நான்
கற்றுக் கொண்ட ஒரு முக்கிய பாடம்- வட இந்திய ஹோட்டல்களில் மசாலா தோசை, இட்லி, வடை கேட்காதே;
தென்னிந்திய ஹோட்டல்களில் பராட்டா, குருமா முதலியன கேட்காதே; இரண்டு இடங்களிலும் சைனீஸ் நூடில்ஸ் Chinese Noodles ஆர்டர் செய்யாதே.
செய்தால்
நீண்ட நேரம் சென்று அந்தப் ‘பொருள்கள்’ வரும்;அது அதுவாக இராது.
இதே
போல ஹிந்துஸ்தானிக்காரர்
தெலுங்கு, கன்னடக்காரர்கள், கர்நாடக சங்கீத- குறிப்பாக- தமிழ்ப்
பாட்களைப் பாடும்போது உச்சரிப்புப் பிழைகள் வருவதை நான் லண்டலிலேயே கேட்டிருக்கிறேன்—“கெட்டும் இருக்கிறேன்”.
தமிழ்ப்
பாடகர்களின் இந்தி, மராட்டி உச்சரிப்பும் இப்படித்தான்.
லண்டனில்
ஆடல், பாடல் கற்றுக்கொண்ட ஒரு பெண், — ஆசிரியர் சொன்னதை ஆங்கிலத்தில் எழுதும்
போது, பாரோ (baaro) கிருஷ்ணையா என்பதை கடன்வாங்கு (BORROW பார்ரோ) கிருஷ்ணையா என்று எழுதி படித்துக் கொண்டிருந்ததை என் நண்பர்
பார்த்துவிட்டார். பாவம் அந்தப் பெண் நாட்டியம் ஆடினால் “கடன் வாங்கு கிருஷ்ணையா” என்றல்லவோ அபிநயம் பிடிப்பாள்! ஆகப்
பொருள் தெரியவிட்டால்,அர்த்தம், அனர்த்தம் ஆகிவிடும்.
நாற்பது
ஆண்டுகளுக்கு முன் நான் மதுரையில் R S S விழா ஒன்றில் ‘அப்னி தரத்தி, அப்னா அம்பர் அப்னா
ஹிந்துஸ்தான், அப்னா ஹிந்துஸ்தான்’ என்ற இந்தி மொழி தேசபக்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்தவுடன்
“பாட்டுப் பாடி கொன்னுட்டீங்களே” என்றார் ஒருவர். அது பாராட்டு இல்லை, பாட்டை நான் கொலை செய்ததை அவர் அப்படிச்
சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூட எனக்கு சிறிது நேரம் பிடித்தது (சரியான
ட்யூப்ப் லைட்டு நான்!)
xxx
75 ஆண்டுக்கு முந்திய அருமையான தமிழிசை
மாநாட்டு மலர் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. அதில் சிலர் ‘கைபர் கணவாய்’ போன்ற சுடுமொழிகளையும் இன்னும் சிலர்
தமிழ் இலக்கியம் 15,000 ஆண்டுப் பழமையுடையது என்ற உளறல்
மொழிகளையும் உதிர்த்து இருந்த போதிலும் பல அருமையான கட்டுரைகளும்,நூற்றுக் கணக்கான அரிய பாடகர்
படங்களும் அதிலிருந்து கிடைத்தன.
அதில்
1943-ம் ஆண்டில் ராவ் பகதூர் சம்பந்த
முதலியார் பேசிய பேச்சு பொருள் பொதிந்தது .அவர் பல சுவையான சம்பங்களைச் சொல்லி, அதன் கருத்துக்களை விளக்குகிறார்.
கச்சேரிக்கு
வந்த ஆங்கிலேயரை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாடகி, TWINKLE, TWINKLE LITTLE STAR ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை ‘கன்னா பின்னா’ என்று பாடி ஆங்கிலேயரை வேதனைப்
படுத்தியதையும் இன்னும் சிலர் தேவாரம், தெலுங்கு கிருதிகளைத் தாறுமாறாகப்
பாடி அவைகளைக் ‘கொலை
செய்ததையும்’ சுவைபட எழுதி இருக்கிறார்.
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 14-8-2019 இதழில்
வெளியாகியுள்ள கட்டுரை!
ஆண்டவன் அருள் பெற அன்ன
தானம்!
ச.நாகராஜன்
தானங்களில் சிறந்தது என்ன தானம்?
அன்ன தானம் தான்!
