலாற்றில் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்)).

3) அசோகனின் மனமாற்றத்துக்கு காரணமான “கலிங்கப் போர்” பற்றி மஹாவம்சத்தில் எதுவுமே சொல்லவில்லை!!
150 ஆண்டுகளுக்கு உன் வெள்ளைக்காரர்கள் எழுதிய வரலாற்றைதான் இன்னும் நம்மவர்கள் படித்துவருகிறார்கள். அவர்கள் இந்துமத புராண அரசர் பட்டியலை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புத்தமத செய்திகள மட்டும் எடுத்துகொண்டனர். புத்த மதம் இந்து மதத்தின் எதிரி என்று எண்ணி ஏமாந்து அதற்கு மட்டும் ஆதரவு கொடுத்தனர். சமண மதம் பல நாடுகளுக்குப் பரவாததால் அந்த மதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

இந்துமத புராண அரசர் பட்டியலை ஏற்றால் மனித குலம் கி.மு.4004ல் தோன்றியது என்ற பைபிள் பிரசாரகர்களின் கூற்று எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் அது மட்டும் அல்ல. கலீலியோ, கோபர்நிகஸ் போல உயிரையோ கண்களையோ இழக்க நேரிடும். இதற்கெல்லாம் பயந்த ஆங்கில, ஜெர்மானிய அறிஞர்கள் (?? !!) இந்து புராண அரசர் வரிசையை அப்படியே குப்பையில் வீசிவிட்டனர். இதனால் கறுப்பு அசோகன் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

புராணங்களில் முன்னுக்குப் பின்முரணான அரசர் பட்டியல் இருப்பது உண்மையே. ஆனால் சமண, பௌத்த, கிறிஸ்தவ நூல்கள் எல்லாவற்றிலும் முரணான விஷயங்கள் உண்டு. நூற்றுக்கணக்கன பைபிள்கள் முரண்பட்டு நிற்கவே அத்தனையையும் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான் டி நோபிளில் தீக்கிரையாக்கிவிட்டு ஒரே பைபிள் வைத்துக் கொண்டனர். அதிலும் முரண்பாடு உண்டு, யூதமத கதைகளுக்கும் கிறிஸ்தவ மதக் கதைகளுக்கும் இடையேயும் ஒரே விஷயம் பற்றி முரண்பாடு உண்டு என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர்.

மஹாவம்ச படுகொலைப் பட்டியலைக் கொடுப்பதற்குக் காரணம் இது பற்றி இந்தியர்கள் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும் என்பதே—அதாவது இந்தியா பற்றி இதில் கூறப்பட்ட விஷயங்களின் உண்மையைக் கண்டறிதல் நம் கடமை. வெள்ளைக்காரன் எழுதியவற்றை இன்றும் அப்படியே பாடப்புத்தகத்தில் வைத்திருப்பது மடமை!!!

படுகொலைப் பட்டியல்:—

1)அத்தியாயம் 4:
பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அஜாத சத்ருவின் மகனான உதயபட்டகன் அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
உதயபட்டகன் மகனான அநிருத்தன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அநிருத்தன் மகனான முண்டா, அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.
முண்டாவின் மகனான நாகதாசகன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.

மக்களுக்கு ஒரே கோபம், “இதென்னடா அப்பனைக் கொல்லும் வம்சமாக இருக்கிறதே!” — என்று ஆத்திரம் கொண்டு நாகதாசகனை நாடு கடத்தி விட்டு மந்திரி சிசுபாலனை அரசன் ஆக்கினர்.
அவனுடைய மகன் காலாசோகன் (கறுப்பு அசோகன்) 28 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்தான். அவன் தான் புத்த மதத்தின் இரண்டாவது மாநாட்டை நடத்தினான்.