ஏன்?
ஏனெனில் மற்ற எல்லா தானங்களையும் பெறும் போது இன்னும் கொஞ்சம்
பெற மாட்டோமா என்று தோன்றும். ஆனால் அன்னத்தை உண்ட ஒருவன் மட்டுமே திருப்தி அடைந்து
போதும் போதும் என்கிறான்.
திருவள்ளுவர் மகத்தான
இரகசியத்தை ஒரு குறளில் விளக்கி விடுகிறார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)
இன்று ‘பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர் மாண்பைக் காப்போம்;
இல்லையேல் உலகம் அழிவு படும்’ என எச்சரிக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தை, அறிஞர்கள் தொகுத்த எல்லா அறங்களிலும்
நூல்களிலும் பிறர்க்குக் கொடுத்து வாழுதலே தலை சிறந்ததாக அமைகிறது என்று கூறி பூமி
நிலைத்திருப்பதற்கான இரகசியத்தை திருவள்ளுவர் பழைய காலத்திலேயே வெளியிட்டிருக்கும்
பாங்கு பிரமிக்க வைக்கும் ஒன்று.
கடலுள் மாய்ந்த
இளம் பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஒரு பெரும் புலவனும் கூட. அவனும் வள்ளுவர்
கருத்தை ஒட்டி பூமி நிலைத்து சிறப்புப் பெறக் காரணங்களை அடுக்கி ஒரு பாடலைப் பாடுகிறான்.
புறநானூற்றில் 182ஆம் பாடலாக அது அமைகிறது.
“உண்டால் அம்ம
இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே” என்று பாடலின் முதல் அடிகளிலேயே இந்திரனின் அமிர்தம்
என்றாலும் கூடத் தனியாக உண்ண மாட்டார்கள் என்ற காரணத்தை முதலாகச் சொல்லி அப்படிப்பட்ட
தமக்கென வாழாச் சான்றோர்கள் இருப்பதனால் அல்லவா பூமி தனது சிறப்பைப் பெற்று நிலை பெறுகிறது
என்று வியந்து கூறுகிறான்.
‘உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே’ என்பது தான் தமிழனின் தலையாய தத்துவமாக
அமைகிறது. அதாவது தமிழனின் தலையாய தத்துவம் அன்ன தானம் செய்பவன் உயிரைக் காத்தவனாகிறான்
என்பதே!
மணிமேகலை அமுதசுரபி
என்னும் அட்சய பாத்திரம் மூலம் அன்ன தானமிட்டு பசிப்பிணியைப் போக்குவதை ஐம்பெருங் காப்பியங்களுள்
ஒன்றான மணிமேகலைக் காப்பியம் சிறப்புறச் சொல்கிறது.
பெரும் இரகசியங்களை உலகுக்கு அருளிய திருமூலர், திருமந்திரத்தில்
“ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்”
என்கிறார்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
என்றும்
அவர் கூறி அருள்கிறார். உண்ணும் போது ஒரு கைப்பிடி கொடுப்பதோடு வாயில்லாத
ஜீவன்களுக்கும் கூட ஒரு வாய்ப்பிடி கொடு என்கிறார் அவர்.
திருமூலரின்
அற்புத அருளுரை இன்னொன்றும் உண்டு. அது படமாடும் கோயில் பகவனையும் நடமாடும் கோயில்
நம்பனையும் பற்றியது!
படமாடும்
கோயில் பகவற்கு ஒன்று ஈயில் அது நடமாடும் கோயில் நம்பற்கு ஆகா;
ஆம்
கோவிலில் இறைவனுக்குப் படைப்பவை அவனுக்கு மட்டுமே போய்ச் சேரும்; அது பசியால்
வாடும் நடமாடும் கோவிலாக இலங்கும் ஏழைக்குச் சென்று சேராது.
ஆனால்,
நடமாடும் கோயில் நம்பற்கு ஒன்று ஈயில் அது படமாடும் கோவில் பகவற்கும் ஆகும்.
ஏழைக்கு ஒன்று இடும் போது அது இறைவனுக்கும் சேர்வதால், இரட்டைப் பயனால் இரட்டைப்
பலனைத் தருகிறது! இது திருமூலர் அருளும் இரகசிய அருளுரை!
தர்மர்
கிருஷ்ணனை நோக்கி, ‘தானங்களில் சிறந்த தானத்தைப் பற்றி சொல்லி அருள்க’, என்று கேட்ட போது கண்ணபிரான்
மிக விரிவாக அன்ன தானப் பலனைப் பற்றிக் கூறுகிறார்.