அப்போது புத்தர் சமாதி அடைந்து (பரி நிர்வாணம் எய்தி) நூறு ஆண்டுகள் ஆயிற்று. ஆளாளுக்கு “புத்தர் சொன்னது இது — புத்தர் சொன்னது அது” என்று பிரசாரம் செய்யத் துவங்கினர் (அதாவது புத்த மதத்துக்குள் பிளவுகள் தோன்றத் துவங்கின).

killing 2

2) அத்தியாயம் 5:
பிந்துசாரன் மகனான் ‘’தர்ம’’ அசோகன், அவனது சகோதர்கள் 99 பேரையும் கொன்றுவிட்டு ஜம்பூத்வீபம் முழுதையும் அரசாளத் துவங்கினான். இவர்கள் மாற்றாந் தாய்களுக்குப் பிறந்தவர்கள்.
(( புத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமான அவனது கலிங்கப் போர் பற்றி மகாவம்சம் எதையும் சொல்லவில்லை!! ))

3) அத்தியாயம் 7:
விஜயனின் முதல் மனைவி குவன்னா ஒரு யக்ஷிணி வம்சப் பெண். மதுரையில் இருந்து பாண்டிய நாட்டுத் தமிழ் பெண் வந்துவிட்டதால் அவரை ராணியாக்கப் போகிறேன், தயவுசெய்து நீ உன் இரண்டு மகன்களுடன் ஓடிப்போய்விடு என்று கெஞ்சுகிறான். அவள் முதலில் தயங்கிவிட்டு வெளியே போனவுடன் யக்ஷர்களில் ஒருவன் ஒரே குத்தில் அவளைக் கொலை செய்கிறான். இரண்டு பிள்ளைகளும் வெளியே நின்றதால் தப்பித்துவிடுகின்றனர்.

4) அத்தியாயம் 9:
இளவரசர்கள், காலவேலன் என்ற அடிமையையும், சித்தன் என்ற இடையனையும் கொலை செய்கின்றனர்.

5) அத்தியாயம் 10:
இளவரசர்கள் எட்டு மாமன்மார்களையும் எதிரிப் படைகளையும் கொன்று குவித்து எலும்புக்கூடு மலையை உருவாக்குகின்றனர்.

killing 1

தமிழர் படுகொலைகள்

6)அத்தியாயம் 33:
தளபதி கம்மஹாரதகன், மன்னன் கல்லாட நாகனை தலைநகரிலேயே வெற்றிகொண்டான். அந்த துரோகியை அரசனுடைய தம்பியான காமனி கொன்றான்.
பாஹியா என்ற தமிழன் புலஹதா என்ற தமிழனைக் கொன்று 2 வருடம் ஆண்டான்.
படைத்தலைவன் பணயமாறன், பாஹியாவைக் கொன்று 7 வருடம் ஆண்டான்.
பணயமாறனை பிழையாமாறன் கொன்று 7 மாதம் ஆண்டான்.
தாதிகன் என்ற தமிழன் பிழையாமாறனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
இந்த ஐந்து தமிழர்களும் ஆண்ட காலம் 14 வருடம், 7 மாதங்கள்.

தனசிவன் என்பவனை அரசன், வில் எய்து கொன்றான்
கபதீசன் என்ற மந்திரி மரியாதையாக நடந்துகொள்ளாததால் அவனை அரசன் கொன்றான்

7) அத்தியாயம் 34:

ராணி அனுலா , வடுகன் என்ற தமிழ்த் தச்சனைத் திருமணம் செய்துகொள்கிறாள். விறகுவெட்டி மீது காதல் கொண்டு வடுகனை விஷம்வைத்துக் கொலை செய்கிறாள்.
அடுத்ததாக நிலீயன் என்ற பிராமணன் மீது காதல் கொண்டு விறகுவெட்டி திஸ்ஸனைத் தீர்த்துக் கட்டினாள்.
பின்னர் நிலீயனையும் விஷம் வைத்துக் கொண்ருவிட்டு தானே 4 மாதங்களுக்கு நாட்டை ஆள்கிறாள்.
அந்தக் காமாந்தகி அனுலாவை குடகன்ன திஸ்ஸா என்பவன் போரில் கொல்கிறான்.