அன்னதானத்தை
விட மேலானதொரு தானம் உண்டானதும் இல்லை; இனி உண்டாகப் போவதும் இல்லை என்பது அவரது
முடிவான தீர்மானம்.
கிருஷ்ணர்
அன்னதானம் ஏன் சிறப்பானது என்பதை இப்படிக் காரணத்துடன் விளக்குகிறார்:-
“ஏனெனில்
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என்னும் எல்லாருடைய எக்காலங்களிலுமுள்ள எல்லாக்
காரியமும் அன்னத்தில் நிலை பெற்றிருக்கின்றன. ஜீவன் அன்னமயமாகக் கருதப் படுகிறான்.
தாவரங்களும் ஜங்கமங்களும் அன்னதால் உண்டாகின்றன. தர்மமும், அர்த்தமும், காமமும்
அன்னத்தால் உண்டாகின்றன. ஆகையால் அன்னதானத்தை விடச் சிறந்த தானம் மேலுலகிலும்
இல்லை” என்கிறார் கிருஷ்ணர்.
(விரிவான விளக்கம் முழுவதையும்
ஆஸ்வமேதிக பர்வம் நூற்றோராவது அத்தியாயத்தில் படிக்கலாம்).
அண்மைக் காலத்தில், தமிழகத்தில் வடலூரில் வாழ்ந்து
உலகத்தையே அதிசயிக்க வைத்த, அற்புதமான மகான் வள்ளலார் ஆவார். அன்ன தானத்தின்
சிறப்பை நன்கு விளக்கிய தமிழ்ச் சித்தர் அவரே!
இரு கொள்கைகளை மனிதப் பிறப்பின் தலையாய கொள்கைகளாக அவர்
மனித குலத்தின் முன் வைத்தார் 1) கொல்லாமை 2) அன்ன தானம்.
“ஜீவ காருண்யத்துடன் பசித்தவருக்கு அன்னம் படை; இதில் கால
நேரம் பார்க்க வேண்டாம்” என்றார் அவர்.
கொல்லாமை அறத்தைக் கடைப்பிடிக்காதோருக்கு அவரது
சன்மார்க்கத்தில் இடமில்லை. இப்படிச் சட்டம் வகுத்த அவர், ஆயின் அவர்கள் கூடப்
பசிப்பிணியால் வருந்தினால் அன்னம் ஏற்கத் தடையில்லை என்று அருளினார்.
பசியோடு இருப்பவரைப் பார்த்தால் “பழங்கஞ்சியாயினும்
வழங்கவும் நினையீர்” என்பது அவரது அருளுரை!
தருமச்சாலை 23-5-1867 அன்று பிரபவ வருடம் வைகாசி மாதம்
11ஆம் நாள் தொடங்கப் பெற்றது; அற்றார் அழி பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கப்
பேரறம் அன்று தொடங்கப் பெற்றது. அன்று
ஆயிரம் பேருக்கு மேல் அன்னம் பாலிக்கப்பட்டது. இன்று வரை அப்பணி இடையறாது
தொடர்ந்து நடந்து வருகிறது.
அடிகள் செயலாற்ற நினைத்த முழு வீச்சு அளவில் தமிழகம் அவரைக்
கடைப்பிடிக்காத சூழ்நிலையில் “கடைவிரித்தோம் கொள்வாரில்லை” என்று
கூறிய அந்த அற்புத அவதாரம் தனது அறையில் நுழைந்தது; 30-1-1874 அன்று தைத்திங்கள்
19ஆம் நாளில் அவர் இறைவனோடு இரண்டறக் கலந்தார். உடலுடன் அவர் மறைந்தது சமீப
காலத்தில் அறிவியல் கண்டு வியக்கும் பேரதிசயமாகும்.
தமிழ் அறநூல்கள் கூறும் 32 அறங்களில் அனைவருக்கும் உணவு
தருவதும் பசுவுக்கு வாயுறை வழங்குவதும் வலியுறுத்தப்படுகிறது.
உலகில் பசிப்பிணியைப் போக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஐ.நாவின்
ஃபுட் அண்ட் அக்ரிகல்சுரல் ஆர்கனைசேஷன் (உணவு மற்றும் விவசாய நிறுவனம்) உலகில்
இப்போது 100 நூறு கோடி பேர் பசியால் தவிக்கின்றனர் என்று கூறுகிறது. இந்த நிலையைப்
போக்க தாராள உதவியைக் கோருகிறது.
ஒரு குழந்தையின் முதல் ஆயிரம் நாட்களில் அதற்கான சரியான
உணவு தரப்படவேண்டும் என அறிவியல் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
ஆகவே இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தமிழர் தம் தலையாய
அறமான அன்னதானத்தை அனைவரும் சிரமேற்கொண்டு செய்ய வேண்டுவது இன்றைய கால கட்டத்தில்
முக்கியமான ஒன்றாக அமைகிறது.
ஒவ்வொருவர் இல்லத்திலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும்
இதர குடும்ப விழாக்களின் போதும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தோ அல்லது குறைத்தோ
ஆங்காங்கே அன்னதானத்தை மேற்கொண்டு தேவையானோருக்குப் பசிப்பிணியைத் தீர்க்க
முன்வரலாம்.
தமிழ் மங்கையர் தர்ம உணர்வில் தலை சிறந்தவர்கள் என்ற
அடிப்படையில் ஒவ்வொரு இல்லத்தரசியும் ஆடம்பரத்தைக் குறைத்து அன்னம் வழங்கும் அன்ன
லெட்சுமியாக – அன்னபூரணியாக மாறி மற்றவர்களுக்கு வழி காட்டினால் வள்ளலார் ஆசி
பெற்ற அற்புத பூமி மலரும், இல்லையா!
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Though all are Sanskrit words or place names, they are well known throughout India and used in most of the Indian languages. Spellings are slightly adjusted to fit into the grid.
Across
1.Bikshu – 6
letters–Buddhist monk
7.Kedarnath –9–
Shiva Shrine in Himalaya with Cedar trees
8.Udyoka – 6–job,
profession, work
9.Asasdhya –8–
Impossible, difficult to do
10.Krama – 5–order,
method, turn
11.Asirvadh-
8–Blessing
Down
1.Biksha – 6
letters–begging offering, alms
2.Indumati –
8–great Swayamvaram described by Kalidas; she chose Ajay
3.Surya -5–
sun
4.Udaka – 5–water
5.Uttamam- 7–best,
better than he middle and low positions
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பழைய பத்திரிக்கைகளில் பாம்புக்கடிக்கு சில மருந்துகள் சொல்லப்படுகின்றன. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. வசம்பைக் கண்டால் பாம்பும் நடுங்கும் என்பது பத்திரிக்கை மொழி; எந்த அளவுக்கு உண்மை என்பது பாம்புப் பிடாரர்களுக்கே தெரியும்.tamilandvedas.com, swamiindology.blogspot.com
நஞ்சு முறிப்பான், வசம்பு பற்றிய செய்திகளுடன் கொஞ்சம் மருத்துவ துணுக்குகளும் இதோ:-
TAMIL TABLE- WEIGHTS, KUNDUMANI, VARAHAN
tags- பாம்பு விஷம், வசம்பு, நஞ்சு முறிச்சான், மண் ட் ரேக், மாசக்காய், குங்குமப்பூ
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
முக்கிய தினங்கள் : விநாயக சதுர்த்தி : 2-9-2019 ரிஷி பஞ்சமி
3-9-2019
மாலை மலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
விநாயக சதுர்த்தி வழிபாட்டின்
இரகசியங்கள்!
ச.நாகராஜன்
உலகெங்கும்
விநாயகர்!
விநாயக சதுர்த்தி வழிபாடு மிகுந்த கோலாகலத்துடன் காஷ்மீரிலிருது
கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகை.
நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில்
உள்ள தனி வெண்பாக்களில் 7வது வெண்பா,
“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்” என்கிறது.
இதில் ‘ஒரு கை முகன்’ என்று விநாயகரைப்
பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து
வருகிறது என்பது உறுதியாகிறது.
இன்றோ தமிழ் நாட்டில் பிள்ளையார் பட்டியில் ஆரம்பித்து உலகெங்கும்
பரவி இருக்கும் பிள்ளையாரது வழிபாடும் பெயர்களும் நமக்குப் பிரமிப்பை ஊட்டுகின்றன.
திபெத்தில் அவர் ட்ஸோக்ஸ்டாக். பர்மாவில் அவர் மஹா பியன். மங்கோலியாவில் அவர் பெயர் டாட்கரௌர் காக்ஹன். கம்போடியாவிலோ அவர் ப்ரஹ் கெனெஸ் என வழிபடப்படுகிறார். ஜப்பானியர் அவர் வினாயக்ஸா அல்லது ஷோடென் என்று வழிபடுகின்றனர்.