8) அத்தியாயம் 35:
இலங்கைத்தீவு முழுதும் உயிர்க்கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். அவனை அவன் சகோதரன் கனிராஜனு திஸ்ஸ கொன்றுவிட்டு 3 வருடங்கள் ஆண்டான்!!
தீசவாபியில் நடந்த விழாவின்போது சந்தமுகசிவனைக் கொன்றுவிட்டு அவன் தம்பி யசாலக தீசன் 8 வருடங்கள் ஆண்டான்.
சுபா என்பவன் அரசன் போல நடிப்பது வழக்கம். அதை அரசனும் ரசித்து மகிழ்வான் அவன் ஒருநாள் அரசன் தலையைச் சீவுமாறு உத்தரவிட்டு தானே அரசாளத் துவங்கினான். விளையாட்டு வினை ஆயிற்று!!

வசபன் என்ற பெயர்கொண்டவன் அடுத்ததாக அரசாளுவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயருள்ள எல்லா இளைஞர்களையும் கொல்ல அரசன் உத்தரவிட்டான். அப்படியும் வசபன் என்பவன் அரசன் ஆகிவிடுகிறான்.

9) அத்தியாயம் 36:
குஜநாகன் தம்பி, குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு 2 வருடங்கள் ஆண்டான்.
அபயன் என்பவன் மலயத்தில் அரசனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
மூன்று லம்பகர்ணர்களில் ஒருவனான சங்கதீசன் விஜயகுமாரன் என்ற அரசனிடம் சேவகம் புரிந்து பின்னர் அவனைக் கொலை செய்கிறான். அவன் 4 வருடங்கள் ஆண்டான்.
அவனை மக்கள் விஷம் வைத்த நாவல் பழம் மூலம் கொலை செய்கின்றனர்.

ஜேததீசன் என்ற மன்னன் துரோகம் செய்த மந்திரிகளைத் தந்திரமாகக் கொல்கிறான். தந்தையின் சவ ஊர்வலத்தில் எல்லோரையும் வரவழைத்து சவம் அண்மனை வாசலைத் தாண்டியவுடன் கதவை மூடி அனைத்து அமைச்சர்களையும் தீர்த்துக்கட்டுகிறான். அவர்களின் உடல்களை கம்பத்தில் நட்டு வைக்கிறான்.

THAILAND-SOUTH-UNREST

10) அத்தியாயம் 37:
மகாவம்சம் படுகொலைகளுடன் துவங்கி படுகொலைகளுடன் முடிகிறது. மஹாவிகாரத்தை இடித்ததால் கோபம் கொண்ட ராணி ( மஹாசேனன் மனைவி ) தேரர் சங்கமித்ராவையும், அமைச்சர் சோனாவையும் ஒரு தொழிலாளி மூலம் படுகொலை செய்கிறாள்.

போரில் கொல்லப்படவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஆதிகாலம் முதல் போரில் கொல்வது அநியாயம் அல்ல, படுகொலை அல்ல என்று உலகம் ஒப்புக்கொள்கிறது. இன்றுவரை நீடிக்கும் சர்வதேச விதிமுறைகளும் நடைமுறைகளும் இதை ஏற்கின்றன.

அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் – பாரதியார்

–சுபம்–
Pictures are taken from different websites; not related to stories here;thanks.

Did Kalidasa fly in a Space Shuttle?

IndiaNameplate

Research Paper written by London swaminathan
Post 1284; dated 12th September 2014.

Kalidasa gives us an amazing picture of space travel in his most famous drama Sakuntalam. Before the space travel, he describes road transport in his days.He describes the scenery as witnessed by a passenger from a fast moving vehicle. We are familiar with those pictures because we travel by Super Fast Express trains or air planes nowadays. But in Kalidasa’s days did he have such fast moving chariots? Was the road condition was as good as our modern motor ways. Here in Britain we can drive up to 80 miles per hour on motor ways. The trains can go up to 130 miles per hour. Kalidasa’s description show that he had travelled in such a fast moving vehicle.

“Objects which to my sight appeared minute suddenly become large; what was really divided, seems united; and what was in truth bent, appears straight to my eyes. So swift is the motion of the chariot that nothing even for moment seems either near or distant”.

Yad aaloke suuksmam vrajati sahasaa tad vipulataam
Yad ardhe vicchinnam bhavati krtasamdhaanam iva tat
Prakrtyaa yad vakram tad api samarekham nayanayor
Name duure kimcit ksanam api na parsve rathajavaat
Sakuntalam Act 1—9

One can see big palaces as tiny little toy houses from the top of a high hill. But Kalidasa actually talks about fast moving chariots. Right; Let us accept we had such beautiful roadways in those days and we had faster vehicles.