பசிபிக் மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஹவாய் தீவில் கோனா கடற்கரையில் ஒரு சிறிய விநாயகர் விக்ரஹத்தை பக்தர்கள் கும்பிட்டு வருகின்றனர்.
உலகெங்கும்
எதை ஆரம்பிக்கும் முன்னரும் விநாயகர் வழிபாடு தான்!
விநாயகரை வழிபடக் காரணம்!
இப்படி
எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்னர் உலகெங்கும் முதல் தெய்வமாக விநாயகரை வழிபடக் காரணம் என்ன?
எல்லா
தெய்வங்களின் சிறந்த அம்சங்களின் பகுதி விநாயகரிடம் இருக்கின்றன.
அவரைத்
தொழும்போது எல்லா தெய்வங்களும் திருப்தியுடன் அருளாசியை- அனுக்ரஹத்தை- வழங்குவதால்
தான் தடை போக்கும் விக்னேஸ்வரராக அவர் மிளிர்கிறார். இது ஒரு முக்கியமான இரகசியம்.
இப்படி
அனைத்து தெய்வங்களின் அபார வலிமைகளைக் கொண்ட அவரை கணபதியாக – கணங்களின் அதிபதியாக சிவபிரான்
ஆக்கியருளினார்.
‘பிடிச்சு
வச்சா பிள்ளையாரு’
என்ற மொழிப்படி மஞ்சள்
பொடியில் ஒரு பிடி பிடித்து வைத்தால் அங்கே அவர் எழுந்தருளுகிறார்.
களிமண்ணில் கூட அவர் திருவுருவம் படைக்கப்பட்டால்
ஏற்கிறார்; எளியவர் தெய்வம் ஆகிறார்.
அருகம்புல், எருக்கம் மாலை, மோதகம், கொழுக்கட்டை
என நைவேத்தியத்தில் கூட அனைவரும் மனமுவந்து எளிதில் அளிக்கக்கூடிய பொருள்களே அவர் உகக்கும்
பொருள்கள்.
சிவனுக்கும் உமைக்கும் செல்லப் பிள்ளையானதால்
பிள்ளையார் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவபிரான் ஒவ்வொரு சமயத்தில் அடியார் நிமித்தம்
ஒவ்வொரு பெயரைக் கொண்டது போலவே, தன்னுடைய அடியார் நிமித்தம் வக்கிரதுண்ட விநாயகர்,
சிந்தாமணி விநாயகர், கஜானனர், விக்கினராஜர், மயூரேசர், அபரமயூரேசர்,பாலசந்திரர், தூமகேது,
கணபதி, மகோற்கடர், உந்தி விநாயகர், வல்லப விநாயகர் என இப்படி பன்னிரெண்டு மூர்த்தங்களைக்
கொண்டிருக்கிறார். இப்பெயர்கள் விளக்கும் வரலாறுகள் அற்புதமானவை.
விநாயகன் என்ற சொல்லின்
சப்தார்த்தம் மூன்று 1) துட்டர்களை அடக்குபவன் 2) இடையூறுகளை நீக்குபவன் 3) சுந்தரமுள்ளவன்.
வடலூர் வள்ளலார் பெருமான்
கணபதி பூஜை செய்யும் விதத்தை நன்கு விளக்கி, கணபதியைத் துதி செய்பவன் அடையும் சிறந்த
பேறுகள் இரண்டு என விளக்குகிறார் : 1) கணபதியை பூஜிப்பதால் பரமாசாரியர் கிடைப்பார்
2) சிவானுபவம் சித்திக்கும். நல்ல குரு வந்து வழிகாட்டி பேரின்பம் அடையச் செய்வார்
என்பது அவரது அருள் வாக்கு.
கபிலர்
கூறும் இரகசியங்கள்!
சங்க கால மகானாக விளங்கிய
கபில தேவ நாயனார் திரு இரட்டை மணி மாலை என்ற தனது அற்புதமான நூலில் பிரமிக்க வைக்கும்
இரகசியங்களை விண்டுரைக்கிறார்.
எடுத்துக்காட்டிற்காக ஒரு செய்யுளை மட்டும் இங்கு பார்க்கலாம்:
திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை
முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
இந்தப் பாடல் சாதாரணப் பாடல் அல்ல.
“நுட்பம் என்பது நுழைபொருள் யாவும்
திட்ப மாகத் தெளியக் கூறல்” என்ற விதியின்
படி ஏராளமான நுட்பங்களைத் தன்னுள் அடக்கியுள்ள பாடல்.
ஐஸ்வரியத்தைப் பெருக்கும்.
தொடங்கிய தொழில்களைத் தடையின்றி நிறைவேறச் செய்யும்.
நல்ல செல்வாக்கைப் பரவச் செய்யும்.பெருமையை அபிவிருத்தி அடையச்
செய்யும்.
சாரூப பதவியை அளிக்கும்.
இப்படி தன்னை வணங்கியோருக்கு அனைத்தையும் அளிப்பதனால் இந்திரன்
உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மிகுந்த விருப்பத்துடன், கணபதியைத் தங்கள் தங்கள் கைகளை
கூப்பி வணங்குவர் என்பது பாடலின் பொருள்.
ஆனால் திரு என்ற
மங்கலச் சொல்லை முதலில் வைத்து கை கூட்டும் என்பதால் செல்வம் வந்தாலும் கூட, செய்ய
முனையும் தொழில் சீருடன் வெற்றி பெற வேண்டும் என்பதையும், செஞ்சொல் என்பதால் செல்வாக்கும்
அத்துடன் சேர வேண்டும் என்பதையும் பீடு என்பதால் அதில் பெருமையும் கூடவே சேர வேண்டும்
என்பதையும் வலியுறுத்தி, இந்த நான்கின் பயனை உருவாக்கும் தெய்வம் விநாயகரே என்பதையும்
வலியுறுத்துகிறார் கபிலர்!
சிறிது காலம் வாழ்ந்து
மறையும் மானுடர் ஒரு புறம் இருக்க தேவர்களும் கூட காதலுடன் கை கூப்பித் தொழும் தெய்வம்
விநாயகர் என்பதையும் சொல்லி அவர் வியக்கிறார்.
அத்துடன் திரு ஆக்கும்
என்பதை திரு, வாக்கு என்று பிரித்தால் மேலும் ஒரு பொருள் வரும்; அதே போல கூட்டும் பெருக்கும்
என்ற சொற்களை மற்ற சொற்களுடன் சேர்த்துப் பார்த்து பல்வேறு சிறப்பு அர்த்தங்களையும்
காணலாம்.
அத்தோடு அனைவருக்கும்
எப்பொழுதும் உற்சாகத்தைத் தருவதால் அவன் ‘களியான்’. அதிசயிக்கத்
தக்க பிரகாசத்தைக் கொண்டிருப்பதால் அவன் ‘ செம்பொன் ஒளியான்’. பூவுலகில்
வாழும் அனைவருக்கும் வித்தியாசமின்றி அருள் பாலித்து அனைத்தையும் வழங்குவதால் அவன்
‘பாரோர்க்கு உதவும் அளியான்’!
இப்படிப்பட்டவனின்
அடியைப் பற்றுவது நல்லார் கடமை எனக் கூறி மனிதர்களின் தலையாய கடமையை கபில தேவ நாயனார்
விண்டுரைக்கிறார்.
பிரபஞ்சமே
ஆற்றல், அதிர்வு, அலைஎண் மயம் தான்!
ஆனைமுகத்தோன் என்று
கூறி ஓங்காரத்தை நினைவு படுத்தி அவன் ஓம் என்னும் பிரணவ ரூப நாயகன் என்று முன்னோர்கள்
கூறும் போது அதில் அதிசயமான பேருண்மையை வைத்திருக்கின்றனர். அவனை வணங்கினால் ஓம்கார
சக்தியைப் பெறலாம் என்பதே அந்த உண்மை!
சென்ற நூற்றாண்டில்
வாழ்ந்து மறைந்த நிகோலா டெஸ்லா (தோற்றம் 10-7-1856 மறைவு 7-1-1943) என்ற பெரிய விஞ்ஞானி, “பிரபஞ்சத்தின் ரகசியத்தை நீங்கள் அறிய
வேண்டுமென்றால் ஆற்றல் அலைஎண், அதிர்வு என்ற அடிப்படையில் பாருங்கள்” (If you want to find the
secrets of the Universe, think in terms of energy, frequency and vibration –
Nikola Tesla) என்று வியக்கத்தக்க விதத்தில் ஒரு வரையறுப்பை நிர்ணயிக்கிறார்.