But his other description is definitely that of an astronaut. Matali is always associated with space travel and I have written about Arjuna’s space travel in Matali’s chariot in Mahabharata in my post “Stars are Gods! We are stars” (posted on 18th August 2014).

chandrayaan-1

Space Travel
Kalidasa also says that it is about space travel. Here are a few bits from Act 7 of Sakuntalam:

MATALI: in an instant, Your Honour will be landing on Earth that you rule over.
KING ( Looking down again): Matali, see with what rapidity we are descending; the world of mortals presents a most marvellous sight. Look.

The earth appears to descend from the summits of mountains that emerge upwards;
The trees no longer appear to be enveloped in their foliage, as their trunks heave in sight;
The rivers whose waters were lost to view from their narrowness become visible from the expansion of their waters.

Behold, the earth is brought near me as if someone throwing it upwards.
(See how the Earth looms at my side sa if some mighty hand flung her up to me) — Sakuntalam Act 7—8

Sailanaanaam avarohatiiva sikharaad unmajjataam medinii
Parnaabhyanataraliinataam vijahati skandhodayaat paadapaah
Samtaanais tanubhaavanastasalilaa vyaktim bhajanty aapaghaah
Kenaapy utksipateva pasya bhuvanam matpaarsvam aaniiyate
space_shuttle_4

MATALI: An acute observation, Sir. Oh, what enchanting beauty is this, of the Earth.
Then Matali and the king discuss about Hemakuta, the home of Kimpurusas.
The term KIM PURUSA fits very well with a space traveller. It means “WHAT MAN?” When you look at an Extra Terrestrial or anyone dressed in a space suit we wonder “What Type of Man is this?” Kimpurusa means the same!!

Let us loot at the Sakuntalam drama again:

KING (in tone of utmost wonder): How is this Matali?
The wheels glide noiseless; no jolting is felt;
No dust is seen whirling around;
They do not touch the surface of the Earth;
Nothing marks the chariot’s descent

MATALI: This, needless to say, is the difference, gracious lord between the Chariot of Indra, Lord of Heroic Fury and that of Your Honour.

This is a very clear description of a space travel. They must have had a space shuttle better than ours. No noise, No dust, No impact!!!

NASA may develop such a vehicle in future. If they are able to develop such a vehicle they must name it Indra Ratha.
shuttle3

Here in Sakuntalam, he describes an astronaut’s experience. Only they can see “earth throwing up at them”. Anyone learning to pilot a plane will also have to tackle this problem. No one else can understand this description. The second amazing thing is that he wrote in a popular drama which was enacted on the stage two thousand years ago!! So people must also be familiar with these things. This shows not only the kings, but also the general public had access to high speed travel two thousand years ago or at least the knowledge of it. We all read about space travel. But we have no experience and we believe what they say about Moon and Mars!

I have already proved that Kalidasa lived before the Tamil Sangam poets. My research in Tamil and Sanskrit similes shows that Kalidasa lived before 1st Century BCE. His 200+ similes out of his 1000+ similes are used by the Sangam poets. Tamil Sangam poets who lived 2000 years ago did not name Buddha or Mahavira anywhere in their literature. Only hints are there about the sects that existed at that time. They could not have copied I from Asvagosha who himself copied gods like Skanda/Kartikeya etc from Hindu Kalidasa. So Kalidasa’s age is proved beyond doubt. Great Tamil scholar Rev.G.U.Pope also gave similar view about Kalidasa. People who knew Sanskrit and Tamil only can judge the period of old Indian poets.

Space_Shuttle_scheme

Another proof for my theory is that we had Sanskrit books on flying planes in “ Vaimanika Sahstra” even before Wright brothers flew such planes for the first time in the Western World.

One another proof is in my post “ How did Rama fly his Pushpaka Vimana/Plane? (posted on 22nd June 2013).
Long live Kalidasa! Long live Indian Space Research!!

shuttle 1

Contact swami_48@yahoo.com

“மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”

????????????????????????

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1283; தேதி: 12 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆய்வுக்கட்டுரை வரிசையில் நேற்று மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். இன்னும் நிறைய ஜோதிடச் செய்திகள் இருந்தும் மாதிரிக்காக கொஞ்சம் விஷயங்களைக் குறிப்பிட்டேன். அது போலவே புத்தர் பற்றிப் பல அற்புதச் செய்திகள் இருக்கின்றன. இலங்கைக்கு புத்தர் வந்தாரா? என்ற தலைப்பில் அவற்றைத் தனியாகத் தருவேன்.

மகாவம்சத்தை எழுதியதே ஒரு தமிழராகவோ அல்லது சங்கத் தமிழ் இலக்கியத்தைப் படித்தவராகவோ இருக்க வேண்டும் என்பது எனது துணிபு. மநுநீதிச் சோழன் கதை, குமணன் கதை, கோப்பெருஞ்சோழன் நட்பு, கிளி நெல் கொண்டு வந்த கதை, குழந்தையை யானை காலில் இடறவிட்ட கதை போன்ற பல சங்கத் தமிழ் கதைகளும் சங்க காலப் பெயர்களான கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன், ஏராளமான நாகர்கள் பெயர்களும் மகாவம்சத்தில் வருவதால் இது தமிழ் வரலாற்றுக்குத் துணைபுரியக்கூடும். அதையும் தனியாக எழுதுவேன். நேரடியாகத் தமிழர் பற்றிச் சொல்லும் கதைகளை எல்லோரும் முன்னரே அறிவர்.

மகாவம்சம் என்னும் பாலி மொழி நூல் இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் என்பதை முதல் பகுதியில் விளக்கி இருக்கிறேன். மகவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உண்டு.

அற்புதச் செய்தி 1
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் பற்றிய பத்தாவது அத்தியாயத்தில் ஸ்வர்ணபாலி என்பவர் செய்த அற்புதம் வருகிறது. அவர் தங்கக் கிண்ணத்தில் உணவு கொடுத்த பின்னர் அவர் பறித்த ஆலமர இலைகள் எல்லாம் தங்கக் கோப்பைகளாக மாறிவிடுகின்றன. இதை மஹாபாரத ராஜசூய கீரி கதையுடன் ஒப்பிடலாம். தர்மம் செய்த ஒரு ஏழைப் பிராமணன் வீட்டில் சிந்தப்பட்ட உணவில் புரண்ட கீரியின் பாதி உடல் மட்டும் தங்கமான கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன். உணவு தானம் செய்வோர் தொட்டதெல்லாம் தங்கமாகும். ‘’மண் எல்லாம் பொன் ஆகும் ராமர் வரவாலே’’ என்ற சம்பூர்ண ராமயணத் திரைப்படப் பாடலையும் நினைவிற் கொள்க.

srilanka landing

அற்புதச் செய்தி 2
தேவனாம்ப்ரிய திஸ்ஸன் பற்றிய பதினோறாவது அத்தியாயத்தில், நாட்டில் ரத்தினக் குவியல்கள் பூமிக்குள்ளிருந்து தானாக வந்த செய்திகளும் எலிகளும் கிளிகளும் உண்வுதனியங்களைக் கொண்டு குவித்த செய்திகளும் உள்ளன. குதிரை முத்து , யானை முத்து , ரத முத்து ,மணி முத்து , அணி முத்து , மோதிர முத்து , காகுத பழ முத்து, சிப்பி முத்து ஆகிய எட்டு வகை முத்துகள் கடலுக்கு வெளியே கரையில் குவிந்த அற்புதச் செய்திகளும் உள. அந்த மன்னன் அவைகளை அசோக மாமன்னனுக்கு அனுப்ப நினைக்கிறான். இருவரும் பார்த்ததே இல்லை. ஆயினும் ஆப்த நண்பர்கள்! பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல!!

அற்புதச் செய்தி 3
மகாவம்சத்தில் பல இடங்களில் பூமி அதிர்ச்சி அற்புதங்கள் வருகின்றன. 15-ஆவது அத்தியாயத்தில் பௌத்தர்களுக்கு மகாமேக வனத்தைக் கொடுக்க தாரை (நீர்) வார்த்தவுடன் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன், இலங்கைத் தீவில் பௌத்த தர்மம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார். மன்னன் கொடுத்த மல்லிகைப் பூவை எட்டு திசைகளிலும் போட்டவுடன் மீண்டும் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன் போதி (அரச) மரம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார்.