பெரும் ஆற்றலை உருவாக்கி ஒரு நொடிப் பொழுதில் பெரும் கட்டிடத்தை
அழித்த, வல்லமை மிக்க விஞ்ஞானியான இவர் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பின் ரகசியத்தைக்
கூறினால் தீயோர் அதை உலக அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடும் என எண்ணி அதைக் கூற மறுத்து
விட்டார்.
உலகத்தின் ஆதி நாதமாக
அமைவது ஓம் என நம் முன்னோர்கள் உள்ளுணர்வால் கண்டு அதற்கு உரிய தெய்வமாக விநாயகனை
‘ஓம்’கார நாயகன் எனப் போற்றுகின்றனர்.
அறிவியல் விளைவித்த
அற்புதமாக விண்ணில் பறந்த நாஸா ஏவிய சாடலைட் விண்ணில் இடையறாது ஒலிக்கும் ஒலியைப் பதிவு
செய்துள்ளது. அது ஓம்கார நாதமாகவும், கூட்டிசை (தேவாலயத்தில் இசைக்கப்படும் கூட்டிசை
அல்லது பஜனையின் போது அனைவரும் சேர்ந்து பாடும் இசையொலி) போலவும் இருக்கிறது என்று
விஞ்ஞானிகள் அதிசயத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த ஓங்காரம் சுமார் இருநூறுக்கும்
மேற்பட்ட விதங்களில் ஓதப்படுவதை எடுத்துரைக்கும்
அன்னிபெஸண்ட் அம்மையார் ஒவ்வொன்றிற்கும் அபூர்வப் பலன்கள் உண்டு என அதிசயித்துக்
கூறுகிறார்.
வானில்
விநாயகர் தோற்றம்!
இப்படிப்பட்ட முழுமுதற்
கடவுளின் உருவம் பெரு வயிறுடனும் தும்பிக்கையுடனும் இருக்க அவரது வாகனமாக மூஞ்சூறு
அமைகிறது. இவர் பிறந்த நாளை ஆவணி மாதம் வளர்பிறை
சதுர்த்தி அன்று நாம் கொண்டாடுகிறோம். இதன் காரணம் என்ன? இதில் பொதிந்துள்ள வானவியல்
இரகசியம் பிரம்மாண்டமானது.
செப்டம்பர் துவக்கத்தில்
தொடு வானத்தில் வட திசையில் ஊர்ஸா மேஜர் (Ursa Major) எனப்படும் சப்தரிஷி மண்டலம் எழுகிறது. காஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர்,
கௌதமர்,ஜமதக்னி, பாரத்வாஜர் என்ற ஏழு பிரகாசமான
நட்சத்திரங்கள் பூமியின் சுழற்சியால் தொடுவானில் காணப்படுகின்றன. ஆண்டில் முதன் முதலாகத்
தோன்றப்படும் இந்த நாளை வானவியலார் ஹெலிகல் ரைஸிங் (Helical Rising) அல்லது வான்பொருள்
எழுச்சி என்று கூறுகின்றனர். இதை ரிஷி பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். அன்று ஆண்களும்
பெண்களும் புனித நீராடி சப்த ரிஷிகளைத் துதித்து தூய்மை பெறுகின்றனர்.
இதற்கு முந்தைய நாள் விநாயக சதுர்த்தியாக (அதாவது பஞ்சமிக்கு
முதல் நாளாக அமையும் சதுர்த்தி நாளன்று) கொண்டாடப்படுகிறது.
அன்று வானில் தோன்றும் ‘கணேச நட்சத்திரங்களைக்’ கற்பனைக் கோடுகளால்
இணைத்தால் தோன்றுவது பெரு வயிறும் தும்பிக்கையும் கொண்ட விநாயகர் திரு உருவம். அவர்
அமர்ந்திருப்பது மூஞ்சூறு போன்ற உருவத்தின் மேல்! இதையே விநாயகர் பிறப்பாக நாம் கொண்டாடுகிறோம்.
அந்த ஒளியிலும் அதிர்விலும் (Vibration) ஆற்றலிலும்
(Energy) அலைஎண்ணிலும் (Frequency) நம்மை ஈடுபடுத்திக்
கொண்டு அதன் சக்தியைப் பெறுகின்ற நாளாக அது அமைகிறது. ஓம் எனும் மந்திர ஒலி தரும் ஆற்றலையும்
அன்று நாம் பெறுகிறோம்.