அற்புதச் செய்தி 4
புத்தரும் பல தேரர்களும் பறவைகள் போலப் பறந்து வருவதும் காற்றில் மிதப்பதும் பல இடங்களில் பேசப்படுகிறது. இது இந்துமதப் புராணங்களில் காணப்படும் காட்சியே. நாரதர் என்ற முனிவர் த்ரிலோக சஞ்சாரி. அவர் ஒரு விண்வெளிப் பயணி. கிரகம் விட்டு கிரகம் தாவுவார். 14-ஆவது அத்தியாயத்தில் தேரர்களை அழைத்துவர ரதத்தை அனுப்பினான் மன்னன். அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டு வானத்தின் வழியே பறந்து வந்து இறங்கினர் என்று 14-ஆவது அத்தியாயம் பகரும் ஜாம்பூத்வீபத்தில் (இந்தியாவில்) உள்ள துறவிகளுக்கு மற்றவர் எண்ணங்களை அறியும் சக்தி உண்டு என்றும் அவர்கள் ‘’தெய்வீகக் காது’’ படைத்தவர்கள் என்றும் தேரர்கள் விளக்குகிறார்கள்.

அற்புதச் செய்தி 5
17-ஆவது அத்தியாயத்தில் ஒரு யானை புத்தரின் அஸ்திக் கல்சத்தைச் சுமந்து வருவதையும் அந்தக் கலசம் தானாக வானில் பறந்து மிதந்ததையும் படித்தறியலாம். மன்னரும் மக்களும் அதைக் கண்டு வியக்கின்றனர்.

sl stamps2

அற்புதச் செய்தி 6
19-ஆவது அத்தியாயத்தில் போதி மரம் வருகை பெற்றி விவரிக்கப்பட்டுளது. முழுக்க முழுக்க அதிசய சம்பவங்கள் வருணிக்கப்பட்டுள்ளன போதிமரத்தைக் கடவுள் போல வழிபட்டு ஊர்வலம் நடத்தியது, பூஜை போட்டது, ஊரையே அலங்கரித்தது, மன்னன் அதன் பின்னாலேயே வந்தது எல்லாம் உள. அனுராதபுரத்தில் அதை இறக்கியவுடன் அது 80 முழ உயரத்துக்கு வானில் பறந்து தானாகவே அதற்கு நிர்மாணிக்க்ப்பட்ட பூமியில் இறங்கியது. உடனே பூமியே அதிர்ந்தது. மன்னன் தேவனாம்ப்ரிய திஸ்ஸனும் பல்லாயிரக் கணக்கானோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்தனர்.

அற்புதச் செய்தி 7
12-ஆவது அத்தியாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் விழுங்கிவிடும் கடல் பூதத்தை ஒரு தேரர் அடக்கிய கதை விவரிக்கப்படுகிறது. அவர் பெயர் சோனதேரர். அதிலிருந்து அரண்மனையில் குழந்தை பிறந்தால் அதற்கு சோனதேரா என்னும் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டது. கடல் பூதம் ஓட்டம் பிடித்தது.

இதுபோன்ற அற்புதச் செய்திகளில் அற்புத அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிப்படும். ஆகையால் இத்தகைய செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அறிவு எனும் மைக்ரஸ்கோப்பின் அடியில் வைத்த ஆராய்வது நலம் பயக்கும்.

gem sl
gem2

அற்புதச் செய்தி 8
28-ஆவது அத்தியாயத்தில் துட்டகாமனி, புத்த சைத்தியம் கட்டுவதற்காக, இந்திரன் உத்தரவின் பேரில் விஸ்வகர்மா கற்களைத் தயார் செய்தான். அதை ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் சென்று கண்டுபிடித்து மன்னனிடம் சொன்னான். கற்கள் இருந்த இடத்தை அவனுக்குக் காட்ட, வனதேவதை ‘உடும்பு’ உருவத்தில் வந்து அவனை அழைத்துச் சென்றது. அதற்குப்பின் நாடு முழுதும் ரத்தினக் கற்களும், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களும் கிடைத்தன.

தமிநாட்டிலுள்ள 38,000 கோவில்களின் தல புராணங்களைப் படிப்போருக்கு இந்த அற்புதங்கள் வியப்பளிக்கா. ஏனெனில் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு பறவை, விலங்கு, மரம் முதலியன் தொடர்பு பெற்று இருக்கும். இலங்கை பூமி — இராவணன், குபேரன் காலத்தில் இருந்தே ரத்னம் கொழித்த பூமி. இதை வால்மீகி முனிவரும் தொட்டுக்காட்டி இருக்கிறார். இலங்கையின் பொன்மயமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய லெட்சுமணனிடம், ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’’ என்று கூறி ஸ்வர்ணமய இலங்கையை நிராகரித்து விடுகிறான் ராமன். ஆகவே துட்ட காமினி சேதியம் கட்டத்துவங்கியவுடன் ஆளுக்கு ஆள் பூமியைத் தோண்டத் துவங்கினர் என்றும் அப்போது எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் கிடைத்தன என்றும் பொருள் கொள்வதில் தடை ஏதும் இல்லை.

sl stamp3

அற்புதச் செய்தி 9
12 அரசர்கள் பற்றிய 35-ஆவது அத்தியாயத்தில் யானை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. ராணியானவள் ஒரு குழந்தையை யானையின் காலுக்கு அடியில் வைத்துக் கொல்லச் சொல்கிறாள். அதை எடுத்துச் சென்ற சேவகப் பெண் யானையிடம் உண்மையைச் சொன்னவுடன் அது கண்ணீர் வடித்து கோபம் கொண்டு அரண்மனை வாயிலைத் தகர்த்து, சிறைப்பட்ட மன்னனை விடுவித்து, அவன் மறுகரைக்குச் செல்ல கப்பல் ஏற உதவிய கதை அது. இது போன்ற யானைக் கதைகள் சங்க கலம் முதல் ஏராளமாக உள. அத்தனையையும் யானை அதிசயங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். இதே போல சோழ மன்னன் ஒரு குழந்தையைக் கொல்ல எத்தனித்தபோது கோவூர்க் கிழார் சென்று தடுத்ததை புறநானூற்றில் (பாடல் 46) காண்க. மாபெரும் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் அனுப்பிய யானை அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்துவிட்டது!

அற்புதச் செய்தி 10
36-ஆவது அத்தியாயத்தில் மழை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. இது போன்ற செய்திகளையும் மழை அதிசயங்கள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சங்கபோதி என்ற மன்னன் நாட்டில் வறட்சி மிகவே, மகாஸ்தூப முற்றத்தில் படுத்துக்கொண்டு மழை பெய்யாதவரை நான் வெளியேறமாட்டேன். மழை பெய்யாவிடில் இங்கேயே உயிர் துறப்பேன் என்று சபதம் செய்கிறான். உடனே தேவர்கள், தீவு முழுதும் மழை பெய்யவைத்து வளம் ஊட்டினர்.

???????????????

இது போன்ற எத்தனையோ அதிசயங்கள் மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றன. படித்து மகிழ்க. அவற்றின் உட்பொருளை உணர்க!!

contact swami_48@yahoo.com

Why did Asoka kill his 99 brothers?

killing 1

Research Paper written by London swaminathan
Post 1282: dated 11th September 2014.

There were two Asokas in India. One was Black Asoka (Kalasoka) who was good and convened the Second Buddhist Council. The other one was world famous Indian emperor Dharma Asoka who was full of Adharma in his early life. Mysteries in Indian history are not solved yet. Nobody knew who the Black Asoka was! Nobody knew that the famous Asoka killed all his 99 brothers and cousins born to different mothers. Mahavamsa never mentioned the Kalinga War!!

Mahavamsa, the chronicle of Sri Lanka is full of murders and mayhem. It painted a gloomy picture of early Indian kings. Mahavamsa says that Dharma Asoka killed all his 99 brothers!