வானில் அமையும் ராசி, நட்சத்திரங்களைப் பட்டியலிட்டுத் தொகுத்தவர்
வானியல் அறிஞரான ஏ.பி.கிரிமால்டி (A.B. Grimaldi) என்பவர். (A
Catalogue of Zodiacs and Planisheres published by M/s Gall and Inglis of
London). இவர் தனது நட்சத்திரத் தொகுப்பில் விருச்சிகம், துலாம் (தராசு) போன்ற பல்வேறு ராசிகளின்
உருவ அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
அதில் யானை உருவமும் அதன் கீழ் இருக்கும் எலி உருவமும் விநாயகரையும்
மூஞ்சூறையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பது வியப்புற்குரியது.
இதைக் கற்பனைக் கோடுகளால் நட்சத்திரங்களை இணக்கும் போது தோன்றும்
உருவத்தைப் படத்தில் காணலாம். வானியல் நிபுணருடன் இணைந்து அவர் உதவியுடன் வானத்திலும்
பார்க்கலாம்!
தோப்புக்கரணம்
போடுவதன் பயன்!
அடுத்து விநாயகரை வணங்கும்போதெல்லாம் இரு கைகளையும் மாற்றி வலது
இடது காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதோடு நெற்றிப் பொட்டுகளையும் குட்டிக்
கொள்கிறோம்.
இந்தப் பழக்கத்தை மூடப் பழக்கம் என்று சொல்லி வந்தவர் வியக்கும்படி
அறிவியல் ஆய்வுகள் இதன் நன்மைகளை இப்போது எடுத்து வைக்கின்றன.
யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் ஆங் (Yale neurobiologist Dr
Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளைத்
தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும்
காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப்
பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக
ஆகிறோம்.
இந்தப் பயிற்சியைச் செய்து
முடித்த பின்னர் எடுக்கப்பட்ட இசிஜி (எலக்ட்ரோ என்செபலோக்ராஃபி) முடிவுகளை டாக்டர்
ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி இந்தப் பயிற்சி வலது மற்றும்
இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கிணையச் செய்கிறது.
இந்தப் பயிற்சியைப் புகழ்ந்து அவர் மேலும் கூறுகையில் மூளையானது
ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற
அமையச் செய்கிறது.
இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இதை இந்த
காது மடல் பிடிக்கும் எளிய் பயிற்சி உறுதிப்படுத்துகிறது என்று கூறிப் புகழ்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த
டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric
Robins), “பாதங்களை நேராக வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து
வைத்துக் கொண்டு வலது காதை இடது கைக்கட்டை விரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக்
கொள்ள வேண்டும்.இதேபோல இடது காதை வலது கைக் கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக்
கொள்ள வேண்டும். பின்னர் குந்தி உட்கார்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக
எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். இந்தப் பயிற்சியை
மூன்று நிமிடம் தொடர்ந்து திருப்பித் திருப்பிச் செய்தால் கூரிய மூளை ஆற்றலைப் பெறலாம்” என்கிறார்.
நமது தோப்புக்கரணத்தை
அப்படியே விவரிக்கும் இந்த அறிவியல் ஆய்வு நமது முன்னோர்களின் கூரிய அறிவுத் திறனையும்
பிள்ளையார் வழிபாட்டையும் எண்ணி வியக்க வைக்கிறது.
பிரபஞ்ச ஆற்றலையும்
உடல் மற்றும் உள்ள ஆற்றலையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விநாயக சதுர்த்தி பூஜை எளியவரும்
செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆம், “பிடிச்சு வச்சா பிள்ளையாரு” தான்!
அதிசய ஆற்றலைத் தரும்
விநாயகரை வழிபடுவோம். வானத்து இரகசியங்களை வசமாக்குவோம்!
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
I have already given a list of 255 plants. Here is a list of sexy plants, I mean, listed in the book about aphrodisiacs (drugs, herbs, chemicals stimulating sexual feelings).
23 Feb 2015 – (Sapta parna,
Ezilai Palai in Tamil). Compiled by London swaminathan. Post No.1670; Dated 23
February 2015. In the first part posted on 21st …
If a Brahmin cuts
the fruit trees, shrubs, vines, , creepers or flowering plants , a … 255 Indian trees, herbs and
flowers mentioned in Brhat Samhita Part–1, posted …
3 Oct 2014 – Studying about
the plants mentioned in ancient literature helps us to … We have Pippaladan
and other names in Upanishads meaning Mr Pipal …
You must be logged in to post a comment.