There is lot of confusion in Buddhist, Jain and Hindu versions of Indian history. “scholars” from foreign countries did not accept Hindu History narrated in the Puranas. If they had accepted it, it would have contradicted the story told by the Christians that the world was created in October, 4004 BCE. Moreover they were afraid of ex communication from the church or blinding or execution like Galileo and Copernicus. Millions of women including the most famous Joan of Arc were burnt alive for worshipping pagan gods or following pagan beliefs. The women were dubbed as witches.

But foreigners accepted the Buddhist history because they thought Buddhism as a rebellion against Vedic Hindus, which is not true. One must read the Introduction to Dhammapada by philosopher Dr Radhakrishnan. Buddhist and Jain versions were also as confusing as Hindu Puranas. But the “scholars” compromised with the dates and rejected Kalasoka and other conflicting matters. About Jains they were least bothered. Since they were not in any other country except India at that time, they did not matter to them. Moreover they couldn’t digest the strict non violence and vegetarianism of the Jains. All the foreign “scholars” were beef eaters and (whisky) drinkers. This and their belief in the Biblical date of World creation greatly influenced their angled, biased, crooked, distorted, jaundiced, one sided and perverted thinking and dating.
Mahavamsa gives us a long list of murders, yet to be confirmed by a secondary source in history. Following is the list of murders and mayhem:
killing 2

Murder mysteries in Mahavamsa:

Mahavamsa Chapter-4:
Bimbisara’s son Ajatasatru slew (killed) his father.

Mahavamsa Chapter-4:
Ajatasatru’s son Udayabhaddaka slew his father.
Udayabhaddaka’s son Aniruddha slew his father
Aniruddha’s son Munda slew his father
Munda’s son Nagadasaka slew his father
People became angry about these patricides and banished Nagadasaka and appointed Sisunaga as the king.
His son Kalasoka ruled for 28 years.
Who is this Kalasoka who ruled for 28 long years?
No mention about this king Indian history books written 150 years ago by the British, still studied by the stupid Indians!!!

Mahavamsa Chapter-5:
Asoka, son of Bindusara, slew 99 brothers born of different mothers and won the sovereignty of Jambudvipa (India).
No mention of the Kalinga War which made Asoka to convert to Buddhism!!

Mahavamsa Chapter-7:
Vijaya’s first wife Kuvanna was killed by Yakshas (when he sent her out of the palace after marrying a Tamil Pandya girl).

killing 3
Mahavamsa Chapter-9:
Princes killed slave Kalavela and herdsman Citta.
Mahavamsa Chapter-10:
The prince’s men killed all the soldiers of enemy and the eight uncles with them and they raised a pyramid of skulls.

Mahavamsa Chapter-34:
Queen Anula married city carpenter Vaduka and killed him by poison after falling in love with a wood cutter.
She killed wood cutter Tissa by poison and married Niliya.
She poisoned Brahmin Niliya and ruled the country for 4 months.
Later Kutakanna Tissa killed Anula in a battle.

Mahavamsa Chapter-35:
Kanirajanu Tissa slew his brother and reigned for three years.
Having slain his brother in the festival sports at the Tissa tank his younger brother Yassalakatissa ruled for 7 years.
Subha the guard ordered to slain the king and reigned for 6 years.

THAILAND-SOUTH-UNREST

Mahavamsa Chapter-36:
Three Lambakarnas killed king Vijayan and one of them,Samghatissa ruled for 4 years.
He was killed by poisoned fruits. People who hated him mixed the poison.
King Jethatissa killed all the treacherous ministers in his father’s funeral procession. He was behind the procession allowing his brother to take the body out of the gate of the palace. As soon as the body passed the gate, he ordered the gate to be closed and killed all the ministers and impaled their bodies around his father’s pyre.

Mahavamsa Chapter-37:
The last chapter of Mahavamsa ended with the killing of a thera. One of the wives of Mahasena was sad about the destruction of a Mahavihara. He asked one labourer to finish off the thera. Samghamitra and a lawless minister Sona were killed while they were coming to destroy Thuparama.

Mahavamsa, has lot of murders and killings from the beginning to the end apart from the lawful killings in the battles. I have not included the war deaths because they are considered lawful from the ancient days till today.
Contact swami_48@yahoo.com

(Pictures are taken from various websites;thanks,they are not related to the anecdotes in Mahavamsa)